Followers

Search Here...

Showing posts with label நாராயணன். Show all posts
Showing posts with label நாராயணன். Show all posts

Wednesday 26 December 2018

பாசுரம் (அர்த்தம்) - அகலகில்லேன் இறையும் என் - நம்மாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா? தெரிந்து கொள்வோமே!!

அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)





திருவேங்கடமுடையானிடம் தன்னை ஒப்படைத்து, சரணாகதி செய்யும் பாசுரம்.
நம்மாழ்வார் அருளியது. மிகவும் பிரசித்தி பெற்ற பாசுரம்.

'பூலோகத்தில் அவதாரம் செய்ய போகிறேன்' என்று பெருமாள், 'ராம' அவதாரம் செய்த போது, தாயார் 'சீதை'யாக அவதரித்தாள். 
தாயார் உலக கஷ்டங்களை விட, பெருமாளை பிரிந்து வாடும் படியாக ஆகி விட்டது.
'கிருஷ்ண' அவதாரம் செய்த போதும் 'ருக்மிணி' தேவியாக தாயார் அவதரித்து விட்டாள்.
எங்கோ ஒரு அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று கதற, அவளுக்காக ஓடினார்.
அர்ஜுனனுக்காக, தர்மபுத்திரருக்காக ஓடினார்.

"தான் தனித்து இனி அவதாரம் செய்வதே கூடாது" என்று முடிவு செய்து, தாமரை (அலர்) மேல் வீற்று இருக்கும் பத்மாவதி தாயார், பெருமாள் அர்ச்சா ரூபத்துடன் திருமலையில் கலி ஆரம்பத்தில் அவதரிக்க சங்கல்பிக்க,
'இனி தனித்த அவதாரம் தான் செய்ய போவதில்லை'
என்று முடிவு செய்து, அந்த மஹாலக்ஷ்மியான பத்மாவதி தாயார், பெருமாளின் ஸ்ரீவத்ச சின்னம் உடைய மார்பில் அவதரித்து விட்டாளாம்.

பெருமாள், "தனியாக அவதாரம் செய்யேன்" என்று சொன்னாலும், "முடியவே முடியாது" என்று பிடிவாதம் செய்து பெருமாளின் மார்பை விட்டு பிரியாமல் உறைகிறாளாம்.

பெருமாளின் மார்பில், உறைந்து இருக்கும் தாயாரை கவனித்த நம்மாழ்வார்,
அகலகில்லேன் இறையும் என்று*
அலர்மேல் மங்கை உறை மார்பா  

என்று பெருமாளை அழைக்கிறார் நம்மாழ்வார்.
அலர் (தாமரை) மேல் மங்கை (அலமேலு தாயார்)
என்ற தமிழ் பெயருக்கு சமஸ்க்ருதத்தில் "பத்மாவதி" என்று பொருள்.
ப்ரம்மாவுக்கும் ஆயுசு உண்டு.
மகா பிரளய காலத்தில், பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், ப்ரம்ம லோகம் முதல் பாதாளம் வரை, அழிந்து விடும்.
ப்ரம்மாவுக்கு பின், மீண்டும் ஒரு ப்ரம்மாவை படைத்து, மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய செய்கிறார் பரமாத்மாவாகிய நாராயணன்.
  • சொர்க்கத்தில் உள்ள தேவர்கள்,
  • ஜன, தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள்,
  • சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்மா உட்பட
அனைவரும் ஒரு நாள் அழிந்து விடுவார்கள். 
ஆனால், "வைகுண்டம் அழிவதில்லை".

சொர்க்கலோகத்தில் உள்ள தேவர்களுக்கும் - "அமரர்கள்" என்ற பெயர் உண்டு.

அம்ருதம் குடித்ததால் இவர்களுக்கும் "அமரர்கள்" என்று பெயர் வந்ததே தவிர, 
உண்மையான அமரர்கள் வைகுண்டத்தில் இருக்கிறார்கள்.

இங்கு ஆழ்வார் "நிகரில் அமரர்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் என்று கவனிக்கிறோம்.
வைகுண்டத்தில் இருக்கும் பரவாசுதேவனுக்கு "நிகராக" என்றுமே "அமரராக" இருக்கும், மோக்ஷம் அடைந்த "நித்ய பார்ஷதர்களை" இங்கு "நிகரில் அமரர்" என்று குறிப்பிடுகிறார் நம்மாழ்வார்.

வைகுண்டத்தில் உள்ள "நித்ய பார்ஷதர்கள்" வைகுண்ட நாதனை போல, அவர்களும் எப்பொழுதும் இருப்பவர்கள். மோக்ஷம் அடைந்தவர்கள்.

பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்டநாதனுக்கு,
                      உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், 
                      உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் 
என்ற பொறுப்பு உண்டு.

நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு, அந்த பொறுப்பு கிடையாது.
இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே.
தேவைப்பட்டால், இவர்களே "ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை" வந்து போகவும் முடியும்.
இவர்கள் சுதந்திரமானவர்கள், அமரர்கள்.
இனி பிறவி (பிறப்பு, மரணம்) எடுக்காதவர்கள்.






அப்படிப்பட்ட "அழிவில்லாத" வைகுண்டத்தில் இருக்கும்
"அமரர்களான" நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), ஆசைப்பட்டு (விரும்பும்) பூலோகத்தில் உள்ள "திருமலை"க்கு வந்து, சாதாரண மனிதர்களை போலவே ரூபம் தரித்து,
நம்மை போன்ற சாதாரண ஜனங்களோடு ஜனங்களாக நம் கூடவே நின்று கொண்டு, நம்மை நெருக்கி கொண்டு, பெருமாளை தரிசனம் செய்ய வருகிறார்களே !! 
என்று தன் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களும் சேவை செய்ய விரும்பும் பெருமையுடைய 'திருவேங்கடத்தானே' என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை, பெருமையை நமக்கு இந்த பாசுரத்தில் காட்டுகிறார்.
வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே, "திருமலை வந்து விரும்பி சேவிப்பார்கள்" என்றால்,
"இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடியை தவிர வேறு என்ன கதி இருக்க முடியும்?"
என்று சொல்லுமிடத்தில், நம்மாழ்வார்,
"மோக்ஷத்தின் சாவி அவர் கையில் மட்டுமே உள்ளது. 
வெங்கடேச பெருமாளை சரணாகதி செய்யாமல் இருந்தால் நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
சரணாகதி  செய்வதை தவிர, நம் மோக்ஷத்திற்கு வேறு கதியே இல்லை
என்று நம்மை  எச்சரிக்கிறார்.

மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"நித்ய பார்ஷதர்களுக்கு 'திருமலை' இல்லையென்றால், 'வைகுண்டம்' இருக்கிறது. அங்கு போய் அவர்களால் உமக்கு சேவை செய்ய முடியும்.
ஆச்சரியம்,
நித்ய பார்ஷதர்களே எங்களுக்கு வைகுண்டம் வேண்டாம் !! திருமலை தான் வேண்டும் !!
என்று வரும்போது,
'பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி' என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று உள்ளம் உருகுகிறார் நம்மாழ்வார்.
மேலும் நம்மாழ்வார் சொல்கிறார்,
"வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு, திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி !!
'புகலிடம் இல்லாத அடியேன், 
உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே'" 
என்று சொல்லி ஏழுமலையானுக்கு தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார்.

இங்கு பாசுரத்தை கவனித்தோம் என்றால்,
"உன் திருவடியில் புகுந்தேனே" 
என்று சொல்லாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"
என்று நிதானித்து ஏழுமலையானிடம் விண்ணப்பிக்கிறார் நம்மாழ்வார்.
இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார்,
"நான் 'மோக்ஷத்திற்கு தகுதி உடையவன்' என்றாலும், உடனே தந்து விட வேண்டாம்.
கொஞ்ச காலம், 
திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து, என் ப்ராரப்த காலம் முடிந்த பின்னர் மோக்ஷம் கொடுங்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

ஒவ்வொரு சொல்லிலும் தெய்வீக அர்த்தம் உள்ளதினாலேயே ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்கள் வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறது.



பொதுவான ஒரு கேள்வி !!

பூமியில் புண்ணியம் செய்பவர்களுக்கு, "சொர்க லோகம்"  கிடைக்கிறது.
புண்ணியம் தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.
பூமியில் பாவம் செய்பவர்களுக்கு, "நரக லோகம்"  கிடைக்கிறது.
பாவத்திற்கான தண்டனை தீர்ந்த பின், மீண்டும் பூமியில் பிறக்கிறோம்.

மீண்டும் பிறக்காமல் இருக்க, மோக்ஷம் அடைவதே (வைகுண்டம் புகுவதே) வழி.
மோக்ஷத்திற்கான அனுமதியை தருபவர் வெங்கடேசபெருமாள் மட்டுமே. நாராயணன் மட்டுமே. பரவாசுதேவன் மட்டுமே.

பெருமாள் யாருக்கு மோக்ஷம் கொடுக்கிறார் ?
மோக்ஷத்திற்கான தகுதி என்ன?

இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.

1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தரிசனம் அடையாமல் உயிர் தரிக்காது. இனி தாளாது" என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல், ஆனால் பூரண சரணாகதி செய்து விட்டால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை, உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும். ப்ராரப்தம் முடிந்த பின், மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

இதே நிலையில்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் பூரி ஜெகந்நாத்தில், ஸ்ரீ கிருஷ்ணருடன் உடம்போடு மறைந்து விட்டார்.
அதே போல,
பக்த மீரா பிருந்தாவனத்தில் மறைந்து விட்டாள்.

ஞானியும், 'ப்ராரப்த கர்மா'வை அனுபவிக்கிறார்கள்.

நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர் நம்மாழ்வார்.

மோக்ஷம் வேண்டி ஏழுமலையானை கேட்கும் போது, பெருமாள் இவருக்கு "உடனேயே மோக்ஷம் தர" தயாராக இருந்தாராம்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தும்,
'ப்ராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம்" நம்மாழ்வார்.

"உடனேயே மோக்ஷம் வேண்டாம், கொஞ்சம் கைங்கர்யம் செய்து விட்டு பின் வைகுண்டம் வருகிறேன்"
என்கிறார் நம்மாழ்வார்.

நித்ய பார்ஷதர்களே, வைகுண்டத்தை விட்டு, திருமலை வந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் போது, தனக்கு உடனே மோக்ஷம் வேண்டும் என்றா கேட்பார், நம்மாழ்வார்?!
இதையே,
"உன் திருவடியில் அமர்ந்து" 
என்று சொல்லி,
"எப்பொழுது ப்ராரப்த காலம் முடியுமோ ! அது வரை  திருவேங்கடமுடையானுக்கு திருமலையில் சேவை செய்து, ப்ராரப்த காலம் முடிந்த பின், வைகுண்டம் சென்று அங்கு போய் பெருமானுக்கு சேவை செய்வோம்"
என்று பிரார்த்தித்தார்.
"தெய்வ பக்தியை வளர்த்தவர்கள்" ஆழ்வார்கள், நாயன்மார்கள்.
தெய்வபக்தியோடு, "தமிழையும் அழியாமல் வளர்த்தவர்கள்", காத்தவர்கள்  ஆழ்வார்கள், நாயன்மார்கள்.

போலி தமிழர்களை புறக்கணிப்போம்.
ஹிந்துக்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளை இனம் கண்டு, பதில் கொடுப்போம்.

உண்மையான தமிழ் பாசுரங்களின் அழகை ரசிப்போம்.



"தமிழ் பற்றையும், தெய்வ பக்தியையும்"
நம் நாட்டில் வாழ்ந்த, வாழும் மகான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளால் அடைவோம்.
ஊர் முழுக்க பறை கொட்டி, ஆழ்வார்கள், நாயன்மார்கள் நமக்கு கொடுத்த, தமிழின் அழகை பெருமையை முழக்கமிடுவோம்.

உண்மையான தமிழர்கள்,
ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் கொண்டாடுவார்கள். பகிர்வார்கள்.


Friday 14 September 2018

நாராயணனே பரம்பொருள். பின்பு ஏன் பல தெய்வ வழிபாடு வேதத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது?

முசுகுந்த சக்கரவர்த்தி, ப்ருகு முனிவரிடம் காஞ்சிபுரம் வந்த  போது கேட்டார்,
"நாராயணனே பரப்ரம்மம். அவரே அனைத்துமாக இருக்கிறார். அபேதமாக இருக்கிறார் என்ற உண்மை புரிந்து கொண்டேன்.
தான் ஒருவனே தெய்வம் என்று இருக்காமல், தன் அங்கங்களாக இருக்கும் மற்ற தெய்வங்களையும் உலகிற்கு வேதத்தில் வெளிக்காட்டி, பேதமாக காட்டி கொள்வது ஏன்? பல தெய்வங்களாக காட்டிக்கொள்வது ஏன்?"
என்று கேட்டார்.
ப்ருகு சொன்னார்,
"ஜனங்களுக்கு பல வித பலன்களில் ஆர்வம் இருப்பதால், நாராயணன் தன்னை பேதமாக காட்டிக்கொள்கிறார்.

மகா கருணை உடையவர் நாராயணன்.




தான் ஒருவனே தெய்வம் என்றாலும்,
'தன்னை நேரிடையாக வணங்கினால் தான், அல்ப பலன்களாக இருந்தாலும் கொடுப்பேன்' என்று பிடிவாதம் செய்வதில்லை.
எப்படி ஒரு மருத்துவன் (டாக்டர்) வரும் நோயாளிக்கு ஒரே ஒரு  மருந்தை மட்டும் கொடுக்காமல், அந்தந்த வியாதிக்கு அதற்கு தகுந்த மருந்து அளிப்பானோ,
அது போல,
சர்வேஸ்வரனான நாராயணன்,
அக்னி தேவனை வழிபட்டால் இந்த பலன்,
ருத்திரனை வழிபட்டால் இந்த பலன்,
பிரம்மாவை வழிபட்டால் இந்த பலன்,
சாக்ஷாத் பரவாசுதேவனான தன்னையே வழிபட்டால் மோக்ஷம் என்று, பிரித்து,
அததற்கு ஆசைப்படும் ஜனங்களுக்கு, அந்தந்த தெய்வங்களிடம் பிரியம் வளர செய்கிறான்.

நாராயணன், பல வித ஆசைகள் கொண்ட ஜனங்களுக்காக பல வித தெய்வங்களை நியமித்தார்.
"படைத்தல், காத்தல், அழித்தல்" என்ற மூன்று காரியங்களுக்கு,
- ப்ரம்மாவை படைக்கும்” தொழிலை செய்யுமாறு படைத்தார்.
- சிவபெருமானை பிரளய காலத்தில் “சம்ஹாரம்” என்ற அழிக்கும் பொறுப்பை செய்யுமாறு படைத்தார்.
இவர்களுக்குள்ளே அந்தர்யாமியாக தானே இருக்கிறார். பார்க்க பேதமாக தெரிகிறார்.
- தானே காக்கும்” தொழிலை ஏற்று, விஷ்ணுவாக வ்யூக அவதாரம் செய்கிறார்.

'தான் படைத்த எந்த பிறப்பும் கீழானது இல்லை' என்று காட்ட, மகா கருணை கொண்டு, தானும் கூடவே அவதாரம் செய்கிறார்.




முப்பத்து முக்கோடி தேவர்களை நியமித்து, தானும் ஒரு தேவன் என்று அவதாரம் செய்து கொள்கிறார்.
இந்திரனின் தம்பி "உபேந்திரன்" என்று அவதாரம் செய்கிறார்.

மற்ற தேவர்கள், இவரும் ஒரு தேவன் தானே என்று நினைக்கும் அளவுக்கு தன்னை சுலபமாக்கி கொண்டு தேவர்களுடன் பழகுகிறார்.

தேவர்களிடம் மட்டுமா, திடீரென்று, மீனாகவும், பன்றியாகவும் தன்னை அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.
ரிஷிகளுக்கு நடுவே ஒரு ரிஷியாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

மனிதர்களுக்கு நடுவே தானும் ஒரு மனிதனாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.

“தான் ஒருவனே தேவன்” என்ற கர்வமே இல்லாமல், மகா கருணை கொண்டு அவதாரம் செய்து விடுகிறார்.




உபேந்திரனும் தன்னை போன்ற ஒரு தேவன் தானே! என்று தேவர்கள் நினைப்பது போல,
வராக அவதாரம் செய்த போது, பன்றிகளாக உள்ள ஜீவன்கள் இவரும் தன் ஜாதி தானே என்று நினைத்தனவாம்.

மனிதனாக அவதாரம் செய்தாலும், சாமானிய மனிதர்கள், இவரும் மனிதன் தானே என்று பேசுவர்.

இப்படி தேவர்களுக்குள் தேவனாக, மனிதர்களுக்குள் மனிதனாக, மீன்களில் ஒரு மீனாகவும் கருணையின் காரணமாக அவதாரம் செய்து விடும் இவரை, பரவாசுதேவன் என்ற உண்மையை, இவரின் "குணத்தாலும், சரித்திரத்தாலும்" மட்டுமே கண்டு கொள்ள இயலும்.

ப்ரம்மா, சிவனுக்கு நடுவில் தானும் ஒரு தொழிலை செய்யும் தெய்வம் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்து கொண்டு விடுகிறார்.

மஹாவிஷ்ணு சாஷாத் அந்த பரம்பொருளே என்று பிரம்மாவும், சிவனும் உணர்ந்து இருந்தனர்.

ஒரு முறை நாரதர், தன் பிதா ப்ரம்மாவிடம்,
"வேதமே உங்களால் தான் கொடுக்கப்பட்டது என்ற பொழுது, தாங்களே பரப்ரம்மம் என்று சொல்லி கொள்ளலாமே?"
என்று கேட்டார்.

அதற்கு ப்ரம்மா,
"யார் வேண்டுமானாலும் தன்னை 'பரம்பொருள்' என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், வேதத்தின் அபிப்ராயம் அப்படி இல்லையே.

வேத வாக்கியம், 'நாராயணன் மட்டுமே பரப்ரம்மம்' என்று சொல்கிறதே.
அப்படி இருக்க, நான் பரப்ரம்மம் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்"
என்று பதில் சொன்னார்.




(பரப்ரம்மமான புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்? Further read,
http://www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html )

இப்படி பல தெய்வங்களை படைத்து, அனைவருக்கும் தானே அந்தர்யாமியாகவும் இருந்து, அவர்களுக்குள்ளே தானும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகிக்கொண்டு, அனைவரையும் தன் மீது பக்தி செய்ய செய்து மோக்ஷம் கொடுக்கும் வரை கூடவே இருக்கிறார் நாராயணன்.

பிரகலாதன் இந்த ஞானத்துடன் இருந்ததால் தான், நாராயணனே எங்கும் வியாபித்து உள்ளார் என்று அறிந்து இருந்தான். நாராயணனே எங்கும் உள்ளார் என்று பார்த்தான்.
தன்னை சூலத்தால் குத்த வரும் அசுரர்களை பார்த்து, பிரகலாதன் சொல்கிறான்,
"என்னை குத்த வரும் உங்களிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
என்னிடத்திலும் நாராயணனே இருக்கிறார்.
நீங்கள் குத்த வைத்திருக்கும் சூலத்திலும் நாராயணனே இருக்கிறார்.
உங்களை இங்கு அனுப்பிய என் தந்தையிடத்திலும் நாராயணனே இருக்கிறார்." என்றான்.

பேதமாக உலகம் அஞானிக்கு தெரிந்தாலும், ஞானிக்கு அபேதமாகவே உலகம் தெரிகிறது.

ஞானிக்கு அனைத்தும் நாராயண ஸ்வரூபமாகவே தெரிகிறது. அஞானியாக இருந்தால் உலகம் பேதமாக தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து உலகம் பேதமாகவும், அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து வேதத்தில் சொன்ன தெய்வங்கள் அஞானிக்கு பேதமாகவும், ஞானிக்கு அபேதமாகவும் தெரிகிறது.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து,
சிலருக்கு த்வைதமாக தெய்வங்கள் தெரிவதும் உண்மை.
சிலருக்கு அத்வைதமாக தெரிவதும் உண்மை.

அவரவர்  பக்குவத்தை பொறுத்து, இரண்டுமே உண்மை என்பதால், வேதம் ஒரு இடத்தில் ஒரே தெய்வம் தான் என்கிறது. மற்றொரு இடத்தில் விஷ்ணு, சிவன், இந்திரன் என்று பிரித்து தெய்வங்கள் பல என்றும் காட்டுகிறது.

வேதத்தின் அபிப்ராயப்படி  இரண்டுமே உண்மை என்று  இருப்பதால், விஷிஷ்ட அத்வைதமே மார்க்கம் என்று காட்டுகிறது.

விஷிஷ்டஅத்வைதம், த்வைதம்-அத்வைதம் இரண்டையும் ஒப்புக்கொள்கிறது.

அத்வைதம் என்ற ஞான நிலையில் பிரகலாதன் நாராயணனையே எங்கும் கண்டான். நாராயணனையே பக்தி செய்தான்.
நாராயணனின் கருணைக்கு பாத்திரமானான்.
நரசிம்மமாக தரிசனம் பெற்றான். மோக்ஷத்திற்கு தகுதி பெற்றான்.

மோக்ஷத்திற்கு என்ன வழி என்று நீ கேட்டாயே? எனக்கு எது பாதை என்று கேட்டாயே?
நாராயண பக்தி செய்வதே, மோக்ஷத்திற்கு வழி.

நீயும் அந்த நாராயணனிடம் பிரகலாதனை போன்று திடமான பக்தியை செய். உனக்கும் தரிசனம் கிட்டும். மோக்ஷத்திற்கும் வழி கிடைக்கும்"
என்று ப்ருகு முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தியை பார்த்து அணுகிரஹம் செய்து, ஆசிர்வாதம் செய்தார்.

சந்தேகம் தெளிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, காஞ்சியில் உள்ள “ஹேம சரஸ்” என்ற அந்த பொற்றாமரை குளக்கரையிலேயே நரசிம்மமாக வந்த நாராயணனை தரிசனம் செய்ய, பக்தி யோகமாக, தவம் செய்தார்.

ப்ருகு முனிவரின் ஆசி பெற்ற, குரு கடாக்ஷம் பெற்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு, காஞ்சியில் வரதராஜனாக இருக்கும் நாராயணன், இவருக்கு "யோக நரசிம்மமாக" (அழகிய சிங்க பெருமாள்) காட்சி கொடுத்தார்.





Wednesday 12 September 2018

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்? ஒரு அலசல்

ஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா? என்பது சந்தேகமே.
வரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.
இது சகஜம்.
நம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.



அவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.
வருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.
முடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.
கேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.
சும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.

க்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.
ஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.

திருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், "யார் வந்து இருக்கிறார்கள்? யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்?" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.
நாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
இதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?
அவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?

தன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.

அரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா? என்று கேட்டால்,
பக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம்  கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.

'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது?' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.

இந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.

கூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.
நமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.
கோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.
உண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின்  பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.

ப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.

அந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர். 

பிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா? என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும்  காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....

பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா? பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.
அர்ச்சகரை தவிர, ப்ராம்மணனாக இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.
அர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.

அதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
அவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.

தெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.
ஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.

யாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு?

சிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில்  வழிபடலாமே, பக்தி இருந்தால்.
தியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.
தன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.
தன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,
பொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும்,  நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.

இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.

பணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.
அவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.
இதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.








அரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது?
ஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.
இப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா?

தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.
தீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோம்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா? கொண்டாடுமா?

பொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.

நாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.

கோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.

மானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்"
என்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.
அவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா?
நாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.
தமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.
தமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.
தமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.

நல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.

ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், "தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருடர்கள்" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.
பதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.

பெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா?
தெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா?
நாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா?
நம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா?
ஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா? வெளிநாடுகள் செல்லலாமா? சைடு பிசினஸ் பண்ணலாமா? என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
தான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த  ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு  விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா?
இவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே!

108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா?
எத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா?
காஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் "கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா?

பெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.
அவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.

பணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா?
தெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா?' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,
பகவான் மகிழ்ச்சி அடையப்போவதில்லை.

உண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.



உண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.
மாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.

பகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.
பக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.
பக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், "பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.

பொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.

பொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.

கோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.

இடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக  கோவில்களை புதுமை படுத்துவோம்.

காட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,
இறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும்  காட்டுவோம்.

கூடி வாழ்வோம்.

ஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
  • கோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,
  • 63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,
  • 12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,
  • அகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,
  • ஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,
பிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.



நாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.
ஆன்மீகம் துளிர்க்க செய்வோம்.
ஆன்மீக அரசியலை வரவேற்போம்.
ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.
தமிழை காப்போம்.




Tuesday 13 February 2018

பாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்? நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
இந்த கேள்வி இந்தியர்களை பார்த்து பொதுவாக வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுகிறது.


இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனர்.
இதில் மூன்றில் ஒரு பங்கு ஜனங்களே உள்ள நாடு அமெரிக்கா.
இந்தியாவை போன்று ஜனத்தொகை உள்ள நாடு சீனா.
ஆனால், இந்தியாவை விட, நிலப்பரப்பு பல மடங்கு பெரியது.
நில பரப்பில் பாரத தேசத்தை விட பல மடங்கு பெரியது அமெரிக்கா.
கடுமையான சட்டங்கள் உள்ள நாடுகள் இவை எல்லாம்.
சாலை விதிகளை மீறினால் தண்டனை உண்டு இந்த நாடுகளில்.
இஸ்லாமிய நாடுகளில், வேறு மத சின்னங்கள் வைத்து கொண்டாலோ, கொண்டாடினாலோ கூட கடுமையான தண்டனை உண்டு. 
"திருட்டு" போன்ற செயல்களுக்கு தலை துண்டிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் பல தேசங்களில் இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும் இந்த தேசங்களில், தனி மனிதர்கள் துப்பாக்கி வாங்கி, பாதுகாப்புக்கு வைத்து கொள்கின்றனர். என்ன விசித்திரம்?
தனி மனித பாதுகாப்புக்கு, அச்சம் பொதுவாக காணப்படுகிறது.

இந்த அச்சம், இவர்களிடம் ஒருவன் சிரித்தாலும் சந்தேகப்பட வைக்கிறது.

சிறு உதவி செய்தாலும், THANK YOU  சொல்லும் பழக்கமும்,
சிறிய தவறு செய்தாலும், SORRY சொல்லும் பழக்கமும் இவர்களுக்கு பாதுகாப்பு இன்மையால் வந்த பழக்கங்கள்.
தானாக வந்த நல்ல பழக்கங்கள் இல்லை.
கட்டாயத்தால் உயிர் பயத்தால் வந்தவைகள் இவை.

இந்தியாவை தவிர பொதுவாக மற்ற நாடுகள், கடுமையான சட்டத்தை கொண்டு தான் மக்களை வழி நடத்துகிறது.

நல்ல விஷயங்கள் யாவும் சட்டத்தாலும், பயத்தாலும் தான் இந்த நாடுகளில் நடக்கிறது.

இந்தியாவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் கடுமையான சட்டங்கள் இல்லை.
கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று சொல்பவர்கள் தான் இங்கு உண்டு. 
சட்டம் கொடுமையாக உள்ளது என்று புலம்புவோர் இங்கு இல்லை.
கடுமையான சில சட்டம் இருந்தாலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் தனி மனித ஒழுக்கம் மகான்களாலும், ரிஷிகளாலும், சாஸ்திரங்களாலும் புகட்டப்பட்டு, அது மக்கள் மனதில் ஆழ்ந்து ஊறி போய்  உள்ளது. 
பெரும்பாலும் ஹிந்துக்கள் சாத்வீக வாழ்க்கை வாழ்கின்றனர்.

சட்டங்கள் கடுமையாக இல்லாமல் போனாலும்,
அமெரிக்கா போன்ற பெரிய நிலப்பரப்பு இல்லாமல் இருந்தாலும்,
கொஞ்சம் நிலப்பரப்பில் 120 கோடி மக்களை தாங்கி கொண்டு,
120 கோடி மக்களும் கையில் துப்பாக்கி தூக்கி கொண்டு, உயிர் பயத்தால் அலையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர்.

இது எப்படி இந்தியாவில் சாத்தியமாகிறது? என்பதே நம் பாரத நாட்டிற்கு வரும் வெளி நாட்டவர்கள் கேள்வி.
நம்மிடம் உள்ள "நிம்மதியை" பார்த்து திகைக்கின்றனர்.


ஹிந்துவுக்கும், மற்ற தேசத்தில் உள்ள பிற மதத்தை சேர்ந்தவனுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் :

ஒரு பள்ளியில், ஆசிரியனாக ஒருவன் வேலை பார்த்து வந்தான்.
அவன் ஹிந்து அல்லாத வெளிநாட்டவன்.
தன் வகுப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ அந்த ஆசிரியனுக்கு பிடிக்கவில்லை.
அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், இவன் திருப்பி அடிப்பானோ?
மிகவும் சிறியவன் இவன். திருப்பி அடிக்க வாய்ப்பே இல்லை.

தைரியமாக அடிக்கலாம் என்று நினைத்தால், இவன் தன் அப்பாவை கூட்டி கொண்டு வந்து விட்டால்?
இவனின் தந்தை என்னை வெளுத்து விடுவாரே !!

இவன் அப்பனை சமாளித்து விடலாம் என்று நினைத்தாலும், இவன் போலீசுக்கு சென்று விட்டால், போலீஸ் அடியும் விழும், ஜெயிலும் கிடைக்குமே??
ஐயோ வேண்டவே வேண்டாம்..  
சமயம் கிடைக்கும் வரை பொறுமையாக இருப்போம்"
என்று நினைத்து தன் கோபத்தை அடக்கி கொண்டான்.

இப்படி "சட்டத்திற்கு பயந்து, சமுதாயத்துக்கு பயப்படுகின்றனர்" வேறு மதத்தை சேர்ந்த வெளிநாட்டினர்.
பள்ளியில் ஒரு ஹிந்து ஆசிரியனாக வேலை பார்த்து வந்தான்.
அந்த ஆசிரியனுக்கும் தன் வகுப்பில் உள்ள ஒரு சிறுவனை பார்த்தாலே என்ன காரணத்தாலோ பிடிக்கவில்லை.

அந்த மாணவனை பார்க்கும் போதெல்லாம், அந்த ஆசிரியனுக்கு, ஒரு அடியாவது பலமாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அறிவு இருப்பதால், ஹிந்து ஆசிரியன் யோசித்தான்.
"நான் ஒரு வேளை இந்த பையனை ஓங்கி அடித்தால், நான் செய்யும் பாவம் என்ற கர்மாவுக்கு, தண்டனை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அனுபவிக்க நேரிடுமே?

இவனுக்கு உள்ளே இருக்கும் பரமாத்மாவை அடித்த பாவம் சேருமே?

கடவுள் எங்கும் உள்ளார் என்று தெரியும் போது, இவனை காரணமே இல்லாமல் அடித்தால், நான் செய்யும் பாவத்துக்கு தண்டனை கிடைக்குமே?
அந்த பாவம் என்  பிள்ளைகளை பாதித்தால்?
அப்படியாவது இவனை அடித்து தான் நான் திருப்தி அடைய வேண்டுமா?
ஏன் நான் இரக்கப்பட கூடாது?

நான் ஏன் காரணமில்லாமல் ஜீவ ஹிம்சை செய்ய வேண்டும்?


என் மனதில் ஏற்படும் கோபத்திற்கு, நான் தானே காரணம். 
இவனை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? இது என் குறை தானே?

நான் ஏன் ஒதுங்கி போக கூடாது?

ஏன் நான் முயற்சி செய்தாவது, அந்த சிறுவனிடத்தில் எங்காவது ஒட்டி இருக்கும் நல்ல விஷயத்தை பார்த்து, அவனை அடிப்பதற்கு பதில், அன்பு செய்ய முயற்சி செய்ய கூடாது?"
என்று பல கேள்விகள் மனதில் எழ, கோபத்தை விட்டு, "ஐயோ பாவம்" என்ற இரக்கம் வந்தது ஹிந்து ஆசிரியனுக்கு

இந்த சாத்வீக குணம் பொதுவாக அனைத்து பாரத மக்களிடமும் இருப்பதால் தான், பாரத மக்கள் இன்று வரை நிம்மதியாக வாழ்கின்றனர்.

ஹிந்துக்கள் சுய ஒழுக்கம், பாவ புண்ணிய ஞானத்தோடு இருப்பதால், குணத்திலேயே நல்லவர்களாக இருக்கின்றனர். 

வெளி மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், சட்டத்தால் மட்டுமே நல்லவர்களாக இருக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள்.
பாதுகாப்பு இன்மை, உயிர்அச்சத்தால், வெளிநாட்டவர்கள் சொன்ன "THANK YOU", "SORRY" போன்ற வார்த்தைகள், ஹிந்துக்கள் கேட்கும் போது நல்ல பழக்கம் என்று தோன்றினாலும், அவர்களுக்கு இந்த பழக்கம் குணத்தால் வரவில்லை, பயத்தால் வந்த பழக்கமே.
மற்றவர்களை பார்த்து உயிர் பயமோ, பாதுகாப்பு இன்மையோ ஹிந்துக்களுக்கு இல்லாததால், மற்றவர்களுக்கு உள்ளும் பரமாத்மா இருக்கிறார் என்பதால், நமஸ்காரம், வணக்கம் சொல்லும் பழக்கம்  ஹிந்துக்களுக்கு இருந்ததே தவிர, "THANK YOU", "SORRY" சொல்லும் பழக்கம் நமக்கு இருந்ததே இல்லை.

120 கோடி மக்களுக்கு, சட்டம் கடுமையாக இல்லாத நிலையில், சில லட்ச போலீஸ் உண்மையில் போதுமா?
இயற்கையாகவே ஹிந்துக்களுக்கு இருக்கும் பாவ புண்ணிய அறிவாலும், ஜீவ காருண்யம் இயற்கையாக இருப்பதாலும், 120 கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், கடந்த 1200 வருடங்களில் புகுந்த பிற மதங்களால் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் உட்பட, அனைவரும் இந்த உயரிய குணத்தால் பிணைக்கப்பட்டு, தங்களை தாங்களே சட்ட ஒழுங்கு மீறாமல் பார்த்து கொள்கின்றனர்.
அவ்வப்போது ஏற்படும் மீறலுக்கு, இருக்கும் சில போலீஸ் உதவி செய்கின்றனர்.
இந்த சாத்வீக குணம் இந்த ஹிந்துக்களுக்கு எப்படி வந்தது? 
நம் பாட்டனார்களால் வந்தது.

நம் பாட்டனார்களுக்கு எப்படி வந்தது இந்த குணம்?
நம் பாரத புண்ணிய பூமியில் பிறந்த மகான்களும், ஞானிகளும், ரிஷிகளும் தந்தனர்.
இவர்களுக்கு இந்த குணம் எப்படி வந்தது?
ரிஷிகளுக்கு வேதத்தில் இருந்து வந்தது.


வேதம் எதிலிருந்து வந்தது?
வேதம் ப்ரம்மாவினால் வந்தது.
ப்ரம்மா எப்படி வந்தார்?
நாராயணனின் மூலம் வந்தார்.

நாராயணன் யார்?
நரன் (மனித) உடம்பில் புகுந்த அனைத்து ஜீவனுக்கும் அடைக்கலமாக, கதியாக இருப்பவரே நாராயணன்.
இவரே பரவாசுதேவன்.
இவரே கடவுள். இவரே பகவான்.
பாரத மக்களுக்கு இந்த குணங்கள் ஏற்பட்டதற்கு மூல காரணமாக ஸ்வயம் "நாராயணனே" இருக்கிறார்.

120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்?
பாரத மக்கள் பிடித்திருக்கும் சங்கிலியில் தலைவனாக இருக்கிறார் "பரமாத்மா".
இந்த நாராயணன், திருப்பதி, ஸ்ரீ ரங்கம் என்று ஆரம்பித்து பாரதம் முழுவதும் தன்னை வ்யாபித்துக் கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனாகவும், பெருமாளாகவும், சிவனாகவும், முருகனாகவும், வேதத்தில் சொன்ன பல தேவதைகளின் ரூபத்திலும் பரவி, இந்த சாத்வீக குணம் நம்மை விட்டு போகாமல், இன்று வரை காத்து வருகிறார்.

இந்த கலாச்சாரத்தை அதிசயித்து காண வரும் கூட்டங்கள் அதிகம்.

அதே சமயம்,
"இந்த கலாச்சாரத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன், போலி மதங்கள்,
போலி கொள்கைகள் கொண்டு, 
பணத்தை காட்டி ஏமாற்றி, 
மதம் மாற்ற, இந்த பாரத கலாச்சாரத்தை கலைக்க, போலி மத வியாபாரிகள் கொண்டு 2000 வருடங்களாக முயற்சிக்கின்றனர்.
இந்த போலிகளின் நோக்கம், இந்த ஆச்சர்யமான பாரத கலாச்சாரத்தை அழித்து, சுய நல மனிதர்களாக மாற்றி, மீண்டும் பிரித்து ஆளும் கொள்கை கொண்டு வந்து, இந்தியாவை பிடிப்பதே.


ஹிந்துக்கள் அனைவரும் "நாராயணனே கதி" என்று இருந்து, நம் கலாச்சாரத்தின் மகிமையை இந்த போலிகளுக்கும் சொல்லி,
போலிகளை ஹிந்துக்கள் ஆக்கி,
பாரதம் மட்டுமின்றி, உலகத்தையே பரஸ்பரம் வெறுப்பு காட்டாத சமுதாயம் ஆக்குவோம்.
ஹிந்து மதம் ஆரம்பம் இல்லாதது.
மனித சமுதாயத்தில், மனித படுகொலைகள் என்பது இந்த போலி மதங்கள் உருவான பின் தான் அதிக அளவில் நடந்தது.

இந்த போலி மதங்கள் உருவானதற்கு முன், அரசர்கள் போர் செய்தனர் என்று படித்து இருப்போம்.
ஆனால், இந்த போலி மதங்கள் உருவான பின்னர்,
உலக வரலாற்றை புரட்டினோம் என்றால், ஒரு நாட்டை கைப்பற்றி, அந்த நாட்டின் பொது மக்கள் வேரோடு அழிக்கப்பட்டனர் என்று பார்க்கிறோம்..
அமெரிக்கா போன்ற தேசங்கள் செவ்விந்தியர்கள் வேரோடு அழிக்கப்பட்டு பிற மதங்களால் உருவானது.
ரோமானிய கலாச்சாரம் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.
பௌத்த தேசங்கள் பிற மதங்களால் அழிக்கப்பட்டது.

இந்தியா, 1200 வருடங்கள், காரணமே இல்லாமல், இந்த போலி மதங்களால், கோடிக்கணக்கான ஹிந்துக்களை இழந்தது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
கஷ்டப்பட்டு படித்து டாக்டர் பட்டம் பெறும் தருவாயில், மீண்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து ஒரு அறிவாளி படிப்பானா?
ஒரு அறிவாளி செய்யக்கூடிய காரியம் அல்ல.
ஹிந்துவாக பிறந்தும், போலி மதத்துக்கு மாறுபவன் இது போன்ற செயல் தான் செய்கிறான்.
பல ஜென்ம புண்ணியத்தால், உலகில் பல நாடுகளில் எங்கோ பிறக்காமல், பாரத குடும்பத்தில் ஹிந்துவாக பிறக்கிறோம்.
ஹிந்து குடும்பத்தில் பிறப்பதே எத்தனை அதிர்ஷ்டம் என்பதை உலகை  கவனித்தாலே புரியும்.
இந்தியாவை தவிர எந்த மூலையில் பிறந்து இருந்தாலும் ஹிந்துவின் மகிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என்ற வார்த்தை கூட கேட்காத வாழ்க்கை வாழும் கிடைத்து இருக்கும்.


அனைவரும் ஹிந்துக்கள் ஆகி, பரஸ்பரம் அன்பு கொண்டு, ஜீவ ஹிம்சை செய்வதை தவிர்ப்போம்.

மாமிசம் உண்டு, மது அருந்தி கீழ் தரமான செயல்கள் செய்யாமல், சாத்வீகனாக வாழ்வோம். 

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka