Followers

Search Here...

Showing posts with label Rajasthan. Show all posts
Showing posts with label Rajasthan. Show all posts

Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka