Followers

Search Here...

Monday 9 January 2017

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்

எளிதான ஆஞ்சனேயர் ஸ்லோகம்.

ஆஞ்சனேய மதி பாடலாலனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம் !
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம் !!

சிவந்த முகம் உடையவரும்,
தங்கம் போன்ற காந்தி உடையவரும்,
பாரிஜாத மரத்தின் அடியில் வஸிப்பவரும்,
வாயு குமாரனுமான ஆஞ்சனேயரை தியானிக்கின்றேன்.


யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் !
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம் !!

எங்கெங்கு ராம நாம கீர்த்தனம் நடக்கிறதோ,
அங்கங்கு சிரமேற் கை குவித்து,
ஆனந்தக் கண்ணீருடன் நிற்பவரான,
மாருதியை வணங்குங்கள்.
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் !
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி !!

மனதை விட வேகமானவரும்,
புலன்களை அடக்கியவரும்,
புத்திமான்களில் சிறந்தவரும்,
வானரர்களில் முக்கியமானவரும்,
வாயு குமாரனுமான ஸ்ரீ ராம தூதனை வணங்குகிறேன்.

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா !
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத் !!

ஹனுமானை நினைப்பதால் புத்தியும், பலமும், புகழும், தைரியமும், அபயமும், ஆரோக்யமும், கல்வியும், பேச்சுத் திறமையும் உண்டாகும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka

தெய்வத்திலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" உண்டு. இதற்கான விளக்கத்தை அறிந்து கொள்வோமே

குணத்தில் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" இருப்பது போல,
உண்ணும் உணவிலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" இருக்கிறது
என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.




அது மட்டுமல்ல, தெய்வத்திலும் "தாமஸம், ராஜசம், சாத்வீகம்" உண்டு என்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "சாத்வீக தெய்வம்".
நாராயணனின் 10 விபவ அவதாரத்தில் ஒரு அவதாரமே "ஸ்ரீ கிருஷ்ணர்".

ராஜச, தாமச தெய்வங்களையும், பரம்பொருளான இவரே படைத்தார்.

சாத்வீக தெய்வமான நாராயணனை நோக்கி வருபவர்களும் சாத்வீக குணத்தையே அடைகிறார்கள்.
உணவும் சாத்வீகமாகவே உள்ளது.
தன்னை அன்புடன் பக்தி செய்ய விரும்புபவர்கள், முடிந்தால் ஒரு துளிசி இலை, ஒரு துளி நீரும் கொடுத்தாலே மகிழச்சியாக ஏற்று கருணை செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

மனிதர்கள் அவர்கள் உணவு பழக்கத்தினாலும், தன்னை சுற்றி இருப்பவர்களின் குணத்தினாலும், அனைவரும் சாத்வீகர்களாக இருக்க மாட்டார்கள் என்பதால், அவரே ராஜச தெய்வங்களையும், தாமச தெய்வங்களையும் படைத்தார் கருணையின் காரணமாக.

சாத்வீக தெய்வமான நாராயணனின் அனுகிரஹம் கிடைத்த எவரும் இன்று வரை நாசம் போனது இல்லை.
பிரகலாதன், ஹனுமான் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர், கிருஷ்ண சைதன்யர், காந்தி, வீர சிவாஜி என்று எவரும் இன்றும் ப்ரகாசிக்கிறார்கள்.

ராஜச, தாமச தெய்வங்கள் கொடுக்கும் வரங்கள் துன்பத்தையும், பல சமயம் வாங்கிய வரங்களே சாபமாக கூட முடியும்.

சாத்வீக தெய்வங்களை விட தாழ்ந்தது, இந்த ராஜச, தாமச தெய்வங்கள்.

ராவணன் போன்றவர்களுக்கு சாத்வீக பூஜை செய்ய தெரிந்தாலும், அவனை பொறுத்தவரை யாகம் செய்ய வேண்டும் என்றால், தன் 10 தலைகளையே வெட்டி பலி போடுவான்.
அவனுக்கு அப்படி செய்தால் தான், அவனுக்கு பூஜையில் ஒரு திருப்தி உண்டாகும்.

இப்பொழுது கூட சில வழிபாடுகளில் ஹிந்து மதத்திலும், சில மற்ற மதத்திலும் ஆடு மாடு என்று இறைவனின் பெயரால் பலி இடுகின்றனர் என்று பார்க்கிறோம்.
காபாலிகள் என்ற இனம், அசாம் என்ற மாநிலத்தில் ஆதி சங்கரர் காலத்தில் இருந்ததை பார்க்கிறோம்.
அவரையே கடவுளின் பெயரால் பலியிடவும் முயன்றனர் என்றும் பார்க்கிறோம்.
ராஜசமான பூஜை செய்யும் ராவணனுக்கு (இராவணன் போன்றோருக்கும்) சாத்வீக தெய்வமான நாராயணன் மீது ஒரு த்வேஷம் இயற்கையாக வருகிறது.

சிவன் சாத்வீக தெய்வமானாலும் சம்ஹார தெய்வமும் கூட.
அதனாலேயே,
இவர் ராஜச பூஜை செய்பவனை ஏற்றுக்கொள்வது போல ஏற்று, பின் சம்ஹாரத்திற்கு வழி செய்கிறார்.
சிவனிடம் தன் பக்தியை சிவனடியார்கள் சாத்வீக முறையில் காட்டினர் என்று பார்க்கிறோம். அவர்களுக்கு சிவ பதம் கிடைத்தது.
ஆனால் ராவணனுக்கோ, சிவனிடம் தன் பக்தியை காட்ட இமைய மலையையே தன் 20 கைகளால் தூக்க நினைத்தான் என்று பார்க்கிறோம். இப்படி தூக்கினால் தான் "பக்தி" என்பது அவன் நினைப்பு.




அது போல இன்றும் பலர், ஹிந்து மதத்திலும், மற்ற மதத்திலும் இது போன்ற ராஜச பூஜை செய்கின்றனர் என்பதை பார்க்கிறோம்.
சில தெய்வங்களுக்கு மது, பிஸ்கட் போன்ற தாமச உணவுகள் படைக்கப் படுவதை பார்க்கிறோம்.
இன்றும் பலர் ஹிந்து மதத்திலும், மற்ற மதத்திலும் இது போன்ற தாமச பூஜை செய்கின்றனர் என்பதை பார்க்கிறோம்.

தாமச தெய்வங்களையும் விட தாழ்ந்தது பிசாசுகள், ஆவிகள்.
இவை தெய்வங்கள் அல்ல.
தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள்.
இறந்த பின் தகனம் மற்றும் 10 நாள் காரியம் செய்யப்படாமல் புதைக்கப்பட்ட பிணங்களின் ஆத்மாவே இவைகள்.

இவைகளிடமும் சிலர் ஒரு வித பூஜை செய்து ஆவிகளுடன் பேசுகின்றனர். இதுவும் தாமச குணம் உள்ளவையே.

சாத்வீக உணவு மட்டுமே உண்டு வந்தால், படிப்படியாக சாத்வீக குணங்கள் அதிகரிக்கும்.
சாத்வீக குணம் உள்ளவனுக்கு, குட்டி பிசாசு, ராஜச, தாமச தெய்வங்களை பூஜை செய்து வசியம் செய்வதை விட, சாத்வீக தெய்வமான முழு முதற்கடவுள் நாராயணனை வழிபட எண்ணம் தோன்றும்.

வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகும்.
ஸ்ரீ கிருஷ்ணரை தன் இஷ்ட தெய்வமாக கொண்டவன், மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்கிறான்.
கிருஷ்ண பக்தன் நாசமாவதே இல்லை.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka