Followers

Search Here...

Showing posts with label முன்னேற்றம். Show all posts
Showing posts with label முன்னேற்றம். Show all posts

Wednesday 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும். 

Sunday 19 May 2019

அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...

1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.



அதற்கும் முன்,
808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.
அதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.
த்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.



துவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.
அர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் "ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.
திருமூலர் கூடு விட்டு கூடு பாயும்  ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.
இறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.



த்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி,  ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.
இருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.
எங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.


தேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.
பரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.




அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.
அது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.
கோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..
இன்று வரை துரு பிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...



ஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.

"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...

808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்?

குண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா?

Aeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை?
இவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா?

திருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா?
Max Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்?
சம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்?

இந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது?

பாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது?

தேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்?

ஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா?
ஒன்று கூட இல்லையே...
நம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...

இந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...

வெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.
சமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,
இது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்டி,
பிராம்மண பகையையும் ஊட்டி,
தன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.

இதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.
விளைவு,
சாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.
ஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..
இன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.


சாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..
அவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.
ப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.
அது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..?

மற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.
இன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.
கோவிலை கட்டிய ஸ்தபதியும்,  ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...
இன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...
இன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.
எத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...


தன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.
ஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொண்டு இருக்கிறான்.
சமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.

நாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..



அர்த்த சாஸ்திரம் (finance mgmt),
காம சாஸ்திரம் (art of love),
யோக சாஸ்திரம்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம் (medicine)
காந்தர்வ வேதம் (music)
தனுர் வேதம்(army)
சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
சந்தஸ் (expert in poetic metres)
ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
ஸ்ம்ருதி,
யோகம் (expert in meditation, contemplation and liberation)
ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
நியாயம் (Expert in exploring sources of knowledge)
என்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...
துக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,
இஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.
இவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.

ஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.
உலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாதாரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...



மொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.

காங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.
பேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது.  ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.

இந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.

நம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.



ஹிந்துக்கள் சிந்தனைக்கு....