Followers

Search Here...

Showing posts with label பூணூல். Show all posts
Showing posts with label பூணூல். Show all posts

Tuesday 26 November 2019

பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? .....புரிந்து கொள்வோமே



பூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்?

பூணூல் இடது தோளில் அணிவதை "உபவீதம்" என்று அழைக்கிறோம்.

தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும்.

நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோளில் இருக்க வேண்டும்.

முன்னோர்கள் பித்ரு லோகம் தென் திசையில் உள்ளது.
அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது.

பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்து தான் செய்ய வேண்டும்.


ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசைபார்த்து தான் செய்கிறோம்.

கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப்பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம்.

நமக்கு வலப்பக்கம் தெற்கு திசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும் போது, பூணூல் வலமாக போட்டு கொள்கிறோம். 

ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.

பூணூல் நாம் அனைவரும் ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும். 

இது ஒரு கவசம்.
மதம் மாற்ற வருபவர்கள், நெற்றியில் திலகம், பூணூல் அணிந்தவனை நெருங்கி அவன் போலி தெய்வங்களை பற்றி பேசுவதில்லை...

ஜாதி பேதம் இல்லாமல் அணியலாம்.
வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.

ப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்..




"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்" என்று அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.
நம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.

இன்று ப்ராம்மணர்களில் கூட, சிலர் பூணூல் அணியாமல் திரிகின்றனர்.
மாமிசம் கூட சாப்பிடுகின்றனர்.
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், கோவில்கள், பாரத பெண்கள், செல்வங்களை மட்டும் இழக்கவில்லை நாம், இது போன்ற பழக்கத்தின் "ரகசியங்களையும்" தொலைத்தோம்..

'பூணூல் எதற்காக அணிந்தோம்?' என்ற காரணம் இன்று மறைந்து போனதால்,
'எதற்கு பூணூல் அணிய வேண்டும்?' என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டு கொள்கிறோம்..

பூணூல் அணிந்து இருப்பவர்களை பார்த்து, காரணமே இல்லாமல் பொறாமையும் படுகிறோம்..

பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...புரிந்து கொள்வோமே..

பூணூல் 'மூன்று நூல்களை' கொண்டதாக இருக்கிறது..
பூணூலில் ஒரு 'முடிச்சும்' காணப்படுகிறது.
அதை "ப்ரம்ம முடிச்சு" என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம்..

மூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது?
"மனிதனாக பிறந்த நாம் அனைவருமே,
"மூன்று பேருக்கு கடன் பட்டு" இருக்கிறோம்" 
என்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது..

  1. ஒன்று பித்ரு கடன்,
  2. இரண்டு, ரிஷி கடன்,
  3. மூன்றாவது, தேவ கடன்.

1. பித்ரு கடன்
இன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம்.
இன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரை பிறந்து இருக்கிறோம்.
ஜீவனான நமக்கு, "மனித உடல் கொடுத்து" இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள் "நம் பெற்றோர்கள்".

நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்து கொண்டு,
நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்...
இந்த உடலை வைத்து கொண்டு,
உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..

"உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன் பட்டுள்ளோம்".

இதை நமக்கு எப்பொழுதும் "நினைவுபடுத்தவே", பூணூல் அணிகிறோம்.

பூணூலில் உள்ள ஒரு நூல் "பித்ரு கடன் உனக்கு உள்ளது" 
என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

தாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும்.

அவர்கள் உயிர் பிரிந்து "பித்ரு லோகம்" சென்றாலும்,
அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும்,
அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று  பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.
"திவசம்" போன்ற காரியங்கள் செய்யும் போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள்..

காரணம் புரியாததால்!! பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்...
பூணூலை அணிந்து கொண்டே இருக்கலாமே.

ஒரு நூலை உடம்பில் போட்டுக்கொள்வது என்ன சிரமமான காரியமா?
ஹிந்துக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்..

அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும்,
பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே..
இது நம்முடைய ஒரு கடமையே.




"உனக்கு மனித உடல் கொடுத்த  பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்து விடாதே"
என்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
 
தாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன்,
அவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன், 
அவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன், 
இந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிப்பானா?..

"பூணூல் அறுப்பேன்" என்று சொல்பவன், "தாய் தந்தைக்கு நன்றி காட்டாதே.. அவர்களுக்கு நீ கடன் படவில்லை.." என்று தானே சொல்கிறான்..
பெற்றோரை மதிக்காத அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்கள் மனித குணம் உள்ளவர்களா?..
சிந்திக்க வேண்டும்...

2. தேவ கடன்
சூரிய தேவன், "கண்" என்ற உறுப்பிற்கு "பார்க்கும்" சக்தியை கொடுக்கிறார்..
அக்னி தேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார்.
வாயு தேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார்.
இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகி விடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் "கடன்" பட்டு இருக்கிறோம்.

ஸந்தியா வந்தனத்தில், "பிரணவ ஜபம், காயத்ரி ஜபம்" தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல, ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.

ஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாகவே சந்தியா வந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.

தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதன் மூலமாகவே "தேவ கடனுக்கு" நாம் நன்றி செய்ய முடிகிறது..
சந்தியா வந்தனத்தில்,
நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்..
எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்..
"யோவ: சிவதமோ ரஸ:" என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்..
"சர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:" என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்..

சந்தியா வந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் "தேவ கடனை" அடைத்து விடலாம்.

"சிவாய நம:, நமோ நாராயணா, முருகா போற்றி" என்று சொல்வதும்,
ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பாடுவதும் கூட,
நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே (துதிகள்).

"வேத மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டுமே பக்தியை கொடுக்கும், தெய்வத்திடம் அழைத்து செல்லும் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல..

வேதத்துக்கு நிகராக 4000 திவ்ய பிரபந்தங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்..
4000 திவ்ய பிரபந்தங்களை "தமிழ் மறை" என்றே சொல்கிறார்கள்..
"வேதத்துக்கு நிகரான திவ்ய பிரபந்தத்தை, கோவிலில் பெருமாளுக்கு முன் பாட செய்தார்" ஸ்ரீ ராமானுஜர் (1017AD)..

'திவ்ய பிரபந்தம் படிக்கும் போது, தெளியாத வேத மந்திரங்களின் அர்த்தங்கள் கூட புரிந்து விடுகிறது' என்கிறார் ஸ்வாமி தேசிகர்.

திவ்ய பிரபந்தம் "வேதத்துக்கு நிகரானது" என்று மதிக்கப்பட்டாலும்,
கோவில்களில் திவ்ய ப்ரபந்தத்தை பெருமாள் முன் பாட வேண்டும் என்று சீர்த்திருத்தமே செய்தாலும்,
ஸ்ரீ ராமானுஜர், "திவ்ய பிரபந்தம் போதுமே என்று வேத மந்திரங்களை ஒதுக்கி விட வில்லை" என்று பார்க்கிறோம்..

"ஸ்தோத்திரம் வேறு, வேத மந்திரங்கள் வேறு" என்பதை அறிந்தவர் ராமானுஜர்.

பெருமாள் முன் பாடப்படும் திவ்ய பிரபந்தங்கள், பகவானை பற்றி பாடுகிறது.. இது ஸ்துதி.




ஆனால் "புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது பகவானை பற்றிய ஸ்துதி அல்ல, அது பகவானையே குறிக்கிறது..
"ஓம் நம சிவாய" என்று சொல்வதும்,
"பதிகங்கள்" பாடுவதும்,
சிவபெருமானை பற்றிய ஸ்துதிகளே..
ஆனால்,
"ருத்ரம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது சிவபெருமானின் 11 ருத்ர ரூபத்தையே குறிக்கிறது..

மந்திரங்கள் ஸித்தி ஆகும் போது, தெய்வங்கள் நேரிடையாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..

நம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தேவர்களுக்கு, 
காலத்தில் மழை கொடுக்கும் தேவர்களுக்கு, 
நாம் அனைவருமே "தேவ கடன்" பட்டு இருக்கிறோம்.

மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்து "தேவ கடனை" அடைக்கிறோம்.
அது தவிர,
தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும்,
குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், 
கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், 
கோவிலில் உள்ள தெய்வங்களின் சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பது போன்றவை மூலமாகவும்,
"தேவ கடனை" அடைக்கிறோம்..
பூணூலில் உள்ள இரண்டாவது நூல் "தேவ கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

3. ரிஷி கடன்
"ஓம்" என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் ப்ரம்ம தேவன்.
"ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா"
என்று சந்தியா வந்தனம் காட்டுகிறது.
ப்ரம்மாவே ரிஷி தான்.
"ஓம் என்ற பிரணவம்" ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும்.

"காயத்ரி மந்திரத்துக்கு" ரிஷி விஸ்வாமித்திரர்.
இப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..
சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு "ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம்" என்று பல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்..

அவர்கள் எங்கெல்லாம் "சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்" பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ, 
அங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர்.

வாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..

மோக்ஷத்துக்கு வழிகாட்ட வராஹ புராணம், பாகவதம் போன்றவைகளையும் கொடுத்தனர்..

நாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்..
ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே..

ரிஷிகள் விஞ்ஞானிகளுக்கும் மேலானவர்கள்..
இதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும்? சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்? 
என்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு, 
இன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்..
பூணூலில் உள்ள மூன்றாவது நூல் "ரிஷி கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

சந்தியா வந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து,
ஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

காயத்ரி ஜபம் செய்து, விஸ்வாமித்ர ரிஷியின் அணுகிரஹத்தை பெறுகிறோம்.




வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த "புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்" போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர்.
மூன்று வேளையும் ,
ஸந்தியா வந்தனம் செய்து வந்தாலே "தேவ கடனும் தீருகிறது, ரிஷி கடனும் தீருகிறது".

ரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷி கடனை அடைக்கலாம்.
குருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும் போது, ரிஷி கடன் தீருகிறது.
அவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம்.
மகான்களின் அறிவுரை படி வாழ முயற்சிப்பது..
ரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது,
ரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது
போன்றவை மூலம் "ரிஷிகளின் கடனை" நாம் அடைக்கிறோம்..

இந்த "மூன்று கடனையும்" எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது..

இன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது..
அனைவருமே அணிய வேண்டும்.
"ஓம் நம சிவாய" என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவபெருமான் பிரசன்னமாக, 
வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
அனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்..

நம் பிரார்த்தனைகள் பலிக்க, 
நாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க, 
நினைத்த காரியங்கள் நிறைவேற, 
வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில், 
பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ணரும் சந்தியா வந்தனம் செய்தார்.  பூணூல் அணிந்து இருந்தாரே!!

ஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே!!..
நாம் அனைவருமே
நம் "பெற்றோருக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ப்ரம்ம தேவன் வழி வந்த நாம் அனைவரும்,
"ரிஷிகளுக்கு' கடன் பட்டு இருக்கிறோம்.
நம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும்
"தேவர்களுக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..

ஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்..
நாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது,
அனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்..
மனிதனாக பிறந்த யாருமே "இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்" பாவத்தை சேர்த்து கொள்கிறான்..

இந்த "மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே" பூணூல் அணிகிறோம்..

பூணூல் அணிந்து கொண்டே இருக்கும் போது,

  • தவறான காரியங்கள்,
  • ஒழுக்ககேடான செயல்கள்,
  • கோவில் சொத்தை திருட வாய்ப்பு கிடைத்தாலும், 

நம்மை செய்ய விடாமல், நம் மனசாட்சியே தடுத்து விடும்..
ஒரு CCTV கேமராவை வைக்கும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போனாலும், தவறான செயல்கள் செய்ய அது தடுப்பது போல,
பூணூல் என்ற CCTV கேமரா, ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது..




சில சமயங்களில் தெரிந்தே சில தவறுகள் செய்தாலும்,
பெரும்பாலும், "பூணூல் அணிந்தவர்கள் தவறு செய்ய அஞ்சுவதை காணலாம்".
சிறையில் பெரும் குற்றத்தை செய்து விட்டு இருப்பவர்களில்,
99% மக்கள் மாமிசம் உண்பவர்களாகவும், பூணூல் அணியாதவர்களாகவும் தான் உள்ளனர்..

குற்றத்தை குறைக்க வல்லது பூணூல்..
இதன் அர்த்தங்கள் புரிந்து,
பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் பூணூல் அணிய ஆரம்பித்தால், தானாகவே தனி மனித ஒழுக்கங்கள் சீர்பட்டு விடும்.

பூணூல் எதற்கு? அது என்ன உணர்த்துகிறது? என்று புரியாதவரை, 
இது வெறும் நூலாக தான் தோன்றும்..
பாரத மக்கள் விழிப்படைய வேண்டும்..
எதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்..

பெரும்பாலான ஹிந்துக்கள்
மகான்களிடம் பக்தி,
தெய்வ பக்தி,
பித்ரு பக்தி
கொண்டவர்களாக இருப்பதால்,
அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது.

ரிஷி கடனும் இல்லாத,
தேவ கடனும் இல்லாத,
பித்ரு கடனும் இல்லாத
பரவாசுதேவன் நாராயணன், "நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்" என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.
"நாம் நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்" என்று காண்பிக்க, தானும் இட்டு கொள்கிறார்.

கருணையே வடிவான தெய்வங்கள் அல்லவா! நம் தெய்வங்கள்.

பெற்றோரை மதிக்காதவன்,
நமக்கு மேல் தேவதைகள் உண்டு என்று உணராதவன்,
ரிஷிகளின் யோக சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆயுர்வேதம் என்று எதையும் மதிக்காதவன்
மட்டுமே, "பூணூல் அணிவதை தவிர்க்க நினைப்பான்"..
அப்படிப்பட்டவனை மனிதன் என்று மதிப்பதே வீண்.


  • பெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
  • தேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
  • ரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,

கட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்..
இது "ஒரு ரக்ஷை" என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஒரு CCTV கேமராவை போல, 
நம் உடம்பில் இந்த பூணூல் இருக்கும் போது,

  1. பெற்றோர் விரும்பாத செயல்களை செய்ய, நாம் தயங்குவோம்.
  2. தேவர்கள் வெறுக்கும் உடல் ரீதியான காரியங்களை செய்ய தயங்குவோம்.
  3. ரிஷிகள் வெறுக்கும் வாழ்க்கை முறையை வாழ தயங்குவோம்.

இனி,
பூணூலில் போடப்பட்டு இருக்கும் "ப்ரம்ம முடிச்சை" பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்..
ஓம் என்ற பிரணவத்தின் ரிஷி "ப்ரம்ம தேவன்" என்று அறிகிறோம்.
(ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரம்மா)

"பிராணாயாமம்" என்ற இந்த மூச்சு பயிற்சிக்கும், இந்த "ப்ரம்ம முடிச்சுக்கும்" சம்பந்தம் உள்ளது...
பிராணாயாமம் செய்யும் போது,
8 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
பின்னர்,
8 மாத்திரைகள், ராம ராம என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
இது "ஒரு எண்ணிக்கை".




இந்த எண்ணிக்கையை, 64 வரை எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டு போகலாம்.
இவ்வாறு 6 மாதம் செய்தால்,
இடது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'இடா என்ற பெண் குணங்களை கொண்ட நாடி' சுத்தி ஆகி விடும்..
அதே போல,
வலது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'பிங்களா என்ற ஆண் குணங்களை கொண்ட நாடியும்' சுத்தி ஆகி விடும்..
நாடி சுத்தி பிராணாயாமத்தை,
6 மாதம் செய்து வந்தால் - இரண்டு நாடியும் (இடா, பிங்களா) சுத்தி ஆகி, "மூலாதார சக்கரம்" தூண்டப்பட்ட நிலையில், உடலில் ஆரோக்கியம், மனதில் அமைதி, புத்தியில் விவேகம் இவைகள் உண்டாகும்.
ஒருக்கால் "ஓங்கார நாதம்" கேட்கவும் கூடும்.

6 மாதத்தில் இரு நாடிகளும் சுத்தி ஏற்பட்டதும், இந்த இரு நாடிகளுக்கும் நடுவே, முதுகு தண்டின் நடுவில், மூலாதார சக்கரம் ஆரம்பித்து, மேல் நோக்கி சக்தியை செலுத்தும் குணமுடைய "சுஷும்னா" என்ற நாடி விழித்து விடும்.

இடா என்ற நாடியும், பிங்களா என்ற நாடியும் கீழ் நோக்கி சக்தியை செலுத்தும் குணம் கொண்டவை..

இந்த இரு நாடிகள் மட்டுமே, நமக்கு வேலை செய்கிறது..
நம் பிராண சக்திகள் காமத்துக்கும், கோபத்துக்கும் விரயம் ஆகிறது..

இந்த இரண்டு நாடிகள் தடையில்லாமல் சஞ்சரிக்கும் போது,
இந்த இரண்டு நாடிகள் சுத்தி ஆகும் போது,
மேல் நோக்கி செல்லும் சுஷும்னா என்ற நாடி விழித்து, இடா, மற்றும் பிங்களா என்ற நாடிகளிலிருந்து கீழ் நோக்கி வரும் சக்தியை, அப்படியே திசை மாற்றி முதுகு தண்டின் நடுவே மேல் நோக்கி பாய்ச்சுகிறது..
இந்த அனுபவம் பேரானந்தத்தை பயிற்சி செய்பவருக்கு கொடுத்து விடும்.

'இடா பிங்களா' நாடிகள் கீழ் நோக்கி சக்தியை எடுத்து செல்கிறது. 
இது உலக விஷயங்களில் நம்மை இழுத்து செல்கிறது.

'சுஷும்னா' என்ற நாடி விழித்தெழும் போது, நம் ப்ராண சக்தி, மேல் எழும்பி செல்லும் போது, இது வரை அனுபவிக்காத நிலை ஏற்படும்.
சுஷும்னா நாடி தெய்வீக விஷயங்களில் நம்மை இழுத்து செல்லும். 

ஒரு சாரை பாம்பு எப்படி நெளிந்து நெளிந்து வேகமாக செல்லுமோ, அது போல, குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் உயரே செல்லும்.

தெய்வ தரிசங்கள் ஏற்படுவதற்கு முன், ஸித்திகள் கை கூடும்.
இந்த ஸித்திகளில் மயங்கி விழுந்தால், பெற்ற சக்திகள் அந்த ஸித்திகளை அனுபவிப்பதில் செலவாகி, தெய்வ தரிசனம் கிடைக்காமல் போக செய்யும்.

எந்த ஞானி, இந்த ஸித்திகளை புறந்தள்ளி மேலும் முயற்சிக்கிறானோ, அவனுடைய பிராண சக்தி, சஹஸ்ரார சக்கரம் வரை சென்று, மோக்ஷத்தை நேரிடையாக பெற்று விடுகிறான்.
அந்த ஜென்மத்தோடு பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீண்டு, வைகுண்டம் சென்று விடுகிறான்.

7 சக்கரங்களில், 'மூலாதார சக்கரத்தில்' உள்ள இந்த சுஷும்னா நாடி, மேல் எழும்பி 'சுவாதிஸ்டான சக்கரத்தை' தொட்டு விட்டால், உடல் ஆரோக்கியம் தானாகவே ஏற்பட்டு விடும்.. களைப்பே இல்லாத தேகத்தை பெற்று விடுவான்..
'சுவாதிஸ்டான சக்கரம்' நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன், தனக்கும் இந்த உடலுக்கும் இடைவெளியை உணர்வான்..

இந்த இரு சக்கரத்தின் நடுவே ஒரு முடிச்சு உள்ளது.
இந்த முடிச்சுக்கே "ப்ரம்ம முடிச்சு" என்று பெயர்.
இதே ப்ரம்ம முடிச்சை தான் பூணூலில் வைத்து, "இந்த ப்ரம்ம முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்" என்று நமக்கு நினைவுபடுத்துகிறது..
பிராணாயாமம் செய்து, மூலாதார சக்கரத்தில் இருக்கும் சுஷும்னா நாடியை மேலே எழும்பி விட முடியும்..




ஆனால் வெறும் ப்ராணாயாமத்தால் மட்டுமே இந்த ப்ரம்ம முடிச்சை தாண்டி, அடுத்த சக்கரமான சுவாதிஸ்டான சக்கரத்தை அடைய முடியாது..

நம் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை உணர்ந்து, அதற்கான நன்றியை விடாமல் செய்து கொண்டிருந்தால்,
ரிஷிகளில் முதன்மையான ப்ரம்ம தேவன் கருணையால்,
அவர் படைத்த உலகை கண்டு, எதிர்கால பயம் ஏற்படாத நிலையை கொடுக்கிறார்.
தெய்வ பலம் தனக்கு இருப்பதை உணர்வதால், தானாகவே உலக பயம் விலக, ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது..
ஸந்யாஸத்தை ஏற்றவர்கள், பூணூலை அவிழ்த்து விடுகிறார்கள். 
அவர்கள் குடும்பத்தை, சுகத்தை விட்டு சன்யாசம் ஏற்கிறார்கள்.
தெய்வ பலத்தை கையில் எடுக்கும் இவர்கள், எதிர்கால பயத்தை விட்டு விடுகிறார்கள். ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது. 
ஆதலால் பூணூல் இவர்கள் அணிவதில்லை.




மறுபிறவி எடுத்த சந்யாசமானாலும், தேவ கடனை, ரிஷி கடனை இவர்கள் விடுவதில்லை. தாயை விட்டுவிடுவதில்லை. 
ஆதி சங்கரர், சன்யாசம் ஏற்ற பின், தன் தாய் கடைசி காலத்தில் இருப்பதை அறிந்து, தாயை பார்க்க வந்து விட்டார். 
அவருடைய தாய், பரவாசுதேவனை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாளோ, அப்படி எல்லாம் பார்க்க பரவாசுதேவன் நாராயணனை பிரார்த்திக்க,  கிருஷ்ணராகவும்,  ராமராகவும், விஷ்ணுவாகவும், சிவபெருமானாகவும் தரிசனம் பெற்று, நற்கதி அடைந்தாள். 
ப்ரம்ம முடிச்சு அவிழ, தடைபட்ட ஓட்டம் விலகுகிறது...

நாடி சுத்தியால், எழுப்பப்பட்ட சுஷும்னா நாடி, மூலாதார சக்கரத்தை தாண்டி, மேலே உள்ள சுவாதிஸ்டான சக்கரத்தை அடைகிறது...

மேலும் பிராணாயாமம் கும்பத்தோடு (மூச்சை அடக்கி) செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி மணிப்பூரக சக்கரத்தை தூண்டுகிறது .

தொப்புளுக்கு நேரான முதுகு தண்டில் மணிப்பூரகம் சக்கரம் உள்ளது.
மணிப்பூரகம் சக்கரம் தூண்டப்பட்ட மனிதன், கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.

இந்த இடத்தில் தான் நினைப்பது எல்லாம் தானாக நடக்க ஆரம்பிக்கும்.. மனிதர்கள் தானாக வந்து விழுவார்கள்...

மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள அனாகதம் சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு இருந்ததை போன்று, இங்கு விஷ்ணு முடிச்சு தடுக்கும்...

இதையும் ப்ராணாயாமத்தால் மட்டும் அவிழ்க்க முடியாது...
விஷ்ணு பகவானை தியானித்து பக்தி செய்ய செய்ய, நம் புத்தியில் உள்ள சுயநலம் கரைந்து விடும்.. அவர் அணுகிரஹத்தால் தான் தன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்று தெளிவு ஏற்படுகிறது..

சுயநல எண்ணம் கரைய, விஷ்ணு முடிச்சு அவிழ, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள 'அனாகதம் சக்கரத்தை' அடைகிறது.

இந்த சக்கரம் தூண்ட படும்போது, உலகத்தில் யாரை பார்த்தாலும் ப்ரம்ம ஸ்வரூபமாகவே தோன்றும்...
பிரகலாதன் எதை பார்த்தாலும் அதில் நாராயணன் இருப்பதை பார்த்தது போல, யாரை பார்த்தாலும் தோன்றும்.. எதை பார்த்தாலும் தோன்றும்.. மனதில் அன்பு பெருகும்.. அன்பே உருவாக ஆகி விடுவார்கள்..
சில சமயங்களில் படைக்கும் சக்தியும் பெற்று விடுவார்கள்..

மேலும் முயற்சி செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி, கழுத்துக்கு நேராக உள்ள விசுக்தி என்ற சக்கரத்தை அடையும்.
இந்த சக்கரம் தூண்டப்படும் போது, வரும்
தீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி ஏற்படும்.

மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி நெற்றியின் நடுவில் உள்ள ஆக்கினை சக்கரத்தை அடைய முயல்கிறது.

இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு, விஷ்ணு முடுச்சு இருந்ததை போன்று, இங்கு ருத்ர முடிச்சு தடுக்கும்...

தான் எப்படி ஒரு ஆன்மீக முன்னேற்றத்தை பெற்று விட்டோம் என்ற கர்வம் இருக்கும் வரை, ஆக்கினை சக்கரத்தை அடைய முடியாது.

கர்வத்தை ஈஸ்வரனிடம் தொலைத்து, சரணாகதி செய்தால், ருத்ர முடிச்சு தானாக அவிழ்ந்து, ஆக்கினை சக்கரத்தை தூண்டுகிறது...
மூன்றாவது நெற்றி கண் போல, ஞானம், பேரறிவு போன்றவை உண்டாகும்.

கடைசியாக குண்டலினியாகிய மின்னல் கொடி (பிராண சக்தி), ஆறு விதமான ஜோதிகளை (சக்கரம்) தாண்டி, பரஞ்ஜோதியை (சஹஸ்ரார சக்ரம்) அடைந்து, இரண்டற கலந்து விடும்.
இதுவே முக்தி நிலை.

ப்ராணயாமத்தில் ஸித்தி பெற்றவனுக்கு, சமாதி தானே கை கூடும். 

ப்ராணயாமத்தில் ஸித்தி பெறாதவன், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் போன்ற வழியில் சென்றும் "சமாதி" நிலையை அடையலாம்.

நம் ஹிந்து தர்மத்தில் எதற்கும் காரணம் உண்டு. 

"ஓம் நம சிவாய", "நமோ நாராயண" என்று நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள் பலிக்க,  
தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலிக்க, 
நம் மீது உள்ள தேவ கடனை, ரிஷி கடனை, பித்ரு கடனை கழிக்க, 
பூணூல் தேவை.நாம் அனைவருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். 

இதை வேதம் கற்ற வேதியர்களிடம், "ஆவணி அவிட்டம்" அன்று அனைவரும் மிகுந்த மதிப்புடன், மரியாதையுடன் வாங்கி பெற்று போட்டு கொள்ள வேண்டும். 

ஆவணி அவிடத்தில் வேதியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி புது பூணூலை கொடுப்பதால், நாம் சொல்லும் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்.

ஆவணி அவிட்டத்தின் போது, பூணூல் அணிவதில் காரணத்தை அறிய இங்கு படிக்கவும்... 

இப்படி மூன்று நூல் கொண்ட ஒரு பூணூலை, 
திருமணம் ஆகும் வரை ஒரு ஆண் போட்டு கொண்டு, தன் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை,  ரிஷி கடனை அடைகிறான்.




திருமணம் ஆன பின், மேலும் ஒரு பூணலை போட்டுக்கொள்கிறான். இங்கு, தன் மனைவிக்கு இருக்கும் இந்த மூன்று கடனையும் தான் ஏற்று கொண்டு, மேலும் பொறுப்பை ஏற்கிறான். 
அவளின் தெய்வீக பாதைக்கும், தான் உழைக்கிறான். பத்னி இதனால், கணவனுக்கு நன்றியுடன், தர்மத்தில் இருந்து, அவனை தாயாக, துணைவியாக பார்த்து கொள்கிறாள்.

மூன்றாவது பூணூல் கிடையாது.  ஆனால் பிராம்மணர்கள் அங்க வஸ்திரம் இன்று அணியாமல் இருப்பதால், மூன்றாவது பூணூலை அங்கவஸ்திரமாக போட்டு விடுகிறார்கள். 
சட்டை அணியாத, அங்க வஸ்திரம் அணிந்தே இருக்கும் வேதியர்கள், இந்த மூன்றாவது பூணூலை அணிவதில்லை. 


வாழ்க ஹிந்துக்கள்.  



Tuesday 13 August 2019

ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்?...காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள். "ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.



சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.

"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.

இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.

நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.

இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.

இன்று புரியாமல் போனாலும்,  ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.

"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...

இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.

தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.

'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.

வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.

"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.

புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
'கேசவ, நாராயண, மாதவா' என்று சொல்லும் போதே பஜனை செய்யும் ஆனந்தம் மகான்களுக்கு ஏற்படுகிறது.

அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.

'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.


டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.

மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.

"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".

இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".

4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.

மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.

வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.

வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..

வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..

ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?






வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே.. 
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.

வேத மந்திரங்கள் மருந்து போன்றது.

அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.

நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.

போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது. 

உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) இருக்க வேண்டும்.

ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.


சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.

நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.

ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.

"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.

பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.

சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.

பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால், 
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.

இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.

வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.

இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.

வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.

அன்றைய காலத்தில் "குரு  சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..

போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.

இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.

இன்று, பல ப்ராம்மணரகள்

  • சூத்திர தொழில் செய்வதால் (employee),
  • ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
  • சுய தொழில், மருத்துவம் செய்வதால்,

அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.

வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.

அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.

சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.

"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".

வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"

"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.

ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.

வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.

சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.

புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.

வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.


உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.

நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.

தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.

மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.

ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.