Followers

Search Here...

Tuesday 29 October 2019

சந்தியா வந்தனம் செய்தால், நவ கிரகங்களும், பரமாத்மாவும் அருள் செய்வார்களே!!... "காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்பதற்கு அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே...

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்ற சொல்லுக்கு
பொதுவான அர்த்தம் என்ன?
தெரிந்து கொள்ள வேண்டாமா?



அன்னதானம் செய்யும் போது, இதன் பொதுவான அர்த்தம் :
  • பசி என்று வருபவனின் தகுதி என்ன? என்று 'காணாமல்',
  • அன்னதானம் செய்யும் போது, மனம் 'கோணாமல்',
  • அன்னதானம் செய்ய தன்னை தகுதியாக்கிய தெய்வத்துக்கு ஆராதனையாக, தானம் வாங்குபவர்களிடமும் தெய்வத்தை "கண்டு" அன்னதானம் செய் 
என்பது பொதுவான அர்த்தம்.

சந்தியா வந்தனத்தில் "அர்க்யம்" மிக முக்கியமானது..
"மறக்காமல் அர்க்யம் கொடு" என்று
ப்ரம்மணர்களுக்கு  நினைவுபடுத்தவும் இது சொல்லப்படுகிறது...



அதன் அர்த்தம் :
  • சூரியன் உதயமாகும் (சூரியனை காண்பதற்கு) முன் (4-6AM), 
  • சூரியன் உச்சத்தில் (கோணாமல், சூரியன் தலைக்கு மேல்) இருக்கும் போது (12noon),
  • சூரியன் மறையும் முன் (5-6PM), சூரியனை கண்டு கொண்டேதர்ப்பணம் கொடு
என்று நினைவூட்டுகிறது.




நவ க்ரஹங்களுக்கும் (தோஷங்கள் நீங்க),
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து தர்ப்பணம் (திருப்தி) செய்.
பல விபூதி அவதாரங்களாக இருக்கும் பரப்ரம்மத்துக்கு,
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து நன்றியை காட்டி, தெய்வங்களின் அணுகிரஹம் பெற தர்ப்பணம் (திருப்தி) செய்.
மனிதனாக பிறக்க வைத்த அந்த பரப்ரம்மத்துக்கு உன் நன்றியை காட்ட, தேவ தர்ப்பணம் செய் என்கிறது இந்த வாக்கியம்.

சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும், மிக மிக முக்கியமான தேவ தர்ப்பணம் இதோ:
  1. ஆதித்யம் தர்ப்பயாமி !
    (சூரிய தேவனை திருப்தி  செய்கிறேன்)
  2. ஸோமம்  தர்ப்பயாமி !
    (சந்திர தேவனை திருப்தி செய்கிறேன்)
  3. அங்காரகம்  தர்ப்பயாமி !
    (செவ்வாய் தேவனை திருப்தி செய்கிறேன்)
  4. புதம்  தர்ப்பயாமி !
    (புதன் தேவனை திருப்தி செய்கிறேன்)
  5. ப்ருஹஸ்பதிம்  தர்ப்பயாமி !
    (குரு தேவனை திருப்தி செய்கிறேன்)
  6. சுக்ரம்  தர்ப்பயாமி !
    (சுக்கிர தேவனை திருப்தி செய்கிறேன்)
  7. சனைச்சரம்  தர்ப்பயாமி !
    (சனி தேவனை திருப்தி செய்கிறேன்)
  8. ராஹூம்  தர்ப்பயாமி !
    (ராகு தேவனை திருப்தி செய்கிறேன்)
  9. கேதும்  தர்ப்பயாமி !
    (கேது தேவனை திருப்தி செய்கிறேன்)



  1. கேசவம்  தர்ப்பயாமி !
    (க: - பிரம்மா, ஈச: - ருத்ரன் ஆகிய இரு வடிவங்களாகவும் பேதமாக தன்னை காட்டிக்கொண்டு, மூலப்பொருளான அ: - விஷ்ணுவாகிய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  2. நாராயணம்  தர்ப்பயாமி !
    (நரர்களுக்கு (மனிதர்களுக்கு) அடைக்கலமாக (அயணமாக) இருக்கும் பரம்பொருளை பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  3. மாதவம்  தர்ப்பயாமி !
    ('மா' - மௌனம், 'த' - தியானம், 'வ' - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்க பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.
    'மா' என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய 'தவ:', அதாவது, லட்சுமியின் கணவனான பரம்பொருளை (மாதவனை) திருப்தி செய்கிறேன்.)
  4. கோவிந்தம்  தர்ப்பயாமி !
    (கோ என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவனாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  5. விஷ்ணும்  தர்ப்பயாமி !
    (எங்கும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  6. மதுஸூதனம்  தர்ப்பயாமி !
    (மது என்ற அசுரனை வென்று, வேதத்தை காத்த பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  7. த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி !
    (மூன்று உலகங்களையும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  8. வாமனம்  தர்ப்பயாமி !
    (அளவில்லாத உலகங்களை, ஒரு சிறுவன் (வாமனன்) போல வந்தாலும் அளக்கும் சக்தி பெற்ற பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  9. ஸ்ரீதரம்   தர்ப்பயாமி !
    (ஸ்ரீ என்ற லட்சுமியை உடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  10. ஹ்ருஷீகேஷம்  தர்ப்பயாமி !
    (இந்திரயங்களின் அதிபதியாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  11. பத்மநாபம்  தர்ப்பயாமி !
    (பத்மம் என்றால் தாமரை...நாபி என்றால் தொப்புள். தாமரையின் உட்புறம்போல் சிவந்ததும் ஆழ்ந்ததும் வட்டவடிவிலிருப்பதுமான தொப்புளையுடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  12. தாமோதரம்  தர்ப்பயாமி !
    (யாருக்கும் கட்டுப்படாத பரப்ரம்மம், அன்பே உருவான யசோதை தாய், தன் வயிற்றில் (உதர) ஒரு சிறு கயிரால் (தாம) கட்ட நினைக்க, தன்னை கட்டி விட செய்து கொண்டதால், தாமோதரன். அன்பிற்கு கட்டுப்படும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)

5 நிமிடம், சந்தியா வந்தனம் செய்ய கசக்குமா?..
சந்தியா வந்தனம் செய்தால் ராகு, கேது, சனி பகவானிடம் பயம் வருமா?.
பரப்ரம்மத்தை மூன்று வேளையும் ஆராதிக்கும் ஒருவனை, தெய்வம் துணை நிற்காமல் போகுமா?



அன்னதானம் செய்வோம்...
மூன்று வேளையும் தேவ தர்ப்பணம் செய்து தெய்வ அணுகிரஹத்தை பெற்று, குறையில்லாமல் வாழ்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.



Wednesday 23 October 2019

தெய்வங்கள் ஹிந்து மதத்தை காக்கிறதா?.. எப்படி ஹிந்துக்கள் 1000 வருட அந்நிய படையெடுப்பையும் மீறி, ஹிந்துவாகவே இன்றும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்..? அலசல்

"உலகம் (இயற்கை) ஒரு மாய திரை (ஜீவனை பொறுத்தவரை பொய், நிலையற்றது)..
உலகில் காணப்படும் ஜீவனாகிய நாம் அனைவரும் ஈஸ்வரனின் அம்சமே..
ஆதலால்,
பிறவி கடலை கடக்க, உலக பற்றை உதறி தள்ளி, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'அத்வைதம்'.



வேதத்தில், சில சூக்தங்கள் 'அத்வைதமாக இருக்கிறது'.

"ஜீவன் வேறு, பரமாத்மா வேறு.
ஜீவன் "பரமாத்மாவிற்கு அடி பணிந்தவன்".
பிறப்பு, இறப்பு, முதுமை, எதிர்காலம் எதுவும் இவன் இஷ்டத்தில் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.
முயற்சிக்காமல் சில சமயங்களில் பலன் கிடைப்பதும் பரமாத்மாவின் அருளால் தான்.

ஜீவன் செய்யும் முயற்சிக்கெல்லாம், அவன் இஷ்டத்தில் பலன் கிடைப்பது இல்லை. 
அவன் நினைப்பதெல்லாம் நடப்பதும் இல்லை.
முயற்சிக்கு பலன் கிடைப்பதே பரமாத்மாவின் அருளால் தான்.

ஆதலால்,
பிறவி கடலை கடக்க, ஈஸ்வரனிடம் பக்தி செய்து, மோக்ஷம் பெற வேண்டும்"
என்று சொல்கிறது 'த்வைதம்'.

வேதத்தில் "சில சூக்தங்கள் த்வைதமாகவும் இருக்கிறது".

ஜீவன் மற்றும் பரமாத்மா உறவை காட்டும் போது, இந்த இரு மார்க்கமும் மாறுபடுகிறது.
ஆனால்,
"அத்வைதம், த்வைதம்" இரண்டுமே, "ஈஸ்வர பக்தி செய்து தான், மோக்ஷம் அடைய வேண்டும்" என்று முடிவாக சொல்கிறது..

"இந்த இரண்டு விதமான பார்வையும், வேதத்தில் தான் உள்ளது" என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்..
ஆக, இரண்டு மார்க்கமுமே பொய் அல்ல..
புரிந்து கொள்ள, நமக்கு தான் பக்குவம் தேவைப்படுகிறது.

"உலகத்தையும் (ஸ்ரீவத்சம்/லட்சுமி), ஜீவனையும் (கௌஸ்துபம்) இரண்டையும் உடையவனாக ஈஸ்வரன் இருக்கிறார்"
என்று விசேஷித்து சொல்கிறது 'விசிஷ்ட அத்வைதம்'. (அத்வைதத்தில் த்வைதம்)


புரிந்து கொள்ள:

அஞானியாக ஜீவன் இருக்கும் வரை,
"தான் வேறு, உலகில் உள்ள மற்ற ஜீவன்கள் வேறு, பரமாத்மா வேறு'"
என்று ஜீவன் 'த்வைத'மாக தான் பார்க்கிறான்.
ஆதலால்,
வேதம், அஞானிக்கும் மோக்ஷ பாதையை வழிகாட்ட, 'த்வைத' தத்துவத்தை ஒரு இடத்தில் சொல்கிறது.

அதே சமயம்,
ஆதிசங்கரர், ஜடபரதர், ஸ்ரீசுகர் போன்ற ஞானியாக இருக்கும் ஜீவன்,
"தான் வேறல்ல, உலகில் உள்ள மற்ற ஜீவன்களும் வேறல்ல, இந்த ஜீவனை படைத்த பரமாத்மாவும் வேறல்ல"
என்று 'அத்வைத'மாக பார்க்கிறார்கள்.
ஆதலால்,
வேதம், ஞானிக்கு மோக்ஷ பாதையை வழிகாட்ட அத்வைத தத்துவத்தையும் மற்றொரு இடத்தில் சொல்கிறது.

ஞானிக்கு 'அத்வைதம்' காட்டி,
அஞானிக்கு 'த்வைதம்' காட்டி,
உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும், பிறவி கடலை கடக்க வழி சொல்கிறது நம் வேதம் (சப்த பிரம்மம்)

"ஒரே வழி, ஒரே கட்டளை" என்று பிடிவாதம் செய்து, மனிதர்களால் உருவான பொய் மதம் இல்லையே!! நம் சனாதன ஹிந்து தர்மம்.

ஆதி சங்கரர் (சிவபெருமான்) அவதாரம் செய்த போது,
வேதம் கூறும் ஞான மார்க்கத்தை புரிந்து கொள்ளாமல், மோக்ஷ பாதையில் செல்லாமல்,
"இந்த யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும்,
அந்த மந்திரம் சொன்னால் சூன்யம் வைக்கலாம்,
அந்த மந்திரம் ஸித்தி ஆனால் வசியம் செய்யலாம்"
என்ற அளவுக்கு கர்ம மார்க்கத்தை மட்டுமே எடுத்து கொண்டு பாரத தேசம் முழுவதும், வறட்டு பிடிவாதம் செய்யும் கர்மடர்கள் அதிகமாகி இருந்தனர்.

இவர்கள் ஞான மார்க்கத்தை மறந்து,
"யாகம் செய்தால் இந்த பலன் கிடைக்கும், இந்த சுகம் கிடைக்கும்"
என்ற ரீதியில் போனதால், 70வதுக்கும் மேற்பட்ட பல பொய் மதங்கள் உருவாகின.. பௌத்த மதமும் இதில் ஒன்று.



"நரபலி காளிக்கு கொடுத்தால், காளி வரம் கொடுப்பாள்" என்ற அளவுக்கு பாரத தேசத்தில் அசாம் போன்ற இடங்களில், அஞானிகள் கையில், 'வேதம்' மாட்டிக்கொண்டு தவித்தது..
ஞானியான "ஆதி சங்கரர்", இவர்களை ஞான மார்க்கத்தில் திருப்ப,
வேதத்தில் சொல்லப்பட்ட "அத்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி,
70வதுக்கும் மேற்பட்ட பொய் மதங்களை, தர்க்க வாதத்தினால், தன் தரிசனத்தால் ஒடுக்கி,
பாரத மக்களை, மீண்டும் ஞான மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தை ஞான மார்க்க ரீதியில் பார்க்க செய்து, 
பெரும் உபகாரம் செய்தார்.

1017ADல் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர்வேதத்தின் முழு நோக்கமான,"விசிஷ்ட அத்வைத" மார்க்கத்தை வழி காட்டினார்.

அஞானியாக இருப்பவர்கள் "பக்தி செய்து, நாராயண நாமத்தை பெற்று ஜபித்து இருங்கள்" என்று வேதம் சொல்லும் த்வைத மார்க்கத்தை காட்டி வழி நடத்தி, அஞானியையும் ஞானியாக ஆக்கி, ஜீவன் வேறு பகவான் வேறல்ல என்ற அத்வைத மார்க்கத்தையும் காட்டி, பெரும் புரட்சி செய்தார்.

ஆதி சங்கரர் வந்தும் மாறாமல், "ஆடை இல்லாமல் திரிந்த சமணர்கள் அனைவரையும் வேத மார்க்கத்தில் மீண்டும் திருப்பி, நாராயணனே வேதம் இறுதியாக சொல்லும் பரதெய்வம்" என்று வேதத்தை கொண்டே (புருஷ சூக்தம்) நிரூபித்து, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தில் இருந்து விலகி விடாமல் இருக்க தயார் செய்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ராமானுஜரின் காலத்துக்கு பின், தமிழ்நாட்டில் "சேங்கனூர்" என்ற கிராமத்தில், 4000 திவ்ய பிரபந்ததுக்கும் அதன் உண்மையான உள் அர்த்தத்தை உலகுக்கு அள்ளி கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை" என்ற "கிருஷ்ண சூரி" அவதரித்தார்.

மற்ற மதங்களில் தவறான புரிதல், குழப்பங்கள் ஏற்படும் போது, மதங்கள் அழிகிறது. 
அதை சரி செய்ய மக்களே பாடுபடுகின்றனர். 
மதத்தை வளர்க்க 
"பணம் கொடுத்து, பொய் பிரச்சாரம் செய்து, மற்ற மதங்களை கீழ்த்தரமாக பேசி வெறுப்பை விதைத்து" 
தங்கள் மதத்தை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால்,
நம் ஹிந்து தர்மத்தில் உள்ள நாம், "வழி தவறி ஹிந்து தர்மம் அழியும்" அபாயம் நேர்ந்தால்,
தெய்வங்களே தன்னை வெளிப்படுத்தி கொண்டு அவதாரங்கள் செய்து, ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் நின்று காக்கின்றனர்..



"மனிதர்களால்" மற்ற மதங்கள் காப்பாற்றப்படுகிறது..
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது.

1000 வருடங்கள், வெளி மதங்களே ஆண்டு அட்டகாசம் செய்தும், இன்றும் ஹிந்து தர்மம் துளி கூட அழியவில்லை..
மாறாக, உலகம் முழுவதும் இன்று ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர்..

வெளி மதமான அரேபிய இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் "ஹிந்துக்கள் செல்வத்தை, நம்பிக்கையை, கோவிலை, பெண்களை, சுதந்திரத்தை சூறையாடி, அதிக வரி ஹிந்துக்களுக்கு, வரி இல்லாத வாழ்க்கை இஸ்லாமியனாக மாறுபவனுக்கு"
என்று விதித்து பெரும் சவாலை பாரத மக்களுக்கு தந்தனர்..

ஹிந்து அரசனும், ஹிந்து அரசனும் போருக்கு சென்றால், போர்க்களத்தில் சண்டை இட்டு கொள்வார்கள்..
பாண்டிய அரசன் சோழ அரசனிடம் தோற்றால், பாண்டிய தேசத்தையும் தன் சோழ ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சி செய்வார்கள் அரசர்கள்.
மகாபாரத போர் கூட, குருக்ஷேத்ரம் என்ற போர் காலத்தில் தானே நடந்தது.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்கொண்ட போது கூட, ஊருக்குள் புகுந்து பொது மக்களை கொல்லவில்லையே ! 




இஸ்லாமிய சுல்தான்கள், ஹிந்து அரசனிடம் போர் செய்யும் போது,
ஊரில் புகுந்து பொது மக்களை கொன்று, 
கோவிலை இடித்தும், அரசர்களை பணிய வைத்தார்கள்..
"அலாவுதீன் கில்ஜி" ஆட்சியின் போது,
அவன் அனுப்பிய "மாலிக் காபூர்",
ககாத்திய தேசத்தை (தெலுங்கானா) எதிர்த்த போது,
அங்கு இருந்த பொது மக்களை கொன்று, கோவில்களை இடித்து, செல்வங்களை கொள்ளை அடித்து, பெரும் நாசம் செய்தான்..

அப்பொழுது அங்கு இருந்த ஒரு காளி கோவிலில் இருந்த ஒரு வைர கல் தானே இன்று "கோஹினூர் வைரம்" என்று இங்கிலாந்து நாட்டில் வைத்துள்ளார்கள்...

ஒரு காளி கோவிலில் சர்வ சாதாரணமாக வைர மாலைகள் இருந்தது என்றால், நம் செழிப்பு எத்தகையானதாக இருந்து இருக்க வேண்டும்!!?
என்று எண்ணி பார்க்க வேண்டும்..
ஒரு கோவிலை இடித்தாலே மனம் பதறும் போது, இப்படி ஒரு பேடிகள் சூழ்ந்து, மக்களை, கோவிலை இடிக்கும் போது, அரசர்கள் வேறு வழி இல்லாமல், சரண் அடைந்தனர்..
சில அரசர்கள் தலை சீவப்பட்டனர்.. 
சில அரசர்கள் பெரும் செல்வத்தை தானமாக கொடுத்தனர்..

ககாத்திய தேசத்தை தொடர்ந்து, பாண்டிய தேசமான மதுரைக்கு நுழைந்து, அதே செயலை செய்து,
பொது மக்களை கொன்று, மீனாட்சி கோவிலை பிடித்தான்.. 
"மாற்றி வைக்கப்பட்ட போலி சிவலிங்கத்தை இடித்தே விட்டான்" மாலிக் காபூர்..
விளைவு:
பாண்டிய மன்னன் "கோவிலை இடித்து விடுவானே" என்று பாண்டிய தேசத்தின் கஜானாவை திறந்து விட்டார்..
இதை தொடர்ந்து,
மேலும் ஸ்ரீ ரங்கம் வரை சென்று, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ஸ்ரீரங்கத்தையே சூறையாடி, உற்சவராக இருக்கும் ஸ்ரீரங்கநாதரை (சிலை திருடன்) டில்லிக்கு தூக்கி சென்று விட்டான் என்று சரித்திரம் போகிறது...



கிடைத்த செல்வமே அளவிடமுடியாமல் இருக்க, சோழ நாட்டில் கால் பிறகு வைத்து கொள்ளலாம் என்று மாலிக் காபூர் டில்லி திரும்பி,

தன் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வெற்றி பரிசாக அனைத்தையும் கொடுத்தான் (கோஹினூர் வைரம் (Kohinoor Diamond) உட்பட)..
இது நடந்தது 1310AD சமயத்தில்..

இஸ்லாமியர்கள் பாரத தேசத்துக்குள் வந்து "300 ஆண்டுகளே" ஆன சமயம் அது..

அந்த காலத்தில் இருந்த ஹிந்துக்களின் நிலைமையே எப்படி இருந்து இருக்குமோ!! என்று நினைத்து பார்க்க முடியவில்லை..

1857AD வரை இஸ்லாமியர்களின் ஆட்சி பாரத மண்ணில் கொடி கட்டியது என்று பார்க்கும் போது தான், "எத்தனை நெஞ்சுரம் மிக்கவர்களாக நம் பாட்டனார்கள் இருந்து இருக்கிறார்கள்" என்று புரிந்து கொள்ள முடியும். "இவர்கள் ஏழை ஆனாலும் ஹிந்துவாகவே வாழ்வேன்"
என்று இருந்ததால் தானே, அவர்கள் பரம்பரையில் வந்த நாம் இன்றும் ஹிந்துவாக இருக்கிறோம்..
நினைத்து பார்க்க வேண்டும் ந்த காலங்களில் வாழ்ந்த நம் பாட்டனார்களை..

1238AD சமயத்தில் "மத்வாச்சாரியார்" என்று போற்றப்படும் "ஆனந்த தீர்த்தர்" என்ற மகான் கர்நாடக தேசத்தில் உதித்தார்.
ருக்மிணி தேவி துவாரகையில் தானே வழிபட்ட  பாலகிருஷ்ண விக்ரஹம் இவர் கையில் கிடைத்து, உடுப்பியில் இந்த கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார்.
ஞானியான மத்வாச்சாரியார்,
இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நசுக்கப்படும் ஹிந்துக்கள், "காலம் கனியாதோ!!" என்று பயந்து மதம் மாறி விடாமல், "பகவான் காப்பாற்றுவார்" என்ற நம்பிக்கையை வளர்க்க,
அஞானியாக உள்ள பொது மக்களுக்கு, மனோ தைரியமும், தெய்வ நம்பிக்கையும் ஏற்பட, "ஜீவனாகிய நாம் அனைவரும் பரமாத்மா ஸ்ரீ வாசுதேவனை வணங்குவோம்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட "த்வைத" மார்க்கத்தை அதிகம் ப்ரகாசப்படுத்தி, பாரத மக்களின் மனதில் பக்தியின் மூலம் தெய்வ நம்பிக்கையை விதைத்தார்.

பாரத மக்களை பக்தி மார்க்கத்தில் ஆர்வத்தை கொடுத்து, வேதத்தில் சொல்லப்படும் த்வைத மார்க்கத்தை ப்ரகாசப்படுத்தினார்.

"பக்தி மார்க்கம்" பாரத பூமி எங்கும் சூழந்தது..
இஸ்லாமியர்கள் 800 வருடங்கள் கடும் முயற்சி செய்தும், இந்த கோட்டையை தகர்க்க முடியவில்லை..

இவரின் ஆரம்ப காலத்தில் தான் "ஜெயதேவர்" வாழ்ந்தார்.

பிறகு வந்த மகான்களை கொஞ்சம் நினைத்து பார்ப்போம்..

இஸ்லாமிய ஆக்கிரமிப்பை சமாளிக்க,
மனோ தைரியமும், மக்களிடையே பக்தியையும் பரப்ப,
மஹாராஷ்டிரா தேசத்தில் "நாமதேவர்", "தியானேஸ்வர்" என்ற மாவுலி அவதரித்தார்கள்..
உத்திர பிரதேசத்தில், "ராமானந்தர்" அவதரித்தார்.
அவரின் சிஷ்யராக "கபீர் தாசர்" அவதரித்தார்.
தமிழ்நாட்டில் "மணவாள மாமுனிகள்" அவதரித்தார்.

குஜராத்தில், "நரசிங்க மேதா" அவதரித்தார்.

உத்திர பிரதேசத்தில் "சூரதாஸ்" அவதரித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், "வல்லபாச்சாரியார்" அவதரித்தார்.

வங்காள தேசத்தில், உலகம் போற்றும் இஸ்கான் (Iskcon) சொல்லும் "ஹரே கிருஷ்ண ஹரே ராம" மந்திரத்தை கொடுத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமான "கிருஷ்ண சைதன்யர்" அவதரித்தார்.



அதை தொடர்ந்து
கர்நாடக தேசத்தில் "புரந்தர தாசர்", "கனக தாசர்" அவதரித்தார்கள்.

அதை தொடர்ந்து
உத்திர பிரதேசத்தில், ஹிந்தியில் ராமாயணம் கொடுத்த "துளசி தாசர்" அவதரித்தார்.

ராஜஸ்தானில் "பக்த மீரா" அவதரித்தாள்.

அதை தொடர்ந்து,
தமிழ்நாட்டில், பிரகலாதனின் அம்சமாக "ஸ்ரீ ராகவேந்திரர்" அவதரித்தார்.
அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் "துக்காராம்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தெலுங்கு தேசத்தில், "கோபண்ணா" என்ற "பத்ராசல ராமதாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
மஹாராஷ்டிராவில் சாம்ராட் வீர சிவாஜிக்கு ஆத்ம குருவாக, "சமர்த்த ராம தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
பஞ்சாப தேசத்தில் "குரு கோவிந்த் சிங்" அவதரித்தார்.

தமிழகத்தில், ராம நாமத்தின் பெருமையை காட்ட "போதேந்திரர்" அவதரித்தார்.
"ஸ்ரீதர் ஐயாவால்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
கர்நாடக தேசத்தில், "விஜய தாசர்" அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
தமிழ் நாட்டில் கர்நாடக இசை சக்கரவர்த்தி, ஸ்ரீ ராமரை நேரில் கண்டு தரிசித்த மகான் "ஸ்ரீ தியாகராஜர்" திருவாரூரில் அவதரித்தார்.

அதை தொடர்ந்து,
வங்காள தேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்" அவதரித்தார்.
அவரை தொடர்ந்து,
சிவபெருமான் அம்சமாக விவேகானந்தர் அவதரித்தார்.

பாரத பூமியை மகான்கள் சுற்றிக்கொண்டு, ஹிந்துக்களை ஹிந்து தர்மத்தை 800 வருட இஸ்லாமிய ஆட்சியில் காத்தனர்.

800 வருட இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது..  ஹிந்துக்களை அழிக்க முடியாமல் விழுந்தது...

தெய்வங்கள் மகான்களாக பாரத தேசம் முழுவதும் அவதரித்து,
ஹிந்து தர்மத்தை தெய்வங்களே முன் வந்து காத்தனர்.
"தெய்வங்களால்" நம் சனாதன ஹிந்து தர்மம் காக்கப்படுகிறது... 

எத்தனை பெருமை நமக்கு....
மனிதன் அழிக்க நினைத்தாலும், தெய்வங்கள் காக்கும் ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்கு...நாம் எத்தனை பெருமைப்பட வேண்டும்??!!

நாம் எத்தனை கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்..  
நம் பெருமை நமக்கே தெரியாமல் இருப்பது தான் விந்தை.


வாழ்க பாரதம்... வாழ்க ஹிந்துக்கள்.  



Sunday 20 October 2019

கருவுற்று இருக்கும் தாய் நினைத்தால், கெட்ட குணத்தோடு பிறக்க போகும் குழந்தையையும் தெய்வ குழந்தையாக ஆக்க முடியும்.. நல்ல குழந்தைகள் பெறுவது எப்படி?




  • நல்ல குணங்கள் கொண்ட குழந்தைகள், 
  • தேசிய பற்று உள்ள குழந்தைகள், 
  • ஆன்மீக பற்று உள்ள குழந்தைகள், 
  • தீய குணங்கள் கொண்டவர்களை எதிர்க்க நெஞ்சுரம் கொண்ட குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிக்காத குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிப்பவர்களை ஆதரிக்காத குழந்தைகள்,
  • தீய பழக்கம் கொண்டவர்களுடன் பழக நேர்ந்தாலும், தீய பழக்கங்கள் ஏற்காத குழந்தைகள்,
  • ஹிந்துவாகவே வாழ விரும்பும் குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை மதிக்க தெரிந்த குழந்தைகள்,
  • மனித நேயம் உள்ள குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் கையால் எதையும் வாங்காத குழந்தைகள், 
  • தேசபற்றுள்ள குழந்தைகள்,

நம் இந்திய நாட்டில் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்த நாதீகனுக்கும் இது போன்ற நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும்..

பாரத தேசம் உயிர் பெற்று என்றுமே இருக்க, நம் தேசத்தில் பிறக்க போகும் எதிர்கால குழந்தைகளின் குணம், பழக்கம், தேச பற்று, தெய்வ நம்பிக்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது..

தீயவனுக்கு கூட,
வாலிகனுக்கு கூட,
நாதீகனுக்கு கூட,
தேச பற்றுள்ள குழந்தைகள்,
ஹிந்து தெய்வங்கள் மீது பற்றுள்ள குழந்தைகள்,
ஆன்மீக சிந்தனை உள்ள குழந்தைகள்
பிறக்க வேண்டும்.

நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க செய்ய நம்மால் முடியும்.. அது சாத்தியமே.. 



ஹிந்து பெண்கள் கையில் தான் இந்த பாரத தேசத்துக்கு அப்படிப்பட்ட குழந்தைகளை கொடுக்கவல்ல பெரும் வாய்ப்பு உள்ளது.
நம் பாரத நாட்டின் பெண்கள், குறிப்பாக கருவுற்று இருக்கும் போது,
பொறாமை, வஞ்சம், கேலி, பேராசை, தெய்வ நிந்தை, கோபம் போன்ற குணங்களை தவிர்த்து,
முடிந்தவரை நல்ல குணத்துடனேயே 10 மாதமும் இருக்க பழக வேண்டும். அதற்கு ஏற்ற சத்சங்கத்தில் இருக்க வேண்டும்.

  • நம் நாட்டின் மீது தேச பற்றை அதிகமாக்கும் புத்தகங்களையே கர்ப்ப காலங்களில் படிக்க வேண்டும்..
  • ஆன்மீக சிந்தனையை அதிகமாக்கும் புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும்.. 
  • ஆன்மீக பெரியோர்கள் பேசும் ஆன்மீக விஷயங்களையே கேட்க வேண்டும்..
  • குமுதம், ஆனந்த விகடன் போன்ற கேளிக்கை நிறைந்த மனதை சபலப்படுத்தும் புத்தகங்கள், நாவல்கள் போன்ற ஆன்மீக சிந்தனை தராத புத்தகங்களை இந்த சமயத்திலாவது பிறக்க போகும் குழந்தைக்காகவாவது தவிர்க்க வேண்டும்.
  • தீய குணங்கள் கொண்டவர்களை தன்னிடம் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • எப்பொழுதும் மகிழ்ச்சியாக மன கொதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • பிறக்க போகும் குழந்தை, தாய் தந்தை மதிக்கும், ராம கிருஷ்ணரை போன்று உலகம் ஆளும் திறமையுடன், பலத்துடன்,  ஹிந்துவாகவே வாழ அதிகம் விரும்பும் பிள்ளையாக பிறக்க வேண்டும் 

என்று எப்பொழுதும் ஆசை பட வேண்டும்.



  • வேதத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை தினமும் பிரார்த்திக்க வேண்டும்.
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் நட்பை, அவர்கள் கொடுத்ததை வாங்குவதை தவிர்க்க வேண்டும்..
  • அதிக நேரம் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்...

இப்படி ஒரு கருவுற்ற பெண் 10 மாதமும் வாழ்ந்தால்,

  • நாத்தீகன் குடும்பத்திலும் ஆத்தீகன் பிறப்பான்..
  • குணம் கெட்ட தகப்பனுக்கும், குணசீலன் பிறப்பான்...
  • வாலிக குணம் கொண்ட தகப்பனுக்கும், ஹிந்துவாக வாழ விரும்பும் நல்லவன் பிறப்பான்...
  • தீயவன் குடும்பத்திலும் நல்லவன் பிறப்பான்.. 

என்று நமது சாஸ்திரம் சொல்கிறது..

பொதுவாகவே,
பிறக்கும் குழந்தைகளின் குணம்,
பூர்வ ஜென்ம வாசனையாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குணத்தாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது..

பூர்வ ஜென்ம குணங்கள்
தீய குணங்களா? நல்ல குணங்களா? என்று நமக்கு தெரியாது...
ஆனால், கருவுற்று இருக்கும் போது தாய்,
எதை கேட்கிறாளோ,
எதை பார்க்கிறாளோ,
எதை ருசிக்கிறாளோ,
எதை நினைக்கிறாளோ
அவை எல்லாம் குழந்தையின் பிறவி குணத்தையும் மாற்றவல்லது..

இதை சத்யம் ஆக்கியவள் "கயாது". பிரகலாதனின் தாய்.



ஹிரண்யகசிபு மகா பலசாலி...
அசுரர் குல அரசன்.

அசுரர்களும், தேவர்களும் காஷ்யப ரிஷியால் படைக்கப்பட்டவர்கள்..

அசுரர்கள், சுயமாகவே மகா பலம் கொண்டவர்கள்.
இது தவிர, தவம் செய்து பல வரங்களையும் பெற்று இருந்தனர்..

நாத்தீகன் "கடவுளே இல்லை" என்று சொல்லி திரிபவன்..

மனித படைப்புக்கு முன் படைக்கப்பட்டவர்கள் அசுரர்கள்.
அசுரர்கள் "கடவுள் இல்லை" என்று உளரும் நாத்தீகன் கிடையாது..
"நானே கடவுள்" என்று ஈஸ்வரனையும் எதிர்க்க வல்லவர்கள்.

சிவனையும், ப்ரம்மாவையும் நேரில் பார்த்த இவர்கள் "தானே தெய்வம்" என்று சொல்லும் அளவுக்கு பலமுடையவர்களாக இருந்தனர்..
தேவர்களை அடக்கிய ஹிரண்யகசிபு, பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்..

பாற்கடலில் உள்ள விஷ்ணுவை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை..
நாராயணனையும் வென்று விட்டால், 'இனி ஒரு தெய்வமும் தனக்கு மேல் கிடையாது' என்று சொல்லி கொள்ள ஆசைப்பட்டான்.

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, ஒரு மனுவின் முழு கால அளவான 71 சதுர் யுகத்தை ஹிரண்யகசிபு ஒருவனே ஆண்டு வந்தான்.



அவனுக்கு பல குழந்தைகள் உண்டு. அனைவருமே அசுர குழந்தைகள்.. யாருக்கும் அடங்காதவர்கள்.. மகா பலசாலிகள்..

தேவர்கள் சொர்க்க லோகத்தில் ஹிரண்யகசிபுவுக்கு பயந்து, அவன் கட்டளைப்படி, வேலை செய்து கொண்டு இருந்தனர்..
வரம் கொடுத்த பிரம்மாவும் இவனுக்கு பயந்து மறைந்து இருந்தார்.. சிவனும் அமைதியாக இருந்தார்.




அந்த சமயத்தில், ஹிரண்யகசிபுவின் மனைவி "கயாது" கருவுற்றாள்.
அப்பொழுது ஹிரண்யகசிபு சில வருடங்கள் தவம் செய்ய சங்கல்பித்து இருந்தான்..

தன் மனைவி கருவுற்று இருப்பதால், அவளுக்கு பிறக்க போகும் தன் குழந்தையை தான் இருந்து பார்க்க ஆசைப்பட்டான்.

"தான் தவம் முடித்து திரும்பி வரும் வரை, அவளுடைய கர்ப்பம் தங்கட்டும்" என்று தன் வலிமையால் நிறுத்தி விட்டு, தவம் செய்ய புறப்பட்டான்.

71 சதுர் யுகங்கள் தலை தூக்க முடியாமல், தேவர்கள் அவமானப்பட்டனர். மும்மூர்த்திகளும் கூட அமைதி காத்த நிலையில், பெருந்துயரை தேவர்களாக இருந்தும் அனுபவித்து கொண்டிருந்தனர்.

'வேத மந்திரங்களையே' இவன் காலத்தில் மாற்றி விட்டான்..
எந்த தேவனுக்கும் 'பூஜை' கிடையாது, 'மரியாதை' கிடையாது என்று செய்து விட்டான்..
"ப்ரம்ம" தேவனுக்கும், "சிவனுக்கும்", மறைந்து இருக்கும் "விஷ்ணுவுக்கும்" கூட பூஜை இல்லாமல் செய்து விட்டான் ஹிரண்யகசிபு.

பூமியில் உள்ள மக்கள் வேதத்தில் உள்ள தெய்வங்கள் பெயரே மறந்து விட்டனர்..
அனைவரின் வாயிலும் "ஹிரண்யாய நம:' என்ற கோஷம் தான்.


ஹிரண்யகசிபுவுக்கு கோவில்கள், ஹிரண்யகசிபுவுக்கு பூஜைகள், ஹிரண்யகசிபுவுக்கு ஸ்தோத்திரங்கள், ஹிரண்யகசிபுவின் பெயரில்  வேதங்கள் 
என்று 71 சதுர் யுகமும் சர்வவல்லமையுடன் ஆட்சி செய்து வந்தான். எதிர்க்க ஆள் இல்லாமல் அசுரர்கள் ஆட்சி நடந்தது.
தன் தவ வலிமையால், "கயாது தான் வரும்வரை பிரசவிக்காமல் இருக்கட்டும்" என்று சொல்லி ஹிரண்யகசிபு தவம் செய்ய சென்று விட்டான்.
இது தெரிந்ததும், தேவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகினர்..

"ஹிரண்யகசிபு என்ற இந்த அசுரனையே எதிர்க்க வழி தெரியவில்லை, இவனுக்கு இன்னோரு மகன் வேறு பிறக்க போகிறானே!!!
நம்மை நிரந்தரமாக தலை தூக்க விட மாட்டான் போல உள்ளதே"
என்று நினைத்த தேவர்களின் தலைவன் இந்திரன், 'இது தான் சமயம்' என்று அதர்மம் நடக்க போவதை தடுக்க சில சமயம் அதர்மத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்...

ஹிரண்யகசிபு இல்லாததால், தைரியம் கொண்டு, கருவுற்று இருக்கும் கயாது முன் தோன்றினார்.

பிறக்க போகும் குழந்தை அசுரன் என்பதால், வரப்போகும் அபாயத்தை நினைத்து, கயாதுவின் பிடித்து தன் இடத்திற்கு இழுத்து சென்றார் இந்திர தேவன்..

இந்திரனை எதிர்க்க பலமில்லாத கயாது, கதறினாள், கூச்சலிட்டாள்..
அப்பொழுது ப்ரம்ம தேவனின் மானஸ புத்ரர் நாரத முனி ப்ரத்யக்ஷமானார்..

நாரதர் இந்திரனை தடுத்து, "கயாதுவை கொல்வதால் ஒரு பயனும் இல்லை.
மேலும் நீ இப்படி செய்தாய் என்று ஹிரண்யகசிபுவுக்கு தெரிந்தால், உன் நிலையை நினைத்து பார்" என்று நிதானப்படுத்தினார்.


"பிறக்கப்போகும் குழந்தையும் அசுர குணத்துடன் பிறக்குமே, எங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்று இந்திரன் கேட்க,
"இந்த குழந்தை மூலம் தான் உங்களுக்கு நல்ல காலம் ஏற்பட போகிறது" என்று சமாதானம் பேசி இந்திரனை விலக்கினார்.

கயாதுவை மீண்டும் அவள் அரண்மனையிலேயே விட்டு விட்டு செல்ல நினைத்தார் நாரதர்.

தேவ அசுரர்கள் எப்பொழுதும் பகைமை உணர்வு கொண்டவர்கள் என்பதால், 'ஹிரண்யகசிபு திரும்பி வரும் வரை தனக்கு பாதுகாப்பு நாரதர் மட்டுமே தர முடியும்' என்று தீர்மானித்தாள் கயாது.

நாரதர் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினாள்.

நாரதர், இவள் நிலையை புரிந்து கொண்டு தன் ஆசிரமத்துக்கு கூட்டி சென்றார்..
ரிஷிகளில், முனிவர்களில் சிறந்தவர் நாரதர்.

ரிஷிகள், முனிவர்கள் எப்பொழுதும் தியானம், தவம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.
சில ரிஷிகள் கோபமிக்கவர்கள் கூட.
தவம் செய்து சிவபெருமானை, விஷ்ணுவை வழிபடுபவர்கள்..


முனியான நாரதரோ,
அனைவரும் ரசிக்கும் படியாக கழுத்தில் துளசி மாலை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகம் இட்டு கொண்டு, எப்பொழுதும் நாராயண நாமத்தை பஜித்து கொண்டே இருப்பார்..

கடும் தவம் செய்து தெய்வங்களை நெற்றியின் புருவத்தில் ஜோதி ஸ்வரூபமாக தரிசிக்கும் ரிஷிகள் மத்தியில்,
நாரதர் தன் பஜனையால் நேராக கைலாயம் சென்று ருத்ரனை தரிசித்து விடுவார்.
பாற்கடலில் உள்ள தன் இஷ்ட தெய்வமான நாராயணனையும் எந்த தடையும் இல்லாமல் தரிசித்து விடுவார்.
ப்ரம்ம லோகம் முதல், பாதாள லோகம் வரை,
தேவர்கள் ஆட்சி செய்தாலும்,
அசுரர்கள் ஆட்சி செய்தாலும்
இவருக்கு எங்கும் மதிப்பு.
எப்பொழுதும் ஆனந்தமாகவே உள்ள இவர் முகத்தை பார்த்தாலே, தேவர்கள் மட்டுமல்ல, கம்சன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் கூட இவரை தடுப்பதில்லை..

நாராயண நாமத்தில் ஸித்தி அடைந்தவர் நாரதர்..



இப்படி ஒரு மகான், கயாதுவின் கர்ப்ப காலத்தில் கூடவே இருந்தார் என்றால், அவள் பாக்கியத்தை கேட்கவும் வேண்டுமா?..

நாரதர் கயாதுவுக்கு
ஸத் விஷயங்களை, நல்ல பண்புகள், ஒழுக்கத்தின் பெருமைகளை, தர்மங்களை,
தான் எப்படி ப்ரம்ம புத்ரன் ஆனேன் என்ற காரணத்தை தினமும் சொல்வார்..

தினமும் நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே, மன சாந்தியுடன், நிம்மதியாக நாரதர் ஆசிரமத்தில் இருந்து வந்தாள்.

நாரதர் இப்படி நல்ல தர்மங்களை சொல்லி கொண்டே இருக்க, கர்பவதியான கயாது கேட்டு கொண்டே தூங்கி விடுவாள்..
இவள் தூங்கி இருக்கும் போதும்,
நாரதர் பிரத்யேகமாக தூங்கி கொண்டு இருக்கும் அவளுக்கு, நாராயணனின் மகத்துவத்தை, பர தத்துவத்தை சொல்ல ஆரம்பிப்பார்.
நாராயண நாமத்தை அகண்டமாக சொல்வார்.

இப்படி அவள் விழித்து இருக்கும் போது பொதுவான தர்மங்களையும்,
அவள் தூங்கும் போது நாராயணனின் பெருமையையும் சொல்ல சொல்ல, அவள் கர்ப்பத்தில் இருந்த அசுர குணங்களுடன் உள்ள குழந்தை பிரகலாதன், பக்த பிரகலாதனாக தயாராகி கொண்டு இருந்தார்.

பல வருடங்கள் தவம் செய்து விட்டு, திரும்பி வந்தான் ஹிரண்யகசிபு.
கர்பத்துடனேயே உள்ள தன் மனைவியை தேவர்கள் ஹிம்சை செய்யாமல் நாரதர் தான் பார்த்து கொள்கிறார் என்றதும், ஹிரண்யகசிபுவுக்கு நாரதர் மேல் தனி பிரியம் ஏற்பட்டது..

கயாது அழகான ஆண் குழந்தையை பெற்றாள்.
பிரகலாதன், பிறவியிலேயே நாராயண ஸ்மரணையுடனேயே பிறந்தான்.
மற்ற அசுர குழந்தைகள் மத்தியில், இவன் குணம் மட்டும் தனித்து இருந்தது.

'ராஜா மகன் ஆயிற்றே, அப்படித்தான் இருப்பான்' என்று ஹிரண்யகசிபு நினைத்து கொண்டான்.



தகுந்த வயதில் பாடசாலை அனுப்பினான்..
அங்குள்ள, மாணவர்கள் அனைவரையும் நாராயண கீர்த்தனை செய்ய வைத்து விட்டான்.

71 சதுர் யுகங்களாக, மக்கள் மனதில் இருந்து மறைந்து போய் இருந்த 'நாராயண' நாமத்தை வெளிப்படுத்தி விட்டான் பிரகலாதன்.

தன் பிள்ளை, அசுர குணத்துடன் இல்லாமல் சாத்வீகமாக இருப்பதை பொறுத்து கொண்ட ஹிரண்யகசிபுவால், 'நாராயண' நாமம் மீண்டும் உலகிற்கு வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியவில்லை..

பிரகலாதன் தன் பிள்ளை என்பதால் அறிவுரை சொல்லி நிறுத்த பார்த்தான்.. பலிக்கவில்லை..
அசுர குணம் கொண்ட இவன், தன் பிள்ளை என்பதை கூட மறந்தான்.
யானையை ஏவி மிதிக்க வைத்தான்.. விஷ பாம்புகள் கடிக்க செய்ய பார்த்தான்..
எங்கும் நாராயணன் இருப்பதை ஞானத்தால் பார்த்த பிரகலாதனுக்கு எதுவும் ஆகவில்லை.
இவன் பலத்தை கண்டு ஹிரண்யகசிபுவே பிரமித்தான்..
"தான் செய்த தவம் எல்லாம் இவனுக்கு பலித்து விட்டதோ" 
என்று நினைத்தான்.

"உலகமே என்னை வணங்கும் போது நீயும் என்னை வணங்கு" என்று சொல்ல,
"நீங்கள் என் தந்தை என்ற காரணத்துக்கு உங்களை என் தெய்வமாக வணங்குகிறேன்.. 
ஆனால் நம் அனைவருக்கும் தெய்வம் அந்த நாராயணனே"
என்று பிரகலாதன் பதில் சொல்ல,
மகா ஆத்திரம் கொண்டான்..
"யாரடா நீ?.. சந்தன காட்டுக்குள் முளைத்த கருங்காலி மரமே...
அசுர குலத்தில் பிறந்து, எனக்கு மகனாக பிறந்தும், எப்படி உனக்கு இந்த புத்தி வந்தது?
உனக்கு யார் "நாராயணன் பரப்ரம்மம்" என்று சொன்னான்?.."
என்று மிரட்டி உண்மையை அறிந்து கொள்ள பார்த்தான்....
பிரகலாதன் பதில் சொல்லவில்லை...



நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத்
ந ச அந்யாயேன ம்ருச்சத:

"கேட்காமல் யாருக்கும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே..
நேர்வழி தவறி இருப்பவர்கள் விஷமமாக கேட்டாலும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே!!" என்று சாஸ்திரம் சொல்கிறது..

"நாராயணா என்ற சொல்லை யார் உனக்கு சொல்லி கொடுத்தார்கள்?" என்று தந்தை கேட்டும், அவன் கேட்பதில் விஷமம் உள்ளதால், பிரகலாதன் பதில்
சொல்லாமல் மௌனமாக இருந்தான்..

"நாரதர் தான் எனக்கு உபதேசம் கருவில் இருக்கும் போதே செய்தார்" என்று ரகசியத்தை சொல்லவில்லை.

நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்று அசுர குணம் கொண்ட ஹிரண்யகசிபு, தன்னிடம் இவன் சொல்ல தயங்கினாலும், இவனுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் கேட்டால் சொல்வான் என்று நினைத்து, அவர்களை கேட்க சொன்னான்.

"குரு கேட்டால் சிஷ்யன் எதையும் மறைக்க கூடாது.. யார் உனக்கு நாராயண நாமத்தை சொல்லி தந்தது"
என்று ஆசிரியர்கள் கேட்டும், ரகசியத்தை சொல்லவில்லை பிரகலாதன்..

உண்மையை சொன்னால், இவர்கள் தன் தந்தையிடம் சொல்லி விடுவார்கள் என்பதால், அதர்மத்துக்கு வழி செய்ய குருவே கேட்டாலும், சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்தார் பிரகலாதன்.

ஆனால், மனதில் ஒன்று நினைத்து, வெளியில் ஒன்று பேசும் குணம் குழந்தைகளுக்கு கிடையாது...

நாராயண நாமத்தின் மகிமையை தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளுக்கு சொல்லும் போது, அவர்கள் "யார் நாராயணன்.. யார் உனக்கு சொன்னார்கள்?" என்று கேட்ட பொழுது மறைக்காமல்
ரகசியத்தை அவர்களுக்கு சொன்னான் பக்த பிரகலாதன்.

இப்படி அசுர குலத்தில் பிறந்தும், ஹிரண்யகசிபுவுக்கே மகனாக பிறந்தும், அசுர குணங்கள் இல்லாமல், ஞானியாக,
"பிரகலாத ஆழ்வான்" என்றும்,
"பக்த பிரகலாதன்" என்றும் ஆனதற்கு, கயாது கருவுற்ற காலத்தில் அவள் கேட்ட ஸத் சங்கமே காரணம்..

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பிறவி குணங்கள் கூட, தாயின் ஸத் சங்கத்தால் மாறி விடும்.

தாய் கேட்காவிட்டாலும், ஸத் சங்கத்தில் இருந்து கொண்டிருந்தால், அவள் கருவில் உள்ள குழந்தையின் குணங்கள் மாறி, நல்ல குழந்தைகள் பிறக்கும்..

இந்த ரகசியம் நம் பாரத நாட்டில் இது நாள் வரை காக்கப்பட்டது..
கர்ப்ப காலங்களில் பெண்களை பிறந்த வீட்டுக்கு அனுப்புவது கூட அவள் வேலை சிரமம் கூட இல்லாமல் ஸத் சங்கத்தை அனுபவிப்பாள் என்பதற்காக தான்.



மன உளைச்சல் கொண்டு, பணத்திற்காக வேலைக்கு சென்று, ஸத் சங்கம் இல்லாமல் தின்று தூங்கி வழியும் பெண்கள், தாமஸ குணம் கொண்ட சோம்பேறிகளையும்,
கோபம், ஆத்திரம், பொறாமை வளர்க்கும் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கேளிக்கைகளில் பொழுது போக்கும் பெண்கள் ராஜஸ குணம் கொண்ட கோபப்படும் பொறாமைப்படும் குழந்தைகளை பெற்று விடுகின்றனர்.

வீட்டுக்கு வீடு நம் பாரத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வ சிந்தனை உடைவர்களாகவும், மகான்களாகவும், ஞானிகளாகவும் பிறந்தனர்.
இன்று வரை ஏறத்தாழ 90 சதவீத பாரத பெண்கள் கர்ப்ப காலங்களில் ஸத் சங்கத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் இந்த மண் நல்ல குழந்தைகளை தான் பெற்றுள்ளது.

1000 வருடங்கள், நம் பாரத நாட்டை அந்நிய மதங்கள் சூழ்ந்த போதும், வீட்டுக்கு வீடு தேசபற்றுள்ளவர்கள், தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ முடிந்ததற்கு காரணம் நம் ஹிந்து தாய்மார்களே..

இனி வருங்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகள், 
தேசபற்றுள்ளவர்களாக, 
தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ விரும்புபவர்களாக 
வாழ வழி செய்ய போவதும் நம் ஹிந்து தாய்மார்களே...

அசுர தகப்பனுக்கு, அசுர குலத்தில் பக்தனான பிரகலாதன் பிறந்தது போல, பெற்றவர்கள் தீய பழக்கம், குணம் கொண்டிருந்தாலும்,
நல்ல பிள்ளைகள் பிறக்க வழி செய்ய போவது கருவுற்று இருக்கும் பெண்களே.
கருவுற்று இருக்கும் தாய் நல்ல குழந்தைகளை பெற்று நம் பாரத நாட்டுக்கு தர வேண்டும்.



நம் பாரத நாட்டுக்கு, மகான்களை தேச பற்றுள்ளவர்களை, ஹிந்து தெய்வங்களை மதிக்கும் குழந்தைகளை பெற்று தர, கயாதுவை போன்ற தாய்மார்களே தேவை. 

வாழ்க ஹிந்து மதம்..
வாழ்க ஹிந்துக்கள்..



Wednesday 16 October 2019

பஜ கோவிந்தம் - Bhaja Govindham (भज गोविन्दं with meaning) - ஆதி சங்கரர் அருளிய பாடலின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்...


भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

Worship Govinda, worship Govinda
Let govindan be the objective of your worship, Oh foolish mind |


கோவிந்தனை பாடிடு, கோவிந்தனை பாடிடு
கோவிந்தனை பாடிடு, மூட மதியே!!




सम्प्राप्ते सन्निहिते काले
नहि नहि रक्षति डुकृङ्करणे ॥

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே

Regain real knowledge atleast at your end of death.
Your knowledge of grammar will not save you.

மரணம் உன்னை நெருங்கி வரும் முன்பே மெய் ஞானத்தை (உண்மையான அறிவை) பெற்று விடு.
நீ சம்பாதித்த உலக இலக்கண அறிவு எதுவும், உன்னை மரண காலத்தில் காப்பாற்றாது.

भज = Worship;
गोविन्दं = Govindan;
मूढमते = O, foolish mind;
सम्प्राप्ते = Regain real knowledge;
सन्निहिते = near
काले = Time (here: Death);
नहि = Not; never;
रक्षति = protects;
डुकृङ्करणे = the grammatical formula (knowledge)

मूढ जहीहि धनागम तृष्णां
कुरु सद्बुद्धिं मनसि वि तृष्णाम् ।

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

Oh foolish mind!
Give up your thirst to earn wealth.
Always Act With good thought without desirelessness in your heart.

செல்வம் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தை விட்டு விடு, மூட மதியே..
நல்ல எண்ணத்துடன், பலனில் ஆசை இல்லாமல் எந்த செயலையும் செய்.

यल्लभसे निज कर्मो पात्तं
वित्तं तेन विनोदय चित्तम् ॥

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
 
Whatever the wealth you obtained by your duty
Be content with that earning

நீ செய்த செயல்களுக்கு, பலனாக எத்தகைய செல்வம் (குறையோ, நிறையோ) கிடைத்து இருந்தாலும், அதை கொண்டே நிம்மதி/திருப்தி கொள்.

मूढ = Oh foolish mind
जहीहि = Give up
धन = Wealth;
आगम = earn;
तृष्णां = thirst;
कुरु = Do/act;
सद्बुद्धिं = good thought;
मनसि = in the mind;
वितृष्णां = desirelessness;
यल्लभसे = whatever you obtain;
निजकर्म = one's assigned duty
उपात्त = obtained;
वित्तं = wealth;
तेन = by that; with that;
विनोदय = divert/recreate(be happy);
चित्तं = mind;





नारी स्तन भरनाभी देशं
दृष्ट्वा मा गा मोहा वेशम् ।

நாரீ ஸ்தன பரநாபீ தேசம்
த்ருஷ்ட்வா மா கா மோஹா வேசம்

Do not get infatuated in delusion by going wild with passions and lust by seeing a woman's navel and breast.

பெண்ணின் தொப்புளையும், மார்பையும் கண்டு மோஹித்து காமத்தில் விழாதே.

एतन्मांस वसा दिविकारं
मनसि विचिन्तय वारं वारम् ॥

ஏதத் மாம்ஸ வசா திவிகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

These bodies are nothing but a appearance of flesh,fat, blood, skeleton etc. Fail not to remember this again and again in your mind.

இந்த உடல் அவயவங்கள் எல்லாம் உண்மையில் வெறும் மாமிச, ரத்த, எலும்பின் சேர்கை தானே... என்ற இந்த ஞானத்தை எப்பொழுதுமே உன் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தி கொண்டே இரு.

नारी = woman;
स्तनभर = breast
नाभीदेशं = navel part of body;
दृष्ट्वा = having seen;
मा गा = Don't go;
मोहावेशं = infatuated state
एतत् = this;
मांसवसादि = flesh, fat etc
विकारं = appearance
मनसि = in the mind;
विचिन्तय = think well;
वारं = again;
वारं = and again;



नलिनी दलगत जलमतितरलं
तद्वत् जीवितं अतिशय चपलम् ।

நளினீ தலகத் ஜலமதி தரலம்
தத் வத் ஜீவிதம் அதிசய சபலம்

Just like a rain drop trembling on a lotus leaf, life is just an unstable wonder.

தாமரை இலையில் உள்ள நீர் துளி நிலைகொள்ளாமல் இருக்கும்.
மனித வாழ்க்கையும் தாமரை இலையில் உள்ள நீர் போன்ற நிலையில்லாத அதிசயமே..

विद्धि व्याधि अभिमान ग्रस्तं
लोकं शोकहतं च समस्तम् ॥

வித்தி வ்யாதி அபிமான் க்ரஸ்தம்
லோகம் சோக ஹதம் ச சமஸ்தம்

Know that the entire people in this world have been caught to disease, ego (self importance) and grief.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நோயாலும், துக்கத்தாலும், அகங்காரத்தாலும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை மறவாதே


नलिनीदलगत = lotus petal;
जलं = water(drop);
अतितरलं = trembling;
तद्वत् = like that;
जीवितं = life;
अतिशय = wonderful;
चपलं = unstable;
विद्धि = know for sure;
व्याधि = disease;
अभिमान = self-importance;
ग्रस्तं = having been caught/seized;
लोकं = world;people;
शोकहतं = grief;
च = and;
समस्तं = entire;





यावद्वित्तो पार्जन सक्त
स्तावन्निज परिवारो रक्तः ।

யாவத் வித்தோ பார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:

As long as you are earning and healthy
Till then really, family will have attachment with you.

ஆரோக்கியத்தோடு,
எது நாள் வரை நீ பொருள் ஈட்டுகிறாயே,
அது நாள் வரை நிஜமாகவே சொந்தங்கள் உன்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கும்.

पश्चाज्जीवति जर्जर देहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே

But later when one became old, then there may be none at home to even enquire.

பிற்கால வாழ்க்கையில், உன் உடல் முதுமையை அடையும் போது, உன்னிடம் நலம் விசாரித்து பேசுவதற்கு கூட யாரும் வரப்போவதில்லை.

यावत् = so long as;
वित्त = wealth;
उपार्जन = earning/acquiring;
सक्तः = capable of;
तावन्निज = really till then;
परिवारः = family;
रक्तः = attached;
पश्चात् = later;
जीवति = while living(without earning);
जर्जर = old/digested (by disease etc);
देहे = in the body;
वार्तां = word (here enquiry/inquiry);
कोऽपि = even one;
न = not;
पृच्छति = inquire;
गेहे = in the house;






यावत्पवनो निवसति देहे
तावत्पृच्छति कुशलं गेहे ।

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே

As long as your body breath (alive), others will enquire kindly about your welfare.

எது நாள் வரை உன் உடலில் சுவாசம் ஓடுகிறதோ, அது நாள் வரை மற்றவர்கள் உன் நலன் குறித்து விசாரிப்பார்கள்.

गतवति वायौ देहापाये
भार्या बिभ्यति तस्मिन्काये ॥

கதவதி வாயோ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

But when the soul departs from the body, even the wife will fear of the corpse (dead body).

எந்த நாளில் உன் உடலை விட்டு சுவாசம் பிரியுமோ, அன்று உன் மனைவி கூட உன் பிண தேகத்தை பார்த்து பயப்படுவாள்.

यावत् = so long as;
पवनः = air/breath;
निवसति = lives/dwells;
देहे = in the body;
तावत् = till then;
पृच्छति = asks/inquires;
कुशलं = welfare;
गेहे = in the house;
गतवति = while gone;
वायौ = air(life-breath/soul);
देहापाये = when life departs the body;
भार्या = wife;
बिभ्यति = is afraid/fears;
तस्मिन्काये = in that body;




बालस्तावत् क्रीडा सक्तः
तरुणस्तावत् तरुणी सक्तः ।


பால தாவத் க்ரீடா சக்த:
தருண தாவத் தருணீ சக்த:

The childhood is lost by attachment to playfulness.
Youth is lost by attachment to woman.

பால்ய பருவத்தை விளையாட்டில் தொலைத்து விடுகிறாய்,
இளமை காலத்தை காமத்தில் தொலைத்து விடுகிறாய்.

वृद्धस्तावत् चिन्तासक्तः
परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥

வ்ருத்த தாவத் சிந்தா சக்த:
பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்த:

Old age is lost by worries.
But there is hardly anyone who wants to be lost in parabrahman.

முதுமை காலத்தை மனதில் துக்கத்தை வளர்த்து கொண்டு தொலைத்து விடுகிறாய்.
பரப்ரம்மத்திடம் தன்னை தொலைத்து கொள்பவர்கள் இல்லையே!!

बालः = young boy;
तावत् = till then (till he is young);
क्रीडा = play;
सक्तः = attached/absorbed/lost;
तरुणः = young man;
तावत् = till then;
तरुणी = young woman;
सक्तः = attached/absorbed/lost;
वृद्धः = old man;
तावत् = till then;
चिन्ता = worry;
सक्तः = attached/absorbed/lost
परमे = in the high;supreme;
ब्रह्मणि = Brahman ;God;
कोऽपि = even one;
न = not;
सक्तः = attached/absorbed/lost


का ते कान्ता कस्ते पुत्रः
संसारोऽयमतीव विचित्रः ।

கா தே காந்தா க: தே புத்ர:
சம்சாரோ அயம் அதீவ விசித்ர:

Who is your wife ?
Who is your son ?
This samsaara, the world life is just a great mystery.

மனைவி யார்? புத்ரன் யார்? பல விதமான விசித்திரங்கள் தானே இந்த உலக வாழ்க்கை.

कस्य त्वं कः कुत आयात:
तत्त्वं चिन्तय तदिह भ्रातः ॥

கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

From where have you come ? Brother, think over that truth here.

நீ எங்கிருந்து இந்த உலகத்துக்கு வந்துள்ளாய்? சகோதரா.. கொஞ்சம் உண்மையை இங்கேயே உணர்ந்து பார்.

का ते = who is your;
कान्ता = wife;
कस्ते = who is your;
पुत्रः = son;
संसारः = world/family;
अयं = this;
अतीव = great/very much;
विचित्रः = mysterious;
कस्य = whose;
त्वं = you;
कः = who;
कुतः = from where;
आयातः = have come;
तत्त्वं = truth;
चिन्तय = think well/consider;
तदिह = that here;
भ्रातः = brother;




सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।

ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம்
நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்

From satsanga, company of spiritually inclined good people, comes non-attachment.
From non-attachment comes freedom from delusion.

மெய்ஞானத்தில் உயர்ந்த மகாத்மாக்களின் சத்சங்கம், உலக விஷயங்களில் உனக்கு உள்ள ஆசையை அழித்து தனிமையை நாட வைக்கும்.
அந்த ஆசை அழிந்த தனிமை, உன்னை உலக மாயையிலிருந்து விலக செய்யும்.

निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥

நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

From freedom from delusion, comes tranquillity/self-settledness.
From self-settledness comes Jeevan mukti (moksha).

உலக மாயை உன்னிடமிருந்து விலகும் போது, சத்தியமான சுத்தமான ப்ரம்ம தத்துவம் புரியும்.
சுத்தமான ப்ரம்ம தத்துவம் புரிந்தவன், மோக்ஷத்தை பெற்று மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுகிறான்.

सत्सङ्गत्वे = in good company;
निस्सङ्गत्वं = aloneness/non-attachment/detachment;
निर्मोहत्वं = freedom from delusion;
निश्चलतत्त्वं = tranquillity/self-settledness
जीवन्मुक्तिः = salvation from bondage of birth;



वयसि गते कः कामविकारः
शुष्के नीरे कः कासारः ।

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: கா சார:

What good is lust when youth has fled ?
What use is a lake which has no water ?

இளமை காலம் போன பின், காமம் இருந்தும் பயனில்லையே.
தண்ணீர் இல்லாது போன பின், ஏரி இருந்து பயனில்லையே.

क्षीणे वित्ते कः परिवारः
ज्ञाते तत्त्वे कः संसारः ॥

க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்சார:

Where are the relatives when wealth is gone ?
Where is samsAra, the world, when the Truth is known ?

செல்வத்தை செலவழித்தவனுக்கு சொந்தங்கள் இருந்தும் பயனில்லையே..
ப்ரம்ம தத்துவத்தை அறிந்தவனுக்கு இந்த சம்சார உலகம் இருந்தும் அவனுக்கு  பயனில்லையே..

वयसि गते = when age has gone;
कः = what( use) is the;
कामविकारः = sensual/sexual attraction;
शुष्के = in the drying up of;
नीरे = water;
कः = what( use) is the;
कासारः = lake;
क्षीणे = spent-up;
वित्ते = wealth;
कः = what( use) for;
परिवारः = family(is there?);
ज्ञाते = in the realised state;
तत्त्वे = truth;
कः = what (use) is;
संसारः = world/family bond;



मा कुरु धन जन यौवन गर्वं
हरति निमेषात्कालः सर्वम् ।

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்

Do not boast of wealth, friends, and youth.
Each one of these are destroyed within a minute by time.

உன்னிடம் உள்ள செல்வத்தையும், சொந்தங்களையும், இளமையையும் கண்டு எப்பொழுதும் கர்வம் கொள்ளாதே..
இவை அனைத்தும் கால வெள்ளத்தில் நொடியில் அழிந்து போகும்.





माया मयमिदं अखिलं हित्वा
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥

மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

Free yourself from the illusion of the world of Maya (filled with delusion)
You have the prime duty to enter the place of paramabrahma.

மாயையால் நிரம்பி இருக்கும் இந்த உலகத்தை தள்ளி விடு.
நீ பரமாத்மாவின் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டியவனல்லவா

मा = do not;
कुरु = do/act;
धन = wealth;
जन = people;
यौवन = youth;
गर्वं = arrogance/haughtiness;
हरति = takes away/steals away;
निमेषात् = in the twinkling of the eye;
कालः = Master Time;
सर्वं = all;
माया = delusion;
मयं = completely filled;
इदं = this;
अखिलं = whole/entire;
हित्वा = free/Give up/abandoned;
ब्रह्मपदं = god-place (vaikunda);
त्वं = you;
प्रविश = enter;
विदित्वा = as a duty;


दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।

தினயாமின்யோ சாயம் ப்ராத:
சிசிர வசந்தோ புனராயாத:

Daylight and darkness, dusk and dawn, winter and springtime come and go.

இரவும், பகலும்; காலையும், மாலையும்; குளிரும், வசந்தமும் போனாலும் மீண்டும் மீண்டும் வருகிறது.


कालः क्रीडति गच्छत्यायु:
तदपि न मुञ्चत्याशावायुः ॥

கால: க்ரீடதி கச்சதி ஆயு:
ததபி ந முஜ்சதி ஆசா வாயு:

Time plays and life goes away. But the smell of desire never leaves us (and come again in next birth if you don't give up now)

காலத்தின் விளையாட்டில் ஆயுசு கரைகிறது..
உன் ஆயுசு கரைந்தாலும், உலகத்தின் மீது உனக்கு உள்ள வாசனைகள் (ஆசை) கரையாமல் மீண்டும் மீண்டும் வருகிறது, மறுபிறவி ஏற்படுகிறது.

दिनयामिन्यौ = day night;
सायं = evening;
प्रातः = morning;
शिशिर = frosty season;
वसन्तौ = Spring season;
पुनः = again;
आयातः = have arrived;
कालः = Master Time;
क्रीडति = plays;
गच्छति = goes (away);
आयुः = life/age;
तदपि = even then;
न = not;
मुञ्चति = releases;
आशा = desire;
वायुः = smell of sense (the wind of desire does not let off its hold);




का ते कान्ता धनगतचिन्ता
वातुल किं तव नास्ति नियन्ता ।

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா

Oh mad man ! Why are you spending your thoughts of wealth and woman ? Is there no one to guide you ?

எதற்காக பெண்ணை பற்றியும், செல்வத்தை பற்றியுமே, சிந்தித்து கொண்டிருக்கிறாய்?
ஓ மூட மதியே!! உனக்கு வழி காட்ட யாரும் இல்லையோ?

त्रिजगति सज्जन सङ्गतिरेका
भवति भवार्णवतरणे नौका ॥

த்ரிஜகதி சஜ்ஜன் சங்கதிரேகா
பவதி பவார்னவதரனே நௌகா

There is only one thing in three worlds that can save you from the ocean of samsAra.
Get into the boat of satsanga, company of good people, quickly who can help you cross the ocean of birth and rebirth (samsaara)

மூவுலகிலும் உன்னை சம்சார (பிறவி) கடலில் இருந்து மீட்கவல்லது 'சத்சங்கம்' ஒன்றே.
சாதுக்கள் மகான்கள் இருக்கும் சத்சங்கம் என்ற படகில் ஏறி சம்சார (பிறவி) கடலை கடந்து விடு.

का ते = why you
कान्ता = wife;
धन = wealth;
गतचिन्ता = thinking of;
वातुल = O mad one!;
किं = what?;
तव = your;
नास्ति = is not there;
नियन्ता = guide;
त्रिजगति = in the three worlds;
सज्जन = good people;
संगतिरेका = company only way;
भवति = becomes;
भवार्णव = birth and death ocean;
तरणे = in crossing;
नौका = boat/ship;



अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்

Body gets weakened, head gets grey hair. Mouth loses all its teeth.

வயது ஆக ஆக, உடல் தன் பலத்தை இழக்கிறது. தலை நரை ஆகிறது. பற்கள் விழுந்து பொக்கை வாய் ஆகிறது.

वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஜ்சதி ஆசா பிண்டம்

With such state, old man holds a walking stick. Yet, not interested to give up his worldly desires.

நடக்க முடியாமல் குச்சி வைத்து நடக்கும் நிலை வந்தும், உள்ளிருக்கும் ஆசைகள் விடவில்லையே!!

अङ्गं = body;
गलितं = weakened;
पलितं = ripened(grey);
मुण्डं = head;
दशनविहीनं = teeth+bereft;
जातं = having become;
तुण्डं = jaws/mouth;
वृद्धः = the old man;
याति = goes;
गृहीत्वा = holding the;
दण्डं = stick(walking);
तदपि = then even;
न = not;
मुञ्चति = lets go/releases/gives up;
आशापिण्डं = desire




कुरुते गङ्गासागर गमनं
व्रत परिपालनं अथवा दानम् ।

குருதே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்

One may go to Gangasagar, observe fasts, and give away riches in charity !

கங்கை கரையிலேயே வசிக்கலாம். அங்கே விரதம் இருக்கலாம்.. தன் செல்வத்தை எல்லாம் கூட தானம் செய்து விடலாம்..


ज्ञान विहीनः सर्वमतेन
मुक्तिं न भजति जन्मशतेन ॥

ஞான விஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஸ தேன

Yet, devoid of jnana, nothing can give mukti even if they born hundred times.

என்ன செய்தாலும், மெய்ஞானம் ஏற்படாதவரை நூறு ஜன்மமானாலும் மோக்ஷம் கிடைக்காது..

कुरुते = one takes resort to;
गङ्गासागर = the sea of Ganga (banks of the Ganges);
गमनं = going;
व्रत = austerities;
परिपालनं = observance/governance;
अथवा = or/else;
दानं = charity;
ज्ञानविहीनः = (but)bereft of knowledge of the Self;
सर्वमतेन = according to all schools of thought/unanimously;
मुक्तिं = salvation/freedom;
न = not;
भजति = attains;
जन्म = birth(s);
शतेन = hundred;

सुरमंदिर तरु मूल निवासः
शय्या भूतलं अजिनं वासः ।

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:

You can have a residence in a temple or below a tree and sleep on mother earth as your bed.

நீ கோவில் வாசலிலேயே கூட குடி இருக்கலாம். மரத்தின் அடியிலேயே கூட வாழலாம். எதுவும் தேவை இல்லை என்று தாய் மண்ணையே படுக்கையாக கூட நினைத்து படுக்கலாம்.

सर्व परिग्रह भोगत्यागः
कस्य सुखं न करोति विरागः ॥

ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

You can also Give up all attachments and comforts.
But still, only those Blessed souls will get that real happiness who has  such vairgya, in his heart.

உன்னுடைய பற்றுதலை சுகங்களை கூட விட்டு விடலாம். 
எது செய்தாலும், மனதில் வைராக்யம் இல்லாமல் எது செய்தாலும் சுகம் தராது. 
உண்மையான வைராக்யம் உள்ளவர்களை தவிர யாருக்கு உண்மையான சுகம் கிடைக்கப்போகிறது?


सुरमन्दिर = temple of god;
तरु = tree;
मूल = root;
निवासः = living;
शय्या = bed;
भूतलं = on the surface of the earth;
अजिनं = skin (of Antelope);
वासः = living;
सर्वपरिग्रह = all attachments;
भोगत्यागः = sacrificing/abandonment of enjoyable things/worldly pleasures;
कस्य = whose;
सुखं = happiness;
न = not;
करोति = does;
विरागः = Non-attachment/desirelessness;



योगरतो वा भोगरतो वा
सङ्गरतो वा सङ्गविहीनः ।

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:

One may take delight in yoga or bhoga.
One may have attachment to worldly things or detachment to worldly things.

சிலர் யோகத்தில் ரமிக்கிறார்கள்.
சிலர் போகத்தில் ரமிக்கிறார்கள்.
சிலர் உலக ஆசையுடன் இருக்கிறார்கள்.
சிலர் உலக ஆசையில்லாமல் இருக்கிறார்கள்.


यस्य ब्रह्मणि रमते चित्तं
नन्दति नन्दति नन्दत्येव ॥

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

But only he whose mind steadily gets immersed in Brahman enjoys bliss, only him, no one else.

ஆனால், யாருடைய சித்தம் பரப்ரம்மத்தை பற்றியே நினைத்து ரமிக்கிறதோ, அவர்களே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமே உண்மையான ஆனந்தம் அனுபவிக்கிறார்கள்.

योगरतः = indulging in yoga;
वा = or;
भोगरतः = indulging in worldly pleasures;
वा = or;
सङ्गरतः = indulging in good company;
वा = or;
सङ्गविहीनः = bereft of company;
यस्य = whose;
ब्रह्मणि = in Brahman(God);
रमते = gets immersed;
चित्तं = mind (here soul);
नन्दति = bliss;
नन्दत्येव = bliss alone;


भगवद्गीता किञ्चिद धीता
गङ्गा जललव कणिका पीता ।

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா

Study a portion of bhagavath gita at least.
Drink atleast a drop of ganga water.

உன்னுடைய வாழ்க்கையில், பகவத் கீதையில் உள்ள ஒரு சில ஸ்லோகங்களையாவது நீ படித்து இருந்தால்,
கங்கை ஜலத்தில் ஒரு துளியாவது நீ குடித்து இருந்தால்,

सकृदपि येन मुरारिसमर्चा
क्रियते तस्य यमेन न चर्चा ॥

ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா

Worship atleast once lord krishna who holds his flute
then yama will not have  any discussion about you.

கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் பரப்ரம்மமான கண்ணனை ஒரு முறையேனும் நீ வழிபட்டு இருந்தால்,
யம தர்மன், உன்னை பற்றி விஜாரிக்க கூட மாட்டாரே.

भगवद् = god's;
गीता = song (here the scripture `bhagavatgItA');
किञ्चित् = a little;
अधीता = studied;
गङ्गा = river Ganga;
जललव = water drop;
कणिका पीता = a little droplet, drunk;
गङ्गाजललव कणिका पीता = Even a little drop of Ganga water;
सकृदपि = once even;
येन = by whom;
मुरारि = the enemy of `MurA' (Lord Krishna);
समर्चा = well worshipped;
क्रियते = is done;
तस्य = his;
यमेन = by Yama, the lord of Death;
न = not;
चर्चा = discussion;


पुनरपि जननं पुनरपि मरणं
पुनरपि जननीजठरे शयनम् ।

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்

There is birth again and again.
There is death again and again.
One has to lay in mother's womb every time again and again.

பல முறை பிறந்து ஆயிற்று..
பல முறை இறந்து ஆயிற்று..
பல முறை தாயின் கருவில் இருந்து ஆயிற்று..

इह संसारे बहुदुस्तारे
कृपयाऽपारे पाहि मुरारे ॥

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

It is indeed hard to cross this boundless ocean of samsAra. Oh Murari ! Save me through your ocean of mercy.

இந்த சம்சாரம் என்ற பிறவி கடலை கடப்பது என்பது கடினமானது. ஓ முராரி (கண்ணா), உன் கருணையால் என்னை இந்த சம்சார கடலில் இருந்து கரை ஏற்று. 


पुनरपि = again again;
जननं = birth;
पुनरपि = again again;
मरणं = death;
पुनरपि = again again;
जननी = mother;
जठरे = in the stomach;
शयनं = sleep;
इह = in this world/here;
संसारे = family/world;
बहुदुस्तारे = fordable with great difficulty;
कृपयाऽपारे = out of boundless compassion;
पाहि = protect;
मुरारे = Oh MurA's enemy!(KriShNa);




कस्त्वं कोऽहं कुत आयातः
का मे जननी को मे तातः ।

கஸ்த்வம் கோ அஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத:

Who are you ? Who am I ? From where do I come ? Who is my mother, who is my father ?

நீ யார்? நான் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நமக்கு யார் தாய்? யார் தந்தை?


इति परिभावय सर्वमसारम्
विश्वं त्यक्त्वा स्वप्नविचारम् ॥

இதி பரிபாவ்ய சர்வம் அசாரம்
விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்

Thus, look at everything as essence-less and give up the world which is just as an  dream imagination.

உண்மையை உன் மனோபாவத்தால் புரிந்து கொண்டு, இங்குள்ள அனைத்துமே ரசிக்கத்தக்கதல்ல, இது ஒரு மாய உலகம் என்பதை அறிந்து கொள்.


कः = who (are);
त्वं = you;
कः = who(am);
अहं = I;
कुतः = whence;
आयातः = has come;
का = who;
मे = my;
जननी = mother;
कः = who;
मे = my;
तातः = father;
इति = thus;
परिभावय = visualize;
सर्वं = the entire;
असारं = worthless/without essence;
विश्वं = world;
त्यक्त्वा = give up/sacrifice;
स्वप्न = dream;
विचारं = thinking/imagination;


त्वयि मयि चान्यत्रैको विष्णु:
र्व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।

த்வயீ மயி ச அன்யத்ரேகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:

In me, in you and in everything, none but the same Vishnu dwells. Your anger and impatience is meaningless.

உன்னிடத்திலும், என்னிடத்திலும், எங்கும் விஷ்ணுவே இருக்கிறார். 
நீயும், உலகமும் விஷ்ணுவின் அங்கம் என்ற போது, உனக்கு (உன் மீதோ, பிறர் மீதோ) ஏற்படும் கோபமும், பொறுமையின்மையும் அர்த்தமில்லாதது.

भव समचित्तः सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥

பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாச்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்

Keep inform your mind and thought that vishnu only is everywhere including you.
If you wish to the presence of Vishnu everywhere including you, start seeing everything as you by now, without any difference.

நீ அந்த விஷ்ணுவை உன் அனுபவத்தில் கொண்டு வர ஆசைப்பட்டால், நீயும், பிறரும், உலகமும் 'விஷ்ணுவே' என்ற சம நோக்கு பார்வையை இன்றிலிருந்தே கடைபிடி.

त्वयि = in yourself;
मयि = in myself;
चान्यत्रैक = and+everywhere+only one;
विष्णुः = the Lord MahAviShNu;
व्यर्थं = in vain ; for nothing;purposeless;
कुप्यसि = you get angry;
मय्यसहिष्णु = in me+intolerant;
भव = become;
समचित्तः = equal-minded/equanimity;
सर्वत्र = everywhere;
त्वं = you;
वाञ्छसि = you desire;
अचिराद् = without delay/in no time;
यदि = if;
विष्णुत्वं = the quality/state of Brahman/god-realisation;


शत्रौ मित्रे पुत्रे बन्धौ
मा कुरु यत्नं विग्रहसन्धौ ।

சத்ரோ மித்ரே புத்ரே பந்தோ
மா குரு யத்னம் விக்ரஹ சந்தொள

Do not waste your efforts to expand your existence by hating someone to create enemy and winning love over friend, children and relatives.

நீ இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுவதாக நினைத்து கொண்டு, எதிரிகளை எதிர்த்து கொண்டும், நண்பர்கள், பிள்ளைகள், உறவினர்களுக்காக நேரத்தை செலவு செய்தும் கொண்டும், உன் காலத்தை (ஆயுளை) வீண் செய்யாதே.

सर्वस्मिन्नपि पश्यात्मानं
सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ||

ஸர்வஸ்மின் அபி பஸ்ய ஆத்மானம்
ஸர்வத்ரோ ஸ்ருஜ பேதா ஞானம்

See yourself in everyone and give up all all feelings of duality completely.

மற்றவர்கள் வேறு, நீ வேறு என்று நீ பேதமாக பார்ப்பதால் தானே இந்த வீண் முயற்சிகள் செய்கிறாய். 
அனைத்தும் விஷ்ணுமயம் என்று நீ உணர, வேறுபாடுகளை உன் மனதிலிருந்து களைந்து விடு.

शत्रौ = in (towards)the enemy;
मित्रे = in (towards) the friend;
पुत्रे = in(towards) the son;
बन्धौ = in (towards) relatives;
मा = don't;
कुरु = do;
यत्नं = effort;
विग्रहसन्धौ = expanding existence;
सर्वस्मिन्नपि = in all beings;
पश्यात्मानं = see your own self;
सर्वत्र = everywhere;
उत्सृज = give up;
भेदाज्ञानं = difference/otherness/duality;



कामं क्रोधं लोभं मोहं
त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम् ।

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா ஆத்மானம் பாவ்ய கோ அஹம்

Give up lust, anger, infatuation, and greed. Ponder over your real nature.

காமத்தை (ஆசை), கோபத்தை, லோபத்தை (பண பேராசை), மோகத்தை (விருப்பம்) விடு. நீ யார்? என்ற ஆத்ம சிந்தனை செய்.

आत्मज्ञान विहीना मूढा
स्ते पच्यन्ते नरकनिगूढाः ॥

ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரக நிகூடா:

Fools are those who don't have awareness of who they are (self knowledge of Athma). These fools will get cooked in the hell (and return back to Samsara to reborn).

தான் யார் என்று ஆத்ம சிந்தனை கூட செய்யாதவன் மூடன். ஆத்ம சிந்தனை செய்யாமல் வாழ்பவன் நரகத்தில் கஷ்டங்களை அனுபவித்து விட்டு மீண்டும் பிறப்பான்.

कामं = desire;
क्रोधं = anger;
लोभं = greed;
मोहं = infatuation;
त्यक्त्वाऽत्मानं = having abandoned see as one's own self;
भावय = deem/consider/visualise/imagine;
कोऽहं = who am I;
आत्मज्ञान = knowledge of self;
विहीना = bereft;
मूढा = fools;
ते = they;
पच्यन्ते = are cooked?;
नरक = in the hell;
निगूढा = cast in;


गेयं गीता नाम सहस्रं
ध्येयं श्रीपति रूपम जस्रम् ।

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்

Read Bhagavath Gita and chant Lord Krishna name 1000 times.
Meditate the image of Mahalakshmi's Husband Vishnu who is unborn and forever exist in your heart.

பகவத்கீதையை படித்து கொண்டு, ஹரியின் நாமத்தை 1000 முறை சொல்லிக்கொண்டு இரு.
உன் இதயத்தில் யாருக்கும் பிறக்காத சுயம் பிரகாசமான விஷ்ணுவை (மஹாலக்ஷ்மியின் கணவரை) எப்பொழுதும் தியானித்து கொண்டே இரு.

नेयं सज्जन सङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम् ॥

நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

Take steps to accompany yourself to be with good people. 
Distribute your wealth in charity to the poor and the needy.

உன் மனதை சாதுக்கள் இருக்கும் சங்கத்துடனேயே சேர்த்துக்கொள்.
உன் செல்வத்தை தர்ம வழியில் ஏழைகளுக்கு தர்மம் செய்.

गेयं = is to be sung;
गीता = bhagavatgItA;
नाम = name of the lord;
सहस्रं = 1000 times;
ध्येयं = is to be meditated;
श्रीपति = LakShmi's consort MahAviShNu's;
रूपं = form/image;
अजस्रं = the unborn one;
नेयं = is to be lead/taken;
सज्जन = good people;
सङ्गे = in the company;
चित्तं = mind;
देयं = is to be given;
दीनजनाय = to the poor people;
च = and;
वित्तं = wealth;

सुखतः क्रियते रामाभोगः
पश्चाद्धन्त शरीरे रोगः ।

சுகத: க்ரியதே ராமா போக:
பஸ்சாத் தந்த சரீரே ரோக:

He who yields to lust for pleasure, leaves his body a prey to disease.

யார் ஒருவன் தன் உடலை காமத்தை அனுபவிக்க செலவழிக்கிறானோ, அவன் கடைசி காலத்தை நோயில் அனுபவிக்கிறான்.

यद्यपि लोके मरणं शरणं
तदपि न मुञ्चति पापाचरणम् ॥

யத்யபி லோகே மரணம் சரணம்
தத் அபி ந முஜ்சதி பாபா சரணம்

Though death brings an end to everything, man does not give-up the smell of doing sin (which results in rebirth).

அப்படிப்பட்டவனுக்கு மரணம் இந்த பிறவிக்கு ஒரு முடிவை தந்தாலும், அந்த பாப ஜீவன் தன்னுடன் இந்த பாப வாசனையை தன்கூடவே எடுத்து செல்கிறான். (இதனால் மறுஜென்மம் ஏற்படுகிறது)

सुखतः = for happiness;
क्रियते = is done;
रामाभोग = sexual pleasures?;
पश्चाद्धन्त = later on in the end;
शरीरे = in the body;
रोग = disease;
यद्यपि = even though;
लोके = in the world;
मरण = death;
शरणं = resort/surrender;
तदपि = even then;
न = not;
मुञ्चति = releases/gives up;
पापाचरणं = sin-practicing;




अर्थमनर्थं भावय नित्यं
नास्तिततः सुखलेशः सत्यम् ।

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்

Remember everyday that wealth is always meaningless.
The truth is that one cannot get sustained happiness from the wealth alone.

செல்வம் என்பது அர்த்தமில்லாத விஷயம் என்று எப்பொழுதும் மனதில் நினைவில் கொள். 
செல்வத்தால் சத்யமாக ஒரு துளி கூட சுகம் கிடைக்காது. 

पुत्रादपि धनभाजां भीतिः
सर्वत्रैषा विहिता रीतिः ॥

புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

Those who are after money even fear their own son 
That is the way of wealth always.

செல்வம் வைத்து இருப்பவன், தன் பிள்ளைகள் பிடுங்கி கொள்வார்களோ என்று கூட பயப்படுவான்..
இப்படி தான் செல்வத்தின் இயல்பு எப்பொழுதுமே உள்ளது.

अर्थं = wealth;
अनर्थं = purposeless/in vain/danger
भावय = deem/consider/visualise;
नित्यं = daily/always;
न = not;
अस्ति = is;
ततः = from that;
सुखलेशः = (even a little) happiness;
सत्यं = Truth;
पुत्रादपि = even from the the son;
धन = wealth;
भाजां = acquiring people;
भीतिः = fear;
सर्वत्र = everywhere;
एषा = this;
विहिता = understood;
रीतिः = procedure/practice/custom;


प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम् ।

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா நித்ய விவேக விசாரம்

Regulate the Prana (breathing),
Regulate the food intake,
Use your mind to distinguish permanent and temporary things to remain unaffected.

பிராணனின் (மூச்சு) போக்கை சீர்படுத்து.
உணவில் கட்டுப்பாடு கொள்.
அறிவை கொண்டு எது நிலையானது, எது நிரந்தரமற்றது என்று பார்.

जाप्यसमेत समाधिविधानं
कुर्ववधानं महदवधानम् ॥

ஜாப்யசமேத சமாதி விதானம்
குர்வ வதானம் மஹத் அவதானம்

Chant the holy name of God with peaceful mind. Perform these with care, with extreme care.

பர-ப்ரஹ்மமான கோவிந்தனின் நாமத்தை சொல்லி கொண்டே இரு. இந்த பயிற்சியை கவனுத்துடன், மனதை அலையவிடாமல் மிக கவனுத்துடன் செய்து கொண்டே இரு.

प्राणायाम = breath-control;
प्रत्याहार = diet-control;
नित्यं = always/daily/certain;
अनित्य = uncertain/temporary/ephemeral/transient;
विवेक = awareness after reasoning;
विचार = thought/considered conclusion/opinion;
जाप्यसमेत = with chanting of the names of the lord;
समाधिविधान = in the state of silence;
कुर्ववधानं = pay attention;
महदवधानं = great care attention;



गुरुचरणाम्बुज निर्भरभक्तः
संसारा दचिराद्भव मुक्तः ।

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:

One who is a devotee of the lotus feet of the Guru ! May be soon free from Samsara.

மகாத்மாவான குருவின் சரணத்தை நீ பற்றினால் மட்டுமே, உன்னால் இந்த சம்சார பிறவி கடலை கடக்க முடியும்.

सेन्द्रिय मानस नियमादेवं
द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥

ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

Through disciplined senses and controlled mind, you will experience the indwelling Lord in your heart !

குருவின் சரணத்தை பற்றி, எண்ணங்களை உலக விஷயங்களில் சிதறவிடாமல், புலன்களை அடக்கி வாழ ஆரம்பிக்கும் போது, பரப்ரம்மமாகிய கோவிந்தன் இதயத்தில் இருப்பதை நீ உணருவாய்.


गुरुचरणाम्बुज = the lotus feet of the teacher/guru;
निर्भर = dependent;
भक्तः = devotee;
संसारात् = from the world;
अचिराद्भव = in no time from the cycle of birth and death;
मुक्तः = released;
सेन्द्रियमानस = sa+indriya+mAnasa, with senses and mind;
नियमादेव = control alone(niyamAt eva);
द्रक्ष्यसि = you will see;
निज = one's own;
हृदयस्थं = heart-stationed;
देवं = God;

भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

Worship Govinda, worship Govinda, worship Govinda, Oh fool !

கோவிந்தனை பாடிடு, கோவிந்தனை பாடிடு
கோவிந்தனை பாடிடு, மூட மதியே!!


नामस्मरणात् अन्य उपाय
नहि पश्यामो भवाब्धितरणे ॥

நாம ஸ்மரணாத் அன்ய உபாய
நஹி பஸ்யாமோ பவாப்தி தரனே

Other than chanting the Lord's names, there is no other way to cross the life's ocean.

சம்சார பிறவி கடலை கடக்க, கோவிந்தனின் நாமத்தை பாடுவதை தவிர, வேறு வழியே இல்லை..


भज = worship;
गोविन्दं = lord Govinda;
मूढमते = Oh foolish mind!;
नामस्मरणात् = (except) through/from remembrance of the Lord's name; अन्य = other;
उपाय = plan/method/means;
नहि = not;
पश्याम = we see;
भवतरणे = for crossing the ocean of births deaths;


श्री भगवत्पाद शंकराचार्य
Shankara Bhagavatpaada
சங்கர பகவத்பாதர்

Interested to Read More? Click Here -> How Great People handle death of their beloved people?