Followers

Search Here...

Thursday 22 November 2018

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு... 3

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு.








மேலும் படிக்க

Friday 16 November 2018

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு.... 2

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு....














Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு... 1

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு.....








மேலும் படிக்க


Saturday 10 November 2018

பாரத நாட்டில் அரசர்களுக்கு புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ, மன்னிப்பது அரச தர்மமாக இருந்தது. விளைவு?

ஹிந்துக்கள் மட்டும் இருந்த காலத்தில், சனாதன தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி நடந்து கொண்டு இருந்தது.

பிராமண (spiritual), வைசிய (business), சூத்ர (employee, farmer) போன்றவர்கள் நாட்டில் வாழ, இவர்களை காக்கும் பொறுப்பை க்ஷத்ரியர்கள்(protection force) ஏற்றனர்.
பாரத நாடு கலாச்சாரத்தில், செலவத்தில், இறையாண்மையில், உலகத்திற்கு முன்னோடியாக இருந்து வந்தது.
த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவதார சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்து உலகையே ஒரு குடையில் ஆண்டார்.



துவாபர யுகத்தில், யுதிஷ்டிரர் தான் சக்கரவர்த்தி என்று நிலை நாட்ட, ராஜசுய யாகம் செய்தார்.
பல அரசர்கள் யுதிஷ்டிரர் சக்கரவர்த்தியாக ஒப்புக்கொண்டனர்.
சக்கரவர்த்தி என்று ஒப்புக்கொள்ளாத அரசர்கள் பாண்டவர்களிடம் போர் புரிந்தனர். அர்ஜுனன் பெரும்பாலான போரை செய்து, எதிர்த்த அரசர்களை தோற்கடித்தார்.
ஒப்பு கொண்டவர்கள், தோல்வி அடைந்த அரசர்கள் என்று அனைவரும் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

கலியுகம் ஆரம்ப சமயத்தில், அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித் மகாராஜன் உலகை ஒரு குடையில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் வேட்டைக்கு சென்றிருந்த சமயம், மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட ஒரு காளை மாடு நிற்பதையும், அது கீழே விழுந்து விடாமல் இருக்க, அதை தாங்கி கொண்டு ஒரு பசு மாடு கண்ணீருடன் நிற்பதை கவனித்தார்.
மேலும், அரசனை போன்ற வேடம் அணிந்து ஒருவன் (கலிபுருஷன்), கையில் வாளுடன், காளையின் இருந்த ஒரு காலையும் வெட்ட கையை ஓங்கினான்.
இந்த சகிக்க முடியாத காட்சியை கண்ட பரிக்ஷித் மகாராஜா, தன் வாளை உருவி, அந்த போலி அரசனை தண்டிக்க வந்தார்.
பரிக்ஷித் மகாராஜனை கண்ட அந்த போலி அரசன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

மன்னிப்பு கேட்டவனை மன்னிக்க வேண்டும் என்பது அரச தர்மம். பரிக்ஷித் மகாராஜா மன்னித்தார்.

இதுபோல, பாரத நாட்டில் அரசர்களுக்கு இடையில் பல போர் நடந்துள்ளது.
தோற்கும் அரசன் புறமுதுகு காட்டி ஓடினாலோ, மன்னிப்பு கேட்டாலோ மன்னிக்கும் தர்மம் அரச குலத்தில் இருந்தது.

இப்படி ஜெயிக்கும் அரசர்கள், நாட்டை கைப்பற்றி, தன் அரசாட்சி செய்தனர்.
ஆனால் பொது மக்களை துன்புறுத்துவதோ, அவர்கள் வழிபாட்டை தடுப்பதோ, கோவிலை இடிப்பதோ கிடையாது.
சோழ அரசனை பல்லவன் வென்றால், அங்கு தன் பங்குக்கு கோவில்கள் கட்டுவதும், இன்னும் செழிப்பாக வாழ வழி செய்வதையும் கடமையாக கருதினர்.

இப்படி வாழ்ந்து கொண்டிருந்த நம் கலாச்சாரத்தை சீரழிக்க, வேறு நம்பிக்கை, வேறு கலாச்சார நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்கள் பாரத நாட்டிற்குள் நுழைந்தனர்.

இஸ்லாமியன் என்றால் என்ன? என்ன கொள்கை உடையவர்கள் இவர்கள்? ஏன் பாரத தேசத்தை தாக்குகின்றனர், கோவிலை இடிக்கின்றனர்? கோவிலில் வழிபடும் பொது மக்களை கொலை செய்கின்றனர்? பெண்களை ஏன் பிடித்து சென்று விடுகின்றனர்? என்று இவர்கள் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாமல் பாரத மக்கள் தவித்து கொண்டிருந்த இக்கட்டான காலம் அது.

1024ADல் கஜினி முகம்மது என்ற ஆப்கானில் பிறந்த இஸ்லாமியன் குஜராத் தேசத்தில் உள்ள சோம்நாத் கோவிலை தாக்கினான்.
படு தோல்வி அடைந்தான் கஜினி முகம்மது. காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, சாளுக்கிய ஹிந்து அரசர் "பீமா" மன்னித்து விட்டார்.
ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, 17 முறை மீண்டும் மீண்டும் தாக்கி, தோல்வி அடைந்து, மன்னிப்பு கேட்டு, விடுவிக்கப்பட்டான்.

தோல்வியுற்ற அரசர்கள் மன்னிப்பு கேட்டால்,  மன்னிக்கப்படுவது சாதாரண விஷயமாக இருந்த கால கட்டத்தில்,
17 முறையும் மன்னிக்கப்பட்ட கஜினி முகம்மது 18வது முறை திடீர் தாக்குதல் செய்து, போரில் வென்றான்.
அங்கு இருந்த தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து சேதப்படுத்தி, கொள்ளை அடித்தான்.
ஹிந்து அரசரை கொன்றான்.
அந்த சமயத்தில் சிதறிய சௌராஷ்டிர சமுதாய மக்களே இன்று வரை பல மாநிலங்களில் உள்ளனர்.

நம் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில், படையெடுத்த இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், பெண்களை கற்பழிப்பதும், பொது மக்களை ஹிந்துவாக இருப்பதால் தலை சீவுவதும், கொள்ளை அடிப்பதும் நடக்க ஆரம்பிக்க, ஹிந்து அரசர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டனர்.

ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் பல முறை தன் மீது படையெடுத்த இஸ்லாமியர்களை மன்னித்து, அதுவே பின்னர் வினையாக அமைந்தது.


கஜினியை 17 முறை மன்னித்து விட்ட ஹிந்து அரசன் வீழ்ந்தது போல, 1191ADல் கோரி முகம்மது பஞ்சாப் வழியாக பாரத தேசம் நுழைய முயற்சி செய்த போது, அஜ்மீர், ராஜஸ்தானை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்து வந்த 24 வயது அரசர் "பிருத்விராஜ் சவுஹான்", கோரியின் படையை தோற்கடித்தார்.
படுகாயமுற்று பயந்தோடிய முகம்மது கோரியை துரத்தி சென்று பிடித்து கொல்லாமல் விட்டார்.
விளைவு,
ஒரு வருடம் கழித்து மீண்டும் படை திரட்டி வந்தான் கோரி. மீண்டும் பெரும் போர் மூண்டு, தோல்வியின் விளிம்பில் இருந்த கோரி,
எதிர்பாரா விதமாக உத்திர பிரதேச "கண்ணௌஜ்" என்ற நாட்டை ஆண்ட ஜெயச்சந்திரன் என்ற அரசன் மூலம் உதவி பெற்றான். 700 யானை படைகள், லட்சக்கணக்கான போர் வீரர்களை உதவிக்கு பெற்றான்.




தன் மகள் "சம்யுக்தா" பிருத்விராஜ் சவுஹானை காதலித்து சுயம்வரத்தில் இவனோடு ஓடி விட்டாள் என்ற ஆத்திரத்தில், கோரிக்கு உதவி செய்து, "பிருத்விராஜ் சவுஹான்" போரில் தோற்க வழி செய்தது.
பிருத்விராஜ் சவுஹான் கண்களை பிடுங்கி எரிய உத்தரவிட்டான் கோரி.
கண் இழந்த பிருத்விராஜ் சவுஹான், ஒலியினால் கூட போர் புரியும் வல்லமை உடையவன் என்று கேள்விப்பட்டு, கண் இழந்த நிலையில் கைதியாக இருக்கும் சவுஹானை பார்த்து விளையாட்டாக அம்பும் வில்லும் கொடுத்து "எங்கே, உன் திறமையை காட்டு?" என்று ஏளனமாக சிரிக்க, அதே இடத்தில் இருந்து கொண்டே ஒலி வந்த திசை நோக்கி அம்பு விட அது கோரியின் கழுத்தில் பாய்ந்து இறந்தான். அங்கேயே பிருத்விராஜ் சவுஹான் கொல்லப்பட்டார்.

இப்படி க்ஷத்ரிய அரசர்கள், இஸ்லாமிய கொள்கை கொண்ட அந்நியர்கள் நுழைவை தடுக்க உயிர் பலி கொடுக்க, மறு புறம் இஸ்லாமியர்கள் கோவிலை இடிப்பதும், அதை வைத்தே அரசர்களை தன் வழிக்கு கொண்டு வருவதும், பெண்களை கற்பழித்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை இஸ்லாமியன் பெயரில் வளர்ப்பதும் ஆரம்பிக்க, பெரும் கலவரம் மக்கள் மத்தியில் உண்டானது.
ஹிந்துக்களின் நிலை சொல்ல முடியாத துக்கத்தில் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

400 ஆண்டுகளாக இஸ்லாமிய ஆக்ரமிப்பால் பாரத தேசம் தத்தளித்து கொண்டிருந்த சமயம் அது.
இன்றைய பாகிஸ்தான் ஏறத்தாழ இஸ்லாமிய சுல்தான்களால் சூழப்பட்டு இருந்தது.

கோவில்கள் ஆப்கான் ஆரம்பித்து, தமிழ்நாட்டின் ஸ்ரீ ரங்கம் வரை தாக்கப்பட்டு இருந்த காலம் அது.
இடிக்கப்பட்ட கோவில்கள் இடத்தில் மசூதிகள் கட்டப்பட்டன.
மதுரையை பாண்டிய அரசர்களுக்கு பின், சுல்தான்கள் ஆட்சி செய்த காலம் அது. 70 வருடங்கள் மதுரை மீனாட்சி கோவில் மூடி இருந்த காலம் அது.

இந்த சமயத்தில் துக்ளக் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது.
"நசிருத்தின் முகம்மது துக்ளக்" என்பவன் டெல்லியை தலைமையாக கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
ஆப்கான் நாட்டின் வடக்கில் உள்ள உஸ்பகிஸ்தான் என்ற நாட்டிலிருந்து தைமூர் (Taimur or Timur) என்பவன் 1398ADம் ஆண்டு, இந்தியாவை நோக்கி படையெடுத்தான்.
இந்த சமயத்தில் முல்தான் (Multan, Pakistan) என்ற நாட்டை கவனிக்க "கைசர் கான்" (ghizr khan) என்பவனை ஆளுநராக (governor) நியமித்து இருந்தனர் துக்ளக் வம்சத்தினர்.

தைமூர் (Taimur or Timur) டெல்லி நோக்கி படையெடுக்க வருவதை பார்த்து, இவனை எதிர்த்தால் தோல்வி நிச்சயம் என்று அறிந்து, இது தான் சமயம் என்று, துக்ளக் அரசனை எதிர்க்க துணை நின்றான் "கைசர் கான்" (ghizr khan).
17 DEC 1398ADல், தைமூர் தன் ஒட்டகங்கள் முன்னும் பின்னும் பெரிய பெரிய மர துண்டுகளை கட்டி, தீயிட்டு கொளுத்தி, எதிரில் வந்த யானை படையை நோக்கி ஓட வைத்தான். தன்னை நோக்கி தீ ஜ்வாலையுடன் வரும் ஒட்டகங்களை பார்த்து பீதி அடைந்து, யானைகள் துக்ளக் படையை நோக்கி திரும்பி ஓட பெரும் சேதம் உண்டானது. போரில் எளிதாக தைமூர் வெற்றி பெற்றான்.
டெல்லியை கைப்பற்றி விட்டான்.

இந்த சமயத்தில், டெல்லியில் இருந்த ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்று குவித்தான்.
ஒரு லட்சம் பேர் டெல்லியில் கொலை செய்யப்பட்டு, துக்ளக் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வந்தான்.
பாரத தேசத்தில் இருந்த ஹிந்துக்களுக்கு, துக்ளக் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது, பெரும் நிம்மதி தருவதாக இருந்தாலும், மீண்டும் இஸ்லாமிய ஆட்சியே தொடர்ந்தது.

டெல்லியில் இருந்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, தனக்கு உதவி செய்த "கைசர் கான்" (ghizr khan) என்பவனை தன் ஆட்சியின் பெயரால் டெல்லியை ஆட்சி செய்ய சொல்லி சுல்தான் ஆக்கினான்.

தன் நாட்டிற்கு கொள்ளை அடித்த செல்வங்களோடு சென்று மேலும் பல போர்களை தன் வாழ்நாள் முழுக்க செய்தான்.
தைமூர் காலத்தில், இவனால் உலக மக்கள் தொகையில் 5% சதவீத மக்கள் (17 மில்லியன்) கொல்லப்பட்டனர்.

"கைசர் கான்" (ghizr khan) தைமூர் மூலமாக கிடைத்த பெரும் அரசாட்சியை, "சையது வம்சம்" என்று புது இஸ்லாமிய ஆட்சியின் பெயரில் பாரத நாட்டில் தொடங்கினான்.


சையது வம்ச இஸ்லாமியர்கள் சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி  செய்தனர்.
இதற்கு பின், ஆப்கான் நாட்டை சேர்ந்த லோதி வம்ச இஸ்லாமியர்கள் டெல்லியை கைப்பற்றினர்.
லோதி வம்ச ஆட்சி சமயத்தில் (1451AD முதல் 1526AD வரை 70 வருடங்கள்), ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர் பாரத தேசத்துக்குள் நுழைந்தனர்.

பாபர் என்ற உஸ்பகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாபர் என்ற இஸ்லாமியன் டெல்லியை கைப்பற்றினான்.
லோதி ஆட்சி முடிந்து, முகலாய வம்ச இஸ்லாமிய ஆட்சி பாரத தேசத்தை சூழ்ந்தது.
பாபர் தன்னுடைய 4 வருட டெல்லி ஆட்சியில் அயோத்தியா போன்ற நகரங்களில் இருந்த ஹிந்துக்களை தலை சீவினான்.
இந்த சமயத்தில் தான் ஸ்ரீ ராமர் அவதரித்த அயோத்தியில் இருந்த கோவிலை இடித்து அதன் மீது மசூதி எழுப்பினான்.

பாபரை தொடர்ந்து இவன் வம்சத்தினர் ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று தொடர்ந்து ஹிந்துக்களின் மீது பல தாக்குதல் ஏற்பட்டது.
பாரத தேசத்துக்குள் தெற்கு பகுதியான கேரள தேசம் கோழிக்கோடு வழியாக 1498ADல் நுழைந்திருந்த கிறிஸ்தவ மத போர்ச்சுகல்காரன் (வாஸ்கோட காமா) பெரும் வியாபாரம் ஐரோப்ப கண்டத்தில் செய்து வந்தான்.

இவர்களை போன்று தானும் வியாபாரம் செய்ய, மற்றொரு கிறிஸ்தவ நாடான பிரிட்டிஷ்காரர்கள், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அனுமதியுடன் "ஜான் கம்பெனி" என்ற "பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி" குஜராத்தில் உள்ள சூரத் கடற்கரை நோக்கி 1612ADல் வந்தது.
அப்பொழுது டெல்லியை ஆண்டு கொண்டிருந்தான் ஜஹாங்கீர்.
இவன் அனார்கலி என்ற நாட்டியகாரியை காதலித்தான். முகலாய அரசி ஆக்க முடியாது என்பதால், இவள் உயிரோடு புதைக்கப்பட்டாள்.
ஜஹாங்கீர் நூர்ஜஹான் என்பவளை மணந்தான். பெயர் அளவில் சுல்தான் என்று இருந்தாலும், நூர்ஜஹான் தானே ஆட்சி செய்தாள்.

ஜஹாங்கீர் பெரும் குடிகாரனாக இருந்தான்.
இவனிடம் சாமர்த்தியமாக பேசி, தன்னிடம் கொண்டு வந்து மது பானங்களை கொடுத்து, சூரத் நகரில் இருந்து கொண்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர்.

அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் தான் ஹிந்து அரசர்களில் மராட்டிய அரசர் "வீர சிவாஜி" கோவிலை இடித்து, ஹிந்து பொது மக்களை கொன்று,  அதர்மம் செய்யும் இவர்களை மன்னிக்கும் தவறை செய்யாமல் எதிர்த்தார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒரு போரில் கூட தோல்வியை சந்திக்காத, பெரும் வீரனாக வாழ்ந்தார் வீரசிவாஜி.
கர்நாடக, தெலுங்கு, தமிழ்நாட்டு ஹிந்துக்கள் விஜயநகர பேரரசு காலத்தில் துக்ளக் இஸ்லாமியர்களால் அவதிப்பட்ட போது, காப்பாற்றபட்டது போல, முகலாய ஆட்சி காலத்தில் மராட்டிய சாம்ராஜ்யம் நிறுவி, இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர் மராட்டிய மன்னர்கள்.

இதற்கிடையில் பிரிட்டிஷ்காரனும், போர்ச்சுகல்காரனும் கை கோர்த்து கொண்டனர்.

இஸ்லாமிய சுல்தான் வீழ்ச்சி அடைந்த சமயத்தில், மராட்டிய மன்னர்கள் ஹிந்துக்களை காக்க, பாரத தேசம் மீண்டு வர ஆரம்பித்தது.

இந்த சமயத்தில், பிரிட்டிஷ் ராணுவம் மராட்டிய மன்னர்களுடன் சண்டைக்கு 1775ஆம் ஆண்டு தயாரானது.
Anglo-maratha war I என்று அழைக்கப்படும் இந்த போர் 7 வருடங்கள் நடந்தது.
இறுதியில் பிரிட்டிஷ் ராணுவம் மராட்டியர்களிடம் தோற்றது.
நானா பட்னவிஸ் என்ற மராட்டிய மந்திரியுடன் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் ஒப்பந்தம் செய்து சமாதானம் செய்து கொண்டனர்.

வேரோடு இவர்களை அழிக்காமல் விட்டதால், மீண்டும் கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்கள் 1803ஆம் ஆண்டு இரண்டாவது முறை Anglo-maratha war II தாக்குதலில் ஈடுபட்டனர்.
மராட்டியர்களால் இஸ்லாமிய ஆட்சி அழிவை நோக்கி செல்கிறது என்பதால், லோதி வம்ச அரசாட்சியில் உள்ளே புகுந்திருந்த ஆப்கான் நாட்டை சேர்ந்த பஸ்துன் இனத்தை சேர்ந்த பழங்குடியினர், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, மராட்டிய ஹிந்து மன்னர்களை எதிர்த்தனர்.

இது சமயத்தில் உதவி செய்ய, மராட்டியர்கள் முதல் முறையாக தோல்வியை சந்தித்தனர்.


ஹிந்துக்கள் எதிராக கிடைத்த இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த, ஆப்கான் பழங்குடியின தலைவன் "முகம்மது பய்ஸ் அலி கான்" என்பவனை கௌரவிக்கும் வகையில், ஹரியானவில் உள்ள பட்டோடி என்ற கிராமத்திற்கு நவாப் (தலைவன்) ஆக்கியது.

Nawab of pataudi என்று அழைக்கப்பட்ட இந்த ஆப்கான் தலைவன் 1804 முதல் 1829 வரை இருந்தான். அதன் பின்னர் அவன் பரம்பரை இந்த ஊரின் நவாப் என்று ஆண்டு கொண்டிருந்தது.

இதில் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்று பல மராட்டிய இடங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்தினர்.

இதை தொடர்ந்து மராத்திய சாமராஜ்யம் தன் பலத்தை காலப்போக்கில் இழந்தது.

மீண்டும் 1817ADல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு மூன்றாவது முறை Anglo-maratha war III தாக்குதலில் ஈடுபட்டனர். மராட்டிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும்  பிரிட்டிஷ்காரர்கள், போர்ச்சுகல்காரர்கள், பிரெஞ்ச்காரர்கள், ட்ச்காரர்கள், போன்ற கிறிஸ்தவ நாட்டினாரால் தெற்கு பாரத தேசம் முழுவதும் பிடிக்கப்பட்டது.
முகலாய இஸ்லாமிய அரசு 1857ல் முடிவுக்கு வந்து, பாரத தேசம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் சிக்கியது.

1947ல் இந்தியா பிரிட்டிஷ்காரர்களை விரட்டி, சுதந்திரம் பெற்றது.
1000 வருட இஸ்லாமிய ஆக்ரமிப்பால், ஹிந்துக்களில் பல லட்சம் பேர் இஸ்லாமியர்கள் ஆக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு தனியாக வாழ இடம் வேண்டும் என்று கேட்க, சிந்து தேசத்தை பாகிஸ்தான் என்று பெயரிட்டு, பங்களாதேஷ் என்ற மற்றோரு பகுதியையும் இஸ்லாமியர்களாகி இருந்தவர்கள் வாழ வழி செய்து நாட்டை பிரித்து சுதந்திரம் அடைந்தது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பாகிஸ்தான் அனுப்பாமல், 'இருப்பவர்கள் இருக்கலாம்' என்று சொல்ல, பலர் இந்தியாவில் தங்கினர்.
இவர்கள் இன்று வரை அயோத்தி கோவிலை திருப்பி கட்டுவதற்கும், ஹிந்துக்கள் தங்கள் இழப்பை சரி செய்து கொள்வதற்கும் பெரும் தடையாக இருந்து விடுகின்றனர்.

தெற்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவ ஆட்சி நடந்ததால், கிறிஸ்தவ மத மாற்றம் பரவலாக நடந்து பல ஹிந்துக்கள் இந்த பகுதிகளில் கிறிஸ்தவர்கள் ஆகி, இவர்களும் ஹிந்துக்களுக்கு எதிராக பெரும் தடையாக இருக்கின்றனர்.

1971ஆம் ஆண்டு வரை ஆப்கான் நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் "nawab of pataudi"யாக ஆண்டு கொண்டிருந்தனர்.
இந்திய சட்டத்தின் படி, அன்று "nawab of pataudi"யாக இருந்த மன்சூர் அலி கான் பட்டோடி அரச பதவிகள் பறிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இவர்கள் 1971 வரை இருந்ததால், இவர்களுக்கும் இந்திய குடிமகனாக வாழ அனுமதித்தது.

மராட்டிய ஹிந்து அரசர்கள் எதிராக போரிட்டு, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு துணை இருந்த இவர்கள், காலப்போக்கில் பிரிட்டிஷ் நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
கிரிக்கெட் என்ற விளையாட்டில், மன்சூர் அலி கான் பட்டோடி இந்தியாவுக்கு தலைமை ஏற்று விளையாடினார்.

இவர் ஹிந்தி சினிமாவில் நடித்த ஹிந்து பெண்ணான சர்மிளா தாகூர் என்ற பெண்ணை மணந்து, ஒரு பெண், ஒரு பையன் பெற்றனர்.
இவர்கள் இஸ்லாமியர்களாகவே வளர்க்கப்பட்டனர்.
இவர் மகன் "saif ali khan" தன் அம்மாவை போன்று சினிமா உலகில் சென்று நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள்.
இருவருமே ஹிந்து பெண்கள்.
முதல் மனைவியுடன் ஒரு பெண் பிள்ளையும், இரண்டாவது மனைவி "கரீனா கபூர்" மூலம் ஒரு ஆண் குழந்தையும் பெற்றார்.

இந்த ஆண் குழந்தைக்கு தன் ஆப்கான் வழி வம்சத்தில் வந்த தைமூர் என்பவனின் பெயரை தன் பையனுக்கு வைத்தார்.

டெல்லியில் நுழைந்து ஒரே நாளில் ஒரு லட்சம் ஹிந்துக்களை கொன்ற தைமூர் பெயரை வைத்தது, மராட்டிய ஹிந்துக்களுக்கு எதிராக இவர்கள் பரம்பரை ஈடுபட்டது போன்றவை, saif ali khan மேல் எதிர்ப்பு அலைகளை ஹிந்துக்களிடையே ஏற்படுத்தியது.



Saturday 27 October 2018

திருமலையில் மட்டும் பெருமாள் தடையில்லாமல் எப்படி அணுகிரஹம் செய்கிறார்? அலர்மேல் மங்கையான மகாலட்சுமி (அலமேலு தாயார்) எப்படி நமக்கு அனுக்கிரஹம் கிடைக்க உதவுகிறாள்? தெரிந்து கொள்வோமே

அகல கில்லேன் இறையும்
என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய் உலகமூன் றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே
- நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி


"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா"

பொதுவாக, ஜனங்களோடு ஜனங்களாக இருந்தால், எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியாது.
கொஞ்சம் மாடியில் ஏறி நின்று பார்த்தால், அந்த தெருவில் போகும் எல்லோரையும் ஒரு சேர பார்க்க முடியும்.

தனக்கு ஒரு ஏழு அடுக்கு மாடி அமைத்துக்கொண்டு, அங்கு நின்று கொண்டால், எல்லோரையும் பார்க்கலாமே என்று சங்கல்பம் செய்தார் பாற்கடலில் உள்ள எம்பெருமான்.
ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், எம்பெருமான் சங்கல்பத்தை உணர்ந்து, ஏழு மலையாக ஆகி பூலோகத்திற்கு வந்து விட்டார்.
உன்னதமான இடத்தில் இருந்தால் தான், கருணையை அனைவருக்கும் வர்ஷிக்க முடியும் என்பதால், திருமலையின் உச்சியில் போய், எம்பெருமான் அர்ச்ச அவதாரம் செய்து நின்று விட்டார்.
கருணையே வடிவானவள் மகாலட்சுமி.
க்ஷீராப்தியில் இருந்து பெருமாள் பூலோகம் வந்து விட, தனக்கொரு இடம் தேடினாள்.

கருணையே வடிவான மகாலட்சுமி திருமலையை விட உயர்ந்த இடத்தை தேடினாள்.
திருமலையை விட உயரமான இடம், எம்பெருமானின் வக்ஷஸ்தலமே என்று, அங்கு போய் அமர்ந்து விட்டாள்.
திருமலையில் எம்பெருமான் வக்ஷஸ்தலத்தில் (பெருமாள் மார்பில்) எப்பொழுதும் பிரியாமல் இருக்கிறாள் மகாலட்சுமி.

மலர்ந்த (அலர்) தாமரைப்பூவின் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிக்கு "அலர்மேல் மங்கை" (அலமேலு தாயார்) என்று பெயர்.

இப்படி எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து, இனி ஒரு நொடி பொழுது (இறை பொழுதும்) கூட உங்களை விட்டு பிரிய மாட்டேன் (அகல இல்லேன்) என்று அமர்ந்தாள் அலர்மேல் மங்கையான மகாலட்சுமி.

எம்பெருமானை தனியாக வழிபடுவதை விட, தாயாரையும் சேர்த்து வழிபடும் போது தான், பெருமாள் தடையில்லாமல் அணுகிரஹம் செய்கிறார்.

"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று நம்மாழ்வார் அழைக்கும் போது,
'தாயாரை முதலில் சொல்லி, அவளை முன்னிட்டு,  எம்பெருமானிடம் சரணாகதி' செய்கிறார்.

மகாலட்சுமி (ஸ்ரீ தேவி) எம்பெருமான் மார்பில் இருப்பதால் (நிவாசம்), வெங்கடேச பெருமாளுக்கு, "ஸ்ரீனிவாச பெருமாள்" என்றும் பெயர் வந்தது.

எப்படி பகவானை நாம் அணுக வேண்டும்?
எப்படி அணுகினால், பகவான் தடையில்லாமல் நமக்கு அணுகிரஹம் செய்வார்? என்பதை இந்த ஒரு பாசுரமே நமக்கு காட்டி விடுகிறது.

இப்படி திருமலையில், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளே மகாலட்சுமி!!
இப்படி அமர்ந்தது அவள் சுகத்திற்காகவா? இல்லை பெருமாள் சுகத்திற்காகவா? என்று கேட்டால், இரண்டுமே இல்லையாம்.
நாம் அனைவரும் சுகம் பெற வேண்டும் என்பதற்காக தான், எம்பெருமான் மார்பில் போய் அமர்ந்து விட்டாளாம் மகாலட்சுமி.

அது எப்படி?
பொதுவாக ஆழ்வார்கள், மற்ற திவ்ய தேசம் சென்று அங்கு இருக்கும் பெருமாளை சேவிக்கும் போது பிரேம பக்தியுடன் கொஞ்சி மகிழ்வார்கள்.
ஆனால் திருமலை வந்து விட்டால் மட்டும், ஆழ்வார்கள் அனைவரும், கதறி அழுது சரணாகதி செய்து விடுகின்றனர்.





நம்மாழ்வார், திருமலையப்பனிடம் வந்து,
"திருவேங்கடத்தானே !
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்று கதறி அழுது சரணாகதி செய்கிறார்.

திருமலையப்பனிடம் வந்தால் மட்டும் ஏன் இப்படி ஆழ்வார்களின் மனோபாவத்தில் கூட வித்தியாசம் தெரிகிறது?
மற்ற திவ்ய தேச பெருமாளும் இவர் தானே?
இருந்தும்,
திருமலையப்பனுக்கு மட்டும் என்ன விஷேசத்தை ஆழ்வார்கள் பார்த்தார்கள்?

பொதுவாக, திருமலையை தவிர்த்து, மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியில் இருப்பார். தாயார் தனி சன்னதியில் இருப்பாள்.
மற்றும் சில திவ்ய தேசங்களில் பெருமாளும் தாயாரும் ஒரே சந்நிதியில் அருகருகே கூட இருப்பார்கள்.

பொதுவாக தாய்க்கு தான், தன் பிள்ளை தவறே செய்தாலும் கூட, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், கருணையே செய்ய தோன்றும்.
தாயுள்ளம் மகத்தானது.

பொதுவாக பெருமாள், தகப்பன் ஸ்தானத்தில், ஒரு நீதிபதி ஸ்தானத்திலும் நம்மை பார்ப்பாராம்.
பக்தனே சில சமயம் தவறு செய்தாலும்  பாரப்பட்சம் காட்ட கூடாது என்று நினைப்பாராம்.

பத்ராசல ராமதாஸர், ராமருக்கு கோவில் கட்ட இஸ்லாமிய அரசன் தானிஷாவின் வரி பணத்தை எடுத்து கட்டி விட்டார்.
இதற்கு 12 வருடம் சிறையில் தள்ளி, தினமும் சவுக்கடி கொடுக்க உத்தரவு இட்டான் தானிஷா.
உடம்பெல்லாம் ரத்தம் ஏற்பட்டு, தினமும் சிறையில் அழுது, ராமரிடம் கீர்த்தனைகள் இயற்றினார்.
ராமரோ தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்று ஒரு நீதிபதி போல பேசாமல் இருந்தார்.
கடைசியில் இனி தாளாது என்ற நிலையில், ராமதாசருக்கு சீதையின் நினைவு வர,
"சீதம்மா...  இந்த ராமதாசனை காப்பாற்ற வருமாறு, நீயாவது அருகில் இருக்கும் ஸ்ரீ ராமரிடம் சொல்லம்மா..."
என்று கதற, சீதை ஸ்ரீ ராமரிடம் "இனி ஒரு க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்" என்று சொல்ல,
தானே ஒரு மனிதனாக வந்து, தானிஷாவை பார்த்து, தங்க கட்டிகளாக வரி பணத்தை வட்டியுடன் கட்டி, விடுதலை செய்யுமாறு செய்து மறைந்து விட்டார்.

பெருமாளை மட்டும் நாம் தனியாக பிரார்த்தனை செய்தால், நம் குற்றம் குறை அவருக்கு தெரிவதால், கட்டுப்பாடு இல்லாமல் அணுகிரஹம் செய்ய கொஞ்சம் தயங்குவாராம்.

ஸ்ரீ ரங்கம் உட்பட மற்ற திவ்ய தேச பெருமாள் கூட, தாயார் அருகில் இல்லாமல் இருப்பதால், ஆழ்வார்களுக்கு கூட தடையில்லாமல் அணுகிரஹம் செய்யாமல் இருந்தார்களாம்.

'அணுகிரஹம் குறைவில்லாமல் செய்யலாமே' என்று மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காரணம் கேட்டால், "இன்னும் இதயம் கணியட்டும்" என்று மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும்  சொல்வார்களாம்.

ஒரே பெருமாள் தான் என்றாலும், அந்தந்த திவ்ய தேச மகத்துவம் பொருத்து தான் பழகுவார்களாம்.

இப்படி ஏன் அணுகிரஹம் செய்ய மற்ற திவ்ய தேச பெருமாள் எல்லோரும் தயங்குகிறார்கள்? என்று கேட்டால், நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லை என்பதால் தான்.

எம்பெருமானை நாம் தனியாக சேவிக்கும் போது, நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். இதனாலேயே அணுகிரஹம் செய்ய தயங்குவாராம்.

ஸ்ரீ ராம அவதார சமயத்தில், 'தானும் வனவாசம் வருவேன்' என்று லக்ஷ்மணன் வந்து விட்டார்.
அன்றைய இரவு பொழுதில், லக்ஷ்மணன் பார்த்து, "பொழுது விடிந்ததும் நீ வேண்டுமானால் அயோத்தி திரும்பி செல்கிறாயா?" என்று ஸ்ரீ ராமர் கேட்டு விட்டார்.
ஸ்ரீ ராமரை விட்டு நொடி பொழுது பிரிந்தாலும், உயிர் போய் விடும் என்ற நிலையில் இருந்த லக்ஷ்மணன், செய்வதறியாது ஸ்ரீ ராமரின் பாதங்களில் விழுந்து விட்டார்.
ஸ்ரீ ராமரின் சம்மதத்தை பெற, ஸ்ரீ ராமரிடம் கேட்டால் நடக்காது என்று அறிந்து, தலையை தூக்கி, அருகில் நின்று இருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து, தனக்கு சிபாரிசு செய்ய பிரார்த்தித்தார்.

லக்ஷ்மணனின் நிலையை புரிந்து கொண்ட சீதை, ஸ்ரீ ராமரை பார்த்து, " எப்படி குளத்தில் இருக்கும் மீனை வெளியே எடுத்தால் அதற்கு உயிர் தங்காதோ, அது போல லக்ஷ்மஷ்ணன் உங்கள் பிரிவை தாள மாட்டான்."
என்று சொல்ல, ராமர் மறு பேச்சின்றி அழைத்து கொண்டார்.
அதற்குப்பின், கடைசி வரை லக்ஷ்மணனை பிரிந்து ஒரு க்ஷணம் இருந்ததில்லை ஸ்ரீ ராமர்.


தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பாராம் பெருமாள்.

தாயாரை முன்னிட்டு, பெருமாளை சேவித்தால், நம் தகுதி பார்க்காமல் அணுகிரஹம் உடனே செய்து விடுவார்.

தனியாக தான் சந்நிதியில் இருந்தால், நமக்கு பெருமாள் அணுகிரஹம் செய்வாரோ என்னவோ என்று நினைத்த தாயார், திருமலையில் எம்பெருமான் நெஞ்சில் போய் அமர்ந்து விட்டாளாம்.

பெருமாள், தாயாரை பார்த்து, 'இப்படி என் நெஞ்சோடு அமர்ந்து விட்டாயே, உனக்கு வேண்டுமானால் தனி சன்னதி இருக்க செய்யட்டுமா?" என்று கேட்க,
"வேண்டவே வேண்டாம்" என்றாளாம்.
"சரி, அப்படியென்றால் ஒரே சந்நிதியில் அருகேயே இருக்கிறாயா?" என்று கேட்க,
"அதுவும் வேண்டாம்"
என்றாளாம் தாயார்.
மேலும்,
'எனக்கு தனி சந்நிதி கொடுத்து, ராவணன் தூக்கி போனான் என்ற அனுபவமே போதும்.
தனி சந்நிதி கொடுத்தால், மற்றவர்களை நம்ப இயலவில்லை.
உங்கள் அருகிலேயே இருந்தாலும், உங்களையும் நம்ப முடியாது.
ஒரு சமயம், கஜேந்திரன் என்ற ஒரு யானை உங்களை கூப்பிட்டான் என்றதும், அருகில் இருந்த நான் கூட முக்கியமில்லை என்று, கிளம்பி விட்டீர்களே.
இதனால் எனக்கு தனியாக இடமும் வேண்டாம், உங்கள் பக்கத்திலும் இடம் வேண்டாம்.
நான் இனி இறை பொழுது கூட அகல கில்லேன், அகல கில்லேன்,  நான் உங்கள் நெஞ்சோடு தான் இருப்பேன்.
நீங்கள் எந்த பக்தன் அழைத்தாலும், என்னையும் தூக்கி கொண்டு செல்லுங்கள்"
என்று பிடிவாதம் செய்து அமர்ந்து விட்டாளாம் தாயார்.

இப்படி, நமக்கு தடையே இல்லாமல் அணுகிரஹம் செய்ய, அலர்மேல் மங்கை தாயார் வக்ஷஸ்தலத்தில் இறை பொழுது கூட அகல கில்லேன் என்று அமர்ந்து விட்ட ஸ்ரீனிவாச பெருமாளே என்பதை தான், நம்மாழ்வார்,
"அகல இல்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா"
என்று சொல்கிறார்.

திருமலையில், பெருமாளுக்கு உள்ள விசேஷம் இதுவே.

திருமலையப்பனை காண நாம் மலை ஏறி செல்லும் போது, பெருமாள் பார்ப்பதற்கு முன்,  ஸ்ரீனிவாசனின் மார்பில் இருக்கும் தாயார், நம்மை முதலில் பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நம் பாவ புண்ணியத்தை பார்க்கும் முன், தாயார் முந்திக்கொண்டு, "நம் குழந்தை, அணுகிரஹம் செய்யுங்கள்" என்று நமக்காக சிபாரிசு செய்து விடுகிறாள்.

தாயார் பார்த்ததினாலேயே, பெருமாள், நம் தகுதி பாராமல், உடனே அணுகிரஹம் செய்து விடுகிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.

திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம், மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காண இயலாது.

திருமலையில், தாயாரை தன் மார்போடு வைத்து இருப்பதால், தடையின்றி நம்மிடம் கருணையை வர்ஷிக்கிறார் பெருமாள்.

நிகரில் புகழாய்.
உலக மூன்றுடையாய்.
என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

சொர்க்கத்தில் உள்ள தேவர்கள், தப லோகத்தில் இருக்கும் ரிஷிகள், பிரம்மா உட்பட ஒரு நாள் அழிந்து விடுவார்கள். ஆனால் வைகுண்டத்தில் உள்ள தேவர்களான நித்ய பார்ஷதர்கள் வைகுண்ட நாதனை போல அமரர்கள்.
வைகுண்ட நாதனை போல அவர்களும் என்றுமே இருப்பவர்கள்.
பரமாத்மாவாக இருப்பதால், வைகுண்ட நாதனுக்கு கூட, உலகத்தை ஸ்ருஷ்டி செய்ய வேண்டும், உலகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற பொறுப்பு உண்டு.
நித்ய பார்ஷதர்களான இவர்களுக்கு அந்த பொறுப்பு கிடையாது என்பதால், இவர்கள் லட்சியம் வைகுண்ட நாதனுக்கு கைங்கர்யம் செய்வதே. தேவைப்பட்டால், இவர்களே ப்ரம்ம லோகம் முதல், பூலோகம் வரை வந்து போகவும் முடியும். சுதந்திரமானவர்கள், அமரர்கள்.

அப்படிப்பட்ட அமரர்களான நித்ய பார்ஷதர்களும் (அமரர் முனிக்கணங்கள்), பூலோகத்தில் உள்ள திருமலை வந்து சேவை செய்ய விரும்பும் பெருமை உடைய திருவேங்கடத்தானே என்று
"நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே"
என்று நம்மாழ்வார் திருமலையப்பனின் புகழை நமக்கு காட்டுகிறார்.

வைகுண்டத்திலேயே எம்பெருமானை சேவிக்கும் பாக்கியம் பெற்ற நித்ய பார்ஷதர்களே திருமலை வந்து சேவிப்பார்கள் என்றால், இந்த உலகத்திலேயே உள்ள எனக்கு உன் திருவடி அடையாமல் வேறு என்ன செய்வேன்?

நித்ய பார்ஷதர்களுக்கு திருமலை இல்லையென்றால், வைகுண்டம் இருக்கிறது. அங்கு போய் உமக்கு சேவை செய்து கொள்வார்கள்.
அவர்களே வைகுண்டம் வேண்டாம், திருமலை தான் வேண்டும் என்று வரும்போது,
பூலோகத்தில் புகலிடம் இல்லாத எனக்கு, நீஙகள் ஒருவர் தானே கதி என்று,
"புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே"
என்கிறார் நம்மாழ்வார்.

வைகுண்டம் சென்று உங்கள் திருவடியை பிடிக்க இயலாத எனக்கு திருமலையில் உள்ள நீங்கள் தானே கதி. புகலிடம் இல்லாத அடியேன், உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே என்கிறார்.

இங்கு "உன் திருவடியில் புகுந்தேனே" என்று கூறாமல்,
"உன் திருவடியில் அமர்ந்து புகுந்தேனே"என்கிறார்.

இங்கு "அமர்ந்து" என்ற சொல்லை சொல்லி, சரணாகதி செய்த நம்மாழ்வார், மோக்ஷம் வேண்டினாலும், உடனே தந்து விட வேண்டாம், கொஞ்சம் திருமலையில் தங்கி (அமர்ந்து) உங்களுக்கு இங்கேயே சில காலம் சேவை செய்ய அணுகிரஹம் செய்து விட்டு, பின்னர் மோக்ஷம் கொடுங்கள் என்கிறார்.

மோக்ஷம் யாருக்கு கொடுக்கிறார் பெருமாள்?
இரண்டு விதமான நிலைக்கு, மோக்ஷம் கொடுக்கிறார் பெருமாள்.
1. "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து செய்தால், உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

2. "இனி தாளாது என்ற ஆர்த்தி (துடிப்பு) இல்லாமல்" சரணாகதி செய்து விட்டானானால், அவன் ப்ராரப்தம் முடியும் வரை உடம்போடு வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ப்ராரப்த கர்மா அனுபவிக்காமல் மோக்ஷம் கொடுப்பாரா?
கோபிகைகள் போல "இனி தாளாது" என்ற ஆர்த்தியுடன் (துடிப்பு) சரணாகதி செய்து விட்டால், ப்ராரப்த கர்மாவும் பொசுங்கி, உடனே மோக்ஷம் கொடுத்து விடுகிறார் பெருமாள்.

ஞானியும் ப்ராரப்த கர்மாவை அனுபவிக்கிறார்கள்.


நம்மாழ்வார் திருமலையப்பனை பூரண சரணாகதி செய்தவர்.
"இனி தாளாது" என்ற ஆர்த்தியும் (துடிப்பு) உள்ளவர்.
உடனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி இருந்தாலும்,
பிராரப்த காலம் முடியும்வரை, இந்த உடலோடு இருந்து, திருவெங்கட நாதனுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டாராம் ஆழ்வார்.

இதை குறிப்பதாக, "உன் திருவடியில் அமர்ந்து" என்று சொல்லி, எப்பொழுது பிராரப்த காலம் முடியுமோ, அப்பொழுது திருவெங்கட நாதனுக்கு திருமலையில் செய்த சேவையை, வைகுண்டம் சென்று செய்வோம் என்று பிரார்த்தித்தார்.