Followers

Search Here...

Showing posts with label என்றால். Show all posts
Showing posts with label என்றால். Show all posts

Saturday 27 March 2021

நமோ என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே!

"நமோ" என்றால் என்ன? 

'நம:' என்பதே நமோ என்று சொல்கிறோம். 

நம: என்ற சொல், "நான்(ம) எனக்கு இல்லை (ந)" என்று அர்த்தத்தை கொடுக்கிறது.

நம: என்ற சொல், "நான் எனக்கு சொந்தம் இல்லை. நான் பரமாத்மாவுக்கே சொந்தமானவன்" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.

நம: என்ற சொல் "நான் வாகனம் மட்டுமே. என்னை சாரதியாக இருந்து ஓட்டுபவன் அந்த பார்த்தசாரதியே" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும். 




நம: என்ற அக்ஷரத்தின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து கொள்ளும் போது தான், 

'இனி நாமாக எந்த முயற்சியும் செய்யாமல்.. என்னை சேர்த்து கொள்ள வேண்டிய முயற்சியை பரமாத்மாவே செய்யட்டும். 

என்னை ரக்ஷிக்கும் பொறுப்பு அவர் கையில் இருக்கும் போது, நானும் தனியாக அவரை அடைவதற்கு எதற்காக முயற்சி செய்ய வேண்டும்? 

அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டே இருப்பதே என் வேலை

என்று சரணாகதியின் உண்மையான நிலை ஏற்பட்டு விடும்.


சரணாகதி லக்ஷணத்தை காட்டும் "நம:" என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டினாள் சீதாதேவி. 

ராவணன், ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதாதேவியை கடத்தி, இலங்கைக்கு தூக்கி சென்று  விட்டான். அசோக வனத்தில் கடுங்காவல் வைத்து, நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸிகள் மத்தியில் சிறைப்படுத்தி விட்டான்

தினமும் சீதாதேவியிடம், ஆசைவார்த்தை சொல்லி, ராமபிரானை அவமானப்படுத்தி தன் பெருமையை மெச்சி பேசி, மிரட்டி, கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

தன் "கற்பு என்ற அக்னியாலேயே" ராவணனை பொசுக்கி விடும் சக்தி இருந்தும், சீதாதேவி பொறுமை காத்தாள்.

தானே தப்பிக்க, சிறு முயற்சியும் செய்யாமல், சீதா தேவி "ராமபிரான் வருவார்" என்று காத்து இருந்தாள்.


ஹனுமான் இலங்கை வந்து போது, சீதாதேவியிடம் "இப்பொழுதே தூக்கி சென்று ராமபிரான் முன் நிறுத்தி விடுகிறேன்" என்று சொல்லியும், பிறர் உதவி வேண்டாம் என்று மறுத்தாள். 

இதுவே சரணாகதி தத்துவம். 





"பகவான் காப்பாற்றுவார்" என்று நிச்சய புத்தி உள்ளவனுக்கு, 'பகவான் காப்பாற்றுவாரோ?' என்ற சந்தேகம் ஏற்படாது. 

'எதற்கும் நாமும் ஒரு சில முயற்சி செய்து வைப்போமே!', "எதற்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்து வைப்போமே!" என்ற சபல புத்தி ஏற்படாது.  


சீதாதேவியை ராவணன் தூக்கி சென்ற போது, ராமபிரானுக்கு சீதாதேவி எங்கு சென்றாள்? என்று கூட தெரியாது.


சரணாகதி செய்த சீதாதேவி, "ராமபிரான் எப்படியும் தான் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடித்து விடுவார், நம்மை காப்பாற்றி விடுவார்" என்று திடநம்பிக்கையுடன் இருந்தாள். 


நம: என்ற சொல்லுக்கு நிரூபணமாக இருந்தாள் சீதாதேவி.


சீதாதேவி சரணாகதி என்றால் என்ன? என்று நமக்கு காட்டினாள்.

குருநாதர் துணை

Saturday 4 May 2019

சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? பாரத மக்கள் சிந்தனைக்கு....

947AD முன்பு வரை பாரத மக்கள் எப்படி வாழ்ந்தனர்?
அதற்கு பின் எப்படி வாழ்கின்றனர்? என்று அலசி பார்க்கும் போது,
சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? என்ற தெளிவு நமக்கு ஏற்படும்...



947 வரை பாரத மக்கள் வாழ்ந்த முறை:
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் வழிபடும் தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தது. வழிபாட்டு முறைகள் இருந்தது.

அடுத்தவன் தெய்வம் வேறாக உள்ளதே!! நம்பிக்கை வேறாக உள்ளதே!! என்று ஒருவனும் பொறாமைப்படவில்லை.
அடுத்தவன் நம்பிக்கையை மதித்தான்.

பாரத பூமியில் 'தெய்வத்தின் பெயரால்' சாமானிய மக்களை கொல்வதோ, கோவில்களை இடிப்பதோ நடக்கவே இல்லை.

அனைத்து பாரத மக்களும் சுய மரியாதையுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர். செல்வத்தில் புரண்டனர்.

'என் தெய்வம் சிவன்' என்று சொல்பவன், 'காளி கோவிலை இடிப்பேன்' என்று பிறருடைய நம்பிக்கையில் தலையிடவும் இல்லை, இடிக்கவும் இல்லை.
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீ கிருஷ்ணராக வந்து இருக்கிறார் என்று தெரிந்தும், அர்ஜுனன் போர் நடக்கவிருப்பதால் சிவபெருமானிடம் உள்ள பாசுபத அஸ்திரத்தையும் வாங்கி கொள்ளலாம் என்று தபசுக்கு செல்ல, கிருஷ்ணர் அதற்காக அர்ஜுனன் முயற்சியை தடுக்கவில்லை.
தெய்வங்களுக்குள்ளும் பொறாமையில்லை.
பாரத மக்களுக்குள்ளும் பொறாமையில்லை.

பாரத அரசர்களும் தெய்வ விஷயங்களில்  பொறாமைபடவில்லை.
"சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, விஜயநகர, மராத்திய, குப்த அரசரகள்" என்று அனைத்து அரசர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிற அனைத்து தெய்வத்துக்கும் பெரிய பெரிய கோவில்கள், நிலங்கள் கொடுத்து அவரவர் தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர்.


பொறாமை குணம் இல்லாத அரசன்,
பொறாமை குணம் இல்லாத பாரத மக்கள்,
பொறாமை இல்லாத தெய்வங்கள் - கொண்டதாக இந்த புண்ணிய பாரத பூமி இருந்தது.

இந்த தர்மம் லட்சக்கணக்கான வருடங்களாக (சனாதனமாக) இந்த பாரத மண்ணில் இருந்தது.
பல தெய்வங்கள் இருந்தாலும், கலாச்சாரம் ஒன்றாக இருந்தது. குணம் ஒன்றாக இருந்தது.
இதனால் கலாச்சாரத்தில் ஒன்றுபட்ட, பாரத மக்கள் தங்களை  பொதுவாக "சனாதனமாக இருக்கும் தர்மத்தில்" இருப்பவர்கள் என்று மட்டுமே பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.

வரலாற்றில் கிருமிகண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கூட வைஷ்ணவ கொள்கைகள் ராமானுஜரால் பரவுவதை கண்டு, சிவபக்திக்கு குறைவு வந்து விடுமோ என்ற தனி மனித கோபத்தில்,  ராமானுஜரை கொலை செய்ய நினைத்தான்.
இந்த சதியில் இருந்து தப்பித்து, ராமானுஜர் கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்கு சென்று 12 வருடம் தங்கி விட்டார்.
ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தில் இல்லை என்றதும், சோழ அரசன் 'பெருமாள் கோவிலை இடிப்பேன், வைஷ்ணவர்களை அடியோடு அழிப்பேன்' என்று இறங்கவில்லை.

தனி மனித பகை இருந்ததே ஒழிய, பிற தெய்வங்களிடம் வெறுப்பு இல்லை.

ராமானுஜர் போன்ற மகானுக்கு அபசாரம் செய்ததால், இந்த சோழன் புற்றுநோய் (cancer) வந்து இறந்தான்.
பின் வந்த சோழ அரசர்கள், ராமானுஜரை அழைத்து அவருக்கான மரியாதையை கொடுத்தனர். ஸ்ரீ ரங்கத்திலேயே கடைசி வரை ராமானுஜர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்தார்.
ராமானுஜர் ஒரு சோழ அரசனால் விரட்டப்பட்டார் என்பதால், ராமானுஜர் யாரையும் விமர்சனம் செய்யவே இல்லை. சிவ துவேஷம் காட்டவே இல்லை.

அவரவர்கள் அவர்கள் தெய்வத்தை வழிபடுவதில் திருப்தியாக இருந்தனர்.

நாயன்மார்களும் திருப்தியாக சிவ பக்தி செய்தனர்.
ஆழ்வார்களும் திருப்தியாக பெருமாள் பக்தி செய்தனர்.
அருணகிரிநாதர் ஒரு குறைவும் இல்லாமல் முருக பக்தி செய்தார்.

இது தானே சனாதன தர்மம்.
நிம்மதியாக இருந்தது பாரத நாடு.

"வளர்ச்சி, விவசாயம், எல்லை பாதுகாப்பு, நீதியை நிலைநாட்டுவது" இவையே பாரத அரசனுக்கு முக்கிய கடமையாக இருந்தது.
மக்களுக்குள் தெய்வத்தை வைத்து சண்டைகளே இல்லாமல் இருந்தது.
ஹிந்து அரசர்களுக்கு "தெய்வத்தின் பெயரால் சண்டை" என்பதே புரியாத விஷயம். தேவையில்லாத விஷயமும் கூட.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் உள்ளே நுழைந்ததும், "தெய்வத்தின் பெயரால்" அட்டகாசம், வெறுப்பு ஆரம்பம் ஆனது.
அது பாரத தேசத்தையும் விட்டு வைக்கவில்லை.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக அவதாரம் செய்தும், கிருஷ்ணராக அவதாரம் செய்தும்,
ராம 'மதம்', கிருஷ்ண 'மதம்'
என்று தான்தோன்றி தனமாக மதங்களை உருவாக்கி, உளராமல் இருந்தனர் பாரத மக்கள்.
மஹாவீரர் தோன்றிய பின்,
புத்தர் தோன்றிய பின்,
அவர்கள் பெயரால் 'சன்மார்க்க வழி' என்று முதலில் ஊர் முழுக்க கடைபிடிக்க ஆரம்பித்தனர் பாரத மக்கள்.
கலியின் பிடியில் புத்தி தடுமாறி போன காலம் என்று சொல்லலாம்.

'மதம்' என்று இவர்களும் அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.
இதுவும் ஒரு தர்ம வழி என்று தான் சொல்லிக்கொண்டனர் பௌத்தர்களும், ஜைனர்களும்.

பாரத மக்களை பொறுத்தவரை, "மதம்' என்ற வார்த்தையை 'கர்வம்' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வந்தனர் அது நாள் வரை.
"காம, க்ரோத, மத..." என்று சொல்லும் போது, "காமம், கோபம், கர்வம்" போன்ற துர்குணங்கள் நமக்கு இருக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த பாரத மக்களிடம்,
'கர்வம்' என்ற பொருள் கொண்ட "மதம்" என்ற பெயருக்கு வேறு சாயம் பூசினர் வெளி மதத்தினர்.

வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்கள், தங்களை "இஸ்லாம்" மதம் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.
947ADல் அரேபிய முஸ்லிம்களால், கோரி அரசாட்சி "ஆப்கான் தேசத்தில்" தலை எடுக்க ஆரம்பித்தது.
பௌத்த அரசர்கள் அங்கு வீழ்ந்து, கோரி அரசாட்சி ஆரம்பம் ஆனது.
அன்று ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு பெரும் சோதனை.


இஸ்லாம் (மனிதன் 7) உள்ளே நுழைந்த போது, பாரத மக்கள் நிலை என்ன ஆனது?


  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது.எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
  • மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.


  • மனிதன் 7 : ஒப்புக்கொள்ளவே முடியாது. அல்லாவுக்கு (இறைவன்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

இப்படி ஆரம்பித்த பின், பாரத தேசம் கலவர பூமி ஆனது.

இஸ்லாமியர்கள் வருவதற்கு முன் கூட ஒரு அரசனுக்கும், இன்னொரு அரசனுக்கும் போர் எழுந்துள்ளது.
ஆனால், அரசர்கள் யாவரும், தனியான இடத்தில் தான் போர் நடத்தினர்.

சோழ அரசன் காசி வரை சென்று ஜெய கொடி நாட்டினான் என்று சரித்திரங்கள் சொல்கிறது.
அசோக சக்கரவர்த்தி ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும் ஆண்டார் என்று சொல்கிறது.

ஒரு நாட்டை பிடிக்க,
பொது மக்களை கொலை செய்வதோ, 
கொள்ளை அடிப்பதோ, 
கோவிலை இடிப்பதோ 
பாரத மக்களும், அரசர்களும் பார்த்திராத குணங்கள். கீழ்த்தரமான குணங்கள்.

முகம்மது கஜினி என்ற அரேபிய இஸ்லாமியன் உள்ளே நுழைந்ததும் அவன் தாக்கியதே சோம்நாத்தில் உள்ள 'சிவன்' கோவிலை தான்.
குஜராத் நகரமே நிலை குலைந்தது.

17 முறை தொடர்ந்து, இவன் சிவன் கோவிலை இடித்து, அங்கு உள்ள தங்கங்களை கொள்ளையடிக்க முயன்றான்.
17 முறையும் அப்போது இருந்த ஹிந்து (சனாதன தர்மத்தில் இருந்த) அரசனால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டான்.



ஊர் மக்களை தாக்கியும்,
கோவிலை இடித்தும் போர் செய்த இஸ்லாமிய அரேபியர்கள்,
18வது முறை இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து ஹிந்து அரசனை கொன்று, சோம்நாத் கோவிலை தரைமட்டமாக்கி அங்கு இருந்த கோடிக்கணக்கான நகைகளை அள்ளிக்கொண்டு ஓடினான்.

17 முறையும் தோற்ற கஜினி, ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டான். 17 முறையும் மன்னித்தான் ஹிந்து அரசன்.
'கோவிலை இடிப்பதே இவர்கள் முதல் கொள்கை,
பாரத மக்களை தன் வழிபாட்டு முறைக்கு மாற்றுவதே இவர்கள் முக்கிய கொள்கை'
என்று பாரத பூமியை தாக்க வந்த இவர்களை, மற்ற ஹிந்து அரசர்கள் போல தான் இவனும் என்று நினைத்து, 17 முறை மன்னித்து விட்டான் ஹிந்து அரசன்.
விளைவு:
அன்று சோம்நாத் சுற்றி இருந்த லட்சக்கணக்கான சௌராஷ்டிர மொழி பேசும் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருப்பவர்கள்) வாழ வழி தேடி, நாடோடிகளாக வெளி மாநிலங்களுக்கு ஓடி ஓடி, இன்று மஹாராஷ்டிரா முதல் மதுரை வரை சிதறி சிதறி வாழ்ந்து வருகின்றனர்.




அரேபிய இஸ்லாமியர்களால், முதன் முதலில் பாதிக்கப்பட்ட சனாதன தர்மத்தில் வாழ்ந்த முதல் சமூகம் "சௌராஷ்டிர" சமூகமே.
45000க்கும் மேலாக பாரத நாட்டில் இருந்த பெரிய பெரிய முக்கியமான கோவில்களை இடித்து தள்ளினர் அரேபிய இஸ்லாமியர்கள்.
மீண்டும் மீண்டும் அரசர்கள் கட்டுவதை பார்த்து, அதன் பிறகு, கோவில் மேல், மசூதியை கட்ட ஆரம்பித்தனர். தனக்கு அரண்மனைகள் கட்டிக்கொண்டனர்.

வட நாட்டில், தமிழ்நாட்டில் இருப்பது போல லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தன.
இன்று, ஒன்று கூட, தமிழ்நாட்டில் உள்ளது போல அங்கு காணப்படவில்லை.
1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பல லட்சம் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருந்தவர்கள்) பயத்தினாலும் பணத்திற்காகவும், இஸ்லாமியனாக மாறினர்.

அலாவுதீன் கில்ஜிக்கு முக்கியமான படை தளபதி "மாலிக் காபுர்".
அலாவுதீன் கில்ஜி, குஜராத் மீது படையெடுத்த போது, அடிமைகளாக இழுத்து வந்த ஹிந்துக்களில் ஒருவன் தான் இந்த மாலிக் காபுர்.


'மாணிக்' என்ற இந்த ஹிந்து மீது கில்ஜிக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், அவனிடம் நெருங்கி பழகினான்.
போர் திறமை இருப்பதை கண்ட கில்ஜி, இவனை பல ஹிந்து அரசர்களை எதிர்த்து போர் செய்ய அனுப்ப, கோவிலை இடிப்பதும், பொது மக்களை கொள்வதன் மூலம் ஹிந்து அரசர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள செய்வதும், ஆங்காங்கு வெற்றிகளை பெற, நாளடைவில், தன்னை இஸ்லாமியனாக மாற்றிக்கொண்டான் "மாணிக்" என்ற "மாலிக் காபுர்".

பணத்திற்காகவும் புகழுக்காகவும் தன்னை இஸ்லாமியனாக ஆக்கிக்கொண்ட பின், இவன் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இந்த மாலிக் காபுர் என்பவன் தான், தெலுங்கு தேசத்தில் படையெடுத்த போது, பொது மக்களை தாக்கி, காளி கோவிலை இடித்து, அங்கு கிடைத்த பல வைரங்களில், "கோஹினூர் வைரம்" உட்பட பல கொள்ளையடித்த செல்வங்களை கில்ஜியிடம் கொடுத்தான்.
ஊரை கொள்ளையடித்து, கோவிலை இடிக்க, காகதியா பேரரசு வேறு வழில்லாமல் பெரும் செல்வத்தை மாலிக் காபுர் எடுத்து செல்ல அனுமதித்தது.

இவனே பின்னர், தமிழ்நாட்டுக்கு புகுந்து பாண்டிய மன்னர்களை நேரில் எதிர்க்காமல், ஒரு லட்சம் இஸ்லாம் படைகளுடன் நேராக  மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, அங்கு சுந்தரேஸ்வரர் சிவலிங்கத்துக்கு முன் ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டு இருந்த போலி லிங்கத்தை இடித்து, கோவிலை கைப்பற்றி விட்டான். பாண்டிய மன்னர்களை அடி பணிய செய்தான்.
பொதுவாக கோவிலை தாக்கியும், பொது மக்களை தாக்கியும் தான் அரசர்களை சரணடைய செய்து கொன்றனர்.
இது முடியாத பட்சத்தில், இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து அரசர்களை தாக்கினர்.
பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம் அது.

அடுத்த 80 வருடங்கள், கில்ஜி மூலமாக இஸ்லாமிய ஆட்சி ஆரம்பித்து, அடுத்து வந்த முகம்மது பின் துக்ளக் ஆட்சி வரை, இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்தது.
தமிழர்களை கொன்று குவித்தனர் பாண்டிய தேசத்தை கைப்பற்றிய இஸ்லாமிய அரேபியர்கள்.

மதுரை ரத்த காடாக ஆனது.
80 வருடங்கள் கழித்து கர்நாடகத்தில் இருந்து சிங்கமாக புறப்பட்டு, விஜயநகர இளவரசன் கம்பண்ணா இஸ்லாமிய ஆட்சியை 80 வருடங்களுக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கு பின், தமிழநாட்டை இஸ்லாமிய ஆட்சி வட இந்தியாவை போல முழுவதுமாக பிடிக்கவே முடியவில்லை. சோழ நாடு முழுவதுமாக விஜயநகர அரசால் காக்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் கட்டிய கோவில்கள் தப்பித்தன.

இதே மாலிக் காபுர் தான் மதுரையை தொடர்ந்து, ஸ்ரீ ரங்கம் நுழைந்து, ஸ்ரீ ரங்க கோவிலில் கொள்ளை அடித்து, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.
பின்னர் வைஷ்ணவர்கள் சென்று, அவனிடம் நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகள் செய்து, அவனை எப்படியோ சம்மதிக்க வைத்து, ஸ்ரீ ரங்கநாதரை மட்டும் மீட்டு டெல்லியில் இருந்து கொண்டு வந்து விட்டனர்.
இவன் மகள் சுரதானி என்ற துலுக்கநாச்சியார், ரங்கநாதரை அவள் அரண்மனையில் வைத்து அதுவரை பொம்மையாக விளையாடி கொண்டிருந்தாள்.
ஸ்ரீ ரங்கநாதர் அவளுடன் சிலையாக இருந்தே பேச ஆரம்பிக்க, தன் தந்தை மாலிக் காபுர் அந்த ரங்கநாதரை கொடுத்து விட்டார் என்று தெரிந்து ஸ்ரீ ரங்கம் வர, கோவிலில் நுழைந்து ரங்கநாதரை பார்த்ததும் அவர் சரணத்திலேயே உயிர் துறந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்டு, மீண்டும் இஸ்லாமியர்கள் ஸ்ரீ ரங்கம் படையெடுக்க, மதுரையில் சுந்தரேஸ்வரர் 80 வருடங்கள் சுவருக்கு பின் இருந்தது போல, ஸ்ரீ ரங்கநாதரும் 80 வருடங்கள் மேலூர், கேரள தேசம், திருப்பதி என்று இருந்து விட்டு, விஜயநகர அரசர்கள் மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்த பின், மதுரை மீனாட்சி கோவிலும் திறக்கப்பட்டது. ஸ்ரீ ரங்கமும் திறக்கப்பட்டது.

நினைத்து பார்க்க முடியாத நிலையில், நம் பாட்டனார்கள் வாழ்ந்து, சமாளித்து, அந்த சூழ்நிலையிலும் ஹிந்துவாகவே வாழ்ந்து நம் வரை ஹிந்துவாக வாழ வழி செய்துள்ளனர்.

மறக்க கூடியதா நம் பாட்டனார்கள் அனுபவித்த நிலை?!!.

மதுரை தேசம் மாலிக் காபுர் அட்டகாசத்திற்கு பின், 80 வருடங்கள் இஸ்லாமிய அரேபியர்கள் ஆட்சியில் மாட்டியது.
இந்த சமயத்தில் ஒரு 5 வருடங்கள் மட்டும் எப்படி இருந்தது? என்று இஸ்லாமியன் இபின் படூடா என்பவனே எழுதி வருத்தப்பட்டார்.
என்ன நிலையை தமிழர்கள் சந்தித்தனர்? என்று தெரிந்து கொள்ள படியுங்கள். Tamil_People_LifeStruggle

"தெய்வத்தின் பெயரால்" வெறுப்பையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிறர் கோவிலை இடிப்பதையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிற தெய்வங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்களை மாற்ற நினைப்பதையும்,
1200 வருடங்கள் தொடர்ந்து செய்தனர் அரேபிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள்.

1400ADல் போர்சுகீஸ் கிறிஸ்தவர்கள் (வாஸ்கோட காமா) மூலமாக  ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு மேலும் ஒரு பெரும் சோதனை.

கிறிஸ்தவ மதமும் நுழைந்த பின், பாரத தேச மக்கள் மேலும் திண்டாடினர்.

ஏற்கனவே மனிதன் 7, 'தன் கொள்கையே சிறந்தது. நீங்கள் என் வழியில் வாருங்கள், இல்லை உங்களை எதிர்க்க தயார்' என்று அட்டகாசம் செய்து கொண்டு இருக்கும் போது, ஏறத்தாழ இதே கொள்கையுடைய கிறிஸ்தவர்களும் (மனிதன் 8) வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்தனர்.


  • மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரே ஏசு. அவரை கொன்றாலும் அவர் நமக்காக தான் இறந்து போனார். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். ஏசுவை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள். உங்களுக்காக உயிர் விட்ட ஏசுவே உங்கள் தெய்வம்.
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். மனிதன் 8 சொல்வதும் பொய். ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை (ஏசு) ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது. அல்லாவுக்கு (கடவுள்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.



கிறிஸ்தவர்கள் ஆட்சியின் போது, கிறிஸ்தவர்கள், காளையார் கோவிலை இடித்து தள்ளிவிடுவோம் என்று சொல்ல, கோவிலை காப்பாற்ற, உயிரை கொடுக்க முன் வந்தனர் "மருது சகோதரர்கள்".

சிவபெருமான் கோவிலை இடிக்க கூடாது என்று, நம் மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினர். கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் ஹிந்துக்கள் கேவலப்படுத்தபட்டனர்.

தெய்வங்களை கிண்டல் செய்தும், அவமானம் செய்தும் பேசும் பழக்கம் இவர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. 

கிறிஸ்தவதுக்கு மதம் மாற்றப்படும் ஹிந்துவுக்கும், ஏசு நல்லவரா? கெட்டவரா? என்பதை விட, ஹிந்து தெய்வங்களை பற்றி தனக்கு தோன்றிய படி, கீழ்த்தரமான போதனைகள் தான் அதிகம் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவதுக்கும், இஸ்லாம் கொள்கைக்கும் ஏழாம் பொருத்தம்.

இருவருக்குமே "தங்கள் கொள்கை தான் சரி" என்ற தீவிரம் உடையதால், "மற்றவர்களை தன் கொள்கைக்கு இழுக்க வேண்டும்" என்ற கொள்கையும் உள்ளதால்,
"மற்ற நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் நாசமாக போவார்கள், நரகம் போவார்கள்" என்று அவர்கள் நம்பிக்கை.

இன்று வரை கிறிஸ்தவ நாடுகள், இஸ்லாமியர்களை நம்புவதில்லை.

'அமெரிக்கர்கள்' எந்த இஸ்லாமிய தேசத்தையும் நம்புவதில்லை. இஸ்லாமியன் இவர்கள் நாட்டுக்குள் வந்தால் ஆயிரம் கேள்விகள் விசாரணைகள் செய்கிறது.
நியூஸிலாந்தில் இந்த பகையே, மசூதிக்குள் புகுந்து, தொழுகை செய்து கொண்டிருந்த சாதாரண இஸ்லாமியர்களை சரமாரியாக கொன்று குவிக்க கொண்டு சென்றது.

இதற்கு சளையில்லை என்று,
இலங்கையில், சர்ச்சுக்குள் புகுந்து இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பாம் போட்டு கொன்று குவித்தனர் இஸ்லாமியர்கள்.
'தன் கொள்கை மட்டுமே உயர்ந்த கொள்கை' என்றும்,
'தன் வழிபாட்டு முறையை சரியான வழி' என்றும்,
'தான் நம்பும் தெய்வமே தெய்வம்' என்றும்
தெய்வத்தின் பெயரால், சண்டை இட்டுக்கொள்ளாத நாடுகள்,
இந்த இரு மதங்கள் தோன்றிய பின், மதத்தின் பெயரால் பல கோடி மக்களை இழந்து விட்டது.
பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன.
பல பேரரசுகள் அழிந்து விட்டன.


அன்று கத்தி, வில் கொண்டு, தெய்வத்தின் பெயரால் சண்டை போட்டனர். இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டையிட்டால் உலகம் அழிந்து போகும்.
கிரேக்க கலாச்சார இறைவழிபாடுகள், கொள்கைகள் அழிந்து, இன்று கிரேக்க நாடு கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

ரோமானிய பேரரசும் தன் கலாச்சாரம், தெய்வ வழிபாட்டை இழந்து கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

இப்படி கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர்களுக்கு,
"மற்ற நம்பிக்கைகள் நரகத்திற்கு தள்ளும், நம் வழியே சொர்க்கம் தரும்" என்று சொல்வதால்,
உலகம் எங்கும் 'தெய்வத்தின் பெயரால்' மத சண்டைகள் இந்த இரு மதங்களாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பான், சீனா போன்ற தேசங்கள் பௌத்த மதத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் ஓரளவு மத சண்டைகள் இல்லாமல் உள்ளனர்.

நம் பாரத நாட்டிலோ, ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல்,
1200 வருடங்களில் சனாதன தர்மத்தில் இருந்த லட்சக்கணக்கானவர்களை கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மதம் மாற்றி விட்டு, அரேபியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் அவரவர் ஊருக்கு முடிந்த வரை கொள்ளையடுத்து விட்டு சென்று விட்டனர்.

அவர்கள் சென்று விட்டாலும்,
ஹிந்துவாக இருந்து, இன்று கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக வாழும் பாரத மக்கள்,
1200 வருடங்களும் மதம் மாறாமல் ரோமானிய கிரேக்க கலாச்சாரம் அழிந்ததை போல சனாதன தர்மத்தை அழித்து விடாமல், இன்று வரை சனாதன தர்மத்திலேயே (ஹிந்துக்களாக) வாழுவதை பார்த்து பெருமை படாமல், தானும் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வழியில் செல்வோம் என்று நினைக்காமல், மானத்தோடு வாழும் ஹிந்துக்கள் மேல் வெறுப்பை உமிழ்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஒரு படி மேலே போய், சிவனை கேலி செய்து சித்திரம் வரைந்து வெறுப்பை கக்குகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து புகுந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாதிகள், 'மதம்' என்றால் 'கர்வம்' என்று மட்டுமே பயன்படுத்தி வந்த பாரத மக்களை பார்த்து, பல தெய்வங்களை வணங்கினாலும், வேறுபாடு இன்றி, ஒரே கலாச்சாரமாக வாழ்வதை பார்த்து,
சிந்து நதி ஓரம் வந்து 'இந்டு' என்றும், 'இந்து' என்றும், 'ஹிந்து' என்றும், 'ஹிந்டு' என்று வாய்க்கு வந்த வந்தபடி நம் அனைவரையும் அடையாளப்படுத்தினார்கள்.

நம்மை மட்டுமல்ல, பிரயாகை என்ற பெயரை மாற்றி அல்லாஹ்பாத் என்று மாற்றினர்.
கிறிஸ்தவன் பல தமிழ் ஊர் பெயர்களை குட்டி சுவர் ஆக்கினான்.


திருச்சிரார்ப்பள்ளி என்று சொல்ல முடியாமல் ட்ரிசி என்றான், கொல்கத்தாவை கல்கட்டா என்றான்.
மும்பையை பாம்பே என்றான்.

பாரத நாட்டை விட்டு இவர்களை கஷ்டப்பட்டு கிளப்ப வைத்த சமயத்திலும், பாரத நாட்டுக்கே அர்த்தமில்லாத பெயரை கொடுத்து விட்டான். 
நேரு யோசிக்காமல் ஏற்றார்.

ஐரோப்பிய கிறிஸ்தவன், நம் பாரத நாட்டை மூன்றாக பிரித்து, இவன் உளறி கொட்டிய 'இந்டு' என்பதையே 'இண்டியா' என்று ஒரு பகுதிக்கு பெயர் வைத்தான்.
தொன்று தொட்டு பல தெய்வங்கள் வழிபட்டாலும்,
பகை இன்றி ஒரே கலாச்சாரமாக வாழ்ந்த நமக்கும் 'மதம்' என்ற அடையாளத்தை கொடுத்து,
அவன் உளறி கொட்டிய 'ஹிந்து' என்ற வார்த்தையையே மத பெயர் ஆக்கினான்.

"பாக்கி உள்ள 2 பகுதிகளை" கிழக்கு பாக்கிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான் என்று பெயர் வைத்து, பிரித்து விட்டான்.

"ஜின்னா" போன்ற ஹிந்துவாக ஒரு பரம்பரையில் இருந்து இஸ்லாமியனாக மாறியவர்கள்,
'பாகிஸ்தான் இனி இஸ்லாமிய நாடு' என்று தெளிவாக சொல்லி நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க செய்தனர்.
நேரு 'இண்டியா ஹிந்துக்கள் நாடு' என்று சொல்லி, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு என்று சொல்ல மறந்தார்.
நேருவின் பெண்ணே இஸ்லாமியனை மணந்து இருந்தார் என்ற போது, நேருவிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே... எதிர்த்த சர்தார் படேல், போஸ் ஒதுக்கப்பட்டார்கள்.

1000 வருடங்களாக இஸ்லாமியன், கிறிஸ்தவன் என்று மாற்றப்பட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் மதம் முஸ்லீம், கிறிஸ்டின் என்று அடையாளபடுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

ஆங்கில மோகம் கொண்ட, ஆங்கிலேயே கிறிஸ்தவர்களுடனேயே பழகிய நேரு, இதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு திறன் இல்லாமல் இருந்தார்.
பாரத தேசம் ஹிந்து தேசம் என்று சொல்ல மறந்தார்.
திறன் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை அலட்சியம் செய்தார்.

சுதந்திரம் அடைந்த பின்னும், இன்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாரத மண்ணில் ஹிந்துக்களாக வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று இஸ்லாமியனாகவும், கிறிஸ்தவனாகவும் உள்ளதால், அவர்கள் கொள்கையாலேயே இறைவன் பெயரால் நடக்கும் சண்டைகள் ஓயாமல் உள்ளது.

பாகிஸ்தான் போன்ற பிரித்து கொடுக்கப்பட்ட பாரத தேசம் 'இஸ்லாமிய தேசம்' என்று ஆக்கப்பட்டதால் அங்கு ஹிந்துக்கள் வாழ்வது சாதாரண காரியம் அல்ல. பல லட்ச ஹிந்துக்கள் 1947க்கு பின் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

கொள்கையே இவர்களுக்கு தீவிர வாதத்தை கொடுப்பதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை தங்கள் முதல் எதிரியாக பார்க்கின்றனர்.
இப்பொழுது, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களை தாக்க ஆரம்பித்து விட்டனர்.


கத்தி, வேல் கொண்டு மத சண்டைகள் நடந்த போது உயிர் சேதங்கள், கட்டிடங்களுக்கு சேதங்கள் நடந்து கொண்டிருந்தன.

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் உள்ள காலங்களில் இனியும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 'தன் வழிபாடு மட்டுமே சிறந்தது. மற்றவன் வழிபாடு நரகம் கொடுக்கும்' என்று சொல்லி சண்டையிட்டால், அனு ஆயுதங்கள் கொண்டு உலகமே நொடிகளில் அழிந்து விடும்.

சிவனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
முருகனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
பெருமாளை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்
என்று சமபுத்தியோடு, பார்த்த சனாதன தர்மத்தில் (ஹிந்துக்கள்) வாழும் ஹிந்துக்கள் இன்றும் அப்படி தான் வாழ்கின்றனர்.

பெருமாள் பக்தன் சிவன் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும், சிவன் கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

முருக பக்தன், காளி கோவிலுக்கு செல்ல மாட்டேன், காளி கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் வாயில் தான் சமத்துவம், 'எல்லா சாமியும் ஒன்னு தான்', ராமரை கும்பிட்டாலும், அல்லாவை கும்பிட்டாலும் அவன் நல்லவன் தான் என்று வருகிறது.

"உலகில் உள்ளவர்கள் யார் யாரை வேண்டுமானாலும் தெய்வம் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வோம், பிறர் எது சரி என்று நினைக்கிறார்களோ அப்படியே வாழட்டும்" 
என்று சனாதன தர்ம கொள்கையை மட்டும் எடுத்து கொண்டால் போதுமானது.
அவனவன் நம்பிக்கையில் வாழ்வோம்.
என் நம்பிக்கை எனக்கு பெரியது.
உன் நம்பிக்கை உனக்கு பெரியது.
இதுவே சனாதன தர்மம் காட்டிய வழி.

என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது. உன் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது என்று சொல்லும் எந்த கொள்கையும் உலகை நாசமாக்கும்.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை 6 அறிவுள்ள மனிதனால் கட்டாயம் நிறுத்த முடியும்.

இதற்கு நமக்கு தேவை "அவனவன் நம்பிக்கையில் வாழ்வது. அடுத்தவன் நம்பிக்கையில் அவனை வாழ விடுவது என்ற பரந்த மனப்பான்மையே".

இப்படி வாழ ஆரம்பிக்கும் போது, உலகமே சனாதன தர்மத்தில் அவரவர் தெய்வங்களை வணங்கி கொண்டு, ஆனால் பிற தெய்வ வழிபாட்டின் மேல் பொறாமை இல்லாது வாழ தெரிந்த சமுதாயமாக மாறும்.

இந்த சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டு வர, மனிதனாக இருக்கும் நமக்கு பரந்த உள்ளம் வேண்டும்.


அரேபிய இஸ்லாமியர்கள் பாரத நாட்டில் அத்தனை அட்டூழியம் செய்தனர் என்பது அந்த காலம்.
ஆனால், அந்த தேசம் கூட, இன்று ஹிந்துக்கள் வழிபட கோவில் கட்டி தருகிறோம் என்று வந்துள்ளதே..  இது தானே சனாதன தர்மம்.
யாருக்கும் நியாயமாக வாழ, ஒரு தெய்வத்தை வழிபட அனுமதி அளித்தது தானே சனாதன தர்மம்
இந்த சனாதன தர்மம் உலகம் முழுக்க பரவும் போது, மீண்டும் மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பிக்கலாம்.

"எவன் எந்த தெய்வத்தை கும்பிட்டால் நமக்கு என்ன?" என்றாவது இருக்க உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெய்வத்தின் பெயரால் "நான் மட்டுமே சொர்க்கம் போவேன்.. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்" என்று சொல்லி வெறுப்பு, கொலைகளை தவிர என்ன சாதித்தார்கள் இவர்கள்?.

தெய்வத்தை வைத்து சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும்.
உனக்கு பெருமாள் பிடித்தால், வணங்கிக்கொள்.
உனக்கு யாரையுமே பிடிக்காதா.. அப்படியே இரு.
ஆனால் மற்றவன் நம்பிக்கையை பற்றி உனக்கு என்ன வேலை?

947ADக்கு முன் அப்படி தானே இருந்தோம்?!!.
அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கு கோவில் அமைத்து கொண்டார்கள்.
ரிஷிகள் எனக்கு கோவிலும் வேண்டாம், ஊரும் வேண்டாம் என்று காட்டில் தவம் செய்தார்கள்.
எங்கு வந்தது தெய்வத்தின் பெயரால் சண்டைகள்?.
6 அறிவுள்ள மனிதன் எவனாக இருந்தாலும், இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டை செய்வதை விரும்ப மாட்டான்.

சனாதன தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் செல்ல முயற்சித்தால், தெய்வத்தின் பெயரால் ஏற்படும் சண்டைக்கு முடிவு ஏற்படும்.

இஸ்லாம் உதித்த அரேபிய நாடே இதற்கு அடிக்கல் நாட்டி விட்டது.
அமெரிக்கா போன்ற நாடுகள், அனைத்து தெய்வ நம்பிக்கையையும் அவரவர்கள் வழிபட அனுமதிக்கிறது.
சனாதன தர்மம் இது தானே!!
பாரத மண்ணில் உள்ள இஸ்லாமியர்கள், "அயோத்தியில் என் தெய்வம் ராமர் பிறந்தார், அங்கு ஒரு கோவிலை கட்டி கொள்கிறோம். பாபர் என்ற அரேபியன் இருந்த கோவிலை இடித்துவிட்டான்" என்று சொன்னால், "ஏதோ உனக்கு ஒரு நம்பிக்கை, கட்டிக்கொள். எனக்கும் ஒரு மசூதி கட்டி கொடு" என்று சொன்னால், அது தானே சனாதன தர்மம்.


பரந்த மனம் அமெரிக்கவாசிகளுக்கே, அரேபியர்களுக்கே வந்து விட்டதே.. 

பாரத மக்கள் அனைவரும் சகோதர்களே...  
பரந்த மனத்தை மட்டும் காற்றில் பறக்க விட்டு, தெய்வத்தின் பெயரால் அடித்து கொள்கிறோம்.
இது வெட்கப்பட வேண்டியது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு.

அடுத்தவன் நம்பிக்கையை ஏன் கேலி செய்ய வேண்டும்?
அடுத்தவன் தெய்வத்தை ஏன் பழிக்க வேண்டும்?

பாரத மக்கள் சிந்தனைக்கு... 


Tuesday 1 May 2018

"ஸஞ்சிதம்", "ப்ராரப்தம்" ,"ஆகாமி" என்றால் என்ன?

"ஸஞ்சிதம்" என்றால் என்ன?
"ப்ராரப்தம்" என்றால் என்ன?
"ஆகாமி" என்றால் என்ன?

ஜீவனுக்கு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் 'ஸம்சார சக்கரம்' என்று சொல்லப் படுகிறது

உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம், பூர்வ கர்மமே (செயல்) ஆகும்.

கர்ம பலன் இல்லாவிடில், உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன?

ஒரு பிறவியிலேயே அனுபவிக்க படாத கர்மபலன் மிச்சமிருக்கும் போது, மறு பிறவியை அடைகிறான்.




பூர்வ ஜென்மத்தில் மிச்சப்பட்ட கர்மபலனை இப்பிறவியில் அனுபவித்ததும், இப்பிறவியில் செய்த கர்மபலனை அடுத்த பிறவியில் அனுபவிக்கவும் நேரிடுவதால், ஜீவன் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இவ்வாறு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் "ஸம்சார சக்கரம்" என்று சொல்லப் படுகிறது.

பலன் கொடுக்க அவகாசமின்றி மீந்து விட்ட கர்மபலன்களின் மூட்டையை "ஸஞ்சிதம்"  என்றும்,

பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட கர்மபலன்களை "ப்ராரப்தம்" என்றும்,

இப்பிறவியில் செய்த கர்மாக்களின் பலன், இனி வரப்போவதால் "ஆகாமி" என்றும் சொல்லப் படுகிறது.

இந்த மூன்று விதமான கர்மபலன்களையும் அனுபவித்து தீர்த்த பிறகு தான், மோக்ஷம் கிடைக்கும் என்ற நியமம் ஏதும் இல்லை.

ஸஞ்சித்தையும், அகாமியையும் ஞான அக்னியால் பொசுக்கி விட்டு, ப்ராரப்தத்தை மட்டும் அனுபவித்தால், இப்பிறவியிலேயே மோக்ஷம் கிடைக்கும்.

யாரும் ஞானத்துக்காக ஆசைப் படவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

பெரும்பாலும் அஞ்ஞானிகளே இருப்பதால், ஸம்சார சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.