Followers

Search Here...

Showing posts with label பகவான். Show all posts
Showing posts with label பகவான். Show all posts

Saturday 21 August 2021

பகவான் என்ன நினைக்கிறார்? எப்படி தெரிந்து கொள்வது?

ஏன் உலகம் படைக்கப்பட்டது?

நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

மனிதனின் குறிக்கோள் என்ன?

மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

இப்படி பல கேள்விகள் நமக்கு எழலாம்.. 

இந்த கேள்விக்கு பதிலை பகவான் மட்டுமே சொல்லமுடியும்.


பகவான் இதயத்தில் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடும்.


அடுத்தவர் என்ன நினைக்கிறார்? என்றே நம்மால் கண்டுபிடிக்க முடியாத போது, 

பகவானின் இதயத்தில் என்ன உள்ளது, என்று கண்டுபிடிக்க முடியுமா?


முடியும்.. என்கிறது நம் சனாதன தர்மம்.


பரமாத்மாவின் இதயமே "வேதம்".


4 வேதத்தையும் உண்மையான அர்த்தத்தோடு நாம் புரிந்து கொண்டு விட்டால், பகவான் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்...


கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைத்து விடும்.


வேதத்தை நன்கு தெரிந்து கொண்டால், நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு பகவான் என்ன பதில் சொல்கிறார்? என்று தெரிந்து விடும்.

ப்ரம்மமே பரமாத்மா. 

ப்ரம்மமே பகவான்.

ப்ரம்மமே நாம (ஒலி) ரூபத்தில் ப்ரணவமாக இருக்கிறார்.

ப்ரம்மமே ரூபத்துடன் (அ என்ற விஷ்ணுவாக) இருக்கிறார். 

 

Friday 30 July 2021

பகவான் எதை சாப்பிடுகிறார்? தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

 பகவான் எதை சாப்பிடுகிறார்? 

தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

கோவிலிலோ, நம்முடைய வீட்டிலோ உள்ள தெய்வத்துக்கு, நாம் சமைத்த உணவை சமர்ப்பிக்கிறோம் (நெய்வேதயம் செய்கிறோம்)

சமர்ப்பித்த பிறகு? 

பகவான், நாம் சமர்பித்ததை பார்த்து அதில் உள்ள தோஷங்களை நீக்கி அனுக்கிரஹம் செய்கிறார்.

வெறும் சாதத்தை, தெய்வத்துக்கு காட்டிய பிறகு, பிரசாதமாக நமக்கே அது வந்து விடுகிறது.


ஒரு ஊதுபத்தி கொளுத்தினாலும், மனம் நமக்கு வந்து விடுகிறது..




பூ அபிஷேகம் செய்தாலும், அவர் திருமேனியில் பட்ட பூவை நாம் எடுத்து கொண்டு விடுகிறோம்.


இப்படி எது கொடுத்தாலும், அதை அனுக்கிரஹம் செய்து, பகவான் நமக்கே  திருப்பி கொடுத்து விடுகிறார்.


அவர் உண்மையில் திருப்பி கொடுக்காமல் சாப்பிட்டு விடுவது ஒன்றே ஒன்று தான்...

பகவானை நினைத்து கொண்டு "ரமா ரமண கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லிவிட்டால், அந்த நாமத்தை அப்படியே சாப்பிட்டு விடுகிறார் பகவான்.


நாமத்தை சொன்ன மாத்திரம்... அப்படியே மறைந்து விடுகிறது... பிரசாதம் போல திரும்ப வருவதே இல்லை...

நாம் செய்ய கூடிய இந்த மங்களாசாசனம் தான்... பகவானை கோவிலிலோ, நமது வீட்டிலோ சாந்நித்யத்துடன் நிற்க செய்கிறது.


எந்த கோவிலில்! எந்த வீட்டில்! பகவன் நாமத்தை சொல்வதில்லையோ, அந்த இடத்தில பகவத் சாந்நித்யம் இருக்கவே இருக்காது.


வேத மந்திரத்தை கொண்டு, பகவன் நாமத்தை மங்களாசாசனம் செய்கிறோம்.


அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் போன்றவற்றை கொண்டும், பகவன் நாமத்தை தான் மங்களாசாசனம் செய்கிறோம்.


"கோடி அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சாந்நித்யம் ஏற்படும்" என்று பல கோவில்களில் செய்வார்கள்.


"கோடி பூவை பகவானுக்கு அர்ச்சனை செய்தால், பகவான் அங்கு தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்" என்று நினைத்து விட கூடாது.




"அந்த கோடி அர்ச்சனையில் என்ன சொல்லி அரச்ச்னை செய்தோம்?" என்று பார்க்க வேண்டும்..


கோடி அர்ச்சனையில்... "விஸ்வஸ்மை நம: ! விஷ்ணவே நம: !..." என்று எவ்வளவு நாமத்தை நாம் சொல்கிறோம். 

நாமத்தை சொல்ல சொல்ல, பகவான் நாம் சொல்லுமிடத்தில் சாந்நித்யத்தை காட்டுகிறார்.





கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். கொடுக்கும் துளசி, பூ, தேங்காய் போன்றவற்றிலா தெய்வத்துக்கு சாந்நித்யம் ஏற்படுகிறது? இல்லை..

அந்த அர்ச்சனையில் நாம சங்கீர்த்தனம் உள்ளது. 

அந்த நாம சங்கீர்த்தனமே பகவானை அங்கு சாநித்யத்தோடு இருக்க செய்கிறது.


எத்தனைக்கு எத்தனை கோவிலில், நம் வீட்டில், நாமம் ஒலிக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை கோவிலில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும்.


எததனைக்கு எத்தனை நாம் நமக்குளேயே "ராம... ராம... ராம..." என்று நாம ஜபம் செய்து கொண்டே இருக்கிறோமோ! அத்தனைக்கு அத்தனை நம் இதயத்துக்குளேயே தெய்வம் வந்து அமர்ந்து இருப்பதை அறிய முடியும்..

நாமசங்கீர்த்தனம் செய்து, ஹிந்துக்கள் தெய்வ சக்தியை எங்கும் நிலைபெற செய்ய வேண்டும். 

போலி பிரச்சாரங்கள் தானாக ஒழிந்து விடும்.

Tuesday 23 April 2019

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா? பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பதன் நோக்கம் என்ன?.. பிறப்புக்கும், நோய்க்கும் காரணம் என்ன?

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"
என்ற அக்கறை நம் ஹிந்து மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'பிற மதத்தவர்கள் சாக வேண்டும், மகாத்மா காந்தியாக இருந்தாலும், பில் கேட்ஸாக இருந்தாலும், என் மதத்தில் இல்லையென்றால், அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், எல்லோரும் நரகம் போவார்கள்' 
என்று உளராத, உன்னத தர்மம் கொண்டது சனாதன ஹிந்து தர்மம்.


'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய ஹிந்து தர்மம்.

'அப்துல் கலாமும், அன்னை தெரசாவும், பிற மதத்தில் பிறந்தாலும், அவர்கள் செய்த புண்ணிய செயல்களுக்கு சொர்க்கம் தான் போவார்கள், பின் மீண்டும் மண்ணில் ஹிந்து குடும்பத்தில் பிறந்து, மோக்ஷத்தை (பிறவாநிலை) அடைய, பெருமாள் பக்தி செய்வார்கள்'
என்று சொல்லி, 'யாருமே நாசமாக மாட்டார்கள், யாவரும் ஹிந்துக்களே!' என்று சொல்லி, மற்றவர்களை வெறுக்காத உயர்ந்த தர்மம் நம்முடையது.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அணுகிரஹம் செய்வார்கள், என்று பலனாக சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்' என்றும் 'அண்ணன் பெருமாள் கோவில்' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன்.

வட இந்தியாவில், வெளி நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.
'யாருமே அகால மரணம் அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.
கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை,
சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.
இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
எத்தனை அற்புதமானது நம் ஹிந்து தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.
'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.


கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.
அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் ஒரு உன்னத நோக்கம் உண்டு.
ஹிந்துவாக பிறந்ததே நாம் செய்த மஹா புண்ணியம் அல்லவா!
இந்திய பூமியை தவிர எங்கு பிறந்து இருந்தாலும், ஹிந்து தர்மத்தின் மகிமையை, அழகை உணர்ந்து இருக்க முடியுமா?
இந்திய மண்ணில் பிறந்தும், ஹிந்துவாக வாழாதவர்கள் இந்த ஜென்மத்தில் துரத்ரிஷ்டசாலிகள்.
ஹிந்து தர்மத்தில் வாழும் அனைவரும் பாக்கியாசாலிகள்.

கோவிலில் உள்ள பெருமாள், 'ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள், மகாத்மாக்களால் வழிபட்டவர்கள்' என்பதை நாம் மறந்து விட கூடாது.
'இவர் பேச மாட்டார், வெறும் கல் தானே' என்று நினைத்து விட கூடாது. இழப்பு நமக்குத்தான்.
திருமலையப்பன் பேசும் தெய்வம். நாம் நினைத்ததை நிறைவேற்றி தருவார் திருமலையப்பன்.
இல்லையென்றால், கல்லை பார்க்கவா 6 அறிவுள்ள கோடிக்கணக்கான ஜனங்கள், இந்த நவீன உலகத்திலும், தினமும் மலையேறி மலையேறி, கால் கடுக்க காத்து இருந்து தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்?
தெய்வத்திடம் அன்பு (பக்தி) உள்ள நமக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) குறைவாக இருப்பதால், நம்மிடம் மறைமுகமாகவும், மனதோடும் பெருமாள் பேசுகிறார்.
மனதில் தோன்றும் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார்.

தெய்வங்கள் ஆழ்வார்களிடம் பேசியது போல, நம்மிடம் பேச, நமக்கு அசைக்க முடியாத 'ஸ்ரத்தையும், பக்தியும்' தேவைப்படுகிறது.
சிவபெருமானும், விஷ்ணுவும் உண்மையான பக்தியுடைய இவர்களிடம் பேசியுள்ளார்கள் என்பதற்கு இவர்களின் "தெய்வ பாசுரங்களே" சான்று.
இன்றும், ஒவ்வொரு கோவிலிலும், பெருமாள் தன் சாநித்யத்தை குறைத்து கொள்ளாமல், ஆழ்வார்கள், மகாத்மாக்களின்  பிரார்த்தனைக்காகவும், ரிஷிகளின் பிரார்த்தனைக்காகவும், இன்று பிரசன்னமாக இருக்கிறார்.




நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,
அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.
ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.
அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.


கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.
ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.
அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.
ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,
அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம் - என்று வேதமே சொல்கிறது.
மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,
எத்தனை மகத்துவம் வாய்ந்தது!! என்று புரிந்து கொள்ள முடியும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.
நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.


பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.
அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.
"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் - நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - நாம் செய்த 'பாபங்களே'.
'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 
என்று வேதமே சொல்கிறது.
அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்
என்று வேத வாக்கு.

கோவிலில் நாம் பெற்றுக்கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?


பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்தனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.
அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல்படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள். கோவில்களே நமக்கு உயிர்.
நம்முடைய பெருமாளை (நம்பெருமாள்) வணங்குவோம்.
நீண்ட ஆயுளுடன் ஹிந்து தர்மத்தில் இருந்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து கொடுப்போம்.
பொய் மதங்களை துரத்துவோம்.
பொய் மதங்களில் உழலும் அனைவரையும் கிருஷ்ண பக்தி செய்ய அழைப்போம்.

Hare Rama, Hare Krishna - Bhajan 

Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon  (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)




Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka



Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள். 


Monday 11 June 2018

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?

பகவான் உலகை ஏன் படைக்கிறான்?




அனாதி காலமாய் மாயையில் மோஹித்து கிடக்கும் ஜீவக்கோடிகளை உத்தாரானம் செய்யவே பகவான் உலகை படைக்கிறான்.

பகவானின் விருப்பம் எது? 
உலகில் தோன்றிய ஜீவன்கள் தனது கர்த்தாவான நாராயணனையே காரணமான பரம் பொருள் என்றும், அவனை அடைவதே நமது லக்ஷ்யம் என்றும் தெரிந்து கொண்டு பகவத் பக்தி செய்து, முக்தி பெறுவார்கள் என்று பகவானின் விருப்பம்.

உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன ?
* ஜீவனுக்கு கண்ணனை பார்ப்பதை விட காமினிகளைப் பார்ப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண குணங்களை சிந்திப்பதை விட காமினி, காஞ்சனம் (பணம்), கீர்த்தி (புகழ்) இவைகளை சிந்திப்பதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண கதைகளை கேட்பதை விட காதல் கதைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண நாமத்தை சொல்வதை விட வம்பு பேசுவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடுவதை விட மது, மாமிசம், காபி, டீ இவைகளில் விருப்பம்.

* ஜீவனுக்கு கிருஷ்ண சரண துளசியை முகருவதை விட சென்ட், முக பவுடர் இவைகளின் நறுமனத்தில் விருப்பம்.

* ஜீவனுக்கு ஸத் சங்கத்திற்கு போவதை விட சினிமாவிற்கு போவதில் விருப்பம்.

* ஜீவனுக்கு பகவானுக்கும், பாகவதர்களுக்கும் தொண்டு செய்வதை விட சீட்டாடுவதிலும், திருடுவதிலும் விருப்பம்.





இவ்வாறு புலன்களை கொடுத்தவனிடம் கூட நன்றி இல்லாமல், விரயமாக்கும் ஜீவனுக்கு பாபமே ஏற்படுவதால், பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

பல துன்பங்களை அனுபவித்தும், விரக்தி ஏற்படுவதில்லை.


எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே

எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே:




* பிறர் மனைவியை காமத்துடன், பார்த்தவன் குருடனாகிறான்.
* பிறர் பொருளை திருடினவன், முடவனாகிறான்.
* பொய் சாட்சி சொல்பவன், ஊமை ஆகிறான்.
* அவதூறுகளை கேட்டவன், செவிடனாகிறான்.
* பிறர் ஜீவனத்தை கெடுத்தவன், தரித்ரனாகிறான்.
* பாப காரியத்துக்கு, துணை போனவன் நொண்டியாகிறான்.
* தம்பதிகளை பிரித்தவன்,, பால்ய விதவையாகிறான்.
* கர்ப்பத்தை கரைத்தவன், நபும்ஸனாகிறான்.
* சிசுவை கொன்றவன், பிள்ளை இல்லாதவனாகிறான்.
* அதிதிக்கு அன்னமிடாதவன், வயிற்று வலியடைகிறான்.

இவ்வாறு உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம் பூர்வ கர்மமே ஆகும்.

கர்ம பலனைத் தருவதின்றி, கருணா ஸாகரமான பகவான், யாரையும் சுதந்திரமாக துன்பப்படுத்த மாட்டான்.






14 மனு அரசர்கள் யார்? பிரம்மாவின் வயது என்ன?

ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகம் ஆகும்.
ஒரு ஸம்தி காலம் என்பது 17,28,000 வருடங்கள் ஆகும்.




இந்த ஸம்தி காலத்தில் (அதாவது ஒரு சத்ய யுக காலம் வரை) உலகம் நீரில் மூழ்கிவிடும்.

14 மன்வந்த்ரம், மேலும் 15 ஸம்தி காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு பகல்.

அதற்கு சமமான காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு இரவு.
ப்ரம்மாவின் இந்த இரவில், பிரபஞ்சம் அனைத்தும் இல்லாமல் அடங்கிவிடும்.

ப்ரம்மாவின் ஒரு நாள், கல்பம் என்று அறியலாம்.




ஒவ்வொரு மன்வந்த்ரமும், ஒரு மனுவால் ஆளப்படுகிறது.

இப்பொழுது நடப்பது - 7வது மன்வந்தரமான "வைவஸ்வத" மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு.

1 மன்வந்த்ரம் - ஸ்வாயம்பு மனுவால் ஆளப்படுகிறது. இந்த மனு ப்ரம்மாவின் மானசீக புத்ரன். ஸ்வாயம்பு மனு வழிபடுவதற்காக, தான் ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட "யோக நித்திரையில் உள்ள நாராயணரை" இவருக்கு தந்தார். இந்த பெருமாளே பின்பு, ஸ்ரீ ராமர் அயோத்தியில் தன குல தெய்வமாக வழிபட்டார். பின்பு, ஸ்ரீ ராமர் விபீஷணனுக்கு கொடுத்தார். விபீஷணர் அயோத்தியிலிருந்து இலங்கை நோக்கி எடுத்து செல்லும் போது, சந்தியா வந்தனம் செய்ய காலம் வந்தவுடன் இறக்கி விட, அன்று முதல், இன்று வரை ரங்கநாதராக - ஸ்ரீ ரங்கம் என்ற ஊரில் காட்சி கொடுக்கிறார்.
2 மன்வந்த்ரம் - ஸ்வரோசிச மனுவால் ஆளப்படுகிறது.
3 மன்வந்த்ரம் - உத்தம மனுவால் ஆளப்படுகிறது.
4 மன்வந்த்ரம் - தாமஸ மனுவால் ஆளப்படுகிறது.
5 மன்வந்த்ரம் - ரைவத மனுவால் ஆளப்படுகிறது.
6 மன்வந்த்ரம் - சாக்ஷுச மனுவால் ஆளப்படுகிறது.
7 மன்வந்த்ரம் - வைவஸ்வத மனுவால் ஆளப்படுகிறது.

தற்போதைய "வைவஸ்வத" மன்வந்தரம் முடிந்தபின், வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன.

இப்பொழுது நடப்பது, 28-வது மகாயுகம். அதில் கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.

கலியுக ஏறத்தாழ 3102 BC ஆண்டில் ஆரம்பிக்கிறது.

கலியுகம் முடிய இன்னும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன.
பூமியில் 4,32,000 வருடங்கள் என்பது 1 கலி யுக காலம்.


8 மன்வந்த்ரம் - ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
9 மன்வந்த்ரம் - தக்ஷ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
10 மன்வந்த்ரம் - ப்ரம்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
11 மன்வந்த்ரம் - தர்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
12 மன்வந்த்ரம் - ருத்ர ஸாவர்னி   மனுவால் ஆளப்படுகிறது.
13 மன்வந்த்ரம் - ரௌச்ய தேவ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
14 மன்வந்த்ரம் - இந்திர ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள்.




அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன

இன்றைய பொழுதில், ப்ரம்மாவிற்கு 50 வயது ஆகியுள்ளது.

இன்று ப்ரம்மா தன் 51வது வயதில், முதல் நாளை கொண்டாடுகிறார்.

50 வயதை கடந்துவிட்டதால், ப்ரம்மா இப்பொழுது தன் இரண்டாவது பரார்த்தத்தில் உள்ளார்.



பக்தி யோகம் என்றால் என்ன?




  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம்
இவற்றில் பக்தி யோகம் அனைவராலும் கடை பிடிக்க கூடிய யோகம்.

கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை, தன் முயற்சியால் முன்னேற வேண்டியுள்ளது.
இந்த யோகங்கள் ஸாதனை வடிவமானது.
ஸாதனைக்கு மட்டும், பகவான் அவ்வளவு சுலபமாய் கிடைப்பதில்லை.

பக்தி யோகத்திலோ, 
பக்தன் பகவானிடம் பக்தி செய்கிறான்.
பகவான் பக்திக்கு வசமாகிறான்.
பகவான் பக்தனை கரையேற்றுகிறான்.
அதனாலேயே பக்தன் எதிலும் கவலை படமாட்டான்.




"என் பக்தன் நாசமாக மாட்டான்" (நமே பக்த: ப்ரணஸ்யதி) என்று பகவான் ப்ரதிக்ஞை செய்கிறான்.

தன் பக்தன் வழி தவறிப் போனால் கூட, பகவான் அவனை தடுத்து ஆட்கொண்டு, நேர் வழியில் திருப்பி விடுகிறான்.

இங்கு பக்தன் என்பவன் யார்?
பகவானிடம் பக்தி செய்பவன் பக்தன்.

கடினமான தவம் செய்து ராவணன், இரணியன் போன்றோர்கள், தேவர்களை, பிரம்மாவை, சிவனையும் வசம் செய்து வரம் பெற்றனர்.
ஆனால் அவர்களால் இந்த கடின தவத்தின் மூலம், பகவான் - நாராயணனை வசம் செய்ய முடியவில்லை.
ஹரிபக்தி இல்லாத கர்ம யோகம் (தவம், தானம், யாகம், வேதாத்யயனம்) ஞான யோகம் எதற்கும் பகவான் வசமாவதில்லை.

பக்தி என்றால் என்ன?
பகவானிடம் வைக்கும் ப்ரியம் தான் பக்தி.



Friday 13 April 2018

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் என்ன?. கிருஷ்ணணே பகவான்

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்

இந்த ஆறும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்ததை இனி பார்ப்போம்.

1. பூர்ணமான ஐச்வர்யம் : (Complete Power to create, maintain, destroy)
  • படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவை போல, வத்ஸா பஹரண லீலை செய்து, பிரம்மாவை போல படைத்தது,
  • அழிக்கும் தொழிலை செய்யும் ருத்திரனை போல, பாணாஸுர யுத்தத்தில் ருத்திரனை வென்று, பாணாஸுரனை வதம் செய்தது,
  • வைதீகன் பிள்ளைகளை மீட்டதில் விஷ்ணுவையும் அடக்கினதாலும்,
  • இந்திரனை கோவர்த்தன லீலை செய்து தோற்கடித்தும்,
  • ஸாந்தீபனியின் பிள்ளையை யமனிடம் மீட்டதும், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஐச்வர்ய ஸ்வரூபம் என்று தெரிகிறது.

2. பூர்ணமான தர்மம் :  (Stand by Dharma)
  • அதர்மம் செய்த கம்சன், நரகாசுரன், பாணாசுரன், ஜராசந்தன், கௌரவர்கள் அனைவரையும் அழித்து, தர்மத்தை நிலை நாட்டி
  • யுதிஷ்டிரனை ஆட்சியில் அமர்த்தியதில், 
ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான தர்ம ஸ்வரூபம் என்று தெரிகிறது.

3. பூர்ணமான புகழ் : (Fame beyond boundary)
  • ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற என்றும் நிலைக்கும் பிரமாணங்களே 
பூர்ணமான புகழ் கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது.




4. பூர்ணமான ஸ்ரீ :  (Complete Wealth)
  • மஹாலக்ஷ்மி ஸ்ரீகிருஷ்ணருக்கு ருக்மிணியாக சேவை செய்தாள் எனில், ஸ்ரீ கிருஷ்ணரை விட பூர்ணமான ஸ்ரீமான் யார்? 
  • செல்வம் கொழித்த தேசமாக இருந்தது துவாரகை.
    ஸ்ரீ கிருஷ்ணரை நம்பியதாலேயே பெரும் செல்வம் அடைந்து, பேரரசனும் ஆனார் தர்மபுத்திரர். 
  • ஏழை பிராம்மணன் குசேலர் என்ற சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க சென்றதற்கே அவர் பெரும் செல்வந்தனாக ஆனார் என்ற நிகழ்ச்சிகளே 

ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான ஸ்ரீமான் என்று தெரிகிறது.

5. பூர்ணமான வைராக்யம் :
  • ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ரேசன் ஆயினும், அநாதி ப்ரம்மச்சாரி என்று ஸ்ரீ கிருஷ்ணரை, ப்ரம்மச்சாரியான பீஷ்மரும், சுகரும் சொல்லும் போதே பூர்ணமான வைராக்யம் ஸ்வரூபமாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று தெரிகிறது. 
  • பிறக்கும் போதே தாயும், தந்தையும் சிறையில், தனக்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் கொலை செய்யப்பட்ட சோகம், கோகுலத்தில் வளரும் போதே குழந்தையாக இருந்ததில் இருந்தே கொலை செய்ய பல வித முயற்சி, பல விதத்தில் ஜராசந்தன் போன்றவர்களால் யாதவர்கள் இன்னல் போன்றவை ஏற்பட்டும், ஸ்ரீ கிருஷ்ணர் எந்த நிலையிலும் மனம் தளராத தீரனாகவும், மகிழ்ச்சி குறையாதவனாகவும், சம நிலையில், புலம்பல் இல்லாமல், அழுகை இல்லாமல், அனைத்து கஷ்டங்களையும் எளிதாக சமாளித்து, மற்றவர்களும் இவரால் பயன் பெறும் வகையில் பூர்ணமான வைராக்ய ஸ்வரூபமாக இருந்தார். 
  • பகவத் கீதை முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணமான வைராக்கியம் உடையவர் என்று உணர்த்துகிறது.

6. பூர்ணமான மோக்ஷம்:
  • மோக்ஷம் என்ற வைகுண்டம் நாராயணர் மட்டுமே கொடுக்க கூடியது. 
  • எந்த புண்யத்தாலும் சம்பாதிக்க முடியாத மோக்ஷம் என்ற வைகுண்டத்தை
  • எந்த தகுதியும் இல்லாத பூதனை போன்ற அல்பத்திற்கும் தன் சங்கல்பத்தில் (விருப்பத்தில்) வைகுண்டம் கிடைக்கச் செய்தார்.
பகவான் என்ற சொல்லின் 6 அர்த்தங்களையும் கண்ணன் காண்பித்தான்.

நாராயணரின் விபவ அவதாரத்தில், இந்த ஆறும் நிரம்ப அவதாரம் செய்தது ஸ்ரீ கிருஷ்ண அவதாரமே.

கையை தூக்கி நோயே விலகு, பிசாசே ஓடு என்று இந்த்ரஜாலம் செய்வதும், நதியில் நடப்பதும், நதியை கடக்க முயலும் போது நதி வழி விடுவதும் அனைத்தும் ஒரு யோக கலையே.

நம் தமிழ் நாட்டில் குட்டி முனிவர் அகத்தியர் கடல் நீரை அள்ளி தன் கமண்டலத்தில் அடக்கி விட்டார்.
ராவணன் பத்து தலைகளுடன், யமனையும் சேர்த்து அடிமை செய்து விட்டான்.
வசிஷ்டர் தன் தண்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போர் படைகளை உருவாக்கி, விஸ்வாமித்திரர் அரசனாக இருந்த போது சண்டை இட்டார்.




இப்படி சாகசங்கள், ஆச்சரியங்கள், மருத்துவன் செய்ய கூடிய சிகிச்சைகள் செய்யும் இவர்களை மூடத்தனமாக பகவான் என்று ஹிந்துக்கள் கூறவில்லை.
ஞானி, மஹாத்மா, முனி, ரிஷி, ஸாது, அரசன் என்று மதிப்பு கொடுத்தனர்.

அகத்தியர், பதஞ்சலி போன்ற பெரும் முனிகளை, மதித்தனர்.
ஆனால் பகவான் என்று சொல்லவில்லை.

இந்த 6ம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருப்பதால், முழு முதல் பகவான் கண்ணனே

"பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார்?

பொதுவாக, எந்த தெய்வத்தையும் "பகவான்" என்று சொல்லி ஆனந்தப்படுகிறோம்.

புத்தரை கூட சிலர் "புத்த பகவான்" என்று சொல்வதுண்டு.

"பகவான்" என்ற மதிப்பு மிக்க அடையாளத்தை அனைத்து தெய்வங்களும் பயன்படுத்தினாலும், ஆழ்ந்து கவனிக்கும் போது, எந்த தெய்வம் "பகவான்" என்ற பெயருக்கு உண்மையில் உரிமையாளர் என்று தெரிந்து விடும்.

ஒவ்வொரு தேவதைக்கும் புராணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவபெருமானை பற்றி சொல்லும் புராணத்திற்கு "சிவ புராணம்" என்று பெயர் உள்ளது.

கணேசனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கணேச புராணம்",
முருகனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கந்த புராணம்" என்று பெயர் உள்ளது.

இப்படி ஒவ்வொரு தெய்வத்தின் புராணமும் அவரவர் பெயர்களை கொண்டிருக்க,
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சொல்லும் புராணத்திற்கு "கிருஷ்ண புராணம்" என்று இல்லாமல், அவர் பெயரை கூட பயன்படுத்த அவசியமில்லாமல், "பாகவதம்" என்று பெயர் உள்ளதை கவனிக்க வேண்டும்.

தேவியை பற்றி சொல்லும் புராணத்திற்கு கூட "தேவி பாகவதம்" என்று தேவியின் அடையாளத்தை சேர்த்து தான் பெயர் உள்ளது. 

ஆனால், ஸ்ரீ கிருஷ்ண சரித்திரத்தை சொல்லும் போது, கிருஷ்ணன் என்று சொல்லக்கூட அவசியமில்லாமல், "பாகவதம்' என்று தனித்து நிற்கிறது.

புராணங்கள் மட்டும் தான் இப்படி உள்ளது என்றில்லை.. உபதேச க்ரந்தங்களும் இப்படியே இருக்கிறது.

ருத்ரன் உபதேசித்த கீதைக்கு "ருத்ர கீதை", "சிவ கீதை" என்று பெயர்.
கணேசன் உபதேசித்த கீதைக்கு "கணேச கீதை" என்றும்,
எமன் உபதேசித்த கீதைக்கு "எம கீதை" என்றும் பெயர் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் என்றதும், "கிருஷ்ண கீதை" என்று தானே இருக்க வேண்டும்...

ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனே "பகவான்" என்பதால், அவர் உபதேசித்த கீதைக்கு மட்டும் "பகவத் கீதை" என்று பெயர் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல,
மஹாபாரதத்தில் மற்ற இடங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் சகஜமாக பேசும் இடங்களில் "ஸ்ரீ கிருஷ்ணன் பேசுகிறார்" என்றே காண்கிறோம். 
அர்ஜுனன் பேசும் போது கூட, "அர்ஜுன உவாச" (அர்ஜுனன் பேசுகிறான்) என்றே பகவத் கீதையில் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர், உபதேசிக்கிறார் என்றதும், "கிருஷ்ண உவாச" என்ற பதத்தை பயன்படுத்தாமல், "பகவான் உவாச... பகவான் உவாச... பகவான் உவாச..." என்று கீதை முழுக்க "பகவான் பேசுகிறார்... பகவான் பேசுகிறார்..  பகவான் பேசுகிறார்" என்று இருப்பதை காண்கிறோம்.

பகவான் பேசும் கீதையை படிக்க யாருக்கு தான் ஆசை ஏற்படாது. 

கிருஷ்ண சரித்திரம் "பாகவதம்' என்றும்,
அவர் உபதேசம் செய்தால் "பகவத் கீதை" என்றும்,
அவர் பேசுனால், "பகவான் உவாச" என்றும் பார்க்கும் போது "பகவான்" என்ற பெயருக்கு உரிமையாளன் யார் என்று தெளிவாக நமக்கு தெரிகிறது.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சேர்த்து சொல்லப்படுகிறது. 

இந்த 6ம் ஒரு சேர பெற்றவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே. 

ஸ்ரீ கிருஷ்ணரே "பகவான்"