Followers

Search Here...

Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts

Sunday 6 September 2020

ஹிந்து மதத்தை விட்டு விலகி போனவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பரம்பரை மூலம் என்ன நடந்தது? பாரத மண்ணின் சரித்திரம் தெரிந்து கொள்வோம்.

ஒரு ஹிந்து மதம் மாறிய பிறகு, அவன் காலம் வரை கூட நல்லவனாக கூட இருக்கலாம்.




அவன் சந்ததியால் ஹிந்துக்களுக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?


1000 வருட நம் சரித்திரமே இதற்கு சான்று..

கவனமுடன் படியுங்கள்..


268BCE சமயத்தில், ஆப்கான் முதல், பெரும்பாலான பாரத தேசத்தை ஆண்டு வந்தான் ஹிந்து மன்னன் "அசோக சக்கரவர்த்தி". 

பகவத் கீதை படிக்காத இவன், திடீரென்று மூளை கெட்டு, பௌத்த மதத்தை ஏற்றான்.

குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர், அரசனுக்கு குறிப்பாக சொன்ன, க்ஷத்ரிய தர்மத்தை விட்டான்.


போர் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தாமல், வீரத்தை வளர்க்காமல், பௌத்த மடம் கட்டவும், காவல் காக்கவும் பயன்படுத்தினார்கள் பௌத்த மதம் மாறிய அரசர்கள். 


பலம் வாய்ந்த எதிரிகள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருக்க, 

பாரத நாட்டை காக்கும் அரசர்கள் பௌத்த மதத்தை ஏற்று, போர் வீரர்களை போதுமான போர் பயிற்சி இல்லாமல் வைத்து இருந்தனர்.


அசோக சக்கரவர்த்தியே பௌத்த தர்மத்தை கடைபிடிப்பதால், சிற்றரசர்கள் அனைவரும் மெதுவாக பௌத்த தர்மத்தை ஏற்க ஆரம்பித்தனர்.


சுமார் 1100 வருடங்கள் பாரத நாடு பௌத்த தர்மத்தில் மூழ்கியது. 

பகவத் கீதையை மறந்து, மொட்டை அடித்து சமாதானம் பேசிக்கொண்டு சாது தேசமாக ஆகி இருந்தது பாரத நாடு.

சிங்கம் போன்ற க்ஷத்ரிய அரசர்கள் உலவிய நாட்டில், மொட்டை தலைகள் அலைந்தது.


அரசன் வீரத்தை விட்டு விட்டு, சந்நியாசி போன்று பேசிக்கொண்டிருந்த அபாய காலம் அது


சரயு என்ற நதியின் ஒரு பிரிவாக அழைக்கப்பட்ட, "ஹரி நதி", ஆப்கான் தேசத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இன்று, அதை "ஹீரத்" என்று மாற்றி விட்டனர்

(https://en.m.wikipedia.org/wiki/Hari_(Afghanistan))


மதம் மாறிய வரலாற்றை பாருங்கள்...

1. அமீர் பாஞ்சி (Amir Bhanji) (ஆப்கான் ஹிந்து அரசன் ஆண்டு வந்தான். 9th Century)

2. His son அமீர் சூரி (பௌத்த மதத்துக்கு மாறினான். 10th Century.  

பௌத்த மடம் கட்டிக்கொண்டு இருந்த போர் வீரர்கள், போருக்கு தயாராக இல்லாமல் இருந்ததால், அரேபிய Saffarid இஸ்லாமிய படையெடுப்பில் பெரும் தோல்வியை சந்தித்தான். 

பௌத்த தர்மத்தை விட இஸ்லாம் வீரம் மிக்கது என்று மதம் மாறாவிட்டாலும், ஆப்கான் தேசத்தில் குர்ரான் படிப்பதை அனுமதித்தான்.).  கோர் (Ghor) என்ற ஆப்கான் நகரை தலைநகராக ஆண்டு வந்தான்.

இவன் மூலமாக கோரி பரம்பரை உருவானது.


3. His son முகம்மது இபின் சூரி (பௌத்த மதம், ஆனால் குரான் மூலம் வளர்க்கப்பட்டான். கஜினி படையெடுத்து, இவனை கைது செய்து, சிறையிலேயே கொன்றான். நாடு முழுவதும் இஸ்லாமிய ஆளுமைக்கு உட்பட ஆரம்பித்தது. 10th century)


4. His son அபு அலி இபின் முஹம்மது (இஸ்லாமிய வளர்ப்பு. ஆப்கான் மக்களை முழுவதுமாக  இஸ்லாமியர்கள் ஆக்கினான். 20 வருடங்களில் கோவில்கள், மடங்கள் தரைமட்டம் ஆனது. 1011 AD)


5. His Nephew அப்பாஸ் இபின் ஷித் (மாமா அபு அலியை கொன்று தான் அரசன் ஆனான். 1035 AD)


6. His son முகம்மது இபின் அப்பாஸ் (1060 AD)





7. His son குதுப் அல்தின் ஹசன் (1080 AD)

இவன் காலத்தில் தான் கர்நாடக தேசத்தில் மேல்கோட்டையில் உள்ள செல்லபிள்ளை என்ற பெயர் கொண்ட கோவிலை சூறையாடினான். 

அங்கு இருந்த நாராயணன் உற்சவ மூர்த்தியை தூக்கி சென்று விட்டான்.

இந்த கோவில் மதில் சுவர்களில் உள்ள உடைக்கப்பட்ட சிலைகள் நமக்கு கதை சொல்கிறது.

80 வயது நெருங்கி இருந்த ராமானுஜர் (1017ல் அவதரித்தார்) அந்த சமயத்தில் குலோத்துங்க சோழனின் (கிருமி கண்ட சோழன்) வைணவ வெறுப்பால், ஸ்ரீ ரங்கத்தை விட்டு வெளியேறி, நடந்து நடந்து, கர்நாடக தேசம் வந்து, மேல்கோட்டை அடைந்தார்.

அங்கு பெருமாள் இல்லை என்றதும், தானே டெல்லிக்கு சென்று சுல்தானிடம் கேட்டு, "வாராய் செல்ல பிள்ளாய்" என்று பெருமாளை கூப்பிட, அரசன் கண் எதிரே, சிலையாக இருந்த நாராயண விக்கிரகம் அவன் பெண் கையிலிருந்து குதித்து, ஓடி சென்று ராமானுஜர் அருகில் சென்றது.

பயந்து போன சுல்தான், "உடனே எடுத்து சொல்லுங்கள்" என்றான்.

பெருமாளின் இந்த லீலையை நேரில் காண வாய்ப்பு கிடைத்தும், சுல்தான் ராமானுஜர் பெரிய மாயக்காரர் போல என்று தான் நினைத்தான். 

"அவரை அனுப்பி விடுவதற்கு, இந்த சிலையை கொடுப்பதே வழி" என்று நினைத்தான்.

சுல்தானின் பெண், பெருமாளின் பிரிவு தாங்காமல், மேல்கோட்டை ஓடி வந்து, விரகத்தால் உயிரையே விட்டு விட்டாள்.

அந்த முஸ்லீம் பெண், இன்றும் அந்த உற்சவ பெருமாளின் கால் அருகே சிறு மூர்த்தியாக இருக்கிறாள்.

பெருமாளை அடைந்த அந்த முஸ்லீம் பெண்ணும், இன்று வரை பூஜிக்கப்படுகிறாள். 


8. His son இஸ் அல்தின் ஹுசைன் (1100 AD)


9. His son சயப் அல்தின் சூரி (1146 AD. இவன் ஆப்கான் தேசத்தை, தன் 6 சகோதரர்களுக்கு பிரித்து கொடுத்தான்)


10. His brother பஹா அல்தின் சம்

முஹம்மது கோரி(1149AD. ஆனால் அதே வருடம் இறந்து விட்டான். இவனுடைய 2 பிள்ளைகளே முகம்மது கோரி, முகம்மது கியாசுத்தின்)


11. His  another brother அலாவுதீன் ஹுசைன் (1149AD)





12. His son சயப் அல்தின் முகம்மது (1161AD)


13. முகம்மது கியாசுத்தின் (பஹா அல்தின் சம் முஹம்மது கோரியின் மூத்த மகன். 1163AD. 

இவனால் பாரத தேசத்தின் வங்காள தேசம் வரை சூறையாட பட்டது..  

பலர் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டனர். 

இந்திய மண்ணின் இருண்ட காலம் ஆரம்பமான நேரம்...)

15. முகம்மது கோரி (பஹா அல்தின் சம்

முஹம்மது கோரியின் இளைய மகன். 1173AD).  

இவன் காலத்தில் தான் மஹாராஷ்ட்ர தேசம் வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பெருமளவில் நடந்தது. 

பண்டரிபுரம் கோவிலை இடிக்க கூட வந்து விட்டான் இவன்.

ப்ரித்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசன் இவனை பாரத மண்ணில் கால் பதிக்க விடாமல் தடுத்தான். 

முதல் படையெடுப்பில் கோரி படு காயம் அடைந்தான். ப்ரித்விராஜ் சவுஹான் மன்னித்து அனுப்பினான்.

விளைவு: இரண்டாவது முறை திடீர் தாக்குதல் செய்து, ப்ரித்விராஜ் சவுஹானை சிறை பிடித்து, கண்ணை பிடுங்கினான்.

ஆப்கான் கொண்டு சென்று சிறை வைத்தான்.

இவனை கேலி செய்து விளையாடிய கோரியை, கண் இல்லாமலேயே ப்ரித்விராஜ் சவுஹான் அம்பு எய்து கொன்றான். 

ஹிந்து அரசன் வீர மரணம் அடைந்தார். 

கோரியின் மரணம் ஆப்கானில் முடிந்தது. 


1000ADல் அமீர் சூரி என்ற ஒரு ஹிந்து மதம் மாறினான். 

அவன் நல்லவனாக கூட இருந்து இருக்கலாம்.

ஆனால், 

150 வருடங்கள் கழித்து 12வது தலைமுறையாக வந்த 'முகம்மது கோரி' ஹிந்துக்களை கொல்வதும், கோவிலை இடிப்பதும், கொள்ளை அடைப்பதையும் தன் கொள்கையாக கொண்டு இருந்தான்.

முகம்மது கோரி, ஆப்கான் தேசத்தை முழுவதுமாக ஒரு ஹிந்து, ஒரு பௌத்தன் கூட இல்லாத நகரமாக ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்கியதை காட்ட, வெற்றி சின்னமாக , "ஜாம் மினார்" (minaret of jam) என்ற கோபுரத்தை அங்கு கட்டினான்.

மதம் மாறுபவன் நல்லவனாக கூட இருக்கலாம். 

ஆனால் அவன் பரம்பரை உருவாக்கும் விஷங்கள் எப்படிப்பட்டது? என்பதற்கு நம் 1000 வருட துன்ப காலங்களே சான்று.


கோரி பரம்பரை 1000AD முதல் சுமார் 1206AD வரை ஆப்கான் முதல் வங்காள தேசம் வரை, மராட்டிய தேசம் வரை ஆக்ரமித்து ஆண்டு வந்தது.. 

பிறகு, மாம்லுக் என்ற அடிமை பரம்பரை என்ற பெயரில் குதுப்தின் ஐபக், முஸ்உத்தின் ஐபக் 1296AD வரை ஆண்டனர். 

குதுப்தின் ஐபக், தன் எஜமானன் ஆப்கான் தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி, "ஜாம் மினார்" கட்டியது போலவே, டெல்லி நகரமும் இஸ்லாமிய தேசம் என்று காட்ட, "குதுப் மினார்" என்ற அதே போன்ற வடிவமைப்பில் ஹிந்து அடிமைகளை கொண்டே கட்டினான். 




பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி விட்டேன் என்று காட்ட "குதுப் மினார்" கட்டப்பட்டது.

ஹிந்துக்களை அழிக்கும் இவன் கனவு கனவாகவே போனாலும், இவன் கட்டிய இந்த ஸ்தூபம் இன்றும் பாரத மண்ணில் இருக்கிறது.


இதற்கு பிறகு கில்ஜி பரம்பரை இவர்களை துரத்தி ஆட்சியை பிடித்தனர்.

இதில் இரண்டாவது ஆட்சியாளனாக வந்த அலாவுதீன் கில்ஜி, ராஜஸ்தான், குஜராத் போன்ற ராஜ்யங்களை முழுவதும் இஸ்லாமிய மண்ணாக ஆக்க, பெரும் படைகளை திரட்டி கொண்டு போனான்.

இந்த சமயத்தில் தான் ராணி பத்மாவதி ராஜஸ்தான் கோட்டை தகர்க்கப்பட்ட செய்தி கேட்டதும், மானத்தை காத்து கொள்ள, அக்னி குண்டத்தில் பல ராஜ ஸ்த்ரீகளுடன் குதித்து உயிர் விட்டாள். 

குஜராத் தேசத்தில் போர் செய்த போது, ஹிந்து மக்கள் பலரை அடிமைகளாக ஆக்கினான் அலாவுதீன்.

அதில் மாணிக் என்ற ஹிந்து வீரனாகவும் இருந்ததை பார்த்து, அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு நட்பும் பரிவும் உண்டானது.


இந்த நன்றிக்கு, ஹிந்துவாக இருந்த மாணிக், தன்னை முஸ்லீமாக மாற்றிக் கொண்டான்.

ஹிந்து மதத்தை விட்டு விலகிய இவன் தான் "மாலிக் காபுர்".


மதம் மாறிய இவனையே படை தளபதியாக ஆக்கி, முதல் முறையாக ஆந்திர தேசமும், தமிழகமும் கில்ஜி காலத்தில் தாக்கப்பட்டது.


இஸ்லாமியனாக போன இந்த மாலிக் காபுர், ககாத்திய தேசத்து அரசனை நேரடியாக எதிர்க்க முடியாமல், கோவில்களுக்குள் நுழைந்து கொள்ளை அடித்து, பொது மக்களை கொன்று பெரும் கலவரத்தை உருவாக்கினான்.

ககாத்திய தேசத்தில் பல கோவில்களில் பெரும் கொள்ளை நடந்தது. அதில் ஒரு காளி கோவிலில் மஹாகாளி அணிந்து இருந்த வைர மாலைகளில் இருந்த ஒரு வைரம் தான் "கோஹினூர்" என்று அழைக்கப்படும் வைரம். 

இன்று இது பிரிட்டன் நாட்டில் உள்ளது.

தெலுங்கு தேசத்தின் சொத்து இது.


இது மட்டுமா மாலிக் காபுர் செய்தான்.. 

பிறகு காஞ்சிபுரம் வந்து, பிறகு பாண்டிய தேசத்துக்குள் நுழைந்து மதுரை மீனாட்சி கோவிலில் புகுந்தே விட்டான்.

அங்கிருந்த பட்டர்கள், மூல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்துக்கு முன் கல் சுவரை எழுப்பி, வேறொரு பெரிய சிவலிங்கத்தை வைத்து விட்டனர்.


செருப்பு காலில் லட்சம் இஸ்லாமிய படையுடன் நுழைந்த மாலிக் காபுர் சிவலிங்கத்தை குத்தி தள்ளி விட்டான்.

(இன்றும் அந்த சிவலிங்கம் உள்ளது.. மதம் மாறியவன் என்னவெல்லாம் செய்வான் என்று கதை சொல்கிறது) 




பாண்டிய மன்னன் பொது மக்களை காக்க, கோவிலை காக்க, அடி பணிந்தான். 


பாண்டிய தேசத்து மொத்த கஜானாவையும், 1000 யானை படைகளையும் கொடுத்தான்.


மாலிக் காபுர், பாண்டிய தேசத்து எல்லையான ஸ்ரீ ரங்கம் வரை சென்றான். 


அங்கு கோவிலை சூறையாடி 13000 வைஷ்ணவர்களை கோவிலேயே கழுத்தை வெட்டி கொன்றான்.


உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.

ரங்கநாதரை விளையாட்டு பொம்மையாக இவன் பெண்ணுக்கு கொடுத்து விட்டான்.

பேசும் தெய்வமான ரங்கநாதர், இவளிடம் பேசி கொண்டு இருக்க, 'பொம்மையை வைத்து கொண்டு இருக்கும் தன் மகள் பைத்தியம் ஆகி விட்டாள்' என்று பயந்தான்.


பிறகு வைஷ்ணவர்கள் சிலர் டெல்லிக்கே சென்று ரங்கநாதரை கேட்க, 'அபாயமான இந்த ரங்கநாத பொம்மை வேண்டவே வேண்டாம்' என்று கொடுத்து விட்டான். 

ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார் ரங்கநாதர்.


ஆனால், மீண்டும் கலவரம் ஏற்பட, அடுத்த 70 வருடங்கள் தமிழகம் முஸ்லிம்களால் இருண்டது.

கில்ஜியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த துக்ளக் தமிழகம் வரை வந்து விட்டான். 

மேலும் அறிய.. இங்கே படிக்கவும்.


சுமார் 70 வருடங்கள், 

ஸ்ரீரங்கம் கோவில் மூடப்பட்டது. 

மீனாட்சி கோவில் மூடப்பட்டது. 

காஞ்சியில் இருந்த அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டு விட்டார்.


யார் ஹிந்துக்களை மீட்பார்கள்? என்ற கேள்வி பாரத தேசம் முழுவதும் பரவி, பெரும் கேள்விக்குரியானது. 


தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடக தேசத்தின் ஹம்பியை தலைநகராக கொண்டு, விஜயநகர அரசர்கள் தலையெடுத்தார்கள்.


தமிழகம் 80 வருடங்கள், துக்ளக் ஆட்சியின் கீழ் உள்ள முஸ்லிம்களால் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தது. 


ஹிந்துக்களை காக்க, வந்தார் கம்பண்ணா. வென்றார் தமிழகத்தை. மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்தார். 

அடைக்கப்பட்ட மூன்று கோவில்களும் மீண்டும் திறக்கப்பட்டன.


அழிக்க நினைத்தும், ஹிந்துக்கள் அழிந்து விடாமல், ஹிந்து தெய்வங்களே கம்பண்ணா ரூபத்தில் காத்தது.


ஒவ்வொருவரின் பரம்பரையை நன்றாக கவனித்தால், முகம்மது கோரியின் மூதாதையனும் ஒரு காலத்தில் ஹிந்துவாக இருந்தவன் என்று தெரிகிறது. 

இன்று மதம் மாறுபவன் விதைக்கும் விஷம் எப்படிப்பட்டது என்று சரித்திரத்தை கொண்டே நாம் அறியலாம்.

மாலிக் காபுர் தானே மதம் மாறியவன்.

தான் பிறப்பில் ஒரு ஹிந்து என்று தெரிந்தும், அவனே பெரும் கோவிலை இடித்தான்.


ஹிந்து மதம் விட்டு, சென்றவர்கள் எந்த காலத்திலாவது நமக்கு தீங்கு செய்வார்கள் என்பதற்கு, நாம் 1000 வருடங்கள் அனுபவித்த இழப்புகளே சான்று.


நம் சரித்திரத்தை அறிந்து கொள்வது போல, அந்நியர்கள் என்று அறியப்பட்ட கோரி, கில்ஜி போன்றவர்கள் யார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Friday 27 March 2020

மதுரை திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) - கள்ளலழகர் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உத்தர மதுரையில் (வடமதுரை) இருக்கும், "திருமாலிருஞ்சோலை" (அழகர்மலைசரித்திரம்.

"திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படும் அழகர் மலை, புராணத்தில் "வ்ருஷபாசலம்" என்று அழைக்கப்பட்டது.
"பலராமர் 'தீர்த்த யாத்திரையாக' வரும் போது, 'வ்ருஷபாசலம்' வந்து பெருமாளை சேவித்து விட்டு, மேலும் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்"
என்று பாகவதமும் சொல்கிறது.




பெருமாளுக்கு "கள்ளலழகர்" என்று பெயர்.
கள்ளர்களுக்கு இஷ்ட தெய்வமாக இங்கு பெருமாள் இருக்கிறார்.

இங்கு வாழ்ந்த கள்ளர்கள், பெருமாளை பார்த்து, "ஒரு பாதி உனக்கு தருகிறேன்.. மறு பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று சொன்னால், திருட்டு தொழிலும் பலிக்குமாம்.
"அனுகூல தெய்வமாக" பெருமாள் இங்கு கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.

கள்ளர்கள் வழிபட்ட தெய்வம். 
கள்ளர்களுக்காகவே நிற்கின்ற தெய்வம் இவர்.
பெருமாளுக்கு "ஜெகதீஸ்வரன்" என்றும் பெயர் உண்டு.

ஜகத்தில் (உலகத்தில்) நல்லவர்கள் மட்டும் தான் உண்டா?

உலகத்தில் உள்ள அனைவருக்கும் 'தானே தெய்வம்' என்றும்  காட்டும் பெருமாள், இங்கு "கள்ளர்களுக்கும் நானே தெய்வம்" என்று காட்டுகிறார்.

ஒரு சமயம் மண்டூகர் என்ற ரிஷி "க்ருதமாலா" என்று அழைக்கப்பட்ட வைகை நதியில்  கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.
"விஷ்ணுவை சாஷாத்கரிக்கவேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

மண்டூக ரிஷி கொடுத்த உபநிஷத்தின் பெயர் தான் "மாண்டூக்ய உபநிஷத்.

உபநிஷத்துக்களிலேயே மிகவும் உயர்ந்தது  "மாண்டூக்ய உபநிஷத்" என்று போற்றப்படுகிறது..

ஒருவன் "'மாண்டூக உபநிஷத்' அர்த்த ஆழத்துடன் தெரிந்து கொண்டு விட்டால், மோக்ஷத்துக்கு  (முமுக்ஷு) தேவையான விஷயங்கள் எல்லாம் தெரிந்தாயிற்று"
என்று சொல்வார்கள்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் 'ராமபிரானாக அவதாரம்' செய்தார்.
த்ரேதா யுகம் 12 லட்சம் வருடம் முன்பு நடந்தது.
ராமபிரான் மண்டூக ரிஷியின் உபநிஷத்தை பற்றி அனுமனிடம் பேசுகிறார்.
"உபநிஷத்துகளில் சிறந்தது மாண்டோக்ய உபநிஷத்"
என்று ஹனுமனை பார்த்து சொல்கிறார்.
மண்டூக ரிஷியின் பெருமை என்ன? என்று ஒரு புறம் நமக்கு இதிலேயே புரிகிறது.

அதே சமயத்தில், 12 லட்சம் வருடம் முன்பே நம் கள்ளழகர் இருந்தார் என்று கவனிக்கும் போது தான் கள்ளழகர் பெருமை நமக்கு புரியும்.




ராமபிரானால் உயர்த்தி பேசப்பட்ட மண்டூகர் கள்ளழகரை தரிசிக்க ஆசைப்பட்டார் என்றால், கள்ளழகர் பெருமை அளவிடமுடியாதது என்று தெரிகிறது.

வெகு காலம் ஆகி விட்டது. ஆகாரம் உட்கொள்ளவில்லை.
தவம் செய்து கொண்டிருந்தார் மண்டூகர்.
அந்த சமயங்களில் வடமதுரை காட்டு பிரதேசமாகவே இருந்தது.


ஒரு சமயம், அந்த காட்டின் வழியாக, அவர் எதிரே மிகவும் அழகு பொருந்திய ஒரு வேடுவ சிறுவன் குதிரை மேல் ஏறி வந்து இறங்கினான்.

பார்ப்பதற்கு 20-22 வயது வாலிபன் போலவும் இருந்தான்.
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தான். தலையில் தொப்பி வைத்து இருந்தான். பார்ப்பதற்கு அதிசுந்தரமாக இருந்தான்.
குதிரையில் இருந்து இறங்கி, வைகை என்ற க்ருதமாலா ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தான்.

அதி சுந்தரமாக இருந்த இந்த சிறுவனை பார்த்து, மண்டூக மகரிஷி, "நீ யாரப்பா?" என்று விஜாரித்தார்.

அந்த சிறுவன்,
"நான் வ்ருஷபாசலம் என்ற சோலைமலையில் இருக்கிறேன். கள்ளர்களுக்கெல்லாம் தலைவன்"
என்று சொல்ல,
"சரி.. உன் பெயர் என்ன?" என்று இவர் கேட்க,
"என் பெயர் சுந்தர தோளினான் (சுந்தரபாகு)."
என்று பதில் சொன்னான்.

"அது சரி, தவளை தான் தண்ணீரிலும் நிலத்திலும் இருக்கும்.  நீங்கள் ஏன் தவளை போல தண்ணீரில் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
"உண்மை தான். எனக்கும் மண்டூகன் (தவளை) என்று தான் பெயர்.
உங்களை பார்த்ததிலேயே, நீங்கள் யார் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.
குதிரையில் நீங்கள் வந்த அழகும், அதிலிருந்து நீங்கள் இறங்கிய  விதத்தையும் பார்த்ததுமே நீங்கள் யார் என்று புரிந்து கொண்டு விட்டேன் !"
என்று மண்டூகரிஷி சொன்னார்.

மண்டூகர் அழகரை பார்த்து சொக்கிப்போனதில் ஆச்சர்யமா?
இன்று சித்திரை மாதம் மதுரைக்கு சென்று பார்த்தால், அழகர் ஆற்றில் இறங்கும் போது 5 லட்சம் மக்கள் கூடுவதை நம் கண்ணால் காணலாம்..

அழகர் குதிரையில் வரும் வீதியெல்லாம் மக்கள் கூடி விடும் ஆச்சர்யத்தை இன்றும் காணலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று, வைகையில் ஒரு க்ஷணம் இறங்கி விட்டு, மண்டூக ரிஷிக்கு தரிசனம் தந்த வைபவம் இன்றும் நடக்கிறது.

"விஷ்ணுவை சாஷாத்கரிக்க வேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்த மண்டூகரிஷி, 
மேலும் சொன்னார்,
"நீங்கள் ஒரு ராஜகுமாரனை போல குதிரையில் வந்து இறங்கினீர்கள்.
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டேன். 
நீங்கள் எனக்கு திவ்யமான ரூபத்துடன் காட்சி தரவேண்டும்.
நீங்கள் கோவிலில் எப்படி தரிசனம் தருகிறீர்களோ, அது போல தரிசனம் கொடுங்கள்."
என்று சொல்ல,

சங்கு சக்கர கதையுடன், நீல மேக ஸ்யாமள ரூபத்துடன், பீதாம்பரம் அணிந்தவராக, ஸ்ரீவத்சம் உடைய மார்புடன், எம்பெருமான் காட்சி கொடுக்க,
உடனே,
மண்டூக ரிஷி கைகளை குவித்துக்கொண்டு, ஸ்தோத்திரம் செய்கிறார்...
"'ஓம்' என்ற பிரணவம், வேத மந்திரங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

'ஓம்' என்ற பிரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்று ஒலிகள் (அக்ஷரங்கள்) அடக்கம்.

மூன்றும் சேர்ந்த நிலையே 'ஓம்' என்ற பிரணவம் 
'ஓம்' என்ற ப்ரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்றும் அடக்கம்.

"அ", "உ", "ம" என்று பிரித்து உபாசனை செய்பவர்களும் உண்டு.
"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு.




பரமாத்மாவுக்கு 'மூன்று நிலைகள்' உண்டு.
அதுபோல
ஜீவனுக்கும் 'மூன்று நிலைகள்' உண்டு.

இதை நமக்கு ஓம் என்ற பிரணவம் "அ", "உ", "ம" என்ற மூன்று நிலைகளை காட்டி விளக்குகிறது.

அனைத்து ஜீவனுக்கும் மூன்று நிலைகள் இருக்கிறது.

  1. 'விழித்து (ஜாக்ரத்) இருக்கிறான்' என்பது முதல் நிலை.
  2. 'கனவு (ஸ்வப்னம்) காணுகிறான்' என்பது இரண்டாவது நிலை.
  3. 'தூங்குகிறான் (சுஷுப்தி)' என்பது மூன்றாவது நிலை.
இந்த மூன்று நிலையிலும் 'ஜீவன் ஒருவன் தான்' இருக்கிறான். ஆனால் மூன்றும் வேறு வேறு நிலை.

  1. விழித்து (ஜாக்ரத்) இருக்கும் நிலையில் ஜீவனுக்கு, 'விஸ்வன்' என்று பெயர்.
  2. கனவு (ஸ்வப்னம்) காணும் நிலையில் ஜீவனுக்கு, 'தைஜஸன்' என்று பெயர்.
  3. தூங்கும் (சுஷுப்தி) நிலையில் ஜீவனுக்கு, 'பிராக்ஞன்' என்று பெயர்.

ஜீவனாகிய நமக்கே மூன்று நிலைகளில், மூன்று பெயர் உண்டு.

ஜீவன் மூன்று நிலையில் இருப்பது போல,
பரமாத்மா வாசுதேவனும், "மூன்று நிலையில் இருக்கிறார்".


  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது, ஒரு நிலை.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  இரண்டாவது நிலை.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  மூன்றாவது நிலை.
இப்படி ஜீவனை போலவே, பரமாத்மாவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.

  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "ப்ரத்யும்னன்" என்று பெயர். ப்ரத்யும்னன் அம்சமாக 'ப்ரம்ம தேவன்' இருக்கிறார்.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை செய்யும் போது, , பரமாத்மாவுக்கு "அனிருத்தன்" என்று பெயர். அனிருத்தன் அம்சமாக 'மஹா விஷ்ணு' இருக்கிறார்.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "சங்கர்ஷணன்" என்று பெயர். சங்கர்ஷணன் அம்சமாக 'ருத்ரன்' இருக்கிறார்.


  • படைத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ரஜோ குணத்துடன் ப்ரம்மாவாக இருக்கிறார்.
  • காத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ஸத்வ குணத்துடன் விஷ்ணுவாக இருக்கிறார்.
  • அழித்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, தமோ குணத்துடன் ருத்ரனாக இருக்கிறார்.
பரவாசுதேவனே, மும்மூர்த்திகளாக, மூன்று நிலைகளில் இருக்கிறார். 




விழித்து இருப்பதும், தூங்குவதும், கனவு காண்பதும் 'ஒருவனே' என்பது புரிந்து கொள்ளும் போது, 
பரவாசுதேவனே மூன்று நிலைகளில் ப்ரம்ம தேவனாகவும்,  ருத்ரனாகவும், மஹாவிஷ்ணுவாகவும் இருக்கிறார் என்ற சத்தியம் புரியும். 

இந்த ரகசியத்தை 'ஓம்' என்ற பிரணவம் தாங்கி பிடித்து இருக்கிறது. 
'அ உ ம' என்ற மூன்றும் பிரித்து பார்க்கும் போது, 
என்ற சப்தம்  "படைத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம்  "காத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம் "அழித்தல்" என்ற நிலையையும்,  
காட்டுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் பரவாசுதேவன் மட்டுமே இருக்கிறார்.
ஓம் என்ற பிரணவம், "பரவாசுதேவனை குறித்து தியானிக்க செய்கிறது".

அ என்ற படைத்தல் நிலையிலும், 
உ என்ற காத்தல் நிலையிலும், 
ம என்ற அழித்தல் நிலையிலும் தன்னை காட்டிக்கொண்டு,
மூன்றுமாகவும் இருக்கும் பரமாத்மா தன்னை மறைத்து கொண்டு இருப்பதால், "வாசுதேவன்" என்று பெயர். 

ராஜஸ, ஸத்வ, தாமஸ போன்ற குணங்களை தாண்டி,  நிர்குணமான, சித்ஸ்வரூபமான நிலையை குறிக்கிறது பரவாசுதேவனின் ஸ்வரூபம்

நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் இருக்கிறார்.

குணங்களால் பேதங்கள் காட்டும் பரமாத்மா, குணங்களை தனக்குள் அடக்கி, தான் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கும் நிலையிலேயே பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார்.

தன் ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து கொண்டு இருப்பவர் பரமாத்மா.

வைகுண்டத்தில் இருக்கும் இந்த பரவாசுதேவனையே "ஓம்" என்ற பிரணவம் குறிக்கிறது. 

"அ", "உ", "ம" என்று பிரித்து "ப்ரம்ம தேவனை" மட்டும்,  "விஷ்ணுவை" மட்டும், "ருத்ரனை" மட்டும் உபாசனை செய்பவர்களும் உண்டு.

"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு. 

'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மூன்று நிலைகளையும் தன்னில் அடக்கி, நிர்குணமாக இருப்பவர் 'பரவாசுதேவனே' என்ற ஞானத்துடன்  உபாசனை செய்பவர்களும் உண்டு.

இந்த இரண்டு உபாஸனையையும் நம் உபநிஷத் அனுமதிக்கிறது.

விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலையை அனைத்து ஜீவனும் அனுபவிக்கிறார்கள். 
நான்காவது நிலையையும் சில உத்தம ஜீவன்கள் அனுபவிக்கிறார்கள். 
அந்த நிலைக்கு "சமாதி" என்று பெயர்.
அந்த நிலையில் இருப்பவனை "துரீயன்" என்று சொல்கிறோம்.

விழிப்பு நிலையில், ரஜோ குணமும்,
ஸ்வப்ன நிலையில், சத்வ குணமும்,
தூக்க நிலையில், தமோ குணமும் வெளிப்படுகிறது.

எப்படி ஓம் என்ற நிலையில், இந்த மூன்று குணங்களும் அடங்கி, நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் மட்டுமே இருக்கிறாரோ,
அதுபோல,
சமாதி என்ற நிலை ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, குணங்களை கடந்த நிலையை ஜீவன் பெறுகிறான்.




ஓம் என்ற பிரணவத்தின் மூல பொருளான பரவாசுதேவனை, சமாதி நிலையில் ஜீவன் சேருகிறான்.
இந்த நிலையில், ஜீவனும் குணங்களை கடந்து, நிர்குண நிலையை அடைந்து ப்ரம்மத்தோடு லயிக்கிறான்.
இப்படி சமாதி நிலையில், ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தமான நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனை புரிந்து கொள்ள வேண்டும்
என்று சாஸ்திரம் சொல்லி இருக்க,
அதே நிர்குண பரவாசுதேவன் இந்த திருமாலிருஞ்சோலையில் அர்ச்சா விக்ரக ரூபத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறாரே !!"
என்று ஸ்தோத்திரம் செய்தார்.

"சமாதி நிலையில் அறியக்கூடிய நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, யாரும் பார்க்கும்படியாக தன்னை சுலபமாக்கிக்கொண்டு, கள்ளலழகராக இருக்கிறார்" 
என்று மண்டூக ரிஷி, பெருமாளை பார்த்து ஸ்தோத்திரம் செய்தார்.

இந்த மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளழகர் சோலைமலையை விட்டு, 20 கிலோமீட்டர் குதிரையில் வந்தார்.
அந்த காட்சியை இன்று சித்திரை மாதம் போனாலும், கள்ளழகர் 20 கிலோமீட்டர் குதிரையில் வந்து, வைகையில் ஒரு நொடி இறங்கிவிட்டு, நேராக மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் உற்சவத்தை நம் கண்ணால் ரசிக்கலாம்.

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.

இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.

பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பெருமாளை கொஞ்ச, 
கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையையே கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.




பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)

"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.

பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.

இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.



Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Wednesday 27 December 2017

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.