Followers

Search Here...

Monday 11 June 2018

பக்தி யோகம் என்றால் என்ன?




  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம்
இவற்றில் பக்தி யோகம் அனைவராலும் கடை பிடிக்க கூடிய யோகம்.

கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை, தன் முயற்சியால் முன்னேற வேண்டியுள்ளது.
இந்த யோகங்கள் ஸாதனை வடிவமானது.
ஸாதனைக்கு மட்டும், பகவான் அவ்வளவு சுலபமாய் கிடைப்பதில்லை.

பக்தி யோகத்திலோ, 
பக்தன் பகவானிடம் பக்தி செய்கிறான்.
பகவான் பக்திக்கு வசமாகிறான்.
பகவான் பக்தனை கரையேற்றுகிறான்.
அதனாலேயே பக்தன் எதிலும் கவலை படமாட்டான்.




"என் பக்தன் நாசமாக மாட்டான்" (நமே பக்த: ப்ரணஸ்யதி) என்று பகவான் ப்ரதிக்ஞை செய்கிறான்.

தன் பக்தன் வழி தவறிப் போனால் கூட, பகவான் அவனை தடுத்து ஆட்கொண்டு, நேர் வழியில் திருப்பி விடுகிறான்.

இங்கு பக்தன் என்பவன் யார்?
பகவானிடம் பக்தி செய்பவன் பக்தன்.

கடினமான தவம் செய்து ராவணன், இரணியன் போன்றோர்கள், தேவர்களை, பிரம்மாவை, சிவனையும் வசம் செய்து வரம் பெற்றனர்.
ஆனால் அவர்களால் இந்த கடின தவத்தின் மூலம், பகவான் - நாராயணனை வசம் செய்ய முடியவில்லை.
ஹரிபக்தி இல்லாத கர்ம யோகம் (தவம், தானம், யாகம், வேதாத்யயனம்) ஞான யோகம் எதற்கும் பகவான் வசமாவதில்லை.

பக்தி என்றால் என்ன?
பகவானிடம் வைக்கும் ப்ரியம் தான் பக்தி.



Sunday 10 June 2018

திராவிட என்பது சமஸ்கரித மொழி. சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?

திராவிட என்பது சமஸ்கரித மொழி.  இதில் என்ன பெருமை?
சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?




1900 வரை பொதுவாக வேறு மாநிலத்தில் உள்ளவர்களிடம் இன்று english  போல சமஸ்கரிதம் பேசினார்கள்.
அனைவருக்கும் இந்த மொழி தெரிந்தற்கு காரணம், அனைவருமே வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.  

வேதத்தில் சொன்ன முருகன் தான், சிவன் தான், பெருமாள் தான் கன்யாகுமரியில் இருந்து ஹிமாலயா வரை எங்கும் கோவிலாக அமைந்துள்ளது. 
ஸ்ரீ ரங்கமாக இருந்தாலும் சரி, சிதம்பரம் நடராஜர் ஆக இருந்தாலும் சரி.

ராமானுஜர் 12 வருடம் மேல்கோட்டையில் இருந்தார். பாரத தேசம் முழுவதும் யாத்திரை சென்றார். பொது மொழியான சமஸ்க்ரித மொழி தானே பேசினார்? 
இவர் பேசினார் என்றால், ஊர் மக்கள் அனைவரும் பொது மொழியான சமஸ்க்ரித மொழி பேசினார்கள் என்று தெரிகிறதே.

மதுரையில் பிறந்து ஸ்ரீ ராகவேந்திரர், பாரத தேசம் முழுவதும் கொடி கட்டினாரே..  

இப்படி பொது பாஷையாக சமஸ்கிருதம் இருந்ததால் தான், 
ஆதி சங்கரர் காஷ்மீர் சென்று மந்தனமிஸ்ரரிடம் வாதத்தில் ஈடுபடும் போது, "நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்?" என்று சமஸ்கிருத மொழியில் கேட்க...
"நான் திராவிட தேசத்தில் இருந்து வருகிறேன்" என்று சமஸ்கிருத மொழியில் பேசிக்கொண்டனர். 
மலையாளத்திலா பேசினார்?

திராவிடன் என்றால் தமிழ் மொழி அல்ல..




நான் திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்த ஆசைப்படுபவன், சமஸ்கிருத மொழி பேசுபவன் என்பதை தவிர ஒன்றும் விசேஷமில்லை.
இது சமஸ்கரித வார்த்தை.

"திராவிடன்" என்ற சொல்லை தமிழில் சொல்ல ஆசைப்பட்டால்
"மூன்று கடல் சூழ்ந்த நிலப்பரப்பு" என்று பொருள். அவ்வளவு தான்.
இதில் கர்வபட என்ன இருக்கிறது?

இதனால் தான், சமஸ்கிருத மொழி தெரிந்த கேரளகாரன், "நான் திராவிடன்" என்று சொல்லிக்கொள்வதில் இந்த போலி தமிழனுக்கு ஏன் இப்படி கர்வம்? என்று புரியாமல் இருக்கிறான்.

நான் மூன்று கடல் சூழ்ந்த இடத்தை சேரந்தவன் (அதாவது திராவிடன்) என்பதை "திராவிடன்" என்று சமஸ்கரிதத்தில் சொன்னதால் சமஸ்கரித பற்று தெரிகிறதே ஒழிய, இதில் வேறு என்ன சாதித்ததாக பெருமை கொள்ள முடியும்?

இன்று English உள்ளது போல அனைவராலும் பேசப்பட்ட சம்ஸ்க்ரிதம் வாழ்க.