Followers

Search Here...

Thursday 13 April 2017

தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்?



ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ?
உலகையே படைத்த தெய்வம் ஸ்ரீமந் நாராயணன், பூமியில் அவதாரங்கள் செய்தார்.
சிவன், அவதாரம் என்று செய்யாவிட்டாலும், திருவிளையாடல் என்று அவ்வப்போது பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஸ்ரீமந் நாராயணன், தன் ராம அவதாரத்தை போல ஒரு அவதாரம் ரஷ்யாவிலோ, ஜப்பானிலோ செய்து இருக்கலாமே ?

அப்படி என்ன இந்த உலகை படைத்த தெய்வத்துக்கு, இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை பிரியம்?

இவருக்கு மட்டுமில்லை, இவரால் படைக்கப்பட்ட தேவர்களுக்கு கூட மனிதனாக பிறக்கும் படி சாபமோ, அல்லது தனக்கே ஆசை வந்தால் கூட இந்த பாரத மண்ணில் மட்டும் பிறக்க ஆசை ஆசைப்படுகின்றனர். ஏன்?
இந்திரனின் அம்சமான "அர்ஜுனன்",
சூரியனின் அம்சமான "கர்ணன்",
8 வசுக்களில் ஒருவர் அம்சமான "பீஷ்மர்",
எம தர்மன் அம்சமான "விதுரர்",
தர்ம தேவன் அம்சமான "யுதிஷ்டிரர்",
கலி புருஷன் அம்சமான "துரியோதனன்".
இப்படி அனைவரும் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே கால் பதிக்க விரும்புகின்றனர்?

ஒரு அவதாரம் அமெரிக்காவில் செய்தால் தான் என்ன ?


மனிதனுக்கு எந்த இடம் குளிர்ச்சியாக இருக்குமோ, செல்வம் அதிகமாக இருக்குமோ? அங்கு சென்று வாழ ஆசை வரும்.

மனிதர்களுக்கு மேல், சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் - தேவர்கள்.
தேவர்களுக்கு மேல் ஜன மற்றும் தப லோகத்தில் இருப்பவர்கள் - ரிஷிகள்.
ரிஷிகளுக்கு மேல் சத்ய லோகத்தில் இருப்பவர் - ப்ரம்மா.

அனைவரையும் படைத்து உலகை தன் ஆளுமையில் நடத்துபவர் ஸ்ரீமந் நாராயணன். இவர் இருப்பதோ வைகுண்டம் என்ற பரமபதம்.

மனிதர்களுக்கு சில இடங்கள் ஒரு சில காரணங்களால் பிடிப்பது போல, நம்மை விட உயர்ந்த இவர்களுக்கு, சில காரணங்களினால் "பாரத மண்ணில்" மட்டுமே விருப்பம் உள்ளது.

பல காரணங்கள், அதில் ஒரு சில :
1. பதிவ்ரதைகள் (கற்புக்கு மதிப்பு கொடுக்கும் பெண்கள், கற்புள்ள பெண்கள்) இந்த பாரத மண்ணில் தான் பிறக்கின்றனர்.
இங்கு பிறக்கும் பெண்களுக்கே இந்த உணர்வு அதிகம் உள்ளது.
பாரத நாட்டில் பிறந்த ஒரு குடும்பம் பிற நாட்டில் குடி பெயர்ந்தால், ஒரு சில தலைமுறையில் அங்கு பிறப்பதாலேயே இந்த உணர்வை இழந்து காணப்படுகின்றனர்.



2. இறை நம்பிக்கையோடு தான் இந்த பாரத மண்ணில் அனைவரும் பிறக்கிறார்கள்.
நாத்தீகனுக்கும் இந்த இறை உணர்வு அதிகம் இருப்பதாலேயே எங்கே கடவுள்? காட்டு என்று புலம்புகிறான்.
இறைவன் உண்டு, ஆனால் உணர முடியவில்லையே என்று புலம்புபவனே "நாத்தீகன்".
இந்த கடவுள் இல்லை என்கிற வெறுப்பு உள்ள நாத்தீகன் கூட மற்ற நாட்டில் இல்லை.
கடவுள் உண்டா? என்று கேள்வி கேட்பவனே நாத்தீகன்.
அந்த உணர்வு கூட இல்லாதவர்களே மற்ற நாட்டில் பிறக்கின்றனர்.

நாத்தீகன் என்ன தான் குட்டிகரணம் அடித்து "கடவுள் இல்லை" என்று முயற்சி செய்தாலும், இந்த பாரத மண்ணில் பிறப்பவர்களின் இறை உணர்வை அழிக்க முடியவில்லை.
போதாக்குறைக்கு, நாதீகனுக்கு பிறக்கும் குழந்தையே இறை நம்பிக்கையோடு பிறந்து இவன் நாத்தீகத்திற்கு வெடி வைக்கிறது.

3. "கோவிலுக்கு வழிபாடு செய்ய வா", "புனித நூல் என்று நாங்கள் சொல்லும் இந்த புத்தகத்தை படி", "கேள்வி கேட்காதே" என்று அடிக்காத குறையாக வற்புறுத்துகிறது உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.

இந்த மதங்கள் உருவான நாட்டில், யாருக்கும் இறை சிந்தனை இயற்கையாக இல்லை.
"இறைவன் இருக்கிறான்" என்று புலம்பாத குறையாக சொல்லி சொல்லி நம்ப வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், இந்த பாரத மண்ணில் பிறந்த ஒரு ஹிந்து, தவறி போய், கர்ம வினையால் இந்த பொய் மதத்தில் போய் சேர்ந்தால் கூட, இவன் அந்த தெய்வத்துக்கு செய்யும் வழிபாடு, நம்பிக்கை, ஈடுபாட்டை பார்த்தால், இந்த பொய் மதங்கள் உருவான இடத்தில் இருப்பவர்களையே ஆச்சர்யப்படுத்துகிறது.

"நம்மிடம் கூட இந்த ஈடுபாடு இல்லை, இவன் செய்யும் வழிபாடு நம்மையே விழுங்கி விடும் போல இருக்கிறதே" என்று வியக்கின்றனர்.
இதற்கு காரணம் அந்த பொய் மதங்கள் அல்ல.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன் என்பதாலேயே, அவன் உள்ளே இருக்கும் இறை உணர்வு, அது பொய் மதமாக இருந்தாலும் மிளிர்வது போல காட்டுகிறது.

பாரத மண்ணில் பிறந்த காரணத்திற்காகவே, இந்த இறை நம்பிக்கை இவனை தொத்திக்கொண்டு இருக்கிறது.


4. இறை உணர்வுடனேயே இங்கு பிறப்பவர்கள் அனைவரும் இருப்பதால், ஏழை முதல் பணக்காரன் வரை, கோவிலுக்கு செல்லாமலேயே, பகவத் கீதையோ, திருவாசகமோ படிக்காமல் இருந்தாலும்,
  • ஒழுக்கம் மீறி நடந்தால் தவறு, 
  • பொய் பேச கூடாது, 
  • மற்றவர் பொருள் மீது ஆசை கூடாது, 

என்று யாரும் சொல்லாமலேயே பொறாமை படாமல், அமைதியாக, இருப்பதை கொண்டு வாழ்கின்றனர்.

மற்ற நாட்டிலோ, ஏழையாக இருப்பவன், பணக்காரனை சமயம் கிடைத்தால் சுட்டு கொன்று விட கூட தயங்குவதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்த ஏழை, பணக்காரன் பக்கத்து நிலத்தில் பங்களா கட்டி இருந்தாலும், பொறாமை படுவதில்லை. 
மாறாக, "இவன் புண்ணியம் செய்து இருப்பான் போன ஜென்மத்தில்" என்று மற்றவர்க்கு சமாதானம் செய்வான்.
பாவம் செய்து பணம் சேர்த்தால் குடும்பத்தில் என்ன ஆபத்து வருமோ, அதனால் பாவ பணத்தை விட, ஏழையாக இருப்பதே மேல் என்று கூட சொல்லுவான் இந்த பாரத மண்ணில் பிறந்தவன்.

5. மற்ற நாட்டில் பிறந்தவன், எதை கண்டாலும் அதில் இறைவன் இருப்பதை உணர்வதில்லை.
இந்த பாரத மண்ணில் பிறந்தவன், உப்பு தண்ணீர், ஆற்று தண்ணீர் என்று சொல்லாமல், இதற்கு ஆதாரமான தேவதைகளை மனதில் நிறுத்தி, கங்கை, யமுனை, காவேரி என்று இந்த நீர் நமக்கு கிடைக்க காரணமான தேவதைகளுக்கு மரியாதை செய்கிறான்.
இயற்கையை தெய்வ படைப்பாக பார்த்த இவன், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான்.

6. மற்ற நாடுகளில் தேடி பார்த்தால் மட்டுமே ஒரு மகான் கிடைப்பார். அதுவும் சந்தேகமே !.
இங்கோ,
காந்தி பிறந்தார். இவர் மட்டும் தானா? என்றால் ஊருக்கு ஒரு மகான். நன்றாக கவனித்தால் நம் தாத்தா, பாட்டி, மூதாதையர்கள் கூட மகான்களாக இறை உணர்வுடன் வாழ்ந்தனர் என்று தெரிய வரும்.
இந்த பாரத மண்ணின் விஷேஷமே இதற்கு காரணம்.

7. இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு, எதை கற்றுக்கொண்டாலும், அதன் மூலமாக இறைவனுக்கு தொண்டு செய்ய முடியுமா? என்று தோன்றும்.

சிற்பத்தில் திறன் உள்ளவன்,
கட்டிடங்கள் கட்டும் திறன் உள்ளவன்,
அரசன் உள்பட அனைவரும் இதே உணர்வுடன் தான் இருந்தனர்.
அரசர்கள் கட்டியுள்ள கோவில்களும், அதன் கட்டிட அமைப்பும், அதில் உள்ள சிற்பங்களும் போதுமான சான்று.
இந்த பாரத மண்ணில் பிறந்தவனுக்கு இறை உணர்வுடன் தான் எந்த வேலையும் நடக்கும்.

8. இந்த பாரத தேசம் மற்ற சில நாட்டை விட பரப்பளவில் சிறியது.
ஆனாலும், இங்கு பிறந்த காரணத்தினாலேயே இவர்கள் அறிவாளிகளாக பிறக்கின்றனர். 

அத்தனை பெரிய பெரிய நாடுகளில், பேசும் மொழியோ "ஒன்று" அல்லது "இரண்டு". இவர்கள் அறிவு இவ்வளவு தான்.



ஆனால் இந்த பாரத மண்ணிலோ,
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள். 
பல வித நாகரீக உடைகள். 
மொழிகள் என்றால் வெறும் காட்டுமிராண்டி பாஷை இல்லை. இலக்கணம் பொருந்திய மொழிகள்.
இலக்கணத்தோடு மொழியை ஒரு மடையன் உருவாக்க முடியுமா?

இதை விட ஆச்சர்யம்,
பூமியில் வாழும் நாம், பூமிக்கும் மேல் உள்ள புவர் என்ற நக்ஷத்திர லோகம் தாண்டி, சொர்க்க லோகம், ஜன, தப, சத்ய லோகத்தில் பேசப்படும் சமஸ்க்ருதத்தை கண்டுபிடித்து அதன் பொருளையும் அறிந்து, அதன் மூலமாக
  • ப்ரம்மா யார்? 
  • முழு முதற் கடவுளான அந்த ஸ்ரீமந் நாராயணன் யார்? 
  • தேவர்கள் யார்? 
  • நாம் யார்? 
  • ஏன் பிறந்தோம்? 
  • நம் கடமை என்ன? 

என்று பல கேள்விகளுக்கு விடையை கண்டுபிடித்து, அதை அந்த அந்த ஊரில் பிறந்த மகான்கள், தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில், தெலுங்கில் காவியங்கள் போன்றும், கீர்த்தனைகள் போன்றும் தந்தனர் என்று பார்க்கிறோம்.

இந்த எந்த வித ஆச்சர்யங்களும் இல்லாது, தன் வயிற்றை நிறைக்கும் வழி என்ன? என்று மட்டுமே பார்க்கும் மனிதர்களே பொதுவாக பிற நாட்டில் பிறக்கின்றனர்.

இப்படி பல காரணங்களினால், தேவர்கள், பாரத மண்ணையே விரும்புகின்றனர்.
நாராயணன் தன் அம்சமாக இந்த உலகத்தில் அவதாரம் செய்ய நினைத்தால் கூட, இந்த பாரத மண்ணில் பிறக்கவே ஆசைப்படுகிறார்.

இறை உணர்வு அதிகம் உள்ளவர்கள் பிறப்பதாலேயே, தேவர்கள் முதல் நாராயணன் வரை இவர்கள் அவதாரம் இந்த பாரத மண்ணிலேயே நடக்கிறது.

மற்ற நாடுகளில், மூலைக்கு மூலை இறை உணர்வு இல்லாது, உலகத்தில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்ற சுயநல உணர்வுடன் பிறக்கின்றனர்.

இந்த பாரத மண்ணில் மட்டும் தான், மூலைக்கு மூலை மகான்கள் பிறக்கின்றனர்.
கடல் போன்ற மகான்கள் கூட்டத்தில், ஒரு சில துளி மகான்கள் பெயர்கள் இப்போது நம் நினைவில் செலுத்தலாம்.
  • காஞ்சி மகா பெரியவர், 
  • காந்தி, 
  • பாரதியார், 
  • விவேகானந்தர், 
  • ராமகிருஷ்ணர், 
  • தியாகராஜர், 
  • விஜய தாசர், 
  • பத்ராச்சல ராமதாசர், 
  • ஸ்ரீ ராகவேந்திரர், 
  • துக்காராம், 
  • ஸமர்த்த ராமதாசர், 
  • துளசி தாசர், 
  • கனக தாசர், 
  • புரந்தர தாசர், 
  • சுரதாசர், 
  • கபீர் தாசர், 
  • ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர், 
  • வல்லபாச்சாரியார், 
  • மணவாள மாமுனிகள், 
  • நரசிம்ஹ மேதா, 
  • நாம தேவர், 
  • மத்வாச்சாரியார், 
  • ஜயதேவர், 
  • ஸ்ரீ ராமானுஜர், 
  • நாதமுனி, 
  • ஆதி சங்கரர்,
  • நாயன்மார்கள், 
  • ஆழ்வார்கள்..... 
  • வள்ளுவர்
  • வள்ளலார்
  • திருமூலர்
  • சித்தர்கள்




இன்னும் கோடி மகான்கள் இந்த பாரத மண்ணில் உதித்தவர்கள்.

இந்த மண்ணில் பிறக்க தேவர்களும் ஆசைபடும் காரணம் புரிந்தால், இந்த மண்ணில் நாம் புழுவாகவோ, நரியாகவோ, பிறக்காமல், குருடனாகவோ, நொண்டியாகவோ பிறந்து விடாமல்,
அதற்கும் மேல், பாரத மண்ணில் பொய் மத குடும்பத்தில் பிறக்காமல், ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, பிறந்த இடமோ, வாழும் ஊரோ திவ்ய க்ஷேத்திரமாகவும் இருந்து இருந்தால், நாம் செய்த புண்ணியம் தானாகவே நமக்கே புரியும்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம்.
பாரத மண்ணில் ஹிந்துவாய் பிறப்பது தேவர்களே பொறாமைப்பட வைக்கும் மகா புண்ணியம்.



Sandhyavandanam Afternoon tamil - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Evening tamil - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning tamil - Hear and understand meaning of each sloka

Tuesday 21 March 2017

உத்தராயணம் தஷிணாயனம் - 12 மாதங்கள் பற்றிய விளக்கம். தெரிந்து கொள்வோமே !






மகா பாரத போரில், பீஷ்மர் வீழ்ந்தார்.
மகா பாரத போர் நடந்த சமயம் "தஷிணாயன" காலம்.
தான் விரும்பிய பொழுது சாகும் வரத்தை பெற்றவர் பீஷ்மர்.
"உத்தராயண" காலம் வரும் வரை, அம்பு படுக்கையில், யுத்த களத்திலேயே உயிரை விடாமல் யோகத்தில் இருந்தார்.
நம் பூமியில் ஒரு வருடம் என்பது, சொர்க்கலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு "ஒரு நாள்".

இது அனைவருக்கும் தெரிந்ததே.
இதுவரை தெரியாது என்றால், இப்பொழுது தெரிந்திருக்கும்.

பாரத் தேசத்தின் காலப்படி, தேவர்களின் கால நேரம் எப்படி உள்ளது? ஒரு அலசல்.

உத்தராயணம் :

  • தை (சொர்க்கலோகத்தில் 6AM-8AM), 
  • மாசி (சொர்க்கலோகத்தில் 8AM-10AM), 
  • பங்குனி (சொர்க்கலோகத்தில் 10AM-12 Noon), 
  • சித்திரை (சொர்க்கலோகத்தில் 12 Noon-2PM), 
  • வைகாசி (சொர்க்கலோகத்தில் 2PM-4PM), 
  • ஆனி (சொர்க்கலோகத்தில் 4PM-6PM), 

ஆகிய ஆறு மாதங்களும் "உத்தராயண" காலமாகும்.

தேவர்களுடைய ஒரு பகல் பொழுது "உத்தராயண" காலமாகும்.

உத்தராயண காலத்தில் தை மாதத்தில் நாம் பொங்கல் வைத்து சூரியனை வணங்குவது இப்பொழுது ஏன்?
என்று இப்போது புரிந்திருக்கும்.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், சொர்க்கத்தில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

சித்திரை வெயில் கொளுத்துவது ஏன்?
என்று கேள்விக்கும் இதை வைத்து அனுமானிக்கலாம்.
தேவ லோகத்தில், நடு பகல் 12 மணியில் ஆரம்பிக்கிறது சித்திரை மாதம்.

பூமிக்கு மேலே உள்ள சொர்க்கத்தில் தேவர்களும்,
அவர்களுக்கும் மேல் உள்ள மஹ, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளும்,
அதற்கும் மேல் உள்ள சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவும் 
"உத்தராயண" காலத்தில் விழித்து இருப்பார்கள்.

இதன் காரணமாக, பீஷ்மர் "உத்தராயண" காலம் வரும் வரை காத்திருந்து, ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "விஷ்ணு சஹஸ்ரநாமம்" முதன் முதலில் சொல்லி, பின் தன் உடலை குருக்ஷேத்ர மண்ணில் விட்டு விண்ணுலகம் சென்றார்.

தை மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "மகா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
"தை மாதம்" தேவர்களுக்கு, சொர்க்கலோகத்தில் 6AM to 8AM என்று அனுமானிக்கலாம்.

மாசி மாதக் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் "சிவராத்திரி" உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.
மாசி மாதம் தேவர்களுக்கு 8AM to 10AM என்று அனுமானிக்கலாம்.

பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் "வசந்த நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் - மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் பிறந்த நாள்.
இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் "ஸ்ரீ ராம நவமி" என்று பூமியில் கொண்டாடுகின்றோம்.
பங்குனி மாதம் தேவர்களுக்கு 10AM to 12PM என்று அனுமானிக்கலாம்.

ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் ஒன்பது நாட்கள் "ஆஷாட நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
ஆனி மாதம் தேவர்களுக்கு 4PM to 6PM என்று அனுமானிக்கலாம்.


தஷிணாயனம் :

  • ஆடி (சொர்க்கலோகத்தில் 6PM-8PM தேவர்கள் வழிபடும் காலம்), 
  • ஆவணி (சொர்க்கலோகத்தில் 8PM-10PM), 
  • புரட்டாசி (சொர்க்கலோகத்தில் 10PM-12AM),
  • ஐப்பசி (சொர்க்கலோகத்தில் 12AM-2AM),
  • கார்த்திகை (சொர்க்கலோகத்தில் 2AM-4AM),
  • மார்கழி (சொர்க்கலோகத்தில் 4AM-6AM தேவர்கள் வழிபடும் காலம்), 
ஆகிய ஆறு மாதங்களும் "தஷிணாயனம்" காலமாகும்.
இந்தக் காலம் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.

தேவர்களுக்கு இது இரவு பொழுது என்பதால், அவர்களுக்கு மேல் உள்ள துர்க்கை, சிவ, விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்கி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய காலம் இது.

அனைத்து தெய்வங்களுக்கும் மேல், முழு முதற் கடவுளான பெருமாளை வணங்குவது நம்மை காத்துக் கொள்ள சரியான வழி.

பொதுவாக,
மனிதர்கள் இறை வழிபாடு செய்ய வேண்டிய காலம் இது.

தேவர்களுக்கு இந்த 6 மாதங்கள், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை போல என்று எடுத்துக்கொள்ளலாம்.

தேவர்களுடைய காலப்படி, மாலை 6 மணி முதல் 8 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
இதே சமயத்தில், பூமியில் ஆடி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இதே சமயத்தில் தேவர்களோடு, சிவ விஷ்ணு வழிபாடு செய்கின்றனர்.

இதே போல,
தேவர்களுடைய காலப்படி,
விடி காலை 4 மணி முதல் 6 மணி வரை, தேவர்கள் தன்னை படைத்த நாராயணனை வழிபடுகின்றனர்.
தேவர்களுக்கு இது ப்ரம்ம முகூர்த்தம். தியானமும், விரதமும், தெய்வ வழிபாடும் செய்ய ஏற்ற காலம்.
இதே சமயத்தில்,
பூமியில் மார்கழி மாதத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல், மனிதர்களும் இந்த மாதத்தில் தெய்வங்களை வழிபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதம் "மார்கழி".

ஆவணி மாத அமாவாசைக்குப் பின் நான்காவது நாள் வரும் சுக்ல பட்ச சதுர்த்தி நாடெங்கும் "விநாயக சதுர்த்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானின் செல்ல குழந்தை விநாயகரை மனிதர்கள் வழிபடுகின்றனர்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.
ஸ்ரீ மகாவிஷ்ணு, ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
இந்நாள் "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

மகாவிஷ்ணு, ஆவணி திருவோணத்தில் ஸ்ரீ வாமனராக அவதாரம் எடுத்து மகாபலி என்ற அரக்க அரசனின் ஆணவத்தை அடக்கிய நாளே " ஓணம் " பண்டிகை ஆகும்.
ஆவணி மாதம் தேவர்களுக்கு 8PM to 10PM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் "சாரதா நவராத்திரி" என்று பூமியில் கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

புரட்டாசி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் "துர்கா பூஜை" பூமியில் கொண்டாடப்படுகின்றது.
புரட்டாசி மாதம் தேவர்களுக்கு 10PM to 12AM என்று அனுமானிக்கலாம்.

காரணம் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையும், எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காதது நம் தர்மம்.

இந்த ஸனாதன மதத்தில் இன்னும் என்ன என்ன ஆச்சர்யங்கள் உண்டோ !! என்று எண்ணத்தோன்றுகிறது.

மனிதனுடைய காலத்தை மட்டுமில்லாது,
  • தேவர்கள் காலம் என்ன? 
  • பிரம்மாவின் இன்றைய வயது என்ன? 
  • இன்னும் எத்தனை காலம் உள்ளது? 
என்று  பதில் சொல்லிக்கொண்டே பறந்து விரிந்து செல்கிறது நம் தர்மம்.


5000 வருடத்திற்கு முன்,
  • மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக இருந்தனர் என்று உளறி, 
  • 2012ல் உலகம் அழியும், 
  • இதோ வந்து விட்டார், அதோ பாருங்கள் 
என்று ஊரை ஏமாற்றாமல்,
  • பிறவிக்கு என்ன காரணம்?
  • துன்பத்திற்கு என்ன காரணம்?
  • உலகத்தின் வயது என்ன?
  • உலகம் என்ன ஆகும்?
என்று அடுக்கிக் கொண்டே போகும் கேள்விகள் அனைத்துக்கும் நம் சனாதன தர்மம் பதில் சொல்கிறது.

சரியான கேள்வியை, சரியான பெரியோர்களிடம் கேட்டாலே, சனாதன தர்மத்தின் மகத்துவம் புரியும்.

நாம் இந்த தர்மம் உள்ள குடும்பத்தில் பிறந்து இருக்கிறோமே என்று நம்மையே பார்த்து மெச்சிக் கொள்ள தோன்றும்.

சோமாலியாவிலோ, சீனாவிலோ, அமெரிக்காவிலோ இந்த சனாதன தர்மம் தெரியாத குடும்பத்தில் பிறந்து இருந்தால்...
  • நம் மூதாதையர்கள் மடையர்கள் எனவும், ஆடை அணியாது அலைந்த ஆதாம் ஏவாள் என்றும்,
  • மறு பிறவி இல்லை அதனால் எதுவும் செய்யலாம் என்றும்,
  • பிறப்பிலேயே ஏழையாக, குறையோடு பிறந்ததற்கு கடவுளை காரணம் காட்டியும்,
  • தினமும் தின்றோம், தூங்கினோம், ஏதோ ஒரு கடவுள் இருக்கிறார் என்று நம்பி, கடைசியில் செத்தோம்
என்று வாழ்க்கை வீணாகியிருக்கும்.

நல்ல வேளையாக, நாம் முன் ஜென்மங்களில் செய்த பல நல்ல காரியங்களால்...
  • மனித பிறவியும் கிடைத்து,
  • இந்தியாவில் பிறக்கவும் செய்து,
  • ஹிந்துவாகவும் பிறக்க செய்து, 
  • அறிவும் கொடுத்து,
  • கேள்விகள் எழ செய்து, அதற்கு சரியான பெரியோர்களையும் காட்டி தெளிவு படுத்தி,
இன்னும் நம்மை உயர்த்தி கொண்டே போக, ஹிந்துவாக பிறந்தோம்.

சனாதன தர்மம் என்றும் நிலைத்து இருக்கும்.

ஹிந்துவாய் பிறந்ததே பல கோடி புண்ணியத்தின் பலன் என்று நமக்கு புரிந்து விடும்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka