Followers

Search Here...

Showing posts with label வந்தனம். Show all posts
Showing posts with label வந்தனம். Show all posts

Wednesday 31 July 2019

100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...

அற்புதமான பிரார்த்தனை...
100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை.
மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?



அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...


பஸ்யேம (கண்டு வணங்குவோம்) சரத: சதம் (நூறாண்டு),

ஜீவேம (உயிரோடு வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

நந்தாம (உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்) சரத: சதம் (நூறாண்டு),

மோதாம (மகிழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

பவாம (கீர்த்தியுடன் விளங்குவோம்) சரத: சத: (நூறாண்டு),

ச்ருணவாம (இனியதை கேட்போம்) சரத: சதம் (நூறாண்டு),

ப்ரப்ரவாம (இனியதையே பேசுவோம்) சரத: சதம் (நூறாண்டு)

அஜீதாஸ்யாம (தீமைகள் அண்டாமல் வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

ஜ்யோக்ச (இங்கனம் நீண்ட காலம்) ஸூர்யந் (சூரியதேவனை) த்ருசே (பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்)!




மேலும் தெரிந்து கொள்ள....
https://youtu.be/q3gr3oWadqs

"தெய்வத்திடம் சரணாகதி செய். தெய்வத்திடம் எதுவும் கேட்காதே... 
அவர் எப்படி உன்னை வைத்து இருக்கிறாரோ, அது அவர் இஷடம் என்று இரு.
நாயாக, பன்றியாக பிறக்காமல், உனக்கு மனித  உடல் கொடுத்துள்ளாரே. இந்த கருணையை நினைத்து பக்தி செய். 
பெருமாளின் அருளை பாடு" என்று சொல்லும் நம் வேத சாஸ்திரமே, "இப்படி ஒரு பிரார்த்தனையும் செய்!" என்று நமக்கு சொல்கிறது.

100 வயது வாழ வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை.
சும்மா 100 வருடம் வாழ்ந்தால் போதுமா?

100 வயது கிழவன் ஆகி, கண் தெரியாது வாழ்ந்து விட கூடாது.
சினிமா, ஆட்டம் பார்க்கவா 100 வயது வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும் கண் தெரிந்து வாழ வேண்டும். அந்த கண்  தெரிந்தால் தெரிந்தால் தானே கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து ரசிக்க முடியும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது நான் மட்டும் வாழ்ந்து, என் உற்றார் உறவினர் எல்லாம் இறந்து விட கூடாது. அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், என்  உற்றார் உறவினர்கள் கூடிக் குலவ நான் வாழ வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.


100 வயது துக்கமாக வாழ்ந்து என்ன பிரயோஜனம்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது ஆகி, இவன் எதற்காக இன்னும் உயிருடன் இருக்கிறான்? என்று பேரன் பேத்திகள் கேட்கும் படிவாழ்ந்து விட கூடாது.. அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், புகழுடன் வாழ வேண்டும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.


சினிமா, ஆட்டம் பார்க்கவா 100 வயது வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், இனிமையான ஸத் ப்ரவசனங்களை என் காது கேட்க வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது வரை வாழ்ந்தும், கோபம் பொறாமை உடையவானாகவா வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், இனிமையாக பேசுபவனாக என் வாய் இழுத்து விடாமல், பேசி கொண்டு இருக்க வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது வரை வாழ்ந்தும், பல கஷ்டங்கள் வந்து துன்பப்படும் படியாக வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், ஒரு கஷ்டமும் வராமல், தீமைகளே அண்டாமல் இருக்க வேண்டும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

"தெய்வத்திடம் எதையும் பிரார்த்தனை செய்யாதே ! 
தெய்வம் பார்த்து என்ன செய்ய நினைக்கிறதோ நடக்கட்டும்" என்று சொல்லும் வேதம், இப்படி ஒரு சுயநலமான பிரார்த்தனையும் செய்ய சொல்கிறது.

இதற்கு காரணம், வேதம் நம்மிடம் வைத்து இருக்கும் பிரியமே !!

"நாராயணனே கதி, அவர் பார்த்து என்ன செய்கிறாரோ செய்யட்டும்!!"  என்று பக்தன் நினைத்தாலும், வேதம் நமக்கா பரிந்து பேசுகிறது...

இப்படி ஒரு பக்தனுக்கு கர்ம வினையை காட்டி, பெருமாள் கஷ்டம் கொடுத்து விட கூடாதே !! என்று கவலை படுகிறது வேதம்.
 
"இப்படி வேளை தவறாமல் சந்தியா வந்தனம் செய்யும் இவனுக்கு, இவன் குடும்பத்துக்கு, இவன் சம்பந்தப்பட்ட யாருக்கும் கஷ்டம் வர கூடாதே!!" என்று கவலை படுகிறது வேதம்.

"இவனாக பெருமாளிடம் கேட்க மாட்டான்" என்று நினைத்து, வேதமே "இப்படி ஒரு பிரார்த்தனை பெருமாளிடம் செய்" என்று சொல்லி, நமக்கும், பெருமாளுக்கும் உறவை வலுப்படுத்துகிறது.

வேதத்திற்கு "சப்த ப்ரம்மம்" என்று பெயர் உண்டு.
ப்ரம்மம் என்றாலே பரமாத்மா நாராயணன் தான்.
அந்த பரமாத்மாவே சப்த ரூபத்தில் வேதமாக இருக்கிறார்.
பக்தன் "பெருமாள் இஷ்டம் என்று இருப்பானே" என்று பெருமாள் கவலைப்பட்டு, தன்னிடம் இவன் வாயாலேயே வேதத்தை கொண்டு பிரார்த்திக்க வைத்து, நீண்ட ஆயுளும், சுகமான வாழ்க்கையும் தானே அமைத்து கொடுக்கிறார். 

Afternoon சந்தியாவந்தனம் with meaning

மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?  
அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...



Wednesday 3 July 2019

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்". அதையும் விட சிறந்தது எது? தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்".


காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது "அஷ்டாக்ஷர மந்திரம்".
"காயத்ரி மந்திரத்தையும்" விட "அஷ்டாக்ஷர மந்திரம்" ஏன் சிறந்தது?
அஷ்டாக்ஷர மந்திரத்தின் விளக்கம் இதோ

கம்சன் கூட "காயத்ரி மந்திரத்தை" ஜபித்தான்.
ராவணனுக்கு புலஸ்திய மகரிஷியே "காயத்ரி மந்திரத்தை" உபதேசம் செய்து, வேத அத்யயனமும் செய்து வைத்தார். தினசரி அக்னி ஹோத்ரம் செய்து வந்தான் ராவணன். ப்ராம்மணன்.
ஹிரண்யகசிபுவும் கஷ்யப ரிஷியிடம் "காயத்ரி மந்திர" உபதேசம் பெற்றவன் தான்.


காயத்ரி மந்திரம் ஜெபித்து விஸ்வாமித்ரர் - "ரிஷி" என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அதே மந்திரம் அனைவரையும் காப்பாற்றவில்லை.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் -  சிசுபாலன், கம்சன், ஹிரண்யகசிபு, ராவணன் அனைவரும் அழிந்து போனார்கள்.
கர்வம் உள்ளவர்களை கை விட்டு விடும் காயத்ரி மந்திரம்.

நாராயண மந்திரம், தீயவனாக இருந்து ஜபித்தாலும், நரர்களான நமக்கு பரமாத்மாவான நாராயணனை துதிப்பதால், நம் தீய குணத்தையும் சரி செய்து, நம் பக்தியை உயர்த்தி, மோக்ஷம் வரை கிடைக்க செய்திடும்.

விளையாட்டாக, தன் மகனை "நாராயணா" என்று மரண தருவாயில் கூப்பிட்ட அஜாமிலன் போன்றவர்கள் கூட, மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள்.
திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.

ஆனால் காயத்ரியை ஜெபித்து 'எல்லோரும்' கறையேறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலக தர்மத்துக்காக கொடுக்கப்பட்டது காயத்ரி மந்திரம். காப்பாற்றினாலும் காப்பாற்றும். ராவணன் போன்றவர்கள் ஜபித்தால்,  கைவிட்டாலும் கைவிடும்.
பகவானால் கொடுக்கப்பட்டது திருவஷ்டாக்ஷர மந்திரம். இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும். மந்திரத்தை ஜபித்தவனை கை விடவே விடாது.


காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால், காயத்ரி தேவி பலன் கொடுக்கிறாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கு சாஷாத் பரமாத்மா நாராயணனே பலன் தருகிறார் என்பதால், இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும்.
"நமே பக்த ப்ரநஸ்யதி" என்று
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று பகவானே வாக்கு கொடுக்கிறார்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
அனைவரையும் காப்பாற்றக்கூடியது.

மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது. நிச்சயமாக மோக்ஷம் வரை தர கூடியது என்று கண்டு கொண்ட ஆழ்வார்கள்,
"கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆனந்தபட்டதில் ஆச்சர்யம் இல்லையே.
4000 திவ்ய ப்ரபந்தமும் நாராயணனையே துதி செய்கிறது.

அதே நாராயணன் தான் நமக்காக கோவிலில் அர்ச்ச அவதாரம் செய்து, நமக்காக காலம் காலமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சிலையாக அர்ச்ச அவதாரமாக நாராயணன் கோவிலில் இருக்கிறார்.. அவர் பேசுவாரா?
கல்லாக காட்சி கொடுக்கும் அவரிடம் எப்படி பக்தி செய்வது?
என்று நாம் நினைப்போம் என்று தானோ, ஆழ்வார்கள் பூமியில் அவதரித்து, கோவிலில் இருக்கும் அதே அர்ச்ச அவதார பெருமாளிடம் பக்தி செய்து காட்டி, திவ்ய பிரபந்தங்களை பாடியும், பேசியும் பக்தி செய்து, நமக்கும் அந்த திவ்ய பிரபந்தங்களை கொடுத்து விட்டனர்.






'சாஷாத் நாராயணன், அர்ச்ச அவதாரமாக உள்ளார்' என்று அறிந்தும், மோக்ஷத்துக்கு ஆசைப்படும் ஆழ்வார்கள் பக்தி செய்யாமலா இருப்பார்கள்.

அவர்கள் அர்ச்ச அவதாரமாக இருக்கும் நாராயணனிடம் பேசி, உரையாடியதை 4000 திவ்ய ப்ரபந்தமும் நமக்கு காட்டுகிறதே...

கோவிலுக்கு, சென்று பெருமாள் முன் நிற்கும் போது, ஏதாவது சொல்லி பேச வேண்டும் என்று பக்தியுள்ள நமக்கு தோன்றும்.
ஒரு பாசுரம் மனப்பாடம் செய்து சொன்னாலும் மனதில் பக்தி துளிர்க்குமே...  ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

சிலர் பேசினாலும் ப்ரயோஜனமில்லாத பேச்சாக இருக்கும்.
பெருமாள் பேசாமல் இருந்தாலும், ப்ரயோஜனமாக இருக்கும்.

பெருமாள் சந்நிதி முன் பக்தன் நிற்கும் போது, பேசாமல் இருக்கிறார் என்று போல தோன்றினாலும், பெருமாள் நம்மிடம் பேசாமல் பேசுகிறார்.

நம் பக்தியை பொறுத்து, நாம் என்ன நினைத்து நிற்கிறோமோ, அதை செய்து கொடுக்கிறார் பெருமாள்.

பக்தன் பெருமாள் சன்னதியில் நின்று கண்ணீர் விடுகிறான். 'மனதில் உள்ள ஒரு குறையை, தெய்வம் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
அங்கு அர்ச்சகர் வேறு யாரையோ பார்த்து "கவலைப்படாதீர்கள்.. பெருமாள் உங்கள் குறையை தீர்ப்பார்" என்று சொல்கிறார்.

தன் குறையை பெருமாளிடம் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த பக்தனுக்கு, அர்ச்சகர் சொல்வது காதில் விழுகிறது.
தனக்கு ஏற்பட்ட குறைக்கு, அர்ச்சகர் மூலமாக பெருமாள் தான், தனக்கு பதில் சொல்கிறார் என்று பெரும் நிம்மதியை அடைகிறான் பக்தன்.


பக்தியின் முதல் படியில், பகவான் பேசும் முறை இது.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன்,
தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் யாரோ ஒருவனை போல வந்து "நீ திருப்பதி போ... " என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்து பக்தன் திருப்பதி செல்ல, அவன் குறைகள் தானாக தீருகிறது.

தன்னிடம் பெருமாள் பேச ஆசைப்படுகிறார், வழி காட்டுகிறார், காப்பாற்றுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பெருமாளே திவ்ய காட்சி கொடுத்து, பேச ஆரம்பிக்கிறார்.
"தான் இப்படி ஒரு திவ்யமான காட்சி கண்டோமே" என்று தனக்குள்ளேயே ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாள் பெருமாளிடம் பக்தி செய்து, பெருமாளை அடையவேண்டும் என்று திருப்பாவை இயற்றினாள். பெருமாளையே மணம் முடிக்க முடிவு செய்தாள்.
ஆண்டாளுக்கே பெருமாள் முதலில் கனவில் தான் காட்சி கொடுத்தார். இதை ஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் தான் கண்ட கனவை, கனவில் தன்னை பெருமாள் மணந்ததை சொல்கிறாள் ஆண்டாள்.

வாரணம் ஆயிரம் சூழ
வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதற்கு பின்பு தான் பெருமாள் உண்மையிலேயே வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார்.

தெய்வ கனவுகள் எதுவுமே வீணான கனவுகள் இல்லை.

வேண்டாத கன்னா பின்னா கனவுகள் தான் எப்போதும் வரும். அது தான் இயற்கையும் கூட.

திவ்ய கனவுகள் அபூர்வமாக தான் வரும்.
திவ்ய கனவுகள் தெய்வ அருளால் மட்டுமே காண்கிறோம்.

தெய்வ கனவுகள் நமக்கு ஏற்பட்டால் அதுவே பாக்கியம்.

தூங்குவதற்கு முன், தினமும் "நாராயணா.. நாராயணா.." என்று தெய்வ பக்தியுடன் (அன்புடன்) உண்மையாக பகவானை பிரார்த்தித்து, நமக்கும் திவ்ய காட்சிகள் கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தித்து பின் தூங்க செல்லலாம்.
நம் உண்மையான அன்புக்கு, பகவான் ஒரு நாள் அணுகிரஹம் செய்வார்.

பகவான் நமக்கு ஏதாவது ரகசியமாக ஏதாவது சொல்ல நினைத்தால், கனவு மூலம் தெரிவிப்பார்.
பெருமாள் நேராக வந்து சொல்லலாமே என்று கேட்கலாம். அவர் வருவதற்கு தயாராக இருந்தாலும், நம் நம்பிக்கை, பக்குவத்தின் நிலையை அறிந்து இருப்பதால், வராமல் இருக்கிறார்.

உலக ஆசைகளே இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகாத்மாக்களே, கிருஷ்ண தரிசனத்தை நேரில் பெற்ற பின், உன்மத்தமான நிலையை அடைந்து, உலக நினைவில்லாமல் இருந்தனர்.
அவர்களால் கூட தான் கண்ட திவ்ய காட்சியை ஜீரணித்துக்கொண்டு, உலகத்தோடு பழக முடியவில்லை.

கனவில் காட்சி தரும் பகவான், நேரில் வந்து நமக்கு காட்சி கொடுத்தால், நமக்கு உள்ள பக்குவ நிலையில் தாங்கி கொள்ள முடியாமல் உயிர் பிரிந்து விடும் இல்லை மனம் பேதலித்து விடும்.

நம் பக்தியை உயர்த்தி விட தான் பெருமாளுக்கு விருப்பமேயொழிய நம் உயிரை பறிப்பதில் விருப்பம் இல்லை.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பேச ஆரம்பித்த பெருமாள், ஆபத்தான காலங்களில், சமயத்திற்கு யாரோ போல வந்து உபகாரம் செய்து விட்டு மறைந்து விடுவார்.
துளசிதாஸ், நாம தேவர், சக்குபாய், பத்ராசல ராமதாசர் போன்ற பக்தர்கள் வாழ்வில் பாண்டுரங்கன் யாரோ போலவோ வந்து, சமயத்தில் சக்குபாய் போலவும் வந்து லீலைகள் செய்தார்.

தன்னிடம் பெருமாள் உறவாட ஆசைப்படுகிறார் என்று புரிந்து கொண்டு, மேலும் பெருமாளிடம் பக்தி செய்ய,
அர்ச்ச அவதாரமாகவே இருந்தாலும், பெருமாள் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் பேசினால், பேசுவது மட்டுமின்றி, அவர் கூப்பிட்டார் என்றதும், கல் சிலையாக இருந்து கொண்டே, எழுந்து கொண்டு அவருடன் கிளம்பி விட்டார் காஞ்சியில் என்று பார்க்கிறோம்.
யதோகத்காரி பெருமாள், திருமழிசை ஆழ்வார் கூப்பிட்டார் என்று கிளம்ப, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

நாராயணா என்று சொல்லும் அனைவருக்கும் மோக்ஷம்.
நாராயணா என்று சொல்லும் யாருமே நாசம் போவதில்லை.
நாராயணா என்று பக்தியுடன் சொல்ல சொல்ல, பகவான் நாராயணன் தன்னை வெளிக்காட்ட ஆசைப்படுகிறார். மறைமுகமாக தான் இருப்பதை உணர செய்து, பக்தியை (தன்னிடம் அன்பு) ஏற்படுத்தி, படிப்படியாக தன்னை வெளிக்காட்டுகிறார் பெருமாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.


ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம். 


Friday 25 May 2018

Want to live 100 years? - Duty of Brahmin (Sandhya Vandanam Prays for everyone)


Want to live 100 years?

Look at the beauty of mantra in afternoon sandhya vandanam.  

After reading this, do a brahmin ignore doing such beautiful boon from surya narayana?

If Brahmin start doing sandhya vandanam, he just not pray as selfish but pray for entire community.  

Look at the beauty of mantra which is inclusive and ask for all happiness.
Can't we chant this mantra in afternoon?
Can't we be selfless and pray for everyone daily?

Can't we do our duty called sandhya vandanam?

Pasyamey saradha sadham
பச்யேம சரத: சதம்
(நூறாண்டு நாம் வாழ்வதை பார்ப்போம்)
(Let us see our life till we reach 100 years)

Jeeveyma saradha sadham
ஜீவேம சரத: சதம்
(நூறாண்டு காலம் வாழ்வோம்)
(Let us live for 100 years)




Nandhaama saradha sadham
நந்தாம சரத: சதம்
(நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் வாழ்வோம்)
(Let us live with all our relatives together in our 100 years of life)

Modhaama saradha sadham.
மோதாம சரத: சதம்
(நூறாண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம்),
(Let us lead happiest life in our 100 years of life)

Bavaama saradha sadham.
பவாம சரத: சத:
(நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்)
(Let us live with fame and pride in our 100 years of life)

Srunvaama saradha sadham.
ச்ருணவாம சரத: சதம்
(நூறாண்டு காலமும் இனியதை கேட்போம்)
(Let us hear only the good things in our 100 years of life)

Prappravaama saradha sadham
ப்ரப்ரவாம சரத: சதம்
(நூறாண்டு காலமும் (இனியதையே பேசுவோம்) 
(Let us speak only good things in our 100 years of life).

Ajeedhaasyaama saradha sadham.
அஜீதாஸ்யாம சரத: சதம் (நூறாண்டு காலமும் தீமைகள் அண்டாமல் வாழ்வோம)
(Let us live without miseries, worries in our 100 years of life)

Jyoksa sooryan dhrusey
ஜ்யோக்ச ஸூர்யந் த்ருசே
(இங்கனம் 100 ஆண்டு காலமும், நீண்ட காலம் சூரியதேவனை பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்)
(We pray and wish to see lord surya for such long years and enjoy this life)

Afternoon சந்தியா வந்தனம் with meaning
https://youtu.be/q3gr3oWadqs

Interested to Read More? Click Here -> How was Nepal during Mahabharata Period? Want to know who ruled during these period?



Wednesday 27 September 2017

சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன? நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?




நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?
சந்தியா வந்தனத்தில்,
ஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன?

ஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.

உருவாக்கப்பட்ட பிற மதங்கள் "நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.

சனாதன தர்மத்தில் இருக்கும் நாம், "வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வரை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்" என்று சொல்கிறோம்.

நம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.





இவர்கள் கண்டுபிடித்த
ஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.
ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.

நாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,
காயத்ரி மந்திரம் சொல்லும் முன்,
நாம்
காயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,
காயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது  மூக்கை தொட்டும்,
காயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.

சந்தியா வந்தனத்தில்,
ப்ரணவ ஜபம் செய்யும் முன்:
ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம,
தேவீ காயத்ரீச் சந்த:
பரமாத்மா தேவதா !
என்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.
இதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.
இங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

விளக்கம்:
ப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,
இந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்?
எப்படி சொல்ல வேண்டும்?
யாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது ?
என்று தியானிக்கிறோம்.
பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம
இங்கு, நம் தலையை தொட்டு "ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி" என்று சொல்கிறோம்.

வேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.

2. தேவீ காயத்ரீச் சந்த:
பின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் "தேவீ காயத்ரீ சந்தஸ்"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.


ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,
மந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.

3. பரமாத்மா தேவதா
பின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.

ஸ்வயம் ப்ரம்மாவே, "இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்" என்று உணர்ந்து, "ப்ராணாயாம மந்திரம்" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.

முக்கியமாக 7 சந்தஸ் உண்டு:
ப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, "காயத்ரீ சந்தஸில்" உள்ளன.

பெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் "அனுஷ்டுப் சந்தஸில்" உள்ளன.

"அனுஷ்டுப் சந்தம்" என்பது "மொத்தம் 32 சொல்லுடன் கூடியது".
நான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.
மொத்தம் 32 சொல்.

"காயத்ரி சந்தம்" என்பது "மொத்தம் 24 சொல்லுடன் கூடியது".
மூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல். 
மொத்தம் 24 சொல்.

காயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் "காயத்ரி சந்தஸில்" சொல்ல வேண்டும்.
தத் வி துர் ரே னி யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!

இப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.

ஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.

காயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், "நிச்ருத் காயத்ரி" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.

நிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,
தத் வி துர் ரே ன்யம்
பர் கோ தே ஸ்ய தீ ஹீ !
தி யோ யோ ந: ப்ர சோ யாத் !!
என்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.

ஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: ! என்று  எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.

நிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,
ஸாவித்ர்யா ருஷிர் விச்வாமித்ர: ! 
நிச்ருத் காயத்ரீச் சந்த: ! 
ஸவிதா தேவதா !!
என்று சொல்லி, "தலை, மூக்கு, இதயத்தை" தொடுகிறோம்.
இங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

ப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.

"ஓம்" என்ற மந்திரத்தின் மறு உருவான, "காயத்ரி மந்திரத்தை" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.

"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.




காயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், "காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்" என்று இதயத்தை தொடுகிறோம்.
இங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.

இந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka