Followers

Search Here...

Showing posts with label 1857. Show all posts
Showing posts with label 1857. Show all posts

Wednesday 14 August 2019

இந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத ஹிந்துக்கள் சந்தித்த பிரிவினை சக்திகள்... தெரிந்து கொள்வோமே

"அரேபிய இஸ்லாமியர்கள்" 947ADல் ஆரம்பித்து "கோரி, மாம்லுக், கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய" என்று 1800AD வரை பாரத தேசத்தை பெரும் சேதத்துக்கு உள்ளாகினர்.
அரேபிய முஸ்லீம்கள் பாரத தேசத்தில் நுழைந்து, சில ஆயிரம் பேர் இன்று வரை இந்தியனாக கூட சிலர் வாழ்கின்றனர். இதை மறுக்க முடியாது.
அவர்கள் நிறம் அவர்களை அடையாளப்படுத்துகிறது.



1720ல் முகலாய அரேபிய முஸ்லிம் ஆட்சி, அழிவை நோக்கி நகர்ந்தது.
"பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்", முகலாய அரேபிய முஸ்லிம்களை அடியோடு டெல்லி, பெங்கால், தமிழகம் போன்றவற்றில் இருந்து அகற்றினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில், (947AD - 1720AD) 800 வருடங்களாக அரேபிய முஸ்லீம்களால், முஸ்லீமாக மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சியில் கஞ்சிக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

800 வருடங்களாகவே நசுக்கப்பட்டு இருந்த ஹிந்துக்கள், ஏழைகளாக வாழ்ந்தார்கள்.



மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திர தேசங்கள் பெரும்பாலும் மராட்டிய ஹிந்து அரசர்களால் வலுவாக இருந்தது.
மேற்கு பாரதம் ஹிந்து ராஜ்யத்தில் இருந்தது.
ஆங்காங்கு இஸ்லாமிய ஆட்சியும் நடந்தது.

ஹிந்து ராஜ்யத்தை அழித்தால் தான், "இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் வரும்" என்று, போர்ச்சுகல், பிரெஞ்ச், பிரிட்டிஷ் அனைவரும் சேர்ந்து கொண்டனர்.

மராட்டியர்களுடன் போர் தொடுத்து முதல் போரில் தோல்வி அடைந்தார்கள் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்.
மீண்டும் 1803ADல் இரண்டாவது முறை, மராட்டிய ஹிந்து ராஜ்யத்தை அழிக்க போர் தொடுத்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.


ஆப்கான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கில்ஜி காலத்தில் இருந்தே தங்கி இருந்த ஒரு ஆப்கான் முஸ்லீம் கூட்டம், "Faiz Talab Khan" என்பவன் தலைமையில், சமயத்தில் தன் சிறு படையை பிரிட்டிஷ்கார படை பக்கம் நிறுத்தியது.
2வது Anglo-maratha போரில், மராட்டிய ராஜ்யத்தில் இருந்த பல  ஹிந்து ராஜ்யங்கள், பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் கைப்பற்றினார்கள்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் "Faiz Talab Khan"க்கு நவாப் (Viceroy) என்ற பட்டத்தை கொடுத்து, தாங்கள் கைப்பற்றி இருந்த ஹாயானாவில் உள்ள "பட்டோடி" என்ற ஊரையும் அதை சுற்றி உள்ள 40 கிராமங்களையும் 1804ADல் நிர்வாகம் செய்து கொள்ள பிச்சை போட்டனர்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் Faiz Talab Khan "Nawab of Pataudi" என்று அழைக்கப்பட்டான். 
மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யம் அழிய, உதவி செய்த இந்த ஆப்கான் முஸ்லீம் (nawab of pataudi) குடும்பம் இன்று இந்திய ப்ரஜைகள்.

இவர்கள் நாங்கள் தான் "உண்மையான முஸ்லீம்கள்" என்று சொன்னால் கூட ஏற்க தான் வேண்டி இருக்கிறது.


முகலாய அரேபிய 'முஸ்லீம்' ஆட்சியை வேரோடு அறுக்க, பிரிட்டிஷ் 'கிறிஸ்தவர்கள்', பிரெஞ்ச், போர்ச்சுகல் போன்றவர்கள் துணையுடன், விஜயநகர 'ஹிந்து' சாம்ராஜ்யத்தின் துணையையும் பெற்று அழித்தனர்.

(947AD - 1720AD) 800 வருடங்கள் பயத்தால், பதவியால், இஸ்லாமுக்கு மாறி இருந்த அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆனார்கள்.

மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யத்தை, ஆப்கான் முஸ்லீம்கள் துணை செய்ய, பிரெஞ்ச் கிறிஸ்தவர்களின் துணை கொண்டு மூன்றாவது முறை செய்த போரில் வெற்றி கண்டனர்.

947ADல் அரேபிய இஸ்லாமியர்கள் உள்ளே நுழைந்து, ஹிந்துக்களை தாக்க, ஹிந்துக்களாக இருந்த பொது மக்கள் ஏழைகள் ஆனார்கள்.

1720ADகளில் அரேபிய இஸ்லாமியர்களை, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் துணை கொண்டு அழித்து, கோரி, கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய என்று தொடர்ந்து கொண்டிருந்த அரேபிய இஸ்லாமிய ஆட்சியை வேரோடு அறுத்து, அரேபிய முஸ்லீம்கள் அழிக்கப்பட்டனர்.

1800ADகளின் ஆரம்பத்தில், மராட்டிய போன்ற ஹிந்து ராஜ்யங்களை அழிக்க, மீதம் இருக்கும் சில குட்டி முஸ்லீம் அரசர்கள் துணை கொண்டு, பெரும் ஹிந்து ராஜ்யங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் கிறிஸ்தவர்கள்.

1857ADல், அரேபிய முஸ்லீம்கள் ஒருவர் கூட இல்லை.
அவரவர்கள் அவர்கள் ஊருக்கு போய் விட்ட நிலையில்,
900 வருடங்களாக ஏழையாக போய் இருந்த ஹிந்து பொது மக்களுடன், அரேபியர்களால் முஸ்லீமாக மதம் மாறியும் 100 வருடங்களாக கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் சிக்கிய பாரத மக்கள், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமை வேலை செய்ய ஆரம்பித்தனர்.

கிறிஸ்தவர்கள், 
"ஹிந்துவை அழிக்க இஸ்லாமியனை",
"இஸ்லாமியனை அழிக்க ஹிந்துவையும்"
பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.

அரேபிய ஆட்சி காலத்தில், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்தவர்கள், 1720ADக்கு பின், 100 வருடங்களாக, கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் தலையெடுக்க, பிழைப்புக்கு கிடைத்த வேளைகளில் நுழைந்தனர்.






கிறிஸ்தவ பிரிட்டிஷ் ராணுவத்தில், மதம் மாறி இருந்த இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வேலைக்காக  சேர்த்தனர்.
"கிறிஸ்தவர்களை எதிர்க்கும்  ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை" ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை வைத்தே சண்டையிட செய்தனர்.

அப்போது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "என்பீல்டு வகை துப்பாக்கிகளுக்கு" வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன.
இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது.

இந்த உறைகள் "மாட்டுக் கொழுப்பு" மற்றும் "பன்றிக் கொழுப்பினால்" ஆனவை என்று தகவல் பரவியது.

இது "இந்து" மற்றும் "முஸ்லிம்" சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர்.

இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர்.
இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே (Mangal Pandey) என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில், தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.
அடுத்த 100 வருடங்கள் ஹிந்துக்கள், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்த ஹிந்துக்கள் "கிறிஸ்தவ ஆட்சியை" எதிர்த்தனர்.


இதற்கிடையில் பிரிட்டிஷ்காரர்கள் ஜெர்மனியுடன் மோத, இரண்டு முறை உலக போர் மூண்டது..
பெரும் சவாலை தங்கள் நாட்டில் எதிர்கொண்டு இருந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள், இந்தியாவில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல், ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்தனர்.

"விடுதலை கிடைக்க போகிறது" என்ற நிலை வந்ததும்,
"முஸ்லீமாக 800 வருடங்களாக வாழும் தங்களுக்கு தனி இடம் தேவை" என்று ஜின்னா சொல்ல, அதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட,
காந்தி, பாரத தேசத்தின் பெங்கால் தேசத்தின் ஒரு பகுதியை, சிந்து தேசத்தை 
"இஸ்லாமிய தேசமாக மாற்றி கொள்ள" அனுமதித்தார்.
நேருவை "இந்திய நாட்டுக்கு பிரதமராக" இருக்க செய்தார்.

'சிந்து தேசத்தில் இருந்த ஹிந்துக்கள்' கலவரத்தில் இறந்தும், பலர் இந்தியா என்று பிரிக்கப்பட்ட பாரத தேசத்தில் குடி பெயர்ந்தனர்.

அதே போல,
பல லட்சம் முஸ்லீம்கள் சிந்து தேசத்துக்கும், இன்றைய பங்களாதேஷ்க்கும் குடி பெயர்ந்தனர்.

ஜின்னா "பாகிஸ்தான், பங்களாதேஷ் இஸ்லாமிய நாடு" என்று சட்டம் ஏற்படுத்தினார்.
ஸ்ரீ ராமரின் மகன் லவன் உருவாக்கிய லவபுரம் (லாகூர்) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

ஸ்ரீ ராமரின் தம்பி பரதன் உருவாக்கிய புருஷபுரா (பெஷாவர்), தக்ஷசீலம் (Taxila) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

அருமையான ஹிந்து தேசங்கள் "சாம, தான, பேத, தண்ட" நீதி படி, இஸ்லாமியர்களாக வாழும் நம் சகோதரர்களுக்கு "தானமாக" தரப்பட்டது.
ராமரின் மகன், தம்பிகள் ஆண்ட ஹிந்து தேசத்தை இழந்தாலும், நிலைமையை உணர்ந்து முடிவை மதித்தனர், ஹிந்துக்கள்.

ஆனால், நேரு "இந்திய தேசம் ஹிந்து ராஜ்யம்" என்று சொல்ல மறந்தார். மறுத்தார்.


1947AD Aug 14, பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து முதலில் விடுதலை பெற்றது.
1947ADல் Aug 15, இந்தியா என்ற பெயரில் பிரிக்கப்பட்ட பாரத தேசம், கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.

1526ADல் இந்தியாவில் நுழைந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமர் அவதரித்த கோவிலை அரேபியன் பாபர் இடித்து மசூதி கட்டினான்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன போது, இந்தியா 'ஹிந்து ராஜ்யம்' என்று நேரு அறிவிக்காததால்,
"பாபர் அரேபியனாக இருந்தாலும், மசூதியை இடிக்ககூடாது, இது எங்கள் நிலம்"
என்று பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியாவில் இருக்கும் ஒரு சில ஆயிரம் இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்... எதிர்க்கின்றனர்... சிலர் சரித்திரத்தை புரிந்து கொண்டு ஆதரிக்கின்ற்னர்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன பிறகு, பாகிஸ்தான் முழுவதும் இருந்த கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு விட்டன.

800 வருடங்களுக்கு முன் அரேபிய அடக்குமுறையாலும், பயத்தாலும், பதவிக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறிய பாரத மக்கள்,
எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், பதவிக்கு மயங்காமல்  ஹிந்துக்களாகவே 1000 வருடமும் இருந்து, இன்று வரை இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

1000 வருடங்களில் எத்தனை செல்வங்கள் இழந்து இருக்கிறோம்!! என்று புரியாமல், ஹிந்துக்களாகவே இவர்கள்  இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

48000 பெரும் கோவில்களை இடித்தார்கள் அரேபியர்கள் என்ற உண்மை தெரிந்தும், ஒரு அயோத்தி கோவில் கட்ட எதிர்க்கிறார்கள். 


எத்தனை இடிக்கப்பட்ட கோவில்கள் இன்றும் காட்சி பொருளாக உள்ளது!!
இதை பார்த்தும் இன்று முஸ்லீமாக உள்ள பாரத மக்களுக்கு, ஹிந்துவாக உள்ள பாரத மக்களின் உணர்வு புரியவில்லை.

"தாங்களே மதம் மாற்றப்பட்டவர்கள் தான்" என்பது கூட புரிந்து கொள்ளும் பக்குவத்தை இழந்து உள்ளனர்.
பிரிக்கப்பட்ட பாரத தேசத்தை, மீண்டும் பிரிவினை செய்ய முயற்சிக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் தான் வாழ ஹிந்துவை சேர்த்து கொள்வான்.
தேவைப்பட்டால் முஸ்லீமையும் சேர்த்து கொள்வான் என்று சரித்திரமே சான்று கூறுகிறது.

இஸ்லாமியர்களை அழிக்க, ஹிந்துக்களை துணை கொண்டனர்.
ஹிந்துக்களை அழிக்க இஸ்லாமியர்களை துணை கொண்டனர்.
கடைசியில் இருவரையும் அடிமை ஆக்கி (1847AD - 1947AD)100 வருடங்கள் முழுமையாக ஆண்டனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

ஹிந்துவை எதிர்ப்பதாக நினைத்து, சுதந்திரம் அடைய தானும் பாடுபட்ட பாரத நாட்டு இஸ்லாமியன், கிறிஸ்தவனோடு சேர்கிறான்.

பாரத தேச இஸ்லாமியர்கள், ஹிந்துக்களின் உணர்வை மதிக்க வேண்டும்.

ஹிந்துக்கள் என்றுமே இஸ்லாமியனுக்கோ, கிறிஸ்தவனுக்கோ கூட பகைவனாக இருந்ததில்லை.

அமெரிக்க கிறிஸ்தவனும் இந்தியாவை மதிக்கிறான்.
இன்று சௌதி அரேபிய இஸ்லாமியனும் இந்தியாவை மதிக்கிறான்.
அரேபிய முஸ்லிம்களே இந்தியா ஹிந்து நாடு தான், நாங்கள் உள்ளே நுழைந்த பின் இஸ்லாமிய மதம் பூகுத்தப்பட்டது என்று சரத்திர உண்மையை ஆமோதிக்கிறார்கள்.

இஸ்லாமிய தேசமாகி போன பாகிஸ்தானை ஒருவனும் மதிப்பதில்லை.



"தாங்கள் ஹிந்துக்களாக வாழ்ந்து,  கில்ஜி அரசாட்சி சமயத்தில் இஸ்லாமியர்களாக ஆனவர்கள் தான்' என்று உண்மையை சொல்லும் முஸ்லிம்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர்.

"மேயோ (Mev or Mewat) முஸ்லீம் மக்கள்" உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்குவம் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் அடையாளங்களை இன்று வரை  மறைக்கவில்லை.

இஸ்லாமியனாக மாறி குர்ஆன் தன் மத நூலாக ஏற்றாலும், இந்த சமூகம், "சங்கர் கான்", "ராம் கான்" என்று பெயர்களை வைத்து கொள்ள தயங்கவில்லை.
இவர்களிடம் ஹிந்துக்களும் தங்கள் வெறுப்பை காட்டுவதில்லை.
இவர்கள் முஸ்லீமாகவே தான் வாழ்கின்றனர்.

இவர்கள் ஈத் கொண்டாடுவது போல, ஹோலி, தீபாவளியும் கொண்டாடுகிறார்கள்.

குர்ரானில் பெயர் சொல்லப்படாத இறைவன் ராமர் தான் என்று, ராமரையும் அவர்கள் மதிக்கிறார்கள்.

ஹிந்துக்களின் உணர்வை, தாங்கள் எப்படி இஸ்லாமியனாக ஆனோம் என்ற சரித்திரத்தை பின்னோக்கி பார்த்தல், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று தெரிந்து விடும்.

ஹிந்துக்களின் உணர்வுகள், இழப்புகள்  947ADல் இருந்தே உள்ளது...
மதம் மாறி போன இசுலாமியர்களுக்கு, மதம் மாற்றப்பட்டதே ஒரு பேரிழப்பு தான்.  

சரித்திர உண்மைகளை புரிந்து கொள்வோம்.
ஊரில் புகுந்து அட்டகாசம் செய்த அரபியர்களே, இன்று இந்தியர்களுடன் நட்பு கொள்ளும் போது, 
ஹிந்துக்களின் உணர்வை, நம்பிக்கையை காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நியாயம் ஆகாது.