Followers

Search Here...

Showing posts with label கர்மா. Show all posts
Showing posts with label கர்மா. Show all posts

Friday 26 June 2020

நாம் செய்யும் காரியங்களை (கர்மாவை), 'கர்ம யோகமாக' செய்வது எப்படி? எளிதான உதாரணம்... குருவே துணை.

கர்மாவை, கர்ம யோகமாக செய்வது எப்படி?





ஒரு முதலாளி தன் நிலத்தில் நெல் பயிர் செய்து இருந்தான்.
"பறவைகளோ, விலங்குகளோ, மற்றவர்களோ பயிரை சேதம் செய்ய கூடாது" என்று நினைத்தான்.

கர்மா:
முதலாளியே தன் நிலத்தை காவல் காத்தான்.

"யாராவது தன் நிலத்தை சேதம் செய்வார்களோ!!?" என்று மனம் பதைப்பதைத்தான்..

அவ்வப்போது உள்ளே நுழைய பார்க்கும், பறவைகள், விலங்குகளை, மனிதர்களை விரட்டினான்.

"தனது நிலம்" என்ற அபிமானத்தில் வேலை செய்தான்.
தான் செய்த கர்மாவினால் (வேலை) ஏற்படும் "பாவ புண்ணியங்களை" இவனே சுமக்கிறான்.

முதலாளி "தான் செய்த கர்மாவினால், தானும் கர்ம பலனில் அகப்படுகிறான்".

கர்ம யோகம்:
முதலாளி, தன் நிலத்தை காவல் காக்க ஒரு வேலைக்காரனை அமர்த்தினான்.


"யாராவது தன் எஜமானன் நிலத்தை சேதம் செய்வார்களோ!!?"
என்று மனம் பதைப்பதைத்தான் வேலைக்காரன்.

அவ்வப்போது உள்ளே நுழைய பார்க்கும் பறவைகள், விலங்குகளை, மனிதர்களை விரட்டினான்.

"தனது நிலமல்ல, தனது எஜமானன் நிலம்" என்ற அபிமானத்தில் வேலை செய்தான்.
தான் செய்த கர்மாவினால் (வேலை) ஏற்படும் "பாவ புண்ணியங்களை" இவனுக்கு பதில் இவன் எஜமானன் சுமக்கிறான்.

வேலைக்காரன் கர்மாவை செய்தும், "இது என் நிலம்" என்ற அகம்பாவம் இல்லாததாதால், "இது என் முதலாளியின் நிலம்" என்று அபிமானம் இருப்பதால் கர்ம பலனில் அகப்படாமல் இருக்கிறான்.

உண்மையில்,
இருவரும் ஒரே வேலை தான் செய்தனர்..

ஒருவன் தான் செய்த கர்மாவுக்கு தானே அகப்படுகிறான். 
அதன் மூலம் ஏற்படும் பாவ புண்ணியத்தை சுமக்கிறான்.

மற்றொருவன் தான் செய்த கர்மாவுக்கான பாவ புண்ணியத்துக்கு தான் அகப்படாமல், அவன் முதலாளிக்கு கொடுத்து விடுகிறான்.
அவனுக்காக அவன் முதலாளி சுமக்கிறான்.


அதுபோல, 
நாம் செய்யும் காரியத்தை செய்து கொண்டே, நம் வீட்டுக்கும், நம் மக்களுக்கும், நமக்கும் முதலாளி "ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா" என்று அறிந்து, 
முதலாளிக்கு விசுவாசமாக, அவர் கொடுத்த இந்த காரியத்தை, பொறுப்பை அவருக்காக திறம்பட செய்வோம்.



ஸ்ரீ கிருஷ்ணர் "நீ கர்ம யோகியாக இருந்து கொண்டு நீ செய்வதை செய்து கொண்டே இரு. உனக்கு முதலாளி நான் என்ற நினைவுடன் எப்பொழுதும் எந்த காரியத்தையும் எனக்காக செய். உன் கர்ம பலன் அனைத்தையும் நான் ஏற்கிறேன்"
என்கிறார்.

குருநாதர் துணை.

ஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை.

உலகில் உள்ள 700 கோடி மனித கூட்டத்தில், ஹிந்துக்கள் 100 கோடி மட்டுமே.

ஹிந்துவாக நாம் பிறந்ததே நாம் செய்த பாக்கியம்.

அதிலும், ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் கர்ம யோகத்தை அறிந்து கொள்வது அதை விட பாக்கியம்.

இது அனுபவத்தில் இருந்தால், அதை விட பாக்கியம்.

Saturday 30 November 2019

கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்வோமே

சமைத்ததை அப்படியே சாப்பிட்டால் - சாதம்.
அதையே தெய்வத்திடம் காட்டி
"இன்று எனக்கு சோறு கிடைத்தது. அதை விட, வாயில் போட்டால் சுவைக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான உயிரும் இருக்கிறதே. உனக்கு நன்றி. உயிரை நிற்க வைத்துள்ள நீயே இந்த உணவையும் ஜீரணம் செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் - பிரசாதம்.



சாப்பாடு கிடைக்காமலோ, சாப்பிடாமலோ கிடந்தால் - பட்டினி.
சாப்பாடு சாப்பிடாமல், தெய்வ சிந்தனையுடன் இருந்தால் - விரதம்.

தாகம் எடுத்து குடித்தால் - தண்ணீர்.
தாகம் எடுத்து, தெய்வத்திடம் காட்டிவிட்டு, தெய்வ சிந்தனையுடன் குடித்தால் - தீர்த்தம்.

அருமையான பாட்டை அமைத்தால், கேட்டால் - இசை.
அருமையான பாட்டை தெய்வத்திற்காக அமைத்தால், கேட்டால் - கீர்த்தனம்.

ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - அவனுக்கு இதயம் உள்ளவன் என்று பெயர்.
இறைவனே அனைத்துமாக காட்சி தருகிறார் என்ற நினைவில் ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - இதயத்தில் இறைதன்மை கொண்டிருக்கும் அவனே கோவிலாகிறான்.

தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - செயல் (கர்மா).
தெய்வம் நம் செயலை பார்த்து திருப்தி அடைய வேண்டும் என்ற ஆசையில், தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - சேவை (கர்ம யோகம்).

தனக்காகவும், பிறருக்ககாவும் பல இடங்கள் செல்வது - பயணம்.
தெய்வம் ஆசைப்படுகிறது என்றும், தெய்வத்தை காணப்பதற்கும் பல இடங்கள் செல்வது - தீர்த்த யாத்திரை.



ஒழுக்கம், தர்மம், அடக்கம் என்று வாழ்பவன் - மனிதன்.
இறைவனே லட்சியம் என்று வாழ்பவன் - புனிதன்.

மனிதர்கள் தெய்வபக்தி இல்லாமல் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்மமாக ஆகி, பாவம் புண்ணியம் சேர்த்து, யமனிடம் உதைப்பட்டு பின் மீண்டும் பிறந்து விடுகிறான்.

மனிதர்கள் தெய்வபக்தியுடன் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்ம யோகமாக ஆகி, பாவம் புண்ணியம் அனைத்தும் அந்த தெய்வமே ஏற்று விடுவதால், யமனிடம் உதைப்படாமல், மோக்ஷம் அடைந்து விடுகிறான்.

ஆதலால் நாமும் பக்தி செய்வோம் !!

வாழ்க ஹிந்து தர்மம்.  வாழ்க ஹிந்துக்கள்.