Followers

Search Here...

Showing posts with label வேண்டும். Show all posts
Showing posts with label வேண்டும். Show all posts

Saturday 10 December 2022

யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது? யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்கிறார் பீஷ்மர். அறிவோம் மஹாபாரதம் - வியாசர்

யாரிடம் நட்பு வைத்து கொள்ள கூடாது? யாரை நண்பனாக கொள்ள கூடாது?

இப்படி யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பீஷ்மர்.


"யுதிஷ்டிரா! யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக ஏற்க கூடாது? என்று உண்மையாக சொல்கிறேன். கேள்.


लुब्धः क्रूर: त्यक्त धर्मा निकृतिः शठ एव च।

क्षुद्रः पापसमाचारः सर्व-शङ्की तथा अलसः।।  

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

1. பேராசை குணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

2. மஹா கோபக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.

3. தன் தர்மத்தை விட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

4. பிறருக்கு ஹிம்ஸை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

5. ரகசியமாக பிடிக்காததை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

6. முயற்சி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

7. சோம்பேறி குணமுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.

दीर्घसूत्रो अनृजुः क्रुष्टो गुरु-दार-प्रधर्पकः।

व्यसने यः परित्यागी दुरात्मा निरपत्रपः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

8. கோணல் புத்திக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.

9. பிறரால் திட்டப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

10. தன் குருவின் தாரத்தை அடைய நினைத்தவனை நண்பனாக ஏற்க கூடாது.

11. துன்பம் ஏற்படும் சமயத்தில் விலகி செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

12. கெட்ட புத்தியுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.

13. வெட்கமே இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

सर्वतः-पापदर्शी च नास्तिको वेदनिन्दकः।

संप्रकीर्ण इन्दियो-लोके यः कालनिरतश्चरेत्।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

14. யாரிடமும் குறை பார்ப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

15. கடவுள் இல்லை என்று சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

16. வேத மந்திரங்களை இகழ்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

17. புலன்களுக்கு கட்டுப்பட்டு உலகத்தோடு செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

18. காமத்தில் பற்று கொண்டு உலகத்தில் அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.

असभ्यो लोकविद्विष्टः समये चानवस्थितः।

पिशुनोऽथाकृतप्रज्ञो मत्सरी पापनिश्चयः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

19. பலர் கூடும் சபையில் இருக்க தகுதி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

20. உலகத்தால் பகைக்கப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

21. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றியவனை நண்பனாக ஏற்க கூடாது.

22. பிறரை பற்றி கோள் சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

23. கல்வி அறிவு (Subject matter expert) இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

24. அடுத்தவன் நன்றாக இருப்பதை கண்டு பொறாமைப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

25. கெட்ட எண்ணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

दुःशीलो अथाकृत-आत्मा च नृशंसः कितवस्तथा।

मित्रै:-अपकृति: नित्यम्-अटते-अर्थं धनेप्सया।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

26. கெட்ட இயற்கையோடு (by nature) இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

27. நல்ல மனம் இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

28. ஆலோசிக்காமல், கொடுமையான செயல்கள் செய்ய தயங்காதவனை நண்பனாக ஏற்க கூடாது.

29. வேடதாரியை (கபடம்) நண்பனாக ஏற்க கூடாது.

30. நண்பர்களோடு விரோதம் செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

31. எப்பொழுதும் பொருளை பற்றியே நினைத்து அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.

ददत:-च-यथा-शक्ति यो न तुष्यति मन्दधीः।

अधैर्यम् अपि यो युङ्क्ते सदा मित्रं नराधमः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

32. தனக்கு ஒருவன் தன் சக்திக்கு உட்பட்டு உதவி செய்தாலும், அதை கண்டு சந்தோஷமடையாமல் இருக்கும் அல்பனை நண்பனாக ஏற்க கூடாது.

33. எப்பொழுதும் நண்பனுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

अस्थान-क्रोधनो यश्च अकस्माच्च विरज्यते।

सुहृद: च एव कल्याणानाशु त्यजति किल्बिपी।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

34. காரணமில்லாமல் கோபப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

35. காரணமில்லாமல் வெறுப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

36. நண்பர்களையும், நல்ல காரியங்களையும் திடீரன்று விலக்குபவனை நண்பனாக ஏற்க கூடாது.

अल्पेऽप्यपकृते मूढे न संस्मरनि यत्कृतम्।

कार्यसेवी-च-मित्रेषु मित्रद्वेषी नराधिप।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

37. அறியாமல் செய்த அல்ப உதவியானாலும், அதை நினைத்து பார்க்காமல் இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.

38. தன் காரியம் நடக்க வேண்டுமென்றால், நண்பர்களை கூட்டி கொள்ளும் த்வேஷியை நண்பனாக ஏற்க கூடாது.

शत्रुर्मित्रमुखो यश्च जिह्नप्रेक्षी विलोचनः।

न तुष्यति च कल्याणे यम्त्यजेत्तादृशं नरम्।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

39. நண்பனை போலவே இருக்கும் சத்ருவை நண்பனாக ஏற்க கூடாது.

40. கண்ணை நேருக்கு நேர் பார்க்காமல், கோணல் பார்வையோடு பேசுபவனை நண்பனாக ஏற்க கூடாது.

41. எப்பொழுதும் தனக்கு எதிரான பார்வை கொண்டவனை நண்பனாக ஏற்க கூடாது.

42. நன்றாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படாதவனை நண்பனாக ஏற்க கூடாது.

पानपो द्वेषणः क्रोधी निर्घृणः परुपस्तथा।

परोपतापी मित्रध्रुक् तथा प्राणिवधे रतः।।

कृतघ्नश्चाधमो लोके न सन्धेयः कथंचन।

मित्रद्वेषी ह्यसंधेयः सन्धेयानपि मे शृणु।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

குடிகாரர்களும், மனதில் பகை உணர்ச்சி உள்ளவர்களும், கோபமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும், கெட்ட புத்தி உள்ளவர்களும், பிறரை துன்பப்படுத்துபவர்களும், நண்பனுக்கு துரோகம் செய்பவர்களும், மற்ற உயிர்களை கொல்பவர்களும், நன்றி கொன்றவர்களும், நண்பனாக கூட இருக்க தகுதி அற்றவர்கள்.

மற்ற நண்பர்களை பகையாக நினைப்பவனை  நண்பனாக ஏற்கவே கூடாது. 

இனி யாரிடம் ஸ்நேஹம் செய்து கொள்ள வேண்டும்? என்று சொல்கிறேன். கேள்.

कुलीना वाक्य-संपन्ना ज्ञानविज्ञानकोविदाः।

रूपवन्तो गुणोपेता: तथा अलुब्धा जित-श्रमाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

1. தர்மம் அதர்மம் சொல்லி வளர்க்கப்பட்ட நல்ல குலத்தில் பிறந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

2. இனிமையாக பேச்சு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

3. அறிவிலும், அந்த அறிவில் மெய் எது என்று அறிந்தும் இருக்கும் சாமர்த்தியசாலியை நண்பனாக ஏற்க வேண்டும்.

4. அங்க குறை இல்லாமல், நல்ல ரூபம் உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

5. நல்ல குணமுள்ளவனை  நண்பனாக ஏற்க வேண்டும்.

6. ஆசை இல்லாதவனை  நண்பனாக ஏற்க வேண்டும்.

7. தன் சிரமத்தை பாராட்டாது இருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

सन्मित्राश्च कृतज्ञाश्च सर्वज्ञा लोभवर्जिताः।

माधुर्यगुणसंपन्नाः सत्य-सन्धा जितेन्द्रियाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

8. நல்ல நண்பரகளே கொண்டிருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

9. நல்ல அறிவு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

10. எல்லாம் அறிந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.

11. தன்னிடம் உள்ள செல்வத்தில் பேராசை (லோபி) இல்லாதவனை, நண்பனாக கொள்ள வேண்டும்http://www.proudhindudharma.com/2018/10/MariyadhaRaman.html

12. இனிய குணம் நிறைந்துள்ளவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

13. சத்தியத்தையே பேசுபவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

14. புலன்களை அடக்கியவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

व्यायामशीलाः सततं भृत्यपुत्राः कुलोद्वहाः।

दोषैः प्रमुक्ताः प्रथितास्ते ग्राह्याः पार्थिवै: नराः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

15. எப்பொழுதும் சிரமம் பார்க்காமல் காரியம் செய்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

16. நல்ல குலத்தில் பிறந்த பிள்ளைகளை, நண்பனாக கொள்ள வேண்டும்.

17. நல்ல குலத்தில் தலையாக இருப்பவரை, நண்பனாக கொள்ள வேண்டும்.

18. எந்த குறையும் சொல்ல முடியாதபடி வாழ்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.

19. பிரபலமாக இருப்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

20. அரசர்கள் நண்பனாக கொள்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.

यथाशक्ति समाचाराः संप्रतुष्यन्ति हि प्रभो।

नास्थाने क्रोधवन्त: च न च अकस्माद् विरागिणः।।

विरक्ताश्च न दुष्यन्ति मनसा अपि अर्थ कोविदाः।

आत्मानं पीडयित्व अपि सुहृत्कार्यपरायणाः।

विरज्यन्ति न मित्रेभ्यो वासो रक्तमिवाविकम्।।

दोषां च लोभ-मोह आदीन् अर्थेषु युवतीपु च।

न दर्शयन्ति सुहृदो विश्वस्ता बन्धुवत्सलाः।।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

ப்ரபுவே ! இப்படிப்பட்ட நண்பர்கள், தன் சக்திக்கு உட்பட்ட காரியங்கள் செய்து, சந்தோஷப்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், காரணமில்லாமல் கோபத்தையும், காரணமில்லாமல் வெறுப்பையும் காட்ட மாட்டார்கள்

இப்படிப்பட்ட நண்பர்கள், ஒருவேளை வெறுப்பு அடைந்தாலும், காரியத்தில் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், மனத்தால் குற்றம் செய்ய மாட்டார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், தன்னை கஷ்டப்படுத்திக்கொண்டாவது, நண்பனுக்கு உதவி செய்வார்கள்.

இப்படிப்பட்ட நண்பர்கள், ஆட்டு முடியில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ஆடை எப்படி நிறம் மாறாமல் இருக்குமோ, அது போல, நிறம் மாறாமல் தன் நண்பனிடம் ஸ்நேஹம் மாறாமல் இருப்பார்கள்.

நம்பிக்கையும், குடும்பத்தில் நம்பிக்கையும் பெற்று இருக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள், நண்பனின் பொருளில் ஆசையோ, நண்பனின் பெண்ணிடமோ மோகம் அடைய மாட்டார்கள்.

लोष्ट-काञ्चनतुल्यार्थाः सुहृत्सु दृढबुद्धयः।

ये चरन्त्यनभीमाना निसृष्टार्थविभूषणाः।

संगृह्णन्तः परिजनं स्वाम्यर्थपरमाः सदा।।

ईदृशैः पुरुषश्रेष्ठैर्यः सन्धिं कुरुते नृपः।

तस्य विस्तीर्यते राज्यं ज्योत्स्ना ग्रहपतेरिव।।

सत्ववन्तो जितक्रोधा बलवन्तो रणे सदा।

जन्मशीलगुणोपेताः सन्धेयाः पुरुषोत्तमाः।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

மண்ணையும்-பொன்னையும் சமமாக பார்க்கும், நண்பனிடத்தில் உறுதியான புத்தியோடு இருக்கும், நம்பிக்கையை குணமாக கொண்டிருக்கும், செல்வத்திலும்-நகைகளிலும் ஆசையற்று இருக்கும்,  குடும்பத்தை சேர்க்க முயற்சிக்கும், தன் முதலாளியின் பொருளில் பெரும் மதிப்பு வைத்திருக்கும் உத்தமர்களை எந்த அரசன் நண்பனாக கொள்கிறானோ, அந்த அரசனுடைய அரசாட்சியானது, சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் மேலும் மேலும் பிரகாசிப்பது போல பிரகாசிக்கும். யுத்தத்தில் பலமுள்ளவர்களை, கற்றுக்கொடுக்காமல், பிறப்பிலேயே நல்ல குணத்தோடு இருக்கும் உத்தமர்களை அரசன் நேசித்து தன்னோடு சேர்த்து கொள்ள வேண்டும்.

ये च दोपसमायुक्ता नराः प्रोक्ता मयाऽन।

तेषामप्यधमा राजन्कृतघ्ना मित्रघातकाः।

त्यक्तव्यास्तु दुराचाराः सर्वेषामिति निश्चयः।

- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व

குற்றமில்லாத அரசனே!  யாரை நண்பனாக சேர்த்து கொள்ள கூடாது? என்று நான் முன்பு சொன்னதில், குறிப்பாக, நன்றி கொன்றவனை, நட்புக்கு துரோகம் செய்தவனை மிகவும் தாழ்ந்தவன் (அதமன்) என்று தள்ள வேண்டும்.

கெட்ட நடத்தை உள்ளவனை, பொதுவாக யாருமே நிச்சயமாக சேர்த்து கொள்ள கூடாது


இவ்வாறு பீஷ்மர், "யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது?" என்று யுதிஷ்டிரருக்கு விளக்கினார்.

Thursday 7 November 2019

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்?



உலகத்தில் உள்ள எதை பற்றியும், நம் எச்சில் வாயால் பேசி விடலாம், பேசலாம்...
ஆனால்,
நம்மை படைத்த பகவானை பற்றி நம் எச்சில் வாயால் பேசலாமோ? பேச முடியுமா?..

சொல்லுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா "பகவான்"!
"பரமாத்மாவின் பெருமையை சொல்" என்று சப்த ப்ரம்மமாகிய வேதத்தை கேட்டால்,
"பகவானின் பரத்துவத்தை பற்றி சொல்ல இயலாது" என்று வேதமே  தயங்கி பேசுகிறது...

பகவானின் பெருமையை பற்றி சொல்ல, ஏன் மகான்கள் கூட தயங்கினார்கள்?...
"வாக்கு தூய்மை இல்லை" என்று பெரியாழ்வார், இந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும்.
"வாக்கில் தூய்மை இல்லாததால், எம்பெருமான் பெருமையை உரைக்கவும்,
எம்பெருமான் நாமத்தை சொல்லவும் கூட, அஞ்சுகிறேன்"
என்று பெரியாழ்வார் சொல்கிறார்..
யார் இப்படி சொல்கிறார்? என்று இங்கு கவனிக்க வேண்டும்..

பகவானின் பெருமையை நினைக்கும் போது, பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள்,
எம்பெருமான் பெருமையை தன் வாயால் பேச முயற்சித்து, "தன் எச்சில் பேச்சால், எம்பெருமானை  களங்கம் செய்து விடுவோமோ!!"
என்று அஞ்சினார் என்றால், 'நாம் எத்தனை நிதானத்துடன் பேச வேண்டும்' என்று புரியும்.

"எப்பேற்பட்டவர் பெரியாழ்வார்" என்று கவனிக்க வேண்டும்..
யார் இப்படி சொல்கிறார்? என்று கவனிக்க வேண்டும்..
"ஆண்டாளை மகளாக பெற்றவர்" என்ற பெருமையை உடையவர்,
எம்பெருமானை நேரில் தரிசித்து "பல்லாண்டு..." பாடியவர்,
ஆழ்வார்களில் ஒருவர்,
இப்படி அஞ்சினார் என்றால்,
நாம் எத்தனை கவனத்துடன் பகவானை பற்றி பேச வேண்டும், 
என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்..

வாக்குத்தூய்மை இல்லாமையினாலே
மாதவா!! உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்
என்று பாசுரம்.
இங்கு திருமொழியில் 'பெரியாழ்வார்',
"எம்பெருமான் பெருமையை, தன் எச்சில் வாயால் பேசுவதாவது?
என்று அஞ்சுகிறார்.

"இந்த பாசுரத்தின் கனத்தை (weight) நாம் உள் உணரும் போது தான், 
நாம் பகவானை பற்றி பேசும் போது, எத்தனை கவனத்துடன் பேச வேண்டும்" என்று புரிந்து கொள்ள முடியும்..
"பகவானின் பெருமையை நம்மால் பாட முடியாது, பேச முடியாது.. 
அவர் வாக்குக்கும் அப்பாற்பட்டவர்"
என்று வேதம் சொல்கிறது...

இதே விஷயத்தை மற்ற மதங்கள் கூட சொல்வதை கவனிக்கலாம். அதோடு நின்று விடுகிறது மற்ற மதங்கள்.



சப்த ப்ரம்மமாகிய அதே வேதம்,
"வாக்குக்கு எட்டாதவர் தான் பரமாத்மா, 
மனசுக்கு அப்பாற்பட்டவர் தான் பரமாத்மா..
அதற்காக, 
அவர் பெருமையை பேசாமல், நினைக்காமல் இருந்து விடாதே!!....
வேத சாஸ்திரம் எப்படி எம்பெருமானை பேசுகிறதோ, அது போலவே பேசு!!
புராணங்கள், சாஸ்திரங்கள் எப்படி பரமாத்மாவை காட்டுகிறதோ, அது போலவே நினை!!
நீயாக கற்பனை செய்து!! 
உன் புத்தியை கொண்டு பேசி, 
எம்பெருமான் பெருமையை நீ தாழ்த்தி பேசாதே"
என்று பகவானை பற்றி 'பேசு, நினை' என்ற அனுமதியை நம் அனைவருக்கும் கொடுத்து,
முக்கியமாக உபன்யாசகர்கள், பௌராணிகர்கள், பேச்சாளர்களை பார்த்து ஜாக்கிரதை படுத்துகிறது...

"பகவான் பெருமையை பேச முடியாது... 
இருந்தாலும் சும்மா இருந்து, வீண் பொழுது போக்கி விடாதே!!  
கிடைத்த வாழ்க்கையை வீண் செய்யாதே!
மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிது!! 
ஆதலால் உன் வாயால் பகவான் பெருமையை எப்பொழுதும் பேசு, 
உன் மனதால் அவரை எப்பொழுதும் நினைத்து கொண்டே இரு" 
என்று வேதம் அனுமதி கொடுக்கிறது.

"வாக்குக்கு அப்பாற்பட்ட பகவானை பேசு என்றால்,எப்படி பேச வேண்டும்?"
என்ற கேள்வி நமக்கு எழலாம்..
"தீது இல்லா மொழிகள் கொண்டு"  பகவானை பேசு
என்று 'தொண்டரடிபொடி ஆழ்வார்' அதற்கு பதில் சொல்கிறார்..

"நம் புத்திக்கு எட்டிய அளவில், 
அருவெறுக்க தக்க உதாரணங்களையும், 
அருவெறுக்க தக்க சொற்களையும், 
கற்பனையான கதைகளையும், 
நமக்கு தெரிந்த படி பிதற்றி, 
'பெருமாளுடைய பெருமையை', 
நம் எச்சில் வாயால் குறைத்து பேசி விட கூடாது..."
என்பதை உணர்த்த,
"தீது இல்லா மொழிகள் கொண்டு, எம்பெருமான் பெருமையை பேசு" 
என்று தொண்டரடிபொடி ஆழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவர் பகவான்" என்று உபநிஷத் சொல்லிவிட்டு,
இருந்த போதிலும், "வாக்குக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ பேசு", "மனதுக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ தியானம் செய்" என்று நம்மை பேச உற்சாகப்படுத்துகிறது..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவை எப்படி பேச முடியும்? எப்படி தியானிக்க முடியும்?"
இதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே நமக்கு கீதையில் பதில் சொல்கிறார்.




"பகவானை பற்றி பேசவேண்டும் என்று நீ நினைத்தால், 
உன் சொந்த 'புத்தியால்' பேசாதே!!..
ஆழ்வார்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!,
ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எப்படி வ்யாக்யானம் (விளக்க உரை) செய்து இருக்கிறார்களோ!
மகரிஷிகளான வியாசர், வால்மீகி போன்றவர்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!!  அது போல பேச கற்றுக்கொள்.

பகவானை பற்றி அறிந்து கொள்ள, ஒரு தகுந்த (ஞான பூர்ணனான) ஆச்சார்யாரிடம் பணிந்து இருந்து கேட்டு, 
அவர் சொன்ன உபதேசங்களை மனதில் வாங்கி கொண்டு, 
அந்த விஷயங்களின் அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பகவானிடம் தான் முதலில் பிரேமை (அன்பு) கொண்டு,, 
பிறகு, பகவானை பற்றி பேச போகிறோமே என்ற பக்தியுடன் (தெய்வத்திடம் ஆசை), உன்னுடைய மனதை பகவத் அனுபவத்தில் உயர்த்திக்கொண்டு பகவானை பற்றி சொல்வாயானால், உனக்கும் பிரயோஜனம் உண்டு.. கேட்பவருக்கும் பிரயோஜனம் உண்டு.."

தத் வித்தி ப்ரணி  பாதேன 
பரி பிரஷ்னேன சேவையா 
உபதேக்ஷ்யந்தி  தே  ஞானம்
ஞானிநஸ் தத்வ தர்ஷின:
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (Chapter 4:  Sloka 34)

"பகவானை பற்றி அறிந்த ஞான குருவிடம் பணிந்து, குருவுக்கு சேவை செய்து, அவர் உபதேசத்தை பெற்று, அவர் உபதேசத்தை மனதில் உள் வாங்கி கொண்டு, அந்த அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பிறகு பகவான் மீது களங்கம் ஏற்படாத புண்ணிய சொற்களை கொண்டு, பக்தியுடன் சொல்" 
என்பதை ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவே நமக்கு சொல்லி வழிகாட்டுகிறார்.

"எம்பெருமான் பெருமையை கேட்க வேண்டும்"
என்று ஆசையோடு வரும் பக்தர்கள் அனைவரும், சொல்ல வந்த பௌராணிகரை (உபன்யாசம் செய்பவர்) தானே நம்பி வருகிறார்கள்!!..
ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைத்து பார்க்க வேண்டும்..

எம்பெருமானை பற்றி, பலர் முன்னிலையில் பேசுபவர்கள், ஜாக்கிரதையாக சொல்ல வேண்டாமோ?...

"நம் எச்சில் வாயால், 
எம்பெருமான் பெருமையை குறைத்தோ,
எம்பெருமான் பெருமையை தவறாகவோ,
எம்பெருமானை மரியாதை குறைத்தோ பேசி விட கூடாதே!!"
என்று அச்சம் வேண்டாமா?...

எம்பெருமானை பேசுவதற்காகவே ஏற்பட்ட மங்களமான, பவித்ரமான, உயர்ந்த சொற்களை பயன்படுத்து பேச வேண்டாமா?...

எம்பெருமான் பெருமையை குறைத்து விடாமல், உயர்ந்த சொற்களை கொண்டு பேசினால் தானே, கேட்பவர்களுக்கும் எம்பெருமான் மீது பக்தி உண்டாகும்... 
அப்படித்தானே மஹான்கள் வழி காட்டுகின்றனர்.
"எம்பெருமான் பெருமையை", உயர்ந்த சொற்கள் கொண்டு பேசினால் தானே, நாம் பேசியதற்கே பிரயோஜனம்.
அப்படி பேசினால் தானே,
உபன்யாசம் செய்பவருக்கும், எம்பெருமான் பெருமையை பேசிய ஆத்ம திருப்தி கிடைக்கும்...



பெருமாள் பெருமையை பேசும் போது, "தீது இல்லா மொழிகள் கொண்டு  எம்பெருமான் பெருமையை பேசு"
என்று நம்மை நிதானிக்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்..

மேலும்,
மற்ற மதங்கள் "மனிதர்களால் உருவானவை"...
அவர்கள் உருவாக்கி வழிபடும் தெய்வத்தை,
"உருவாக்கிய மனிதர்களே", கடுமையான பிரச்சாரம் மூலமாகவும், மிரட்டியும், தன் தெய்வத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்ட முயல்கின்றனர்...
இது போன்ற மதங்கள் பல ஆயிரம் உருவாகி, கால வெள்ளத்தில் அழிந்து விட்டன...

காலம் கணக்கிட முடியாத படி ("சனாதன" என்று சமஸ்கரித சொல்) என்றுமே இருப்பது, சப்த ப்ரம்மாகிய வேதம்..
சப்தத்திலேயே கலந்து இருக்கிறது வேதம்..
அதனால் தான், வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று பெயர்.

வேதத்தை அறிந்து கொண்டு தான் ப்ரம்ம தேவனே,
"ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்" என்று வரிசையாக படைத்தார்..
உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்தார்..
"ப்ரம்ம தேவனையும் படைத்து, அவருக்கு வேதத்தையும் சொல்லி கொடுத்தவர்" பரவாசுதேவன் நாராயணன் என்று நம் ஹிந்து தர்மம், பரமாத்மா பரவாசுதேவன் ஆரம்பித்து, உலக சிருஷ்டியை சொல்கிறது...
வேதத்தில் சொல்லப்படும் அனைத்து தெய்வங்களும் நிஜமானவை.
அனைத்து தெய்வங்களுமே நம்மை விட அதிபலசாலிகள்.. நம்மை விட உயர்ந்தவர்கள்.. செய்த புண்ணியங்களால் தேவ பதவிகளை பெற்றவர்கள்..

ப்ரம்மா உட்பட அனைத்து தேவர்களுக்கும், சர்வேஸ்வரன் "பரவாசுதேவன் நாராயணன்".
இதனால் தான்,
மற்ற மதங்களை போல, நம் சனாதன தர்மம் எந்த நிலையிலும் அழியாமலேயே உள்ளது... அழிக்கவும் இயலாதது..

இதனால் தான்,
1000 வருடங்கள் அரேபியர்கள் நுழைந்து இஸ்லாமிய ராஜ்யமே கடுமையாக இந்த பாரத மண்ணில் நடத்தியும்,
200 வருடங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியே கடுமையாக நடத்தியும், இன்றும் பாரத நாடு ஹிந்துக்களால் நிரம்பி உள்ளது...

அது போதாதென்று, உலகத்தில் இன்று எங்கு சென்றாலும்,
ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டு, ராமரையும், கிருஷ்ணரையும் பக்தி செய்பவர்கள் அதிகரிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் "ஒரு ஹிந்துவை காணலாம்" என்ற அளவுக்கு உலகம் நிரம்ப இன்று இருப்பதை காண முடிகிறது..

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை, மனிதர்களே பிரச்சாரம் செய்து காக்க முயற்சிக்கின்றனர்..
ஆனால்,
நம் சனாதன தர்மம் அசைக்கப்படும் போது, தெய்வங்களே தன்னை அவதரித்து கொண்டு காக்கிறது..
இதற்கு அத்தாட்சியே,
1200 வருட அந்நிய ஆதிக்கத்தையும் தாண்டி, இன்றும் ஹிந்து தர்மம் என்று சொல்லப்படும் சனாதன தர்மம் நிற்பதற்கு காரணம்.

சுயமே ஹிந்து தர்மத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே கொண்டுள்ளது நம் தர்மத்தில்..
அப்படி இருக்கும் போது,
'நாம் தெய்வங்களை பற்றி பேசுவதால் தான், எம்பெருமான் நாராயணன் பெருமை, மற்ற தெய்வங்களின் பெருமை உலகில் நிற்கிறது' என்று கர்வபட்டு விட கூடாது...

சுயமே பிரகாசமாக உள்ள சூரியனை, ஒரு அகல் விளக்கு கொண்டு ப்ரகாசப்படுத்தி விட்டதாக,
பௌராணிகர்கள் (ஆன்மீக சொற்பொழிவாளர்கள்) நினைக்க கூடாது... கர்வ பட கூடாது..



ப்ராம்மணன், "சூரியன் உதிக்கும் முன் எழுந்து, ஸ்நானம் செய்து, காயத்ரி மந்திரத்தை தான் ஜபித்ததால் தான், சூரியன் உதிக்கிறார்" என்று நினைத்தால், அது எத்தனை மடத்தனமோ! அத்தனை மூடத்தனம்
"தன் பேச்சால் தான், மக்கள் மனதில் பக்தி நிலைக்கிறது"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைப்பதும்..
இந்த கர்வம் கூடவே கூடாது...

ப்ராம்மணன், "காயத்ரி மந்திரம் சொல்லாமல் போனாலும், தேவ தர்ப்பணம் செய்து க்ரஹங்களை, வ்யூஹ மூர்த்தியான பரமாத்மாவை திருப்தி செய்யாமல் போனாலும்"
சூரியன் எப்படியும் "தக தகவென்று உதிக்க" தான் போகிறார்!!

"என்னால் தான் சூரியன் உதிக்கிறார்" என்று நினைக்காமல்,
"தனக்கும் அந்தர்யாமியாக உள்ள, சூரியனுக்கும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவை, நானும் வழிபட மனித பிறவி கிடைத்ததே"
என்று தனக்கு கிடைத்த பாக்கியத்தை ப்ராம்மணன் நினைத்து பார்த்தால், கர்வம் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்வான்..
அப்படி கர்வமில்லாமல், ஈஸ்வர பக்தியுடன், சந்தியா வந்தனம் செய்து வாழும் ப்ராம்மணனை, உலகமும் மதிக்குமே...

அது போல,
"நான் பகவானை பற்றி 10 வார்த்தைகள் சொன்னதால் தான், உலகத்தில் பக்தி பிரச்சாரம் ஆகிறது... நாராயணனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்கள்"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைக்க கூடாது...

மாறாக,
"நம்முடைய பிரச்சாரம் தேவையே இல்லை... 
வேதத்தின் நாயகனான எம்பெருமான் அவர் பெருமையாலேயே ப்ரகாசிக்கிறார்.. அத்தகைய பெருமை உடையவர்"
என்றே ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவாளர்களும் நினைக்க வேண்டும்.

"நான் ராமாயண பிரச்சாரம் செய்கிறேன்.. கிருஷ்ணரை பற்றி பிரச்சாரம் செய்கிறேன்..."
என்று தன் அனுபவத்துக்கு தோன்றியபடி,
நாமாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு,
உலகத்தில் கேட்க தகாத, அருவெறுப்பான சம்பவங்களை சொல்லி,
எம்பெருமானை பற்றி நம் எச்சில் வாயால் பேசினோம் என்றால்,
கேட்கும் ஜனங்கள் ஏளனமாக சிரிக்க போகிறார்களே தவிர,
"ராமாயணம், பாகவதம் கேட்ட பலனாக அவர்களுக்கு தான் பக்தி வந்து விட போகிறதா?... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா?.."
பகவானை பற்றி பேச அமர்ந்து விட்டு, 
ஏளனமாக, மரியாதை குறைந்த ஈன சொற்களை பயன்படுத்தி பேசும் போது, 
ஆசையாக பகவான் பெருமையை கேட்க வரும் சாதாரண ஜனங்களுக்கு கூட, ரசிக்காதே!!.

"பெருமாளை போய் இப்படி தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறாயே.. நியாயமா?"
என்று சொற்பொழிவை கேட்பவர்கள் கேள்வி கேட்காததால் தானே, இப்படி தரம் தாழ்ந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம்.

"யாரை பற்றி பேசுகிறோம்?"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...
"ஆழ்வார்கள் எப்படிபட்ட உயர்ந்த பவித்ரமான சொற்களையே பயன்படுத்தி, தன் வாக்கால் பகவானின் பெருமையை தரம் தாழ்த்தி விட கூடாதே என்று பயந்தார்கள்!!"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...

"நம் சொற்பொழிவினால், நமக்கும் பக்தி உயர வேண்டும்... கேட்பவருக்கும் பக்தி உயர வேண்டுமே"
என்று உயர்ந்த பதங்களை கொண்டே பேச வேண்டும்..

எம்பெருமானை பற்றி நாம் சொல்ல, கேட்பவன் பக்தி உயர்வதை பார்க்க ஆசை பட வேண்டும்..

"ராமரும், கிருஷ்ணரும் நம் தெய்வம், என் பெருமாள், நம் பெருமாள்"
என்று ஹிந்துக்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து இருக்கிறோம்..

இப்படி வளர்க்கப்பட்ட நாம்,
ஈன சொற்கள் கொண்டு பேசப்படும் இது போன்ற ஆன்மீக சொற்பொழிவை கேட்கும் போது வேதனை படுகிறோம்..

ஹிந்துக்கள் பொதுவாகவே சாத்வீக குணத்துடனேயே இருப்பதால்,
இது போன்ற சொற்பொழிவுகளை அப்போதே திருத்தி கண்டிக்காமல்,
"தன் வரையிலாவது காதில் விழ வேண்டாமே" என்று ஒதுங்கி விடுகின்றனர்...
இது கேட்பவர்களின் குற்றம் அல்ல.. ஆன்மீக சொற்பொழிவாளர்களின் குற்றமே..



ஆன்மீக சொற்பொழி செய்பவர்கள், 
தன் அறிவை காட்டி எம்பெருமான் பெருமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...
"அப்படி பேசினால் தான் கூட்டம் வரும்" என்று நினைப்பதும் தவறு...

"ஆழ்வார்கள்" பாடிய பாசுரங்களை,
அதற்கு விளக்கம் கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை. தேசிகர், ராமானுஜர்" போன்ற அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களையே பயன்படுத்தி மக்களுக்கு எளிய தமிழில், 'அவன், இவன்' என்று பகவானை தரம் குறையாமல் பேசி  புரிய வைக்க முடியும்.

நம் எச்சில் வாயால நம் புத்தியை கொண்டு ஏன் எம்பெருமான் பெருமையை குறைக்க வேண்டும்?...

ஆன்மீக சொற்பொழிவாளர்கள்,
ஹிந்துக்களின் பக்தியை உயர்த்த,
தன் பக்தியையும் உயர்த்த,
அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களை கொண்டே பேச வேண்டும்.. மக்கள் மனதில் பக்தியை பெருக்க வேண்டும்..
அப்படி உயர்ந்த சொற்களால் பக்தியை வளர்க்கும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் இருக்கிறார்கள். 
அவர்கள் அனைவரையும் ஹிந்துக்களாகிய நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை அவர்கள் தர்மத்தில் வாழ முடிந்த உதவிகளை  நாம் செய்ய வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க நம் பாரத தேசத்தில் வாழும் அவதார புருஷர்கள்.. 



Sunday 20 October 2019

கருவுற்று இருக்கும் தாய் நினைத்தால், கெட்ட குணத்தோடு பிறக்க போகும் குழந்தையையும் தெய்வ குழந்தையாக ஆக்க முடியும்.. நல்ல குழந்தைகள் பெறுவது எப்படி?




  • நல்ல குணங்கள் கொண்ட குழந்தைகள், 
  • தேசிய பற்று உள்ள குழந்தைகள், 
  • ஆன்மீக பற்று உள்ள குழந்தைகள், 
  • தீய குணங்கள் கொண்டவர்களை எதிர்க்க நெஞ்சுரம் கொண்ட குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிக்காத குழந்தைகள்,
  • பணத்திற்காக தெய்வத்தையும், தேசத்தையும் பழிப்பவர்களை ஆதரிக்காத குழந்தைகள்,
  • தீய பழக்கம் கொண்டவர்களுடன் பழக நேர்ந்தாலும், தீய பழக்கங்கள் ஏற்காத குழந்தைகள்,
  • ஹிந்துவாகவே வாழ விரும்பும் குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை மதிக்க தெரிந்த குழந்தைகள்,
  • மனித நேயம் உள்ள குழந்தைகள்,
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் கையால் எதையும் வாங்காத குழந்தைகள், 
  • தேசபற்றுள்ள குழந்தைகள்,

நம் இந்திய நாட்டில் பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்த நாதீகனுக்கும் இது போன்ற நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும்..

பாரத தேசம் உயிர் பெற்று என்றுமே இருக்க, நம் தேசத்தில் பிறக்க போகும் எதிர்கால குழந்தைகளின் குணம், பழக்கம், தேச பற்று, தெய்வ நம்பிக்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது..

தீயவனுக்கு கூட,
வாலிகனுக்கு கூட,
நாதீகனுக்கு கூட,
தேச பற்றுள்ள குழந்தைகள்,
ஹிந்து தெய்வங்கள் மீது பற்றுள்ள குழந்தைகள்,
ஆன்மீக சிந்தனை உள்ள குழந்தைகள்
பிறக்க வேண்டும்.

நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க செய்ய நம்மால் முடியும்.. அது சாத்தியமே.. 



ஹிந்து பெண்கள் கையில் தான் இந்த பாரத தேசத்துக்கு அப்படிப்பட்ட குழந்தைகளை கொடுக்கவல்ல பெரும் வாய்ப்பு உள்ளது.
நம் பாரத நாட்டின் பெண்கள், குறிப்பாக கருவுற்று இருக்கும் போது,
பொறாமை, வஞ்சம், கேலி, பேராசை, தெய்வ நிந்தை, கோபம் போன்ற குணங்களை தவிர்த்து,
முடிந்தவரை நல்ல குணத்துடனேயே 10 மாதமும் இருக்க பழக வேண்டும். அதற்கு ஏற்ற சத்சங்கத்தில் இருக்க வேண்டும்.

  • நம் நாட்டின் மீது தேச பற்றை அதிகமாக்கும் புத்தகங்களையே கர்ப்ப காலங்களில் படிக்க வேண்டும்..
  • ஆன்மீக சிந்தனையை அதிகமாக்கும் புத்தகங்கள் அதிகம் படிக்க வேண்டும்.. 
  • ஆன்மீக பெரியோர்கள் பேசும் ஆன்மீக விஷயங்களையே கேட்க வேண்டும்..
  • குமுதம், ஆனந்த விகடன் போன்ற கேளிக்கை நிறைந்த மனதை சபலப்படுத்தும் புத்தகங்கள், நாவல்கள் போன்ற ஆன்மீக சிந்தனை தராத புத்தகங்களை இந்த சமயத்திலாவது பிறக்க போகும் குழந்தைக்காகவாவது தவிர்க்க வேண்டும்.
  • தீய குணங்கள் கொண்டவர்களை தன்னிடம் நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • எப்பொழுதும் மகிழ்ச்சியாக மன கொதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
  • பிறக்க போகும் குழந்தை, தாய் தந்தை மதிக்கும், ராம கிருஷ்ணரை போன்று உலகம் ஆளும் திறமையுடன், பலத்துடன்,  ஹிந்துவாகவே வாழ அதிகம் விரும்பும் பிள்ளையாக பிறக்க வேண்டும் 

என்று எப்பொழுதும் ஆசை பட வேண்டும்.



  • வேதத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை தினமும் பிரார்த்திக்க வேண்டும்.
  • ஹிந்து தெய்வங்களை கேலி செய்யும் மிலேச்ச, வாலிகர்கள் நட்பை, அவர்கள் கொடுத்ததை வாங்குவதை தவிர்க்க வேண்டும்..
  • அதிக நேரம் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்...

இப்படி ஒரு கருவுற்ற பெண் 10 மாதமும் வாழ்ந்தால்,

  • நாத்தீகன் குடும்பத்திலும் ஆத்தீகன் பிறப்பான்..
  • குணம் கெட்ட தகப்பனுக்கும், குணசீலன் பிறப்பான்...
  • வாலிக குணம் கொண்ட தகப்பனுக்கும், ஹிந்துவாக வாழ விரும்பும் நல்லவன் பிறப்பான்...
  • தீயவன் குடும்பத்திலும் நல்லவன் பிறப்பான்.. 

என்று நமது சாஸ்திரம் சொல்கிறது..

பொதுவாகவே,
பிறக்கும் குழந்தைகளின் குணம்,
பூர்வ ஜென்ம வாசனையாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குணத்தாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது..

பூர்வ ஜென்ம குணங்கள்
தீய குணங்களா? நல்ல குணங்களா? என்று நமக்கு தெரியாது...
ஆனால், கருவுற்று இருக்கும் போது தாய்,
எதை கேட்கிறாளோ,
எதை பார்க்கிறாளோ,
எதை ருசிக்கிறாளோ,
எதை நினைக்கிறாளோ
அவை எல்லாம் குழந்தையின் பிறவி குணத்தையும் மாற்றவல்லது..

இதை சத்யம் ஆக்கியவள் "கயாது". பிரகலாதனின் தாய்.



ஹிரண்யகசிபு மகா பலசாலி...
அசுரர் குல அரசன்.

அசுரர்களும், தேவர்களும் காஷ்யப ரிஷியால் படைக்கப்பட்டவர்கள்..

அசுரர்கள், சுயமாகவே மகா பலம் கொண்டவர்கள்.
இது தவிர, தவம் செய்து பல வரங்களையும் பெற்று இருந்தனர்..

நாத்தீகன் "கடவுளே இல்லை" என்று சொல்லி திரிபவன்..

மனித படைப்புக்கு முன் படைக்கப்பட்டவர்கள் அசுரர்கள்.
அசுரர்கள் "கடவுள் இல்லை" என்று உளரும் நாத்தீகன் கிடையாது..
"நானே கடவுள்" என்று ஈஸ்வரனையும் எதிர்க்க வல்லவர்கள்.

சிவனையும், ப்ரம்மாவையும் நேரில் பார்த்த இவர்கள் "தானே தெய்வம்" என்று சொல்லும் அளவுக்கு பலமுடையவர்களாக இருந்தனர்..
தேவர்களை அடக்கிய ஹிரண்யகசிபு, பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை கைப்பற்றி விட்டான்..

பாற்கடலில் உள்ள விஷ்ணுவை மட்டும் அவனால் பார்க்க முடியவில்லை..
நாராயணனையும் வென்று விட்டால், 'இனி ஒரு தெய்வமும் தனக்கு மேல் கிடையாது' என்று சொல்லி கொள்ள ஆசைப்பட்டான்.

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல, ஒரு மனுவின் முழு கால அளவான 71 சதுர் யுகத்தை ஹிரண்யகசிபு ஒருவனே ஆண்டு வந்தான்.



அவனுக்கு பல குழந்தைகள் உண்டு. அனைவருமே அசுர குழந்தைகள்.. யாருக்கும் அடங்காதவர்கள்.. மகா பலசாலிகள்..

தேவர்கள் சொர்க்க லோகத்தில் ஹிரண்யகசிபுவுக்கு பயந்து, அவன் கட்டளைப்படி, வேலை செய்து கொண்டு இருந்தனர்..
வரம் கொடுத்த பிரம்மாவும் இவனுக்கு பயந்து மறைந்து இருந்தார்.. சிவனும் அமைதியாக இருந்தார்.




அந்த சமயத்தில், ஹிரண்யகசிபுவின் மனைவி "கயாது" கருவுற்றாள்.
அப்பொழுது ஹிரண்யகசிபு சில வருடங்கள் தவம் செய்ய சங்கல்பித்து இருந்தான்..

தன் மனைவி கருவுற்று இருப்பதால், அவளுக்கு பிறக்க போகும் தன் குழந்தையை தான் இருந்து பார்க்க ஆசைப்பட்டான்.

"தான் தவம் முடித்து திரும்பி வரும் வரை, அவளுடைய கர்ப்பம் தங்கட்டும்" என்று தன் வலிமையால் நிறுத்தி விட்டு, தவம் செய்ய புறப்பட்டான்.

71 சதுர் யுகங்கள் தலை தூக்க முடியாமல், தேவர்கள் அவமானப்பட்டனர். மும்மூர்த்திகளும் கூட அமைதி காத்த நிலையில், பெருந்துயரை தேவர்களாக இருந்தும் அனுபவித்து கொண்டிருந்தனர்.

'வேத மந்திரங்களையே' இவன் காலத்தில் மாற்றி விட்டான்..
எந்த தேவனுக்கும் 'பூஜை' கிடையாது, 'மரியாதை' கிடையாது என்று செய்து விட்டான்..
"ப்ரம்ம" தேவனுக்கும், "சிவனுக்கும்", மறைந்து இருக்கும் "விஷ்ணுவுக்கும்" கூட பூஜை இல்லாமல் செய்து விட்டான் ஹிரண்யகசிபு.

பூமியில் உள்ள மக்கள் வேதத்தில் உள்ள தெய்வங்கள் பெயரே மறந்து விட்டனர்..
அனைவரின் வாயிலும் "ஹிரண்யாய நம:' என்ற கோஷம் தான்.


ஹிரண்யகசிபுவுக்கு கோவில்கள், ஹிரண்யகசிபுவுக்கு பூஜைகள், ஹிரண்யகசிபுவுக்கு ஸ்தோத்திரங்கள், ஹிரண்யகசிபுவின் பெயரில்  வேதங்கள் 
என்று 71 சதுர் யுகமும் சர்வவல்லமையுடன் ஆட்சி செய்து வந்தான். எதிர்க்க ஆள் இல்லாமல் அசுரர்கள் ஆட்சி நடந்தது.
தன் தவ வலிமையால், "கயாது தான் வரும்வரை பிரசவிக்காமல் இருக்கட்டும்" என்று சொல்லி ஹிரண்யகசிபு தவம் செய்ய சென்று விட்டான்.
இது தெரிந்ததும், தேவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகினர்..

"ஹிரண்யகசிபு என்ற இந்த அசுரனையே எதிர்க்க வழி தெரியவில்லை, இவனுக்கு இன்னோரு மகன் வேறு பிறக்க போகிறானே!!!
நம்மை நிரந்தரமாக தலை தூக்க விட மாட்டான் போல உள்ளதே"
என்று நினைத்த தேவர்களின் தலைவன் இந்திரன், 'இது தான் சமயம்' என்று அதர்மம் நடக்க போவதை தடுக்க சில சமயம் அதர்மத்தை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்...

ஹிரண்யகசிபு இல்லாததால், தைரியம் கொண்டு, கருவுற்று இருக்கும் கயாது முன் தோன்றினார்.

பிறக்க போகும் குழந்தை அசுரன் என்பதால், வரப்போகும் அபாயத்தை நினைத்து, கயாதுவின் பிடித்து தன் இடத்திற்கு இழுத்து சென்றார் இந்திர தேவன்..

இந்திரனை எதிர்க்க பலமில்லாத கயாது, கதறினாள், கூச்சலிட்டாள்..
அப்பொழுது ப்ரம்ம தேவனின் மானஸ புத்ரர் நாரத முனி ப்ரத்யக்ஷமானார்..

நாரதர் இந்திரனை தடுத்து, "கயாதுவை கொல்வதால் ஒரு பயனும் இல்லை.
மேலும் நீ இப்படி செய்தாய் என்று ஹிரண்யகசிபுவுக்கு தெரிந்தால், உன் நிலையை நினைத்து பார்" என்று நிதானப்படுத்தினார்.


"பிறக்கப்போகும் குழந்தையும் அசுர குணத்துடன் பிறக்குமே, எங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்று இந்திரன் கேட்க,
"இந்த குழந்தை மூலம் தான் உங்களுக்கு நல்ல காலம் ஏற்பட போகிறது" என்று சமாதானம் பேசி இந்திரனை விலக்கினார்.

கயாதுவை மீண்டும் அவள் அரண்மனையிலேயே விட்டு விட்டு செல்ல நினைத்தார் நாரதர்.

தேவ அசுரர்கள் எப்பொழுதும் பகைமை உணர்வு கொண்டவர்கள் என்பதால், 'ஹிரண்யகசிபு திரும்பி வரும் வரை தனக்கு பாதுகாப்பு நாரதர் மட்டுமே தர முடியும்' என்று தீர்மானித்தாள் கயாது.

நாரதர் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினாள்.

நாரதர், இவள் நிலையை புரிந்து கொண்டு தன் ஆசிரமத்துக்கு கூட்டி சென்றார்..
ரிஷிகளில், முனிவர்களில் சிறந்தவர் நாரதர்.

ரிஷிகள், முனிவர்கள் எப்பொழுதும் தியானம், தவம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.
சில ரிஷிகள் கோபமிக்கவர்கள் கூட.
தவம் செய்து சிவபெருமானை, விஷ்ணுவை வழிபடுபவர்கள்..


முனியான நாரதரோ,
அனைவரும் ரசிக்கும் படியாக கழுத்தில் துளசி மாலை அணிந்து கொண்டு, நெற்றியில் திலகம் இட்டு கொண்டு, எப்பொழுதும் நாராயண நாமத்தை பஜித்து கொண்டே இருப்பார்..

கடும் தவம் செய்து தெய்வங்களை நெற்றியின் புருவத்தில் ஜோதி ஸ்வரூபமாக தரிசிக்கும் ரிஷிகள் மத்தியில்,
நாரதர் தன் பஜனையால் நேராக கைலாயம் சென்று ருத்ரனை தரிசித்து விடுவார்.
பாற்கடலில் உள்ள தன் இஷ்ட தெய்வமான நாராயணனையும் எந்த தடையும் இல்லாமல் தரிசித்து விடுவார்.
ப்ரம்ம லோகம் முதல், பாதாள லோகம் வரை,
தேவர்கள் ஆட்சி செய்தாலும்,
அசுரர்கள் ஆட்சி செய்தாலும்
இவருக்கு எங்கும் மதிப்பு.
எப்பொழுதும் ஆனந்தமாகவே உள்ள இவர் முகத்தை பார்த்தாலே, தேவர்கள் மட்டுமல்ல, கம்சன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் கூட இவரை தடுப்பதில்லை..

நாராயண நாமத்தில் ஸித்தி அடைந்தவர் நாரதர்..



இப்படி ஒரு மகான், கயாதுவின் கர்ப்ப காலத்தில் கூடவே இருந்தார் என்றால், அவள் பாக்கியத்தை கேட்கவும் வேண்டுமா?..

நாரதர் கயாதுவுக்கு
ஸத் விஷயங்களை, நல்ல பண்புகள், ஒழுக்கத்தின் பெருமைகளை, தர்மங்களை,
தான் எப்படி ப்ரம்ம புத்ரன் ஆனேன் என்ற காரணத்தை தினமும் சொல்வார்..

தினமும் நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே, மன சாந்தியுடன், நிம்மதியாக நாரதர் ஆசிரமத்தில் இருந்து வந்தாள்.

நாரதர் இப்படி நல்ல தர்மங்களை சொல்லி கொண்டே இருக்க, கர்பவதியான கயாது கேட்டு கொண்டே தூங்கி விடுவாள்..
இவள் தூங்கி இருக்கும் போதும்,
நாரதர் பிரத்யேகமாக தூங்கி கொண்டு இருக்கும் அவளுக்கு, நாராயணனின் மகத்துவத்தை, பர தத்துவத்தை சொல்ல ஆரம்பிப்பார்.
நாராயண நாமத்தை அகண்டமாக சொல்வார்.

இப்படி அவள் விழித்து இருக்கும் போது பொதுவான தர்மங்களையும்,
அவள் தூங்கும் போது நாராயணனின் பெருமையையும் சொல்ல சொல்ல, அவள் கர்ப்பத்தில் இருந்த அசுர குணங்களுடன் உள்ள குழந்தை பிரகலாதன், பக்த பிரகலாதனாக தயாராகி கொண்டு இருந்தார்.

பல வருடங்கள் தவம் செய்து விட்டு, திரும்பி வந்தான் ஹிரண்யகசிபு.
கர்பத்துடனேயே உள்ள தன் மனைவியை தேவர்கள் ஹிம்சை செய்யாமல் நாரதர் தான் பார்த்து கொள்கிறார் என்றதும், ஹிரண்யகசிபுவுக்கு நாரதர் மேல் தனி பிரியம் ஏற்பட்டது..

கயாது அழகான ஆண் குழந்தையை பெற்றாள்.
பிரகலாதன், பிறவியிலேயே நாராயண ஸ்மரணையுடனேயே பிறந்தான்.
மற்ற அசுர குழந்தைகள் மத்தியில், இவன் குணம் மட்டும் தனித்து இருந்தது.

'ராஜா மகன் ஆயிற்றே, அப்படித்தான் இருப்பான்' என்று ஹிரண்யகசிபு நினைத்து கொண்டான்.



தகுந்த வயதில் பாடசாலை அனுப்பினான்..
அங்குள்ள, மாணவர்கள் அனைவரையும் நாராயண கீர்த்தனை செய்ய வைத்து விட்டான்.

71 சதுர் யுகங்களாக, மக்கள் மனதில் இருந்து மறைந்து போய் இருந்த 'நாராயண' நாமத்தை வெளிப்படுத்தி விட்டான் பிரகலாதன்.

தன் பிள்ளை, அசுர குணத்துடன் இல்லாமல் சாத்வீகமாக இருப்பதை பொறுத்து கொண்ட ஹிரண்யகசிபுவால், 'நாராயண' நாமம் மீண்டும் உலகிற்கு வெளிப்பட்டதை ஒப்புக்கொள்ள முடியவில்லை..

பிரகலாதன் தன் பிள்ளை என்பதால் அறிவுரை சொல்லி நிறுத்த பார்த்தான்.. பலிக்கவில்லை..
அசுர குணம் கொண்ட இவன், தன் பிள்ளை என்பதை கூட மறந்தான்.
யானையை ஏவி மிதிக்க வைத்தான்.. விஷ பாம்புகள் கடிக்க செய்ய பார்த்தான்..
எங்கும் நாராயணன் இருப்பதை ஞானத்தால் பார்த்த பிரகலாதனுக்கு எதுவும் ஆகவில்லை.
இவன் பலத்தை கண்டு ஹிரண்யகசிபுவே பிரமித்தான்..
"தான் செய்த தவம் எல்லாம் இவனுக்கு பலித்து விட்டதோ" 
என்று நினைத்தான்.

"உலகமே என்னை வணங்கும் போது நீயும் என்னை வணங்கு" என்று சொல்ல,
"நீங்கள் என் தந்தை என்ற காரணத்துக்கு உங்களை என் தெய்வமாக வணங்குகிறேன்.. 
ஆனால் நம் அனைவருக்கும் தெய்வம் அந்த நாராயணனே"
என்று பிரகலாதன் பதில் சொல்ல,
மகா ஆத்திரம் கொண்டான்..
"யாரடா நீ?.. சந்தன காட்டுக்குள் முளைத்த கருங்காலி மரமே...
அசுர குலத்தில் பிறந்து, எனக்கு மகனாக பிறந்தும், எப்படி உனக்கு இந்த புத்தி வந்தது?
உனக்கு யார் "நாராயணன் பரப்ரம்மம்" என்று சொன்னான்?.."
என்று மிரட்டி உண்மையை அறிந்து கொள்ள பார்த்தான்....
பிரகலாதன் பதில் சொல்லவில்லை...



நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத்
ந ச அந்யாயேன ம்ருச்சத:

"கேட்காமல் யாருக்கும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே..
நேர்வழி தவறி இருப்பவர்கள் விஷமமாக கேட்டாலும் நல்ல வார்த்தைகளை சொல்லாதே!!" என்று சாஸ்திரம் சொல்கிறது..

"நாராயணா என்ற சொல்லை யார் உனக்கு சொல்லி கொடுத்தார்கள்?" என்று தந்தை கேட்டும், அவன் கேட்பதில் விஷமம் உள்ளதால், பிரகலாதன் பதில்
சொல்லாமல் மௌனமாக இருந்தான்..

"நாரதர் தான் எனக்கு உபதேசம் கருவில் இருக்கும் போதே செய்தார்" என்று ரகசியத்தை சொல்லவில்லை.

நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்று அசுர குணம் கொண்ட ஹிரண்யகசிபு, தன்னிடம் இவன் சொல்ல தயங்கினாலும், இவனுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் கேட்டால் சொல்வான் என்று நினைத்து, அவர்களை கேட்க சொன்னான்.

"குரு கேட்டால் சிஷ்யன் எதையும் மறைக்க கூடாது.. யார் உனக்கு நாராயண நாமத்தை சொல்லி தந்தது"
என்று ஆசிரியர்கள் கேட்டும், ரகசியத்தை சொல்லவில்லை பிரகலாதன்..

உண்மையை சொன்னால், இவர்கள் தன் தந்தையிடம் சொல்லி விடுவார்கள் என்பதால், அதர்மத்துக்கு வழி செய்ய குருவே கேட்டாலும், சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்தார் பிரகலாதன்.

ஆனால், மனதில் ஒன்று நினைத்து, வெளியில் ஒன்று பேசும் குணம் குழந்தைகளுக்கு கிடையாது...

நாராயண நாமத்தின் மகிமையை தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளுக்கு சொல்லும் போது, அவர்கள் "யார் நாராயணன்.. யார் உனக்கு சொன்னார்கள்?" என்று கேட்ட பொழுது மறைக்காமல்
ரகசியத்தை அவர்களுக்கு சொன்னான் பக்த பிரகலாதன்.

இப்படி அசுர குலத்தில் பிறந்தும், ஹிரண்யகசிபுவுக்கே மகனாக பிறந்தும், அசுர குணங்கள் இல்லாமல், ஞானியாக,
"பிரகலாத ஆழ்வான்" என்றும்,
"பக்த பிரகலாதன்" என்றும் ஆனதற்கு, கயாது கருவுற்ற காலத்தில் அவள் கேட்ட ஸத் சங்கமே காரணம்..

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பிறவி குணங்கள் கூட, தாயின் ஸத் சங்கத்தால் மாறி விடும்.

தாய் கேட்காவிட்டாலும், ஸத் சங்கத்தில் இருந்து கொண்டிருந்தால், அவள் கருவில் உள்ள குழந்தையின் குணங்கள் மாறி, நல்ல குழந்தைகள் பிறக்கும்..

இந்த ரகசியம் நம் பாரத நாட்டில் இது நாள் வரை காக்கப்பட்டது..
கர்ப்ப காலங்களில் பெண்களை பிறந்த வீட்டுக்கு அனுப்புவது கூட அவள் வேலை சிரமம் கூட இல்லாமல் ஸத் சங்கத்தை அனுபவிப்பாள் என்பதற்காக தான்.



மன உளைச்சல் கொண்டு, பணத்திற்காக வேலைக்கு சென்று, ஸத் சங்கம் இல்லாமல் தின்று தூங்கி வழியும் பெண்கள், தாமஸ குணம் கொண்ட சோம்பேறிகளையும்,
கோபம், ஆத்திரம், பொறாமை வளர்க்கும் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கேளிக்கைகளில் பொழுது போக்கும் பெண்கள் ராஜஸ குணம் கொண்ட கோபப்படும் பொறாமைப்படும் குழந்தைகளை பெற்று விடுகின்றனர்.

வீட்டுக்கு வீடு நம் பாரத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வ சிந்தனை உடைவர்களாகவும், மகான்களாகவும், ஞானிகளாகவும் பிறந்தனர்.
இன்று வரை ஏறத்தாழ 90 சதவீத பாரத பெண்கள் கர்ப்ப காலங்களில் ஸத் சங்கத்தில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் இந்த மண் நல்ல குழந்தைகளை தான் பெற்றுள்ளது.

1000 வருடங்கள், நம் பாரத நாட்டை அந்நிய மதங்கள் சூழ்ந்த போதும், வீட்டுக்கு வீடு தேசபற்றுள்ளவர்கள், தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ முடிந்ததற்கு காரணம் நம் ஹிந்து தாய்மார்களே..

இனி வருங்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகள், 
தேசபற்றுள்ளவர்களாக, 
தெய்வ பக்தியுடன் ஹிந்துவாகவே வாழ விரும்புபவர்களாக 
வாழ வழி செய்ய போவதும் நம் ஹிந்து தாய்மார்களே...

அசுர தகப்பனுக்கு, அசுர குலத்தில் பக்தனான பிரகலாதன் பிறந்தது போல, பெற்றவர்கள் தீய பழக்கம், குணம் கொண்டிருந்தாலும்,
நல்ல பிள்ளைகள் பிறக்க வழி செய்ய போவது கருவுற்று இருக்கும் பெண்களே.
கருவுற்று இருக்கும் தாய் நல்ல குழந்தைகளை பெற்று நம் பாரத நாட்டுக்கு தர வேண்டும்.



நம் பாரத நாட்டுக்கு, மகான்களை தேச பற்றுள்ளவர்களை, ஹிந்து தெய்வங்களை மதிக்கும் குழந்தைகளை பெற்று தர, கயாதுவை போன்ற தாய்மார்களே தேவை. 

வாழ்க ஹிந்து மதம்..
வாழ்க ஹிந்துக்கள்..



Tuesday 4 June 2019

நாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்? மனதில் அமைதி, விவேக புத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க என்ன வேண்டும்? தெரிந்து கொள்வோமே ...

சைக்கிள் பழகுபவன், 
பல தடவை விழுந்தபிறகு, நேரே விடுவதற்கு தெரிந்து கொள்வது போல,


பிராணாயாமம் செய்பவன், 
பல தடவை பிராணனை அடக்க முடியாமல் போய், முடிவில் வெற்றிக் காண்பான்.
அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றவாறு,
பிராணாயாமத்தினால் சில மாதங்களிலோ, சில ஆண்டுகளிலோ, பலன் தெரியும்..

குண்டலினி சக்தியை உயிர் பெற செய்ய, முதலில், நம் உடம்பில் உள்ள நாடிகள் சரியாக இயங்க வேண்டும்.

உடம்பில் உள்ள "நாடிகள் யாருக்கு  சுத்தமாக" உள்ளதோ!!, அவர்கள்
மனதில் அமைதி இருக்கும்
விவேக புத்தியுடன் செயல்படுவார்கள். 
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடம்பில் உள்ள நாடிகளை சுத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.

இது ஒரு எண்ணிக்கை.
இது போல, 64 எண்ணிக்கை வரை ஏற்றிக் கொண்டு போகலாம். 

இவ்வாறு 6 மாதம் செய்தால், நாடி சுத்தி ஏற்படும்.

நாடி சுத்தி ஏற்பட்டவன்,
குண்டலினி சக்தி எழுவதற்கு, மற்றொரு பிராணாயாம பயிற்சி செய்ய தகுதி பெறுகிறான்...

முதலில் நாடி சுத்தி அடைய முயற்சி செய்வோம்....

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.


Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)