Followers

Search Here...

Showing posts with label ஹிந்துக்கள். Show all posts
Showing posts with label ஹிந்துக்கள். Show all posts

Wednesday 15 May 2019

ஹிந்துக்கள் ஏன் கேலிக்கு ஆளாக வேண்டி உள்ளது?ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...




ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது
போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..
கோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.

கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.
பள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.

பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே!!' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.



மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.

ஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. !! பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிிந்துவா? கிறிஸ்தவனா? என்று குழம்பும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.






பெண்கள் "பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
அதே சமயம், இஸ்லாமிய பெண்களுக்கு "முகத்தை காட்டவே அனுமதி இல்லை" என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.

"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ!!' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.


"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.

கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
"போலீஸ் வேலை சேர்ந்தால்", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"ஆஃபீஸ் சென்றால்", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"கூர்க்கா வேலை செய்தாலும்" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன், 
"மற்ற மதத்தவன்" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,
தன் கோவிலுக்கு செல்லும் போது, "நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்? நான் ஏன் புடவை அணிய வேண்டும்? இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.

ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,
"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..

'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,
லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.

உலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயலுகிறான்.

"கோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன?" என்று கேட்கிறான்.
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது?' என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.
இது பக்தியா? பொறாமை அல்லவா இது !! 
இது போன்று பேசுபவர்களை  ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா?

'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் கூட செய்யுமே... 

பொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆசாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது? அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.

இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
தன்னை யாரும் கேலி செய்வார்களோ! என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த  அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.


பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,

தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள "அர்ச்சகனுக்கு",

  • "வேதம்" தெரிந்து இருக்க வேண்டும்.
  • சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.
  • பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.
  • பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
  • நாவடக்கம் வேண்டும்.
  • இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
  • ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
  • 'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.
  • 'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.
  • வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்

என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,
குடுமி, கச்சம் இல்லாமல்,
வேதம் கற்காமல்,
ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,
அர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'.  
இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.

அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?, வேதம் ஓதாமல் மூல விக்ரகத்தை தொட்டால் என்ன?' 
என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.


மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.

இருவருக்குமே, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.

ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.

ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam -  Morning (With Meaning)



Sandhya Vandanam -  Afternoon (With Meaning)

Sandhya Vandanam -  Evening (With Meaning)







Wednesday 27 March 2019

குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து பெயர் வைக்க வேண்டும்? கட்டுமரம் (wood), இடி(thunder) என்று இயற்கை பெயர்களை உண்மையான ஹிந்துக்கள் வைத்துக்கொள்வதில்லையே, ஏன்?

'க்ஷத்ரபந்து' என்று ஒருவன் இருந்தான். பிறப்பால் ஒரு "பிராம்மணன் அவன். 
இருந்தாலும், "ஆத்ம ஞானத்தை" சம்பாதிக்க நாட்டம் இல்லாமல் இருந்தான்.
"தெய்வ சிந்தனை இல்லாமல்", வாழ்க்கையை செலவழித்து கொண்டிருந்தான்.


"பரப்ரம்மத்தை" உபாசிக்காமல், அவனுடைய செயல்கள் "க்ஷத்ரிய" ஸ்வபாவத்திலேயே இருந்தது.

ஒரு க்ஷத்ரியனை போல, 'சண்டை செய்வதிலும், வேட்டை ஆடி பிராணிகளை ஹிம்சை செய்வதிலும்', ஆர்வம் இருந்ததால்,
இவன் 'ப்ரம்ம பந்து'வாக இல்லாமல், க்ஷத்ரியர்களின் பந்துவாக (உறவு) இருந்ததால், இவனுக்கு "க்ஷத்ர பந்து" என்று பெயர் அமைந்தது.

பிராம்மணனாக பிறந்தும், பிராம்மணனுக்கு உரிய காரியங்கள் இவனிடத்தில் இல்லை.
க்ஷத்ரியனை போல வாழ்ந்து கொண்டிருந்த இவனுக்கு, நாளைடைவில் மதுபானம் செய்வது, மாமிசம் உண்பது போன்ற பழக்கங்களும் ஏற்பட, பாவங்கள் அவனுடன் சேர்ந்து கொண்டன.

நரகத்திற்கு சென்று, செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்தால் தான், இவன் செய்த பாவ காரியங்கள் தொலையும், மறு ஜென்மம் கிடைக்கும் என்ற அளவுக்கு இவன் வாழ்க்கை இருந்தது.

ஒரு சமயம் வேட்டையாட, காட்டில் அலைந்து கொண்டிருந்தான் க்ஷத்ர பந்து.

அப்போது வழியில் "சௌனகர்" என்ற ரிஷியை எதேச்சையாக பார்த்து விட்டான்.
சாதுக்களை தரிசித்தாலேயே, நம் சித்தம் ஸுத்தி ஆகி விடும் என்கிறது சாஸ்திரம்.
இது சாதுக்களின் பெருமை.

தீய எண்ணம் கொண்டவனுக்கும் ஒரு சாதுவை கண்டால் 'மன மாற்றம் ஏற்படும்'. நல்வழியில் செல்ல ஆர்வம் ஏற்படும்.

சௌனக ரிஷியை பார்த்த 'க்ஷத்ரபந்து', மனதுக்குள் நினைத்துக்கொண்டான்,
"இவரும் ப்ராம்மணன். நானும் ப்ராம்மணன்.
நான் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்?. இவர் எப்படி வாழ்கிறார் !!
எப்பொழுதும் நாராயணனை மனதில் தியானம் செய்து கொண்டு இருக்கிறாரே இவர் !!
நாமோ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறோமே!!
ஐயோ !! நாமும் அவரை போல வாழ்ந்து இருக்க கூடாதா?"
என்று தன்னை தானே வெறுத்துக்கொண்டான்.

இப்படி நினைத்து கொண்டே, தன் கையிலிருந்த வில், அம்பை முறித்து தூக்கி எறிந்தான்.

நேராக சௌனக ரிஷியின் அருகில் வந்து, சரணத்தில் விழுந்து,
"எனக்கு சன்மார்க்கத்தை (நல்வழியை) காட்டுங்கள்" என்று பிரார்த்தித்தான்.

சௌனக ரிஷி, க்ஷத்ரபந்துவை பார்த்து,
"இனி மது மாமிசம் சாப்பிடுவதை விடு. வேட்டையாடுவதை விடு.
இதுநாள் வரை செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொள். தபசு செய்ய இப்பொழுதே கிளம்பி விடு"
என்று சொல்ல,



க்ஷத்ரபந்து,
"நான் என்னை நம்புவதற்கு இல்லை.
உறைந்து போன நெய்யை, வெயிலில் காட்டும் போது, உருகுவது போல உருகும்.
சரி, உருகி விட்டதே என்று உள்ளே எடுத்து வைத்தால், மீண்டும் உறைந்து விடும்.
அதுபோல,
என் மனதில் ஏதாவது ஒரு உருக்கம் ஏற்பட்டது என்றால், அது உங்கள் ப்ரபாவத்தால் ஏற்பட்டதே தவிர, என் ஸ்வபாவம் இல்லை.
என்னை தனியாக போய் தவம் செய் என்று சொல்கிறீர்கள்.
உங்களை விட்டு சிறிது விலகி சென்றாலும், என் ஸ்வபாவம் மேலோங்கி விடும்.
உருகிய உள்ளத்தோடு இருக்கும் நானே, உங்களை விட்டு விலகி சென்றால், மீண்டும் உறைந்து விடுவேன்.
இரக்கமற்ற வாழ்க்கை மீண்டும் வாழ ஆரம்பித்து விடுவேன். என்னை நானே நம்புவதற்கு இல்லை.
அதனால், என்னை நீங்கள் அதை செய், இதை செய் என்று சொல்லக்கூடாது.
எதற்கும் தகுதி அற்றவன் நான்.
உங்கள் கருணையினால் தான் என்னை நீங்கள் காப்பாற்றவேண்டும்"
என்று சொல்ல,

சௌனக ரிஷி,
"சரி. நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
என்று கேட்க,
"நான் இந்த காட்டில் தான் அலைந்து கொண்டிருப்பேன். ஏதோ கிடைத்ததை வேட்டையாடுவேன்.
கையில் பணம் வேண்டுமென்றால், யார் வீட்டிலாவது புகுந்து கொள்ளையடிப்பேன்.
மற்ற நேரங்களில், நான் வீட்டில் மாடு வைத்து இருக்கிறேன். நேரம் போக, அந்த மாட்டை கவனித்து கொண்டு இருப்பேன்."
என்றான் க்ஷத்ரபந்து.
சௌனக ரிஷ,
"மாட்டை நீ இல்லாத சமயத்தில் பார்த்து கொள்ள வேறு யாரையாவது வைத்து இருக்கிறாயா?"
என்று கேட்க,
"ஆமாம், ஒரு சின்ன பையன் இருக்கிறான். அவன் மாட்டை பார்த்து கொள்கிறான்"
என்று சொன்னான்.
"அவன் பெயர் என்ன?"
என்று சௌனக ரிஷி கேட்க,
"அவன் பெயர் கோவிந்தன்" 
என்று க்ஷத்ரபந்து சொல்ல,
"சரி.. நீ தவம் செய்ய செல்ல வேண்டாம். அடிக்கடி அந்த இடையன் பெயரை கூப்பிட்டு கொண்டே இரு. போ"
என்று அணுகிரஹம் செய்து அனுப்பினார்.





அன்றிலிருந்து, அடிக்கடி
"கோவிந்தா.. மாட்டுக்கு தீனி வைத்தாயா?
கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தாயா?"
என்று அடிக்கடி அவன் பெயரை சொல்லி சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு, "கோவிந்த" நாமத்தை அவன் ஆவர்த்தி செய்து கொண்டே வாழ்ந்து வந்தான்.

மரண காலம் அவனை நெருங்கி விட்டது.
யாருக்கு என்ன கவலை இருக்குமோ, அதை பற்றிய எண்ணம் தான் சாகிற சமயத்திலும் வரும்.

கடைசி மூச்சு போகும் சமயத்தில்
"மாட்டுக்கு தண்ணீர் வைத்தானோ இந்த கோவிந்தன்?" என்று கோவிந்தனின் நினைவு வர,
"கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் வைத்தாயா?.." என்று கேட்க வாயெடுத்த க்ஷத்ரபந்து, "கோவிந்தா..." என்று சொல்லும் போதே உயிர் பிரிந்து விட்டது.
கடைசி நேரத்தில் கோவிந்த நாமத்தை சொன்ன பலனாக, மோக்ஷத்தை கொடுத்துவிட்டார் எம்பெருமான் நாராயணன்.
"கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்" 
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில், 
'பாவங்களையே செய்து வாழ்ந்த க்ஷத்திர பந்துவும் கடைசி மூச்சு விடும் சமயத்தில் "கோவிந்தா" என்று சொன்னதால் நற்கதியான மோக்ஷம் அடைந்து விட்டான்' என்கிறார்.

'க்ஷத்ரபந்து' 'நாராயணனை' நினைத்து, கோவிந்த நாமத்தை சொல்லவில்லை
அந்த இடையனை நினைத்து தான் அழைத்தான். 
ஆனால் பகவன் நாமம் அவனை காப்பாற்றி விட்டது.

பகவானின் நாமத்தை அடிக்கடி சொல்லி சொல்லி, நாக்கும் மனசும் பழகி போக, கடைசி மூச்சு விடும் சமயத்தில், அந்த நாமமே க்ஷத்ரபந்துவை காப்பாற்றிவிட்டது.
அஜாமிளன் போன்று, பகவானின்  நாமத்தை உயிர் போகும் சமயத்தில் சொல்லியதால், மோக்ஷம் அடைந்தான் 'க்ஷத்ரபந்து'


பகவானின் நாமத்தை அடிக்கடி நாம் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் மரண காலத்திலும், அந்த பகவன் நாமமே நம்மை மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

"கோவிந்தா... கோவிந்தா..." என்று அடிக்கடி கூப்பிட்டு கூப்பிட்டு பழகி போன, 'க்ஷத்ரபந்து' மரண சமயத்திலும் "கோவிந்தா..." என்று அழைக்க, அந்த 'கோவிந்தன்' என்ற பெயரின் நிஜமான உரிமையாளன், திவ்ய காட்சி கொடுத்து, "பரம் என்ற வைகுண்டம்" கூட்டி சென்றார்.
பாவங்களையே சம்பாதித்த 'க்ஷத்ரபந்து', பகவன் நாமாவை கடைசி மூச்சு விடும் சமயத்தில் சொல்லி மோக்ஷம் அடைந்து விட்டான்.

'அடிக்கடி பகவன் நாமாவை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பெரியோர்கள் சொல்வதற்கு காரணமும் இது தான்.

நாம் எதை அடிக்கடி வாக்காலும், மனதாலும் செய்கிறோமோ, அதே எண்ணங்கள் தான் மரண சமயத்தில் ஞாபகத்துக்கு வரும்.
'ராம... ராம... ராம..' என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், இறுதி மூச்சு விடும் போதும் "ராம" நாமத்தை சொல்லிக்கொண்டே உடலை விட்டு பிரிகிறார்கள்.

பகவன் நாமாவை சொல்லாமல், உலக, குடும்ப விஷயங்களிலேயே அடிக்கடி எண்ணம் உடையவர்கள், அது போன்ற விஷயங்களை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறார்கள். அது சம்பந்தமாகவே மறு பிறவி எடுக்கின்றனர்.
"பரத ரிஷி", கடைசி மூச்சு விடும் சமயத்தில், தான் வளர்த்த 'மானை இனி யார் காப்பாற்றுவார்களோ?' என்று மான் நினைவுடனேயே உயிரை விட்டார். மறு ஜென்மத்தில் மானாக பிறந்து விட்டார்.

"நாராயணா, ராமா, கோவிந்தா' என்று உயிர் பிரியும் சமயத்தில் சொல்லும் பாக்கியவான்கள், வைகுண்டம் அடைந்து விடுகிறார்கள்.

நாமும் மறு பிறவி எடுக்காமல் "வைகுண்டம்" அடைய, அடிக்கடி பகவன் நாமாவை சொல்ல வேண்டும்.

உலக வாழ்க்கையில் துக்கமே அதிகம்.
உலக வாழ்க்கை நிரந்தரமற்றதும் கூட. இளமையும் நிரந்தரமில்லை.

உலகம் நிரந்தரமற்றது, துக்கமே நிறைந்தது என்று அறிந்து, மறு பிறவி எடுக்காமல், மோக்ஷத்திற்கு ஆசை பட வேண்டும் என்று மகான்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.


பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்
"அநித்யம் அசுகம் லோகம், இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்"  (9 Chapter, 33 sloka)
என்று சொல்லும் போது,
'இந்த உலகம் உன்னை பொருத்தியவரை  'நிரந்தரமற்றது, துக்கம் நிறைந்தது' என்று அறிந்து, உலகத்தின் மீதான  பற்றை விட்டு விட்டு, என் நாமத்தை எப்பொழுதும் பஜித்து ( சொல்லி) கொண்டிரு' 
என்கிறார்.

"ராம நாம ஜபம் தினமும் 2 மணி நேரமாவது செய்" என்று சொன்னாலும், கலியில் உள்ள மனிதர்களால் முடிவதில்லை.

"உடல் அளவில், மனதளவில் உறுதி இல்லாதவர்களாக" கலியில் பிறக்கிறோம்.

ஒரு நாள் ஏகாதேசி அன்று மட்டும் 'பட்டினி இரு' என்று சொன்னால், கலியில் உள்ள நம்மால், ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. 

கடந்த யுகங்களில், ரிஷிகள் பல நாட்கள் தவம் செய்தது ஆச்சர்யமில்லை.
அசுரன், ராக்ஷஸர்கள் கூட, பல நாட்கள் சாப்பிடாமல் தவம் செய்து தெய்வங்களிடம் வரம் வாங்கினர் என்று பார்க்கிறோம்.
சிலர், தெய்வங்களையே அடைக்கவும் முயற்சித்தனர் என்றும் பார்க்கிறோம்.

பகவன் நாமாவை தொடர்ந்து சொல்ல கூட முடியாத நிலையில் துர்பலமாக இருக்கும் நமக்கு, ஆழ்வார்கள் வழி காட்டுகிறார்கள்.

வெறுமனே "ராம ராம ராம..." என்று சொல்லும் போது, ஆரம்பத்தில் தூக்கம் கூட வர வாய்ப்பு உண்டு.
ராம நாமம் அடிக்கடி சொல்லி சொல்லி பழகியவர்களுக்கு, அந்த நாமமே ருசிக்க ஆரம்பித்து விடும்.
அடிக்கடி பகவன் நாமத்தை நம் நாக்கு சொல்ல பழக்க வேண்டும்..
ஆரம்ப நிலையில், வெறும் நாமமாக சொன்னால் தூக்கம் வருகிறது.
"அடிக்கடி நம் வாயில் பகவானின் நாமம் வருவதே முக்கியம்" என்பதால்,
நம் குழந்தைகளுக்கு "கோபால்", "கோவிந்தன்" "ராமன்" என்று பெயர் வைத்து, குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொண்டே இருங்கள், என்று பக்தியை நமக்கு சுலபமாக்கி கொடுத்தார்கள் ஆழ்வார்கள் .

குழந்தைக்கு பகவானின் நாமாவை பெயராக வைத்து கூப்பிட்டு கொண்டே இருங்கள். குழந்தையை அழைக்கும் போதெல்லாம் பகவான் நாமாவை அடிக்கடி சொல்லி சொல்லி பழக, நம் உயிர் போகும் தருவாயில், அந்த நாமத்தின் உரிமையாளன் "நாராயணன்" நமக்கு காட்சி கொடுத்து பரலோகமான வைகுண்டம் அழைத்து செல்வான் என்கிறார் பெரியாழ்வார்

நம் பிள்ளைக்கு "கோபால்" என்று பெயர் வைத்து விட்டால், பிள்ளையை கூப்பிடும் சாக்கில், "கோபாலா.. கோபாலா..." என்று கூப்பிடலாம்.
தாய் தகப்பனுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவருமே, பகவானின் நாமாவை பஜனை செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்.
ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து தெய்வங்களின் பெயர் வைப்பது அவசியம். அதன் மூலமாக நாம் அனைவரும் அவன் நாமத்தை அடிக்கடி உச்சரிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியமும் காரணம் இல்லாமல் இல்லை.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka




Wednesday 6 March 2019

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது. ஹிந்துக்கள்? தெரிந்து கொள்வோமே...

உங்கள் கடவுள் பெயர் என்ன?
இப்படி ஒரு கேள்வியை, பிற மதத்தவர்களிடம் கேட்டால், தெளிவாக ஒரே தெய்வத்தை தான் சொல்வார்கள்.

இந்த கேள்விக்கான பதிலை பிற மதங்களில் உள்ளவர்கள் போல,
உலகம் முழுவதும் பரவியுள்ள சனாதன தர்மத்தில் உள்ள  ஹிந்துக்களால் "ஒரே பதிலாக" சொல்ல முடியாது.


"பல தெய்வங்கள் உண்டு" என்று சனாதன வேதமே காட்டுகிறது.

விஷ்ணு, ருத்ரன், வருணன், இந்திரன், ப்ரம்மா, அக்னி" என்று பெயர் சொல்லி அழைக்கிறது.
இதனால்,
ஒரு ஹிந்துவை பார்த்து "உன்னுடைய கடவுள் யார்?" என்று கேட்டால்,
அவன் "முருகன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "விஷ்ணு" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "காளி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "சிவன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரஞ்ஜோதி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "ப்ரம்மம்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரமாத்மா" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால்,  பரமாத்மா எங்கும் இருப்பதால், எனக்குள்ளும் இருப்பதால், "நானும் கடவுள், நீயும் கடவுள், அனைத்துமே கடவுள்" என்பான்.

தெய்வத்தை பற்றிய போதிய அறிவோ, ஆராய்ச்சியோ இல்லாததால், பிற மதங்களில் "ஒரே தெய்வம்" தான், என்று சொல்லி முடித்து விடுகிறது.

இப்படி சொல்லி விடுவதால், சந்தேக கேள்வி எழுந்தாலும், 'தெய்வத்தை பற்றி ஆராய்ச்சி செய்யாதே, எதிர் கேள்வி கேட்காதே' என்று கட்டளை இட்டு தடுக்கிறது.

'நான் சொல்லும் தெய்வத்தை நம்பு, இல்லையென்றால் நிரந்தரமாக நரகம் தான் கிடைக்கும்'
என்று பயமுறுத்துகிறது.

500BCல், கௌதம புத்தராலும், மஹாவீரராலும் உருவாக்கப்பட்ட பௌத்த, சமண (ஜைன) மதங்களும் "ஒரே தெய்வம்" என்று தான் சொல்கிறது.

33AD சமயத்தில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவ மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

அதற்கு பின் வந்த,
இஸ்லாம் (surrender to god) மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

இந்த இரு மதங்களும், யூத மதத்தை உருவாக்கிய "ஆப்ரஹாம் என்ற இப்ராகிம்" அவர்களின் அடிப்படை கொள்கையான "ஒரே கடவுள்" என்பதை கொண்டு உருவாக்கப்பட்டது.
இரு மதங்களும் இவரை மதிக்கிறார்கள்.

யூத மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.
மூன்று மதங்களும் "ஒரே தெய்வம்" என்ற கொள்கை கொண்டது என்றாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு "மார்க்கங்களை" பின்பற்றுகிறார்கள்.


மார்க்கம் மாறுபடுவதால், இவர்களுக்குள் பகையும் உண்டு.

"இஸ்ரேல் பாலஸ்தீன" சண்டை உலகம் அறிந்தது.
அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்படும் சண்டை உலகம் அறிந்தது.

ஹிந்துக்களின் தர்மத்தில் மேல், வழிபாட்டு முறையின் மேல் இவர்களுக்கு உண்டான வெறுப்பால்,
இந்தியாவுக்குள் 1200 வருடங்கள் நுழைந்த பிற மதங்கள், செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதுவும் உலகம் அறிந்ததே

1200 வருடங்களில்,  பாகிஸ்தான் முதல், மஹாராஷ்டிரா வரை கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன.
கோவிலுக்குள் உள்ள விக்ரகங்களை உடைத்து, பூஜை செய்ய முடியாதபடி செய்து தன் மத நம்பிக்கையை நிலைநாட்ட 1200 வருடங்கள் கடும் முயற்சி செய்தனர். 
உடைந்த கோவில் விக்ரஹங்களை என்ன செய்வதென்று? என்று தெரியாமல், உடைந்த விக்ரஹங்களை கட்டிக்கொண்டு அழுதனர் ஹிந்துக்கள்.
மீண்டும் கோவிலை கட்டினால், இடித்து விடுவார்களே!! என்ற அச்சத்தில், ஆகம விதிப்படி பூஜைகள் இனி நடத்த முடியாது என்ற நிலையில்,
ஊரில் உள்ள பொது ஜனங்களே தன் வீட்டில் இருந்து பால், துளசி, வில்வம் என்று எடுத்து வந்து, இடிந்து போன அந்த கோவிலிலேயே, மூல விக்ரஹங்களை வைத்து, தன் கையாலேயே அபிஷேகம், நெய்வேத்யங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
ஹிந்துக்களுக்கு விடிவு பிறக்குமா? என்று அந்த தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டு, 1200 வருடங்கள் பொது மக்கள், ஆத்திரத்தை மனதில் தேக்கி கொண்டு, காத்து கிடந்தனர்.

கோவிலை தரை மட்டம் ஆக்கி, விக்ரஹங்களை எடுத்து கொண்டு சென்ற போது, தாங்களே ஒரு சிலையை வடிவமைத்து, தன்னால் முடிந்த கோவிலை கட்டி, தாங்களே பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில், மூல விக்ரஹங்களை ப்ராம்மணன் கூட சென்று தொட முடியாது.
ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்ட இந்த விக்ரஹங்களை ஒரு பரம்பரையில் வந்த அரச்சர்கள் மட்டுமே தொட அனுமதிக்கபட்டனர்.
"மற்ற பிராம்மணன் கூட" தொட முடியாது.


கோவிலே இடிக்கப்பட்டு,
விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு போன வட இந்தியாவில்,
பொது மக்களே மீண்டும் சிலைகள் செய்து வழிபட நேர்ந்ததால்,
அங்கு ஆகம பூஜைகள் காண முடிவதில்லை. 

பல கோவில்களில் அங்கு அனைவரும் அபிஷேகம் செய்ய அனுமதிப்பதை பார்க்கிறோம்.
ஹிந்துக்கள் "ஹிந்து" என்று சொல்லிக்கொள்ளவும், பொதுவாக அதிக உத்வேகத்துடன், வீரத்துடன், வட இந்தியாவில் இருப்பதற்கு காரணம் இது தான்.
வட இந்தியர்கள் இழந்தது, தென் இந்தியர்களை விட மிக அதிகம்.
1200 வருடங்கள் அனுபவித்த துயரங்கள் மனதில் இருந்து மீள முடியாத துயரங்கள்.

1200 வருட இழப்புகளுக்கு, சுதந்திரம் பெற்றும் நீதி கிடைக்காமல் இருப்பது, பொதுவாக வட இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்களை உறுத்தி கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

புராதன கோவில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் "வட இந்தியர்கள்".

1200 வருடங்களும் கோவில்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் "மத்திய இந்தியர்கள்" (கர்நாடக, ஆந்திர). 
ஆனால், மீண்டும் மீண்டும் விஜயநகர அரசால், ஓரளவு கோவில்கள் மீண்டும் கட்டப்பட்டது. 

80 வருடங்கள் மட்டுமே தாக்கப்பட்டு, பின்னர் பெரும்பாலும் விஜயநகர அரசாட்சி நிழலில் தப்பித்தது "தமிழகம்".

இப்படி வட இந்தியா முழுவதும், அனைத்து கோவிலும் இடிக்கப்பட்டு, பூஜை செய்த ப்ராம்மணர்கள் அனைவரும் கொல்லப்பட்டு,
எதிர்த்த க்ஷத்ரிய அரசர்களிடம் தோற்கும் சமயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பிறகு அவர்களை திடீரென்று தாக்கி கொன்று, பெரும் நாசத்தை உண்டு செய்தனர்.
இந்த காரணத்தால், இன்று தெற்கு இந்தியாவில் உள்ள கோவில்களை போல, பூஜை விதிகள் போல, வட இந்தியாவில் பூஜைகளோ, கோவிலின் அமைப்போ இல்லை.

கர்நாடக தேசமும், ஆந்திர தேசமும் விஜயநகர பேரரசால் முடிந்த அளவுக்கு காப்பாற்றப்பட்டது. 
இருந்தாலும்,
கர்நாடகாவில் பல கோவில்கள் பாதி இடிக்கப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு, இருப்பதை பல இடங்களில் இன்றுவரை காணலாம்.

தமிழகம் ஆரம்ப காலத்தில் "கில்ஜி மற்றும் துக்ளக்" ஆட்சியின் போது, தாக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி கோவிலை பிடித்தே விட்டனர் பிற மதத்தினர்.


உள்ளே இருக்கும் சிவ லிங்கத்தை உடைக்க சென்ற போது, கோவில் பட்டர்கள் சுவர் எழுப்பி, ஒரு பெரிய மற்றொரு சிவ லிங்கத்தை வைத்து விட்டனர்.
உள்ளே நுழைந்த கில்ஜி படையினர், ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு இடித்து தள்ளினர்.
80 வருடங்கள் பாண்டிய நாடு "மதுரை முதல் ஸ்ரீ ரங்கம் வரை" சிக்கி தவித்தது.
கர்நாடகத்தில் இருந்து, விஜயநகர இளவரசன் கம்பண்ணா படையெடுத்து வந்து, அனைவரையும் துரத்தி, மீண்டும் ஹிந்துக்களை வாழ வைத்தார்.

அந்த இடிக்கப்பட்ட சிவலிங்கம் இன்றும் கோவிலில் வைக்கப்பட்டு நமக்கு நடந்த விபரீதத்தை சொல்கிறது.
ஸ்ரீ ரங்கத்தில் கோவிலை இடிக்க முயற்சித்த போது 13000 வைஷ்ணவர்கள் கொலை செய்யப்பட்டனர். 

ஸ்ரீரங்கநாதர் 80 வருடங்கள் கேரளா, திருப்பதி என்று பல இடங்களில் இருந்து, மீண்டும் ஹிந்துக்கள் ராஜ்யம் அமைந்த பின்னர் ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் இவர்கள் அடி எடுத்து வைக்கும் முன்னரே, விஜயநகர அரசர்கள் தமிழர்களை காப்பாற்றி விட்டனர்.
அதனால் தான் இன்று வரை தமிழகம் மட்டும் பெரும் பாதிப்பில் இருந்து தப்பித்தது.
பீகாரில் உள்ள நாளந்தா (Nalanda University) என்ற கல்விக்காக இருந்த இடத்தை நாசமாக்கி, அங்கு படித்துக்கொண்டிருந்த பௌத்த, மற்றும் ஹிந்துக்களை கொன்று குவித்தனர்.
இதற்கு தலைமை ஏற்ற பக்தியார் (Bhakthiyar) என்ற இஸ்லாமிய படை தளபதி அங்கேயே தங்கி பிஹார் மற்றும் வங்காள தேசங்களை தாக்கினான்.




அவன் பெயரில் ஏற்பட்ட ஒரு ஊர் இன்றும் பக்தியார்பூர் (Bhakthiyarpur) என்ற பெயரிலேயே உள்ளது.
இன்றைய பிஹார் முதல் அமைச்சர் "நிதிஷ் குமார்" இந்த ஊரில் தான் பிறந்தவர்.
பாரத மக்களை கொன்றவன் பெயரிலேயே, இன்று வரை இந்த ஊரின் பெயர் இருப்பது, பிஹார் மாநிலத்துக்கு அவமானம்.
அன்று உயிருக்கு பயந்து திபெத் போன்ற தேசங்களுக்கு ஓடினார்கள் அங்கிருந்த பௌத்தர்கள்.



"நான் சொல்லும் முறையில் தெய்வத்தை வணங்கினால் தான், உனக்கு சொர்க்கம், இல்லையென்றால் நிரந்தர நரகம் தான் கிடைக்கும்"
என்று அவரவர் மார்க்கங்கள் தீர்மானமாக சொல்வதால்,
'ஒரே கடவுள்' என்ற கொள்கை அனைவருக்கும் இருந்தாலும், 'தன் மார்க்கம் தான் சரியானது' என்று சொல்லி மத சண்டைகள் கிளம்பின.
இஸ்லாம் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதற்குள்ளும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
முகம்மது நபி இறந்த பின், ஷியா, சுன்னி என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

ஈரான் நாட்டு ஷியா இஸ்லாமியர்களை கண்டால், அரேபிய சுன்னி முஸ்லிமுக்கு ஆகாது.
ஷியா, சுன்னி முஸ்லிம்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை, அவர்கள் மெக்காவில் ஒரு கல்லை நோக்கி ப்ரார்த்தனை செய்கிறார்கள் என்று, உருவ வழிபாடு எந்த வகையிலும் செய்ய கூடாது என்று மெக்காவையே இடித்து தள்ளவும் முயன்றனர் ஒரு இஸ்லாமிய பிரிவினர் 1979ADல்.
கிறிஸ்தவமும் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதுவும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
Protestant, Catholic என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" தான் என்று சொல்லி 33AD,  570ADகளில் உருவான மதங்களில் கூட பல மார்க்கங்கள் உண்டாகி விட்டன. 

"உருவ வழிபாடு கூடாது" என்று சொல்லும் இவர்களும்,
சிலுவை, ஏசுவின் சிலை, தேர் இழுப்பது, வழிபாடு செய்ய ஏதுவாக மசூதி, சர்ச், அதற்கான ஒழுக்கமான  உடைகள் என்று வைத்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" என்று சொல்லும் பிற மதங்களில், பல மார்க்கங்கள் உண்டாகி உள்ள போது,
"பல தெய்வங்கள் உண்டு" என்று சொல்லும் சனாதன வேதம், பல மார்க்கங்களை கொண்டிருப்பது ஆச்சர்யம் இல்லையே!!.

சனாதன வேதம் "பல தெய்வங்களை காட்டி, அந்த தெய்வங்களை பூஜிக்கலாம்" என்று சொல்லும் போது, பல மார்க்கங்கள் இருப்பது ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே !

சனாதன தர்மமான நம் ஹிந்து மதத்தை (வேத மதத்தை) ஆர்வத்தோடு அறிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.
அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

"ஒரே கடவுள்" என்பது உண்மையா? 
என்று ஹிந்துவிடம் கேட்டாலும் "ஆமாம்" என்று தான் சொல்லுவான்.
அது தான் உண்மையாகவும் இருக்க முடியும், அல்லவா?

"'ஒரே கடவுள்' இந்த உலகை ஆளவில்லை, 'பல கடவுள்கள்' உள்ளார்கள்" என்று சொன்னால், அதை விட மடத்தனம் இருக்கவே இருக்காது.

அப்படி பல கடவுள்கள் இருந்தால்,
கடவுளுக்கு இடையில் 'யார் பெரியவன்?' என்ற சண்டை வருமே? 

சனாதன வேதம்,
16 லட்ச வருடங்கள் கொண்ட க்ருத யுகம்,
12 லட்ச வருடங்கள் கொண்ட த்ரேதா யுகம்,
8 லட்ச வருடங்கள் கொண்ட துவாபர யுகம் தாண்டி,
3102BCEல் கலியுகம் ஆரம்பித்து,
இன்று வரை உள்ளது.
இன்று வரை ஹிந்துக்களாக இருக்கும் உலகத்தில் உள்ள அணைத்து மக்களும், லட்சக்கணக்கான வருடங்களாக பரம்பரை பரம்பரையாக ஹிந்துக்களாக உள்ளனர்.

இன்றைய தேதியில் இந்தியாவில் மட்டுமே 80 கோடி ஹிந்துக்கள் உள்ளோம்.
மேலும்,
ஒவ்வொரு அயல் நாட்டிலும் லட்ச கணக்கான ஹிந்துக்கள், ஒவ்வொரு நாட்டிலும் இன்றும் ஹிந்துவாக உள்ளனர்

கொஞ்சம் கவனித்தால் சனாதன வேதம்
உண்மையில் ஒரே கடவுளை சொல்கிறதா? இல்லை, பல கடவுளை சொல்கிறதா? என்று புரியும்.

"ஒரே ஈஸ்வரன் தான்" என்று வேதமே சொல்கிறது.

"பல தெய்வங்கள் இருக்கிறார்கள்" என்று நினைப்பதே, விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போன்றது.
வெளியோட்டமாக பார்த்து விட்டு, தப்பு தப்பாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.

பல தெய்வங்கள் முதலில் எப்படி இருக்க முடியும்?
ஒரே அந்தஸ்து உடைய, ஒரே பலம் பொருந்தியவர்களாக பல தெய்வங்கள் உண்மையில் இருந்தால்,
ஒரு தெய்வம் படைத்த உலகத்தை, இன்னொரு தெய்வம் அழித்து விடுமே!!

தெய்வங்களுக்குள் சண்டை அல்லவா வந்து விடும்?!!.

மேலும்,
ஒரு தெய்வம், இன்னொரு தெய்வத்தை பற்றி பொறாமை படும் என்றல்லவா சொல்ல வேண்டி இருக்கும்.

"வேதத்தில் சொல்லியுள்ள தெய்வங்களுக்குள் சண்டை இல்லை" என்பது நம் கோவில்களை பார்த்தாலே தெரியும்.
சிதம்பரம் "நடராஜர்" கோவிலில் "கோவிந்தராஜ பெருமாளாக" தானும் உள்ளேயே இருக்கிறார்.

பெருமாள் கோவிலில் "சிவபெருமான், விநாயகர்" என்று இருக்கிறார்கள்.
அழகர் கோவிலில், அழகர் பெருமாளும், அழகர் மலையில், முருக பெருமானும் உள்ளனர்.
தன் பக்தன் ஹநுமானுக்கு ஏற்பட்ட கோவிலில் கூட, பகையே இல்லாமல் ராமர் தனக்கு ஒரு சிறு சந்நிதியில் இருக்கிறார்.

ஆக,
ஒரு தெய்வம் பெரிய தெய்வமாக நின்று, மற்ற தெய்வங்கள் அந்த தெய்வத்துக்கு அடங்கி நடக்கிறது என்று புரிந்து கொண்டாலே, ஹிந்து மதம் ஒரே கடவுளை தான் சொல்கிறது என்று புரியும்
ஒரு அலுவலகத்தில், பல வேலையாட்கள் சேர்ந்து பணி செய்கிறார்கள்.

இவர்கள் யாவருக்கும் "ஒரு முதலாளி" இருந்து கொண்டு, இவர்களை கண்காணித்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, அலுவலகத்தை ஒழுங்காக நடத்தி செல்கிறார்.
அதே போல, பல தெய்வங்கள் வேதத்தில் சொல்லப்பட்டாலும்,
முதலாளி ஒருவனே. 
ஒரே கடவுளே. ஒரே பரமாத்மாவே என்று வேதத்தை கற்று உணர்ந்தவர்கள் அறிகிறார்கள்.

வேதத்தில் பரமாத்மாவின் பெயர் என்ன? என்று கேட்கும் போது,
"பரப்ரம்மம்" என்று சொல்கிறது.

ப்ரம்மமாகிய அந்த பரமாத்மா "பரஞ்ஜோதி" ரூபமானவர் என்றும் ஜோதி ஸ்வரூபன் என்று சொல்கிறது.

ஆக, யார் கடவுள்? என்று ஹிந்துவை கேட்டால்,
'"பரமாத்மா" என்றும் "ப்ரம்மம்" என்றும், 
"பரஞ்ஜோதி"யாக இருப்பவரே என் கடவுள்' என்று சொல்லலாம்.

"ஒரே கடவுள் தான்" என்று சனாதன வேதம் சொல்கிறது.
விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போல, வெளியோட்டமாக பார்த்து விட்டு, தவறாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.
அந்த ப்ரம்மம் யார்? என்ற கேள்விக்கு, அவர் "மகாலக்ஷ்மியின் கணவர்" என்று தெளிவாக வேதமே சொல்லி காட்டுகிறது.  Click Here

நாராயணனே பரப்ரம்மம் என்று வேதமே காட்டி விடுகிறது.
அந்தர்யாமியாக அனைவரிடத்திலும் விஷ்ணுவாக வியாபித்து உள்ள பரப்ரம்மம், என்று பார்க்கும்போது அவரே ருத்ரனாக தோன்றினார்.
அவரே பிரம்மாவை படைத்தார்.
தேவர்களை படைத்தார்.
நம்மையும் படைத்தார்.

அனைவருக்குள்ளும் ப்ரம்மமே இருப்பதால், யாரை பூஜித்தாலும், அது நாராயணனை தான் போய்  சேருகிறது.
இதையே ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையிலும் சொல்கிறார்.
ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்,
சர்வ தேவா நமஸ்கார: கேசவன் ப்ரதி கச்சதி.

"எப்படி ஆகாயத்தில் இருந்து விழுந்து, பல நதிகளாக ஓடி வரும் நீர், கடைசியில் ஒரே இடமான கடலை போய்  சேருமோ,
அதுபோல,
எந்த தேவதைகளை நாம் வணங்கினாலும், அந்த தேவதைகள் நம் வணக்கத்தை முதலாளியான நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, பலனை அவரிடம் பெற்று, தான் தருவது போல, நமக்கு தந்து விடுகிறார்கள்."

இந்த தர்மம் யுக யுகங்களாக உலகம் எங்கும் எப்பொழுதும் உள்ளது.

ஹிந்து தர்மத்தின் பல கோட்பாடுகள், புதிதாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களில் பயன்படுத்தபடுகிறது.

ஒரே கடவுள் தான். அவரே ப்ரம்மம் என்று சனாதன தர்மம் சொல்வதை தான், பிறமதங்கள் சொல்கிறது.

அத்வைத மார்க்கம் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறது.
குகைகளில், மலைகளில் தனியாக அமர்ந்து ரிஷிகள் அந்த பரமாத்மாவை தியானித்து தவம் செய்தனர், என்று ஹிந்துக்கள் கேள்விப்பட்டது இல்லையா?
அவர்கள் கோவில் கோவிலாக அலைந்தார்களா?
கையில் விக்கிரகம் வைத்து பூஜித்தார்களா? இல்லையே!!
இந்த மார்க்கத்தை தானே "அத்வைத" மார்க்கம் என்று காட்டினார் ஆதி சங்கரர்.
ஹிந்துக்கள் சற்று சுய சிந்தனையோடு யோசிக்க வேண்டும்.


சனாதன வேதத்தில் இல்லாத மார்க்கத்தை யாரும் புதிதாக காட்டிவிடவில்லை.
அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய், என்று சில உருவாக்கப்பட்ட மதங்கள் சொல்கின்றன.
இந்த அறிவுரையை நம் தாய், தந்தை, குருவே சொல்கிறார்களே!!

"சந்நியாசிகள், துறவு கொண்டு வாழ்பவர்கள்" இந்த மார்க்கத்தை தானே கடைப்பிடிக்கிறார்கள்!!.

கடவுளை அடைய இதுவும் ஒரு மார்க்கம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.
உருவாக்கப்பட்ட மதங்களோ, "கடவுளை அடைய இது ஒன்றே மார்க்கம்" என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்துகிறது.

சந்யாசியாக வாழ நினைப்பவன், "சந்யாஸ மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே எல்லாமுமாக இருக்கிறார் என்று வாழ நினைப்பவன்,
"அத்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே நாராயணன், அவரே சிவன், அவரே முருகன், அவரே காளி, அவரே விநாயகன். நாமெல்லாம் சாதாரண ஜீவன் தான். அந்த பரமாத்மா தான் இந்த உலகையும், என்னையும் படைத்தார், என்று வாழ நினைப்பவன்,
"த்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள் தான். அவரே நாராயணன். எல்லாம் வல்லவனாக இருப்பதால், அந்த பரமாத்மாவே ஜீவாத்மாவாகவும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல, சிவனாகவும், இந்திரனாகவும், முருகனாகவும், உலகில் இருக்கும் சாதாரண ஜீவனாகவும் உள்ளது. பிரித்து பார்த்தால் தனி தனி போல தெரிந்தாலும், உண்மையில் ஒரே பரமாத்மா தன் சக்தியால் இப்படி வெவ்வேறாக தெரிகிறார் என்று வாழ நினைப்பவன், விஷிஷ்ட அத்வைத மார்க்கத்தை எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

பிற மதங்கள் சொல்லும் "ஒரே கடவுள்" சித்தாந்தம் நமக்கு புதிதல்ல.

ஒரே கடவுள் என்று சொல்லும் அத்வைத மார்க்கத்தை போல தான் இஸ்லாமிய மார்க்கமும் சொல்கிறது.
கடவுள் அரூபமானவர் என்று இருவருமே சொல்கிறார்கள்.

அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய் என்று சொல்லும் சந்யாஸ மார்க்கத்தை போல பௌத்த, ஜைன, கிறிஸ்தவ மார்க்கமும் சொல்கிறது.

"தெய்வ சிந்தனை உள்ள மனிதனாக தான் வாழ வேண்டும்" என்பது தான் வேதத்தின் நோக்கம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, ப்ரம்மமாக, அரூபமா வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

"தெய்வ சிந்தனை உனக்கு, முருகனாக வழிபட்டால் தான் பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, சிவனாக வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, யாரை பார்த்தாலும் வருகிறது என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை தான் முக்கியமே" தவிர, மார்க்கங்கள் எப்படி இருந்தாலும், அந்த ப்ரம்மமாகிய நாராயணன், நாம் வழிபடும் தெய்வங்கள் மூலம் பலன் தந்து, மெதுவாக தன் பக்கம் இழுத்துவிடுகிறார்.

நாராயணனை நேரிடையாக வழிபடுபவன், மகா பாக்கியசாலி.
பிரம்மத்தை நேரிடையாக உபாசிக்கும் புண்ணியம் செய்தவர்கள் அவர்கள். இவர்கள் மோக்ஷத்திற்கு அருகில் நிற்பவர்கள்.
"இறப்பு பிறப்பு என்ற சம்சார சூழலில் இருந்து தப்பிக்க" வாய்ப்பு உள்ளவர்கள்.

"வேதம்" என்ற சொல் அழகாக இருப்பதால் அதை பிற மதத்தவர்கள் தான் எழுதிய புத்தகங்களுக்கு வைத்து கொள்கின்றனர் என்று பார்க்கிறோம்.

"மனுவில் இருந்து மனித படைப்புகள் உருவானது" என்று நம் மதம் சொன்னால், அதை கொண்டே, ஆங்கிலத்தில் "Man" என்றே பயன்படுத்துகின்றனர். மனிதனை "Man"  என்று சொல்லாமல், "Adam" என்று சொல்லி இருக்கலாமே பிற மதத்தவர்கள்.

பரஞ்சோதி என்று ப்ரம்மத்தை குறிப்பிடும் வார்த்தையை, ஆங்கிலத்தில் "holy spirit" என்று சொல்லி கடவுளை குறிப்பிடுகின்றனர்.
ஹிந்து மாதத்தில் இருந்து தானே அனைத்தும் திருடப்பட்டு உள்ளது.


சனாதன தர்மத்தில் 12 மாதங்கள் என்று சொன்னால், அதையே அறிவியல் பூர்வமாக உண்மை என்று ஒப்புக்கொண்டு ஆங்கில மாதங்களும் 12 என்று ஆக்கி விட்டனர்.
"உலகம் உருண்டை" என்று வராஹ அவதாரத்தில் காட்டி உள்ளார் என்று சொல்லியும், தான் தோன்றி தனமாக "உலகம் தட்டை" என்று பிடிவாதம் செய்து, கலிலியோவை சர்ச்சில் மன்னிப்பு கேட்க வைத்து, சித்ரவதை செய்தனர்.
அறிவியல் மூலம், உலகம் உருண்டை தான் என்றதும் அமைதி ஆகினர்.
நவ க்ரஹங்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, என்று சொல்லி, "செவ்வாய் கிரகம் சிவப்பானது என்று சிவப்பு துணி கட்டி வழிப்பட்டதை" ஒப்புக்கொள்ளாமல் இருந்து, கடைசியில் செவ்வாய் கிரகம் (mars) உண்மையில் சிவப்பு கிரஹம் (red planet) என்று இன்று ஒப்புக்கொள்கிறது.
ஒரே கடவுள் என்று சொல்லியும் பல விதமாக பிரிந்து உள்ளனர் பிற மதத்தினர்...

இயற்கை கூட ஒரே மாதிரி இல்லாத போது, மனிதனுக்கு மட்டும் ஒரே மார்க்கம் என்று சொல்வதே அபத்தம்.

இந்த விசாலமான புத்தி, சனாதன தர்மத்தில் உள்ள நமக்கு உள்ளது..

"மனிதனின் தெய்வ சிந்தனை வளர்ப்பதே" நம் சனாதன தர்மத்தின் நோக்கம்.

"எல்லாம்வல்ல கடவுள்" என்று சொல்லிவிட்டு,
  • அவரால் இப்படி வர முடியாது, அப்படி வர முடியாது,
  • இந்த மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படும், 
  • இன்னொரு மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படாது 

என்று சொல்வதே, எல்லாம் வல்ல இறைவனுக்கு அவமானம்.

இந்த விசால புத்தி, ஹிந்துக்களிடம் இருப்பதால் தான் மற்ற மதங்கள் "யாரையோ தெய்வம்" என்று சொன்னாலும் மதிக்கின்றனர்.
உனக்கு தெய்வம் எப்படி இருந்தால் பிடிக்கும்?
"எனக்கு கம்பீரமான ஒரு வீரன் போல இருந்தால் தான் பிடிக்கும்."
பரமாத்மா ஸ்ரீ ராமராக வந்தார். அவரை பார்த்தால் மிகவும்  பிடிக்கிறது.
அப்படியென்றால், ஸ்ரீ ராமரையே வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு குழந்தையாக இருக்க வேண்டும், நான் குண்டு, அதனால் என் தெய்வமும் குண்டாக இருக்க வேண்டும்."
அப்படியென்றால், பிள்ளையாரை வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு தெய்வத்தை உருவமாக வழிபட ஆசையில்லை.."
அப்படியென்றால், நீ தியானம், யோகம் செய்து, வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

பரமாத்மா எந்த வழிபாட்டையும் ஏற்கும் பலம் உள்ளவர் என்பதால், நாராயணனை வணங்கினால் தான் உனக்கு சுவர்க்கம், இல்லையென்றால் நரகம் என்று சொல்வதே இல்லை.
சுவர்க்கம், நரகம் உன் பாவ புண்ணியத்தை பொறுத்தது என்று சொல்கிறது ஹிந்து மதம்.

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
வெளிநாட்டவர்கள் கூட ஹிந்துவாக வாழ ஆசைப்படுகிறார்கள்.

HARE RAMA HARE KRISHNA  - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 


sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 







sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka