Followers

Search Here...

Showing posts with label காயத்ரி. Show all posts
Showing posts with label காயத்ரி. Show all posts

Thursday 9 September 2021

ஓம் என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன? வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?...

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்".

நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான்.

நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே". 

வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும்.

வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும். 

வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம் 

"பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெரிய மாட்டார். அவர் வரமாட்டார்

என்று அரைகுறையாக உருட்டிக்கொண்டு, 'தெய்வத்தின் பெயரால்' தங்கள் இஷ்டத்துக்கு பாவங்கள் செய்து கொண்டு இருப்போம். 




  • பரமாத்மா யார்?
  • அவருக்கும் ப்ரணவத்துக்கும் என்ன சம்பந்தம்?
  • அவர் விஷ்ணுவாகவும், சிவனாகவும், பிரம்மாவாகவும் ஏன் ரூபம் தரித்தார்? 
  • ஏன் உலகை படைத்தார்? 
  • எப்படி உலகை படைத்தார்?
  • நம்மை ஏன் படைத்தார்? 
  • உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
  • மனிதனின் குறிக்கோள் என்ன?
  • மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

என்ற பல கேள்விகளுக்கு, பதில் தெரியாமலேயே போயிருக்கும்.

பகவான் மட்டுமே பதில் சொல்லக்கூடிய இந்த கேள்விகளுக்கு, பகவானின் இதயத்திலிருந்து வெளிவந்த வேதம், அனைத்து கேள்விக்கும் பதில் சொல்கிறது. 

பகவான் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

"வேதம் என்ன சொல்கிறது?" என்று அறிவதன் மூலம், நமக்கு விடை கிடைக்கிறது.


அந்த வேதம், பகவானோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறது? என்று அறிவோம்.  


* வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், சாம, அதர்வண

* நான்கு வேதமும், அதனதன் வேத ஆதியில் (முதல் மந்திரம்) அடக்கம்.


வேத ஆதி (முதல் மந்திரம்) என்ன?

1. ரிக் வேத ஆரம்ப மந்திரம்: 

அக்நிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ந தாதமம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், 

யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், 

முதன்மையாக இருப்பவரும், 

எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், 

செல்வத்தை தருபவரும், 

ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான 

அக்னி பகவானே ! 

பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்.




2. யஜுர் வேத ஆரம்ப மந்திரம்: 

இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த - உபாயவஸ்த - தேவோவ: ஸவிதா - ப்ரார்ப்யது - ஸ்ரேஷ்டதம் ஆய கர்மணே

அர்த்தம்:

இஷ்டமான அதே சமயம் புஷ்டியான அன்னம் உண்டாவதற்காகவும்,

நல்ல பசும்பால் உண்டாவதற்காகவும்,

செய்யப்படும் சிறந்த யாகமாகிய கர்மத்தில், ஸவிதாவான ஈஸ்வரன் உன்னை தூண்டட்டும்.


3. சாம வேத ஆரம்ப மந்திரம்: 

அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே  நிஹோதா ஸத்ஸி ப'ர்ஹிஷி

அர்த்தம்:

அக்னி தேவனே ! வருக.. வருக.. ஹவிசை பெறுவதற்காக கூப்பிடப்பட்ட தாங்கள், இந்த தர்ப்ப ஆஸனத்தில் அமருவீராக 


4. அதர்வண வேத ஆரம்ப மந்திரம்: 

ஸந்நோ தேவீ: அபிஷ்டய

ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ: அபி ஸர வந்து ந : 

அர்த்தம் :

நமக்கு நல்ல திவ்யமான குடி தண்ணீர் கிடைக்கட்டும். நல்ல மழை பொழியட்டும்.

* வேத ஆதியாக இருக்கும் இந்த நான்கு மந்திரமும், காயத்ரீ மந்திரத்தில் அடக்கம்.

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்


காயத்ரீக்குள் வேத மந்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்பதால் தான், வேதம் கற்கும் முன், காயத்ரீ மந்திரத்தை முதலில் குரு ப்ரம்ம உபதேசமாக செய்கிறார்.


* காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடக்கம்.

(பூ: புவ: ஸுவ: என்ற கீழ், நடு, மேல் உலகங்களை, வ்யாஹ்ருதி என்று சொல்கிறோம். 

இந்த உலகங்களுக்குள் காயத்ரீ மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைத்து விட கூடாது.

மூன்று உலகங்கள் விராட் புருஷனான நாராயணனின் அங்கம் என்று ரூபமாக தியானித்து, அந்த விராட் புருஷனாக இருக்கும் நாராயணனின் அங்கத்தில் காயத்ரீ என்று அடங்கி இருக்கிறாள் என்று தியானிக்க வேண்டும்.

அதனால் தான், 

காயத்ரீ மந்திரம் சொன்னாலும், பிராணாயாமம் செய்தாலும், ப்ராயசித்த ஹோமங்கள், ப்ரோக்ஷணம், சமர்ப்பணம் செய்தாலும், பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்தே சொல்கிறோம். 





காயத்ரீ மந்திரம் மட்டும் அர்த்தம் தெரிந்து சொன்னால், பகவானின் நாமத்தை பூஜித்ததாகும். 

பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீயை சொல்லும் போது, பகவானின் ரூபத்தை தியானிக்க முடிவதால் பகவானின் ரூபத்தை பூஜித்ததாகவும் ஆகும்.

* வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் (ஓம்) அடக்கம்.

என்ற ஒலியும், என்ற ஒலியும், என்ற ஒலியும் சேரும் போது, "ஓம்" என்ற பிரணவம் கேட்கிறது.


மொழியின் அடிப்படையில்

"" என்பது உயிர் எழுத்து என்று அறிகிறோம்.

'உயிர்' என்றால் ஆத்மா என்று சொல்கிறோம்.


"ம்' என்பது மெய் எழுத்து என்கிறோம். 

'மெய்' என்றால் உடல் சொல்வோம்.


உயிர் ('ஆத்மா') மெய்யோடு (உடலில்) புகும் பொழுது, உயிர்மெய் என்று சொல்கிறோம்.

அதாவது,

+ம் = என்ற உயிர்மெய் வருகிறது.

ஓம் என்ற பிரணவம் இந்த ரகசியத்தை தான் நமக்கு சொல்கிறது.

என்ற உயிரே "பரமாத்மா".

அவரே ஆயிரக்கணக்கான உடல்களில் பிரவேசித்து, "" போல தெரிகிறார். அவரே என்று தனித்தும் இருக்கிறார். 

இந்த உறவை தெரிந்து கொள்ளவே "" என்ற உறவு காட்டுகிறது. 


* ப்ரணவம் (ஓம் - அஉம) ப்ரம்மத்தில் () அடக்கம்.


ப்ரம்மமே "பரமாத்மா". 

ப்ரம்மமே "பகவான்".

ப்ரம்மமே "கிருஷ்ணராக" வந்தார்.

"நான் ப்ரணவத்தில் '' என்ற அகாரமாக இருக்கிறேன்" என்று கீதையில் சொல்கிறார்.

ப்ரம்மமே ஒலி ரூபத்தில் 'ப்ரணவமாக' இருக்கிறார்.

ப்ரம்மமே பார்க்கும்படியாக ரூபத்துடன், '' என்ற விஷ்ணுவாக இருக்கிறார், மூன்று உலகங்களே அங்கமாக கொண்ட விராட் புருஷனாகவும் இருக்கிறார்.


இப்படி பரமாத்மாவிலிருந்து ஓம்

பிறகு பூ புவ ஸுவ

பிறகு காயத்ரீ

பிறகு 4 வேதத்தின் முதல் மந்திரங்கள்

பிறகு வேதங்கள்

வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன், உலகங்களை படைக்கப்பட்ட வரிசை காட்டப்படுகிறது.


இந்த வரிசையை தியானிக்கவே, காயத்ரீயை மட்டும் சொல்லாமல்,

ஓம்

பூ: புவ: ஸுவ:

என்று சொல்லி, பிறகு 

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்

என்று காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்.


குருநாதர் துணை...

 

Wednesday 3 July 2019

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்". அதையும் விட சிறந்தது எது? தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்".


காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது "அஷ்டாக்ஷர மந்திரம்".
"காயத்ரி மந்திரத்தையும்" விட "அஷ்டாக்ஷர மந்திரம்" ஏன் சிறந்தது?
அஷ்டாக்ஷர மந்திரத்தின் விளக்கம் இதோ

கம்சன் கூட "காயத்ரி மந்திரத்தை" ஜபித்தான்.
ராவணனுக்கு புலஸ்திய மகரிஷியே "காயத்ரி மந்திரத்தை" உபதேசம் செய்து, வேத அத்யயனமும் செய்து வைத்தார். தினசரி அக்னி ஹோத்ரம் செய்து வந்தான் ராவணன். ப்ராம்மணன்.
ஹிரண்யகசிபுவும் கஷ்யப ரிஷியிடம் "காயத்ரி மந்திர" உபதேசம் பெற்றவன் தான்.


காயத்ரி மந்திரம் ஜெபித்து விஸ்வாமித்ரர் - "ரிஷி" என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அதே மந்திரம் அனைவரையும் காப்பாற்றவில்லை.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் -  சிசுபாலன், கம்சன், ஹிரண்யகசிபு, ராவணன் அனைவரும் அழிந்து போனார்கள்.
கர்வம் உள்ளவர்களை கை விட்டு விடும் காயத்ரி மந்திரம்.

நாராயண மந்திரம், தீயவனாக இருந்து ஜபித்தாலும், நரர்களான நமக்கு பரமாத்மாவான நாராயணனை துதிப்பதால், நம் தீய குணத்தையும் சரி செய்து, நம் பக்தியை உயர்த்தி, மோக்ஷம் வரை கிடைக்க செய்திடும்.

விளையாட்டாக, தன் மகனை "நாராயணா" என்று மரண தருவாயில் கூப்பிட்ட அஜாமிலன் போன்றவர்கள் கூட, மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள்.
திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.

ஆனால் காயத்ரியை ஜெபித்து 'எல்லோரும்' கறையேறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலக தர்மத்துக்காக கொடுக்கப்பட்டது காயத்ரி மந்திரம். காப்பாற்றினாலும் காப்பாற்றும். ராவணன் போன்றவர்கள் ஜபித்தால்,  கைவிட்டாலும் கைவிடும்.
பகவானால் கொடுக்கப்பட்டது திருவஷ்டாக்ஷர மந்திரம். இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும். மந்திரத்தை ஜபித்தவனை கை விடவே விடாது.


காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால், காயத்ரி தேவி பலன் கொடுக்கிறாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கு சாஷாத் பரமாத்மா நாராயணனே பலன் தருகிறார் என்பதால், இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும்.
"நமே பக்த ப்ரநஸ்யதி" என்று
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று பகவானே வாக்கு கொடுக்கிறார்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
அனைவரையும் காப்பாற்றக்கூடியது.

மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது. நிச்சயமாக மோக்ஷம் வரை தர கூடியது என்று கண்டு கொண்ட ஆழ்வார்கள்,
"கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆனந்தபட்டதில் ஆச்சர்யம் இல்லையே.
4000 திவ்ய ப்ரபந்தமும் நாராயணனையே துதி செய்கிறது.

அதே நாராயணன் தான் நமக்காக கோவிலில் அர்ச்ச அவதாரம் செய்து, நமக்காக காலம் காலமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சிலையாக அர்ச்ச அவதாரமாக நாராயணன் கோவிலில் இருக்கிறார்.. அவர் பேசுவாரா?
கல்லாக காட்சி கொடுக்கும் அவரிடம் எப்படி பக்தி செய்வது?
என்று நாம் நினைப்போம் என்று தானோ, ஆழ்வார்கள் பூமியில் அவதரித்து, கோவிலில் இருக்கும் அதே அர்ச்ச அவதார பெருமாளிடம் பக்தி செய்து காட்டி, திவ்ய பிரபந்தங்களை பாடியும், பேசியும் பக்தி செய்து, நமக்கும் அந்த திவ்ய பிரபந்தங்களை கொடுத்து விட்டனர்.






'சாஷாத் நாராயணன், அர்ச்ச அவதாரமாக உள்ளார்' என்று அறிந்தும், மோக்ஷத்துக்கு ஆசைப்படும் ஆழ்வார்கள் பக்தி செய்யாமலா இருப்பார்கள்.

அவர்கள் அர்ச்ச அவதாரமாக இருக்கும் நாராயணனிடம் பேசி, உரையாடியதை 4000 திவ்ய ப்ரபந்தமும் நமக்கு காட்டுகிறதே...

கோவிலுக்கு, சென்று பெருமாள் முன் நிற்கும் போது, ஏதாவது சொல்லி பேச வேண்டும் என்று பக்தியுள்ள நமக்கு தோன்றும்.
ஒரு பாசுரம் மனப்பாடம் செய்து சொன்னாலும் மனதில் பக்தி துளிர்க்குமே...  ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

சிலர் பேசினாலும் ப்ரயோஜனமில்லாத பேச்சாக இருக்கும்.
பெருமாள் பேசாமல் இருந்தாலும், ப்ரயோஜனமாக இருக்கும்.

பெருமாள் சந்நிதி முன் பக்தன் நிற்கும் போது, பேசாமல் இருக்கிறார் என்று போல தோன்றினாலும், பெருமாள் நம்மிடம் பேசாமல் பேசுகிறார்.

நம் பக்தியை பொறுத்து, நாம் என்ன நினைத்து நிற்கிறோமோ, அதை செய்து கொடுக்கிறார் பெருமாள்.

பக்தன் பெருமாள் சன்னதியில் நின்று கண்ணீர் விடுகிறான். 'மனதில் உள்ள ஒரு குறையை, தெய்வம் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
அங்கு அர்ச்சகர் வேறு யாரையோ பார்த்து "கவலைப்படாதீர்கள்.. பெருமாள் உங்கள் குறையை தீர்ப்பார்" என்று சொல்கிறார்.

தன் குறையை பெருமாளிடம் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த பக்தனுக்கு, அர்ச்சகர் சொல்வது காதில் விழுகிறது.
தனக்கு ஏற்பட்ட குறைக்கு, அர்ச்சகர் மூலமாக பெருமாள் தான், தனக்கு பதில் சொல்கிறார் என்று பெரும் நிம்மதியை அடைகிறான் பக்தன்.


பக்தியின் முதல் படியில், பகவான் பேசும் முறை இது.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன்,
தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் யாரோ ஒருவனை போல வந்து "நீ திருப்பதி போ... " என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்து பக்தன் திருப்பதி செல்ல, அவன் குறைகள் தானாக தீருகிறது.

தன்னிடம் பெருமாள் பேச ஆசைப்படுகிறார், வழி காட்டுகிறார், காப்பாற்றுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பெருமாளே திவ்ய காட்சி கொடுத்து, பேச ஆரம்பிக்கிறார்.
"தான் இப்படி ஒரு திவ்யமான காட்சி கண்டோமே" என்று தனக்குள்ளேயே ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாள் பெருமாளிடம் பக்தி செய்து, பெருமாளை அடையவேண்டும் என்று திருப்பாவை இயற்றினாள். பெருமாளையே மணம் முடிக்க முடிவு செய்தாள்.
ஆண்டாளுக்கே பெருமாள் முதலில் கனவில் தான் காட்சி கொடுத்தார். இதை ஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் தான் கண்ட கனவை, கனவில் தன்னை பெருமாள் மணந்ததை சொல்கிறாள் ஆண்டாள்.

வாரணம் ஆயிரம் சூழ
வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதற்கு பின்பு தான் பெருமாள் உண்மையிலேயே வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார்.

தெய்வ கனவுகள் எதுவுமே வீணான கனவுகள் இல்லை.

வேண்டாத கன்னா பின்னா கனவுகள் தான் எப்போதும் வரும். அது தான் இயற்கையும் கூட.

திவ்ய கனவுகள் அபூர்வமாக தான் வரும்.
திவ்ய கனவுகள் தெய்வ அருளால் மட்டுமே காண்கிறோம்.

தெய்வ கனவுகள் நமக்கு ஏற்பட்டால் அதுவே பாக்கியம்.

தூங்குவதற்கு முன், தினமும் "நாராயணா.. நாராயணா.." என்று தெய்வ பக்தியுடன் (அன்புடன்) உண்மையாக பகவானை பிரார்த்தித்து, நமக்கும் திவ்ய காட்சிகள் கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தித்து பின் தூங்க செல்லலாம்.
நம் உண்மையான அன்புக்கு, பகவான் ஒரு நாள் அணுகிரஹம் செய்வார்.

பகவான் நமக்கு ஏதாவது ரகசியமாக ஏதாவது சொல்ல நினைத்தால், கனவு மூலம் தெரிவிப்பார்.
பெருமாள் நேராக வந்து சொல்லலாமே என்று கேட்கலாம். அவர் வருவதற்கு தயாராக இருந்தாலும், நம் நம்பிக்கை, பக்குவத்தின் நிலையை அறிந்து இருப்பதால், வராமல் இருக்கிறார்.

உலக ஆசைகளே இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகாத்மாக்களே, கிருஷ்ண தரிசனத்தை நேரில் பெற்ற பின், உன்மத்தமான நிலையை அடைந்து, உலக நினைவில்லாமல் இருந்தனர்.
அவர்களால் கூட தான் கண்ட திவ்ய காட்சியை ஜீரணித்துக்கொண்டு, உலகத்தோடு பழக முடியவில்லை.

கனவில் காட்சி தரும் பகவான், நேரில் வந்து நமக்கு காட்சி கொடுத்தால், நமக்கு உள்ள பக்குவ நிலையில் தாங்கி கொள்ள முடியாமல் உயிர் பிரிந்து விடும் இல்லை மனம் பேதலித்து விடும்.

நம் பக்தியை உயர்த்தி விட தான் பெருமாளுக்கு விருப்பமேயொழிய நம் உயிரை பறிப்பதில் விருப்பம் இல்லை.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பேச ஆரம்பித்த பெருமாள், ஆபத்தான காலங்களில், சமயத்திற்கு யாரோ போல வந்து உபகாரம் செய்து விட்டு மறைந்து விடுவார்.
துளசிதாஸ், நாம தேவர், சக்குபாய், பத்ராசல ராமதாசர் போன்ற பக்தர்கள் வாழ்வில் பாண்டுரங்கன் யாரோ போலவோ வந்து, சமயத்தில் சக்குபாய் போலவும் வந்து லீலைகள் செய்தார்.

தன்னிடம் பெருமாள் உறவாட ஆசைப்படுகிறார் என்று புரிந்து கொண்டு, மேலும் பெருமாளிடம் பக்தி செய்ய,
அர்ச்ச அவதாரமாகவே இருந்தாலும், பெருமாள் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் பேசினால், பேசுவது மட்டுமின்றி, அவர் கூப்பிட்டார் என்றதும், கல் சிலையாக இருந்து கொண்டே, எழுந்து கொண்டு அவருடன் கிளம்பி விட்டார் காஞ்சியில் என்று பார்க்கிறோம்.
யதோகத்காரி பெருமாள், திருமழிசை ஆழ்வார் கூப்பிட்டார் என்று கிளம்ப, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

நாராயணா என்று சொல்லும் அனைவருக்கும் மோக்ஷம்.
நாராயணா என்று சொல்லும் யாருமே நாசம் போவதில்லை.
நாராயணா என்று பக்தியுடன் சொல்ல சொல்ல, பகவான் நாராயணன் தன்னை வெளிக்காட்ட ஆசைப்படுகிறார். மறைமுகமாக தான் இருப்பதை உணர செய்து, பக்தியை (தன்னிடம் அன்பு) ஏற்படுத்தி, படிப்படியாக தன்னை வெளிக்காட்டுகிறார் பெருமாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.


ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம். 


Wednesday 27 September 2017

சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன? நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?




நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?
சந்தியா வந்தனத்தில்,
ஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன?

ஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.

உருவாக்கப்பட்ட பிற மதங்கள் "நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.

சனாதன தர்மத்தில் இருக்கும் நாம், "வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்" என்று சொல்கிறோம்.

நம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.





இவர்கள் கண்டுபிடித்த
ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.
ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.

நாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,
காயத்ரி மந்திரம் சொல்லும் முன்,
நாம்
காயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,
காயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது  மூக்கை தொட்டும்,
காயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.

சந்தியா வந்தனத்தில்,
ப்ரணவ ஜபம் செய்யும் முன்:
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம,
தேவீ காயத்ரீச் சந்த:
பரமாத்மா தேவதா !
என்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.
இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.
இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

விளக்கம்:
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,
இந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்?
எப்படி சொல்ல வேண்டும்?
யாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது ?
என்று தியானிக்கிறோம்.
பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம
இங்கு, நம் தலையை தொட்டு "ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி" என்று சொல்கிறோம்.

வேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.

2. தேவீ காயத்ரீச் சந்த:
பின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் "தேவீ காயத்ரீ சந்தஸ்"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.


ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,
மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.

3. பரமாத்மா தேவதா
பின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.

ஸ்வயம் ப்ரம்மாவே, "இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்" என்று உணர்ந்து, "ப்ராணாயாம மந்திரம்" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.

முக்கியமாக 7 சந்தஸ் உண்டு:
ப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, "காயத்ரீ சந்தஸில்" உள்ளன.

பெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் "அனுஷ்டுப் சந்தஸில்" உள்ளன.

"அனுஷ்டுப் சந்தம்" என்பது "மொத்தம் 32 சொல்லுடன் கூடியது".
நான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 32 சொல்.

"காயத்ரி சந்தம்" என்பது "மொத்தம் 24 சொல்லுடன் கூடியது".
மூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். 
மொத்தம் 24 சொல்.

காயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் "காயத்ரி சந்தஸில்" சொல்ல வேண்டும்.
தத் வி துர் ரே னி யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!

இப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.

ஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.

காயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், "நிச்ருத் காயத்ரி" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.

நிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,
தத் வி துர் ரே ன்யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!
என்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.

ஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: ! என்று  எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,
ஸாவித்ர்யா ருஷிர் விச்வாமித்ர: ! 
நிச்ருத் காயத்ரீச் சந்த: ! 
ஸவிதா தேவதா !!
என்று சொல்லி, "தலை, மூக்கு, இதயத்தை" தொடுகிறோம்.
இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

ப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.

"ஓம்" என்ற மந்திரத்தின் மறு உருவான, "காயத்ரி மந்திரத்தை" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.

"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.




காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், "காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்" என்று இதயத்தை தொடுகிறோம்.
இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

இந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka