Followers

Search Here...

Monday 27 November 2017

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே


விதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.

குந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை கிராமங்கள்.

கோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.
இதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.
அங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.
இந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
யாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.

மகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.

947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.
947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.
யாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.
5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.

விதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.
இன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில்  உள்ளது என்றும் சொல்லலாம்.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.
இவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார்? எப்படி இருப்பார்? என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.
இதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.



ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, "எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று எழுதி  அனுப்பினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.
"இவனை கொல்ல கூடாது" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "ருக்மிணியின் அண்ணன்" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.
அப்படியே விட்டால், "திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.
ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.
குஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.

ஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? எப்படி இருந்தாய்? என்று பார்க்க முடியாது போய் விட்டதே!! 
இந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.
தன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன்  மாய  சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.
அப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும்  பார்த்து விட்டாள். 

இந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார். 


அன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.
இந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார். 

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.

மகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, "பாண்டவர்களுக்கு சகாயம்" செய்ய நினைத்தான். 
தன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.
"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.

மஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.

பெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.
ஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.

மஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.


போருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.

கோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

Sunday 26 November 2017

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே...

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது?.


குந்தி தேசம், அவந்தி தேசம், சேடி தேசம், கருஷ தேசம் போன்றவை இந்த மத்யபிரதேச தேசத்தை சேர்ந்தவை.

சேடி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், கிழக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், வடக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

கருஷ தேசம் சேடி தேசத்தின் தெற்கில் உள்ள ஒரு பகுதி.

அவந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி, சேடி, கருஷ மற்றும் அவந்தி தேசத்தின் பெரும் பகுதியை "யாதவ" குல அரசர்கள் ஆண்டு வந்தனர்.

குந்தி தேசத்தை 'குந்தி போஜன்' ஆண்டு வந்தார். இவருக்கு வாரிசு இல்லை.

சூரசேனர், குந்தி போஜ அரசனின் சகோதரர்.
வசுதேவன், ப்ரீதா, ஸ்ருதஸ்ரவா, ராஜதி ஆகியோர் சூரசேனரின் பிள்ளைகள்..

சூரசேனர் தன் மகள் 'ப்ரீதா"வை வளர்ப்பு மகளாக கொடுத்தார்.
தன் வளர்ப்பு மகளை "குந்தி தேவி"யாக வளர்த்தார் குந்தி போஜன்.

ப்ரீதா"வை (குந்தி தேவி) உத்திர பிரதேசத்து குரு தேச அரசன் பாண்டுவுக்கு மணம் செய்து கொடுத்தார்.

அவந்தி தேசத்தில் கல்வி கற்க பல தேசத்தில் இருந்து வந்து படித்தனர்.

அவந்தி தேசத்தில் (மத்யபிரதேசம்) உள்ள உஜ்ஜைன் (Ujjain) என்ற ஊருக்கு வந்து, ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் வந்து படித்தனர்.

மதுராவில் (UP, India) இருந்து அவந்தி தேசம் வந்து கிருஷ்ணரே படித்தார் என்றால், 5000 வருடம் முன்பு வரை, கல்வி எப்படி உயர்ந்து இருந்தது இந்த உஜ்ஜைனில் என்று அனுமானிக்கலாம்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து வந்த சுதாமா என்ற குசேலன் இதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடன் படிக்கும் பாக்கியத்தை பெற்றார்.
சாந்தீபினி ஆசிரமத்தில் கிருஷ்ணரே படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பண் சுதாமா என்ற குசேலன் என்ற பெருமை அடைந்தார். 

பாண்டவர்களின் தாய் "குந்தி" தேவியின் சகோதரி "ராஜதி" தேவி, அவந்தி தேச அரசனை மணமுடித்தாள்.

சேடி நாட்டின் அரசனாக "சிசுபாலன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருதஸ்ரவா'வும், குந்தியும் சகோதரிகள்.
இவர்களின் சகோதரன் "வசுதேவன்".
வசுதேவனுக்கும் தேவகிக்கும் சாஷாத் பரப்ப்ரம்மமான "ஸ்ரீ கிருஷ்ணர்" பிறந்தார்.


கருஷ நாட்டின் அரசனாக "தண்டவக்ரன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருததேவா'வும், குந்தியும் சகோதரிகள்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு, 'குந்தியும், ஸ்ருதஸ்ரவா'வும் "அத்தை" முறை.

சிசுபாலனுக்கும், தண்டவக்ரனுக்கும், ஸ்ரீ கிருஷ்ணர் மாமன் மகன்.

சிசுபாலனும், தண்டவக்ரனும், பாற்கடலில் இருக்கும் மஹா விஷ்ணுவின் துவார பாலகர்கள். 
இவர்களே மஹா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, சிசுபாலன், தண்டவக்ரன் என்று அவதாரம் செய்து, அவர் கையாலேயே முக்தி வேண்டி பிறந்தனர்.
சேடி நாட்டில் பிறந்த "சிசுபாலன்" பிறந்த பொழுது 3 கண், நான்கு கையுடன் விகாரமாக பிறந்தான். இதனால் பயந்து போனாள் அவன் தாயார்.

அப்பொழுது அசரீரி வாக்கு ஒன்று கேட்டது "யார் கை பட்டவுடன் இவன் மூன்றாவது கண்ணும், அதிகம் உள்ள இரண்டு கைகளும் மறையுமோ, அவனே இவன் மரணத்திற்கும் காரணம் ஆவான்".

இதை கேட்டு ஒரு புறம் கவலை கொண்டாலும், தன் குழந்தை சாதாரணமாக ஆக வழி இருப்பதால், அனைவரையும் தொட சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் வந்து தொட்டதும், அதிகமாக இருந்த கண்ணும், கைகளும் மறைந்தன.
அவன் தாயார், ஸ்ரீ கிருஷ்ணர் "எக்காரணம் கொண்டும் சிசுபாலன் மரணத்திற்கு காரணம் ஆக கூடாது" என்று வேண்டினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், அசரீரி வாக்கையும் மீறாமல், இவன் தாயாருக்கும் சமாதானமாக "ஒரு மனிதன் சாதாரணமாக ஒருவனை 100 முறை தொடர்ந்து திட்ட வாய்ப்பு இல்லை. எப்பொழுது, உன் மகன் என்னை தொடர்ந்து 100 முறைக்கு மேல் திட்டுவானோ அப்பொழுது மட்டுமே இவன் மரணத்திற்கு நான் காரணம் ஆவேன்" என்று சமாதானம் செய்தார்.

சேடி அரசன் சிசுபாலன், குரு தேச (உத்திர பிரதேச) இளவரசன் துரியோதனனுடனும், மகத தேச (Jamshedpur near Bihar) அரசன் ஜராசந்தனுடனும் நெருங்கிய நட்பு உள்ளவன்.

தான் பிறந்ததில் இருந்தே, தன் மாமன் மகன், 'ஸ்ரீ கிருஷ்ணரை' பகையாக நினைத்தான் சிசுபாலன். இவனுடன் சேர்ந்து இருந்தான் "தண்டவக்ரன்".

பார்க்கும் பொழுது எல்லாம், ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தைகளால் காரணமே இல்லாமல் சிசுபாலன் திட்டுவான்.
சரியாக 100 நெருங்கும் முன், திட்டுவதை நிறுத்தி விட்டு, சென்று விடுவான். ஸ்ரீ கிருஷ்ணரும் கோபப்படாமல்  சிரித்துக்கொள்வார்.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.


ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய அஸ்ஸாம் (Assam) தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.
இந்த சமயத்தில், சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகையில் தீ வைத்து கொளுத்தினான்.


சத்யபாமாவை கொண்டு நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.
நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்று வரை  கொண்டாடப்படுகிறது.

சிசுபாலன், தன் சகோதரியை பாண்டவர்களில் ஒருவரான 'பீமனுக்கு' மணமுடித்தான்.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.
யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.
தம்பி 'சகாதேவன்' அவந்தி தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

உறவுமுறையில் உள்ள சிசுபாலன், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.
அங்கு முதல் மரியாதை "ஸ்ரீ கிருஷ்ணருக்கு" கொடுக்க அனைவரும் சம்மதிக்க, யுதிஷ்டிரர் மரியாதை செய்ய ஆரம்பித்த போது, சிசுபாலன் தலைக்கு ஏறிய கோபம் கொண்டான்.

மதி மழுங்கிய நிலையில், சபையில் அனைவரின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான்.

அனைவரும் தடுக்க நினைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் "அவன் பேசட்டும், என்னை 100 முறை தொடர்ச்சியாக திட்டுகிறானா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
நிதானம் தவறிய சிசுபாலன், 100 முறை திட்டி, 101வது தடவை திட்ட ஆரம்பிக்க, தன் சுதர்சன சக்கரத்தால் அனைவரும் பார்க்க, அவன் கழுத்தை அறுத்து எறிந்தார்.

யாகம் முடிந்து, துவாரகை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சிசுபாலனை இறந்ததால், கோபத்துடன், தண்டவக்ரன் அவன் சகோதரன் "விதுரதன்" இருவரும், ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகை செல்லும் வழியில் மறித்து போரிட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் இருவரையும் தன் கதையால் கொன்றார்.
சிசுபாலன் இறந்த பின், யுதிஷ்டிரர், சேடி தேசத்தின் அரசனாக சிசுபாலனின் புதல்வன் "த்ருஷ்டகேது"வை அரசன் ஆக்கினார்.
த்ருஷ்டகேது "சேடி மற்றும் கருஷ தேசம்" இரண்டையும் ஆண்டு வந்தான்.


பகடை ஆடி சூழ்ச்சி செய்து பாண்டவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் மற்றும் 1 வருடம் அஞானவாசம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, இவர்கள் சொத்தை, நாட்டை எல்லாம், துரியோதனன் எடுத்துக்கொண்டான்.
பாண்டவர்கள், இந்த வன வாச காலத்தில், சில வருடங்கள் சேடி தேசத்திலும் (Madhya Pradesh) தங்கினார்கள்.

மஹாபாரத போர், நடக்கப்போவது நிச்சயம் என்று அறிந்த, கௌரவர்கள், பல தேச அரசர்களை தன் பக்கம் இழுத்தனர்.

அங்க தேச (வங்காளம் West Bengal) அரசன் கர்ணன், இந்த சமயத்தில், அவந்தி தேசத்தில் படை எடுத்து, அங்கு ஆண்ட அரசர்களை தோற்கடித்தான். 
உடன்படிக்கையின் பெயரில், அவந்தி தேச அரசர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

குந்தி தேச அரசர் 'குந்தி போஜன்' பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார். 
துரோணரால் குந்தி போஜன் கொல்லப்பட்டார்.

சேடி மற்றும் கருஷ தேசத்தின் அரசன் 'த்ருஷ்டகேது', பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தான்.
'த்ருஷ்டகேது' 14ஆம் நாள் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.

சிசுபாலனின் இன்னொரு மகன் "சுகேது"வும் துரோணரால் கொல்லப்பட்டான்.
இவனுக்கு பிறகு சிசுபாலனின் இன்னொரு மகன் "சரபன்" சேடி தேசத்து ஆட்சி புரிந்தான்.

மஹா பாரத போரில், அவந்தி தேச அரசர்கள் யாவரும், அர்ஜுனனின் பானத்தினால் கொல்லப்பட்டனர். 
அரசர்கள் இழந்த அவந்தி தேச போர் வீரர்கள், கடைசி வரை துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.


மஹா பாரத போர் முடிந்த பின், சக்ரவர்த்தி ஆன யுதிஷ்டிரர், பாரத தேசம் முழுவதும் தன் ஆட்சியில் கட்டுப்பட்டு நடக்க, தன் சகோதரர்களை அனுப்பினார்.
சேடி நாட்டு அரசன் "சரபன்", அர்ஜுனனிடம் போரிட்டு, தோற்றான்.

Saturday 25 November 2017

மஹாபாரத சமயத்தில் பஞ்சாப் : Punjab


மஹாபாரத சமயத்தில் பஞ்சாப் :  Punjab

பாஞ்சால தேசம், த்ரிகர்த தேசம் ஆகிய தேசங்கள் இன்று இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம்.

த்ரிகர்த தேசம் என்பது சட்லஜ், இரவி, பீஸ்  என்ற 3 நதிகள் சுற்றி அமைக்கப்பட்ட தேசம்.

த்ரிகர்த தேச அரசர் "சுசர்மன்" துரியோதனன் பக்கம் நின்று போரிட்டார். விராட (நேபாளம்) தேசத்தையும், பாண்டவர்களையும் எதிரிகளாக நினைத்தார்.
பல முறை விராட தேசத்துடன் போர் புரிந்து, தோல்வி அடைந்த காரணத்தால், இவர்களிடம் ஒரு பகையை கொண்டிருந்தான். விராட தேச படை தலைவன் கீசகன், சுசர்மனை பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

விராட தேசம் இன்று நேபால் என்று அழைக்கப்படுகிறது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில் கடைசி 1 வருடம் அஞான வாசம் விராட தேசத்தில் இருந்தனர். யுதிஷ்டிரர் விராட ராஜாவுக்கு உதவியாளனாக, பீமன் சமையல்காரனாக, அர்ஜுனன் நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, திரௌபதி விராட ராணிக்கு வேலைக்காரியாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.
விராட அரசனின் மகன் "கீசகன்" திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். இதனை பீமனிடம் சொல்ல, கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் வயிற்றுக்குள் தள்ளி, ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்". இப்படி ஒரு பலம் பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.
குரு தேச இளவரசன் துரியோதனன், கர்ணன், த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.


மஹா பாரத போரில், 12ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் யுதிஷ்டிரரை கொல்ல வியூகம் வகுத்தார். இதற்கு பெரும் தடையாக இருந்தார் அர்ஜுனன். அர்ஜுனனின் கவனத்தை திருப்ப, த்ரிகர்த தேச அரசன் சுசர்மனை அவர் படைகளுடன் தடுக்க சொன்னார். காலை ஆரம்பித்த போரில், மதியத்திற்குள், படைகள் அனைத்தையும் வீழ்த்தி, சுசர்மனை தோற்கடித்து, முன்னேறினான்.
13ஆம் நாள் போரில், துரோணர் சக்ரவ்யூஹம் அமைத்தார். அர்ஜுனன் மீண்டும் த்ரிகர்த தேச அரசன் சுசர்மனிடம் போர் செய்து பல ஆயிரம் வீரர்கள் தனி ஒருவனாக போரிட்டு கொன்றான்.

மஹா பாரத சமயத்தில், 'த்ருபதன்' பாஞ்சால தேச அரசனாக இருந்தார்.

த்ருபதனும், துரோணரும் இள வயதில் ஒன்றாக "பரத்வாஜ" மகரிஷியிடம் படித்தனர்.
"பரத்வாஜ" மகரிஷியின் மகன் "துரோணர்".
படித்து முடித்த பின், ஒரு சமயம் ஏழை "துரோணர்", தன் நண்பன் த்ருபதனை காண பாஞ்சால தேசம் சென்றார். அரசனாக இருந்த த்ருபதன் சரியாக மதிக்கவில்லை. இதனால் அவமானம் அடைந்த துரோணர், இதற்கு பதில் கொடுக்க, தன் சிஷ்யனான அர்ஜுனனை அனுப்பி த்ருபதனை போரிட்டு தோற்கடித்தார்.
அர்ஜுனன் போன்ற வீரனுக்கு ஒரு மகளும், தன்னை அவமானப்படுத்த நினைத்த துரோணரை கொல்ல ஒரு மகனும் வேண்டும் என்று வேள்வி நடத்தி, அக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் மற்றும் துரௌபதி இளமையுடன் தோன்றினர்.

இதனால் இருவருக்கும் பகை உணர்வு எழுந்தது.

த்ருபதனுக்கு 11 குழந்தைகள். இதில் முக்கியமானவர்கள் த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, துரௌபதி, உத்தமௌஜ, யூதாமன்யு ஆகியோர்.

துரௌபதியை சுயம்வரத்தில் போட்டியில் ஜெயித்து, அர்ஜுனன் மணமுடித்தான்.

மஹாபாரத போரில், துரோணர் 15ஆம் நாள் போரில் த்ருபதனை கொன்றார்.
பின்னர் தொடர்ந்து நடந்த போரில், த்ருஷ்டத்யும்னன் துரோணர் தலையை சீவினான்.

கடைசி நாள் யுத்தத்தில், துரோணர் மகன் 'அஸ்வத்தாமா", த்ருஷ்டத்யும்னன், சிகண்டி, உத்தமௌஜ, யூதாமன்ய ஆகிய அனைவரையும் போரில் கொன்றான்.

கடைசி நாள் போரில் துரியோதனனும் வீழ்த்தப்பட்ட, ஆத்திரம் கொண்ட அஸ்வத்தாமா, போர் முடிந்த அந்த ராத்திரியில், படுத்துக்கொண்டிருந்த துரௌபதியின் 5 மகன்களை, பாண்டவர்களை என்று நினைத்து, தூங்கிக்கொண்டிருக்கும் போது கொன்று விட்டான். இதை போர் களத்தில் வீழ்ந்து மரணத்திற்காக காத்திருந்த துரியோதனனிடம் போய் சொல்ல, துரியோதனன் 'போர் முடிந்த பின், எஞ்சி இருந்த வாரிசையும் இப்படி அழித்து விட்டாயே!!' என்று  கோபப்பட்டான்.

Friday 24 November 2017

மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா எப்படி இருந்தது? Uttar Pradesh, Haryana


மஹா பாரத சமயத்தில் உத்திர பிரதேசம், ஹரியானா:  Uttar Pradesh, Haryana

வ்ரஜ தேசம், 
குரு தேசம், 
காசி தேசம், 
வத்ஸ தேசம், 
கோசல தேசம்
ஆகிய தேசங்கள் இன்றைய உத்திர பிரதேசம்.



குருஜாங்கல தேசம் இன்றைய ஹரியானா (Haryana).

ராமாயண காலத்தில், 'சுமித்ரா' காசி தேச இளவரசி.
இவள் கோசல தேச அரசர் தசரதரை மணந்தாள்.
இவர்களுக்கு "லக்ஷ்மணன்" பிறந்தார். 'சத்ருக்னன்" பிறந்தார்
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிற் காலத்தில் வந்த முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  கோவிலை இடித்து, மசூதியை கட்டினான்.

த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், கோசல தேசத்தின் தலைநகராக அயோத்தியா இருந்தது.
ஸ்ரீ ராமர் அயோத்தியாவில் அவதரித்தார்.

1526AD சமயத்தில், இந்த அயோத்தியில் இருந்த ஸ்ரீ ராமரின் கோவி்லை இடித்து, முகலாய ஆட்சியில் பாபர், மசூதியை கட்டினான்.

ஸ்ரீ ராமர், ஜனகர் மகள் "சீதை"யை மணந்தார்.
ஜனகர் மிதிலை (நேபால்) அரச மன்னர்.

அந்த சமயத்தில், லக்ஷ்மணன் கங்கை நதி ஓரம், ஒரு நகரை உருவாக்கினார். அதற்கு லக்ஷ்மணபுரம் என்று பெயர் இருந்தது.
பிற் காலத்தில் வந்த முகலாயர்கள்,
இந்த லக்ஷ்மணபுரம் என்ற நகரத்தை "லக்னோ" என்று மாற்றினர்.
இன்று இந்த நகரம் ஷியா இஸ்லாமியர்கள் நிரம்பிய முஸ்லீம் ஊராக இந்தியாவில் உள்ளது.

ஸ்ரீ ராமர், வனவாச சமயத்தில், வத்ஸ தேசத்தில்,
பிரயாகை (கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்) வந்து, இங்கு இருந்த பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார்.
பின்பு சித்ரகூடம் நோக்கி சென்றார்.

ஸ்ரீ ராமரை அழைத்து வர, பரதன் கோசல தேசத்தில் இருந்து வந்தார். குகனை பார்த்து விட்டு, பிரயாகையை கடந்து பரத்வாஜர் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்.
ஸ்ரீ ராமரின் நினைவிலேயே வந்த பரதனுக்கு,
யமுனையின் நீல நிறம் ஸ்ரீ ராமராகவும்,
கங்கையின் வெண்மை நிறம் சீதையாகவும் தெரிய,
இரண்டு புண்ய நதிகளும் சேரும் ப்ரயாகையை கண்டு மூர்ச்சையானார். பின் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கி, சித்ரகூடம் சென்றார்.

வத்ஸ தேசத்தில், பிரயாகை என்ற ஊரை, பிற்காலத்தில் வந்த முஸ்லீம் ஆட்சியின் போது, அக்பர் இந்த பிரயாகை என்ற இடத்தை, இலகாபாத் என்று பெயர் மாற்றி முஸ்லீம் தேசமாக்க முயன்றார்.
பின் வந்த, பிரிட்டிஷ் ஆட்சியில், வழக்கம் போல, தவறாக உச்சரித்து, "அலகாபாத்" (Allahabad) என்று பெயர் மாற்றப்பட்டது.

அதே பெயரை 2018AD வரை சுதந்திர இந்தியாவும் வைத்துக்கொண்டது.
இந்த பிரயாகை என்ற அலகாபாத் நகரத்தில், 12 வருடத்திற்கு ஒரு முறை 'கும்ப மேளா' என்ற ஆச்சர்யமான விழா இன்று வரை நடக்கிறது.


மஹாபாரத சமயத்தில்,
காசி ராஜன் தன் 3 மகள்களுக்கு சுயம்வரத்தை காசியில் நடத்தினார்.

அப்போது, பீஷ்மர், சத்யவதி மகன் 'விசித்ரவீர்யன்' சார்பில் வந்து, அனைத்து அரசர்களையும் தோற்கடித்து "அம்பா, அம்பாலிகா, அம்பிகா" என்ற 3 மகள்களையும் தன் குரு தேசத்திற்கு கொண்டு சென்று, குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' மனம் முடிக்க நினைத்தார்.

அம்பா என்ற பெண், தான் சால்வ தேச (ராஜஸ்தான்) அரசனை மணக்க ஆசை கொண்டிருந்ததாக சொல்ல,
பீஷ்மர் 'அம்பா'வை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சால்வ மன்னன் முன் விட்டு சென்றார்.
ஆனால்,
சால்வ மன்னன் (Rajasthan) 'அம்பா'வை பீஷ்மரிடம் தோற்றதாலும், அவரே வந்து விட்டது அவமானம் என்றும் காரணங்கள் சொல்லி விலகினான்.

அம்பா "இனி உயிர் வாழ்வது வீண்" என்று, "அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மர் மரணத்திற்கு காரணம் ஆவேன்" என்று சபதம் செய்து, தீயில் விழுந்து உயிர் நீத்தாள். சிகண்டியாக பிறந்தாள்.

அம்பாலிகாவுக்கு "பாண்டு" பிறந்தார். 
பாண்டு "குந்தி" மற்றும் "மாத்ரி"யை மணந்தார்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். யுதிஷ்டிரர் மூத்தவர்.

அம்பிகாவுக்கு "திருத்ராஷ்டிரன்" பிறந்தார்.

விசித்ரவீர்யனுக்கு பிறகு, பாண்டு குரு தேசத்தை ஆட்சி செய்தார்.

பாண்டவர்களின் தந்தை "பாண்டு" குரு தேச அரசர்களின் பலத்தை, புகழை பரப்ப, திக் விஜயமாக, காசி தேசம், மகத தேசம், பௌண்ட்ரக தேசம், சுஹ்ம தேசம் போன்ற தேச அரசர்களை வென்றார்.



பாண்டுவுக்கு பிறகு, குரு தேச அரசனாக, திருத்ராஷ்டிரன் ஆட்சி செய்தார்.
கண் தெரியாத குருடனாக இருந்தாலும், பீஷ்மர், விதுரர் (chief minister) போன்றோர் துணையுடன் ஆட்சி புரிந்தான். 

பாண்டுவின் மைந்தன் யுதிஷ்டிரனுக்கு நியாயப்படி அரசாட்சி கொடுக்க வேண்டும் என்கிற நிலையில், தன் மகன் துரியோதனனுக்கு கொடுக்க ஆசை கொண்டு, மகாபாரத போருக்கு வித்திட்டான்.

வ்ரஜ தேசம், சூரசேனர் என்ற அரசர் ஆண்டு வந்தார்.

வ்ரஜ தேசம், உத்திர பிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்து ஸ்ரீ வ்ருந்தாவனம் வரை உள்ள தேசம். "வ்ரஜ பூமி" என்று சொல்வார்கள்.
இங்குள்ள மக்கள் வ்ரஜ பாஷை பேசுவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோகுலத்தில் வ்ரஜ பாஷை பேசினார்.

பிராம்மண ரிஷிக்கும், ராக்ஷச தாயாருக்கும் பிறந்த ராவணன் தன் தங்கை "கும்பினி"யை 'மது' என்ற ராக்ஷஸனுக்கு மம் செய்தான். 

கோசல தேசத்தில் அருகில் தான், இந்த மது என்ற ராக்ஷஸன் இருந்து வந்தான். 
மது என்ற இந்த ராக்ஷஸன் பிராம்மணர்கள் மீது மரியாதை வைத்து இருந்தான்.
தன் ஆட்சியில் தவம் செய்து கொண்டு இருக்கும் முனிவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.

இவனுக்கு "லவணாசுரன்" என்ற மகன் பிறந்தான்.
இவன் ராக்ஷஸ குணம் நிரம்பியவனாக இருந்ததால், சாதுக்களை வெறுத்தான்.

நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள லவணாசுரன், தவம் செய்யும் முனிவர்களை அப்படியே கொன்று பச்சை மாமிசமாக சாப்பிட்டு, எலும்பை துப்பி விடுவான்.
ச்யவனர் (Chyavana Rishi) என்ற ரிஷி ஸ்ரீ ராமரிடம் சென்று, ராக்ஷஸர்கள் செய்யும் தொந்தரவை பற்றி சொல்ல, ராமரின் தம்பி "சத்ருக்னன்" லவணாசுரனை கொன்றார்.

மது ஆண்ட ஊருக்கு சத்ருக்கனன் அரசன் ஆனார்.
இதுவே இன்றைய மதுரா.

ராமாயண காலத்தில், ராமரின் தம்பி 'சத்ருக்னன்" மது என்ற வனம் இருந்த இடத்தை செப்பனிட்டு, 'மதுரா' என்ற நகரை உருவாக்கினார்.

மஹாபாரத சமயத்தில், இங்கு இருந்த யாதவர்கள்,
"யாதவ, வ்ருஷ்ணி, போஜ" என்று 3 பிரிவாக பிரிந்து இருந்தனர்.

இந்த தேசத்தை வ்ருஷ்ணி குல உக்ரசேனர் ஆண்டு வந்தார்.
இவர் தன் மகள் "தேவகி"யை, யாதவ குல தலைவர் "சூரசேனர்" மகன் "வசுதேவருக்கு" மணம் செய்து கொடுத்தார்.

உக்ரசேனர் மகன் 'கம்சன்' அசரீரி வாக்கினால், தேவகியையும் வசுதேவரையும் மதுராவில் உள்ள ஜெயிலில் தள்ளினான்.
இவர்களுக்கு பிறந்த ஸ்ரீ கிருஷ்ணர் 11 வயதில் கம்சனை கொன்று, மீண்டும் உக்ரசேனரை மன்னனாக்கி, பிரிந்து இருந்த யாதவர்களை ஒன்று இணைத்தார்.

மதுராவில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மாளிகை, முகலாய ஆட்சியில் ஔரங்கசிப்  இடித்து, மசூதியை கட்டினான்.

துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை உயிரோடு கொளுத்த திட்டம் தீட்டினர்.
வாரனாவதம் என்ற ஊரில் இவர்களுக்காக ஒரு மாளிகை கட்டி, இரவில் பாண்டவர்கள் இருக்கும் போது, தீயிட்டு கொளுத்தினான்.
சுரங்கம் வழியாக பாண்டவர்கள், தன் தாய் குந்தியுடன் தப்பித்தனர்.
வாரனாவதம், Barnava என்ற பெயரில் இன்றைய உத்திரபிரதேசத்தில் உள்ளது.

திரௌபதியின் சுயம்வரத்தில், வத்ஸ தேச அரசர் கலந்து கொண்டார்.

திருத்ராஷ்டிரன்,
துரியோதனின் பகைமை உணர்வை குறைக்க, பாண்டவர்களையும் சமாதானம் செய்ய, தன் குரு தேசத்தில் உள்ள ஒரு மேற்கு பகுதியை பாண்டவர்களுக்கு ஆட்சி செய்ய கொடுத்தார்.
இந்த மேற்கு பகுதியில் இருந்த குரு தேசத்தின் பெயர் "குருஜாங்கள தேசம்". இந்த தேசத்தில் உள்ள காண்டவ வனம் இன்று ஹரியானா (Haryana) என்ற பெயருடன் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசம் வெறும் காடாக இருந்தது.
இதை வாழும் தேசமாக்கி, இந்த்ரப்ரஸ்தம் என்ற தலைநகரையும் உருவாக்கினார், யுதிஷ்டிரர்.

இந்த 'இந்த்ரப்ரஸ்தம்' பிற்காலத்தில் டெல்லி நகர் (Delhi) என்று பெயர் பெற்றது.
இன்று இந்தியாவின் தலைநகராகவும் உள்ளது.

இந்த குருஜாங்கள தேசத்தில் உள்ள ஓரு ஊரை, திருத்ராஷ்டிரன் த்ரோணருக்கு தானமாக கொடுத்தார்.
இந்த ஊர், குருகிராமம் (Gurgaon) என்ற பெயர் பெற்றது.
இந்த ஊரில் தான், பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் குரு "துரோணரிடம்" கல்வி கற்றனர்.

முஸ்லீம் ஆட்சிக்கு பிறகு, இந்த நகரம் குர்கான் "gurgaon" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அதன் உண்மையான பெயருக்கு மாற்றப்பட்டது.

மறைக்கப்பட்ட ஹிந்து கலாச்சாரத்தை மீட்க, முதல் படியாக, 2016ஆம் ஆண்டு, ஹரியானா முதல்வர், சட்டம் திருத்தம் கொண்டு வந்து, "குருகிராம்"(Gurugram) என்ற சரித்திர பெயரை மீட்டார். 

மஹாபாரத காலத்தில், கோசல தேசத்தின் பகுதியை பலர் ஆண்டனர். "ப்ருஹத்பாலா" என்பவர் ஒரு கோசல பகுதியின் அரசனாக இருந்தார்.
இவர், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

ப்ருஹத்பால அரசன், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டார்.
மற்ற கோசல அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.



மஹா பாரத போரில்,
13ஆம் நாள் யுத்தத்தில், துரோணர் வகுத்த சக்ரவ்யூஹத்தை உடைத்து, அபிமன்யு சென்றான்.
தனி ஒருவனாக அங்கிருந்த மஹா ரதர்களை எதிர்த்து போரிட்டான்.
எதிர்த்த கோசல அரசன் "ப்ருஹத்பாலனை" அர்ஜுனனின் மகன் அபிமன்யு கொன்றான்.

மஹா பாரத போரில், "வத்ஸ தேச அரசர்" பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார்.

போர் முடிந்த பின், யுதிஷ்டிரரின் அஸ்வமேத யாகத்திற்கு, திக்விஜயமாக புறப்பட்ட அர்ஜுனன், கோசல தேசத்தை வீழ்த்தி யுதிஷ்டிரரின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

பரவாசுதேவனே கர்த்தா

ஆத்மா உள்ளே இல்லை என்றால், உடலுக்கு பிணம் என்று பெயர்.
இந்த ஆத்மா உள்ளே இருக்கும் வரை நாம் ஜீவிக்கிறோம்.

ஆத்மா யாருக்கும் அடிமைப்பட்டவன் இல்லை என்பதாலேயே, நாம் வாழ ஆசைப்பட்டாலும், ஆத்மா கிளம்ப முடிவெடுத்து விட்டால், மரணம் வந்து விடுகிறது.

பரவாசுதேவனின் 5 வித அவதாரங்களில், அந்தர்யாமி என்ற அவதாரமே இந்த ஆத்மா. ஆத்மா உள்ளே இருக்கும் வரை பெருமை, புகழ், பணம் கிடைக்கிறது.

ஆத்மா ஒன்று இருப்பதால் தான், புத்தி வேலை செய்கிறது,
ஆத்மா ஒன்று இருப்பதால் தான், உடல் உழைக்கிறது.
ஆத்மா ஒன்று இருப்பதால் தான், கண் பார்க்கிறது என்ற உண்மையை அறியாதவர்கள் (அஞானிகள்), ஆத்மா தான் செய்கிறான் என்பதை மறந்து, நான் செய்கிறேன், என் புத்தி கொண்டு செய்கிறேன் என்று சுய பெருமை பேசுகிறார்கள்.

நான் செய்கிறேன் என்ற அகம்பாவம் வந்ததினாலேயே, பாவம், புண்ணியம் சேர்ந்து விடுகிறது. மறு பிறவிக்கு வித்திடுகிறது.





ஆத்மா தான் புத்தியை எழுப்பிகிறார், கண்ணை பார்க்க செய்கிறார்.
அவர் கிளம்பி விட்டால், அனைத்தும் அடங்கி விடும் என்ற உண்மையை அறிந்தவனே ஞானி எனப்படுகிறான்.

வாசுதேவனே கர்த்தா (செய்கிறார்) என்ற உண்மையை உணர்ந்து, புகழோ, இகழ்வோ ஏதுவாக இருந்தாலும், ஆத்மாவாகிய அந்த நாராயணனே செய்கிறார் என்று கர்வப்படாமல் அமைதியாக இருக்கிறான் ஞானி.
கர்மாவை ஈஸ்வரன் செய்கிறார், என்ற ஞானம் உள்ள ஞானி, செய்யும் கர்மாக்களை அந்த ஈஸ்வரனே எடுத்துக்கொள்வதால், பாவம் புண்ணியம் இரண்டையும் சேர்க்காமல் வாழ்கிறான்.
அந்த பிறவி முடிந்தவுடன், பாவ புண்ணியம் இல்லாததால், மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார் பெருமாள்.

நாராயணனே செய்கிறார், ஆதலால், பலன்களும் அவருக்கே என்ற எண்ணத்துடன் எந்த கர்மாவையும் செய்தோமானால், அந்த கர்மா அவனை பந்தப்படுத்தாது.
அவன் செய்யும் அனைத்து கர்மாவும் (செயல்களும்) அவனுக்கு மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

Friday 17 November 2017

பிராம்மணன் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்


பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்வதால்,
தனக்காகவும், மற்ற அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்.


வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு, ஐயப்ப மலை செல்பவர்கள் உணவு, ஒழுக்கம், இறை வழிபாடு, ஆடை என்று அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருப்பதால், ஜாதி பேதம் இல்லாமல், அந்த மாலை போட்ட சமயத்தில், அனைவரையும் "சாமி" என்றும் "ஸ்வாமி" என்றும் மரியாதையுடன் அழைக்கிறோம்.

மற்ற ஜாதியில் பிறந்து இறை வாழ்க்கை வாழ்பவர்கள், மகான் என்றும் சொல்லி அனைவரும் வணங்குகிறோம்.

ப்ராம்மணர்கள் வாழ்நாள் முழுவதுமே இப்படி உணவு கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆடை, வழிபாடு அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருந்ததால், பொதுவாகவே ப்ராம்மணனை எப்பொழுதுமே, "சாமி" என்றனர்.

இன்றைய பிராம்மணன் இந்த மதிப்பை இழக்க காரணம் அவர்களே காரணம் ஆகின்றனர். ஒழுக்கம் இல்லாத, உணவு கட்டுப்பாடு இல்லாத, வழிபாடு இல்லாத வாழ்க்கை வாழும் பிராம்மணன் மதிப்பை இழக்கிறான்.

மற்றவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியாமல் போனாலும், பிராம்மணனை மற்றவருக்காகவும் சேர்த்து தினமும் பிரார்த்திக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறான்.

இதற்கு சந்தியா வந்தனம் பிராம்மணனின் கடமையாக விதிக்கப்படுகிறது. விதிக்கப்பட்டது என்பதாலேயே, இதை செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிகிறது.

இன்றைய பிராம்மணன் குடும்பத்தில், பஞ்சாத்ரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பிராம்மணன் என்ற போர்வையில் வாழ்கிறான்.

சந்தியா வந்தனம் செய்வது பிராம்மணர்களிடையே குறைந்து வருகிறது. அவன் தனக்காகவும், பிறருக்காகவும், குழந்தைகள், பிராம்மண பெண்கள் உள்பட,  அனைவருக்காகவும் செய்ய வேண்டிய இந்த கடமையை முடிந்தவரை செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வருத்தப்படவாவது வேண்டும்.

இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்தால், அதன் அர்த்தம், அதன் நோக்கம், சந்தியா வந்தனம் செய்ய ஆசை தூண்ட வாய்ப்புள்ளது.




சந்தியா வந்தனத்தில், முடிக்கும் போது கூட, பகவானிடம் பிராம்மணன் தனக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனை செய்வது போல வருகிறது.

கடைசியாக சொல்லும் ரக்ஷை என்ற பிரார்த்தனையில்,

"இப்பொழுது எங்களுக்கு சந்ததியுடன் கூடிய சௌபாக்யத்தை அருள வேண்டும்.
கெட்ட கனவின் நிமித்தத்தையும், பலனையும் விலக்கி அருள வேண்டும்.
சூரிய நாராயணா பகவானே! எல்லாப் பாவங்களையும் விலக்கி அருள வேண்டும்.
எது உயர்ந்த நன்மையோ அதை எங்களுக்கு கூட்டிவைத்து அருள வேண்டும்."

அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: சௌபகம் !
பரா துஷ்வப்னியஹும் ஸூவ !
விச்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸூவ !
யத் பத்ரம் தன்ம ஆஸூவ !!

இப்படி தினமும் மற்றவர்களும், தானும் நலமாக இருக்க பிரார்த்திக்க சொல்கிறது.

சுயநலம், அலட்சியம், அர்த்தம் புரிந்து கொள்ள ஆசையின்மை இவையெல்லாம் சேர்ந்து, பிராம்மணன் தனக்கு விதித்த கடமையை செய்யாமல் காலம் கழிக்கிறான்.

முடிந்த வரை பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆசை பட வேண்டும். பிறருக்காகவும் பிரார்த்ததனை செய்ய கொடுத்த வாய்ப்பை பிராம்மணன் தன் வாழ்க்கையில் தவற விட கூடாது. செய்யாவிட்டால், பிராம்மணனாக பிறவி கிடைத்ததை வீணாக்குகிறான்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

பிரம்மாவின் ஆயுளும், மனித ஆயுளும்

காலத்தை வைத்து ஒரு பார்வை:

பிரம்மாவினால், படைக்கப்பட்ட 'வைவஸ்வதன்' 7வது மனு அரசராக, மனித சமுதாயம் வாழ தர்மங்களை சொல்கிறார்.
மனு தர்மம் என்பது இன்றும் பிரஸித்தம்.



இந்த சமஸ்க்ரித சொல்லான 'மனு'வை தமிழர்கள் "மனிதன்" என்கின்றனர். இதில் இருந்தே சமஸ்க்ரித மொழியில் இருந்து தமிழ் உருவாகி உள்ளது என்று தெரிகிறது.
வழக்கம் போல, மற்றவர்களிடம் திருடியே உருவாக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆங்கிலேயே மொழி "Man" என்று பச்சையாக  பயன்படுத்துகிறது.

ப்ரம்மா, உலகை படைத்த பின், தன்னுடைய ஒவ்வொரு நாளும், இது போன்று 14 மனு அரசர்களை உருவாக்கி, மனித குலத்தை ஆள செய்கிறார்.

இன்றைய பொழுதில் ப்ரம்மாவிற்கு 50 வயது முடிந்து, தன் 51வது வயதின் முதல் நாளில் இருக்கிறார்.

இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்கள் வரிசையில், ஸ்வாயம்பு என்ற முதல் மனுவில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.



இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
இவர் ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். இதில் 3 யுகங்கள் முடிந்து, நாம் கலி யுகத்தில் இருக்கிறோம். கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

நாம் எறும்பை பார்த்து "ஒரு நாள் வாழும், அற்ப வாழ்க்கை கொண்ட ஜீவன்" சொல்வது போல, ஒரு மனு அரசரின் காலத்தை கணக்கிட்டு பார்க்கும் போதே, மனு அரசரின் பார்வையில், நம் 100 வயது கால பரிபூரண வாழ்வை பார்த்தாலும் கூட, நம்மை பார்த்து, "அற்ப ஜீவன்கள்" என்று தோன்றலாம்.

எறும்பு கூட்டம் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டாலும், அந்த ஒரு நாள் வாழும் கூட்டத்தை மதிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையை செய்வது போல, நாம் போடும் கூச்சலை, இந்த எறும்பு போடும் கூச்சல் போல மதிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

காலத்தை வைத்து பார்க்கும் போது, ஒரு மனுவுக்கே இப்படி தோன்ற வாய்ப்பு இருக்கும் என்றால், இப்படி 14 மனு அரசர்கள் ஆண்ட பின், பிரம்மாவுக்கு ஒரு பகல் மட்டும் முடிகிறது.

இப்போது உள்ள பிரம்மா தன் 100 வயதில் 50 வயது முடித்து இருக்கிறார். பிரம்மாவுக்கு, மனு அரசர்களின் காலமே "அற்ப வாழ்க்கை" என்று தோன்ற வாய்ப்பு உள்ளது.
மனிதர்களின் வாழ்வு அவர் பார்வையில் மதிக்கத்தக்கதா என்று கூட சொல்ல இயலாது.



ராவணன், ஹிரண்யகசிபு போன்ற மகா பலசாலிகள், பிரம்மாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கே, கடும் தவங்கள் பல வருடங்கள் இருக்க வேண்டி இருந்தது. ஏன் இவர்கள் கடும் தவம் இருந்தார்கள் என்று நமக்கு இப்பொழுது கொஞ்சம் புரிய வாய்ப்பு உள்ளது.



இப்பொழுது உள்ள பிரம்மாவுக்கு 100 வயது முடிந்த பின், நித்யமாக உள்ள பரவாசுதேவன் "நாராயணன்" மீண்டும் பிரம்மாவை உருவாக்கி உலகை நடத்த ஆணை இடுகிறார்.

ஒரு நாள் பிரம்மாவும் மறைவார் என்பதை பார்த்து, "அற்ப வாழ்க்கை" என்று நிலையான பரவாசுதேவன், பிரம்மாவை பார்த்து சொல்ல கூட வாய்ப்பு உள்ளது.

பிரம்மாவை பார்ப்பதற்கே, ராவணன், ஹிரண்யகசிபு எத்தனை முயற்சி செய்தார்கள் என்று தெரிகிறது.

பிரம்மாவின் ஆணையில், இப்பொழுது ஆளும் "வைவஸ்வத" மனுவை, நாம் இருக்கும் காலத்திற்குள், ஏதாவது செய்து அவர் கவனத்தை நம் பக்கம் திருப்பி கொண்டு வந்து, அவரை நம் கண் எதிரே காட்சி கொடுக்க வைக்கவே எத்தனை முயற்சி செய்ய வேண்டும்?

காலம் கடந்து இருக்கும் பரவாசுதேவனை, உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, "எங்கே, கடவுளை காட்டு?" என்கிறான் நாத்தீகன்.

ஊரில் உள்ள கலெக்டரை பார்க்கவே, நாம் எத்தனை முயற்சி செய்து அவர் கவனத்தை திருப்ப வேண்டி இருக்கிறது.

இப்படி இருக்க, நாத்தீகனுக்கு இவன் பாட்டுக்கு கும்மாளம், குடி என்று வாழ்க்கையை நடத்தி விட்டு, "கடவுளை காட்டு" என்பானாம். பரவாசுதேவன் சரி என்று சொல்வதற்குள்ளாகவே, பிரம்மாவுக்கு ஒரு நொடி ஆகி விடுமே?.
பிரம்மாவின் ஒரு நொடி கணக்கு போட்டாலே, ஒரு யுகமே முடிந்து விடுமே?

நாம் கூப்பிட்டு அவர் சரி என்று வந்தால், அவர் கணக்கு படி, அவர் வருவதற்குள், நாம் இறந்து, யூகமே முடிந்து விடுமே?

இதையெல்லாம், கருத்தில் கொண்டு தான், மனிதர்களை பார்த்து, பக்தி செய். தர்மத்தில் இரு. பரவாசுதேவனை காண ஆசைப்படு என்று சொல்லி வைத்தார்கள்.

நாம் வைக்கும் அன்பு என்ற பக்தி ஒன்றே, ஒரு ஜென்மத்தில் அவர் இஷ்டப்பட்டு, நமக்கு முன் காட்சி கொடுக்க வைக்கும்.

நாம் இந்த பிறவியில் நாத்தீகனாகவோ, பொய் மதங்களை நம்பி ஏதோ ஒன்றை தெய்வம் என்று வணங்கினாலோ, மனுவை பொறுத்தவரை, பிரம்மாவை பொறுத்தவரை, இவையெல்லாம் ஒன்றும் இல்லாத விஷயம்.

மறு பிறவிக்கோ குறைவே இல்லை. காலமோ எல்லை இல்லாதது.
அவர்களை பொறுத்தவரை, பரவாசுதேவனிடம் பக்தி செய்யும் வரை இந்த மறு பிறவி கடலில் தள்ளிக்கொண்டே இருப்பர்.

எவன் இந்த பக்தி என்ற ஆயுதம் கொண்டு, பரவாசுதேவனின் கவனத்தை திருப்பி அவரின் காட்சியை பெறுகிறானோ, அவன் பரவாசுதேவனோடு ஐக்கியமாகிறான்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், "உலகை பற்றி கவலை படாதே.. நீ உன் கடமையை செய். பக்தி செய்" என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லி இருப்பார் போலும்.

Sunday 12 November 2017

ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாறுவது


சந்திரகுப்த மௌரியன், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் கைப்பற்றிய பகுதியை, மீண்டும் கைப்பற்றினான்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆண்ட இந்த அரசன், தன் மகன் பிந்துசாராவுக்கு ராஜ்யத்தை கொடுத்து விட்டு, ஜைன மதத்தில் சேர்ந்தான்.



பிந்துசாராவின் மகன் உலக புகழ் பெற்ற வீரனாக இருந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி.
265BCல் கலிங்க போரில் வெற்றி பெற்ற பின், ஒரு புத்த பிக்ஷுவின் பேச்சை வேத வாக்காக எடுத்து, சமாதானம் பொறுமை அன்பு என்ற வார்த்தையில் மயங்கி பௌத்த மதத்தை ஏற்றான்.

ஒரு அரசன் நாட்டை காக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். க்ஷத்ரியனாக இருக்க வேண்டும். சந்யாசி போன்று பேச கூடாது. வீரர்களையும் போர் பயிற்சி குறையாதவர்களாக, வீரர்களாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும்.

பௌத்த மதத்தை ஏற்ற அசோக சக்கரவர்த்தி, தன் குடையின் கீழ் இருந்த ஆப்கான் முதல் பாகிஸ்தான், இந்தியா முழுவதும் இருந்த அரசர்களை பௌத்த வழியில் இழுத்தான்.

பௌத்த மதம் மிக வேகமாக பரவியது. எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள். யார் வாயிலும் "புத்தம் சரணம் கச்சாமி" என்ற வார்த்தைகள்.
இது போதாது என்று வேத தர்மத்தை தன் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு புது புது மதங்கள் உருவானது.

காபாலி என்ற கடவுளின் பெயரால், நர பலி கொடுக்கும் கூட்டம் உருவானது.
அரசனே பௌத்த மதம் என்று போனதால், போர் வீரர்கள் புத்த கோவில் கட்டவும், காவல் காக்கவும் ஈடுபடுத்த பட, போர் பயிற்சி குறைந்த, வீரம் குறைந்த வீரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர்.

இப்படி பௌத்த மதம் பாரதத்தில் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவிற்கு மேற்கு திசையில் இரு புது மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தன.

ஒரு மதம் வன்முறை மூலமாக தன்னை பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.
மற்றொரு மதம், பௌத்த மதத்தை போல அன்பு, இரக்கம் என்ற போர்வையில் பணத்தை கொடுத்தாவது பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.

சுமார் 788 AD - 820 ADல் இறைவனே இந்த வேதத்தை, பாரதத்தை காப்பதால், பௌத்தம் தலை விரித்து ஆடும் பாரதத்தை, வேத மார்க்கத்தில் இருந்து விலகி உருவான பொய் மதங்களை ஒடுக்க சிவபெருமானே "ஆதி சங்கராக" அவதரித்து 70க்கும் மேற்பட்ட பொய் மதங்களை ஒடுக்கினார். மீண்டும் வேத மார்க்கத்தை ஒளிர் விட செய்தார்.

சந்திரகுப்த மௌரியனும், அசோக சக்கரவர்த்தியும் விதைத்த பௌத்த விதைகள், பிற் காலத்தில் வந்த அரசர்களையும், வீரர்களையும் கோழைகள் ஆக்கி விட்டது.

இந்த 2 ஹிந்துக்கள் மதம் மாறியதன் விளைவு, கோடீஸ்வரர்களாக இருந்த நாம், 947 ADல் ஆரம்பித்து, 1947 வரை இந்திய தேசமும், வாழும் ஹிந்துக்களும் இந்த புதிய உருவாக்கப்பட்ட மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவில் கால் ஊன்றி, மத மாற்றம், கொள்ளை, கற்பழிப்பு, பெரிய பெரிய கோவில்களை இடித்து அவர்கள் வழிபடும் ஸ்தலங்களாக மாற்றுவது, அடிமை படுத்துவது, கலாச்சாரத்தை கெடுத்து தன் மாமிச மது கலாச்சாரத்தை புகுத்துவது என்று அனைத்தையும் நம் முன்னோர்கள் அனுபவிக்க வித்திட்டது.



பௌத்த மதம் ஆப்கான் தாண்டி, ஈரான் வரை பரவி இருந்தது. ஹிந்துக்களாக இருந்த ஈரானியர்கள், 900AD சமயங்களில் பௌத்த மதத்தை தழுவி இருந்தனர்.

947ADல், அமீர் சூரி என்ற ஈரான் அரசன் பௌத்த மதத்தில் இருந்தான்.
இந்த சமயத்தில், புதிதாக உருவாகி இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசர்கள் இந்தியா பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஸபாரிட் பரம்பரை (Saffarid Dynasty) சேர்ந்த இஸ்லாமிய படையை எதிர்க்க வேண்டிய நிலை அமீர் சூரிக்கு உருவானது.

ஒரு அரசன் அன்பு இரக்கம் என்று பௌத்த மதத்தில் இருப்பதை விட மதத்தை பரப்ப ஆயுதம் எடுக்கும் இவர்கள் மதம் பிடித்து போனது.
தான் பௌத்தனாக இருந்த போதிலும், தன் மகனுக்கு "முகமது பின் சூரி" என்று இஸ்லாமிய பெயர் வைத்தான் அமீர் சூரி.

தன் வரை பௌத்தனாக இருந்துவிட்டாலும், இவன் மகன் முகமது பின் சூரி இஸ்லாமியனாக வளர்ந்தான். முகமது பின் சூரி தன் மகன் "அபுஅலி இபின் முகம்மது"வை ஒரு இஸ்லாஸ்மியனாக வளர்த்தான்.

அபுஅலி, தான் பௌத்த குடும்பத்தை சேர்ந்தவன், அதற்கு முன் ஹிந்துவாக இருந்தவன் என்ற நினைவு இன்றி, தன் பௌத்த தேசமாக இருந்த ஈரான் தேசத்தை முழுவதையும், இஸ்லாமிய தேசமாக மாற்றினான். மசூதிகள் கட்டினான்.
மதராசாக்களை நியமித்தான். மத வெறி உருவானது.

ஒருவன் மதம் மாறினால், அவனுக்கு பின் வரும் அவன் சந்ததியினர் என்ன அட்டூழியம் செய்வார்கள் என்பது இவர்கள் ஹிந்துக்களுக்கு செய்த அட்டூழியத்தை கண்டே தெரிந்து கொள்ளலாம்.

இவன் மதம் மாறியதால், இவன் பிள்ளைகள், பின் வந்த சந்ததியினர்கள் ஹிந்துக்களுக்கு செய்யாத கொடுமைகள் இல்லை. ஈரான், ஆப்கான் போன்ற தேசங்கள் இஸ்லாமிய தேசங்கள் ஆகின.

அமீர் சூரி தன் மகனுக்கு இஸ்லாமிய பெயர் வைத்து, புதிதாக "கோரி பரம்பரை" என்ற முதல் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு உருவானது.

இவன் பரம்பரையில் வந்தவனே "முகம்மது கோரி". இவன் ஒருவனே 1000க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஹிந்து கோவில்களை சிந்து தேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற தேசங்களில் இடித்தான்.

கொள்ளை அடித்த தங்கங்களை கொண்டு ஆப்கான் நாட்டை இஸ்லாமிய தேசமாக்கி, சேர்த்தான்.

ஹிந்து பெண்களை தன் தேசங்களுக்கு எடுத்து சென்று விற்று விட்டான். எதிர்ப்பவர்களை கொன்று, பயந்தவர்களை மதம் மாற்றினான்.

மதம் மாறிய அமீர் சூரி என்ற ஒருவனால், அடுத்த 1000 வருடங்கள் உலகமே ரத்தத்தில் புரண்டது.

கோரியின் காலம் முடிந்து பின் வந்த அலாவுதீன் கில்ஜி டெல்லியை கைப்பற்றி இருந்தான்.
ஒரு சமயம் குஜராத் தேசத்தை நோக்கி போர் செய்த போது, அங்கு இருந்த "மாணிக்" என்ற ஒரு ஹிந்துவை தன் அடிமையில் ஒருவனாக விலைக்கு வாங்கினான்.



 இந்த மாணிக் என்ற ஹிந்து, போர் கலையில் வீரனாக இருப்பதை கண்டு அலாவுதீன் கில்ஜி இவனை அடிமை தனத்தில் இருந்து விலக்கி, தன் படைத்தளபதியாக ஆக்கினான்.
இதனால் கவரப்பட்ட மாணிக், தன்னை இஸ்லாஸ்மியனாக மாற்றிக்கொண்டான்.

மாலிக் காபுர் என்ற பெயரில், அலாவுதீன் கில்ஜியின் கட்டளையின் பெயரில், இவன் ஆந்திராவில் ஒரு லட்சம் படையுடன் சென்று அங்கு இருந்த ஹிந்து அரசனை தோற்கடித்து, ஊரையே கொள்ளை அடித்தான்.

கோவில்களை இடித்து, கோஹினூர் வைரத்தை காளியின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு, பின்னர் மதுரை மீது படை எடுத்து, அங்கு இருந்த மீனாக்ஷு கோவிலை முற்றுகை இட்டான்.

உள்ளே புகுந்து, லிங்கமாக இருக்கும் சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்தில், வேறொரு லிங்கத்தை இடித்து கீழே தள்ளி விட்டு கோவிலை நாசமாக்க முயன்றான். அடுத்த 60 வருடங்கள், மீனாக்ஷி கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு பூஜை இல்லாமல் தடைபட்டு போனது.

பாண்டிய மன்னனின் தொடர் போராலும், டெல்லியில் இருந்து மேலும் படைகள் கிடைக்க சிரமம் ஏற்பட, அங்கிருந்து ஸ்ரீ ரங்கம் நோக்கி சென்று, அங்கு இருந்த ஸ்ரீ ரங்கநாதர் கோவிலை முற்றுகை இட்டான்.

அங்கு இருந்த 10000 வைஷ்ணவர்களை கொன்றான். உத்சவர் ஸ்ரீ ரங்கநாதரை எடுத்து டெல்லிக்கே சென்று விட்டான். அங்கு தன் மகள் சுரதானிக்கு பொம்மை என்று கொடுத்து விட்டான். பின்னர், சுரதானி ஸ்ரீ ரங்கனாதானுக்கு பக்தை ஆகி, துலுக்க நாச்சியார் ஆகி விட்டாள் என்று பார்க்கிறோம்.

மதம் மாறியவன் செய்த செயல்களை திரும்பி பார்க்கும் போது, கோஹினூர் வைரம் முதல், கோவில்கள் நாசமாக்கப்பட்டதும், ஹிந்துக்கள் பலர் உயிர் இழக்க காரணமானதும், மதம் மாறி இன்று முஸ்லிமாகவும், கிறிஸ்தவனாகவும் திரியும் ஹிந்துக்களும், நாம் ஏழைகள் ஆனதற்கும், வளரும் நாடு என்று ஆனதற்கும் என்ன காரணம் என்ற உண்மை புரியும்.



ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - தானும், தன் ஹிந்து சொந்தங்களும் மதம் மாறுவது. இதுவே ஹிந்துக்களுக்கு ஒரு பாடம்.

Tuesday 7 November 2017

நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச)


நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார்.



ஐந்து விதமான நீர் உள்ளது :

  1. உலகம் ஒரு நீரால் உருவானது.
  2. மேகத்தில் ஒரு நீர் உள்ளது.
  3. மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது.
  4. பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது.
  5. ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது.


"முதலில் சொன்ன நீர் நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்பது போல தோன்றினாலும், "உலகம் என்று இருப்பதே, இந்த நீரால் தான்".

இரண்டாவதாக சொன்ன மேக நீர், "நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்றாலும், சக்தி உள்ள சில பறவைகள் அந்த மேகம் வரை சென்று, அந்த நீரை பருகும் சக்தி உள்ளதாக இருக்கிறது.


மூன்றாவதாக சொன்ன மழை நீர், நம் அனைவருக்கும் ப்ரயோஜனம் அளிக்கிறது.
ஆனால் குறிப்பிட்ட காலம் வரை. பூமி வரை வந்து விழுகிறது.
இந்த மழை இருக்கும் வரை தான், ப்ரயோஜனம் கிடைக்கிறது.

நான்காவது சொன்ன பூமி நீர், பூமியின் அடியில் உள்ளது.
கொஞ்சம் சிரமப்பட்டு தோண்டினால், இந்த நீர் கிடைக்கிறது.

ஐந்தாவது சொன்ன ஏரி, குளங்களில் உள்ள நீர், யாவருக்கும் கிடைக்கிறது.  ஏரி, குளம் அருகே சென்றாலே கிடைக்கிறது.

மனிதர்களில் சிலர் அந்த பறவை போன்று சக்தி உள்ளவர்களாகவும்,
மழை பெய்யும் சமயத்தில் இருந்தவர்களாகவும்,
இருக்கும் இடத்திலேயே உள்ள நீரை தோண்டி எடுக்கும் சக்தி உள்ளவர்களாயும் உள்ளனர்.
பலர் காலத்தை தவற விட்டவர்களாயும், அத்தனை சக்தி இல்லாதவர்களாயும் உள்ளனர்.

பரம் என்ற வைகுண்டத்தில் இருக்கும் நாராயணன்,  ஜீவனிடம் உள்ள கருணையால், எப்போதும் இருக்க, பரம் என்ற இடத்தில் மட்டும் இருக்காமல், தன்னை பல விதமாக பிரகடனப் படுத்துகிறார்.

தன்னை வியூகம் என்ற பாற்கடலில் விஷ்ணுவாக, ரிஷிகளும் தேவர்களும் காணும் படியாக இருக்கிறார்.
இது மேகத்தில் ஒரு நீர் உள்ளது போல தவ வலிமையும், சக்தி உள்ள சிலருக்கு மட்டுமே பயன். இவர்கள் மட்டுமே சென்று காண முடியும்.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது விபவம் என்ற நரசிம்ஹ, ராம, கிருஷ்ண அவதாரங்கள் செய்தார்,செய்கிறார்.
அவதாரம் நடக்கும் போது பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் பாக்கியசாலிகள். இது மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது போல.

ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக கடவுள் என்ற பெயருடன் உள்ளார். (கடவுள் = கடந்து உள்ளே கவனித்தால் ஒவ்வொரு உயிரிலும் நாராயணன் இருப்பது புலப்படும்)
யோகத்தினால் தன் உள்ளே இருக்கும் அந்த நாராயணனை உள்ளே கடந்து பெரு முயற்சி செய்து சென்று சிலர்  பார்க்கின்றனர் (ஆதி சங்கரர் போன்ற அத்வைதிகள்).
அனைத்து உயிரிலும் இருக்கிறார் என்று உணர்கின்றனர்.
இது பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது போல. 
நாம் நிற்கும் பூமிக்கு அடியில் தான் இருக்கிறது. ஆனால் பெரு முயற்சி தேவைப்படும்.

மூடனும், முரடனும், நல்லவனும், கெட்டவனும்,
சக்தி உள்ளவனும், சக்தி இல்லாதவனும், எவனும் எப்பொழுதும் பார்க்க நின்று கொண்டே இருக்கிறார் அர்ச்ச அவதாரத்தில்.
ஞானமும், பக்தியும் ஒருவனுக்கு இருக்கும் அளவிற்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.
சென்றால் பார்க்கலாம் என்று கோவிலில் இருக்கிறார்.
வீட்டிலும் இருக்கிறார்.
தன்னை அர்ச்சிக்க (பூஜிக்க) விரும்பினால் மூடத்தனமாக அர்ச்சனை செய்தாலும் ஏற்று கொள்கிறார்.
மூடனையும் அறிவாளி ஆக்குகிறார்.
கேட்டதை கொடுக்கிறார்.
திட்டினால் கூட அமைதியாக இருக்கிறார்.
எப்பொழுது கேட்பதை நிறுத்தி விட்டு, உன் பலத்தினால் காப்பாற்று என்று கேட்பான் என்று காத்து இருக்கிறார்.
எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.
ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது. 
முயற்சி செய்யாமலேயே ஒருவன் குளம் இருக்கும் சென்று நீர் குடிப்பது போல, எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.



பாவம், புண்ணியம் இரண்டையும் செய்யாத ஜென்மத்தில், பரம் என்ற வைகுண்டம் ஒரு ஜீவன் அடைகிறான்.

கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? - ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி


"ஹிந்துக்கள் கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
இது ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி.

"இந்த தேகமே நான் என்று இருக்காமல், நாம் இந்த தேகத்தில் குடி இருக்கும் 'ஆத்மா' என்று ஹிந்துக்கள் உணர்ந்து இருப்பதால், இந்த ஜீவ ஆத்மாக்கள் பல விதமான உடம்பில் பிரவேசித்து செயல்பட முடியுமென்றால், ஜீவ ஆத்மாவுக்கு காரணமான, பரமாத்மா, பக்தனுக்காக, ஒரு சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்ய முடியும். பக்தி உள்ளவனுக்கு பரமாத்மா சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்கிறார்.


தான் இந்த உடம்பில் இருந்து விடு பட்ட பின், தான் ஆத்மா மட்டுமே என்று உணர்பவனுக்கு, உருவ வழிபாடு தேவை இல்லை. இதனால், ஹிந்துக்கள் உருவ வழிபாடு், அரூப வழிபாடு இரண்டையும்  ஒப்புக்கொள்கின்றனர்.

எல்லாம் படைத்த கடவுளுக்கு இதை செய்ய முடியாது, இவருக்கு சக்தி கிடையாது, இப்படி வர மாட்டார் என்று மனித புத்தி கொண்டு சொல்வது, இறைவனின் மகத்துவத்தை குறைப்பதாகும்.
மனிதர்களால் எழுதப்பட்ட மதங்கள் இப்படி தான் இறைவனின் தரத்தை தாழ்த்தும்.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள். இறைவனின் மகத்துவத்தை குறைத்து அவமானப்படுத்துபவர்கள் அல்ல. உண்மையை உணர்ந்தவர்கள்.
இந்த காரணத்தினாலேயே, ஹிந்துக்கள் மட்டுமே பிறர் நம்பிக்கையை மடத்தனமாக இருந்தாலும் கேலி செய்ய பொதுவாக விரும்புவதில்லை.