Followers

Search Here...

Thursday 26 October 2017

தெய்வம், நாம் தவறு செய்தாலும் உடனே "அறிவுரை சொல்லி திருத்தாமல், கோபப்படாமல்" எப்படி இருக்கிறார்?... தெரிந்து கொள்வோம்

வைஷ்ணவ குணம் :
ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தார்.
அந்த சமயம், ராமானுஜர் மனைவிக்கும், அவர் குரு நாதர் "பெரிய நம்பி்"யின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது, மனஸ்தாபம் ஏற்பட்டு, வாய் தகராறு ஆகிவிட்டது. 

இதனால், பெரிய நம்பி்யிடம் அவர் மனைவி சென்று, நடந்ததை கூறி, வருத்தப்பட்டாள்.
மேலும், "நாம் இங்கு இருப்பதை விட ஸ்ரீ ரங்கம் சென்று விடலாம்" என்றாள்.

பெரிய நம்பிக்கும் ஸ்ரீ ரங்கநாதரை பார்த்து பல நாள் ஆகி விட்டதால், "சரி" என்று கிளம்பினார்.

இந்த விஷயம் எதுவும் அறியாத ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் இருந்து கிளம்பி தன் குருவின் க்ருஹம் பூட்டி இருப்பதை அறிந்து. நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டார்.

மிகவும் மனம் வருந்தினார். 

"தன் குரு தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லும் அளவிற்கு அபசாரம் நிகழ்ந்ததே" என்று மனம் வருந்தினார்.
ஆனால் "இதற்கு காரணம் தன் மனைவி" என்று கோபப்படவும் இல்லை, மனதில் கோபமும் ஏற்படவில்லை. 




"இப்படி குரு பத்தினியிடம் சண்டை செய்யலாமா?
இவர்கள் இப்படி வருத்தப்பட்டு காஞ்சிபுரத்தை விட்டு செல்லும் அளவுக்கு செய்யலாமா?"
என்று எந்த வித கேள்வியும் ஸ்ரீ ராமானுஜர் தன் மனைவியிடம் கேட்கவும் இல்லை.
நடந்து விட்ட நிகழ்வுக்கு தனக்குள்ளேயே வருத்தப்பட்டார்.

மனைவியிடம் கோபப்பட வேண்டாம், சரி,
மனைவி, 'தன் குருநாதரிடம் எப்படி நடக்கவேண்டும்? எது நல்லது, எது தவறு?' 
என்பதையாவது ஸ்ரீ ராமானுஜர் சொல்லி திருத்தலாமே! அதுவும் அவர் செய்யவில்லை.

ராமானுஜர் கோபமும் படவில்லை, தானாக அறிவுரையும் சொல்லவில்லை. 

இதுவே வைஷ்ணவ குணம். 

இந்த குணம் ஸ்ரீ வைஷ்ணவரான  ராமானுஜரிடம் இருந்தது ஆச்சரியமில்லை...
இது சாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணின் அர்ச்ச அவதார குணமுமாகவும் இருக்கிறது.

ஸ்ரீ ராமானுஜருக்கு 'கோபம் எப்படி வராமல் போனது?'
ஸ்ரீ ராமானுஜர் "ஏன் சொல்லி திருத்தவில்லை?'

பொதுவாக யாருக்குமே, மற்றவர் அறிவுரை (advice) சொன்னால் பிடிக்காது. 
அறிவுரை சொன்னதற்காகவே, நம்மை விட்டு விலகி விடுவார்கள். 
விலகுவதால் இருவருக்கும் நஷ்டம் தானே ! 

தான் தவறு செய்தாலும், அதை தவறு என்று கூட உணராதவனிடம்,  அறிவுரை சொல்வதால், மேலும் உறவில் விரிசல் ஏற்படும். 

அறிவுரையை ஏற்று திருத்திக்கொள்வதை விட்டு விட்டு, அறிவுரை சொன்னவர் மேல் கோபப்பட்டு, அவர் பக்கமே இனி போக மாட்டான்.

தன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, மற்றவர்கள் இல்லாத போது, கோபம் வருகிறது.
நமக்கு கோபம் வருவதற்கு முக்கிய காரணமே இது தான்.

எதிர்பார்த்தது கிடைக்காததால், ஏற்படும் கோபத்தை, யாவரும் தவிர்க்க வேண்டும். 

நம் மனமே சில நேரங்களில், நமக்கு பிடிக்காததை செய்து விடுகிறது, 
அந்த சமயத்தில், நம்மை பார்த்து நமக்கே கோபம் ஏற்படும். 
இப்படி இருக்க, 
மற்றவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு என்று தெரியும் போது, கோபப்படுவது அநாவசியம்.

இதனை அறிந்தவன், மற்றவர்கள் செயலை பார்த்து, கோபம் எப்பொழுதும் அடைய மாட்டான். 




பல வித மக்கள், உறவினர்கள் நமக்கு உண்டு.
ஒவ்வொருவர் முகமும் விதவிதம். ஒரே மாதிரியாக இல்லை. 

முகம் கூட ஒன்றாக இல்லை, என்று இருக்கும் 
போது நாம் நினைப்பது போல அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அவசியமில்லாதது.
 
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம், ஒரு எண்ணம் உண்டு. 

இதனை சம புத்தியுடன் பார்த்தாலே, நமக்கு யாரிடமும் கோபம் வராது. 

நமக்கு எதிராக இருந்தாலும், உலகம் பல விதமானது என்ற தெளிவு பிறக்கும்.

இந்த சம புத்தி, ஸ்ரீமந்  நாராயணனுக்கும் உள்ளது. 

தன்னை பார்க்க வரும் பக்தனை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கிறார். 
இவன் என்னிடம் திடபக்தி செய்கிறானா? 
இவன் ஒழுக்கம் உள்ளவனா? 
நல்லவனா? 
என்று எதையும் இவர் எதிர்பார்ப்பதில்லை.



கோவிலுக்கு உள்ளே நுழையும் அனைவரையும் ஆசையோடு பார்க்கிறார். 

என்னை 'கல்' என்று பார்க்கிறானே? நான் இவனை மாமிச மலை என்றா பார்க்கிறேன்! 
ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து என்னிடம் வருகிறானே?! 
என்று ஒருபோதும் கோபப்படுவதில்லை பெருமாள்.

மேலும்
அறிவுரை சொல்லி உடனே திருத்தவும் முயற்சி செய்வது இல்லை. 

'நாம் ஏதாவது அறிவுரை என்று சொல்லி, அதன்படி நடக்க முடியாமல் போனால், இதையே காரணமாக கொண்டு, நம்மை விட்டு சென்று விடுவானோ'
என்ற கவலை பெருமாளுக்கு உண்டு.

'நம்மை விட்டு இவன் சென்று விட்டால், இவனுக்கு கிடைத்த ஸத்சங்கமும் இவனுக்கு போய் விடும். 
ஸத்சங்கம் போய் விட்டால், இவன் மீண்டும் ஸத்சங்கம் கிடைத்து வைகுண்டம் அடைய பல ஜென்மங்கள் ஆகி விடும். 
கிடைத்த ஸத்சங்கமே இவனுக்கு ஒழுக்கத்தையும், நம்மிடம் திடபக்தியையும் கொடுக்கும்'
என்ற காரணத்தால், பெருமாள் தன் பக்தனாக இருந்தாலும் உடனே அறிவுரை சொல்லி திருத்தாமல் இருக்கிறார். 

"இவன் நம்மிடம் வந்து கொண்டு இருப்பதே சீக்கிரமாக ஞானத்தை கொடுக்கும்" என்று இருக்கிறார்.

நாம் செய்யும் எந்த அபச்சாரத்தையும் சம நோக்குடன் பார்த்துக்கொண்டு, கோபப்பட்டு விடாமல், அறிவுரையும் செய்யாமல், நம்மை தன் கூடவே வைத்துக்கொள்ளும் நோக்கில் மட்டும் இருக்கிறார்.

நமக்கு அறிவுரை சொன்னால் உண்மையில் கேட்கும் மனம் வரும்வரை, பெருமாள் நமக்கு அறிவுரை வழங்க பொறுமையாய் தாயை போன்று இருக்கிறார்.

திட நம்பிக்கையுடன், உண்மையான சரணாகதி செய்யும் வரை நாம் செய்யும் அபசாரங்களை பொறுத்து கொள்கிறார்.

தவறு செய்பவனை, நாம் அறிவுரை மூலமோ, கோபம் கொண்டோ திருத்த நினைத்தால், பொதுவாக அவர்கள் நம்மை விட்டு விலகி விடுவர். அவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போய் விடும். 

இதனால் நஷ்டம் நமக்கும் தான்.

குருவே துணை.

Friday 13 October 2017

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்?

அன்பை விட பாசம் தாழ்ந்தது.

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன  வித்தியாசம்?


ஸ்ரீராமர், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, 14 வருடம் காட்டுக்கு சென்றார்.

தன்னால் தான், இந்த நிலை ராமருக்கு வந்தது என்று மனம் வருந்தி, தம்பி பரதன் அழுதார்.

காட்டுக்கு சென்று, ராமரை அயோத்தி வந்து நாட்டை ஆளுமாறு கேட்டு கொண்டார். பிடிவாதம் செய்தார். தனக்கு இந்த பழி வேண்டாம் என்று பாவத்திற்கு அஞ்சினார்.
வேண்டுமென்றால் ராமர் நாட்டை ஆளும் போது, தான் 14 வருடம் காட்டில் வாழவும் தயாராக இருந்தார். வராவிட்டால் உயிர் தியாகம் செய்வேன் என்று பிடிவாதமும் செய்தார்.

கடைசியாக ஜனகர் அங்கு வந்து, பிரேமை (அன்பு) என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? என்று விளக்கி,
ப்ரேமைக்கும், பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பரதனுக்கு உணர்த்தி,
அவருக்கு பிரேமையின் உண்மையை புரிய வைத்தார்.

பிரேமையை விட பாசம் தாழ்ந்தது என்றும் உணர வைத்தார்.

ஜனகர் : பரதா, நீ ராமரிடம் வைத்துள்ள அன்புக்காக எதை தியாகம் செய்ய துணிவாய்?

பரதன் : மிகவும் உயர்ந்தது உயிர். என் உயிரையே கூட ராமருக்காக தியாகம் செய்வேன்.

ஜனகர் : உயிரை தியாகம் செய்வது எளிது. ஆனால் உயிரை இழக்காமல், அவருக்காக வாழ்வதே நிஜமான அன்பு (பிரேமை).
பரதா, ராமருக்காக நீ செய்யும் தியாகம் மிக உயர்ந்தது.
ஆனால், இப்போது நீ செய்யும் இந்த தியாகத்தை விட, நீ அன்பு செய்யும் ராமருக்கு உன் தியாகம் மகிழ்ச்சி ஏற்படுத்துமா? என்று யோசித்துப் பார்.

அவர் விருப்பம் இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும், தியாகம் ஆகாது. உண்மையான அன்பு இல்லை.

உண்மையான அன்பு என்பது, நீ அன்பு வைத்து இருப்பவரின் விருப்பப்படி வாழ தூண்டும்.
நீ இப்பொழுது செய்யும் தியாகம் பாசத்தினால் வந்தது.
பாசத்தில் சுய நலம் மட்டுமே இருக்கும்.

அன்பில் (ப்ரேமையில்) மற்றவருக்காக வாழ தோன்றும்.




நீ உண்மையான அன்பு ராமரிடம் கொண்டுள்ளதால், ராமரிடமே சென்று 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்.
அவர் விருப்பம் என்னவோ அப்படியே செய்.
அவர் எதை விரும்பவில்லையோ அதை செய்யாதே !
இது தான் நீ ராமருக்கு காட்டும் உண்மையான அன்பு.
என்று சொல்லி முடித்தார் சீதையின் தந்தை ஜனகர்.

அது வரை தான், 'தன் தியாகம்' என்று பாச வலையில் இருந்த பரதர், அன்பின் உயர்வை உணர்ந்தார்.
ராமர் என்ன சொல்கிறாரோ, அதை பின் தொடர்வதே உண்மையான அன்பு என்று உணர்ந்து, ராமரின் சொல் படி 14 ஆண்டு அயோத்தியை ஆள ஒப்புக் கொண்டு, உயிர் தியாகம் செய்வேன் என்ற பிடிவாதத்தை கைவிட்டார்.
பாசத்திலிருந்து விடுபட்டு, பரதர் அன்புக்கு அடிமையானார்.
ராமர் விருப்பப்படி வாழ்ந்தார்.
ராமர் பரதனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
யாரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும்.
பாசம் கூடாது.

பாசம், சுயநலமாக செயல்கள் செய்ய தூண்டும்.
அன்பு, தான் துயரப்பட்டாலும், மற்றவனுக்காக உழைக்க தூண்டும்.

சுயநலம் இல்லாதது அன்பு.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  

Wednesday 11 October 2017

கைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?

கைகேயி கேட்ட வரம்:

  1. ராமர் 14 வருடம் காடு செல்ல வேண்டும்.
  2. பரதன் நாட்டை ஆள வேண்டும்.




பரதன் ஒரு நாளா ? 14 வருடமா? காலம் முழுவதுமா?
என்று அவள் குறிப்பாக கேட்கவில்லை.

ராமர் இதற்கு கட்டுப்பட்டு 14 வருடம் காடு சென்றார்.
அவரை பொறுத்தவரை, "மீண்டும் அயோத்தி வர வேண்டும், ஆள வேண்டும்" என்கிற எண்ணம் கூட இல்லை.
கைகேயி "இத்தனை வருடம் பரதன் நாட்டை ஆள வேண்டும்!!" என்று கேட்கவில்லை என்றாலும் கூட, ராமரை பொறுத்தவரை "பரதனே ஆளட்டும்" என்று தான் இருந்தார்.
மீண்டும் அயோத்தி வரும் எண்ணம் இருந்ததா!! என்று கூட தெரியவில்லை.

பரதன் "காட்டை விட்டு மீண்டும் ஆள வாருங்கள்" என்று சொன்ன போது, ராமருக்கு, பரதன் தந்து ஏற்றுக் கொள்வதில் அவருக்கு தடை இல்லை. ஆனால், ராமரை தடுத்தது கைகேயியின் முதல் வரம் தான்.
ஆனாலும் "பரதனே அயோத்தியை இனி ஆளட்டுமே" என்று தான் இருந்தார்.

ராமர் இப்படி மனதில் நினைத்து 14 வருடம் கழித்து திரும்பிய பின், ஒருவேளை தன்னையே எப்போதும் ஆள சொல்வாரோ!! என்ற பயத்தில் தான் பரதன், ராமர் முன் "நீங்கள் 14 வருடம் முடிந்து அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் நான் அக்னி பிரவேசம் செய்து விடுவேன்" என்று பரதன் சபதம் செய்தார்.

14 வருடம் முடிந்த நிலையில், ராமர் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்க, பரதன் இதற்குள்ளாக, அக்னியை மூட்டிவிட்டார்.
அந்த சமயத்தில் "ஜெய் சீதாராம்" என்று வந்து இறங்கிய ஹனுமான், தன் கையாலேயே எரிந்து கொண்டிருந்த அக்னியை அணைத்து "ராமர் வருகிறார். அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்றார்.

சாஸ்திரம் "கையால் அக்னியை அணைக்க கூடாது" என்கிறது.
சாஸ்திரம் அறிந்த ஹனுமான் இப்படி செய்யலாமா ?
சாஸ்திரம் சில சமயங்களில் இது போன்று அனுமதிக்கிறது.
உதாரணமாக
சபதம் செய்யும் போது இப்படி கையால் அணைக்க அனுமதிக்கிறது.

ஹனுமான் உண்மையில் பரதன் முன், அந்த அக்னியை கையால் அணைத்து "ராமர் அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்று சபதம் செய்தார்.

இப்படி இரு பக்தர்கள் "பரதனும், ஹனுமனும்" செய்த சபதம் பொய் போக கூடாதே என்று கட்டுப்பட்டு, அயோத்தி வந்து மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஏற்றார்.



ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனுக்கு இலங்கையின் எல்லையில் இருந்து கொண்டே அவருக்கு பட்டாபிஷேகம் செய்தார்.

அன்பினால் விபீஷணன் நாட்டுக்குள் வந்து ஸ்நானம் செய்து, கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்று விண்ணப்பிக்கிறார்.
ராவணனை கொன்றதினால், ராமரே இலங்கைக்கு அரசன்.
இருந்தாலும், அந்த அரச பதவியை அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.
அங்கிருந்து ஒரு சிறு செல்வத்தை கூட எடுத்து செல்லவும் அவர் விரும்பவில்லை.
நாட்டை கைப்பற்றிய கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம் நாட்டு செல்வத்தை எப்படி சூறையாடினார்கள் என்று இந்திய சரித்திரத்தை பார்க்கும் போது தான், ராமரின் உயர்ந்த குணம் இதில் நமக்கு தெரியும்.

"ஒரு முறை இலங்கைக்குள் வந்து விட்டு செல்லுங்கள்" என்று விபீஷணன் கேட்க, ராமர் அதற்கு "நான் எடுத்துக்கொண்ட ஒரு காரியம் முடிந்து விட்டால், அதற்கு பின் ஒரு க்ஷணம் கூட அங்கே காரணம் இல்லாமல் இருப்பதில்லை. நான் வந்த காரியம் முடிந்து விட்டது. இனி இப்பொழுதே அயோத்தி செல்ல வேண்டும், பரதன் காத்துக்கொண்டிருப்பான்" என்றார். இதில் கூட ராமரின் தலைமை பண்பு தெரிகிறது.

ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?
ராமாயணத்தை படிக்கும் போது,
"ராமர் ஆட்சியில் அமர்ந்தது கடைசியில் தானே" என்று நமக்கு தோன்றும்.
ராமர் ஆட்சியில் அமர்ந்த பின் எப்படி ஆட்சி செய்தார்?
என்பதை வைத்து மட்டும் ராம ராஜ்ஜியம் ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை என்று பேசப்படுகிறதா? என்ற கேள்வியும் நமக்கு எழும்.

ராமர் இளவரசனாக, மேலும் காட்டில் 14 வருடம் இருந்த காலத்தில் கூட ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்.



அரசன் ஆவதற்கு முன்பே அவரிடம் அத்தனை சிறந்த குணங்களும் இருந்தது.
நான் நல்லவனாக இருப்பேன், 
சத்தியத்தில் இருப்பேன்,
தாய் தந்தை சொல்படி நடப்பேன், 
யாரிடமும் அன்பாக இருப்பேன், 
என் தர்ம விதிப்படி எப்பொழுதும் இருப்பேன். 
மற்றவர்களும் அவர்கள் தர்மபடி இருக்க செய்வேன். 
தர்மத்தை மீறுபவர்களை என் க்ஷத்ரிய தர்ம படி தண்டிப்பேன். 
கொடுத்த வாக்கை காப்பேன்.
இப்படி பல குணங்கள் ராமருக்கு இருந்தது.

தன் தந்தை சபதத்தை காக்க, பிள்ளையான ராமர் 14 வருடம் காட்டுக்கு சென்றார்.
இதை கண்கூடாக பார்த்தனர் மக்கள்.
சத்தியத்துக்கு இப்படி மரியாதை செய்தவர், 14 வருடம் கழித்து வந்து ஆட்சியை நடத்தினால், மக்கள் அனைவரும் சத்தியத்துக்கு கட்டுப்படாமலா இருப்பார்கள்?

ராம ராஜ்ஜியம் ஒரு அரசனை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் தர்ம வழியில் வாழ தூண்டும்.

ஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்


ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பற்றி:
ஒருவர் சிறந்த
1. புத்திசாலியாகவும்,
2. மிகுந்த பலசாலியாகவும்,
3. சுறுசுறுப்பாகவும்,
4. மிகவும் புகழ் பெற்றவராகவும்,
5. புலன்களை அடக்கியவராகவும்,
6. மகா தைரியசாலியாகவும்,
7. பயம் அறியாத சுத்த வீரனாகவும்,
8. ஆரோக்யம் உடையவராகவும்,
9. சிறந்த கல்வி தேர்ச்சி பெற்றவராகவும்,
10. சிறந்த பேச்சுத்திறமை உள்ளவராகவும்
ஒரு சேர காண முடியாது.



இதில் நமக்கு, ஏதாவது ஒன்று இரண்டு இருந்தாலே, கர்வம் தலைக்கு மேல் ஏறி விடும்.

இவை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஆனால் இவரோ, "ராமருக்கு நான் தாசன்" என்று கர்வமே இல்லாமல், கை குவித்து நிற்கிறார்.
ஸ்ரீ ராமரை அந்த பரவாசுதேவன் "நாராயணன்" என்று உணர்ந்து இருந்தார்.

இத்தனைக்கும் ஸ்ரீ ராமர், தான் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன். அயோத்தி அரசர், தசரதனின் மகன். ஒரு மனிதன் என்று சொல்லிக்கொண்டார்.
இது போதாது என்று, ஸ்ரீ ஆஞ்சநேயரை துணைக்கு வேறு அழைத்துக்கொண்டார்.


வயதிலும் மூத்தவரான, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமரை பகவான் என்று எப்படி உணர்ந்தார்?

மாயாஜாலம், மருத்துவம், பலம்  இவற்றையெல்லாம் வைத்து, யாரையும் பகவான் என்று சொல்ல கூடாது. சாஸ்திரம் பகவானின் குணங்கள் என்ன என்று சொல்கிறது.

நோய் தீர்ப்பவர் கடவுள் என்று நினைத்தால், எல்லா மருத்துவரும் கடவுள் என்று சொல்ல வேண்டியது தான்.

கடவுளை பலத்தாலோ, மாயாஜாலத்தாலோ, கண்டு பிடிக்கமுடியாது. கண்டு பிடிக்கவும் கூடாது.
போலி மதங்கள் இப்படி ஏமாற்றியே தான் மக்களை ஏமாற்றி வளர்ந்தன. ஏமாற்றுகின்றன.

சாதாரணமாக, ஒரு மனிதன் தன்னை தாழ்த்தி கொள்ள, "நான் நாய் போன்று நன்றியுடன் இருப்பேன்" என்று சொல்லுவான்.
கொஞ்சம் உயர்வாக தன்னை எண்ணும் போது "நான் கடவுள்" என்பான்.

மனிதர்களை விட உயர்ந்தவர்கள் தேவர்கள். தேவர்களை பொறுத்தவரை, மனித பிறவியே தாழ்ந்த பிறவி.
தேவர்களையும் விட உயர்ந்த லோகத்தில் இருப்பவர்கள், ரிஷிகள்.
அவர்களுக்கும் மேல் லோகத்தில் இருப்பவர் ப்ரம்மா.
இவை அனைத்தையும் படைத்தவர் பரவாசுதேவன்.

மனிதர்களில் சிலர் "நான் கடவுள்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது போல, பரவாசுதேவன், ஸ்ரீ ராமனாக அவதாரம் செய்து, "நான் மனிதன்" என்று சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டார். மனிதனாக தர்ம வழியில் வாழ்ந்து காட்ட, அவதாரம் செய்ததால், யார் கேட்டாலும், "நான் மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

முடிந்தவரை, தான் மனிதனாகவே இருக்க முயற்சி செய்தார். ஆனாலும், இவரின் வேடம் யாரிடமும் பலிக்கவில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடமோ, சீதையிடமோ, சகோதரர்களிடமோ, சபரியிடமோ, பெற்றோர்களிடமோ, விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகத்தியர், போன்ற ரிஷிகளிடமோ, மாரீசன், கும்பகர்ணன் விபீஷணன் போன்ற அரக்கர்களிடமோ கூட  பலிக்கவில்லை. இன்று வரை இவர் சரித்திரம் நமக்கு தேவைப்படுகிறது.

இவர் "நான் மனிதன்" என்று சொன்னாலும் இவர்கள் யாவரும் இவரை அந்த பரவாசுதேவன் என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.

பகவான் என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களை விஷ்ணு புராணம் சொல்கிறது.
1. பூர்ணமான ஐச்வர்யம்
2. பூர்ணமான தர்மம்
3. பூர்ணமான புகழ்
4. பூர்ணமான ஸ்ரீ
5. பூர்ணமான வைராக்யம்
6. பூர்ணமான மோக்ஷம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் இந்த லக்ஷணங்களை ஸ்ரீ ராமரிடத்தில் கண்டார்.

ஸ்ரீ ஆஞ்சநேயரிடம், "ஸ்ரீ ராமர் பகவான் என்று தெரிந்தும், நீங்கள் மட்டும், அவரிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீ ராமர் எப்படி இருப்பார்? எப்படி பழகுவார்?" என்று கேட்டால்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் சொல்கிறார்,
"ஸ்ரீ ராமரை பார்க்கும்போதே பகவான் என்று நமது ஆத்மா உணரும். அவரின் கண்கள் கருணை என்ற குளிர்ச்சியை வர்ஷிக்கும். நமக்கு பார்க்கும் போதே குளிர்ச்சியாக இருக்கும்.
பார்க்கும் போதே நம் மனம் சாந்தி அடையும்.
பேதம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக  பழகுவார்.
நம் குறையே அவர் கண்ணுக்கு தெரியாது.
நம்மில் இருக்கும் ஒரு சிறு நிறையையும் பெரிதாக நினைத்து அன்போடு பழகுவார். கருணையே வடிவமாக கொண்டிருப்பார்.
நீல வர்ணமாக இருக்கும் ஸ்ரீ ராமரை பார்த்தாலே, அனைவருக்கும் அவரிடம் போய் பேசலாமா? பழகலாமா? என்று ஆசை வரும்.
அவரும் நம்மிடம் ஆசையாக பழக முன் வருவார். ஆனால், நான் அவரிடம் நெருங்கி பேசலாம் என்று முயற்சி செய்யும் போது, அவரின் எண்ணிலடங்கா பகவத் குணங்கள் என்னை ஒரு ஜீவன் என்று உணர்த்தி விடுகிறது.
பரமாத்மாவிடம் நெருங்கும் ஜீவன், தன்னை தாசன் என்று உணர்வது போல, ஸ்ரீ ராமரை நெருங்கும் போதெல்லாம் நான் தாசன், அவர் பரவாசுதேவன் என்ற நினைவு வந்து விடுகிறது. நான் ராம தாசன் ஆகி விடுகிறேன்.

ஒருவேளை நமக்கு தெரிந்த 1000 நற்குணங்கள் யாவும் ஸ்ரீ ராமரிடம் உள்ளதா என்று பார்க்க முயற்சித்தால், அதைவிட அதிகமான நற்குணங்கள் கொண்டு இருப்பார். குணக்கடலாக இருக்கிறார்.



பொதுவாக கடலை காணும் போது, மனிதர்களுக்கு ஏதோ புரியாத சந்தோஷம் உருவாகிறது.
சிலருக்கு பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் நீந்தலாம் என்றும் தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் பயணம் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் முங்கி குளிக்கலாம் என்று தோன்றுகிறது.
சிலருக்கு கடலில் உள்ளே சென்று முத்து எடுக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் யாருமே, கடலை முழுவதும் அறிந்தவர்கள் இல்லை.

அதே போல, ஸ்ரீ ராமரின் குணம் என்ற கடலை கண்டு ஆனந்தப்பட்டு அருகில் வருபவன், கடல் அருகே வந்து அதன் கம்பீரத்தை, பலத்தை பார்த்து, அப்படியே கரையில் நின்று விடுவது போல, அவர் அருகில் சென்ற பிறகு  அமைதியாக நின்று விடுகிறேன்.
பார்ப்பதற்கு கடல் போல குளிர்ச்சியாக இருக்கிறார். அவரின் தரிசனம் மட்டுமே திருப்தி அளிக்கிறது" என்றார் ஹனுமான்.

Tuesday 3 October 2017

தவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்.. நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது


தவறு செய்தாலும், துக்கம் வந்தாலும், பரிகாரம் (பாவ மன்னிப்பு) கேட்காத பக்தன்:

கலி ஆரம்ப சமயம்:
வேட்டையாட சென்ற பரீக்ஷித், ஏதோ  ஒரு கோபத்தில் சமீகர் என்ற ரிஷி மீது, அங்கு இருந்த செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டு விட்டு, சென்று விட்டார்.


ரிஷியின் 7 வயது மகன்  ஸ்ருங்கி இதை பார்த்து, 'இப்படி செய்தவன் 7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது' என்று சபித்துவிட்டான்.

அரண்மனை சென்றிருந்த பரீக்ஷித் "இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டோமே! அர்ஜுனனின் பேரன், அபிமன்யு மகனாக, ஸ்ரீ கிருஷ்ணரை குல தெய்வமாக கொண்ட இந்த பரம்பரையில், நாம் பிறந்து, எப்படி இப்படி ஒரு காரியம் செய்தோம்?
தன் தாத்தா 'தர்மபுத்திரர் யுதிஷ்டிரர்' அரசாண்ட இந்த அரசாட்சியில், நாம் இப்படி ஒரு அதர்ம காரியத்தை செய்து விட்டோமே!
மக்கள் தவறு செய்தால், அரசன் தண்டனை கொடுப்பான். அரசனான நானே செய்த இந்த குற்றத்துக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
இந்த அரசனுக்கு, பகவானே, நீயே தகுந்த  தண்டனை கொடு"
என்று மிகவும் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த சமயம், அங்கு வந்த சமீகரின் சிஷ்யர்
'7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது என்று சமீகரின் மகன் உங்களை சபித்துவிட்டார், இதை உங்களுக்கு தெரிவித்து விட சொன்னார்'
என்று சொல்லிவிட்டு சென்றார்.


கலியில், சில சமயங்களில் மிகவும் நல்லவர்களும், சில தவறு செய்து விடுவார்கள்.

இவர்கள் நல்லவர்களாக இருப்பதால், இப்படி செய்தோமே!! என்று பிறகு  வருந்தவும் செய்வாரகள். இது கலியின் தோஷம்.

ஆகையால், நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது.

இவர்கள் பொதுவாக எத்தனை நல்லவர்களாக இருந்தார்கள் என்று நினைத்து, கலியில் சில சமயம் நல்லவர்களின் புத்தியும், அவர்களையும் மீறி செயல் படுத்த செய்து விடும் என்று அவர்கள் தவறுகளை நம் மனதில் நிறுத்தி  கொள்ளாமல், தள்ளி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி!
சபித்த விஷயத்தை எதற்காக தன் சிஷ்யர்களை விட்டு உடனே சொல்ல சொன்னார்? சொல்லாமல் இருந்திருக்கலாமே?




இதற்கு காரணம், சாபம் பலித்தால், இன்னும் 7 நாளில் அரசன் மடிந்து விடுவான்.
அரசன் இல்லாத நாடு என்ன நிலையாகும்?? மக்கள் கஷ்டப்படுவார்கள். நல்லவர்களை  காத்த அரசன் போனால், தீயவர்கள் பெருகுவார்கள். அதர்மம் பெருகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சமீகர் விஷயத்தை உடனே பரீக்ஷித்திடம் சொல்ல சொன்னார்.

பொதுவாக உலகில் அனைவருக்கும் துன்பம் வருகிறது.
துன்பத்திற்கு  காரணம், அவன் இந்த ஜென்மத்திலோ, போன ஜென்மங்களிலோ செய்த கர்மாவே, செயல்களே காரணம்.

தெரிந்தோ தெரியாமலோ, அகலிகை போன்ற, நலகூபுர போன்ற தேவர்கள் கூட சில சமயம் தவறு செய்து சாபத்தை வாங்கினர். 

சாபம் கொடுத்தவர்களிடமே இவர்கள் சென்று, பரிகாரம் கேட்டு, அந்த சாபத்திலிருந்து தப்பித்து உள்ளனர். 
அகலிகை 'கல்லாக போ' என்று சபிக்கப்பட்டதும், பரிகாரம் கேட்க, ஸ்ரீ ராமரின் பாத தூளி பட்டால், சாபம் விலகும் என்று பரிகாரத்தை அறிந்தாள்.

இப்படி சாபத்துக்கு பரிகாரம் உண்டு என்பதால், ஒரு வேளை, பரீக்ஷித் மகாராஜன் பரிகாரம் கேட்டால், பரிகாரம் சொல்லி காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான், சமீகர் தன் சிஷ்யனை அனுப்பி வைத்தார்.

சரித்திரத்தை ஆதியில் இருந்து பார்க்கும் போது, தான் செய்த தவறுக்கு, வரும் கஷ்டத்தை, சாபத்தை, பரிகாரம் கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் மட்டுமே!!

  1. ஒருவர், ஸ்ரீ ராமரின் தந்தை 'தசரதர்',
  2. மற்றொருவர், 'பரீக்ஷித்'.

வேட்டையாட வந்த தசரதர், "யானைதான் தண்ணீர் குடிக்கின்றது" என்று நினைத்து, ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டார்.
ஆனால், தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரவனன் என்ற 16 வயது சிறுவனை தவறுதலாக அம்பு எய்து கொன்றுவிட்டார்.


"தான் செய்த தவறுக்கு பகவானே ஒரு தண்டனை தரட்டும்" என்று நினைத்த தசரதர், அவர் நினைத்தது போலவே, ஸ்ரவனனின் கண் தெரியாத அவர் தந்தை, "எப்படி நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து, உயிரை விட போகிறோமோ, அதே போல, நீயும் உன் பிள்ளைகளை இழந்து உயிரை விடுவாய்" என்று சபித்தார்.


"செய்த தவறுக்கு, சரியான தண்டனை கிடைத்தது" என்று, தசரதரும் அவரிடம் பரிகாரம் கேட்கவில்லை.
அதே போல, இங்கு பரீக்ஷித் மகாராஜனும் பரிகாரம் கேட்கவில்லை.

"உயிரே போகும் துக்கம் வந்தாலும், இதற்கு தெய்வம் தான் காரணம், தெய்வம் உதவி செய்யவில்லை" என்று உண்மையான பக்தன் சொல்ல மாட்டான்.
மாறாக,
"இது என் கர்மத்துக்கான வினை" என்று மேலும் பகவானை நெருங்குவான், பக்தி செய்வான்.

"உயிரே போகும் துக்கம் வந்தும், பகவானை குறை சொல்லாமல், பக்தி செய்தவர்" பரீக்ஷித் மகாராஜன்.
இதுவே நமக்கு பாடம்.

சமாதானம் அடைய முடியாமல், மனம் வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித், "தனக்கு இப்படி ஒரு தண்டனை தகும்" என்று ஏற்றுக்கொண்டார்.

"உடனே தக்ஷகன் கடித்து சாகாமல், தனக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறாரே!!" என்று மகிழ்ந்து, அப்படியே ராஜ்யத்தை மந்திரிகளிடமும், தன் மகன் ஜனமேஜெயனுக்கு விட்டு விட்டு, கங்கை நதி ஓரம் வந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ரிஷிகள், ஒவ்வொருவராக, நடந்த விஷயத்தை பற்றி விசாரிக்க முயல, பரீக்ஷித் விசாரிப்பதை  நிறுத்தச்சொன்னார்.

பொதுவாக, ஒருவனுக்கு துக்கம் வரும் போது, தன் கஷ்டத்தை பற்றி குறைந்த பட்சம் யாராவது விசாரிப்பார்களா?? என்று எதிர்பார்ப்பார்கள். இது இயற்கை.

இறந்தவன் வீட்டில் சென்று, துக்கம் விசாரிப்பார்கள்.
துக்கம் விசாரிப்பதால், இறந்தவன் வரப்போவதில்லை.

விசாரித்தால், துக்கத்தில் உள்ளவனுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும்.

ஞானி போன்ற வைராக்ய நிலையில் இருந்த பரீக்ஷித்துக்கு, இப்படி ரிஷிகள் வந்து விசாரிப்பது தேவைப்படவில்லை.

"இந்த சாபம் தனக்கு ஏற்பு உடையது தான்" என்று துக்கம் அடையாமல், இனி இந்த 7 நாளில் என்ன செய்ய வேண்டும்? எதை உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும்?
என்ற கேள்வியுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

வந்த ரிஷிகள், பரீக்ஷித்தின் பக்குவ நிலையை பார்த்து,
'நாங்கள் இவரை சாந்தமாக ஆக்க விசாரிக்க வந்தால், இவரோ, 7ஆம் நாள் மரணம் என்று தெரிந்தும், சாந்தமாகவே இருக்கிறாரே' 
என்று ஆச்சர்யப்பட்டனர்.

ரிஷிகள் கூட்டம், பரீக்ஷித் மகராஜனை சூழ்ந்து அமைதியாக அமர்ந்தனர்.

மனிதராக பிறந்தவன் உண்மையில் எதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன் இருந்த பரீக்ஷித் மகாராஜனை பார்க்க வ்யாசரின் புத்திரர் 'சுகர்' வந்தார்.
7 நாளும் பாகவதம் சொன்னார்.
பாகவதம் கேட்டதனாலேயே பரீக்ஷித் முக்தி பெற்றார்.

குருவே துணை

மௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்


மகாபாரதம் கடைசி ஸ்லோகத்தை சொல்லி, அதை விநாயகர் எழுதி முடித்தவுடன், வேத வியாசர், பெருமிதம் கொண்டு, விநாயகரை பார்த்து சொன்னார்,

"விநாயகரே !! தெய்வ கிருபையால் என் வாக்கில் இருந்து வந்த 20,000துக்கும் மேலான மகா பாரத ஸ்லோகங்களை, நீங்கள் ஆச்சர்யமாக அதே வேகத்தில் எழுதி விட்டீர்கள். இது ஒரு ஆச்சர்யம் என்பதை விட, நீங்கள் எழுதுவதிலேயே கவனம் கொண்டிருந்தீரே தவிர, ஒரு பேச்சு ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வரவில்லை. நீங்கள் இத்தனை நேரமும் காத்த அமைதியே, மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது" என்று விநாயகரை கொண்டாடினார்.

விநாயகர், ஆச்சர்யமாக பேசலானார்.
வேத வ்யாஸரை பார்த்து,




"வேத ரிஷியே !! பொதுவாக யாவருக்கும் இத்தனை காலம் தான் வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எறியும் விளக்கிற்கும் கூட ஆயுசு உண்டு.

இப்படிப்பட்ட குறுகிய காலம் வாழப்போகும் ஒருவன், அறிவாளியாக இருக்கும் பட்சத்தில், இருக்கும் சக்தியை வீணடித்து, இருக்கும் குறுகிய ஆயுசை இன்னும் குறைத்துக் கொள்ள மாட்டான்.
மனம், வாக்கு, காயம் முதலியவைகளை ஒரு அறிவாளி, வீணாக பயன்படுத்த மாட்டான்.

எவன் ஒருவன் சுய கட்டுப்பாட்டுடன் மனம், வாக்கு, காயம் முதலியவைகளை தன் வசம் வைத்து இருக்கிறானோ, அவனுக்கு, சக்தி ஒருங்கிணைந்து, செய்யும் எந்த காரியத்திலேயும் வெற்றி கிடைக்கும்.

முதலில், அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விரதம், "மௌன விரதமே".
இந்த மௌன விரதமே, என் சக்தி அனைத்தும் நான் எழுதும் போது, ஒருங்கிணைத்து உதவி செய்தது.

வாய் ஓயாது உலக விஷயம் பேசுபவன், தன் சக்தியை இழக்கிறான். நான் மௌன விரதத்தின் மகத்துவம் அறிந்தவன்" என்றார்.

Make effective communication, rest, be in mouna vradham. It saves energy.

--- மௌன விரதம்.

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் ?


பெருமாள் ஒரு கையை தலை பக்கமும், தன் இன்னொரு நீண்ட கையை கால் பக்கமும் நீட்டி சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
இதை எல்லோரும் பார்த்து இருப்போம். இதன் உண்மை உணர்ந்தால், பெருமாள் யார் என்று தெரியும், பக்தியும் தானே வரும்.





நன்றாக கவனித்தால், பெருமாள் நம்மிடம், தன் தலையில் உள்ள பெரிய கிரீடத்தை காட்டி, 'வாழும் காலத்தில், யார் யாரையோ நம்பிக்கொண்டு, ஏமார்ந்து, கடைசியில் ஒருவரும் காக்க முடியாத மரணம் வந்து, இத்தனை நாள் யார் யாரையோ நம்பி வாழ்ந்தது வீண் என்று வெறுத்து, கிடைத்த மனித பிறவியை வீண் செய்யாமல், இந்த உலகத்தையும், உன்னையும் படைத்த மகாராஜன் நான் என்று பார்.
நான் காப்பாற்ற முடிவு செய்தவனை, உலகமே எதிர்த்து கவிழ்க்க நினைத்தாலும் முடியாது.
நான் உலகை படைத்த மகா ராஜா என்று தெரிந்தால் மட்டும் போதுமா, இதோ என் காலை இறுக பிடித்துக் கொள். சம்சார சாகரத்தில் இருந்தும் நான் உன்னை விடுவித்து, மோக்ஷம் தருகிறேன்.

குருவே துணை - ஜூலை 23, 2017

பெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன?


கோவிலுக்கு போகும் பக்தன்,
அர்ச்சகர் தனக்கு என்ன கொடுப்பார்?,
ஏன் மாலை தனக்கு கொடுக்கவில்லை?
அர்ச்சகர் பக்கத்தில் இருந்தவருக்கு என்ன கொடுத்தார்?
என்று யார் என்ன கொடுக்கிறார்கள் என்று பார்த்து,
யாரை காண வந்தோமோ அவரை பார்க்காமல் விட்டு விட கூடாது.

அவர் என்ன கொடுத்தார், இவர் என்ன கொடுத்தார் என்று எண்ணத்தை சிதற விட்டு, வந்த நோக்கத்தை விடக்கூடாது.


நமக்கு தேவையான ஒன்றை யாரும் தரமுடியாத ஒன்றை பெருமாள் வைத்துக்கொண்டு நமக்காக நிற்கிறார். நமக்காகவே நிற்கிறார்.
உலகத்தையும், உன்னையும் படைத்த பெருமாள், கையை கவனித்தால், அவர் நமக்கு என்ன தருகிறார் என்று தெரிந்து விடும்.

கோவிலுக்கு வந்து, அவர் முன் வீண் பேச்சு பேசி, யார் என்ன கொடுக்கிறார்? என்று பார்க்க கூடாது.
உலகில் பல வித துன்பங்கள், ஆபத்துகள், மரணத்துக்கு நடுவே நிற்கும் நமக்கு, பெருமாள் தன் கையை காட்டி 'அபயம்' என்று சொல்கிறார்.

அர்ச்சகர் தீர்த்தம் கொடுத்தாரா?
100 ரூபாய் கொடுத்தேனே ஒரு மாலை போட்டாரா?
என்று கேட்டு, நமக்கு தேவையான சொல்லான 'பயப்படாதே' என்ற அபயம் கொடுக்கும் பெருமாளை கவனிக்க மறந்து விடக்கூடாது.
பெருமாள் 'அபயம்' என்று சொன்ன பின், உலக பயம் என்பது நமக்கு ஏது?

குருவே துணை

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

தீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேசம்

ஹித உபதேசம்.

दुर्जनेन समं सख्यं प्रीतिं चापि न कारयेत् ।
उष्णो दहति चांगारः शीतःकृष्णायते करम् ॥

துர் ஜனேன சமம் ஸக்யம்
ப்ரீதிம் சாபி ந காரயேத் !
உஷ்னோ தஹதி சாங்கார:
ஸீத: க்ருஷ்ணாயதே கரம் !!





தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
தீய குணம் உள்ளவனை திருத்தவும் முயற்சி செய்ய வேண்டாம், சண்டையும் செய்ய வேண்டாம்.
சண்டையோ, உறவோ இரண்டுமே உங்களை பாதிக்க வாய்ப்பு உண்டு.

சூடாக இருக்கும் ஒரு நிலக்கரியை தொட்டால், கையை சுட்டு விடும்.
நெருப்பு அணைந்த பிறகு தொட்டாலும், கரியை தொட்டதனாலேயே கையை கரியாக்கி விடும்.

இந்த கரியை போன்றவர்கள் தான் தீயவர்கள்.

தீயவர்களிடம், நீங்கள் சண்டை செய்யவும் கூடாது.
தீயவர்களிடம், நீங்கள் உறவும் (தோழமை) வைத்து கொள்ள கூடாது.
துஷ்டனை கண்டால் தூர விலகு.

One should avoid friendship or close relationship with the wicked person who resembles charcoal, which if hot, burns you and, if cold, blackens your hand.

நன்றி. திரு. ஜோசப் on சுபாஷிதம் speech

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka






sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Hindus should bring out inclusive nature and inclusive growth to protect our Dharma

Now a days, People talk about inclusive growth more.

What is inclusive growth?


Within a family, if you give less importance to one person, slowly that person will start feeling excluded.
This is not inclusive growth for a family. This is exclusive growth.

Your action should be inclusive in your approach always.

Inclusive growth is possible, only if you bring up inclusive nature in yourselves.

If you feel happy about certain things, think about others who dont have that happiness. 
You try to bring that happiness in other's life.

If you like to lead good life with security for your family, you should know that others do like to have their life good and secure. Work for them but don't spoil others.

If you don't like certain things, think about others who are living with those difficulties.
You try to bring them out of that misery.

Think of others same like you. 
Then, automatically, inclusive nature develops by itself in you.

Developing Inclusive nature in everyone, brings inclusive growth in society as well.

Now a days people have forgotten joint family culture, which was created primarily for this inclusive growth.
Joint family gives benefit of understanding each other, supporting each other as one family if any of the family members gets affected by finance or health crisis. 
Joint Family helps each other families staying together.
This was an inclusive growth in a family, to take care of needy at time of crisis.

Now, Our People live more exclusive.
Each family think about their own income, their own life and their own safety.
Families are split and live like apartments. 
In apartment, it looks like people stay together.
But in reality, they don't have an idea about their neighbour life style, problem etc.





Unfortunately, This is happening within your families as well because of this exclusive mindset. This is a serious concern.

Every family became selfish and trying to secure their own family for fame, pride, need, life style.

Inclusive growth is gone out of our life.
This need to corrected at families and in your society as well.

But what we are missing now a days, is the culture of inclusive growth to bring all family members together to reach better life.

The purpose of inclusive growth, is to identify those in need and supporting them to reach the same level.
Today a vedic brahmin spends his whole life, to study veda.
He became a priest to guard our temple with same purity.
People who earn and live with life style, must have this inclusive mindset to support these Vedic Brahmins and encourage those Vedic Scholars, who had spend their whole life to learn Veda than studying Materialistic educations, to hold our sanathana dharma and culture to lead a healthy life. 

If you are born in brahmin community but not reciting veda, you must atleast marry one of your daughter to a Vedic scholar to ensure brahmin Vedic scholars have faith to continue their Vedic Studies to pass onto next generation.

Otherwise, we will end up having all these Vedic temples in future but no Vedic priest with vedic knowledge. Already we started seeing many Vedic Temples with no pooja, no uthsavam. 

Brahmins who are in commercial life, have exclusive mindset and don't merge with vedic brahmins.

Inclusive mindset must grow to every hindus, to support each other to sustain ourselves for future.  Otherwise, Hindu Vedic Culture which is deteriorating will disappear because of us but not by other believers. 

Selfishness is the key problem and affected our inclusive growth. 
"Temple, Vedic Priest, Temple assets" must be protected by all Hindus irrespective of caste.
It happens only with this inclusive approach.

Scholars and Vedic Pandits knew about bhakti, god and moral values by reading veda and ithihaasam.
But what about others who are uneducated and excluded?

Shri ramanujar greatest service is "This inclusive growth for all National People".

Ramanuja looked at people who don't even knew that "There is a need to do bhakti (Love) to Supreme god and who is Supreme God as per Vedic Phrase".
In temple, you will see moolavar (Prime God).
He stays inside and wait for his devotee to come inside.
But the same god, will become as Utsavar and will come out of his temple in Chariot and roam around and stands next to us or to our home.
This utsavam is itself an inclusive approach of god, where he comes out to reach to us to give bhakti.
Similar way, taking pity on whole society, Ramanujar went out and spread bhakti and brought inclusive growth and made bhakti common to all.



Ramanuja knew that, he will attain moksha anyway but he was not selfish.
He roam around entire bharatha Varsha, proactively thought about those in need and spread bhakti all over bharatha desam.

Ramanuja devotees we see today are result of his inclusive approach 1000 yrs before.
The same inclusive growth towards bhakti is mentioned by adi sankara himself.
In a sloka Adi Sankara says,
"Siva and Vishnu (perumal) can be understood by learned Scholars and gyaani alone. But I see that this subramanyan (Karthikeyan) is the god, son of shiva is more inclusive and accepts and brings everyone into his fold to give bhakti in their mind".
  • Let us Throw out, our selfishness from our mind.
  • Let us Bring out a sense of helping others.
  • Let us Bring out inclusive nature and inclusive growth together to prosper together.




Jai Jai Sankara, Hara Hara Sankara

Lecture by Sri Kanchi Bala Periyavar (Adi Sankara Mutt)
- காஞ்சி பால பெரியவர் - june 17, 2017 in nanganallur, chennai.)

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


கூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தார்?


சோழ அரசன், "சிவனே முதற்கடவுள்" என்று ராமானுஜரை சம்மதிக்க வைக்க முடிவு செய்தான்.
தன் சோழ படையை அழைத்து வர சொல்லி கட்டளையிட்டான்.



அரசன் மூலம் வரப்போகும் ஆபத்தை உணர்நது, சிறிது வயதில் மூத்தவரான "கூரத்தாழ்வார்", ராமானுஜர் போன்று காவி உடுத்தி, ராமானுஜரை சாதாரண வெள்ளை உடை உடுக்க சொல்லி, தப்பிக்க வைத்தார்.

ராமானுஜர் சில சிஷ்யர்களுடன் சோழ படைகள் வருவதற்கு முன் தப்பித்தார்.

சோழ படை, கூரத்தாழ்வாரை ஸ்ரீ ராமானுஜர் என்று நினைத்து, அரசவைக்கு கூட்டி சென்றனர்.

"சிவனே முதற்கடவுள்" என்று எழுதிக் கையெழுத்து போட சொல்ல, கூரத்தாழ்வார் மறுத்தார்.

அவரின் கண்களை பிடுங்கி எறிய ஆணை இட்டான்.
கூரத்தாழ்வார் தன் கண்களை தானே பிடுங்கி விட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீ ராமானுஜர் நிலை எவ்வாறு இருந்தது? அவருடைய சிஷ்யர் கூரத்தாழ்வார் நிலை எவ்வாறு இருந்தது?

ஸ்ரீ ராமானுஜர் அடுத்த 12 வருடங்கள் ஸ்ரீ ரங்கத்தை விட்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இனி நான் எங்கு போய் இனி இருப்பது? என்று தனக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
ஸ்ரீ ரங்கநாதருக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
தன் சிஷ்யர்களுக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.


இது பகவான் இஷ்டம் என்று கவலையை மனதில் கொண்டு வராமல், இனி தான் செய்ய வேண்டிய காரியங்களை நோக்கி மேலும் பயணித்தார்.
அவருக்கு சோழ அரசனிடம் கோபமும் இல்லை.
இதுவே வைஷ்ணவ லக்ஷணம்.

குரு தன் ஞான நிலையில் இருப்பது ஆச்சரியமில்லை. கஷ்ட காலத்தை பகவான் இஷ்டம் என்று அறிந்து, மேலும் தனக்கான கடமையை தொடர்ந்தார்.

ஸ்ரீ ரங்கத்தை விட்டு செல்ல வேண்டிய கஷ்ட நிலைமையில்,  கண்ணை இழந்து இருந்த கூரத்தாழ்வார், பிருந்தாவனம் சென்று விடலாம் என்ற ஆசை கொண்டார்.
ஆனால், கண் தெரியாமல் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து, பிருந்தாவனம் செல்வது முடியாத காரியமாக இருந்தது.

பிருந்தாவனத்திற்கு இணையாக அழகர் கோவிலை கருதினார். அங்கு இருக்கும் சுந்தரராஜ பெருமாளை கண்ணனாக பாவித்தார். அருகில் இருக்கும் மதுரையை, மதுராவாக பாவித்தார்.
அழகர் கோவிலையும் அதை சுற்றி இருக்கும் வனத்தையும் பிருந்தாவனம் என்று பாவித்து, தனக்கு வந்த துக்கத்தை மறந்து, தன் 12 வருட காலத்தை கண் தெரியாமல், பூ கைங்கர்யம் செய்து, சுந்தரராஜ பெருமாளுக்கு பூ மாலை கட்டி கொடுத்து சாத்வீகமாக கழித்தார்.

கூரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் போன்றே மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

"ஐயோ! இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டுமா?
குருவை இழந்தேனே !
ஸ்ரீ ரங்கநாதரை இழந்தேனே !
ஸ்ரீ ரங்க வாசத்தையும் இழந்தேனே!
கண்களையும் இழந்து குருடானேனே!
இனி நல்ல காலம் வருமா?" என்ற எந்த புலம்பலும் இல்லாமல், ஸ்ரீ ராமானுஜரை போன்ற மனப்பக்குவத்துடன் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்று அங்கு நந்தவனம் அமைத்து பூ கைங்கர்யம் ஸ்ரீ ராமானுஜர் திரும்பி ஸ்ரீரங்கம் வரும்வரை 12 வருடங்கள் செய்து கொண்டு இருந்தார்.



ஒரு நாள் கூட, தன் கவலையை, குறையை, "சுந்தரராஜ" பெருமாளிடம் சொல்லி கொண்டது கூட இல்லை.
சோழ அரசன் மீது கோபமும் இல்லை.
கண் தெரியாமலேயே 12 வருட காலங்கள், பூ கைங்கர்யம் பெருமாளுக்கு செய்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு நிகராக, துக்க காலத்தில் வைராக்கியத்துடன், பகவான் இஷ்டம் என்று சமாதானமாக, சாத்வீகமாக பொறுமையுடன் இருந்தார் கூரத்தாழவார்.
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

Monday 2 October 2017

வர்ணம்... மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்


மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்.

1. English: priest, saint. Sanskrit: ப்ராம்மண.

இறை உணர்வு மேலோங்கியவர்கள் இவர்கள். உலக வாழ்க்கையை விட இறை உணர்வே இவர்கள் லட்சியம். ஏழையாக இருந்தாலும் கவலைப்படாதவர்கள்.  ப்ரம்மத்தை உபாஸிக்கும் ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி சொல்லும் சமஸ்க்ரித வேதத்தை படித்து, இதிஹாசங்களை படித்து, அதன் அர்த்தத்தை அனைவருக்கும் சொல்ல ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி வாயால் படிப்பதாலும், சொல்லுவதாலும், மற்ற அவயங்களை விட, இவர்களுக்கு வாயும், கண்ணும், காதுமே மிக முக்கியமானது.
தலை பகுதியில் வாய் இருப்பதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.
அனைவருக்கும் தர்மம் எது, அதர்மம் எது என்று சாஸ்த்திரத்தின் வழியில் சொல்வதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.

2. English: Army, police. Sanskrit: ஷத்திரிய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட அனைவரையும் தர்ம வழியில் வாழ வைத்து, அவர்களை காப்பதே முக்கியம் என்று இருப்பவர்கள். நாட்டையும், மக்களையும் பகைவர்களிடமிருந்தும், தர்மம் வழியில் நடத்தி வாழ வைக்கவும் ஆசை உடையவர்கள். தான் நினைப்பது தர்மமா? அதர்மமா? என்று சந்தேகம் வரும் போது, வேதம் ஓதும் ப்ராம்மணனிடம்(priest, saint) கேட்டு தெரிந்து கொண்டவர்கள்.
இவர்கள் தேசத்தையும், மக்களையும் காப்பாற்றுவதிலேயே ஆசையாக இருப்பதால், மற்ற அவயங்களை விட, இவர்களின் பலத்தை குறிக்க கையும், தோளும், உறுதியான நெஞ்சும் மிக முக்கியமானது.
இதனால், இவர்கள் பகவானின் கை, தோள், நெஞ்சம் போன்றவர்கள் என்று உருவகம்.

3. English: Business people, self employed. Sanskrit: வைஷ்ய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட தர்ம வழியில் பணம் நிறைய சம்பாதித்து, சுய தொழில் செய்து, வேலை வாய்ப்பும் கொடுத்து, நாட்டை காக்கும் ஷத்திரியன் சொல் படி இருந்து, நாட்டுக்காக, தர்மப்படி நடக்கும் பொது காரியங்களுக்கு பொருளுதவி செய்து, தானும் சுகமாக இருந்து, பலரையும் வாழ வைக்கும் ஆசை உடையவர்கள் இவர்கள். இவர்கள் வயிற்று மற்றும் தொடை பகுதி போன்றவர்கள். இவர்கள் தேசம் தேசமாக சென்று சுய தொழிலால் சம்பாதிக்கின்றனர். பயணம் அதிகம் போவதற்கு தொடை பலம் தேவை. அனைவரது பசியை போக்க இவர்கள் மூல காரணமாக இருப்பதால், இவர்கள் பகவானின் வயிறு, தொடை போன்றவர்கள் என்று உருவகம்.

4. English: Working people/Employee. Sanskrit: சூத்திரன்

இறை உணர்வு உடையவர்கள். இவர்கள் தானாக சுய தொழில் செய்ய தெரியாதவர்கள், துணிவு இல்லாதவர்கள்.
இவர்கள் நாட்டை காக்கும் அளவிற்கு உயிர் பயம் இல்லாத வீர நெஞ்சம் கொண்டவர்களும் அல்ல.
இவர்கள் காலம் முழுக்க இறை உணர்வுடனேயே, பொருள் சம்பாதிக்கும் எண்ணமே இல்லாதவர்களும் இல்லை.

இவர்களுக்கு பொருளும் வேண்டும், தர்மத்துடன் முடிந்த வரையில் இருக்க ஆசை படுவார்கள்.
நாட்டின் மீது பற்று இருக்கும், ஆனால் நாட்டை காக்கும் அளவிற்கு திறன் இல்லாதவர்கள்.

இவர்கள், யாரிடமும் சென்று அவர்களுக்கு உதவியாய் இருந்து, உழைத்து, அவர்கள் தரும் பொருளை வாங்கி கொண்டு வாழ்வர்.
தானாக எதையும் செய்ய தெரியாத இவர்கள், மற்றவர்கள் சொல்லும்  வேலையை சொல்லிக்கொடுத்து போலவே செய்து முடிக்கும் வல்லவர்கள். யாருக்கு இவர்கள் உதவி தேவையோ, இவர்கள் சென்று உழைப்பதால், இவர்கள் சூத்திரர்கள்.
சூத்திரம் என்றால் 'formula'.



இவர்கள் இல்லை என்றால், வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.
அதனால் இவர்கள் சூத்திரன் என்றனர்.

Formula தப்பாக போனால், கணக்கு தப்பாகும்.
அதே போல, இவர்கள் இல்லை என்றால், மற்ற மூவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லாமல் போகும்.
இதை குறிக்கவே, 'சூத்திரன்' என்ற வர்ண பெயர்.

ஓடி ஓடி மற்றவர்களுக்கு உழைப்பதால், உழைத்ததற்கு கூலி வாங்குவதால், இவர்கள் கால் ஓடுவதை குறிப்பதற்காக, இவர்கள் பகவானின் கால் பகுதி போன்றவர்கள் என்று உருவகம்.



If employee protest, business class affect.

If businessmen protest, country revenue goes down. Army and defence will affect due to low fund.

If army and defence protest, all class will affect.

If priest protest,... it is a hypothetical question. They won't. Their focus is not in material world. So they never protest.
If happens, all 3 class will have lack of real knowledge on sastha, and will do anything as per their own wish

குரு பக்தி பெரிதா? குருவின் கருணை பெரிதா?....


'பகவானை அடைய, எனக்கு குரு தேவையில்லை, அவர் துணையும் தேவையில்லை, குரு நம்பிக்கையும் இல்லை.
நானே முயற்சி செய்வேன்' 
என்று சொல்பவர்களுக்கு, சாஸ்திரம் பல வழிகளை சொல்கிறது.

கீதையில் இதையே சுருக்கமாக, கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்று பல வழிகளாக சொல்லி கொடுக்கிறார்.

"நானே முயற்சி செய்வேன்" என்று சொல்பவர்களுக்காக பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு பல வழிகளை தன் திருவாயால் சொல்கிறார்.






செய்யும் காரியங்களை (கர்மத்தை) யோகமாக செய்ய தெரியவில்லையென்றால்,
அது வெறும் கர்மம் (செயல்) என்றாகி விடும்.
கர்மத்துக்கு பாவ, புண்ணியம் உண்டு, அதற்கு பலன் உண்டு.
அதனால், துக்கம், சுகம் உண்டு. மீண்டும் பிறவி உண்டு.
'எதையும் யோகமாக செய்ய தெரியாது' என்றால், தானே முயற்சி செய்வது வீண்.

ராவணன், கர்ணன், போன்றவர்கள் கூட கடும் தவம் செய்து பலம் பெற்றாலும், ஒரு ஆன்மீக குருவை நாடாததால், கர்வம் கொண்டிருந்தனர், அழிந்தனர்.
தானே எந்த செயலையும் யோகமாக செய்யும் திறமை இருந்தால் செய்யுங்கள் என்று யோக தர்மங்களை நமக்கு காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

"யோகம் செய்து கடவுளை இந்த கலியில் அடைய எனக்கு திறமை இல்லை. 
பகவான் தான் என்னை காப்பாற்ற வேண்டும், அடுத்த பிறவி இல்லாமல் முக்தி கொடுக்க வேண்டும்
என்று உணர்ந்தவர்கள், ஒரு ஆன்மீக குருவை கட்டாயம் நாட வேண்டும்.

அவர் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன சொல்கிறாரோ, அதன் படி நடக்க வேண்டும்.

இதுவே கலியில் சுலபமான வழியும் கூட.

குருவின் துணையில் யோக ஸித்தி ஏற்பட்டாலும், கர்வம் உண்டாகாது.  
அப்படியே கர்வம் உண்டானாலும், குருவே திருத்தி விடுவார்.

குரு பக்திக்கும், குரு கருணைக்கும் வித்தியாசம் உள்ளது:

ஒரு பெரிய குளத்தில், சுவையான நீர் இருந்தது.
குளத்தில் இறங்க முடியாத படி, கல்லும் முள்ளும் சூழ்ந்து இருந்தது.
குளத்தில் இறங்க நான்கு திசையிலும் அழகாக படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.



தெற்கு திசையில் உள்ள ஊர்காரர்கள் தெற்கு படித்துறை மூலம் இறங்கி, வேண்டிய அளவு தண்ணீீரை எடுத்துக்கொண்டனர்.
அதே போல, 
ஒவ்வொரு திசையிலும் உள்ள ஊர் மக்கள், அந்தந்த படித்துறைகளை பயன்படுத்தினர்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன்களுக்கு, பகவான் "கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம்.." என்று பல படித்துறைகள் அமைத்து கொடுத்தார்.

கர்ம யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் கர்ம யோகம் செய்து அந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

ஞான யோகம், சந்யாஸ யோகம் செய்ய சக்தி உள்ளவர்கள் அந்தந்த படித்துறை வழியாக மோக்ஷம் என்ற நீரை பருகி வைகுண்டம் சென்றனர். பிறவி கடலை கடந்தனர்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒரு நொண்டி, இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதை அறிந்து, எப்படியோ கஷ்டப்பட்டு குளம் அருகில் வந்து விட்டான்.

ஆனால்,
படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுக்க அவனால் முடியவில்லை.




'தண்ணீர் வேண்டும்" என்ற தாகம் இருந்தது.
மேலும், 
படித்துறை வழியாக சென்று தண்ணீர் எடுப்பவர்களையும் பார்த்தான்.

இவர்களிடம் காலில் விழுந்தாவது தண்ணீர் கேட்டு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அப்போது அங்கு  குளத்தில் இறங்க சென்ற ஒரு முதியவரை வணங்கி, 'தனக்கும் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' என்றான்.

இவன் பார்த்தவுடனேயே நிலைமையை உணர்நத அந்த முதியவர், 'நீயே முயற்சி செய்ய வேண்டியது தானே' என்று கிண்டல் செய்யாமல், இவனுக்காக இரக்கப்பட்டு, தானே இவனுக்காக தானே குளத்தில் இறங்கி, தண்ணீர் எடுத்து, இவன் அமர்ந்து இருக்கும் இடம் வந்து, தண்ணீர் கொடுத்து, தாகத்தை தீர்த்தார்.

இதே போன்று, 
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் ஜீவன், 'தன் முயற்சியினால் மோக்ஷம் அடைய முடியாது' என்று உணர்ந்து,
பகவான் சொன்ன கர்ம யோகம், ஞான யோகம், சந்யாஸ யோகம் என்ற பல படித்துறைகள் வழியாக செல்லும் திறன் படைத்த ஒருவரை தன் ஆன்மீக குருவாக ஏற்று, 
அவரிடம் முக்திக்கு வழி கேட்கும் போது, நம்முடையை நிலையை உணர்ந்து, கேலி செய்யாமல், கருணை கொண்டு, நமக்காக அவர் சிபாரிசு செய்து, மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுப்பார்.

மோக்ஷத்தில் ஆசை இருந்தும், சக்தி இல்லாதவர்கள் தான் உலகெங்கும் அதிகம் உள்ளோம்.

யோக மார்க்கத்தில் செல்ல துப்பு இருந்தால், இன்று மோக்ஷம் அடைந்து இருப்போமே..

யோக, கர்ம, ஞான என்று எந்த மார்க்கமும் செல்ல சக்தி இல்லாத நமக்கு, மோக்ஷம் அடைய ஆசை ஏற்படும் போது தான், குருவை தேட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். 

குரு பக்தியே இங்கு மிகவும் முக்கியம்
குருவிடம் பக்தி செய்ய வேண்டியது நமக்கு இங்கு தேவைப்படுகிறது. 



அந்த ஊரில் ஒரு வழிப்போக்கன் வந்தான்.
வெயிலின் கொடுமையால், தாகம் எடுத்தது.
தண்ணீர் எங்கு கிடைக்கும்? என்று தெரியாததால், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

படித்துறையில் இறங்கி தண்ணீர் எடுத்து செல்பவர்களில் ஒரு முதியவர்,
"தண்ணீர் இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது!!" என்று நினைத்து, "யாராவது தண்ணீர் கிடைக்குமா என்று அலைகிறார்களா?"
என்று தானே தண்ணீரை எடுத்துக்கொண்டு, ஊர் முழுக்க அலைந்தார்.

இப்படி தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் இந்த வழிப்போக்கனை பார்த்து விட்டார் முதியவர்.

இவன் கேட்காமலேயே, இவன் அருகில் வந்து, முக மலர்ச்சியுடன் தன் கையில் உள்ள தண்ணீரை கொடுத்து, தாகம் தீர்த்தார்.
'இவன் தனக்கு நன்றி சொல்வானா?' என்று கூட எதிர்பார்க்காமல், இவன் தாகத்தை தீர்த்த சந்தோஷத்திலேயே சென்று விட்டார்.

இதே போன்று,
மோக்ஷம் (குளத்தில் உள்ள தண்ணீர் போல) அடைய விரும்பும் சில ஜீவன், 
சாஸ்திர அறிவும் இல்லாமல், 
யோக மார்க்கம் என்றால் என்ன? 
கர்ம மார்க்கம் என்றால் என்ன? 
என்று எந்த வழியும் தெரியாமல்,
குருவும் கிடைக்காமல், 
குருவை தானே கண்டு பிடிக்கும் திறனும் இல்லாமல், 
குரு பக்தி என்றால் என்ன? 
என்று தெரிய கூட வாய்ப்பு இல்லாமல்,
மோக்ஷம் அடைய வேண்டும் என்ற தாகம் மட்டும் கொண்டு அலைபவனை, 
ஞானியான ஆன்மீக குரு ஒருவர், தானே கருணையின் காரணமாக, இவனை தேடி  வந்து, அவன் மோக்ஷத்திற்கும் வழி செய்து விடுவார்.

குரு பக்தி கூட தேவையில்லை என்று பெருங்கருணை கொண்டு குரு மோக்ஷ பாதையை சிலருக்கு காட்டி விடுகிறார். 
இதுவே "குருவின் கருணை". 

குரு பக்தி இல்லாதவர்களுக்கும், சில சமயம் ஞான பூரணமான சத்குரு கிடைத்து விடுவதற்கு காரணம் இது தான். 

அபாரமான கருணையின் காரணமாக எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கும் குரு கிடைத்து விடுவது, குருவின் கருணையால் மட்டுமே.

குருவின் கருணைக்கு பாத்திரமானவன் மஹா பாக்கியவான்.

யோகம் செய்வது கடினம்.
குரு பக்தி செய்வதும் கடினம்.
ஆனால்,
குருவின் கருணைக்கு பாத்திரமாக, 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்ற தாகமே முக்கியம்.
இந்த தாகம் இருந்தால் கூட போதும். குரு தானே கிடைப்பார். 

குருவின் கருணையால், மோக்ஷமும், வாழும் காலத்தில் சுகமும் உண்டாகும்.

தாகம் இல்லாதவனுக்கு, உண்மையான ஆன்மீக குரு கிடைக்க மாட்டார்.
ஆன்மீக குரு கிடைத்தவர்கள் யாவரும், தாகம் உள்ளவர்களே.

குருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது.

தெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? மனித முயற்சியால் பெற முடியாத 5 விஷயங்களை தெய்வத்திடம் கேள் என்று சொல்லி தருகிறார் ஆதி சங்கரர்... தெரிந்து கொள்வோமே...

"தெய்வத்திடம் நாம் 
என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்? 
எதை கேட்க வேண்டும்?"
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.


பொதுவாக, நாம் "பக்தியோடு" எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார்.

கேட்பதில் உயர்ந்த விஷயங்கள் உண்டு,
கேட்பதில் மிகவும் சாதாரண விஷயங்கள் உண்டு.

வரம் கொடுப்பவர், எதையும் கொடுக்க முடிந்தவர் என்று தெரிந்தும், அல்ப விஷயங்களை கேட்பவன், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.

பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது, 
பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது,
பிரார்த்தனை செய்தேன், வேலை கிடைத்து விட்டது, 
என்று சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் போய் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல ஆகும்.
அல்ப தெய்வங்கள் இதை மட்டுமே கொடுக்கும்.

"பரவாசுதேவன்" எதையும் தரவல்லவர்.

உன்னதமான சனாதன தர்மத்தை புரிந்து கொள்ளாமல், பொய் மதமான பௌத்த மதம் போன ஒரு சில க்ஷத்ரிய அரசர்களால்,
நம் பாரத நாடு 1000 வருடங்கள் இஸ்லாமியருக்கும், 200 வருடங்கள் கிறிஸ்தவருக்கும் அடிமைப்பட்டு,
க்ஷத்ரிய அரசர்களையும் இழந்து, 
செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டன.

"வளர்ந்த நாடாக" இருந்த நம் தேசம், விடுதலையின் போது ஏழை நாடாக ஆனது. 1947ADல் ஏழைகளாக விடப்பட்டனர் நம் முன்னோர்கள். 

ஏழை நாடாக விடப்பட்ட பாரத நாடு, பெருமுயற்சி செய்து "வளரும் நாடாக" இன்று உள்ளது.

ஆதி சங்கரர் இதற்கு முன்னரே அவதரித்து, நம் பாரத மக்களுக்கு,
நம் கலாச்சாரத்தின் பெருமையை,
நம் தர்மத்தின் பெருமையை,
நம் வேதத்தின் உண்மையான மகிமையை,
நம் சனாதன தர்மத்தின் பெருமையை போதனை செய்து,
மக்களை தர்ம வழியில் உறுதியாக நிறுத்தி விட்டார்.

இந்த பலமே, க்ஷத்ரிய அரசர்களை நாம் இழந்தும், இன்று வரை நம்மை ஹிந்துவாக வைத்துள்ளது.

ஆதி சங்கரர் மக்கள் தர்மங்களை புரிந்து கொள்ள, வேதத்தை பாஷ்யம் செய்து கொடுத்தார்.


"பாஷ்யமும் அனைவருக்கும் புரிவதற்கும், படிப்பதற்கும் கடினமே" என்று உணர்ந்து, யாவரும் சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் கொடுத்தார்.
"ஸ்லோகங்கள்" மூலம் தர்மங்களை விளக்கினார்.
எளிதாக பாடக்கூடியதான "பஜ கோவிந்தம்" கொடுத்தார்.

முக்கியமாக, "நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?" என்று வேதம் சொல்கிறது என்று எளிதான ஸ்லோகங்கள் மூலம் நமக்கு தர்மத்தை புரியவைத்தார்.

தெய்வத்திடம் அநேகமானவர்கள் பொதுவாக கேட்பது,
"எனக்கு வேலை கிடைக்க வேண்டும்,
எனக்கு குழந்தைகள் இல்லை குழந்தை வேண்டும்,
ப்ரோமோஷன் வேண்டும்,
நோய் தீரனும்,
என் பையனுக்கு, பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்"
என்று கேட்டு கொண்டிருப்பார்கள்.
ஆதி சங்கரர் 'இதையெல்லாம் போய் பகவானிடம் கேட்காதே' என்று சொல்லி, "நீ கேட்க வேண்டியது என்று சில உள்ளது, உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்" என்று சொல்லி கொடுக்கிறார்.


இனி ஹிந்துவாக இருப்பவர்கள், ஆதி சங்கரர் சொன்ன வழியில் பிரார்த்தனை செய்யலாம்.

நம் புராதன வேதம், நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொல்லி இருக்கிறது என்ற ஆதி சங்கரர் விளக்குகிறார்.

1. கர்வம்
தெய்வத்திடம் நாம் முதலில் கேட்க  வேண்டியது,
"பகவானே !! முதலில் 'நான் செய்கிறேன்' என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள்"
என்று கேட்கவேண்டும்.

நமக்கு முக்கியமாக தேவையானது - விநயம் (அடக்கம்).

இந்த விநயம் (அடக்கம்) நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் "நான் செய்கிறேன்" என்று இருக்கும் கர்வமே காரணம்.

அனைத்தையும் படைத்த பகவானிடம், நாம் போய் "என் கஷ்டம், என் துக்கம், என் வேலை" என்று நான், என்னுடைய என்று சொல்வதே 'நம் கர்வத்தை' காட்டுவதாகும்.

நிறைய படிப்பதனால், உயர்ந்த பதவி கிடைப்பதால், உடனே கர்வம் நமக்கு வந்து விடும்.
"எத்தனை விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அது சமுத்திரத்தில் நாம் எடுத்த ஒரு துளி தான்" 
என்ற மனப்பக்குவம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
இந்த மனப்பக்குவம், நமக்கு விநயத்தை தரும்.

மேலும் "எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம்" என்ற கர்வத்தை உண்டாக்காமல், "மேலும் தெரிந்து கொள்ளலாம்" என்று நம்மை உணர வைக்கும்.

சாஸ்திரம் நம்மை பார்த்து "எல்லோரும் எல்லாமும் தெரிந்தவர்கள் அல்ல" என்று சொல்லி,
"உனக்கு சில விஷயங்கள் தெரியலாம், 
அடுத்தவருக்கு உனக்கு தெரியாத சில விஷயங்கள் தெரியலாம். 
கற்றுக்கொள்ள வேண்டியது உலக அளவு இருக்க, எப்படி உனக்கு கர்வம் வரும்?" என்று கேட்கிறது.

அனைத்து விஷயங்களிலும் "விநயமாக (அடக்கமாக) இரு"
என்று சொல்கிறது நமது சாஸ்திரம்.

"எல்லாம் தெரியும்" என்ற நம் கர்வம், தெய்வத்திடம் போய் கூட கர்வத்துடன் பேச வைக்கிறது.

"எல்லாம் தெரிந்தவர் அந்த பரவாசுதேவனே" என்று தெரிந்தும்,
நான், என் என்று அவரிடம் பேசுவது தகாது. 

"எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?

அதனால்,
"நம் விநயத்துக்கு எதிரியாக இருக்கும், நம்மால் அழிக்க முடியாத கர்வத்தை நீக்கு"
என்று முதலில் ப்ரார்த்திக்க வேண்டும் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


கர்வம் இல்லாதவனிடம் விநயம் (அடக்கம்) தானே வரும். 

விநயம் நம்மில் வளர வளர, "இன்னும் தெரிந்து கொள்வோம்" என்ற ஆசை உண்டாகும்.

விநயம் உள்ளவனுக்கே, கேட்கும் புத்தி வளரும்.

பல விஷயங்கள் கேட்க ஆசை உள்ளவனுக்கு, "உலக அறிவும், ஆன்மீக அறிவும் எளிதில் ப்ரகாசமடையும்".

பர்த்ரு ஹரி ஒரு ஸ்லோகத்தில்,
"ஒரு சமயத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரியோர்கள், மகான்கள் சொல்வதை கேட்க கேட்க, எனக்குள் பல விஷயங்கள் மனதில் பதிய பதிய, இப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது என்ற புரிந்து, அடக்க நிலைக்கு வந்து விட்டேன். கர்வம் அழிந்து, இன்னும் தெரிந்து கொள்ள ஆசை கொண்டேன்" 
என்கிறார்.

ஆக,
"ஒருவன் எத்தனை படித்து இருந்தாலும், நமக்கு தெரியாத விஷயங்களும் சிலருக்கு தெரியும்" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

"ஒருவன் எத்தனை செல்வந்தனாக இருந்தாலும், நம்மை விட செல்வந்தன் உண்டு" என்று அடக்கமாக இருக்க வேண்டும்.

எந்த காலத்திலும், "நான் உயர்ந்தவன் இல்லை", 
எந்த காலத்திலும் "அந்த பரமேஸ்வரன் ஒருவர் தான் உயர்ந்தவர்" 
என்ற ஞானம் (அறிவு) நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் படித்தாலும்,
கொஞ்சம் பணம் சேர்ந்தாலும்,
கொஞ்சம் பேசினாலும்,
நம்மையும் மீறி, நமக்குள் இந்த கர்வம் வந்து விடும்.

இந்த "நான், எனது" என்கிற கர்வத்தை, "நம் முயற்சியால்" போக்கிக்கொள்ளவே முடியாது. 

தெய்வத்திடம் சொல்லி, தெய்வ அணுகிரஹத்தால் மட்டுமே, நம்மில் இருக்கும் இந்த கர்வத்தை அழிக்க கொள்ள முடியும்.

ஆதி சங்கரர், அதனால் தான், பகவானிடம் நீ முதலில் கேட்க வேண்டியது 'பகவானே, முதலில் என் மனசில் இருக்கும் கர்வத்தை நீக்கி விடு'
என்று பிரார்த்திப்பது தான் என்கிறார்.

2. ஆசை
இரண்டாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை,
'பகவானே! என்னுடைய மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நமக்கு மனதில் எத்தனைக்கு எத்தனை ஆசைகள் உருவாகி கொண்டே இருக்கிறதோ, அந்த ஆசையினால் துக்கங்கள் உண்டாகிறது. 

ஒரு ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, இன்னொரு ஆசை மனதில் உண்டாகிறது.

அந்த ஆசையை நிறைவேற்ற முயன்றால், அது பலிக்கும் போது, மற்றொரு ஆசை மனதில் உண்டாகிறது.



முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும்.

கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது.

அதனால்தான், ஆதி சங்கரர் இரண்டாவதாக,
"என் மனதில் ஆசையே இனி வரக்கூடாது" என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே,
நம்மால் அழிக்க முடியாத கர்வத்தையும், நம்மிடம் உருவாகும் ஆசையையும் அழிக்க முடியும்.

3. திருப்தி:
மூன்றாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு"
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
பகவத் கீதையில், இந்த திருப்தியை பற்றி ஸ்ரீ கிருஷ்ணர்
"யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'"
(4 chapter, 22 sloka)
என்று சொல்லும் போது,
"நானாக போய் யாரிடமும் கை எந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை கொண்டு நான் சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ!! அவனை சுகம்-துக்கம், வெற்றி-தோல்வி என்ற எந்த அனுபவமும் மனதளவில் பாதிக்காது" என்கிறார்.

"திருப்தியாக உள்ளவனின் நிலையை" இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

'மனதில்' த்ருப்தி இல்லாத மனிதனுக்கு'மனதில்' சுகம் கிடைக்காது.

கர்வத்தையும், ஆசையையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
"கிடைத்தது போதும்" என்கிற த்ருப்தியும், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வ அனுக்கிரகத்தால் மட்டுமே, மனதில் த்ருப்தி ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் மூன்றாவதாக,
"பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதை பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

4. இரக்கம்:
நான்காவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.


நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை,
'பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில்
இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள்" 
என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

நம்மால் கொண்டு வர முடியாத குணம் "இரக்கம்".
இரக்க குணம் உள்ளவனுக்கு, 
மற்றவர்கள் செய்யும் தவறுகள் தெரிந்தாலும், "அவன் தெரியாமல் செய்கிறான்" என்று அவன் மீதும் இரக்கம் வரும்.

இரக்க குணம் உள்ளவனுக்கு, 
"உயிரை கொன்று, மாமிசம் சாப்பிட கூடாது" என்ற எண்ணம் தோன்றும். 

"இரக்க குணம் உள்ளவனுக்கு", எதை பார்த்தாலும், யாரிடத்திலும் 'கோபமே' வராது.

'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல, 
மனதில் 'த்ருப்தி' கொண்டு வரவே முடியாதது போல, 
எதனிடத்திலும் 'இரக்கம்' காட்டும் குணம், நம் முயற்சியால் வரவே வராது.

தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, இந்த இரக்க குணம் மனதில் ஏற்படும்.

அதனால்தான், ஆதி சங்கரர் நான்காவதாக,
"பகவானே! எனக்கு யாரிடத்திலும் இரக்கம் வருமாறு உள்ள குணத்தை கொடு" 
என்று பிரார்த்தனை செய் என்று சொல்லி தருகிறார்.

பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, 
நம்மால் அழிக்க முடியாத 'கர்வ'த்தையும், 'ஆசை'யையும் அழித்து, 'திருப்தி', 'இரக்கம்' என்ற குணத்தையும் கொடுக்க முடியும்.

5. மோக்ஷம்
கடைசியாக ஐந்தாவதாக, நாம் தெய்வத்திடம் கேட்க வேண்டியதையும் ஆதி சங்கரர் நமக்கு சொல்லி தருகிறார்.

நாம் செய்யவேண்டிய ஐந்தாவது பிரார்த்தனை,
'பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். 
எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? 
என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு" என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.

இங்கு ஸம்ஸார ஸாகரம் என்று சொல்வது, ஜனனம்-மரணம் என்ற சுழற்சியை.

இந்த சுழற்சியையே, ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது "புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!"
என்று பாடுகிறார்.
இதற்கு அர்த்தம்,
"பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. 
கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, அக்கரை காண கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?" என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும்.
செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். 
ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?

'கர்வத்தை'யும், 'ஆசை'யையும் நம்மால் அழிக்க முடியாதது போல,
மனதில் 'த்ருப்தி'யும், 'இரக்கத்தை'யும் நம்மால் கொண்டு வரவே முடியாதது போல,
ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது.
தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.

"உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், 
பகவானிடம் கேள்" 
என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லிதருகிறார்.

"யாராலும் தர முடியாத, பகவான் மட்டுமே தரக்கூடிய, இந்த 5 விஷயங்களை உனக்கு கேட்டுக்கொள்ளாமல், 
அற்பமான பணத்தையும், 
உனக்கு வந்த நோயை பற்றியும் கேட்டு வீண் செய்யாதே" 
என்று சொல்லி தருகிறார்.
நீ இந்த 5 விஷயங்களையும் பகவானிடம் தினமும் பிரார்த்தித்து கொண்டே இரு. 

பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட லாபம் ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா?
இதை விட்டு, 
மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு!! உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே !

இப்படி, "தெய்வத்திடம் எதை கேட்க வேண்டும்?" 
என்று எளிதாக நமக்கு காரணத்தோடு விளக்கி சொல்லித்தந்த ஆதி சங்கரர், இது போன்று பல தர்ம தத்துவங்களை பல ஸ்லோகங்களில் நமக்காக சொல்லி இருக்கிறார்.
ஹிந்துவாக உள்ள நீங்கள், 
ஆதி சங்கரரின் ஸ்லோகங்களை, தினமும் ஒவ்வொன்றாக படித்து, 'அர்த்தங்களை புரிந்து கொள்ள' முயற்சி செய்யுங்கள். 

அடிக்கடி அர்த்ததோடு ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்தாலேயே, நமக்கு எப்படி அழகாக நிம்மதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும்? என்று புரிந்து விடும்.

"பிரச்சனைகள் பதட்டம், பயம்" உள்ள நம் வாழ்க்கையில், உள்ள தவறுகளையும் திருத்தி கொள்ள முடியும்.

"நாம் ஹிந்துவாக இன்றும் வாழ காரணமாயிருந்த"  ஆதி சங்கருக்கு நாம் செய்யும் நன்றி, நம் தவறுகளை திருத்தி கொண்டு, ஆதி சங்கரரின் பாடல்களை அர்த்தத்துடன் மனதில் அனுபவத்து கொண்டு இருப்பதே

"ஹர ஹர சங்கரா, ஜெய ஜெய சங்கரா"

சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை