Followers

Search Here...

Showing posts with label அறிவியலில். Show all posts
Showing posts with label அறிவியலில். Show all posts

Sunday 19 May 2019

அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...

1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.



அதற்கும் முன்,
808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.
அதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.



துவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.
அர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் "ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.
திருமூலர் கூடு விட்டு கூடு பாயும்  ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.
இறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.



த்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி,  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.
இருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.
எங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.


தேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.
பரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.




அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.
அது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.
கோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..
இன்று வரை துரு பிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...



ஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.

"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...

808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்?

குண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா?

Aeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை?
இவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா?

திருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா?
Max Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்?
சம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்?

இந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது?

தேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்?

ஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா?
ஒன்று கூட இல்லையே...
நம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...

இந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...

வெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.
சமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,
இது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்டி,
பிராம்மண பகையையும் ஊட்டி,
தன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.
விளைவு,
சாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.
ஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..
இன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.


சாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..
அவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.
ப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.
அது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..?

மற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.
இன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.
கோவிலை கட்டிய ஸ்தபதியும்,  ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...
இன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...
இன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.
எத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...


தன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.
ஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொண்டு இருக்கிறான்.
சமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.

நாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..



அர்த்த சாஸ்திரம் (finance mgmt),
காம சாஸ்திரம் (art of love),
யோக சாஸ்திரம்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம் (medicine)
காந்தர்வ வேதம் (music)
தனுர் வேதம்(army)
சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
சந்தஸ் (expert in poetic metres)
ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
ஸ்ம்ருதி,
யோகம் (expert in meditation, contemplation and liberation)
ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
நியாயம் (Expert in exploring sources of knowledge)
என்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...
துக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,
இஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.
இவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.

ஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.
உலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாதாரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...



மொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.

காங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.
பேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது.  ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.

இந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.

நம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.



ஹிந்துக்கள் சிந்தனைக்கு....