Followers

Search Here...

Showing posts with label ஏழை. Show all posts
Showing posts with label ஏழை. Show all posts

Wednesday 12 September 2018

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்? ஒரு அலசல்

ஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா? என்பது சந்தேகமே.
வரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.
இது சகஜம்.
நம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.



அவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.
வருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.
முடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.
கேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.
சும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.

க்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.
ஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.

திருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், "யார் வந்து இருக்கிறார்கள்? யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்?" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.
நாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
இதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?
அவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?

தன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.

அரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா? என்று கேட்டால்,
பக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம்  கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.

'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது?' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.

இந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.

கூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.
நமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.
கோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.
உண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின்  பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.

ப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.

அந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர். 

பிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா? என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும்  காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....

பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா? பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.
அர்ச்சகரை தவிர, ப்ராம்மணனாக இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.
அர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.

அதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
அவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.

தெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.
ஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.

யாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு?

சிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில்  வழிபடலாமே, பக்தி இருந்தால்.
தியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.
தன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.
தன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,
பொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும்,  நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.

இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.

பணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.
அவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.
இதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.








அரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது?
ஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.
இப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா?

தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.
தீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோம்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா? கொண்டாடுமா?

பொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.

நாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.

கோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.

மானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்"
என்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.
அவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா?
நாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.
தமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.
தமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.
தமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.

நல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.

ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், "தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருடர்கள்" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.
பதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.

பெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா?
தெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா?
நாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா?
நம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா?
ஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா? வெளிநாடுகள் செல்லலாமா? சைடு பிசினஸ் பண்ணலாமா? என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
தான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த  ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு  விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா?
இவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே!

108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா?
எத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா?
காஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் "கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா?

பெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.
அவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.

பணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா?
தெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா?' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,
பகவான் மகிழ்ச்சி அடையப்போவதில்லை.

உண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.



உண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.
மாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.

பகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.
பக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.
பக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், "பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.

பொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.

பொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.

கோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.

இடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக  கோவில்களை புதுமை படுத்துவோம்.

காட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,
இறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும்  காட்டுவோம்.

கூடி வாழ்வோம்.

ஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
  • கோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,
  • 63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,
  • 12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,
  • அகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,
  • ஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,
பிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.



நாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.
ஆன்மீகம் துளிர்க்க செய்வோம்.
ஆன்மீக அரசியலை வரவேற்போம்.
ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.
தமிழை காப்போம்.