Followers

Search Here...

Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Sunday 7 June 2020

"ஆணுக்கு பெண் அடங்கி இருக்க வேண்டும்" இது நியாயம் என்று எப்பொழுது புரியும்?

முதலாளிக்கு விசுவாசமாக இரு:
வேலை பார்ப்பவனுக்கு இந்த அறிவுரை தவறாக தான் தோன்றும்.
தான் ஒரு காலத்தில் சொந்த வியாபாரம் தொடங்கும் போது "இது நியாயம்" என்று புரியும்.



தந்தை சொல் மீறாதே:
தான் பிள்ளையை இருக்கும் போது இதன் அர்த்தம் புரியாது.
தான் தகப்பனாக ஆகும் போது, இதன் நியாயம் புரியும்.

சத்தியம் பேசு:
பொய் பேசும் வரை நமக்கு இந்த வாக்கு புரியாது.
தனக்கு எதிராக மற்றொருவன் பொய் சாட்சி சொல்லும் போது, இதன் நியாயம் புரியும்.

குடிக்காதே:
தான் குடிக்கும் போது, இதன் அர்த்தம் புரியாது.
தான் பெற்ற பிள்ளை பிற்காலத்தில் குடித்து சீரழியும் போது இதன் நியாயம் புரியும்.




பெண் ஆணுக்கு (முதலில் தகப்பன், பிறகு கணவன்,  கடைசியில் பிள்ளைக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டும் :
இது ஆண் ரிஷிகளாக சேர்ந்து கொண்டு, "பெண்ணை அடக்க செய்த சதி" என்று தான் தோன்றும்.

குழந்தை பருவத்தில் பொறுப்பான தகப்பன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

இளமையான அழகான பெண்ணாக இருக்கும் காலத்தில்,  தனக்காக சம்பாதித்து உழைக்கும் கணவன் இல்லாமல் வாழும் போது இதன் சத்தியம் புரியும்.

வயதான காலத்தில் பிள்ளை இல்லாமல் வாழும் போது, இதன் அர்த்தம் புரியும்.

Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)




Saturday 4 May 2019

சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? பாரத மக்கள் சிந்தனைக்கு....

947AD முன்பு வரை பாரத மக்கள் எப்படி வாழ்ந்தனர்?
அதற்கு பின் எப்படி வாழ்கின்றனர்? என்று அலசி பார்க்கும் போது,
சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? என்ற தெளிவு நமக்கு ஏற்படும்...



947 வரை பாரத மக்கள் வாழ்ந்த முறை:
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் வழிபடும் தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தது. வழிபாட்டு முறைகள் இருந்தது.

அடுத்தவன் தெய்வம் வேறாக உள்ளதே!! நம்பிக்கை வேறாக உள்ளதே!! என்று ஒருவனும் பொறாமைப்படவில்லை.
அடுத்தவன் நம்பிக்கையை மதித்தான்.

பாரத பூமியில் 'தெய்வத்தின் பெயரால்' சாமானிய மக்களை கொல்வதோ, கோவில்களை இடிப்பதோ நடக்கவே இல்லை.

அனைத்து பாரத மக்களும் சுய மரியாதையுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர். செல்வத்தில் புரண்டனர்.

'என் தெய்வம் சிவன்' என்று சொல்பவன், 'காளி கோவிலை இடிப்பேன்' என்று பிறருடைய நம்பிக்கையில் தலையிடவும் இல்லை, இடிக்கவும் இல்லை.
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீ கிருஷ்ணராக வந்து இருக்கிறார் என்று தெரிந்தும், அர்ஜுனன் போர் நடக்கவிருப்பதால் சிவபெருமானிடம் உள்ள பாசுபத அஸ்திரத்தையும் வாங்கி கொள்ளலாம் என்று தபசுக்கு செல்ல, கிருஷ்ணர் அதற்காக அர்ஜுனன் முயற்சியை தடுக்கவில்லை.
தெய்வங்களுக்குள்ளும் பொறாமையில்லை.
பாரத மக்களுக்குள்ளும் பொறாமையில்லை.

பாரத அரசர்களும் தெய்வ விஷயங்களில்  பொறாமைபடவில்லை.
"சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, விஜயநகர, மராத்திய, குப்த அரசரகள்" என்று அனைத்து அரசர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிற அனைத்து தெய்வத்துக்கும் பெரிய பெரிய கோவில்கள், நிலங்கள் கொடுத்து அவரவர் தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர்.


பொறாமை குணம் இல்லாத அரசன்,
பொறாமை குணம் இல்லாத பாரத மக்கள்,
பொறாமை இல்லாத தெய்வங்கள் - கொண்டதாக இந்த புண்ணிய பாரத பூமி இருந்தது.

இந்த தர்மம் லட்சக்கணக்கான வருடங்களாக (சனாதனமாக) இந்த பாரத மண்ணில் இருந்தது.
பல தெய்வங்கள் இருந்தாலும், கலாச்சாரம் ஒன்றாக இருந்தது. குணம் ஒன்றாக இருந்தது.
இதனால் கலாச்சாரத்தில் ஒன்றுபட்ட, பாரத மக்கள் தங்களை  பொதுவாக "சனாதனமாக இருக்கும் தர்மத்தில்" இருப்பவர்கள் என்று மட்டுமே பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.

வரலாற்றில் கிருமிகண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கூட வைஷ்ணவ கொள்கைகள் ராமானுஜரால் பரவுவதை கண்டு, சிவபக்திக்கு குறைவு வந்து விடுமோ என்ற தனி மனித கோபத்தில்,  ராமானுஜரை கொலை செய்ய நினைத்தான்.
இந்த சதியில் இருந்து தப்பித்து, ராமானுஜர் கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்கு சென்று 12 வருடம் தங்கி விட்டார்.
ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தில் இல்லை என்றதும், சோழ அரசன் 'பெருமாள் கோவிலை இடிப்பேன், வைஷ்ணவர்களை அடியோடு அழிப்பேன்' என்று இறங்கவில்லை.

தனி மனித பகை இருந்ததே ஒழிய, பிற தெய்வங்களிடம் வெறுப்பு இல்லை.

ராமானுஜர் போன்ற மகானுக்கு அபசாரம் செய்ததால், இந்த சோழன் புற்றுநோய் (cancer) வந்து இறந்தான்.
பின் வந்த சோழ அரசர்கள், ராமானுஜரை அழைத்து அவருக்கான மரியாதையை கொடுத்தனர். ஸ்ரீ ரங்கத்திலேயே கடைசி வரை ராமானுஜர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்தார்.
ராமானுஜர் ஒரு சோழ அரசனால் விரட்டப்பட்டார் என்பதால், ராமானுஜர் யாரையும் விமர்சனம் செய்யவே இல்லை. சிவ துவேஷம் காட்டவே இல்லை.

அவரவர்கள் அவர்கள் தெய்வத்தை வழிபடுவதில் திருப்தியாக இருந்தனர்.

நாயன்மார்களும் திருப்தியாக சிவ பக்தி செய்தனர்.
ஆழ்வார்களும் திருப்தியாக பெருமாள் பக்தி செய்தனர்.
அருணகிரிநாதர் ஒரு குறைவும் இல்லாமல் முருக பக்தி செய்தார்.

இது தானே சனாதன தர்மம்.
நிம்மதியாக இருந்தது பாரத நாடு.

"வளர்ச்சி, விவசாயம், எல்லை பாதுகாப்பு, நீதியை நிலைநாட்டுவது" இவையே பாரத அரசனுக்கு முக்கிய கடமையாக இருந்தது.
மக்களுக்குள் தெய்வத்தை வைத்து சண்டைகளே இல்லாமல் இருந்தது.
ஹிந்து அரசர்களுக்கு "தெய்வத்தின் பெயரால் சண்டை" என்பதே புரியாத விஷயம். தேவையில்லாத விஷயமும் கூட.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் உள்ளே நுழைந்ததும், "தெய்வத்தின் பெயரால்" அட்டகாசம், வெறுப்பு ஆரம்பம் ஆனது.
அது பாரத தேசத்தையும் விட்டு வைக்கவில்லை.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக அவதாரம் செய்தும், கிருஷ்ணராக அவதாரம் செய்தும்,
ராம 'மதம்', கிருஷ்ண 'மதம்'
என்று தான்தோன்றி தனமாக மதங்களை உருவாக்கி, உளராமல் இருந்தனர் பாரத மக்கள்.
மஹாவீரர் தோன்றிய பின்,
புத்தர் தோன்றிய பின்,
அவர்கள் பெயரால் 'சன்மார்க்க வழி' என்று முதலில் ஊர் முழுக்க கடைபிடிக்க ஆரம்பித்தனர் பாரத மக்கள்.
கலியின் பிடியில் புத்தி தடுமாறி போன காலம் என்று சொல்லலாம்.

'மதம்' என்று இவர்களும் அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.
இதுவும் ஒரு தர்ம வழி என்று தான் சொல்லிக்கொண்டனர் பௌத்தர்களும், ஜைனர்களும்.

பாரத மக்களை பொறுத்தவரை, "மதம்' என்ற வார்த்தையை 'கர்வம்' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வந்தனர் அது நாள் வரை.
"காம, க்ரோத, மத..." என்று சொல்லும் போது, "காமம், கோபம், கர்வம்" போன்ற துர்குணங்கள் நமக்கு இருக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த பாரத மக்களிடம்,
'கர்வம்' என்ற பொருள் கொண்ட "மதம்" என்ற பெயருக்கு வேறு சாயம் பூசினர் வெளி மதத்தினர்.

வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்கள், தங்களை "இஸ்லாம்" மதம் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.
947ADல் அரேபிய முஸ்லிம்களால், கோரி அரசாட்சி "ஆப்கான் தேசத்தில்" தலை எடுக்க ஆரம்பித்தது.
பௌத்த அரசர்கள் அங்கு வீழ்ந்து, கோரி அரசாட்சி ஆரம்பம் ஆனது.
அன்று ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு பெரும் சோதனை.


இஸ்லாம் (மனிதன் 7) உள்ளே நுழைந்த போது, பாரத மக்கள் நிலை என்ன ஆனது?


  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது.எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
  • மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.


  • மனிதன் 7 : ஒப்புக்கொள்ளவே முடியாது. அல்லாவுக்கு (இறைவன்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

இப்படி ஆரம்பித்த பின், பாரத தேசம் கலவர பூமி ஆனது.

இஸ்லாமியர்கள் வருவதற்கு முன் கூட ஒரு அரசனுக்கும், இன்னொரு அரசனுக்கும் போர் எழுந்துள்ளது.
ஆனால், அரசர்கள் யாவரும், தனியான இடத்தில் தான் போர் நடத்தினர்.

சோழ அரசன் காசி வரை சென்று ஜெய கொடி நாட்டினான் என்று சரித்திரங்கள் சொல்கிறது.
அசோக சக்கரவர்த்தி ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும் ஆண்டார் என்று சொல்கிறது.

ஒரு நாட்டை பிடிக்க,
பொது மக்களை கொலை செய்வதோ, 
கொள்ளை அடிப்பதோ, 
கோவிலை இடிப்பதோ 
பாரத மக்களும், அரசர்களும் பார்த்திராத குணங்கள். கீழ்த்தரமான குணங்கள்.

முகம்மது கஜினி என்ற அரேபிய இஸ்லாமியன் உள்ளே நுழைந்ததும் அவன் தாக்கியதே சோம்நாத்தில் உள்ள 'சிவன்' கோவிலை தான்.
குஜராத் நகரமே நிலை குலைந்தது.

17 முறை தொடர்ந்து, இவன் சிவன் கோவிலை இடித்து, அங்கு உள்ள தங்கங்களை கொள்ளையடிக்க முயன்றான்.
17 முறையும் அப்போது இருந்த ஹிந்து (சனாதன தர்மத்தில் இருந்த) அரசனால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டான்.



ஊர் மக்களை தாக்கியும்,
கோவிலை இடித்தும் போர் செய்த இஸ்லாமிய அரேபியர்கள்,
18வது முறை இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து ஹிந்து அரசனை கொன்று, சோம்நாத் கோவிலை தரைமட்டமாக்கி அங்கு இருந்த கோடிக்கணக்கான நகைகளை அள்ளிக்கொண்டு ஓடினான்.

17 முறையும் தோற்ற கஜினி, ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டான். 17 முறையும் மன்னித்தான் ஹிந்து அரசன்.
'கோவிலை இடிப்பதே இவர்கள் முதல் கொள்கை,
பாரத மக்களை தன் வழிபாட்டு முறைக்கு மாற்றுவதே இவர்கள் முக்கிய கொள்கை'
என்று பாரத பூமியை தாக்க வந்த இவர்களை, மற்ற ஹிந்து அரசர்கள் போல தான் இவனும் என்று நினைத்து, 17 முறை மன்னித்து விட்டான் ஹிந்து அரசன்.
விளைவு:
அன்று சோம்நாத் சுற்றி இருந்த லட்சக்கணக்கான சௌராஷ்டிர மொழி பேசும் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருப்பவர்கள்) வாழ வழி தேடி, நாடோடிகளாக வெளி மாநிலங்களுக்கு ஓடி ஓடி, இன்று மஹாராஷ்டிரா முதல் மதுரை வரை சிதறி சிதறி வாழ்ந்து வருகின்றனர்.




அரேபிய இஸ்லாமியர்களால், முதன் முதலில் பாதிக்கப்பட்ட சனாதன தர்மத்தில் வாழ்ந்த முதல் சமூகம் "சௌராஷ்டிர" சமூகமே.
45000க்கும் மேலாக பாரத நாட்டில் இருந்த பெரிய பெரிய முக்கியமான கோவில்களை இடித்து தள்ளினர் அரேபிய இஸ்லாமியர்கள்.
மீண்டும் மீண்டும் அரசர்கள் கட்டுவதை பார்த்து, அதன் பிறகு, கோவில் மேல், மசூதியை கட்ட ஆரம்பித்தனர். தனக்கு அரண்மனைகள் கட்டிக்கொண்டனர்.

வட நாட்டில், தமிழ்நாட்டில் இருப்பது போல லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தன.
இன்று, ஒன்று கூட, தமிழ்நாட்டில் உள்ளது போல அங்கு காணப்படவில்லை.
1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பல லட்சம் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருந்தவர்கள்) பயத்தினாலும் பணத்திற்காகவும், இஸ்லாமியனாக மாறினர்.

அலாவுதீன் கில்ஜிக்கு முக்கியமான படை தளபதி "மாலிக் காபுர்".
அலாவுதீன் கில்ஜி, குஜராத் மீது படையெடுத்த போது, அடிமைகளாக இழுத்து வந்த ஹிந்துக்களில் ஒருவன் தான் இந்த மாலிக் காபுர்.


'மாணிக்' என்ற இந்த ஹிந்து மீது கில்ஜிக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், அவனிடம் நெருங்கி பழகினான்.
போர் திறமை இருப்பதை கண்ட கில்ஜி, இவனை பல ஹிந்து அரசர்களை எதிர்த்து போர் செய்ய அனுப்ப, கோவிலை இடிப்பதும், பொது மக்களை கொள்வதன் மூலம் ஹிந்து அரசர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள செய்வதும், ஆங்காங்கு வெற்றிகளை பெற, நாளடைவில், தன்னை இஸ்லாமியனாக மாற்றிக்கொண்டான் "மாணிக்" என்ற "மாலிக் காபுர்".

பணத்திற்காகவும் புகழுக்காகவும் தன்னை இஸ்லாமியனாக ஆக்கிக்கொண்ட பின், இவன் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இந்த மாலிக் காபுர் என்பவன் தான், தெலுங்கு தேசத்தில் படையெடுத்த போது, பொது மக்களை தாக்கி, காளி கோவிலை இடித்து, அங்கு கிடைத்த பல வைரங்களில், "கோஹினூர் வைரம்" உட்பட பல கொள்ளையடித்த செல்வங்களை கில்ஜியிடம் கொடுத்தான்.
ஊரை கொள்ளையடித்து, கோவிலை இடிக்க, காகதியா பேரரசு வேறு வழில்லாமல் பெரும் செல்வத்தை மாலிக் காபுர் எடுத்து செல்ல அனுமதித்தது.

இவனே பின்னர், தமிழ்நாட்டுக்கு புகுந்து பாண்டிய மன்னர்களை நேரில் எதிர்க்காமல், ஒரு லட்சம் இஸ்லாம் படைகளுடன் நேராக  மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, அங்கு சுந்தரேஸ்வரர் சிவலிங்கத்துக்கு முன் ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டு இருந்த போலி லிங்கத்தை இடித்து, கோவிலை கைப்பற்றி விட்டான். பாண்டிய மன்னர்களை அடி பணிய செய்தான்.
பொதுவாக கோவிலை தாக்கியும், பொது மக்களை தாக்கியும் தான் அரசர்களை சரணடைய செய்து கொன்றனர்.
இது முடியாத பட்சத்தில், இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து அரசர்களை தாக்கினர்.
பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம் அது.

அடுத்த 80 வருடங்கள், கில்ஜி மூலமாக இஸ்லாமிய ஆட்சி ஆரம்பித்து, அடுத்து வந்த முகம்மது பின் துக்ளக் ஆட்சி வரை, இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்தது.
தமிழர்களை கொன்று குவித்தனர் பாண்டிய தேசத்தை கைப்பற்றிய இஸ்லாமிய அரேபியர்கள்.

மதுரை ரத்த காடாக ஆனது.
80 வருடங்கள் கழித்து கர்நாடகத்தில் இருந்து சிங்கமாக புறப்பட்டு, விஜயநகர இளவரசன் கம்பண்ணா இஸ்லாமிய ஆட்சியை 80 வருடங்களுக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கு பின், தமிழநாட்டை இஸ்லாமிய ஆட்சி வட இந்தியாவை போல முழுவதுமாக பிடிக்கவே முடியவில்லை. சோழ நாடு முழுவதுமாக விஜயநகர அரசால் காக்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் கட்டிய கோவில்கள் தப்பித்தன.

இதே மாலிக் காபுர் தான் மதுரையை தொடர்ந்து, ஸ்ரீ ரங்கம் நுழைந்து, ஸ்ரீ ரங்க கோவிலில் கொள்ளை அடித்து, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.
பின்னர் வைஷ்ணவர்கள் சென்று, அவனிடம் நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகள் செய்து, அவனை எப்படியோ சம்மதிக்க வைத்து, ஸ்ரீ ரங்கநாதரை மட்டும் மீட்டு டெல்லியில் இருந்து கொண்டு வந்து விட்டனர்.
இவன் மகள் சுரதானி என்ற துலுக்கநாச்சியார், ரங்கநாதரை அவள் அரண்மனையில் வைத்து அதுவரை பொம்மையாக விளையாடி கொண்டிருந்தாள்.
ஸ்ரீ ரங்கநாதர் அவளுடன் சிலையாக இருந்தே பேச ஆரம்பிக்க, தன் தந்தை மாலிக் காபுர் அந்த ரங்கநாதரை கொடுத்து விட்டார் என்று தெரிந்து ஸ்ரீ ரங்கம் வர, கோவிலில் நுழைந்து ரங்கநாதரை பார்த்ததும் அவர் சரணத்திலேயே உயிர் துறந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்டு, மீண்டும் இஸ்லாமியர்கள் ஸ்ரீ ரங்கம் படையெடுக்க, மதுரையில் சுந்தரேஸ்வரர் 80 வருடங்கள் சுவருக்கு பின் இருந்தது போல, ஸ்ரீ ரங்கநாதரும் 80 வருடங்கள் மேலூர், கேரள தேசம், திருப்பதி என்று இருந்து விட்டு, விஜயநகர அரசர்கள் மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்த பின், மதுரை மீனாட்சி கோவிலும் திறக்கப்பட்டது. ஸ்ரீ ரங்கமும் திறக்கப்பட்டது.

நினைத்து பார்க்க முடியாத நிலையில், நம் பாட்டனார்கள் வாழ்ந்து, சமாளித்து, அந்த சூழ்நிலையிலும் ஹிந்துவாகவே வாழ்ந்து நம் வரை ஹிந்துவாக வாழ வழி செய்துள்ளனர்.

மறக்க கூடியதா நம் பாட்டனார்கள் அனுபவித்த நிலை?!!.

மதுரை தேசம் மாலிக் காபுர் அட்டகாசத்திற்கு பின், 80 வருடங்கள் இஸ்லாமிய அரேபியர்கள் ஆட்சியில் மாட்டியது.
இந்த சமயத்தில் ஒரு 5 வருடங்கள் மட்டும் எப்படி இருந்தது? என்று இஸ்லாமியன் இபின் படூடா என்பவனே எழுதி வருத்தப்பட்டார்.
என்ன நிலையை தமிழர்கள் சந்தித்தனர்? என்று தெரிந்து கொள்ள படியுங்கள். Tamil_People_LifeStruggle

"தெய்வத்தின் பெயரால்" வெறுப்பையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிறர் கோவிலை இடிப்பதையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிற தெய்வங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்களை மாற்ற நினைப்பதையும்,
1200 வருடங்கள் தொடர்ந்து செய்தனர் அரேபிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள்.

1400ADல் போர்சுகீஸ் கிறிஸ்தவர்கள் (வாஸ்கோட காமா) மூலமாக  ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு மேலும் ஒரு பெரும் சோதனை.

கிறிஸ்தவ மதமும் நுழைந்த பின், பாரத தேச மக்கள் மேலும் திண்டாடினர்.

ஏற்கனவே மனிதன் 7, 'தன் கொள்கையே சிறந்தது. நீங்கள் என் வழியில் வாருங்கள், இல்லை உங்களை எதிர்க்க தயார்' என்று அட்டகாசம் செய்து கொண்டு இருக்கும் போது, ஏறத்தாழ இதே கொள்கையுடைய கிறிஸ்தவர்களும் (மனிதன் 8) வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்தனர்.


  • மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரே ஏசு. அவரை கொன்றாலும் அவர் நமக்காக தான் இறந்து போனார். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். ஏசுவை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள். உங்களுக்காக உயிர் விட்ட ஏசுவே உங்கள் தெய்வம்.
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். மனிதன் 8 சொல்வதும் பொய். ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை (ஏசு) ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது. அல்லாவுக்கு (கடவுள்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.



கிறிஸ்தவர்கள் ஆட்சியின் போது, கிறிஸ்தவர்கள், காளையார் கோவிலை இடித்து தள்ளிவிடுவோம் என்று சொல்ல, கோவிலை காப்பாற்ற, உயிரை கொடுக்க முன் வந்தனர் "மருது சகோதரர்கள்".

சிவபெருமான் கோவிலை இடிக்க கூடாது என்று, நம் மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினர். கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் ஹிந்துக்கள் கேவலப்படுத்தபட்டனர்.

தெய்வங்களை கிண்டல் செய்தும், அவமானம் செய்தும் பேசும் பழக்கம் இவர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. 

கிறிஸ்தவதுக்கு மதம் மாற்றப்படும் ஹிந்துவுக்கும், ஏசு நல்லவரா? கெட்டவரா? என்பதை விட, ஹிந்து தெய்வங்களை பற்றி தனக்கு தோன்றிய படி, கீழ்த்தரமான போதனைகள் தான் அதிகம் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவதுக்கும், இஸ்லாம் கொள்கைக்கும் ஏழாம் பொருத்தம்.

இருவருக்குமே "தங்கள் கொள்கை தான் சரி" என்ற தீவிரம் உடையதால், "மற்றவர்களை தன் கொள்கைக்கு இழுக்க வேண்டும்" என்ற கொள்கையும் உள்ளதால்,
"மற்ற நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் நாசமாக போவார்கள், நரகம் போவார்கள்" என்று அவர்கள் நம்பிக்கை.

இன்று வரை கிறிஸ்தவ நாடுகள், இஸ்லாமியர்களை நம்புவதில்லை.

'அமெரிக்கர்கள்' எந்த இஸ்லாமிய தேசத்தையும் நம்புவதில்லை. இஸ்லாமியன் இவர்கள் நாட்டுக்குள் வந்தால் ஆயிரம் கேள்விகள் விசாரணைகள் செய்கிறது.
நியூஸிலாந்தில் இந்த பகையே, மசூதிக்குள் புகுந்து, தொழுகை செய்து கொண்டிருந்த சாதாரண இஸ்லாமியர்களை சரமாரியாக கொன்று குவிக்க கொண்டு சென்றது.

இதற்கு சளையில்லை என்று,
இலங்கையில், சர்ச்சுக்குள் புகுந்து இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பாம் போட்டு கொன்று குவித்தனர் இஸ்லாமியர்கள்.
'தன் கொள்கை மட்டுமே உயர்ந்த கொள்கை' என்றும்,
'தன் வழிபாட்டு முறையை சரியான வழி' என்றும்,
'தான் நம்பும் தெய்வமே தெய்வம்' என்றும்
தெய்வத்தின் பெயரால், சண்டை இட்டுக்கொள்ளாத நாடுகள்,
இந்த இரு மதங்கள் தோன்றிய பின், மதத்தின் பெயரால் பல கோடி மக்களை இழந்து விட்டது.
பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன.
பல பேரரசுகள் அழிந்து விட்டன.


அன்று கத்தி, வில் கொண்டு, தெய்வத்தின் பெயரால் சண்டை போட்டனர். இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டையிட்டால் உலகம் அழிந்து போகும்.
கிரேக்க கலாச்சார இறைவழிபாடுகள், கொள்கைகள் அழிந்து, இன்று கிரேக்க நாடு கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

ரோமானிய பேரரசும் தன் கலாச்சாரம், தெய்வ வழிபாட்டை இழந்து கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

இப்படி கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர்களுக்கு,
"மற்ற நம்பிக்கைகள் நரகத்திற்கு தள்ளும், நம் வழியே சொர்க்கம் தரும்" என்று சொல்வதால்,
உலகம் எங்கும் 'தெய்வத்தின் பெயரால்' மத சண்டைகள் இந்த இரு மதங்களாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பான், சீனா போன்ற தேசங்கள் பௌத்த மதத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் ஓரளவு மத சண்டைகள் இல்லாமல் உள்ளனர்.

நம் பாரத நாட்டிலோ, ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல்,
1200 வருடங்களில் சனாதன தர்மத்தில் இருந்த லட்சக்கணக்கானவர்களை கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மதம் மாற்றி விட்டு, அரேபியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் அவரவர் ஊருக்கு முடிந்த வரை கொள்ளையடுத்து விட்டு சென்று விட்டனர்.

அவர்கள் சென்று விட்டாலும்,
ஹிந்துவாக இருந்து, இன்று கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக வாழும் பாரத மக்கள்,
1200 வருடங்களும் மதம் மாறாமல் ரோமானிய கிரேக்க கலாச்சாரம் அழிந்ததை போல சனாதன தர்மத்தை அழித்து விடாமல், இன்று வரை சனாதன தர்மத்திலேயே (ஹிந்துக்களாக) வாழுவதை பார்த்து பெருமை படாமல், தானும் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வழியில் செல்வோம் என்று நினைக்காமல், மானத்தோடு வாழும் ஹிந்துக்கள் மேல் வெறுப்பை உமிழ்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஒரு படி மேலே போய், சிவனை கேலி செய்து சித்திரம் வரைந்து வெறுப்பை கக்குகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து புகுந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாதிகள், 'மதம்' என்றால் 'கர்வம்' என்று மட்டுமே பயன்படுத்தி வந்த பாரத மக்களை பார்த்து, பல தெய்வங்களை வணங்கினாலும், வேறுபாடு இன்றி, ஒரே கலாச்சாரமாக வாழ்வதை பார்த்து,
சிந்து நதி ஓரம் வந்து 'இந்டு' என்றும், 'இந்து' என்றும், 'ஹிந்து' என்றும், 'ஹிந்டு' என்று வாய்க்கு வந்த வந்தபடி நம் அனைவரையும் அடையாளப்படுத்தினார்கள்.

நம்மை மட்டுமல்ல, பிரயாகை என்ற பெயரை மாற்றி அல்லாஹ்பாத் என்று மாற்றினர்.
கிறிஸ்தவன் பல தமிழ் ஊர் பெயர்களை குட்டி சுவர் ஆக்கினான்.


திருச்சிரார்ப்பள்ளி என்று சொல்ல முடியாமல் ட்ரிசி என்றான், கொல்கத்தாவை கல்கட்டா என்றான்.
மும்பையை பாம்பே என்றான்.

பாரத நாட்டை விட்டு இவர்களை கஷ்டப்பட்டு கிளப்ப வைத்த சமயத்திலும், பாரத நாட்டுக்கே அர்த்தமில்லாத பெயரை கொடுத்து விட்டான். 
நேரு யோசிக்காமல் ஏற்றார்.

ஐரோப்பிய கிறிஸ்தவன், நம் பாரத நாட்டை மூன்றாக பிரித்து, இவன் உளறி கொட்டிய 'இந்டு' என்பதையே 'இண்டியா' என்று ஒரு பகுதிக்கு பெயர் வைத்தான்.
தொன்று தொட்டு பல தெய்வங்கள் வழிபட்டாலும்,
பகை இன்றி ஒரே கலாச்சாரமாக வாழ்ந்த நமக்கும் 'மதம்' என்ற அடையாளத்தை கொடுத்து,
அவன் உளறி கொட்டிய 'ஹிந்து' என்ற வார்த்தையையே மத பெயர் ஆக்கினான்.

"பாக்கி உள்ள 2 பகுதிகளை" கிழக்கு பாக்கிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான் என்று பெயர் வைத்து, பிரித்து விட்டான்.

"ஜின்னா" போன்ற ஹிந்துவாக ஒரு பரம்பரையில் இருந்து இஸ்லாமியனாக மாறியவர்கள்,
'பாகிஸ்தான் இனி இஸ்லாமிய நாடு' என்று தெளிவாக சொல்லி நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க செய்தனர்.
நேரு 'இண்டியா ஹிந்துக்கள் நாடு' என்று சொல்லி, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு என்று சொல்ல மறந்தார்.
நேருவின் பெண்ணே இஸ்லாமியனை மணந்து இருந்தார் என்ற போது, நேருவிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே... எதிர்த்த சர்தார் படேல், போஸ் ஒதுக்கப்பட்டார்கள்.

1000 வருடங்களாக இஸ்லாமியன், கிறிஸ்தவன் என்று மாற்றப்பட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் மதம் முஸ்லீம், கிறிஸ்டின் என்று அடையாளபடுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

ஆங்கில மோகம் கொண்ட, ஆங்கிலேயே கிறிஸ்தவர்களுடனேயே பழகிய நேரு, இதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு திறன் இல்லாமல் இருந்தார்.
பாரத தேசம் ஹிந்து தேசம் என்று சொல்ல மறந்தார்.
திறன் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை அலட்சியம் செய்தார்.

சுதந்திரம் அடைந்த பின்னும், இன்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாரத மண்ணில் ஹிந்துக்களாக வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று இஸ்லாமியனாகவும், கிறிஸ்தவனாகவும் உள்ளதால், அவர்கள் கொள்கையாலேயே இறைவன் பெயரால் நடக்கும் சண்டைகள் ஓயாமல் உள்ளது.

பாகிஸ்தான் போன்ற பிரித்து கொடுக்கப்பட்ட பாரத தேசம் 'இஸ்லாமிய தேசம்' என்று ஆக்கப்பட்டதால் அங்கு ஹிந்துக்கள் வாழ்வது சாதாரண காரியம் அல்ல. பல லட்ச ஹிந்துக்கள் 1947க்கு பின் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

கொள்கையே இவர்களுக்கு தீவிர வாதத்தை கொடுப்பதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை தங்கள் முதல் எதிரியாக பார்க்கின்றனர்.
இப்பொழுது, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களை தாக்க ஆரம்பித்து விட்டனர்.


கத்தி, வேல் கொண்டு மத சண்டைகள் நடந்த போது உயிர் சேதங்கள், கட்டிடங்களுக்கு சேதங்கள் நடந்து கொண்டிருந்தன.

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் உள்ள காலங்களில் இனியும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 'தன் வழிபாடு மட்டுமே சிறந்தது. மற்றவன் வழிபாடு நரகம் கொடுக்கும்' என்று சொல்லி சண்டையிட்டால், அனு ஆயுதங்கள் கொண்டு உலகமே நொடிகளில் அழிந்து விடும்.

சிவனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
முருகனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
பெருமாளை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்
என்று சமபுத்தியோடு, பார்த்த சனாதன தர்மத்தில் (ஹிந்துக்கள்) வாழும் ஹிந்துக்கள் இன்றும் அப்படி தான் வாழ்கின்றனர்.

பெருமாள் பக்தன் சிவன் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும், சிவன் கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

முருக பக்தன், காளி கோவிலுக்கு செல்ல மாட்டேன், காளி கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் வாயில் தான் சமத்துவம், 'எல்லா சாமியும் ஒன்னு தான்', ராமரை கும்பிட்டாலும், அல்லாவை கும்பிட்டாலும் அவன் நல்லவன் தான் என்று வருகிறது.

"உலகில் உள்ளவர்கள் யார் யாரை வேண்டுமானாலும் தெய்வம் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வோம், பிறர் எது சரி என்று நினைக்கிறார்களோ அப்படியே வாழட்டும்" 
என்று சனாதன தர்ம கொள்கையை மட்டும் எடுத்து கொண்டால் போதுமானது.
அவனவன் நம்பிக்கையில் வாழ்வோம்.
என் நம்பிக்கை எனக்கு பெரியது.
உன் நம்பிக்கை உனக்கு பெரியது.
இதுவே சனாதன தர்மம் காட்டிய வழி.

என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது. உன் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது என்று சொல்லும் எந்த கொள்கையும் உலகை நாசமாக்கும்.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை 6 அறிவுள்ள மனிதனால் கட்டாயம் நிறுத்த முடியும்.

இதற்கு நமக்கு தேவை "அவனவன் நம்பிக்கையில் வாழ்வது. அடுத்தவன் நம்பிக்கையில் அவனை வாழ விடுவது என்ற பரந்த மனப்பான்மையே".

இப்படி வாழ ஆரம்பிக்கும் போது, உலகமே சனாதன தர்மத்தில் அவரவர் தெய்வங்களை வணங்கி கொண்டு, ஆனால் பிற தெய்வ வழிபாட்டின் மேல் பொறாமை இல்லாது வாழ தெரிந்த சமுதாயமாக மாறும்.

இந்த சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டு வர, மனிதனாக இருக்கும் நமக்கு பரந்த உள்ளம் வேண்டும்.


அரேபிய இஸ்லாமியர்கள் பாரத நாட்டில் அத்தனை அட்டூழியம் செய்தனர் என்பது அந்த காலம்.
ஆனால், அந்த தேசம் கூட, இன்று ஹிந்துக்கள் வழிபட கோவில் கட்டி தருகிறோம் என்று வந்துள்ளதே..  இது தானே சனாதன தர்மம்.
யாருக்கும் நியாயமாக வாழ, ஒரு தெய்வத்தை வழிபட அனுமதி அளித்தது தானே சனாதன தர்மம்
இந்த சனாதன தர்மம் உலகம் முழுக்க பரவும் போது, மீண்டும் மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பிக்கலாம்.

"எவன் எந்த தெய்வத்தை கும்பிட்டால் நமக்கு என்ன?" என்றாவது இருக்க உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெய்வத்தின் பெயரால் "நான் மட்டுமே சொர்க்கம் போவேன்.. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்" என்று சொல்லி வெறுப்பு, கொலைகளை தவிர என்ன சாதித்தார்கள் இவர்கள்?.

தெய்வத்தை வைத்து சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும்.
உனக்கு பெருமாள் பிடித்தால், வணங்கிக்கொள்.
உனக்கு யாரையுமே பிடிக்காதா.. அப்படியே இரு.
ஆனால் மற்றவன் நம்பிக்கையை பற்றி உனக்கு என்ன வேலை?

947ADக்கு முன் அப்படி தானே இருந்தோம்?!!.
அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கு கோவில் அமைத்து கொண்டார்கள்.
ரிஷிகள் எனக்கு கோவிலும் வேண்டாம், ஊரும் வேண்டாம் என்று காட்டில் தவம் செய்தார்கள்.
எங்கு வந்தது தெய்வத்தின் பெயரால் சண்டைகள்?.
6 அறிவுள்ள மனிதன் எவனாக இருந்தாலும், இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டை செய்வதை விரும்ப மாட்டான்.

சனாதன தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் செல்ல முயற்சித்தால், தெய்வத்தின் பெயரால் ஏற்படும் சண்டைக்கு முடிவு ஏற்படும்.

இஸ்லாம் உதித்த அரேபிய நாடே இதற்கு அடிக்கல் நாட்டி விட்டது.
அமெரிக்கா போன்ற நாடுகள், அனைத்து தெய்வ நம்பிக்கையையும் அவரவர்கள் வழிபட அனுமதிக்கிறது.
சனாதன தர்மம் இது தானே!!
பாரத மண்ணில் உள்ள இஸ்லாமியர்கள், "அயோத்தியில் என் தெய்வம் ராமர் பிறந்தார், அங்கு ஒரு கோவிலை கட்டி கொள்கிறோம். பாபர் என்ற அரேபியன் இருந்த கோவிலை இடித்துவிட்டான்" என்று சொன்னால், "ஏதோ உனக்கு ஒரு நம்பிக்கை, கட்டிக்கொள். எனக்கும் ஒரு மசூதி கட்டி கொடு" என்று சொன்னால், அது தானே சனாதன தர்மம்.


பரந்த மனம் அமெரிக்கவாசிகளுக்கே, அரேபியர்களுக்கே வந்து விட்டதே.. 

பாரத மக்கள் அனைவரும் சகோதர்களே...  
பரந்த மனத்தை மட்டும் காற்றில் பறக்க விட்டு, தெய்வத்தின் பெயரால் அடித்து கொள்கிறோம்.
இது வெட்கப்பட வேண்டியது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு.

அடுத்தவன் நம்பிக்கையை ஏன் கேலி செய்ய வேண்டும்?
அடுத்தவன் தெய்வத்தை ஏன் பழிக்க வேண்டும்?

பாரத மக்கள் சிந்தனைக்கு...