Followers

Search Here...

Saturday 27 May 2023

திவசத்தில் யார் யாரை சாப்பிட அழைக்கலாம்? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

திவசத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்களை, மேலும் உறவினர்களையும் அழைத்து உணவு கொடுக்கலாம். ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

प्रक्षाल्य हस्ता वाचाम्य

ज्ञाति प्रायं प्रकल्पयेत् ।

ज्ञातिभ्यः सत्कृतं दत्त्वा

बान्धवान् अपि भोजयेत् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஸ்ரார்த்தம் செய்தவர், பித்ரு ரூபமாக பிராம்மணர்கள் சாப்பிட்டு சென்ற பிறகு, கை கால் அலம்பி கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

பிறகு இரத்த சம்பந்த பங்காளிகள் (ஞாதி) அனைவருக்கும் உபசரித்து உணவு கொடுக்க வேண்டும். மற்ற உறவினர் அனைவரையும் (பாந்தவான்) அப்படியே உபசரித்து, உணவு அளிக்க வேண்டும்

ஆண் குழந்தை பெற வழி என்ன? பெண் குழந்தை பெற வழி என்ன? அலியை பெறுவது எப்படி? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி...

ஆண் குழந்தை பெற வழி என்ன? 

பெண் குழந்தை பெற வழி என்ன?

அலியை பெறுவது எப்படி?

இரட்டை குழந்தைகளை பெறுவது எப்படி?

ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.

அறிவோம் மனு ஸ்மிருதி...


ऋतुकाल अभिगामी स्यात् 

स्व-दार निरतः सदा ।

पर्ववर्जं व्रजेच्चैनां 

तद्व्रतो रतिकाम्यया ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

எப்பொழுதும் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வது கணவனின் கடமை. மனைவியை தவிர அந்நிய பெண்ணை நினைக்க கூட கூடாது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தவிர்த்து, மனைவியிடம் சேரலாம்.

ऋतुः स्वाभाविकः स्त्रीणां 

रात्रयः षोडश स्मृताः ।

चतुर्भि: इतरैः सार्धम् 

अहोभिः सद्विगर्हितैः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ரஜஸ் வலை (3 day period) முடிந்த பிறகு, பொதுவாக (least) பெண்ணுக்கு அடுத்த 16 நாட்கள் ருது காலம் என்று சொல்லப்படுகிறது. ருது காலத்தின் முதல் 4 நாட்களும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும்.


तासाम् आद्याश्चतस्रस्तु 

निन्दित: एकादशी च या ।

त्रयोदशी च शेषास्तु 

प्रशस्ता दशरात्रयः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ருது காலத்தின் முதல் 4 நாட்களும், அதே போல 11வது நாளும், 13வது நாளும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும். இந்த 6 நாட்கள் தவிர்த்து, மற்ற 10 நாட்களில் மனைவியோடு சேரலாம்.

युग्मासु पुत्रा जायन्ते 

स्त्रियो अयुग्मासु रात्रिषु ।

तस्माद् युग्मासु पुत्रार्थी 

संविशेदार्तवे स्त्रियम् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில், 6வது அல்லது 8வது நாளில் மனைவியோடு சேர்ந்தால், மகன் பிறப்பான்.

மீதி உள்ள 8 நாட்களில் சேர்ந்தால், மகள் பிறப்பாள்

மகனை விரும்புபவர்கள், மகளை விரும்புபவர்கள் தகுந்த படி சேரலாம்.


पुमान् पुंसो अधिके शुक्रे 

स्त्री भवति अधिके स्त्रियाः ।

समे अपुमान् पुं।स्त्रियौ वा 

क्षीणे अल्पे च विपर्ययः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஆணின் அணுக்கள் (Y) அதிகமாக இருந்தால், மகன் பிறப்பான்.

பெண்ணின் ஶ்ரோணிதம் (X) அதிகமாக இருந்தால், மகள் பிறப்பாள். (இதையும் மாற்ற பும்ஸவனம் என்ற வைதீக கர்மாவை சரியான காலத்தில் செய்தால், மகனாக பிறப்பான்)

இரண்டும் சமமாக இருந்தால், அலி பிறப்பான், அல்லது இரட்டையாக குழந்தைகள் பிறக்கும். 

குறைவாக இருந்தால், கர்ப்பம் ஏற்படாது.


निन्द्यास्वष्टासु चान्यासु 

स्त्रियो रात्रिषु वर्जयन् ।

ब्रह्मचार्येव भवति यत्र 

तत्र आश्रमे वसन् ॥ 

- மனு ஸ்மிருதி (manu smriti)

இப்படி எந்த கணவன் தன் மனைவியின் ருது காலத்தில் முதல் 4 நாட்களும், 11வது, 13வது நாட்களில் சேராமல், மற்ற நாட்களில் மட்டும் சேர்கிறானோ, அவன் க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிப்பவனே. அவன் பிரம்மச்சாரியே!


अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।

ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற நாட்களில், மனைவி ருது காலத்தில் இருந்தாலும், பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்) மனைவியுடன் படுக்க கூடாது.


ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை . ஸ்வாயம்பு மனு ஸ்மிருதி

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை)

विसृज्य ब्राह्मणांस्तांस्तु 

नियतो वाग्यतः शुचिः ।

दक्षिणां दिशम् आकाङ्क्षन् 

याचेतैमान् वरान् पितॄन् ॥ 

- மனு ஸ்மிருதி

சாப்பிட்ட பிராம்மணர்கள் கிளம்பிய பிறகு, அமைதியாக அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பிறகு தெற்கு முகமாக நின்று இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..

दातारो नो अभिवर्धन्तां 

वेदाः सन्तति: एव च ।

श्रद्धा च नो मा व्यगमद् 

बहुदेयं च नो अस्त्विति ॥

தாதாரோ நோ அபி-வர்தந்தாம்

வேதா சந்ததி: ஏவ ச |

ஸ்ரத்தா ச நோ மாவ்யகமத்

பஹுதேயம் ச நோ அஸ்த்விதி ||

- மனு ஸ்மிருதி

அள்ளி தானம்  கொடுக்கும் குணமுள்ள புத்திரர்களால் என் குலம் பெருக வேண்டும்.

வேதம் ஓதுவதிலும், அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதிலும், யாகங்களில் செய்வதிலும் ஆர்வமுள்ள சந்ததிகளால் என் குலம் பெருக வேண்டும்.

எங்கள் அனைவருக்கும் வேதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறையாமல் இருக்கட்டும். 

மற்றவர்களுக்கு அள்ளி கொடுக்கும்படியான செல்வம் எங்களுக்கு கிடைக்கட்டும்.


இவ்வாறு பிரார்த்தனை செய்து ஸ்ரார்த்தம் முடிக்க வேண்டும்...


What is muhurtA (முகூர்த்தம்), kAshtai (காஷ்டை)? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்.... What Manu smriti says..

What is Day (நாள்), muhurtA (முகூர்த்தம்), kalA (கலை),  kAshtai (காஷ்டை) என்றால் என்ன? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்....  What Manu smriti says..

निमेषा दश च अष्टौ च काष्ठा 

त्रिंशत् तु ताः कला ।

त्रिंशत् कला मुहूर्तः स्याद् 

अहोरात्रं तु तावतः ॥

- மனு ஸ்மிருதி (Manu Smriti)

18 முறை கண் இமைக்கும் நேரத்தை, 1 காஷ்டை (3.2 sec) என்று சொல்கிறோம்.

30 காஷ்டை , 1 கலை (இன்றைய கணக்குப்படி 96 sec) என்று சொல்கிறோம்.

30 கலைகள், 1 முகூர்த்தம் (இன்றைய கணக்குப்படி 48 min/2880 sec) என்று சொல்கிறோம்.

30 முகூர்த்தம், இரவும் பகலும் சேர்ந்த ஒரு நாள் என்று சொல்கிறோம்.

18 times blinking eyes = 1 kAshtai

30 kAshtai = 1 kalA

30 kalA = 1 muhurtA

30 muhurtA = 1 full day (day+night)

Friday 26 May 2023

Manu smriti says "Plants experience happiness and sorrow". Let us know the sloka...

Million of yrs ago, manu has already said "Plants experience happiness and sorrow".  Let us know the sloka...

तमसा बहु-रूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्सञ्ज्ञा भवन्त्येते सुख-दुःख समन्विताः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

தாவரங்கள் தமோ குணத்தோடும், உணர்ச்சியோடு சேர்ந்த மனதை கொண்டிருப்பதால், சுக துக்கத்தை அனுபவிக்கின்றன. 

Plants experience happiness and sorrow because they have a spirit and emotional mind.

What is the difference between Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)? Let us understand... Manu smriti answers..

Which Tree is referred as Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)

अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

पुष्पिणः फलिन: च एव वृक्षास्तूभयतः स्मृताः ॥

- Manu smriti (மனு ஸ்மிருதி)


எந்த மரம், பூக்கள் இல்லாமல் பழம் தருமோ, அந்த மரத்தை "வனஸ்பதி" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit without becoming flower, is referred as Vanaspati.


எந்த மரம், பூக்களை உண்டாக்கி, அதிலிருந்து பழம் தருமோ, அந்த மரத்தை "விருக்ஷம்" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit from flower, is referred as Vruksha.

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்கள் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே

தூவா விரைத்தாலு நன்றாகா வித்தெனவே 

பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி


மனு ஸ்மிருதியின் வாக்கியத்தையே, அவ்வையும் பயன்படுத்துகிறாள்.


பூக்காது காய்க்கும் அத்தி மரம், ஆல மரம், அரச மரம், பலா மரம் முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல, 

மக்கள் கூட்டத்தில், இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோரும் உண்டு. 

அதற்கு மாறாக,

விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றும் சிலர் இருக்கிறார்கள். 

அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. 

அதாவது விதைத்தாலும் முளைக்காது போன்று இப்படிப்பட்ட மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரையும் இப்படி பயனற்றதாக போகும்.

நல்லவன் கஷ்டப்படுகிறான்! கெட்டவன், கொள்ளைக்காரன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா? இதற்கு பதில் என்ன? மனு ஸ்ம்ருதி படியுங்கள்..

"நல்லவன் கஷ்டப்படுகிறான்!கொள்ளைக்காரன்,கெட்டவன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா?" இதற்கு பதில் என்ன? 

மனு ஸ்ம்ருதி படியுங்கள்..  ப்ரம்மாவின் புத்திரனான ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.


न सीदन्नपि धर्मेण मनो अधर्मे निवेशयेत् ।

अधार्मिकानां पापानाम् आशु पश्यन् विपर्ययम् ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

தான் அறத்தோடு (தர்மம்) வாழ்ந்து வறுமையில் வாடும் போது, அதே சமயம் அதர்மத்தோடு வாழும் ஒருவன் சௌக்கியமாக வாழ்கிறானே என்று மனம் தடுமாற கூடாது. "அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்" என்று அறிந்து, தானும் அதர்ம வழியில் செல்ல மனத்தை செலுத்தவே கூடாது.


न अधर्म: चरितो लोके सद्यः फलति गौरिव ।

शनैरावर्त्य मानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

அதர்மம் செய்பவன் அதற்கான பாப பலனை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால், காலம் கனியும் போது அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்.

यदि न आत्मनि पुत्रेषु न चेत् पुत्रेषु नप्तृषु ।

न त्वेव तु कृतो अधर्मः कर्तुर्भवति निष्फलः ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவேளை, அதர்மம் செய்தவன் பாபத்தின் பலனை அழிவை சந்திக்காமல் போனாலும், அவன் பிள்ளையோ, பேரனோ அல்லது அவனது பிள்ளையோ அதன் பலனை அடைந்து அழிந்து போவார்கள். ஒரு நாளும் ஒருவன் செய்த அதர்மம் பலன் தராமல் போகாது.


अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।

ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவன் செய்த அதர்மங்கள் ஒரு நிலையை அடையும் வரை, அவன் சுகமாக சௌக்கியமாக வாழ்ந்து கொண்டு இருப்பான். தன்னை விட குறைந்த எதிரிகளையும் ஒழிப்பான். எப்பொழுது இவன் செய்த பாபம் ஒரு பரிபக்குவத்தை அடைகிறதோ, அப்போது தன்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகளோடு சேர்த்து, தானும் அழிந்து போவான்.

Thursday 25 May 2023

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?.. அறிவோம்..

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?..  அறிவோம்..

अध्यापनम् अध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् ॥ 
- Manu Smriti (Rule Book)
  1. வேதத்தை கற்றுக்கொடுத்தல்,
  2. வேதத்தை ஓதுதல்
  3. ஸமிதாதானம் ஆரம்பித்து யாகங்கள் செய்தல்
  4. யாகம் செய்வித்தல்
  5. தானம் கொடுத்தல்
  6. தானம் வாங்குதல்
இந்த 6ம் பிராம்மண வர்ணத்தில் இருப்பவனின் கடமையாகும்.
(இன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து க்ஷத்ரியர்களை (police) தனக்கு கீழ் வைத்து மக்களை வழிநடத்துபவர்கள் - முதலமைச்சர், மந்திரிகள். இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

प्रजानां रक्षणं दानमिज्या अध्ययनमेव च ।
विषयेष्वप्रसक्तिश्च क्षत्रियस्य समासतः ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. மக்களை காப்பாற்றுதல்,  
  2. தானம் அளித்தல்
  3. யாகம் செய்தல்,
  4. வேதத்தை ஓதுதல்
  5. விஷய சுகங்களில் மூழ்காமல் இருத்தல்.
இந்த 5ம் க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்து ப்ராம்மண வர்ணத்தில்  (MLA/CM) சொல்படி மக்களை வழிநடத்துபவர்கள் - POLICE. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)
3
पशूनां रक्षणं दानमिज्याऽध्ययनमेव च ।
वणिक्पथं कुसीदं च वैश्यस्य कृषिमेव च ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. பசுக்களை காப்பாற்றுதல்
  2. யாகங்கள் செய்தல்
  3. வேதத்தை ஓதுதல்
  4. வாணிபம் செய்தல்
  5. வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்துதல்
  6. விவசாயம் செய்தல்
இந்த 6ம் வைஸ்ய  வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று வைசிய வர்ணத்தில் இருந்து வாழ்க்கை வழிநடத்துபவர்கள் - EMPLOYER/FARMER. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

"வேதம் ஓதுதல்" இந்த மூன்று வர்ணத்தில் இருப்பவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான கடமைகளில் ஒன்று.

வேதத்தில், பிரம்மத்தை பற்றிய ஞான விஷயங்கள் மட்டுமின்றி, தர்ம (சட்டம்) சொல்லப்பட்டு இருக்கிறது. 

ஆட்சி முறைகள், தனுர் வேதம், விவசாயம் என்று அனைத்தும் இருக்கிறது. 

அவரவர்களுக்கு தேவையான படிப்பை கற்று, அதை தினமும் மேலும் மேலும் படித்து மெருகேற்றவே "வேதம் ஓதுதல்" தினசரி கடமையாக சொல்லப்பட்டு இருக்கிறது.

சிற்ப கலையின் அற்புதத்தை இன்றும் கோவில்களில் நாம் பார்க்கும் போது, வைசிய வர்ணத்தில் இருந்த சிற்பிகள் எத்தனை வேத அறிவோடு இருந்தார்கள் என்று தெரிகிறது.
4.
एकमेव तु शूद्रस्य प्रभुः कर्म समादिशत् ।
एतेषामेव वर्णानां शुश्रूषामनसूयया ॥ 
- Manu Smriti (Rule Book)

மற்ற வர்ணத்தில் இருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், சுகமாக சூத்திரர்கள் (EMPLOYEE) வாழ அனுமதிக்கப்படுகின்றனர். 

மற்ற வர்ணத்தில் இருப்பவர்கள் (Police, MP/MLA/Employer) கொடுக்கும் வேலையை, வேலை கொடுப்பவனை கண்டு பொறாமை இல்லாமல் இருப்பது ஒன்றே, இவர்களின் ஒரே கடமையாக இருக்கிறது.

தர்மத்தில் இருப்பவனின் லக்ஷணம் என்ன? How do we identify a person as "Dharmic"?

தர்மத்தில் இருப்பவனின் லக்ஷணம் என்ன? How do we identify a person as "Dharmic"?


वेदः स्मृतिः सदाचारः स्वस्य च प्रियमात्मनः ।

एतत् चतुर्विधं प्राहुः साक्षाद् धर्मस्य लक्षणम् ॥

- Manu smriti (மனு ஸ்மிருதி)

1. வேதத்தை நன்கு அறிந்தும்

2. தர்ம சாஸ்திரங்களை (ஸ்மிருதிகள்) அறிந்தும்

3. ஆசாரத்தோடு வாழ்ந்து கொண்டும், 

4. (சுக துக்கம் பாதிக்காமல்) எப்பொழுதும் பிரேமிகனாக இருந்து கொண்டும்,

யார் இருக்கிறாரோ, அவரையே "தர்மத்தின் சொரூபம்" என்று அறியலாம். 

Depth understanding of Veda (Shruti)

Depth understanding of Dharma Sastra / Upanished (smriti)

Vedic guided principled life

Staying always blissed (happy)

One who possess all 4 qualities can be identified as "Dharmic Person"


Saturday 20 May 2023

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்? - அறிவோம் மனு ஸ்ம்ருதி

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?  

பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய: 

பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.

அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.


இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.


ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் . 

அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.

இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 

4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது  மனிதர்களுக்கு  5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.

पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।

कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும். 

இந்த 1 மாதத்தில், 

15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.

அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.


ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.

दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।

अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥ 

- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)

(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.


தேவ லோகத்தில்:

  • தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon), 
  • சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
என்ற 6 மாதங்கள் தேவலோகத்தில் ஒரு பகலாக  உள்ளது. இதற்கு உத்தராயணம் என்று பெயர்.

  • ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM), 
  • ஐப்பசி (12AM -2AM), கார்த்திகை (2AM -4AM), மார்கழி (4AM -6AM)
என்ற மற்றொரு 6 மாதங்கள், தேவ லோகத்தில் ஒரு இரவாக உள்ளது. இதற்கு தக்ஷிணாயணம் என்று பெயர்.

மார்கழி மாத காலத்தில் 18 நாள் மஹாபாரத யுத்தம் நடந்தது. 

யுத்தத்தில் 10வது நாள் பீஷ்மர் வீழ்ந்தார். 

உத்தராயணம் வரும் வரை உயிரை விட்டு விடாமல், யோகத்தில் இருந்து, தை மாதம் வந்ததும் (உத்தராயண காலம்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "1000 நாமங்களால்" ஸ்துதி செய்து, அவர் முன்பாக தேகத்தை துறந்து மேலுலகம் சென்றார்.
ब्राह्मस्य तु क्षपाहस्य यत् प्रमाणं समासतः ।
एकैकशो युगानां तु क्रमशस्तन् निबोधत ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
(சத்ய லோகத்தில் இருக்கும்) பிரம்மாவுடைய பகல், இரவு கால கணக்கை, யுக அளவை சொல்கிறேன். கேளுங்கள்.

चत्वार्याहुः सहस्राणि वर्षाणां तत् कृतं युगम् ।
तस्य तावत् शती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
4000 தேவ வருடங்கள் மேலும் 400 தேவ வருடங்கள் காலை, 400 தேவ வருடங்கள் மாலை சந்தியா காலங்களாக, மொத்தம் 4800 தேவ வருடங்கள் ஒரு க்ருத-யுகம் காலம்
इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु ।
एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
இதில் 1000 வருடங்கள் குறைத்து,  100 வருடங்கள் ஒவ்வொரு சந்தியிலும் படிப்படியாக குறைய, மற்ற மூன்று யுகங்கள் காலத்தை அறியலாம். அதாவது,
  • 3600 தேவ வருடங்கள் ஒரு த்ரேதா-யுகம் காலம் = பூமியில் 3*4,32,000 வருடம்
  • 2400 தேவ வருடங்கள் ஒரு துவாபர-யுகம் காலம் = பூமியில் 2*4,32,000 வருடம்
  • 1200 தேவ வருடங்கள் ஒரு கலி-யுகம் காலம் = பூமியில் 4,32,000 வருடம் 

  • பூமியில் 360 நாட்கள் = பூமியில் வருடம் = தேவலோகத்தில் தேவ நாள்
  • பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில் 360 தேவநாள் = தேவலோகத்தில் தேவ வருடம்
  • பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில் 36,000 தேவ நாள் தேவலோகத்தில் 100 தேவ வருடம் (ஒரு இந்திரனின் ஆயுள்)
  • பூலோகத்தில் ஒரு கலி யுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில் 4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில் 1200 தேவ வருடம் 12 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = பூமியில் 43,20,000 வருடம் = தேவலோகத்தில் 43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில் 12,000 தேவ வருடம் = தேவ லோகத்தில் 1 தேவ யுகம்  = 120 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • 71 * பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்)
यदेतत् परि-सङ्ख्यातमादावेव चतुर्युगम् ।
एतद् द्वादश साहस्रं देवानां युगम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)

இந்த 4 யுகங்கள் சேர்ந்தால், மொத்தம் 12000 (4800,3600,2400,1200) தேவ வருடங்கள் ஆகிறது.  (அதாவது 120 இந்திரர்கள் ஒரு சதுர் யுகத்தில் பதவிக்கு வருகின்றனர்)

दैविकानां युगानां तु सहस्रं परि-सङ्ख्यया ।
ब्राह्मम एकम् अहर्ज्ञेयं तावतीं रात्रिम् एव च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
1000 முறை இப்படிப்பட்ட 12000 தேவ வருடங்கள் முடியும் போது (1,20,00,000 Deva Yug), அது சத்ய லோகத்தில் பிரம்மாவுக்கு ஒரு பகலாக இருக்கிறது. அதே கால அளவுக்கு பிரம்மாவுக்கு ஒரு இரவும் இருக்கிறது.

तद् वै युग सहस्रान्तं ब्राह्मं पुण्यम् अहर्विदुः ।
रात्रिं च तावतीम् एव ते अहोरात्र विदो जनाः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் இந்த பகல் பொழுது "புண்ய காலம்" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதும் "புண்ய இரவு" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதிலும் அழியாமல் இருப்பவர்கள் "அஹோ ராத்திரிகள்" என்று செல்லப்படுகிறார்கள்.

तस्य सो अहर्निशस्यान्ते प्रसुप्तः प्रतिबुध्यते ।
प्रतिबुद्ध: च सृजति मनः सद् असद् आत्मकम् ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மா தன்னுடைய இரவு காலத்தில் தூங்குவார். முடியும் தருவாயில் எழுந்திருப்பார். எழுந்த பிறகு, "ஸத் (soul) அஸத்தில் (nature) பிரவேசித்தபடியான  ரூபமான படைப்பை" மீண்டும் தொடங்குகிறார்.

मनः सृष्टिं विकुरुते चोद्यमानं सिसृक्षया ।
आकाशं जायते तस्मात् तस्य शब्दं गुणं विदुः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் மனம், படைப்பை செய்ய ஏவப்பட்டு, ஆகாயத்தை படைத்தார். ஆகாயத்தில் "சப்தம்" (ஒலி) குணமாக அமைத்தார்.

आकाशात् तु विकुर्वाणात् सर्व-गन्धवहः शुचिः ।
बलवान् जायते वायुः स वै स्पर्शगुणो मतः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஆகாயத்திலிருந்து வாசனைகளை கடத்தும், மிகவும் சுத்தமான, மஹா பலம் பொருந்திய வாயுவை (காற்று) படைத்தார். வாயுவில் "ஸ்பரிசம்" (தொடுதல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

वायो: अपि विकुर्वाणाद् विरोचिष्णु तमोनुदम् ।
ज्योति: उत्पद्यते भास्वत् तद् रूप गुणम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
வாயுவிலிருந்து பிரகாசத்தை ஏற்படுத்தும், இருட்டை போக்கடிக்கும் ஜோதியை (அக்னி)  படைத்தார். ஜோதியில் "உருவம்" (பார்த்தல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

ज्योतिषश्च विकुर्वाणाद् आपो रस गुणाः स्मृताः ।
अद्भ्यो गन्धगुणा भूमि: इत्येषा सृष्टि: आदितः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஜோதியிலிருந்து (அக்னி) தண்ணீரை படைத்தார். தண்ணீரில் "ரசத்தை" (சுவை) கூடுதல் குணமாக அமைத்தார்.

यद् प्राग् द्वादश साहस्रम् उदितं दैविकं युगम् ।
तदेक सप्ततिगुणं मन्वन्तरम् इह उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
12,000 தேவ வருடங்கள் "ஒரு சதுர் யுகம்" என்று முன்பே சொல்லப்பட்டது. தேவ லோகத்தை பொறுத்தவரை "12,000 தேவ வருடங்கள், ஒரு தேவ யுகம்" என்று சொல்லப்படுகிறது.
71 தேவ யுகங்கள் (71 சதுர் யுகம் சேர்த்து), ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்) என்று சொல்லப்படுகிறது.

मन्वन्तराण्य सङ्ख्यानि सर्गः संहार एव च ।
क्रीडन् इव एतत् कुरुते परमेष्ठी पुनः पुनः ॥ 
- மனு ஸ்ம்ருதி (rule book)
எப்படி படைப்பும், சம்ஹாரமும் எண்ண முடியாததோ, அது போல, மன்வந்திரங்களும் எத்தனை முடிந்தது? எத்தனை நடக்க போகிறது? என்று எண்ண முடியாதபடி விளையாட்டாக ( லீலையாக) மீண்டும் மீண்டும் படைப்பு தொழிலை செய்து கொண்டே இருக்கிறார்