Followers

Search Here...

Showing posts with label சிலை. Show all posts
Showing posts with label சிலை. Show all posts

Sunday 17 November 2019

கோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா? விக்ரகங்களை எப்படி பார்க்க வேண்டும்? "சிலையில் இறைவன் பிரவேசிக்க முடியாது" என்று சொல்பவன், "இறைவன் மிக பெரியவன்.. எல்லாம் வல்லவன்" என்ற தத்துவம் பேசுவது அறிவான பேச்சா? அலசுவோம்..



என்றுமே அழியாத வைகுண்டத்தில், நித்யவாசம் செய்யும் பரவாசுதேவன் நாராயணன்,
"ப்ரம்ம தேவனை" படைத்து, உலக ஸ்ருஷ்டி செய்ய "வேதத்தையும்" கொடுத்தார்.

ப்ரம்ம தேவன், முதன் முதலாக "சனகாதிகளை" ஸ்ருஷ்டி செய்தார்.
அவர்கள் உலக ஸ்ருஷ்டிக்கு உதவ மறுத்து, ஞான மார்க்கத்தில் சென்று விட,
தன் முதல் ஸ்ருஷ்டி மூலம் தன் விருப்பம் நிறைவேறவில்லையே என்று கோபப்பட, பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் இருந்து சம்ஹார மூர்த்தியாக, "ருத்ரன்", வெளிப்பட்டார்.. 




"படைக்கும்" தொழிலை தான் ஏற்றுள்ளதால்,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுத்து, அதற்கு நேரம் வரும்வரை யோகத்தில் இருக்க சொல்ல, ருத்ரன் தன் சிவகணங்களுடன் "கைலாசத்துக்கு" சென்று விட்டார்.

பூரணமான அவதாரமான, பரவாசுதேவன் நாராயணனே "க்ஷீராப்தி என்ற பாற்கடலை" ஸ்ருஷ்டி செய்து,
அங்கு விஷ்ணுவாக தன்னை அவதரித்து கொண்டு, "காக்கும் தொழிலை நான் செய்கிறேன்"
என்று மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் என்று தன்னை தானே அவதரித்து கொண்டார் பரவாசுதேவன்.

ப்ரம்ம தேவன், சொர்க்க லோகம், பூலோகம் படைக்க,
காஷ்யப ரிஷியால் "தேவர்கள், அசுரர்கள்"  படைக்கப்பட்டார்கள்..
ஸ்வாயம்பு மனுவால் "மனிதர்கள்" ஸ்ருஷ்டி செய்யப்பட்டார்கள்..

தேவர்களுக்கு தலைவனான இந்திரனுக்கு சகோதரனாக "உபேந்திரன்" என்று பெயருடன் பரமாத்மாவே அவதரித்து,
"தேவர்களிலும் தானும் ஒருவன்" என்று தன்னை காட்டி கொண்டு அவதரித்து விட்டார்..

அசுரர்களால், "வேதமும், பூலோகமும்" ஆபத்தை சந்திக்க, "மத்ஸ்ய, வராஹ" அவதாரம் செய்து வேதத்தையும், உலகையும் பிரளய ஜலத்தில் இருந்து மீட்டார்..

அசுரர்களால் தேவர்களுக்கு துன்பம் ஏற்படுவதை பார்த்து,
அவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, தன் முதுகை கொடுத்து மந்திர மலை விழாமல் இருக்க "கூர்ம" அவதாரம் செய்து அம்ருதம் கிடைக்க செய்தார்..

பூலோகத்தில் மனிதர்கள் "வேதம் சொல்லும் தர்மத்தை எப்படி நடைமுறையில் கடைபிடிப்பது?" என்று தவிக்க,
தானே "ராமபிரானாக" மனித அவதாரம் செய்து,
"நான் மனிதன்..தசரதனின் குமாரன்"
என்று யார் கேட்டாலும் சொல்லிக்கொண்டு,
நீண்ட காலங்கள் பூலோகத்தில் மனித ரூபத்துடனேயே வாழ்ந்து,
"எத்தனை துன்பங்கள், சந்தோஷங்கள் நமது வாழ்க்கையில் வந்தாலும், மனம் சஞ்சலம் அடையாமல், சோர்ந்து விடாமல், தர்மத்தை விட்டு விடாமல் வாழ முடியும்"
என்று வாழ்ந்து வழி காட்டினார் பரவாசுதேவன்..

"ஈஸ்வரன் மனிதனாக வந்தார்.. ஈஸ்வர தன்மையை முடிந்தவரை காட்டாமல் இருந்து விட்டாரே..
பரவாசுதேவன் தன் ஈஸ்வர தன்மையுடன் மனித அவதாரம் செய்தால் எப்படி இருப்பார்?"
என்று பக்தர்கள் ஆசைப்பட,
அடுத்த யுகமான துவாபர யுக முடிவில்,
"தான் ஈஸ்வரன்" என்று பிறந்தது முதலேயே காட்டி கொண்டு, பரவாசுதேவன் "வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணராகவே" அவதரித்து,
அவதரித்தது முதல் அந்தர்தானம் ஆன வரை, ஆச்சர்யமாக லீலை செய்து, பக்தர்களுக்கு ஆனந்தத்தை அள்ளி கொடுத்தார்.
ஞானிகளுக்கு ஞான மார்க்கத்தை,
கர்மாவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கர்ம மார்க்கத்தை,
சந்யாசிக்கு சந்யாஸ யோகத்தை,
பக்தனுக்கு பக்தி மார்க்கத்தை வழி காட்டி,
மனித குலத்துக்கு நிதியாக, "பகவத் கீதை" என்ற உபதேசத்தையும் செய்தார்.

மனிதனாகவே வாழ்ந்து காட்டிய போதும் ராம்பிரானை, புரிந்து கொள்ள முடியாமல் இருந்தனர் சிலர்.

மனிதனாக அவதரித்து ஈஸ்வரனாகவே வாழ்ந்து காட்டியும், கிருஷ்ண பரமாத்மாவை "மாயன்" என்று நினைத்தனர் சில அஞானிகள்.

இப்படி பல அவதாரங்கள், "ப்ரம்ம தேவனுக்காக, தேவர்களுக்காக, மனிதர்களுக்காக" அவதாரம் செய்தும்,
இன்னும் பல கோடி ஜீவன்கள்,
முக்தி அடையாமல், தன் ஈஸ்வர தன்மையை புரிந்து கொள்ள முடியாமல்,
தன்னை பற்றிய நினைவு கூட இல்லாமல், கோடிக்கணக்கான பிறவிகள் எடுத்து கொண்டே, இன்னும் பிறந்து கொண்டே இருக்க,
அனைவரையும் தன் திருவடிகளில் போட்டு கொள்ள பிடிவாதம் செய்து கொண்டு, தன் பெருமையை கூட கருதாமல், தன்னை அர்ச்சிக்கும் ஒரு சிலையாக அவதரித்து கொண்டு, பூலோகத்திற்கு வந்து விட்டார் பரவாசுதேவன்.




பரவாசுதேவன் அர்ச்ச அவதாரமாக உள்ள, சில இடங்களை இப்போது மனதால் தியானிப்போம்..
  • துவாரகையில் துவாரகா நாதனாக வந்து விட்டார்.
  • ப்ரபாச க்ஷேத்ரத்தில் புருஷோத்தமானாக வந்து விட்டார்.
  • புரி ஜெகன்நாத்தில் மரத்தால் ஆன அர்ச்சா ரூபமாக வந்து விட்டார்.
  • ஸ்ரீகூர்மத்தில் வராஹனாக வந்து விட்டார்.
  • அஹோபிலத்தில் நரசிம்மமாக வந்து விட்டார்.
  • காஞ்சிபுரத்தில் ஹஸ்தி (அத்தி) வரதனாக வந்து விட்டார்.
  • திருமலையிலே ஸ்ரீனிவாசனாக வந்து விட்டார்.
  • திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கிருஷ்ணனாக வந்து விட்டார்.
  • திருவிஹீந்திரபுரத்தில் தேவனாதனாக வந்து விட்டார்.
  • திருக்கோவிலூரில் த்ரிவிக்ரமனாக வந்து விட்டார்.
  • திருசித்ரகூடம் என்ற சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக வந்து விட்டார்.
  • திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜனாக வந்து விட்டார்,
  • குடந்தை என்ற கும்பகோணத்தில் சாரங்கபாணியாக (ஆரவாமுதனாக) வந்து விட்டார்.
  • திருநாங்கூரில் நர நாராயணனாக வந்து விட்டார்.
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயியாக வந்து விட்டார்.
  • அழகர்கோவிலில் சுந்தரராஜனாக வந்து விட்டார்.
  • திருவனந்தபுரத்தில் பத்மநாபனாக வந்து விட்டார்.
  • பண்டரிபுரத்தில் பாண்டுரங்கநாக வந்து விட்டார்.
  • பத்ரிநாத்தில் நர நாராயணனாக வந்து விட்டார்.

இவ்வாறு,
108 திவ்ய தேசங்களிலும்,
மேலும்,
ஆங்காங்கு உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களிலும்,
நம் ஒவ்வொருவர் வீட்டில் படங்களாகவும், பூஜை அறையில் சின்ன சின்ன விக்ரஹமாகவும்,
"கோடிக்கணக்கான ரூபங்களுடன்" அர்ச்ச (சிலை) திருமேனியுடன் அவதாரம் செய்து,
பாரத பூமியில் தொட்ட இடங்களிலெல்லாம், எம்பெருமான் தன்னை அவதரித்து வியாபித்து கொண்டு விட்டார்.

பரவாசுதேவன், "விஷ்ணுவாகவும், ராமனாகவும், கண்ணனாகவும்" அவதரிக்க காரணம் இருந்தது..

இப்படி கோடிக்கணக்கான அர்ச்சா ரூபங்களுடன் எம்பெருமான் சிலையாக அவதரிக்க காரணம் என்ன?
  • மூப்பும், மரணமும் உண்டு என்ற நினைவே இல்லாமல்,
  • மோக்ஷம் அடையாமல் பிறந்து கொண்டே இருக்கிறோமே என்ற கவலையே இல்லாமல்,
  • வயிற்றை வளர்க்கவே வாழ்நாளை செலவு செய்யும் கோடிக்கணக்கான ஜீவனுக்காகவும்,
  • தர்ம பாதையை விட்டு, பாவங்களையே செய்து வாழும் ஜீவனுக்காகவும்,
  • தெய்வ நம்பிக்கை உடையவர்கள்,
  • நம்பிக்கையே இல்லாதவர்கள்,
  • தர்மத்தை விட்டு பாஷண்டிகளாக போனவர்கள்,
  • வேத தர்மத்தையே அறியாத மிலேச்சர்கள்
என்று உலகத்தில் உள்ள அனைவரையும், 'தன் திருவடிக்கு இழுத்து, அவர்கள் மனபோக்கை உயர்த்தி, ஆன்மீக வழியில் திருப்பி, மோக்ஷம் வரை அழைத்து சென்று விட வேண்டும்'
என்று பிடிவாதம் செய்து கொண்டு, இப்படி கோடிக்கணக்கான அரச்சா ரூபத்துடன் பூலோகத்தில் அவதரித்து விட்டார் எம்பெருமான்.

பரவாசுதேவன் செய்த அவதாரங்களில், நமக்காக செய்த அவதாரம் "அர்ச்சா அவதாரமே".
நம் வீட்டில் உள்ள குட்டி விக்ரஹத்தை "வெறும் சிலை" என்று நினைத்து ஏமாற கூடாது....
"நமக்காக பெருமாள் அந்த அர்ச்சா திருமேனியுடன் வந்து நம் வீட்டில் இருக்கிறார்" என்று பார்க்க வேண்டும்.

இப்படி காணும் இடமெல்லாம், அர்ச்சா ரூபத்துடன் அவதரித்துள்ள எம்பெருமானை போலவே, 
உபதேவதைகளும் ஆங்காங்கு அரச்சா ரூபத்துடன் அவதரித்து விட்டனர்..




பரவாசுதேவன் அர்ச்ச அவதாரம் செய்வதற்கு நோக்கம் ஒன்று தான்..
"ஜீவ கோடிகள் பிறவி கடலை கடக்க, தன் திருவடியில் சேர்ப்பதே" பரவாசுதேவனின் நோக்கம்.

இப்படி அர்ச்சா திருமேனியுடன் ஆங்காங்கு அவதரித்து இருக்கும் எம்பெருமான்,
தன்னை எந்த வகையிலும் ஒரு ஜீவன் நெருங்கினாலும், அந்த ஜீவனுக்கு மோக்ஷத்துக்கான வழியை காட்டி விடுகிறார்..

தன் வீட்டில் படத்தில் உள்ள பெருமாளுக்கோ,
தன் வீட்டில் விக்ரஹ திருமேனியுடன் உள்ள பெருமாளுக்கோ,
கோவிலில் விக்ரஹ திருமேனியுடன் உள்ள பெருமாளுக்கோ,
  • தன் கையால் நாம் ஒரு துளசி பறித்து கொடுத்து விட்டால் கூட,
  • ஒரு சிறிய நெய் தீபம் தப்பித்தவறி ஏற்றினால் கூட,
  • கோவிலில் உற்சவ சமயங்களில் பெருமாள் வீதி வழியாக புறப்பட்டு வரும் போது, எதிர்பாராமல் பார்க்க நேர்ந்தாலும் கூட,
  • ஏதோ வீட்டுக்கு சாமான் வாங்க, பெருமாள் வீற்று இருக்கும் கோவில் வாசலோடு வந்தால் கூட,
எப்படியோ ஒரு சம்பந்தம் இந்த ஜீவனுக்கு எம்பெருமான் சம்பந்தமாக ஏற்பட்டு விட்டால் கூட,
தன் மோக்ஷ வாசலை திறந்து விட்டு விட காத்து இருக்கிறார் எம்பெருமான்..

'மோக்ஷ அடையாமல் இருக்கும் ஜீவ கோடிகளை எப்படியாவது வளைத்து பிடித்து, தன் திருவடியில் சேர்த்து கொள்வதற்காக,
தானே ஆயிரக்கணக்கான அர்ச்சா திருமேனியை தரித்துக்கொண்டு, வந்து விட்டார்' பரவாசுதேவன் நாராயணன்.

முதல் அர்ச்ச அவதாரம், ப்ரம்ம தேவனுக்காக செய்தார் பரவாசுதேவன்.
பரவாசுதேவன், "ப்ரம்ம தேவனை" ஸ்ருஷ்டி செய்த பின்,
சத்ய லோகத்தில் தான் மட்டுமே இருப்பதை உணர்ந்தார்.
ப்ரம்ம தேவன்,
"தன்னை படைத்தவர் யார்?"
என்று தியானிக்க,
பரவாசுதேவன் அவருக்கு தியானத்தில் காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டிக்காக தான் படைக்கப்பட்டதை" அறிந்து கொண்டார்..

வேதத்தை உபதேசம் பெற்ற ப்ரம்ம தேவன்,
"எம்பெருமானை தன் கைகளால் அர்ச்சிக்க ஆசைப்பட்டார்."

ப்ரம்ம தேவனுக்காக, அர்ச்சா திருமேனியுடன் "ரங்கநாதராக" ப்ரம்ம லோகத்தில் அவதரித்தார்.

ப்ரம்ம தேவன் அர்ச்சா ரூபத்துடன் தனக்காக அவதரித்த பெருமாளிடம்,
"அர்ச்சா திருமேனியுடன் உள்ள உங்களை (எம்பெருமானை) எப்படி பூஜை (அர்ச்சனை / திருவாராதனை) செய்ய வேண்டும்?"
என்று கேட்க,
சத்ய லோகத்தில், அர்ச்சா திருமேனியுடன் ரங்கநாதராக அவதரித்த பெருமாள் பேசலானார்,
"3 விதமான திருவாராதனையை அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் போது ஏற்று கொள்கிறேன்..


  1. 'புருஷ சூக்தம்' முதலிய வேத மந்திரங்களுடன் செய்யப்படும் 'வைதீகமான' திருவாராதனையை நான் ஏற்று கொள்கிறேன்.
  2. 'மந்த்ர ஆவாகனம்' செய்து முத்ராதானங்கள் மூலம், 'தாந்த்ரீகமான' முறையில்,  வைகானசம்/பாஞ்சராத்ரம் போன்ற ஆகம விதிப்படி செய்யப்படும் திருவாராதனையையும் ஏற்று கொள்கிறேன்.
  3. அனைவரும் என்னை திருவாராதனை செய்வதற்கு, அவரவர்கள் வீடுகளிலும், என்னை அர்ச்சா திருமேனியாகவோ, படமாகவோ வரைந்து கூட வைத்து கொண்டு,
    என் மீது ஆசையுடன் (பக்தியுடன்) எதை கொண்டு பூஜித்தாலும் அதை "புராணோக்தம் என்ற மிஸ்ரம்" என்ற முறையில் செய்யப்படும் திருவாராதனையாக ஏற்று கொள்கிறேன்.
அவர்கள் வழிபடும் அர்ச்சா மூர்த்தியில் (சிலையில்), படங்களில் நான்  ஆவிர்பவித்து, அவர்கள் பக்திக்கு ஏற்று பழகுகிறேன், அணுகிரஹம் செய்கிறேன்.

எந்த பக்தனுக்காக எந்த ரூபத்தில் அர்ச்சா அவதாரம் செய்தேனோ!! அந்த பக்தன் என்னை எந்த முறையில் (வைதீக, தாந்த்ரீக) திருவாராதனை செய்து ஆராதனை செய்தானோ!!
அதே ஆகம விதிப்படியே, எனக்கு மற்றவர்களும் அந்த அர்ச்சா மூர்த்திக்கு திருவாராதனை செய்வதை மகிழ்வுடன் ஏற்கிறேன். அந்த பக்தன் வழிபட்ட முறையில் என்னை வழிபடும் பிறருக்கும், அந்த பக்தனை நினைத்து கொண்டே அருள் செய்கிறேன்.




எந்த பக்தனுக்காக எப்படி அர்ச்ச அவதாரம் செய்தேனோ, அந்த பக்தன் எனக்கு செய்த திருவாராதனை முறையை, பிடிவாதத்தால் மாற்றி, மற்றவர்கள் செய்வதை ஏற்க மாட்டேன்"
என்று ப்ரம்ம தேவனுக்கு 'அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் போது, எப்படி திருவாராதனை செய்ய வேண்டும்' என்று சொன்னார்.

ஆலயங்களில் ஆகம விதிப்படி தான் பூஜை செய்ய வேண்டும்..

எந்த எந்த ஆகம முறையில், கோவில்களில் அர்ச்ச அவதார மூர்த்திக்கு முதன் முதலாக பூஜை செய்யப்பட்டதோ!! 
அந்த ஆகம விதிப்படியே திருவாராதனை தொடர்ந்து செய்யப்பட வேண்டும்..

கோவிலில் இருக்கும் அர்ச்சா திருமேனியுடன் உள்ள எம்பெருமானை, நாம் பிரதிஷ்டை செய்யவில்லை.. இதை நாம் மறந்து விட கூடாது..
யாரோ ஒரு ரிஷிக்கு,
யாரோ ஒரு தேவனுக்கு,
யாரோ ஒரு மனுஷ்யனுக்கு,
எம்பெருமான், எந்த காலத்திலோ அந்த கோவிலில் உள்ள அர்ச்சா மூர்த்திகளாக தரிசனம் கொடுத்துள்ளார்.
அர்ச்சா திருமேனியுடன் உள்ள எம்பெருமானை, நாம் பிரதிஷ்டை செய்யவில்லை.
அவர்களின் பக்தியால் தரிசித்த அர்ச்சா திருமேனியை, பிரதிஷ்டை செய்து பூஜித்து இருக்கிறார்கள்.
பிற்காலத்தில் அந்த மூர்த்திக்கு அரசர்களாலும், பக்தர்களாலும் பெரும் கோவில்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது.
எந்த காலத்தில் இந்த மூர்த்திகள் தோன்றியதோ? 
எந்த காலத்தில் இந்த மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதோ? 
நமக்கு தெரியாது...
சில கோவில்களில் உள்ள பெருமாள், எத்தனை யுகங்களாக இருகிறார்? என்று கூட சொல்ல முடியவில்லை.

அப்படி இருக்கும் போது, எந்த முறையில் திருவாராதனைகள் ஆரம்பிக்க பட்டதோ, அதே முறையில், திருவாராதனை தொடர்வதே சரி..
"எம்பெருமான் ஒரு பக்தனுக்காக ப்ரத்யக்ஷமாகி, அந்த பக்தன் செய்த திருவாராதனையை உகந்து ஏற்று இருக்கிறார்"
என்கிறபோது, பிற்காலத்தில் வந்த நாம், நம் இஷ்டத்துக்கு மாற்றுவது பெருமாளுக்கும் உகக்காது..
அப்படி திருவாராதனையை மாற்றுவது உண்மையான பக்தியே அல்ல.

தெய்வம் ரசிக்காத ஒரு மாற்றத்தை, நாம் செய்வது தான் பக்தியா?..

"தான் பிரதிஷ்டை செய்யாத அர்ச்சா மூர்த்தி" என்கிற போது,
காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் திருவாராதனை முறையை மாற்ற நாம் யார்?..

"பக்தி இல்லாதவன், பொறாமை கொண்டவன்.. வம்பு செய்பவன்" தானே, இப்படி செய்ய துணிவான்...

அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமான், "கல் சிலை தானே" என்று நினைத்து, ஆகம விதியை மாற்ற நினைக்கிறார்கள்..



ரிஷிகளுக்காகவும், தேவர்களுக்காகவும் அர்ச்ச அவதாரம் ஏற்று ப்ரத்யக்ஷம் ஆன பெருமாள், காழ்ப்புணர்ச்சியால் செய்யப்படும் இது போன்ற செயல்களை கண்டு உகப்பதில்லை..

"பெருமாளுக்கு இது உகப்பதில்லை"
என்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் சம்பந்தமாகவே ஒரு நிகழ்ச்சி நடந்தது...
திருவனந்தபுரத்தில் உள்ள, பத்மநாப ஸ்வாமிக்கு தாந்த்ரீகமான திருவாராதனையே நடைபெறுகிறது.. 
அதிலும், ஆகம விதிப்படி வைகானச முறைப்படியோ, பாஞ்சராத்ர முறைப்படியோ திருவாராதனை செய்யாமல், வெறும் தாந்த்ரோக்தமான பூஜையே நடைபெறுவதை பார்த்த,
சாஷாத் ஆதிசேஷன் அவதாரமான, 
ஜகத் குருவான, 
சர்வ சாஸ்திரமும் அறிந்தவரான, 
ரங்கநாதரிடமே தன் அடியார்களுக்கெல்லாம் வைகுண்டம் கிடைக்க உரிமை வாங்கி இருந்த, 
யதிராஜர் "ஸ்ரீராமானுஜர்", இங்கு நடக்கும் 'ஆராதனை முறையை மாற்ற வேண்டும்' என்று நினைத்தார்.
அப்படி நினைத்த அதே ராத்திரியில், இவர் படுத்து இருந்த போது, எம்பெருமான் 'கட்டிலோடு கிளப்பி, ராமானுஜரை திருவனந்தபுரத்திலிருந்து 100KM தள்ளி இருக்கும் திருக்குறுங்குடியில் இறக்கி விட்டு விட்டார்' பெருமாள்..
திருவனந்தபுரத்தில் படுத்த, ராமானுஜர் திருக்குறுங்குடியில் எழுந்தார்..
அதே போல,
ராமானுஜர், ஒரிசாவில் உள்ள "புரிஜெகன்னாத்தில் உள்ள கிருஷ்ண, பலராம, சுபத்ராவுக்கு அங்கு செய்யப்படும் ஆராதனை முறையை மாற்றி, பாஞ்சராத்ரம் முறையில் திருவாராதனை செய்யலாம்" என்று நினைத்த போது,
மீண்டும் அங்கிருந்து 'இரவோடு இரவாக, ராமானுஜரை
280KM தள்ளி இருக்கும் ஸ்ரீகூர்மத்தில் இறக்கி விட்டு விட்டார்' எம்பெருமான்.
"காலம் காலமாக நடக்கும் திருவாராதனை முறையை, பக்தன் என்ற காரணத்தை காட்டி, நாம் மாற்ற நினைக்க கூடாது"
என்று ராமானுஜர் உணர்ந்தார்..
"எம்பெருமானுக்கு இது ஏற்பு இல்லை" என்றும் உணர்ந்தார்..




திருவாராதனையை மாற்ற ராமானுஜருக்கே "எம்பெருமான் அனுமதி தரவில்லை" என்று கவனிக்கும் போது,
காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் திருவாராதனை முறையை மாற்ற, நாம் யார்?

திருவாராதனையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் கிடையாது..

பெருமாளுக்கும் இது போன்ற செயல்களில் உகப்பு ஏற்படுவதில்லை என்று தெரிகிறது..

மூன்று விதமான பிரதிஷ்டைகள் அர்ச்ச அவதார மூர்த்திகளுக்கு சொல்லப்படுகிறது ..

  • ரிஷி பிரதிஷ்டை
  • தேவ பிரதிஷ்டை
  • மனுஷ்ய பிரதிஷ்டை
சில கோவில்களில் உள்ள மூல விக்ரஹங்கள், ரிஷிகளுக்காக, தேவர்களுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சில கோவில்களில் உள்ள அர்ச்சா திருமேனிகள் மகான்கள், பக்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ரிஷிகளுக்காக, தேவர்களுக்காக, எம்பெருமான் எந்த காலத்தில் அர்ச்சா திருமேனியுடன், என்ன காரணத்துக்காக இவர்களுக்கு காட்சி கொடுத்தாரோ, நமக்கு புரியாதது..
அது எந்த காலமோ? நமக்கு தெரியாது..

ஒன்று நிச்சயமாகிறது... 
நாம் இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்யவில்லை.

நாம் கோவிலில் உள்ள மூர்த்தியை பிரதிஷ்டை செய்யவில்லை என்கிறபோது,
அந்த மூர்த்திக்கு நடைபெறும் திருவாராதனை முறையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் இல்லை..

'பக்தியால் செய்யப்படும் எந்த பூஜையும் ஏற்று கொள்கிறார் பகவான்' என்று தன் பக்தியை காரணமாக காட்டி "அப்படி தான் திருவாராதனை முறையை மாற்றுவேன்" என்று பிடிவாதம் செய்ய கூடாது.

யாரோ ஒரு பக்தனுக்கு ப்ரத்யக்ஷமான அர்ச்சா திருமேனிக்கு நடக்கும் திருவாராதனையை மாற்ற, நமக்கு அனுமதி இல்லையே தவிர,
உண்மையான பக்தி இருந்தால், வேறு மாதிரி திருவாராதனை செய்ய ஆசை இருந்தால்,
திருப்பதி ஸ்ரீனிவாசனை போலவே அர்ச்சா மூர்த்தியை தாராளமாக செய்து கொண்டு,
ஸ்ரீ ரங்க கோவிலை விட பெரிய கோவிலை தாராளமாக கட்டி கொண்டு, 
அந்த பக்தனே பக்தியுடன் பிரதிஷ்டை செய்து, 
வைதீக திருவாராதனையும் வேண்டாம்.. ஆகம முறையிலும் திருவாராதனை செய்ய வேண்டாம்.. தன் இஷ்டத்துக்கு தன் ஆசைக்கே பூஜை செய்யட்டும். 
அப்படிப்பட்ட பூஜை செய்தாலும் பெருமாள் அந்த பக்தனுக்காக ஏற்று கொள்கிறார்..
யார் வேண்டாம் என்றது?!!

ஆனால், யாரோ ஒரு பக்தன் பிரதிஷ்டை செய்த மூர்த்தியின் 'திருவாராதனை முறையை மாற்றுவேன்' என்று தெய்வபக்தி உள்ளது போல பேசுபவர்கள், தாராளமாக தாங்களே ஒரு பெரிய கோவில் கட்டி, தாங்களே ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபடலாமே..
எந்த பக்தனோ பிரதிஷ்டை செய்து, காலம் காலமாக நடக்கும் திருவாராதனை ஆகம பூஜையை மாற்ற நமக்கு எந்த உரிமையும் கிடையாது.
அது பக்தியும் இல்லை.
அதனால் பெருமாள் உகப்பதும் இல்லை..
இப்படி பேசுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். 

நாமே செய்து கொள்ளும் சிலையில், படங்களில் தெய்வம் தன்னை அவதரித்து கொள்வாரா?
நமக்கு உண்மையாக பக்தி இருந்தால், "கல்லிலும், படத்திலும் கூட" தன்னை பக்தனுக்காக அவதரித்து கொள்கிறார்.

"இது சிலை தானே" என்ற எண்ணமே பக்தனுக்கு வர கூடாது..
"அர்ச்சா திருமேனியுடன் நமக்கு காட்சி கொடுக்கவே, நம்மிடம் பேசவே அவதரித்து உள்ளார்" என்றே பார்க்க வேண்டும்.

"சர்வ வல்லமை கொண்டவர் பரமாத்மா" என்று சொல்லிவிட்டு,
"பகவான் என்று ஆசையாக பார்க்கும் அர்ச்சா திருமேனியில் வர முடியுமா?" என்று நினைப்பதே அறிவீனம்.

"அர்ச்சா (சிலை) திருமேனியில், நம் பக்திக்காக பகவான் பிரவேசித்து விடுகிறார்" என்று நம்ப முடியாது போனால்,
"சதை எலும்பு ரத்த திருமேனியில் எப்படி ஜீவன் பிரவேசித்தான்?" என்று யோசிக்க வேண்டாமா?

ஜீவன் போய் விட்டால், மிச்சப்படுவது மாமிச உடல் தானே!!
ஜீவன் எப்படி ஒரு மாமிசத்தில் பிரவேசித்து இருக்கிறான்? 
யோசிக்க வேண்டாமா?




ஒரு சாதாரண ஜீவன் ஒரு மாமிச உடலில் பிரவேசிக்க முடியுமென்றால்,
ஜீவனை படைத்த பரமாத்மா நாராயணன், அந்த ஜீவன் பக்தியுடன் ஒரு கல்லில் தன்னை ஆவிர்பவிக்க சொன்னால், வர இயலாதா?..

நம் பக்தியை தானே எதிர்பார்க்கிறார் பகவான்.
1% பக்தி செய்தாலும், அதற்கு ஏற்றபடி நம்மிடம் பழகுகிறாரே..
கனவில் காட்சி கொடுக்கிறாரே..
யார் போலவோ வந்து, நம் மன கலக்கத்தை போக்குகிறாரே..
பக்தி உயர உயர, அர்ச்சா திருமேனியாக இருந்தாலும், நம் உள்ளுணர்வோடு உறவாடுகிறார்.
உள்ளிருந்து கொண்டே பேசுகிறார்.
பக்தி உயர உயர, நம்மிடம் பேசுகிறார், காட்சி கொடுக்கிறார்..
பக்தி உயர உயர, மரண காலத்தில் உலக நினைவுகள் எழும்பாமல் மரண வேதனையை உணர விடாமல் தன் தரிசனத்தை கொடுத்து, வைகுண்டம் வரை அழைத்து சென்று விடுகிறார்.

நாம் தெய்வத்திடம் வைக்கும் உண்மையான அன்பை கொண்டே "தெய்வ அணுகிரஹம்" நிர்ணயிக்கப்படுகிறது.

ராமானுஜர் காலத்தில், கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில் டெல்லியை ஆண்ட சுல்தான் முற்றுகையிட்டு, கோவிலை இடித்து, அங்கிருந்த உற்சவ மூர்த்தியை எடுத்து கொண்டு சென்று விட்டான்.
"சிலை தானே" என்று பார்த்தான்.. சிலையாகவே இருந்து விட்டார்.
பல வருடங்கள் கழித்து, சோழ அரசன் குலோத்துங்கனின் (கிருமி கண்ட சோழன்) தனிப்பட்ட கோபத்தால், ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தை விட்டு கிளம்பி, மேல்கோட்டை வந்த போது, "பெருமாளை காணவில்லையே" என்று கதற,
"தான் டில்லியில் இருக்கிறேன்.. வந்து கூட்டி செல்லுங்கள்" என்று பெருமாள் கனவில் பேச, மீட்டு கொண்டு மீண்டும் அதே கோவிலில் பிரதிஷ்டை செய்து விட்டார்..
"சிலை தானே" என்று நினைத்த சுல்தானுக்கு, சிலையாக இருந்து விட்ட எம்பெருமான்,
"அர்ச்சா திருமேனியில் பெருமாள் இருக்கிறார்" என்றே பார்க்கும் அடியார்களுக்கு, செவி சாய்கிறார்..

ராமானுஜர் காலத்துக்கு பின், 200 வருடங்கள் கழித்து, கில்ஜி காலத்தில் ஸ்ரீரங்கம் வரை சுல்தான்கள் நுழைந்து விட, ஆழ்வார்கள், ராமானுஜர் போன்றோர் வழிபட்ட உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை மாலிக் காபூர் தூக்கி கொண்டு சென்று விட்டான்.
பிறகு டில்லி சென்று ரங்கநாதரை மீட்டும், இஸ்லாமிய கலவரத்தால் மீண்டும் ரங்கநாதருக்கு அபாயம் ஏற்படுமோ என்று அஞ்சி, 
80 வருடங்கள், மேலூர், திருநெல்வேலி, கேரளம், திருமலை என்று பல இடங்களுக்கு எடுத்து சென்று பாதுகாத்தனர்..

இந்த சமயத்தில் உற்சவ மூர்த்தி இல்லாமல் இருக்க கூடாது என்று வேறொரு மூர்த்தியை ஆவாஹனம் செய்து, பாஞ்சராத்ர முறைப்படி ஆராதனை செய்து வந்தனர்..
விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்டு, இஸ்லாமிய கலவரம் அடக்கப்பட்ட பின், மீண்டும் 80 வருடங்கள் கழித்து, ஏற்கனவே இருந்த அர்ச்ச மூர்த்தியான ரங்கநாதர் ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார்..

பழைய மூர்த்தி திரும்ப கிடைத்தால், புது மூர்த்தியுடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டுமே தவிர,
எக்காரணம் கொண்டும் திருவாராதனை செய்யாமல் இருக்க கூடாது.

இன்று வரை,
ராமானுஜரிடம் பேசிய, ஆழ்வார்கள் கண்ட அதே பழைய உற்சவ பெருமாளுக்கும், புது உற்சவ பெருமாளுக்கும் திருவாராதனை ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது.

எப்படி திருவாராதனை முறையை மாற்ற நமக்கு உரிமை இல்லையோ, அதே போல, மூர்த்தியை மாற்றவும் நமக்கு உரிமை இல்லை..

"புதிய ரங்கநாத பெருமாள் 80 வருடமாக இருக்கிறாரே" என்று அங்கு இருப்பவர்கள் மீண்டும் ஆழ்வார்கள், ராமானுஜர் கண்ட பழைய பெருமாள் வந்த பின், "பழைய ரங்கநாத பெருமாள் தானே இவர்" என்று குளத்தில் போட்டு விடவில்லை..

இவருக்கும் சேர்த்து தான் பூஜை செய்கிறார்களே தவிர, வீண் பிடிவாதம் செய்து, ஆழ்வார்கள் அனுபவித்த பெருமாளை தூக்கி குளத்தில் வைக்கவில்லை..
கலவரத்தால் சில சமயங்களில் உற்சவரோ, மூலவரோ பூமியில், குளங்களில் மறைக்கப்படலாம், உடைக்க கூட படலாம்..
நம் அஜாக்கிரதை காரணமாக, அர்ச்சா திருமேனிகள் உடையவும் செய்யலாம்,
ஆனால் மீண்டும் அந்த அர்ச்சா திருமேனிகள் நமக்கு கிடைத்தால், அதை மீண்டும் புதைப்பதோ, குளத்தில் போடுவதோ பக்தியே இல்லை.. வாதத்துக்கு மருந்து உண்டு, வீண் பிடிவாதத்துக்கு மருந்தே இல்லை..

திருவாராதனை முறையை மாற்ற கூடாது என்பது ஒருபுறமிருக்க, முதன் முதலாக ஒரு பக்தனுக்காக ஆவிர்பவித்த பெருமாளை எக்காரணம் கொண்டும் பூஜை இல்லாமல் அவமதிக்க கூடாது..




பல கோவில்களில், இன்றுள்ள உற்சவ திருமேனிகள், அபிஷேகம் செய்து அபிஷேகம் செய்து, பல ஆயிரம் வருடங்கள் ஆகி, முகமே உருக்குலைந்து போன நிலையில் உள்ளது.
அதற்காக "அந்த பெருமாளை தூக்கி எறிந்து விட்டு புதிய உற்சவரை யாரும் ஏற்பாடு செய்யவில்லை" என்பதை கவனிக்க வேண்டும்.

"எத்தனையோ கோவில் பணிகள், கும்பாபிஷேகம் செய்து  திருமேனிகள் இப்படி உருக்குலைந்து இருக்கிறதே, புதிதாக உற்சவர் செய்து மாற்றி விடலாமா? என்று முடிவு செய்ய எத்தனை நேரம் ஆகி இருக்கும்.??"
ஆனால், எந்த ஒரு ஆச்சாரியரும், மகான்களும் இது போன்ற மாற்றத்தை செய்யவில்லையே..  
நாம் கவனிக்க வேண்டாமா!!

ஆயிரம் சிலைகள் ரங்கநாதரை போன்றே செய்து விடலாம்.. 
ஆனால்,
ராமானுஜர் பார்த்த, ஆழ்வார்கள் பார்த்த, ப்ரம்ம தேவனுக்கு தரிசனம் கொடுத்த பெருமாளை தரிசிப்பது போல ஆகுமா?

"பல ஆயிரம் வருடங்கள் ஆனதால், பெருமாள் திரு உருவம் உருக்குலைந்து விட்டது என்பதற்காக, ஆழ்வார்கள் கண்ட மூர்த்தியை மாற்ற  நினைக்க முடியுமா ஒரு உண்மையான பக்தனால்?..
நினைத்து பார்க்க வேண்டும்..

80 வருடங்கள் உற்சவ மூர்த்தியான ரங்கநாதர் இல்லாத போது, வேறொரு உற்சவ ரங்கநாதரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர் வைஷ்ணவர்கள்.
அதே சமயத்தில் தான்,
மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில், சிவலிங்கமாக மூலவராக இருக்கும் சுந்தரேஸ்வரரையும் இடிக்க வந்தான் 'அலாவுதீன் கில்ஜி'யின் படைத்தளபதி 'மாலிக் காபூர்'..
அந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பி, வேறொரு லிங்கத்தை வைத்து விட்டனர் அங்கிருந்த சிவாச்சாரியார்கள்.
'மாலிக் காபூர்' செருப்பு கால்களுடன் உள்ளே புகுந்து, மூலவராக இருந்த சிவலிங்கத்தை ஈட்டியால் குத்தி கீழே தள்ளி, மதுரையை கொள்ளை அடித்து சென்றான்..
இன்றும் அவன் இடித்து சென்ற சிவலிங்கம் சாட்சியாக உள்ளது.

80 வருடங்கள் மூலவர் இல்லாமல், முஸ்லீம் கலவர சமயத்தில், மீனாட்சி கோவில் மூடப்பட்டு இருந்தது..

"அர்ச்சா அவதாரம் செய்த தெய்வங்கள், யாரோ ஒரு பக்தனால், ரிஷியால், தேவனால் வழிபடப்பட்டு தரிசனம் தந்த திருமேனிகள்..
அந்த பக்தர்கள் பார்த்த திருமேனியை நாமும் பார்க்க முடிந்ததே" 
என்று நம் பாக்கியத்தை நினைக்க வேண்டும்..

ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு பக்தனுக்கு காட்சி கொடுத்த தெய்வங்களின் திருமேனியை, அலட்சியம் செய்ய கூடாது.. 
குளத்தில் வைத்தோ, பூஜை செய்யாமலோ இருக்கவே கூடாது..

தெரிந்தே பாபங்கள் செய்ய கூடாது..
உதாரணத்திற்கு,
ப்ரம்ம தேவனால் காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்யப்பட்டு, அவருக்காக காஞ்சியில் அர்ச்சா திருமேனியுடன் வெளிப்பட்டார் அத்தி வரதர்..

ஆழ்வார் காலத்திலோ, 
ராமானுஜர் காலத்திலோ, 
தேசிகர் காலத்திலோ, நடைபெறாத ஒரு வழக்கத்தை, 
ஆகம விதி என்று சொல்லி கடந்த 300 வருடங்களாக குளத்தில் வைத்து விட்டனர் ஆதி அத்தி வரதரை.

ஆகம விதி என்று வீம்பு செய்து, 40 வருடம் ப்ரம்ம தேவன், ராமானுஜர், ஆழ்வார்கள், தேசிகர் வழிபட்ட மூல மூர்த்தியை, இன்று குளத்தில் வைத்து இருக்கின்றனர்.
40 வருடங்கள் பூஜையும் இல்லாமல் செய்து விட்டனர்.




ஸ்ரீரங்கம், மீனாட்சி கோவில் பூஜைகள் 80 வருடங்கள் தடைபட்ட காலத்தில், காஞ்சிபுரம் வழியாக வந்த இஸ்லாமியர்களுக்கு பயந்து, மூலவரை காப்பாற்ற குளத்தில் வைத்து இருந்த பழக்கத்தை, 1947வரை வேறு வழி இல்லாமல் கடைபிடித்து வந்த வைஷ்ணவர்கள் (வைகானச பூஜை செய்யும் வடகலை) இந்த மூட பழக்கத்தை ஆகம விதி என்று நினைத்து,
ப்ரம்ம தேவன், ராமானுஜர், ஆழ்வார்கள், தேசிகர் பார்த்த அத்திவரதர் திருமேனியை
"40 வருடங்கள், ஆழ்வார்கள்,  ராமானுஜர், தேசிகர் கண்ட அத்தி வரதரை குளத்தில் வைப்போம்" என்று பிடிவாதம் செய்து வைத்து விட்டனர்..

ராமானுஜர் காலத்தில் இல்லாத வழக்கத்தை,
தேசிகர் அறியாத வழக்கத்தை,
ஆழ்வார்கள் ஏற்காத ஒரு வழக்கத்தை,
ப்ரம்ம தேவன் வெறுக்கும் ஒரு வழக்கத்தை,
"நம் அத்தி வரதரை இப்படி 40 வருடங்கள் குளத்தில் வைக்கிறோமே"
என்ற நினைவு இல்லாமல்,
ஆகம விதி என்ற பெயரில் இல்லாத வழக்கத்தை, இன்று செய்து கடைபிடிக்கின்றனர்..
இதற்கு அறியாமையே காரணம்.

"செல்லப்பிள்ளை" சுல்தான் கண்களுக்கு சிலையாக தான் தெரிந்தார்..
அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..
'பெருமாளை காணவில்லையே' என்று ராமானுஜர் போன்ற ஒரு பக்தர் கதற, சிலையாக இருந்த பெருமாள், பக்தன் வேதனைப்பட கூடாது என்று மீண்டும் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்..

"40 வருடம் குளத்தில் வைக்கிறோமே, பெருமாளுக்கு மூச்சு முட்டுமே!!
ராமானுஜர் காலத்தில் இது போன்ற வழக்கம் இல்லையே!!
தேசிகர் காலத்தில் இந்த பழக்கம் இல்லையே!!"
என்ற உணர்ச்சியே இல்லாமல், செய்யப்படும் இந்த குருட்டு வழக்கத்தை மாற்ற, பெருமாளுக்காக கதறும் நெஞ்சங்களே இன்று தேவை..
"ப்ரம்ம தேவன் கண்ட பெருமாள்" இன்று குளத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்.. 
அத்தி வரதரை இப்படி இருப்பதை ப்ரம்ம தேவனும் ஏற்க மாட்டார். ராமானுஜரும் ஏற்க மாட்டார். 
தேசிகரும் ஏற்க மாட்டார்.
எந்த பக்தனும் ஏற்க மாட்டான்.

"தன்னை சிலை" என்று குளத்தில் வைக்க, சிலையாகவே இருந்து விட்டார்..நம் அத்தி வரதர்.
"அவர் இனியும் குளத்தில் வைக்கப்பட கூடாது" என்று கதற ராமானுஜரை போன்ற பக்தர்களால் மட்டுமே இயலும்..

கடலில் இருந்து கிடைத்த உடுப்பி கிருஷ்ணரை, எடுத்து பூஜை செய்யும் பழக்கம் உள்ள நம் தர்மத்தில்,
யாகத்தில் வந்த பெருமாளை, தேசிகர் காலம் வரை நடைபெறாத ஒரு வழக்கத்தை, கையில் எடுத்து கொண்டு, 40 வருடங்கள் குளத்தில் வைக்கும் வினோதம் நடைபெறுகிறதே !! 
தெய்வம் தான் பதில் சொல்ல வேண்டும்.

நாம் செய்யும் உண்மையான பிரார்த்தனைக்கு பகவான் செவி சாய்க்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சி சமயத்தில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வீதி புறப்பாடு நடைபெற்ற போது, கடும் வெயிலில் பெருமாள் வந்து கொண்டிருந்தார்..
பெருமாளுக்கு இரண்டு பக்கமும், சாமரம் வீசிக்கொண்டு வந்தனர் பக்தர்கள்.
அந்த சமயத்தில் கலெக்டர் அந்த வீதி வழியாக வர நேர்ந்த போது, தனக்கு கீழ் வேலை பார்க்கும் ஒரு வைஷ்ணவரை பார்த்து,
"ஏன் பொம்மை சிலைக்கு விசிறிக்கொண்டு இருக்கிறார்கள்.. வெயிலில் விசிறாமல் போனால், சிலைக்கு வியர்க்குமோ?"
என்று கிண்டலாக சிரித்தார்..
அவருக்கு கீழ் வேலை பார்த்த அவர் பரம பக்தர்..
கலெக்டர் இப்படி பேசியதும் மனம் வருந்தினார்.
அர்ச்சா திருமேனியை "விக்ரகம்" என்று பார்க்காதவர் அவர்.
"நமக்காக அர்ச்சா திருமேனி கொண்டு பெருமாள் அவதரித்து இருக்கிறார்" என்ற திடநம்பிக்கை கொண்டவர்.
இப்படி கேலியாக பேசியும் கோபப்படாமல், தைரியமாக கலக்டரை பார்த்து, "அவருக்கு வியர்க்கும்" என்று சொல்லி விட்டார்.

"சிலை தானே" என்று பார்த்த அவனுக்கு "சிலையாகவே இருந்து விட்டு போவோம்" என்று இருந்த பெருமாள், இப்படி வைஷ்ணவர் சொல்ல,
"சரி.. பரிக்ஷை செய்து பார்த்து விடுவோம்.."
என்று சாமரம் வீசுவதை நிறுத்த சொல்லி விட்டார் கலெக்டர்.




அருகில் சென்று பெருமாளை பார்க்க, "சிலையில் வியர்வை துளிகள் வழிந்தோடியது".
ஆச்சரியப்பட்டு அந்த இடத்தை விட்டு அமைதியாக சென்று விட்டார் பிரிட்டிஷ் கலெக்டர்.

பக்தன் ஆசைப்பட்டால், பெருமாள் செவி சாய்க்கிறார்..
"சிலை என்று பார்ப்பவருக்கு" சிலையாகவே இருக்கிறார்..

1200 வருடங்கள் பாரத பூமியை பிடித்து, கோவிலை இடித்து, விக்ரஹங்களை உடைத்து, ஹிந்து தர்மத்தை ஒழித்து விடுவேன் என்று பல முயற்சிகள் செய்தும், பக்தர்களுக்காக தன்னை மீண்டும் மீண்டும் ஆவிர்பவித்து கொள்கிறார்.

அன்று கோவிலை இடித்த கில்ஜி, துக்ளக், லோதி, முகலாயன், கிறிஸ்தவன் இன்று இல்லை.
ஆனால்,
தற்காலிகமாக தன்னை மறைத்து கொண்ட பெருமாள், இன்று உலகம் முழுவதும் மீண்டும் வியாபித்து இருக்கிறார்.

நாம் கோவிலுக்கு சென்று காணும் அர்ச்ச திருமேனிகள், எந்த ரிஷிக்காக வந்தாரோ நமக்கு தெரியாது...
அந்த இடங்களில் அவர் வழிபட்ட திருவாராதனையை ஏற்ற தெய்வங்கள் இன்று வரை பிரசன்னமாக இருந்து, நம் குறைகளை தன் தரிசனத்தாலேயே போக்கி, சரவ் மங்களம் கிடைக்க செய்கின்றனர்..

இருக்கும் திருவாராதனை முறைகளை மாற்றி, புதிதாக திருவாராதனை முறைகளை மாற்றி அதையே ஆகம விதி என்று மாற்றி செய்வது, பக்தி இல்லை.. பிடிவாதமே...

மனிதனின் மாமிச உடலுக்குள் ஒரு ஜீவனே பிரவேசிக்கும் போது, 
எங்கும் நிறைந்த பரவாசுதேவன், எல்லாம் வல்ல பரவாசுதேவன், 
நம் பக்திக்காக, நாம் ஆசைப்படும் ரூபத்தில், 
நாம் ஆசைப்படும் கல்லில் கூட பிரவேசித்து அணுகிரஹம் செய்து விடுவார்..

நமக்கு 'பக்தியே' முக்கியம்..

நம் துன்பங்கள் அனைத்தும் பனி போல விலக, பரவாசுதேவன் நாராயணனையே அடிபணிவோம்..

எந்த துன்பத்தையும் போக்க வல்லவர் அவர்.

"கோவிந்தா" என்று பக்தியுடன் கூப்பிட்டாலேயே, கருணையை நம் மீது பொழிந்து விடுவார்..

எம்பெருமானை சரண் அடைந்தவனுக்கு கவலை ஒருபோதும் இல்லை.

கர்ம வினையால் நமக்கு துக்கம் வருவது போல வந்தாலும், அது நம்மை தாக்குவதற்கு முன்னரே துக்கங்கள் பனி போல நம்மை விட்டு விலகி விடும்..

பரவாசுதேவனின் பக்தி ஒன்றே நம்மை காப்பாற்றும்..
நம் பாரத நாட்டை காப்பாற்றியதும் பரவாசுதேவன் நாராயணனே.
உத்தமர் காந்தி தன் உயிராக வைத்து இருந்ததும் "ராம" நாமமே.
"நான் கருங்கல் கொண்டு செய்த தூணை பார்த்து, நாராயணன் இருக்கிறார் என்று எப்படியடா சொல்கிறாய்?" என்று கேட்ட ஹிரண்யகசிபுவுக்கு தூண் தூணாக தான் தெரிந்தது...

"தூணிலும் நாராயணன் பிரவேசித்து இருக்கிறார்" என்று பார்த்த பிரகலாதனின் பக்திக்கு, பரவாசுதேவன் தன்னையே தூணில் ஆவிர்பவித்து கொண்டு விட்டார்..

தூண் தூண் தான்..
சிலை சிலை தான்..
"எல்லாம் வல்ல பரவாசுதேவன், இந்த சிலையில் வர முடியும் என்று பக்தன் பார்த்தால், அந்த சிலையிலும் வந்து விடுகிறார்" நாராயணன்.
ஹிரண்யகசிபு கட்டிய தூணில், பிரகலாதன் என்ற பக்தன் "தன்னை நினைக்கிறான்" என்றதும், அதே கல் தூணில், பெருமாள் நரசிம்மராக வெளிப்பட்டார். 

"சிலை சிலை" என்று பார்க்கும் வரை, நமக்கு இறை அருள் கிடைக்கவே கிடைக்காது.

"சிலையில் இறைவன் பிரவேசிக்க முடியாது" என்று சொல்பவன், நினைப்பவன், "இறைவன் மிக பெரியவன்.. எல்லாம் வல்லவன்" என்ற தத்துவத்தையே மறுக்கிறான்.

த்ரேதா யுகத்தில், துவாபர யூகத்தில் பரவாசுதேவன் "ராமராகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்த போது" நாம் கண்டோமோ தெரியாது..
பாற்கடலில் பரவாசுதேவன், விஷ்ணுவாக இருந்தாலும், நம்மால் சென்று பார்க்க முடியாது.. 
அங்கு சென்று பார்க்க தேவர்களாலும், ரிஷிகளாலும், ப்ரம்ம தேவனாலும், ருத்ரனாலுமே சாத்தியம்..

சரி "வைகுண்டம் சென்று பரவாசுதேவனை பார்த்து விடலாம்" என்றால், மோக்ஷம் அடையாத வரை அந்த தரிசனம் நமக்கு கிடைக்க போவதில்லை..




இப்படி மற்ற அவதாரங்கள், நமக்கு எட்டா கனியாக இருக்க, பரவாசுதேவன் நமக்காக அர்ச்சா திருமேனி கொண்டு ஆயிரக்கணக்கான ரூபங்களுடன் கோவிலில், வீடுகளில் அவதரிக்கும் போது,
"அவரை சிலை என்று பார்க்காமல், பரமாத்மா என்று பார்க்க ஆசை படுவோம்.."
நம் ஆசையே, பக்திக்கு விதையாகட்டும்..
நம் பக்தி (அன்பு) மூலம் தெய்வ அணுகிரஹம் நமக்கு கிடைக்கட்டும்.

வாழ்க நம் கோவில்கள்.
வாழ்க நம் வீட்டில் உள்ள அர்ச்ச அவதார திருமேனிகள்..
வாழ்க நம் தேசத்தில் வாழும் மகாத்மாக்கள். 


Friday 8 November 2019

சிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப்பாற்றி கொண்டு இருக்கலாமே? இது போன்ற பிதற்றல் கேள்விகளை, தெய்வங்கள் எப்படி பார்க்கிறார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆழ்வார்களுக்குள்ளே வேறுபாடு உண்டா?



"சித்தாந்த" ரீதியில்,
'ஒரு ஆழ்வார் பேசுவதையே, மற்றொரு ஆழ்வாரும் பேசுகிறார்' என்று பார்க்கிறோம்.
ஆழ்வார்களுக்கிடையே சித்தாந்தத்தில் வேற்றுமை கிடையாது..

ஆனால்,
எம்பெருமானை "அனுபவிப்பதில்" ஆழ்வார்களுக்கிடையே வேறுபாடு இருப்பதை காணலாம்.
பொதுவாக எம்பெருமான் நாராயணன் 5 அவதாரங்கள் செய்கிறார்.
1. பரமபதத்தில் பரவாசுதேவன் (வைகுண்ட நாதன் /ஆதி பரமாத்மா)
2. க்ஷீராப்தியில் (பாற்கடலில்) மஹாவிஷ்ணு.
3. பல சமயங்களில் விபவ அவதாரங்கள் (ராம, கிருஷ்ண, நரசிம்ம..முதலிய)
4. அந்தர்யாமியாக (அனைத்திற்குள்ளும் இருப்பவர்)
5. அர்ச்ச (விக்ரஹ) அவதாரம்
முதல் ஆழ்வார்கள், திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் வரை, யோகத்தில் இருந்து கொண்டு, எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவித்தார்கள்..

ஸ்வாமி நம்மாழ்வாரோ, எம்பெருமான் நாராயணனின் "பரத்துவத்தை" (1) அனுபவித்தார்.
பரதத்துவ அனுபவத்துடனேயே இருந்ததால் தான், அவருக்கு கோவிலுக்கு சென்று எம்பெருமானை தரிசிக்க கூட அவசியம் ஏற்படவில்லை.
கோவிலுக்கே போகாத ஆழ்வார் இவர் ஒருவர் தானே..
மாறாக ஸ்ரீரங்கம் என்று நினைத்தால், அந்த கோவிலில் உள்ள ஸ்ரீரங்கபெருமாள், இவர் இருக்கும் இடத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்.
அத்தகைய அனுபவத்திலேயே இருந்தார் நம்மாழ்வார் என்று பார்க்கிறோம்.
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், நாச்சியார் (ஆண்டாள்) போன்ற அனைவரும் "ராம, கிருஷ்ண, கூர்ம, நரசிம்ம" போன்ற விபவ அவதாரங்களையே (3) அனுபவிப்பவர்களாக இருந்தனர்.
விபவ அவதாரமான "கண்ணனிடம் மட்டுமே பக்தி செய்தாள்" ஆண்டாள்.
அர்ச்சா திருமேனியாக உள்ள ஸ்ரீ ரங்கநாதரிடம் கிருஷ்ண பரமாத்மாவை கண்டாள் ஆண்டாள் நாச்சியார் என்று பார்க்கிறோம்.

சாமானிய ஜனங்களான நாம்,
"ராமரையோ, கிருஷ்ணரையோ பக்தி செய்து, அதே ரூபத்தை கனவிலாவது தரிசிக்க முடியுமா?" என்பது தெரியாது..

திடபக்தி உள்ள மகான்களுக்கு, சாத்தியமாகும் இந்த பகவத் தரிசனம், நமக்கு சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியே !!

தெய்வத்திடம் திடபக்தி இல்லாத நமக்கும், வழி உண்டா? 
ஆழ்வார்களில் நமக்காக நிற்பவர் திருமங்கை ஆழ்வார் ஒருவரே.

திருமங்கை ஆழ்வார் மட்டுமே, "அர்ச்ச" அவதாரத்தையே (5) எம்பெருமானாக அனுபவித்தார்.
அர்ச்ச (விக்ரஹ) அவதாரத்தில் இருக்கும் பெருமாளிடம், ஆண்டாளை  போல விபவ அவதாரத்தை கூட பார்க்கவில்லை, இவர். 
எம்பெருமானே "விக்ரஹ ரூபமாக அவதரித்து இருக்கிறார்" என்றே அனுபவித்தார் திருமங்கை ஆழ்வார்.



நாம் கோவிலுக்கு சென்று,
கோவிலில் உள்ள பெருமாளை எப்படி பார்க்க வேண்டும்? 
எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று கேள்விக்கு,
தன் வாழ்க்கையே இதற்கு பதிலாக வாழ்ந்து காட்டி,, 
எம்பெருமானை பார்த்து நாமும் பாடுவதற்கு தன் பாசுரங்களையே கொடுத்து, 
நம் "பக்தியை" வளர்க்க செய்கிறார் திருமங்கை ஆழ்வார்.
சாதாரண மக்களும், எம்பெருமானை எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று வழிகாட்டிய திருமங்கை ஆழ்வாருக்கு, ஹிந்துக்கள் பெரும் கடன் பட்டு இருக்கிறோம் அல்லவா..

நாம் எப்படி கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து பக்தி செய்ய வேண்டும்? 
என்று காட்டுவதற்காகவே, திருமங்கை ஆழ்வார் அவதரித்தார் போலும்.

திருமங்கை ஆழ்வாருக்கு, அர்ச்ச அவதார விக்ரஹங்களே பூரணமான அனுபவத்தை கொடுத்தது.
திருமங்கை ஆழ்வாரை போல கோவில் கோவிலாக சென்று தரிசித்த ஆழ்வார்கள் இல்லை.
கோவில் கோவிலாக சென்று, அங்கு "அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாளை பார்ப்பதினாலேயே அவருக்கு ஏற்படும் உகப்பு, வேறு எந்த அனுபவத்திலும் அவருக்கு ஏற்படவில்லை" என்று தெரிகிறது.

திருமங்கை ஆழ்வாரை போல, கோவில் கோவிலாக சென்று எம்பெருமானை நேரில் பார்த்து, பார்த்து, மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் வேறு இல்லை.

தியானத்தில் எம்பெருமானை புருவ மத்தியில் தரிசனம் செய்வதை காட்டிலும், இவருக்கு மட்டும் தான், எம்பெருமானை கோவிலில் சென்று அரச்சா திருமேனியாக பார்த்தால் தான் திருப்தி ஏற்பட்டது.

கோவிலில் இருக்கும் பெருமாள், "அரச்சா (விக்ரஹ) திருமேனி"யாக தான் இருக்கிறார்.
நம்மை போன்ற சாதாரண ஜனங்களுக்கு, "இது கல் சிலை தானே" என்று தோன்றுகிறது.
ஆனால்,
திருமங்கை ஆழ்வாருக்கோ, அர்ச்சா திருமேனியை பார்க்கும் போதே,
"இது நமக்காக எம்பெருமான் செய்த அர்ச்சா (5) அவதாரமாயிற்றே"
என்றே தோன்றுகிறது..

"ஸ்வயம் பகவான் நாராயணன், அர்ச்சா திருமேனியுடன் அவதரித்து உள்ளார்"
என்றே ஆழ்வார்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் பார்க்கிறார்கள்.
பகவான் ராமராகவும், கிருஷ்ணராகவும் விபவ அவதாரங்கள் (3) செய்த சம காலத்தில் கூட, சில மூடர்கள், நேரில் பரமாத்மாவை பார்த்தும்,
"இவர்கள் மனிதர்கள்" என்று தானே நினைத்தார்கள்..

ராவணன், துரியோதனன், கம்சன் போன்றவர்கள், 'ராமரையும், கிருஷ்ணரையும் "மனிதன்" என்று தானே நினைத்தார்கள்'.
அதே சமயத்தில்,
ரிஷிகள், ஜடாயு, பீஷ்மர் போன்ற உத்தமர்கள், மனிதனாக வந்திருப்பது பகவான் நாராயணன் என்று உணர்ந்து பக்தி செய்து மோக்ஷம் அடைந்தார்களே!!..,
அதே போல,
கோவிலில் அர்ச்சா திருமேனியாக இருக்கும் எம்பெருமானை பார்க்கும் சாமானிய ஜனங்கள்,
"இது சிலை தானே"
என்று பார்த்து ஏமாறுகிறார்கள்.



ராமபிரான் அவதார காலத்தில், அவரை "மனிதன்" என்றே நினைத்தவர்களும் உண்டு.
ஞான கண் கொண்டு பார்த்தவர்கள்
"மனிதனாக சாஷாத் பரப்ரம்மமே அவதரித்து உள்ளார்" என்று புரிந்து கொண்டனர்.
அது போல,
திவ்ய ஞானம் கொண்ட ஆழ்வார்கள்,
கோவிலில் உள்ள "அர்ச்சா திருமேனியை" எம்பெருமானின் அவதாரமாகவே பார்த்தனர்.

நமக்கும் ஆழ்வார்களை போன்று, அத்தகைய உணர்வு ஏற்படும் போது, கோவிலில் உள்ள அரச்சா மூர்த்தியை பார்க்கும் போது
"ஐயோ.. எம்பெருமானை பார்க்க முடியவில்லையே..விக்ரஹ ரூபமாக தானே பார்க்க முடிகிறது"
என்ற எண்ணம் கூட ஏற்படாது..
"அர்ச்சா திருமேனியே பகவானின் ஒரு அவதாரம் தான்" என்று ஆழ்வார்களை போன்று பார்க்க நம் ஆரம்பித்தால்,
அந்த எண்ணமே, பக்திக்கு விதை ஆகி விடும்.

அர்ச்ச அவதாரமாக கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள், நம் பக்திக்கு ஏற்ப அவர் நம்மிடம் நெருங்குவார்.

அர்ச்சா திருமேனியை "சிலை" என்று பார்த்தால், அவர் விக்ரஹமாகவே உனக்கு தோன்றுவார்.

அதே அர்ச்சா திருமேனியை "பெருமாள்" என்று பார்த்தால், அவர் பெருமாளாகவே உனக்கு தோன்றுவார்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில், இஸ்லாமிய சுல்தான்கள் புகுந்து, அங்கிருந்த கோவிலை இடித்து, உற்சவராக இருந்த பெருமாளை டில்லிக்கே எடுத்து கொண்டு சென்று விட்டான்.

"சிலை தானே" என்று பார்த்த அவர்களுக்கு, சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..

சில வருடங்கள் கழித்து, ஸ்ரீ ரங்கத்தில் கிருமிகண்ட சோழனால் ஆபத்து ஏற்பட, ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு, மேல்கோட்டை வந்து சேர்ந்தார்.
"கோவில் உள்ளதே!! மூலவரை காணவில்லையே!! உற்சவரையும் காணவில்லையே!!"
என்று கண்ணீர் விட்டார் ராமானுஜர்..




"சிலை" என்று பார்த்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்ட பெருமாள்,
"தான் எங்கு இருக்கிறேன்?" என்பதை ராமானுஜருக்கு சொப்பனத்தில் காட்டினார்..

இஸ்லாமியர்கள் மேல்கோட்டையில் புகுந்து விட்டனர் என்ற பயத்தில், அங்கிருந்த ஹிந்துக்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாது, மூலவரை குழி தோண்டி புதைத்து விட்டனர்... உற்சவரை மறைப்பதற்குள் எடுத்து சென்று விட்டான்..
ராமானுஜருக்கு தான் மூலவராக இருக்கும் இடத்தையும் காட்டி, டெல்லி சுல்தான் அரண்மனையில் உற்சவராக இருப்பதாக தானே காட்டினார்..

தெய்வ பலத்துடன், தைரியமாக டில்லி சென்று, டில்லி சுல்தானிடம் பெருமாளை திருப்பி தர கேட்க,
ராமானுஜரின் திவ்யமான ரூபத்தை கண்டு எதிர்க்க முடியாமல்,
தன் சேனைகள் பல கோவில்களில் இருந்து கொள்ளையடித்த கோவில் சிலைகளை காட்ட அனுமதித்தான்.

ஆயிரக்கணக்கான கோவில் சிலைகளை கொள்ளை அடித்து வைத்து இருந்த இடத்துக்கு சென்று, "தான் கனவில் கண்ட பெருமாள் இருக்கிறாரா? என்று பார்த்தார், ராமானுஜர்.

"தான் கண்ட பெருமாள் அங்கு இல்லை" என்றதும் ராமானுஜர்,
"வேறு எங்காவது உள்ளதா? யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா?" என்று கேட்க,
"தன் மகள் அங்கிருந்த ஒரு சிலையை மட்டும் எடுத்து வைத்து இருந்ததாக ஞாபகம்", என்று தன் மகளை அழைத்தான்.
அவன் மகளிடம் தான் கண்ட அதே பெருமாளை கண்ட ராமானுஜர், "வாராய் செல்ல பிள்ளாய்" என்று அழைக்க, சுல்தான் பார்க்க,
அர்ச்ச அவதாரமாக (சிலையாக) இருந்த பெருமாள், அவள் மடியிலிருந்து இறங்கி ஓடி வந்து ராமானுஜரை நோக்கி வந்தது...
இந்த அதிசயத்தை கண்டு பிரமித்து போன இஸ்லாமியனுக்கு, இன்னொரு அதிர்ச்சியாக,
அவன் மகள் தன்னிடம் இருந்த பெருமாளை பதியாக நினைத்து இருந்தாள்...
இவளிடம் மட்டும் பேசி கொண்டு இருந்த பெருமாள், இவள் கூப்பிட்டவுடன் ராமானுஜரை விட்டு இறங்கி "கிடு கிடு வென ஓடி சென்று" அவள் மடியில் போய் அமர்ந்து விட்டது..



"இந்த துலுக்க பெண் செய்த பக்திக்காக, எம்பெருமான அவளிடமும் பேசுகிறார்" என்பதை உணர்ந்த ராமானுஜர், "மேல்கோட்டைக்கு அழைத்து செல்ல வேண்டுமே!! கோவிலில் இருக்க வேண்டிய உற்சவர் அல்லவா இவர்" என்று மீண்டும் அழைக்க, அதே போல விக்ரஹ ரூபத்துடனேயே ஓடி வந்து ராமானுஜர் மடியில் போய் அமர்ந்து விட்டார் பெருமாள்.

இந்த ஆச்சர்யம் ஒரு வித பயத்தை இஸ்லாமிய சுல்தானுக்கு உண்டாக்கியது...
"வந்திருக்கும் சாமியார் மந்திரங்கள் தெரிந்தவர் போல, கல் சிலையை நடக்க வைக்கிறாரே" என்று பயந்தான்...
"அந்த மாய சிலை தன் மகளையும் மாற்றி விட்டதே!!" என்று அச்சம் ஏற்பட, ராமானுஜரை பார்த்து,
"அந்த சிலையை தன் மகள் மீண்டும் கேட்பதற்குள் எடுத்து சென்று விடுங்கள்" என்று அனுமதி அளித்தான்..

மேல்கோட்டை பெருமாளிடம் பக்தி செய்த அவளுக்கும் இடம் கொடுத்து விட்டார் பெருமாள்.
இன்று போய் அந்த உற்சவ பெருமாளை பார்த்தாலும், அவர் திருப்பாதங்களில், துலுக்க நாச்சியாராக அமர்ந்து இருக்கிறாள் அந்த பக்தை.
பகவான், பக்தன் எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார் என்பது தெரிகிறது.
"இது சிலை அல்ல, பகவான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்று உணர்ந்து  பக்தி இருந்தால், நம்மிடமும் பேசுவார்" என்று திடமாக தெரிகிறது.

"சிலை" என்று பார்க்கும் போது, அர்ச்ச ரூபத்துடன் இருக்கும் எம்பெருமான் சிலையாகவே இருக்கிறார்...
காழ்ப்புணர்ச்சி, தெய்வ நிந்தை செய்யும் சிலரால், சில சமயங்களில் கோவில்கள் இடிக்கப்படுகிறது..
சில சமயம், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
சில சமயம், கோவிலில் உள்ள பெருமாளையே தூக்கி சென்று விடுகின்றனர்..
சிலர், கோவில் விக்ரஹங்களை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி உடைத்து விடுகின்றனர்.

"கோவிலில் கொள்ளை, கோவில் சிலை திருட பட்டு விட்டது"
போன்ற செய்திகளை பார்த்து விட்டு,
ஹிந்து தர்மத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, தீராத வெறுப்பு உள்ள ஈனர்கள்,
"சிலையை தெய்வம் என்றாயே!! சக்தி இருந்தால் கொள்ளையை தடுத்து இருக்கலாமே? சிலையையே தூக்கி சென்ற போது, உடைத்த போது உங்கள் தெய்வம் ஒன்றும் செய்ய வில்லையே?"
என்று கேட்கிறார்கள்..
"தெய்வத்தை "மனிதனை போன்று" நினைப்பதால் தான் இவர்களுக்கு வேதத்தில் உள்ள தெய்வங்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று புரியவில்லை.

தன் அர்ச்சா (சிலை) திருமேனியை, "சிலை தானே" என்று ஒருவன் எடுத்து சென்று ஒளித்தாலும், உடைத்தாலும் பெருமாளுக்கு ஒரு சேதமும் கிடையாது...

நாத்தீகன், மிலேச்சன், ஆஸ்தீகன் அனைவரையுமே அவர் தானே படைத்தார்..
அப்படி இருக்க,
ஒரு நாதீகனோ, மிலேச்சனோ "சிலை தானே" என்று தன் அர்ச்ச அவதாரத்தை பார்க்கும் போது, சிலையாகவே இருந்து விடுகிறார்..
அவன் 'தன் கழுத்தில் போட்டு இருக்கும் வைர மாலையை கழட்டினால் கூட' அமைதியாக இருக்கிறார்..
"தன் குழந்தைகள் தானே" என்று சிரித்து கொண்டு இருக்கிறார்.

"வைரமாகவும், கல் சிலையாகவும் அகில உலகங்களாகவும் தானே இருப்பதால், தன் அர்ச்ச அவதாரத்தை சேதம் செய்தாலும்" பொறுத்து கொள்கிறார்.
ஆனால்,
பல வருடம் கழிந்தாலும்,
பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் கூட,
ஒரே ஒரு உண்மையான பக்தன் "இங்கே இருந்த என் பெருமாள் எங்கே?" என்று அழுது கதறினான் என்றால், தன் பக்தன் அழுவதை சகிப்பதில்லை எம்பெருமான்.



மேல்கோட்டைக்குள் புகுந்து, கோவிலை உடைத்து, உற்சவ பெருமாளை பார்த்ததும் "சிலை தானே" என்று நினைத்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்டார். 
அவன் மகள், 'தனக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக வைத்து கொள்ளலாம்' என்று எடுத்து சென்று, அந்த சிலையுடனேயே பேசி கொண்டு, விளையாட, அர்ச்சா அவதாரமாக உள்ள பெருமாள் அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார். 
பெருமாள், துலுக்க பெண் என்றா பார்க்கிறார்?
"இவன் என் பக்தனா?" என்று தானே பார்க்கிறார்.

"சிலை" என்று பார்த்த சுல்தானுக்கு "சிலையாகவே இருந்து அவன் கூடவே சென்று விட்ட பெருமாள்",
ராமானுஜர் "எங்கே போய் விட்டார் எம்பெருமாள்?" என்று கதற,
"தான் இருக்கும் இடத்தை காட்டி, ஒரு பெரும் நாடகத்தையே ஆடி, மீண்டும் மேல்கோட்டைக்கே வந்து விட்டாரே.."
18 முறை, தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து, தங்கங்களை எல்லாம் கொள்ளை அடித்து, சிவ லிங்கத்தை உடைத்து, முகம்மது கஜினி பெரும் சேதம் விளைவித்தான்...
மூர்த்தியே போய் விட்டது.. கோவிலும் இடிந்து விட்டது...

சிவபெருமான் "தன்னை சிலையாக பார்க்கும் அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார்".
தங்கத்தில் ஆசை கொண்ட கொள்ளையன், தங்கத்தை கொள்ளை அடித்தான்.

சிலையை உடைத்து விட்டதால், சிவபெருமான் இல்லாமல் போய் விடுவாரா?

"ஒரு பக்தன் தன் சிவபக்திக்காக  கட்டிய கோவிலை, காலப்போக்கில் பக்தி இல்லாதவன் இடிக்கிறான்" என்று தான் தெய்வங்கள் பார்க்கிறார்கள்.

இந்த அசம்பாவிதங்களை தடுத்து, தான் இருப்பதை மனிதனுக்கு காட்டி, தன் பெருமையை நிலைநாட்டலாமே?"
வேதத்தில் சொல்லப்படும் நம் தெய்வங்களுக்கு, இது அவசியமில்லாதது.. 

"இந்திரன், வருணன், வாயு போன்ற தேவர்கள் கூட, மனிதனுக்கு காட்சி கொடுத்து தான், தன் பெருமை நிலைக்கும் என்று நினைக்கவில்லை" எனும் போது, தேவர்களுக்கும் மேற்பட்ட பெருமாளும், சிவபெருமானும், "மனிதர்களுக்கு தன் தரிசனத்தை வலுக்கட்டாயமாக கொடுத்துத்தான் தன் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை". 

தெய்வங்கள் எதிர்பார்ப்பது, உண்மையான ஒரே ஒரு பக்தனை மட்டுமே.

"சோம்நாத் கோவிலை இடித்து விட்டான், அங்கு இருந்த சிவலிங்கத்தையும் உடைத்து விட்டானே..." என்று மனம் குமுறி ஹிந்துக்கள் மனம் கொதித்து, வழி தெரியாமல் அழ, மீண்டும் மீண்டும் கோவில் எழுந்தது...
கதறிய ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்கள்...
அதன் பின் வந்த கில்ஜி, லோடி, துக்ளக், முகலாய ஆட்சி வரை கோவில் பல முறை இடிக்கப்பட்டது...
மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது...

"சக்தி இல்லாத தெய்வ சிலையை உடைப்பேன்!!.. மக்களை கொன்று குவிப்பேன்.."
என்று 1000 வருடங்கள் பாரத தேசத்தை உருட்டி, மிரட்டி பார்த்த கில்ஜி, துக்ளக், லோடி, பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாய அந்நியர்கள் அனைவரும் மண்ணோடு மண் ஆகி விட்டனரே!!..
சோம்நாத்தில், இன்றும் புதிய உருவத்துடன், அதே சிவபெருமான் அர்ச்சா ரூபத்துடன் வந்து விட்டாரே? 

சிவன் சொத்தை அபகரித்த இவர்கள் குலமே நாசம் ஆகி போனதே!!..

"ஹிந்து கோவில்களை இடித்து விட்டேன். அங்கு இருந்த வேத ப்ராம்மணர்களை கொன்று விட்டேன்.. ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதிப்பேன்...ஹிந்துக்கள் ஒழிந்தார்கள்.. இனி இவர்கள் ஹிந்துக்களாக வாழ இயலாது" 
என்று 1000 வருடங்கள் ஆதிக்கம் செய்தும், ஒன்றும் ஆகவில்லையே..!!

மனிதனை மனிதன் கேலி செய்தால், தப்பிக்க வழி உண்டு.. 
முட்டாள்கள் தானே, தன்னை விட பலசாலியான தெய்வத்தை கேலி செய்ய துணிவான்..? 
தெய்வத்தை கேலி செய்து, குல நாசம் ஆகாதவன் உலகிலேயே இல்லையே !
நம் பாரத நாட்டின் சரித்திரமே காட்டுகிறதே!! 
சிந்திக்க வேண்டாமா?

"நிறுத்துவோமே ஹிந்து தெய்வங்களின் மீது உமிழப்படும் காழ்ப்புணர்ச்சியை..."

"சக்தி உள்ள ஹிந்து தெய்வங்கள் நமக்கு அனுக்கிரஹம் செய்ய இருக்கும் போது, அந்த தெய்வத்தின்  அனுக்கிரஹம் பெற வழி என்ன?" என்று நினைப்பது தானே புத்திசாலித்தனம்!!



வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் கற்பனை அல்ல..
அவர்கள் நிஜமான தெய்வங்கள்.
"அர்ச்ச அவதாரம்" செய்த எம்பெருமான், அந்த இடங்களில் தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்.

"கோவிலே இடிக்கப்பட்டாலும், தெய்வ சிலைகளே இடிக்கப்பட்டாலும்" அங்கு தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்..

"உண்மையான பக்தி நாம் செய்தால், தன்னை மீண்டும் அர்ச்ச அவதார மூர்த்தியாக காட்டி நமக்கு முன் வந்து விடுகிறார்..." என்பதை நாம் மறக்க கூடாது.

எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவிக்கும் திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை (கும்பகோணம்) சென்ற போது,
"அர்ச்சா (விக்ரக)" திருமேனியுடன், மூலவராக உள்ள ஆராவமுதனை (சாரங்கபாணி) தரிசிக்க வந்தார்.

பெருமாள் சயன கோலத்தில் படுத்து இருந்தார்.
அர்ச்ச ரூபத்தில் உள்ள பெருமாள், அனைவருக்கும் காட்சி கொடுப்பது போல தான் காட்சி கொடுத்தார்...

"பக்தனான தன்னை கவனிக்கவில்லையோ!!" என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், பின்வருமாறு பாட,
படுத்து இருந்த பெருமாள், "பக்தன் அழைக்கிறானே" என்றதும், கல் சிலையாக உள்ள பெருமாள், சயன கோலத்துடனேயே கொஞ்சம் எழுந்து (உத்தான சயனம்) அமர்ந்து விட்டார்.

நடந்த கால்கள் நொந்தவோ
....
காவிரிக்கரை குடந்தையுள்,
கிடந்தவாரே எழுந்திருந்து
பேசுவாழி கேசனே
என்று பாசுரம்..
இன்று நாம், கும்பகோணம் சென்று பார்த்தாலும், "சாரங்கபாணி கோவிலில் மூலவர் உத்தான சயனத்தில் (கிடந்தவாரே எழுந்திருந்த)" இருப்பதை காணலாமே!!..
"மூலவரை 'கல்' என்றா பார்த்தார்கள்? 5 வித அவதாரங்களில், நமக்காக பெருமாள் அர்ச்சா அவதாரமாக இருக்கிறார்" என்று தானே பார்த்தார்கள்.

"இந்த அனுபவத்தை, நாமும் நம் மனதில் கொண்டு வந்தால் தானே நமக்கும் பக்தி ஏற்படும்.. 
அப்பொழுதுதானே அர்ச்சா அவதாரத்தில் இருக்கும் பெருமாள், நம்மிடமும் பகவான் பேச முன் வருவார்".

"ஆழ்வார்கள் கண்களுக்கு அர்ச்சா திருமேனி எம்பெருமானாக தோன்றியதால் தானே, அவர்கள் பக்திக்கு பகவான் தலை அசைத்தார்" என்று கண்கூடாக காட்டுகிறதே...

இதே திருமழிசை ஆழ்வார், காஞ்சிபுரம் சென்ற போது, காஞ்சி அரசன் இவரை நாடு கடத்த உத்தரவு இட,
அரச்சா திருமேனியுடன் சயன கோலத்தில் இருந்த யதோக்தகாரி என்ற வேகாசேது பெருமாளை, அர்ச்சா (விக்ரக) ரூபத்துடனேயே "ஓரிருக்கை" என்ற ஊர் வரை கூட்டிக்கொண்டு கிளம்பி சென்று விட்டாரே..
அந்த பெருமாளை பார்த்து,
கணிகண்ணன் போகின்றான், 
காமரு பூங்கச்சி மணிவண்ணா ! கிடக்க வேண்டா ! 
துணிவொன்றிச் செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், 
நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று சொல்லி, கல் சிலையாக உள்ள பெருமாளை நடக்க வைத்து விட்டாரே...

அரசன் மன்னிப்பு கேட்க, பின்னர் "மீண்டும் படுத்துக்கொள்" என்றதும் மீண்டும் வந்து படுத்து கொண்டு விட்டாரே!! பெருமாள்.

அர்ச்சா அவதாரமாக இருந்து கொண்டே பெருமாள், இவர்களிடம் பேசினார் என்றால், "நம் பக்தியை பொறுத்து பகவான் நம்மிடம் பேசுவார்" என்பது தானே இதில் நிரூபணம் ஆகிறது..



உன் பக்தி எந்த அளவு உள்ளதோ, அந்த அளவுக்கு பகவான் பேசுகிறார்..

25% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 25% பழகுகிறார்.
50% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 50% பழகுகிறார்.
100க்கு 100% ஆழ்வார்களை போன்று, மீராவை போன்று, சக்குபாய் போன்று பக்தி செய்தால், நேரில் வந்து பழகுகிறார்.
நம் பக்தியை கொண்டு தானே, இறை அருள் நமக்கு கிடைக்கிறது.

நமக்கும் ஆழ்வார்கள் போன்று, "அர்ச்சா மூர்த்தியே பகவானின் அவதாரம் தான்" என்ற தெளிந்த பக்தி இருந்தால், நம்மிடமும் பெருமாள் அர்ச்ச அவதாரமாகவே இருந்து கொண்டே பேசுவார்.

திருமங்கை ஆழ்வாருக்கு விசேஷமாக "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை கூட இவர் பார்க்க ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..

கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..

இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே

ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

தமிழை வளர்க்க, பாசுரங்களை புரிந்து கொண்டாலேயே தமிழ் வாழுமே. .