Followers

Search Here...

Showing posts with label தயங்குகிறார்கள். Show all posts
Showing posts with label தயங்குகிறார்கள். Show all posts

Friday 13 April 2018

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?... ஒரு அலசல்

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ஏன்?

சிலர் "குழந்தையே வேண்டாம்" என்கிறார்கள்.




சிலர், "திருமணம் செய்தால் தானே இந்த கேள்வி வருகிறது. திருமணமே வேண்டாம்" என்கிறார்கள்.

அப்படியானால் "இவர்கள் காமத்தை வென்றவர்களா ?!!" என்றால் அதுவும் இல்லை.

திருமணம் வேண்டாம், நட்பாக நாங்கள் வாழ்வோம் என்று குடும்பம் (live-in relationship) நடத்துகிறார்கள்.

இப்படி ஏன்? என்றால், அதில் ஒரு லாபம் பார்க்கிறார்கள்.

குழந்தை பெற்று கொள்ளாமல் குடும்பம் நடத்தி, 
எப்பொழுது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறதோ, செலவே இல்லாமல் divorce செய்து விடலாம்.

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம் உருவானது இந்த ஹிந்து சமுதாயத்தில் ?

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு லாபமும் தெரியாததால் (உண்மையில் அறியாததால்) இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள யாவருக்கும் தயக்கம் உள்ளது.

மற்ற தேசங்களில் (குறிப்பாக கிறிஸ்தவ மக்களின்) நிலை இதை விட மோசம்.
பொதுவாக, பலர் பெற்றுக் கொள்ளவே தயார் இல்லை.
குடும்பம் நடத்த தயார் இல்லை. 
 நடத்தினாலும் பாதி விவாகரத்தில் முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கை இந்த கிறிஸ்தவ நாடுகளில் அதிகமாகி கொண்டே இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்த இஸ்லாமிய சமூகம் இந்த கிறிஸ்தவ நாடுகளை இன்னும் சில நூற்றாண்டுகளில் வ்யாபிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இது பொறாமை படக்கூடிய விஷயம் அல்ல. இவர்கள் வளர்ச்சி இவர்கள் சமூகத்திற்கு நன்மையே.
சமுதாயத்தில் ஒரு கலாச்சாரம் காக்கப்பட தலைமுறைகள் தேவை.

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்ற அந்த கால நம் தாத்தா பாட்டிக்கு "ஏற்பட்டது பல சொந்தம்".

ஏழு குழந்தைகளில், 6 உருப்படி இல்லாமல் பெற்றவர்களை கவனிக்காமல் விட்டாலும், சில குழந்தைகள் பரலோகம் போனாலும்,
ஒருவனாவது கடைசி மூச்சு வரை காப்பாற்றுவான்.

பல குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில்,
ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, மற்ற குழந்தைகள் சேர்ந்து காப்பாற்றும். 

இனி வரும் காலங்களில்,
ஒரு பிள்ளை பெற்று வாழப்போகும் அப்போதைய 80 வயது தொடும் கிழவனுக்கு கிழவிக்கு, 
பெற்ற ஒரு பிள்ளை எங்கோ ஒரு நாட்டில் வாழ அல்லது 
அவன் இவனை முந்தி, பரலோகம் செல்ல, 
யாரும் இல்லாத நிலையில் கஷ்டப்பட கூடிய காலம் வரும் அபாயம் உள்ளது. 

குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன என்ன கஷ்டம் வரும்? என்ற உணர்வே இன்று உள்ளவர்களுக்கு அதிகமாகிறது.

வயதான காலத்தில் காப்பாற்ற மாட்டான் என்று தெரிந்த பிறகு யார் குழந்தை பெற்று வளர்ப்பார்கள் ?
அதனால், திருமணமும் வேண்டாம்.

அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை வேண்டாம்.

இப்போது இதற்கும் மேல் போய், கல்யாணம் எதற்கு ? பேசாமல், சேர்ந்து பிடிக்கும் வரை வாழ்வோம். எப்பொழுது சரியாக படவில்லையோ, விலகி விடுவோம்.  இதனால் divorce செலவும் மிச்சம்.
இப்படி செல்கிறது பல நாடுகள். 
இதில் இப்போது நம் நாடும் சேர்ந்துள்ளது.

குழந்தைகள் இல்லை எனில், அந்த வீட்டில் உள்ள வயதானவர்களை யார் காக்க வேண்டும் ?
அதை அரசாங்கம் ஏற்கிறது பல நாடுகளில் இப்போது.
Social tax என்று வரி மக்களிடமே வாங்கி பல நாடுகள் இந்த சேவையை நடத்துகிறது.
இது பெரும் கேடு.




இதே சிந்தனை, வாழ்க்கை முறை, ஹிந்துக்களின் வாழ்க்கையிலும் இப்போது 15 வருடங்களாக நன்றாக புகுந்துள்ளது.

Divorce என்ற வார்த்தை கேட்டாலே ஆச்சர்ய படும் ஹிந்து குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு divorce கதை உள்ளது.

இந்த அவலங்களுக்கெல்லாம் ஒரே காரணம், நம்மிடம் இருந்த "கூடி வாழும்" குடும்ப தர்மம் காணாமல் போனதேயாகும்.

அந்த காலத்தில் 5 குழந்தை பெற்றாலும் பெற்றவனுக்கு, ஒருவனாவது தனக்கு கடைசி வரை கஞ்சி ஊற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தது.

5 குழந்தை பெற்றாலும், கணவன் மனைவி சேர்ந்தே இருப்பர் என்ற தைரியம் இருந்தது.

ஆபத்து காலத்தில் மாமன், சகோதர, சகோதரிகள் போன்ற உறவினர்கள் துணை இருந்தது.

குழந்தைகளே தங்களுக்குள் வரும் ஆபத்தை காத்துக் கொள்ளும் பாதுகாப்பு இருந்தது.

இப்படி கூடி வாழ்ந்த ஹிந்துக்கள், 1000 வருட இஸ்லாமிய, 300 வருட கிறிஸ்தவ ஆட்சியிலும் குடும்ப தர்மம் கெடுக்கப் படாமல் இருந்ததால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.

சாதாரண வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், ஒரு வசதியும் கிடைக்காது அவதிப்பட்ட காலத்திலும் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள் சாதாரணமாக பிறந்தன.

எப்படி வளர்க்க முடியும்?
யார் சோறு போடுவார்கள் ? 
என்ற ஐயம் இவர்களுக்கும் இருந்திருக்கும். 
இருந்த போதிலும் என்ன தைரியம் இவர்களுக்குள் இருந்தது ?

இத்தனை குழந்தைகளா? என்று கேலியாக பார்க்கும் முறை ஒரு புறம் இருக்க, சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கு பல உண்மைகள் வெளிப்படும்:

 குழந்தைகள் பெற்று கொள்ள யோசிக்கும், ஹிந்துக்களுக்கு பெரும்பாலும் இப்போது
"கூட வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொல் மறந்து விட்டது.

கூடி வாழ்வதற்கு பொறுமை மிக அவசியம்.
அனைவருக்கும் நா அடக்கம் அவசியம்.
சேர்ந்து வாழ்வதில் ஆசை அவசியம்.

பண பலத்தை விட உறவுகளுடன்
கூடி வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்க தைரியம் வரும்.
ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் கை தூக்க இன்னொருவர் இருப்பர்.

கூடி வாழ்வதாலேயே, குழந்தைகள் பெற்று கொள்ள தைரியம் வரும்.
கூடி வாழ்வதாலேயே, குடும்ப கலாச்சாரம் அழியாமல் இருக்கும்.

புனிதமான இந்திய நாட்டில், இன்று இந்த குடும்ப தர்மம் அழிந்து வருகிறது.

வெளிநாட்டவர்கள், நம்மை பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த குடும்ப வாழ்க்கை இன்று நம்மை விட்டு விலகி வருவது நம் சமுதாயத்துக்கு கேடு.

இதனால், ஹிந்துக்கள் குறைந்து போவார்கள்.

வயதான பின், காப்பாற்ற பல குழந்தைகள் இல்லாததால், வயதான காலத்தில் இருக்கும் ஒரு மகன் எங்கோ வாழ, அல்லது அவனும் முடியாமல் இருக்க, துணைக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை வெகு தொலைவில் இல்லை. 

பெற்ற ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, சகோதர, சகோதரிகள் சேர்ந்து காப்பாற்றிய காலம் போய், ஆதரவை இழந்து வாழ நேரிடும்.

பெற்றோருக்கு செய்யும் மொத்த மருத்துவ செலவும் பெற்ற ஒரு குழந்தை மேல் கடனாக விழுந்து விடும். 

இதுவே கலியின் கொடுமை. இந்த நிலை மாற, கூடி வாழ கற்று கொள்ள வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மை. 

இன்றைய கால கட்டத்தில், கூடி வாழும் நன்மையை அறியாமல், வரப்போகும் ஆபத்தை அறியாமல் பல செயல் செய்கிறோம்.

  • கணவனுக்கு மனைவியிடம் பொறுமை இல்லை. 
  • மனைவிக்கு கணவனிடம் பொறுமை இல்லை.
  • மாமியாருக்கும், மாமனாருக்கும் வீட்டுக்கு வந்த பெண் மேல் பொறுமை இல்லை. 
  • கல்யாணமாகி வந்த பெண்ணுக்கும் பொறுமை இல்லை.

ஆசையும், எதிர்பார்ப்பும் அதிகமாக, பொறுமை இல்லாததினால் ஹிந்து குடும்பம் சிதறுகிறது.

சேர்ந்து அன்போடு வாழ்ந்தால் என்னென்ன நன்மை? என்பதை மறந்து, பணத்திற்காகவும், சுய அபிமானத்தின் அற்ப காரணத்திற்கு சண்டை இட்டு, அழகான கூட்டு குடும்ப வாழ்க்கையை தன் செயலாலேயே அழித்துக் கொள்கின்றனர்.

ஹிந்துக்களிடம் இருந்த பொறுமை எங்கே போனது ?




இரண்டு தலைமுறை முன்வரை கூட, நம் முன்னோர்கள் கூடி வாழ்ந்துள்ளனர்.

கூடி வாழ்வதே நம் கலாச்சாரம், நம் குடும்பத்தில் நிலைக்க வழி.

கூடி வாழாது போனால்,
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் அழிவதை பார்க்க நேரும்.
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் மற்ற கீழ் மதங்களில் அறியாமையால் போய் விழுவார்கள்.
  • நம் கண் முன்னரே, பணம் இருந்தும் நம்மை கடைசி காலத்தில் கூட இருந்து காக்க துணையில்லாமல் போகும்.
ஹிந்துக்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது.