Followers

Search Here...

Sunday 22 March 2020

மதுரை கூடலழகர் பெருமாள் சரித்திரம் - பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கூடலழகர் பெருமாள் கோவில் - மதுரை (பாண்டிய தேசம்)
எப்படி ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை வளைத்துக்கொண்டு, ஒரு பக்கம் "காவிரி"யும், மறுபக்கம் "கொள்ளிடம்" என்ற பெயருடன் நதி ஓடுகிறதோ!! 
அதுபோல, 
மதுரையை தென் பக்கத்தின் வழியாக "க்ருதமாலா" என்ற நதியும், வடபக்கத்தின் வழியாக "வைகை" என்ற நதியும் ஓடிக்கொண்டிருந்தது.
(இன்று, க்ருதமாலா வற்றி விட்டது).

"சத்யவ்ரதன்" என்ற அரசன், ஆண்டு கொண்டிருந்தார்.




இவர் இப்போது நடக்கும் "வைவஸ்வத மனு"வுக்கும்  முன்னர் இருந்த சாக்ஷுச என்ற மனுவின் காலத்தில் இருந்தவர்.

"மதுரை" என்ற இந்த நகரம் எத்தனை காலங்களாக இருந்துள்ளது? என்பது மனுவின் காலத்தை கணக்கிட்டாலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த சத்யவ்ரதனே 'சாக்ஷுச மனு'வின் ஆட்சி காலம் முடிந்தபின், வைவஸ்வத மனுவாக அவதரித்தார்.

மதுரைக்கு சம்பந்தப்பட்ட ஒரு அரசன், இன்று பூலோகத்தை வைவஸ்வத மனுவாக ஆட்சி செய்கிறார் என்பது நமக்கு பெருமை.

சத்யவ்ரதனாக ராஜ்யத்தை கவனித்து கொண்டிருந்த இவர், தர்மத்தில் மக்களை வைத்து இருப்பதிலும், தர்மம் மீறாமல் ஆட்சி செய்வதிலும் கவனமாக இருந்தார்.
அரசனாக இருந்தும், போகங்களை விரும்பாதவர்.
"தர்மத்தில் இருக்க வேண்டும், மக்களை இருக்க செய்ய வேண்டும்" என்று "கர்ம யோகியாக" ஆட்சி செய்து வந்தார் சத்யவ்ரதன்.

ராஜனாக இல்லாமல், ராஜரிஷியாக இருந்தார் சத்யவ்ரதன்.

சத்யவ்ரதன், "க்ருதமாலா என்று அழைக்கப்பட்ட வைகை" ஆற்றங்கரையில், பகவத் தியானம் செய்து கொண்டிருந்தார்.

திடமான சித்தம் கொண்டவர், சத்யவ்ரதன்.
புலன்களை அடக்கியவர், சத்யவ்ரதன்.
வைராக்கியம் உடையவர், சத்யவ்ரதன்.
தபஸ்வியாக இருப்பவர், சத்யவ்ரதன்.
எந்த காரியத்தை செய்தாலும் சிரத்தையாக செய்பவர் சத்யவ்ரதன்.

ராஜரிஷியான சத்யவ்ரதன், பகவானை தியானித்து கொண்டே, சந்தியா வந்தனம் செய்து, ஜலத்தை எடுத்து அர்க்யம் விட்டு கொண்டிருந்தார்.

அப்போது, ஜலத்தை கையில் எடுக்கும் போது, இவர் கையில் ஒரு சிறிய "மீன்" தானாக அகப்பட்டது.
கையில் மீன் (மத்ஸ்ய) இருப்பதை பார்த்த சத்யவ்ரதன், அதை மீண்டும் ஆற்றிலேயே கீழே போட்டார்.
இவர் கையில் தானாக வந்து விழுந்த அந்த மீன், அரசனை பார்த்து தேவ பாஷையில் பேசஆரம்பித்தது..
"உம்மை நான் சரண் அடைகிறேன். என்னை காப்பாற்றும். என்னை மீண்டும் ஆற்றிலேயே போட்டு விட்டீர்களே ?!
என்னை விட பெரிய மத்ஸ்யங்கள் உள்ள இந்த ஆற்றில் என்னை நீங்கள் விட்டு விட்டால், என்னை இவைகள் சாப்பிட்டு விடுமே !!"
என்று சொல்ல,
மீன் பேசியதை கண்டு ஆச்சர்யப்பட்ட சத்யவ்ரதன், இது சாதாரண மீன் அல்ல, தேவதை என்று உணர்ந்து, உடனே அந்த மீனை தன் தீர்த்தபாத்திரத்திலேயே போட்டு கொண்டு, தன் ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார். 

அன்று ராத்திரியே அந்த மீன், பெரிய மீனாக வளர்ந்து, "இங்கு எனக்கு போதுமான தண்ணீர் இல்லையே!" என்று சொல்ல,
அரசர், தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து அந்த மீனை எடுத்து, பெரிய தீர்த்த குடத்தில் மாற்றினார். 
சற்று நேரத்துக்கெல்லாம், அந்த மீனுக்கு அந்த இடமும் போதாதபடி குடம் முழுவதும் வளர்ந்து கிடக்க, அந்த மீனை எடுத்து தன் மாளிகையின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் விட்டு விட்டார்.
பொழுது விடிந்து பார்த்தால், அந்த கிணறு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த மீன் பெரிதாக ஆகி, "இந்த தண்ணீரும் எனக்கு போதவில்லையே!!" என்றது.

அரசர், தன்னுடைய சிஷ்யர்களோடு கூட அந்த மீனை எடுத்துக்கொண்டு போய், தக்ஷிண சமுத்திரத்தில் (indian ocean ) கொண்டு விட்டார்.

சமுத்திரத்தில் விடப்பட்ட மீன் உடனே சத்யவ்ரதனை பார்த்து சொல்கிறது,
"மீன் ஜாதியான எங்களுக்குள் பங்காளி பொறாமைகள் மிக அதிகம்.
ஒரு மீன், இன்னொரு மீனை சாப்பிட்டுவிடுவார்கள்.
மற்ற மீன்கள் என்னை பொறாமைப்பட்டு சாப்பிட்டுவிடுமே !
உங்களை சரணம் அடைந்தால்,  ஒரு தோஷமும் (குற்றமும்)  இல்லாத என்னை போய் சமுத்திரத்தில் தள்ளிவிட்டீர்களே?
தோஷம் இருந்தால் கூட அபயம் (பாதுகாப்பு) கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா?
என்னிடம் ஏதாவது தோஷம் இருந்தாலும், இப்படி நீங்கள் என்னை தள்ளலாமா?"

என்று அந்த மீன் கேள்வி கேட்டது.

"மீன் பேசுமா? அதிலும் தேவபாஷையில் பேசுகிறதே இந்த மீன்! 




இது ஏதோ தேவலீலை, வந்திருப்பது ஒரு தேவன்" என்று புரிந்துகொண்ட சத்யவ்ரதன், அந்த மீனை பார்த்து,

"நீ ஒரு சாதாரண மீன் அல்ல. நீ யாரோ ஒரு மஹாபுருஷன், இப்படி ஒரு மீன் ரூபத்தில் வந்து, என்னிடத்தில் இப்படி விளையாடுகிறாய் என்று நினைக்கிறன்.

பரவாசுதேவனுக்கு தான் செய்யும் அவதாரங்கள் மட்டுமே லீலை (விளையாட்டு) அல்ல..  தான் செய்யும் உலக படைப்புகளும், உலகை காப்பதும், உலகை அழிப்பதும் கூட லீலை தான் என்று வேதம் சொல்கிறது.

உலக நிர்வாகத்தையே விளையாட்டாக செய்து கொண்டு போகிறார் பரமாத்மா நாராயணன் என்று வேதம் சொல்கிறது.

அப்படி இருக்க, இப்போது எனக்கு காட்சி தருவது மாய மீன் என்று அறிகிறேன்.
மீனை போல காட்சி தருகிறாயே தவிர, நீ மீன் அல்ல என்று அறிகிறேன்.
நீ சாக்ஷத் பரமாத்மா என்று நினைக்கிறேன்"
என்று சத்யவ்ரதன் சொன்னதுமே, மத்ஸ்ய (மீன்) ரூபத்தில் இருந்த பகவான் பேசலானார்,
"ஹே சத்யவ்ரதா ! ராஜன்.. உன் பகவத் பக்திக்கு நான் ப்ரசன்னமானேன். நீ சொல்வது சத்யம்.
நான் மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கும் பரமாத்மா தான்.

சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பதின் பெருமையை உனக்கு தெரிவிக்கவே இப்படி விளையாடினேன்.

ஒரு மீனாக இருந்தாலும், சரண் அடைந்து விட்டால், அதை காப்பாற்ற வேண்டும்.
ஒரு பிராணி நம் வீட்டில் நம்பி இருந்தாலும், அதை நாம் காப்பாற்ற வேண்டும்.

ஜீவகாருண்யம் உயர்ந்த கர்மம்!
அதை உனக்கு காட்டவேண்டும் என்பதற்காக நான் இந்த விளையாட்டு விளையாடினேன்.

இந்த மத்ஸ்ய ரூபம் உனக்காக மட்டும் எடுத்துக்கொண்டது ல்ல.
முன்பு பிரளய காலத்தில் இந்த மத்ஸ்ய ரூபம் எடுத்துக்கொண்டேன்.

யோகநித்ரையில் நான் இருக்கும் பொழுது, என் நாபிகமலத்தில் இருந்து "ப்ரம்ம தேவனை" படைத்தேன். 
ப்ரம்ம தேவன் 'வேத ஸ்வரூபன்'. 
அவர் நான்கு தலைகளும் நான்கு வேதங்கள்.

வேதத்தை கொண்டுள்ளதால், ப்ரம்ம தேவனுக்கு "வேத கர்பன்"என்று பெயர். 

ஒரு சமயம் "மது கைடபர்"கள் இந்த நான்கு வேதத்தையும் எடுத்துக்கொண்டு ப்ரளயஜாலத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டு விட்டார்கள்.
அந்த வேதத்தையும் மீட்க வேண்டும், இவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்க அதற்கு ஏற்ற மத்ஸ்ய ரூபத்தை அன்று தரித்துக்கொண்டேன்.
பிரளய காலமாக இருந்ததால், என் அவதாரத்தை பார்த்து ரசிக்க அப்போது ஒரு பக்தன் இல்லை. 
நான் எந்த அவதாரம் செய்தாலும், அந்த அவதாரத்தை பார்த்து ரசிக்க ஒரு பக்தன் தேவை. அதனால், உம்மிடத்தில் வந்து மத்ஸ்ய அவதாரம் செய்து விளையாடினோம்.
இன்றிலிருந்து 7வது நாள், ஒரு பெரிய பிரளயம் வரப்போகிறது.
அந்த சமயத்தில் நீ என்னை தியானிக்கும் போது, நான் உன்னை ரக்ஷிப்பேன்." 
என்று சொல்லிவிட்டு, பகவான் மறைந்து விட்டார்.




ப்ரம்மாவின் 100 ஆயுசு முடியும் போது, மஹா பிரளயம் ஏற்பட்டு, 14 லோகங்களும் (சத்ய லோகம் முதல் பாதாளம் வரை)  அழிந்து விடும்.

ப்ரம்மாவின் ஒரு பகல் முடிந்து, அவர் தூங்கும் காலத்தில் 'நைமித்திய பிரளயம்' ஏற்படும்.
இந்த நைமித்திய பிரளய காலத்தில், 
14 லோகங்களுக்கும் கீழே இருக்கும் பிரளய ஜலம் எழும்பி, பாதாளம் தாண்டி, பூலோகம், புவர்லோகம் தாண்டி, சொர்க்க லோகம் வரை பொங்கி, பிரளய ஜலத்தில் அழித்து விடும்,

பூலோகத்திற்கு மேல் உள்ள புவர்லோகம், சொர்க்க லோகம்  உள்ளது.
பூலோகத்திற்கு கீழ் உள்ள 7 லோகங்கள் (அதள, விதள, சுதள, தலாதள,மஹாதள, பாதாள,ரஸாதல) உள்ளது.

இவை அனைத்தும் நைமித்திய பிரளய ஜலத்தில் அழிந்து விடும்.

சொர்க்க லோகம் வரை உயர்ந்து கிடைக்கும் பிரளய ஜலத்தில், அந்த பிரளய ஜலத்துக்கு ஏற்ற பெரிய ரூபத்துடன் மத்ஸ்ய அவதாரம் லீலையாக (விளையாட்டாக) செய்தார் பெருமாள். 

இப்படி பிரளய ஜலத்தில் "மீனாக அவதாரம்" செய்த பெருமாள், தன் வாலை சுழற்றி பிரளய ஜலத்தில் ஒரு அடி அடிக்க, 
அதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.
அப்படியென்றால், எத்தனை பெரிய அவதாரம் மத்ஸ்ய அவதாரம் என்று தெரிகிறது.

பகவான் சொன்னபடியே, 7வது நாளில் பிரளயம் ஏற்பட்டு, பூலோகம் தண்ணீரில் மூழ்கி விட,  சத்யவ்ரதன் பகவானை தியானிக்க, 
ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில் பகவான் ஒரு கையால் சத்யவ்ரதனை தன் அருகில் கூப்பிட்டு, மறுகையால் அபய முத்திரையுடன் காட்சி கொடுத்தார். 

சத்யவ்ரதனை காக்க, பகவான் மத்ஸ்ய ரூபத்தை எடுத்துக்கொள்ள, சத்யவ்ரதன் கூடவே சப்த ரிஷிகளும் பெருமாளின் மேல் ஏறிக்கொள்ள,
பிரளய ஜலத்தில் நீந்தி கொண்டே பகவான், தன் மீது அமர்ந்து இருக்கும் சத்யவ்ரதனுக்கு தர்ம உபதேசங்கள் செய்தார்.
பிரளய ஜலம் வடிந்ததும், சத்யவ்ரதன் வைவஸ்வத மனுவாக ஆகி, உலகை ஆட்சி புரிந்துகொண்டு இருக்கிறார்.

'தனக்கு மத்ஸ்ய ரூபத்தில் எப்படி பெருமாள் காட்சி கொடுத்தாரோ, அதே போல, ஒரு கோவில் அமைத்தார்' சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு.

சத்யவ்ரதன் அமைத்த கோவில் இந்த தான், மதுரையில் உள்ள "கூடலழகர் திருக்கோவில்". 
'மதுரை' என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கூடல்" என்று தமிழில் பொருள்.

திருமாலிருஞ்சோலையில் உள்ள கள்ளலழகரும் அழகர் தான். 
கூடல் மாநகரில் உள்ள பெருமாளும் அழகர் தான். 

கள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.

கூடலழகர் பெருமாள் ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில், பரமபதத்தில் இருப்பது போல கம்பீரமாக இருக்கிறார்.




திருமாலிருஞ்சோலையில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.

கூடலழகர் விமானமும், திருக்கோஷ்டியூர் போல, அஷ்டாங்க விமானத்துடன் உள்ளது.
பெருமாளும் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து இருக்கும் அழகை பார்த்தால், வாசலில் இருக்கும் நம்மை கூப்பிடுவது போல இருக்கும்.

பெருமாளின் முத்திரையும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது.

அர்ச்சா (பூஜிக்கத்தக்க) திருமேனியுடன் இருக்கும் பகவான், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வித முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார்.
கூடல் நகரில் இருக்கும் இந்த அழகர், 
ஒரு கையால் நம்மை கூப்பிடுவது போல முத்திரையுடன், 
அருகில் வந்த தன் பக்தனுக்கு, மற்றொரு கையால் அபயம் (பயப்படாதே!) என்ற முத்திரையுடன் இன்றும் காட்சி தருகிறார்.

எப்படி சத்யவ்ரதனுக்கு காட்சி கொடுத்த்தாரோ! அதேபோல, 
நம்மையும் கூப்பிட்டு, உன் பயத்தை போக்க, "நான் இருக்கிறேன்" என்று அபயம் தருகிறார்.

இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு, சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, வைகானச முறைப்படி பூஜைகள் நடக்குமாறு ஏற்பாடு செய்தார் கூடலழகர்.

இந்த பெருமாளுக்காக பிரத்யேகமாக பாடப்பட்டது தான் 
"பல்லாண்டு..." என்ற பிரசித்தி பெற்ற "பெரியாழ்வார் பாசுரம்".

பெரியாழ்வார் காலத்தில், வல்லபதேவன் என்ற பாண்டிய ராஜன், "அனைத்து சமயங்களிலும் சாரதமமான (மிகவும் உயர்ந்த) சமயம் எதுவோ, அதை தான் ஆச்ரயிக்க வேண்டும்" 
என்று ஆசைப்பட்டார்.

அதற்காக கூடல்நகர் என்ற மதுரையில் "பெரிய வித்வத் மேளா" ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இந்த மேளாவில், பல வித வைதீக வித்வான்களும், வைதீகம் அறியாத மற்ற சமய வித்வான்களும் கலந்து கொண்டு, அவரவர் சமயத்துக்கு சார்பாக பேச ஆரம்பித்தனர்.

எந்த சமயம் தெய்வ சம்மதமோ, அந்த சமயத்தை தான் ஏற்க ஆசைப்பட்ட அரசர், ஒரு பொற்கிழியை உயரே கட்டி விட்டு, 
"எந்த சமயம் தெய்வத்துக்கு சம்மதமோ, அந்த சமயத்தை தெய்வமே இந்த பொற்கிழி தானாக கீழே விழ செய்து பதில் சொல்லட்டும்" 
என்று சொல்லிவிட்டார்.




விஷ்ணுசித்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கே தொண்டு செய்து கொண்டு, பெருமாள் ப்ரஸாதத்தையே பெற்றுக்கொண்டு, எளிமையான வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.

இப்படி அரசன் பரிக்ஷை  வைக்க, கூடலழகர் பெருமாளே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, கூடல் நகருக்கு வர சொல்லி, "தன்னை பற்றி அந்த சபையில் நிர்ணயம் செய்யவும்" 
என்று சொல்ல,
"எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பெரிய சபையில், அனைவரும் ஏற்கும் விதமாக பேசும் சாமர்த்தியம் உண்டோ" என்று விஷ்ணுசித்தர் கேட்க,
"நாமே உம்முடைய வாயிலிருந்து பேசுவோம்.. வாரும்" 
என்று பகவான் அழைத்தார்..

அதே சமயத்தில், அரசனுக்கும் "இப்படி ஒரு ஒருவர் வருகிறார்" என்று கனவில் அசரீரியாக கேட்க, விஷ்ணுசித்தர் கூடல்நகர் வந்ததும், தகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.

சபைக்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர். 
மிக பெரிய சபை ஏற்பாடாகி இருந்தது.

"குதர்க்கமாக" பேசுபவர்கள், 
"நோக்கத்துடன்" பேசுபவர்கள், 
"சாஸ்திர பிரமாணமாக" பேசுபவர்கள், 
"சாஸ்திர விரோதமாக" பேசுபவர்கள், 
என்று பல கோஷ்டிகள் குழுமி இருந்தார்கள்.

"தான் பேச போவதில்லை.. பகவான் தான் உள்ளிருந்து பேச போகிறார்" என்பதால், 
"இவர்கள் மத்தியில் பேசவேண்டுமே !!" 
என்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக உட்கார்ந்தார் விஷ்ணுசித்தர்.

இப்படி ஒவ்வொருத்தரும் தன் தரப்பில் பேச ஆரம்பிக்க, இவர் தரப்பு பேச நேரம் வர, அரசர் மரியாதையோடு 
"தாங்கள் தங்கள் பக்க அபிப்ராயத்தை சொல்ல வேண்டும்" என்றதும்,
"வேண்டிய வேதங்கள் ஓதி" என்று "வேதத்தின் சாரம் என்ன?" என்பதை எடுத்து, பகவானின் பரத்துவத்தை நிர்ணயம் செய்ய, 
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.

அந்த காலங்களில், "பகவானை அடைய எது சிறந்த வழி? என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆசைப்பட்டனர். 
தன் சமயத்தை பிடித்துக்கொண்டு, வீண் பிடிவாதம் செய்த காலம் இல்லை. 

"இவர் மகிமை பொருந்தியவர்" என்று புரிந்து கொண்ட மற்றவர்களும், இவரை பெரிய ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.

மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர். 
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.




இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது, 
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,

கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர, 
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார், தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,  
சிலர் பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும்,
சிலர் அணுக்கள் தான் உலகம் என்றும்,
சிலர் இயற்கையே தான் உண்மை என்றும்,
சிலர் கர்மா (action-reaction ) தான் என்றும் 
சிலர் காலம் தான் என்றும்,
சிலர் வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா என்றும்,
சிலர் தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும் வாதிட்டவர்கள்.
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!  
"இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!" என்று நினைத்தார் பெரியாழ்வார்.

"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா? 

பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?" 
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். 

"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ!!" என்று தோன்ற, பெரியாழ்வார், "பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார். 
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.

பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.

யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு 
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு 

பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.




பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான் தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.

முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக, 
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழவார், 
கூடல் நகரில், பலரும் பார்க்க தன் திருவடியை பெருமாள் காட்டி விட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம். 
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' 
என்கிறார்.

பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.

முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.

இந்த பெருமாளுக்கு தான் "சுந்தர பாகு" என்று பெயர். அழகிய தோள் உடையவர்.

இது திருஷ்டி கழிப்பு பெருமாளுக்கு போதாது என்று, மேலும் பாடுகிறார்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.

"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.





அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது. பெருமாள் எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 
இருந்த போதிலும், 
"இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல், "அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 
பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் கொடுக்குமாம். 

"பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க, வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும், வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கும் பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.


Saturday 21 March 2020

ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) நம்பெருமாள் வருவதற்கு முன் நடந்த சரித்திரம். தெரிந்து கொள்ள வேண்டாமா?

உலக ஸ்ருஷ்டி ஆரம்பமான காலம்:
ப்ரம்மாவுடைய மானஸ புத்ரன் தக்ஷன்.
ப்ரம்மாவின் ஆணையை ஏற்று தக்ஷ ப்ரஜாபதி உலக ஸ்ருஷ்டிகளை செய்தார்.
28 பெண் தேவதைகளை ஸ்ருஷ்டி செய்தார்.
இதில் 27 தேவதைகளே 'நக்ஷத்திரங்களாக' ஜொலிக்கின்றனர். மற்றொருவள் பெயர் "அபிஜித்".

"க்ஷத்ர" என்றால் "மங்கக்கூடிய" என்று பொருள்.
"ந-க்ஷத்ர" என்றால் "மங்காத" என்று பொருள்.

உலகில் மனிதர்களை "மங்காத புகழ்" என்று சொல்ல "நக்ஷரம்" என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள்.
ஆனால்,
அனைவரும் ஒருநாள் மங்கக்கூடியவர்களே !




உண்மையில் என்றுமே மங்காத பெருமையுடன் இரத்தின மாலை போல ஜொலிப்பவர்கள் இந்த தேவதைகள்.

27 பெண்களின் பெயர்: (நக்ஷத்ர தேவத்தைகள்)
அஸ்வினி, பரணி, கிருத்திகா (கார்த்திகை),
ரோகினி, ம்ருகசீர்ஷா, ஆத்ரா (திருவாதிரை),
புனர்வசு (புனர்பூசம்),  புஷ்ய (பூசம்), ஆஸ்லேசா (ஆயில்யம்),
மகா (மகம்), பூர்வ பல்குனி (பூரம்), உத்தர பல்குணி (உத்திரம்),
ஹஸ்த (அஸ்தம்), சித்ரா (சித்திரை), ஸ்வாதி (சுவாதி),
விஷாகா (விசாகம்), அனுராதா (அனுஷம்), ஜ்யேஷ்டா (கேட்டை),
மூல (மூலம்), பூர்வ ஆஷாடா (பூராடம்), உத்தர ஆஷாட (உத்திராடம்),
ஸ்ரவண (திருவோணம்), தனிஷ்டா (அவிட்டம்), சதபிஷா (சதயம்),
பூர்வ பாத்ரபதா (பூரட்டாதி), உத்திர  பாத்ரபதா (உத்திரட்டாதி), ரேவதி

தன் 28 பெண்களையும், பாற்கடலில்  தோன்றிய சந்திரனுக்கே மணம் செய்து கொடுத்தார்.
பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கும் சந்திரன், செல்வத்துக்கு அதிதேவதையான மகாலட்சுமிக்கு சதோதரன்
என்ற காரணத்தினாலேயே மனமுவந்து தன் 27 பெண்களையும் கொடுத்தார்.

பெருமாளும், தாயாரும் நமக்கு தாய் தந்தை.
அதன் காரணத்தாலேயே, மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனை "சந்திர மாமா" என்றும் "அம்புலி மாமா" என்று உறவு சொல்லி அழைக்கிறோம்.
இந்த அதி தேவதைகளே 27 நக்ஷத்திர மண்டலங்களாக, சந்திரனுடன் நமக்கு காட்சி கொடுக்கிறார்கள்.

28 பெண்களை மனம் செய்து கொடுத்தாலும், சந்திரன் ரோகினியிடம் மட்டும் தனி பிரியம் கொண்டிருந்தார்.
மற்ற மனைவிகளிடம் சமமாக பழகாமல் இருந்து வந்தார்.

தங்கள் குறையை தகப்பனாரான தக்ஷனிடம் மற்ற 27 பெண்கள் சொல்ல, மனைவியிடம் பிரியம் இல்லாமல் இருக்கும் சந்திரன் மேல் கடும் கோபம் கொண்டார்,  தக்ஷ பிரஜாபதி.
மாப்பிள்ளையை சபித்தால் யாருக்கு நஷ்டம்?
தன் பெண்களுக்கு தானே நஷ்டம் !

கோபத்தில், சந்திரனை பார்த்து "உன் பொலிவான தோற்றத்தில் க்ஷய ரோகம் (தேய்மானம்) ஏற்படட்டும்" என்று சபித்துவிட்டார்.

சாபத்தால், நாளுக்கு நாள் சந்திரனின் பொலிவு தேய ஆரம்பிக்க, "அமாவாசை வருவதற்குள் நாம் முழுவதும் பொலிவு இல்லாமல் அழிந்து விடுவோம் போல உள்ளதே!!" என்று ப்ருகு முனிவரை சந்திரன் சரண் அடைந்து உபாயம் கேட்டார்.

ப்ருகு சந்திரனை பார்த்து, "நீ உடனேயே பூலோகம் சென்று, அங்கு வாசுதேவனை  ஆராதனை செய். அப்படி செய்தாய் என்றால், உனக்கு இந்த க்ஷய ரோகம் நிவர்த்தி ஆகும்" என்று சொல்ல,

சந்திர தேவன்  பூலோகம் வந்து, தானே ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, வாசுதேவனை குறித்து ஆராதனை செய்ய தொடங்கினார்.

சந்திரனால் ஏற்பட்ட இந்த தீர்த்தத்துக்கு "சந்திர புஷ்கரணி " என்று பெயர் ஏற்பட்டது.
இது காவிரி உருவாவதற்கும் முந்தைய காலம்.
திருவரங்கத்திற்கு நம்பெருமாள் இன்னும் வராத காலம்.

"சந்திர புஷ்கரணி " என்ற தீர்த்தம் அமைத்து, அதன் நான்கு பக்கங்களிலும் மேலும் (உப) சில தீர்த்தங்களும் அமைத்தார் சந்திர தேவன்.

ப்ராச்ய (கிழக்கு) திசையில், நாவல் (ஜம்பு) மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'ஜம்பு தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
ஜம்பு (நாவல்) மரத்துக்கு ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை அங்கு பிரதிஷ்டை செய்தார். (திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில்).

தக்ஷிண (தெற்கு)திசையில், புன்னை மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'புன்னாக தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, ப்ருகு முனிவர் சொன்னபடி,  "வாசுதேவனை" பிரதிஷ்டை செய்தார்.

பஸ்சிம (மேற்கு) திசையில், வில்வ  மரங்கள் உள்ள இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'வில்வ தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது.
அங்கு, தன் சகோதரியான மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்தார்.

"சந்திர புஷ்கரணி " தீர்த்தத்துக்கு உத்திர (வடக்கு) திசையில், கதம்ப   மரங்கள் நிறைந்த இடத்தில் ஒரு தீர்த்தம் அமைத்தார். அதற்கு 'கதம்ப  தீர்த்தம்' என்று பெயர் ஏற்பட்டது. அங்கும் புருஷோத்தமனை பிரதிஷ்டை செய்தார்.  (கதம்பனூர் என்றும் கரம்பனூர் என்றும் சொல்கிறோம். திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்)

சந்திரன் அமைத்த "சந்திர புஷ்கரணி"  என்ற தீர்த்த கரையில் பிற்காலத்தில், த்ரேதா யுகத்தில், விபீஷணனால், கொண்டு வரப்பட்டு, ஸ்ரீ ரங்கநாத பெருமாளே வந்து சேருகிறார்.

சந்திரன் அமைத்த மற்ற தீர்த்தங்களை ஸ்ரீ ரங்கநாதர், பங்குனி மாதம் ஒவ்வொரு தீர்த்தத்துக்கு சென்று தங்கி, ஸ்ரீரங்க எல்லையை தானே காத்து வருகிறார்.
பங்குனி திருநாள் உத்சவம் என்று ஸ்ரீரங்கத்தில் இன்றும் பெருமாள் தன் ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இப்படி பல தீர்த்தங்கள் அமைத்து, பெருமாளை வாசுதேவனாக, ஆராதனை செய்த சந்திர தேவன், தன் க்ஷய ரோகத்தில் இருந்து விடுபட்டு, அமாவாசை முடிந்து சுக்ல பக்ஷத்தில் மீண்டும் வளர்ச்சி அடைந்து விட்டார்.

தக்ஷன் சொன்ன வார்த்தையும் சத்தியம் செய்வதற்காக, கிருஷ்ண பக்ஷத்தில் மட்டிலும் க்ஷத ரோகத்தை அனுபவிக்கிறார்.

வாசுதேவனின் அனுகிரஹத்தால்
, சந்திர தேவனுக்கு ஏற்பட்ட க்ஷய ரோகம் மட்டும் நீங்காமல், தன் மனைவிகளிடத்தில் இருந்த வேற்றுமை உணர்வும் நீங்கியது.
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியின் அருகிலேயே வாசுதேவ சன்னதி இருக்கிறது. 
இந்த வாசுதேவன் பெரிய பெருமாள் (ரங்கநாதர்) இங்கு வருவதற்கு முன்பேயே வந்தவர்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள, இந்த சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு, க்ஷய ரோகங்கள் (தோல் சம்பந்தமான) நிவர்த்தியாகி விடும்.
ரோகங்கள் வருவதற்கான  காரணம் "நாம் செய்த பாபங்களே"
அந்த பாபங்கள் வாசுதேவனின் சாநித்தியத்தாலேயே பொசுங்கி விடும்.

ஸ்ரீரங்கநாதர் வருவதற்கு முன்பேயே வந்தவர் "வாசுதேவன்".
வாசுதேவன் சந்நிதி இன்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தத்துக்கு அருகிலேயே இருக்கிறது.

வாசுதேவன் சாநித்தியத்துடன் இருக்கும் இந்த சந்திர புஸ்கரணியிலே,
நாம் தீர்த்தமும், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்தால், கோடி புண்ணியம். 
நம் முன்னோர்கள் எல்லோரும் நல்ல கதியை அடைவார்கள்.


அந்த தீர்த்த கரையிலேயே வாசம் செய்யும் வேத ப்ராம்மணர்களுக்கு, நாம் அன்ன தானம், வஸ்திர தானம், கோ (பசு) தானம், தனம் முதலியவை கொடுத்தால், எந்த காலமும் செல்வம் குறையாத நிலையில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.




அழிவில்லா செல்வம் தரக்கூடிய புண்ணிய காரியங்கள் இவை.

சந்திரா புஷ்கரணி தீரத்தில், யார் ஜபம், தபசு செய்கிறார்களோ! அவர்களுக்கு சீக்கிரமாக தான் எதிர்பார்த்த பலங்கள் ஸித்தி ஆகிறது.

அனைத்து புண்ணிய நதிகளும், இந்த சந்திர புஷ்காரணியில் வசிக்கிறார்கள்.

அனைவரும் சென்று பார்க்க வேண்டும்.

Friday 20 March 2020

மரியாதை சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோமே...

தெய்வத்துக்கு சமமாக பூஜிக்க  தகுந்த மாகாத்மாக்களை கண்டால், "தேவரீர்" என்று அவரை சொல்கிறோம்.
நர்குணங்கள் நிரம்பிய இவர்களை காணும் போது,
நம்மை "தாசன்" என்றும், "இவன்" என்றும், "இது" என்றும் கூட சொல்லிக்கொள்கிறோம்.

"தாசன், இவன், இது" என்று நம்மை சொல்லிக்கொள்வது, நம்மை தாழ்த்திக்கொள்வதற்காக அல்ல.
நம்மை தாழ்த்தி, அவரை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், குருநாதரின் உயரிய குணத்தால், இப்படி சொல்கிறோம்.

ஹனுமான் ராமபிரானை விட வயதில் மூத்தவர். நன்கு படித்தவர், ஞானம் உடையவர்.
இருந்தாலும், ராமபிரானின் எல்லையில்லா நற்குணங்கள் இவரை "தாசன்" என்று சொல்லிக்கொள்ள செய்தது.

பூஜிக்க தக்கவர்களிடம், கர்வத்தை காட்டும் படியாக  "நான்" என்று கூட சொல்லிக்கொள்வதில்லை.

வைஷ்ணவர்கள், தன்னை
"அடியான்" என்றும்,
"தாசன்" என்றும்
பெருமாளை பார்த்தும்,
ஆச்சாரியனை பார்த்தும், மற்ற வைஷ்ணவர்களை பார்த்தும், இப்படி தன்னை சொல்லிக்கொள்வார்கள் என்று பார்க்கிறோம்.

அடுத்த நிலையில், மரியாதைக்கு உரியவர்களை, "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் "நீங்கள்" என்ற சொல் கூட மரியாதை குறைவான சொல் என்று தோன்றும். ஆதலால், "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.

இவர்களிடம் பேசும் போது, "தாங்கள் நம் வீட்டுக்கு வர வேண்டும்" என்று விண்ணப்பம் செய்வோமே தவிர,
"நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்" என்று சொல்வது கூட, அதிக பிரசங்கி தனமோ என்று கூட நமக்கு தோன்றும்.




அதற்கும் கொஞ்சம் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீங்கள்" என்று சொல்கிறோம்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களை "நீங்கள்" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீர்" என்று சொல்கிறோம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீ" என்று சொல்கிறோம்.
நண்பர்களை "நீ" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

பொதுவாக இவை அனைத்துமே குணத்தை வைத்து ஏற்பட்ட மரியாதை சொற்கள்.

அவரவர் யோக்யதைக்கு தக்கபடி, இப்படி பல வித மரியாதை சொற்களை பயன்படுத்துகிறோம்.

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு .... 11

Wednesday 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும்.