Followers

Search Here...

Friday 31 May 2019

கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே? - என்று சொல்கிறார்கள் போலி பகுத்தறிவாளிகள்...இவர்கள் பார்ப்பது என்ன? நாம் பார்ப்பது என்ன? ஒரு அலசல்

"பகுத்தறிவாளி" என்று நினைத்து பேசுபவர்கள், ஹிந்துக்களை பார்த்து கேலியாக,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே!!"
என்று குரைக்கிறார்கள்.


'கண்ணால் எதை பார்க்கிறோமோ, அது தானே உண்மை' என்று போலி பகுத்தறிவாளிகள் நினைக்கிறார்கள்.
தங்கத்தால் ஆன கிண்ணத்தை ஒருவன் பார்த்து "கிண்ணம்" என்று சொல்கிறான்.
இதில் பால் ஊற்றி குடிக்கலாம் என்று நினைக்கிறான்.
"அப்படி சொல்லாதே... அப்படியெல்லாம் நினைக்காதே... நன்றாக பார். இது வெறும் தங்கம் தான். இனி நீ இதை 'தங்கம்' என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது தங்கம்' என்று சொல்பவனுக்கே தெரியுமே... ஆனால் இப்போது "தங்கத்தில் கிண்ணம் தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

அதே போல,
மண்ணால் செய்யப்பட்ட குதிரையை ஒரு குழந்தை பார்த்து "ஆஹா... குதிரை" என்று சொல்லி அதனுடன் விளையாடுகிறது.
"அப்படியெல்லாம் சொல்லாதே... மண் குவியல் என்று தான் சொல்ல வேண்டும்" என்று சொல்வானா ஒருவன்?
'இது மண் தான்' என்று குழந்தைக்கே தெரியுமே... ஆனால் இப்போது "அந்த மண்ணில் குதிரை தெரிகிறதே" என்று சொன்னால், போலி பகுத்தறிவாதிக்கு புரிவதில்லை.

கண்ணால் பார்ப்பது மட்டுமே நிஜம் என்றால், மனிதனுக்கு புத்தி எதற்கு? மனம் எதற்கு? மிருகமாகவே இருந்து விடலாமே..

தாய், தன் குழந்தையை பார்த்து, "என் செல்ல குழந்தை" என்று கொஞ்சுகிறாள்.

'வெளியில் என்ன பார்க்கிறாயோ அது தான் உண்மை.' என்று குரைக்கும் பகுத்தறிவாளிகள், தன் தாயிடமே சென்று,
"என்னை நன்றாக பார். சதை, எலும்பு, நரம்பு, ரத்தத்தால் செய்யப்பட்ட 80 கிலோ மாமிச பிண்டம் தான் நான்.
80 கிலோ மாமிசம் தானே உன் கண்ணுக்கு எதிரில் நிற்கிறது. இந்த மாமிசத்தை பார்த்து 'என் குழந்தை, என் குழந்தை' என்று சொல்கிறாயே!!"
என்றா தன் தாயை பார்த்து கேலி செய்வான்?

தாய்க்கு தெரியாதா, தன் குழந்தை மாமிசத்தால் ஆனவன் தான் என்று.
'மாமிச உடம்பு தான் இது' என்று தாய்க்கு தெரிந்தாலும்,
அதில் தன் குழந்தை இருப்பதை தன் மனதாலும், புத்தியாலும் பார்ப்பதால் தானே "என் மகனே" என்று கொஞ்சுகிறாள்.





தாய்க்கு பகுத்தறிவு உள்ளதா? 
கண்ணால் காண்பதே நிஜம் என்று நினைத்து குரைக்கும், முட்டாள் பகுத்தறிவாதிக்கு பகுத்தறிவு உள்ளதா?

தெய்வ நம்பிக்கை உள்ள கிறிஸ்தவன், கொலை செய்யப்பட்டு, இறந்தே போய்விட்ட ஏசுவை, தெய்வமாக நினைத்து, அவருடைய உருவத்தை சிலையாக வைத்து, "ஏசு ஏசு" என்று கல்லை பார்த்து கும்பிடுகிறான்.
இவர்களை பார்த்து,
"நன்றாக பார். கல் தானே இருக்கிறது. கல்லை பார்த்து 'ஏசு ஏசு' என்று சொல்கிறாயே, அறிவில்லை?
அவர் கொலை செய்யப்பட்டு 2000 வருடங்கள் ஆகி விட்டதே..முட்டாள்" என்றா கேட்கிறான் இந்த போலி பகுத்தறிவாதி?...

இது போன்ற முட்டாளை, கிறிஸ்துவன் மதித்தால், அது அவன் வணங்கும் ஏசுவை அவமானபடுத்தியதற்கு சமம் அல்லவா!
உண்மையான கிறிஸ்தவன், இப்படி தன் வழிபாட்டையும், தான் தெய்வமாக வழிபடும் ஏசுவையும் சேர்த்து தான் கேலி செய்கிறான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியனும் மெக்காவில் உள்ள கல்லை தன் வாழ்நாளில் ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்று நினைக்கிறான். 'கல்லை பார்க்க எதற்காக அலைகிறாய்?' என்றா கேட்பான் இந்த போலி பகுத்தறிவாதி?

தெய்வத்தை எந்த விதத்தில் கேலி செய்பவனையும், தெய்வ நம்பிக்கை உள்ளவன் தன் தலைவனாக ஏற்று கொள்ள முடியுமா?
'உன் தாய் விபச்சாரி' என்று கேலி செய்தவனை, 'பரவாயில்லை, சொல்லிக்கொள்' என்று இருப்பானா? ஒரு மான உணர்ச்சி உள்ள மகன்.

தான் வணங்கும் தெய்வத்தை பழிப்பவனை பார்த்து, 'நீ தான் என் தலைவன் சொல்வானா?' தெய்வ நம்பிக்கை உள்ளவன்..

தெய்வ நம்பிக்கை உள்ள அனைவரும் புறக்கணிக்க வேண்டியவன் அல்லவா, இந்த போலி பகுத்தறிவாதி...

மனம், புத்தி இரண்டையும் பயன்படுத்தாத இவர்களிடம், அவனுடைய தாயே புத்தி சொன்னால் கூட புரிந்து கொள்ள மாட்டானே!!

அறிவாளியாக இருந்தாலாவது, "கொஞ்சம் புத்தியை, மனதை பயன்படுத்தி பார், நான் மாமிச சரீரத்தை பார்த்து மகனே என்று சொல்லவில்லை.. அந்த உருவத்தில் என் குழந்தை இருப்பதை பார்க்கிறேன்" என்று தானே தாய் சொல்வாள்..

அது போலவே,
இறந்து போன தன் தகப்பன் உடலை பார்த்து, போலி பகுத்தறிவாதி மகனும் "ஐயோ அப்பா... அப்பா" என்று கதறி அழுகிறான்.
பார்க்க வேதனையாக இருந்தாலும், 'இவன் போலி பகுத்தறிவு அப்போது எங்கே போனது?' என்று தானே கேட்க தோன்றுகிறது.

அந்த போலி பகுத்தறிவாதி மகனிடம் சென்று,
"நன்றாக பார். இங்கு அசையாத ஒரு மாமிசம் பிண்டம் தானே இருக்கிறது.
எதற்கும் உதவாத இந்த மாமிசத்தை பார்த்து 'அப்பா... அப்பா..' என்று சொல்கிறாயே!!.. அறிவு இல்லை?"
என்று கேட்டால், அந்த போலி பகுத்தறிவு மகன் என்ன சொல்வான்?

அதே போல,
என்றோ இறந்து போனவனின், சிலையை, போட்டோவை வைத்து கொண்டு அந்த சிலைக்கு மாலையும் போட்டு, வணக்கமும் தெரிவித்து, மரியாதை செய்து மகிழ்கிறான் கோமாளியான நாத்தீகனும், போலி பகுத்தறிவாதியும்.

அந்த போலி நாத்தீகனிடம் சென்று,
"நன்றாக பார்.. இது ஒரு பேப்பர், இது ஒரு கருங்கல்.
முட்டாள்தனமாக பேப்பரை பார்த்து, கல்லை பார்த்து
'ராமசாமி கிழவன்.. ராமசாமி கிழவன்.. தான் வளர்த்த பெண்ணை கட்டிக்கொண்ட கருக்காலி" என்று சொல்கிறாயே!!..அறிவு இல்லையா"
என்று கேட்டால், அந்த நாத்தீகன் என்ன சொல்வான்?


ஐயா, நான் போட்டோ பேப்பரை பார்க்கவில்லை.. அந்த பேப்பரில் காணப்படும் இறந்து போன அந்த கிழவனை நினைத்து பார்க்கிறேன். இறந்து விட்ட அவரை பார்க்க முடியாது என்பதால், அவர் சொன்ன விஷயங்கள் என் மனதில் இருப்பதால், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த போட்டோவுக்குள் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த மரியாதையை காட்டி கொள்கிறேன்" என்று தானே சொல்வான் போலி பகுத்தறிவு பேசும் மடையர்கள்.

இதை தானே ஆஸ்தீகன், செய்கிறான்.

இறந்து போன மனிதன், கொலை செய்யப்பட்ட ஆவிகளுக்கே, தங்கள் நன்றியை தெரிவிக்க, அவர்கள் உருவத்தை போட்டோவில், சிலையாக செய்து, மாலை போட்டு, வணக்கம் செலுத்தும் போது...
சர்வ வல்லமை கொண்ட பரமாத்மா, எங்கும் உள்ள பரமாத்மாவை,
ஒரு கல்லில், போட்டோவில் இருப்பதாக பாவித்து வணங்கினால், இவன் மூளைக்கு புரியவில்லை.

இவர்களை போன்ற போலிகள், தான் கொண்டாடும் போலி தலைவனை சிலை வைத்து, மாலை போடும் போது, தாங்கள் இப்பொழுது என்ன செய்கிறோம்? என்று கொஞ்சம் விவேகம் இருந்து யோசித்தாலே,
ஆஸ்தீகன் கல்லை பார்க்கவில்லை, அதனில் தன் தெய்வத்தை பார்க்கிறான் என்று புரிந்து கொள்வான்.
அந்த தெய்வத்துக்கு மரியாதை செய்கிறான். அந்த தெய்வத்திடம் தன் பிரார்த்தனையை வைக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும்.

தான் கல்லுக்கு மரியாதை செய்யும் போது, "என் தலைவனை நினைத்து மரியாதை செய்கிறேன்" என்று பேசும் இவர்கள்,
ஆஸ்தீகன் 'சிவபெருமானை இந்த சிலையில் பார்க்கிறேன்' என்று வணங்கினால்,
ஆஸ்தீகனை கேலி செய்து, அவன் தெய்வத்தையும், கலாச்சாரத்தையும் கேலி செய்து பிழைப்பு செய்கிறான்.
இது போன்ற போலிகள், சமுதாயத்தை சீரழித்து விடுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற கீழ் தரமான போலிகளை, நாம் வழிபடும் தெய்வத்தை வெறுக்கும் போலிகளை, வேரோடு ஒதுக்க வேண்டும்.
இவர்களை சட்டத்தாலும், ஒடுக்க வேண்டும்.


தான் மட்டும் சிலை வழிபாடு செய்து, இறந்து போய் விட்ட கிழவனை வணங்குவேன், ஆனால்,
நீ எங்கும் உள்ள தெய்வத்தை உன் ஆசைக்காக ஒரு சிலையாக செய்து, 'எங்கும் இருப்பவர், அதிலும் இருக்கிறார்' என்று வழிபட்டால், கேலி செய்வேன் என்று சொன்னால்,
அது போன்ற போலிகளை ஜென்ம விரோதியாக கூட நினைக்கலாம்.

தெய்வத்தையே நிந்தனை செய்து, நம் வழிபாடுகளை கேலி செய்யும் கூட்டம், ஆசை வார்த்தை கூறி, நமக்கே வயிற்றுக்கு சோறு போட்டால் கூட, அவர்கள் முகத்திலேயே துப்பி விட வேண்டும்.

பகுத்தறிவு போர்வையில், இருக்கும் இந்த போலிகள்,  நசுக்கப்பட வேண்டும்.

மானமுள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், தெய்வ வழிபாட்டை கேலி செய்யும் இவர்களை, மதிப்பது கூட, நாம் வழிபடும் தெய்வத்துக்கு நாம் செய்யும் அவமானமாகும்.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - listen to Bhajan

Sandhya vandanam - morning with meaning



Sandhya vandanam - afternoon with meaning.

Sandhya vandanam - evening with meaning.




Saturday 25 May 2019

ஹிந்து பெயரில் மறைந்து கொண்டு, ஹிந்துக்களை பற்றி இழுவாக பேசும் பிற மதக்காரர்களை (வாஹீகர்கள்) பற்றி நாரதர் அப்பொழுதே எச்சரித்து இருக்கிறார் - தெரிந்து கொள்வோமே ! மஹாபாரதம்

சாந்தி பர்வத்தில், மோக்ஷ தர்ம பர்வத்தில் நாரதர் சொல்கிறார்.



नारद उवाच॥ 
अनाम्नाय मला वेदा 
ब्राह्मणस्या व्रतं मलम् ।
मलं पृथिव्या वाहीकाः 
स्त्रीणां कौतूहलं मलम् ॥
-  महाभारतम्-12-शांतिपर्व

நாரதர் வ்யாசரிடம் சொல்கிறார்
அனாம்நாய மலா வேதா
ப்ராஹ்மணஸ்யா வ்ரதம் மலம் |
மலம் ப்ருதிவ்யா வாஹிகா:
ஸ்த்ரீனாம் கௌதூஹலம் மலம் ||
-  மஹாபாரதம் சாந்தி பர்வா 
1.
சப்த ப்ரம்மமாகிய "வேதம்" ஓதப்படாமல் இருந்தால், அது வேதத்திற்கே கறை.
2.
ஒழுக்கமுள்ள ப்ராம்மணன், கொடுத்த வாக்கை மீறினால், அது ப்ராம்மணனுக்கு கறை.
3.
பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை.
4.
ஆர்வமே பெண்ணுக்கு கறை.
வேதம் ஓதப்படாமல் இருந்தால், வேதம் மறையும், தீயவர்களுக்கு கொண்டாட்டம்.
வேதம் உலகெங்கும் ஓதப்பட்டால், நாதீகம் அழியும். ராக்ஷஸ குணம் கொண்டவர்கள் தானாக அடங்குவார்கள்.
கொடுத்த வாக்கை மீறும் ப்ராம்மணன் மரியாதை இழக்கிறான்.
வாக்கை காப்பாற்றும் ப்ராம்மணன் மதிக்கப்படுகிறான்.


பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை/களங்கம். பாரத கலாச்சாரத்தை கெடுப்பவர்களை துடைத்து எடுத்து விட்டால், பாரத கலாச்சாரம் தானாக பிரகாசம் அடையும்.
ஆர்வமே பல சமயங்களில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
பெண்கள் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்தி, எல்லை தாண்டாமல் பழகி கொள்ளும் போது, பெண்கள் மரியாதை பெறுகிறார்கள்.



மகாபாரதம்....


மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது? சொர்க்கம் எவன் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் அது ப்ரயோஜனமில்லை...மோக்ஷமே ஜீவன் அடைய வேண்டிய இலக்கு... ஒரு அலசல்...

ராமபிரான் சரித்திரத்தில் நாம் பல விதமான "ராம பக்தர்களை" பார்க்கிறோம்.



மனிதர்களில் மட்டுமல்லாது, ராக்ஷஸர்களில், மிருங்கங்களில், பறவைகளில், ரிஷிகளில் என்று பல தரப்பட்ட பக்தர்கள், ராமரை 'பரமாத்மா'வாக அறிந்தனர்.

குறிப்பாக "சபரி மற்றும் குகன்" என்ற இரண்டு பக்தர்கள், ஸ்ரீ ராமரை தரிசிக்கும் போது, பழங்களை ஆசையோடு ராமருக்கு சமர்பிக்கும் பாக்கியம் பெற்றனர் என்று பார்க்கிறோம்.

இருவருமே காட்டுவாசிகள்.
ராமரோ அயோத்திக்கு அரசர்.

குலத்தை வைத்து பார்த்தால், இந்த இருவரை விட, உயர்ந்த சூரிய குலத்தில் உதித்தவர் ராமர்.

குணத்திலும் மேன்மையானவர்.
பராக்ரமத்திலும் நிகரற்றவர்.
பார்த்தவர்கள் பார்த்து கொண்டே இருக்க வைக்கும் அழகு கொண்டவர்.
படிப்பிலும் மேன்மையானவர்.


ஆனால் இந்த வேறுபாடுகள் நமக்கு தெரிந்தாலும், ஸ்ரீ ராமருக்கு தெரியவில்லை.

இருவரின் அன்புக்கு கட்டுப்பட்டார்.
குகன் என்ற வேடுவ குல தலைவனை, சக்ரவர்த்தி திருமகன் நண்பனாக பார்த்தார்.
நண்பனை கட்டிக்கொண்டு நலம் விசாரித்தார்.
அதற்கும் மேல், குகனுக்கு சீதையை அறிமுகப்படுத்தும் போது, 'இவள் உன் சகோதரி' என்று உறவு கொண்டாடினார்.
தன் அடியவருக்கு எளியவன் என்று இருந்தார் ஸ்ரீ ராமர்.
குகன் ஸ்ரீ ராமருக்கு, தான் கொண்டு வந்த பழங்களை சமர்பிக்கிறான்.
ஸ்ரீ ராமர் குகனின் அன்புக்கு கட்டுப்பட்டு, அதை தொட்டு ஏற்றுக்கொள்கிறார். சாப்பிடவில்லை.


ஸ்ரீ ராமருக்கு ஒரு கொள்கை இருந்தது.
பிறருக்கு தன்னிடம் உள்ளதை கொடுப்பதற்கு ப்ரியப்படுவாரே ஒழிய, மற்றவர்களிடம் வாங்கும் பழக்கம் இல்லாதவர்.
ஸ்ரீ ராமரின் கைகள் எப்போழுதுமே கொடுப்பதற்காக நீளுமே தவிர, வாங்குவதற்கு நீளாது.

இதை அறிந்த குகன், ஸ்ரீ ராமர் தான் கொடுத்த பழங்களை தொட்டு ஏற்றுக்கொண்டதே தன் பாக்கியம் என்று சந்தோஷப்பட்டார்.
ஸ்ரீ ராமர் கம்பீர புருஷன் என்று குகன் அறிந்தவரும் கூட.

அதே ஸ்ரீ ராமர், காட்டில் வசித்த வயதான மூதாட்டியான "சபரி'யை வனவாச சமயத்தில் சந்தித்தார்.
சபரியின் குருநாதர் 'மதங்க முனி' மறையும் பொழுது, 'ஸ்ரீ ராமர் வரும்வரை ஆஸ்ரமித்தில் வாழ்ந்து, ஸ்ரீ ராமரை தரிசித்த பின், உடலை பூலோகத்திலேயே விட்டு விட்டு, தான் இருக்கும் மேல்லோகத்திற்கு வர சொன்னதாக' ஸ்ரீ ராமரிடம் தன் முழு சரித்திரத்தையும் சொன்னாள்.

ஸ்ரீ ராமருக்கு தான் பறித்த பழங்களை கொடுத்து சாப்பிட சொன்னாள் சபரி பாட்டி.


தன் நண்பன் குகன் ஆசையுடன்  பழங்களை  கொடுக்கும் போது, மரியாதைக்காகவும், குகனின் அன்புக்காகவும் தொட்டு மட்டும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ராமர், 
காட்டுவாசியான சபரி கொடுத்த பழங்களை கை நீட்டி வாங்கி கொண்டார்.
யாரிடமும் வாங்குவதற்கு நீளாத கைகள், உற்ற நண்பன் குகனுக்காகவும் நீளாத கைகள், சபரி என்ற வேடுவச்சிக்காக நீண்டது.
தான் மட்டும் அல்லாமல், தன் கூட இருந்த லக்ஷ்மணரையும் சபரியிடம் பழங்களை வாங்கி சாப்பிட சொன்னார் ஸ்ரீ ராமர்.

இருவருமே வேடுவர்கள், காட்டு வாசிகள்..  சபரியை விட குகனுக்கு ஸ்ரீ ராமர் மேல் அன்பு அதிகம்.
இருந்தும் ஸ்ரீ ராமர் சபரி கொடுத்ததை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டார்?... இதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமே...

பொதுவாகவே இறை பக்தி உள்ளவர்கள் உலகில் அதிகம் காணப்படுகிறார்கள்.
குகனை போன்ற தீவிரமான இறை பக்தி உள்ளவர்களும் உலகில் உண்டு.


கோவிலுக்கு செல்லும் அனைவருமே ஏதோ ஒரு அளவில் இறை பக்தி உள்ளவர்கள் தான்.

பகவான் நாராயணன், தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரத்தை அளிக்கிறார்.
பிரார்த்தனைகளுக்கு அவர்கள் பக்தியின் நம்பிக்கையை பொறுத்து நடத்தி கொடுக்கிறார்.
திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் பிரார்த்தனை பலிப்பதால் தானே மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.
குகனை போன்ற பக்தர்கள் இருந்தால், பெருமாள் சிலையாக இருந்தாலும் கனவிலும், மறைமுகமாகவும், நேரிலும் பேசுகிறார். 
மகான்கள் சரத்திரத்தில், பகவான் பேசினார், திருவிலையாடல் செய்தார் என்று பார்க்கிறோம்.
அவரவர் பக்தியை பொறுத்து, பெருமாள் தன்னை வெளிப்படுத்துகிறார்.

குகனை போன்று, சபரிக்கு பக்தி ராமரிடத்தில் இல்லையென்றாலும், அவளின் 'குரு பக்தியும், குருவின் வாக்கின் மீது இருந்த, அசையாத திட நம்பிக்கையுமே', ஸ்ரீ ராமபிரானை அவள் கொடுக்கும் பழத்தை கை நீட்டி வாங்க வைத்தது.
பொதுவாக பெருமாளை அடைவதற்கு, குருவின் துணை இல்லாமல் பக்தி செய்வதை காட்டிலும், 'குரு பரம்பரையை ஆச்ரயித்து பக்தி செய்பவர்களுக்கு' பெருமாள் எதையும் கொடுக்க தயாராகிறார்.
பெருமாள் சுலபமாகிறார். இதற்கு காரணம் உண்டு.

இதையே குகனிடத்தில், சபரியிடத்தில் பெருமாள் பழகிய விதம் காட்டுகிறது.




குகன் பழம் கொடுக்கும் போது, தொட்டு ஏற்று கொண்ட பெருமாள்,
'குருவை ஆச்ரயித்த, குருவின் வாக்கில் துளியும் சந்தேகமற்ற' சபரி, பழம் கொடுக்கும் போது, தன் கொள்கையையும் விட்டு, கை நீட்டி அவள் கொடுக்கும் பழத்தை வாங்கி உண்டார்.
உத்தமமான குருவின் துணை கொண்டு, பெருமாளை தரிசிக்கும் போது,
சுமாரான பக்தனுக்கு கூட, பெருமாள் தடையே இல்லாமல், குருவின் பக்தியை மனதில் வைத்து கொண்டே, சிஷ்யனான பக்தனுக்கும் பேரருள் செய்து விடுகிறார்.

'உத்தமமான குருவை, உத்தமமான குரு பரம்பரையில் உள்ள குருவை நாம் ஆச்ரயிக்கும் போது', நம்மை போன்ற சாதாரண பக்தர்களை பார்க்கும் போதும், பெருமாள் அபரிமிதமான கருணையை வர்ஷித்து விடுகிறார்.

உத்தமமான ஆத்ம குருவை நாம் அடையும் போது, பெருமாளின் கிருபை எளிதாக கிடைக்கிறது.
இதற்கு ப்ரமாணம் சபரியே.

குரு பரம்பரையை ஆச்ரயித்த சபரி மோக்ஷம் அடைந்தாள். 
குரு பரம்பரையை ஆச்ரயித்தவன் வீண் போகவே மாட்டான், அவர்களும் மோக்ஷம் அடைவார்கள் என்று நிரூபணம் செய்யும் விதமாக, ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது...

ஒரு சமயம் ஸ்ரீ ரங்கத்தில், ராமானுஜர் தன் சிஷ்யர்களுக்கு ராமாயண உபன்யாசம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
சிஷயர்கள் சிரத்தையோடு கேட்டுக்கொண்டு இருந்தனர்.
விபீஷணன் ஸ்ரீ ராமரை சரணாகதி செய்யும் கட்டத்தை சொல்லி கொண்டு இருந்தார், ராமானுஜர்.
ராமானுஜரே (சாக்ஷாத் ஆதிசேஷ அவதாரம், அவரே லக்ஷ்மணன்) ராமாயண உபன்யாசம் செய்தார் என்றால், அந்த உபன்யாசம் எப்படி அற்புதமாக இருந்து இருக்கும்.
கண் கொட்டாமல் பக்தர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

விபீஷணன் சரியான காலத்தில் வரவில்லை, 
இவன் ஒரு ராக்ஷஸன், 
ராவணனின் தம்பி, 
நம் படையை வேவு பார்க்க வந்து இருக்கிறான், 
என்று பல தரப்பட்ட விவாதங்கள் வானரர்களுக்குள் நடந்து கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமானுஜர் தர்ம-அதர்ம விஷயங்கள் பற்றி ஆச்சர்யமாக காலட்சேபம் செய்து கொண்டிருந்தார்.
அனைவரும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் "பிள்ளை உறங்காவில்லி தாசர்" என்பவர், மிகவும் மனம் நொந்து, திடீரென்று உபன்யாசத்துக்கு நடுவில் எழுந்து புறப்பட தயாராகி விட்டார்.

அந்த காலங்களில்,
பகவானை பற்றிய காலட்சேபம் நடக்கும் போது,
பகவானை பற்றிய விஷயங்கள் சொல்லும் போது 
மரியாதை நிமித்தமாகவும், அலட்சியம் செய்ய கூடாது என்பதற்காகவும், உபன்யாசத்தின் நடுவில் எழுந்து போகவே மாட்டார்கள்.

ராமானுஜர், புறப்பட தயாரான பிள்ளை உறங்காவில்லியை தடுத்து நிறுத்தி, "ஏன் புறப்பட்டு விட்டீர்?" என்று கேட்டார்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் மன வேதனையுடன்,
"இலங்கை ராஜ்யத்தையே விட்டு, நாட்டை விட்டு, 
மக்களை விட்டு, அண்ணனை விட்டு, மனைவியை விட்டு, 
உற்ற உறவினர்களையும் விட்டு, அனைத்தையும் விட்டு விட்டு, 'பெருமாளே கதி எனக்கு' என்று ஸ்ரீ ராமரிடம் சரணாகதி செய்து கொண்டு நிற்கிறார் விபீஷண ஆழ்வான்.
பூரண சரணாகதி செய்த அவர் விஷயமாகவே,
'இவரை சேர்த்து கொள்ளலாமா? சேர்த்து கொள்ள கூடாதா?' 
என்று இத்தனை ஆலோசனை நடக்கும் என்றால்,
அடியேன் ஒன்றையும் விடவில்லையே!!. 
என் மனைவியை விடவில்லை. என் மக்களை விடவில்லை. எதையுமே விடவில்லையே!!. 



இப்படி இருக்க, பெருமாளுக்கு என் விஷயமாக எத்தனை ஆலோசனை இருக்கும்? 
எனக்கு எப்படி பெருமாள் அபயம் கொடுக்க போகிறார்? 
எதையுமே பெருமாளுக்காக தியாகம் செய்யாத எனக்கா வைகுண்டம் தருவார்? என்று தோன்றியதால், மனதில் அதைரியம் உண்டாகி எழுந்து விட்டேன்" என்றார்.

ராமானுஜர், பிள்ளை உறங்காவில்லி தாசரை பார்த்து,
"அது ராமர் கோஷ்டி.. நீர் ராமானுஜன் கோஷ்டி. சஞ்சலப்படாமல் உட்காருங்கள்.
விபீஷணனை சேர்த்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று ராமர் கோஷ்டியில் தான் ஆலோசனை நடந்தது.
ராமானுஜன் கோஷ்டியில் சேருவதற்கு ஆலோசனையே கிடையாது.
ஆதலால்,
'ராமானுஜரே கதி' என்று கவலைப்படாமல், அதைரியம் அடையாமல் உட்காரும்.

'பெருமாள் சேர்த்து கொள்வார்' என்று என்ன தைரியத்தில் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், சொல்கிறேன்.

இந்த ராமானுஜன் 'வைகுண்டம்' போக போவது உண்மை தானே?
ராமானுஜன் நரகம் போய்விட போவதில்லையே?
நான் வைகுண்டம் போவது சத்தியம் என்றால், உமக்கும் வைகுண்டம் கிடைக்கப்போவது சத்தியமே. உட்காருங்கள்." என்றார்.


தான் மட்டும் வைகுண்டம் போவேன்!! என்று ராமானுஜர் எப்படி நிச்சயமாக சொன்னார்?
வைகுண்டம் செல்ல அனைத்து தகுதியும் உடையவரல்லவா ஸ்ரீ ராமானுஜர். 
மறுக்க முடியுமா அவர் வாழ்க்கை சரித்திரத்தை.

'நான் ஸ்ரீ மத் ராமாயண காலட்சேபம் செய்கிறேன்.
பரத்துவ ஞானம் உடையவனாக இருக்கிறேன்.
பெருமாளிடம் பக்தி உடையவனாக இருக்கிறேன்.
உலக விஷயங்களில் பற்றில்லாமல் வைராக்கியம் உடையவனாக இருக்கிறேன்.
ஜகத் குருவாக இருக்கிறேன்.
ஸ்ரீ பாஷ்யம் எழுதி இருக்கிறேன்.
சந்யாசியாக இருக்கிறேன்.
பகவத் விஷயங்களே சொல்கிறேன்.
திவ்ய தேசங்கள் அனைத்தும் சென்று பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து இருக்கிறேன்.
அப்பேற்பட்ட தகுதிகள் மட்டுமில்லாது, நானே ஆதிசேஷன் அவதாரமும் கூட.
அப்பேற்பட்ட ஆச்சார்யனை அடைந்தும் கூடவா, பரமபதம் கிடைக்குமா,? பெருமாள் சேர்த்து கொள்வாரா? என்று உமக்கு சந்தேகம்?!!'
என்று சொல்லிக்கொள்ளவில்லை ராமானுஜர்.


தன்னை பற்றிய பெருமையை பேசவே மாட்டார் ஸ்ரீ ராமானுஜர்.
மாறாக, ஸ்ரீராமானுஜர் பேசலானார்,
"என் ஆச்சாரியன் 'பெரிய நம்பி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், அடியேனுக்கும் உண்டு.
எனக்கு வைகுண்டம் உண்டாகில், உமக்கும் உண்டு.

'ஆளவந்தாருக்கு' வைகுண்டம் உண்டாகில், அவர் சிஷ்யர் பெரிய நம்பி'களுக்கும் உண்டு.

'மணக்கால் நம்பி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'ஆளவந்தாருக்கும்' உண்டு.

'உய்யக்கொண்டாருக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மணக்கால் நம்பி'க்கும் உண்டு.

'நாதமுனி'களுக்கு வைகுண்டம் உண்டாகில், 'உய்யக்கொண்டாருக்கும்' உண்டு.

'விஸ்வத்சேனருக்கு' வைகுண்டம் உண்டாகில் 'நாதமுனி'க்கும் உண்டு.

'பெரிய பிராட்டியான மகாலட்சுமி'க்கு வைகுண்டம் உண்டாகில், 'விஸ்வத்சேனருக்கும்' உண்டு.

அந்த 'பெருமாளுக்கு' வைகுண்டம் உண்டாகில், 'மகாலக்ஷ்மி'க்கும் உண்டு.

இந்த குரு சிஷ்ய பரம்பரை பெருமாள் வரை போகிறது.
இப்பொழுது, இந்த ராமனுஜனை ஆச்ரயித்த ஒருவனுக்கு வைகுண்டம் இல்லையென்றால், இந்த தொடர் சங்கிலி வைகுண்டம் வரை சென்று, பரவாசுதேவனுக்கே வைகுண்டம் இல்லை என்று ஆக்கி விடும்.

ஆக பரவாசுதேவன், மகாலட்சுமி தொடங்கி, நாதமுனிகள் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ந்து வரும் குரு பரம்பரையில் இருந்து கொண்டும், பெருமாள் சேர்த்து கொள்வாரா என்று நீர் கவலை பட காரணமில்லையே..



நமக்கு வைகுண்டம் நிச்சயம். கிடைக்க போகும் சொத்து என்பதை உணர்ந்து,
இந்த உலகில் இருக்க போகும் காலம் வரை, நாம் காலத்தை எப்படி கழிக்க வேண்டும்? என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வைகுண்டம் கிடைக்குமா? என்று கேள்வியே எழ கூடாது.

இருக்கும் காலத்தில், ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெருமாளிடம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.
வைராக்யத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
கர்ம யோகத்தில் வாழ வேண்டும்.
அனுஷ்டானம் தவறாமல் வாழ வேண்டும்.
தியான யோகமும் செய்ய வேண்டும்.
சந்யாசமும் வாங்கி கொள்ள வேண்டும்.
என்று யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,
'நீர் ஆச்சாரியன் திருவடியே கதி' என்று இருந்தால் போதும்.
நமக்கு மோக்ஷத்திற்கான முயற்சி, சாதனை இதுவே.

யோகம் செய்பவர்கள் செய்யட்டும்.
பக்தி செய்பவர்கள் செய்யட்டும்.
சந்யாசம் வாங்கி கொள்பவர்கள் வாங்கி கொள்ளட்டும்.
குரு பரம்பரையை ஆச்ரயித்த சிஷ்யனுக்கு "ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருக்க வேண்டியது தான் மோட்சத்திற்கு சாதனம்.
"ஆச்சாரியன் திருவடியே கதி" என்று இருந்தால் போதும்.
ஆச்சாரியன் நம்மிடத்தில் ஒரு அபிமானம் கொண்டிருந்தாலே நமக்கு போதும்.
நிச்சயம் நம்மை வைகுண்டத்தில் இருந்து தள்ளி விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட குருவை ஆச்ரயித்த ஒருவன், வைகுண்டம் தனக்கு நிச்சயம் என்று கவலையே இல்லாமல் இருப்பான்.

பெருமாள் ஆரம்பித்து வரும் இத்தகைய அருமையான பரம்பரையில் ஆச்சாரியனாக ஆக கிடைத்தவன்,
தான் அடைந்த பாக்கியத்தை அறிந்து கொள்ளாமல் இருந்தால், அவனே
துர்பாக்கியசாலி.


'எத்தனை அருமையான சம்பரதாயத்தில் ஆச்சார்யனாக வந்துள்ளோம்' என்று தன் பெருமையை உணர்ந்து கொள்பவர்கள் மகா பாக்கியவான்கள்.

இத்தகைய குரு பரம்பரையில் வந்த குருவை ஆச்ரயித்த ஒருவன் 'ஆச்சரியன் திருவடியே கதி' என்று மட்டும் இருந்தாலேயே, பெருமாள் ஒரு கேள்வியும் கேட்காமல் வைகுண்ட வாசலை திறந்து விட்டு விடுகிறார்.

குருவின் சம்பந்தம் இல்லாமல், பக்தியில் சிறந்த, நண்பனான குகன், பெருமாளுக்கு பழம் சமர்ப்பிக்க, அவன் பக்திக்காக தொட்டு ஏற்று கொண்ட ராமபிரான், 
அதே சமயம், 
குருவை ஆச்ரயித்த சபரி, ஸ்ரீ ராமபிரானுக்கு பழம் கொடுக்க, அவளுடைய குரு பக்திக்கு வசப்பட்டு, யாரிடமும் தன் கைகளை நீட்டி வாங்காத ஸ்ரீராமர், அவள் கொடுத்த பழங்களை வாங்கி சாப்பிட்டார்.

சுயமாக பகவானிடம் பக்தி செய்து, அவர் அணுகிரஹத்தை பெறுவதை விட,
ஸத் பரம்பரையில் வழி வழியாக வரும் குருவை ஆச்ரயித்து, 'ஆசாரியன் திருவடியே கதி' என்று வாழ்ந்து விட்டால், பெருமாள் மரண வேதனை ஏற்படாமல், நம்மையும் வைகுண்டம் அழைத்து சென்று விடுவார்.
குருவே துணை நமக்கு. 
அனைவருக்கும் ஆத்ம குரு அவசியம்  தேவை.
ஸத் பரம்பரையாக ஏற்பட்ட குரு பீடத்தில், ஒரு குருவை ஆச்ரயிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு ஆசைப்பட வேண்டும்.
நம் பக்தியினால் மட்டுமே பெருமாளை ஆகர்ஷிக்க முடியாது. ஸ்ரீ ராமானுஜர் ஆச்ரயித்தது போன்ற ஒரு குரு பரம்பரையில் நாம் குரு சிஷ்ய சம்பந்தம் பெற வேண்டும்.
அதுவே மோக்ஷத்திற்கு வழி.


மோக்ஷம் அடையாது போனால், மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.
உலகமோ இயற்கையாகவே நம்மை பொறுத்தவரை நிலையற்றது, சுகம் நிரந்தரமாக கொடுக்காதது.
ஸ்ரீ கிருஷ்ணரும் பகவத் கீதையில், 'அநித்யம் அசுகம் லோகம்' என்று சொல்லி எச்சரிக்கிறார்.
'மோக்ஷத்திற்கு முயற்சி செய்' என்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர், 'மோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை ஒரு குரு பரம்பரையில் வந்த குருவை பற்றிகொள்வதே' என்று நமக்கு வழி காட்டி விட்டார். 
பெருமாள் நமக்கு வைகுண்ட வாசலை திறந்து விட, குருவை ஆச்ரயிப்போம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya vandanam with meaning - morning

Sandhya vandanam with meaning - afternoon



Sandhya vandanam with meaning - evening




Wednesday 22 May 2019

காலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்துக்கு கட்டுப்படுகிறாரா? தெரிந்து கொள்வோமே..

எதுவுமே காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..
இயற்கையும் காலத்துக்கு அனுசரித்து தான் நடக்கிறது.
சூரியன் உதிப்பதும், மறைவதும் காலத்துக்கு கட்டுபட்டு தான் நடக்கிறது..


வசந்த காலம், மார்கழி காலம் என்று அந்தந்த மாற்றங்கள், காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இயற்கையே செயல் படுகிறது

மனிதன் கூட காலத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்கிறான்.
எத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் 100 வயதுக்கு மேல் மனித ஆயுளை உயர்த்த முடியவில்லை. இளமையோடு வயதாகாமல் இருக்க செய்ய முடியவில்லை.
மனிதனுக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
எறும்புக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
யானைக்கு இத்தனை ஆயுள் காலம் தான்,
என்று அனைத்து உயிர்களுக்கும் கால நிர்ணயம் உள்ளது.
எத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் காலத்திற்கு கட்டுப்பட்டு இறந்து தான் ஆக வேண்டும்.



உயிர்கள் மட்டுமல்ல, அற்புதமான பெரிய கார் தயாரித்தாலும், உணவுகள் தயாரித்தாலும் அனைத்துக்கும் கால வரம்பு உண்டு. Expiry Date உண்டு.

காலத்துக்கு கட்டுப்பட்டு தான், அனைத்துமே இயங்குகிறது என்று சாதாரண அறிவுள்ளவன் கூட புரிந்து கொள்கிறான்.

முப்பத்து முக்கோடி தேவர்கள், ப்ரம்ம தேவன், ரிஷிகள் என்று நம்மை விட உயர்ந்த, சக்தியுடைய இவர்களையும் இந்த காலம் கட்டுப்படுத்துகிறது.
இவர்கள் அனைவருக்கும் கூட காலம் உண்டு. அழிவு உண்டு.


யாரையும் கட்டுப்படுத்தும் இந்த கால சக்கரத்தை இயக்குபவர் யார்? 
காலம் சுதந்திரமானதா, இல்லை காலத்தையும் கட்டுப்படுத்தும் ஈஸ்வரன் உண்டா? என்று கேள்வி எழுகிறது.
இந்த கால சக்கரத்தையும் கட்டுப்படுத்த வல்லவர்,
காலத்தை தன் ஆளுமையில் வைத்து இருப்பவர்,
இந்த கால சக்கரத்தை வைத்து உலகையே ஒரு கதியில் சுழல வைப்பவர்,
விஷ்ணுவாகிய நாராயணனே.

மகாவிஷ்ணுவின் கையில் இந்த கால சக்கரம் கட்டுப்பட்டு சுழல்கிறது. பெருமாள் தன் கையில் சங்கு, சக்கரம் வைத்து உள்ளார் என்று வேதம் சொல்லும் போது, கால சக்கரத்தை உணர்த்துகிறது.


"யாருக்கும் கட்டுப்படாத காலத்தையும், கட்டுப்படுத்த கூடியவர் பரவாசுதேவன் நாராயணனே" என்று காட்டுவதே 'விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்".

பல சமயங்களில், பிற தெய்வங்கள் தன்னை நம்பிய பக்தனை கூட கைவிட்டு விட்டனர்.
தவறு செய்தால், திருத்தாமல் இருந்தனர்.
'இது உன் கர்மா, விதி, காலம்.. நான் என்ன செய்ய முடியும்?' என்று கைவிரித்தனர் என்று பார்க்கிறோம்.
ப்ரம்ம தேவனிடம் காலத்தை மீறி, தனக்கு சாவே வரக்கூடாது என்று கேட்ட ஹிரண்யகசிபு, நாராயணன் நரசிம்மமாக வந்து கிழித்து எறிந்த போது, "உன் காலம் அவ்வளவு தான்" என்று கை விரித்து விட்டார் ப்ரம்மா.
தான் காலத்துக்கு கட்டுப்பட்டவன் என்று அமைதி காத்தார்.


ராவணன் உண்மையான சிவபக்தன். ஆனால், கர்வம் உள்ளவன்.
பக்தனான ராவணனை திருத்தி ஆட்கொள்ளவில்லை சிவபெருமான். அவன் செய்த பக்திக்கு அணுகிரஹம் செய்தாரே ஒழிய,
இவன் காலத்தை நாராயணன் முடிக்க சங்கல்பித்த போது, சிவபெருமான் தன் பக்தன் என்று பரிந்து கொள்ளவில்லை.
"இது உன் மரணத்திற்கான காலம்" என்று இருந்து விட்டார்.




வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனே, சங்கர்ஷன மூர்த்தியாக, ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருக்கிறார். ஆதலால் சிவ த்வேஷம் கூடாது.
அதே பரவாசுதேவன், தானே பாற்கடலில் விஷ்ணுவாக வ்யூஹ அவதாரம் செய்தார். இது பரவாசுதேவனின் பூரண அவதாரம்.

மார்க்கண்டேயர் தனக்கு மரணம் ஏற்பட கூடாதென்று சிவ பூஜை செய்ய, மரணம் அவரை நெருங்கிய போது, சிவ பெருமான் அந்த ம்ருத்யுவை எட்டி உதைத்தார்.
மரணத்தை வர விடாமல் தடுத்த பின், மார்க்கண்டேயர் விஷ்ணு பக்தியை ப்ரதானமாக செய்ய,  சிரஞ்சீவியாக என்றுமே அழியாமல் இரு என்று காலம் எந்த நிலையிலும் இவரை நெருங்க முடியாத படி, வரம் கொடுத்து விட்டார் நாராயணன்.

விஷ்ணுவின் கையில் மட்டும் தான், அந்த கால சக்கரம் அவருக்கு கட்டுப்பட்டு சுழல்கிறது.

காலத்திற்கு அனைத்துமே அடிமை.
100 வருடங்கள் ப்ரம்ம லோகத்தில் ப்ரம்ம பட்டத்தை அனுபவித்த பின், ப்ரம்ம தேவனும் அழிவார், ப்ரம்ம லோகமும் அழியும்.

ப்ரம்ம பதவியில் இருந்த காலத்தில்
'இது பரவாசுதேவன் கொடுத்த பதவி, செய்யும் செயல்கள் யாவும் அவருடைய ப்ரீதிக்காக (சந்தோஷத்திற்கு) தான்' என்று உலக ஸ்ருஷ்டி செய்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனுக்கு மோக்ஷம் கிடைக்க அருள்வார் நாராயணன்.
மாறாக,
கிடைத்த ப்ரம்ம பதவி, ப்ரம்ம பட்டம் தன் புண்ணியங்களால் கிடைத்தது, நான் தான் உலக ஸ்ருஷ்டி செய்கிறேன் என்று கர்வத்துடன், பாவ புண்ணியங்களை சேர்த்து இருந்தால், அந்த ப்ரம்ம தேவனும் அவர் பதவி முடிந்த பின், மீண்டும் பூலோகத்திற்கு வந்து பிறக்க வேண்டியது தான்.

ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மீண்டும் பரவாசுதேவன் ப்ரம்ம லோகத்தை ஸ்ருஷ்டி செய்து, இன்னொரு ப்ரம்ம தேவனை நியமிக்கிறார்.
ப்ரம்ம தேவனும் காலத்துக்கு கட்டுப்பட்டவர்.

இப்படி அனைத்துமே காலத்துக்கு கட்டுப்பட்டு அழிவை நோக்கி நகரும் போது, அந்த கால சக்கரத்தை கையில் ஏந்தியுள்ள, பரமாத்மா நாராயணன் அந்த காலத்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறாரா? என்ற கேள்வி, நமக்கு எழலாம்.

வாமன, நரசிம்ம, கூர்ம அவதாரங்களை, பரவாசுதேவன் செய்யும் போது, குறிப்பிட்ட காலத்துக்குள் வந்த காரியத்தை முடித்து விட்டு, மறைந்து விட்டார்.

அவரே ராமராக அவதாரம் செய்து நீண்ட காலங்கள் பூமியில் மனித அவதாரம் செய்த போது, மனிதனை போல, காலத்துக்கு கட்டுப்பட்டு "தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை, காலம் என்றும் விதி" என்றும் சொல்லி தைரியமாக எதிர்கொண்டார்.

ராம அவதாரம் எடுத்த போது, காலத்துக்கு கட்டுப்பட்டவர் போல பல இடங்களில் காட்டுகிறார்.


காலத்துக்கு கட்டுப்படாத பரவாசுதேவன் அவதார சமயங்களில் காலத்துக்கு ஏன் கட்டுப்படுகிறார்? 

உண்மையில், நாமும், இயற்கையும், தேவர்களும் காலத்துக்கு கட்டுப்படுவது போல, பரவாசுதேவன் காலத்துக்கு கட்டுப்படுவதில்லை.

நாம் அனைவரும் 'கட்டாயத்தால்' காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
பரவாசுதேவனோ 'சுதந்திரமாக' கட்டுப்படுகிறார்.

பரவாசுதேவன், காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக கட்டுப்படுகிறார்.

நாமோ, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலத்துக்கு கட்டுப்படுகிறோம்.
நம் பிறப்பு நம் விருப்பத்தில் இல்லை.
நம் மரணமும் நம் விருப்பத்தில் இல்லை.
நம் வாழ்க்கையும் நாம் நினைப்பது போலவே நடப்பதும் இல்லை.

கால சக்கரத்தை தன் கையில் சுழல வைத்து கொண்டு இருக்கும் விஷ்ணு, காலத்துக்கு கட்டுப்படாதவராக இருந்தாலும், சுதந்திரமாக அவர் விருப்பப்பட்டால் கட்டுப்படுவது போல காட்டுகிறார்.

கால சக்கரத்தை கையில் வைத்து இருக்கும் நாராயணன்,  சுதந்திரமாக எப்படி கட்டுப்படுகிறார்?  இதை புரிந்து கொள்ள முடியுமா? முடியும்.

ஒரு பெரிய பணக்காரன் ஒருவன், அடுத்த நாள் காலை ஒரு ஊருக்கு செல்ல சங்கல்பம் (திட்டம்) செய்தான்.
5 மணிக்கு எழுந்து, அடுத்த நாள் காலை 7 மணிக்குள் ரயில் பிடித்து, ஊருக்கு போக வேண்டும் என்று திட்டமிடுகிறான்.
அதற்காக,
தன் வீட்டில் உள்ள கடிகாரத்தை எடுத்து அடுத்த நாள், காலை 5 மணிக்கு அலாரம் செட் செய்து கொண்டு தூங்க செல்கிறான்.

அந்த பணக்காரன் தனக்கே போட்டுக் கொண்ட திட்டம் தான் இது.
தான் வைத்து கொண்ட கால நிர்ணயம் தான் இது.
தானே அலாரம் வைத்து கொண்டு, படுக்க செல்கிறான்.

5 மணிக்கு சரியாக எழுந்திருக்க வேண்டுமே!! என்று சரியாக கூட தூங்க முடியவில்லை அந்த பணக்காரனால்.
தான் வைத்து கொண்ட காலத்துக்கு கட்டுப்பட்டு, 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமே!! காலத்திற்குள் கிளம்ப வேண்டுமே!! 7 மணிக்குள் ரயிலை பிடிக்க வேண்டுமே!! என்று கவலைப்படுகிறான்..
5 மணிக்கு சரியாக எழுந்து கொண்டு, சரியாக தான் நினைத்த படி 7 மணிக்கு ரயில் பிடித்த பின், மகிழ்ச்சி அடைகிறான்.
தான் திட்டமிட்டபடி நடந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறான்.

இந்த மகிழ்ச்சிக்காக, இவனாகவே தனக்கே ஒரு கால வரம்பை வைத்து கொண்டு, தானே காலத்துக்கு கட்டுப்பட்டான்.

இது போல தான், கால சக்கரத்தை தன் கையில் வைத்து இருக்கும் நாராயணன், தான் சங்கல்பித்த சில காரியங்களை தானே செய்ய நினைக்கும் போது, தானே காலத்தை நிர்ணயித்து, அந்த காலத்துக்கு தானே சில சமயம் கட்டுப்பட்டு நடக்கிறார். 

காலத்துக்கு தானே கட்டுப்பட்டாலும், அவர் விரும்பினால், காலத்துக்கும் கட்டுப்படாமல் இருக்கவும் முடியும்.

அடுத்த நாள் காலை 7 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும் என்று நினைத்த அந்த பணக்காரன், தான் சங்கல்பித்த காரியத்தை நடத்த வேண்டாம் என்று திடீரென்று முடிவு செய்து விட்டான்.

'ஊருக்கு போக போவதில்லை' என்று முடிவு செய்கிறான்.
இப்படி முடிவு செய்த பின், அவன் வைத்து கொண்ட அலாரம் (காலம்) அவனை கட்டுப்படுத்த முடியாமல் நிற்கிறது.
கவலையே இல்லாமல், அலாரத்தை off செய்து விட்டு, காலத்துக்கு கட்டுப்படாமல் நன்றாக தூங்கி, நிதானமாக எழுந்திருக்கிறான்..


அதே போல, பகவான் நாராயணன், காலத்துக்கு கட்டுப்படுவது போல தன்னை காட்டிக்கொண்டாலும், தேவைப்படும் போது, காலத்தையும் மீறி சுதந்திரமாக தன் இச்சையால் எதையும் செய்யத்தக்கவர்.

க்ஷீராப்தியில் இருக்கும், தன் துவார பாலகர்கள், ராவண, கும்பகர்ணனாக அவதரித்து விட்டதால், அவர்கள் தன் கையால் தான் வதம் செய்யப்பட வேண்டும் என்று பிரார்த்தித்ததால், ராம அவதாரம் செய்த பெருமாள், ராவண வதம் அவசியம் என்ற தன் சங்கல்பத்தின் காரணமாக, சீதையை தொலைத்து, கவலை படுவது போல அலைந்து, காலத்துக்கு கட்டுப்பட்டு, உதவிக்கு வானரர்களின் உதவியை கேட்டு, சரித்திரத்தை நடத்தி செல்கிறார்.
பார்ப்பதற்கு ஸ்ரீ ராமர் காலத்துக்கு கட்டுப்பட்டது போல காட்டுகிறார்.
அதே ராமர், ஜடாயு என்ற பறவை தனக்காக உயிர் விட்டது என்றதும், தன் கையால் ஈம கிரியை செய்து, யமன் வந்து கூட்டி செல்லும் முன், காலத்தையும் மீறி, ஜடாயுவின் கர்ம பலன்களையும் மீறி, சாதாரண பறவை எனபதையும் மீறி, "என் ஆணை. ஜடாயுவின் ஆத்மா வைகுண்டம் செல்லட்டும்" என்று தான் சர்வேஸ்வரன் என்று காட்டுகிறார். காலத்தையும் மீறி சுதந்திரமாக இருக்கிறார்.

அதே போல, அணை போட்டு, வானரர்களுடன் இலங்கை வந்து சேர்ந்த போது, ராவணன் அவன் அரண்மனை மாடியில் உலவி கொண்டிருப்பதை கவனித்த சுக்ரீவன், சீதையை அபகரித்தவன் என்ற தாங்க முடியாத கோபத்தில், குபீரென்று பாய்ந்து, நேராக ராவணன் முன் குதித்து, ஓங்கி ஒரு குத்து விட, இதை எதிர்பார்க்காத ராவணன் சிறிது நிலை தடுமாற, அவன் கிரீடத்தை தட்டி கொண்டு, நேராக ராமர் இருக்குமிடம் வந்து, ராவணனின் கிரீடத்தை அவர் காலடியில் வைத்தான்.
ராவணன் சுக்ரீவனை விட மகா பலசாலி.. கொஞ்சம் தவறு நிகழ்ந்து இருந்தாலும், சுக்ரீவனை கொன்று இருப்பான் ராவணன்.
தனக்காக இப்படி ஒரு காரியத்தை செய்தாலும், உயிருக்கு ஆபத்தான இது போன்ற முயற்சிகளை செய்ய வேண்டாம் என்று சொல்லி, தான் சாதாரண மனிதன் அல்ல, சர்வேஸ்வரன் என்று காட்டுவது போல "இனி இது போன்ற காரியங்கள் செய்ய வேண்டாம். எனக்கு சுக்ரீவனும் தேவை இல்லை. இந்த வானர படைகளும் தேவை இல்லை. 
ராவணனை அழிக்க என் தம்பி லட்சுமணனும் எனக்கு தேவை இல்லை.
எனக்கு இந்த காண்டீபமும் தேவை இல்லை. 
என் கை விரலில் உள்ள நகங்களை கொண்டே இந்த ராவணனை கிழித்து எறிந்து விடுவேன். தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாம்" என்று தன் பூர்வ அவதாரமான நரசிம்ம அவதார ஞாபகத்துடன் ஸ்ரீ ராமர் கர்ஜிக்க,
ஸ்ரீ ராமரின் கோபத்தை கண்டு அஞ்சி, அதற்கு பின் வானரர்கள் யாருமே அவரை மீறி எதையுமே செய்யவில்லை.


அதே போல, காலத்துக்கு கட்டுப்பட்டது போல சிறையில் அவதாரம் செய்து, சாதாரண இடையனாக பிருந்தாவணத்தில் வளர்ந்தாலும், தன் குரு சாந்தீபனி 'தன் 7 வயது மகன் கடலில் விழுந்து இறந்து விட்டான்' என்று சொல்ல,
குரு தக்ஷனையாக இறந்து போன அவர் மகனை மீட்டு தருவேன் என்று சமுத்திர தேவனை கேட்க, அவனை ஒரு அசுரன் இழுத்து கொண்டு விட்டான் என்று சொல்ல, அந்த அசுரனை தேடி பிடிக்க, அவன் தன் குரு புத்திரனை கொன்று விட்டான் என்று சொல்ல, அவனிடம் பாஞ்சசன்யம் என்ற சங்கை பிடுங்கி, அவனை கொன்று போட்டார்.
இறந்த ஆத்மா எம லோகம் சென்று இருக்கும் என்பதால், எம லோகமே சென்று தன் கையில் உள்ள பாஞ்சசன்யம் கொண்டு ஊத,
'செத்தவன் வீட்டில் ஊத வேண்டிய சங்கை, எம லோகத்தில் வந்து யார் ஊதுவது' என்று யமன் வந்து பார்க்க, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்ததும் பரவாசுதேவன் என்று அறிந்து யமதர்மராஜன், அவர் கேட்கும் குரு புத்திரன் தன்னிடம் தான் இருப்பதாக கூறி, இன்றைய தேதியில் குரு புத்திரனுக்கு 14 வயது இருக்க வேண்டும் என்று சொல்ல, 14 வயது குரு புத்திரன் வர, எம லோகத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் தானே சர்வ சாஸ்திரங்களை உபதேசித்து, ஞானத்திலும் சிறந்தவனாக ஆக்கி, தன் குருவிடம் குரு தக்ஷிணையாக ஒப்படைத்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

காலத்துக்கு கட்டுப்படுவது போல அவதாரம் செய்தாலும், தான் இஷ்டப்பட்டால் அந்த காலத்தையும் மீறி, இறந்து போன குரு புத்ரனையும் மீட்டு கொடுத்தார். 
சுதந்திரமாக கட்டுப்படுபவர் பரவாசுதேவன் நாராயணன்.
கட்டாயத்தால் கட்டுப்படுபவர்கள் நாம்.


Hare Rama Hare Krishna - listen to Bhajan
Sandhyavandanam - morning with meaning

Sandhyavandanam - afternoon with meaning



Sandhyavandanam - evening with meaning




Sunday 19 May 2019

அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...

1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.



அதற்கும் முன்,
808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.
அதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.



துவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.
அர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் "ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.
திருமூலர் கூடு விட்டு கூடு பாயும்  ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.
இறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.



த்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி,  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.
இருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.
எங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.


தேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.
பரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.




அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.
அது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.
கோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..
இன்று வரை துரு பிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...



ஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.

"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...

808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்?

குண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா?

Aeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை?
இவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா?

திருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா?
Max Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்?
சம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்?

இந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது?

தேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்?

ஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா?
ஒன்று கூட இல்லையே...
நம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...

இந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...

வெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.
சமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,
இது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்டி,
பிராம்மண பகையையும் ஊட்டி,
தன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.
விளைவு,
சாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.
ஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..
இன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.


சாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..
அவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.
ப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.
அது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..?

மற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.
இன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.
கோவிலை கட்டிய ஸ்தபதியும்,  ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...
இன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...
இன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.
எத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...


தன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.
ஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொண்டு இருக்கிறான்.
சமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.

நாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..



அர்த்த சாஸ்திரம் (finance mgmt),
காம சாஸ்திரம் (art of love),
யோக சாஸ்திரம்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம் (medicine)
காந்தர்வ வேதம் (music)
தனுர் வேதம்(army)
சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
சந்தஸ் (expert in poetic metres)
ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
ஸ்ம்ருதி,
யோகம் (expert in meditation, contemplation and liberation)
ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
நியாயம் (Expert in exploring sources of knowledge)
என்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...
துக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,
இஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.
இவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.

ஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.
உலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாதாரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...



மொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.

காங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.
பேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது.  ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.

இந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.

நம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.



ஹிந்துக்கள் சிந்தனைக்கு....