Followers

Search Here...

Showing posts with label கடவுளுக்கு. Show all posts
Showing posts with label கடவுளுக்கு. Show all posts

Saturday 8 June 2019

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா? தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? ஒரு அலசல்...

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா?
தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? (ஹிந்தி, தமிழ், தெலுங்கு...!!)

இந்த கேள்வி,
உண்மையான இறைபக்தி உள்ளவனுக்கு வருகிறது.

இதே கேள்வி,
இறைபக்தியே இல்லாத நாதீகனுக்கும், 
வேறு மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தையும், தெய்வத்தையும் எப்படி சீர்குலைக்கலாம்? என்று அலையும் கூட்டத்துக்கும் உள்ளது.

"தமிழை வளர்ப்பது தான் நோக்கம்" என்றால்,
தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு தமிழன் ஆசைப்பட்டால், தமிழில் அர்ச்சனை சொல்லும் முன்,
'கேட்பவனும் அந்த தெய்வத்துக்கு முன் ஒரு பாசுரமாவது, திவ்ய பிரபந்தமாவது சொல்ல வேண்டும்'
என்று 'சட்டம்' கொண்டு வந்தால் தான், 'தமிழும் வளரும்', 'பக்தியும் வளரும்'.
உண்மையான பக்தன்,
'இறைவன் முன் நாயன்மார்கள் நமக்காக கொடுத்த பதிகத்தில் ஒரு ஸ்லோகத்தையாவது சொல்ல தனக்கு பாக்கியம் கிடைத்ததே'
என்று திருப்தி கொள்கிறான். திருப்தி கொள்வான்.

இப்படிப்பட்ட பக்தன் வந்தால், அர்ச்சகர் தமிழில் ஆனந்தமாக இறைவனுக்கு அர்ச்சனை செய்வார்.


பதிகங்களை பாடி, நாயன்மார்களை நினைவுபடுத்திய நம்மை கண்டு 'ஈசனும்' மகிழ்கிறார்.
இறை அருளும் கிட்டும். 
நாயன்மார்களின் ஆசியும் கிட்டும். 
தமிழும் வாழும்.

வெறும் சம்ஸ்க்ரித மொழியினால் ஏற்பட்ட பொறாமை தான், இது போன்ற கேள்வியை கேட்க வைக்கிறது என்றால், 
இறை பக்தியும் வளராது...தமிழும் வளராது..

கடந்த 60 ஆண்டுகளில்,
'தமிழை காக்கிறேன்' என்று நாத்தீக கூட்டமும்,
பிற மதத்தில் இருந்து கொண்டு 'தமிழை வளர்க்கிறேன்' என்று போர்வை போட்டு கொண்டு ஏமாற்றி வரும் கூட்டமும்,
பாசுரங்களை, பதிகங்கள் சொன்ன ஓதுவார்களை, கோவிலில் இருந்து அகற்றினர்.
கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால், 
தமிழோடு, 'ராம பக்தியும்' வளருமே என்று பேசாமல் இருந்தனர்.

பதிகங்களை சொல்லி தமிழ் வளர்த்தால், 
தமிழோடு 'சிவ பக்தி வளருமே' என்று பதிகங்கள் சொல்லும் ஓதுவார்களை கோவிலில் இருந்து விரட்டினர்.
கோவிலையே அரசாங்க கைக்குள் போட்டு கொண்டு, 
நாயன்மார், ஆழ்வார் பாடிய பாடல்களால் நிரம்பி இருந்த ஆயிரக்கணக்கான கோவில்களில் தமிழை ஒழித்தனர்.
"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம்" போன்ற தமிழ் பாடல்களை வளர்த்தால், 
தமிழோடு 'முருக பக்தி' வந்து விடுமே என்று அதையும் அழிக்க முயன்றனர். 


அது மட்டுமா!!
முருகனையே "பாட்டன் என்றும்", "ஏதோ மனிதன் போலவும்" மாற்றி,
இவர் ஒரு தமிழர் என்ற அளவில் ஆக்க பெரும் "ஏமாற்று புரட்சி" மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை சிறுமை படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழோடு சிவபக்தி வளருமே!!.. அதனால் பாசுரம் வேண்டாம்.

தமிழோடு பெருமாள் பக்தி வளருமே!!..அதனால் பிரபந்தங்கள் வேண்டாம்.
தமிழோடு சக்தி வழிபாடு வளருமே!!.. அபிராமி அந்தாதி வேண்டாம்.

தமிழோடு முருக பக்தி வளருமே!!..  கந்த கவசம் வேண்டாம்.
தமிழோடு ராம பக்தி வளருமே!!... கம்பன் எழுதிய ராமாயணம் வேண்டாம்.

"தமிழை வளர்த்த இவை எதுவுமே நமக்கு வேண்டாம்.." 
என்று திட்டமிட்டு இந்த நாத்தீக கூட்டமும், பிற மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தை, தெய்வங்களை எப்படி கேலி செய்யலாம்!!, ஏமாற்றி நம் பொய் மதத்துக்கு மாற்றலாம் என்று 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் குறிப்பாக முயற்சி நடக்கிறது.


இன்று வரை ஹிந்துக்களை ஏமாற்ற முடியவில்லை.
போலிகள், போய் சேர்ந்து விட்டனர்.
சமயபுர மாரியம்மனுக்கும், மதுரை அழகருக்கும் கூட்டம் குறையவில்லை.

போலிகளை ஹிந்துக்கள் எட்டி உதைக்க வேண்டும். இவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
நாதீகனுக்கும், பிற மதத்தில் உள்ளவனுக்கும் இங்கு என்ன வேலை? என்று கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தெய்வத்திடமே பக்தி இல்லாத போலிகள், "தமிழை மொழியை காக்கிறேன்" என்று சொல்லி
"பதிகங்கள், திவ்ய பிரபந்தங்கள், கந்த சஷ்டி கவசம்,  அபிராமி அந்தாதி போன்ற தமிழை கற்று கொள்ள வேண்டும்" என்று சொல்லாத நாத்தீக போலிகளை, 
பிற மதத்தில் இருந்து கொண்டு, கேலி பேச காத்து இருக்கும்  திருட்டு போலிகள் துரத்தப்பட வேண்டும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய "தமிழ்" பாடல்களை "தெய்வங்கள்" ஏற்று கொள்கிறார்கள்..

ஸ்ரீ ரங்கத்தில் திருபள்ளி எழுச்சியே "தமிழில்" தான் பாடப்படுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் "தமிழ் திருப்பாவை" தான் எங்கும் ஒலிக்கிறது.
அபிஷேகம் போன்ற வைதீக ஆராதனைகள் நடக்கும் போது புருஷ சூக்தம், ருத்ரம் போன்ற வேத சப்தங்கள் சொல்லப்படுகிறது.


சமஸ்கரித மொழியில் "ஒரே ஒரு சிறு ஸ்லோகம்" சொல்லி,
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே"
சிறு பூஜை செய்தால் கூட,
நம்மை பார்த்து மிகவும் ஆனந்தப்படுகிறார்.
இதற்கு காரணம் உண்டு.

"ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து தான் "வேதம் வெளிப்பட்டது".
வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன் பஞ்ச பூதங்களை படைத்தார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகங்கள்))

ப்ரம்ம தேவனையும் படைத்தவர் "பரவாசுதேவன் நாராயணன்".

ப்ரம்ம தேவன் தன் தியானத்தால் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்தினார்.
('ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா' என்று சொல்லி, பிரணவத்தை வெளிப்படுத்திய பிரம்மாவுக்கு தலை மேல் கை கூப்பி வணங்குவதாக பாவித்து, "தலையில் தொட்டு கொள்வது" சந்தியா வந்தனத்தில் உள்ளது)

உலகம் 'ஒலி'யால் சூழப்பட்டு உள்ளது.
சப்தத்திலேயே சமஸ்கரிதம் உள்ளது.
மற்ற மொழிகள், ரிஷிகளால் இலக்கணத்தோடு உருவாக்கப்பட்டது. 
அகத்திய முனியால் "தமிழ்" கொடுக்கப்பட்டது.
சில பாரத தேச மொழிகள், பிற நாடுகளில் உள்ள மொழிகள், மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது.

'ஓம்' என்ற மூல பிரணவத்தை (சம்ஸ்க்ரிதம்),
ஒரு பாத்திரத்தை காதில் மூடி வைத்து கேட்டால், நம்மாலும் 'அஉம்' என்ற பிரணவ சப்தத்தை உணர முடியும்..

தன் தியான சக்தியால், பிரணவ மந்திரத்தை ஸித்தி ஆக்கிய ரிஷிகள், பிரணவத்தில் மறைந்து இருக்கும் தேவ பாஷையில், இருந்த வேத மந்திரங்களை ரிஷிகள் வெளிப்படுத்தினர்.
வேத மந்திரங்களை மட்டுமா கொடுத்தார்கள் ரிஷிகள்?

தேவ பாஷையில் இருந்த
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
என்று அனைத்தையும் உலக மக்களுக்கு, படித்து தெரிந்து கொள்ள கொடுத்து விட்டனர் நம் ரிஷிகள்.




தேவர்களும், ப்ரம்ம தேவனும் பயன்படுத்தும் மொழி சமஸ்கரிதம் என்பதையும் ரிஷிகள் அறிந்தனர்.

ஆதலால் பொதுவாக சம்ஸ்க்ரித மொழியை 'சப்த பிரம்மம்' (ஒலியிலேயே ஒளிந்து இருப்பதால்) என்றும் 'தேவ பாஷை' (மேல் உலக தேவர்கள் பேசும் பாஷையாகவும் இருப்பதால்) என்று சொல்கிறோம்.

நமக்கு மேல் உள்ள தேவர்கள், ப்ரம்மா, ப்ரம்மாவையும் படைத்த பரவாசுதேவனால்,
மனிதன் உருவாக்கிய மொழி மட்டுமல்ல,
அவன் ஊமையாக இருந்து மனதில் உருவாக்கும் மௌன பாஷையை கூட அறிந்து கொள்வார்கள்..
நாம் எந்த மொழியில் பேசினாலும், தெய்வங்களுக்கு புரியும். அதில் சந்தேகமில்லை.

கடவுள் அணுகிரஹம் செய்ய, மொழி தடை இல்லை..

ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய "பக்தி எப்படிப்பட்டது?" என்பது தான்.

ஒரு தந்தை (தமிழ் தந்தை என்று வைத்து கொள்வோம்), தன் மகனுக்கு தமிழ் கற்று கொடுத்தான்.
வளர வளர, அவன் பல சமுதாய மக்களுடன் சகஜமாக பழகி கொள்ள ஏதுவாக இருக்க, "மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், சீன" மொழி என்று பல மொழிகளும் கற்று கொள்ள, சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்தான். தானும் அறிந்து இருந்தான்.
அந்த குழந்தை அனைத்து மொழியும் தெரிந்து கொண்டு, 
உலகில் எங்கு சென்றாலும் தன் எண்ணங்களை பறைசாற்றி,
தன் தாய் மொழியான தமிழில் உள்ள திவ்ய பிரபந்தங்கள், பாசுரங்கள், கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவம் என்று அனைத்தையும் உலகம் அறிய செய்தான்.
மற்ற மொழிகள் பேசும் மக்களுக்கு கூட,
இவன் மொழியான தமிழை கற்று கொள்ள ஆர்வம் உண்டானது.

மற்ற மொழிகள் கற்றதால், 'தன் தாய் மொழி தமிழை மறந்து விடுவான்' என்று நினைத்தால், 
இவன் 'தமிழ் மொழியில் எழுதப்பட்ட கம்ப ராமாயணத்தை, பாசுரங்களை உலக அரங்கில் பரப்பி பிரசித்தி ஆக்கினான்'.

ஒரு நாள், இந்த மகன், தன் தந்தையை பார்க்க வந்தான்.

இந்த மகன், தெலுங்கில் பேசினாலும், ஹிந்தியில் பேசினாலும், பிரெஞ்சில் பேசினாலும் புரிந்து கொள்வார் இவன் தந்தை.
மகிழ்ச்சியும் அடைவார்.
"இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்" என்றும் ஆசைப்படுகிறார்.

இந்த மகனோ, மிகவும் உத்தமான பிள்ளை.
தன் பெருமைகளை விரும்பாதவன். நன்றி உடையவன்.

மகன், தன் தந்தையின் தாய் மொழியான தமிழில் பேச ஆரம்பிக்க, "தன்னால் முதலில் கொடுக்கப்பட்ட மொழியான தமிழில் என்னுடன் பேசுகிறானே!!.. 
இது என்னுடைய தாய் மொழி என்று அறிந்து, அந்த மொழியில் பேச ஆசைப்படுகிறானே என் மகன்" 
என்று பேரானந்தம் அடைகிறார்.

'இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்' என்று ஆசைப்படுவதோடு நிற்காமல்,
"இப்படி ஒரு உத்தம பிள்ளையை பெற்றோமே" என்று "இவன் என் மகன்.. என் மகன்"
என்று தன் மகனை நினைத்து தானும் பெருமிதம் கொள்கிறார் தந்தை.

பல மொழிகள் தெரிந்தாலும், பல தேசங்களில் தன் புகழ் பேசப்பட்டாலும், தன் தாய் நாட்டை, தன் தாய் மொழியை மறக்காத உத்தம பிள்ளைகள் பாரத மண்ணில் உண்டு.
அதே போல,
சம்ஸ்க்ரிதம் என்ற சப்த பிரம்மம், பரவாசுதேவனால் ஜீவாத்மாக்களுக்கு கொடுக்கப்பட்ட மொழி.


947AD வரை,
பாரத நாட்டில் அனைவரும் ஆங்கிலம் போல, பொது மொழியாக மற்ற மொழி தேசத்துடன் பேசிக்கொண்டு இருந்த மொழி 'சம்ஸ்க்ரிதம்'.
'ராஜ ராஜ சோழன், ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர்', காஷ்மீர் வரை சென்ற பொழுது, பொது மொழியான 'சம்ஸ்க்ரித மொழியில்' தான் வர்த்தகங்கள், உரையாடல் நடந்தது.
அந்த அந்த தேசத்தில், 
ரிஷிகள் உருவாக்கிய 'தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்' போன்றவையும் செழித்து வளர்ந்தது. 
'சம்ஸ்க்ரிதம்' என்ற சப்த பிரம்மம்,
பொது பாஷையாகவும்,
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering, architect marvel), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
போன்றவை கற்று கொள்ளவும்,
தெய்வங்களை உபாசிக்கவும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டது பாரத தேசம் முழுவதும்.

நம் தாய் மொழியில் பேசினாலும், ஊமை பாஷை பேசினாலும் இறைவன் புரிந்து கொள்வார்.
ஆனால்,
சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் 'ஒரு ஸ்லோகம்' சொல்லி நமஸ்காரம் செய்தாலும்,
"என் பிள்ளை கஷ்டப்பட்டு சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து என்னிடம் நிற்கிறானே!!.
எத்தனை பிரியம் என்னிடம் இருந்தால், எனக்காக கஷ்டப்பட்டு இந்த ஒரு சமஸ்கரித ஸ்லோகத்தை கற்று இருப்பான். 
இவன் காட்டும் பிரியத்துக்கு நான் செய்யும் கருணை போதாது" 
என்று பூரிப்பு கொள்கிறார்.



உண்மையான இறை பக்தி உள்ளவன்,
'இறைவனை நெருங்க எப்படியெல்லாம் முயற்சி செய்து பக்தி செய்யலாம்?!! 
என்று நினைப்பான். 

'தனக்காக சிரமப்பட்டு ஸ்லோகங்கள் சமஸ்க்ரிதத்தில் இருந்தாலும் படித்து சொல்கிறானே' என்று, பக்தனின் பக்தி சிரத்தையை கண்டு, இறைவன் கருணையை பொழிகிறார்.

தான் இருப்பதை மறைமுகமாகவும், 
பக்தி வளர வளர 'யாரோ வந்து உதவியது போலவும்', 
மேலும் பக்தி வளர வளர 'கனவில் திவ்ய காட்சிகள் கிடைக்க செய்தும்', 
மேலும் பக்தி வளர வளர 'தன் திவ்ய ரூபத்தை பக்தன் விரும்பியபடி ராமராகவோ, கிருஷ்ணராகவோ, நாராயணனாகவோ, சிவனாகவோ பரவாசுதேவன் காட்சி கொடுத்து 
மோக்ஷத்திற்கு வழி காட்டுகிறார்.

இறை நம்பிக்கை உள்ள பக்தன்,
"தெய்வத்துக்கு தமிழ் தெரியாதா?" என்று கேட்டு நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை.
மனித ஆயுள் 100 வயது போல தோன்றினாலும், இது ஒரு அற்ப காலம் தான். காலம் பொன் போன்றது.
மாறாக,  
"தமிழில் கொட்டிக்கிடக்கும் பதிகங்கள், 4000 பிரபந்தங்களை, கந்த சஷ்டி கவசம், போன்றவற்றை படித்து, 
ஆழ்வார்கள்  போலவும், 
நாயன்மார்கள் போலவும், அருணகிரி நாதர் போலவும், கிருபானந்த வாரியார் போலவும், 
பாரத மண்ணில் இருக்கும் மகான்கள் போலவும், எப்படி தன்னுடைய பக்தியை உயர்த்தி கொள்ளலாம்!!" என்று தான் இறை நம்பிக்கை உள்ள பக்தன் நினைப்பான்.



பக்தி உயர உயர,
பிரபந்தங்கள், பதிகங்கள் பாட பாட,
"நாம் சமஸ்க்ரித மொழியில் பகவானே தன் திருவாயால் சொன்ன "பகவத் கீதையை" நாமும் சொல்லலாமே" என்று நினைக்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
(எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. 
உன் பாபங்கள் அனைத்தையும் மன்னித்து, மோக்ஷம் வரை உனக்கு கொடுக்கிறேன். கவலைப்படாதே)
என்று பரமாத்மா கிருஷ்ணரே தன் திருவாயால் நமக்கு சொன்ன ஆறுதல் வார்த்தை (ஸ்லோகம்) ஆயிற்றே.. 
இதன் அர்த்தம் புரிந்து கொண்டு, பெருமாள் முன்னால் நின்று கொண்டு சொல்லலாமே... 
வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வத்திடம் சொல்லலாமே..

இப்படியே இன்னும் என்ன சொல்கிறார் நம் கிருஷ்ணர் என்று மேலும் பல சுலோகங்களை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு, தினமும் அனுபவித்து சொல்லலாமே.. 
பகவான் சொன்ன சொல்லை நாமும் சொல்ல, நமக்கு பக்தி தானே முக்கியம்.

"பகவான் நாமும் சமஸ்க்ரித மொழியில் ஒரு சுலோகம் சொல்வதை பார்த்து, ஆச்சர்யப்படுவாரே? நம் மீது விசேஷமாக கடாக்ஷம் செய்வாரே" 
என்று இறை பக்தியில் உருக்கம், ஆர்வம் போன்ற அனுபவங்களை பெறலாமே.

"தெய்வத்துக்கு இந்த மொழி தெரியாதா? அந்த மொழி தெரியாதா?" 
என்ற கேள்விகள் நாத்தீக போலிகள், பிற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்ய காத்திருக்கும் போலிகள் எழுப்புகிறார்கள்.
இவர்களுக்கு நம் பாசுரங்களும் தேவையில்லை. 
ஹிந்து தெய்வங்களும் தேவையில்லை. 
ஹிந்துக்களே தேவையில்லை. 

இறை பக்தி வளர, 
தமிழன், மீராவின் கீர்த்தனைகளை பாடினாலும் தெய்வம் ஏற்று கொள்ளும். 

இறை பக்தி வளர, 
தமிழன் பதிகங்களை, பிரபந்தங்களை  பாடினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.
இறை பக்தி வளர, 
எதுவுமே பேசாமல், மௌன மொழியில் பேசினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.

தேவ பாஷையான, இந்த உலகில் உள்ள ஒலியில் மறைந்து (மறை) இருக்கும் வேத மந்திரங்கள் கொண்டு பாடினால், 
பகவத் கீதையில் ஒரு சுலோகம் சொன்னாலும், 
தெய்வம் பெருமகிழ்ச்சி அடைந்து, நமக்கு நல்லவைகள் மட்டுமே நடக்க அருள் செய்கிறார்.

"ஹிந்து தெய்வத்தை கிண்டல் செய்து விட்டோம்" 
என்று நினைத்து, பிற மதத்தில் உள்ளவன் நினைத்தால், அந்த பாபங்களே அவனை படு குழியில் தள்ளி, அவன் வணங்கும் போலி தெய்வங்களும் அவனை கை விட்டு விடும்.

என் கனவிலும் பெருமாள் வருவாரா? 
தெய்வ காட்சிகள் கிடைக்குமா? 
நான் ஒழுக்கமாக வாழ்கிறேனா? 
என்று தன்னை தானே ஹிந்துவாக பிறந்த அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்...



ஹிந்துக்கள் பக்தியை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, "தெய்வம் புரிந்து கொள்ளுமா?" 
என்று திமிர் பிடித்த கேள்விகளை, 
நாத்தீகன் கேட்கிறானே ! பிற மதத்தில் இருந்து கொண்டு நம் மதத்தில் நுழைந்து கொண்டு இப்படி கேள்வி கேட்கிறானே !! நாமும் கேட்கலாமா என்று நினைக்க கூடாது... 

இறைவனுக்கு நம் மொழியும் தெரியும்.  
ஆனால், 
அவருக்காக நாம் ஒரு படி முன் வைத்தால், அவர் நம்மை நோக்கி 10 படி முன் வைத்து தான் இருப்பதை உணர செய்கிறார். 
பக்தி முக்கியமே தவிர...  விதண்டாவாத பேச்சுக்கள், தெய்வங்களை காட்ட உதவாது. 
விதண்டாவாத பேச்சுக்கள், அழிவையே தரும்.    

ஹிந்துக்கள், போலிகளை அடித்து துரத்த வேண்டும்.  

நாயன்மார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், சங்கரர், அகஸ்தியர், கம்பர் போன்றவர்கள், நடந்த இந்த தமிழத்தை, 
நாத்தீக போலிகள், மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை எப்படி குறை சொல்லலாம்? மதம் மாற்றலாம்? என்று போலி தெய்வங்களை வைத்து கொண்டு இருக்கும் போலிகளுக்கு இடம் தரவே கூடாது. 

வாழ்க ஹிந்துக்கள்.  

உலகில் எங்கு பிறந்தாலும் சோற்றுக்கு அலையும், போலி தெய்வங்களை வணங்கும் மனிதனாக பிறந்து இருப்போம். 
உலகில் ஹிந்துவாக பிறப்பதே அரிது. 
அதிலும் தமிழகத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ராமானுஜர், அருணகிரி நாதர் போன்ற மகான்கள் கால் பட்ட தேசத்தில் ஹிந்துவாக பிறப்பது கோடி புண்ணியம். 

"ஹிந்துவாக பிறந்தோமே" என்று பெருமிதம் கொள்வோம்.  
வாழ்க்கையை வீணடிக்காமல், இறை சிந்தனையை உயர்த்தி கொள்ளவும், போலிகளை எதிர்க்கவும் முயல்வோம்.



வாழ்க ஹிந்துக்கள். 

Hare rama, Hare Krishna (Listen to Bhajan)

Sandhya Vandanam (Morning with meaning)



Sandhya Vandanam (Afternoon with meaning)

Sandhya Vandanam (Evening with meaning)