Followers

Search Here...

Showing posts with label ஹிந்து. Show all posts
Showing posts with label ஹிந்து. Show all posts

Friday 9 July 2021

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

"உலகம் தட்டை" என்று உருட்டி கலிலியோ போன்றவர்களை கொன்ற மதங்கள் ஒரு புறம் இருக்க,

ஹிந்துக்களின் சொத்தான வேதம், உலக படைப்பின் வரிசையை பற்றி சொல்கிறது...  

தெரிந்து கொள்வோம்...

* ஆகாயத்தில் இருந்து 'காற்று'.

* காற்றிலிருந்து 'அக்னி'.

* அக்னியில் இருந்து 'நீர்'.

* நீரில் இருந்து 'நிலம்'.

* நிலத்தில் இருந்து 'மனித உடல்கள், மிருக, தாவர உடல்கள்'


நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, இன்று நீருக்கு ஆதாரமாக உள்ள அக்னியிலிருந்தும், காற்றிலிருந்தும் எடுக்க அறிவியல் முயற்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.





உலக படைப்பின் வளர்ச்சி :

1. ஒரு குணம்: (ஆகாயம்)

* ஆகாயம் ஒலியால் நிரம்பி உள்ளது. 

ஆகார நியமம் மேலும் கடுமையான தியானத்தால், ரிஷிகள் ஆகாயத்தில் இருக்கும் ஒலிகளை கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர். 

அதுவே 'வேதம்' என்றும் 'சப்த பிரம்மம்' என்று சொல்கிறோம்.

வேதங்கள் அனைத்தும் இந்த ஆகாயத்தில் இருக்கும் ஒலி அலைகளே !

இருக்கும் வித விதமான அனைத்து வேத ஒலிகளும் "ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து வெளிப்பட்டவை என்று ரிஷிகள் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர்.

(ரிஷிகளை 'விஞ்ஞானிகள்' என்று பொருள் கொள்ளலாம்) 


2. இரண்டு குணம்: (காற்று)

ஆகாயத்திலிருந்து உண்டான காற்றுக்கு 2 குணங்கள் உண்டு. 

* காற்றில் ஒலி உண்டு.

மேலும்,

* காற்று, நம் தோலில் படும் போது, அதை உணர முடிகிறது.


3. மூன்று குணம்: (அக்னி)

காற்றிலிருந்து உருவான அக்னிக்கு 3 குணங்கள் உண்டு.

* அக்னிக்கும் ஒலி உண்டு. 

* அக்னி நம் மீது படும் போது, உணரவும் முடிகிறது.. 

மேலும்,

* அக்னியை கண்ணால் பார்க்கவும் முடிகிறது. அக்னிக்கு ஒளி உண்டு.


4. நான்கு குணம்: (நீர்)

அக்னியிலிருந்து உருவான நீர் என்ற ரசத்துக்கு 4 குணங்கள் உண்டு.

* நீருக்கும் ஒலி உண்டு.

* நீர் நம் மீது படும் போது உணர முடிகிறது..

* நீரை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நீரை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.


'ரசம்' என்ற சொல் நீருக்கு பயன்படுத்தப்படுகிறது.  

நாம் சாப்பிடும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் சுவை (ரசம்) இருப்பதற்கு காரணம் அதில் இருக்கும் நீரே என்று அறிந்து கொள்ளலாம்.


5. ஐந்து குணம்: (நிலம்)

நீரிலிருந்து உருவான நிலத்துக்கு 5 குணங்கள் உண்டு.

* நிலத்தில் ஒலி உண்டு.

* நிலத்தில் நம் உடல் படும் போது உணர முடிகிறது..

* நிலத்தை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நிலத்தை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.

மேலும்

* நிலத்திற்கு வாசனை உண்டு.


நிலத்தில் உருவான மனித உடல்களுக்கு இந்த 5 குணங்களை உணர 5 கருவிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


1. ஒலி இருப்பதை கேட்க காதும்,

2. தொடுவதை உணர தோலும்,

3. பார்ப்பதற்கு கண்ணும்,

4. சுவைப்பதற்கு நாக்கும்,

5. முகர்வதற்கு மூக்கும் உள்ளது.


உயிர் இல்லாத, இறந்து போன மனித உடலில் இந்த 5 கருவியும் இருந்தாலும், பயனில்லை...


இந்த மனித உடலில் உள்ள கருவியை பயன்படுத்தி, வெளியில் காணப்படும் பஞ்ச பூதங்களை அனுபவித்து வந்தவனுக்கு "ஜீவன்" என்று பெயர் என்று வேதம் சொல்கிறது.


இந்த ஜீவன் 

"ஆகாயத்திலிருந்தோ! 

காற்றிலிருந்தோ! 

அக்னியிலிருந்தோ! 

நீரிலிருந்தோ! 

நிலத்திலிருந்தோ! 

வந்தவன் இல்லை.." 

என்று சொல்கிறது வேதம்...


இந்த ஜீவனும் (living), ஆகாயமும் (nature) பரமாத்மாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது வேதம்.

எப்படி கடல், பல அலைகளை உருவாக்குமோ! அது போல, பரமாத்மா என்ற பரமபுருஷன், தன் அம்சமாக கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை வெளிப்படுத்தினார்.

அதில் முதலாவதாக படைக்கப்பட்டவர் ப்ரம்ம தேவன் என்று வேதம் ஆரம்பிக்கிறது.

ஜீவாத்மாக்களை படைத்த பரமாத்மா, வாழ்வதற்கு ஏற்ற பஞ்ச பூதங்களையும் படைத்தார்..





பரமாத்மா 'அவ்யக்தத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி ரூபமான ஆகாயத்தை' படைத்தார். 

ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்து, வேத ஒலிகள் வெளிப்பட்டன..

வேத ஒலிகள் மூலம், காற்று, அக்னி, நீர், நிலங்களை படைத்தார்.  

வேதம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதால், வேத சப்தத்தை மனனம் செய்து வந்த ப்ராம்மணர்களை அரசர்கள் மதித்தனர்.

காற்று, அக்னி, நீர், நிலங்களில் ஏற்படும் கோளாறுகளைநோய்களை வேத ஓத ஒலிகளை மாத்திரை பிசகாமல் ஓதி சமன் செய்தனர்.

மேலும், 

ப்ரம்ம தேவனிடம் இந்த வேதத்தை கொடுத்து, படைக்கப்பட்ட பல லோகங்களில் தேவர்கள், ரிஷிகள், மேலும் பூலோக நிலங்களில் மனித, மிருக, தாவர உடல்களை படைத்தார்.

பரமாத்மா அழிக்கும் அம்சத்துடன், தானே ருத்ரனாக ப்ரம்ம தேவன் நெற்றியில் இருந்து வெளிப்பட்டார்.

பரமாத்மா படைக்கும் அம்சத்துடன், தானே விஷ்ணுவாக ஸ்வயமாக அவதரித்தார். 

பரமாத்மாவால் படைக்கப்பட்ட கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இந்த உடல்களில் புகுந்து கொண்டு, பஞ்ச பூதங்களான தன் உடல்களை கொண்டு, பஞ்ச பூதங்களால் ஆன உலகை அனுபவிக்கின்றன.


"எந்த ஜீவாத்மாக்கள் இந்த பஞ்ச பூதங்களால் கிடைக்கும் அனுபவங்கள் போதும், தனக்கு பரமாத்மாவே போதும்" என்று நினைக்கிறதோ! அந்த ஜீவாத்மாவுக்கு விடுதலை கொடுத்து, தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார்..

இதுவே மோக்ஷம்.

ப்ரம்ம தேவனை படைத்த, நம்மையும் படைத்த, பஞ்ச பூதங்களுக்கு காரணமான அந்த பரமாத்மா "நாராயணன்" என்று அறிவோம்.

நாராயணன் என்ற சொல்லுக்கு "நரர்கள் யாவருக்கும் அடைக்கலம் தருபவர்" என்று பொருள்.

'அந்த பரமபுருஷனை, மஹாலக்ஷ்மி மணந்தாள்' என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லி அடையாளமும் காட்டுகிறது.


வாழ்க ஹிந்துக்கள்..

Monday 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  




ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..




அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Wednesday 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும். 

Saturday 23 November 2019

உலகம் எப்படி உருவானது? நெருப்பு முதலில் உருவானதா, இல்லை காற்று முதலில் உண்டானதா? எந்த வரிசையில் உருவாக்கப்பட்டது என்று ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரவாசுதேவன் "மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவன்களை, 'தமஸ்' என்ற அஞான நிலையில் இருந்து எழுப்பி, 
மீண்டும் பிறக்க செய்து, தன்னிடம் பக்தி செய்யும் ஜீவனுக்கு மோக்ஷத்தை (வைகுண்டம்) கொடுக்க, உலகத்தை மீண்டும் ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்தார்".




'தமஸ்' என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.

பரவாசுதேவனிடமிருந்து (அ) "ஓம் (அஉம)" என்ற தாரக மந்திரம் வெளிப்பட்டது.
"ஓம்" என்ற தாரக மந்திரத்தில் "வேத மந்திரங்கள்" வெளிப்பட்டது.
"வேத மந்திரங்களை" கொண்டு "ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகம்/நிலம்)" என்ற பஞ்ச பூதங்கள் வெளிப்பட்டது.


"பஞ்ச பூதங்களின்" தன்மையுடன்,
மனித, விலங்கு, பறவைகள் போன்றவை நிலத்திலிருந்து உண்டானது..

வேத மந்திரங்களே,
'ஆகாயத்தை' ஸ்ருஷ்டி செய்தது.
அதை தொடர்ந்து,
'காற்று' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து,
'நெருப்பு' ஸ்ருஷ்டியானது.
அதை தொடர்ந்து,
'நீர்' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து,
'நிலம்' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.

வேத மந்திரங்களே, இப்படி பஞ்ச (5) பூதங்களை, இந்த "குறிப்பிட்ட வரிசையில் உருவாக்கியது" என்று உலக ஸ்ருஷ்டியை பற்றி வேதம் சொல்கிறது.
பரவாசுதேவன் வேத மந்திரங்களை கொண்டு, எதற்காக இந்த வரிசையில் உலகை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார்?
இதற்கு ஏதாவது அறிவுபூர்ணமான காரணம் உண்டா?
என்ற கேள்வி நமக்கு எழலாம்..

வேதம் ஒலி ரூபமானது..
"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது" என்று நம் வேதம் சொல்கிறது..

வேதத்தில் "கௌ:" (cow) என்ற சப்தத்தை (ஒலி) கேட்ட பின் தான், ப்ரம்ம தேவன், பசுமாடு என்ற உடலை ஸ்ருஷ்டி செய்தார் என்கிறது..

"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது" என்று நம் வேதம் சொல்கிறது..

வேத மந்திரங்களே இதிலிருந்து தான் வெளிப்பட்டது என்று உணரும் போது தான் இந்த "ஓங்கார நாதத்தின் சக்தியை" நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வேதத்துக்கும் மூலமாக இருப்பதால், இந்த மந்திரத்தின் சக்தி எல்லை அற்றது...மோக்ஷத்தை தரவல்லது..

"ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கத்தை தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்
இதன் அர்த்தத்தை (அஉம). ப்ரம்மத்தில் லயிக்கும் ஞானியான குருவிடம் மட்டுமே உபதேசம் பெற்று, இந்த ஓங்காரத்தை ஜபிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது...

வேதம் அனைவரும் படிக்க இயலாது.. 
மிகவும் கடினம்.. புரிந்து கொள்வது அதை விட கடினம்...

"வேதம் அனைத்தும்" ஓம் என்ற ஓங்காரத்தில் அடங்கிவிடுகிறது.
ஆதலால் ஓம் என்ற மந்திரம் ஸித்தி ஆனால், வேதம் கொடுக்கும் பலன்களை அடைந்து விட முடியும். 
ஆனாலும் பிரணவ மந்திரத்தை நாமாக சொன்னால் பலிக்காது. அனைவரும் சொல்ல கூடாது.. 
குரு மூலமாக தான் உபதேசம் பெற்று சொல்ல வேண்டும். 
இந்த நேரத்தில், இந்த காலத்தில், தான் சொல்ல வேண்டும் 
என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கிறது..




பரவாசுதேவனின் கருணையால், ஓம் என்ற ஓங்காரமே உருமாறி "ராம" என்ற தாரக மந்திரமாக வெளிப்பட்டது...

சிவபெருமான் ஜெபிப்பதும் "ராம" நாமமே...
ஹனுமான் ஜெபிப்பதும் "ராம" நாமமே...

"ராம" என்ற தாரக மந்திரம், ராமர் அவதரிக்கும் முன்பேயே இருந்தது ஒலி ரூபமாக...
அந்த ராம என்ற ஒலிக்கு உருவம் கொடுக்க, பரவாசுதேவனே "ஸ்ரீ ராமராக" அவதரித்தார்...

ஒலியில் இருந்து தான் ஆகாயம் வந்தது,
ஒலியில் இருந்து தான் காற்று வந்தது,
ஒலியில் இருந்து தான் நெருப்பு வந்தது,
ஒலியில் இருந்து தான் நீர் வந்தது,
ஒலியில் இருந்து தான் மண் (நிலம்) வந்தது.
வேதம் கூறும் இந்த அறிவியலை,
sound theory என்ற இந்த அறிவியலை இன்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கின்றனர்..

வேத மந்திரங்கள் "ஏன் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற இந்த வரிசையில் உலகத்தை உருவாக்கியது?
வரிசையை மாற்றி உலகத்தை உருவாக்கி இருக்கலாமே? 
என்று ஒரு கேள்வியை, பிற போலியான கற்பனை மதத்தில் கேட்டு இருந்தால்
"எதிர் கேள்வி கேட்க கூடாது" என்று சொல்லி வாயை மூடி இருப்பார்கள்,
அல்லது
கலிலியோ போன்றவர்கள் "உலகம் உருண்டை, தட்டை அல்ல" என்று சொன்னதற்கு அடித்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்கள்..

நம் வேதம் கற்பனையும் அல்ல..
பரவாசுதேவன் நாராயணனும் கற்பனையும் அல்லவே..  
நிஜமான தெய்வங்கள்.. 
நிஜமான அறிவியல் ஆயிற்றே நம் வேதம்.

வேதம் "ஒலி" ரூபமானது..
தவறான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், தவறான விளைவுகளை தர வல்லது.
சரியான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், அந்த மந்திரத்துக்கான பலனை தானே தர வல்லது.

சரியான முறையில் இன்று கூட வருண ஜபம் செய்து, மழை வர வைக்கிறார்கள்..

கும்பகர்ணன் "நித்ய" என்று சொல்வதற்கு பதில் "நித்ரா" என்று தவறாக உச்சரித்து,
"என்றும் அழியாத நிலை வேண்டும்" என்று கேட்பதற்கு பதில்
"தூங்கி கொண்டே இருக்க வேண்டும்" என்று ப்ரம்ம தேவனிடம் கேட்டு, கடும் தவம் செய்தும், நினைத்த பலனை அடைய முடியாமல் அழிந்தான்.

பொதுவாகவே நாம் நல்ல வார்த்தைகளே பேசினால், இறுக்கமான சூழ்நிலையை கூட மாற்றி கொள்ளலாம்.
வாக்குக்கு (ஒலிக்கு) "அழிக்கவும், ஆக்கவும் சக்தி உண்டு".

ஆனந்தமாகவும், உற்சாகமாகவும், அருமையாக பேசும் பேச்சாளர்கள் அனைவருமே 'உலகில் பிரகாசிக்கின்றனர்'.

அரசியலில், 'பேசியே' தமிழ்நாட்டை பிடித்தவர்கள் கூட உண்டு..

இவை அனைத்துமே, நம் வேத சொல்லும் "sound theory"ல் அடங்கி விடுகிறது..

பேச்சாளர்கள் அனைவருமே, ஹிந்து மதத்தின் அற்புதத்தை கவனிக்க வேண்டும்.. போற்ற வேண்டும்.

வேதமே "ஒலி" (sound) வடிவமாக இருப்பதால்,
வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.
முதலாவதாக,
"சப்த ரூபமான 'வேத ஒலியே' (Vedic Sound), சப்த ரூபமான (sound waves) 'ஆகாயத்தை' (space) உருவாக்கியது"
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை சொல்ல ஆரம்பிக்கிறது.

நம் உலகை தாண்டி பல மைல் சென்று பார்த்தால், பறந்து விரிந்த  ஆகாயம் (Space) இருப்பது தெரியும்.
அங்கு காற்றும் இல்லாமல் இருக்கிறது, சப்தம் உள்ளது..
இந்த சப்தங்களை, வேத சப்தங்கள் என்று தியானத்தால் அறிய முடிந்தது யோகிகளால்.

இன்று நவீன கருவிகளால், பல அலைவரிசையில் பல விதமான சப்தங்கள் இருப்பதை அறிகிறார்கள்..
இரண்டாவதாக,
"சப்தம் (sound waves) என்ற குணத்தை கொண்ட ஆகாயமே (space), 
'ஸ்பரிசம்' (தொடுதல் touch) என்ற குணத்தை வெளிப்படுத்தி,  காற்றை (air) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.




இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air) - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.

காற்றுக்கு, "ஸ்பரிசம்" (தொடுதல் touch) என்ற தனித்த குணமும்,
ஆகாயத்தின் "சப்தம்" (sound) என்ற குணமும் சேர்ந்து உள்ளது...
மூன்றாவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch) என்ற 2 குணங்களை கொண்ட காற்று (air),  
'வடிவம்' (see) என்ற குணத்தை வெளிப்படுத்தி,  நெருப்பை (fire) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.



இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு பின் உருவான நெருப்பில் (fire) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.

நெருப்புக்கு, "வடிவம்" (see) என்ற தனித்த குணமும்,
காற்றின் குணமான "சப்தம், ஸ்பரிசம்" (sound) என்ற இரு குணங்களும் சேர்ந்து உள்ளது...
நான்காவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see) என்ற 3 குணங்களை கொண்ட நெருப்பு (fire), 
'சுவை' (taste) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நீரை (water) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.

இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.
நெருப்புக்கு பின் உருவான நீரில் (fire) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.

நீருக்கு, "சுவை" (taste) என்ற தனித்த குணமும்,
நெருப்பின் குணமான "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்களும் சேர்ந்து உள்ளது...

ஐந்தாவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see), சுவை (taste) என்ற 4 குணங்களை கொண்ட நீர் (water), 
'மணம்' (smell) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நிலத்தை (earth) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.

இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.
நெருப்புக்கு அடுத்து உருவான, நீரில் (water), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.
நீருக்கு பின் உருவான நிலத்தில் (earth) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்" என்ற ஐந்து குணங்கள் இருப்பதை அறியலாம்.

நிலத்துக்கு (பூமிக்கு), "மணம்" (smell) என்ற தனித்த குணமும்,
நீரின் குணமான "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்களும் சேர்ந்து உள்ளது...
இப்படி "பரவாசுதேவன் நாராயணன் மூலமாக, வெளிப்பட்ட ஓங்காரம், 
வேத ஒலிகளாக பிரிந்து, 
வேதத்திலிருந்து ஆகாயம் வெளிப்பட்டு,
ஆகாயத்திலிருந்து காற்று வெளிப்பட்டு,
காற்றிலிருந்து நெருப்பு வெளிப்பட்டு,
நெருப்பிலிருந்து நீர் வெளிப்பட்டு,
நீரிலிருந்து நிலம் என்ற உலகம் வெளிப்பட்டது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டியை விளக்குகிறது..

இப்படி உலக சிருஷ்டியை சொல்லும் வேதம், ப்ரம்ம தேவன் காலம் முடிந்த பிறகு, உலக அழிவை பற்றியும் சொல்கிறது.




"மண்ணால் ஆன இந்த உலகங்கள் பிரளய ஜலத்தில் கரைந்து, 
பிரளய ஜலம் அக்னியால் பொசுக்கப்பட்டு, 
அக்னி, காற்றினால் அணைக்கப்பட்டு, 
காற்று ஆகாயத்தில் ஒடுங்கி, 
ஆகாயம் வேதத்தில் ஒடுங்கி,
வேதம் ஓங்காரத்தில் ஒடுங்கி,
ஓங்காரம், பரவாசுதேவனிடம் ஒடுங்கி விடும்"
என்று உலக அழிவின் வரிசையையும் வேதமே சொல்கிறது.
பரவாசுதேவன் நாராயணன், மோக்ஷம் அடையாத ஜீவ கோடிகளை மீண்டும் தமஸ் என்ற அஞான நிலையில் வைத்து, பிறகு, மீண்டும் ஒரு புதிய ப்ரம்ம தேவனை நியமித்து, உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பிக்கிறார்.

மனிதர்கள் உருவாக்கிய பிற போலி மதங்களை போல, நம் ஹிந்து தர்மம் கற்பனையான மதம் அல்ல..
வேதமே "ஒரு அறிவியல்" என்பது சிறிது கவனித்தாலும் புரிந்து விடும்.

உலக ஸ்ருஷ்டி எப்படி நடந்தது?
என்ற இந்த அறிவியலை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்ததால்,

  • ஆகாயத்தில் ஏற்படும் தாறுமாறுகளை,
  • காற்றில் ஏற்படும் தாறுமாறுகளை,
  • தீயினால் ஏற்படும் தாறுமாறுகளை,
  • நீரினால் ஏற்படும் தாறுமாறுகளை,
  • நிலங்களில் ஏற்படும் தாறுமாறுகளை,

அது சம்பந்தமான வேத மந்திரங்களை ஜபித்தே சரி செய்தனர்.

"மழை ஏற்படாமல் போகும் போது", வருண தேவனை குறித்த வேத மந்திரங்களை தவறாக உச்சரிக்காமல் ஜபித்து, 
வேண்டிய மழையை பெற்றுக்கொண்டனர்.

"பூகம்பம் ஏற்படாமல்" இருக்க அதற்கான வேத மந்திரங்களை ஜபித்தனர்.
"தீ பற்றி காடுகள், நகரங்கள் எரிந்தால்" அதையும் வேத மந்திரங்கள் கொண்டே அடக்கினர்.
விஷ பாம்பு கடித்தாலும், அதற்கான வேத மந்திரங்களை ஜபித்து சரி செய்தனர்.

வேத மந்திரங்கள் ஆயிரகணக்கானவை...  அதை தவறாகவும் உச்சரிக்க கூடாது..

ப்ரம்மத்தை குறிக்கும் ஒலி அலைகளாக வேத மந்திரங்கள் உள்ளதால், 
இதை சரியாக உச்சரிக்க, 
மனித சமுதாயத்தில் பிறந்தது முதல், உலக ஆசைகளே இல்லாத, உச்சரிப்பு சரியாக உள்ள மனிதர்கள் இந்த வேத மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல், மனப்பாடம் செய்ய, ரிஷிகள் தனக்கு சிஷ்யனாக அதற்கு தகுதியானவர்களை தன் ஆசிரமத்தில் வைத்து கொண்டு, வேத மந்திரங்களை அவர்களுக்கு சொல்லி கொடுத்து, உணவில் கட்டுப்பாடும், ஒழுக்கமும், உலக ஆசைகள் குறைந்தும் உள்ள மனித சமுதாயம் உருவாக்கப்பட்டது..
இவர்களே "ப்ராம்மணர்கள்.."

இவர்கள் (ப்ராம்மணர்கள்), தான் கற்ற வேத மந்திரங்களை கொண்டு, உலக சூழ்நிலை சரியாக இருக்க எப்பொழுதும் ஜபித்து கொண்டு இருந்தனர்..

தேவைப்படும் போது, வசிஷ்டர் முதல் துரோணர் வரை,
தான் கற்ற வேத மந்திரங்களை, அரசர்களுக்கு சொல்லி கொடுத்து, அவர்கள் சாதாரண அம்பை, 
இந்த வேத மந்திரங்களை ஜபித்து, அஸ்திரமாகவும் (atom bomb), சஸ்திரமாகவும் (nuclear bomb) செய்து போரிட உதவி புரிந்தனர்..
இந்த அறிவியல் கலை துவாபர யுகம் முடிந்து பௌத்த மதம் ஆரம்பிக்கும் வரை கூட நாம் காப்பாற்றி வந்தோம்..
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில்,
பாரத தேசத்தில் செல்வங்கள் குவிந்து இருந்த கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததால், 
கோவிலில் அதை சுற்றியுமே இருந்த வேத ப்ராம்மணர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்பட்டனர்..
வேத மந்திரங்களின் பொருள், ரகசியங்கள் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் லட்சக்கணக்கில் 1200 வருடத்தில் இந்த பாரத தேசம் இழந்தது..
பொது மக்களையும், கோவிலையும் இடித்தே, ஹிந்து அரசர்களை வீழ்த்தினர் பெரும்பாலான அரேபிய இஸ்லாமியர்கள்.

இன்று வேதத்தின் ரகசியங்கள் அழிந்து விட்டது.
இதன் ரகசியங்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு...
வேதத்தை குறைந்த பட்சம் மனப்பாடம் செய்து, எப்படி சரியாக உச்சரிப்பது என்று சொல்வதற்கு கூட, இன்று ப்ராம்மணர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை.

வேத மந்திரங்கள் தான், ஆகாயத்தை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், காற்றை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், நெருப்பை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், நீரை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், பூமியை ஸ்ருஷ்டி செய்தது..
என்று பாரத மக்கள் அறிந்து இருந்தவரை, 
உலக ஆசைகளை புறக்கணித்து, வேத மந்திரங்களை காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..
ப்ராம்மணர்கள் அதற்கு பதிலாக, வேத மந்திரங்களை கொண்டே,
பஞ்ச பூதங்களில் உண்டாகும் தாறுமாறுகளை சரி செய்ய யாகங்கள், ஜபங்கள் செய்து கொண்டே இருந்தனர்..
1200 வருடங்களில் வேத ரகசியங்கள் தெரிந்து லட்சக்கணக்கான வேதியர்கள் இஸ்லாமிய ஆக்ரமிப்பால் கொலை செய்யப்பட, வேத ரகசியங்கள் மறைந்தன..
அரசர்களும் அழிந்து போனதால்,
பாரத மக்கள் வேத மந்திரங்களின் மகத்துவத்தை மறந்தனர்.




"வேத மந்திரங்களே, உலக சூழ்நிலையை மாற்ற சக்தி கொண்டது, உடல் பிரச்சனைகளை கூட மந்திரித்து சரி செய்ய வல்லது என்ற ரகசியங்கள் மறைந்ததால், இந்த 1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், எஞ்சிய ப்ராம்மணர்கள், 'வேதத்தின் மகத்துவம் புரிந்தாலும், 
ஒரு வேளை உணவுக்கு கூட தன் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாமல்', "ஏழை ப்ராம்மணன்" என்ற பட்டத்தை சுமந்து, காப்பாற்றுவார் இன்றி வாழ ஆரம்பித்தனர்..

வேத ரகசியங்கள் மெதுவாக மறைய ஆரம்பிக்க, 
வேத ரகசியங்கள் புரியாமல் போக, 
வேத மந்திரங்களை மட்டும் ஜபித்து கொண்டிருந்த ப்ராம்மணர்கள், கிறிஸ்தவ ஆட்சியின் போது, வேதத்தை விட்டு, குமாஸ்தா, கணக்காளர், பள்ளி வாத்தியார் என்று வேலைக்கு சென்றனர்..

விடுதலை அடைந்த பிறகு, சில பிராம்மணர்கள் வேதத்தை விட்டு விடாமல்,  வேதம் ஒதப்பட்டாலும், அதன் ரகசியங்கள் தெரியாமலே போனதால், சொல்பவர்கள் குறைந்து கொண்டே போக, இன்று வேதத்தை படிக்கும் ப்ராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.

"5 மஹா பூதங்களை (ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்), வேத மந்திரங்கள்,
5 குணங்களுடன் (சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்) உருவாக்கியது"
என்று புரிந்து கொண்டோம்.

வேத மந்திரங்கள் உருவாக்கிய இந்த 5 பூதங்களையும், அதன் குணங்களையும், மோக்ஷம் அடையாத ஜீவன் புரிந்து கொள்வதற்காக, ப்ரம்ம தேவன்
5 பூதங்களின் அம்சமாக, 5 கர்ம இந்திரியங்கள் (காது, தோல், கண், நாக்கு, மூக்கு) கொண்ட உடலை படைத்து,
5 பூதங்களின் குணங்களின் அம்சமாக, 5 ஞான இந்திரியங்களையும் (கேட்பது, உணர்வது, பார்ப்பது, சுவைப்பது, நுகர்வது) கொடுத்து, ஜீவனுக்கு மனித உடலை படைத்தார்..
இப்படி மனித உடல் படைக்கப்பட்ட பின், 
மோக்ஷம் அடையாமல் தமஸ் என்ற அஞான இருளில் தூங்கி கொண்டிருந்த ஜீவனை, இந்த உடல்களில் பிரவேசிக்க செய்து, உலகத்தில் ஜீவன் கோடிகளை விழிக்க செய்தார், பரவாசுதேவன்..

எந்த ஜீவன், இந்த படைப்பு அனைத்துக்கும் மூல காரணம் நாராயணனே!! என்று தெரிந்து, 
இந்த மாயா உலகத்தில் பற்று இல்லாமல் இருக்கிறானோ, 
நாராயணனிடம் அன்பு (பக்தி) வைக்கிறானோ, 
அவனை மீண்டும் ப்ரம்ம தேவன் படைத்த உடல்களில் பிறக்க செய்யாமல், தான் எங்கு இருக்கிறோம் என்ற ஞான நிலையிலேயே (விழிப்பு) வைகுண்டம் என்ற தன் இடத்தில் நிரந்தரமாக, எப்பொழுதும் ஆனந்த அனுபவத்துடனேயே தன்னுடன் இருக்க செய்கிறார்..

வேத மந்திரங்களே -> 5 மஹா பஞ்ச பூதங்களை, 5 குணங்களை, 5 கர்ம இந்திரியங்களை, 5 ஞான இந்திரியங்களை உருவாக்கியதால்,
இதில் எது தாறுமாறாக ஆனாலும், 
அதற்கான வேத மந்திரங்களை சரியாக சொன்னாலே உபாதைகள் சரி ஆகி விடும்..

அந்நிய ஆக்ரமிப்புகள் வரும் முன்னர்,
"வேத மந்திரங்களான ஆயுர்வேதமும், மூலிகைகள் பயன்படுத்தும் சித்த மருத்துவமுமே" நம் மக்களின் ஆரோக்கியத்தை பார்த்து கொண்டது...

கை வெட்டுப்பட்டாலும், வேத மந்திரங்களை கொண்டே சரி செய்தனர் நம் வேதியர்கள்..
1200 வருட அந்நியர்களின் அட்டகாசத்தில், இன்று நாம் இழந்தது,
செல்வங்கள் மட்டுமல்ல, 
வேத மந்திரங்களாலேயே நம் ஆரோக்கியம், உலக ஆரோக்கியத்தை சரி செய்த வேதியர்களையும் இழந்து விட்டோம்.

எஞ்சி இருக்கும் வேதியர்கள் சில ஆயிரம் பேரை ஒன்று சேர்த்து, ஆராய்ச்சி கூடங்கள் அமைக்க ஒரு குழு அமைத்து, வேத மந்திரங்களின் பயனை கடுமையான முயற்சியின் மூலம் தோண்டினால், உலகம் இனறு கலங்கி பார்க்கும் தண்ணீர் பிரச்சனை (Water scarcity), அபாயகரமான "சூழ்நிலை மாற்றங்களை" (Climate Change) கூட எளிதில் சரி செய்யலாம்..
"நெருப்பிலிருந்து தான் நீர் வந்தது" என்று பார்க்கும் போது,
நிலத்தில் தண்ணீர் தேடுவதை விட,
நெருப்பில் "நீர் வரவழைக்கும் ஆராய்ச்சிகள் தேவை".
இன்று அறிவியல் ஆராய்ச்சிகள், வெப்பத்தில் இருந்து நீர் உருவாக்க முடியுமா என்று முயற்சிக்கிறது..

ஹிந்து தர்மம் சொன்ன உலக ஸ்ருஷ்டியை தானே, இன்றைய அறிவியல் ஆராய்ச்சி செய்கிறது.. நாம் யோசித்து பார்க்க வேண்டும்..




தண்ணீர் வேண்டுமா? 
'நெருப்பிலிருந்து நீர் வந்தது' என்கிறது நம் வேதம்..
தண்ணீருக்கு மூலமான நெருப்பில் (Solar) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தண்ணீர் கிடைக்குமே..

நெருப்பு வேண்டுமா? 
'காற்றிலிருந்து நெருப்பு வந்தது' என்கிறது நம் வேதம்..
நெருப்புக்கு (electricity) மூலமான காற்றில் (atom) ஆராய்ச்சி செய்தால், நமக்கு நெருப்பு கிடைக்குமே..
இன்று கிடைக்கிறதே....

காற்று வேண்டுமா?
'ஒலியிலிருந்து (sound) காற்று (atom) வந்தது' என்கிறதே நம் வேதம்..
யோசிக்க வேண்டாமா நாம்?
காற்றுக்கு (atom) மூலமான ஒலியில் (sound) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தேவையான காற்று கிடைக்குமே..
இந்த ஆராய்ச்சி நமக்கு செய்ய தெரிந்தால்,
புராண கதைகளில் நாம் கேட்ட கல்லை தங்கமாக்கும் கலையை மீட்டு விடலாமே?..
எதுவுமே வேண்டாம் என்றால்,
வேத மந்திரங்கள் கேட்டு கொண்டே பரவாசுதேவனை தியானிக்கலாமே..?

வேத மந்திரங்கள் தெரியாவிட்டாலும், ஓம் என்ற ஓங்காரத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதை ஜபித்தாலும் உலக நன்மையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்குமே?..

வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில் அடக்கம்" என்றால், அதை ஜபித்து ஸித்தி ஆக்கி கொண்டால், பஞ்ச பூதங்களை நாமே சரி செய்து கொள்ளலாமே?..

மோக்ஷம் அடைந்து விடவாவது, மூல காரணமான நாராயணனிடம் பக்தி செய்ய ஆரம்பிக்கலாமே?..

ஹிந்துக்கள் நம் பெருமையை உணர வேண்டும்..

"உலகம் தட்டை" என்று உளறிய போலி மதங்களை, போலி தெய்வங்களை விட்டு விட வேண்டும்..
அந்த தெய்வங்கள் வரப்போவதும் இல்லை.. வரம் தரப்போவதும் இல்லை..
வராக அவதாரம் செய்த போதே "உலகம் உருண்டை" என்று சொன்ன ஹிந்து தர்மத்தில் பிறந்தும், நாம் ஹிந்துவின் பெருமையை உணராமல் வாழ கூடாது...

செவ்வாய் கிரகம் "சிவப்பு" (mars is red planet) என்று இன்று அறிவியல் சொல்வதற்கு முன்பே,
சர்வ சாதாரணமாக நவ க்ரஹங்களை கோவிலில் வைத்து,
அங்கு செவ்வாய் க்ரஹத்தின் அதிபதிக்கு "சிவப்பு ஆடை" கொடுத்த ஹிந்து தர்மத்தில் பிறந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட கூடாது..
1200 வருட அந்நிய ஆக்ரமிப்பில், நாம் பல ரகசியங்களை, அற்புதங்களை இழந்து விட்டோம்..

இன்று தெரியாது இருப்பதால், "நாம் முட்டாள், அந்நியன் அறிவாளி" என்ற மாயையை நம் மனதில் இருந்து அகற்றுவோம்..

வேதங்களின் ரகசியங்களை தோண்ட,
வேதியர்களை அணி சேர்த்து, அவர்கள் மூலமாக நடக்கும் ஆராய்ச்சி கூடங்களில் அனைவரும் பங்கு கொண்டு,
ஒரு பெரும் ஆராய்ச்சி 120 கோடி மக்களும் சேர்ந்து செய்தால், அந்நிய ஆதரவு எதுவும் தேவைப்படாத, சுய சார்புடைய வலிமையான பாரத தேசத்தை சில வருடங்களிலேயே மீண்டும் உருவாக்க முடியும்..

இருக்கும் சில வேதியர்களும் அழிய விட்டு விட்டால்,
அந்நியர்களின் மழுங்கிய அறிவியல் ஆராய்ச்சியால் உருவாக்கப்படும் இயந்திரங்கள் அனைத்தும், 'இயற்கையை அழிக்கவும், நோய்களை கொடுக்கவுமே செய்யும்'..

அந்நிய மண்ணில் பிறப்பவர்கள், எத்தனை அறிவு உடையவர்களாக இருந்தாலும், உலக ஆசைகளை நிறைவேற்றும் ஆராய்ச்சிகளே செய்வார்கள், செய்கிறார்கள்...

பாரத மண்ணில் பிறப்பவர்கள், மீண்டும் நம் வேத ரகசியங்களை தோண்டி எடுத்து விட்டால், அந்நியர்கள் நம்மை அண்டி வாழவும், நாம் பாரத மண்ணில் சொந்தங்கள் பிரியாமல் சேர்ந்து வாழவும் வழி செய்து கொள்ளலாம்..



Wednesday 23 October 2019

தெய்வங்கள் ஹிந்து மதத்தை காக்கிறதா?.. எப்படி ஹிந்துக்கள் 1000 வருட அந்நிய படையெடுப்பையும் மீறி, ஹிந்துவாகவே இன்றும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்..? அலசல்

"உலகம் (இயற்கை) ஒரு மாய திரை (ஜீவனை பொறுத்தவரை பொய், நிலையற்றது)..
உலகில் காணப்படும் ஜீவனாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் அம்சமே..
ஆதலால்,
பிறவி கடலை கடக்க, உலக பற்றை உதறி தள்ளி, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'அத்வைதம்'.



வேதத்தில், சில சூக்தங்கள் 'அத்வைதமாக இருக்கிறது'.

"ஜீவன் வேறு, பரமாத்மா வேறு.
ஜீவன் "பரமாத்மாவிற்கு அடி பணிந்தவன்".
பிறப்பு, இறப்பு, முதுமை, எதிர்காலம் எதுவும் இவன் இஷ்டத்தில் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.
முயற்சிக்காமல் சில சமயங்களில் பலன் கிடைப்பதும் பரமாத்மாவின் அருளால் தான்.

ஜீவன் செய்யும் முயற்சிக்கெல்லாம், அவன் இஷ்டத்தில் பலன் கிடைப்பது இல்லை. 
அவன் நினைப்பதெல்லாம் நடப்பதும் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.

ஆதலால்,
பிறவி கடலை கடக்க, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'த்வைதம்'.

வேதத்தில் "சில சூக்தங்கள் த்வைதமாகவும் இருக்கிறது".

ஜீவன் மற்றும் பரமாத்மா உறவை காட்டும் போது, இந்த இரு மார்க்கமும் மாறுபடுகிறது.
ஆனால்,
"அத்வைதம், த்வைதம்" இரண்டுமே, "ஈஸ்வர பக்தி செய்து தான், மோக்ஷம் அடைய வேண்டும்" என்று முடிவாக சொல்கிறது..

"இந்த இரண்டு விதமான பார்வையும், வேதத்தில் தான் உள்ளது" என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
ஆக, இரண்டு மார்க்கமுமே பொய் அல்ல..
புரிந்து கொள்ள, நமக்கு தான் பக்குவம் தேவைப்படுகிறது.

"உலகத்தையும் (ஸ்ரீவத்சம்/லட்சுமி), ஜீவனையும் (கௌஸ்துபம்) இரண்டையும் உடையவனாக ஈஸ்வரன் இருக்கிறார்"
என்று விசேஷித்து சொல்கிறது 'விசிஷ்ட அத்வைதம்'. (அத்வைதத்தில் த்வைதம்)


புரிந்து கொள்ள:

அஞானியாக ஜீவன் இருக்கும் வரை,
"தான் வேறு, உலகில் உள்ள மற்ற ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு'"
என்று ஜீவன் 'த்வைத'மாக தான் பார்க்கிறான்.
ஆதலால்,
வேதம், அஞானிக்கும் மோக்ஷ பாதையை வழிகாட்ட, 'த்வைத' தத்துவத்தை ஒரு இடத்தில் சொல்கிறது.

அதே சமயம்,
ஆதிசங்கரர், ஜடபரதர், ஸ்ரீசுகர் போன்ற ஞானியாக இருக்கும் ஜீவன்,
"தான் வேறல்ல, உலகில் உள்ள மற்ற ஜீவன்களும் வேறல்ல, இந்த ஜீவனை படைத்த பரமாத்மாவும் வேறல்ல"
என்று 'அத்வைத'மாக பார்க்கிறார்கள்.
ஆதலால்,
வேதம், ஞானிக்கு மோக்ஷ பாதையை வழிகாட்ட அத்வைத தத்துவத்தையும் மற்றொரு இடத்தில் சொல்கிறது.

ஞானிக்கு 'அத்வைதம்' காட்டி,
அஞானிக்கு 'த்வைதம்' காட்டி,
உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும், பிறவி கடலை கடக்க வழி சொல்கிறது நம் வேதம் (சப்த பிரம்மம்)

"ஒரே வழி, ஒரே கட்டளை" என்று பிடிவாதம் செய்து, மனிதர்களால் உருவான பொய் மதம் இல்லையே!! நம் சனாதன ஹிந்து தர்மம்.

ஆதி சங்கரர் (சிவபெருமான்) அவதாரம் செய்த போது,
வேதம் கூறும் ஞான மார்க்கத்தை புரிந்து கொள்ளாமல், மோக்ஷ பாதையில் செல்லாமல்,
"இந்த யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும்,
அந்த மந்திரம் சொன்னால் சூன்யம் வைக்கலாம்,
அந்த மந்திரம் ஸித்தி ஆனால் வசியம் செய்யலாம்"
என்ற அளவுக்கு கர்ம மார்க்கத்தை மட்டுமே எடுத்து கொண்டு பாரத தேசம் முழுவதும், வறட்டு பிடிவாதம் செய்யும் கர்மடர்கள் அதிகமாகி இருந்தனர்.

இவர்கள் ஞான மார்க்கத்தை மறந்து,
"யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும், இந்த சுகம் கிடைக்கும்"
என்ற ரீதியில் போனதால், 70வதுக்கும் மேற்பட்ட பல பொய் மதங்கள் உருவாகின.. பௌத்த மதமும் இதில் ஒன்று.



"நரபலி காளிக்கு கொடுத்தால், காளி வரம் கொடுப்பாள்" என்ற அளவுக்கு பாரத தேசத்தில் அசாம் போன்ற இடங்களில், அஞானிகள் கையில், 'வேதம்' மாட்டிக்கொண்டு தவித்தது..
ஞானியான "ஆதி சங்கரர்", இவர்களை ஞான மார்க்கத்தில் திருப்ப,
வேதத்தில் சொல்லப்பட்ட "அத்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி,
70வதுக்கும் மேற்பட்ட பொய் மதங்களை, தர்க்க வாதத்தினால், தன் தரிசனத்தால் ஒடுக்கி,
பாரத மக்களை, மீண்டும் ஞான மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தை ஞான மார்க்க ரீதியில் பார்க்க செய்து, 
பெரும் உபகாரம் செய்தார்.

1017ADல் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்வேதத்தின் முழு நோக்கமான,"விசிஷ்ட அத்வைத" மார்க்கத்தை வழி காட்டினார்.

அஞானியாக இருப்பவர்கள் "பக்தி செய்து, நாராயண நாமத்தை பெற்று ஜபித்து இருங்கள்" என்று வேதம் சொல்லும் த்வைத மார்க்கத்தை காட்டி வழி நடத்தி, அஞானியையும் ஞானியாக ஆக்கி, ஜீவன் வேறு பகவான் வேறல்ல என்ற அத்வைத மார்க்கத்தையும் காட்டி, பெரும் புரட்சி செய்தார்.

ஆதி சங்கரர் வந்தும் மாறாமல், "ஆடை இல்லாமல் திரிந்த சமணர்கள் அனைவரையும் வேத மார்க்கத்தில் மீண்டும் திருப்பி, நாராயணனே வேதம் இறுதியாக சொல்லும் பரதெய்வம்" என்று வேதத்தை கொண்டே (புருஷ சூக்தம்) நிரூபித்து, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தில் இருந்து விலகி விடாமல் இருக்க தயார் செய்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ராமானுஜரின் காலத்துக்கு பின், தமிழ்நாட்டில் "சேங்கனூர்" என்ற கிராமத்தில், 4000 திவ்ய பிரபந்ததுக்கும் அதன் உண்மையான உள் அர்த்தத்தை உலகுக்கு அள்ளி கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை" என்ற "கிருஷ்ண சூரி" அவதரித்தார்.

மற்ற மதங்களில் தவறான புரிதல், குழப்பங்கள் ஏற்படும் போது, மதங்கள் அழிகிறது. 
அதை சரி செய்ய மக்களே பாடுபடுகின்றனர். 
மதத்தை வளர்க்க 
"பணம் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்து, மற்ற மதங்களை கீழ்த்தரமாக பேசி வெறுப்பை விதைத்து" 
தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால்,
நம் ஹிந்து தர்மத்தில் உள்ள நாம், "வழி தவறி ஹிந்து தர்மம் அழியும்" அபாயம் நேர்ந்தால்,
தெய்வங்களே தன்னை வெளிப்படுத்தி கொண்டு அவதாரங்கள் செய்து, ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் நின்று காக்கின்றனர்..



"மனிதர்களால்" மற்ற மதங்கள் காப்பாற்றப்படுகிறது..
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது.

1000 வருடங்கள், வெளி மதங்களே ஆண்டு அட்டகாசம் செய்தும், இன்றும் ஹிந்து தர்மம் துளி கூட அழியவில்லை..
மாறாக, உலகம் முழுவதும் இன்று ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர்..

வெளி மதமான அரேபிய இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் "ஹிந்துக்கள் செல்வத்தை, நம்பிக்கையை, கோவிலை, பெண்களை, சுதந்திரத்தை சூறையாடி, அதிக வரி ஹிந்துக்களுக்கு, வரி இல்லாத வாழ்க்கை இஸ்லாமியனாக மாறுபவனுக்கு"
என்று விதித்து பெரும் சவாலை பாரத மக்களுக்கு தந்தனர்..

ஹிந்து அரசனும், ஹிந்து அரசனும் போருக்கு சென்றால், போர்க்களத்தில் சண்டை இட்டு கொள்வார்கள்..
பாண்டிய அரசன் சோழ அரசனிடம் தோற்றால், பாண்டிய தேசத்தையும் தன் சோழ ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சி செய்வார்கள் அரசர்கள்.
மகாபாரத போர் கூட, குருக்ஷேத்ரம் என்ற போர் காலத்தில் தானே நடந்தது.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்கொண்ட போது கூட, ஊருக்குள் புகுந்து பொது மக்களை கொல்லவில்லையே ! 




இஸ்லாமிய சுல்தான்கள், ஹிந்து அரசனிடம் போர் செய்யும் போது,
ஊரில் புகுந்து பொது மக்களை கொன்று, 
கோவிலை இடித்தும், அரசர்களை பணிய வைத்தார்கள்..
"அலாவுதீன் கில்ஜி" ஆட்சியின் போது,
அவன் அனுப்பிய "மாலிக் காபூர்",
ககாத்திய தேசத்தை (தெலுங்கானா) எதிர்த்த போது,
அங்கு இருந்த பொது மக்களை கொன்று, கோவில்களை இடித்து, செல்வங்களை கொள்ளை அடித்து, பெரும் நாசம் செய்தான்..

அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளி கோவிலில் இருந்த ஒரு வைர கல் தானே இன்று "கோஹினூர் வைரம்" என்று இங்கிலாந்து நாட்டில் வைத்துள்ளார்கள்...

ஒரு காளி கோவிலில் சர்வ சாதாரணமாக வைர மாலைகள் இருந்தது என்றால், நம் செழிப்பு எத்தகையானதாக இருந்து இருக்க வேண்டும்!!?
என்று எண்ணி பார்க்க வேண்டும்..
ஒரு கோவிலை இடித்தாலே மனம் பதறும் போது, இப்படி ஒரு பேடிகள் சூழ்ந்து, மக்களை, கோவிலை இடிக்கும் போது, அரசர்கள் வேறு வழி இல்லாமல், சரண் அடைந்தனர்..
சில அரசர்கள் தலை சீவப்பட்டனர்.. 
சில அரசர்கள் பெரும் செல்வத்தை தானமாக கொடுத்தனர்..

ககாத்திய தேசத்தை தொடர்ந்து, பாண்டிய தேசமான மதுரைக்கு நுழைந்து, அதே செயலை செய்து,
பொது மக்களை கொன்று, மீனாட்சி கோவிலை பிடித்தான்.. 
"மாற்றி வைக்கப்பட்ட போலி சிவலிங்கத்தை இடித்தே விட்டான்" மாலிக் காபூர்..
விளைவு:
பாண்டிய மன்னன் "கோவிலை இடித்து விடுவானே" என்று பாண்டிய தேசத்தின் கஜானாவை திறந்து விட்டார்..
இதை தொடர்ந்து,
மேலும் ஸ்ரீ ரங்கம் வரை சென்று, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ஸ்ரீரங்கத்தையே சூறையாடி, உற்சவராக இருக்கும் ஸ்ரீரங்கநாதரை (சிலை திருடன்) டில்லிக்கு தூக்கி சென்று விட்டான் என்று சரித்திரம் போகிறது...



கிடைத்த செல்வமே அளவிடமுடியாமல் இருக்க, சோழ நாட்டில் கால் பிறகு வைத்து கொள்ளலாம் என்று மாலிக் காபூர் டில்லி திரும்பி,

தன் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வெற்றி பரிசாக அனைத்தையும் கொடுத்தான் (கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) உட்பட)..
இது நடந்தது 1310AD சமயத்தில்..

இஸ்லாமியர்கள் பாரத தேசத்துக்குள் வந்து "300 ஆண்டுகளே" ஆன சமயம் அது..

அந்த காலத்தில் இருந்த ஹிந்துக்களின் நிலைமையே எப்படி இருந்து இருக்குமோ!! என்று நினைத்து பார்க்க முடியவில்லை..

1857AD வரை இஸ்லாமியர்களின் ஆட்சி பாரத மண்ணில் கொடி கட்டியது என்று பார்க்கும் போது தான், "எத்தனை நெஞ்சுரம் மிக்கவர்களாக நம் பாட்டனார்கள் இருந்து இருக்கிறார்கள்" என்று புரிந்து கொள்ள முடியும். "இவர்கள் ஏழை ஆனாலும் ஹிந்துவாகவே வாழ்வேன்"
என்று இருந்ததால் தானே, அவர்கள் பரம்பரையில் வந்த நாம் இன்றும் ஹிந்துவாக இருக்கிறோம்..
நினைத்து பார்க்க வேண்டும் ந்த காலங்களில் வாழ்ந்த நம் பாட்டனார்களை..

1238AD சமயத்தில் "மத்வாச்சாரியார்" என்று போற்றப்படும் "ஆனந்த தீர்த்தர்" என்ற மகான் கர்நாடக தேசத்தில் உதித்தார்.
ருக்மிணி தேவி துவாரகையில் தானே வழிபட்ட  பாலகிருஷ்ண விக்ரஹம் இவர் கையில் கிடைத்து, உடுப்பியில் இந்த கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார்.
ஞானியான மத்வாச்சாரியார்,
இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நசுக்கப்படும் ஹிந்துக்கள், "காலம் கனியாதோ!!" என்று பயந்து மதம் மாறி விடாமல், "பகவான் காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கையை வளர்க்க,
அஞானியாக உள்ள பொது மக்களுக்கு, மனோ தைரியமும், தெய்வ நம்பிக்கையும் ஏற்பட, "ஜீவனாகிய நாம் அனைவரும் பரமாத்மா ஸ்ரீ வாசுதேவனை வணங்குவோம்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட "த்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி, பாரத மக்களின் மனதில் பக்தியின் மூலம் தெய்வ நம்பிக்கையை விதைத்தார்.

பாரத மக்களை பக்தி மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தில் சொல்லப்படும் த்வைத மார்க்கத்தை ப்ரகாசப்படுத்தினார்.

"பக்தி மார்க்கம்" பாரத பூமி எங்கும் சூழந்தது..
இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் கடும் முயற்சி செய்தும், இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை..

இவரின் ஆரம்ப காலத்தில் தான் "ஜெயதேவர்" வாழ்ந்தார்.

பிறகு வந்த மகான்களை கொஞ்சம் நினைத்து பார்ப்போம்..

இஸ்லாமிய ஆக்கிரமிப்பை சமாளிக்க,
மனோ தைரியமும், மக்களிடையே பக்தியையும் பரப்ப,
மஹாராஷ்டிரா தேசத்தில் "நாமதேவர்", "தியானேஸ்வர்" என்ற மாவுலி அவதரித்தார்கள்..
உத்திர பிரதேசத்தில், "ராமானந்தர்" அவதரித்தார்.
அவரின் சிஷ்யராக "கபீர் தாசர்" அவதரித்தார்.
தமிழ்நாட்டில் "மணவாள மாமுனிகள்" அவதரித்தார்.

குஜராத்தில், "நரசிங்க மேதா" அவதரித்தார்.

உத்திர பிரதேசத்தில் "சூரதாஸ்" அவதரித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "வல்லபாச்சாரியார்" அவதரித்தார்.

வங்காள தேசத்தில், உலகம் போற்றும் இஸ்கான் (Iskcon) சொல்லும் "ஹரே கிருஷ்ண ஹரே ராம" மந்திரத்தை கொடுத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமான "கிருஷ்ண சைதன்யர்" அவதரித்தார்.



அதை தொடர்ந்து
கர்நாடக தேசத்தில் "புரந்தர தாசர்", "கனக தாசர்" அவதரித்தார்கள்.

அதை தொடர்ந்து
உத்திர பிரதேசத்தில், ஹிந்தியில் ராமாயணம் கொடுத்த "துளசி தாசர்" அவதரித்தார்.

ராஜஸ்தானில் "பக்த மீரா" அவதரித்தாள்.

அதை தொடர்ந்து,
தமிழ்நாட்டில், பிரகலாதனின் அம்சமாக "ஸ்ரீ ராகவேந்திரர்" அவதரித்தார்.
அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் "துக்காராம்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தெலுங்கு தேசத்தில், "கோபண்ணா" என்ற "பத்ராசல ராமதாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் சாம்ராட் வீர சிவாஜிக்கு ஆத்ம குருவாக, "சமர்த்த ராம தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
பஞ்சாப தேசத்தில் "குரு கோவிந்த் சிங்" அவதரித்தார்.

தமிழகத்தில், ராம நாமத்தின் பெருமையை காட்ட "போதேந்திரர்" அவதரித்தார்.
"ஸ்ரீதர் ஐயாவால்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
கர்நாடக தேசத்தில், "விஜய தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தமிழ் நாட்டில் கர்நாடக இசை சக்கரவர்த்தி, ஸ்ரீ ராமரை நேரில் கண்டு தரிசித்த மகான் "ஸ்ரீ தியாகராஜர்" திருவாரூரில் அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
வங்காள தேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்" அவதரித்தார்.
அவரை தொடர்ந்து,
சிவபெருமான் அம்சமாக விவேகானந்தர் அவதரித்தார்.

பாரத பூமியை மகான்கள் சுற்றிக்கொண்டு, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தை 800 வருட இஸ்லாமிய ஆட்சியில் காத்தனர்.

800 வருட இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது..  ஹிந்துக்களை அழிக்க முடியாமல் விழுந்தது...

தெய்வங்கள் மகான்களாக பாரத தேசம் முழுவதும் அவதரித்து,
ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் வந்து காத்தனர்.
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது... 

எத்தனை பெருமை நமக்கு....
மனிதன் அழிக்க நினைத்தாலும், தெய்வங்கள் காக்கும் ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்கு...நாம் எத்தனை பெருமைப்பட வேண்டும்??!!

நாம் எத்தனை கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..  
நம் பெருமை நமக்கே தெரியாமல் இருப்பது தான் விந்தை.


வாழ்க பாரதம்... வாழ்க ஹிந்துக்கள்.