Followers

Search Here...

Saturday 29 February 2020

செல்வம் யாருக்கு நிலைக்கிறது? செல்வத்தை எதற்காக நமக்கு இறைவன் கொடுக்கிறார்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? தெரிந்து கொள்வோமே....

தனபாலன் என்ற ஒருவன், வியாபாரம் செய்து கொண்டு இருந்தான்.

உலகத்தில் உள்ள கருமிகளை (கஞ்சன்) எல்லாம் கணக்கு எடுத்து வரிசைப்படுத்தினால், இவன் "முதலாவதாக" வருவானாம்.
உலக மகா கஞ்சன்..
தன் வியாபாரம் மூலம் நிறைய செல்வம் சேர்த்து வைத்து இருந்தான்.
ஆனால்,
தப்பித்தவறி கூட, சொப்பனத்தில் கூட, தானம் செய்து விட மாட்டான்.

யாருக்காவது, தன் கையால் ஏதாவது கொடுத்து விட்டதாக சொப்பனத்தில் கனவு கண்டால் கூட, மறுநாள் தன் மனைவியை கூப்பிட்டு 
"இன்று உபவாசம்..." என்று சொல்லிவிடுவானாம்.




அவன் மனைவி "இன்று ஏகாதசி இல்லையே!!.. நீங்கள் ஏன் இன்று உபவாசம் இருக்க வேண்டும்?"  என்று கேட்டால்,
"இல்லை.. நேற்று ஒருவர் இங்கு வந்து சாப்பிட்டு போய் விட்டார்... 
அதற்கான கணக்கு சரி செய்ய இன்று உபவாசம் இருக்க வேண்டும்" என்று சொல்வானாம்.

"எனக்கு தெரியாமல் இங்கு யாரும் சாப்பிட முடியாதே!!... நான் தானே இங்கு யார் வந்தாலும் சாப்பாடு போட்டு ஆக வேண்டும்..." என்று கேட்க,

"அடி போடி... நீதானே சாதம் போட்டாய்!!" என்று இவன் சொல்ல,

"நான் சத்தியமாக யாருக்கும் சாதம் போடவில்லையே" என்று இவள் சொல்ல,

"சொப்பனத்தில் சாதம் போட்டாயே!!" 
என்று சொல்லி, மறுநாள் முழுக்க ஜலம் கூட குடிக்காமல் உபவாசம் இருப்பானாம் இந்த தனபாலன்.

இப்படி 'கருத்தாக' குடும்பம் நடத்தி வந்தான் தனபாலன்.

சந்யாசிக்கு கூட வராத ஒரு விரக்தி,
லோபிகளுக்கு (கருமிகளுக்கு) வந்து விடுமாம்.
சந்யாசிகள் கூட, சிற்சில சமயம் "இன்னிக்கு அடை பலகாரம் செய்கிறாயா?" என்று கேட்டு விடுவார்களாம்.
ஆனால்,
இந்த லோபிகள், தப்பித்தவறி  கூட, தன் சொந்த வீட்டில் "டிபன் செய்கிறாயா?" என்று கேட்டுவிட மாட்டார்களாம்.

லோபிகளுக்கு தன் வீட்டில் மட்டும் இந்த விரக்தி இருக்குமாம்.. அடுத்தவன் வீட்டில் மூக்கு பிடிக்க சாப்பிடுவார்களாம்.

தன் வீட்டில், "வெறும் ரசம் சாதம் போதுமே" என்று இருப்பார்களாம்.

"துணியை சலவைகாரனிடம் கொடுக்கிறாயே!!.. காசு கொடுத்து சோப் வாங்குகிறாயே?... 
நமக்கு கை எதற்கு இருக்கிறது?.. கசக்கி கட்டி கொள்ளலாமே!" என்று இந்த கருமி சொல்வானாம்.

இப்படி கையாலேயே கசக்கி கட்டும் இந்த கருமிகளின் வேஷ்டி அழுக்கு சேர்ந்து காவி போல தெரியுமாம்...

சந்நியாசி உடுத்தும் காவி உடையும்,
கருமி உடுத்தும் காவி ஏறிய துணியும்
பார்ப்பதற்கு ஒன்று போல தெரியுமாம்.

ஞானத்தால் சந்யாசிகளுக்கு ஏற்படும் விரக்தி,
கருமிகளுக்கு சுலபமாக ஏற்பட்டு விடுமாம்.

கருமிகள் தாங்கள் சேர்க்கும் 'பொருளை' கொண்டு

  • 'அறமும்' (தர்மம்) செய்வதில்லை...
  • அறம் மீறாத 'இன்பமும்' அனுபவிப்பதில்லை...

ஒரு சமயம் இவன் வியாபாரம் நஷ்டமாகி போக, வியாபாரத்துக்காக வாங்கிய கடனை கொடுக்க மனமில்லாமல், ஏமாற்ற நினைத்தான்.


தன் சொத்தை காப்பாற்ற தன் மனைவி, மக்கள், உறவுக்காரர்கள் பெயரில் சொத்தை பிரித்து கொடுத்து விட்டான்.

கடன் கொடுத்தவர்கள், இவனிடம் சொத்து இல்லாமல் இருக்க, அடித்து நொறுக்கி விட்டார்கள்..

கருமித்தனமாக இவனுடன் வாழ்ந்த இவன் மனைவியும், மக்களும் தன் இஷ்டத்துக்கு செலவு செய்தனர்... இவனை உதாசீனப்படுத்தினர்..

உறவுக்காரர்கள், இந்த கருமியிடம் மீண்டும் முகத்தை காட்டவே பிரியப்படவில்லை.

கருமியாக வாழ்ந்த தனபாலன், ஏழை ஆனான். மதிப்பு இழந்து போனான்.

செல்வம் அனைவருக்குமே கிடைக்கிறது...
ஆனால் நிலைப்பதில்லை...

சிலருக்கு செல்வம் இருக்கும்... சம்பாதித்தவனுக்கு நோய் வந்து விடும் அல்லது உயிர் போய் விடும்..
அல்லது
இவன் இருப்பான்.. கண் எதிரே சம்பாதித்த செல்வங்கள் தொலைந்து விடும்...

இப்படிப்பட்ட 'கருமிகளிடம்' மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்க  விரும்பமாட்டாள்...
கோடி பணம் சேர்த்தாலும், பசித்தால் பணத்தை வாயில் போட்டு கொள்ள முடியுமா?...






பணம் முக்கியம் தான். ஆனால், பணத்தை (பொருள்) நமக்கு பகவான் எதற்காக கிடைக்க செய்கிறார்? 
என்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

"தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்" என்று நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்படுகிறது...
இதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.
வள்ளுவர் "அறம் பொருள் இன்பம்" என்ற 3 புருஷார்த்தங்களை பற்றி மட்டும் சொல்வதற்கே 1330 குறள் எழுதினார்..
'மோக்ஷம் என்ற வீடு, அறம் செய்வதால் கிடைக்கும்' என்று
"அறம் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை"
என்று மோக்ஷத்தை பற்றி சொல்கிறார்.

"அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" 

'எழுத்துக்களில் அ என்ற முதல் எழுத்தாகவும் நானே இருக்கிறேன்'
என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
ஆதிமூலமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்று வணங்கிவிட்டு,
அறம் பொருள் இன்பத்தை பற்றி பாடல் இயற்றுகிறார், வள்ளுவர்.

உலகில் "பொருள்" தானே முக்கியமாக இருக்கிறது!!

பொருளுக்கு(பணத்திற்கு) 'முதல் இடம்' கொடுத்து, 
"பொருள், இன்பம், அறம்" என்று மாற்றி சொல்லி இருக்கலாமே?
மாறாக,
"அறம் பொருள் இன்பம்" என்று பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' ஏன் வைத்து சொன்னார்கள்? 

இதற்கு காரணம் உண்டு.

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • 'அறம்' செய்! (தர்மம் செய்)..

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • தர்மத்துக்கு விரோதமில்லாத 'இன்பத்துக்கும்' செலவு செய்து கொள்!

என்று காட்டவே, பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

நம்மிடம் பொருள் இருந்தால், "தர்மத்தை செய்யலாம்!"
நம்மிடம் பொருள் இருந்தால்,
"தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தையும் அனுபவிக்கலாம்!" 
இதன் காரணத்தால்,
பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

"அறம், பொருள், இன்பம்" என்று இந்த வரிசையில் ஏன் சொன்னார்கள்? என்பதும் இப்போது நமக்கு புரிந்து இருக்கும்.

பொருளை வைத்து 'அறமும் செய்யலாம், இன்பத்தையும் அனுபவிக்கலாம்'

இந்த இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

பொருளை கொண்டு, எதில் அதிகமாக செலவு செய்ய வேண்டும்? 
அறத்துக்கா? இன்பத்துக்கா?




"அறத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்பதற்காக, அறத்தை முதலில் வைத்தார்கள்.

'அறம், பொருள், இன்பம்' என்று சொல்லும் போதே,
உனக்கு கிடைக்கும் பொருளை கொண்டு, முதலில் அறம் (தர்மம்) செய்!
மிச்சப்பட்ட பொருளை கொண்டு, தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தை அனுபவித்து கொள்! 
என்கிறது..

இப்படி நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு ஒரு பங்கையாவது அறம் (தர்மம்) செய்து, மீதியை அறம் மீறாத இன்பத்துக்கு (உணவு, உடை, இடம்...) செலவு செய்தோமானால், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்..

லக்ஷ்மியின் கணவரான நாராயணனை நம் இஷ்ட தெய்வமாக கொண்டு, திருப்பதி, ஸ்ரீ ரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் நம்மால் முடிந்த பொருள் சேவை செய்தால், கோவில் திருப்பணிகள் செய்தால், லக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்...

ஹிந்து தர்மத்தில் "ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு" என்று தெரிகிறது...

ஹிந்துவாக பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும்.
பாரத மண்ணில் பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும். 

போலி மதங்களில் வீழாமல் இருக்க, ஹிந்து தர்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்... 
அனைவரையும் அறிவு பெற செய்து, ஹிந்தவாக ஆக்க வேண்டும்.


வாழ்க ஹிந்து தர்மம்...

Thursday 27 February 2020

'க்வா க்வா' என்று ஏன் குழந்தை அழுகிறது? நாம் ஏன் சுகத்தையே தேடுகிறோம்? ... இதற்கு காரணம் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

"சுகமாக இருக்க வேண்டும்" என்று தான், நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம்.
துக்கமாகவே இருக்க வேண்டும்!! என்று நம்மில் ஒருவர் கூட ஆசைப்படுவதில்லையே.... ஏன்?
ஏன் நம் முயற்சிகள் அனைத்தும், சுகத்தை நோக்கியே உள்ளது?
நாம் ஏன் சுகத்தையே தேடுகிறோம்? 




இது போன்ற நுட்பமான கேள்விக்கும் "ஹிந்து தர்மம் பதில் சொல்கிறது".
ஹிந்து தர்மத்தில் சொல்லாத விஷயங்களே கிடையாது..

இங்கிருந்த சில கருத்துக்களை தான், போலி மதங்கள் எடுத்து கொண்டு, "தான் ஏதோ புதிதாக ஏதோ ஒரு கருத்தை கண்டுபிடித்தது போல மக்களை ஏமாற்றுகிறது"!!

ஒரு ஹிந்துவுக்கு, போலி மதங்களை கண்டு ஏமாறுவதை காட்டிலும், முட்டாள் தனம் வேறு இருக்க முடியுமா?...

போலி மதங்களில் வீழாமல், ஹிந்துவாக வாழ ஆசைப்பட்டால் கூட, அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவி செய்யும்..
மேலும் தொடருங்கள்...

தஸ்ய ப்ரியமேவ சிர:
மோதோ தக்ஷிண பக்ஷ:
ப்ரமோத உத்தர பக்ஷ:
ஆனந்த 'ஆத்மா'
என்று "தைத்ரிய உபநிஷத்" சொல்கிறது.

இங்கு, 'பரமாத்மா எப்படி இருக்கிறார்?' என்று வேதம் சொல்கிறது.

பரமாத்மா, 'ஆனந்த மூர்த்தியாகவே எப்பொழுதும் இருக்கிறார்'. 
பரமாத்மா, 'தலை முதல் பாதம் வரை அன்பு நிறைந்தவராகவே இருக்கிறார்.' 
என்று வேதம் நமக்கு சொல்கிறது.

"Supreme God (Narayana) by his True nature is always in state of happiness and lovable"

ஆனந்த மூர்த்தியான, பரமாத்மாவின் அம்சம் தான் "நாம்" (ஜீவாத்மா).
"நாமும், பரமாத்மா நாராயணனும்" இருவருமே "ஆனந்த மூர்த்தி" தான்.

"நாமும், பரமாத்மாவை போல ஆனந்த மூர்த்தி தான்" என்பதை பல முறை மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.

பரமாத்மா பரவாசுதேவனின் அம்சம் தான்  தான் "நாம்", என்று வேதம் சொல்கிறது.

"உலகில் பிறந்து இருக்கும்" போது ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்ந்து இருந்தாலும் பிரிந்தது போல காட்டிக்கொள்கிறது.
பிரிந்து இருக்கும் நிலையில், "த்வைதமாக" தெரிகிறது என்று வேதம் சொல்கிறது.

"மோக்ஷம்" அடைந்த பின், ஜீவாத்மா பரமாத்மாவோடு கலந்து விடுவதால், இரண்டுமே ஒன்று தான் ("த்வைதம்) என்று வேதம் சொல்கிறது.

இரண்டையும் சொல்வதே "விஷிஸ்டாத்வைதம்"மேலும் அறிந்து கொள்ள  இங்கே படிக்கவும்.   


"கடல்" இருப்பதை நாம் காண்கிறோம்.
அதன் ஓரங்களில் கடல் "அலைகள்" உருவாகி மறைகிறது.

"அலைகள்" போன்று உருவாகி அழிந்து, மீண்டும் உருவாகி கொண்டே இருப்பது "ஜீவாத்மா".
'கடலை' போன்று எப்பொழுதுமே இருப்பவர் "பரமாத்மா"

"அலை" உருவாவதற்கு காரணம் "கடல்".
அது போல,
"ஜீவாத்மா" பிறப்பதற்கு காரணம் "பரமாத்மா".




கடல் இருப்பதற்கு, அலைகள் காரணம் இல்லை.
அலைகள் இல்லாமல்,  கடல் இருக்க முடியும்.
கடல் சுதந்திரமானது.
அலைகள் கடலுக்கு கட்டுப்பட்டது.
அது போல,
பரமாத்மா இருப்பதற்கு, ஜீவாத்மா காரணம் இல்லை.
ஜீவாத்மாக்கள் இல்லாமல், பரமாத்மா இருக்க முடியும்.
பரமாத்மா சுதந்திரமானவர்.
ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டது.


அலைகள் ஒடுங்கிய நிலையில், கடலும் அலையும் உண்மையில் ஒன்று தான் (அத்வைதம்).
கடல் அலைகளை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.
அது போல,
ஜீவாத்மா ஒடுங்கிய நிலையில் (ஞானம் பெற்ற/மோக்ஷ நிலை), பரமாத்மாவும் ஜீவாத்மாவும்  உண்மையில் ஒன்று தான் (அத்வைதம்).
பரமாத்மா, ஜீவாத்மாக்களை உருவாக்கி, த்வைதமாக காட்டுகிறது.

கடல் நினைத்தால் தான், அலைகள் அடங்க முடியும்.
அதுபோல,
பரமாத்மா நினைத்தால் தான், நாம் பிறவா நிலையை பெற முடியும்.

நாம் பக்தி செய்யாதவரை, கடல் போன்ற பரமாத்மா, நம்மை மீண்டும் மீண்டும் அலைகளை போல பிறக்க செய்கிறார். 

பரமாத்மா, தன்  அம்சமாக ஜீவாத்மாக்களை தானே ஸ்ருஷ்டி செய்தார்.

பரமாத்மா, அற்புதமான உலகங்களை படைத்து,
ஜீவாத்மாவுக்கு அதில் பஞ்ச பூதங்களால் உடம்பை கொடுத்து,
தன் உலக ஸ்ருஷ்டியை பார்த்து மயக்க செய்து,
தான் செய்த உலக சிருஷ்டியை அனுபவித்தால் சுகமும், கூடவே துக்கமும் வரும்படியாக செய்து,
தன் அம்சமான இந்த ஜீவாத்மா,
"படைத்தவனிடம் சேர்ந்து விடுவோம்" என்று நினைக்கிறானோ? 
அல்லது
"தான் சுதந்திரன்!"
என்று சொல்லி கொண்டு,
தான் படைத்த, உலகத்தில் உள்ள, உயிர்களை பார்த்து, இடங்களை பார்த்து, செடி கொடிகைகளை பார்த்து மயங்கி, 
பாவ புண்ணியங்கள் செய்து, 
சுகம் துக்கம் அனுபவித்து, 
மீண்டும் மீண்டும் உடல் எடுத்து கொண்டு, 
தான் படைத்த உலகத்திலேயே வாழ போகிறானா? 
என்று பார்த்து கொண்டு இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.



பரமாத்மா சுதந்திரமானவர். நாம் சுதந்திரமானவர்கள் இல்லை.

நம்மை தனியாக பிரிக்கவும், தன்னிடம் சேர்த்து கொள்ளவும் சக்தி உள்ளவராக! இருக்கிறார் பரமாத்மா நாராயணன். 

பரமாத்மா, சுதந்திரமானவர்.
பரமாத்மா, அவதாரம் செய்ய நினைத்தால் சுதந்திரமாக அவதாரம் செய்கிறார். 
ஹனுமானை, சிரஞ்சீவியாக இரு!! என்று இவர் சொன்னால், சிரஞ்சீவியாகவே இருப்பார்.

"ஜடாயு என்ற பறவைக்கு மோக்ஷம் தருகிறேன்" என்று சொன்னால், ஜடாயு மோக்ஷம் சென்று விடுகிறார்.

'12 வருடம் முன் இறந்த பிள்ளையை மீண்டும் தர வேண்டும்' என்று சாந்தீபினி கேட்க,
யமனிடம் சென்ற, பிள்ளையை (ஜீவாத்மாவை) தானே உடல் கொடுத்து, மீட்டு கொடுத்து விட்டார்.

குழந்தையாக இருந்த போதே, "கம்சன் என்ன செய்வானோ!! என்று உனக்கு பயமாக இருந்தால், என்னை கோகுலத்தில் விடு" என்று பேசுகிறார்.




7 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன் சுண்டு விரலில் ஒரு மலையையே தூக்கி விட்டார்.

10 வயதில், சிறுவன் போல இருந்து கொண்டு, தன்னை கொல்ல வந்த குவலயா பீடம் என்ற மதம் பிடித்த யானையை சுழற்றி அடித்து, அதன் வாயில் இருந்த பெரிய தந்தத்தை வேரோடு பிடுங்கி விட்டார்.
யமனே பயந்து நடுங்கும் ராவணன் போன்ற ராக்ஷசனை, மகா பலம் கொண்ட ராக்ஷச கூட்டத்தை, ஒரு கவசம் கூட அணியாமல், குரங்கு படைகளை வைத்து கொண்டு, ராக்ஷச படையை நிர்மூலமாக்கி, ராவணன் 10 தலையையும் கொய்து விட்டு,
அவன் சொத்தும் வேண்டாம், நகரமும் வேண்டாம்! என்று அப்படியே ராவணன் தம்பி விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.

சிறுவன் எப்படி மலையை தூக்க முடியும்?
குழந்தை எப்படி பேசும்? 
பிற நாட்டையே கைப்பற்றியும் அந்த நாட்டின் செல்வத்தின் மீது ஆசை இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
குரங்கை ராணுவத்தில் வைத்து கொண்டு ஜெயிக்க முடியுமா?
இன்னொருவரை எப்படி சிரஞ்சீவியாக்க முடியும்?
பரமாத்மா, மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக தன் இஷ்டத்துக்கு செயல்படும் சக்தி உள்ளவர்.


நம் (ஜீவாத்மா) நிலைமை நமக்கு நன்றாக தெரியும். 
நம் பிறப்பே நம் கையில் இல்லை. 
இதிலேயே நாம் சுதந்திரமானவர்கள் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

என்னென்ன முயற்சி செய்தாலும், நிரந்தரமான சுகத்தை அடையவே முடியவில்லை.

என்ன தான் செல்வம் சேர்த்தாலும், முதுமை நோய் வந்து பிறகு மீண்டும் துக்கம் வந்து விடுகிறது.

மரணம் நமக்கு தேவையான நேரத்தில் வர வைக்க முடியாது. 
தற்கொலை செய்து கொண்டாலும், தற்கொலை செய்து கொண்ட பாவத்துக்கு மேலும் நோய் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறக்க நேரும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.

நாம் (ஜீவாத்மா) மனித அவதாரம் எடுத்தாலும், சுதந்திரமாக வாழ முடியாது. 

நம்மை படைத்தவர்  பரமாத்மா வாசுதேவன்.
அவரின் தயவு இல்லாமல் நிரந்தரமான சுகத்தை பெறவே முடியாது.

இப்படி சுதந்திரம் இல்லாத நாம், பரமாத்மாவிடம் சேர்ந்து இருந்த போது, பரமாத்மாவின் ஆனந்தத்தை நாமும் அனுபவித்து கொண்டே இருந்தோம் என்கிறது வேதம்.

பரமாத்மா லீலை (விளையாட்டு) காரணமாக, நம்மை அலை (ஜீவாத்மா) போன்று பிரித்து காட்டி, உலகங்களை ஸ்ருஷ்டி செய்து, உலகில் பிறக்க செய்து விட்டார்.

இதுநாள் வரை பரமாத்மாவிடமே இருந்த இந்த ஜீவாத்மா, தான் அனுபவித்த ஆனந்தத்தை இழந்ததும், தான் தொலைத்த அந்த அனுபவத்தை மீண்டும் பெறுவதற்கு பெரு முயற்சி செய்கிறது.

இந்த சோகமே, குழந்தை அழுகைக்கு காரணம்.
குழந்தை பிறந்த உடனேயே "க்வா க்வா க்வா..." என்று கதறுகிறது.

'அது பாலுக்கு அழுகிறது' என்று தாய் நினைக்கிறாள்.

"க்வா" என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு  "எங்கே?" என்று அர்த்தம்.
உண்மையில்,
குழந்தை "தான் அனுபவித்த அந்த ஆனந்தம் எங்கே எங்கே எங்கே...?" என்று தான் அழுகிறது என்று காட்டுகிறது நம் வேதம்.

தாய் பால் கொடுக்க, அதில் ஒரு திருப்தி ஏற்பட, சமாதானம் அடைகிறது.
அந்த சுகம் சிறிது நேரத்தில் மறைந்ததும், மீண்டும் துக்கம் ஏற்பட, மீண்டும் அழுகிறது.
இந்த அழுகை மயானம் வரை தொடர்கிறது.

"தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது?" என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன்,


தான் தொலைத்துவிட்ட ஆனந்தம் எது? என்று அறிந்து கொள்ள முடியாத ஜீவன்,
இனிப்பு சாப்பிட்டால் கிடைக்கும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.

மனித உறவுகளால் ஏற்படும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.
தன் உடலுக்கு கொள்ளும் சுகத்தை "ஆனந்தம்" என்று நினைக்கிறான்.

இப்படி உலகில் கிடைக்கும் சுகங்களை அனுபவித்து "இது தான் தான் விரும்பிய ஆனந்தமோ?!" என்று பார்க்கிறான்.

கிடைக்கும் சுகங்கள் யாவுமே சிறிது காலம் வரை தான் அவனுக்கு ஆனந்தம் தருவதை, அனுபவத்தில் காண்கிறான்.
ஒரு நாள் தான் அனுபவித்த சுகம், பிறகு துக்கமாக மாறுவதை காண்கிறான்.
ஒரு நாள் வெற்றி என்ற சுகத்தை அனுபவித்து, பிறகு அவனே தோல்வியை காண்கிறான்.
ஒரு நாள் மரியாதையுடன் வாழ்ந்து, பிறகு அவனே அவமானத்தை காண்கிறான்.
இளமை என்ற சுகத்தை அனுபவித்து, ஒருநாள் முதுமை என்ற கொடுமையை அனுபவிக்கிறான்.

இப்படி வாழ்நாள் முழுவதும், "தான் தொலைத்த ஆனந்தம் எங்கே?" என்று உலகில் தேடி தேடி, கடைசியில்,
அவன் தொலைத்த ஆனந்தத்தை கண்டுபிடிக்காமலேயே இறந்து விடுகிறான். 
இதனால், மீண்டும் பிறக்கிறான்.
சம்சாரத்திலேயே மீண்டும் மீண்டும் விழுகிறான்.




'பரமாத்மாவிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். 
ஆனந்த மூர்த்தியான பரமாத்மாவோடு இருந்த பொழுது, தான் அனுபவித்த ஆனந்தமே நாம் தேடும் உண்மையான ஆனந்தம்!!'
என்று அறிந்து கொள்ளும் ஜீவாத்மா, பரமாத்மாவை பற்றி சிந்திக்க தொடங்குகிறது.

பரமாத்மா நாராயணனை பிடித்து கொள்ளும் ஜீவாத்மாக்கள், தான் ஆசைப்பட்ட ஆனந்தம் எங்கே உள்ளது? என்று அறிந்து கொள்கிறார்கள். அவர்களே மகாத்மாக்கள்!
அவர்களே ஞானிகள்!
அவர்களே சாதுக்கள்!

நாராயணனிடம் பக்தி செய்தவர்கள்,
அவர் அவதாரமான ராம, கிருஷ்ண அவதாரங்களில் பக்தி செய்தவர்கள், நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை அடைந்து விட்ட திருப்தியை பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட மகான்கள், எப்பொழுதுமே தன் வரையில் திருப்தியாகவும், ஆனந்தமாகவுமே எப்பொழுதும் இருக்கிறார்கள்.

நாமும், ராம பக்தி, கிருஷ்ணா பக்தி செய்வோம்.
நாம் தேடும் உண்மையான ஆனந்தத்தை இதே வாழ்நாளில் பெற்று விடுவோம்.

வாழ்க ஹிந்து தர்மம்...

Sunday 23 February 2020

64 கலைகள் என்னென்ன? 64 கலைகளும் அறிந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்... தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்து சமவெளி நாகரீகம் பற்றி காலத்தை ஒட்டி பார்க்கலாமே! துவாரகை அழியப்போகிறது என்றதும், யாதவர்கள் (yadava) உலகமெங்கும் பிரிந்து சென்றார்கள். yadava என்ற சொல்லும், yehuda என்ற சொல்லும் ஒரே போன்று ஒலிப்பதை மூடனும் புரிந்து கொள்ளலாமே! 3000 வருடத்திற்கு பிறகு அடையாளப்படுத்தப்படும் எஹூதியர்களை (yehuda) பற்றி ஹிந்துக்கள் அறிய வேண்டாமா?

ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வஜ்ஞன் (அனைத்தும் தெரிந்தவர்) என்று போற்றப்படுகிறார். 64 கலைகளும் அறிந்தவர்.
ஸ்ரீ கிருஷ்ணர் போன்று சுறுசுறுப்பான, பார்க்கவும் அழகான, எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பழகும், அறிவு உள்ள தெய்வம் உலகில் இல்லை.




பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீ கிருஷ்ணராக மனித அவதாரம் செய்தும், தெய்வ சக்தியுடனேயே இருந்ததால், இவர் சரித்திரம் அனைவருக்கும் ஈர்ப்பை தருகிறது.

குழந்தை முதல் ஞானி வரை இவரை நேசிப்பவர்கள் உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணர் செய்த பகவத் கீதை, உத்தவ கீதை போன்ற உபதேசங்கள் படித்தால், இவருக்கு என்னவெல்லாம் தெரியுமோ என்ற கேள்வி எழும். மகா புத்திசாலி என்று புரியும்.
இஸ்கான் போன்ற ஸ்ரீகிருஷ்ணனின் நாமத்தை பரப்பும் அமைப்புகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் மகத்துவம் புரிந்து வெளிநாட்டவர்கள் லட்சக்கணக்கில் தங்களை சேர்த்துக்கொள்கின்றனர்.

எங்கேயோ பிறந்த இவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர், சாக்ஷாத் "நாராயணன்" என்று புரிகிறது.

இந்திய தேசத்தில் இருக்கும் நாம், பரவாசுதேவன் நாராயணன் மீது பக்தி (அன்பு) செலுத்த சிரமப்பட கூட வாய்ப்பு இருக்கலாம்.
பிரகலாதன் போன்ற ஞானிகள் மட்டுமே, பரவாசுதேவன் நாராயணன் மீது பக்தி (அன்பு) செலுத்த முடிந்தது.

ஆனால், அந்த பரவாசுதேவன் நாராயணன், செய்த ஸ்ரீ கிருஷ்ணஅவதாரத்தில் பக்தி (அன்பு) செலுத்துவது மிக எளிது.

ஸ்ரீ கிருஷ்ணர், ஸர்வஜ்ஞன் (அனைத்தும் தெரிந்தவர்) என்று போற்றப்படுகிறார்.
உங்கள் தெய்வத்திற்கு  என்னென்ன தெரியும்? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா!
இதோ உங்கள் தெய்வம் ஸ்ரீகிருஷ்ணர்!! 
நீங்கள் கர்வப்பட்டுக்கொள்ள...

ஸ்ரீ கிருஷ்ணருக்கு
  • 4 வேதங்களும்,

  1.      *ரிக்
  2.      *யஜுர்
  3.      *ஸாம
  4.      *அதர்வண

  • உபநிஷத்துக்களும்
  • 4 உபவேதங்களும்,

  1.      *ஆயுர்வேதம் (medicine)
  2.      *ஸ்தாபத்யம் (engineering)
  3.      *காந்தர்வ வேதம் (music)
  4.      *தனுர் வேதம்(Army/weaponry)

  • 6 சாஸ்திரங்களும்,

  1.      *சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  2.      *கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life  events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  3.      *வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  4.      *நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  5.      *சந்தஸ் (expert in poetic metres)
  6.      *ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)

  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம் (Ability to play, speak and write poetical literature)
  • நாடகம் ((Ability to play, speak and write Drama)
  • அலங்காரம் (Knowledge about decoration),
  • 8 வேதாந்த ஸித்தாந்தங்களும்

  1.      *யோகம் (expert in meditation, contemplation and liberation)
  2.      *ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  3.      *நியாயம் (Expert in exploring sources of knowledge)
  4.      *சௌகதம்
  5.      *ஆர்ஹதம்
  6.      *மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  7.      *பாசுபதம்
  8.      *பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)




  • 64 கலைகளும்,
உங்கள் தெய்வம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியும்.

கலைகள் பல.
ஓவியம் ஒரு கலை.
எந்த கலையிலும் அழகும், இனிமையும் இருக்க வேண்டும்.
சிற்ப கலையில் செதுக்கப்படும் சிலைகள் திறமை கொண்டவன் செதுக்கி இருந்தால், அந்த சிலையில் ஒரு அழகு இருக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு 64 கலைகள் தெரியும்.  அவை என்னென்ன ?

1. இசை - singing 72 different raga and 100s of janya raga. 72 வித ராகங்கள் மேலும் 1நூற்றுக்கும் அதிகமான ஜன்ய ராகங்கள் பாடும், இசைக்கும் திறன்.
2. வாத்யம் - playing on 18 different musical instruments. 18 விதமான வாத்தியங்கள் இசைக்கும் திறன்.
3. ந்ருத்தம் - dancing using legs. கால்களை கொண்டு நடனம் செய்யும் திறன். காளிங்கன் என்ற பாம்பின் தலை மேல், யமுனையில் சாமர்த்தியமாக குதித்து ஆடும் திறன்.

4. நாட்டியம் - theatricals acting using hands, face, body. நாட்டிய கலையில் திறன்.
5. ஆலேக்யம் - 5 different painting skills. ஓவியம் வரைவதில் திறன்.

6. விசேஷ கச்சேத்யம் - expert in cutting woods and dresses based on measurement and need. அளவு பார்த்து மரத்தையோ, துணிகளையோ வேலைக்கேற்ற படி துண்டிப்பது.
7. தண்டுல குஸுமபலி விகாரா - drawing from rice and flowers. அரிசியை கொண்டும், பூவை கொண்டும் கோலங்கள் போடுவது

8. புஷ்பா ஸ்தரணம் - making different structures using different forms of flowers. பல வண்ண மலர்களை கொண்டு , பல மண்டபங்களை அமைப்பது.
9. தசன வஸனாங்கராகா - applying preparations for cleansing the face, nail, teeth. Also expert in dyeing for cloths. முகம், பல், நகம் போன்றவற்றுக்கு அலங்காரம், சாயம் பூசி விடுவதும். துணிகளுக்கு சாயம் தோய்ப்பதும்.

10. மணி பூமிகாகர்ம - expert in making marble buildings. பளிங்கு மேடை அமைப்பது.

11. சயன ரசனம் - preparing different types of  bed, cushions. வித விதமான படுக்கைகளும், தலையணை, திண்டுகள், பாத பீடங்கள் தயார் செய்வது.
12. உதக வாத்யம் உதககாத - playing on music in water. ஜலதரங்கம் வாத்யம் வாசிப்பது.

13. சித்ர யோகா - practically applying an admixture of colors. பலவிதமான வண்ணங்களில் பலவிதமான சித்திரங்கள் எழுதுவது.

14. மால்யக் ரதன விகல்பா - designing a preparation of wreaths. பல விதமான முறையில், பல வித பூக்களை கொண்டு மாலை கட்டுவது.
15. சேகரா பீட யோஜனம் - practically setting the coronet on the head. பல விதமான கிரீடம், மகுடம், தொப்பி, தலைப்பாகை தயாரிப்பது.

16. நேபத்ய யோகா - practically dressing in the tiring room. நாடகத்திற்கு தேவையான திரை, விரிப்புகள் பல விதமான சித்திரங்களுடன் தயார் செய்வது, நடிகர்களுக்கு மேக்கப்/அலங்காரம் செய்து விடுவது.
17. கர்ணபத்ர பங்க - decorating the tragus of the ear. காது ஓரமாக அலங்காரம் செய்து விடுவது.
18. ஸுகந்த யுக்தி - practical application of aromatics. ஸென்ட், வாசனை தைலம், ஊதுபத்தி தயாரிப்பது.
19. பூஷண யோஜனம் - applying or setting ornament based on costume. அலங்காரத்திற்கு ஏற்ப பூஷணங்கள் பூட்டிவிடுவது.






20. இந்த்ர ஜாலம் - juggling/magic.  தண்ணீரில் நடப்பது, நெருப்பில் பிரவேசிப்பது, கண்ணை பிடுங்கி கையில் கொடுப்பது, நூலை ஆகாயத்தில் பறக்க விட்டு அதன் மேல் ஏறுவது உள்பட 96 விதமான மாயிகம் செய்வது.

21. கௌதுமார யோகா - art of disguise. பல விதமான வேஷம் போட்டு கொள்ளுதல்.
22. ஹஸ்தலா கவம் - art of sleight of hand. ஒரு மணி நேரத்தில் முடிப்பதை ஒரு நிமிடத்தில் முடிக்கும் திறன்.

23. விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா - preparing varieties of delicious food. போஜ்யம், பேயம், லேஹ்யம், பக்ஷ்யம் என்ற நான்கு வித உணவு தயார் செய்வதில் திறன்.

24. பானக ரஸ ராகா ஸவ யோஜனம் - practically preparing palatable drinks and tinging draughts with colors. தாகத்திற்கு ஏற்ப பல வித பானகங்கள் தயார் செய்வது.

25. ஸூசீவாயக கர்ம - art of needleworks and weaving. தையல் வேலையில் திறன்.

26. ஸூத்ர க்ரீடா - art of playing with thread. கயிறை வைத்து பல வித விளையாட்டு காட்டுவது.
27. வாத்ய க்ரியா - preparing musical instruments.  வீணை, மிருதங்கம் என்று பல வித இசை கருவிகள் தயார் செய்வது.

28. ப்ரஹேலிகா - art of making and solving riddles. புதிர் கேள்விகள் கேட்கவும், அதற்கு விடை அளிக்கும் திறன்.
29. ப்ரதிமாலா - art of winning any opponent in sports and art. விளையாட்டிலும், கலைகளிலும் எதிராளிகளை ஜெயிக்க கூடிய திறமை.

30. துர்வசன யோகா - art of practicing language difficult to be answered by others. பிறர் பேச முடியாதபடி, தோல்வி அடையும் படி வழக்கு பேசுவது.

31. புஸ்தக வாசனம் - art of reciting books even to an idiot. மட்டிப்பயல், மட சாம்பிராணி போல இருப்பவர்களுக்கு கூட பாடம் சொல்லிக் கொடுக்கும் திறமை.

32. நாடகாக் யாயிகா தர்சனம் - art of enacting short plays and anecdotes. நாடகம் தயாரிப்பது, அதை போட்டுக் காட்டுவது.
33. காவ்ய ஸமஸ்யா பூரணம் - art of solving enigmatic verses.  சந்தஸ், அலங்காரத்துடன் காவியங்கள் இயற்றி அதை கவிபாடும் திறமை கொண்டிருப்பது.

34. பட்டிகா, வேத்ர, பாணி விகல்பா - art of designing preparation of shield, cane and arrows. துணியாலேயே செய்யும் மாளிகை, பிரம்பு வேலைகள், அம்பினால் செய்யும் வேலைகள், அம்பினாலேயே கட்டப்பட்ட சிபிரம் போன்ற வீடுகள் கட்டும் திறமை.

35. தர்க்க கர்மாணி - art of debate. படித்ததை மறக்காமல், சமயத்தில் பயன்படுத்தி வாக்கு வாதம் செய்யும் திறன்.

36. தக்ஷணம் - art of carpentry. தேர், மர வேலைகள், தேவ ரூபங்களை மரத்தில் செய்து போன்ற திறன்.
37. வாஸ்து வித்யா - art of civil engineering. பூங்கா, கிணறு, வீடு, கோவில், அரண்மனை, சாலைகள் என்று அனைத்து விதமான வாஸ்து அடிப்படையில் கட்டும் திறமை.

38. ரத்ன பரீஷா - art of testing silver and jewels. நவ ரத்தினங்கள் தரத்தை அறிந்து அதன் விலையை என்ன என்று அறியும் திறமை.

39. தாது வாத - art of metallurgy. இரும்பு, தங்கம், வெள்ளி, ஈயம், தாமிரம் என்று பல தாதுக்களை உருக்கி பல வித பொருட்கள் செய்வது.

40. மணி ராக ஞானம் - art of tinging jewels. நகைகளுக்கு பளபளப்பு உண்டாக்கும் திறமை.




41. ஆகார ஞானம் - art of body language. சாமுத்திரிகா லக்ஷணம், கை ரேகை போன்றவற்றை பார்த்தே ஒருவனின் நடத்தையை கண்டுபிடிக்கும் திறன்.

42. வ்ருஷ ஆயுர்வேத யோகா - art of practicing medicine or medical treatment, by herbs. பயிர்கள், மரங்கள் வளர்ப்பது, அதற்கு ரோகங்கள் வந்தால், அதற்கு சிகிச்சை செய்வது, செடிகள் மூலம் சிகிச்சை செய்யும் திறன்.
43. மேஷ குக்குடலாவ யுத்த விதி - art of knowing the mode of fighting of cow and birds. கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு, குதிரை பந்தயம், ஆடு சண்டை, கோழி சண்டை போன்ற விளையாட்டில் ஆடும் திறமை.

44. சுக ஸாரிகா பிரலாபனம் - art of maintaining or knowing conversation between male and female cockatoos. கிளி போன்ற பறவைகளுடன் பேசும் திறன்.

45. உத் ஸாதனம் - art of disposing a person. தன் இடத்தை ஆக்ரமித்து கொண்டு இருப்பவனை தந்திரமாக விரட்டும் திறன்.


46. கேச மார்ஜன கோசலம் - art of combing hair. பல வித தலை அலங்காரம் செய்யும் திறன்.

47. அக்ஷர முஷ்டி காகதனம் - art of talking with fingers. கை விரல்களை வைத்து ஜாலம் செய்வது.

48. தாரண-மாத்ருகா — art of the use of amulets. நகைகள் தயாரிக்கும் திறமை.

49. தேச பாஷா ஞானம் - art of knowing provincial dialects. அனைத்து மொழிகளிலும் பேசும் திறன்.

50. நிர்மிதி ஞானா : art of knowing prediction by heavenly voice. தேவர்கள் பேசுவதை கேட்கும் சக்தியும், அதனால் நடக்கப்போவதை அறியும் திறன்.

51. யந்த்ர மாத்ருகா - art of mechanics - பெரிய இயந்திரங்களை தயாரித்து இயக்கும் திறன். பெரிய கற்களை தூக்கும் இயந்திரம், மரங்களை உயிரோடு பிடுங்கி சாலைகளில் நடுதல் போன்ற இயந்திரங்களை தயாரிக்கும் திறன்.

52. மிலேச்ச பாஷை, மிலேச்ச குதர்க்கம் - art of fabricating barbarous or foreign sophistry. மிலேச்சர்களுக்கு சரியாக குதர்க்கம் செய்து, அவர்களுக்கு பதில் சொல்லும் திறன். சமயத்துக்கு கீழ் தரமான மிலேச்சர்கள் போன்று பேசி சில விஷயங்களை சாதிப்பது. திருதராஷ்டிரன் இருக்கும் போதே, துரியோதனன் செய்து வைத்திருக்கும் சூழ்ச்சியை தர்மபுத்திரரிடம் மிலேச்ச பாஷையில் எலி, பொந்து போன்ற மறைமுகமான முறையில் தர்மபுத்திரரிடம் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க வழி சொன்னார்.

53. ஸம் வாச்யம் - art of conversation. மேடைகளில் அழகாக பேசும் திறன்.

54. மானஸ காவ்ய க்ரியா - art of composing verse mentally. மனம் செல்லும் வேகத்தில் அலங்காரத்துடன், விருத்தங்களுடன் சிறிது நேரத்தில் ஒரு காவியம் செய்து விடும் திறன். பகவத் கீதை போன்ற காவியம் படைக்கும் திறன்.

55. க்ரியா விகல்பர் - art of management. எந்த காரியத்தையும், அதை முடிக்க வேண்டிய முறை தெரிந்து, அழகாகவும் மேலும் சீக்கிரமாகவும் முடிக்கும் நிர்வாக திறன். ஒரே நாளில் மதுராவில் இருந்த 5 லட்சம் யாதவர்களை துவாரகை என்ற நகரத்தை கடலில் மயனை அழைத்து அமைத்து, அனைவரையும் குடியேற்றி விட்டார்.
56. ச்சலித யோகா - art of practicing revenge. வஞ்சனை செய்பவனை வஞ்சனை செய்து அழித்தல். போர் செய்து நாட்டை ஜெயிக்காமல், தாயம் (சூதாடி) நாட்டை அபகரித்து வஞ்சகம் செய்த அனைவரையும் அதே வஞ்சகம் மூலம் பதில் கொடுத்து, பாண்டவர்கள் வாழ வழி செய்த திறன்.

57. அபிதான கோச சந்தோ ஞானம் - art of the use of lexicography. art of knowing 100s of Chandas. ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் அறிந்து கொண்டு, பேசும் போதே பல வித அர்த்தங்களில் பேசும் திறன். கண்ணன் பேசும் போது, பாண்டவர்களுக்கு இனிமையாகவும், துரியோதனனுக்கு எதோ தன்னை பற்றி தான் கிண்டல் செய்கிறரோ என்று தோன்றும் அளவுக்கு வார்த்தை ஜாலம் செய்யும் திறன் கொண்டிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சந்தங்கள் பற்றிய திறன்.

58. வஸ்த்ர கோபனம் - art of concealment of cloths. ஒருவர் கொடுக்கும் பொருளை, மற்றவர்களுக்கு தெரியாமல் துணியால் மூடிக்கொண்டு எடுத்து செல்லும் திறன்.

59. த்யூத விசேஷா - art of knowing specific gambling. தாயம், சதுரங்கம்(chess) போன்ற விளையாட்டில் ஜெயிக்கும் திறன்.

60. ஆகர்ஷ க்ரீடா - art of playing and pulling others to his side. ஒரு கயிற்றின் இரு புறமும் இருவர் இழுக்க, எதிராளியை தன் பக்கம் இழுக்கும் திறன். எதிர்ப்பவனையும் தன் பக்கம் இழுக்கும் திறன்.
61. பால க்ரீடா - art of using children's toys. பல வித குழந்தைகள் விளையாடுவது. ஒட்டப் பந்தயம், நீச்சல், ஏமாற்றுதல், பிடிபடாமல் ஓடுதல், குத்து சண்டை, கூத்தாடுதல், நடித்தல், பந்து விளையாடுதல், தூக்கி இருந்து பிறகு பிடிப்பது, காளை மாடு போல நடிப்பது, குரங்கு போல தாவுவது, மறைத்து வைப்பது, தாண்டி குதிப்பது, காட்டில் அலைவது, புதிர் போட்டு விளையாடுவது என்று பல வித குழந்தை/சிறுவர்கள் விளையாட்டு ஆடும் திறன்.

62. நௌகா நிர்மாண கலா - art of making ships.  பல விதமான கப்பல் தயாரிக்கும் திறன்.

63. புஷ்பச கடிகா நிர்மாணம் - புஷ்பங்களை கொண்டு மேடை, அலங்காரம் செய்யும் திறன்.

64. விமான நிர்மாண கலா - art of making aircraft.
ஆகாயத்தில் செல்லும் விமானம் செய்யும் திறன்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!

ஹிந்துவாக பிறந்ததே புண்ணியம்.



மஹாபாரத போரில் யவனர்கள் (கிரேக்க, ஐரோப்பா) தேசத்தில் உள்ளவர்கள் வரை அனைத்து க்ஷத்ரியர்களும் கலந்து கொண்டு உயிரை விட்டனர். 

பஞ்ச பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்ற பின், உலகமே தர்மபுத்திரர் ஆட்சிக்கு கீழ் வந்தது.
ஸ்ரீ கிருஷ்ணர் 3100BCE (சுமார் 5000 வருடங்கள் முன்) தன் அவதாரத்தை முடித்துக்கொண்டு, வைகுண்டம் செல்ல முடிவு செய்த போது,
"துவாரகை மீண்டும் கடலில் மூழ்கி விடும்" என்று யாதவர்கள் அனைவரையும் தர்மபுத்திரர் ஆளும் எந்த தேசங்களுக்கும் இடம் பெயர்ந்து விடுமாறு சொல்லி விட்டார்.

இந்த யாதவர்கள் பாரத தேசம் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவி இடம் பெயர்ந்தனர். 
உத்திர பிரதேசத்திலும் யாதவர்கள் உண்டு. 
தமிழ்நாட்டிலும், யாதவர்கள் உண்டு.

இப்படி 3100BCE சமயத்தில் துவாரகையை விட்டு இடம் பெயர்ந்த யாதவர்கள்,
நாராயணனே கிருஷ்ண அவதாரம் செய்து இருக்க, தன் யாதவ கிருஷ்ணனை பற்றி பேசாமல் இருப்பார்களா? 

பிரகலாதன் போன்ற ஞானிகளுக்கு மட்டுமே நாராயணனை பக்தி செய்த முடிந்த போது,
அஞானியாக இருக்கும் நம்மை போன்ற சாதாரண மக்களுக்கும், பக்தி கிருஷ்ண அவதாரத்தால் சுலபமானது.

சிறிது வருடங்களுக்கு பிறகு, தர்மபுத்திரர் தன் பேரன் பரீக்ஷித்துக்கு பட்டம் சூட்டினார். 
அவருக்கு பின் அவர் மகன் ஜனமேஜெயன் என்று பாரத நாடு ஒரு கொடியின் கீழ் ஆளப்பட்டது.
ஆச்சர்யம்..... 
Indus Valley Civilization (lasting from 3300 BCE to 1300 BCE) என்று சொல்லப்படும் இந்த காலம், தர்மபுத்திரர், பரீக்ஷித் போன்றவர்கள் ஆண்ட காலம் என்று தெரிகிறது.

இந்த காலத்தில் (INDUS VALLEY CIVILIZATION),
பாரத மக்களின் நகர அமைப்புகள், கலாச்சாரம் பிரமிக்க தக்கதாக உள்ளது என்று ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.

இந்து சமவெளி நாகரீகம் (Indus Valley Civilization) என்றும் சரஸ்வதி நாகரீகம் (Sarasvati Civilization) என்றும் சொல்லப்படும் இந்த காலம் (3000BCE-1300BCE),
1300BCE சமயத்தில் இயற்கையின் சீற்றத்தால்  அழிந்து இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.

மஹாபாரத சமயத்தில், ஹரப்பா, மொஹஞ்ச தாரோ போன்ற நகரங்கள் இருக்கும் இடங்களில் சரஸ்வதி நதி ஓடி கொண்டு இருந்தது என்று சொல்லப்படுகிறது. அங்கு தீர்த்த யாத்திரை செய்து அர்ஜுனன் சென்றார். பீஷமர் சென்றார் என்றெல்லாம் குறிப்பு காட்டப்படுகிறது.

மஹாபாரதத்தில், சிந்து தேசத்தில் (Today Pakistan) உள்ள சரஸ்வதி நதி இருந்தது என்று பல இடங்களில் சொல்லப்படுகிறது.

1300BCE சமயத்தில், இந்த சரஸ்வதி நதி வற்றி போனதால், இந்த நகரங்களில் உள்ள பாரத மக்கள், மற்ற பாரத தேசங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை.
இந்த இந்து சமவெளி நாகரீகம் படைகளாலோ, பெரும் பூகம்பம் போன்றவற்றாலோ அழியவில்லை என்றும் ஆராய்ச்சிகள் நமக்கு சொல்கிறது.
இன்றும் பாகிஸ்தானில் உள்ள இந்த அழிந்த நகரங்களில் கட்டிடங்கள் சேதமில்லாமல் இருப்பதே இதற்கு சாட்சி.

துவாரகை கடலில் மூழிகி விட்ட பின், யாதவர்கள் உலகமெங்கும் இடம் பெயர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

பாரத மக்களின் பெயர்களை அன்று மட்டுமல்ல, இன்று வரை உச்சரிக்க முடியாமல் உளறுபவர்கள் வெளிநாட்டினர்.
உலகம் முழுவதும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழை உயர்த்தி பிடிக்கும் iskcon போன்ற அமைப்பில் உள்ள வெளிநாட்டவர்கள், இன்று கூட "கிருஷ்ணா" என்று உச்சரிக்க முடியாமல் "கிஸினா" என்று தான் சொல்கின்றனர் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

சிந்து தேசம் என்று கூட சொல்ல முடியாமல்,
சிந்து என்ற சொல்லை கூட, "ஹிந்து, ஹிண்டு, இண்டஸ், இந்துஸ்" என்று உளறி,
1000 வருட ஆக்கிரமிப்பின் அடையாளமாக இந்த அர்த்தமில்லாத பெயரையே, 1947ல் நம் தேசத்தின் பெயராக கொடுத்து விட்டு சென்றனர்.

பாரத தேசம் (Bharat) என்று இந்திய சட்ட புத்தகத்தில் இருந்தாலும், இண்டியா (INDIA) என்ற உளறி கொட்டி கொடுத்த பெயரை,
இன்று வரை பாரத மக்கள் பயன்படுத்துகிறோம் என்பது வேதனையே!

கிரேக்க நாட்டின் அலெக்சாண்டர், பாரத எல்லையில் இருந்த சிற்றரசன் "புருஷோத்தமனை" தோற்கடிக்க படாத பாடு பட்டான்.




சிற்றரசனே இப்படி பலம் கொண்டு இருந்தால், பாரத தேசத்தில் கால் வைத்தால் என்ன ஆகுமோ என்று யோசித்து, நாடு திரும்ப முடிவு செய்தான்.

உச்சரிக்க தெரியாத கிரேக்கர்கள்  "புருஷோத்தமனை" கூட போரஸ் (porus) என்றனர்.
இப்படி ஊர் பெயரை, மக்களின் பெயரை, நதிகளின் பெயரை எதையுமே உச்சரிக்க முடியாத வெளிநாட்டிலும், 'யாதவர்கள்' குடிபுகுந்தனர்.

3100ல் குடிபுகுந்த யாதவர்களே (Yadava), பிற்காலத்தில் எஹுதி (Yehudi) என்றும் யூதன் (jews) என்று பெயர் தவறாக உச்சரிக்கப்பட்டு உருமாறி இருக்கிறார்கள்.

இவர்கள் தன் குல தெய்வமாக வழிபட்ட கிருஷ்ண பரமாத்மாவே, கிறிஸ்து என்று உளறப்பட்டு இருக்கிறார்.
இந்த யாதவ (யூதர்களே) தங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு கிறிஸ்து என்று பெயர் வைத்து கொண்டிருந்தனர்.
கிருஷ்ண பரமாத்மாவின் கதையம் உருமாறி பேசப்பட்டு இருக்கிறது.  
மாடுகள், அங்கு காணப்படும் ஆடுகளாக மாற்றப்பட்டது.

கிருஷ்ணன் பிறக்க போகிறார் என்ற அசரீரி வாக்கு இங்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி ஒரு குடும்பத்தில் யாதவ குடும்பத்தில் பிறந்த ஒருவரின் பெயரே "கிறிஸ்து". 
இவர் இறக்கும் வரை "பரமபிதாவே" என்று அவர் பரவாசுதேவனை வழிபாட்டு இருக்கிறார்.
அவர் இருக்கும் வரை, இவரை வைத்து மதம் உண்டாகவில்லை. 
ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்ததற்கு பிறகு, 3000 வருடத்திற்கு பிறகு, கிறிஸ்து பிறக்கிறார். 
இயேசுவின் தந்தை இவர் பிறக்கும் போது என்ன கலாச்சாரம் கொண்டு இருந்தார்?
இயேசு உண்மையில் யார்? தெரிந்து கொள்ள வேண்டாமா? 
பைபிள் என்ன சொல்லுகிறது? 
காலத்தை ஒட்டிய அறிவுடன், இயேசு என்ற கற்பனையை/கிருஷ்ண பக்தனை பற்றி இங்கு படிக்கவும்

பாரத மண்ணில் பிறந்த அறிவுள்ள மக்கள்,
உலகமே போற்றும் நம் கிருஷ்ணரை விட்டு விட்டு,
வேறு நாட்டில் பிறந்து இறந்து போன, ஒரு மனிதனை போய், தெய்வமாக நினைத்து, வணங்கவே மாட்டார்கள்.
போலி மதங்களில் விழுந்து கிடக்கும் நம்மில் சிலரும், கொஞ்சம் அறிவு பெற்றாலும், இந்த போலி அந்நிய நாட்டு தெய்வங்களை விட்டு விடுவார்கள். 

"பௌத்த மதமே சிறந்தது" என்று கொடி பிடித்த இதே பாரத மக்கள் தான், உண்மை உணர்ந்ததும், அதே பௌத்த மதத்தை வேரோடு தூக்கி எறிந்தனர் என்பது பாரத தேசத்தின் வரலாறு.     

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.