Followers

Search Here...

Friday 25 November 2022

குளிப்பதற்கும் ரிக் வேதம்....இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்) சொல்லலாமே? அறிவோம் அர்த்தம்

இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்)

வேத மந்திரங்களை முடிந்தவரை அர்த்தங்கள் புரிந்து சொல்வோமே! 


1st Bath (Before Soap): 

மார்ஜனம் (मार्जनं) (maarjanam):

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न: ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன

எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே 

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்



तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ:

யஸ்ய க்ஷயாய ஜின்வத:

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3

ॐ भू: भुव: सुव:



2nd Bath (After Soap):

புனர்-மார்ஜனம் (पूण: मार्जनं) (punar-maarjanam)


दधिक्राव्णो॑ अकारिषं

ததிக்ராவ்ணோ: அகாரிஷம்

என்னை தூக்கி கொண்டு செல்லும் (ததிக்ராவே) பகவானே ! நான் காரியங்கள் செய்யவில்லை.

जिष्णोरश्व॑स्य वाजिनः (जिष्णोः अश्व॑स्य वाजिनः)

ஜிஷ்ணோ: அஷ்வஸ்ய வாஜின:

எப்படி காரியங்கள் செய்யாமல் குதிரையில் அமர்ந்து இருப்பவனை, குதிரையையே தன் சக்தியால் அழைத்து கொண்டு செல்கிறதோ, அது போல நீங்களே கர்த்தாவாக இருந்து காரியங்கள் செய்கிறீர்கள்

सुरभि नो मुखा॑ करत्

ஸுரபி ந: முகா கரத்

நீங்கள் என்னுடைய வாக்கை சுகந்தமாக்குங்கள். (நல்லதையே பேச செய்யுங்கள்)

प्र न: आयूं॑षि तारिषत्

ப்ர ந: ஆயூம்ஷி தாரிஷத்

தீர்க்க ஆயுள் கொடுத்து உயர செய்யுங்கள்

ऋग्वेदः - मण्डल ४ - सूक्तं ४.३९. मंत्र ६

Rigveda: - Mandala 4 - Suktam 39  Mantra 6

Samaveda : Mantra 358

Samaveda: (Gauthama Sakhaa) Poorvaarchikah » Prapaataka » 4; ardha-Prapaataka » 2; dashatiḥ » 2; Mantra » 7

Samaveda: (Ranaaneeya Sakhaa) Poorvaarchika: » Chapter (adhyaaya) » 4; Clause (kanda) » 1; Mantra » 7

अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 137; मन्त्र » 3

AtarvaVeda - Kanda 20 Sukta 137 Mantra 3

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன



எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்

तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ

யஸ்ய க்ஷயாய ஜினவத

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3


ॐ भू: भुव: सुव:

Thursday 24 November 2022

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம்... காமத்தை ஜெயித்தவர், ஞானத்தை தருபவர் சிவபெருமான். அறிவோம் மஹாபாரதம்

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம். 

हतेषु सर्व-सैन्येषु 

सौप्तिकै तै रथैस्त्रिभिः।

शोचन् युधिष्ठिरो राजा 

दाशार्हम् इदम् अब्रवीत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

தூங்கிக்கொண்டிருந்த மஹாவீரர்களை, மூவரும்  (அஸ்வத்தாமா, கிருபர், க்ருதவர்மா) கொன்றுவிட்டார்கள் என்ற நிலையில், பெரும் துக்கத்தை அடைந்தார் யுதிஷ்டிரர்.


कथं नु कृष्ण पापेन 

क्षुद्रेण शठ-बुद्धिना।

द्रौणिना निहताः सर्वे 

मम पुत्रा महारथाः।।

तथा कृतास्‌र विक्रान्ताः 

सङ्ग्रामेष्वपलायिनः।

द्रुपदस्यात्मजाश्चैव 

द्रोणपुत्रेण पातिताः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

வாசுதேவ கிருஷ்ணரை பார்த்து, "கோவிந்தா!  பாவியும், அல்பனும், வஞ்சகபுத்தியுள்ள அஸ்வத்தாமனால், எப்படி மஹா ரதர்களான என்னுடைய புத்திரர்களை கொல்ல முடிந்தது? அனைத்து சாஸ்திரங்களும் அறிந்த, மஹா தைரியசாலியான, யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடாத துருபத புத்ரனை எவ்வாறு துரோண புத்ரனால் கொல்ல முடிந்தது?

यस्य द्रोणो महेष्वासो 

न प्रादादाहवे मुखम्।

निजघ्ने रथिनां श्रेष्ठं 

धृष्टद्युम्नं कथं नु सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

சிறந்த வில்லாளியான துரோணரே எவரை கண்டு முகம் கொடுத்து எதிர்க்கவில்லையோ, அப்படிப்பட்ட த்ருஷ்டத்யும்னனை எவ்வாறு இந்த துரோண புத்ரன் கொன்றான்?

किन्नु तेन कृतं कर्म 

तथायुक्तं नरर्षभ।

यदेकः समरे सर्वान्

अवधीन्नो गुरोः सुतः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புருஷ ஸ்ரேஷ்டரே! ஒரே ஒருவனாக இருந்து கொண்டு, இத்தனை பேரையும் கொல்ல முடிந்த இந்த துரோண புத்திரனுக்கு எதனால் இத்தனை பலம் ஏற்பட்டது?" என்று வினவினார்.


श्रीभगवानुवाच

नूनं स देवदेवानाम् 

ईश्वर ईश्वरम् अव्ययम्।

जगाम शरणं द्रौणि:

एकस्तेनावधीद्बहून्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பகவான் சொல்கிறார்.

"அந்த அஸ்வத்தாமா தேவர்களுக்கும் தேவனான, ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான, குறை ஒன்றும் இல்லாத மஹாதேவரை சரணமடைந்தான். அது நிச்சயம். அதனாலேயே, ஒருவனாக இருந்து கொண்டு அனைவரையும் கொல்ல முடிந்தது.




प्रसन्नो हि महादेवो 

दद्यादमरतामपि।

वीर्यं च गिरिशो दद्याद्येन्

इन्द्रमपि शातयेत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மஹாதேவர் ப்ரஸன்னாமானால், மரணமில்லாமல் கூட செய்து விடுவார்.

அவர் ப்ரசன்னமானால், இந்திரனையும் ஜெயிக்கும் வீர்யத்தை கொடுத்து விடுவார்.

वेदाहं हि महादेवं 

तत्त्वेन भरतर्षभ।

यानि चास्यपुराणानि

कर्माणि विविधानि च।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நான் மஹாதேவரை உள்ளது உள்ளபடி அறிவேன்.

புராதனமாகவும், பல விதமாகவும் இவர் செய்யும் லீலைகளை அறிவேன்.


आदिरेष हि भूतानां 

मध्यम् अन्तश्च भारत।

विचेष्टते जगच्चेदं 

सर्वमस्यैव कर्मणा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பாரதா! மஹாதேவர் பூதங்களுக்கு  ஆதியாகவும்,மத்யமாகவும், அந்தமாகவும் இருக்கிறார்.

இவர் அசைவினாலேயே இந்த உலகம் இயங்குகிறது.


एवं सिसृक्षु: भूतानि 

ददर्श प्रथमं विभुः।

पितामहो अब्रवीच्चैनं 

भूतानि सृज माचिरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரபுவான பிதாமஹர் (ப்ரம்ம தேவன்), ஒரு சமயம் பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்து, இவரை பார்த்து, "காலத்தை கடத்தாமல், உடனே பூதங்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்" என்று கேட்டார்.


हरि-केशस्तथेत्युक्‌वा 

दीर्घदर्शी तदा प्रभुः।

दीर्घकालं तपस्तेपे

मग्नोऽम्भसि महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்பொழுது, நடக்க போவதை அறிந்த தீர்கதரிசியும், தவத்தில் நாட்டமுடையவரும், அழகான தலை கேசம்  உடையவரும்,பிரபுவாமான மஹாதேவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, ஜலத்தில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.


सुमहान्तं ततः कालं 

प्रतीक्ष्यैनं पितामहः।

स्रष्टारं सर्वभूतानां

ससर्ज मनसाऽपरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிறகு, நெடு காலம் ஆகியும் மஹாதேவர் வராமல் போனதால், பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய வேறொருவரை (தக்ஷ ப்ரஜாபதி) மனதால் ஸ்ருஷ்டி செய்து விட்டார்.


सोऽब्रवीद्वातरं दृष्ट्वा 

गिरिशं सुप्तमम्भसि।

यदि मे नाग्रजोऽस्ति 

अन्यस्ततः स्रक्ष्याम्यहं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை (சிவன்) கண்ட இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி), தன் தந்தையிடம்,  "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால், நான் பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்கிறேன்" என்றார்.


तम् अब्रवीत्पिता नास्ति 

त्वदन्यः पुरुषोऽग्रजः।

स्थाणुरेष जले मग्नो

विस्रब्धः कुरु वै प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

ப்ரம்ம தேவர், "உன்னை  காட்டிலும் வேறு ஒரு ஆண் பிள்ளை இங்கு இல்லை. அந்த பிள்ளை ஜலத்தில் மூழ்கி இருக்கிறான். ஆதலால் மன அமைதியோடு நீ பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்" என்றார்




भूतान्यन्वसृजत्सप्त 

दक्षः क्षिप्रं प्रजापतिः।

यैरिमं व्यकरोत्सर्वं 

भूतग्रामं चतुर्विधम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

எந்த 7 பூதங்களை கொண்டு நால்வகை உயிரினங்கள் படைக்கப்பட்டதோ, அந்த பூதங்களை  இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி) விரைவாக படைக்க தொடங்கினார்

ताः सृष्टमात्राः क्षुधिताः 

प्रजाः सर्वाः प्रजापतिम्।

बिभक्षयिवो राजन्सहसा 

प्राद्रवंस्तदा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையான தக்ஷ ப்ரஜாபதியையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.


स भक्ष्यमाणस्त्राणार्थी

पितामहमुपाद्रवत्।

आभ्यो मां भगवांस्त्रातु 

वृत्तिरासां विधीयताम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரம்ம தேவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள விரும்பி, ப்ரம்ம தேவராய் நோக்கி ஓடினார்.

அவர்  அந்தப் ப்ரம்ம தேவரிடம்,

"ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றார்.


ततस्ताभ्यो ददावन्नमोषधीः स्थावराणि च।

जङ्गमानि च भूतानि दुर्बलानि बलीयसाम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்போது தாத்தாவான ப்ரம்ம தேவர், செடி-கொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு (பலமிக்க உயிரினங்களின்) வாழ்வாதாரமாக (உணவாக) பலவீனர்களை (பலமற்ற உயிரினங்களை) நிர்ணயித்தார் 


विहितान्नाः प्रजास्तास्तु जग्मुस्तुष्टा यथागतम्।

ततो ववृधिरे राजन्प्रीतिमत्यः स्वयोनिषु।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புதிதாக படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் இனங்களுடன் கூடி (புணர்ந்து) பெருகினர்.


भूतग्रामे विवृद्वे तु सृष्टे देवासुरे तदा।

उदतिष्ठज्जलाज्ज्येष्ठः प्रजाश्चेमा ददर्श सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவரான (சிவபெருமான்) நீரில் இருந்து எழுந்து, பிரஜைகள் ஸ்ருஷ்டி  செய்யப்பட்டு இருப்பதை கண்டார்.


बहुरूपाः प्रजाः सृष्टा विवृद्धाश्च स्वतेजसा।

चुक्रोध बलवद्दृष्ट्वा लिङ्गं स्वं चाप्यविध्यत।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அவர் (ருத்திரன்), பல வகை உயிரினங்கள் படைக்கப்பட்டு விட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டார்.

இதனால் கோபமடைந்த ருத்திரன், தன் லிங்கத்தை பூமியில் மறையும்படி விழ செய்தார்.  (காமத்தை வென்றவர் என்று நமக்கு உணர்த்தினார். ஆசைகள் அழிய, மெய்ஞானம் நமக்கு ஏற்பட, சிவபெருமானை வணங்குகிறோம்)


तत्प्रविद्धं तथा भूमौ तथैव प्रत्यतिष्ठत।

तमुवाचाव्ययो ब्रह्मा वचोभिः शमयन्निव।।

किं कृतं सलिले शर्व चिरकालस्थितेन ते।

किमर्थं चेदमुत्पाद्य लिङ्गं भूमौ प्रवेशितम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மங்காதவரான பிரம்ம தேவர், அவரிடம் மென்மையான வார்த்தைகளில்,

"ஸர்வா! இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

என்ன காரணத்தினால் உனது லிங்கம் பூமியில் நாட்டப்பட்டது?"

என்று கேட்டார்.


सो अब्रवीज्जातसंरम्भस्तथा लोकगुरुर्गुरुम्।

प्रजाः सृष्टाः परेणेमाः किं करिष्याम्यनेन वै।।

प्रजाः सृष्टाः परेणेमाः प्रजार्थं मे पितामह।

ओषध्यः परिवर्तेः अन्यथैवं सततं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

உலகத்திற்கே தலைவனான சிவன், கோபத்துடன்  பிரம்ம தேவரிடம்,

"இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?

ஓ! பெரும்பாட்டனே!

கடுந்தவம் செய்ததின் மூலம், நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன்.

இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றார்




एवमुक्त्वा स सक्रोधो जगाम विमना भवः।

गिरेर्मुञ्जवतः पादं तपस्तप्तुं महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பெரும் தவசீலரான, காமத்தை வென்றவரான அந்த சங்கரர், கோபத்தோடு இவ்வாறு உரைத்து விட்டு, மன அமைதி இல்லாதவராகி, தவம் செய்வதற்காக "முஞ்சிவான்" என்ற மலைச்சாரலை அடைந்தார். 

Monday 14 November 2022

சந்தியா வந்தனத்தில் கர்மயோகம், பிறகு ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி அடங்கி இருக்கிறது.. சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... வ்யாச பகவான் கொடுத்த பொக்கிஷத்தை அறிவோம்.

சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... 

பகவத்கீதையில்...

  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம், 
  • சரணாகதி 

சொல்லப்பட்டு இருக்கிறது.


பகவத்கீதை சொன்னவர், சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.


மஹாபாரதத்தில் வரும் பகவத்கீதையை நமக்கு அப்படியே கொடுத்தவர் பகவான் வியாசர்.

வியாசர் "நான்கு வேதமும் ஒருவரே கலியில் படிக்க முடியாது" என்று தெரிந்து, நான்கு சிஷ்யர்களை கொண்டு வேதத்தை பிரித்து கொடுத்தார்.

அவரே சந்தியாவந்தனத்தையும் கலிக்கு தகுந்தாற்போல முறை செய்து கொடுத்தார்

பகவத்கீதை கேட்டு மஹாபாரதம் எழுதி விட்டு,  வியாசர் நமக்காக முறை செய்து கொடுத்த சந்தியாவந்தனத்தில், பகவத்கீதை இல்லாமல் இருக்க முடியுமா?


அவர் வகுத்து கொடுத்து, நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை இருப்பதை நாம் காணலாம், அனுபவிக்கவும் செய்யலாம்.




1. கர்ம யோகம்

ஆசமனம், அங்க ரக்ஷை, பிராணாயாமம், பிறகு 2 குளியல் இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு வேலை (கர்மா) செய்வது போல தெரியும்.

ரக்ஷை இட்டு கொண்டாலும், குளித்தாலும், குடித்தாலும் நாம் அனைத்து கர்மாவையும் தெய்வத்தின் பெயரால் செய்வதால், செய்பவனுக்கு "கர்மயோகம்" என்பது புரியும்.

2. ஞான யோகம்

இப்படி தண்ணீரை வைத்து கொண்டு ஏதோ வேலை (கர்மா) செய்து கொண்டிருந்தவன், திடீரென்று அமைதியாக நின்று கொண்டு இருப்பான். பார்த்தால் "ஞானி" போன்று இருக்கும்.

செய்பவனோ, உண்மையில் காயத்ரீ ஜபம் செய்து கொண்டு பகவானை தியானம் செய்கிறான். அப்பொழுது நாம் "ஞானயோகம்" செய்கிறோம் என்பது புரியும்.


3. பக்தி யோகம்

தெளிந்த ஞானம் ஏற்பட்ட பிறகு, பகவானிடம் பக்தி ஏற்படும்.

இது வரை அமைதியாக நின்று கொண்டு இருந்தவன், திடீரென்று நான்கு திசையையும் வணங்கி, அபிவாதயே என்று நமஸ்காரம் செய்வதை பார்த்தால், பக்தி போல தோன்றும்.

செய்பவனும் 'பகவான் அனைத்து திசையிலும் இருக்கிறார்' என்று அனைத்து திசையையும், உள்ளும் புறமும் பொய் இல்லாமல் இருந்தால் நமக்கு காட்சி கொடுப்பார் (ரிதகும் சத்யம்) என்று சொல்லிக்கொண்டும், அவர் எப்படி இருக்கிறார் என்று வர்ணித்து கொண்டும் சொல்வதை கவனித்தால், "பக்தியோகம்" இது தானே என்று புரியும்.

4. சரணாகதி

பக்தியின் முடிவு சரணாகதி (surrender to god). பகவத்கீதையில் "ஸர்வ தர்மான்.." என்று சொல்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பக்தனை பார்த்து, "அனைத்தையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விடு" என்கிறார்.

அது போல, "காயேன வாசா.." சொல்லி அனைத்தையும் "நரர்களுக்கு ஆதியாக இருக்கும் அந்த நாராயணனிடம் அனைத்தையும் ஸமர்ப்பிக்கிறேன்" என்று சொல்வதை பார்த்தால், சரணாகதி செய்கிறோம் என்பது அனுபவத்தில் நமக்கு புரியும்.


பகவத்கீதையில் உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், சரணாகதி போன்றவற்றை நம் அனுபவத்தில் கொடுக்கும் இந்த சந்தியாவந்தனத்தை, அதன் அருமையை தெரிந்தும், யார் செய்யாமல் இருப்பார்கள்?


English Meaning Sandhya Vandanam:
Afternoon(to live 100yrs)
https://www.youtube.com/watch?v=0SYdzobuSYE
Evening (to avoid accidental death)
https://www.youtube.com/watch?v=iWyHeXyI8s0
Morning
https://www.youtube.com/watch?v=F9b31khruk4

தமிழ் அர்த்தம் சந்தியா வந்தனம்:
மதியம் (100 வயது வாழ)
https://www.youtube.com/watch?v=xszkkP3vB-0
மாலை (அகால மரணம் தவிர்க்க, நீண்ட காலம் வாழ
https://www.youtube.com/watch?v=B2bhRr7EB4k
காலை
https://www.youtube.com/watch?v=-SDhzQlvfRU

குருநாதர் துணை