Followers

Search Here...

Showing posts with label மகத தேசம். Show all posts
Showing posts with label மகத தேசம். Show all posts

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில் பிறந்தார்கள்? எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar.

மகத தேசம் என்று பீஹார் அழைக்கப்பட்டது.




ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமரின் தாய் கௌசல்யா இந்த தேசத்தில் பிறந்து, பின் கோசல அரசன் தசரதனை திருமணம் செய்து கொண்டாள்.
தசரதர் தன் காலத்திற்கு பிறகு, தன் பிள்ளைகள் ஒருவராவது, பீகாரில் உள்ள கயை என்ற நகருக்கு சென்று, விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பிற் காலத்தில், ஸ்ரீ ராமர் கயை சென்று, தன் தகப்பனாருக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்தார்.

குடும்பத்திலேயே மதம் மாறி இறந்து போனவர்கள், பிள்ளைகள் இருந்தும் திவசம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள், அனாதையாக இறந்தவர்கள், கர்பத்திலேயே இறந்தவர்கள், அடிபட்டு இறந்தவர்கள், காணாமல் போய் பல காலம் ஆகியும் இறந்தார்களா இல்லை இருக்கிறார்களா என்று நிலைக்கு ஆனவர்கள், இறந்தவர்கள் இப்படி எவருக்காகவும் இந்த விஷ்ணு பாதத்தில், யாவரும் தான் இருக்கும் சமயத்தில் வந்து, தன் நினைவில் உள்ள இறந்தவர்கள் அனைவருக்கும் பிண்ட ப்ரதானம் செய்யலாம், செய்ய வேண்டும். திவசம் செய்யாததால் அலையும் பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைவார்கள்.

இனி,
மஹாபாரத சமயத்தில், ஜராசந்தன் மகத அரசனாக ஆண்டு வந்தான்.
யாதவர்களை தன் எதிரிகளாக நினைத்தான்.

ஜராசந்தன் பிறந்த ஊர் இன்றைய டாடாநகர் (TataNagar,Jamshedpur,Jharkhand). இது ஜாம்ஷெட்பூர் என்ற மாநிலத்தில் உள்ளது. இது பீகார் மாநிலத்தில் இருந்தது. Nov 15, 2000 ஆண்டு தெற்கு பகுதியில் இருந்த இந்த பிரதேசம் (ஜாம்ஷெட்பூர்) பிரிந்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.

நரகாசுரன் (ப்ரக்ஜ்யோதிச தேசம் என்ற அசாம்), பௌண்ட்ரக வாசுதேவன் (பௌண்ட்ரக தேசம் என்ற பங்களாதேஷ்), சிசுபாலன் (சேடி தேசம் என்ற மத்யபிரதேசம்), வ்ருஷ்னி குல கம்சன் (மதுராவை ஆண்ட, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா), துரியோதனன் (குரு தேசம் என்ற உத்திரபிரதேச இளவரசன்) ஆகியோர் ஜராசந்தனிடம் நட்பு கொண்டவர்கள்.




கம்சன் யாதவர்களை விரட்டி, மதுராவை கைப்பற்றியதால், கம்சனிடன் நட்பு கரம் நீட்டினான். தன் 2 மகள்களையும், கம்சனுக்கே மணம் செய்து கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா கம்சன். தன் தங்கை என்றும் பாராமல், மதுராவில் ஜெயிலில் தள்ளினான். ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயிலில் அவதாரம் செய்து, கோகுலத்தில் வளர்ந்து, தன் 11 வயதில், மதுரா வந்து ஒரே குத்தில் கம்சனை பரலோகம் அனுப்பினார்.
தன் மகள்கள் விதவை ஆனதற்கு இந்த ஸ்ரீ கிருஷ்ணரும், யாதவர்களுமே காரணம் என்று, 17 முறை மதுராவை தாக்கினான். 
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ கிருஷ்ணர் தோற்கடித்து விரட்டினார்.

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ணரை யவன தேசத்து (கிரீஸ் போன்ற மேற்கு தேசங்கள்) மிலேச்சனான "காலயவனன்" துணையுடன் எதிர்த்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலயவனனிடன் போர் புரிந்து சாமர்த்தியமாக அவனை கொன்றார்.
இந்த சமயத்தில் மதுராவை முற்றுகையிட்டான் ஜராசந்தன். யாதவர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்நத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.
இந்த மாயை புரியாத ஜராசந்தன் மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரையும், யாதவர்களையும் தோற்க அடிக்க முடியாத ஜராசந்தன், சிவனை குறித்து தவம் செய்து, 100 க்ஷத்ரிய அரசர்கள் பலியிட்டு தன் பலத்தை கூட்ட எண்ணினான். இதற்காக பல தேசங்களை கைப்பற்றி அதன் 95 க்ஷத்ரிய அரசர்களை ஜெயிலில் போட்டான்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தார். இதற்கு ஜராசந்தன் போன்றவர்கள் தடையாக இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை பீமனோடு மல்யுத்த போருக்கு அழைத்தார். பீமன் ஜராசந்தனை மல்யுத்தத்தில் இரண்டாக கிழித்து போட்டு விட்டான்.
ஜராசந்தன் மகன் சகதேவன் மகத தேச அரசனானான்.



சகதேவன் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டான்.

3000 வருடங்களுக்கு பிறகு கௌதம புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார். மகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.