Followers

Search Here...

Showing posts with label மந்திரம். Show all posts
Showing posts with label மந்திரம். Show all posts

Friday 12 November 2021

இரவு தூங்கும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும்? பகவானை தரிசிக்க எப்படி தயாராக இருக்க வேண்டும்?

இரவு தினமும் படுத்து கொள்ளும் முன், கை கால் அலம்பி கொண்டு, துடைத்து கொண்டு, படுக்க வேண்டும்.

பகவத் தரிசனம் கனவில் ஏற்பட கூடும், அசுத்தமாக படுக்க கூடாது. 

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது.

தெய்வத்தின் (ஸ்வாமி அறை) பக்கம் கால் வைத்து படுக்க கூடாது.

ஏதாவது துணியாவது படுக்கையுமாக போட்டு தான் படுக்க வேண்டும். வெறும் தரையில் படுக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் முக்கியம்.


அம்மாவாசை போன்ற பித்ரு தினங்களில், ஏகாதசி போன்ற விரத தினங்களில் மனைவியோடு படுக்க கூடாது. அன்று சவரம் செய்வதும் கூடாது.


படுப்பதற்கு முன் கீழே சொல்லியுள்ள பிரார்த்தனையை சொல்லி விட்டு படுக்க வேண்டும்.

அகஸ்திய: மாதவ: ச ஏவ

முசுகுந்தோ மஹாபல: 

கபில: முனி அஸ்திக:

பஞ்சைதே ஸுகசாயின:

அகஸ்தியர், மாதவ, முசுகுந்த, கபில, அஸ்திகர், ஆகிய ஐவரும் சுகமாக சயனிக்க அருள் புரியட்டும்

ஸச்சித்த-சாயீ புஜகேந்த்ர-சாயீ

நந்தாங்க-சாயீ கமலாங்க-சாயீ

அம்போதி-சாயீ வடபத்ர-சாயீ

ஸ்ரீரங்க-சாயீ ரமதாம் மனோமே

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் (ஸ்ரீரங்க அஷ்டகம்)

ஸாது ஜனங்களில் சித்தத்தில் சயனிப்பவன், நந்தகோபன் மடியில் சயனிப்பவன், மஹாலக்ஷ்மி மடியில் சயனிப்பவன், பாற்கடலில் சயனிப்பவன், ப்ரளய காலத்தில், ஆலிலையில் பால முகுந்தனாக சயனிப்பவன், ஸ்ரீரங்கத்தில் சயனிப்பவன் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது. 

கரார-விந்தேன பதார-விந்தம்

முகார-விந்தே வினிவேச-யந்தம்

வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்

பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

- கிருஷ்ண கர்ணாம்ருதம்

(தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற தன் இடது பாதத்தை, தாமரை போன்ற தன் வாயில் வைத்து தன்னையே சுவைத்து கொண்டிருக்கும் ஆலிலை மேல் சயனித்திருக்கும் குழந்தை முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்) 



அனாயாஸேன மரணம்

வினா தைன்யேன ஜீவனம்

தேஹி மே க்ருபயா சம்போ

த்வயீ பக்திம் அசஞ்சலாம்

மரண பயம் இல்லாத கண் இமைப்பது போல சுலபமான  மரணம், வறுமை, கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமைய, உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா. உங்களிடம் நிலையான பக்தியையும் கொடுங்கள்.

வ்யத்யஸ்த-பாதம் அவதம்ஸித பர்ஹி-பர்ஹம்

ஸாசீ க்ருதானன நிவேசித வேணுரந்த்ரம்

தேஜ: பரம் பரம-காருணிகம் புரஸ்தாத்

ப்ராண: ப்ரயாண ஸமயே மம ஸன்னிதத்தாம்

- கிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலா-சுகர்)

மாற்றி வைத்த பாதங்கள் உடையவனும், மயில் தொகை சூடியவனும், சாய்ந்த முகத்தில் குறுக்காக வைக்கப்பெற்ற குழலின் துவாரங்களை உடையவனும், சிறந்த கருணை உடையவனும், பரஞ்ஜோதி வடிவானவனுமான கிருஷ்ணன், என்னுடைய பிராணன்  வெளி கிளம்பும் சமயத்தில், என் முன் காட்சி அளிக்கட்டும்.

அதராம்ருத சாரு வம்ச நாளா:

மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா:

ஹரி நீல ஸிலா விபங்க நீலா:

ப்ரதிபா: ஸந்து மம அந்திம ப்ரயாணே

(கோபால விம்சதியில் ஸ்வாமி தேசிகன்)

நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே, நளினவாய் தன்னில் வைத்து நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே, இணையிலா உச்சியிற் கொண்டையும், மயிலினது இறகையும் அதில் சேர்த்தியே, அடியேற்கு வரப்போகும் மரண உற்சவத்தினில், நீ குழந்தை வடிவாய் எழிலுடன் காட்சியருள் கண்ணனே !


தேஹாவஸான ஸமயே தயயா ரகூணாம்

நாத: கராம்புஜ: விராஜத பீதி முத்ர:

ஆருஹ்ய புஷ்பகம் அலங்க்ருத வாமபாக: 

தேவ்யா விதேஹ ஸுதயா மம ஸந்நிதத்தாம்

(ராம ஸ்தவ கர்ண ரஸாயணம் - ராமபத்ர தீக்ஷிதர்) 



க்ருஷ்ண த்வதீய பதபங்கஜ பஞ்சராந்த

மத்யைவ மே விசது மானஸ ராஜஹம்ஸ:

ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:

கண்டா வரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே

(முகுந்தமாலை - குலசேகர ஆழ்வார்)

கிருஷ்ணா! இந்த சமயத்தில் என்னுடைய மனம் என்ற அன்னப் பறவைக்கு, தங்களுடைய தாமரைப் பாதத் தண்டுகளில் இப்போதே அடைக்கலம் கொடுங்கள். மரண வேளையின் பொழுது என்னுடைய தொண்டை கபம், வாதம், பித்தம்,  போன்றவைகளால் தடைபடும் போது தங்களை எப்படி என்னால் நினைக்க  முடியும்?


இவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு படுக்க வேண்டும்.

படுத்து இருக்கும் போது, பகவன் நாமத்தை ஸ்மரணம் செய்து (நினைத்து) கொண்டே தூங்க வேண்டும்.


இடையிடையே விழிப்பு வந்தால், தூக்கம் வரும்வரை  பகவன் நாமத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.


தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தாலும் பகவன் நாமத்தை சொல்லும் அளவுக்கு நாக்கை மனசை பழக்கிட வேண்டும்.


இரவில் மலம் மூத்திரம் கழிக்க எழுந்தால், கை கால் அலம்பி, துடைத்து கொண்டு படுக்க வேண்டும்.


இரவில் அசுத்தமாக படுப்பவனிடம், பூத பிரேத பிசாசுகள் வரும். இதனால் கெட்ட கனவுகள் வரும்.

இரவு சுத்தமாக படுக்க வேண்டும். கனவில் பகவான் தரிசனம் தரக்கூடும்.

எனவே கை கால் அலம்பி சுத்தமாக படுத்து உறங்க வேண்டும்.


அதிகமான தூக்கம் கூடாது. 

இரவு 10 மணிக்குள் படுத்து கொண்டு, 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.


இவ்வாறு சாஸ்திரப்படி தினமும் வாழ்க்கை நடத்துபவர்கள் இகத்திலும், பரத்திலும் சுகமாக இருப்பார்கள்.


குருநாதர் துணை

Thursday 9 September 2021

ஓம் என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன? வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?...

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்".

நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான்.

நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே". 

வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும்.

வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும். 

வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம் 

"பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெரிய மாட்டார். அவர் வரமாட்டார்

என்று அரைகுறையாக உருட்டிக்கொண்டு, 'தெய்வத்தின் பெயரால்' தங்கள் இஷ்டத்துக்கு பாவங்கள் செய்து கொண்டு இருப்போம். 




  • பரமாத்மா யார்?
  • அவருக்கும் ப்ரணவத்துக்கும் என்ன சம்பந்தம்?
  • அவர் விஷ்ணுவாகவும், சிவனாகவும், பிரம்மாவாகவும் ஏன் ரூபம் தரித்தார்? 
  • ஏன் உலகை படைத்தார்? 
  • எப்படி உலகை படைத்தார்?
  • நம்மை ஏன் படைத்தார்? 
  • உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
  • மனிதனின் குறிக்கோள் என்ன?
  • மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

என்ற பல கேள்விகளுக்கு, பதில் தெரியாமலேயே போயிருக்கும்.

பகவான் மட்டுமே பதில் சொல்லக்கூடிய இந்த கேள்விகளுக்கு, பகவானின் இதயத்திலிருந்து வெளிவந்த வேதம், அனைத்து கேள்விக்கும் பதில் சொல்கிறது. 

பகவான் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

"வேதம் என்ன சொல்கிறது?" என்று அறிவதன் மூலம், நமக்கு விடை கிடைக்கிறது.


அந்த வேதம், பகவானோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறது? என்று அறிவோம்.  


* வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், சாம, அதர்வண

* நான்கு வேதமும், அதனதன் வேத ஆதியில் (முதல் மந்திரம்) அடக்கம்.


வேத ஆதி (முதல் மந்திரம்) என்ன?

1. ரிக் வேத ஆரம்ப மந்திரம்: 

அக்நிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ந தாதமம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், 

யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், 

முதன்மையாக இருப்பவரும், 

எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், 

செல்வத்தை தருபவரும், 

ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான 

அக்னி பகவானே ! 

பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்.




2. யஜுர் வேத ஆரம்ப மந்திரம்: 

இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த - உபாயவஸ்த - தேவோவ: ஸவிதா - ப்ரார்ப்யது - ஸ்ரேஷ்டதம் ஆய கர்மணே

அர்த்தம்:

இஷ்டமான அதே சமயம் புஷ்டியான அன்னம் உண்டாவதற்காகவும்,

நல்ல பசும்பால் உண்டாவதற்காகவும்,

செய்யப்படும் சிறந்த யாகமாகிய கர்மத்தில், ஸவிதாவான ஈஸ்வரன் உன்னை தூண்டட்டும்.


3. சாம வேத ஆரம்ப மந்திரம்: 

அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே  நிஹோதா ஸத்ஸி ப'ர்ஹிஷி

அர்த்தம்:

அக்னி தேவனே ! வருக.. வருக.. ஹவிசை பெறுவதற்காக கூப்பிடப்பட்ட தாங்கள், இந்த தர்ப்ப ஆஸனத்தில் அமருவீராக 


4. அதர்வண வேத ஆரம்ப மந்திரம்: 

ஸந்நோ தேவீ: அபிஷ்டய

ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ: அபி ஸர வந்து ந : 

அர்த்தம் :

நமக்கு நல்ல திவ்யமான குடி தண்ணீர் கிடைக்கட்டும். நல்ல மழை பொழியட்டும்.

* வேத ஆதியாக இருக்கும் இந்த நான்கு மந்திரமும், காயத்ரீ மந்திரத்தில் அடக்கம்.

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்


காயத்ரீக்குள் வேத மந்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்பதால் தான், வேதம் கற்கும் முன், காயத்ரீ மந்திரத்தை முதலில் குரு ப்ரம்ம உபதேசமாக செய்கிறார்.


* காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடக்கம்.

(பூ: புவ: ஸுவ: என்ற கீழ், நடு, மேல் உலகங்களை, வ்யாஹ்ருதி என்று சொல்கிறோம். 

இந்த உலகங்களுக்குள் காயத்ரீ மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைத்து விட கூடாது.

மூன்று உலகங்கள் விராட் புருஷனான நாராயணனின் அங்கம் என்று ரூபமாக தியானித்து, அந்த விராட் புருஷனாக இருக்கும் நாராயணனின் அங்கத்தில் காயத்ரீ என்று அடங்கி இருக்கிறாள் என்று தியானிக்க வேண்டும்.

அதனால் தான், 

காயத்ரீ மந்திரம் சொன்னாலும், பிராணாயாமம் செய்தாலும், ப்ராயசித்த ஹோமங்கள், ப்ரோக்ஷணம், சமர்ப்பணம் செய்தாலும், பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்தே சொல்கிறோம். 





காயத்ரீ மந்திரம் மட்டும் அர்த்தம் தெரிந்து சொன்னால், பகவானின் நாமத்தை பூஜித்ததாகும். 

பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீயை சொல்லும் போது, பகவானின் ரூபத்தை தியானிக்க முடிவதால் பகவானின் ரூபத்தை பூஜித்ததாகவும் ஆகும்.

* வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் (ஓம்) அடக்கம்.

என்ற ஒலியும், என்ற ஒலியும், என்ற ஒலியும் சேரும் போது, "ஓம்" என்ற பிரணவம் கேட்கிறது.


மொழியின் அடிப்படையில்

"" என்பது உயிர் எழுத்து என்று அறிகிறோம்.

'உயிர்' என்றால் ஆத்மா என்று சொல்கிறோம்.


"ம்' என்பது மெய் எழுத்து என்கிறோம். 

'மெய்' என்றால் உடல் சொல்வோம்.


உயிர் ('ஆத்மா') மெய்யோடு (உடலில்) புகும் பொழுது, உயிர்மெய் என்று சொல்கிறோம்.

அதாவது,

+ம் = என்ற உயிர்மெய் வருகிறது.

ஓம் என்ற பிரணவம் இந்த ரகசியத்தை தான் நமக்கு சொல்கிறது.

என்ற உயிரே "பரமாத்மா".

அவரே ஆயிரக்கணக்கான உடல்களில் பிரவேசித்து, "" போல தெரிகிறார். அவரே என்று தனித்தும் இருக்கிறார். 

இந்த உறவை தெரிந்து கொள்ளவே "" என்ற உறவு காட்டுகிறது. 


* ப்ரணவம் (ஓம் - அஉம) ப்ரம்மத்தில் () அடக்கம்.


ப்ரம்மமே "பரமாத்மா". 

ப்ரம்மமே "பகவான்".

ப்ரம்மமே "கிருஷ்ணராக" வந்தார்.

"நான் ப்ரணவத்தில் '' என்ற அகாரமாக இருக்கிறேன்" என்று கீதையில் சொல்கிறார்.

ப்ரம்மமே ஒலி ரூபத்தில் 'ப்ரணவமாக' இருக்கிறார்.

ப்ரம்மமே பார்க்கும்படியாக ரூபத்துடன், '' என்ற விஷ்ணுவாக இருக்கிறார், மூன்று உலகங்களே அங்கமாக கொண்ட விராட் புருஷனாகவும் இருக்கிறார்.


இப்படி பரமாத்மாவிலிருந்து ஓம்

பிறகு பூ புவ ஸுவ

பிறகு காயத்ரீ

பிறகு 4 வேதத்தின் முதல் மந்திரங்கள்

பிறகு வேதங்கள்

வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன், உலகங்களை படைக்கப்பட்ட வரிசை காட்டப்படுகிறது.


இந்த வரிசையை தியானிக்கவே, காயத்ரீயை மட்டும் சொல்லாமல்,

ஓம்

பூ: புவ: ஸுவ:

என்று சொல்லி, பிறகு 

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்

என்று காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்.


குருநாதர் துணை...

 

Monday 23 August 2021

ஸவிதா என்பது யார்? காயத்ரி மந்திரம் "ஸவிதா"வை தியானம் செய்ய சொல்கிறது? - ப்ரம்ம விசாரம்.....தெரிந்து கொள்வோம்.

ஸவிதா என்பது யார்? மேலும் தெரிந்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரத்தின் அர்த்தம், "என்னுடைய புத்தியை தூண்டி இயங்க வைக்கும், அந்த ஸவிதாவான ஈஸ்வரனை நான் தியானிக்கிறேன், துதிக்கிறேன்"

சிஷ்யன்

வேத மாதாவான காயத்ரீ,  சூரியனை தான் 'ஸவிதா' என்று சொல்கிறதா?

குரு

நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

சூரியன் ஒரு அக்னி பிழம்பு தானே.. 

அதை ஸவிதா என்று காயத்ரீ சொல்லி இருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

குரு

நீ சொல்வது சரியாக தான் உள்ளது. சூரியன் என்ற அக்னி பிழம்பு ஸவிதா இல்லையென்றால், பிறகு எது ஸவிதா என்று நினைக்கிறாய்?

சிஷ்யன்

இந்த அக்னியில் இருந்து வரும் சூரிய கதிர் தான் ஸவிதா என்று காயத்ரீ சொல்கிறதோ?

குரு

நீ என்ன நினைக்கிறாய்? 

சிஷ்யன்

சூரிய கிரணங்கள் நம் புத்தியை தூண்டுகிறது என்றே வைத்து கொண்டாலும், அது பரமாத்மா இல்லை. ஒரு சக்தி. அவ்வளவு தானே. அதை போய் ஏன் காயத்ரீ வணங்க வேண்டும்?

குரு

அதுவும் சரி தான். பிறகு, எது  ஸவிதா என்று நினைக்கிறாய்?



சிஷ்யன்

இந்த சூரியன் என்ற அக்னி பிழம்புக்கும், அதன் கிரணங்களுக்கும் காரணமாக ஒரு தேவன் இருக்கிறார். அந்த சூரிய தேவனை தான் ஸவிதா என்று காயத்ரீ சொல்கிறதோ?

குரு

நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

சூரிய தேவனுக்கும் இந்திரனாக தேவேந்திரன் இருக்கிறார். தேவர்களை படைத்த கஷ்யபர் இருக்கிறார். அவரை படைத்த ப்ரம்ம தேவன் இருக்கிறார். ப்ரம்ம தேவனையும் படைத்த விராட் புருஷனான நாராயணன் இருக்கிறார். அவரே ப்ரணவமாக நாம ரூபத்திலும் இருக்கிறார்.. அவரே நாம ரூபத்தை கடந்து ப்ரம்மமாகவே இருக்கிறார்.. ப்ரம்மமே பகவான்.

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே வேதம் என்கிற போது, வேத மாதாவான 'காயத்ரீ' சூரிய தேவனை துதிக்கிறது என்று தோன்றவில்லையே.. அவருக்கும் மேல் பலர் உள்ளனரே!

குரு

நீ சொல்வதும் சரியாக தான் உள்ளது... பிறகு ஸவிதா என்று வேத மாதா யாரை சொல்கிறாள் என்று நினைக்கிறாய்? 




சிஷ்யன்

அந்த ப்ரம்மமே, நாமமாக (ஒலி) ப்ரணவத்தில் இருக்கிறார். அதிலும் விஷ்ணுவாக (அ) தனித்த ரூபத்தோடு இருக்கிறார். அவரே மெய் என்ற உடலில் புகுந்து கொண்டும் இருக்கிறார். ஒரு வேளை, நமக்குள் இருக்கும் அந்த பகவானை தான் "ஸவிதா" என்று சொல்கிறதோ? அனைவருக்குள்ளும் இருக்கும் அந்த பகவான், அந்த சூரிய தேவனுக்குள்ளும் இருப்பாரே!! அந்த சூரிய தேவனுக்குள், நமக்குள், அந்தர்யாமியாக இருக்கும் அந்த நாராயணனை தான், வேத மாதா காயத்ரீ துதிக்கிறாளோ? 

சூரிய தேவனுக்கும் அந்தர்யாமியாக சூரிய நாராயணன் தானே இருக்கிறார். 

ஆத்ம நாராயணனை, சூரிய நாராயணனை தான் காயத்ரீ துதிக்கிறாளோ?

குரு

நீ சொல்வது சரியாக தான் தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?

சிஷ்யன்

என் சந்தேகம் தீர்ந்தது.


சிஷ்யன் குருவின் சரணத்தில் விழுந்து நமஸ்கரித்தான்.

Saturday 5 September 2020

பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும். தெரிந்து கொள்வோமே.

 ஒரு தகப்பன், தன் 2 வயது பிள்ளை தட்டு நிறைய உணவை வைத்து ஆசையாக சாப்பிடுவதை பார்க்கிறான்.




ஆனால், அந்த பிள்ளை 'தகப்பன் சாப்பிட்டானா?' என்று கூட நினைக்காமல் முழு உணவையையும் சாப்பிட்டு விட்டது. 


"தன் பிள்ளை தனக்கு கொடுப்பானா?" என்று தகப்பன் உண்மையில் எதிர்பார்க்கவும் இல்லை. 


உண்மையில், தகப்பனுக்கு பிள்ளை சாப்பிட்டதை பார்த்தே திருப்தி ஏற்பட்டு விட்டது.


ஆனால், 

கடைசி சாதத்தை வாயில போட்டு கொண்ட பாசமுள்ள அந்த 2 வயது பிள்ளைக்கு, 'தன் தகப்பனுக்கு கொடுக்கவில்லையே!!' என்று திடீரென்று நினைவு வர, 

உடனே ஆசையோடு தன் வாயில் இருந்த எச்சில் உணவையே, 

தன் இடது கையால் எடுத்து, தகப்பனை பார்த்து, 

"அப்பா... நீயும் சாப்பிடு" என்று பாசத்தால் கொடுக்க, 

திருப்தி மட்டுமே கொண்டிருந்த இந்த தகப்பன், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று, எச்சில் என்று கூட பார்க்காமல், தன் குழந்தையின் பாசத்தில் உருகி, அதை ஏற்கிறான்.


அந்த பாசத்தை நாம் ஈஸ்வரனிடம் காட்டுவதே இந்த மந்திரம்.


'அம்ருதாபிதானம் அஸி' என்று கொஞ்சம் ஜலத்தை பருகி விட்டு, 




பிறகு, கையில் மிச்சமிருக்கும் கொஞ்சம் ஜலத்தை நம் எச்சில் கையால், கட்டை விரல் வழியாக விட்டு கொண்டே இந்த மந்திரத்தை சொல்வது வழக்கம்.


இதன் அர்த்தம் இதோ:

அங்குஷ்டமாத்ர:  புருஷ அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித: !

ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் !!


உலகையே படைத்து, அதையே தனக்கு உணவாக உண்ணும் அளவுக்கு சக்தி கொண்ட அந்த பரமாத்மாவான புருஷன் (புருஷ:), கட்டைவிரல் அளவுக்கு (அங்குஷ்டமாத்ர:) எனக்காக ரூபம் எடுத்து, கட்டைவிரல் அளவுக்கு வியாபித்து கொண்டு (அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித:) நான் கொடுக்கும் இந்த துளி ஜலத்தை, பாசத்தோடு ஏற்க வேண்டும். 


அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக (ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:) இருக்கும் பரமாத்மா (ஈச:), எங்கும் வியாபித்து இருப்பவர், (விச்வபுக்) ஒரு தகப்பனை போல, அறியாபிள்ளையாகவும், பாசத்தோடும் இருக்கும் என்னை கண்டு ப்ரீதி அடையட்டும் (ப்ரீணாதி).


ஒரு இலை நிறைய சோற்றை தெய்வ சிந்தனை இல்லாமல், நம் வயிற்றுக்கே போட்டு கொண்டாலும், 

கொஞ்சம் பாசத்தோடு நம்மை படைத்த பரமாத்மாவுக்கு நம் எச்சில் கையால் கொடுத்தாலும், ஒரு தகப்பனை போல ஆனந்தம் அடைகிறார் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.


'பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும்.

Wednesday 3 July 2019

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்". அதையும் விட சிறந்தது எது? தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்".


காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது "அஷ்டாக்ஷர மந்திரம்".
"காயத்ரி மந்திரத்தையும்" விட "அஷ்டாக்ஷர மந்திரம்" ஏன் சிறந்தது?
அஷ்டாக்ஷர மந்திரத்தின் விளக்கம் இதோ

கம்சன் கூட "காயத்ரி மந்திரத்தை" ஜபித்தான்.
ராவணனுக்கு புலஸ்திய மகரிஷியே "காயத்ரி மந்திரத்தை" உபதேசம் செய்து, வேத அத்யயனமும் செய்து வைத்தார். தினசரி அக்னி ஹோத்ரம் செய்து வந்தான் ராவணன். ப்ராம்மணன்.
ஹிரண்யகசிபுவும் கஷ்யப ரிஷியிடம் "காயத்ரி மந்திர" உபதேசம் பெற்றவன் தான்.


காயத்ரி மந்திரம் ஜெபித்து விஸ்வாமித்ரர் - "ரிஷி" என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அதே மந்திரம் அனைவரையும் காப்பாற்றவில்லை.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் -  சிசுபாலன், கம்சன், ஹிரண்யகசிபு, ராவணன் அனைவரும் அழிந்து போனார்கள்.
கர்வம் உள்ளவர்களை கை விட்டு விடும் காயத்ரி மந்திரம்.

நாராயண மந்திரம், தீயவனாக இருந்து ஜபித்தாலும், நரர்களான நமக்கு பரமாத்மாவான நாராயணனை துதிப்பதால், நம் தீய குணத்தையும் சரி செய்து, நம் பக்தியை உயர்த்தி, மோக்ஷம் வரை கிடைக்க செய்திடும்.

விளையாட்டாக, தன் மகனை "நாராயணா" என்று மரண தருவாயில் கூப்பிட்ட அஜாமிலன் போன்றவர்கள் கூட, மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள்.
திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.

ஆனால் காயத்ரியை ஜெபித்து 'எல்லோரும்' கறையேறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலக தர்மத்துக்காக கொடுக்கப்பட்டது காயத்ரி மந்திரம். காப்பாற்றினாலும் காப்பாற்றும். ராவணன் போன்றவர்கள் ஜபித்தால்,  கைவிட்டாலும் கைவிடும்.
பகவானால் கொடுக்கப்பட்டது திருவஷ்டாக்ஷர மந்திரம். இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும். மந்திரத்தை ஜபித்தவனை கை விடவே விடாது.


காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால், காயத்ரி தேவி பலன் கொடுக்கிறாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கு சாஷாத் பரமாத்மா நாராயணனே பலன் தருகிறார் என்பதால், இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும்.
"நமே பக்த ப்ரநஸ்யதி" என்று
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று பகவானே வாக்கு கொடுக்கிறார்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
அனைவரையும் காப்பாற்றக்கூடியது.

மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது. நிச்சயமாக மோக்ஷம் வரை தர கூடியது என்று கண்டு கொண்ட ஆழ்வார்கள்,
"கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆனந்தபட்டதில் ஆச்சர்யம் இல்லையே.
4000 திவ்ய ப்ரபந்தமும் நாராயணனையே துதி செய்கிறது.

அதே நாராயணன் தான் நமக்காக கோவிலில் அர்ச்ச அவதாரம் செய்து, நமக்காக காலம் காலமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சிலையாக அர்ச்ச அவதாரமாக நாராயணன் கோவிலில் இருக்கிறார்.. அவர் பேசுவாரா?
கல்லாக காட்சி கொடுக்கும் அவரிடம் எப்படி பக்தி செய்வது?
என்று நாம் நினைப்போம் என்று தானோ, ஆழ்வார்கள் பூமியில் அவதரித்து, கோவிலில் இருக்கும் அதே அர்ச்ச அவதார பெருமாளிடம் பக்தி செய்து காட்டி, திவ்ய பிரபந்தங்களை பாடியும், பேசியும் பக்தி செய்து, நமக்கும் அந்த திவ்ய பிரபந்தங்களை கொடுத்து விட்டனர்.






'சாஷாத் நாராயணன், அர்ச்ச அவதாரமாக உள்ளார்' என்று அறிந்தும், மோக்ஷத்துக்கு ஆசைப்படும் ஆழ்வார்கள் பக்தி செய்யாமலா இருப்பார்கள்.

அவர்கள் அர்ச்ச அவதாரமாக இருக்கும் நாராயணனிடம் பேசி, உரையாடியதை 4000 திவ்ய ப்ரபந்தமும் நமக்கு காட்டுகிறதே...

கோவிலுக்கு, சென்று பெருமாள் முன் நிற்கும் போது, ஏதாவது சொல்லி பேச வேண்டும் என்று பக்தியுள்ள நமக்கு தோன்றும்.
ஒரு பாசுரம் மனப்பாடம் செய்து சொன்னாலும் மனதில் பக்தி துளிர்க்குமே...  ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

சிலர் பேசினாலும் ப்ரயோஜனமில்லாத பேச்சாக இருக்கும்.
பெருமாள் பேசாமல் இருந்தாலும், ப்ரயோஜனமாக இருக்கும்.

பெருமாள் சந்நிதி முன் பக்தன் நிற்கும் போது, பேசாமல் இருக்கிறார் என்று போல தோன்றினாலும், பெருமாள் நம்மிடம் பேசாமல் பேசுகிறார்.

நம் பக்தியை பொறுத்து, நாம் என்ன நினைத்து நிற்கிறோமோ, அதை செய்து கொடுக்கிறார் பெருமாள்.

பக்தன் பெருமாள் சன்னதியில் நின்று கண்ணீர் விடுகிறான். 'மனதில் உள்ள ஒரு குறையை, தெய்வம் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
அங்கு அர்ச்சகர் வேறு யாரையோ பார்த்து "கவலைப்படாதீர்கள்.. பெருமாள் உங்கள் குறையை தீர்ப்பார்" என்று சொல்கிறார்.

தன் குறையை பெருமாளிடம் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த பக்தனுக்கு, அர்ச்சகர் சொல்வது காதில் விழுகிறது.
தனக்கு ஏற்பட்ட குறைக்கு, அர்ச்சகர் மூலமாக பெருமாள் தான், தனக்கு பதில் சொல்கிறார் என்று பெரும் நிம்மதியை அடைகிறான் பக்தன்.


பக்தியின் முதல் படியில், பகவான் பேசும் முறை இது.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன்,
தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் யாரோ ஒருவனை போல வந்து "நீ திருப்பதி போ... " என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்து பக்தன் திருப்பதி செல்ல, அவன் குறைகள் தானாக தீருகிறது.

தன்னிடம் பெருமாள் பேச ஆசைப்படுகிறார், வழி காட்டுகிறார், காப்பாற்றுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பெருமாளே திவ்ய காட்சி கொடுத்து, பேச ஆரம்பிக்கிறார்.
"தான் இப்படி ஒரு திவ்யமான காட்சி கண்டோமே" என்று தனக்குள்ளேயே ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாள் பெருமாளிடம் பக்தி செய்து, பெருமாளை அடையவேண்டும் என்று திருப்பாவை இயற்றினாள். பெருமாளையே மணம் முடிக்க முடிவு செய்தாள்.
ஆண்டாளுக்கே பெருமாள் முதலில் கனவில் தான் காட்சி கொடுத்தார். இதை ஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் தான் கண்ட கனவை, கனவில் தன்னை பெருமாள் மணந்ததை சொல்கிறாள் ஆண்டாள்.

வாரணம் ஆயிரம் சூழ
வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதற்கு பின்பு தான் பெருமாள் உண்மையிலேயே வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார்.

தெய்வ கனவுகள் எதுவுமே வீணான கனவுகள் இல்லை.

வேண்டாத கன்னா பின்னா கனவுகள் தான் எப்போதும் வரும். அது தான் இயற்கையும் கூட.

திவ்ய கனவுகள் அபூர்வமாக தான் வரும்.
திவ்ய கனவுகள் தெய்வ அருளால் மட்டுமே காண்கிறோம்.

தெய்வ கனவுகள் நமக்கு ஏற்பட்டால் அதுவே பாக்கியம்.

தூங்குவதற்கு முன், தினமும் "நாராயணா.. நாராயணா.." என்று தெய்வ பக்தியுடன் (அன்புடன்) உண்மையாக பகவானை பிரார்த்தித்து, நமக்கும் திவ்ய காட்சிகள் கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தித்து பின் தூங்க செல்லலாம்.
நம் உண்மையான அன்புக்கு, பகவான் ஒரு நாள் அணுகிரஹம் செய்வார்.

பகவான் நமக்கு ஏதாவது ரகசியமாக ஏதாவது சொல்ல நினைத்தால், கனவு மூலம் தெரிவிப்பார்.
பெருமாள் நேராக வந்து சொல்லலாமே என்று கேட்கலாம். அவர் வருவதற்கு தயாராக இருந்தாலும், நம் நம்பிக்கை, பக்குவத்தின் நிலையை அறிந்து இருப்பதால், வராமல் இருக்கிறார்.

உலக ஆசைகளே இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகாத்மாக்களே, கிருஷ்ண தரிசனத்தை நேரில் பெற்ற பின், உன்மத்தமான நிலையை அடைந்து, உலக நினைவில்லாமல் இருந்தனர்.
அவர்களால் கூட தான் கண்ட திவ்ய காட்சியை ஜீரணித்துக்கொண்டு, உலகத்தோடு பழக முடியவில்லை.

கனவில் காட்சி தரும் பகவான், நேரில் வந்து நமக்கு காட்சி கொடுத்தால், நமக்கு உள்ள பக்குவ நிலையில் தாங்கி கொள்ள முடியாமல் உயிர் பிரிந்து விடும் இல்லை மனம் பேதலித்து விடும்.

நம் பக்தியை உயர்த்தி விட தான் பெருமாளுக்கு விருப்பமேயொழிய நம் உயிரை பறிப்பதில் விருப்பம் இல்லை.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பேச ஆரம்பித்த பெருமாள், ஆபத்தான காலங்களில், சமயத்திற்கு யாரோ போல வந்து உபகாரம் செய்து விட்டு மறைந்து விடுவார்.
துளசிதாஸ், நாம தேவர், சக்குபாய், பத்ராசல ராமதாசர் போன்ற பக்தர்கள் வாழ்வில் பாண்டுரங்கன் யாரோ போலவோ வந்து, சமயத்தில் சக்குபாய் போலவும் வந்து லீலைகள் செய்தார்.

தன்னிடம் பெருமாள் உறவாட ஆசைப்படுகிறார் என்று புரிந்து கொண்டு, மேலும் பெருமாளிடம் பக்தி செய்ய,
அர்ச்ச அவதாரமாகவே இருந்தாலும், பெருமாள் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் பேசினால், பேசுவது மட்டுமின்றி, அவர் கூப்பிட்டார் என்றதும், கல் சிலையாக இருந்து கொண்டே, எழுந்து கொண்டு அவருடன் கிளம்பி விட்டார் காஞ்சியில் என்று பார்க்கிறோம்.
யதோகத்காரி பெருமாள், திருமழிசை ஆழ்வார் கூப்பிட்டார் என்று கிளம்ப, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

நாராயணா என்று சொல்லும் அனைவருக்கும் மோக்ஷம்.
நாராயணா என்று சொல்லும் யாருமே நாசம் போவதில்லை.
நாராயணா என்று பக்தியுடன் சொல்ல சொல்ல, பகவான் நாராயணன் தன்னை வெளிக்காட்ட ஆசைப்படுகிறார். மறைமுகமாக தான் இருப்பதை உணர செய்து, பக்தியை (தன்னிடம் அன்பு) ஏற்படுத்தி, படிப்படியாக தன்னை வெளிக்காட்டுகிறார் பெருமாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.


ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.