Followers

Search Here...

Tuesday 28 June 2022

ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம். அந்நியர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ராஜ தர்மம். அது என்ன...அறிவோம். ஒரு எதிரியை சமாளிப்பது எப்படி? ஒரே சமயத்தில், இரண்டு எதிரிகளை சமாளிப்பது எப்படி? அறிவோம் ராஜ தர்மம்.

பிரித்து ஆளும் கொள்கை (பேத நீதி) 

  • ஹிந்துக்கள் பயன்படுத்த தவறிய ராஜ தர்மம்.
  • ஹிந்துக்கள் மீது அந்நியர்கள் பயன்படுத்தி இன்று வரை வெற்றி காணும், ராஜ தர்மம்.

ராஜ தர்மத்தில் "சமாதானம், தானம், பேதம், தண்டனை" என்ற 4 நீதிகள் உண்டு. 

'இந்த வரிசையில் தான் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்' என்பது விதி.


'தண்டனை நீதி, மற்ற மூன்று நீதியும் பயனற்று போகும் போது தான் செயல் படுத்தப்பட வேண்டும்' என்பது விதி.


ராஜ தர்மமான இந்த பேத நீதி கொள்கையை ஹிந்துக்கள் பயன்படுத்திய வரை, பாரத தேசம் அந்நியர்களுக்கு அடிபணியவில்லை

அதை சரியாக பயன்படுத்தாமல் போனதும், ஹிந்து தேசமான பாரத தேசம் பல துன்பங்களை எதிர்கொண்டது.

அந்நியர்கள் ஹிந்துக்கள் மீதே பேத நீதியை பயன்படுத்தி சக ஹிந்துக்களிடம் குழப்பத்தை, பொறாமையை ஏற்படுத்தி பிரித்தார்கள். 

'எட்டப்பன்' போன்ற ஹிந்துவை பேத நீதியை கொண்டு பிரித்து, வீரபாண்டிய கட்டபொம்மனை கொன்றார்கள். 

வெற்றி கண்டார்கள். இன்று வரை பேத நிதியை பயன்படுத்தி ஹிந்துக்களை பிரிக்கிறார்கள்.

எதிரிகளிடமிருந்து காத்து கொள்ள, பிரித்து ஆளும் கொள்கையை ஆழமாக புரிந்து கொள்வது அவசியம். 

ஹிந்துக்கள் ராஜ தர்மமான பேத நீதியை புரிந்து, பயன்படுத்த வேண்டும்.


இது சம்பந்தமாக, பீஷ்மரிடம் யுதிஷ்டிர மஹாராஜன் கேட்ட போது, இவ்வாறு பீஷ்மர் சொன்னார்.

क्षेत्रस्थेषु च सस्येषु शत्रॊर उपजपेन नरान

विनाशयेद वा सर्वस्वं बलेनाथ सवकेन वै

- மஹாபாரதம் (வியாசர்)

பல வழிகளை பயன்படுத்தி, எதிரியின் பக்கமுள்ள ஜனங்களை பிரிக்க (பேதம்) வேண்டும். இப்படி பிரிக்கப்பட்ட எதிரியின் மக்கள் கூட்டத்தை கொண்டே,  எதிரிகளை அழிக்க வேண்டும். தேவைப்பட்டால், சேனையையும் சேர்த்து கொண்டு அழிக்க வேண்டும்.

नदीषु मार्गेषु सदा संक्रमान् अवसादयेत्

जलं निस्रावयेत् सर्वम् अनिस्राव्यं च दूषयेत्

- மஹாபாரதம் (வியாசர்)

எதிரிகள் தேசத்துக்குள் நுழைய நதியில் போட்ட பாலங்களை உடைத்து விட வேண்டும். தாக்க வரும் எதிரிகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத படி, குளங்களை உடைத்து, அதில் உள்ள நீரை  ஓட செய்ய வேண்டும்.

तदात्वेनायतीभि: च विवदन् भूम्यनन्तरम्

प्रतीघातः परस्याजौ मित्र काले अपि उपस्थिते

- மஹாபாரதம் (வியாசர்)

நமது எதிரியிடம் பகை உள்ளவன் யார்? என்று தெரிந்து கொண்டு, நமது எதிரியை வெல்லத்தக்கவன் யார்? என்று தெரிந்து கொண்டு, அவர்களிடம் நாம் நட்பு செய்து கொண்டு வசிக்க வேண்டும்.


வியாசரின் மஹாபாரதம் படிக்கும் போது நமக்கு ராஜதர்மத்தின் வழிகள் தெரிந்து விடும். 

1.

நமக்கு ஒரே ஒரு எதிரி இருந்தால், எப்படி சமாளிக்க வேண்டும்? 

தண்ட நீதி முடிந்தவரை எடுக்க கூடாது. அது இரு பக்கமும் அழிவை தரும்.

முதலில் சமாதானம் பேசியும், தானம் செய்தும், பார்க்க வேண்டும். 

எதிரி அப்பொழுதும் அடங்கவில்லையென்றால், பிரித்து ஆளும் கொள்கையை ஹிந்துக்கள் கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும். 

பேத நீதியை பயன்படுத்தாமல், தண்ட நீதியில் இறங்கவே கூடாது. 

இது ராஜதர்மம்.


எதிரியின் பக்கம் இருக்கும் மக்களை, பொறாமை, வெறுப்பு, ஏற்றத்தாழ்வு என்று பல வழிகள் மூலம் எதிரியின் மக்களை பிரித்து விட வேண்டும். 


இந்த நீதியை ஹிந்துக்கள் பயன்படுத்தாத காரணத்தால், இன்று தன்னை எதிர்ப்பவர்களை சமாளிக்க வழி புரியாமலும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை பிறர் சீர்குலைப்பதை பார்த்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. 


இந்த ராஜ தர்மத்தை, நம் மீது அந்நியர்கள் பயன்படுத்துகிறார்கள். நாம் நம்முடைய ராஜ தர்மமான பேத நீதியை பயன்படுத்துவதில்லை. 

இதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.


ஜாதி வித்யாசம் சொல்லி, தீண்டாமை சொல்லி, கல்வி மறுப்பு என்ற புரளியை கிளப்பி, பிராம்மண வெறுப்பை உண்டாக்கி, ஹிந்து தெய்வத்தை கேலி செய்து - மேலும் பல வழிகளை பயன்படுத்தி ஹிந்து மக்களை பிரித்து ஆளும் கொள்கையை இன்று வரை செய்கின்றனர். 

பீஷ்மர் காட்டிய அற்புதமான பேத நீதியை ஹிந்துக்கள் கடைபிடிப்பதில்லை. அந்நியர்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை கவனிக்க வேண்டும். 

இதை ஹிந்துக்கள் சரிவர திரும்ப பயன்படுத்தும் போது, எதிரியின் பலம் தானாக குறையும்.

2.

ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகள் நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? எப்படி பிரித்து ஆளும் கொள்கையை (பேத நீதி) பயன்படுத்த வேண்டும்?

இரண்டு எதிரிகள் சேர்ந்து நம்மை தாக்கும் போது, இருவரையும் நாம் தண்ட நீதி கொண்டு தாக்குவது என்பது சரியான வழி அல்ல.

முதலில் எதிரிகள் இருவரையும் பிரிக்க வேண்டும்.

அவர்கள் நட்பாக விடாமல், பிரித்து ஆளும் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஒரு எதிரியிடம் மற்றொரு எதிரியின் எதிர்மறையான கொள்கையை காட்டி, அவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பை காட்டி உணர்ச்சியை தூண்ட வேண்டும். எதிரிகளுக்குள்ளே வெறுப்பை உண்டாக்க வேண்டும். 


இப்படியே இருவருக்கும் உள்ள பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டை ஏற்பட செய்ய வேண்டும்.


இப்படி சரியாக பேத நீதியை கையாளும் போது, நாம் சண்டையிட அவசியமில்லாமல், இவர்களே அடித்து கொண்டு மடிவார்கள்.


மஹாபாரத போர் முடிவான போது,

ஸ்ரீ கிருஷ்ணர்,

- சமாதானம் பேசி சண்டையை தடுக்க தூது சென்றார். பலிக்கவில்லை.

- 'தானமாக 5 கிராமம் மட்டும் கொடு, சண்டை வேண்டாம்' என்கிறார். அதுவும் பலிக்கவில்லை.

- துரியோதனனின் பக்கம் இருந்த கர்ணனிடம், 'அவன் தாய் யார்?' என்று சொல்லி பேதம் செய்ய முயற்சித்தார். துரியோதனன் பலத்தை குறைக்க பார்த்தார். அதுவும் பலிக்கவில்லை.

- இறுதியாக தண்ட நீதி எடுத்து பாண்டவர்கள் போர் செய்தனர். சாம, தான, பேத தர்மம் முயற்சி செய்த பிறகு போருக்கு வந்ததால், தெய்வமே பாண்டவர்கள் பக்கம் இருந்து, காப்பாற்றி, யுதிஷ்டிரனை அரசனாக்கினார்.

பேத நீதியை அதற்கு பிறகு ஹிந்துக்கள் கவனிக்காமல் விட்டனர்.

அந்நியர்கள் அனைவரும் இன்று வரை ஹிந்துக்கள் பேத நீதி பயன்படுத்தி, பிரித்து ஆளுகின்றனர்.


ஹிந்துக்கள் பேத நீதியை கையில் எடுக்கும் போது, எதிரிகள் தானாக குறைவார்கள்.  

Monday 13 June 2022

திவ்ய தேச யாத்திரை எப்படி செல்ல வேண்டும்? முதன் முதலில் திவ்ய தேச யாத்திரை செய்தவர் யார்? பெருமாள் ஒருவர் தானே! ஒவ்வொரு கோவிலிலும் பெருமாள் எப்படி வித்தியாசப்படுகிறார்? தெரிந்து கொள்வோம்

பக்தன் எப்படி இருக்க வேண்டும்

திவ்ய தேச யாத்திரை எப்படி செய்ய வேண்டும்? யாரை போல செய்ய வேண்டும்? 

ஒரே பெருமாள் தான். 

ஒரே தாயார் தான். 

திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?


'திவ்ய தேசம் திவ்ய தேசமாக பெருமாள் தாயாரோடு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஓடி ஓடி சென்று மண்டி கிடப்பான்', பக்தன்.


உறவினரை பார்க்க கிளம்பினாலும், அந்த வழியில் பெருமாள் கோவில் இருந்தால், "சற்று பார்த்து விட்டு போகலாமே" என்று நினைப்பான் பக்தன்.

சரீர பந்துவை பார்க்க ஊருக்கு சென்றாலும், நமது ஆத்ம பந்துவான் பெருமாள் போகும் வழியில் இருந்தால், பக்தனால் பார்க்காமல் எப்படி செல்லமுடியும்?


இப்படி 'பெருமாளையே மண்டி கிடப்பதில் ஏற்படும் சுகம் எதிலும் கிடையாது' என்று பக்தன் நினைப்பான். 

திவ்ய தேச பெருமாளை பார்த்தால் தானே, இந்த அனுபவம் புரியும்.


ஆசையோடு வரும் பக்தன், 'பெருமாள் தம்மிடம் பேசும் அழகையும், தம்மை உபசரிக்கும் அழகையும், தம்மை கொண்டாடுவதையும்' அனுபவிக்கிறான்.


வேறு என்ன வேண்டும் நமக்கு?

பெருமாள், "மோக்ஷம் வேண்டுமென்றால், அஷ்டாங்க யோகம் செய்தாயா?" என்றா கேட்கிறார்.

திருக்கண்டியூர், திருவரங்கம், திருவெள்ளியங்குடி என்று திவ்ய தேசம் திவ்ய தேசமாக அலைந்து கொண்டிருந்தால், பெருமாள் நமக்கு மோக்ஷம் கொடுக்காமல் போய் விடுவாரா என்ன?

கிருஷ்ண அவதார சமயத்தில் திவ்ய தேசங்கள் எல்லாம் துவாரகையிலேயே இருந்ததாம்.


16108 தேவிகள் கிருஷ்ணருக்கு.

துவாரகையில் 16108 தேவிக்கும் தனித்தனி அரண்மனை. ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணரே 16108 கிருஷ்ணனாக இருந்து ஆச்சர்யமாக குடும்பம் நடத்தினார்.

முதன்முதலில் திவ்ய தேச யாத்திரையை தொடங்கியவர் நாரதர்.


நாரதருக்கு ஒவ்வொரு வீடாக சென்று ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி இருக்கிறார்? என்று பார்க்க ஆசை ஏற்பட்டது.


ருக்மிணி தேவியின் அரண்மனையில் நாரதர் நுழைந்தபோது, கிருஷ்ணர் ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அந்த தேவி வெற்றிலை மடித்து கொடுத்து கொண்டிருந்தாள்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் தேவிக்கு வீட்டு காரியங்களில் உதவி செய்து கொண்டிருந்தார்.

அங்கு நாரதர் வருவதை பார்த்ததும், ஓடி வந்து இருவரும் உபசாரம் செய்தார்கள்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று அங்கு சென்றார். 

அந்த அரண்மனையில், கிருஷ்ணர் தன் குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தார்.

நாரதர் வந்ததை பார்த்ததும், ஓடி வந்து ஆசையோடு கிருஷ்ணர் குடும்பதோடு உபசாரம் செய்தார்.

பிறகு நாரதர், "அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்?" என்று பார்க்க சென்றார்.

அந்த அரண்மனையில், நாரதரை பார்த்ததும், "இன்று அதிதியாக நாரதர் வந்திருக்கிறாரே. அஹோ பாக்கியம்" என்று முகமலர்ச்சியோடு    கிருஷ்ணர் சொல்ல, உடனே அவருடைய தேவி தீர்த்தம் எடுத்து வர, பாத்யம் சமர்ப்பிக்க ஓடோடி வந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

அனைத்து உபசாரத்தையும் பெற்றுக்கொண்ட நாரதர், அந்த அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.

"சரி, அடுத்த அரண்மனையில் தேவியும், கிருஷ்ணரும் எப்படி இருக்கிறார்கள்? என்று பார்ப்போம்" என்று மேலும் சென்றார். 

அந்த அரண்மனையில் தேவியே ஓடிவந்து "ஸ்ரீகிருஷ்ணர் இப்போது தான் எண்ணெய் தேய்த்து குளிக்க சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார்" என்று சொல்லி வரவேற்று, நாரதருக்கு ஆசனம் கொடுத்து அமர செய்தாள். வேகவேகமாக குளித்து விட்டு, நாரதரை வரவேற்க ஓடிவந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


நாரதரின் தந்தையான பிரம்மாவை முன்பு மோஹிக்க செய்ததாக கேள்விப்பட்டு இருக்கிறார் நாரதர்.


இப்படி 16108 தேவியின் வீட்டுக்கும் நாரதரே சென்று பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரும், அவருடைய தேவியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பழகி ஆனந்தப்படுத்தியதை பார்த்து பிரமித்து போய், "பிரம்மாவுக்கும் கிடைக்காத பாக்கியத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு கொடுத்தாரே!" என்று மோஹித்து விட்டார் 


"திவ்ய தேசங்களுக்கு நாம் எத்தனை ஆவலோடு செல்ல வேண்டும்" என்று காண்பித்தார் நாரதர்.

ஸ்வரூபத்தில் ஒரே பெருமாள் தான், ஒரே தாயார் தான். 

"திவ்ய தேசம், திவ்ய தேசமாக ஒவ்வொரு பெயருடன் பெருமாளும் தாயாரும் ஏன் இருக்கிறார்கள்?" என்ற ரகசியத்திற்கு காரணத்தை கிருஷ்ண அவதாரத்தில் காட்டினார்.


திவ்ய தேசங்கள் செல்லும் போது, "இங்கு தாயார் எப்படி இருக்கிறாள்? இங்கு பெருமாள் எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று நாரதர் ஆவலோடு சென்றது போல நாமும் செல்ல வேண்டும்.


இந்த ஆவலோடு, 

"பெருந்தேவி தாயாரோடு காஞ்சியில் பெருமாள் எப்படி இருக்கிறார்?

திருவரங்கத்தில் பெரிய பிராட்டியோடு எப்படி இருக்கிறார்? 

இப்படியே திருக்கண்டியூர் சென்று பார்ப்போமா?" என்று திவ்ய தேசம், திவ்ய தேசமாக அலைந்து கொண்டே இருந்தால், வைகுண்டமும் வேண்டுமோ?

நமக்கு அஷ்டாங்க யோகமும் வேண்டாம்,

யம நியம ஆசனங்களும் வேண்டாம்.

வேதாந்தம் நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

பக்தியே கூட நமக்கு வரட்டும், வராமல் கூட போகட்டும்.

சுத்தமான அஞானியாகவே இருந்து விட்டு போவோம்.

கோவில் கோவிலாக சென்று, பிரசாதம் வாங்கி சாப்பிடும் கோஷ்டியாக கூட ஆகலாமே!

திவ்ய தேசம் எங்கே? திவ்ய தேசம் எங்கே?  என்று தேடி தேடி, அங்கேயே மண்டிக்கிடக்கும் பாகவதர்களின் திருவடிகளில் போய் விழுவோமே. அவர்கள் பாததுளி நம்மீது விழட்டுமே.


உலகத்தில் நடக்கும் நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாது. இவர்களிடம் வம்பு பேச்சும் கிடையாது.

'திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளையும், தாயாரையும் பார்ப்பதே லட்சியம்' என்று இருக்கும் இவர்களுக்கு கிடைக்காத மோக்ஷத்தையா, ஏதோ பெரிதாக படித்தவனுக்கு கொடுத்து விட போகிறார் பெருமாள்?

மோக்ஷம் கொடுப்பதற்காகவே திவ்ய தேசம் திவ்ய தேசமாக உட்கார்ந்து இருக்கும் பெருமாளை பார்ப்பதை விட்டுவிட்டு,  இவ்வளவு படித்தால், 'இவ்வளவு யோகம் செய்தால், மோக்ஷத்தை பிடித்து விடலாம்' என்று கணக்கு போடுபவன் போட்டு கொள்ளட்டும். அது அவரவர் தலையெழுத்து.


மோக்ஷத்திற்கு நாம் விலை போட முடியுமா?

மோக்ஷம் அவர் சொந்த சொத்து.

நீ என்ன வேண்டுமானாலும் படி, யோகம் செய். மோக்ஷம் கொடுப்பது அவர் இஷ்டம்.


ஞானம் அடையவில்லை, யோகமும் செய்யவில்லை ஜடாயு. ஒன்றுமே செய்யாத கழுகுக்கு மோக்ஷத்தை கொடுத்து  விட்டு சென்று விட்டார் பெருமாள்.

யார் கேட்க முடியும்?


"எதை எதையோ படித்து, மோக்ஷம் அடையலாம் என்று நினைக்காதே..  திவ்ய தேசம் திவ்ய தேசமாக ஓடு. மோக்ஷம் சுலபமாக கிடைத்து விடும்", என்கிறார் ஆழ்வார்.

கோவிலுக்கு போகும் போது, எதையாவது எதிர்பார்த்து செல்லாதே..

உன் ஆத்மாவுக்கு உறவுக்காரர் என்ற ஆசையோடு சென்று, பெருமாளை பார்.


உன்னுடைய சரீர பந்துவை பார்க்க செல்லும் போது எப்படி ஆசையோடு போகிறாய்?

அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உன் பேரன் இருக்கிறான், உன் பிள்ளை இருக்கிறான் என்றால் கூட, எப்படி ஆசையோடு ஒடுகிறாய்...

அது போல, உன் பெருமாளை பார்க்க ஓடு.


நீ போகும் வழியில் ஒரு திவ்ய தேசம் இருந்தால், "அடடா.. நம் பெருமாள் உள்ளே இருப்பாரே! அவரை பார்க்க முடியாமல் போகிறோமே! இறங்கி ஒரு க்ஷணம் பார்த்து விட்டு வந்து விடலாமா?" என்று நினை.


எப்பொழுது உனக்கு பெருமாளிடம் இப்படி ஒரு பாசம் உண்டாகி, சேவிக்க ஆரம்பிப்பாயோ, அப்பொழுதே உனக்கு அங்கு (வைகுண்டத்தில்) அழைப்பு கிடைத்து விடும். இதே ஜென்மத்தோடு மோக்ஷம் கிடைத்து விடும்.


"திவ்ய தேசம் திவ்ய தேசமாக சென்று பெருமாளை பார்ப்பதே, மோக்ஷத்திற்கு வழி" என்று காண்பித்து கொடுத்தார் திருமங்கையாழ்வார்.

Saturday 11 June 2022

அரசாட்சி செய்பவன் செய்யக்கூடாத 18 செயல்கள் என்னென்ன? ராஜ தர்மம் அறிவோம். மஹாபாரதம் சொல்கிறது.

ராஜ தர்மம்:


ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.


व्यसनानि च सर्वाणि 

त्यजेथा भूरिदक्षिण |

न चैव न प्रयुञ्जीत् 

सङ्गं तु परिवर्जयेत ||

- வியாசர் மஹாபாரதம்

நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !

அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.

எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது 


नित्यं हि व्यसनी लॊके 

परिभूतॊ भवत्य उत |

उद्वेजयति लॊकं चाप्य 

अति द्वेषी महीपतिः ||

- வியாசர் மஹாபாரதம்

வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.

பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.


வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:

  1. பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
  2. பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
  3. பகலில் தூங்குவது
  4. மற்றவரை திட்டுவது
  5. பெண்களிடம் மோகம் கொள்வது
  6. மதம் கொள்வது (கர்வம்)
  7. பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
  8. கூத்து பார்ப்பது
  9. பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
  10. மது குடிப்பது

இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.


  1. தெரியாத குற்றத்தை வெளியிடுவது
  2. குற்றமில்லாதவனை தண்டிப்பது
  3. கபடமாக கொல்வது
  4. பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
  5. பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
  6. பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
  7. கீழ்த்தரமாக பேசுவது
  8. நியாயமில்லாத தண்டனை கொடுப்பது

இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.


கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.

காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.

Friday 10 June 2022

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்?

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்? 

Gift கொடுப்பதை விட, இதற்கு ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள் ஹிந்துக்கள்?

தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், "அம்பாள் அணுகிரஹம்" வேண்டும்.

ஜாதகத்தில் "சுக்கிரன் இருவருக்கும் பலமாக" இருக்க வேண்டும். 

அப்பொழுது தான், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள்.


"அம்பாளின் அணுகிரஹம் தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, நம் ஹிந்துக்கள், கல்யாணமான பெண்ணுக்கு வெத்தலை பாக்கு, கூடவே மஞ்சள் குங்குமம் புடவை வைத்து கொடுக்கிறார்கள்.

அம்பாளை பூஜிப்பதாக நினைத்து கொடுப்பார்கள் 

சுக்கிரன் பலமாக வேண்டுமானால், 

கோ (கறவை பசு) தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பசுவை, அனைவராலும் தானம் செய்ய முடியாது. 

பசுவை யார் தானம் கொடுக்கிறானோ, அவனை கண்டு, பசுபதியான சிவபெருமான் திருப்தி கொள்கிறார்.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள். தேங்காயிலும் மூன்று கண்கள் உண்டு. 


கோ தானம், சிவபெருமானையும், சுக்கரனையும் சம்பந்தப்படுத்துகிறது.

சிவபெருமானாக தேங்காயை நினைத்து கொண்டு, கொடுக்கும் போது, கோ தானம் கொடுத்த பலன் கிடைக்கிறது. 

இதனால் சுக்கிரனும் திருப்தி அடைகிறார்.


இப்படி அம்பாளை பூஜித்தும், சுக்கிரனை திருப்தி செய்தும், வந்த தம்பதிகள் ஒற்றுமையாகவும், அன்யோன்யமாகவும் வாழ ப்ரார்த்திப்பது ஹிந்துக்களிடம் வழக்கமாக இருந்தது. இருக்கிறது.


Gift கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்து, பெண்களுக்கு மஞ்சள் குங்குமமும், ஆண்களுக்கு தேங்காயையும் கொடுப்பது ஹிந்து தர்மமாக உள்ளது.


காரணமில்லாமல் ஹிந்துக்கள் எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது 


Listen to the speech..

https://www.youtube.com/watch?v=vRuJuzfeMuo&t=4138s

Thursday 9 June 2022

சிவபெருமானை காலையில் பள்ளியெழுச்சி செய்கிறார் மாணிக்கவாசகர். திருவெம்பாவை

சிவபெருமானை காலையில் பள்ளியெழுச்சி செய்கிறார் மாணிக்கவாசகர்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)


ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேதம் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் அழுகிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 

(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும்,  மாணிக்கவாசகனான  என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய்  !

என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.


Listen to - the explanation:  

https://www.youtube.com/watch?v=vRuJuzfeMuo&t=786s

யார் கர்த்தா? Secret revealed...

யார் கர்த்தா?

ஸ்ரீகிருஷ்ணர் தியானத்தில் இருந்தார். 

யுதிஷ்டிரர், "யாரை தியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.


ஸ்ரீகிருஷ்ணர் "பீஷ்மரை தியானித்து கொண்டு இருக்கிறேன். தர்ம அர்த்த காம அறிந்தவர். ராஜ தர்மம் போன்றவற்றை அவரிடம் விரிவாக கேட்க புறப்படுங்கள்" என்றார். 


அப்போது யுதிஷ்டிரர் சொல்கிறார்...

भवां च कर्ता लॊकानां 

यद् व्रवीत्य अरु सूदन |

तथा तद् अनभिध्येयं 

वाक्यं यादव नन्दन ||

- வியாச மஹாபாரதம்

சத்ருக்களை அழிப்பவரே! அனைத்து உலகங்களுக்கும் கர்த்தாவான நீங்கள் சொல்லும்போது, யாதவ நந்தனா! உங்கள் வாக்குக்கு மறுப்பு ஏது?


यत: त्व अनुग्रह कृता 

बुद्धि: ते मयि माधव |

त्वाम् अग्रतः पुरस्कृत्य 

भीष्मं पश्यामहे वयम् ||

- வியாச மஹாபாரதம்

மாதவா! எனக்கு அணுகிரஹம் கிடைக்க உங்களுக்கு சங்கல்பம் இருக்கும் பட்சத்தில், உங்களை முன்னிட்டு கொண்டு, நாங்கள் பீஷ்மரிடம் போகிறோம்.


5000 வருடங்களுக்கு முன் யாதவ குலத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக யாதவ குலத்தில் அவதரித்தார்.

மதுரா வரும்வரை, 12 வயது வரை, யாதவ சிறுவர்களோடு பிருந்தாவனத்தில் மாடு மேய்த்தார். 


ஸ்ரீ கிருஷ்ணர் மறைவதற்கு முன், அனைத்து யாதவ குடிமக்களையும் துவாரகை விட்டு செல்ல சொன்னார்.

யாதவ மக்கள் நான்கு புறமும் சென்று ஆங்காங்கு பல தேசங்களில் குடிபுகுந்தனர்.

யாதவர்களால், உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம் பேசப்பட்டது. 

3000 வருடத்திற்கு பிறகு, யவன தேசமாக இருந்த தேசங்களில் யூதர்கள் என்றும் யஹுதிகள் என்றும் அழைக்கப்படும் குலத்தில், 'ஒரு கடவுள் இருக்கிறார். அவரே கர்த்தா! அவர் ஆடு மேய்த்தார்" என்று சொல்லிக்கொண்டு பாரத தேசம் வந்தனர். 


எப்படி "சிந்து" என்று கூட சொல்ல முடியாமல், ஹிந்து, இந்து என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "கொல்கத்தா" என்று சொல்ல முடியாமல், கல்கட்டா என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "திருச்சிராப்பள்ளி" என்று சொல்ல முடியாமல், ட்ரிசி என்று உளறி கொட்டினார்களோ!

அது போல,

யவன தேசத்தில், ஹிந்துக்களின் பெயர்கள் உருமாறி, கிருஷ்ணர் பெயர் சிறிது உருமாறி, மாடு ஆடாகி, கதைகள் உருமாறி விட்டன.

இதை அறிவுள்ள பாரத மக்கள் அறிகின்றனர். 

Tuesday 7 June 2022

கவலைகள் தீர வழி என்ன? தெய்வம் நம்மை பார்க்க, என்ன செய்ய வேண்டும்?.. திருமங்கையாழ்வார் சொல்கிறார்... அறிவோம்..

மனசு, வாக்கு, காயம் - நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இவை.

இந்த மூன்றையும் நமக்கு கொடுத்த எம்பெருமான் நாராயணன்,'இந்த மூன்றினாலும் தன்னை ஆட்படுத்தி கொள்கிறானா?' என்று பார்க்கிறார்.

மனசு:

எப்பொழுதும் தன்னை மனதில் தியானித்து (நினைத்து) கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

வாக்கு:

எப்பொழுதும் தன்னை பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

காயம்:

சரீரத்தால் எப்பொழுதும் தனக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

மனசு, காயம், வாக்கு இந்த மூன்றும் ஒழுங்காக தானே நமக்கு இருக்கிறது. 

இவை ஒழுங்காக இருக்குமாறு செய்த தன்னை நன்றியுடன் பார்க்கிறானா என்று எதிர்பார்க்கிறார் பகவான். 

இவை மூன்றும் ஒழுங்காக இல்லாத போது, எத்தனை கஷ்டங்களை ஜனங்கள் அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தை பார்த்தாலேயே நமக்கு புரிந்து விடுமே!


காயம்:

கை கால்கள் இழுத்து, முடமாகி படுத்து கிடந்தோமானால், பகவானுக்கும், பாகவதர்களுக்கும் கைங்கர்யம் செய்ய முடியுமா?

நமக்கோ, கை கால்களை நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்!

மனசு:

மனசு பித்து பிடித்து போய் விட்டால், பகவானை பற்றி சொல்ல முடியுமா?, பகவானை பற்றி கேட்கவும் முடியுமா?

நமக்கோ, மனசை நன்றாக தானே பகவான் வைத்து இருக்கிறார்

வாக்கு:

வாக்கு சிலருக்கு குளறிபோய் விடுகிறது. 

சிலர் பிறக்கும் போதே ஊமையாக பிறக்கிறார்கள். 

சிலருக்கு ரத்த கொதிப்பு உண்டாகி திடீரென்று பேச்சு நின்று விடுகிறது. 

வாக்கு போய் விட்டால், பகவந்நாமா சொல்ல முடியுமா?

நமக்கோ, வாக்கையும் நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்.


இந்த மூன்றும் சரியாக இல்லாத போது, எத்தனை துன்பத்தை அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தில் தினம் தினம் பார்க்கிறோமே!


வாக்கும், மனசும், காயமும் இன்று வரை நமக்கு ஸ்வாதீனமாக தானே இருக்கிறது? 

இதை கொடுத்தவரிடம் நமக்கு ஒரு நன்றி வேண்டாமா?


சரீரம்:

சரீரம் நன்றாக இருக்கும் போது, கண்ட இடத்துக்கெல்லாம் ஓடி சென்று பார்க்கிறோமே! ஓடி ஓடி சத்சங்கம் வரக்கூடாதா?

வாக்கு:

வாக்கு நன்றாக இருக்கும் போது, ஓயாமல் வம்பு பேசி கொண்டு, பிறரை நிந்தை செய்து கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொண்டே இருக்கிறோமே! ஹரி நாமம் சொல்ல கூடாதா?

மனசு:

மனசு நன்றாக இருக்கும் போது, எதை எதையோ நினைக்கிறோமே! எதை எதையோ நினைத்து ஆசைப்படுகிறோமே! பெருமாளையே எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்க கூடாதா? அவரை அடைய ஆசை படக்கூடாதா?

ஊமையாக பகவான் நம்மை படைக்கவில்லையே! 

அடிக்கடி உட்காரும் போதும், நடக்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், துயர் வரும் போதும், துயர் இல்லாத போதும், "நாராயணா" என்று எளிமையான நாமத்தை சொல்லக்கூடாதா?


'இந்த மூன்றையும் பகவானுக்கு ஆட்படுத்துவதே எனது லட்சியம்' என்று இருக்க வேண்டாமா?


உலகத்தில் எப்பொழுது நாம் பிறந்தோமோ! 

உடலால் உலக காரியங்கள் செய்து தான் ஆக வேண்டும், 

மனதால் உலக விஷயங்களை நினைத்து தான் ஆக வேண்டும்,

வாக்கால், உலக விஷயங்களை பேசி தான் ஆக வேண்டும்.


உலக விஷயங்களை தவிர்க்க முடியாது என்பது உண்மையானாலும், அதில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ள வேண்டாமா?

வாக்கு:

இதை பேசலாம். இதை பேச கூடாது. 

பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாமே! 

அடுத்தவர் குறையை பேச வேண்டாமே! 

பொய் பேச வேண்டாமே!

சத்தியத்தையே பேசுவோமே!

அடுத்தவருக்கு நன்மை உண்டாகும் படி பேசுவோமே!

பகவானை பற்றி பேசலாமே!

இப்படி நாம் வாக்கை கட்டுபடுத்தினால், அது தானே, வாக்கால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.

மனசு:

பிறர் கெடவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாமே!

உலகத்தில் எல்லோருமே சௌக்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாமே.

மனதால் பகவானை தியானம் செய்வது சிறந்தது. பகவானை மனதால் நினைக்கலாமே! 

இப்படி நாம் மனதை கட்டுபடுத்தினால், அது தானே, மனதால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.


மனசு, வாக்கு, காயம் இந்த மூன்றையும் பகவான் நம் அனைவருக்கும் கொடுத்து இருக்கிறாரே!

இவையெல்லாம் நமக்கு உபயோகப்படும்படியாக, தாறுமாறாக போகாமல், பகவான் கொடுத்து இருக்கிறாரே! நமக்கு நன்றி உணர்ச்சி வேண்டாமா?

இதை அவருக்கு அர்ப்பணம் செய்வது தானே, நாம் பகவானுக்கு செய்யும் நன்றி


அப்படி பகவானுக்கு அர்ப்பணம் செய்யாமல், வாக்கு, மனசு, காயம் அனைத்தையும் உலக விஷயங்களுக்கே உபயோகம் செய்தால்,"நன்றிகெட்ட இவனை சுமப்பது வீண்" என்று பாரமாக நினைப்பாளே பூமா தேவி தாயார்.


பிரளயகாலத்தில் சரீரம், வாக்கு, மனசு இல்லாமல் இருளில் (தமஸ்) கிடந்த நம்மை,

உலகத்தை படைத்து, தூங்கும் குழந்தையை தாய் எழுப்பி பால் கொடுப்பது போல, நம்மை எழுப்பி, வாக்கு, சரீரம், மனசு கொடுத்தாரே!


சரீரத்தில் கண்ணை கொடுத்து, காதை கொடுத்து, மூக்கு கொடுத்து, நாக்கு கொடுத்து, எழுப்பி விட்டார்.

இப்படி ஒரு உதவி செய்த பிறகும், நன்றி கெட்டு பகவானை பார்க்காமல், இருக்கலாமா? 


நன்றி உடையவன், 

காதினால் பகவானை பற்றி கேட்க வேண்டும்,

வாயால் அவர் நாமத்தை சொல்ல வேண்டும்

மூக்கினால், அவர் மேனியில் பட்ட துளசியை முகர வேண்டும்.

நாக்கினால் அவருக்கு காண்பித்த பிரசாதத்தையே சாப்பிட வேண்டும்.

கைகளாலே அவருக்கு தொண்டு செய்ய வேண்டும்.

கால்களாலே அவர் இருக்கும் திவ்ய தேசம் தேசமாக செல்ல வேண்டும்.

மனதால், அவரையே தியானம் செய்ய வேண்டும்.


பொதுவாக மனசும், வாக்கும், காயம் மூன்றும் நன்றாக இருந்தாலும், நமக்கு பல சங்கடங்கள் கொடுத்து கொண்டே இருக்கும்.

காயம்:

சரீரம் அடிக்கடி நமக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கும்.

பலவிதமான வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.

முடியாத நிலை, தள்ளாமை போன்ற சங்கடங்கள் சரீரத்துக்கு வரும்.

மனசு:

சந்தேகம், எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை (அஸ்ரத்தை), உற்சாகமின்மை இவையெல்லாம் மனசுக்கு வரும் சங்கடங்கள்.

வாக்கு:

வம்பு பேச துள்ளும். ஆனால் பகவந்நாமம் சொல்ல சொன்னால் தூக்கம் வரும், இவை மனசுக்கு வரும் சங்கடங்கள்.

இந்த மூன்றும் நன்றாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்துவது என்பது நம்மால் ஆகாத காரியம்.


'பகவான் தான் நமக்கு சரீரம் கொடுத்தார், மனசு கொடுத்தார், வாக்கு கொடுத்தார்.

அவரிடம் இந்த மூன்றையும் அர்ப்பணிக்க வேண்டும்' என்று நன்றி உணர்ச்சி நமக்கு இருந்தாலும், 'அர்ப்பணிக்க முடியவில்லையே!' என்று பக்தன் வருத்தப்படுகிறான்.

இப்படி கவலைப்படும் பக்தனின் நிலையை பார்த்த

திருமங்கையாழ்வார், "கட்டுப்படுத்தும் அந்த வேலையை பகவானிடம் கொடு" என்கிறார்.


"எம்பெருமானே! உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று தானே இந்த சரீரத்தை பெற்றேன். நீயும் கொடுத்தாய்.

நீ கொடுத்த இந்த சரீரம், இந்த வாக்கு, இந்த மனசு உங்களுக்கு உபயோக பட வேண்டும்.

இது தான் என்னுடைய பிரார்த்தனையும் கூட.

இந்த மூன்றினாலும் தொண்டு செய்ய (தொண்டு எல்லாம்) வேண்டி கொண்டு (பரவி) உங்கள் உத்தரவுக்காக (நின்னை) நிற்கிறேன்.

'என்னை தொழுது கொண்டு, அடி பணிந்து (தொழுது அடி பணியுமாறு) இந்த கைங்கர்யத்தை "செய்" என்று நீங்கள் ஒருமுறை சொல்லி நியமித்து விட்டால், யாருக்கும் கட்டுப்படாத இந்த மூன்றும், கட்டுப்பட்டு உங்களுக்கு வேலை செய்யுமே!' என்கிறார் திருமங்கையாழ்வார்.


வைகுண்டத்திலும் நித்யசூரிகள் உங்களுக்கு கைங்கர்யமே செய்கிறார்கள். 

மோக்ஷம் அடைந்தவர்களே உங்களுக்கு கைங்கர்யம் செய்யும் போது, உலகத்தில் பிறந்துள்ள நாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் இருக்கலாமா?


மனசு, காயம், வாக்கு மூன்றினாலும் நாம் கைங்கர்யம் செய்வதற்காக தான் கோவில் கோவிலாக அரச்சா மூர்த்தியாக பெருமாள் வீற்று இருக்கிறார்.


நம் சார்பாக ஆழ்வார் சொல்கிறார்,

"உலகத்தில் பிறந்தநாளாக, உங்களுக்கே வாக்கு, மனசு, காயத்தால் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற நன்றியோடு தான் இருக்கிறேன்.


இந்த சரீரத்தை கொடுத்த உங்களை தரிசிக்க, அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்வோமே! என்று ஆசைப்படுவேன்.


அங்கு சென்று, கூட்டலாம், கோலம் போடலாம், ஒட்டடை அடிக்கலாம், புற்களை செதுக்கலாம், பூந்தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுவேன்.


சரி, இப்படி கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தொண்டு செய்வோமே! என்று நினைத்தால், அப்புறம் குடும்பம் என்னாவது? என்று நினைவு வருகிறது.


கணவனாக இருந்தால், வீட்டில் மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

மனைவியாக இருந்தால், வீட்டில் கணவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

பிள்ளையாக இருந்தால், வீட்டில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

அப்பா அம்மாவாக இருந்தால், வீட்டில் பிள்ளைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

இவர்கள் எல்லோருக்கும் தொண்டு செய்த பிறகு, நேரம் கிடைத்தால் தானே, பகவானுக்கும், பாகவதர்களுக்கும் (அடியார்கள்) தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.


பகவானை பார்க்க கோவிலுக்கு செல்வோம், தொண்டு செய்வோம் என்று நினைத்தால், இவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டு என் தொண்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களே!


ஒரு வயசான கிழம், நான் வெந்நீர்போட்டு தருவேனா? என்று காத்து கிடக்கிறது.

மற்றொன்று மனம் பித்து பிடித்து என் தயவை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மற்றோன்று, மனம், வாக்கு, சரீரம் மூன்றும் ஒழுங்காக இருந்தும், ஒரு காரியமும் செய்யாமல், நான் செய்து தருவேன் என்று காத்து கொண்டு இருக்கிறது.

இப்படி தானே குடும்பம் இருக்கும். இவர்களுக்கு தேவையான தொண்டை செய்ய தானே வேண்டும். 

ஏகப்பட்ட குடும்ப கவலைகள் வேறு சேர்ந்து விடுகிறது.

இத்தனைக்கும் மத்தியில் 'பகவான் தானே நமக்கு வாக்கு, மனசு, சரீரம் கொடுத்து நன்றாக செயல்படும்படி வைத்து இருக்கிறார்' என்ற நன்றி உணர்ச்சி ஏற்பட்டு, எப்படியோ நேரத்தை ஒதுக்கி ஓடி கோவிலுக்கு வந்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றுவேன். கோவிலில் உங்ககளை ஒழுங்காக தரிசித்தேனா? என்று கூட தெரியாது... உடனே திரும்பும் படியாக என் நிலைமை உள்ளதே! என்று பக்தன் தவிக்கிறான்..


மனசை கொடுத்து, சரீரம் கொடுத்து, வாக்கை கொடுத்தும், பகவானுக்கு நன்றி செய்யாமல் இருப்பவர்களை பூமாதேவி "பாரம்" என்று நினைக்கிறாள்.

பகவானுக்கு இந்த மூன்றையும் ஆட்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், குடும்ப பாரம் சுமக்கும் பக்தனால் முடியவில்லையே! என்று பகவான் பார்க்கிறார்.


"இவனுக்கு சம்சாரத்தில் எத்தனை பொறுப்பு, சங்கடங்கள் உள்ளது. எத்தனை சரீர சங்கடங்கள், மன சங்கடங்கள்.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில், எப்படியோ தப்பித்து, என் கோவிலுக்கு வந்து, ஒரு நிமிடம் வந்து நின்று விட்டானே!" என்று பெருமாள், நம்மை பார்த்து விடுவாராம் (கண்டு).


இருக்கும் குடும்ப வேலைகளில், கோவிலுக்கு வந்து இவன் ஒரு நிமிடம் பெருமாள் முன் நின்றானேவொழிய, இவன் பெருமாளை ஒழுங்காக பார்க்கவில்லையாம். 

ஆனால், பெருமாள் இந்த பக்தனை பார்த்து (கண்டு) விடுவாராம்.


"இத்தனை கஷ்டத்திலும், தவறாமல் எனக்கு ஒரு தீபம் ஏற்ற நேரம் ஒதுக்கி வருகிறானே! 

இவனுக்கு இருக்கும் கஷ்டங்களை, குடும்ப சூழ்நிலையை சரி செய்து கொடுத்தால், இன்னும் உற்சாகமாக நமக்கு கைங்கர்யம் செய்ய காலையும் வருவான், மாலையும் வருவான். என்னையே சுற்றிக்கொண்டு இருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"இவனுடைய 'யோக க்ஷேமத்தை' நாம் பார்த்து கொண்டால், இவன் 'அனன்யா சிந்தையோ மாம்' என்றபடி நிம்மதியாக எனக்கு தொண்டுசெய்து கொண்டிருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"பெருமாள் நம்மை பார்த்து விட்டால், பக்தனுக்கு இருந்த கவலைகள் எல்லாம் தானாக விலகுமே. 

'நான் பார்த்து கொள்கிறேன்.. நீ கோவிலுக்கு போய் வா' என்று சொல்லும்படியாக அனுகூலம் செய்து விடுவாரே.

'உடல் சரியில்லை' என்று படுத்து கிடந்தவர்கள், 'இப்பொழுது பரவாயில்லை' என்று சொல்லி அனுகூலமாக ஆகி விடுவார்களே!

குடும்ப கஷ்டங்கள் தானாக தொலையுமே! (தான் கவலை தீர்ப்பான்)"

என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.


நம் குடும்ப, மன கஷ்டங்கள் தீர, நன்றி உணர்ச்சியை மட்டுமே, எம்பெருமான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.


"வாக்கு, மனம், காயம் இதை கொடுத்த எம்பெருமானுக்கு, இதை ஆட்படுத்த ஆசையும், நன்றி உணர்ச்சியுமே நமக்கு இருக்க வேண்டும்" என்று குருநாதரை பிரார்த்திப்போம்.

தொண்டெல்லாம் பரவி நின்னை தொழுது அடி பணியுமாறு

'கண்டு' தான் கவலை தீர்ப்பான் 

- திருமங்கையாழ்separatorவார்



Thursday 2 June 2022

ஏன் காது குத்துகிறோம்? பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்...

ஏன் காது குத்துகிறோம்?

ஓம் என்ற மந்திரம் அனைத்துக்கும் மூல (பீஜ) மந்திரம்.

ஓம் என்ற மந்திரத்துக்குள், காயத்ரீ மந்திரம் அடக்கம்.

காயத்ரீ மந்திரத்துக்குள் நான்கு வேதமும் அடக்கம்.


விநாயகர் திருமுகத்தை பார்த்தாலேயே ஓங்காரம் போல தெரியும் 

நாராயணன் வைத்து இருக்கும் பாஞ்சசன்யமும் (சங்கு) ஓங்காரம் போல இருக்கும்.

அது மட்டுமல்ல,

நம் காதை பாருங்கள்..  அதுவும் ஓங்காரம் போல இருக்கும்.


அஉம என்ற 3 அக்ஷரங்கள் சேரும் போது, ஓம் என்ற பிரணவம் பிறக்கிறது.

என்ற அக்ஷரம், ம் என்று புள்ளியோடு முடிப்பதால், ஓம் என்று சொல்கிறோம்.


அந்த புள்ளியை உணர்த்துவதற்காக, பிரணவ வடிவத்தில் இருக்கும் நமது காதில் ஒரு புள்ளியாக காது குத்துகிறோம்.


நம் காதே ஓம்காரம் என்று காட்டுகிறது சனாதன தர்மம்.

ஆதலால், 

ஓங்காரத்திலேயே அனைத்து மந்திரங்களும் அடங்கி இருப்பதால், வலது காதில் உபதேசம் செய்வார்கள்.

வலது காதில் உபதேசம் செய்வதற்கு காரணம்.. முருகன்.

முருகப்பெருமான் சிவபெருமான் வலது காதில் பிரணவத்தை சொன்னார் என்பது பிரஸித்தி.

கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சொல்கிறார். 

அது போல, 

பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? 

வலது காதை தொட்டால் கங்கையை தொட்டதாக ஐதீகம்.


த்ரிவிக்ரம அவதாரம் நடந்த சமயத்தில், பெருமாள் ப்ரம்ம லோகம் வரை தூக்கி அளந்து விட்டார். 

அப்பொழுது பிரம்மா கங்கையை கொண்டு பாத பூஜை செய்தார். 

கங்கையும் பெருமாள் பாதம் பட்ட ஆனந்தத்தில் சத்ய லோகத்திலிருந்து, கீழ் லோகங்களான தப லோகம், பிறகு ஜன லோகம், பிறகு மகர லோகம் பிறகு சுவர்க்க லோகம் வரை வந்தாள்.

அதற்கு பிறகு இருக்கும் பூலோகம் வர பிடிக்காமல் அங்கேயே தங்கி விட்டாள்.

"பாபிகள் வந்து ஸ்நானம் செய்வார்களே!" என்று அருவெறுத்தாள்.

பரமாத்மா நாராயணன், பகீரதன் வம்சத்தில், ராமனாக அவதரித்தார்.

பகீரதன் கடும் தவம் செய்து தனது பித்ருக்கள் கரையேற கங்கையை வரவழைத்தார். 

"ஹரி நாமத்தை சொல்லி கொண்டே பாகவதர்கள் ஸ்நானம் செய்வார்களே, அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாமா?" என்று கேட்டதும், உற்சாகமாக மஹா வேகத்தோடு பூலோகத்தில் விழுந்தாள். 

சிவபெருமான் அவளை தன் தலையில் விழச்செய்து, தன் கேசத்தால் வேகத்தை கட்டுப்படுத்தி, ஒரு கேசத்தை மட்டும் விலக்க, அதன் வழியாக துள்ளி குதித்து பூலோகத்தில் ஓடினாள். அப்பொழுது அலகநந்தா என்று பெயர் பெற்றாள்.

ஒரு சிறுமி போல, பகீரதன் மடியில் அமர, கங்கை 'ஊர்வசி' என்ற பெயரும் பெற்றாள்.

அப்பொழுது, ஜன்ஹு என்ற முனிவரின் ஆஸ்ரமத்தை கவனிக்காமல், படுவேகமாக ஓடி வந்தாள்.

கங்கை தன் ஆசிரமத்தை அழித்து விடுவாள் போல இருக்கிறதே என்று நினைத்த ஜன்ஹு, தன் தபோ பலத்தால், வந்த கங்கையை குடித்து விட்டார்.

நடந்த விபரீதத்தை பார்த்த பகீரதன், கங்கை வந்த காரணத்தை கூறி பிரார்த்திக்க, அந்த கங்கையை தன் வலது காது வழியாக விட்டு விட்டார்.

அப்பொழுது கங்கைக்கு "ஜான்ஹவி" என்ற பெயர் ஏற்பட்டது.

கங்கையில் நீராடினால் மட்டும் தான் நாம்  சுத்தமாவோம் என்றில்லை. பெருமாளின் பாதத்தை தொட்டு, சிவபெருமான் தலையிலிருந்து ஓடி வரும் கங்கையை நினைத்தால் கூட நாம் சுத்தமாகி விடுவோம். 

ஜன்ஹு மகரிஷியின் வலது காதிலிருந்து வந்த புனிதமான கங்கையை நினைத்து கொண்டு, நாமும் பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை தொடுகிறோம்.

இப்படி ஓடி வந்த கங்கை, பகீரதன் பின்னால் நல்ல பெண்ணாக அமைதியாக வந்தாள். அப்பொழுது அவளுக்கு "பாகீரதி" என்று பெயர் உண்டாயிற்று.

அந்த கங்கையில் தன் பித்ருக்களுக்கு காரியங்கள் செய்து, புண்ணியமான லோகங்கள் கிடைக்க செய்தார் பகீரதன்.