Followers

Search Here...

Showing posts with label பெயர்கள். Show all posts
Showing posts with label பெயர்கள். Show all posts

Wednesday 22 March 2023

கார்கோடகன், வாசுகி, தக்ஷகன், போன்ற பாம்புகள் பல. அதில் முக்கியமான பாம்புகள் என்னென்ன? அவைகள் பெயர்கள் என்ன? கத்ரு பெற்ற பிள்ளைகள் பற்றி அறிவோம்.. வியாசர் மகாபாரதம்...

ப்ரம்மாவின் மானஸ புத்திரர் "காஸ்யபர்". 

உலக ஸ்ருஷ்டி செய்யுமாறு ப்ரம்ம தேவன் சொன்னார்.

"தேவர்களை" அதிதியை கொண்டும், 

"அசுரர்களை" திதியை கொண்டும், 

"அருணன் மற்றும் கருடனை" வினதாவை கொண்டும்,

"கணக்கில்லாத ஸர்ப்பங்களை" கத்ருவை கொண்டும் படைத்தார்.


அருணன் சூரியனுக்கு தேர் ஓட்ட சென்றார்.


கருடன் விஷ்ணுவுக்கு வாகனமாக சென்றார்.

கணக்கில்லாத ஸர்ப்பங்கள் பெயர் அனைத்தையும் சொல்ல இயலாது. 

மிக முக்கியமான சில ஸர்ப்பங்கள் பெயரை ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பிக்கிறார்.


ஆதி சேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாக பாற்கடல் சென்றார்.


வாசுகி பாற்கடல் கடையும் போது உதவி செய்தது. வாசுகியின் தங்கை "ஜரத்காரு"வை அதே பெயர் கொண்ட ஜரத்காருவுக்கு மணம் செய்து கொடுத்தார். அவர் பிள்ளை "ஆஸ்தீகர்" ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகத்தை தடுத்தார்.


தக்ஷகன் பரீக்ஷித் மரணத்திற்கு காரணமாக இருந்தது.


காளியன் கிருஷ்ணா அவதார சமயத்தில் ப்ருந்தாவனத்தில் வந்து ஸ்ரீ கிருஷ்ணரால் கண்டிக்கப்பட்டான்.


கர்கோடகன் கத்ருவின் சாபத்திற்கு பயந்து, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையின் வாலில் கருமையான மயிர் போல தொங்கினார்.

शेषः प्रथमतो जातो वासुकि: तदनन्तरम्।

ऐरावत: तक्षक: च कर्कोटक धनञ्जयौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஆதி சேஷன் (1) மூத்தவர். ஆதி சேஷனுக்கு பிறகு பிறந்த ஸர்ப்பங்கள் பெயர்கள் பின்வருமாறு.... வாசுகி (2), ஐராவதன் (3), தக்ஷகன் (4), கார்கோடகன் (5), தனஞ்செயன் (6)


कालियो मणिनाग: च नाग: च आपूरण: तथा।

नाग: तथा पिञ्जरक एलापत्रो अथ वामनः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

காளியன் (7), மணிநாகன் (8),  ஆபூரணன் (9), பிஞ்சரகன் (10), ஏலாபத்ரன் (11), வாமனன் (12),


नील अनीलौ तथा नागौ कल्माष शबलौ तथा।

आर्यक: च उग्रक: चैव नागः कलशपोतकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நீலன் (13), அநீலன் (14), கல்மாஷன் (15), சபலன் (16), ஆர்யகன் (17), உக்ரகன் (18), கலசபோதகன் (19)


सुमनाख्यो दधिमुख: तथा विमलपिण्डकः।

आप्तः कोटरक: चैव शङ्खो वालिशिख: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஸுமனஸ் (20), ததிமுகன் (21), விமலபிண்டகன் (22), ஆப்தன் (23), கோடரகன் (24), சங்கன் (25), வாலிஸிகன் (26)

निष्टानको हेमगुहो नहुषः पिङ्गल: तथा।

बाह्यकर्णो हस्तिपद: तथा मुद्गरपिण्डकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நிஷ்டானகன் (27), ஹேமகுஹன் (28), நஹுஷன் (29), பிங்கலன் (30), பாஹ்ய-கர்ணன் (31), ஹஸ்திபதன் (32), முத்கரபிண்டகன் (33), 


कम्बल: अश्वतरौ चापि नागः कालीयक: तथा।

वृत्त संवर्तकौ नागौ द्वौ च पद्माविति श्रुतौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கம்பலன் (34), அஸ்வதரன் (35), காளீயகன் (36), வ்ருத்தன் (37). ஸம்வர்த்தகன் (38), பத்மன் (39)என்ற பெயரில் இரு சர்ப்பங்கள்,


नागः शङ्खमुख: चैव तथा कूष्माण्डकोऽपरः।

क्षेमक: च तथा नागो नागः पिण्डारक: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

சங்கமுகன் (40), கூஷ்மாண்டகன் (41), க்ஷேமகன் (42), பிண்டாரகன் (43)


करवीरः पुष्पदंष्ट्रो बिल्वको बिल्वपाण्डुरः।

मूषकादः शङ्खशिराः पूर्णभद्रो हरिद्रकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கரவீரன் (44), புஷ்ப-தம்ஷ்ட்ரகன் (45), பில்வகன் (46), பில்வபாண்டுரன் (47), மூக்ஷகாதன் (48), சங்கசிரஸ் (49), பூர்ண-பத்ரன் (50), ஹரித்ரகன் (51)


अपराजितो ज्योतिक: च पन्नगः श्रीवह: तथा।

कौरव्यो धृतराष्ट्र: च शङ्खपिण्ड: च वीर्यवान्।|

- vyasa Mahabharata (Adi parva 35)

அபராஜிதன் (52), ஜ்யோதிகன் (53), ஸ்ரீவஹன் (54), கௌரவ்யன் (55), த்ருதராஷ்ட்ரன் (56),    வீரனான சங்கபிண்டன் (57),


विरजा: च सुबाहु: च शालिपिण्ड: च वीर्यवान्।

हस्तिपिण्डः पिठरकः सुमुखः कौणपाशनः।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

விரஜன் (58), சுபாஹு (59), வீரனான சாலிபிண்டன் (60), ஹஸ்திபிண்டன் (61), பிடரகன் (62), ஸுமுகன் (63), கௌணபாசனன் (64)


कुठऱः कुञ्जर: चैव तथा नागः प्रभाकरः।

कुमुदः कुमुदाक्ष: च तित्तिरि: हलिक: तथा।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

குடரன் (65), குஞ்சரன் (66), ப்ரபாகரன் (67), குமுதன் (68), குமுதாக்ஷன் (69), தித்திரி (70), ஹலிகன் (71), 


कर्दम: च महानागो नाग: च बहुमूलकः।

कर्कर अकर्करौ नागौ कुण्डोदर महोदरौ।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

கர்தமன் (72), பகுமூலகன் (73), கர்கரன் (74), அகர்கரன் (75), குண்டோதரன் (76), மஹோதரன் (77).


இவ்வாறு முக்கியமான 77 சர்ப்பங்கள் பெயரை சொன்னார் ஸூத பௌராணிகர்.

Saturday 28 April 2018

தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள்.



*'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வந்து பார்'*, என்று பெருமைப்பட சொல்லும் மதுரைக்காரன், தன் ஆயுளில் மறக்க கூடாத சில பெயர்கள் உண்டு.
1. *அலாவுதீன் கில்ஜி*
2. அவன் படைத்தளபதி *மாலிக் காபுர்* என்ற *மாணிக்* (இஸ்லாமியனான ஹிந்து)
3. கில்ஜிக்கு பிறகு வந்த *முகமது பின் துக்ளக்*
4. மிக முக்கியமாக, *முகமது கியாசுத்தின்*
5. இன்றைய தேதியில் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண தேர் ஒடுவதற்கும், ஹிந்துக்கள் இருக்கவும் காரணமான, தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் *கம்பண்ணா*.

சுமார் 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜியின் படை தளபதி "மாலிக் காபுர்" செருப்பு கால்களுடன், தன் ஒரு லட்ச இஸ்லாமிய படையுடன் நம் மீனாட்சி கோவிலில் புகுந்து, போலியாக வைத்திருந்த சிவ லிங்கத்தை இடித்து தள்ளி விட்டான்.

இன்றும் அந்த லிங்கம் 1311ல் நடந்த கதை சொலகிறது. போய் பார்க்கலாம்.

1311ADல் மீனாட்சி கோவில் மூடப்பட்டு, இனி ஹிந்துக்கள் தலை தூக்க முடியுமா? என்ற நிலையில் இருந்தது நம் மதுரை.

1340ல், டில்லியை ஆண்டு கொண்டிருந்த, "முகமது பின் துக்ளக்" ஆணைப்படி, மதுரை வாஜிராக இருந்த "ஜலாலுத்தின் ஹசன்"னிடம் வேலை செய்த "முகம்மது கியாசுதின்" என்பவன், ஜலாலுத்தின், மற்றும் அவன் மகன், மருமகன் அனைவரையும் கொன்று, தான் மதுரை சுல்தான் என்று ஆகி விட்டான்.

1340ல் ஆட்சி செய்ய ஆரம்பித்த *முகம்மது கியாசுதின்* மதுரை முதல் திருச்சி வரை பரவி இருந்த பாண்டிய தேசத்தில் இருந்த ஹிந்துக்களை வெட்டி தள்ளினான்.
1311 முதல் 1371 வரை, தமிழர்கள் எண்ணிப்பார்க்க முடியாத அழிவை சந்தித்தனர். பாண்டிய அரசாட்சி, சோழ அரசாட்சி போன்றவை அஸ்தமித்த காலம். உண்மையான தமிழர்கள் இருந்த காலம்.

சுமார் 60 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் எத்தனை கொடுமைகள்? என்று நாம் சிந்திக்கும் போதுதான்,
இரான் முதல் தெலுங்கு கன்னட தேசம் வரை 1000 வருடங்கள் இஸ்லாமியர்கள் புகுந்து என்ன அட்டகாசம் செய்து இருப்பார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.

ஏன் தமிழகத்தில் உள்ள கோவில்கள் போல மற்ற மாநிலங்களில் இல்லை? என்ற காரணமும் புரியும்.


60 வருடத்திலேயே தமிழகத்தை இத்தனை சேதப்படுத்த முடியும் என்றால், 1000 வருட ஆக்கிரமிப்பில் கோவில்கள் நிறைந்த இந்த பாரத பூமியை தரை மட்டம் ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்க பெரும் முயற்சி செய்தனர் என்ற காரணமும் புரியும்.

1000 வருட ஆக்கிரமிப்பில், இரான், ஆப்கான், பாகிஸ்தான்,  பங்களாதேஷ் போன்ற பாரத தேசத்தில் இருந்த இடங்களை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட்டனர் என்பது வேதனைக்கு உரியது.

70 வருடத்தில் சிக்கிய தமிழகத்தை மேலும் அழிவில் வீழ்ந்து விடாமல், கும்பகோணம் போன்ற தேசங்களுக்குள் கால் பாதிக்க விடாமல் தடுத்தது யார்? தமிழனை காப்பாற்றியது யார்? 

மதுரை சுல்தானாக இருந்த "முகம்மது கியாசுதின்" (1340-1343) என்ன செய்தான்?
முகம்மது கியாசுதின் மதுரையை ஆண்ட காலத்தில், "இபின் படூடா" (ibn Battuda) தங்கி இருந்த போது,
மதுரையில் ஹிந்துக்கள் என்ன நிலைக்கு ஆகினர்? என்று விளக்கி இருக்கிறான்.

1.
மரங்கள் வெட்டப்பட்டு, அந்த இடங்களில், கைது செய்யப்பட்ட ஹிந்துக்கள், வரிசையாக நான்கு gate வழியாக அனுப்பப்பட்டு வரிசையாக தலை சீவபட்டார்கள்.
இவர்களோடு கைது செய்யப்பட்ட இவர்களின் மனைவிகளும் கொலை செய்யப்பட்டு, இவர்களின் தலை முடியை கொண்டு பிணங்களை இணைத்து கீழே போட்டனர்.
பால் குடிக்கும் குழந்தைகளை வெட்டி தூக்கி எறிந்தனர்.
இது போன்று, மறுபடியும் வேறொரு காட்டில் மரங்களை வெட்டி, அந்த இடங்களில் இதே போன்று ஹிந்துக்கள் கொத்து கொத்தாக தலை சீவப்பட்டனர்.

இது போன்ற கீழ் தரமான செயலை பார்த்ததில் நான் அவமானப் படுகிறேன். அப்படி ஒரு தண்டனைக்கான குற்றத்தை இந்த ஹிந்துக்கள் செய்யவில்லை. இந்த காரணத்தால் தானோ, கடவுள் (அல்லா) இவனின் ஆயுளை முடித்து விட்டானோ?

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
2.
ஒரு நாள், நானும், முகமது கியாசுதினும் உணவு உண்ணும் சமயத்தில், ஒரு ஹிந்துவை, அவன் மனைவி மற்றும் 7 வயது மதிக்க தக்க ஒரு சிறுவனை கைதியாக இழுத்து வந்தனர் காவலாளிகள்.
மதுரை சுல்தான் "முகமது கியாசுதின்" தன் கைகளை அசைத்து நின்று கொண்டிருந்த அந்த ஹிந்துவின் தலையை வெட்ட சைகை செய்தான். மேலும் காவலாளிகளை பார்த்து, அரேபிய மொழியில், 'அவன் மனைவியும், மகனையும் சேர்த்து' என்று சொன்னான்.
உடனே அந்த ஹிந்துவின் தலை வெட்டப்பட்டது. இதை பார்க்க கூடாது என்று நான் கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து பார்த்த போது 3 தலைகளும் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தது.

மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
3.
இன்னொரு சமயம், நான் மதுரை சுல்தான் "முகமது கியாசுதினுடன்" இருந்த போது, ஒரு ஹிந்து இழுத்து வரப்பட்டான். அவன் மொழியில் ஏதோ பேசினான். எனக்கு புரியவில்லை. உடனே சுல்தானின் காவலாளிகள் தங்கள் ஈட்டிகளை அந்த ஹிந்துவை நோக்கி கொலை செய்ய சென்றார்கள்.
நான் ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்ந்து வெளியே சென்று விட எழுந்தேன்.
என்னிடம் மதுரை சுல்தான், "எங்கே போகிறீர்கள், இபின் படூடா?" என்றான்.
நான், தொழுகைக்கு நேரம் ஆகி விட்டது. நான் சென்று விட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்து விட்டேன்.
என் காரணத்தை புரிந்து கொண்டு சிரித்து கொண்டே, அந்த ஹிந்துவின் கை மற்றும் காலை வெட்ட சொன்னான் சுல்தான். நான் சென்று, பிறகு வந்த போது, அந்த ஹிந்துவின் உடல் ரத்தத்தில் மிதந்து கொண்டு இருந்தது.


மேலும் இன்னொரு இடத்தில், "இபின் படூடா" (ibn Battuda) சொல்கிறான்
4.
நான் மதுரையை அடைந்த போது, தூக்கி வீசப்பட்ட பிணங்களால் உருவான, எங்கும் நோய் பரவி இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் அதிக பட்சம் 2 அல்லது 3 நாட்களில் இறந்தனர்.

நான் மதுரையை விட்டு செல்லும் போது, பொதுவாக அனைத்து ஹிந்துக்களும் நோய்வாய்ப்பட்டு இருந்தனர் அல்லது இறந்திருந்தனர்.


இப்படி 60 ஆண்டுகள் மதுரை சுல்தான் ஆட்சியில் அனுமானிக்க முடியாத துன்பத்தை நம் பாட்டனார்கள் அனுபவித்தனர்.

தமிழ் தேசத்தை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர அரசர் புக்கராயர்  மகன்"*கம்பண்ணா*" காப்பாற்றினார்.

தமிழனை கர்நாடகத்தில் இருந்து வந்த விஜயநகர பேரரசன் காப்பாற்றினான்.

1371ல் கம்பண்ணா மதுரை சுல்தானை விரட்டி, விஜயநகர சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவி, மூடிய கோவிலை திறந்து ஹிந்துக்கள் வாழ வழி வகுத்தார்.
அதே வருடம் மூடப்பட்டு இருந்த ஸ்ரீ ரங்ககோவிலும் திறக்கப்பட்டு, மீண்டும் ஹிந்துக்கள் தலை நிமிர்ந்தனர்.

இனி இஸ்லாமியர்கள் நுழையா வண்ணம், 1378ல் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றி, இரண்டாம் ஹரிஹர அரசரால், ஹிந்துக்களை வாழ வைத்தது.
தமிழகம் 1000 வருட ஆக்கிரமிப்பில், பெரும்பாலும் விஜயநகர ஆட்சியின் பாதுகாப்பில் தப்பித்தது.
இந்த 60 ஆண்டு காலத்தில் கத்தி முனையில், கற்பழிப்பில் மதம் மாறி இஸ்லாமியர்களாக போனவர்கள் இன்றும் இஸ்லாமியர்களாகவே உள்ளனர் என்பது வேதனைக்குரியது.

கம்பண்ணாவின் மனைவி சொல்கிறாள்.
கம்பண்ணாவின் வெற்றியை "மதுரை விஜயம்" என்ற தொகுப்பில், அவர் மனைவி "கங்காதேவி" சொல்கிறாள்,
1.
மதுரை தேசத்திற்கு வந்த சோதனையை நினைத்து மனம் தாங்க முடியாத வேதனை அடைகிறது. பார்க்கும் இடமெல்லாம் வளர்ந்து இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அந்த இடங்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, ஹிந்துக்கள் தலைகள் சொருகப் பட்டு இருந்தன.
மேலும் சொல்கிறாள்
2.
மதுரை பெரு வீதிகளில் சுமங்கலியான பெண்களின் வளையல் சத்தமும், சிரிப்பும் நிறைந்த காலம் போய், இன்று கோவிலை காத்த வேத ப்ராம்மணர்களை தலையை பிடித்து இழுத்து சென்று இரும்பு சுவரில் மோதிய அலறல் சத்தமும், ரத்தமும் கிடக்கிறது.
மேலும் சொல்கிறாள்
3. தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் தேய்த்து குளித்து, சந்தன நறுமணத்துடன் மங்களமாக ஓடிய நதியில் இன்று மாட்டு இறைச்சி உண்ணும் இவர்களால், வெட்டப்பட்ட மாட்டின் ரத்தம், தாமிரபரணி ஆற்றை சிவப்பாக ஆக்கி இருந்தது.
மேலும் சொல்கிறாள்,
4. வீரமும், தைரியமும் உள்ள அரசரே !!
இனியும் தாமதம் செய்யாமல், மூன்று உலகத்திலும் சேர்த்து ஏற்படும் துன்பத்தை ஒரு சேர அனுபவிக்கும் நம் தேசத்து மக்களை காக்க, அந்த துஷ்டர்களை வேரோடு அழியுங்கள். வெற்றியின் அடையாளமாக 100 தூண்களை ராம சேதுவில் கட்டுங்கள்.

இப்படி வெற்றி முழக்கம் இட்டு, தெலுங்கு தேசத்தில் பிறந்து, கர்நாடக தேசத்தில் ஹம்பியை தலைநகராக கொண்ட விஜயநகர அரசன், ஹிந்துக்கள் தமிழ் நாட்டில் வாழ வைத்தான்.

மதுரைக்காரனும், பாண்டிய தேசத்தில் இருந்த அனைத்து மக்களும், ஹிந்துக்களாக இன்றும் இருக்க, ஒரு வீர ஹிந்து கர்நாடகத்தில் இருந்து தான் கிடைத்தான்.
நன்றி மறவாமல் இருப்போம்.