Followers

Search Here...

Friday 13 April 2018

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை ஏற்பட காரணம் என்ன?

Spiritual Answer:

பொதுவாக நாத்தீகன் தனக்கும் மேல் ஒரு பரமாத்மா இருக்கிறார் என்று அறியாமல், எல்லாம் தன் முயற்சியால் நடக்கும் என்று நினைப்பான்.
அவனுக்கு மீறி இருக்கும் பல விஷயங்கள், மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போன்றவற்றை கொடுக்கும்.

இந்த பயம், கவலை இவர்களில் சிலருக்கு நோய் உண்டாக்கும், சிலருக்கு சோம்பறித்தனத்தை கொடுக்கும். சிலருக்கு தீவிரவாதம், கோபம் போன்ற குணத்தை கொடுக்கும்.




இது போன்ற கவலைகள் நாம் அடைவதே ஒரு நாத்தீக லட்சணம்.

மகா சக்தி வாய்ந்த பகவான் உங்களை மட்டுமின்றி உலகையே காக்க வல்லவன் என்று தெரிந்தும், கவலை பட கூடாது.

நம்மையும் வழி நடத்த கடவுள் இருக்கிறார் என்ற அறியும் நிலையில் நீங்கள் இருந்தால், எந்த நிலையிலும் முயற்சியும் கை விடமாட்டீர்கள், கவலையும் பட மாட்டீர்கள்.

கவலைகள் பல இருந்தாலும், தியானம் உடனே சிலருக்கு கை கூடுவதற்கு காரணம் இந்த தைரியம் தான்.

கவலைகள் பல இருந்தாலும், சோர்ந்து போகாமல் தன் கடமையை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்பவர்கள் இந்த தைரியத்தில் தான்.




யோகிகள், சாதுக்கள் சோம்பேறிகளாய் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த தைரியத்தில் தான்.

எந்த வறுமையிலும் தன் முயற்சியை விடாமல் இருப்பவர்களும் இந்த தைரியத்தில் தான்.

நாத்தீக குணத்தை விட்டு விடுவதாலேயே, மன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் போய் விடும். 
 
இந்த தைரிய மன நிலையில் அமர்நது கொண்டு, கட்டை விரலின் நுனியும், மோதிர விரலின் நுனியும் சேர்த்து, பிராணாயாமம் மெதுவாக, நிதானமாக 30 நிமிடம் தினமும் செய்தாலே உயர் ரத்த அழுத்தம் என்ற நோயே அண்டாமல் போகும்.

அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால் அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும்

சத்தியம் (வாக்கு கொடுத்தால் அதில் உண்மையாக இருப்பது)

"சத்தியம்" என்ற தர்மம், இன்றைய இந்தியாவில் உள்ள மக்களிடம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

"நாளை 10 மணிக்கு உங்களை பார்க்க வருகிறேன்" என்று ஒரு இன்றைய இந்தியன் சொன்னால், இவன் சத்தியத்தை நம்ப முடிவதில்லை.

இன்று, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியத்தை உயிராக மதிக்கின்றனர்.
இந்தியாவில் இதற்கு மதிப்பு குறைகிறது.

சத்தியத்தை மதிக்கும் நாடு எப்பொழுதுமே பிரகாசம் அடையும் என்பது இந்த நாடுகள் எப்படி வலிமையாக இருக்கிறது என்று பார்க்கும் போதே தெரிகிறது.

சத்தியத்துக்காக வாழ்ந்த ராமர் பிறந்த நாட்டில், இந்த தர்மம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன ? 
ராமர் போன்ற சத்தியத்தில் நின்றவர்கள் சரித்திரத்தை நாம் மறந்ததே இதற்கு காரணம்.

சத்தியத்தில் நிற்கும் மக்களே, நாட்டை உயர்த்த முடியும்.
இனி இந்தியா முன்னேற ஒவ்வொரு இந்தியனும் முதலில் கடைப்பிடிக்க வேண்டியது சத்தியமே !

சரி,
எப்படி இந்தியாவில் பொய் பேசும் பழக்கம் அதிகமாய் போனது?

பொய் பேச தேவை இல்லை என்ற இடத்தில் கூட, வெகு சாதாரணமாக இப்பொழுது பொய் பேசுகின்றனர். இது ஏன்?



எப்படி இந்த சத்தியம் என்ற தர்மம் இந்தியர்களிடம் இப்போது மலிந்து காணப்படுகிறது ?

Root cause Analysis :
இஸ்லாமியர்களின் 1000 வருட ஆதிக்கத்தில் இருந்தும் கூட, ஹிந்துக்களிடம் சத்தியம் அழியாமல் தான் இருந்துள்ளது.

ஆனால், சத்தியமாக இருக்க வேண்டும் என்ற பண்பு படிப்படியாக கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்து குறைய தொடங்கி, இப்பொழுது விடுதலை அடைந்த பின்பும், ஹிந்துக்கள் தன் குணமாக வைத்திருந்த இந்த சத்யம் (உண்மையாக இருத்தல்) இன்று குன்றி போய் உள்ளது என்பதே உண்மை.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று இன்றும் இந்தியா சொல்லிக் கொண்டாலும், இந்தியாவில் யாவருமே பொய் சொல்ல மனம் அஞ்சாததால், அரசன் முதல் பொது மக்கள் வரை பொய் பேச இன்று தயங்குவதில்லை.
நீதிமன்றத்தில் உள்ள ஏராளமான வழக்குகள் இதற்கு சாட்சி.

இந்த சத்தியத்தை உயிராக கொண்டவர் ஸ்ரீ ராமர்.
ராமரிடம் அன்பு உள்ளவன் பொய் பேச அஞ்சுவான். 
சத்தியத்தில் இருப்பான்.

இஸ்லாமியர்கள் காலம் வரை, ஹிந்துக்கள் பெரும்பாலும் அவரவர்கள் உயிராக மதிக்கும் தெய்வத்தை வைத்தோ, தாய் தந்தை மீதோ ஒரு சபதம் செய்து வாணிகமோ, உடன்படிக்கையோ செய்து கொண்டனர்.

இப்படி செய்த சபதம், வாய் மொழியாக இருந்தாலும், பெரும்பாலும் ஜெயித்துள்ளது. 

அரசன் வரை, செல்லும் வழக்குகள் மிக குறைவு அந்த காலங்களில்.

அப்படி வரும் வழக்கும், சில நாட்களில் தீர்வு காணப்பட்டு விடும்.
இது எப்படி சாத்தியமானது?

இந்த சபதமே யார் குற்றவாளி என்பதை காட்டி விடும் சக்தி கொண்டதாக இருந்தது.

பெரும்பாலும் குற்றம் செய்தவன், தன் தாய் மீதோ, தன் ப்ரியப்பட்ட தெய்வத்தின் மீதோ சபதம் செய்த பின், பொய் சொன்னதில்லை. பொய் சொல்ல தயங்குவான்.

இந்த சபதம் உள்ளுக்குள் சென்று மனதை தொடுவதால், ஹிந்துக்கள் முதலில் "சபதம் செய்", பின் பத்திரம், பட்டா போன்றவை எழுதிக் கொள்ளலாம் என்றனர். 

கிறிஸ்தவர்களின் ஆட்சி ஆரம்பித்ததில் இருந்து, பத்திரம், பட்டா போன்றவை மிக முக்கியம் என்று கொண்டு வரப்பட்டு, "சபதம் செய்" என்பது காணாமல் போனது.

நம் ஹிந்து தெய்வங்களின் மீது இருந்த த்வேஷ புத்தியே, இதற்கு காரணம்.

செய்யும் சபதம் ஹிந்துக்களின் தெய்வமாக இருந்தால், எப்படி இவர்கள் நம்பிக்கையை கெடுக்க முடியும்?
தங்கள் மதத்தை பரப்புவது மட்டுமே நோக்கம் கொண்ட இவர்கள், இது போன்று தெய்வத்தின் பெயரால் என்று சபதம் செய்ய அனுமதித்தால், 1000 வருடம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் மழுங்கி போன ஹிந்துக்கள் விழித்து கொள்ள வழி வகுக்கும்.
தன் மதத்தை பரப்ப இயலாமல் போகும் என்று கணித்து, அதனால் லீகல் சிஸ்டம் என்பதை மட்டுமே முக்கியப்படுத்தி, இவர்களின் தெய்வ நம்பிக்கை பயன் அளிக்கும் என்று தெரிந்தாலும், இதனை தந்திரமாக நம் வழக்கத்தில் இருந்து அகற்றினர்.

சபதம் செய்பவனுக்கு, மனதால் ஒரு வித சஞ்சலம் / நெருடல் ஏற்படும். இந்த சபதம் செய்யும் பழக்கம், காணாமல் போனதும், பத்திரத்தில் கை ரேகை பதித்தாலும், கை எழுத்தே போட்டாலும், "இது என் கை எழுத்து இல்லை" என்று தைரியமாக பொய் சொல்ல ஆரம்பித்தனர்.

பொய் சொல்ல பயந்த நீதி மன்றத்தில், இன்று சகஜமாக பொய் சொல்கின்றனர்.

நீதிபதிகள் ஒரு வழக்கை முடிக்க பல வருடங்கள் ஆகிறது.
இதனால். யார் உண்மை சொல்கின்றனர், யார் பொய் சொல்கின்றனர் என்பது கண்டு பிடிக்க முடியாது போய், ஒரு வழக்கு முடிய பல வருடங்கள் எடுக்கிறது.

உண்மையை நிலைநாட்ட எங்கும் பயன் படுத்தப்பட்ட சபதம் செய்யும் முறை, இன்று நீதி மன்றத்தில் மட்டும் இன்றும் உள்ளது.

இன்றும் ஹிந்துக்கள் கீதையை கொண்டோ,
பிற மதத்தில் மாறிய/மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அவர்களின் நூலையோ கை வைத்து சபதம் செய்கின்றனர்.

இந்த சபதம் செய்யும் பழக்கம், சகஜமாக ஒவ்வொரு வீட்டிலும், வீட்டில் சண்டை என்றால் ஊர் பஞ்சாயத்தில் என்று இந்த சபதம் என்ற மனோவியல் கொண்டே பல தீர்க்க படாத வழக்குகள் அரசன் வரை சொல்லாமலேயே அந்த காலத்தில் எளிதாக தீர்த்துள்ளனர்.

இன்றோ, அரச பதவியில் இருக்கும் அதிகாரி முதல் வீட்டில் உள்ள குழந்தை வரை பொய் பேச பயப்படுவதில்லை.

பத்திரத்தில் கையெழுத்தோ, சாட்சியை கண்டோ, கொலை செய்யவோ, திருடவோ இவர்களுக்கு (நமக்கு) பயமில்லை.

பணம் இருந்தால் தப்பிக்க வழி தேடுவோம் என்று தான் நினைக்கின்றனர்.

இந்த அதர்ம புத்தி ஒழிய வேண்டும் என்றால், அனைவரும் ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை தினமும் தியானிக்க வேண்டும். 



தந்தை செய்த சத்தியத்துக்கு தான் 14 வருடம் காடு செல்ல கூட தயார் என்று சென்ற ஸ்ரீ ராமர் இந்த நாட்டில் இருந்தவர் என்பதை நாம் மறக்க கூடாது.

14 வருடங்கள் வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரம் வரை இவர் கால் தடம் உள்ளது என்பதை மறக்க கூடாது.

ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வால்மீகி என்ற ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ரிஷி, நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதையும் மறக்க கூடாது.

ராமர் ராவணனை தேடி வரும் பொழுது, நம் தமிழ் நாட்டில் இருந்த அகத்திய தமிழ்முனிவர் தன்னிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் தந்தார் என்பதையும் மறக்க கூடாது.

சத்தியத்தால் மட்டுமே நாட்டுக்கு மதிப்பு. 
இந்த தர்மமே அமெரிக்கா, ஜப்பான் மக்களிடம் காணப்படுகிறது.
 

"நாளை பார்க்க வருகிறேன்" என்று ஒரு ஜப்பான்காரன் சொன்னால், கட்டாயம் வருவான் என்று சொல்லலாம்.

இது அடிப்படை குணமாக இருந்த சமயத்தில், இந்தியன் மதிப்பு மிக்கவனாக இருந்தான்.
சரித்திரத்தில், வாஸ்கோடகாமா இந்தியாவை நோக்கி வந்தான்.
இந்தியர்கள் அந்த காலங்களில் கை நீட்டி கேட்பவர்களாக இல்லை.

இப்பொழுது எதற்கு எடுத்தாலும் இந்தியன் அமெரிக்காவையும், ஜப்பானையும் எதிர்பார்க்கும் நிலை வந்ததற்கு காரணம், இந்த சத்தியத்தை நாம் விட்டதே மூலகாரணம்.

ஸ்ரீ ராமர் வழியில் செல்ல செல்ல சத்தியம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வளரும்.

நாடு சத்தியத்தில் நிற்கும். மதிப்பு தானாக பெருகும்.

"சத்யம் ஏவ ஜயதே" ( "Truth Alone Triumphs") என்று சொல்லும் வாக்கு உண்மையாகும்.

ஏகலைவனும், துரோணரும்: ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம்

ராணுவத்தில் பயங்கரமான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.

சாதாரண துப்பாக்கியில் இருந்து nuclear bomb வரை தயாரிக்கப்பட்டு,
அதை பயன்படுத்தும் முறை, குறிப்பிட்ட தகுதி உள்ள வீரர்களுக்கு மட்டும் சொல்லி தந்து, எதிரிகள் உள்ளே வந்து நாட்டை பாதிக்காமல் இருக்க, இந்த வீரர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.



இது அனைத்து நாட்டு ராணுவமும் செய்கிறது என்பது நாம் அறிந்ததே..
ராணுவம் மட்டுமே அறிந்த இந்த அறிவியல், சாதாரண மக்களுக்கு தெரியாத வண்ணம் பாதுகாக்கப் படுகிறது.

மேலும்,
ஒரு சாதாரண மனிதன் தன் திறமையாலோ, அல்லது ராணுவ ரகசியத்தை திருடியோ, ஒரு அணு குண்டு தயாரித்தால் கூட, கடும் தண்டனைக்கு உள்ளாக நேரும். மரண தண்டனை வரை கூட சட்டம் செல்லும்.

இது போன்ற ஒரு நியாயமான நிகழ்வை நம் இதிஹாசத்தில் இருந்து எடுத்து, வேறு விதமாக அதை காட்டி, நம் ஹிந்து கலாச்சாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்ய முடியுமா ?
இப்படிப்பட்ட திருட்டுத்தனமான ப்ரசாரங்கள், நம் குழந்தைகள் படிக்கும் பாட புத்தகத்தில் உள்ளது.

நம் ஹிந்து குழந்தைகள் என்ன படிக்கின்றனர்? என்று தெரியாமல் பெற்றோர்கள் இருக்க கூடாது.
ஹிந்து ஸ்கூல், காலேஜில் சேர்க்க ஆசை படவேண்டும் ஹிந்துக்கள்.. 

பாடங்கள், சரித்திரத்தை மறைத்தாலோ, தவறாக எண்ணம் கொண்டு எழுதப்பட்டாலோ, அதை பெற்றோர்கள், தெரிந்து, குறைந்த பட்சம் உண்மை சரித்திரத்தை குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும்.

ஹிந்து குழந்தைகள் ஹிந்துக்களாக வளர்க்கப்பட, மிக முக்கிய பங்கு பெற்றோர்கள் கையில் உள்ளது. 
தரத்தை விட, குழந்தைகள் ஹிந்து விரோதியாகவோ, நாத்தீக பேய் பிடித்தவனாகவோ வளர்த்து விட கூடாது.?

நம் பாரத இதிஹாசத்தில் இருந்து, இந்த கல்வி அதிகாரிகளுக்கு கிடைத்தது ஒரே ஒரு கதை மட்டும் தான்.

ஏகலைவனும், துரோணரும்:
இது நமக்கு தெரிந்த நிகழ்வே.
துரோணர், தன் சிஷ்யர்களான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தும் அஸ்திர, சஸ்திர முறைகளை சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரிடம் சென்று தனக்கும் சொல்லித் தர வேண்டினான்.

துரோணர் க்ஷத்ரியன் (army person) மட்டுமே இதை கற்றுக்கொள்ள தகுதி ஆனவர்கள் என்று கூறி, மறுத்து விட்டார்.



ஏகலைவன் துரோணரை மனதுக்குள் குருவாக ஏற்று, அவர் சொல்லிக் கொடுக்கும் முறைகளை மறைந்து நின்று கவனித்து, தினமும் தனியாக சென்று பயிற்சி செய்வான். இப்படியே பல மாதங்கள் கடந்தன.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு, அம்புகளால் கட்டப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.



தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான்.

தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி உங்கள் மூலமே இதனை கற்றேன் என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

இப்படி ஏகலைவனும், துரோணரும் சந்தித்த நிகழ்வை குழந்தைகள் பாட புத்தகத்தில் மனப்பாடம் செய்யும் முறையில் வைத்து விட்டு, கேள்வி பதில் பகுதியாக, இவர்கள் கேட்கும் கேள்வியே விஷமத்தனமாக உள்ளது.
இவர்கள் குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி என்ன ?

கேள்வி :
இப்படி நடந்த இந்த ஸம்பவத்தை படித்ததன் மூலம், நீங்கள் (ஹிந்துக்களை பற்றி) என்ன நினைக்கிறீர்கள் ?
என்ன ஒரு விஷமமான கேள்வி ?!! 

இப்படி சாதுர்யமாக கேள்வி கேட்டு, படிக்கும் குழந்தைகளையும், சொல்லித் தரும் ஆசிரியர், பெற்றோர்களுக்கு மறைமுகமாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

"பாருங்கள், ஹிந்துக்கள் எப்படி ஒரு தாழ்ந்த வகுப்பில் உள்ள ஒருவனை தண்டித்து உள்ளனர்.
எப்படி இப்படி ஏகலைவனின் கட்டை விரலை குரு தக்ஷிணையாக கேட்கலாம்?!!"

இப்படியெல்லாம் ஒருவன் இந்த காலத்தில் அணுகுண்டு தயாரித்து விட்டு உயிரோடு இருக்க முடியுமா ?

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.

இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது "அணுகுண்டு" போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (Army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (Citizen).



துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.
இப்படி திருட்டு தனமாக ராணுவ ஆயுதங்கள் பயன்படுத்த கற்றுக்கொண்ட ஏகலைவன் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள
Ekalavya_War படிக்கவும்.


குழந்தைகள் history என்ற பெயரில் எந்த விஷத்தை (விஷயத்தை) படிக்கின்றனர்?  என்று பெற்றோரும் உணர்ந்து, நம் இதிகாசத்தை இவர்களும் சரியாக உணர்ந்து, என்ன உண்மையாக நடந்தது என்று சொல்லித்தரவேண்டும்.

1947ல் இருந்து இப்படிப்பட்ட விஷமக் கல்வியையே, கற்ற கூட்டம் தான், ஹிந்துவாக பிறந்தும் நாத்தீகனாகவும், ஹிந்துவின் பெருமையை சரியாக அறியாமல் தானும் சீரழிந்து, பல உயர் பதவியில் இன்று அமர்ந்து கொண்டு சீரழித்து வருகின்றனர்.

இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது, பாடம் எப்படி இருந்தாலும் உண்மையை சரியாக சொல்லிக் கொடுக்கும் கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 







இது தர்மமா? அதர்மமா? எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்திரம் வழி காட்டுகிறது

தர்மம் என்றால் என்ன?
எளிதாக புரிந்து கொள்ள:
1. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு பாதிக்குமோ, அது அதர்மம்.
2. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு நன்மை செய்யுமோ, அது தர்மம்.


உதாரணமாக :
ஒருவன் "கணித மேதை ஆக வேண்டும்" என்று படிக்க ஆசை பட்டாலும், ஆசை படாவிட்டாலும், மற்றவர்களுக்கு அதனால், ஒரு பாதிப்பும் இல்லை. ஆக இது தர்மம் என்று சொல்ல அவசியமில்லை.
இது அவரவர் இஷ்டம்.




ஒருவன் "இனி பொய் மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெட வாய்ப்பு உண்டு. பாதிப்பு உண்டு.
ஆக "பொய் பேசுவது" அதர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "இனி உண்மை மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் நல் வழியில் வர வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "உண்மை பேசுவது" தர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "அதர்மம் செய்பவனிடம் இருந்து தர்மத்தை காக்க, அவனிடம் பொய் கூட பேசுவேன்" என்றான் என்றால், இவனால் நல் வழியில் தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் காப்பாற்ற வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "அதர்மம் செய்பவனிடத்தில் பொய் பேசி தர்மத்தை காப்பது" தர்ம சூக்ஷ்மம் என்று அறியலாம்.



ஒருவன் "நான் மது அருந்துவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.
குடிப்பவனும் தன் உடலை கெடுத்துக்கொள்கிறான்.
குடிப் பழக்கத்தால் 70 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டியவன், 50 வயதில் உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட வாய்ப்பு உண்டு.

குடிக்காதவனை குடிக்க வைத்து, அவன் ஆயுளையும் குறைத்த பாவம் வேறு. ஆக "மது அருந்துவது" அதர்மம் என்று அறியலாம்.

 அதே போல, எந்த ஒரு செயலையும் இது தர்மமா? அதர்மமா? என்று கேட்கும் கேள்விக்கு, நம் ஹிந்து சாஸ்திரம் வழி காட்டுகிறது.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ராமர், அதர்மம் செய்த வாலியை மறைந்து நின்று கொன்றார்.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மம் செய்த அனைவரையும் அவர்கள் வழியிலேயே சென்று, இறுதியில் பாண்டவர்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?... ஒரு அலசல்

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ஏன்?

சிலர் "குழந்தையே வேண்டாம்" என்கிறார்கள்.




சிலர், "திருமணம் செய்தால் தானே இந்த கேள்வி வருகிறது. திருமணமே வேண்டாம்" என்கிறார்கள்.

அப்படியானால் "இவர்கள் காமத்தை வென்றவர்களா ?!!" என்றால் அதுவும் இல்லை.

திருமணம் வேண்டாம், நட்பாக நாங்கள் வாழ்வோம் என்று குடும்பம் (live-in relationship) நடத்துகிறார்கள்.

இப்படி ஏன்? என்றால், அதில் ஒரு லாபம் பார்க்கிறார்கள்.

குழந்தை பெற்று கொள்ளாமல் குடும்பம் நடத்தி, 
எப்பொழுது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறதோ, செலவே இல்லாமல் divorce செய்து விடலாம்.

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம் உருவானது இந்த ஹிந்து சமுதாயத்தில் ?

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு லாபமும் தெரியாததால் (உண்மையில் அறியாததால்) இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள யாவருக்கும் தயக்கம் உள்ளது.

மற்ற தேசங்களில் (குறிப்பாக கிறிஸ்தவ மக்களின்) நிலை இதை விட மோசம்.
பொதுவாக, பலர் பெற்றுக் கொள்ளவே தயார் இல்லை.
குடும்பம் நடத்த தயார் இல்லை. 
 நடத்தினாலும் பாதி விவாகரத்தில் முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கை இந்த கிறிஸ்தவ நாடுகளில் அதிகமாகி கொண்டே இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்த இஸ்லாமிய சமூகம் இந்த கிறிஸ்தவ நாடுகளை இன்னும் சில நூற்றாண்டுகளில் வ்யாபிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இது பொறாமை படக்கூடிய விஷயம் அல்ல. இவர்கள் வளர்ச்சி இவர்கள் சமூகத்திற்கு நன்மையே.
சமுதாயத்தில் ஒரு கலாச்சாரம் காக்கப்பட தலைமுறைகள் தேவை.

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்ற அந்த கால நம் தாத்தா பாட்டிக்கு "ஏற்பட்டது பல சொந்தம்".

ஏழு குழந்தைகளில், 6 உருப்படி இல்லாமல் பெற்றவர்களை கவனிக்காமல் விட்டாலும், சில குழந்தைகள் பரலோகம் போனாலும்,
ஒருவனாவது கடைசி மூச்சு வரை காப்பாற்றுவான்.

பல குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில்,
ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, மற்ற குழந்தைகள் சேர்ந்து காப்பாற்றும். 

இனி வரும் காலங்களில்,
ஒரு பிள்ளை பெற்று வாழப்போகும் அப்போதைய 80 வயது தொடும் கிழவனுக்கு கிழவிக்கு, 
பெற்ற ஒரு பிள்ளை எங்கோ ஒரு நாட்டில் வாழ அல்லது 
அவன் இவனை முந்தி, பரலோகம் செல்ல, 
யாரும் இல்லாத நிலையில் கஷ்டப்பட கூடிய காலம் வரும் அபாயம் உள்ளது. 

குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன என்ன கஷ்டம் வரும்? என்ற உணர்வே இன்று உள்ளவர்களுக்கு அதிகமாகிறது.

வயதான காலத்தில் காப்பாற்ற மாட்டான் என்று தெரிந்த பிறகு யார் குழந்தை பெற்று வளர்ப்பார்கள் ?
அதனால், திருமணமும் வேண்டாம்.

அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை வேண்டாம்.

இப்போது இதற்கும் மேல் போய், கல்யாணம் எதற்கு ? பேசாமல், சேர்ந்து பிடிக்கும் வரை வாழ்வோம். எப்பொழுது சரியாக படவில்லையோ, விலகி விடுவோம்.  இதனால் divorce செலவும் மிச்சம்.
இப்படி செல்கிறது பல நாடுகள். 
இதில் இப்போது நம் நாடும் சேர்ந்துள்ளது.

குழந்தைகள் இல்லை எனில், அந்த வீட்டில் உள்ள வயதானவர்களை யார் காக்க வேண்டும் ?
அதை அரசாங்கம் ஏற்கிறது பல நாடுகளில் இப்போது.
Social tax என்று வரி மக்களிடமே வாங்கி பல நாடுகள் இந்த சேவையை நடத்துகிறது.
இது பெரும் கேடு.




இதே சிந்தனை, வாழ்க்கை முறை, ஹிந்துக்களின் வாழ்க்கையிலும் இப்போது 15 வருடங்களாக நன்றாக புகுந்துள்ளது.

Divorce என்ற வார்த்தை கேட்டாலே ஆச்சர்ய படும் ஹிந்து குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு divorce கதை உள்ளது.

இந்த அவலங்களுக்கெல்லாம் ஒரே காரணம், நம்மிடம் இருந்த "கூடி வாழும்" குடும்ப தர்மம் காணாமல் போனதேயாகும்.

அந்த காலத்தில் 5 குழந்தை பெற்றாலும் பெற்றவனுக்கு, ஒருவனாவது தனக்கு கடைசி வரை கஞ்சி ஊற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தது.

5 குழந்தை பெற்றாலும், கணவன் மனைவி சேர்ந்தே இருப்பர் என்ற தைரியம் இருந்தது.

ஆபத்து காலத்தில் மாமன், சகோதர, சகோதரிகள் போன்ற உறவினர்கள் துணை இருந்தது.

குழந்தைகளே தங்களுக்குள் வரும் ஆபத்தை காத்துக் கொள்ளும் பாதுகாப்பு இருந்தது.

இப்படி கூடி வாழ்ந்த ஹிந்துக்கள், 1000 வருட இஸ்லாமிய, 300 வருட கிறிஸ்தவ ஆட்சியிலும் குடும்ப தர்மம் கெடுக்கப் படாமல் இருந்ததால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.

சாதாரண வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், ஒரு வசதியும் கிடைக்காது அவதிப்பட்ட காலத்திலும் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள் சாதாரணமாக பிறந்தன.

எப்படி வளர்க்க முடியும்?
யார் சோறு போடுவார்கள் ? 
என்ற ஐயம் இவர்களுக்கும் இருந்திருக்கும். 
இருந்த போதிலும் என்ன தைரியம் இவர்களுக்குள் இருந்தது ?

இத்தனை குழந்தைகளா? என்று கேலியாக பார்க்கும் முறை ஒரு புறம் இருக்க, சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கு பல உண்மைகள் வெளிப்படும்:

 குழந்தைகள் பெற்று கொள்ள யோசிக்கும், ஹிந்துக்களுக்கு பெரும்பாலும் இப்போது
"கூட வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொல் மறந்து விட்டது.

கூடி வாழ்வதற்கு பொறுமை மிக அவசியம்.
அனைவருக்கும் நா அடக்கம் அவசியம்.
சேர்ந்து வாழ்வதில் ஆசை அவசியம்.

பண பலத்தை விட உறவுகளுடன்
கூடி வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்க தைரியம் வரும்.
ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் கை தூக்க இன்னொருவர் இருப்பர்.

கூடி வாழ்வதாலேயே, குழந்தைகள் பெற்று கொள்ள தைரியம் வரும்.
கூடி வாழ்வதாலேயே, குடும்ப கலாச்சாரம் அழியாமல் இருக்கும்.

புனிதமான இந்திய நாட்டில், இன்று இந்த குடும்ப தர்மம் அழிந்து வருகிறது.

வெளிநாட்டவர்கள், நம்மை பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த குடும்ப வாழ்க்கை இன்று நம்மை விட்டு விலகி வருவது நம் சமுதாயத்துக்கு கேடு.

இதனால், ஹிந்துக்கள் குறைந்து போவார்கள்.

வயதான பின், காப்பாற்ற பல குழந்தைகள் இல்லாததால், வயதான காலத்தில் இருக்கும் ஒரு மகன் எங்கோ வாழ, அல்லது அவனும் முடியாமல் இருக்க, துணைக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை வெகு தொலைவில் இல்லை. 

பெற்ற ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, சகோதர, சகோதரிகள் சேர்ந்து காப்பாற்றிய காலம் போய், ஆதரவை இழந்து வாழ நேரிடும்.

பெற்றோருக்கு செய்யும் மொத்த மருத்துவ செலவும் பெற்ற ஒரு குழந்தை மேல் கடனாக விழுந்து விடும். 

இதுவே கலியின் கொடுமை. இந்த நிலை மாற, கூடி வாழ கற்று கொள்ள வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மை. 

இன்றைய கால கட்டத்தில், கூடி வாழும் நன்மையை அறியாமல், வரப்போகும் ஆபத்தை அறியாமல் பல செயல் செய்கிறோம்.

  • கணவனுக்கு மனைவியிடம் பொறுமை இல்லை. 
  • மனைவிக்கு கணவனிடம் பொறுமை இல்லை.
  • மாமியாருக்கும், மாமனாருக்கும் வீட்டுக்கு வந்த பெண் மேல் பொறுமை இல்லை. 
  • கல்யாணமாகி வந்த பெண்ணுக்கும் பொறுமை இல்லை.

ஆசையும், எதிர்பார்ப்பும் அதிகமாக, பொறுமை இல்லாததினால் ஹிந்து குடும்பம் சிதறுகிறது.

சேர்ந்து அன்போடு வாழ்ந்தால் என்னென்ன நன்மை? என்பதை மறந்து, பணத்திற்காகவும், சுய அபிமானத்தின் அற்ப காரணத்திற்கு சண்டை இட்டு, அழகான கூட்டு குடும்ப வாழ்க்கையை தன் செயலாலேயே அழித்துக் கொள்கின்றனர்.

ஹிந்துக்களிடம் இருந்த பொறுமை எங்கே போனது ?




இரண்டு தலைமுறை முன்வரை கூட, நம் முன்னோர்கள் கூடி வாழ்ந்துள்ளனர்.

கூடி வாழ்வதே நம் கலாச்சாரம், நம் குடும்பத்தில் நிலைக்க வழி.

கூடி வாழாது போனால்,
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் அழிவதை பார்க்க நேரும்.
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் மற்ற கீழ் மதங்களில் அறியாமையால் போய் விழுவார்கள்.
  • நம் கண் முன்னரே, பணம் இருந்தும் நம்மை கடைசி காலத்தில் கூட இருந்து காக்க துணையில்லாமல் போகும்.
ஹிந்துக்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது.