Followers

Search Here...

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி

தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது. 



தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.



அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.




பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு  எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 

கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) 
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 

பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
 "பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.



பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"வேதத்தின் சாரம் என்ன?" என்பதை, பகவானின் பரத்துவத்தை எடுத்து நிர்ணயம் செய்த பின்
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.

அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.




மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர். 
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.
இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது, 
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,
கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர, 
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார்,
"தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,
சிலர் 'பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை' என்றும்,
சிலர் 'அணுக்கள் தான் உலகம்' என்றும்,
சிலர் 'இயற்கையே தான் உண்மை' என்றும்,
சிலர் 'கர்மா (action-reaction ) தான்' என்றும் 
சிலர் 'காலம் தான்' என்றும்,
சிலர் 'வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா' என்றும்,
சிலர் 'தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும்' அரச சபையில் வாதிட்டார்கள்.

இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!  
இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!"
என்று நினைத்தார் பெரியாழ்வார்.

"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா? 

பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், பக்தர்கள் ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?" 
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். 

"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ?!!" என்று தோன்ற,
"பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்"
என்று பெரியாழ்வார் ஆசைப்பட்டார்.

பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார். 
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.

பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.

யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.

"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு 
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு 

பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியைஅனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.




பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான், தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.

முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக, 
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழ்வார், 
கூடல் நகரில், பெருமாள் பலரும் பார்க்க தன் திருவடியை காட்ட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம். 
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' 
என்கிறார்.

பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.

முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.


பாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.


பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)




"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.




பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.


இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார்மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.


பாசுரம் (அர்த்தம்) - முடிச்சோதியாய் உனது முகச்சோதி - நம்மாழ்வார் கள்ளழகர் (மதுரை) சுந்தரராஜ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
-  நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.




இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.




பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

அத்திவரதரை வெளிப்படுத்துவோம் !! மூச்சு திணற வைக்கும் கொடிய நோய் CORONA !!

அத்தி வரதரை "தெய்வம் என்று தெரிந்தும்" மீண்டும் தண்ணீரில் வைத்தோம்.

"பெருமாளுக்கு மூச்சு திணறுமே!!" என்று கொஞ்சமும் பக்தி இல்லாமல், வறட்டு பிடிவாதம் செய்து தண்ணீரில் வைத்தோம்.

ராமானுஜர், தேசிகர் 'பார்க்காத' வழக்கத்தை ஆகம விதி என்றோம்.

'மூச்சு திணற வைக்கும் கொடிய நோய்' இன்று உலகை மிரட்டுகிறது.

மழை பொழிய, அத்திவரதரை வெளிப்படுத்துவோம்.
கருணை நம்மீது  பொழிய, அத்திவரதரை வெளிப்படுத்துவோம்.
மஹாத்மாக்கள் மனம் குளிர, அத்திவரதரை வெளிப்படுத்துவோம்.


ஸ்கந்தம் 1: அத்யாயம் 8 - குந்தி ஸ்துதி - Kunti Stuti (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம்

குந்தி ஸ்துதி
ஸ்கந்தம் 1: அத்யாயம் 8

கலி யுகம் பிறக்கப்போவதை அறிந்த 'வியாசர்', வேதம் முழுவதையும் கற்கும் திறன் இல்லாமல் பிராம்மணர்கள் இருப்பார்கள் என்று அறிந்து, வேதத்தை நான்காக (ரிக்,யஜுர்,சாம,அதர்வண) பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாசர்.
அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களையும் இயற்றினார்.
இவற்றைப் பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, ஸூதர் என்பவரிடம் ஒப்புவித்தார்.


புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்ததால், அவர் "ஸூத பௌராணிகர்" என்றே பெயர் பெற்றார்.
இவர் பிராமணராக இல்லாமல்  இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.



ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
அத தே ஸம்-பரேதானாம் |
ஸ்வானாம் உதகம் இச்சதாம் ||
தாதும் ஸக்ருஷ்ணா கங்காயாம் |
புரஸ்க்ருத்ய யயு: ஸ்த்ரிய: ||
अथ ते सम्-परेतानां स्वानाम् उदकम् इच्छताम् ।
दातुं सकृष्णा गङ्गायां पुरस्कृत्य ययु: स्त्रिय: ॥
இவ்வாறு (அத) போரில் வீர மரணமடைந்து பிரேத ரூபத்தில் (ஸம்-பரேதானாம்) இருக்கும் தன் உறவினர்கள் (ஸ்வானாம்) விரும்பும் (இச்சதாம்), ஜலத்தை (உதகம்) கொடுத்து (தாதும்) திருப்தி/தர்ப்பணம்  செய்ய, திரௌபதி, குந்தி முதலிய ஸ்திரீகள் (ஸ்த்ரிய) முன் செல்ல (புரஸ்க்ருத்ய), பாண்டவர்கள் (தே) கிருஷ்ண பரமாத்மாவுடன் (ஸக்ருஷ்ணா) கங்கையை (கங்காயாம்) நோக்கி சென்றனர்(யயு:).

தே நினீய உதகம் ஸர்வே |
விலப்ய ச ப்ருசம் புன: ||
ஆப்லுதா ஹரி-பாதாப்ஜ |
ரஜ: பூத-ஸரிஜ்-ஜலே ||
ते निनीय उदकं सर्वे विलप्य च भृशं पुन: ।
आप्लुता हरि-पादाब्ज रज:पूत सरिज्जले ॥
போரில் உயிர் விட்ட சொந்தங்கள் (தே) அனைவரையும் (ஸர்வே) இழந்து பெரும் துக்கத்துடன்  (விலப்ய ச) இருந்த பாண்டவர்கள், 
கங்கை நீரால் (உதகம்) போதுமான அளவுக்கு (ப்ருசம்) மீண்டும் மீண்டும் (புன:) தர்ப்பணம் செய்து (நினீய) திருப்தி செய்து விட்டு, ஸ்ரீ கிருஷ்ணரின் பாத (ஹரி-பாதாப்ஜ) துளி (ரஜ:) பட்ட புனிதமான (பூத) கங்கை ஜலத்தில் (ஸரிஜ்-ஜலே) ஸ்நானம் (ஆப்லுதா) செய்தனர்.

தத்ர ஆஸீனம் குரு-பதிம் |
த்ருதராஷ்ட்ரம் ஸஹானுஜம் ||
காந்தாரீம் புத்ர-சோகார்தாம் |
ப்ருதாம் கிருஷ்ணாம் ச மாதவ: ||
तत्र आसीनं कुरुपतिं धृतराष्ट्रं सह अनुजम् ।
गान्धारीं पुत्र शोक अर्तां पृथां कृष्णां च माधव: ॥
அங்கு (தத்ர) குரு வம்சத்தின் அரசரான யுதிஷ்டிர மகாராஜன் (குரு-பதிம்), தமது இளைய சகோதரர்களுடனும் (ஸஹானுஜம்), திருதராஷ்டிரனுடன் (த்ருதராஷ்ட்ரம்), புத்ர சோகத்தில் (புத்ர-சோகார்தாம்) உள்ள காந்தாரியுடன் (காந்தாரீம்), குந்தி (ப்ருதாம்) மற்றும் திரௌபதி (கிருஷ்ணாம்) ஆகியோருடனும் துக்கத்தில் ஆழ்ந்தவராய் அமர்ந்திருந்தார் (ஆஸீனம்). இவர்களுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் (ச மாதவ:) இருந்தார்.

ஸாந்த்வயாம் ஆஸ முனிபி: |
ஹத-பந்தூன் சுசார்பிதான் ||
பூதேஷு காலஸ்ய கதிம் |
தர்சயன்  ப்ரதி க்ரியாம் ||
सान्‍त्वयाम् आस मुनिभि: हत-बन्धू: शुचार्पितान् ।
भूतेषु कालस्य गतिं दर्शयन् न प्रतिक्रियाम् ॥
ஜீவாத்மாக்களின் (பூதேஷு) கால ஓட்டத்தின் (காலஸ்ய கதிம்) உண்மையை உபதேசித்து (தர்சயன்) அவரவர்கள் செய்யும் கர்மாக்களுக்கு கிடைக்கும் பிரதிபலன்களை (அப்ரதி க்ரியாம்)  எடுத்துக்கூறி, உறவினர்களை இழந்து (ஹத-பந்தூன்) அதிர்ச்சி (சுசார்பிதான்) அடைந்திருந்தவர்களை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், முனிவர்களும் (முனிபி:) சமாதானப்படுத்த ஆரம்பித்தனர் (ஸாந்த்வயாம் ஆஸ).


ஸாதயித்வா அஜாத-சத்ரோ: |
ஸ்வம் ராஜ்யம் கிதவைர் ஹ்ருதம் ||
காதயித்வா அஸதோர் ராஜ்ன: |
கச-ஸ்பர்ச-க்ஷத ஆயுஷ: ||
साधयित्वा अजात-शत्रो: स्वं राज्यं कितवैर् हृतम् ।
घातयित्वा असतो राज्ञ: कच स्पर्श क्षत आयुष: ॥
ராஜசுய யாகம் செய்து, பெரும் வெற்றியை சாதித்து (ஸாதயித்வா), எதிரியற்றவராய் (அஜாத-சத்ரோ) யுதிஷ்டிரர் உருவாக்கிய இந்திரப்ரஸ்த இராஜ்ஜியத்தை (ஸ்வம் ராஜ்யம்) வஞ்சகர்களான துரியோதனனும், அவனுடன் இருந்தவர்களும் (கிதவைர்), தந்திரமாக அபகரித்துக் கொண்டனர் (ஹ்ருதம்). மஹாராணி (ராஜ்ன) திரௌபதியின் கூந்தலை தொட்ட (கச-ஸ்பர்ச) அயோக்கியர்கள் (அஸதோர்) ஆயுள் குறைக்கப்பட்டு (க்ஷத ஆயுஷ) போர்க்களத்தில் கால கதி அடைந்தார்கள் (காதயித்வா)


யாஜயித்வா அஸ்வமேதை: தம் | 
த்ரிபி: உத்தம கல்பகை: ||
தத் யச: பாவனம் திக்ஷு |
சத-மன்யோ: இவ அதனோத் ||
याजयित्वा अश्वमेधै: तम्  त्रिभि: उत्तम कल्पकै: ।
तद् यश: पावनं दिक्षु शत-मन्यो: इव अतनोत् ॥
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சுத்தமான பொருட்களை கொண்டு (உத்தம கல்பகை:), மூன்று (த்ரிபி:)  அஸ்வமேத யாகங்களை (அஸ்வமேதைஸ்) நடத்தும்படி (யாஜயித்வா) யுதிஷ்டிர மகாராஜனைத் (தம்) கேட்டுக்கொண்டார். இவ்வாறாக (த்), இத்தகைய நூறு யாகங்களைச் (சத-மன்யோர்) செய்த இந்திரனின் (இவ) புகழைப் போல், யுதிஷ்டிர மகாராஜனின் நேர்மையான (பாவனம்) புகழும் (யச:) எல்லா திசைகளிலும் (திக்ஷு) பரவியது  (அதனோத்)




ஆமந்த்ரிய பாண்டு-புத்ராம்ஸ்ச |
சைனேய த்தவ-ஸம்யுத: ||
த்வைபாயன திபி: விப்ரை: |
பூஜிதை: ப்ரதிபூஜித: ||
आमन्‍त्र्य पाण्डु पुत्रांश्च शैनेय उद्धव संयुत: ।
द्वैपायन आदिभि विप्रै: पूजितै: प्रतिपूजित: ॥
சேனாதிபதி (சாத்யகி) (சைனேய), உத்தவன் சூழ (உத்தவ-ஸம்யுத:) நின்று கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டு புத்திரர்களை கூட (பாண்டு-புத்ராம்ஸ்ச) அழைத்து (ஆமந்த்ரிய) கொண்டு, வேதவியாசர் மற்றும் பிற ப்ராம்மணர்களை (த்வைபாயனாதிபிர் விப்ரை:) பூஜிக்க (பூஜிதை:), பதிலுக்கு அவர்களும் கிருஷ்ணரை பூஜித்தார்கள் (ப்ரதிபூஜித:).


கந்தும் க்ருதமதி: ப்ரஹ்மன் |
த்வாரகாம் ரதம் ஆஸ்தித: ||
உபலேபே அபிதாவந்தீம் |
உத்தராம் பய-விஹ்வலாம் ||
गन्तुं कृतमति:  ब्रह्मन् द्वारकां रथम् आस्थित: ।
उपलेभे अभिधावन्तीम् उत्तरां भय विह्वलाम् ॥
துவாரகையை (த்வாரகாம்) நோக்கிப் புறப்பட (கந்தும்) முடிவு செய்து (க்ருதமதிர்) கிருஷ்ணா பரமாத்மா (ப்ரஹ்மன்) இரதத்தில் அமர்ந்து இருக்க (ரதம் ஆஸ்தித), அபிமன்யுவின் தர்மபத்னி உத்தரா பயத்துடன் (உத்தராம் பய-விஹ்வலாம்) தன்னை நோக்கி அவசரமாக வருவதை (அபிதாவந்தீம்) கண்டார்.(உபலேபே)

உத்தரோவாச (उत्तरोवाच)
(உத்தரா பேசுகிறாள்)
பாஹி பாஹி மஹா-யோகின் |
தேவ-தேவ ஜகத்-பதே ||
ந அன்யம் த்வத் அபயம் பஸ்யே |
யத்ர ம்ருத்யு: பரஸ்பரம் ||
पाहि पाहि महा-योगिन् देवदेव जगत्पते ।
न अन्यं त्वद् अभयं पश्ये यत्र मृत्यु: परस्परम् ॥
யோகிகளுக்கெல்லாம் யோகியே (மஹா-யோகின்)! தேவர்களுக்கெல்லாம் தேவனே (தேவ-தேவ)! உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் தலைவனே (ஜகத்-பதே)!  எங்கும் மரணமே (யத்ர ம்ருத்யு:) சாதாரணமாக (பரஸ்பரம்) இருப்பதால், என்னைக் காப்பாற்ற உங்கள் அபயத்தை (த்வத் அபயம்) தவிர வேறு எவரும் இல்லை (ந அன்யம்) என்று அறிகிறேன் (பஸ்யே). என்னை காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் (பாஹி பாஹி)!

அபித்ரவதி மாம் ஈச |
சரஸ் தப்த யஸ: விபோ ||
காமம் தஹது மாம் நாத |
மா மே கர்போ நிபாத்யதாம் ||
अभिद्रवति माम् ईश शरस् तप्त अयस: विभो ।
कामं दहतु मां नाथ मा मे गर्भो निपात्यताम् ॥
ஈஸ்வரா (ஈச)! தாங்கள் சர்வசக்தி படைத்தவர் (விபோ)!  இரும்பினால் (அயஸோ) ஆன அம்பு (சரஸ்) ஒன்று , தீப்பிழம்பை கக்கிக்கொண்டு (தப்த) என்னை (மாம்) நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது (அபித்ரவதி). என் நாதனே (நாத)! அது விரும்பினால் (காமம்) என்னை (மாம்) எரித்து (தஹது) கொள்ளட்டும். ஆனால், என் (மே) வயிற்றில் வளரும் கருவை (கர்போ), குருவம்சத்தை சிதைத்து (நிபாத்யதாம்) விடாமல் (மா) காப்பாற்றுங்கள்.

ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
உபதார்ய வச: தஸ்யா |
பகவான் பக்த-வத்ஸல: ||
அபாண்டவம் இதம் கர்தும் |
த்ரௌணே: அஸ்த்ரம் அபுத்யத ||
उपधार्य वच: तस्या भगवान् भक्त-वत्सल: ।
अपाण्डवम् इदं कर्तुं द्रौणे: अस्त्रम् अबुध्यत ॥
தன் பக்தர்களிடம் பெரும் அன்பு கொண்ட (பக்த வத்சல) பகவான்! உத்தரா (தஸ்யா) பேசியதை (வசஸ்) கவனத்துடன் கேட்டார் (உபதார்ய). பாண்டவ வம்சமே இல்லாமல் (அபாண்டவம்) செய்து விடுவதற்காக, துரோணாச்சாரியரின் மகனான அஸ்வத்தாமன் தான் பிரம்மாஸ்திரத்தைப் (த்ரௌணேர் அஸ்த்ரம்), உத்தராவின் கர்பத்தை கலைக்கும் (கர்தும்) நோக்கத்துடன் இப்படி(இதம்) பிரயோகித்திருக்கிறான் என்பதை, புரிந்து கொண்டார் (அபுத்யத)

தர்ஹி ஏவ த முனி-ஸ்ரேஷ்ட |
பாண்டவா: பஞ்ச ஸாயகான் ||
ஆத்மனோ அபிமுகான் தீப்தான் |
ஆலக்ஷ்ய ஸ்த்ராண் உபாதது: ||
तर्ही  एव अथ मुनि श्रेष्ठ पाण्डवा: पञ्च सायकान् ।
आत्मनो अभिमुखान् दीप्तान् आलक्ष्य अस्त्राण् उपाददु: ॥
மிகச்சிறந்த முனிவர்களுள் முதன்மையானவரே ! சௌனகரே ! (தர்ஹி ஏவாத முனி-ஸ்ரேஷ்ட), தீ ஜுவாலையுடன் (தீப்தான்) பிரம்மாஸ்திரம் (அஸ்த்ராண்) தங்களை நோக்கி (அபிமுகான்) வருவதைக் கண்ட (ஆலக்ஷ்ய) பாண்டவர்கள் (பாண்டவா), தங்களுடைய (ஆத்மனோ) ஐந்து ஆயுதங்களைக் (பஞ்ச ஸாயகான்) கையிலெடுத்தனர் (உபாதது:).

வ்யஸனம் வீக்ஷ்ய தத் தேஷாம் |
அனன்ய-விஷயாத்மனாம் ||
ஸுதர்சனேன ஸ்வ ஸ்த்ரேண |
ஸ்வானாம் ரக்ஷாம் வ்யதாத் விபு: ||
व्यसनं वीक्ष्य तत् तेषाम् अनन्य विषयात्मनाम् ।
सुदर्शनेन स्व अस्त्रेण स्वानां रक्षां व्यधाद् विभु: ॥
சர்வ வல்லமையுள்ள (விபு:) பரம புருஷனாகிய ஸ்ரீ கிருஷ்ணர், தன்னை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் (அனன்ய-விஷயாத்மனாம்) தன் பக்தர்களுக்கு வந்த (தேஷாம்)  இந்த (தத்) பேராபத்தை (வ்யஸனம்) கண்டு (வீக்ஷ்ய), தன் ஸ்வஜனங்களை (ஸ்வனாம்) காப்பாற்றுவதற்காக (ரக்ஷாம்) உடனே தனது ஆயுதமான (ஸ்வ அஸ்த்ரேண) சுதர்சன சக்கரத்தைக் (ஸுதர்சனேன) கையிலெடுத்தார் (வ்யதாத்).


அந்த:ஸ்த: ஸர்வ பூதானாம் | 
ஆத்மா யோகேஸ்வரோ ஹரி: ||
ஸ்வ-மாயயா வ்ருணோத் கர்பம் |
வைராட்யா: குரு-தந்த வே ||
अन्त:स्थ: सर्व भूतानाम् आत्मा योगेश्वरो हरि: ।
स्व मायया आवृणोद् गर्भं वैराट्या: कुरु तन्तवे ॥
அனைத்து உயிர்களிடத்திலும் (ஸர்வ-பூதானாம்) அந்தர்யாமியாக (அந்த:ஸ்த:) உள்ளேயே இருக்கும், யோகேஸ்வரரான கிருஷ்ண (யோகேஸ்வரோ ஹரி:) பரமாத்மா (ஆத்மா), குருவம்சம் தழைக்க (குரு-தந்த வே), தன்  மாய சக்தியால் (ஸ்வ-மாயயா), கர்ப்பவதியாகி இருக்கும் உத்தராவின் (ஆவ்ருணோத்) கர்ப்பத்தை ( கர்பம்) மறைத்தார்.




யத்யபி அஸ்த்ரம் ப்ரஹ்ம சிரஸ்து |
அமோகம் ச அப்ரதிக்ரியம் ||
வைஷ்ணவம் தேஜ ஆஸாத்ய |
ஸமசாம்யத் ப்ருகு உத்வஹ ||
यद्यपि अस्त्रं ब्रह्म शिरस्तु अमोघं च अप्रतिक्रियम् ।
वैष्णवं तेज आसाद्य सम शाम्यद् भृगु उद्वह ॥
ப்ருகு குடும்பத்தின் பெருமைக்குரிய சௌனகரே ! (ப்ருகூத் வஹ) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட ப்ரம்மாஸ்திரம் (அஸ்த்ரம் ப்ரஹ்ம) சஸ்திரங்களில் தலைசிறந்தது  (சிரஸ்து). யாராலும் எதிர்க்க முடியாதது ( அமோகம்). மேலும் யாராலும் தோற்கடிக்க முடியாதது ( ச அப்ரதிக்ரியம்). இருந்தாலும் கூட (யத்யபி), மஹாவிஷ்ணுவின் பலத்தால் எதிர்க்கப்பட்டு (வைஷ்ணவம் தேஜ ஆஸாத்ய), ப்ரம்மாஸ்திரம் தண்ணீர் பட்ட புஷ்வாணம் போல நனைந்து விட்டது (ஸமசாம்யத்).


மா மம்ஸ்தா ஹி ஏதத் ஆஸ்சர்யம் |
ஸர்வ ஸ்சர்யமயே ச்யுதே ||
ய இதம் மாயயா தேவ்யா |
ஸ்ருஜத் அவதி ஹந்த் யஜ: ||
मा मंस्था हि एतद् आश्चर्यं सर्व आश्चर्यमये अच्युते ।
य इदं मायया देव्या सृजत् अवति हन्त्यज: ॥
எவர் () தன் மாய சக்தியால் (இதம் மாயயா), உலகங்களை படைத்து (ஸ்ருஜத்), காத்து (அவதி), அழிக்கும் (ஹந்த்) சக்தி கொண்டு இருக்கிறாரோ, அப்படிப்பட்ட அதி அற்புதமானவரும், நிலையானவருமான (ஸர்வ ஆஸ்சர்யமயே அச்யுதே), பிறப்பற்றவருமான (யஜ:), தேவாதி தேவனான (தேவ்யா)  கிருஷ்ண பரமாத்மா, தன் சுதர்ஷன சக்கரத்தால் பிரம்மாஸ்த்திரத்தை தடுத்தது (ஹி ஏதத்)  ஆச்சர்யமாக  (ஆஸ்சர்யம்) நினைக்க அவசியமில்லை. (மா மம்ஸ்தா). பகவானால் ஆகாத காரியம் ஏதுமில்லையே !

ப்ரஹ்ம-தேஜோ-வினி: முக்தை: |
ஆத்மஜை: ஸஹ க்ருஷ்ணயா ||
ப்ரயாண பிமுகம் க்ருஷ்ணம் |
இதம் ஆஹ ப்ருதா ஸதீ ||
ब्रह्म तेजो विनि: मुक्तै: आत्मजै: सह कृष्णया ।
प्रयाण अभिमुखं कृष्णम् इदम् आह पृथा सती ॥
பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களிலிருந்து (ப்ரஹ்ம-தேஜோ) கர்ப்பிணியான உத்தரா காப்பாற்றப்பட்டதும் (வினிர்முக்தை), ஐந்து மகன்களோடு (ஆத்மஜை:) மற்றும் திரௌபதியோடும் (ஸஹ க்ருஷ்ணயா), நின்றுகொண்டிருந்த பக்தையான அத்தையான குந்தி தேவி (ப்ருதா ஸதீ), துவாரகை திரும்பத் பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் (ப்ரயாணாபி முகம் க்ருஷ்ணம்) பார்த்து இவ்வாறு பேசினாள் (இதம் ஆஹ).

Listen to Sri Hariji – Kunthi Sthuthi


குந்தி உவாச (कुन्त्युवाच)
(குந்தி தேவி பேசுகிறாள்)
நமஸ்யே புருஷம் த்வாத்யம் |
ஈஸ்வரம் ப்ரக்ருதே: பரம் ||
அலக்ஷ்யம் ஸர்வ-பூதானாம் |
அந்தர் பஹி: அவஸ்திதம் ||
नमस्ये पुरुषं त्वाद्यम् ईश्वरं प्रकृते: परम् ।
अलक्ष्यं सर्व भूतानाम् अन्तर् बहि: अवस्थितम् ॥
அத்தையான குந்தி தேவி, கிருஷ்ணரை "பரமாத்மா" என்று அறிந்தவளாக இருப்பதால்,கண்ணீர் விட்டு கொண்டே நன்றியுடன் கைகுவித்து சொல்கிறாள்.
கிருஷ்ணா !  நீ ஆதி (த்வா ஆத்யம்) புருஷன் (புருஷம்) அல்லவா! இயற்கைக்கு (ப்ரக்ருதே:அப்பாற்பட்ட (பரம்) வேண்டியவன் வேண்டாதவன் என்று பாகுபாடு அற்ற ஈஸ்வரன் (ஈஸ்வரம்) அல்லவா நீ ! பரமபுருஷனான  உனக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்யே). அனைத்து பூதங்களிலும் (ஸர்வ-பூதானாம்) உள்ளேயும், வெளியேயும் (அந்தர் பஹிர்) நீயே இருந்தாலும்  (அவஸ்திதம்), யாருக்கும் புலப்படாதவராகவே (அலக்ஷ்யம்) இருக்கிறாய்.
மாயா-ஜவனிகா ஆச்சன்னம் |
அக்ஞா அதோக்ஷஜம் அவ்யயம் ||
ந லக்ஷ்யஸே மூட-த்ருசா |
நடோ நாட்யதரோ யதா ||
माया जवनिका आच्छन्नम् अज्ञा अधोक्षजम् अव्ययम् ।
न लक्ष्यसे मूढ द‍ृशा नटो नाट्यधरो यथा ॥
நீ மாயை  என்ற  திரையால் (மாயா ஜவனிகா) உன்னை மறைத்துக்கொண்டு  (ஆச்சன்னம்), அறியாமைக்கு (அக்ஞா) அப்பாற்பட்டு (அதோக்ஷஜம்). குறையற்று (அவ்யயம்) இருக்கிறாய். வேடம் அணிந்து நடிக்கும் ஒரு நடிகனை அடையாளம் காண முடியாததைப் (நடோ நாட்யதரோ) போல (யதா), லட்சியமே இல்லாத ( லக்ஷ்யஸே) முட்டாள்களின் கண்களுக்கு (மூட-த்ருசா) நீ புலப்படுவதில்லை.


ததா பரமஹம்ஸானாம் |
முனீனாம் அமல ஆத்மனாம் ||
பக்தி-யோக-விதானார்தம் |
கதம் பஸ்யேம ஹி ஸ்த்ரிய: ||
तथा परम हंसानां मुनीनाम् अमल आत्मनाम् ।
भक्ति योग विधानार्थं कथं पश्येम हि स्त्रिय: 
தவிர (ததா), கிருஷ்ணா! மனிதனை மறந்தும் 'பகவான்' என்று சொல்லிவிடாத, பரப்பிரம்ம தியானத்திலேயே இருக்கும், வியாசர், பீஷ்மர் போன்ற பரமஹம்சர்கள் (பரமஹம்ஸானாம்) தூய மனத்துடன் (அமல ஆத்மனாம்) பக்தி யோகத்தின் மூலம் (பக்தி-யோக-விதானார்தம்) உன்னையே பகவான் என்று தியானித்து (முனீனாம்சொல்கிறார்கள். 
உலக விஷயங்களே பேசும் எங்களை போன்ற பெண்களால்  (ஹி ஸ்த்ரிய) எப்படி (கதம்)  உன்னை புரிந்து கொள்ள முடியும் (பஸ்யேம)?


க்ருஷ்ணாய வாஸுதேவாய |
தேவ கீ-நந்தனாய ச ||
நந்த-கோப-குமாராய |
கோவிந்தாய நமோ நம: ||
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च ।
नन्द गोप कुमाराय गोविन्दाय नमो नम: ॥
கிருஷ்ணா! 'நீ பகவான்' என்று பரமஹம்சர்கள் சொன்னாலும், என் மனதுக்கு நீ தேவகி மைந்தனாகவே இருக்கிறாய்.
அனைவரையும் நீ கவர்ந்துவிடுவதாலேயே கிருஷ்ணனாக (க்ருஷ்ணாய) உள்ளாய்.
வசுதேவருக்கும், தேவகிக்கும் மகனாக பிறந்த இன்பமே! (வாஸுதேவாய தேவ கீ-நந்தனாய ச) நந்தகோபனின் குமாரனாக வளர்ந்தவனே (நந்த-கோப-குமாராய), விருந்தாவனத்தில் கோவர்த்தன மலையை தூக்கி, அங்கிருந்த நந்தகோபன், யசோதை, கோபால கோபியர்களோடு பசுக்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கோவிந்தா (கோவிந்தாய), உனக்கு என் நமஸ்காரங்கள் (நமோ நம:).

நம: பங்கஜ-நாபாய |
நம: பங்கஜ-மாலினே ||
நம: பங்கஜ-நேத்ராய |
நமஸ்தே பங்கஜாங் க்ரயே ||
नम: पङ्कज नाभाय नम: पङ्कज मालिने ।
नम: पङ्कज नेत्राय नमस्ते पङ्कजाङ्‍ घ्रये ॥
தாமரையைப் போன்ற நாபியை உடைய (பங்கஜ-நாபாய) உனக்கு என் நமஸ்காரங்கள் (நம:),  தாமரைப் மாலை அணிந்து இருக்கும் (பங்கஜ-மாலினே) உனக்கு என் நமஸ்காரங்கள்  (நம:), தாமரையைப் போல் குளிர்ந்த பார்வையை உடைய (பங்கஜ-நேத்ராய) உனக்கு என் நமஸ்காரங்கள்  (நம:),
தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய (பங்கஜாங் க்ரயே) உக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்தே).


யதா ஹ்ருஷீகேச
கலேன தேவகீ |
கம்ஸேன ருத்தா அதி சிரம் சுசார்பிதா ||
விமோசிதா அஹம் ச 
ஸஹ ஆத்மஜா விபோ |
த்வயைவ நாதேன 
முஹுர் விபத்-கணாத் ||
यथा हृषीकेश खलेन देवकी
कंसेन रुद्धा अतिचिरं शुचार्पिता ।
विमोचिता अहं च सह आत्मजा विभो
त्वयैव नाथेन मुहुर् विपद् गणात् ॥
தேவகியை, கொடியவன் (கலேன) கம்சன்,   சிறை பிடித்து (கம்ஸேன ருத்தா ) வெகு காலம் (அதி சிரம்) துன்புறுத்தினான் (சுசார்பிதா). அது போல (யதா) நானும் (அஹம் ), என் பிள்ளைகளும் (ஸஹ ஆத்மஜா) தொடர்ச்சியாக ஆபத்துகளை சந்தித்த போது (முஹுர் விபத்-கணாத்) இந்திரியங்களை ஜெயித்த ஹ்ருஷீகேசா!  பெருமையுடையவனே ! (விபோ),  நீ தானே காவலனாக (த்வயைவ நாதேன) எங்களை ஒவ்வொரு முறையும் காப்பாற்றினாய் (விமோசிதா)!


விஷாத் மஹா க்னே: 
புருஷாத தர்சனாத் |
அஸத்-ஸபாயா 
வன வாஸ-க்ருச்ரத: ||
ம்ருதே ம்ருதே நேக 
மஹாரத: ஸ்த்ரத: |
த்ரௌணி ஸ்த்ரத: ச ஸ்ம 
ஹரே அபிரக்ஷிதா: ||
विषात् महा ग्ने: पुरुषाद दर्शनाद्
असत् सभाया वनवास कृच्छ्रत: ।
मृधे मृधे अनेक महारथ: अस्त्रत:
द्रौणि अस्त्रत: च आस्म हरे अभिरक्षिता: ॥
என் அருமை கிருஷ்ணா (ஹரே) ! பீமனுக்கு விஷம் கொடுத்து (விஷான்), கொலை செய்ய முயன்ற போதும், குடும்பத்தோடு எங்களை அரக்கு மாளிகையில் பெரும் தீ வைத்து (மஹாக்னே:) கொளுத்த முயன்ற போதும், நரமாமிசம் சாப்பிடும் அசுரர்களுடன் சண்டையிட நேர்ந்த (புருஷாத தர்சனாத்) போதும், தர்மத்தை, ஒழுக்கத்தை விட்ட அஸத்துக்கள் நிறைந்த ஹஸ்தினாபுர சபையில் (அஸத்-ஸபாயா) என் மருமகள் திரௌபதியை அவமானப்படுத்த முயன்ற போதும், வன வாச சமயத்தில் (வன வாஸ) துர்வாசர் போன்ற ரிஷியால் எங்களுக்கு ஆபத்து (க்ருச்ரத:) ஏற்பட நேர்ந்த போதும், ஆயுதங்கள் ஏந்திய ஆயிரக்கணக்கான மஹாரதர்கள் (அநேக மஹாரத அஸ்த்ரதோ) குருக்ஷேத்திர போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட முயன்ற போதும், எங்களை கைவிட்டு விடாமல், ஒவ்வொரு முறையும் திரும்ப திரும்ப (ம்ருதே ம்ருதே) எங்களை காப்பாற்றினாயே! அது மட்டுமா! இப்பொழுது, உத்தராவின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை கொலை செய்ய, துரோணரின் புத்ரன் அஸ்வத்தாமா (த்ரௌண்) பிரம்மாஸ்திரத்தை விட்ட போதும் (யஸ்த்ர தஸ்சாஸ்ம) காக்கிறாயே (அபரக்ஷிதா:)!




விபத: ஸந்து தா: சஸ்வத் |
தத்ர தத்ர ஜகத்-குரோ ||
பவதோ தர்சனம் யத் ஸ்யாத் |
அபுன: பவ-தர்சனம் ||
विपद: सन्तु ता: शश्वत् तत्र तत्र जगद्गुरो ।
भवतो दर्शनं यत् स्याद् अपुन: भव-दर्शनम् ॥
கிருஷ்ணா (ஜகத்குரோ)! சந்தோஷமான காலங்களில் தெய்வத்தை மனிதர்கள் நினைப்பதில்லை. அதனால் உன் தரிசனமும் கிடைப்பதில்லை. துக்க சமயங்களில் உன்னை நினைக்கும் பாக்கியம் கிடைக்கிறது. எனக்கு அடிக்கடி (தா: சஸ்வத்) அவ்வப்போது (தத்ர தத்ர) ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கட்டும் (விபத: ஸந்து). ஆபத்து சமயங்களில் (யத் ஸ்யாத்) உன்னை நினைப்பதால், உன்னுடைய தரிசனம் (பவதோ தர்சனம்) எங்களுக்கு கிடைக்கிறது. உன் தரிசனமே (பவ-தர்சனம்) எங்களுக்கு பிறவா (அபுனர் ) நிலையை கொடுத்து விடுமே !
ஜன்ம ஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபி: |
ஏதமான-மத: புமான் ||
நைவ அர்ஹதி அபிதாதும் வை |
த்வாம் அகிஞ்சன-கோசரம் ||
जन्म ऐश्वर्य श्रुत श्रीभि: येधमान मद: पुमान् ।
नैव अर्हति अभिधातुं वै त्वाम् अकिञ्चन गोचरम् ॥ 
கிருஷ்ணா! உலக விஷயங்களில் பற்றற்று இருப்பவர்களுக்கு (அகிஞ்சன) புலப்படுகிறாய் (கோசரம்). 
தன் பிறப்பை கண்டும், தன் செல்வத்தை கண்டும், தன் அறிவை கண்டும், தன் அழகை கண்டும் (ஜன்ம ஐஸ்வர்ய ஸ்ருத ஸ்ரீபி:) கர்வம் (மத:) அதிகரித்து போன (ஏதமான) மனிதர்கள் (புமான்), உன்னை (த்வாம்) புரிந்துகொள்ளும் (அபிதாதும்) தகுதியை (அர்ஹதி) நிச்சயமாக (வை) அடைவது இல்லை (நைவ).



நம கிஞ்சன-வித்தாய |
நிவ்ருத்த-குண-வ்ருத்தயே ||
ஆத்மா ராமாய சாந்தாய |
கைவல்ய-பதயே நம: ||
नम अकिञ्चन वित्ताय निवृत्त गुण वृत्तये ।
आत्मा रामाय शान्ताय कैवल्य पतये नम: ॥
குசேலன் போன்ற ஏழை பக்தனுக்கு சொத்தாக (அகிஞ்சன வித்தாய) இருக்கும் உனக்கு என் நமஸ்காரங்கள். லாபம் நஷ்டம், சுகம் துக்கம் போன்ற குண விருத்திகள் (குண-வ்ருத்தயே) அற்றவனே (நிவ்ருத்த), எப்பொழுதும் ஆத்ம திருப்தியுடன் இருப்பவனே (ஆத்மா ராமாய)!சாந்தமாக இருப்பவனே (சாந்தாய)! கைவல்யம் என்ற மோக்ஷத்திற்கு தலைவனே (பதயே), உனக்கு என் நமஸ்காரங்கள்.


மன்யே த்வாம் காலம் ஈசானம் |
அனாதி-நிதனம் விபும் ||
ஸமம் சரந்தம் ஸர்வத்ர |
பூதானாம் யன் மித: கலி: ||
मन्ये त्वां कालम् ईशानम् अनादि निधनं विभुम् ।
समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥
நீ காலத்துக்கு ஈஸ்வரன் (த்வாம் காலம் ஈசானம்) என்று மனம் (மன்யே) சொல்கிறது. அநாதி காலமாக (அனாதி) இந்த உலகங்களை (விபும்) நீயே தாங்குகிறாய் (நிதனம் ) என்று அறிகிறேன். நீ எல்லோரிடத்திலும் (ஸர்வத்ர) சமமாகவே பழகுகிறாய் (ஸமம் சரந்தம்).
ஜீவராசிகளுக்கு (பூதானாம்) இடையிலுள்ள வேறுபாடுகளுக்கு (கலி) சமூக தொடர்புகளே காரணம் (யன் மித:).

ந வேத கஸ்சித் |
பகவம்ஸ் சிகீர்ஷிதம் ||
தவேஹ மானஸ்ய |
ந்ருணாம் விடம்பனம் ||
न वेद कश्चिद् भगवंस् चिकीर्षितं
तवेह मानस्य नृणां विडम्बनम् ।
பகவானே (பகவம்ஸ்) ! உன் லீலையை (சிகீர்ஷிதம்) யாரும் துளியும் (கஸ்சித்) அறிந்து கொள்ள முடியாது (ந வேத). நீ மனித ரூபத்தில் (தவேஹ மானஸ்ய) இருப்பது ஒரு காட்சியே (ந்ருணாம் விடம்பனம்) என்று அறிகிறேன்.

ந யஸ்ய கஸ்சித் |
தயிதோஸ்தி கர்ஹிசித் ||
த்வேஷ்யஸ் ச யஸ்மின் |
விஷமா மதிர் ந்ருணாம் ||
न यस्य कश्चिद् तयितोऽस्ति कर्हिचिद्
द्वेष्यश्च यस्मिन् विषमा मतिर्नृणाम् ॥
நீ யாருக்கும் (யஸ்ய) எப்பொழுதும் (கர்ஹிசித்) துளியும்(கஸ்சித்) நண்பனும் (தயிதோஸ்தி) இல்லை (). நீ யாருக்கும் விரோதியாகவும் (த்வேஷ்யஸ் ) இருப்பது (யஸ்மின்) இல்லை. தன் புத்தி (மதிர்) கெட்டு இருப்பதால், விஷமிகள் (ந்ருணாம்) உன்னை பாகுபாடு (விஷமா) உடையவன்  என்று சொல்கின்றனர்.


ஜன்ம கர்ம ச விஸ்வாத்மன் |
அஜஸ்ய: கர்து: ஆத்மன: ||
திர்யக்-ந்ரு ருஷிஷு யாதஹ்ஸு |
தத் அத்யந்த விடம்பனம் ||
जन्म कर्म च विश्वात्मन् अजस्य अकर्तु: आत्मन: ।
तिर्यङ्‍ नृ रुषिषु याद:सु तद् अत्यन्त विडम्बनम् ॥
உலகத்துக்கு ஆத்மாவாக இருப்பவனே (விஸ்வாத்மன்)! நீ செய்ய வேண்டியது ஒன்றுமில்லை (அகர்துர்) என்ற போதிலும், செயல்படுகிறாய் (கர்ம ச), நீ பிறப்பற்றவனாகவும் (அஜஸ்ய), ஆத்மாவாகவும் (ஆத்மன) இருப்பினும், பிறப்பை (ஜன்ம) ஏற்கிறாய். 
மிருகமாகவும் (திர்யன்), மனிதனாகவும் (ந்ரு), முனியாகவும் (ருஷிஷு) நீரினமாகவும் (யாதஹ்ஸு) நீ செய்த  அந்த (தத்) ஆச்சர்யமான (அத்யந்த) அவதாரங்கள் அனைத்துமே ஒரு வேஷம் (விடம்பனம்) என்று அறிகிறேன்.

கோபி ஆததே த்வயி க்ருதாகஸி தாம தாவத் |
யா தே தச ஸ்ரு-கலில
ஞ்சன-ஸம்ப்ரம க்ஷம் ||
வக்த்ரம் நினீய பய 
பாவனயா ஸ்திதஸ்ய | 
ஸா மாம் விமோஹயதி 
பீ: அபி யத் பிபேதி ||
गोपि आददे त्वयि कृतागसि दाम तावद्
या ते दश अश्रु कलिल अञ्जन सम्भ्रम अक्षम् ।
वक्त्रं निनीय भय भावनया स्थितस्य
सा मां विमोहयति भी: अपि यद् बिभेति ॥
குழந்தை கண்ணனாக நீ, துறுதுறுவென்று சேட்டை செய்ய (க்ருதாகஸி),  தாயான யசோதா (கோபி), அந்த சமயத்தில் (தாவத்) உன்னை (த்வயி) உரலில் கட்டிபோட்டுவிடலாம் என்று  ஒரு கயிறை (தாம) எடுத்து வந்தாள் (ஆததே). அந்த (யா) சூழ்நிலையில் (தச), 'அம்மா தன்னை கட்டிப்போட்டு விடுவாளே' என்று, பயத்தை முகத்தில் வரவழைத்துக்கொண்டு  (பய பாவனயா) கண்ணீர் பெருகி வழிய (அஸ்ரு-கலில). உன்னுடைய (தே) மை (அஞ்சன) தடவியிருந்த கண்களிலிருந்து (அக்ஷம்) கண் மையை நனைத்துக்கொண்டு (ஸம்ப்ரம) முகத்தில் வழிந்தது (வக்த்ரம் நினீய). பயமே உன்னை கண்டு அஞ்சும். நீ யசோதையிடம் செய்த அந்த (ஸா) லீலை (ஸ்திதஸ்ய) என்னை (மாம்) மோஹிக்க செய்கிறது (விமோஹயதி). பயமே இல்லாதவன் (பீ: அபி) யாருக்கு (யத்) பயப்படுவான் (பிபேதி).


கேசித் ஆஹு: அஜம் ஜாதம் |
புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே ||
யதோ: ப்ரியஸ்ய அன்வவாயே |
மலயஸ்யேவ சந்தனம் ||
केचिद् आहु: अजं जातं पुण्य श्लोकस्य कीर्तये ।
यदो: प्रियस्य अन्ववाये मलयस्येव चन्दनम् ॥
பிறப்பற்ற பரமாத்மாகிய (அஜம்) நீ, புண்ணிய ஆத்மாக்களின் பெருமையை உலகுக்கு காட்ட (புண்ய-ஸ்லோகஸ்ய கீர்தயே), பிறக்கிறாய் (ஜாதம்) என்று சிலர் சொல்கிறார்கள் (கேசித் ஆஹுர்). உங்களுடைய பிரியமான பக்தர்களில் ஒருவரான யது மகாராஜனின்  (யதோ) குலத்தில் (அன்வவாயே) அவதரித்து, "நான் யது குலம்" என்று ஆசையோடு (ப்ரியஸ்ய) சொல்லிக்கொள்கிறாய். மலைகளில் சந்தன மரங்கள் (மலயஸ்யேவ சந்தனம்) தோன்றுவதைப் போலவே, யது குலத்தையே (யாதவ) மணக்கச்செய்கிறாய் 




அபரே வஸுதேவஸ்ய |
தேவக்யாம் யாசிதோ ப்யகாத் ||
அஜஸ் த்வம் அஸ்ய க்ஷேமாய |
வதாய ச ஸுர-த்விஷாம் ||
अपरे वसुदेवस्य देवक्यां याचितो अभ्यगात् ।
अजस्त्वम् अस्य क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥
தேவகியும் (தேவக்யாம்) வசுதேவரும் (வஸுதேவஸ்ய) பிரார்த்தித்தால் (யாசிதோ) பரவாசுதேவனான நீ அவர்களுக்கு பிறந்தாய் (அப்யகாத்) என்று சொல்கிறார்கள் (அபரே). பிறப்பற்ற நீ (அஜஸ் த்வம்) அசுர குணம் கொண்டவர்களை  அழித்து (வதாய ச ஸுர-த்விஷாம்), நல்லவர்களை வாழ வைக்க (அஸ்ய க்ஷேமாய) அவதரித்து உள்ளாய் என்று அறிகிறேன்.


பார அவதாரணாய அன்யே |
புவோ நாவ இவ உததௌ ||
ஸீதந்த்யா பூரி-பாரேண |
ஜாதோ ஹி ஆத்ம புவ-ர்தித: ||
भार अवतारणाया अन्ये भुवो नाव इव उदधौ ।
सीदन्त्या भूरि भारेण जातो हि आत्म भुव-अर्थित: ॥
கடலில் (உததௌ) அதிக சுமையை (பார) தாங்கும் படகை போல (நாவ இவ), அசுர குணம் கொண்டவர்களால் (அன்யே) இந்த உலகம் (புவோ) நிரம்பி கிடக்க, அசுரர்களின் சுமையால் (பாரேண) பூமாதேவி மிகவும் (பூரி) கலங்கினாள் (ஸீதந்த்யா). பூமாதேவியின் கஷ்டத்தை போக்க, பிரம்மாவை முன்னிட்டு பூமாதேவி உங்களிடம் பிரார்த்திக்க (ஆத்ம-புவா அர்தித:), பூமி பாரத்தை குறைக்க (பார அவதாரணாய), அசுர குணம் கொண்டவர்களை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டவே (ஹி), நீ அவதரித்து இருக்கிறாய் (ஜாதோ) என்று அறிகிறேன்.


பவே ஸ்மின் க்லிஸ்யமானானாம் |
அவித்யா-காம-கர்மபி: ||
ஸ்ரவண-ஸ்மரண ர்ஹாணி |
கரிஷ்யன் இதி கேசன ||
भवे अस्मिन् क्लिश्य मानानाम् अविद्या काम कर्मभि: ।
श्रवण स्मरण अर्हाणि करिष्यन् इति केचन ॥
இந்த உலகத்தில் பிறந்தவர்கள் (பவே அஸ்மின்), உடம்பே நான் என்று நினைத்தும், காமத்தாலும், கர்மத்தாலும் (அவித்யா காம கர்மபி) பலவித துக்கங்களை (க்லிஸ்யமானானாம்) எதிர்கொள்கின்றனர்.
உலகத்தில் ஏற்படும் துன்பங்களை கண்டு வெறுத்து, உன்னை நாடும் இப்படி சில (இதி கேசன) புண்ணிய ஆதம்மாக்களுக்கு  விஷேசமாக பேரானந்தம் கொடுக்க, நீ அவதாரம் எடுக்கிறாய் (கரிஷ்யன்) என்று அறிகிறேன். 
அவர்கள் உன்னை பற்றி கேட்க (ஸ்ரவண), சரித்திரம் அமைத்துக்கொள்கிறாய்.
அவர்கள் உன்னை சரித்திரம் கேட்டு, உன்னையே நினைத்து கொண்டு (ஸ்மரணா) இருக்க, அவதாரம் தரிக்கிறாய். 
அவர்கள் உன்னை பூஜிக்க (அர்ஹாணி), அழகான ரூபம் தரித்துக்கொள்கிறாய் என்று அறிகிறேன்.


ஸ்ருண்வந்தி காயந்தி 
க்ருணந்தி அபிக்ஷ்ணச: |
ஸ்மரந்தி நந்தந்தி 
தவேஹிதம் ஜனா: ||
श‍ृण्वन्ति गायन्ति गृणन्ति अभीक्ष्णश:
स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
எவர்களுக்கு உன் சம்மந்தமாக பேசினால் கேட்கவும் (ஸ்ருண்வந்தி),
எவர்கள் தனக்கு தானே உன் நாமத்தை பாடிக்கொண்டும் (காயந்தி),
எவர்கள் எப்பொழுதும் உன்னை ஏற்றுக்கொண்டும் (க்ருணந்தி), உன்னையே நினைத்துக்கொண்டும், களித்துக்கொண்டும் (ஸ்மரந்தி நந்தந்தி) எப்பொழுதும் (அபிக்ஷ்ணச) இருப்பார்களோ! அந்த ஜனங்கள் பேரானந்தம் பெறுகிறார்கள் (தவேஹிதம் ஜனா).

த ஏவ பஸ்யந்தி 
அசிரேண தாவகம் |
பவ-ப்ரவாஹ
உபரமம் பதாம்புஜம் ||
त एव पश्यन्ति अचिरेण तावकं
भव प्रवाह उपरमं पदाम्बुजम् ॥
உன்னையே லட்சியமாக பார்த்துக்கொண்டு (ஏவ பஸ்யந்தி) வாழும் இந்த பாகவத உத்தமர்கள் (), வெகு சீக்கிரத்திலேயே (அசிரேண)
இந்த சம்சார சூழலில் (பவ-ப்ரவாஹ) இருந்து விடுபட்டு (உபரமம்) உன் (தாவகம்) பாத கமலத்தை (பதாம்புஜம்) அடைந்து விடுகின்றனர்.

அபி அத்ய ந: த்வம் 
ஸ்வ-க்ருதேஹித ப்ரபோ |
ஜிஹாஸஸி ஸ்வித் 
ஸுஹ்ருத: அநுஜீவின: ||
अपि अद्य न: त्वं स्व-कृतेहित प्रभो
जिहाससि स्वित् सुहृद: अनुजीविन: ।
நீ (த்வம்) இப்பொழுது (அபி) பாண்டவர்களுக்கு தான் (நஸ்) செய்யவேண்டிய கடமைகள் (ஸ்வ-க்ருதேஹித) இன்றோடு (அத்ய) முடிந்து விட்டது என்று நினைத்து, உன் இதயம் கோணாமல் (ஸுஹ்ருத) உன் கருணையை எதிர்பார்த்தே வாழும் (அநுஜீவின) எங்களை விட்டு கிளம்பி (ஜிஹாஸஸி) செல்ல முடிவெடுத்து விட்டாயே (ஸ்வித்)!
யேஷாம் ந ச அன்யத் 
பவத: பதாம்புஜாத் |
பராயணம் ராஜஸு 
யோஜித அம்ஹஸாம் ||
येषां न च अन्यद् भवत: पदाम्बुजात्
परायणं राजसु योजित अम्हसाम् ॥
எந்த ஆதரவும் இல்லாமல் இருந்த எங்களுக்கு  (யேஷாம் ந ச அன்யத்). பல அரசர்கள் (ராஜஸு) எங்களை எதிரியாக (அம்ஹஸாம்) நினைத்து இருக்கும் (யோஜித) சமயத்தில். உன் திருவடி (பதாம்புஜாத்) நிழல் கிடைத்தது. (பவத: ). உன்னை சரணடைந்தோம். (பராயணம்) 

கே வயம் நாம-ரூபாப்யாம் |
யதுபி: ஸஹ பாண்டவா: ||
பவதோ தர்சனம் யர்ஹி |
ஹ்ருஷீகாணாம் இவ சிது: ||
के वयं नाम रूपाभ्यां यदुभि: सह पाण्डवा: ।
भवतो अदर्शनं यर्हि हृषीकाणाम् इव ईशितु: ॥
கிருஷ்ணா! எப்படி (இவ) இந்திரியங்களை (ஹ்ருஷீகாணாம்) உள்ளே இருந்து ஈஸ்வரன் இயக்குகிறாரோ (ஈசிது:), அது போல (யர்ஹி), நீ இருப்பதால், நாம, ரூபங்களோடு (நாம-ரூபாப்யாம்) யாதவர்கள் என்றும், பாண்டவர்கள் (யதுபி: ஸஹ பாண்டவா) என்றும் சொல்லிக்கொள்கிறோம். நீ இல்லாமல் போனால்? (பவதோ அதர்சனம்) நாங்கள் யார்? (கே வயம்). பாண்டவர்கள் பெருமையாக இருப்பதே நீ ஒருவன் இருப்பதால் தானே!  ஆதலால் நீ எங்களை விட்டு செல்லக்கூடாது.!

ந இயம் சோபிஷ்யதே தத்ர 
தா தானீம் கதாதர |
த்வத்-பதை: அங்கிதா பாதி 
ஸ்வ-லக்ஷண-விலக்ஷிதை: ||
न इयं शोभिष्यते तत्र यदा दानीं गदाधर ।
त्वत्पदै: अङ्किता भाति स्वलक्षण विलक्षितै: ॥
நீ சென்று விட்டால், அன்றே (தத்ர) இந்த தேசம் அதன் பொலிவை (இயம் சோபிஷ்யதே) இழந்து விடும் (). 
இப்பொழுது இந்த (யதேதானீம்) தேசத்தில் (இயம்) இருக்கும் பொலிவு  (சோபிஷ்யதே), கதாதரா! நீ இங்கு இருப்பதால் தானே! 
உன் திருவடி பதிந்த சுவடுகள் (த்வத்-பதைர் அங்கிதா) தானே இந்த தேசத்தை அழகாகவும் (ஸ்வ-லக்ஷண), மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தி காட்டி (விலக்ஷிதை) பொலிவடைய (பாதி) செய்கிறது.

இமே ஜன-பதா: ஸ்வ்ருத்தா: |
ஸுபக்வ ஒளஷதி வீருத: ||
வன அத்ரி- நதி உதன்வன்தோ |
ஹி ஏதந்தே தவ வீக்ஷிதை: ||
इमे जन पदा: स्वृद्धा: सुपक्‍व औषधि वीरुध: ।
वन अद्रि नदि उदन्वन्तो हि  येधन्ते तव वीक्षितै: ॥
கிருஷ்ணா! இந்த நகரங்களில் (இமே) வாழும் ஜனங்கள் (ஜன-பதா:) செழித்து (ஸ்வ்ருத்தா) இருக்கிறார்கள். மூலிகைகளும் காய்கனிகளை (ஒளஷதி வீருத) கொட்டிக்கிடக்கிறது (ஸுபக்வ). அழகான வனங்களும், மலைகளும் (வன அத்ரி), நதிகளும், கடலும் (நதி உதன்வன்தோ) நிச்சயமாக (ஹி) எங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது (ஏதந்தே). இதற்கெல்லாம் காரணம் உன் கடாக்ஷமே (தவ விக்ஷிதை:) என்று அறிவேன்.

அத விஸ்வேச விஸ்வாத்மன்
விஸ்வ-மூர்தே ஸ்வகேஷு  மே 
|
ஸ்னேஹ-பாசம் இமம் சிந்தி
த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு ||
अथ विश्वेश विश्वात्मन् विश्वमूर्ते स्वकेषु मे ।
स्‍नेह पाशम् इमं छिन्धि द‍ृढं पाण्डुषु वृष्णिषु ॥
நீ இருப்பதால் தான் உலகம் பொலிவு போல இருக்கிறது என்பதால் (அத), உலகத்துக்கு ஈஸ்வரனே (விஸ்வேச), உலகத்துக்கு உயிராக இருப்பவனே! (விஸ்வாத்மன்), உலகமாகவே இருப்பவனே! (விஸ்வ-மூர்தே), எனக்கு (மே) பிரியப்பட்ட (ஸ்வகேஷு) பாண்டு மைந்தர்கள் (பாண்டுஷு), என் தந்தைவழியில் உள்ள சொந்தங்கள் (வ்ருஷ்ணிஷு) மேல் எனக்கு உள்ள இந்த (இமம்) திடமான (த்ருடம்) அன்பையும் பாசத்தையும் (ஸ்னேஹ-பாசம்) அறுத்து விடு (சிந்தி). பந்தத்தில் இருந்து எனக்கு மோக்ஷம் கிடைக்க அனுக்கிரஹம் செய், கிருஷ்ணா! 


த்வயி மே அநன்ய விஷயா
மதிர் மதுபதே அஸக்ருத் |
ரதிம் உத்வஹதாத் அத்தா
கங்கா இவ ஒளகம் உதன்வதி ||
त्वयि मे अनन्य विषया मतिर् मधुपते असकृत् ।
रतिम् उद्वहताद् अद्धा गङ्गा इव  औघम् उदन्वति ॥
கிருஷ்ணா! மதுபதே! கங்கை நதி (கங்கா) எப்படி (இவ) நேராக (அத்தா) கடலை நோக்கி (உதன்வதி) செல்கிறதோ (ஒளகம்), அது போல, நானும் (மே) உன்னையே (த்வயி) லட்சியமாக கொண்டு, வேறு சிந்தனை எதுவும் எழாத (அநன்ய விஷயா) புத்தியுடன் (மதிர்), எப்பொழுதும்(அஸக்ருத்) உன்னை பற்றிய சிந்தனையே, ஆனந்தமே  (ரதிம்) என் மனதில் பொங்கி (உத்வஹதாத்) ஓடட்டும்.

ஸ்ரீ-க்ருஷ்ண க்ருஷ்ண-ஸக 
வ்ருஷ்ணி-ருஷப 
அவனி-த்ருக் |
ராஜன்ய-வம்ச தஹன
அனபவர்க-வீர்ய ||
श्रीकृष्ण कृष्ण-सख वृष्णि रुषभ अवनि ध्रुग्
राजन्य वंश दहन अनपवर्ग वीर्य ।
ஹே கிருஷ்ணா! பாஞ்சாலியின் சகோதரனே! (க்ருஷ்ண-ஸக) வ்ருஷ்ணி குலத்தில் தோன்றிய காளையே! (வ்ருஷ்ணி-ருஷப
இந்த உலகத்தை அழிக்க (அவனி-த்ருக்) நினைக்கும் ராஜ வம்சங்களை (ராஜன்ய-வம்ச) அழிக்கிறாய் (தஹன). பேரழிவு நிகழ்த்தப்பட்டாலும், தர்மத்துக்காக செய்வதால், புகழ் (வீர்ய) குறையாமல் (அனபவர்க) இருக்கிறாய்.

கோவிந்த கோ த்விஜ ஸுர | 
அர்தி-ஹர அவதார |
யோகேஸ்வர அகில குரோ| 
பகவன் நமஸ்தே ||
गोविन्द गो द्विज सुर अर्ति हर अवतार
योगेश्वर अखिल गुरो भगवन् नमस्ते ॥
கோவர்தன மலையை தரித்த கோவிந்தா
பசுக்களுக்கும் (கோ), ப்ரம்மத்தையே தியானிக்கும் ப்ராம்மணர்களுக்கும் (த்விஜ), உன் பக்தர்களுக்கும் (ஸுர) ஏற்படும் துன்பத்தை போக்கவே (அர்தி-ஹர) நீ அவதாரம் (அவதார) செய்கிறாய் என்று அறிகிறேன்.
அஷ்ட ஸித்திகள் உடைய யோகேஸ்வரா! அகில உலகத்துக்கும் குருவாக உபதேசம் செய்பவனே (அகில குரோ) ! பகவானே! உனக்கு என் நமஸ்காரங்கள் (நமஸ்தே).

ஸூத உவாச (सूत उवाच)
(ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
ப்ருதயா இத்தம் கல-பதை:
பரிணூத அகில உதய: 
|
மந்தம் ஜஹாஸ வைகுண்டோ
மோஹயன் இவ மாயயா ||
पृथया इत्थं कलपदै: परिणूत अखिल उदय: ।
मन्दं जहास वैकुण्ठो मोहयन् इव मायया ॥
இப்படி பொறுக்கியெடுத்த அற்புதமான பதங்களை (இத்தம் கல-பதை:) கொண்டு ப்ரீதா என்ற குந்தி தேவி (ப்ருதயா) அகில உலகமும் புகழும் (அகில உதய:) ஸ்ரீகிருஷ்ணனை 'பகவான்' என்று துதித்து (பரிணூத) நிற்க, தன் அன்பான அத்தை குந்தி தேவியை பார்த்து புன்முறுவல் (மந்தம் ஜஹாஸ) செய்தான் வைகுண்டநாதன் (வைகுண்டோ). இத்தனை நேரம் பகவான் என்று துதி செய்தும், பகவானின் சிறு மந்தஹாசம் "நம் அன்பு கண்ணன் தானே இவன்" என்று மயக்கி விட்டதாம் (மோஹயன்) அங்கு இருப்பவர்களுக்கு.
அவனுடைய புன்முறுவல் பெரும் மாயம் செய்கிறது (இவ மாயயா).

தாம் பாடம் இதி உபாமந்த்ரிய 
ப்ரவிஸ்ய கஜஸாஹ்வயம் |
ஸ்த்ரிய: ச ஸ்வ-புரம் யாஸ்யன் 
ப்ரேம்ணா ராஜ்னா நிவாரித: ||
तां बाढम् इथी उपामन्‍त्र्य प्रविश्य गज साह्वयम् ।
स्त्रिय: च स्वपुरं यास्यन् प्रेम्णा राज्ञा निवारित: ॥
இப்படி (இதி) குந்தி தேவியின் பிரார்த்தனையை (தாம்) ஏற்றாலும் (பாடம்) துவாரகைக்கு புறப்பட தயாராகி இருந்த ஸ்ரீ கிருஷ்ணர். மற்றவர்களிடமும் சொல்லி (உபாமந்த்ரிய) கொண்டு கிளம்ப ஹஸ்தினாபுர (கஜஸாஹ்வயம்) அரண்மனைகளுக்கு சென்று (ப்ரவிஸ்ய) அங்கு இருந்த பிற ராஜ ஸ்த்ரீகளிடமும் (ஸ்த்ரியஸ் ச) தன் இருப்பிடம் செல்வதற்கு அனுமதி கேட்டார் (ஸ்வ-புரம் யாஸ்யன்).
'ஸ்ரீ கிருஷ்ணர் ஹஸ்தினாபுரம் விட்டு செல்லக்கூடாது' என்று யுதிஷ்டிர ராஜன் (ராஜ்னா) தன் அன்பால் (ப்ரேம்ணா) பிரார்த்திக்க, எதற்கும் கட்டுப்படாத பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அன்புக்கு கட்டுப்பட்டு விட்டார் (நிவாரித).


வ்யாச ஆத்யை: ஈஸ்வர இஹ ஞானைஹி
க்ருஷ்ணேன அத்புத கர்மணா 
|
ப்ரபோதித அபி இதிஹாஸை:
ந அபுத்யத சுசார்பித: ||
व्यास आद्यै: ईश्वर इह ज्ञानै: कृष्णेन अद्भुत कर्मणा ।
प्रबोधित अपि इतिहासै: न अबुध्यत शुचार्पित: ॥
வியாசர் தலைமையில் (வ்யாச ஆத்யைர்) அங்கு குழுமி இருந்த, ஈஸ்வரனுக்கு நிகரான ஞானிகள் இருந்தும் (ஈஸ்வர இஹ ஞானைஹி),
அத்புதமான கர்மயோகியாக (அத்புத கர்மணா) தானே வாழ்ந்து காட்டிய சாஷாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே (க்ருஷ்ணேன), இப்படி நடந்து முடிந்த (அபி இதிஹாஸை:) பாரத போரை பற்றி பேசி ஞானத்தை உபதேசித்து சமாதானம் (ப்ரபோதித) செய்ய முயற்சித்தும்,   
சமாதானம் அடையமுடியாத (ந அபுத்யத) பெரும் துக்கத்தை அடைந்து (சுசார்பித) இருந்தார் யுதிஷ்டிர மகாராஜன்.

ஆஹ ராஜா தர்ம ஸுத:
சிந்தயன் ஸுஹ்ருதாம் வதம் |
ப்ராக்ருதேன ஆத்மனா விப்ரா:
ஸ்நேஹ-மோஹ-வசம் கத: ||
आह राजा धर्म सुत: चिन्तयन् सुहृदां वधम् ।
प्राकृतेन आत्मना विप्रा: स्‍नेह मोह वशं गत: ॥
ஸ்வபாவத்தில் ஆத்மாவை (ப்ராக்ருதேன ஆத்மனா) பொறுத்தவரை பிராம்மண *ஸாது லட்சணம் (விப்ரா) கொண்ட தர்மபுத்திரனான (தர்ம ஸுத:) யுதிஷ்டிர மகாராஜன் (ராஜா),
பாரத போரில் வேண்டப்பட்டவர்கள் (ஸுஹ்ருதாம்) எல்லோரும் கொல்லப்பட்டு (வதம்) விட்டனரே! என்று சிந்தித்து சிந்தித்து (சிந்தயன்) பெரும் துக்கத்தினால் இப்படி கதறி புலம்ப ஆரம்பித்தார் (ஆஹ).
அஹோ மே பஸ்யத அக்ஞானம்
ஹ்ருதி ரூடம் துராத்மன: 
|
பாரக்யஸ்ய இவ தேஹஸ்ய
பஹ்வ்யோ மே அக்ஷௌஹிணி ஹதா: ||
अहो मे पश्यत अज्ञानं हृदि रूढं दुरात्मन: ।
पारक् यस्य इव देहस्य बह्‍व्यो मे अक्षौहिणी: हता: ॥
ஐயோ (அஹோ)! எப்படிப்பட்ட அறிவில்லாத காரியம் (அக்ஞானம்) செய்துவிட்டேன் என்று என்னை பாருங்கள் (மே பஸ்யத). என் இதயம் (ஹ்ருதி) முழுவதும் பாவ எண்ணமே (துராத்மன) நிறைந்துள்ளது (ரூடம்).
பிறருக்கு உதவியாக (பாரக்யஸ்ய) இருப்பதற்காகவே கொடுக்கப்பட்ட இந்த தேகத்தை (இவ தேஹஸ்ய) கொண்டு, எண்ணிலடங்கா போர் வீரர்கள் (பஹ்வ்யோ) கொண்ட அக்ஷௌஹிணி சேனைகளை நான் (மே) கொன்று விட்டேன் (ஹதா:)!


பால த்விஜ ஸுஹ்ருன் மித்ர
பித்ரு ப்ராத்ரு குரு த்ருஹ: |
ந மே ஸ்யான் நிரயான் மோக்ஷோ
ஹ்அபி வர்ஷா யுதாயுதை: ||
बाल द्विज सुहृन् मित्र पितृ भ्रातृ गुरु द्रुह: ।
न मे स्यान् निरयान् मोक्षो ह्यपि वर्षा युतायुतै: ॥
இந்த போரில், புத்ரர்களையும் (பால), ப்ராம்மணர்களையும் (த்விஜ), வேண்டப்பட்டவர்களையும் (ஸுஹ்ருன்), நண்பர்களையும் (மித்ர), தகப்பன் (பித்ரு) ஸ்தானத்தில் இருப்பவர்களையும், சகோதரர்களையும் (ப்ராத்ரு), கல்வி போதித்த குருவையும் (குரு) கொன்று (த்ருஹ) விட்ட எனக்கு (மே), நிச்சயமாக (ஹ்அபி) விடுதலையே (மோக்ஷோ) இல்லாத () வருடங்கள் குறையாத (வர்ஷா யுதாயுதை:) நரகமே (நிரயான்) கிடைக்கப்போகிறது (ஸ்யான்).




ந ஏன: ராஜ்ன: ப்ரஜா-பர்துர்
தர்ம-யுத்தே வதோ த்விஷாம் 
|
இதி மே ந து போதாய
கல்பதே சாஸனம் வச: ||
न येनो राज्ञ: प्रजा: भर्तु: धर्मयुद्धे वधो द्विषाम् ।
इति मे न तु बोधाय कल्पते शासनं वच: ॥
அரசாங்க சட்டப்படி (கல்பதே சாஸனம்) மக்களை (ப்ரஜா) பாதுக்காக்க (பர்துர்) அரசன் (ராப்ய:) தர்ம யுத்தம் (தர்ம-யுத்தே) செய்து எதிரிகளை (த்விஷாம்) கொன்றாலும் (வதோ), அவனுக்கு பாவம் (இன:) கிடையாது () என்று சொன்னாலும் (வச:), இந்த (இதி) சமாதானத்தை (போதாய) என் (மே) மனம் சிறிதும் (ந து) ஏற்க மறுக்கிறது.

ஸ்த்ரீணாம் மத் ஹத பந்தூனாம்
த்ரோஹோ யோ அஸௌ இஹ உத்தித: |
கர்மபிர் கிருஹமேதீயை:
நாஹம் கல்போ வ்யபோஹிதும் ||
स्त्रीणां मद् हथ बन्धूनां द्रोहो यो असौ इह उत्थित: ।
कर्मभि: गृहमेधीयै: नाहं कल्पो व्यपोहितुम् ॥
இந்த தர்ம யுத்தத்தில் உறவினர்களான (பந்தூனாம்) பல பெண்களின் (ஸ்த்ரீணாம்) கணவன்மார்களை கொன்ற (ஹத) பாபம் (த்ரோஹோ) அவை அனைத்தும் (யோ அஸௌ இஹ) என் (மத்) மீது சேர்ந்து (உத்தித) இருக்கிறது.
நிலத்தின் மீது ஆசை கொண்ட (கிருஹமேதீயை) நான், என்ன பரிகாரியங்கள் (யாகங்கள்) (கர்மபிர்), செய்தாலும், எந்த காலத்திலும் (கல்போ) இந்த பெண்களுக்கு பதில் (வ்யபோஹிதும்) சொல்ல முடியாது எனக்கு (நாஹம்).

யதா பங்கேன பங்க அம்ப:
ஸுரயா வா ஸுர அக்ருதம் |
பூத-ஹத்யாம் தத ஏவ ஏகாம்
ந யஜ்ஞைர் மார்ஷ்டும் அர்ஹதி ||
यथा पङ्केन पङ्क अम्भ: सुरया वा सुर अकृतम् ।
भूतहत्यां तथैव येकां न यज्ञै: मार्ष्टुम् अर्हति ॥
சேற்றில் உள்ள நீரை (பங்க அம்ப:), சேற்றை வைத்தே (பங்கேன) எப்பொழுதும் (யதா) சுத்தம் செய்ய முடியாது. 
சுரா பானத்தில் உள்ள பாபத்தை (ஸுர அக்ருதம்), சுராபானத்தை வைத்தே (ஸுரயா வா) போக்க முடியாது.
அது போல (தத
உயிர்களை கொன்ற (பூத-ஹத்யாம்) பாபத்தை போக்க, அஸ்வமேத யாகம் (யஜ்ஞைர்) செய்தாலும், நிச்சயமாக (ஏவ) ஒருவனால் (ஏகாம்) நியாயமான (அர்ஹதி) பதில் (மார்ஷ்டும்) செய்ய முடியாது ().

இவ்வாறு யுதிஷ்டிர மகாராஜன், ஸ்ரீகிருஷ்ணர் சமாதானம் செய்தும், தாளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்து இருந்தார். 

இவருக்கு 'ராஜ தர்மத்தை போதிக்க பீஷ்மரே தகுதியானவர்' என்று அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், போர் களத்தில், ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்று, பிறகு ப்ராணனை விடலாம் என்று காத்து இருக்கும் பீஷ்மர் இருக்கும் இடத்துக்கு யுதிஷ்டிர மஹாராஜனை கூட்டி சென்றார். 
பீஷ்மர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு ராஜ தர்மத்தை உபதேசித்தார்.