Followers

Search Here...

Showing posts with label பரிக்ஷித். Show all posts
Showing posts with label பரிக்ஷித். Show all posts

Thursday 29 December 2022

பரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்? How long king parikshit lived?

How long king parikshit lived? ரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்?

அஸ்வத்தாமா தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களின் பிள்ளைகளை மற்றும் திரௌபதியின் சகோதரன், சிகண்டி போன்றவர்களை கொன்று, கர்ப்பமாக இருக்கும் உத்திரையின் மீதும் அஸ்திரம் செலுத்தினான்.

அதை கிருஷ்ணர் தடுத்தார்.


இவனின் காரியங்களை பார்த்து ஸ்ரீகிருஷ்னர், "3000 வருடங்கள் உயிரோடு இருந்து, காட்டில் தனி ஆளாக அலைந்து கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.


அதே சமயம், தன்னால் காப்பாற்றப்பட்ட பிள்ளை, கர்ப்பத்தில் வளர்ந்து, பரீக்ஷித் என்ற பெயருடன் புகழ் பெறுவான் என்றார்.

மேலும்,

"சூரனான பரீக்ஷித் நீண்ட ஆயுளை அடைந்து சிறந்த விரதத்தை கடைபிடித்து கொண்டு, சரத்வானுடைய பிள்ளையான இந்த க்ருபரிடம் அனைத்து அஸ்திரங்களையும் கற்பான். தர்மாத்மாவான பரீக்ஷித், உத்தமான சாஸ்திரங்களை படித்து, க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து, 60 வருட காலங்கள் பூமியை ஆள போகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார்.

वयः प्राप्य परिक्षित्तुं देवव्रतमवाप्य च।

कृपाच्छारद्वताच्छूरः सर्वास्त्राण्युपपत्स्यते।।

विदित्वा परमास्त्राणि क्षत्रधर्मव्रते स्थितः।

षष्टिं वर्षामि धर्मात्मा वसुधां पालयिष्यति।।

इतश्चोर्ध्वं महाबाहुः कुरुराजो भविष्यति।          

परिक्षिन्नाम नृपतिर्मिषतस्ते सुदुर्मते।।

- மஹாபாரதம் (வியாசர்)

Saturday 10 November 2018

பாரத நாட்டில் அரசர்களுக்கு புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ, மன்னிப்பது அரச தர்மமாக இருந்தது. விளைவு?

ஹிந்துக்கள் மட்டும் இருந்த காலத்தில், சனாதன தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி நடந்து கொண்டு இருந்தது.

பிராமண (spiritual), வைசிய (business), சூத்ர (employee, farmer) போன்றவர்கள் நாட்டில் வாழ, இவர்களை காக்கும் பொறுப்பை க்ஷத்ரியர்கள்(protection force) ஏற்றனர்.
பாரத நாடு கலாச்சாரத்தில், செலவத்தில், இறையாண்மையில், உலகத்திற்கு முன்னோடியாக இருந்து வந்தது.
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவதார சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்து உலகையே ஒரு குடையில் ஆண்டார்.



துவாபர யுகத்தில், யுதிஷ்டிரர் தான் சக்கரவர்த்தி என்று நிலை நாட்ட, ராஜசுய யாகம் செய்தார்.
பல அரசர்கள் யுதிஷ்டிரர் சக்கரவர்த்தியாக ஒப்புக்கொண்டனர்.
சக்கரவர்த்தி என்று ஒப்புக்கொள்ளாத அரசர்கள் பாண்டவர்களிடம் போர் புரிந்தனர். அர்ஜுனன் பெரும்பாலான போரை செய்து, எதிர்த்த அரசர்களை தோற்கடித்தார்.
ஒப்பு கொண்டவர்கள், தோல்வி அடைந்த அரசர்கள் என்று அனைவரும் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

கலியுகம் ஆரம்ப சமயத்தில், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மகாராஜன் உலகை ஒரு குடையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் வேட்டைக்கு சென்றிருந்த சமயம், மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட ஒரு காளை மாடு நிற்பதையும், அது கீழே விழுந்து விடாமல் இருக்க, அதை தாங்கி கொண்டு ஒரு பசு மாடு கண்ணீருடன் நிற்பதை கவனித்தார்.
மேலும், அரசனை போன்ற வேடம் அணிந்து ஒருவன் (கலிபுருஷன்), கையில் வாளுடன், காளையின் இருந்த ஒரு காலையும் வெட்ட கையை ஓங்கினான்.
இந்த சகிக்க முடியாத காட்சியை கண்ட பரிக்ஷித் மகாராஜா, தன் வாளை உருவி, அந்த போலி அரசனை தண்டிக்க வந்தார்.
பரிக்ஷித் மகாராஜனை கண்ட அந்த போலி அரசன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

மன்னிப்பு கேட்டவனை மன்னிக்க வேண்டும் என்பது அரச தர்மம். பரிக்ஷித் மகாராஜா மன்னித்தார்.

இதுபோல, பாரத நாட்டில் அரசர்களுக்கு இடையில் பல போர் நடந்துள்ளது.
தோற்கும் அரசன் புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ மன்னிக்கும் தர்மம் அரச குலத்தில் இருந்தது.

இப்படி ஜெயிக்கும் அரசர்கள், நாட்டை கைப்பற்றி, தன் அரசாட்சி செய்தனர்.
ஆனால் பொது மக்களை துன்புறுத்துவதோ, அவர்கள் வழிபாட்டை தடுப்பதோ, கோவிலை இடிப்பதோ கிடையாது.
சோழ அரசனை பல்லவன் வென்றால், அங்கு தன் பங்குக்கு கோவில்கள் கட்டுவதும், இன்னும் செழிப்பாக வாழ வழி செய்வதையும் கடமையாக கருதினர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த நம் கலாச்சாரத்தை சீரழிக்க, வேறு நம்பிக்கை, வேறு கலாச்சார நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்கள் பாரத நாட்டிற்குள் நுழைந்தனர்.

இஸ்லாமியன் என்றால் என்ன? என்ன கொள்கை உடையவர்கள் இவர்கள்? ஏன் பாரத தேசத்தை தாக்குகின்றனர், கோவிலை இடிக்கின்றனர்? கோவிலில் வழிபடும் பொது மக்களை கொலை செய்கின்றனர்? பெண்களை ஏன் பிடித்து சென்று விடுகின்றனர்? என்று இவர்கள் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாமல் பாரத மக்கள் தவித்து கொண்டிருந்த இக்கட்டான காலம் அது.

1024ADல் கஜினி முகம்மது என்ற ஆப்கானில் பிறந்த இஸ்லாமியன் குஜராத் தேசத்தில் உள்ள சோம்நாத் கோவிலை தாக்கினான்.
படு தோல்வி அடைந்தான் கஜினி முகம்மது. காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, சாளுக்கிய ஹிந்து அரசர் "பீமா" மன்னித்து விட்டார்.
ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, 17 முறை மீண்டும் மீண்டும் தாக்கி, தோல்வி அடைந்து, மன்னிப்பு கேட்டு, விடுவிக்கப்பட்டான்.

தோல்வியுற்ற அரசர்கள் மன்னிப்பு கேட்டால்,  மன்னிக்கப்படுவது சாதாரண விஷயமாக இருந்த கால கட்டத்தில்,
17 முறையும் மன்னிக்கப்பட்ட கஜினி முகம்மது 18வது முறை திடீர் தாக்குதல் செய்து, போரில் வென்றான்.
அங்கு இருந்த தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து சேதப்படுத்தி, கொள்ளை அடித்தான்.
ஹிந்து அரசரை கொன்றான்.
அந்த சமயத்தில் சிதறிய சௌராஷ்டிர சமுதாய மக்களே இன்று வரை பல மாநிலங்களில் உள்ளனர்.

நம் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், படையெடுத்த இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், பெண்களை கற்பழிப்பதும், பொது மக்களை ஹிந்துவாக இருப்பதால் தலை சீவுவதும், கொள்ளை அடிப்பதும் நடக்க ஆரம்பிக்க, ஹிந்து அரசர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டனர்.

ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் பல முறை தன் மீது படையெடுத்த இஸ்லாமியர்களை மன்னித்து, அதுவே பின்னர் வினையாக அமைந்தது.


கஜினியை 17 முறை மன்னித்து விட்ட ஹிந்து அரசன் வீழ்ந்தது போல, 1191ADல் கோரி முகம்மது பஞ்சாப் வழியாக பாரத தேசம் நுழைய முயற்சி செய்த போது, அஜ்மீர், ராஜஸ்தானை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்து வந்த 24 வயது அரசர் "பிருத்விராஜ் சவுஹான்", கோரியின் படையை தோற்கடித்தார்.
படுகாயமுற்று பயந்தோடிய முகம்மது கோரியை துரத்தி சென்று பிடித்து கொல்லாமல் விட்டார்.
விளைவு,
ஒரு வருடம் கழித்து மீண்டும் படை திரட்டி வந்தான் கோரி. மீண்டும் பெரும் போர் மூண்டு, தோல்வியின் விளிம்பில் இருந்த கோரி,
எதிர்பாரா விதமாக உத்திர பிரதேச "கண்ணௌஜ்" என்ற நாட்டை ஆண்ட ஜெயச்சந்திரன் என்ற அரசன் மூலம் உதவி பெற்றான். 700 யானை படைகள், லட்சக்கணக்கான போர் வீரர்களை உதவிக்கு பெற்றான்.




தன் மகள் "சம்யுக்தா" பிருத்விராஜ் சவுஹானை காதலித்து சுயம்வரத்தில் இவனோடு ஓடி விட்டாள் என்ற ஆத்திரத்தில், கோரிக்கு உதவி செய்து, "பிருத்விராஜ் சவுஹான்" போரில் தோற்க வழி செய்தது.
பிருத்விராஜ் சவுஹான் கண்களை பிடுங்கி எரிய உத்தரவிட்டான் கோரி.
கண் இழந்த பிருத்விராஜ் சவுஹான், ஒலியினால் கூட போர் புரியும் வல்லமை உடையவன் என்று கேள்விப்பட்டு, கண் இழந்த நிலையில் கைதியாக இருக்கும் சவுஹானை பார்த்து விளையாட்டாக அம்பும் வில்லும் கொடுத்து "எங்கே, உன் திறமையை காட்டு?" என்று ஏளனமாக சிரிக்க, அதே இடத்தில் இருந்து கொண்டே ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட அது கோரியின் கழுத்தில் பாய்ந்து இறந்தான். அங்கேயே பிருத்விராஜ் சவுஹான் கொல்லப்பட்டார்.

இப்படி க்ஷத்ரிய அரசர்கள், இஸ்லாமிய கொள்கை கொண்ட அந்நியர்கள் நுழைவை தடுக்க உயிர் பலி கொடுக்க, மறு புறம் இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், அதை வைத்தே அரசர்களை தன் வழிக்கு கொண்டு வருவதும், பெண்களை கற்பழித்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை இஸ்லாமியன் பெயரில் வளர்ப்பதும் ஆரம்பிக்க, பெரும் கலவரம் மக்கள் மத்தியில் உண்டானது.
ஹிந்துக்களின் நிலை சொல்ல முடியாத துக்கத்தில் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

400 ஆண்டுகளாக இஸ்லாமிய ஆக்ரமிப்பால் பாரத தேசம் தத்தளித்து கொண்டிருந்த சமயம் அது.
இன்றைய பாகிஸ்தான் ஏறத்தாழ இஸ்லாமிய சுல்தான்களால் சூழப்பட்டு இருந்தது.

கோவில்கள் ஆப்கான் ஆரம்பித்து, தமிழ்நாட்டின் ஸ்ரீ ரங்கம் வரை தாக்கப்பட்டு இருந்த காலம் அது.
இடிக்கப்பட்ட கோவில்கள் இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டன.
மதுரையை பாண்டிய அரசர்களுக்கு பின், சுல்தான்கள் ஆட்சி செய்த காலம் அது. 70 வருடங்கள் மதுரை மீனாட்சி கோவில் மூடி இருந்த காலம் அது.

இந்த சமயத்தில் துக்ளக் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது.
"நசிருத்தின் முகம்மது துக்ளக்" என்பவன் டெல்லியை தலைமையாக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
ஆப்கான் நாட்டின் வடக்கில் உள்ள உஸ்பகிஸ்தான் என்ற நாட்டிலிருந்து தைமூர் (Taimur or Timur) என்பவன் 1398ADம் ஆண்டு, இந்தியாவை நோக்கி படையெடுத்தான்.
இந்த சமயத்தில் முல்தான் (Multan, Pakistan) என்ற நாட்டை கவனிக்க "கைசர் கான்" (ghizr khan) என்பவனை ஆளுநராக (governor) நியமித்து இருந்தனர் துக்ளக் வம்சத்தினர்.

தைமூர் (Taimur or Timur) டெல்லி நோக்கி படையெடுக்க வருவதை பார்த்து, இவனை எதிர்த்தால் தோல்வி நிச்சயம் என்று அறிந்து, இது தான் சமயம் என்று, துக்ளக் அரசனை எதிர்க்க துணை நின்றான் "கைசர் கான்" (ghizr khan).
17 DEC 1398ADல், தைமூர் தன் ஒட்டகங்கள் முன்னும் பின்னும் பெரிய பெரிய மர துண்டுகளை கட்டி, தீயிட்டு கொளுத்தி, எதிரில் வந்த யானை படையை நோக்கி ஓட வைத்தான். தன்னை நோக்கி தீ ஜ்வாலையுடன் வரும் ஒட்டகங்களை பார்த்து பீதி அடைந்து, யானைகள் துக்ளக் படையை நோக்கி திரும்பி ஓட பெரும் சேதம் உண்டானது. போரில் எளிதாக தைமூர் வெற்றி பெற்றான்.
டெல்லியை கைப்பற்றி விட்டான்.

இந்த சமயத்தில், டெல்லியில் இருந்த ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்று குவித்தான்.
ஒரு லட்சம் பேர் டெல்லியில் கொலை செய்யப்பட்டு, துக்ளக் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தான்.
பாரத தேசத்தில் இருந்த ஹிந்துக்களுக்கு, துக்ளக் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது, பெரும் நிம்மதி தருவதாக இருந்தாலும், மீண்டும் இஸ்லாமிய ஆட்சியே தொடர்ந்தது.

டெல்லியில் இருந்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, தனக்கு உதவி செய்த "கைசர் கான்" (ghizr khan) என்பவனை தன் ஆட்சியின் பெயரால் டெல்லியை ஆட்சி செய்ய சொல்லி சுல்தான் ஆக்கினான்.

தன் நாட்டிற்கு கொள்ளை அடித்த செல்வங்களோடு சென்று மேலும் பல போர்களை தன் வாழ்நாள் முழுக்க செய்தான்.
தைமூர் காலத்தில், இவனால் உலக மக்கள் தொகையில் 5% சதவீத மக்கள் (17 மில்லியன்) கொல்லப்பட்டனர்.

"கைசர் கான்" (ghizr khan) தைமூர் மூலமாக கிடைத்த பெரும் அரசாட்சியை, "சையது வம்சம்" என்று புது இஸ்லாமிய ஆட்சியின் பெயரில் பாரத நாட்டில் தொடங்கினான்.


சையது வம்ச இஸ்லாமியர்கள் சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி  செய்தனர்.
இதற்கு பின், ஆப்கான் நாட்டை சேர்ந்த லோதி வம்ச இஸ்லாமியர்கள் டெல்லியை கைப்பற்றினர்.
லோதி வம்ச ஆட்சி சமயத்தில் (1451AD முதல் 1526AD வரை 70 வருடங்கள்), ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் பாரத தேசத்துக்குள் நுழைந்தனர்.

பாபர் என்ற உஸ்பகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாபர் என்ற இஸ்லாமியன் டெல்லியை கைப்பற்றினான்.
லோதி ஆட்சி முடிந்து, முகலாய வம்ச இஸ்லாமிய ஆட்சி பாரத தேசத்தை சூழ்ந்தது.
பாபர் தன்னுடைய 4 வருட டெல்லி ஆட்சியில் அயோத்தியா போன்ற நகரங்களில் இருந்த ஹிந்துக்களை தலை சீவினான்.
இந்த சமயத்தில் தான் ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் இருந்த கோவிலை இடித்து அதன் மீது மசூதி எழுப்பினான்.

பாபரை தொடர்ந்து இவன் வம்சத்தினர் ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று தொடர்ந்து ஹிந்துக்களின் மீது பல தாக்குதல் ஏற்பட்டது.
பாரத தேசத்துக்குள் தெற்கு பகுதியான கேரள தேசம் கோழிக்கோடு வழியாக 1498ADல் நுழைந்திருந்த கிறிஸ்தவ மத போர்ச்சுகல்காரன் (வாஸ்கோட காமா) பெரும் வியாபாரம் ஐரோப்ப கண்டத்தில் செய்து வந்தான்.

இவர்களை போன்று தானும் வியாபாரம் செய்ய, மற்றொரு கிறிஸ்தவ நாடான பிரிட்டிஷ்காரர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அனுமதியுடன் "ஜான் கம்பெனி" என்ற "பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி" குஜராத்தில் உள்ள சூரத் கடற்கரை நோக்கி 1612ADல் வந்தது.
அப்பொழுது டெல்லியை ஆண்டு கொண்டிருந்தான் ஜஹாங்கீர்.
இவன் அனார்கலி என்ற நாட்டியகாரியை காதலித்தான். முகலாய அரசி ஆக்க முடியாது என்பதால், இவள் உயிரோடு புதைக்கப்பட்டாள்.
ஜஹாங்கீர் நூர்ஜஹான் என்பவளை மணந்தான். பெயர் அளவில் சுல்தான் என்று இருந்தாலும், நூர்ஜஹான் தானே ஆட்சி செய்தாள்.

ஜஹாங்கீர் பெரும் குடிகாரனாக இருந்தான்.
இவனிடம் சாமர்த்தியமாக பேசி, தன்னிடம் கொண்டு வந்து மது பானங்களை கொடுத்து, சூரத் நகரில் இருந்து கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் தான் ஹிந்து அரசர்களில் மராட்டிய அரசர் "வீர சிவாஜி" கோவிலை இடித்து, ஹிந்து பொது மக்களை கொன்று,  அதர்மம் செய்யும் இவர்களை மன்னிக்கும் தவறை செய்யாமல் எதிர்த்தார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியை சந்திக்காத, பெரும் வீரனாக வாழ்ந்தார் வீரசிவாஜி.
கர்நாடக, தெலுங்கு, தமிழ்நாட்டு ஹிந்துக்கள் விஜயநகர பேரரசு காலத்தில் துக்ளக் இஸ்லாமியர்களால் அவதிப்பட்ட போது, காப்பாற்றபட்டது போல, முகலாய ஆட்சி காலத்தில் மராட்டிய சாம்ராஜ்யம் நிறுவி, இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர் மராட்டிய மன்னர்கள்.

இதற்கிடையில் பிரிட்டிஷ்காரனும், போர்ச்சுகல்காரனும் கை கோர்த்து கொண்டனர்.

இஸ்லாமிய சுல்தான் வீழ்ச்சி அடைந்த சமயத்தில், மராட்டிய மன்னர்கள் ஹிந்துக்களை காக்க, பாரத தேசம் மீண்டு வர ஆரம்பித்தது.

இந்த சமயத்தில், பிரிட்டிஷ் ராணுவம் மராட்டிய மன்னர்களுடன் சண்டைக்கு 1775ஆம் ஆண்டு தயாரானது.
Anglo-maratha war I என்று அழைக்கப்படும் இந்த போர் 7 வருடங்கள் நடந்தது.
இறுதியில் பிரிட்டிஷ் ராணுவம் மராட்டியர்களிடம் தோற்றது.
நானா பட்னவிஸ் என்ற மராட்டிய மந்திரியுடன் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் ஒப்பந்தம் செய்து சமாதானம் செய்து கொண்டனர்.

வேரோடு இவர்களை அழிக்காமல் விட்டதால், மீண்டும் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் 1803ஆம் ஆண்டு இரண்டாவது முறை Anglo-maratha war II தாக்குதலில் ஈடுபட்டனர்.
மராட்டியர்களால் இஸ்லாமிய ஆட்சி அழிவை நோக்கி செல்கிறது என்பதால், லோதி வம்ச அரசாட்சியில் உள்ளே புகுந்திருந்த ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, மராட்டிய ஹிந்து மன்னர்களை எதிர்த்தனர்.

இது சமயத்தில் உதவி செய்ய, மராட்டியர்கள் முதல் முறையாக தோல்வியை சந்தித்தனர்.


ஹிந்துக்கள் எதிராக கிடைத்த இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த, ஆப்கான் பழங்குடியின தலைவன் "முகம்மது பய்ஸ் அலி கான்" என்பவனை கௌரவிக்கும் வகையில், ஹரியானவில் உள்ள பட்டோடி என்ற கிராமத்திற்கு நவாப் (தலைவன்) ஆக்கியது.

Nawab of pataudi என்று அழைக்கப்பட்ட இந்த ஆப்கான் தலைவன் 1804 முதல் 1829 வரை இருந்தான். அதன் பின்னர் அவன் பரம்பரை இந்த ஊரின் நவாப் என்று ஆண்டு கொண்டிருந்தது.

இதில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்று பல மராட்டிய இடங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்தினர்.

இதை தொடர்ந்து மராத்திய சாமராஜ்யம் தன் பலத்தை காலப்போக்கில் இழந்தது.

மீண்டும் 1817ADல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு மூன்றாவது முறை Anglo-maratha war III தாக்குதலில் ஈடுபட்டனர். மராட்டிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும்  பிரிட்டிஷ்காரர்கள், போர்ச்சுகல்காரர்கள், பிரெஞ்ச்காரர்கள், ட்ச்காரர்கள், போன்ற கிறிஸ்தவ நாட்டினாரால் தெற்கு பாரத தேசம் முழுவதும் பிடிக்கப்பட்டது.
முகலாய இஸ்லாமிய அரசு 1857ல் முடிவுக்கு வந்து, பாரத தேசம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் சிக்கியது.

1947ல் இந்தியா பிரிட்டிஷ்காரர்களை விரட்டி, சுதந்திரம் பெற்றது.
1000 வருட இஸ்லாமிய ஆக்ரமிப்பால், ஹிந்துக்களில் பல லட்சம் பேர் இஸ்லாமியர்கள் ஆக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு தனியாக வாழ இடம் வேண்டும் என்று கேட்க, சிந்து தேசத்தை பாகிஸ்தான் என்று பெயரிட்டு, பங்களாதேஷ் என்ற மற்றோரு பகுதியையும் இஸ்லாமியர்களாகி இருந்தவர்கள் வாழ வழி செய்து நாட்டை பிரித்து சுதந்திரம் அடைந்தது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தான் அனுப்பாமல், 'இருப்பவர்கள் இருக்கலாம்' என்று சொல்ல, பலர் இந்தியாவில் தங்கினர்.
இவர்கள் இன்று வரை அயோத்தி கோவிலை திருப்பி கட்டுவதற்கும், ஹிந்துக்கள் தங்கள் இழப்பை சரி செய்து கொள்வதற்கும் பெரும் தடையாக இருந்து விடுகின்றனர்.

தெற்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவ ஆட்சி நடந்ததால், கிறிஸ்தவ மத மாற்றம் பரவலாக நடந்து பல ஹிந்துக்கள் இந்த பகுதிகளில் கிறிஸ்தவர்கள் ஆகி, இவர்களும் ஹிந்துக்களுக்கு எதிராக பெரும் தடையாக இருக்கின்றனர்.

1971ஆம் ஆண்டு வரை ஆப்கான் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் "nawab of pataudi"யாக ஆண்டு கொண்டிருந்தனர்.
இந்திய சட்டத்தின் படி, அன்று "nawab of pataudi"யாக இருந்த மன்சூர் அலி கான் பட்டோடி அரச பதவிகள் பறிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இவர்கள் 1971 வரை இருந்ததால், இவர்களுக்கும் இந்திய குடிமகனாக வாழ அனுமதித்தது.

மராட்டிய ஹிந்து அரசர்கள் எதிராக போரிட்டு, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு துணை இருந்த இவர்கள், காலப்போக்கில் பிரிட்டிஷ் நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
கிரிக்கெட் என்ற விளையாட்டில், மன்சூர் அலி கான் பட்டோடி இந்தியாவுக்கு தலைமை ஏற்று விளையாடினார்.

இவர் ஹிந்தி சினிமாவில் நடித்த ஹிந்து பெண்ணான சர்மிளா தாகூர் என்ற பெண்ணை மணந்து, ஒரு பெண், ஒரு பையன் பெற்றனர்.
இவர்கள் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர்.
இவர் மகன் "saif ali khan" தன் அம்மாவை போன்று சினிமா உலகில் சென்று நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள்.
இருவருமே ஹிந்து பெண்கள்.
முதல் மனைவியுடன் ஒரு பெண் பிள்ளையும், இரண்டாவது மனைவி "கரீனா கபூர்" மூலம் ஒரு ஆண் குழந்தையும் பெற்றார்.

இந்த ஆண் குழந்தைக்கு தன் ஆப்கான் வழி வம்சத்தில் வந்த தைமூர் என்பவனின் பெயரை தன் பையனுக்கு வைத்தார்.

டெல்லியில் நுழைந்து ஒரே நாளில் ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்ற தைமூர் பெயரை வைத்தது, மராட்டிய ஹிந்துக்களுக்கு எதிராக இவர்கள் பரம்பரை ஈடுபட்டது போன்றவை, saif ali khan மேல் எதிர்ப்பு அலைகளை ஹிந்துக்களிடையே ஏற்படுத்தியது.



Tuesday 3 October 2017

தவறு செய்தாலும் பரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்.. நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது


தவறு செய்தாலும், துக்கம் வந்தாலும், பரிகாரம் (பாவ மன்னிப்பு) கேட்காத பக்தன்:

கலி ஆரம்ப சமயம்:
வேட்டையாட சென்ற பரீக்ஷித், ஏதோ  ஒரு கோபத்தில் சமீகர் என்ற ரிஷி மீது, அங்கு இருந்த செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டு விட்டு, சென்று விட்டார்.


ரிஷியின் 7 வயது மகன்  ஸ்ருங்கி இதை பார்த்து, 'இப்படி செய்தவன் 7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது' என்று சபித்துவிட்டான்.

அரண்மனை சென்றிருந்த பரீக்ஷித் "இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டோமே! அர்ஜுனனின் பேரன், அபிமன்யு மகனாக, ஸ்ரீ கிருஷ்ணரை குல தெய்வமாக கொண்ட இந்த பரம்பரையில், நாம் பிறந்து, எப்படி இப்படி ஒரு காரியம் செய்தோம்?
தன் தாத்தா 'தர்மபுத்திரர் யுதிஷ்டிரர்' அரசாண்ட இந்த அரசாட்சியில், நாம் இப்படி ஒரு அதர்ம காரியத்தை செய்து விட்டோமே!
மக்கள் தவறு செய்தால், அரசன் தண்டனை கொடுப்பான். அரசனான நானே செய்த இந்த குற்றத்துக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
இந்த அரசனுக்கு, பகவானே, நீயே தகுந்த  தண்டனை கொடு"
என்று மிகவும் மனம் வருந்தி கேட்டுக் கொண்டார்.

இந்த சமயம், அங்கு வந்த சமீகரின் சிஷ்யர்
'7ஆம் நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடிக்க கடவது என்று சமீகரின் மகன் உங்களை சபித்துவிட்டார், இதை உங்களுக்கு தெரிவித்து விட சொன்னார்'
என்று சொல்லிவிட்டு சென்றார்.


கலியில், சில சமயங்களில் மிகவும் நல்லவர்களும், சில தவறு செய்து விடுவார்கள்.

இவர்கள் நல்லவர்களாக இருப்பதால், இப்படி செய்தோமே!! என்று பிறகு  வருந்தவும் செய்வாரகள். இது கலியின் தோஷம்.

ஆகையால், நல்லவர்கள் சில சமயம் செய்யும் தவறை, நாம் ஒரு போதும் சொல்லி காட்ட கூடாது.

இவர்கள் பொதுவாக எத்தனை நல்லவர்களாக இருந்தார்கள் என்று நினைத்து, கலியில் சில சமயம் நல்லவர்களின் புத்தியும், அவர்களையும் மீறி செயல் படுத்த செய்து விடும் என்று அவர்கள் தவறுகளை நம் மனதில் நிறுத்தி  கொள்ளாமல், தள்ளி விட வேண்டும்.

இப்பொழுது ஒரு கேள்வி!
சபித்த விஷயத்தை எதற்காக தன் சிஷ்யர்களை விட்டு உடனே சொல்ல சொன்னார்? சொல்லாமல் இருந்திருக்கலாமே?




இதற்கு காரணம், சாபம் பலித்தால், இன்னும் 7 நாளில் அரசன் மடிந்து விடுவான்.
அரசன் இல்லாத நாடு என்ன நிலையாகும்?? மக்கள் கஷ்டப்படுவார்கள். நல்லவர்களை  காத்த அரசன் போனால், தீயவர்கள் பெருகுவார்கள். அதர்மம் பெருகும்.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், சமீகர் விஷயத்தை உடனே பரீக்ஷித்திடம் சொல்ல சொன்னார்.

பொதுவாக உலகில் அனைவருக்கும் துன்பம் வருகிறது.
துன்பத்திற்கு  காரணம், அவன் இந்த ஜென்மத்திலோ, போன ஜென்மங்களிலோ செய்த கர்மாவே, செயல்களே காரணம்.

தெரிந்தோ தெரியாமலோ, அகலிகை போன்ற, நலகூபுர போன்ற தேவர்கள் கூட சில சமயம் தவறு செய்து சாபத்தை வாங்கினர். 

சாபம் கொடுத்தவர்களிடமே இவர்கள் சென்று, பரிகாரம் கேட்டு, அந்த சாபத்திலிருந்து தப்பித்து உள்ளனர். 
அகலிகை 'கல்லாக போ' என்று சபிக்கப்பட்டதும், பரிகாரம் கேட்க, ஸ்ரீ ராமரின் பாத தூளி பட்டால், சாபம் விலகும் என்று பரிகாரத்தை அறிந்தாள்.

இப்படி சாபத்துக்கு பரிகாரம் உண்டு என்பதால், ஒரு வேளை, பரீக்ஷித் மகாராஜன் பரிகாரம் கேட்டால், பரிகாரம் சொல்லி காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தான், சமீகர் தன் சிஷ்யனை அனுப்பி வைத்தார்.

சரித்திரத்தை ஆதியில் இருந்து பார்க்கும் போது, தான் செய்த தவறுக்கு, வரும் கஷ்டத்தை, சாபத்தை, பரிகாரம் கேட்காமல் ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் மட்டுமே!!

  1. ஒருவர், ஸ்ரீ ராமரின் தந்தை 'தசரதர்',
  2. மற்றொருவர், 'பரீக்ஷித்'.

வேட்டையாட வந்த தசரதர், "யானைதான் தண்ணீர் குடிக்கின்றது" என்று நினைத்து, ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட்டார்.
ஆனால், தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரவனன் என்ற 16 வயது சிறுவனை தவறுதலாக அம்பு எய்து கொன்றுவிட்டார்.


"தான் செய்த தவறுக்கு பகவானே ஒரு தண்டனை தரட்டும்" என்று நினைத்த தசரதர், அவர் நினைத்தது போலவே, ஸ்ரவனனின் கண் தெரியாத அவர் தந்தை, "எப்படி நாங்கள் எங்கள் குழந்தையை இழந்து, உயிரை விட போகிறோமோ, அதே போல, நீயும் உன் பிள்ளைகளை இழந்து உயிரை விடுவாய்" என்று சபித்தார்.


"செய்த தவறுக்கு, சரியான தண்டனை கிடைத்தது" என்று, தசரதரும் அவரிடம் பரிகாரம் கேட்கவில்லை.
அதே போல, இங்கு பரீக்ஷித் மகாராஜனும் பரிகாரம் கேட்கவில்லை.

"உயிரே போகும் துக்கம் வந்தாலும், இதற்கு தெய்வம் தான் காரணம், தெய்வம் உதவி செய்யவில்லை" என்று உண்மையான பக்தன் சொல்ல மாட்டான்.
மாறாக,
"இது என் கர்மத்துக்கான வினை" என்று மேலும் பகவானை நெருங்குவான், பக்தி செய்வான்.

"உயிரே போகும் துக்கம் வந்தும், பகவானை குறை சொல்லாமல், பக்தி செய்தவர்" பரீக்ஷித் மகாராஜன்.
இதுவே நமக்கு பாடம்.

சமாதானம் அடைய முடியாமல், மனம் வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித், "தனக்கு இப்படி ஒரு தண்டனை தகும்" என்று ஏற்றுக்கொண்டார்.

"உடனே தக்ஷகன் கடித்து சாகாமல், தனக்கு 7 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறாரே!!" என்று மகிழ்ந்து, அப்படியே ராஜ்யத்தை மந்திரிகளிடமும், தன் மகன் ஜனமேஜெயனுக்கு விட்டு விட்டு, கங்கை நதி ஓரம் வந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ரிஷிகள், ஒவ்வொருவராக, நடந்த விஷயத்தை பற்றி விசாரிக்க முயல, பரீக்ஷித் விசாரிப்பதை  நிறுத்தச்சொன்னார்.

பொதுவாக, ஒருவனுக்கு துக்கம் வரும் போது, தன் கஷ்டத்தை பற்றி குறைந்த பட்சம் யாராவது விசாரிப்பார்களா?? என்று எதிர்பார்ப்பார்கள். இது இயற்கை.

இறந்தவன் வீட்டில் சென்று, துக்கம் விசாரிப்பார்கள்.
துக்கம் விசாரிப்பதால், இறந்தவன் வரப்போவதில்லை.

விசாரித்தால், துக்கத்தில் உள்ளவனுக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும்.

ஞானி போன்ற வைராக்ய நிலையில் இருந்த பரீக்ஷித்துக்கு, இப்படி ரிஷிகள் வந்து விசாரிப்பது தேவைப்படவில்லை.

"இந்த சாபம் தனக்கு ஏற்பு உடையது தான்" என்று துக்கம் அடையாமல், இனி இந்த 7 நாளில் என்ன செய்ய வேண்டும்? எதை உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும்?
என்ற கேள்வியுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

வந்த ரிஷிகள், பரீக்ஷித்தின் பக்குவ நிலையை பார்த்து,
'நாங்கள் இவரை சாந்தமாக ஆக்க விசாரிக்க வந்தால், இவரோ, 7ஆம் நாள் மரணம் என்று தெரிந்தும், சாந்தமாகவே இருக்கிறாரே' 
என்று ஆச்சர்யப்பட்டனர்.

ரிஷிகள் கூட்டம், பரீக்ஷித் மகராஜனை சூழ்ந்து அமைதியாக அமர்ந்தனர்.

மனிதராக பிறந்தவன் உண்மையில் எதை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியுடன் இருந்த பரீக்ஷித் மகாராஜனை பார்க்க வ்யாசரின் புத்திரர் 'சுகர்' வந்தார்.
7 நாளும் பாகவதம் சொன்னார்.
பாகவதம் கேட்டதனாலேயே பரீக்ஷித் முக்தி பெற்றார்.

குருவே துணை