Followers

Search Here...

Showing posts with label Period. Show all posts
Showing posts with label Period. Show all posts

Saturday 19 May 2018

How was Nepal - During Mahabharata Period? Who were from Nepal?

Nepal - During Mahabharata Period.


  • Virata Desam, 
  • Malla desam, 
  • Videha or Mithila desam during Mahabharata period, are now part of Nepal.




In Ramayana period, Goddess Sita Devi did her avatar in this land of videha(Mithila) desam.
This kingdom was ruled by king Janaka. Also called as Janakpur.
Sita is a Nepali Girl if we think of today.




During Mahabharatha period, these Nepal kings of virata, malla, videha desam, supported pandava.
The entire army, accepted the leadership of drupada and followed his advice.

  • Malla desam is situated near the bank of ganga river.
  • Malla desam is situated between virata and videha desam.

Pandava brothers during 13 year of exile period (vanavasa) in forest, had to stay hidden at the 13th year.
To hide themselves in this 13th year, they chose virata desa in Nepal to spend their last year.

Nepal is known for giving us Goddess Sita and protecting pandava brothers for a complete one year.

Elder brother Yudhishthira, assumed the identity of game entertainer to the king and called  himself "Kanka".

Bhima became a cook named "Ballava".
Arjuna became dance and music teacher as transgender "Brihannala" and dresses as a woman.
He taught dance to Virata king Daughter "uttara".
Uttara, Nepal princess later married Arjuna"s son "Abimanyu".

Nakula became a servant to take care of horses as "Granthika".
Sahadeva became a servant to take care of cows as "Tantipala".

Princess Draupadi became maid as "Sairandhri" or "malini" to queen Shudeshna.




Keechaka, the son and also commander of king Virata's armed forces. He had a lust for the maid Sairandhri (Draupadi).
Kichaka approached the queen, and inquired about Sairandhri. The queen who does not know the true identity of Sairandhri, and arranged a meeting with Draupati.
Draupati went to meet him and Kichaka tried to molest her.

Draupati pushed him and ran to the court of king Virata.
Kichaka chased her, caught and kicked her in the court of Virata in front of the king.
Yudhistra kept silent to ensure to complete this 1 year somehow and didn't revealed his identity.
Helpless draupati, reported this incident to bheema.
Bheema asked draupathi to invite keechaka to her place. Draupathi went again and informed keechaka to come to her place.
Bheema waiting for keechaka arrival, grabbed him and gave him powerful punch of 1000 elephant strength over his head.
With this blow, keechaka head went inside his stomach like a ball. Keechaka died on spot.

Keechaka was not a weak warrior himself.
To expand virata desam, he had several times defeated "susarma" the king of trikartha (today's Punjab).

The death of keechaka in mysterious way, raised doubts to susarma.

Susarma believed only bheema must have killed  keechaka, due to his tremendous power.

Hence, susarma informed duryodhana to initiate a war against virata desam.

Guru prince duryodhana, along with trikarta king susarma and karna surrounded the virata desa with a massive army.

Virata king, knowing the situation sent his army headed by his son "uttara kumar" to face the war.
Looking at the massive army and presence of all mighty kings and duryodhana, uttara kumar got frightened and return back to his palace.

Arjuna who has disguised himself as transgender, spoke to the king that he will ride the horse chariot, and will face the kuru army.
On the way, he took all his sastra, and astra and kept uttara kumar aside, fought single handedly to defeat the kuru army and saved the virata.

The defeat to a transgender, was shameful for duryodhana, karna and they returned back.
After completion of one year, pandava showed their identity to virata king.
Virata king apologized for them for keeping them as servants.
Yudhistra thanked him to give him a place to stay hidden during the whole 13th year.

Virata king, offered his daughter "uttara" to mighty Arjuna for marriage.
Arjuna politely refused the proposal by saying the relationship is more of teacher and student and can't marry.
He was wise enough to accept Uttara as her daughter in law and married her to his son "Abimanyu".





With this relationship, during Mahabharata war, entire virata desam (Nepal) stand behind pandava and fought for dharma.

On 1st day,
"Uttara Kumar" fought bravely in the war, and achieved Veer swarga.
He got killed by Madra desa (today punjab in pakistan side) king "salya" on same day.
Salya saluted Uttara Kumar bravery in his battle.

By seeing "Uttara Kumar" died in the battle, "swetha kumar" his younger brother angrily marched towards Salya.
Seeing this, Bhishma asked swetha kumara to fight with him.
During the fight, Bhishma killed swetha kumara as well on Day 1.

Day 1, was a great defeat for pandavas and virata king lost his both sons.
This defeat on Day 1, put Yudhistra in extreme worry due to heavy loss of his army men and prince of other kingdom.
He even started saying,
"Duryodhana will definitely going to win this battle with his massive army and powerful generals"

Sri krishna gave him confidence and asked him not to get disheartened with this defeat.

Day 2 was ended up in success for pandavas.

The war went for 2 weeks and on Day 15, Drona killed Virata king as well in the battle.

Thus Nepal stand behind the Dharma and fought against Duryodhana who was standing on Adharma.

Mahabharata war happened around 3000BC which is nearing the end of Dwapara Yuga.
Kali Yuga started around 3102BC.

After 3000 years, around 563BC Siddhartha the prince of Nepal and son of King Sudhdhodhana born. He born in lumbini, Nepal.
At his young Age, seeing a dead body, he got disinterested about his life that one day he has to die as well.
He dethrone his empire desire and went out in search of truth.
He roam around several places around nepal and Bihar.
Finally reached Bodh Gaya in Bihar which is 450KM away from lumbini, Nepal.
He attained clarity of his life purpose in bodh gaya in magadha desa (which is south bihar).

His teaching and philosophy became popular among people who were following Vedic Sanadana Dharma.
Many got attracted to Buddhism.

When Magadha King (Orissa) Ashoka adapted Buddhism, this resulted as a greatest mistake to let foreign invaders of islam and christians to enter Bharat and loot, enslave, and kill hindus and destroy more than 40000 prime temples across bharat from Afghan till south india after a few century.

Asoka made other kings to accept Buddhism which teach non violence and peace.
Santhana dharma gave these teaching only to brahmins.
But attracted towards this sanyasa principle, ashoka made all kings to adapt peace and non violence.

From 563BC till 947AD, Buddhism spreaded like wild fire.
Afghan was completely Buddhist country during that time.

Muslim invasion started around 947AD in Afghan which was a Buddhist country during that time ruled by Amir Suri.
All because of Ashoka who initiated this foolish religion conversion.

Buddhism failed in India due to this and people returned to their Sanathana Dharma.

Long live Hindus. 
Interested to Read More? Click Here -> What is Pretha? What is Pisasu (Ghost)? Who is Pithru?



Monday 27 November 2017

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே


விதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.

குந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை கிராமங்கள்.

கோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.
இதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.
அங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.
இந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
யாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.

மகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.

947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.
947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.
யாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.
5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.

விதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.
இன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில்  உள்ளது என்றும் சொல்லலாம்.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.
இவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார்? எப்படி இருப்பார்? என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.
இதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.



ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, "எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று எழுதி  அனுப்பினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.
"இவனை கொல்ல கூடாது" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "ருக்மிணியின் அண்ணன்" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.
அப்படியே விட்டால், "திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.
ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.
குஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.

ஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? எப்படி இருந்தாய்? என்று பார்க்க முடியாது போய் விட்டதே!! 
இந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.
தன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன்  மாய  சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.
அப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும்  பார்த்து விட்டாள். 

இந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார். 


அன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.
இந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார். 

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.

மகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, "பாண்டவர்களுக்கு சகாயம்" செய்ய நினைத்தான். 
தன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.
"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.

மஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.

பெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.
ஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.

மஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.


போருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.

கோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

Sunday 26 November 2017

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே...

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது?.


குந்தி தேசம், அவந்தி தேசம், சேடி தேசம், கருஷ தேசம் போன்றவை இந்த மத்யபிரதேச தேசத்தை சேர்ந்தவை.

சேடி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், கிழக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், வடக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

கருஷ தேசம் சேடி தேசத்தின் தெற்கில் உள்ள ஒரு பகுதி.

அவந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி, சேடி, கருஷ மற்றும் அவந்தி தேசத்தின் பெரும் பகுதியை "யாதவ" குல அரசர்கள் ஆண்டு வந்தனர்.

குந்தி தேசத்தை 'குந்தி போஜன்' ஆண்டு வந்தார். இவருக்கு வாரிசு இல்லை.

சூரசேனர், குந்தி போஜ அரசனின் சகோதரர்.
வசுதேவன், ப்ரீதா, ஸ்ருதஸ்ரவா, ராஜதி ஆகியோர் சூரசேனரின் பிள்ளைகள்..

சூரசேனர் தன் மகள் 'ப்ரீதா"வை வளர்ப்பு மகளாக கொடுத்தார்.
தன் வளர்ப்பு மகளை "குந்தி தேவி"யாக வளர்த்தார் குந்தி போஜன்.

ப்ரீதா"வை (குந்தி தேவி) உத்திர பிரதேசத்து குரு தேச அரசன் பாண்டுவுக்கு மணம் செய்து கொடுத்தார்.

அவந்தி தேசத்தில் கல்வி கற்க பல தேசத்தில் இருந்து வந்து படித்தனர்.

அவந்தி தேசத்தில் (மத்யபிரதேசம்) உள்ள உஜ்ஜைன் (Ujjain) என்ற ஊருக்கு வந்து, ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் வந்து படித்தனர்.

மதுராவில் (UP, India) இருந்து அவந்தி தேசம் வந்து கிருஷ்ணரே படித்தார் என்றால், 5000 வருடம் முன்பு வரை, கல்வி எப்படி உயர்ந்து இருந்தது இந்த உஜ்ஜைனில் என்று அனுமானிக்கலாம்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து வந்த சுதாமா என்ற குசேலன் இதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடன் படிக்கும் பாக்கியத்தை பெற்றார்.
சாந்தீபினி ஆசிரமத்தில் கிருஷ்ணரே படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பண் சுதாமா என்ற குசேலன் என்ற பெருமை அடைந்தார். 

பாண்டவர்களின் தாய் "குந்தி" தேவியின் சகோதரி "ராஜதி" தேவி, அவந்தி தேச அரசனை மணமுடித்தாள்.

சேடி நாட்டின் அரசனாக "சிசுபாலன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருதஸ்ரவா'வும், குந்தியும் சகோதரிகள்.
இவர்களின் சகோதரன் "வசுதேவன்".
வசுதேவனுக்கும் தேவகிக்கும் சாஷாத் பரப்ப்ரம்மமான "ஸ்ரீ கிருஷ்ணர்" பிறந்தார்.


கருஷ நாட்டின் அரசனாக "தண்டவக்ரன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருததேவா'வும், குந்தியும் சகோதரிகள்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு, 'குந்தியும், ஸ்ருதஸ்ரவா'வும் "அத்தை" முறை.

சிசுபாலனுக்கும், தண்டவக்ரனுக்கும், ஸ்ரீ கிருஷ்ணர் மாமன் மகன்.

சிசுபாலனும், தண்டவக்ரனும், பாற்கடலில் இருக்கும் மஹா விஷ்ணுவின் துவார பாலகர்கள். 
இவர்களே மஹா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, சிசுபாலன், தண்டவக்ரன் என்று அவதாரம் செய்து, அவர் கையாலேயே முக்தி வேண்டி பிறந்தனர்.
சேடி நாட்டில் பிறந்த "சிசுபாலன்" பிறந்த பொழுது 3 கண், நான்கு கையுடன் விகாரமாக பிறந்தான். இதனால் பயந்து போனாள் அவன் தாயார்.

அப்பொழுது அசரீரி வாக்கு ஒன்று கேட்டது "யார் கை பட்டவுடன் இவன் மூன்றாவது கண்ணும், அதிகம் உள்ள இரண்டு கைகளும் மறையுமோ, அவனே இவன் மரணத்திற்கும் காரணம் ஆவான்".

இதை கேட்டு ஒரு புறம் கவலை கொண்டாலும், தன் குழந்தை சாதாரணமாக ஆக வழி இருப்பதால், அனைவரையும் தொட சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் வந்து தொட்டதும், அதிகமாக இருந்த கண்ணும், கைகளும் மறைந்தன.
அவன் தாயார், ஸ்ரீ கிருஷ்ணர் "எக்காரணம் கொண்டும் சிசுபாலன் மரணத்திற்கு காரணம் ஆக கூடாது" என்று வேண்டினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், அசரீரி வாக்கையும் மீறாமல், இவன் தாயாருக்கும் சமாதானமாக "ஒரு மனிதன் சாதாரணமாக ஒருவனை 100 முறை தொடர்ந்து திட்ட வாய்ப்பு இல்லை. எப்பொழுது, உன் மகன் என்னை தொடர்ந்து 100 முறைக்கு மேல் திட்டுவானோ அப்பொழுது மட்டுமே இவன் மரணத்திற்கு நான் காரணம் ஆவேன்" என்று சமாதானம் செய்தார்.

சேடி அரசன் சிசுபாலன், குரு தேச (உத்திர பிரதேச) இளவரசன் துரியோதனனுடனும், மகத தேச (Jamshedpur near Bihar) அரசன் ஜராசந்தனுடனும் நெருங்கிய நட்பு உள்ளவன்.

தான் பிறந்ததில் இருந்தே, தன் மாமன் மகன், 'ஸ்ரீ கிருஷ்ணரை' பகையாக நினைத்தான் சிசுபாலன். இவனுடன் சேர்ந்து இருந்தான் "தண்டவக்ரன்".

பார்க்கும் பொழுது எல்லாம், ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தைகளால் காரணமே இல்லாமல் சிசுபாலன் திட்டுவான்.
சரியாக 100 நெருங்கும் முன், திட்டுவதை நிறுத்தி விட்டு, சென்று விடுவான். ஸ்ரீ கிருஷ்ணரும் கோபப்படாமல்  சிரித்துக்கொள்வார்.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.


ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய அஸ்ஸாம் (Assam) தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.
இந்த சமயத்தில், சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகையில் தீ வைத்து கொளுத்தினான்.


சத்யபாமாவை கொண்டு நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.
நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்று வரை  கொண்டாடப்படுகிறது.

சிசுபாலன், தன் சகோதரியை பாண்டவர்களில் ஒருவரான 'பீமனுக்கு' மணமுடித்தான்.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.
யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.
தம்பி 'சகாதேவன்' அவந்தி தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

உறவுமுறையில் உள்ள சிசுபாலன், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.
அங்கு முதல் மரியாதை "ஸ்ரீ கிருஷ்ணருக்கு" கொடுக்க அனைவரும் சம்மதிக்க, யுதிஷ்டிரர் மரியாதை செய்ய ஆரம்பித்த போது, சிசுபாலன் தலைக்கு ஏறிய கோபம் கொண்டான்.

மதி மழுங்கிய நிலையில், சபையில் அனைவரின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான்.

அனைவரும் தடுக்க நினைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் "அவன் பேசட்டும், என்னை 100 முறை தொடர்ச்சியாக திட்டுகிறானா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
நிதானம் தவறிய சிசுபாலன், 100 முறை திட்டி, 101வது தடவை திட்ட ஆரம்பிக்க, தன் சுதர்சன சக்கரத்தால் அனைவரும் பார்க்க, அவன் கழுத்தை அறுத்து எறிந்தார்.

யாகம் முடிந்து, துவாரகை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சிசுபாலனை இறந்ததால், கோபத்துடன், தண்டவக்ரன் அவன் சகோதரன் "விதுரதன்" இருவரும், ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகை செல்லும் வழியில் மறித்து போரிட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் இருவரையும் தன் கதையால் கொன்றார்.
சிசுபாலன் இறந்த பின், யுதிஷ்டிரர், சேடி தேசத்தின் அரசனாக சிசுபாலனின் புதல்வன் "த்ருஷ்டகேது"வை அரசன் ஆக்கினார்.
த்ருஷ்டகேது "சேடி மற்றும் கருஷ தேசம்" இரண்டையும் ஆண்டு வந்தான்.


பகடை ஆடி சூழ்ச்சி செய்து பாண்டவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் மற்றும் 1 வருடம் அஞானவாசம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, இவர்கள் சொத்தை, நாட்டை எல்லாம், துரியோதனன் எடுத்துக்கொண்டான்.
பாண்டவர்கள், இந்த வன வாச காலத்தில், சில வருடங்கள் சேடி தேசத்திலும் (Madhya Pradesh) தங்கினார்கள்.

மஹாபாரத போர், நடக்கப்போவது நிச்சயம் என்று அறிந்த, கௌரவர்கள், பல தேச அரசர்களை தன் பக்கம் இழுத்தனர்.

அங்க தேச (வங்காளம் West Bengal) அரசன் கர்ணன், இந்த சமயத்தில், அவந்தி தேசத்தில் படை எடுத்து, அங்கு ஆண்ட அரசர்களை தோற்கடித்தான். 
உடன்படிக்கையின் பெயரில், அவந்தி தேச அரசர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

குந்தி தேச அரசர் 'குந்தி போஜன்' பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார். 
துரோணரால் குந்தி போஜன் கொல்லப்பட்டார்.

சேடி மற்றும் கருஷ தேசத்தின் அரசன் 'த்ருஷ்டகேது', பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தான்.
'த்ருஷ்டகேது' 14ஆம் நாள் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.

சிசுபாலனின் இன்னொரு மகன் "சுகேது"வும் துரோணரால் கொல்லப்பட்டான்.
இவனுக்கு பிறகு சிசுபாலனின் இன்னொரு மகன் "சரபன்" சேடி தேசத்து ஆட்சி புரிந்தான்.

மஹா பாரத போரில், அவந்தி தேச அரசர்கள் யாவரும், அர்ஜுனனின் பானத்தினால் கொல்லப்பட்டனர். 
அரசர்கள் இழந்த அவந்தி தேச போர் வீரர்கள், கடைசி வரை துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.


மஹா பாரத போர் முடிந்த பின், சக்ரவர்த்தி ஆன யுதிஷ்டிரர், பாரத தேசம் முழுவதும் தன் ஆட்சியில் கட்டுப்பட்டு நடக்க, தன் சகோதரர்களை அனுப்பினார்.
சேடி நாட்டு அரசன் "சரபன்", அர்ஜுனனிடம் போரிட்டு, தோற்றான்.