Followers

Search Here...

Tuesday 9 March 2021

இக்ஷ்வாகு பரம்பரை... ராமபிரானின் மூதாதையர்கள்.. ராம பரம்பரை தெரிந்து கொள்வோமே! - வால்மீகி ராமாயணம்

 'அப்பாவுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாது' என்று உறுதியாக இருந்தார் ராமபிரான்.

கைகேயீ மாதாவுக்கு பரிந்து கொண்டு, ராமபிரான், பரதனை பார்த்து பேசலானார், 


पुरा भ्रातः पिता नः 

स मातरम् ते समुद्वहन् |

मातामहे समाश्रौषीद्

राज्य शुल्कम् अनुत्तमम् ||

- वालमीकि रामायण


புரா ப்ராத: பிதா ந: 

ச மாதரம் தே சமுத்வஹன் |

மாதாமஹே சமாஸ்ரௌஷீத்

ராஜ்ய சுல்கம் அனுத்தமம் ||

 - வால்மீகி ராமாயணம்

பரதா! வெகு வருடங்களுக்கு முன், நம் தந்தை தசரத மஹாராஜன், உன்னுடைய தாயார் கைகேயீயை மணக்கும் போது, "வரதட்சிணையாக" அவருடைய மாமனாருக்கு தன் அரசாங்கத்தை கொடுப்பதாக சொல்லி இருந்தார்"

O, My brother! Long ago, when our father married your mother, he promised your maternal grandfather that he would confer his kingdom as an exceptional marriage-dowry"




'ஆண்கள் வரதட்சிணை கொடுக்கும் வழக்கம் பாரத தேசத்தில் இருந்தது' என்று தெரிகிறது. 

947ல் நுழைந்த இஸ்லாமியர்களாலும், 1498ல் நுழைந்த வாஸ்கோ-ட-காமா என்ற கிறிஸ்தவர்களாலும், பாரத மக்கள் சூறையாடப்பட்டனர். செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. பெண்கள் கற்பை காக்க பெரும் அபாயம் ஏற்பட்டது. 

ஆண்கள் வரதட்சிணை கேட்கும் நிலை வந்ததும், கணவன் இறந்தால் பெண் உடன்கட்டை ஏறுவதும், பிராம்மணர்கள் தங்கள் வேதத்தை விட்டதும், ஹிந்துக்கள் நம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாமல் போனதற்கும், 1000 வருட அந்நிய ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட கலாசார சீரழிவே காரணம்.

देव असुरे च सम्ग्रामे

जनन्यै तव पार्थिवः |

सम्प्रहृष्टो ददौ राजा

वरम् आराधितः प्रभुः ||

- वालमीकि रामायण


தேவ அசுரே ச சம்க்ராமே

ஜனன்யே தவ பார்திவ: |

சம்ப்ரஹ்ருஷ்டோ ததொள ராஜா

வரம் ஆராதித: ப்ரபு: ||

 - வால்மீகி ராமாயணம்

"அதற்கு பிறகு தேவாசுர போர் நடக்கும் சமயத்தில், தசரத மஹாராஜா உன் தாயாருக்கு இரண்டு வரங்களை, தக்க சமயத்தில் உதவி செய்ததற்கு நன்றியாகவும், ஆசையாகவும் கொடுத்தார்."

Thereafter, in a conflict between Gods and demons, your mother received the promise of two boons from the efficient lord of the earth, King Dasartha, as a token of his joy and gratitude.


ततः सा सम्प्रतिश्राव्य

तव माता यशस्विनी |

अयाचत नर श्रेष्ठम्

द्वौ वरौ वर वर्णिनी ||

तव राज्यम् नर व्याघ्र

मम प्रव्राजनम् तथा |

तच् च राजा तथा तस्यै

नियुक्तः प्रददौ वरौ ||

- वालमीकि रामायण


தத: ஸா சம்ப்ரதிஸ்ராவ்ய

தவ மாதா யஷஸ்வினி |

அயாசத் நர ஸ்ரேஷ்டம்

த்வௌ வரௌ வர வர்ணிநீ ||

தவ ராஜ்யம் நர வ்யாக்ர

மம ப்ரவ்ராஜனம் ததா |

தச் ச ராஜா ததா தஸ்யை

நியுக்த: ப்ரததொள வரௌ ||

 - வால்மீகி ராமாயணம்

"மஹா வீரனே! புகழ் கொண்ட உனது தாயார், அந்த இரண்டு வரங்களை தான் இப்பொழுது கேட்டு கொண்டு இருக்கிறாள். அதில் ஒன்று உனக்கு நகர ராஜ்யம், எனக்கு வனவாசம்".

O, Tiger among men! Your illustrious mother of beautiful complexion consequently demanded these two boons from that chief of men, for you the throne and for me the exile to the forest.


'கைகேயீ மாதா தனக்கு உரிய சொத்தை தான் கேட்டு இருக்கிறாள்' என்று பரதனை சமாதானம் செய்தார் ராமபிரான்.

'எப்படியாவது ராமபிரானை அயோத்திக்கு வரவழைக்க வேண்டும்' என்று நினைத்த ஜாபாலி 

"ராமா! தசரதரோ இறந்து விட்டார். யாருக்கும் யாரும் உறவு கிடையாது. தனியாக பிறக்கிறார்கள். தனியாக இறக்கிறார்கள். ஆட்சி உன் வருகைக்காக காத்து இருக்கிறது. தர்மமாவது சத்யமாவது… இகலோகமாவது! பரலோகமாவது! இறந்தவனுக்கு திதி அன்று, இங்கு உணவு கொடுத்தால், இறந்தவன் சாப்பிட போகிறானா? கைக்கு வரும் ஆட்சியை பிடித்து கொள்" என்று பேசினார். 


இந்த நாஸ்தீக பேச்சுக்கு பதில் கொடுத்த ராமபிரான், கடைசியாக ஜாபாலியை பார்த்து, 'எப்படி உங்களை போன்ற ஒருவரை, அயோத்தி அரச சபையில் என் தகப்பனார் அனுமதித்தார்?" என்று கேட்டார். 

ஜாபாலியின் பேச்சு ராமபிரானை கோபப்படுத்தியது.

வசிஷ்டர், 'ராமபிரானின் குல தர்மத்தை காட்டியாவது, வனம் செல்ல விடாமல் தடுக்கலாம்' என்று நினைத்தார்.


क्रुद्धम् आज्ञाय राम: तु

वसिष्ठः प्रत्युवाच ह।

जाबालिः अपि जानीते 

लोकस्य अस्य गत आगतिम्॥

- वालमीकि रामायण


க்ருத்தம் ஆஞாய ராம:து 

வசிஷ்ட ப்ரத்யுவாச ஹ |

ஜாபாலி: அபி ஜாநீதே

லோகஸ்ய அஸ்ய கத ஆகதிம் ||

 - வால்மீகி ராமாயணம்

ராமபிரானுக்கு ஏற்பட்ட கோபத்தை கவனித்த வசிஷ்டர், பேச தொடங்கினார்..  

"ராமா! ஆத்மாக்கள் இந்த உலகத்துக்கு எப்படி வருகிறது, போகிறது என்ற உண்மையை அறிந்தவர் தான் ஜாபாலி"

Recognizing that Rama has become angry, Vashishta spoke as follows: "Even Jabali is aware of the going and coming of this world."


निवर्तयितु कामः तु त्वाम् 

एतद् वाक्यम् अब्रवीत् |

इमाम् लोक समुत्पत्तिम् 

लोक नाथ निबोध मे ||

- वालमीकि रामायण


நிவர்தயிது காம: து த்வாம்

ஏதத் வாக்யம் அப்ரவீத் |

இமாம் லோக சமுத்பத்திம்

லோக நாத நிபோத மே ||

 - வால்மீகி ராமாயணம்

"எப்படியாவது உங்களை அயோத்திக்கு திருப்பி அழைத்து சென்று விட வேண்டும் என்ற ஆசையால் தான், ஜாபாலி இப்படியெல்லாம் பேசிவிட்டார். 

லோகத்திற்கு தலைவனே! நான் உமக்கு உம்முடைய வம்ச வரலாற்றை சொல்கிறேன்.."

"He spoke in this manner, on account of his desire that you should return. O, Lord of the people! Learn from me of the creation of the world!"


सर्वम् सलिलम् एव आसीत् 

पृथिवी यत्र निर्मिता |

ततः समभवद् ब्रह्मा 

स्वयम्भूर् दैवतैः सह ||

- वालमीकि रामायण


சர்வம் சலிலம் ஏவ ஆஸீத்

ப்ருத்வீ யத்ர நிர்மிதா |

தத: சமபவத் ப்ரஹ்மா

ஸ்வயம்பு: தைவதை: சஹ ||

 - வால்மீகி ராமாயணம்

முதலில் எங்கும் காரனோதகம் என்ற பிரளய ஜலமே எங்கும் இருந்தது. ஜலத்திலிருந்து இந்த உலகம் (மண்) உண்டானது. பிரம்ம தேவன் வெளிப்பட்டார்.

"All was water only in the beginning" from which element the earth was formed. After that, the self-existent Brahma with all the gods came into existence."


स वराहः ततो भूत्वा

प्रोज्जहार वसुंधराम् |

असृजच् च जगत् सर्वम्

सह पुत्रैः कृत आत्मभिः ||

- वालमीकि रामायण


ச வராஹ: ததோ பூத்வா

ப்ரோஜ்ஹார வசுந்தராம் |

அஸ்ருஜச் ச ஜகத் சர்வம்

சஹ புத்ரை: க்ருத ஆத்மபி: ||

 - வால்மீகி ராமாயணம்

பிரளய ஜலத்தில் மூழ்கி இருந்த பூமியை வராஹ ரூபத்துடன் பகவான் வெளிக்கொணர்ந்தார். ப்ரம்ம தேவன் தன் மானஸ புத்ரர்களை கொண்டு, கோடிக்கணக்கான மோக்ஷமடையாத ஜீவன்களுக்காக உலகத்தில் பசு, பக்ஷி, மனிதன், ஈ, எறும்பு உட்பட பல வித உடல்களை ஸ்ருஷ்டி செய்தார். 

"Thereafter, that baghavan, assuming the form of boar, caused the earth to rise from water and with his sons of pure soul, created the entire world."




आकाश प्रभवो ब्रह्मा

शाश्वतो नित्य अव्ययः |

तस्मान् मरीचिः सम्जज्ने

मरीचेः कश्यपः सुतः ||

- वालमीकि रामायण


ஆகாச ப்ரபவோ ப்ரஹ்ம

சாஸ்வதோ நித்ய அவ்யய: |

தஸ்மான் மரீசி: சம்ஜஜ்னே

மரீசே: கஸ்யப: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ரம்ம தேவன் மரீசி என்ற ரிஷியை படைத்தார். 

மரீசியின் மானஸ புத்ரனாக கஷ்யபர் வெளிப்பட்டார்.

From Brahma was born Marichi. Marichi's son was kashyapa.


विवस्वान् कश्यपाज् जज्ने

मनुर् वैवस्तवः स्मृतः |

स तु प्रजापतिः पूर्वम्

इक्ष्वाकुः तु मनोः सुतः ||

- वालमीकि रामायण


விவஸ்வான் கஷ்யபாஜ் ஜஜ்னே

மனு: வைவஸ்தவ: ஸ்ம்ருத: |

ச து ப்ரஜாபதி: பூர்வம்

இக்ஷ்வாகு: து மனோ: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

கஷ்யபரின் மானஸ புத்ரனாக விவஸ்வான் (சூரிய தேவன்) வெளிப்பட்டார். விவஸ்வானின் மானஸ புத்ரனாக ஸ்வாயம்பு மனு வெளிப்பட்டார்.

From Kashyapa, Vivasvan(sun-god) was born. manu was the son of Vivasvan. Manu for his part, was formerly the lord of creation. Ikshvaku was Manu' s son.


यस्य इयम् प्रथमम् दत्ता

समृद्धा मनुना मही |

तम् इक्ष्वाकुम् अयोध्यायाम्

राजानम् विद्धि पूर्वकम् ||

- वालमीकि रामायण


யஸ்ய இயம் ப்ரத்மம் தத்தா

சம்ருத்தா மனுனா மஹீ |

தம் இக்ஷ்வாகும் அயோத்யாயாம்

ராஜானம் வித்தி பூர்வகம் ||

 - வால்மீகி ராமாயணம்

ஸ்வாயம்பு மனு இந்த பூலோகத்தை இக்ஷ்வாகுவுக்கு கொடுத்தார். அயோத்தி ஆண்ட முதல் அரசர் இவரே.

The entire fertile earth was given by Manu to Ikshvaku and know that Ikshvaku was thus the first king of Ayodhya!


इक्ष्वाकोः तु सुतः श्रीमान् 

कुक्षिर् एव इति विश्रुतः |

कुक्षेर् अथ आत्मजो

वीरो विकुक्षिर् उदपद्यत ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகோ: து சுத: ஸ்ரீமான்

குக்ஷி: ஏவ இதி விஸ்ருத: |

குக்ஷேர் அத ஆத்மஜோ

வீரோ விகுக்ஷி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

இக்ஷ்வாகுவின் மூத்த மகன் குக்ஷி.

குக்ஷியின் மூத்த மகன் விகுக்ஷி.

Ikshvaku's son was known as Kukshi, the illustrious king. Then, Kukshi's son was the valiant Vikukshi.


विकुक्षेः तु महा तेजा

बाणः पुत्रः प्रतापवान् |

बाणस्य तु महा बाहु:

अनरण्यो महा यशाः ||

- वालमीकि रामायण


விகுக்ஷே: து மஹா தேஜா

பான: புத்ர: ப்ரதாபவான் |

பானஸ்ய து மஹா பாஹு

அநரண்யோ மஹா யஷா: ||

 - வால்மீகி ராமாயணம்

விகுக்ஷியின் மூத்த மகன் பானன்.

பானனின் மூத்த மகன் அநரண்யன்.

To Vikukshi was born the most splendid and powerful son, Bana. To Bana was born Anaranya the mighty armed and the most illustrious son.


नाना वृष्टिर् बभूव अस्मिन्

न दुर्भिक्षम् सताम् वरे |

अनरण्ये महा राजे

तस्करो वा अपि कश्चन ||

- वालमीकि रामायण


நாநா வ்ருஷ்டி: பபுவ அஸ்மின்

ந துர்பிக்ஷம் சதாம் வரே |

அநரண்யே மஹா ராஜே

தஸ்கரோ வா அபி கஸ்சன ||

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யன் ஆட்சி காலத்தில் மழைக்கு குறை இல்லாமல் இருந்தது. வறட்சி இல்லாமல் இருந்தது. திருடர்கள் இல்லாத காலமாக இருந்தது.

While this King Anaranya, the most excellent among beings was reigning, there was neither dearth of rain nor a drought. No one was a thief.


अनरण्यान् महा बाहुः

पृथू राजा बभूव ह |

तस्मात् पृथो: महा राजः

त्रिशन्कु: उदपद्यत ||

स सत्य वचनाद् वीरः

सशरीरो दिवम् गतः |

- वालमीकि रामायण


அநரண்யான் மஹா பாஹு:

ப்ருதூ ராஜா பபூவ ஹ |

தஸ்மாத் ப்ருதோ: மஹா ராஜ:

த்ரிசங்கு உதபத்யத ||

ச சத்ய வசநாத் வீர:

ஸ-சரீரோ திவம் கத: |

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யனின் மூத்த மகன் ப்ருது. 

ப்ருதுவுக்கு மூத்த மகனாக திரிசங்கு பிறந்தார்.

சத்யமே பேசும் திரிசங்கு தன் மனித சரீரத்தோடு சொர்க்க லோகம் சென்றார்.

Anaranya elder son is Prutu. Prutu son is Trisanku. Trisanku due to his truthness was able to reach swarg loka with his human body.


त्रिशन्को: अभवत् सूनुर्

धुन्धुमारो महा यशाः |

धुन्धुमारान् महा तेजा

युवन अश्वो व्यजायत ||

- वालमीकि रामायण


த்ரிசங்ஜோ: அபவத் சூனு:

துந்துமாரோ மஹா யஷா: |

துந்துமாரன் மஹா தேஜா

யுவனஸ்வோ வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

திரிசங்குவுக்கு மூத்த மகனாக துந்துமாரன் பிறந்தார்.

துந்துமாரனுக்கு மூத்த மகனாக யுவனஸ்வன் பிறந்தார்.

To Trishanku was born a son, the highly illustrious Dundhumara. From Dundhumara was born the hero, Yuvanasva.


युवन अश्व सुतः श्रीमान्

मान्धाता समपद्यत |

मान्धातुः तु महा तेजाः

सुसंधि: उदपद्यत ||

- वालमीकि रामायण


யுவனஸ்வ சுத: ஸ்ரீமான்

மான்தாதா சமபத்யத |

மான்தாது: து மஹா தேஜா:

சுசந்தி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

யுவனஸ்வனுக்கு மூத்த மகனாக மான்தாதா பிறந்தார்.

மான்தாதாவுக்கு மூத்த மகனாக சுசந்தி பிறந்தார்.

The illustrious Mandhata was born as a son to Yuvanasva. To Mandhata was born the hero, Susandhi.


सुसंधेर् अपि पुत्रौ द्वौ

ध्रुव संधिः प्रसेनजित् |

यशस्वी ध्रुव संधेः 

तु भरतो रिपु सूदनः ||

- वालमीकि रामायण


சுசந்தே அபி புத்ரௌ த்வௌ 

த்ருவசந்தி: ப்ரசேனஜித் |

யஷஸ்வீ த்ருவ சந்தே:

து பரதோ ரிபு சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

சுசந்திக்கு, 'த்ருவசந்தி பிறகு ப்ரசேனஜித்' என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

த்ருவசந்திக்கு மூத்த மகனாக அழியா புகழ் பெற்ற பரதன் பிறந்தார்.

There were two sons Dhruvasandhi and prasenajit to Susandhi. From Dhruvasandhi was born the illustrious Bharata, the annihilator of enemies."


भरतात् तु महा बाहो:

असितो नाम जायत |

यस्य एते प्रतिराजान

उदपद्यन्त शत्रवः |

हैहयाः ताल जन्घाः च 

शूराः च शश बिन्दवः ||

- वालमीकि रामायण


பரதாத்: து மஹா பாஹோ

அசிதோ நாம ஜாயத |

யஸ்ய ஏதே ப்ரதிராஜான்

உதபத்யன்த சத்ரவ: |

ஹைஹயா: தாளஜன்கா: ச 

சூரா: ச ஸஸ பிந்தவ: ||

 - வால்மீகி ராமாயணம்

மஹா வீரரான பரதருக்கு மூத்த மகனாக அசிதர் பிறந்தார்.

அசிதரின் சபையில் ராஜ மந்திரிகளாக இருந்த ஹைஹயன், தாளஜன்கன், ஸஸபிந்தவன் ஆகியோர் அரசனுக்கு எதிராக திரும்பினர்.

"From the mighty armed Bharata was born a son named Asita, for whom his royal adversaries, Haihayas, Talajanghas and the valiant Shashibindavas became the enemies.





तामः तु सर्वान् प्रतिव्यूह्य

युद्धे राजा प्रवासितः |

स च शैल वरे रम्ये

बभूव अभिरतो मुनिः ||

- वालमीकि रामायण


தாம: து சர்வான் ப்ரதி வ்யூஹ்ய

யுத்தே ராஜா ப்ரவாசித: |

ஸ ச சைல வரே ரம்யே

பபூவ அபிரதோ முனி: ||

 - வால்மீகி ராமாயணம்

மற்ற அரசர்களோடு போர் செய்யும் போது, சமயத்தில் இவருடைய போர் படையே இவர் மீது திரும்ப, காட்டுக்குள் தப்பித்தார் அசிதர். 

அங்கேயே அசிதர் ராஜ ரிஷியாக மலைகளில் வசித்து வந்தார். 

Having drawn out his battle-array against all those kings in a combat, the king Asita was driven away. Asita then became a devoted sage taking asylum in an excellent and charming mountain.


द्वे च अस्य भार्ये गर्भिण्यौ

बभूवतुर् इति श्रुतिः |

एका गर्भविनाशाय

सपत्न्यै गरळं ददौ ||

- वालमीकि रामायण


த்வே ச அஸ்ய பார்யே கர்பின்யௌ

பபூ-வது: இதி ஸ்ருதி: |

ஏகா கர்ப விநாசாய

ச-பத்ன்யை கரலம் ததொள ||

 - வால்மீகி ராமாயணம்

அசிதருடைய 2 மனைவிகள் கர்ப்பமாக இருந்தனர். ஒருவள், பொறாமையினால் மூத்த மனைவியின் (காளிந்தீ) கர்ப்பத்தை கலைக்க விஷம் கொடுத்து விட்டாள்.

Asita's two wives became pregnant. It is a hearsay that one of his wives gave poison to the other co-wife in order to destroy her foetus.



भार्गवः च्यवनो नाम

हिमवन्तम् उपाश्रितः |

तम् ऋषिम् समुपागम्य

कालिन्दी तु अभ्यवादयत् |

स ताम् अभ्यवदद् विप्रो

वर ईप्सुम् पुत्र जन्मनि ||

- वालमीकि रामायण


பார்கவ: ச்யவனோ நாம

ஹிமவந்தம் உபாஸ்ரித: |

தம் ரிஷிம் சமுபாகம்ய

காளிந்தீ து அப்யவாதயத் |

ச தாம் அப்யவதத் விப்ரோ

வர ஈப்சும் புத்ர ஜன்மனி ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவன ரிஷி, ஹிமாலயத்தில் இருந்து வந்தார்.

கற்பவதியான காளிந்தீ ச்யவன ரிஷியிடம் சரண் புகுந்தாள். குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.

A sage called Chyavana, belonging to Bhrigu race was staying in a Himalayan mountain. Kalindi (Asita's wife) approached that sage and offered her salutation. That brahmna spoke the following words to her, who wanted to obtain a boon for the birth of a son.


पुत्रस्ते भविता देवि

महात्मा लोकविश्रुतः |

धार्मिकश्च सुशीलश्च

वंशकर्तारिसूदनः ||

- वालमीकि रामायण


புத்ர: தே பவிதா தேவி

மஹாத்மா லோக விஸ்ருத: |

தார்மிக: ச சுசீல: ச

வம்ச கர்தாரி சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

ச்யவன ரிஷி, கற்பவதியான காளிந்தீயை பார்த்து, "அரசியே! உலகம் புகழும் பிள்ளை மஹாத்மாவாக பிறப்பான். தர்மம் தெரிந்தவனாகவும், நன்நடத்தை உள்ளவனாகவும், உங்கள் வம்சத்தை வளர்ப்பவனாகவும், எதிரிகளை ஒழிப்பவனாகவும் ஒரு மகன் பிறப்பான்" என்று ஆசி கூறினார்.

Queen! A high-souled son, who will be world-famous, righteous, of a good conduct, a perpetuator of the race and an annihilator of enemies will be born to you.


कृत्वा प्रदक्षिणं हृष्टा

मुनिं तमनुमान्य च |

पद्मपत्र समानाक्षं

पद्मगर्भ समप्रभम् |

ततः सा गृहम् आगम्य

देवी पुत्रम् व्यजायत ||

- वालमीकि रामायण


க்ருத்வா ப்ரதக்ஷிணம் ஹ்ருஷ்டா

முனிம் தம் அனுமான்ய ச |

பத்ம பத்ர சமானாக்ஷம்

பத்ம கர்ப சமப்ரபம் |

தத: ஸா க்ருஹம் ஆகம்ய

தேவீ புத்ரம் வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

பெருமகிழ்ச்சி அடைந்த அரசி, ச்யவன ரிஷியை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, தன் இருப்பிடம் திரும்பினாள். அவளுக்கு தாமரை போன்ற கண்களுடைய, தாமரை இலையில் மலர்ந்த பிரம்மாவை போன்ற ப்ரகாசத்துடன் ஒரு மகன் பிறந்தான்.

The delighted Queen Kalindi circumambulated that sage, took permission from him to leave and thereafter on reaching home, had delivered a son, having eyes resembling lotus-leaves and having a radiance like that of Brahma the Lord of creation.


सपत्न्या तु गरः तस्यै

दत्तो गर्भ जिघांसया |

गरेण सह तेन एव

जातः स सगरो अभवत् ||

- वालमीकि रामायण


ஸ-பத்ன்யா து கர: தஸ்யை

தத்தோ கர்ப ஜிகாம்சயா |

கரேன சஹ தேன ஏவ

ஜாத: ஸ சகரோ அபவத் ||

 - வால்மீகி ராமாயணம்

கர்ப்பத்தை கலைக்க விஷம் (கர) கொடுத்து அசிதரின் மற்றொரு மனைவி கொல்ல பார்த்தும், இந்த பிள்ளை பிறந்தான். விஷம் குடித்தும், விஷத்தோடு பிறந்த பிள்ளை என்பதால், இவனுக்கு "சகரன்' என்று பெயர்.

Poison was given earlier by her co-wife with an intention to kill her foetus. Born with that poison itself, he became Sagara (a man with poison).


स राजा सगरो नाम यः

समुद्रम् अखानयत् |

इष्ट्वा पर्वणि वेगेन

त्रासयन्तम् इमाः प्रजाः ||

- वालमीकि रामायण


ச ராஜா சகரோ நாம ய:

சமுத்ரம் அகானயத் |

இஷ்ட்வா பர்வனி வேகேன

த்ராசயந்தம் இமா: ப்ரஜா: ||

 - வால்மீகி ராமாயணம்

கடலை முழுக்க அகற்றி ஆராய்ச்சி செய்தவர், இந்த சகர சக்கரவர்த்தி. (குறிப்பு: எகிப்த் அருகே உள்ள சஹாரா என்ற கடற்பரப்பு இன்று பாலைவனமாக உள்ளது)

அவர் சக்தியை கண்டும், இவர் பௌர்ணமி அன்று செய்யும் யாகங்களை கண்டும் உலகமே ஆச்சர்யப்பட்டது. தேவர்கள் தங்கள் பதவி பறிபோய் விடுமோ என்று பயந்தனர்.

It was king SAgara who excavated the ocean and who, by his sacrifice, on the day of the full moon, by his energy, frightened the people here by the speed of his digging.


असमन्जः तु पुत्रो अभूत्

सगरस्य इति नः श्रुतम् |

जीवन्न् एव स पित्रा तु

निरस्तः पाप कर्म कृत् ||

- वालमीकि रामायण


அசமஞ்ச: து புத்ரோ அபூத்

சகரஸ்ய பாப கர்ம க்ருத் |

ஜீவன்ந ஏவ ஸ பித்ரா து

நிரஸ்த: பாப கர்ம க்ருத் ||

 - வால்மீகி ராமாயணம்

சகர சக்கரவர்த்திக்கு அசமஞ்சன் என்ற மகன் பிறந்தான். அவனுடைய அதர்மம் மீறிய செயல்களை கண்டு, சகர சக்கரவர்த்தி நாடு கடத்தினார். 

Asamanja was Sagara's son. There was a hearsay that on account of his wicked deeds, Asamanja was banished by his father even during his life time.


अंशुमान् इति पुत्रो अभूद्

असमन्जस्य वीर्यवान् |

दिलीपो अंशुमतः पुत्रो

दिलीपस्य भगीरथः ||

- वालमीकि रामायण


அம்சுமான் இதி புத்ரோ அபூத்

அசமஞ்ச: ய வீர்யாவான் |

திலீபோ அம்சுமத: புத்ரோ

திலீபஸ்ய பகீரத: ||

 - வால்மீகி ராமாயணம்

அதன் பிறகு, அஸமஞ்சனின் மகன் மகா வீரனான 'அம்சுமான்' சகர சக்கரவர்த்திக்கு ஆட்சி செய்தார். 

(குறிப்புசகர சக்ரவர்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் பெயர் 'கேஷினி' விதர்ப தேசத்து பெண். இளையவள் பெயர் சுமதி. அரிஷ்டநேமி என்று அழைக்கப்படும் காஷ்யபரின் மகள் இவள். கருடனின் சகோதரி. சகர மன்னன் தன் இரு மனைவிகளுடன் 100 வருடங்கள் இமாலய பர்வதத்தில் தவம் செய்தார். ப்ருகு ரிஷி காட்சி கொடுத்து, ஒருவளுக்கு ஒரே ஒரு புத்ரன் குலத்தை விருத்தி செய்ய பிறப்பான். மற்றொருவளுக்கு 60000 புத்ரர்கள் மகாபலத்துடன், புகழுடன், உற்சாகம் குறையாமல் பிறப்பார்கள் என்று வரம் கொடுத்தார். கேஷினி தனக்கு குலத்தை வளர செய்யும் ஒரு புத்ரன் வேண்டும் என்று கேட்டாள். அவளுக்கு "அசமஞ்சன்" என்ற புத்ரன் பிறந்தார். சுமதி 60,000 புத்ரர்களை பெற்றாள். மூத்தவன் அசமஞ்சன், தன் சகோதரர்களை கங்கையில் மூழ்கடித்து விளையாடினான். இதை தொடர்ந்து செய்ய, ஜனங்களை காக்க இவன் தகுதி அற்றவன் என்று இவனை நாடு கடத்தினார் சகர மன்னன். அசமஞ்சனின் பிள்ளை அம்ஷுமான் பொறுப்பாக இருந்தான். இவன் மூலம் குலம் விருத்தி ஆனது.

தான் சகல சுகங்களுடன் பிறந்ததற்கு காரணம், முந்தைய ஜென்மத்தில் ப்ராம்மணனாக பிறந்து கன்னிகா தானம் செய்த பலனே என்று அறிந்தார். ஒரு கன்னிகா தானம் செய்ததற்கே இத்தனை பலன் கிடைக்குமென்றால், இந்த பிறவியில் 60000 பெண் குழந்தைகளை கன்னிகா தானம் செய்து மேலும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். சகர சக்கரவர்த்திக்கு ஏற்படும் புண்ணியத்தை தடுக்க, தேவேந்திரன், வரம் கேட்கும் போது "60000 புத்ரி" என்று வேண்டும் சொல்லும் போது, "60000 புத்ர' என்று கேட்டு விட்டார். 

மற்றொரு முறை, அஸ்வமேத யாகம் செய்த போது, யாக குதிரையை மறைத்து, கபில ரிஷி இருக்கும் ஆசிரமத்துக்கு அருகில் (While Horse Island is in Riverside county, CA) கட்டி விட்டு மறைந்து விட்டார் இந்திரன்.

60000 புத்திரர்களும், யாக குதிரை இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். பல ஆயிரம் தூரம் கடந்து, கபிலர் ஆசிரமம் (california) வந்து, 'இவர் தான் திருடிவிட்டார்' என்று விஜாரிக்காமல் தாக்க நினைத்தனர். கபிலர் கண் திறந்து கோபமாக பார்க்க, அந்த பார்வையிலிருந்து வெளிப்பட்ட அக்னியால் 60000 மகன்களும் அங்கேயே (Ash Island is in Oregon) பொசுங்கி சாம்பலாகினர். 60000 பேரும் திதி கொடுப்போர் இல்லாமல், அபர காரியம் செய்யப்படாமல் இறந்ததால், பசி தாகத்துடன் ஆவியாக அலைந்து கொண்டிருந்தனர்)

அம்சுமானுக்கு திலீபன் பிறந்தார்.

திலீபனுக்கு பகீரதன் பிறந்தார்.

(குறிப்பு: தன் மூதாதையர்களான 60000 பேரும் புண்ணிய லோகங்கள் செல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டான் பகீரதன். ப்ரம்ம தேவனை பிரார்த்தனை செய்தார். த்ரிவிக்ரம அவதாரம் செய்த போது, ப்ரம்ம தேவன் தன் கமண்டல ஜலத்தால் பெருமாளின் திருவடிக்கு பாத பூஜை செய்த ஜலம், சத்ய லோகம் தாண்டி சொர்க்க லோகம் வரை வந்து தங்கி இருந்தாள். அந்த புண்ணியமான கங்கை ஜலத்தை பூமிக்கு கொண்டு வந்து அந்த சாமபலில் தெளித்தால், அனைவரும் புண்ணிய லோகங்களுக்கு செல்வார்கள் என்று ப்ரம்ம தேவன் தெரிவித்தார். பகீரதன் மீண்டும் கங்கையை நோக்கி தவம் செய்து, கங்கா தேவியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையின் வேகத்தை தானே தாங்குவதாக சிவபெருமான் ஹிமாலயத்தில் கைலாயத்தில் இருந்து தாங்க சம்மதித்தார். கங்கை பூமிக்கு வந்தாள். 60000 பெரும் புண்ணிய லோகங்களுக்கு சென்றனர்)

"A valiant son called amshuman was born to Asamanja. Dilipa was Amshuman's son. Bhagiratha was Dilipa's son.





भगीरथात् ककुत्स्थः तु

काकुत्स्था येन तु स्मृताः |

ककुत्स्थस्य तु पुत्रो अभूद्

रघु: येन तु राघवः ||

- वालमीकि रामायण


பகீரதாத் ககுத்ஸ்த: து

காகுத்ஸ்தா ஏன து ஸ்ம்ருதா: |

ககுத்ஸ்தஸ்ய து புத்ரோ அபூத்

ரகு: ஏன து ராகவ: ||

 - வால்மீகி ராமாயணம்

பகீரதனுக்கு ககுத்ஸ்தன் பிறந்தார்.

காகுஸ்தன் என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

ககுத்ஸ்தனுக்கு ரகு பிறந்தார். ராகவா என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

Of Bhagiratha was born kakutstha, from whom the Kakutsthas take their name. To Kakutsthas was born a son called Raghu, from whence spring Raghavas.


रघोः तु पुत्रः तेजस्वी

प्रवृद्धः पुरुषदकः |

कल्माषपादः सौदास

इत्य् एवम् प्रथितो भुवि ||

- वालमीकि रामायण


ரகோ: து புத்ர: தேஜஸ்வீ

ப்ரவ்ருத்த: புருஷதக: |

கல்மாஷபாத: சௌதாஸ

இத்யேவம் ப்ரதிதோ புவி ||

 - வால்மீகி ராமாயணம்

ரகுவுக்கு ப்ரவ்ருத்தன் பிறந்தார்.

இவர் புருஷதக என்றும், கல்மாஷபாதர் என்றும், சௌதாஸர் என்றும் அழைக்கப்பட்டார்.

From Raghu was born a renowned son named Pravriddha, known in the world under the names Purushadaka, Kalmashapada and Soudasa.


कल्माषपाद पुत्रो अभूत्

शन्खणः तु इति विश्रुतः |

यः तु तद् वीर्यम् आसाद्य

सह सेनो व्यनीनशत् ||

- वालमीकि रामायण


கல்மாஷபாத புத்ரோ அபூத்

சங்கண: து இதி விஸ்ருத: |

ய: து தத் வீர்யம் ஆஸாத்ய

சஹ சேனோ வ்யநீனஸத் ||

 - வால்மீகி ராமாயணம்

கல்மாஷபாதனுக்கு சங்கணன் பிறந்தார். சங்கணன் போரில் வீர மரணம் எய்தார்.

Kalmashapada's son was renowned as Shankhana, who, even on attaining his father's valour, perished (in a battle) along with his army.


शन्खणस्य तु पुत्रो अभूत्

शूरः श्रीमान् सुदर्शनः |

सुदर्शनस्य अग्नि वर्ण

अग्नि वर्षस्य शीघ्रगः ||

- वालमीकि रामायण


சங்கநஸ்ய து புத்ரோ அபூத்

சூர: ஸ்ரீமான் சுதர்சன: |

சுதர்சனஸ்ய  அக்னிவர்ண

அக்னி வர்ஷஸ்ய சீக்ரக: ||

 - வால்மீகி ராமாயணம்

சங்கணனுக்கு சுதர்சனன் பிறந்தார்.

சுதர்சனனுக்கு அக்னிவர்ணன் பிறந்தார்.

அக்னிவர்ணனுக்கு சீக்ரகன் பிறந்தார்.

The fortunate Sudarshana was the son of Shankhana. Sudarshana's son was Agnivarna; and of Agnivarna was born Sheeghraga.


शीघ्रगस्य मरुः पुत्रो

मरोः पुत्रः प्रशुश्रुकः |

प्रशुश्रुकस्य पुत्रो अभूद्

अम्बरीषो महा द्युतिः ||

- वालमीकि रामायण


சீக்ரகஸ்ய மரு: புத்ரோ

மரோ: புத்ர: ப்ரசுஸ்ருக: |

ப்ரசுஸ்ருகஸ்ய புத்ரோ அபூத்

அம்பரீஷோ மகா த்யுதி: ||

 - வால்மீகி ராமாயணம்

சீக்ரகனுக்கு மரு மகனாக பிறந்தார். 

மருவுக்கு ப்ரசுஸ்ருகன் பிறந்தார்.

ப்ரசுஸ்ருகனுக்கு அம்பரீஷன் பிறந்தார்.

Shighraga son was Maru and Maru's son was Prashushruga from Prashushruga was born Ambarisha of that great radiance


अम्बरीषस्य पुत्रो अभून्

नहुषः सत्य विक्रमः |

नहुषस्य च नाभागः

पुत्रः परम धार्मिकः ||

* नहुषस्य ययातिस्तु नाभागस्तु ययातिजः |

- वालमीकि रामायण


அம்பரீஷஸ்ய புத்ரோ அபூன்

நஹுஷ: சத்ய விக்ரம: |

நஹுஷஸ்ய ச நாபாக:

புத்ர பரம தார்மிக: ||

* நஹுஷஸ்ய யயாதி: து 

  நாபாக: து யயாதிஜ: |

 - வால்மீகி ராமாயணம்

அம்பரீஷனுக்கு நஹுஷன் மகனாக பிறந்தார். 

நஹுஷனுக்கு நாபாகன் என்ற தர்மாத்மா பிறந்தார்.

* வசிஷ்டர் ஜனகரிடம் இக்ஷ்வாகு பரம்பரை சொல்லும் போது, கொஞ்சம் விரிவாக சொல்கிறார். 

நஹுஷனுக்கு யயாதி பிறந்தார். யயாதிக்கு நாபாகன் பிறந்தார்.

To Ambarisha was born a son named Nahusha who was full of valor. Nahusha's son was Naabhaga of outstanding virtue.

* At marriage vashishta narrates ikshvaku lineage. There he elaborates little more to janaka.

Nahusha's son was Yayati.Yayati's son was Naabhaga of outstanding virtue.


अजः च सुव्रतः चैव

नाभागस्य सुताउ उभौ |

अजस्य चैव धर्मात्मा

राजा दशरथः सुतः ||

- वालमीकि रामायण


அஜ: ச சுவ்ரத: சைவ

நாபாகஸ்ய சுதாஉ உபௌ |

அஜஸ்ய சைவ தர்மாத்மா

ராஜா தசரத: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

நாபாகனுக்கு, அஜன் சுவ்ரதன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அஜனுக்கு தசரத ராஜன் பிறந்தார்.

Aja and Suvrata were the two sons of Naabhaga and it was Aja who begot the virtuous King Dasartha.

तस्य ज्येष्ठो असि दायादो

राम इत्य् अभिविश्रुतः |

तद् गृहाण स्वकम् राज्यम्

अवेक्षस्व जगन् नृप ||

- वालमीकि रामायण


தஸ்ய ஜ்யேஷ்டோ அசி தாயாதோ

ராம இதி அபிவிஸ்ருத: |

தத் க்ருஹான ஸ்வகம் ராஜ்யம்

அவேக்ஷஸ்வ ஜகன் ந்ருப ||

 - வால்மீகி ராமாயணம்

ராமா! தசரதற்கு மூத்த பிள்ளையான நீ, வம்ச வழக்கப்படி ராஜ்யத்தை பெற்று கொள்ளலாம். ஆதலால், ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை வழி நடத்துவாயாக !"

You are the eldest son of that Dasaratha, very well-known as Rama, the heir who can claim over the inheritance. O, King! Hence, take over your kingdom and look after your people there.

इक्ष्वाकूणाम् हि सर्वेषाम्

राजा भवति पूर्वजः |

पूर्वजेन अवरः पुत्रो

ज्येष्ठो राज्ये अभिषिच्यते ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகூனாம் ஹி சர்வேஷாம்

ராஜா பவதி பூர்வஜ: |

பூர்வஜேன அவர: புத்ரோ

ஜ்யேஷ்டோ ராஜ்யே அபிஷிச்யதே ||

 - வால்மீகி ராமாயணம்

மூத்த பிள்ளையே அரசனாகும் வழக்கம் இக்ஷ்வாகு வம்சத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

மூத்த மகன் இருக்கும் போது, இளையவன் அரசனாக முடியாது. மூத்த பிள்ளையே முடி சூட்டிக்கொள்ள வேண்டியவன்.

The eldest son only becomes the king in the entire Ikshvaku race. When the eldest son exists, the younger son will not become a king. The eldest son only is anointed to the crown.





स राघवाणाम्

कुल धर्मम् आत्मनः |

सनातनम् न अद्य

विहातुम् अर्हसि ||

प्रभूत रत्नाम् अनुशाधि मेदिनीम् |

प्रभूत राष्ट्राम् पितृवन् महा यशाः ||

- वालमीकि रामायण


ச ராகவானாம்

குல தர்மம் ஆத்மன: |

சனாதனம் ந அத்ய

விஹாதும் அர்ஹசி ||

ப்ரபூத ரத்னாம்

அனுசாதி மேதிநீம் |

ப்ரபூத ராஷ்ட்ராம்

பித்ருவன் மஹா யஷா ||

- வால்மீகி ராமாயணம்

குல தர்மம் அறிந்தவனே! ரகு குலத்தில் உள்ள வழக்கம் இது. இந்த வழக்கம் உன்னால் மீறப்பட கூடாது. இந்த பூமியை, பெரிய ராஜ்யத்தை உன் தந்தை ஆண்டு காத்தது போல, நீயும் காக்க வேண்டும்." என்று வசிஷ்டர் ராமபிரானை பார்த்து சொல்லி, ராஜ்யத்தை ஏற்க வைக்க முயற்சித்தார். 

"O, the celebrated one! This is the eternal tradition of your race, those born in Raghu dynasty and ought not to be violated by you. Rule over the earth, this vast kingdom abudant with precious metals, as did your father."

Thus Vashishta also tried to convince Shri Rama to come back and take up Throne in his kingdom based on ikshvagu tradition.


ஜெய் ஸ்ரீராம்

Jai Shri Ram



Thursday 18 February 2021

வேதம் "இந்திரன், ருத்ரன், நாராயணன்" என்று பலரையும் தெய்வமாக துதிக்கிறது. அப்படி இருக்க, "வேதம் முழுவதுமே நாராயணனாகிய என்னை தான் துதி செய்கிறது.." என்று தெளிவாக, தீர்மானமாக கிருஷ்ண பரமாத்மா ஏன் சொன்னார்? தெரிந்து கொள்வோமே!

ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. 

"அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே

என்று அர்ஜுனனை பார்த்து  ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.

வேதை: ச ஸர்வை: 

அஹம் ஏவ வேத்ய: |

வேதாந்தக்ருத் 

வேத விதேவ சாஹம் ||

- பகவத்கீதை: 

அத்யாயம் 15: ஸ்லோகம் 15


வேதம், "நாராயணனை" பற்றி மட்டுமா சொல்கிறது?

வேதம், 'இந்திரனை' பற்றியும் சொல்கிறதே?! 

வேதம் 'ருத்ரனை' பற்றியும் சொல்கிறதே?!  

வேதம், 'சகல தேவதைகளை' பற்றியும் சொல்கிறதே?

இப்படி இருக்க, 

'வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது' என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?


வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம். 





"வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு

சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு

சொர்க்கலோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு, 

இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை

என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.


இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் 'கேட்கவே இல்லை' என்று நாம் பார்க்கிறோம்.


வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.


நாராயணனே 'பரமாத்மா' (பரம்பொருள்) 

என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது... 

பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, "புருஷன்" என்ற பெயரை கொண்டு " ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)" என்கிறது வேதம்.

வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், 'நாராயணனே அந்த புருஷன்' என்று விளக்கி, அந்த 'புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்' என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..


நாராயணனே 'பரமாத்மா' (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக "நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||

என்று பல முறை சொல்கிறது வேதம்.


இப்படி 'பர' என்ற சொல்லாலும், 'பரப்ரஹ்ம' என்ற சொல்லாலும், 'புருஷ' என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,

அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம். 


அதாவது, 'அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்' என்ற ரகசியத்தை சொல்கிறது.





ஒரு இடத்தில் வேதம், "பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!" (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..

இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, "பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்" என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.


"அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)

என்று வேதமே தெளிவாக சொல்கிறது.

மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது, 

கிருஷ்ண பரமாத்மா "அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே" என்று சொன்னதன் ரகசியம் புரியும்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

குருநாதர் துணை...

Friday 12 February 2021

"ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார், நினைக்கிறார்? தெரிந்து கொள்வோம். பகவத் கீதை

 "ஸ்ரீகிருஷ்ணர் எனக்கு போதும்" என்று சொல்பவனை, கிருஷ்ண பரமாத்மா எப்படி பார்க்கிறார்? என்ன நினைக்கிறார்? 

என்று தெரிந்து கொள்வோம்...  

பகவத் கீதை 11 அத்தியாயத்தில் இதற்கு பதில் சொல்கிறார்...


नाहं वेदै: न  तपसा न दानेन न चेज्यया |

शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ||

भक्त्या त्व अनन्यया शक्य अहम् एवं विधोऽर्जुन |


ந: அஹம் வேதை: ந தபஸா

ந தானேன ந ச இஜ்யயா |

சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும்

த்ருஷ்டவானசி மாம் யதா ||

பக்த்யா த்வ அனன்யயா

சக்ய அஹம் ஏவம் விதோர்ஜுன |

naaham vedair na tapasaa

na dhaanena na cha ijyayaa

sakya evam-vidho drashtum

Dhrushtavaanasi maam yathaa

bhaktyā tv ananyayaa śhakya 

aham evaṁ-vidho ’rjuna

- Bhagavad Gita (11:52)





Arjuna! Just by the study of the Vedas, or just by penance, or just by charity, or just by fire sacrifices, i can't be seen.

Arjuna! I am available, Only for unconditional love (devotion). 


அர்ஜுனா! என் மீது பக்தி இல்லாமல், வேதமே ஓதினாலும்,  தவமே (விரதம்) செய்தாலும், தானமே செய்தாலும், யாகமே செய்தாலும் நான் அவர்களுக்கு கிடைப்பதில்லை. 

அர்ஜுனா! என் மீது பக்தி மட்டும் ஒருவனுக்கு இருந்து விட்டால், நான் அவனை கண்டு, வெண்ணெய் உருகுவது போல உருகி அவன் கேட்டதையெல்லாம் செய்து கொடுப்பேன்...

இப்படி சொன்ன ஸ்ரீ கிருஷ்ணர், உண்மையில் அர்ஜுனனின் பக்தியை தான் குறிப்பிடுகிறார்..

"ஒரு பக்கம் துவாரகா சேனை, மறு பக்கம் போர் செய்யாத, ஆயுதம் கூட ஏந்தாத ஸ்ரீ கிருஷ்ணர்.. யார் வேண்டும்?" என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட போது, 

"ஸ்ரீ கிருஷ்ணர் தன் பக்கம் இருந்தால் போதும்

என்று அர்ஜுனன் கேட்டு கொண்டான்.


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று உருகி போன ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனன் காலில் இருந்து தெறிக்கும் மண் தன் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை என்று அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து இருக்க, அர்ஜுனனுக்கு கீழே அமர்ந்து கொண்டு, துவாரகைக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், குதிரையோட்டியாக கூட வர தயாராகி விட்டார்..





"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, ஞானத்தை (பகவத் கீதை) உபதேசம் செய்தார். 


"தான் ஒருவன் போதும் என்று சொல்லி விட்டானே!" 

என்று மேலும் உருகி, அதுவும் போதாதென்று தோன்ற, யாரும் பார்க்காத, பார்க்க முடியாத விஸ்வ ரூபத்தையும், அர்ஜுனன் கேட்டான் என்றதும் காட்டி விட்டார்.


"பக்திக்கு எதுவும் செய்வேன்" என்று அர்ஜுனன் சொல்படி எல்லாம் கேட்டு தேரோட்டினார்.


அர்ஜுனன் பக்தியை உயர்த்தி காட்டும் இடம் இது.


'கிருஷ்ண பக்தி செய்பவர்களை, பரமாத்மா எப்படி ஆசையோடு பார்க்கிறார்' 

என்று காட்டும் ஸ்லோகம் இது.

Thursday 11 February 2021

Who came as Rama, Sugriva, neela, nala etc?.. ராமபிரான் யார்? வாலி யார்? சுக்ரீவன் யார்? மைந்தன் யார்? ஹனுமான் யார்? த்விவிதன் யார்? நலன் யார்? நீலன் யார்? வால்மீகி ராமாயணம் .. தெரிந்து கொள்வோம்..

மஹாவிஷ்ணு "மனித ரூபத்தில் மனித குணங்களோடு அவதரிக்க வேண்டும்" என்று தேவர்கள் பிரார்த்தனை செய்த பொழுது...  

வால்மீகி ராமாயணம் சொல்வதை அறிந்து கொள்வோம்..


தா: சமேத்ய யதான்யாயம்

தஸ்மின் சதசி தேவதா: |

அப்ருவன் லோக கர்தாரம்

ப்ரஹ்மானம் வசனம் மஹத் ||

ता: समेत्य यथान्यायं तस्मिन् सदसि देवता:।

अब्रुवन् लोक कर्तारं ब्रह्माणं वचनं महत्।।

All devatas assembled there, addressed Lord Brahma the creator of the worlds

சத்ய லோகத்தில், அனைத்து தேவர்களும் கூடி, உலகை ஸ்ருஷ்டி செய்த ப்ரம்ம தேவனிடம் பேச ஆரம்பித்தார்கள்.





பகவன் த்வத் ப்ரஸாதேன

ராவணோ நாம ராக்ஷஸ: |

சர்வான்னோ பாததே வீரயாத்

ஸாசிதும் தம் ந சக்னும: ||

भगवन् त्वत्प्रसादेन रावणो नाम राक्षस:।

सर्वान्नो बाधते वीर्यात् शासितुम् तं न शक्नुम:।।

Bhagavan! A rakshasa named Ravana who had obtained valor through your grace is oppressing us. We are unable to punish him.

"ப்ரம்ம தேவா! ராவணன் என்ற ராக்ஷஸன் நீங்கள் கொடுத்த ஆசிர்வாதத்தால் எங்களை துன்புறுத்துகிறான். எங்களால் அவனை தண்டிக்கவே முடியவில்லை.

த்வயா தஸ்மை வரோ தத்த: 

ப்ரீதேன பகவன்புரா |

மானயந்தஸ் ச தம் நித்யம்

சர்வம் தஸ்ய க்ஷமாமஹே ||

त्वया तस्मै वरो दत्त: प्रीतेन भगवन्पुरा।

मानयन्तश्च तं नित्यं सर्वं तस्य क्षमामहे।।

Pleased with his penance, Bhagavan! you had granted him a boon. By honour that boon and daily we have to endure all his cruelty.

ராவணனின் தவத்தை கண்டு மகிழ்ந்த தாங்கள், அவனுக்கு வரங்களை அருளினீர்கள். அதன் பலத்தால், அவன் செய்யும் கொடூரங்களை நாங்கள் தினந்தோறும் தாங்க வேண்டி உள்ளது.

உத்வேஜயதி லோகான் த்ரீன்

உச்ச்ரித்தான் த்வேஷ்டி துர்மதி |

சக்ரம் த்ரி-தச ராஜானம்

ப்ரதர்ஷயிதும் இச்சதி ||

उद्वेजयति लोकान् त्रीन् उच्छ्रितान् द्वेष्टि दुर्मति:।

शक्रं त्रि-दश राजानं प्रधर्षयितुम् इच्छति।।

The evil minded Ravana is inflicting pains on the three worlds. He hates the guardians of the earth and intends to assault Indra, lord of the celestials.

க்ரூர புத்தியே கொண்ட ராவணன் மூன்று உலகத்தையும் பாதிக்கிறான். இந்த உலகை பாதுகாக்கும் எங்களை வெறுக்கிறான். மேலும் தேவேந்திரனின் அழிவை பெரிதும் விரும்புகிறான்.





ருஷீன் யக்ஷான் ச கந்தர்வான்

அசுரான் ப்ராஹ்மணம் ததா |

அதிக்ராமதி துர்தர்ஷோ

வரதாநேன மோஹித: ||

ऋषीन् यक्षान् स-गन्धर्वान् असुरान् ब्राह्मणान् तथा।

अतिक्रामति दुर्धर्षो वरदानेन मोहित:।।

Because of your boon, he has become unassailable by anyone like us, sages, yakshas, gandharvas, demons and brahman and filled with pride

உங்கள் வரத்தால், ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ப்ராம்மணர்கள் என்று யாராலும் அழிக்க முடியாதவனாகி விட்டான். 

நைனம் சூர்ய: ப்ரதபதி

பார்ஷ்வே வாதி ந மாருத: |

சலோ: மிமாலீ தம் த்ருஷ்ட்வா

சமுத்ரோபி ந கம்பதே ||

नैनं सूर्य: प्रतपति पार्श्वे वाति न मारुत:।

चलोर्मिमाली तं दृष्ट्वा समुद्रोऽपि न कम्पते।।

Sun does not scorch him and the wind does not blow by him. Even the ocean with its incessantly moving waves becomes still in his presence.

சூரிய தேவன் ராவணன் இருக்குமிடத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தை காட்டுவதில்லை. வாயு தேவன் இவன் இருக்குமிடத்தில் வேகமாக வீசுவதில்லை. அது மட்டுமல்ல, சமுத்திர தேவன் இவன் இருக்குமிடத்தில் அலைகள் கூட எழுப்பாமல் அமைதியாக இருக்கிறார். 


தன்மஹன்னோ பயம் தஸ்மாத்

ராக்ஷஸாத் கோர தர்சனம் |

வதார்தம் தஸ்ய பகவன்

உபாயம் கர்தும் அர்ஹசி ||

तन्महन्नो भयं तस्मात् राक्षसात् घोर दर्शनात्।

वधार्थं तस्य भगवन् उपायम् कर्तुम् अर्हसि।।

His dreamful appearance of that rakshasa strikes terror into us. Bhagavan! Do find some means to kill him.

அந்த ராக்ஷஸனின் கோரமான ரூபம் நினைவில் வந்தால் கூட, பயம் எங்களை தொற்றுகிறது. ப்ரம்ம தேவா! ராவணனை கொல்ல எங்களுக்கு ஒரு உபாயம் சொல்லுங்கள்."





ஏவமுக்த: சுரை: சர்வை:

சிந்தயித்வா தத: அப்ரவீத் |

ஹந்தாயம் விதித: தஸ்ய

வதோபாயோ துராத்மன: ||

एवमुक्त: सुरै: सर्वै: चिन्तयित्वा तत: अब्रवीत्।

हन्तायं विदित: तस्य वधोपायो दुरात्मन:।।

After listening to the words of the devatas and reflecting over the matter, Brahma said, "Oh, the means of destruction of that wicked (rakshasa) has struck my mind".

இப்படி தேவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பரிசீலனை செய்த ப்ரம்ம தேவன், அவர்களுக்கு பதில் சொல்ல தொடங்கினார்..."ஆம். எனக்கும் அந்த ராக்ஷஸனின் அழிவை பற்றிய நினைவு உண்டு"


தே ந கந்தர்வ யக்ஷானாம்

தேவ தானவ ரக்ஷஸாம் |

அவத்ய: அஸ்மி இதி வாக் உக்தா

ததா உக்தம் ச தன்மயா ||

तेन गन्धर्व यक्षाणां देव दानव रक्षसाम्।

अवध्य: अस्मि इति वाक् उक्ता तथा उक्तम् च तन्मया।।

When he asked gandharvas, yakshas, devas, demons or rakshasas should never be able to kill him, I said, "So be it".

"கடுமையான தவம் செய்த ராவணன், 'கந்தர்வர்களாலும், யக்ஷர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும், சக ராக்ஷஸர்களாலும் எனக்கு மரணம் கூடாது' என்று வரம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என்று அவன் தவத்துக்கான பலனை அளித்தேன்."

ந அகீர்தயத் அவஞாநாத்

தத் ரக்ஷ: மானுஷான் ப்ரதி |

தஸ்மாத்ஸ மானுஷாத் வத்யோ

ம்ருத்யு: ந அன்ய: அஸ்ய வித்யதே ||

न अकीर्तयत् अवज्ञानात् तत् रक्ष: मानुषान् प्रति।

तस्मात्स मानुषाद् वध्यो मृत्यु: न अन्य: अस्य विद्यते।।

That rakshasa, did not include man, monkey and bear because of his disrespect for human society. As such, he is fit to be destroyed by a man and not by any other means.

"ராவணனை பொருத்தியவரை மனிதர்கள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆதலால், என்னிடம் வரம் கேட்ட ராவணன், மனிதர்களையும், குரங்குகளையும், கரடியையும் சேர்த்து கொள்ளவில்லை.




இந்த சூழ்நிலையில், அவனை அழிக்க மனிதனால் முடியும். வேறு விதத்தில் அந்த ராக்ஷஸனை அழிக்க இயலாது.' என்றார் ப்ரம்ம தேவன்.


ஏதத் ஸ்ருத்வா ப்ரியம் வாக்யம்

ப்ரஹ்மணா சமுதாஹ்ருதம் |

சர்வே மஹர்ஷயோ தேவா:

ப்ரஹ்ருஷ்டா: தே அபவன் ததா ||

एतत् श्रुत्वा प्रियं वाक्यं ब्रह्मणा समुदाहृतम्।

सर्वे महर्षयो देवाः प्रहृष्टा: ते अभवन् तदा।।

Having heard these pleasing words uttered by Brahma, all the devatas and maharshis were overwhelmed with joy.

'ராவணனை அழிக்கவும் உபாயம் உண்டு' என்று ப்ரம்ம தேவன் சொன்னதும், அங்கு இருந்த தேவர்களும் மஹரிஷிகளும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.


ஏதஸ்மின் அந்தரே விஷ்ணு:

உபயாத் மஹாத்யுதி: |

சங்க சக்ர கதாபாணி:

பீதிவாச ஜகத்பதி: ||

एतस्मिन् अन्तरे विष्णु: उपयात महाद्युति:।

शङ्ख चक्र गदा-पाणि: पीतवासा जगत्पति:।।

At this juncture, Vishnu the supreme of the world, highly effulgent and bearing conch, discus and mace in his hands and in yellow apparel appeared.

அந்த சமயத்தில், ப்ரம்ம தேவன், தேவர்கள், மகரிஷிகள் மத்தியில் லோகத்திற்கே நாதனான மஹாவிஷ்ணு பீதாம்பரம் அணிந்து, கையில் சங்கம், சக்ரம், கதையுடன் திவ்ய ரூபத்துடன் ப்ரத்யக்ஷமானார்.





ப்ரஹ்மணா ச சமாகம்ய

தத்ர தஸ்தொள சமாஹித: |

தம் அப்ருவன் சுரா: சர்வே

சமபிஷ்டூய சந்நதா: ||

ब्रह्मणा च समागम्य तत्र तस्थौ समाहित:।

तम् अब्रुवन् सुरास्सर्वे समभिष्टूय सन्नता:।।

Vishnu stayed there with a composed mind after meeting Brahma. Then thus spoke the devatas prostrated before Vishnu and paying him homage with hymns.

ப்ரம்ம தேவன் மற்றும் பலர் கூடி இருக்கும் இடத்தில் ப்ரத்யக்ஷமான பகவானை கண்டு, வேத கோஷங்களால் மரியாதை செய்து, தேவர்கள் பேச தொடங்கினர்.


த்வாம் நியோக்ஷ்யாமஹே விஷ்ணோ

லோகானாம் ஹித காம்யயா |

ராஞோ தசரதஸ்ய த்வம்

அயோத்யாதிபதே: ப்ரபோ: ||

தர்மஞஸ்ய வதான்யஸ்ய

மஹர்ஷி சம தேஜஸ: |

தஸ்ய பார்யாசு திஸ்ருஷு

ஹ்ரீ ஸ்ரீ கீர்த்யுபமாசு ச ||

விஷ்ணோ புத்ரத்வம் ஆகச்ச

க்ருத்வா ஆத்மானம் சதுர்விதம் |

त्वाम् नियोक्ष्यामहे विष्णो लोकानां हितकाम्यया।

राज्ञो दशरथस्य त्वम् अयोध्याधिपते: प्रभो:।।

धर्मज्ञस्य वदान्यस्य महर्षि सम तेजस: ।

तस्य भार्यासु तिसृषु ह्री श्री कीर्त्युपमासु च।।

विष्णो पुत्रत्वम् आगच्छ कृत्वा आत्मानं चतुर्विधम्।

Bhagavan! we pray for the welfare of all the worlds. The sovereign of Ayodhya, king Dasaratha is a righteous, virtuous and generous king equal with rishis in lusture. We Pray form you, to incarnate as four sons of his three wives, resembling hri (modesty), shree (auspiciousness), kirti (fame).

ப்ரபோ! நாங்கள் உலக நன்மைக்காக உங்களை வேண்டுகிறோம். தர்மம் தெரிந்த, சத்தியம் மீறாத, தானத்தில் சிறந்த, மகரிஷிக்கு நிகரான தேஜஸை கொண்ட அயோத்தி மன்னர் தசரதர் இருக்கிறார். தாங்கள் அவருக்கு புத்திரனாக அவதரிக்க வேண்டும். நீங்கள் நான்கு அம்சத்துடன் தசரதரின் 3 மனைவிகளுக்கும் அவதரிக்க வேண்டும்.


தத்ர த்வம் மானுஷோ பூத்வா

ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் |

அவத்யம் தைவதை: விஷ்ணோ

சமரே ஜஹி ராவணம் ||

तत्र त्वं मानुषो भूत्वा प्रवृद्धं लोक कण्टकम्।

अवध्यं दैवतै: विष्णो समरे जहि रावणम्।।

Vishnu Bhagavan! By Assuring human form, please kill Ravana in the battle. He has become a source of torment to the worlds and is invincible by gods.

ப்ரபோ! நீங்கள் மனிதனை போல அவதரித்து, ராவணனை போரிட்டு வதம் செய்ய வேண்டும். உலகத்தில் ஏற்படும் பல துன்பங்களுக்கு காரணமாக, ராவணன் இருக்கிறான். அவனை எவராலும் எதிர்க்க முடியவில்லை. ஜெயிக்க முடியாதவனாக இருக்கிறான்.





ச ஹி தேவாம் ச கந்தர்வான்

சித்தாம் ச முனி சத்தமான் |

ராக்ஷஸோ ராவணோ மூர்கோ

வீர்யோத்ச ஏகேன பாததே ||

स हि देवांश्च गन्धर्वान् सिद्धांश्च मुनिसत्तमान्।

राक्षसो रावणो मूर्खो वीर्योत्सेकेन बाधते।।

That stupid rakshasa, Ravana, with his valor, is terrorising the devas, gandharvas, siddhas and great rishis.

அந்த மூர்க்க புத்தி கொண்ட ராவணன் தனக்கு கிடைத்த வரங்களை கொண்டு, தேவர்களையும், கந்தர்வர்களையும், சித்தர்களையும், ரிஷிகளையும் பயமுறுத்தி கொண்டு இருக்கிறான்.


ருஷய: ச ததஸ்தேன

கந்தர்வ: அப்சரஸ: ததா |

க்ரீடன்தோ நந்தன வனே

க்ரூரேன கில ஹிம்சிதா: ||

ऋषयश्च ततस्तेन गन्धर्वाप्सरस: तथा।

क्रीडन्तो नन्दन-वने क्रूरेण किल हिंसिता:।।

It is reported that a cruel rakshasa with his valor has tortured rishis, captured women of gandharvas and apsaras sporting in Nandana groves.

அது மட்டுமில்லாது, அந்த ராக்ஷஸன், தனக்கு உள்ள பலத்தால் ரிஷிகளை கொன்று, கந்தர்வ, அப்சர பெண்களையும் நந்தன வனத்திலிருந்து அபகரித்து தன் இஷ்டப்படி ஹிம்சித்து விட்டான். 


வதார்தம் வயம் ஆயாதா:

தஸ்ய வை முனிபி: சஹ |

சித்த கந்தர்வ யக்ஷா ச

தத: த்வாம் சரணம் கதா: ||

वधार्थं वयम् आयाता: तस्य वै मुनिभि: सह।

सिद्ध गन्धर्व यक्षाश्च ततस्त्वां शरणं गता:।।

We siddhas, gandharvas and yakshas along with ascetics, have hence come here to devise ways of his death. We take refuge in you.

நாங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ரிஷிகள் என்று அனைவரும், அவனுடைய அழிவுக்கு வழி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதற்காக நாங்கள் அனைவரும் உங்களை சரண் அடைகிறோம்.


த்வம் கதி: பரமா தேவ

சர்வேஷாம் ந: பரந்தப: |

வதாய தேவ சத்ரூணாம்

ந்ருனாம் லோகே மன: குரு ||

त्वं गति: परमा देव सर्वेषां न: परन्तप:।

वधाय देव शत्रूणां नृणां लोके मन: कुरु।।

Tormentor of enemies, O Vishnu ! you are the supreme, refuge for all of us. Resolve to be born in the world of men for the destruction of enemies of the gods (rakshasas)".

எதிரிகளை ஒழிப்பவரே! ப்ரபோ! நீங்களே பரமாத்மா! நாங்கள் உங்களை சரண் அடைகிறோம். தேவர்களுக்கு சத்ருவாக இருக்கும் இந்த ராக்ஷஸனை ஒழிக்க, நீங்கள் தயை கூர்ந்து மனிதனாக இந்த பூலோகத்தில் அவதரிக்க வேண்டும்." என்று பிரார்தித்தனர் 


ஏவமுக்தஸ்து தேவேசோ

விஷ்ணு: த்ரி-தச புங்கவ: |

பிதாமஹ புரோகான் தான்

சர்வலோக நமஸ்க்ருத: ||

அப்ரவீத் த்ரி-தசான் சர்வான்

சமேதான் தர்ம சம்ஹிதான் |

एवमुक्तस्तु देवेशो विष्णु: त्रिदशपुङ्गव:।

पितामह पुरोगान् तान् सर्वलोक नमस्कृत:।।

अब्रवीत् त्रिदशान् सर्वान् समेतान् धर्म संहितान् ।।

Vishnu, the lord of the celestials, foremost among the gods and bowed by all in the worlds, addressed the assembled devatas who were guided by the law of righteousness and were led by the grand sire, Brahma.

தேவர்களுக்கெல்லாம் தேவனான, தெய்வங்களுக்கெல்லாம் முதன்மையான, அனைத்து உலகமும் தலை வணங்கும், விஷ்ணு பகவான்,  அனைவருக்கும் பிதாமஹனான ப்ரம்ம தேவனை முன்னிட்டு அங்கு குழுமியிருந்த தேவர்களை பார்த்து பேசலானார்.

பயம் த்யஜத பத்ரம் வோ

ஹிதார்தம் யுதி ராவணம் |

சபுத்ர பௌத்ரம் சமாத்யம்

சமித்ரஞாதி பாந்தவம் ||

ஹத்வா க்ரூரம் துராத்மானம்

தேவர்ஷீனாம் பயாவஹம் |

தசவர்ஷ சஹஸ்ராணி

தசவர்ஷ சதானி ச |

வத்ஸ்யாமி மானுஷே லோகே

பாலயன் ப்ருத்வீம் இமாம் ||

भयं त्यजत भद्रं वो हितार्थम् युधि रावणम्।

सपुत्र-पौत्रं सामात्यं समित्रज्ञाति बान्धवम्।।

हत्वा क्रूरं दुरात्मानं देवर्षीणां भयावहम्।

दशवर्ष-सहस्राणि दशवर्ष-शतानि च।

वत्स्यामि मानुषे लोके पालयन् पृथिवीमिमाम्।।

"பயத்தை விடுங்கள். உங்களுடைய நலனுக்காக ராவணனை நானே போரில் சந்திக்க போகிறேன். தேவர்களையும், ரிஷிகளையும்  அச்சுறுத்தும் கொடியவனான ராவணனையும், அவனுக்கு துணை நிற்கும் அவன் பிள்ளைகள், பேரன்கள், மந்திரிகள், நண்பர்கள், உறவுகள் என்று அனைவரும் ஒரு சேர அழிக்கப்படுவார்கள். இந்த உலகத்தில் நானே மனித குலத்தில், மனிதனை போன்று அவதரிப்பேன். 11,100 வருடங்கள் (த்ரேதா யுகம்) இந்த பூலோகத்தில் நீண்ட காலம் மனிதனாக அவதரித்து வாழ்ந்து காட்ட போகிறேன்." என்று பகவான் அணுகிரஹம் செய்தார்.





ஏவம் தத்வா வரம் தேவோ

தேவானாம் விஷ்ணு: ஆத்மவான் |

மானுஷே சிந்தயாமாச

ஜன்ம பூமிம் அத ஆத்மன: ||

एवं दत्वा वरं देवो देवानां विष्णु: आत्मवान्।

मानुषे चिन्तयामास जन्मभूमिम् अथ आत्मन:।।

Vishnu, the supreme soul having given boon to devatas in this manner, reflected as to the place where he should take birth as a man in this world of men.

இப்படி பெரும் வரத்தை தேவர்களுக்கு அருளி விட்டு, பரமாத்மாவான விஷ்ணு பகவான், தேவர்கள் தான் மனிதனாக அவதரிக்க சொன்ன,  அயோத்தி நகரத்தை கடாக்ஷம் செய்தார்.


தத: பத்ம-பலாசாக்ஷ: க்ருத்வா

ஆத்மானம் சதுர்விதம் |

பிதரம் ரோசயாமாச

ததா தசரதம் ந்ருபம் ||

तत: पद्म-पलाशाक्ष: कृत्वा आत्मानं चतुर्विधम्।

पितरं रोचयामास तथा दशरथम् नृपम्।।

Thereafter, the Lord with eyes like the lotus petal was pleased to transform himself into four forms and to choose king Dasaratha as his father.

அயோத்தி நகரை கண்ட அந்த தாமரை கண்ணன், சத்தியத்தை தன் உயிராக கொண்ட தசரத மஹாராஜனுக்கு 4 மகன்களாக தானே அவதாரம் செய்ய பெரு மகிழ்ச்சியுடன் சங்கல்பித்தார்.


ததா தேவர்ஷி கந்தர்வா:

ச-ருத்ரா ச: அப்சரோ கனா: |

ஸ்துதிபி: திவ்ய ரூபாபி:

துஷ்டுவு: மது சூதனம் ||

तदा देवर्षि गन्धर्वा: स-रुद्रा: स: अप्सरो गणा:।

स्तुतिभि: दिव्य रूपाभि: तुष्टुवु: मधुसूदनम्।।

Then along with gandharvas, groups of apsaras, rishis, rudras and devatas sang in praise of the 'Lord Slayer of Madhu', with hymns of celestial beauty.

இப்படி பகவான் பேசிய பின், வேத மந்திரங்களால் அங்கு கூடி இருந்த கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ரிஷிகள், ருத்ரர்கள், மற்றும் அனைத்து தேவர்கள் ஸ்துதி செய்தனர்.


தம் உத்ததம் ராவணம்

உக்ர தேஜஸம்

ப்ரவ்ருத்த தர்பம்

த்ரி தசேஸ் வரத விஷம் |

வி-ராவணம் சாது

தபஸ்வி கண்டகம்

தபஸ்வினாம் உத்தர 

தம் பயாவஹம் ||

तम् उद्धतम् रावणम् उग्र-तेजसं

प्रवृद्ध दर्पं त्रि-दशेश्वरद् विषम्।

विरावणं साधु तपस्वि कण्टकं

तपस्विनाम् उद्धर तं भयावहम्।।

"Therefore, uproot that mighty Ravana possessing frightful prowess, inflamed pride, limitless insolence causing agony to the three worlds, a source of vexation to ascetics and a dreadful enemy of Indra.

மேலும் பகவானை பார்த்து, 'ப்ரபோ! வலிமைமிக்க இராவணன் பயமுறுத்தும் வலிமையுடன், திமிர் கொண்ட கர்வத்துடன், மூன்று உலகங்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் அவனுடைய வரம்பற்ற கொடுமையையும், சாதுக்களுக்கு தரும் வேதனையையும், இந்திரனின் எதிரியுமான வலிமைமிக்க ராவணனை நீங்கள் வேரறுக்க வேண்டும்."





தமேவ ஹத்வா சபலம் சபாந்தவம்

வி-ராவணம் வி-ராவணம் அஃர பௌருஷம் |

ஸ்வர் லோகம் ஆகச்ச கதஜ்வர: சிரம்

சுரேந்த்ர குப்தம் கததோஷ கல்மஷம் ||

तमेव हत्वा सबलं सबान्धवं

विरावणं विरावणम् अग्य्रपौरुषम्।

स्वर्लोकम् आगच्छ गतज्वर: चिरं

सुरेन्द्र गुप्तं गतदोष कल्मषम्।।

Kill Ravana, the cause of distress in the worlds. Kill his forces and relatives. Then return to heaven protected by Indra after freeing us from distress, faults and sins".

"உலகில் துயரத்திற்கு காரணமான ராவணனைக் கொன்று, அவனது படைகளையும் உறவினர்களையும் வதம் செய்யுங்கள். துன்பம், தவறுகள் மற்றும் பாவங்களிலிருந்து விடுபட்டு தேவர்கள் அனைவரும் இந்திரனால் பாதுகாக்கப்பட்ட சொர்க்கத்திற்கு திரும்பி வர அணுகிரஹம் செய்யுங்கள்"


ததோ நாராயணோ தேவோ

நியுக்த: சுர சத்தமை: |

ஜானன் அபி சுரான் ஏவம்

ஸ்லக்ஷ்ணம் வசனம் அப்ரவீத் ||

ततो नारायणो देवो नियुक्त: सुरसत्तमै:।

जानन्नपि सुरान् एवं श्लक्ष्णं वचनम् अब्रवीत्।|

Although Omniscient lord Narayana knew the means to be employed, when he was requested by the best of devatas he spoke to them softly:

அனைத்தும் தெரிந்தவராக இருந்தும், பகவான் நாராயணன், தேவர்களின் கருத்தை அறிவதற்காக மிருதுவாக பேச தொடங்கினார்...


உபாய: கோ வதே தஸ்ய

ராவணஸ்ய துராத்மன: |

யம் அஹம் தம் சம ஆஸ்தாய

நிஹன்யாம் ரிஷி கண்டகம் ||

उपाय: को वधे तस्य रावणस्य दुरात्मन:।

यम् अहं तं सम आस्थाय निहन्याम् ऋषिकण्टकम्।।

What strategies should be adopted in the matter of destruction of that evil minded Ravana who is a thorn to the sages?".

"சாதுக்களை ஹிம்சை செய்யும் அந்த ராவணனை ஒழிக்க எந்த வழியை பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

என்று ஸ்ரீமந் நாராயணன் கேட்டார்..


ஏவமுக்தா: சுரா: சர்வே

ப்ரத்யூசு: விஷ்ணும் அவ்யயம் |

மானுஷீம் தனும் ஆஸ்தாய

ராவணம் ஜஹி சம்யுகே ||

एवमुक्ता: सुरा: सर्वे प्रत्यूचु: विष्णुमव्ययम्।

मानुषीं तनुम् आस्थाय रावणं जहि संयुगे।।

When the devatas were thus addressed by the imperishable Vishnu, they replied him saying, "You may assume the form of a human being and slay Ravana in the battle".

இப்படி தங்களிடம் உபாயம் என்ன? என்று அழிக்க முடியாத விஷ்ணு பகவானே கேட்க, உடனே பதில் சொல்ல தொடங்கினார்கள்...




'ப்ரபோ! நீங்கள் மனித அவதாரம் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, போர் களத்தில் ராவணனை சந்தித்து, அவனை ஒழித்து கட்டுங்கள்"


ச ஹி தேபே தப: தீவ்ரம்

தீர்க காலம் அரிந்தம் |

ஏனே துஷ்ட: அபவத்

ப்ரஹ்ம லோகக்ருத் லோக பூர்வஜ: ||

स हि तेपे तप: तीव्रम् दीर्घकालम् अरिन्दम ।

येन तुष्ट:अभवत् ब्रह्मा लोककृत् लोकपूर्वज:।।

Lord Brahma was very pleased with Ravana's intense penance over a long time

ராவணன் பல காலம் செய்த கடும் தவத்தை கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தார் ப்ரம்ம தேவன்.  


சந்துஷ்ட: ப்ரததோ தஸ்மை

ராக்ஷஸாய வரம் ப்ரபு: |

நாநா விதேப்யோ பூதேப்யோ

பயம் நான்யத்ர மானுஷாத் ||

அவஞாதா: புரா தேன

வரதானே ஹி மானவா: |

सन्तुष्ट: प्रददौ तस्मै राक्षसाय वरं प्रभु:।

नानाविधेभ्यो भूतेभ्यो भयं नान्यत्र मानुषात्।।

अवज्ञाता: पुरा तेन वरदाने हि मानवा:।

Pleased, with the rakshasa, Brahma granted a boon to the effect that except from men, there was, for him, no fear of death from any other living beings. Ravana ignored men while seeking the boon.

தவத்தை கண்டு பெரிதும் மகிழ்ந்த ப்ரம்ம தேவன், 'மனிதர்களை தவிர எவராலும் ராவணனை அழிக்க முடியாது' என்ற வரத்தை கொடுத்து விட்டார்.


ஏவம் பிதாமஹாத் தஸ்மாத்

வரம் ப்ராப்ய ச தர்பித: |

உத்ஸாதயதி லோகான்

த்ரீன் ஸ்திரிய: ச அபகர்சதி: |

தஸ்மாத் தஸ்ய வதோ த்ருஷ்டோ

மானுஷேப்ய: பரந்தப ||

एवं पितामहात् तस्माद् वरं प्राप्य स दर्पित:।

उत्सादयति लोकान् त्रीन् स्त्रिय: च अपि अपकर्षति ।

तस्मात् तस्य वधो दृष्टो मानुषेभ्य: परन्तप।।

Having obtained the boon from Brahma, ravana's greed and arrogant went on and on, and  brought destruction to the three worlds. He carried away women by violence. O destroyer of foes! his death is possible by men only."

ப்ரம்ம தேவனிடம் வரம் வாங்கிய பின், ராவணனின் பேராசையும், கர்வமும் தலை தூக்கியது. அதன் விளைவாக மூன்று உலகங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பலாத்காரம் செய்து பெண்களை தூக்கி சென்று விட்டான். அவன் மரணத்தை மனிதனே நிச்சயிக்க முடியும்" என்றனர் தேவர்கள்.


இதி ஏதத் வசனம் ஸ்ருத்வா

சுரானாம் விஷ்ணு: ஆத்மவான் |

பிதரம் ரோசயாமாச

ததா தசரதம் ந்ருபம் ||

इति एतत् वचनं श्रुत्वा सुराणां विष्णु: आत्मवान्।

पितरं रोचयामास तदा दशरथं नृपम्।।

Having heard the words of devatas, self possessed Vishnu, chose king Dasaratha as his father.

இப்படி தேவர்கள் பெருமாளிடம் பிரார்த்தனை செய்ததும், தனக்கு ஏற்ற தந்தையாக தசரத மஹாராஜனை தேர்ந்தெடுத்தார் மஹாவிஷ்ணு.


ச சாப்யபுத்ரோ ந்ருபதி:

தஸ்மின் காலே மஹாத்யுதி: |

அஜயத் புத்ரியாம் இஷ்டம்

புத்ரேப்சு அரிசூதன: ||

स चाप्यपुत्रो नृपति: तस्मिन् काले महाद्युति:।

अयजत् पुत्रियाम् इष्टिम् पुत्रेप्सु अरिसूदन:।।

At that time, the brilliant king (Dasaratha), destroyer of enemies, who had no sons was performing a sacrifice for sons.

அந்த சமயத்தில், பிள்ளை இல்லாத சத்யசந்தனான தசரதர் "தனக்கு மகன் வேண்டும்" என்று புத்ர காமேஷ்டி யாகம் செய்து கொண்டிருந்தார்...


ச க்ருத்வா நிஸ்சயம் விஷ்ணு:

ஆமன்த்ர்ய ச பிதாமஹம் |

அந்தர்தானம் கதோ தேவை:

பூஜ்யமானோ மஹர்ஷிபி: ||

स कृत्वा निश्चयं विष्णु: आमन्त्र्य च पितामहम्।

अन्तर्धानं गतो देवै: पूज्यमानो महर्षिभि:।।

After Vishnu had decided (to incarnate) and he was worshipped by devatas and maharshis. Finally he disappeared bidding farewell to Brahma.

இப்படி விஷ்ணு அவதரிக்க சங்கல்பம் செய்த பிறகு, தேவர்களும், மஹரிஷிகளும் பெருமாளை மங்களாசாசனம் செய்து நமஸ்கரித்தனர். பிறகு, மஹாவிஷ்ணு ப்ரம்ம தேவனிடம் விடைபெற்று மறைந்தார்.


புத்ரம் து கதே விஷ்ணோ

ராஞ: தஸ்ய சு-மஹாத்மன: |

உவாச தேவதா: சர்வா:

ஸ்வயம்பு பகவான் இதம் ||

पुत्रत्वं तु गते विष्णौ राज्ञस्तस्य सुमहात्मन:।

उवाच देवता: सर्वा: स्वयम्भू भगवान् इदम् ।।

When Vishnu had decided to be born as the son of that great king (Dasaratha), the selfborn Lord (Brahma), addressed all devatas.

மஹாவிஷ்ணு தசரத மஹாராஜனுக்கு மகனாக பிறக்க போகிறார் என்றதும், ப்ரம்ம தேவன், 33 கோடி தேவர்களையும் பார்த்து பேசலானார்.. 

சத்ய சந்தஸ்ய வீரஸ்ய

சர்வேஷாம் ந: ஹிதைஷிந: |

விஷ்ணோ: சஹாயான் பலின:

ஸ்ருத்வம் காம ரூபிண: ||

सत्य-सन्धस्य वीरस्य सर्वेषाम् नः हितैषिण:।

विष्णो: सहायान् बलिन: सृजध्वं कामरूपिण:।।

Create strong and powerful beings, capable of assuming forms at free will, to extend support to vishnu, who is true to his word, heroic and benevolent. 

"இந்திராதி தேவர்களே! கொடுத்த வாக்கை மீறாத கதாநாயகன், அணுகிரஹம் செய்யும்  மஹாவிஷ்ணுவுக்கு, சேவை செய்யும் பாக்கியம் உங்களுக்கு வந்து இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் அபரிமிதமான சக்திகளுடனேயே மஹாபலத்துடன், எந்த ரூபமும் ஏற்று கொள்ளும் சக்தியுடனும் பூலோகத்தில் அவதரியுங்கள்."


மாயாவித: ச சுராம் ச

வாயு வேக சமான் ஜவே |

நயஞான் புத்தி சம்பண்ணான்

விஷ்ணு துல்ய பராக்ரமான் ||

அசம்ஹார்யான் உபாயஞான்

திவ்ய சம்ஹன நான்விதான் |

சர்வாஸ்த்ர குண சம்பண்ணான்

அம்ருத ப்ராஸனான் இவ ||

அப்சரஸ்சு ச முக்யாசு

கந்தர்வானாம் தனூஷு ச |

ஸ்ருஜத்வம் ஹரி ரூபேன

புத்ராம் துல்ய பராக்ரமான் ||

मायाविदश्च शूरांश्च वायुवेगसमान् जवे।

नयज्ञान् बुद्धि सम्पन्नान् विष्णु-तुल्य पराक्रमान्।।

असंहार्यान् उपायज्ञान् दिव्य संहन नान्वितान्।

सर्वास्त्र गुणसम्पन्नान् अमृतप्राशनानिव।।

अप्सरस्सु च मुख्यासु गन्धर्वाणां तनूषु च ।

सृजध्वं हरिरूपेण पुत्रांस्तुल्य पराक्रमान्।।

Incarnate as monkeys in the womb of chiefs of apsarasas and gandharvas. Create sons who have the knowledge of deceitful tricks, who are brave, who match wind in speed, who are endowed with intellect and statecraft, who are determined, who are knowledgeable in various means of achieving victory, who are supernatural bodies, who possess capability of employing and resisting weapons, who resemble those who subsist on amrita (immortals) and are equal (to Visnu) in prowess.

அப்சரஸ், கந்தர்வ ஸ்த்ரீகளின் கர்ப்பத்தில் வானரர்களாக அவதரியுங்கள். உங்கள் அம்சமாகவே வானரர்களை மகா புத்திசாலிதனத்துடன், மஹா பலத்துடன், காற்றை போன்ற வேகத்தில் செல்பவர்களாகவும், தந்திரம் அறிந்தவர்களாகவும், செய்யும் காரியத்தில் உறுதி உள்ளவர்களாகவும், வெற்றியை அடைய பல யுக்திகளை அறிந்தவர்களாகவும், வைரம் போன்ற உறுதியான தேகம் உள்ளவர்களாகவும், பல வித ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்தவர்களாகவும், அதை எதிரிகள் பயன்படுத்தினால் தடுக்கும் வல்லமை உள்ளவர்களாகவும், பார்ப்பதற்கு அழிக்க முடியாதவர்கள் போலவும், விஷ்ணுவுக்கு சமமான பலம் கொண்டவர்கள் போலவும் வானரர்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்.


பூர்வமேவ மயா ஸ்ருஷ்டோ

ஜாம்பவான் ருக்ஷ புங்கவ: |

ஜ்ரும்ப மானஸ்ய சஹஸா

மம வக்த்ராத் அஜாயத ||

पूर्वमेव मया सृष्टो जाम्बवान् ऋक्षपुङ्गव:।

जृम्भमाणस्य सहसा मम वक्त्रात् अजायत।।

Earlier Jambavan, the foremost among bears suddenly emerged out of my face while I was yawning. Let him also participate.

ஒரு சமயம், சத்ய லோகத்தில் நான் வாயை திறந்த போது, ஸ்வயம்புவாக கரடி ரூபத்தில் ஜாம்பவான் வெளிப்பட்டார். அனைவரும் இந்த கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள்." என்று ப்ரம்ம தேவன் உற்சாகப்படுத்தினார்.


தே ததா உக்தா பகவதா

தத் ப்ரதிஸ்ருத்ய சாஸனம் |

ஜனயாமாசு: ஏவம் தே

புத்ரான் வானர ரூபிண: ||

ते तदा उक्ता भगवता तत् प्रतिश्रुत्य शासनम्।

जनयामासु: एवं ते पुत्रान् वानर रूपिण:।।

Instructed by Brahma in that manner, all of them gave birth to sons in the form of monkeys.

ப்ரம்ம தேவன் இப்படி சொன்ன அறிவுரையை கேட்டு, அனைவரும் வானரர்களாக அவதரித்து விட்டனர்.


ருஷய: ச மஹாத்மான:

சித்த வித்யாதர உரகா: |

சாரனா: ச சுதான் வீரான்

சஸ்ருஜு: வனசாரிந: ||

ऋषयश्च महात्मान: सिद्ध विद्या धरोरगा:।

चारणाश्च सुतान् वीरान् ससृजु: वनचारिण:।।

Distinguished rishis, siddhaas, vidhyadharaas, uragaas, charanaas procreated (in the form of monkeys) heroic sons who became forest dwellers.

ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள், சாரனர்கள் என்று அனைவருமே கைங்கர்யம் செய்யும் உற்சாகத்தில் வனத்தில் சஞ்சரிக்கும் வணரர்களாக அவதரித்து விட்டனர்.


வானரேந்த்ரம் மஹேந்த்ராபம்

இந்த்ரோ வாலினம் ஊர்ஜிதம் |

சுக்ரீவம் ஜனயாமாச

தபன: தபதாம் வர: ||

वानरेन्द्रं महेन्द्राभम् इन्द्रो वालिनम् ऊर्जितम्।

सुग्रीवं जनयामास तपन: तपतां वर:।।

Indra gave birth to Vali, chief of monkeys resembling Mahendra mountain and having a mighty body. Sun, great among those producing heat, begot Sugriva.

மஹேந்திர மலை போன்ற ரூபத்துடன் வாலி என்ற பெயரில், வானர தலைவனாக சாக்ஷாத் இந்திர தேவனே அவதரித்தார். சுட்டெரிக்கும் சூரிய தேவனே சுக்ரீவனாக அவதரித்து விட்டார்.


ப்ருஹஸ்பதி: ச அஜனயத்

தாரம் நாம மஹாஹரிம் |

சர்வ வானர முக்யானம்

புத்திமந்தம் அனுத்தமம் ||

बृहस्पतिस्तु अजनयत् तारं नाम महाहरिम्।

सर्व वानर मुख्यानां बुद्धिमन्तम् अनुत्तमम्।।

Brihaspati begot the intelligent monkey Tara who had none to surpass him among the monkey chiefs.

தேவர்களின் குரு ப்ருஹஸ்பதி, மஹா புத்திசாலியான தாரனாக, வானர்களில் முக்கிய மந்திரியாக அவதரித்து விட்டார்.


தனதஸ்ய சுத: ஸ்ரீமான்

வானரோ கந்தமாதன: |

விஸ்வ கர்மா அஜனயத்

நலம் நாம மஹாஹரிம் ||

धनदस्य सुत: श्रीमान् वानरो गन्धमादन:।

विश्वकर्मा अजनयत् नलं नाम महाहरिम्।।

Kubera begot glorious Gandhamadana and Viswakarma begot a great monkey Nala.

யக்ஷர்களின் தலைவன் குபேரனே கந்தமாதனாக அவதரித்தார்.

தேவ தச்சன் விஸ்வகர்மாவே நலனாக அவதரித்தார்.


பாவகஸ்ய சுத: ஸ்ரீமான

நீல: அக்னி சத்ருஸ ப்ரப: |

தேஜஸா யக்ஷஸா வீரயாத்

அத்ய: இச்யத வானரான் ||

पावकस्य सुत: श्रीमान् नील: अग्नि सदृशप्रभ:।

तेजसा यशसा वीर्यात् अत्यरिच्यत वानरान्।।

Neela, the prosperous son of Agni the firegod who equalled him in glow surpassed other monkeys in energy, renown and prowess.

அக்னி தேவனே நீலனாக மஹா ஒளியுடன் அவதரித்து விட்டார். மற்ற வானரர்களை காட்டிலும் பொலிவும், புகழும், வீரமும் மிக்க காணப்பட்டார்.


ரூப த்ரவின சம்பண்ணௌ

அஸ்வினி ரூப சம்பண்ணௌ |

மைந்தம் ச த்விவிதம் சைவ

ஜனயாமாச து: ஸ்வயம் ||

रूप द्रविण सम्पन्नौ अश्विनौ रूपसम्मतौ।

मैन्दं च द्विविदं चैव जनयामासतु: स्वयम्।।

Aswini devatas, endowed with wealth and beauty, procreated Mainda and Dwivida who were highly esteemed for their beauty.

தேவ மருத்துவர்களான அஸ்வினி  தேவர்களே மைந்தன், த்விவிதன் என்ற பேரழகு கொண்ட வானரர்களாக அவதரித்தனர். 


வருணோ ஜனயாமாச

சுஷேனாம் வானரர்ஷபம் |

சரபம் ஜனயாமாச

பர்ஜன்ய: து மஹாபலம் ||

वरुणो जनयामास सुषेणं वानरर्षभम्।

शरभं जनयामास पर्जन्यस्तु महाबलम्।।

Varuna begot the monkey warrior Sushena and Parjanya, Sarabha of great strength.

சுஷேனன் என்ற பலம் பொருந்திய போர் வீரனாக, வானர ரூபத்துடன் வருண தேவனே அவதரித்தார். மஹா சக்தியுடன் கூடிய பர்ஜன்யன் என்ற வானரானாக சரப தேவனே அவதரித்தார்.


மாருதஸ்ய ஆத்மஜ: ஸ்ரீமான்

ஹனுமான் நாம வீர்யாவான் |

வ்ரஜ சம்ஹன னோபேதோ

வைநதேய சமோ ஜவே ||

मारुतस्य आत्मज: श्रीमान् हनुमान् नाम वीर्यवान् ।

वज्रसंहननोपेतो वैनतेय समो जवे।।

Vayu, the windgod, begot a son named Hanuman, mighty and graceful, having a body as hard as a diamond and speed equal to Garuda's.

வாயு தேவனே பலத்திலும், வைரம் போன்ற உறுதியான உடலுடன், கருடனின் வேகத்தில் பறக்கும் திறனுடன் ஹனுமானாக அவதரித்தார்.

தே ஸ்ருஷ்டா பஹு சாஹசா

தசக்ரீவ வதே ரதா: |

அப்ரமேய பலா வீரா

விக்ராந்தா: காம ரூபிண: ||

ते सृष्टा बहुसाहस्रा दशग्रीववधे रता:।

अप्रमेय बला वीरा विक्रान्ता: कामरूपिण:।।

Thousands of warriors possessing immeasurable strength and courage and capable of assuming any form at will were created to kill Ravana.

இப்படி ஆயிரக்கணக்கான போர் குணம் கொண்ட, எல்லையில்லா பலம் கொண்ட, எல்லையில்லா தைரியம் கொண்ட, எந்த ரூபத்திலும் வருவதற்கு சக்தி படைத்த வானரர்களாக, ராவணனை கொல்லும் நோக்கத்துடன் பூலோகத்தில் அவதரித்து விட்டனர்.


மேரு மந்தர சங்காசா

வபு: மந்தோ மஹாபலா: |

ருக்ஷ வானர கோபுச்சா:

க்ஷிப்ரமேவ அபிஜஞிரே ||

मेरु मन्दर सङ्काशा वपुष्मन्तो महाबला:।

ऋक्ष वानर गोपुच्छा: क्षिप्रमेव अभिजज्ञिरे।।

Endowed with bodies similar to the Meru and Mandara mountains and having great strength, bears, monkeys, monkeys with cowtails quickly came into being.

இப்படி மேரு மலை போலவும், மந்தர மலை போலவும் உருவத்தை எடுத்து கொண்டு, மஹா பலத்துடன், வானரர்களாகவும், கரடிகளாகவும், வானர ரூபத்தில் பசுவின் வால் உள்ள வானரர்களாகவும் வேகவேகமாக பூலோகத்தில் அவதரித்து விட்டனர்.


யஸ்ய தேவஸ்ய யத் ரூபம்

விஷோ ய: ச பராக்ரம: |

அஜாயத சம: தேன

தஸ்ய தஸ்ய சுத: ப்ருதக் ||

यस्य देवस्य यद् रूपं वेषो यश्च पराक्रम:।

अजायत समस्तेन तस्य तस्य सुत: पृथक्।।

The sons of devatas retained characteristics like beauty, form and prowess of their procreator (gods).

இப்படி வானரர்களாக அவதரித்தாலும், அந்தந்த தேவதையின் அழகும், புகழ், பராக்ரமத்துடனேயே பூலோகத்தில் அவதரித்தனர்.


கோலாங்க கூலேஷு உத்பண்ணா:

கேசித் சம்மத விக்ரமா: |

ருக்ஷீஷு ச ததா ஜாதா

வானரா: கிண்ணரீஷு ச ||

गोलाङ् गूलीषु च उत्पन्ना: केचित् सम्मत विक्रमा:।

ऋक्षीषु च तथा जाता वानरा: किन्नरीषु च।।

Some monkeys with acknowledged, valour were born to female monkeys with tails Similarly some other monkeys were born to female bears and female kinnaras.

ஒவ்வொருவர் சம்மதத்துடன், சிலர் வானரர்களாக அவதரித்து இருக்கும் பெண் வானரர்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.

சிலர் கரடிகளாக அவதரித்து இருக்கும் பெண்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.

சிலர் கிண்ணரர்களாக அவதரித்து இருக்கும் பெண் கிண்ணரர்களுக்கு பிள்ளையாக அவதரித்தனர்.


தேவா மஹர்ஷி கந்தர்வா:

தார்க்ஷ்யா யக்ஷா யக்ஷஸ்வின: |

நாகா: கிம்புருஷா: ச ஏவ

சித்த வித்யாதர: உரகா: ||

பஹவோ ஜனயாமாசு

ஹ்ருஷ்டா த்தர சஹஸ்ரச: |

வானரான் சுமஹா காயான்

சர்வான்வை வன சாரின: |

அப்சரஸ்சு ச முக்யாசு

ததா வித்யாதரீஷு ச |

நாக கன்யாசு ச ததா

கந்தர்வீனாம் தனூஷு ச ||

देवा महर्षि गन्धर्वा: तार्क्ष्या यक्षा यशस्विन:।

नागा: किम्-पुरुषाश्चैव सिद्ध विद्याधर: उरगा:।।

बहवो जनयामासु हृष्टा तत्र सहस्रश:।

वानरान् सुमहाकायान् सर्वान्वै वनचारिण:।।

अप्सरस्सु च मुख्यासु तथा विद्याधरीषु च।

नागकन्यासु च तथा गन्धर्वीणां तनूषु च ||

The devatas, rishis, gandharvas, garudas, yakshas, kimpurushas, siddhas, vidyadharas, uragas and many others were immensely pleased. Thousands of gigantic monkeys wandering in forests were procreated from principal apsarasas vidhyadaris, nagas, and gandharvas.

தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், கருடர்கள், யக்ஷர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள் மேலும் பலர் பெரும் உற்சாகத்துடன் சேவை செய்ய தயாராக இருந்தனர். அப்சர, வித்யாதர, நாக, கந்தர்வ பெண்களின் வயிற்றில் அவதரித்த இவர்கள் பூலோகத்தில் உள்ள வனம் முழுவதும் வானரர்களாக அவதரித்து அலைந்து கொண்டு இருந்தனர்.


காம ரூப பலோபேதா

யதா காமம் விசாரிண: |

சிம்ஹ சார்தூல சத்ருஷா

தர்பேந ச பலேன ச ||

कामरूप बलोपेता यथाकामं विचारिण:।

सिंह शार्दूल सदृशा दर्पेण च बलेन च।।

They were endowed with the powers to assume any form at will. They possessed enormous strength and power to freely wander in forests. They were like lions and tigers in pride and prowess.

இப்படி வானர ரூபத்துடன் அலைந்து கொண்டிருந்த இவர்கள் தங்கள் சக்தியால் எந்த ரூபத்திலும் வர கூடியவர்களாக இருந்தனர். மஹாபலத்துடன் இருக்கும் இவர்கள் சுதந்திரமாக வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தனர். வனத்தில் சிங்கத்தை போன்றும், புலியை போன்றும் பலத்திலும், சாமர்த்தியத்திலும் இருந்தனர் இவர்கள்.


சிலா ப்ரஹரணா: சர்வே

சர்வே பாதபயோ தின: |

நக தம்ஷ்ட்ர ஆயதா: சர்வே

சர்வே அஸ்த்ர கோவிதா: || 

शिला प्रहरणा: सर्वे सर्वे पादपयोधिन:।

नख दंष्ट्र आयुधा: सर्वे सर्वे सर्व अस्त्र कोविदा:।|

They all could strike with rocks, use nails and teeth and trees as weapons. They were skilled in the use of all kinds of weapons.

இவர்கள் அனைவரும் பெரிய பெரிய பாறைகளை தூக்கி எறியும் மஹாபலத்துடன்,  தங்கள் நகத்தையும், பற்களையும் ஆயுதமாக கொண்டு தாக்கும் பலத்துடன், மரங்களை வேரோடு பிடுங்கி ஆயுதமாக சண்டை செய்யும் பலத்துடன், அனைத்து வித ஆயுதங்களையும் பயன்படுத்தும் திறனுடன் இருந்தனர்.

விசாலயேயு சைலேந்த்ரான்

பேதயேயு: ஸ்திரான் த்ருமான் |

க்ஷோபயேயு: ச வேகேன

சமுத்ரம் சரிதாம் பதிம் ||

विचालयेयु शैलेन्द्रान् भेदयेयु: स्थिरान् द्रुमान्।

क्षोभयेयुश्च वेगेन समुद्रं सरितां पतिम्।।

They could shake mountains and uproot deeprooted trees. With their speed they could cause disturbance to Samudra, the lord of the rivers.

பெரிய பெரிய மலைகளை அசைக்கும் சக்தியும், மரங்களை வேரோடு பிடுங்கி எரியும் பலமும் கொண்டிருந்தனர். சமுத்திரமே நிலைகொள்ளாமல் அலை பாயும் படி அவர்கள் வேகம் இருந்தது.


தாரயேயு: க்ஷிதிம் பத்ப்யாம்

ஆப்லவேயு: மஹார்நவம் |

நப: ஸ்தலம் விசேயு: ச

க்ருஹ்னீயு: அபி தோயதான் ||

दारयेयु: क्षितिं पद्भ्याम् आप्लवेयु: महार्णवम्।

नभ:स्थलम् विशेयुश्च गृह्णीयु: अपि तोयदान्।।

They could cause cleavage to this earth with their feet, cross the mighty ocean with one leap and enter the sky and even seize the clouds.

தங்கள் கால் தடத்தாலேயே பூமியில் பெரும் பள்ளங்களை உருவாக்கும் பலம் கொண்டிருந்தனர். கடலை ஒரு குதியில் கடந்து விடும் சக்தி கொண்டிருந்தனர். வானத்தை நோக்கி தாவி, மேகத்தை தொட்டு விடும் பலம் கொண்டிருந்தனர்.


க்ருஹ்னீயு: அபி மாதங்கான்

மத்தான் ப்ரவ்ரஜதோ வனே |

நர்தமானா: ச நாதேன

பாதயேயு: விஹங்கமான் ||

गृह्णीयु: अपि मातङ्गान् मत्तान् प्रव्रजतो वने।

नर्दमानाश्च नादेन पातयेयु: विहङ्गमान्।।

They could capture wild elephants residing in the forest and make the flying birds drop down screaming.

காட்டில் அலையும் காட்டு யானைகளை அடக்கும் சக்தியும், பறந்து செல்லும் பறவைகளை தாவி பிடித்து, கீழே விழ செய்து அலறச் செய்யும் பராக்கிரமும் கொண்டிருந்தனர். 

ஈத்ருசானாம் ப்ரசூதானி

ஹரீநாம் காம ரூபினாம் |

சதம் சத சஹஸ்ரானி

யூதபானாம் மஹாத்மனாம் ||

ईदृशानां प्रसूतानि हरीणां कामरूपिणाम्।

शतं शत सहस्राणि यूथपानां महात्मनाम्।।

A crore of monkeys capable of assuming any form at will, great monkeys and commanders of monkey forces were created.

இப்படி எந்த ரூபத்தையும் எடுத்து கொள்ளும் திறனுடன், போர் குணம் கொண்ட கோடிக்கணக்கான வானரர்கள் உருவாகி பூலோகம் முழுவதும் வனங்களில் சஞ்சரித்து கொண்டு இருந்தனர்.


தே ப்ரதானேஷு யூதேஷு

ஹரீனாம் ஹரி யூதபா: |

பபூவு: யூதப ஸ்ரேஷ்டா

வீரான் ச அஜநயன் ஹரீன் ||

ते प्रधानेषु यूथेषु हरीणां हरियूथपा:।

बभूवु: यूथपश्रेष्ठा वीरान् च अजनयन् हरीन्।।

Those monkey commanders created heroic monkeys among the chief monkey clans who later proved the best among clanleaders.

இப்படி உருவான வானரர்கள் பல பிரிவுகளாக தங்கள் தங்கள் படைகளை தயார் செய்து கொண்டு, ஒவ்வொரு படைக்கும் ஒரு படைத்தளபதியை வைத்து இருந்தனர்.


அன்யே ருக்ஷவத: ப்ரஸ்தான்

அவதஸ்து: சஹஸ்ரச: |

அன்யே நானாவிதான் சைலான்

பேஜிரே கானநானி ச ||

अन्ये ऋक्षवत: प्रस्थान् अवतस्थु: सहस्रश:।

अन्ये नानाविधान् शैलान् भेजिरे काननानि च।।

Thousands of monkeys dwelt on the plateaus on the top of mountains abounding in bears. Some others inhabited various hills and forests.

ஆயிரக்கணக்கான வானரர்கள் கரடிகள் வாழும் மலை உச்சியில் சேர்ந்து வாழ்ந்தனர். சிலர் மலையிலும், காட்டிலும் வாழ்ந்து வந்தனர்.


சூர்ய புத்ரம் ச சுக்ரீவம்

சக்ர புத்ரம் ச வாலினம் |

ப்ராதரௌ உபதஸ்து: தே

சர்வ ஏவ ஹரீஸ்வரா: ||

நலம் நீலம் ஹனுமந்தம்

அன்யா: ச ஹரியூதபான் ||

सूर्यपुत्रं च सुग्रीवं शक्रपुत्रं च वालिनम्।

भ्रातरौ उपतस्थुस्ते सर्व एव हरीश्वरा:।।

नलं नीलं हनूमन्तम् अन्यांश्च हरियूथपान्।

All those leaders, Nala, Neela, Hanuman and others dwelt near those two brothers Sugriva, the offspring of Surya and Vali, the son of Indra.

நலன், நீலன், ஹனுமான் மற்றும் பல வானர தலைவர்கள், சகோதரர்களாக அவதரித்த வாலி, மற்றும் சுக்ரீவனோடு வசித்து வந்தனர் 


தே தார்க்ஷ்ய பல சம்பண்ணா:

சர்வே யுத்த விசாரதா: |

விசரந்தோ அர்தயன் தர்பாத்

சிம்ஹ வ்யாக்ர மஹோரகான் ||

ते तार्क्ष्य बल सम्पन्ना: सर्वे युद्ध विशारदा:।

विचरन्तो अर्दयन् दर्पात् सिंह व्याघ्र महोरगान्।।

Endowed with the might of Garuda and well versed in warfare, all of them moving around tormented ferouious lions, tigers and mighty serpents.

கருடனை போன்று பறந்து கொண்டும், போரில் வல்லமை உடையவர்களாகவும் அலைந்து கொண்டிருந்த இவர்களை கண்டு, சிங்கமும், புலியும், பாம்புகளும் நடு நடுங்கின.


தாம் ச சர்வான் மஹாபாஹு:

வாலி விபுல விக்ரம: |

ஜூகோப புஜ வீர்யேந

ருக்ஷ கோபுச்ச்ச வானரான் ||

तांश्च सर्वान् महाबाहु: वाली विपुल विक्रम:।

जुगोप भुजवीर्येण ऋक्ष गोपुच्छ वानरान्।।

Mighty armed leader Vali endowed with immense prowess protected, with his strong arms all those bears, gopuchhas(cowtailed) and monkeys.

கரடிகளாகவும், மாட்டின் வால் கொண்ட வானரர்களாகவும், வானரர்களாகவும் இருந்த இவர்கள் அனைவரையும், மஹாபலம் கொண்ட, தேவேந்திரனின் அம்சமான வாலி காத்து வந்தான்.


தைரியம் ப்ருத்வீ சூரை:

சபர்வத வனார்நவா |

கீர்ணா விவித சம்ஸ்தானை:

நாநா வ்யஜ்ஜன லக்ஷனை: ||

तैरियं पृथिवी शूरै: सपर्वत वनार्णवा।

कीर्णा विविध संस्थानै: नाना व्यञ्जन लक्षणै:।।

Born in many forms wih various characteristics (relating to the body and tribe), they pervaded this earth with its mountains, forests and seas.

இப்படி பல வித குணத்துடன், பல வித ரூபத்துடன், பல வித உருவங்களில் உலகத்தில் உள்ள அனைத்து மலைகள், காடுகள், கடற்கரைகளில் அவதரித்து விட்டனர் தேவர்கள்.


தை: மேக ப்ருந்தாசல கூடகல்பை:

மஹாபலை: வானர யூதபாலை: |

பபூவ பூ: பீம சரீர ரூபை: 

சமாவ்ருதா ராம சஹாய ஹேதோ: ||

तै: मेघ बृन्दाचल कूटकल्पै:

महाबलै: वानर यूथपालै:।

बभूव भू: भीम शरीर रूपै:

समावृता राम सहाय हेतो:।।

In order to assist Rama, this earth was filled with commanders of those who led the monkey forces resembling masses of clouds and mountains. They loan endowed with immense strength and fearful forms and countenances.

ராமபிரானுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அவதரித்து இருந்த கோடிக்கணக்கான வானரர்கள் பூமியில் மேக கூட்டம் போல,மலைகள் போல, பெரும் பலத்துடன், பயங்கர ரூபத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.


ஜெய் ஸ்ரீ ராம்

குருநாதர் துணை.