Followers

Search Here...

Friday 17 November 2017

பிராம்மணன் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்


பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்வதால்,
தனக்காகவும், மற்ற அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்.


வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு, ஐயப்ப மலை செல்பவர்கள் உணவு, ஒழுக்கம், இறை வழிபாடு, ஆடை என்று அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருப்பதால், ஜாதி பேதம் இல்லாமல், அந்த மாலை போட்ட சமயத்தில், அனைவரையும் "சாமி" என்றும் "ஸ்வாமி" என்றும் மரியாதையுடன் அழைக்கிறோம்.

மற்ற ஜாதியில் பிறந்து இறை வாழ்க்கை வாழ்பவர்கள், மகான் என்றும் சொல்லி அனைவரும் வணங்குகிறோம்.

ப்ராம்மணர்கள் வாழ்நாள் முழுவதுமே இப்படி உணவு கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆடை, வழிபாடு அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருந்ததால், பொதுவாகவே ப்ராம்மணனை எப்பொழுதுமே, "சாமி" என்றனர்.

இன்றைய பிராம்மணன் இந்த மதிப்பை இழக்க காரணம் அவர்களே காரணம் ஆகின்றனர். ஒழுக்கம் இல்லாத, உணவு கட்டுப்பாடு இல்லாத, வழிபாடு இல்லாத வாழ்க்கை வாழும் பிராம்மணன் மதிப்பை இழக்கிறான்.

மற்றவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியாமல் போனாலும், பிராம்மணனை மற்றவருக்காகவும் சேர்த்து தினமும் பிரார்த்திக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறான்.

இதற்கு சந்தியா வந்தனம் பிராம்மணனின் கடமையாக விதிக்கப்படுகிறது. விதிக்கப்பட்டது என்பதாலேயே, இதை செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிகிறது.

இன்றைய பிராம்மணன் குடும்பத்தில், பஞ்சாத்ரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பிராம்மணன் என்ற போர்வையில் வாழ்கிறான்.

சந்தியா வந்தனம் செய்வது பிராம்மணர்களிடையே குறைந்து வருகிறது. அவன் தனக்காகவும், பிறருக்காகவும், குழந்தைகள், பிராம்மண பெண்கள் உள்பட,  அனைவருக்காகவும் செய்ய வேண்டிய இந்த கடமையை முடிந்தவரை செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வருத்தப்படவாவது வேண்டும்.

இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்தால், அதன் அர்த்தம், அதன் நோக்கம், சந்தியா வந்தனம் செய்ய ஆசை தூண்ட வாய்ப்புள்ளது.




சந்தியா வந்தனத்தில், முடிக்கும் போது கூட, பகவானிடம் பிராம்மணன் தனக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனை செய்வது போல வருகிறது.

கடைசியாக சொல்லும் ரக்ஷை என்ற பிரார்த்தனையில்,

"இப்பொழுது எங்களுக்கு சந்ததியுடன் கூடிய சௌபாக்யத்தை அருள வேண்டும்.
கெட்ட கனவின் நிமித்தத்தையும், பலனையும் விலக்கி அருள வேண்டும்.
சூரிய நாராயணா பகவானே! எல்லாப் பாவங்களையும் விலக்கி அருள வேண்டும்.
எது உயர்ந்த நன்மையோ அதை எங்களுக்கு கூட்டிவைத்து அருள வேண்டும்."

அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: சௌபகம் !
பரா துஷ்வப்னியஹும் ஸூவ !
விச்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸூவ !
யத் பத்ரம் தன்ம ஆஸூவ !!

இப்படி தினமும் மற்றவர்களும், தானும் நலமாக இருக்க பிரார்த்திக்க சொல்கிறது.

சுயநலம், அலட்சியம், அர்த்தம் புரிந்து கொள்ள ஆசையின்மை இவையெல்லாம் சேர்ந்து, பிராம்மணன் தனக்கு விதித்த கடமையை செய்யாமல் காலம் கழிக்கிறான்.

முடிந்த வரை பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆசை பட வேண்டும். பிறருக்காகவும் பிரார்த்ததனை செய்ய கொடுத்த வாய்ப்பை பிராம்மணன் தன் வாழ்க்கையில் தவற விட கூடாது. செய்யாவிட்டால், பிராம்மணனாக பிறவி கிடைத்ததை வீணாக்குகிறான்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 

பிரம்மாவின் ஆயுளும், மனித ஆயுளும்

காலத்தை வைத்து ஒரு பார்வை:

பிரம்மாவினால், படைக்கப்பட்ட 'வைவஸ்வதன்' 7வது மனு அரசராக, மனித சமுதாயம் வாழ தர்மங்களை சொல்கிறார்.
மனு தர்மம் என்பது இன்றும் பிரஸித்தம்.



இந்த சமஸ்க்ரித சொல்லான 'மனு'வை தமிழர்கள் "மனிதன்" என்கின்றனர். இதில் இருந்தே சமஸ்க்ரித மொழியில் இருந்து தமிழ் உருவாகி உள்ளது என்று தெரிகிறது.
வழக்கம் போல, மற்றவர்களிடம் திருடியே உருவாக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆங்கிலேயே மொழி "Man" என்று பச்சையாக  பயன்படுத்துகிறது.

ப்ரம்மா, உலகை படைத்த பின், தன்னுடைய ஒவ்வொரு நாளும், இது போன்று 14 மனு அரசர்களை உருவாக்கி, மனித குலத்தை ஆள செய்கிறார்.

இன்றைய பொழுதில் ப்ரம்மாவிற்கு 50 வயது முடிந்து, தன் 51வது வயதின் முதல் நாளில் இருக்கிறார்.

இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்கள் வரிசையில், ஸ்வாயம்பு என்ற முதல் மனுவில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.



இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
இவர் ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். இதில் 3 யுகங்கள் முடிந்து, நாம் கலி யுகத்தில் இருக்கிறோம். கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

நாம் எறும்பை பார்த்து "ஒரு நாள் வாழும், அற்ப வாழ்க்கை கொண்ட ஜீவன்" சொல்வது போல, ஒரு மனு அரசரின் காலத்தை கணக்கிட்டு பார்க்கும் போதே, மனு அரசரின் பார்வையில், நம் 100 வயது கால பரிபூரண வாழ்வை பார்த்தாலும் கூட, நம்மை பார்த்து, "அற்ப ஜீவன்கள்" என்று தோன்றலாம்.

எறும்பு கூட்டம் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டாலும், அந்த ஒரு நாள் வாழும் கூட்டத்தை மதிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையை செய்வது போல, நாம் போடும் கூச்சலை, இந்த எறும்பு போடும் கூச்சல் போல மதிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

காலத்தை வைத்து பார்க்கும் போது, ஒரு மனுவுக்கே இப்படி தோன்ற வாய்ப்பு இருக்கும் என்றால், இப்படி 14 மனு அரசர்கள் ஆண்ட பின், பிரம்மாவுக்கு ஒரு பகல் மட்டும் முடிகிறது.

இப்போது உள்ள பிரம்மா தன் 100 வயதில் 50 வயது முடித்து இருக்கிறார். பிரம்மாவுக்கு, மனு அரசர்களின் காலமே "அற்ப வாழ்க்கை" என்று தோன்ற வாய்ப்பு உள்ளது.
மனிதர்களின் வாழ்வு அவர் பார்வையில் மதிக்கத்தக்கதா என்று கூட சொல்ல இயலாது.



ராவணன், ஹிரண்யகசிபு போன்ற மகா பலசாலிகள், பிரம்மாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கே, கடும் தவங்கள் பல வருடங்கள் இருக்க வேண்டி இருந்தது. ஏன் இவர்கள் கடும் தவம் இருந்தார்கள் என்று நமக்கு இப்பொழுது கொஞ்சம் புரிய வாய்ப்பு உள்ளது.



இப்பொழுது உள்ள பிரம்மாவுக்கு 100 வயது முடிந்த பின், நித்யமாக உள்ள பரவாசுதேவன் "நாராயணன்" மீண்டும் பிரம்மாவை உருவாக்கி உலகை நடத்த ஆணை இடுகிறார்.

ஒரு நாள் பிரம்மாவும் மறைவார் என்பதை பார்த்து, "அற்ப வாழ்க்கை" என்று நிலையான பரவாசுதேவன், பிரம்மாவை பார்த்து சொல்ல கூட வாய்ப்பு உள்ளது.

பிரம்மாவை பார்ப்பதற்கே, ராவணன், ஹிரண்யகசிபு எத்தனை முயற்சி செய்தார்கள் என்று தெரிகிறது.

பிரம்மாவின் ஆணையில், இப்பொழுது ஆளும் "வைவஸ்வத" மனுவை, நாம் இருக்கும் காலத்திற்குள், ஏதாவது செய்து அவர் கவனத்தை நம் பக்கம் திருப்பி கொண்டு வந்து, அவரை நம் கண் எதிரே காட்சி கொடுக்க வைக்கவே எத்தனை முயற்சி செய்ய வேண்டும்?

காலம் கடந்து இருக்கும் பரவாசுதேவனை, உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, "எங்கே, கடவுளை காட்டு?" என்கிறான் நாத்தீகன்.

ஊரில் உள்ள கலெக்டரை பார்க்கவே, நாம் எத்தனை முயற்சி செய்து அவர் கவனத்தை திருப்ப வேண்டி இருக்கிறது.

இப்படி இருக்க, நாத்தீகனுக்கு இவன் பாட்டுக்கு கும்மாளம், குடி என்று வாழ்க்கையை நடத்தி விட்டு, "கடவுளை காட்டு" என்பானாம். பரவாசுதேவன் சரி என்று சொல்வதற்குள்ளாகவே, பிரம்மாவுக்கு ஒரு நொடி ஆகி விடுமே?.
பிரம்மாவின் ஒரு நொடி கணக்கு போட்டாலே, ஒரு யுகமே முடிந்து விடுமே?

நாம் கூப்பிட்டு அவர் சரி என்று வந்தால், அவர் கணக்கு படி, அவர் வருவதற்குள், நாம் இறந்து, யூகமே முடிந்து விடுமே?

இதையெல்லாம், கருத்தில் கொண்டு தான், மனிதர்களை பார்த்து, பக்தி செய். தர்மத்தில் இரு. பரவாசுதேவனை காண ஆசைப்படு என்று சொல்லி வைத்தார்கள்.

நாம் வைக்கும் அன்பு என்ற பக்தி ஒன்றே, ஒரு ஜென்மத்தில் அவர் இஷ்டப்பட்டு, நமக்கு முன் காட்சி கொடுக்க வைக்கும்.

நாம் இந்த பிறவியில் நாத்தீகனாகவோ, பொய் மதங்களை நம்பி ஏதோ ஒன்றை தெய்வம் என்று வணங்கினாலோ, மனுவை பொறுத்தவரை, பிரம்மாவை பொறுத்தவரை, இவையெல்லாம் ஒன்றும் இல்லாத விஷயம்.

மறு பிறவிக்கோ குறைவே இல்லை. காலமோ எல்லை இல்லாதது.
அவர்களை பொறுத்தவரை, பரவாசுதேவனிடம் பக்தி செய்யும் வரை இந்த மறு பிறவி கடலில் தள்ளிக்கொண்டே இருப்பர்.

எவன் இந்த பக்தி என்ற ஆயுதம் கொண்டு, பரவாசுதேவனின் கவனத்தை திருப்பி அவரின் காட்சியை பெறுகிறானோ, அவன் பரவாசுதேவனோடு ஐக்கியமாகிறான்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், "உலகை பற்றி கவலை படாதே.. நீ உன் கடமையை செய். பக்தி செய்" என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லி இருப்பார் போலும்.

Sunday 12 November 2017

ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாறுவது


சந்திரகுப்த மௌரியன், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் கைப்பற்றிய பகுதியை, மீண்டும் கைப்பற்றினான்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆண்ட இந்த அரசன், தன் மகன் பிந்துசாராவுக்கு ராஜ்யத்தை கொடுத்து விட்டு, ஜைன மதத்தில் சேர்ந்தான்.



பிந்துசாராவின் மகன் உலக புகழ் பெற்ற வீரனாக இருந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி.
265BCல் கலிங்க போரில் வெற்றி பெற்ற பின், ஒரு புத்த பிக்ஷுவின் பேச்சை வேத வாக்காக எடுத்து, சமாதானம் பொறுமை அன்பு என்ற வார்த்தையில் மயங்கி பௌத்த மதத்தை ஏற்றான்.

ஒரு அரசன் நாட்டை காக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். க்ஷத்ரியனாக இருக்க வேண்டும். சந்யாசி போன்று பேச கூடாது. வீரர்களையும் போர் பயிற்சி குறையாதவர்களாக, வீரர்களாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும்.

பௌத்த மதத்தை ஏற்ற அசோக சக்கரவர்த்தி, தன் குடையின் கீழ் இருந்த ஆப்கான் முதல் பாகிஸ்தான், இந்தியா முழுவதும் இருந்த அரசர்களை பௌத்த வழியில் இழுத்தான்.

பௌத்த மதம் மிக வேகமாக பரவியது. எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள். யார் வாயிலும் "புத்தம் சரணம் கச்சாமி" என்ற வார்த்தைகள்.
இது போதாது என்று வேத தர்மத்தை தன் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு புது புது மதங்கள் உருவானது.

காபாலி என்ற கடவுளின் பெயரால், நர பலி கொடுக்கும் கூட்டம் உருவானது.
அரசனே பௌத்த மதம் என்று போனதால், போர் வீரர்கள் புத்த கோவில் கட்டவும், காவல் காக்கவும் ஈடுபடுத்த பட, போர் பயிற்சி குறைந்த, வீரம் குறைந்த வீரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர்.

இப்படி பௌத்த மதம் பாரதத்தில் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவிற்கு மேற்கு திசையில் இரு புது மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தன.

ஒரு மதம் வன்முறை மூலமாக தன்னை பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.
மற்றொரு மதம், பௌத்த மதத்தை போல அன்பு, இரக்கம் என்ற போர்வையில் பணத்தை கொடுத்தாவது பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.

சுமார் 788 AD - 820 ADல் இறைவனே இந்த வேதத்தை, பாரதத்தை காப்பதால், பௌத்தம் தலை விரித்து ஆடும் பாரதத்தை, வேத மார்க்கத்தில் இருந்து விலகி உருவான பொய் மதங்களை ஒடுக்க சிவபெருமானே "ஆதி சங்கராக" அவதரித்து 70க்கும் மேற்பட்ட பொய் மதங்களை ஒடுக்கினார். மீண்டும் வேத மார்க்கத்தை ஒளிர் விட செய்தார்.

சந்திரகுப்த மௌரியனும், அசோக சக்கரவர்த்தியும் விதைத்த பௌத்த விதைகள், பிற் காலத்தில் வந்த அரசர்களையும், வீரர்களையும் கோழைகள் ஆக்கி விட்டது.

இந்த 2 ஹிந்துக்கள் மதம் மாறியதன் விளைவு, கோடீஸ்வரர்களாக இருந்த நாம், 947 ADல் ஆரம்பித்து, 1947 வரை இந்திய தேசமும், வாழும் ஹிந்துக்களும் இந்த புதிய உருவாக்கப்பட்ட மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவில் கால் ஊன்றி, மத மாற்றம், கொள்ளை, கற்பழிப்பு, பெரிய பெரிய கோவில்களை இடித்து அவர்கள் வழிபடும் ஸ்தலங்களாக மாற்றுவது, அடிமை படுத்துவது, கலாச்சாரத்தை கெடுத்து தன் மாமிச மது கலாச்சாரத்தை புகுத்துவது என்று அனைத்தையும் நம் முன்னோர்கள் அனுபவிக்க வித்திட்டது.



பௌத்த மதம் ஆப்கான் தாண்டி, ஈரான் வரை பரவி இருந்தது. ஹிந்துக்களாக இருந்த ஈரானியர்கள், 900AD சமயங்களில் பௌத்த மதத்தை தழுவி இருந்தனர்.

947ADல், அமீர் சூரி என்ற ஈரான் அரசன் பௌத்த மதத்தில் இருந்தான்.
இந்த சமயத்தில், புதிதாக உருவாகி இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசர்கள் இந்தியா பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஸபாரிட் பரம்பரை (Saffarid Dynasty) சேர்ந்த இஸ்லாமிய படையை எதிர்க்க வேண்டிய நிலை அமீர் சூரிக்கு உருவானது.

ஒரு அரசன் அன்பு இரக்கம் என்று பௌத்த மதத்தில் இருப்பதை விட மதத்தை பரப்ப ஆயுதம் எடுக்கும் இவர்கள் மதம் பிடித்து போனது.
தான் பௌத்தனாக இருந்த போதிலும், தன் மகனுக்கு "முகமது பின் சூரி" என்று இஸ்லாமிய பெயர் வைத்தான் அமீர் சூரி.

தன் வரை பௌத்தனாக இருந்துவிட்டாலும், இவன் மகன் முகமது பின் சூரி இஸ்லாமியனாக வளர்ந்தான். முகமது பின் சூரி தன் மகன் "அபுஅலி இபின் முகம்மது"வை ஒரு இஸ்லாஸ்மியனாக வளர்த்தான்.

அபுஅலி, தான் பௌத்த குடும்பத்தை சேர்ந்தவன், அதற்கு முன் ஹிந்துவாக இருந்தவன் என்ற நினைவு இன்றி, தன் பௌத்த தேசமாக இருந்த ஈரான் தேசத்தை முழுவதையும், இஸ்லாமிய தேசமாக மாற்றினான். மசூதிகள் கட்டினான்.
மதராசாக்களை நியமித்தான். மத வெறி உருவானது.

ஒருவன் மதம் மாறினால், அவனுக்கு பின் வரும் அவன் சந்ததியினர் என்ன அட்டூழியம் செய்வார்கள் என்பது இவர்கள் ஹிந்துக்களுக்கு செய்த அட்டூழியத்தை கண்டே தெரிந்து கொள்ளலாம்.

இவன் மதம் மாறியதால், இவன் பிள்ளைகள், பின் வந்த சந்ததியினர்கள் ஹிந்துக்களுக்கு செய்யாத கொடுமைகள் இல்லை. ஈரான், ஆப்கான் போன்ற தேசங்கள் இஸ்லாமிய தேசங்கள் ஆகின.

அமீர் சூரி தன் மகனுக்கு இஸ்லாமிய பெயர் வைத்து, புதிதாக "கோரி பரம்பரை" என்ற முதல் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு உருவானது.

இவன் பரம்பரையில் வந்தவனே "முகம்மது கோரி". இவன் ஒருவனே 1000க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஹிந்து கோவில்களை சிந்து தேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற தேசங்களில் இடித்தான்.

கொள்ளை அடித்த தங்கங்களை கொண்டு ஆப்கான் நாட்டை இஸ்லாமிய தேசமாக்கி, சேர்த்தான்.

ஹிந்து பெண்களை தன் தேசங்களுக்கு எடுத்து சென்று விற்று விட்டான். எதிர்ப்பவர்களை கொன்று, பயந்தவர்களை மதம் மாற்றினான்.

மதம் மாறிய அமீர் சூரி என்ற ஒருவனால், அடுத்த 1000 வருடங்கள் உலகமே ரத்தத்தில் புரண்டது.

கோரியின் காலம் முடிந்து பின் வந்த அலாவுதீன் கில்ஜி டெல்லியை கைப்பற்றி இருந்தான்.
ஒரு சமயம் குஜராத் தேசத்தை நோக்கி போர் செய்த போது, அங்கு இருந்த "மாணிக்" என்ற ஒரு ஹிந்துவை தன் அடிமையில் ஒருவனாக விலைக்கு வாங்கினான்.



 இந்த மாணிக் என்ற ஹிந்து, போர் கலையில் வீரனாக இருப்பதை கண்டு அலாவுதீன் கில்ஜி இவனை அடிமை தனத்தில் இருந்து விலக்கி, தன் படைத்தளபதியாக ஆக்கினான்.
இதனால் கவரப்பட்ட மாணிக், தன்னை இஸ்லாஸ்மியனாக மாற்றிக்கொண்டான்.

மாலிக் காபுர் என்ற பெயரில், அலாவுதீன் கில்ஜியின் கட்டளையின் பெயரில், இவன் ஆந்திராவில் ஒரு லட்சம் படையுடன் சென்று அங்கு இருந்த ஹிந்து அரசனை தோற்கடித்து, ஊரையே கொள்ளை அடித்தான்.

கோவில்களை இடித்து, கோஹினூர் வைரத்தை காளியின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு, பின்னர் மதுரை மீது படை எடுத்து, அங்கு இருந்த மீனாக்ஷு கோவிலை முற்றுகை இட்டான்.

உள்ளே புகுந்து, லிங்கமாக இருக்கும் சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்தில், வேறொரு லிங்கத்தை இடித்து கீழே தள்ளி விட்டு கோவிலை நாசமாக்க முயன்றான். அடுத்த 60 வருடங்கள், மீனாக்ஷி கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு பூஜை இல்லாமல் தடைபட்டு போனது.

பாண்டிய மன்னனின் தொடர் போராலும், டெல்லியில் இருந்து மேலும் படைகள் கிடைக்க சிரமம் ஏற்பட, அங்கிருந்து ஸ்ரீ ரங்கம் நோக்கி சென்று, அங்கு இருந்த ஸ்ரீ ரங்கநாதர் கோவிலை முற்றுகை இட்டான்.

அங்கு இருந்த 10000 வைஷ்ணவர்களை கொன்றான். உத்சவர் ஸ்ரீ ரங்கநாதரை எடுத்து டெல்லிக்கே சென்று விட்டான். அங்கு தன் மகள் சுரதானிக்கு பொம்மை என்று கொடுத்து விட்டான். பின்னர், சுரதானி ஸ்ரீ ரங்கனாதானுக்கு பக்தை ஆகி, துலுக்க நாச்சியார் ஆகி விட்டாள் என்று பார்க்கிறோம்.

மதம் மாறியவன் செய்த செயல்களை திரும்பி பார்க்கும் போது, கோஹினூர் வைரம் முதல், கோவில்கள் நாசமாக்கப்பட்டதும், ஹிந்துக்கள் பலர் உயிர் இழக்க காரணமானதும், மதம் மாறி இன்று முஸ்லிமாகவும், கிறிஸ்தவனாகவும் திரியும் ஹிந்துக்களும், நாம் ஏழைகள் ஆனதற்கும், வளரும் நாடு என்று ஆனதற்கும் என்ன காரணம் என்ற உண்மை புரியும்.



ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - தானும், தன் ஹிந்து சொந்தங்களும் மதம் மாறுவது. இதுவே ஹிந்துக்களுக்கு ஒரு பாடம்.

Tuesday 7 November 2017

நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச)


நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார்.



ஐந்து விதமான நீர் உள்ளது :

  1. உலகம் ஒரு நீரால் உருவானது.
  2. மேகத்தில் ஒரு நீர் உள்ளது.
  3. மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது.
  4. பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது.
  5. ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது.


"முதலில் சொன்ன நீர் நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்பது போல தோன்றினாலும், "உலகம் என்று இருப்பதே, இந்த நீரால் தான்".

இரண்டாவதாக சொன்ன மேக நீர், "நமக்கு ப்ரயோஜனம் இல்லை" என்றாலும், சக்தி உள்ள சில பறவைகள் அந்த மேகம் வரை சென்று, அந்த நீரை பருகும் சக்தி உள்ளதாக இருக்கிறது.


மூன்றாவதாக சொன்ன மழை நீர், நம் அனைவருக்கும் ப்ரயோஜனம் அளிக்கிறது.
ஆனால் குறிப்பிட்ட காலம் வரை. பூமி வரை வந்து விழுகிறது.
இந்த மழை இருக்கும் வரை தான், ப்ரயோஜனம் கிடைக்கிறது.

நான்காவது சொன்ன பூமி நீர், பூமியின் அடியில் உள்ளது.
கொஞ்சம் சிரமப்பட்டு தோண்டினால், இந்த நீர் கிடைக்கிறது.

ஐந்தாவது சொன்ன ஏரி, குளங்களில் உள்ள நீர், யாவருக்கும் கிடைக்கிறது.  ஏரி, குளம் அருகே சென்றாலே கிடைக்கிறது.

மனிதர்களில் சிலர் அந்த பறவை போன்று சக்தி உள்ளவர்களாகவும்,
மழை பெய்யும் சமயத்தில் இருந்தவர்களாகவும்,
இருக்கும் இடத்திலேயே உள்ள நீரை தோண்டி எடுக்கும் சக்தி உள்ளவர்களாயும் உள்ளனர்.
பலர் காலத்தை தவற விட்டவர்களாயும், அத்தனை சக்தி இல்லாதவர்களாயும் உள்ளனர்.

பரம் என்ற வைகுண்டத்தில் இருக்கும் நாராயணன்,  ஜீவனிடம் உள்ள கருணையால், எப்போதும் இருக்க, பரம் என்ற இடத்தில் மட்டும் இருக்காமல், தன்னை பல விதமாக பிரகடனப் படுத்துகிறார்.

தன்னை வியூகம் என்ற பாற்கடலில் விஷ்ணுவாக, ரிஷிகளும் தேவர்களும் காணும் படியாக இருக்கிறார்.
இது மேகத்தில் ஒரு நீர் உள்ளது போல தவ வலிமையும், சக்தி உள்ள சிலருக்கு மட்டுமே பயன். இவர்கள் மட்டுமே சென்று காண முடியும்.

தர்மம் வீழ்ச்சி அடையும் போது விபவம் என்ற நரசிம்ஹ, ராம, கிருஷ்ண அவதாரங்கள் செய்தார்,செய்கிறார்.
அவதாரம் நடக்கும் போது பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள் பாக்கியசாலிகள். இது மழையால் சில இடங்களில் நீர் பூமியில் விழுகிறது போல.

ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக கடவுள் என்ற பெயருடன் உள்ளார். (கடவுள் = கடந்து உள்ளே கவனித்தால் ஒவ்வொரு உயிரிலும் நாராயணன் இருப்பது புலப்படும்)
யோகத்தினால் தன் உள்ளே இருக்கும் அந்த நாராயணனை உள்ளே கடந்து பெரு முயற்சி செய்து சென்று சிலர்  பார்க்கின்றனர் (ஆதி சங்கரர் போன்ற அத்வைதிகள்).
அனைத்து உயிரிலும் இருக்கிறார் என்று உணர்கின்றனர்.
இது பூமிக்கு அடியில் ஒரு நீர் உள்ளது போல. 
நாம் நிற்கும் பூமிக்கு அடியில் தான் இருக்கிறது. ஆனால் பெரு முயற்சி தேவைப்படும்.

மூடனும், முரடனும், நல்லவனும், கெட்டவனும்,
சக்தி உள்ளவனும், சக்தி இல்லாதவனும், எவனும் எப்பொழுதும் பார்க்க நின்று கொண்டே இருக்கிறார் அர்ச்ச அவதாரத்தில்.
ஞானமும், பக்தியும் ஒருவனுக்கு இருக்கும் அளவிற்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.
சென்றால் பார்க்கலாம் என்று கோவிலில் இருக்கிறார்.
வீட்டிலும் இருக்கிறார்.
தன்னை அர்ச்சிக்க (பூஜிக்க) விரும்பினால் மூடத்தனமாக அர்ச்சனை செய்தாலும் ஏற்று கொள்கிறார்.
மூடனையும் அறிவாளி ஆக்குகிறார்.
கேட்டதை கொடுக்கிறார்.
திட்டினால் கூட அமைதியாக இருக்கிறார்.
எப்பொழுது கேட்பதை நிறுத்தி விட்டு, உன் பலத்தினால் காப்பாற்று என்று கேட்பான் என்று காத்து இருக்கிறார்.
எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.
ஏரி, குளங்களில் சில இடங்களில் நீர் கிடைக்கிறது. 
முயற்சி செய்யாமலேயே ஒருவன் குளம் இருக்கும் சென்று நீர் குடிப்பது போல, எப்பொழுதும் இருக்கும் படியாக இருந்து கொண்டே இருக்கிறார்.



பாவம், புண்ணியம் இரண்டையும் செய்யாத ஜென்மத்தில், பரம் என்ற வைகுண்டம் ஒரு ஜீவன் அடைகிறான்.

கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? - ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி


"ஹிந்துக்கள் கடவுளை உருவம் செய்து வணங்குவதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
இது ரமணரிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்வி.

"இந்த தேகமே நான் என்று இருக்காமல், நாம் இந்த தேகத்தில் குடி இருக்கும் 'ஆத்மா' என்று ஹிந்துக்கள் உணர்ந்து இருப்பதால், இந்த ஜீவ ஆத்மாக்கள் பல விதமான உடம்பில் பிரவேசித்து செயல்பட முடியுமென்றால், ஜீவ ஆத்மாவுக்கு காரணமான, பரமாத்மா, பக்தனுக்காக, ஒரு சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்ய முடியும். பக்தி உள்ளவனுக்கு பரமாத்மா சிலையில் தன்னை பிரவேசித்து அணுகிரஹம் செய்கிறார்.


தான் இந்த உடம்பில் இருந்து விடு பட்ட பின், தான் ஆத்மா மட்டுமே என்று உணர்பவனுக்கு, உருவ வழிபாடு தேவை இல்லை. இதனால், ஹிந்துக்கள் உருவ வழிபாடு், அரூப வழிபாடு இரண்டையும்  ஒப்புக்கொள்கின்றனர்.

எல்லாம் படைத்த கடவுளுக்கு இதை செய்ய முடியாது, இவருக்கு சக்தி கிடையாது, இப்படி வர மாட்டார் என்று மனித புத்தி கொண்டு சொல்வது, இறைவனின் மகத்துவத்தை குறைப்பதாகும்.
மனிதர்களால் எழுதப்பட்ட மதங்கள் இப்படி தான் இறைவனின் தரத்தை தாழ்த்தும்.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டவர்கள். இறைவனின் மகத்துவத்தை குறைத்து அவமானப்படுத்துபவர்கள் அல்ல. உண்மையை உணர்ந்தவர்கள்.
இந்த காரணத்தினாலேயே, ஹிந்துக்கள் மட்டுமே பிறர் நம்பிக்கையை மடத்தனமாக இருந்தாலும் கேலி செய்ய பொதுவாக விரும்புவதில்லை.