Followers

Search Here...

Showing posts with label என்ன. Show all posts
Showing posts with label என்ன. Show all posts

Tuesday 4 June 2019

நாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்? மனதில் அமைதி, விவேக புத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க என்ன வேண்டும்? தெரிந்து கொள்வோமே ...

சைக்கிள் பழகுபவன், 
பல தடவை விழுந்தபிறகு, நேரே விடுவதற்கு தெரிந்து கொள்வது போல,


பிராணாயாமம் செய்பவன், 
பல தடவை பிராணனை அடக்க முடியாமல் போய், முடிவில் வெற்றிக் காண்பான்.
அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றவாறு,
பிராணாயாமத்தினால் சில மாதங்களிலோ, சில ஆண்டுகளிலோ, பலன் தெரியும்..

குண்டலினி சக்தியை உயிர் பெற செய்ய, முதலில், நம் உடம்பில் உள்ள நாடிகள் சரியாக இயங்க வேண்டும்.

உடம்பில் உள்ள "நாடிகள் யாருக்கு  சுத்தமாக" உள்ளதோ!!, அவர்கள்
மனதில் அமைதி இருக்கும்
விவேக புத்தியுடன் செயல்படுவார்கள். 
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடம்பில் உள்ள நாடிகளை சுத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.

இது ஒரு எண்ணிக்கை.
இது போல, 64 எண்ணிக்கை வரை ஏற்றிக் கொண்டு போகலாம். 

இவ்வாறு 6 மாதம் செய்தால், நாடி சுத்தி ஏற்படும்.

நாடி சுத்தி ஏற்பட்டவன்,
குண்டலினி சக்தி எழுவதற்கு, மற்றொரு பிராணாயாம பயிற்சி செய்ய தகுதி பெறுகிறான்...

முதலில் நாடி சுத்தி அடைய முயற்சி செய்வோம்....

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.


Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)






Saturday 4 May 2019

சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? பாரத மக்கள் சிந்தனைக்கு....

947AD முன்பு வரை பாரத மக்கள் எப்படி வாழ்ந்தனர்?
அதற்கு பின் எப்படி வாழ்கின்றனர்? என்று அலசி பார்க்கும் போது,
சனாதன தர்மம் என்றால் என்ன? அதன் அவசியம் இன்றும் தேவையா? என்ற தெளிவு நமக்கு ஏற்படும்...



947 வரை பாரத மக்கள் வாழ்ந்த முறை:
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் வழிபடும் தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தது. வழிபாட்டு முறைகள் இருந்தது.

அடுத்தவன் தெய்வம் வேறாக உள்ளதே!! நம்பிக்கை வேறாக உள்ளதே!! என்று ஒருவனும் பொறாமைப்படவில்லை.
அடுத்தவன் நம்பிக்கையை மதித்தான்.

பாரத பூமியில் 'தெய்வத்தின் பெயரால்' சாமானிய மக்களை கொல்வதோ, கோவில்களை இடிப்பதோ நடக்கவே இல்லை.

அனைத்து பாரத மக்களும் சுய மரியாதையுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்தனர். செல்வத்தில் புரண்டனர்.

'என் தெய்வம் சிவன்' என்று சொல்பவன், 'காளி கோவிலை இடிப்பேன்' என்று பிறருடைய நம்பிக்கையில் தலையிடவும் இல்லை, இடிக்கவும் இல்லை.
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீ கிருஷ்ணராக வந்து இருக்கிறார் என்று தெரிந்தும், அர்ஜுனன் போர் நடக்கவிருப்பதால் சிவபெருமானிடம் உள்ள பாசுபத அஸ்திரத்தையும் வாங்கி கொள்ளலாம் என்று தபசுக்கு செல்ல, கிருஷ்ணர் அதற்காக அர்ஜுனன் முயற்சியை தடுக்கவில்லை.
தெய்வங்களுக்குள்ளும் பொறாமையில்லை.
பாரத மக்களுக்குள்ளும் பொறாமையில்லை.

பாரத அரசர்களும் தெய்வ விஷயங்களில்  பொறாமைபடவில்லை.
"சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, விஜயநகர, மராத்திய, குப்த அரசரகள்" என்று அனைத்து அரசர்களும் போட்டி போட்டுக்கொண்டு சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிற அனைத்து தெய்வத்துக்கும் பெரிய பெரிய கோவில்கள், நிலங்கள் கொடுத்து அவரவர் தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர்.


பொறாமை குணம் இல்லாத அரசன்,
பொறாமை குணம் இல்லாத பாரத மக்கள்,
பொறாமை இல்லாத தெய்வங்கள் - கொண்டதாக இந்த புண்ணிய பாரத பூமி இருந்தது.

இந்த தர்மம் லட்சக்கணக்கான வருடங்களாக (சனாதனமாக) இந்த பாரத மண்ணில் இருந்தது.
பல தெய்வங்கள் இருந்தாலும், கலாச்சாரம் ஒன்றாக இருந்தது. குணம் ஒன்றாக இருந்தது.
இதனால் கலாச்சாரத்தில் ஒன்றுபட்ட, பாரத மக்கள் தங்களை  பொதுவாக "சனாதனமாக இருக்கும் தர்மத்தில்" இருப்பவர்கள் என்று மட்டுமே பெருமையாக சொல்லிக்கொண்டார்கள்.

வரலாற்றில் கிருமிகண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கூட வைஷ்ணவ கொள்கைகள் ராமானுஜரால் பரவுவதை கண்டு, சிவபக்திக்கு குறைவு வந்து விடுமோ என்ற தனி மனித கோபத்தில்,  ராமானுஜரை கொலை செய்ய நினைத்தான்.
இந்த சதியில் இருந்து தப்பித்து, ராமானுஜர் கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டைக்கு சென்று 12 வருடம் தங்கி விட்டார்.
ராமானுஜர் ஸ்ரீ ரங்கத்தில் இல்லை என்றதும், சோழ அரசன் 'பெருமாள் கோவிலை இடிப்பேன், வைஷ்ணவர்களை அடியோடு அழிப்பேன்' என்று இறங்கவில்லை.

தனி மனித பகை இருந்ததே ஒழிய, பிற தெய்வங்களிடம் வெறுப்பு இல்லை.

ராமானுஜர் போன்ற மகானுக்கு அபசாரம் செய்ததால், இந்த சோழன் புற்றுநோய் (cancer) வந்து இறந்தான்.
பின் வந்த சோழ அரசர்கள், ராமானுஜரை அழைத்து அவருக்கான மரியாதையை கொடுத்தனர். ஸ்ரீ ரங்கத்திலேயே கடைசி வரை ராமானுஜர் ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்தார்.
ராமானுஜர் ஒரு சோழ அரசனால் விரட்டப்பட்டார் என்பதால், ராமானுஜர் யாரையும் விமர்சனம் செய்யவே இல்லை. சிவ துவேஷம் காட்டவே இல்லை.

அவரவர்கள் அவர்கள் தெய்வத்தை வழிபடுவதில் திருப்தியாக இருந்தனர்.

நாயன்மார்களும் திருப்தியாக சிவ பக்தி செய்தனர்.
ஆழ்வார்களும் திருப்தியாக பெருமாள் பக்தி செய்தனர்.
அருணகிரிநாதர் ஒரு குறைவும் இல்லாமல் முருக பக்தி செய்தார்.

இது தானே சனாதன தர்மம்.
நிம்மதியாக இருந்தது பாரத நாடு.

"வளர்ச்சி, விவசாயம், எல்லை பாதுகாப்பு, நீதியை நிலைநாட்டுவது" இவையே பாரத அரசனுக்கு முக்கிய கடமையாக இருந்தது.
மக்களுக்குள் தெய்வத்தை வைத்து சண்டைகளே இல்லாமல் இருந்தது.
ஹிந்து அரசர்களுக்கு "தெய்வத்தின் பெயரால் சண்டை" என்பதே புரியாத விஷயம். தேவையில்லாத விஷயமும் கூட.


மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் உள்ளே நுழைந்ததும், "தெய்வத்தின் பெயரால்" அட்டகாசம், வெறுப்பு ஆரம்பம் ஆனது.
அது பாரத தேசத்தையும் விட்டு வைக்கவில்லை.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக அவதாரம் செய்தும், கிருஷ்ணராக அவதாரம் செய்தும்,
ராம 'மதம்', கிருஷ்ண 'மதம்'
என்று தான்தோன்றி தனமாக மதங்களை உருவாக்கி, உளராமல் இருந்தனர் பாரத மக்கள்.
மஹாவீரர் தோன்றிய பின்,
புத்தர் தோன்றிய பின்,
அவர்கள் பெயரால் 'சன்மார்க்க வழி' என்று முதலில் ஊர் முழுக்க கடைபிடிக்க ஆரம்பித்தனர் பாரத மக்கள்.
கலியின் பிடியில் புத்தி தடுமாறி போன காலம் என்று சொல்லலாம்.

'மதம்' என்று இவர்களும் அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.
இதுவும் ஒரு தர்ம வழி என்று தான் சொல்லிக்கொண்டனர் பௌத்தர்களும், ஜைனர்களும்.

பாரத மக்களை பொறுத்தவரை, "மதம்' என்ற வார்த்தையை 'கர்வம்' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வந்தனர் அது நாள் வரை.
"காம, க்ரோத, மத..." என்று சொல்லும் போது, "காமம், கோபம், கர்வம்" போன்ற துர்குணங்கள் நமக்கு இருக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்த பாரத மக்களிடம்,
'கர்வம்' என்ற பொருள் கொண்ட "மதம்" என்ற பெயருக்கு வேறு சாயம் பூசினர் வெளி மதத்தினர்.

வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்கள், தங்களை "இஸ்லாம்" மதம் என்று அடையாளப்படுத்தி கொண்டனர்.
947ADல் அரேபிய முஸ்லிம்களால், கோரி அரசாட்சி "ஆப்கான் தேசத்தில்" தலை எடுக்க ஆரம்பித்தது.
பௌத்த அரசர்கள் அங்கு வீழ்ந்து, கோரி அரசாட்சி ஆரம்பம் ஆனது.
அன்று ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு பெரும் சோதனை.


இஸ்லாம் (மனிதன் 7) உள்ளே நுழைந்த போது, பாரத மக்கள் நிலை என்ன ஆனது?


  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது.எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். உங்கள் கடவுள் நம்பிக்கை எப்படி?
  • மனிதன் 1 : இறைவன் இருக்கிறார். விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : இறைவன் இருக்கிறார். முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: இறைவன் இருக்கிறார். மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: இறைவன் இருக்கிறார். தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: இறைவன் இருக்கிறார். சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: இறைவன் இருக்கிறார். எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.


  • மனிதன் 7 : ஒப்புக்கொள்ளவே முடியாது. அல்லாவுக்கு (இறைவன்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.

இப்படி ஆரம்பித்த பின், பாரத தேசம் கலவர பூமி ஆனது.

இஸ்லாமியர்கள் வருவதற்கு முன் கூட ஒரு அரசனுக்கும், இன்னொரு அரசனுக்கும் போர் எழுந்துள்ளது.
ஆனால், அரசர்கள் யாவரும், தனியான இடத்தில் தான் போர் நடத்தினர்.

சோழ அரசன் காசி வரை சென்று ஜெய கொடி நாட்டினான் என்று சரித்திரங்கள் சொல்கிறது.
அசோக சக்கரவர்த்தி ஏறத்தாழ பாரத தேசம் முழுவதும் ஆண்டார் என்று சொல்கிறது.

ஒரு நாட்டை பிடிக்க,
பொது மக்களை கொலை செய்வதோ, 
கொள்ளை அடிப்பதோ, 
கோவிலை இடிப்பதோ 
பாரத மக்களும், அரசர்களும் பார்த்திராத குணங்கள். கீழ்த்தரமான குணங்கள்.

முகம்மது கஜினி என்ற அரேபிய இஸ்லாமியன் உள்ளே நுழைந்ததும் அவன் தாக்கியதே சோம்நாத்தில் உள்ள 'சிவன்' கோவிலை தான்.
குஜராத் நகரமே நிலை குலைந்தது.

17 முறை தொடர்ந்து, இவன் சிவன் கோவிலை இடித்து, அங்கு உள்ள தங்கங்களை கொள்ளையடிக்க முயன்றான்.
17 முறையும் அப்போது இருந்த ஹிந்து (சனாதன தர்மத்தில் இருந்த) அரசனால் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டான்.



ஊர் மக்களை தாக்கியும்,
கோவிலை இடித்தும் போர் செய்த இஸ்லாமிய அரேபியர்கள்,
18வது முறை இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து ஹிந்து அரசனை கொன்று, சோம்நாத் கோவிலை தரைமட்டமாக்கி அங்கு இருந்த கோடிக்கணக்கான நகைகளை அள்ளிக்கொண்டு ஓடினான்.

17 முறையும் தோற்ற கஜினி, ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டான். 17 முறையும் மன்னித்தான் ஹிந்து அரசன்.
'கோவிலை இடிப்பதே இவர்கள் முதல் கொள்கை,
பாரத மக்களை தன் வழிபாட்டு முறைக்கு மாற்றுவதே இவர்கள் முக்கிய கொள்கை'
என்று பாரத பூமியை தாக்க வந்த இவர்களை, மற்ற ஹிந்து அரசர்கள் போல தான் இவனும் என்று நினைத்து, 17 முறை மன்னித்து விட்டான் ஹிந்து அரசன்.
விளைவு:
அன்று சோம்நாத் சுற்றி இருந்த லட்சக்கணக்கான சௌராஷ்டிர மொழி பேசும் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருப்பவர்கள்) வாழ வழி தேடி, நாடோடிகளாக வெளி மாநிலங்களுக்கு ஓடி ஓடி, இன்று மஹாராஷ்டிரா முதல் மதுரை வரை சிதறி சிதறி வாழ்ந்து வருகின்றனர்.




அரேபிய இஸ்லாமியர்களால், முதன் முதலில் பாதிக்கப்பட்ட சனாதன தர்மத்தில் வாழ்ந்த முதல் சமூகம் "சௌராஷ்டிர" சமூகமே.
45000க்கும் மேலாக பாரத நாட்டில் இருந்த பெரிய பெரிய முக்கியமான கோவில்களை இடித்து தள்ளினர் அரேபிய இஸ்லாமியர்கள்.
மீண்டும் மீண்டும் அரசர்கள் கட்டுவதை பார்த்து, அதன் பிறகு, கோவில் மேல், மசூதியை கட்ட ஆரம்பித்தனர். தனக்கு அரண்மனைகள் கட்டிக்கொண்டனர்.

வட நாட்டில், தமிழ்நாட்டில் இருப்பது போல லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தன.
இன்று, ஒன்று கூட, தமிழ்நாட்டில் உள்ளது போல அங்கு காணப்படவில்லை.
1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பல லட்சம் ஹிந்துக்கள் (சனாதன தர்மத்தில் இருந்தவர்கள்) பயத்தினாலும் பணத்திற்காகவும், இஸ்லாமியனாக மாறினர்.

அலாவுதீன் கில்ஜிக்கு முக்கியமான படை தளபதி "மாலிக் காபுர்".
அலாவுதீன் கில்ஜி, குஜராத் மீது படையெடுத்த போது, அடிமைகளாக இழுத்து வந்த ஹிந்துக்களில் ஒருவன் தான் இந்த மாலிக் காபுர்.


'மாணிக்' என்ற இந்த ஹிந்து மீது கில்ஜிக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், அவனிடம் நெருங்கி பழகினான்.
போர் திறமை இருப்பதை கண்ட கில்ஜி, இவனை பல ஹிந்து அரசர்களை எதிர்த்து போர் செய்ய அனுப்ப, கோவிலை இடிப்பதும், பொது மக்களை கொள்வதன் மூலம் ஹிந்து அரசர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள செய்வதும், ஆங்காங்கு வெற்றிகளை பெற, நாளடைவில், தன்னை இஸ்லாமியனாக மாற்றிக்கொண்டான் "மாணிக்" என்ற "மாலிக் காபுர்".

பணத்திற்காகவும் புகழுக்காகவும் தன்னை இஸ்லாமியனாக ஆக்கிக்கொண்ட பின், இவன் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

இந்த மாலிக் காபுர் என்பவன் தான், தெலுங்கு தேசத்தில் படையெடுத்த போது, பொது மக்களை தாக்கி, காளி கோவிலை இடித்து, அங்கு கிடைத்த பல வைரங்களில், "கோஹினூர் வைரம்" உட்பட பல கொள்ளையடித்த செல்வங்களை கில்ஜியிடம் கொடுத்தான்.
ஊரை கொள்ளையடித்து, கோவிலை இடிக்க, காகதியா பேரரசு வேறு வழில்லாமல் பெரும் செல்வத்தை மாலிக் காபுர் எடுத்து செல்ல அனுமதித்தது.

இவனே பின்னர், தமிழ்நாட்டுக்கு புகுந்து பாண்டிய மன்னர்களை நேரில் எதிர்க்காமல், ஒரு லட்சம் இஸ்லாம் படைகளுடன் நேராக  மதுரையில் உள்ள மீனாட்சி கோவிலில் செருப்பு காலுடன் நுழைந்து, அங்கு சுந்தரேஸ்வரர் சிவலிங்கத்துக்கு முன் ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டு இருந்த போலி லிங்கத்தை இடித்து, கோவிலை கைப்பற்றி விட்டான். பாண்டிய மன்னர்களை அடி பணிய செய்தான்.
பொதுவாக கோவிலை தாக்கியும், பொது மக்களை தாக்கியும் தான் அரசர்களை சரணடைய செய்து கொன்றனர்.
இது முடியாத பட்சத்தில், இரவோடு இரவாக திடீர் தாக்குதல் செய்து அரசர்களை தாக்கினர்.
பாண்டிய அரசாட்சி முடிவுக்கு வந்த காலம் அது.

அடுத்த 80 வருடங்கள், கில்ஜி மூலமாக இஸ்லாமிய ஆட்சி ஆரம்பித்து, அடுத்து வந்த முகம்மது பின் துக்ளக் ஆட்சி வரை, இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்தது.
தமிழர்களை கொன்று குவித்தனர் பாண்டிய தேசத்தை கைப்பற்றிய இஸ்லாமிய அரேபியர்கள்.

மதுரை ரத்த காடாக ஆனது.
80 வருடங்கள் கழித்து கர்நாடகத்தில் இருந்து சிங்கமாக புறப்பட்டு, விஜயநகர இளவரசன் கம்பண்ணா இஸ்லாமிய ஆட்சியை 80 வருடங்களுக்கு பின் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதற்கு பின், தமிழநாட்டை இஸ்லாமிய ஆட்சி வட இந்தியாவை போல முழுவதுமாக பிடிக்கவே முடியவில்லை. சோழ நாடு முழுவதுமாக விஜயநகர அரசால் காக்கப்பட்டது.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் கட்டிய கோவில்கள் தப்பித்தன.

இதே மாலிக் காபுர் தான் மதுரையை தொடர்ந்து, ஸ்ரீ ரங்கம் நுழைந்து, ஸ்ரீ ரங்க கோவிலில் கொள்ளை அடித்து, 13000 வைஷ்ணவர்களை கோவிலிலேயே கொன்று, ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.
பின்னர் வைஷ்ணவர்கள் சென்று, அவனிடம் நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகள் செய்து, அவனை எப்படியோ சம்மதிக்க வைத்து, ஸ்ரீ ரங்கநாதரை மட்டும் மீட்டு டெல்லியில் இருந்து கொண்டு வந்து விட்டனர்.
இவன் மகள் சுரதானி என்ற துலுக்கநாச்சியார், ரங்கநாதரை அவள் அரண்மனையில் வைத்து அதுவரை பொம்மையாக விளையாடி கொண்டிருந்தாள்.
ஸ்ரீ ரங்கநாதர் அவளுடன் சிலையாக இருந்தே பேச ஆரம்பிக்க, தன் தந்தை மாலிக் காபுர் அந்த ரங்கநாதரை கொடுத்து விட்டார் என்று தெரிந்து ஸ்ரீ ரங்கம் வர, கோவிலில் நுழைந்து ரங்கநாதரை பார்த்ததும் அவர் சரணத்திலேயே உயிர் துறந்து விட்டாள்.
இதை கேள்விப்பட்டு, மீண்டும் இஸ்லாமியர்கள் ஸ்ரீ ரங்கம் படையெடுக்க, மதுரையில் சுந்தரேஸ்வரர் 80 வருடங்கள் சுவருக்கு பின் இருந்தது போல, ஸ்ரீ ரங்கநாதரும் 80 வருடங்கள் மேலூர், கேரள தேசம், திருப்பதி என்று இருந்து விட்டு, விஜயநகர அரசர்கள் மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்த பின், மதுரை மீனாட்சி கோவிலும் திறக்கப்பட்டது. ஸ்ரீ ரங்கமும் திறக்கப்பட்டது.

நினைத்து பார்க்க முடியாத நிலையில், நம் பாட்டனார்கள் வாழ்ந்து, சமாளித்து, அந்த சூழ்நிலையிலும் ஹிந்துவாகவே வாழ்ந்து நம் வரை ஹிந்துவாக வாழ வழி செய்துள்ளனர்.

மறக்க கூடியதா நம் பாட்டனார்கள் அனுபவித்த நிலை?!!.

மதுரை தேசம் மாலிக் காபுர் அட்டகாசத்திற்கு பின், 80 வருடங்கள் இஸ்லாமிய அரேபியர்கள் ஆட்சியில் மாட்டியது.
இந்த சமயத்தில் ஒரு 5 வருடங்கள் மட்டும் எப்படி இருந்தது? என்று இஸ்லாமியன் இபின் படூடா என்பவனே எழுதி வருத்தப்பட்டார்.
என்ன நிலையை தமிழர்கள் சந்தித்தனர்? என்று தெரிந்து கொள்ள படியுங்கள். Tamil_People_LifeStruggle

"தெய்வத்தின் பெயரால்" வெறுப்பையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிறர் கோவிலை இடிப்பதையும்,
"தெய்வத்தின் பெயரால்" பிற தெய்வங்கள் மேல் நம்பிக்கை உள்ளவர்களை மாற்ற நினைப்பதையும்,
1200 வருடங்கள் தொடர்ந்து செய்தனர் அரேபிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ வெளிநாட்டவர்கள்.

1400ADல் போர்சுகீஸ் கிறிஸ்தவர்கள் (வாஸ்கோட காமா) மூலமாக  ஆரம்பித்தது பாரத நாட்டிற்கு மேலும் ஒரு பெரும் சோதனை.

கிறிஸ்தவ மதமும் நுழைந்த பின், பாரத தேச மக்கள் மேலும் திண்டாடினர்.

ஏற்கனவே மனிதன் 7, 'தன் கொள்கையே சிறந்தது. நீங்கள் என் வழியில் வாருங்கள், இல்லை உங்களை எதிர்க்க தயார்' என்று அட்டகாசம் செய்து கொண்டு இருக்கும் போது, ஏறத்தாழ இதே கொள்கையுடைய கிறிஸ்தவர்களும் (மனிதன் 8) வணிகம் என்ற பெயரில் உள்ளே நுழைந்தனர்.


  • மனிதன் 8 : இறைவன் இருக்கிறார். அவரே ஏசு. அவரை கொன்றாலும் அவர் நமக்காக தான் இறந்து போனார். அதனால் நமக்காக திரும்பவும் வருவார். ஏசுவை நம்பாது இருந்தால் நீங்கள் நரகம் போவீர்கள். உங்களுக்காக உயிர் விட்ட ஏசுவே உங்கள் தெய்வம்.
  • மனிதன் 1 : விநாயகரே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 2 : முருகனே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 3: மஹா விஷ்ணுவே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 4: தெய்வம் பரஞ்சோதியானவர். அவர் இல்லாத இடமில்லை. நான் அத்வைதி. உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 5: சிவாய நம. சிவபெருமானே என் தெய்வம். உங்கள் தெய்வம் யார்?
  • மனிதன் 6: எனக்கு தாய் தந்தையே தெய்வம். வேறு தெய்வம் தெரியாது.
  • மனிதன் 7 : அல்லாஹ் (இறைவன்) இருக்கிறார். அவரை நம்ப வேண்டும். அவரை பற்றி நாமாக உருவகப்படுத்த கூடாது. அவர் போதனை என்ன என்று எங்கள் குரான் மட்டும் தான் சொல்கிறது. எதிர் கேள்வி கேட்காமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும். மனிதன் 8 சொல்வதும் பொய். ஒரு கொலை செய்யப்பட்ட மனிதனை (ஏசு) ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் சொல்லும் எந்த முறையையும் ஒப்புக்கொள்ள முடியாது. அல்லாவுக்கு (கடவுள்) பெயர் வைத்து, ஒரு கோவில் கட்டி, நீங்கள் வழிபடுவதை ஏற்கவே முடியாது. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள். ஒன்று என் நம்பிக்கையை கடைபிடியுங்கள்.. இல்லை நாங்கள் சமயம் பார்த்து உங்களை அழிக்க முயல்வோம். உங்களை கத்தி முனையை கொண்டாவது எங்கள் வழியில் இறைவனை வணங்க செய்வோம்.



கிறிஸ்தவர்கள் ஆட்சியின் போது, கிறிஸ்தவர்கள், காளையார் கோவிலை இடித்து தள்ளிவிடுவோம் என்று சொல்ல, கோவிலை காப்பாற்ற, உயிரை கொடுக்க முன் வந்தனர் "மருது சகோதரர்கள்".

சிவபெருமான் கோவிலை இடிக்க கூடாது என்று, நம் மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கினர். கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் ஹிந்துக்கள் கேவலப்படுத்தபட்டனர்.

தெய்வங்களை கிண்டல் செய்தும், அவமானம் செய்தும் பேசும் பழக்கம் இவர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. 

கிறிஸ்தவதுக்கு மதம் மாற்றப்படும் ஹிந்துவுக்கும், ஏசு நல்லவரா? கெட்டவரா? என்பதை விட, ஹிந்து தெய்வங்களை பற்றி தனக்கு தோன்றிய படி, கீழ்த்தரமான போதனைகள் தான் அதிகம் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கிறிஸ்தவதுக்கும், இஸ்லாம் கொள்கைக்கும் ஏழாம் பொருத்தம்.

இருவருக்குமே "தங்கள் கொள்கை தான் சரி" என்ற தீவிரம் உடையதால், "மற்றவர்களை தன் கொள்கைக்கு இழுக்க வேண்டும்" என்ற கொள்கையும் உள்ளதால்,
"மற்ற நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் நாசமாக போவார்கள், நரகம் போவார்கள்" என்று அவர்கள் நம்பிக்கை.

இன்று வரை கிறிஸ்தவ நாடுகள், இஸ்லாமியர்களை நம்புவதில்லை.

'அமெரிக்கர்கள்' எந்த இஸ்லாமிய தேசத்தையும் நம்புவதில்லை. இஸ்லாமியன் இவர்கள் நாட்டுக்குள் வந்தால் ஆயிரம் கேள்விகள் விசாரணைகள் செய்கிறது.
நியூஸிலாந்தில் இந்த பகையே, மசூதிக்குள் புகுந்து, தொழுகை செய்து கொண்டிருந்த சாதாரண இஸ்லாமியர்களை சரமாரியாக கொன்று குவிக்க கொண்டு சென்றது.

இதற்கு சளையில்லை என்று,
இலங்கையில், சர்ச்சுக்குள் புகுந்து இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பாம் போட்டு கொன்று குவித்தனர் இஸ்லாமியர்கள்.
'தன் கொள்கை மட்டுமே உயர்ந்த கொள்கை' என்றும்,
'தன் வழிபாட்டு முறையை சரியான வழி' என்றும்,
'தான் நம்பும் தெய்வமே தெய்வம்' என்றும்
தெய்வத்தின் பெயரால், சண்டை இட்டுக்கொள்ளாத நாடுகள்,
இந்த இரு மதங்கள் தோன்றிய பின், மதத்தின் பெயரால் பல கோடி மக்களை இழந்து விட்டது.
பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன.
பல பேரரசுகள் அழிந்து விட்டன.


அன்று கத்தி, வில் கொண்டு, தெய்வத்தின் பெயரால் சண்டை போட்டனர். இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டையிட்டால் உலகம் அழிந்து போகும்.
கிரேக்க கலாச்சார இறைவழிபாடுகள், கொள்கைகள் அழிந்து, இன்று கிரேக்க நாடு கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

பல தெய்வங்களை வழிபட்டு கொண்டிருந்த அரேபியர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

ரோமானிய பேரரசும் தன் கலாச்சாரம், தெய்வ வழிபாட்டை இழந்து கிறிஸ்தவ நாடாக ஆகி விட்டது.

இப்படி கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு மாறிய இவர்களுக்கு,
"மற்ற நம்பிக்கைகள் நரகத்திற்கு தள்ளும், நம் வழியே சொர்க்கம் தரும்" என்று சொல்வதால்,
உலகம் எங்கும் 'தெய்வத்தின் பெயரால்' மத சண்டைகள் இந்த இரு மதங்களாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பான், சீனா போன்ற தேசங்கள் பௌத்த மதத்தை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் ஓரளவு மத சண்டைகள் இல்லாமல் உள்ளனர்.

நம் பாரத நாட்டிலோ, ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல்,
1200 வருடங்களில் சனாதன தர்மத்தில் இருந்த லட்சக்கணக்கானவர்களை கிறிஸ்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மதம் மாற்றி விட்டு, அரேபியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் அவரவர் ஊருக்கு முடிந்த வரை கொள்ளையடுத்து விட்டு சென்று விட்டனர்.

அவர்கள் சென்று விட்டாலும்,
ஹிந்துவாக இருந்து, இன்று கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக வாழும் பாரத மக்கள்,
1200 வருடங்களும் மதம் மாறாமல் ரோமானிய கிரேக்க கலாச்சாரம் அழிந்ததை போல சனாதன தர்மத்தை அழித்து விடாமல், இன்று வரை சனாதன தர்மத்திலேயே (ஹிந்துக்களாக) வாழுவதை பார்த்து பெருமை படாமல், தானும் நம் மூதாதையர்கள் வாழ்ந்த வழியில் செல்வோம் என்று நினைக்காமல், மானத்தோடு வாழும் ஹிந்துக்கள் மேல் வெறுப்பை உமிழ்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஒரு படி மேலே போய், சிவனை கேலி செய்து சித்திரம் வரைந்து வெறுப்பை கக்குகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து புகுந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மதவாதிகள், 'மதம்' என்றால் 'கர்வம்' என்று மட்டுமே பயன்படுத்தி வந்த பாரத மக்களை பார்த்து, பல தெய்வங்களை வணங்கினாலும், வேறுபாடு இன்றி, ஒரே கலாச்சாரமாக வாழ்வதை பார்த்து,
சிந்து நதி ஓரம் வந்து 'இந்டு' என்றும், 'இந்து' என்றும், 'ஹிந்து' என்றும், 'ஹிந்டு' என்று வாய்க்கு வந்த வந்தபடி நம் அனைவரையும் அடையாளப்படுத்தினார்கள்.

நம்மை மட்டுமல்ல, பிரயாகை என்ற பெயரை மாற்றி அல்லாஹ்பாத் என்று மாற்றினர்.
கிறிஸ்தவன் பல தமிழ் ஊர் பெயர்களை குட்டி சுவர் ஆக்கினான்.


திருச்சிரார்ப்பள்ளி என்று சொல்ல முடியாமல் ட்ரிசி என்றான், கொல்கத்தாவை கல்கட்டா என்றான்.
மும்பையை பாம்பே என்றான்.

பாரத நாட்டை விட்டு இவர்களை கஷ்டப்பட்டு கிளப்ப வைத்த சமயத்திலும், பாரத நாட்டுக்கே அர்த்தமில்லாத பெயரை கொடுத்து விட்டான். 
நேரு யோசிக்காமல் ஏற்றார்.

ஐரோப்பிய கிறிஸ்தவன், நம் பாரத நாட்டை மூன்றாக பிரித்து, இவன் உளறி கொட்டிய 'இந்டு' என்பதையே 'இண்டியா' என்று ஒரு பகுதிக்கு பெயர் வைத்தான்.
தொன்று தொட்டு பல தெய்வங்கள் வழிபட்டாலும்,
பகை இன்றி ஒரே கலாச்சாரமாக வாழ்ந்த நமக்கும் 'மதம்' என்ற அடையாளத்தை கொடுத்து,
அவன் உளறி கொட்டிய 'ஹிந்து' என்ற வார்த்தையையே மத பெயர் ஆக்கினான்.

"பாக்கி உள்ள 2 பகுதிகளை" கிழக்கு பாக்கிஸ்தான், மேற்கு பாக்கிஸ்தான் என்று பெயர் வைத்து, பிரித்து விட்டான்.

"ஜின்னா" போன்ற ஹிந்துவாக ஒரு பரம்பரையில் இருந்து இஸ்லாமியனாக மாறியவர்கள்,
'பாகிஸ்தான் இனி இஸ்லாமிய நாடு' என்று தெளிவாக சொல்லி நாட்டில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்க செய்தனர்.
நேரு 'இண்டியா ஹிந்துக்கள் நாடு' என்று சொல்லி, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு என்று சொல்ல மறந்தார்.
நேருவின் பெண்ணே இஸ்லாமியனை மணந்து இருந்தார் என்ற போது, நேருவிடம் இதை எதிர்பார்ப்பது அறிவீனமே... எதிர்த்த சர்தார் படேல், போஸ் ஒதுக்கப்பட்டார்கள்.

1000 வருடங்களாக இஸ்லாமியன், கிறிஸ்தவன் என்று மாற்றப்பட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் மதம் முஸ்லீம், கிறிஸ்டின் என்று அடையாளபடுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

ஆங்கில மோகம் கொண்ட, ஆங்கிலேயே கிறிஸ்தவர்களுடனேயே பழகிய நேரு, இதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு திறன் இல்லாமல் இருந்தார்.
பாரத தேசம் ஹிந்து தேசம் என்று சொல்ல மறந்தார்.
திறன் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை அலட்சியம் செய்தார்.

சுதந்திரம் அடைந்த பின்னும், இன்றும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாரத மண்ணில் ஹிந்துக்களாக வாழ்ந்த பல குடும்பங்கள் இன்று இஸ்லாமியனாகவும், கிறிஸ்தவனாகவும் உள்ளதால், அவர்கள் கொள்கையாலேயே இறைவன் பெயரால் நடக்கும் சண்டைகள் ஓயாமல் உள்ளது.

பாகிஸ்தான் போன்ற பிரித்து கொடுக்கப்பட்ட பாரத தேசம் 'இஸ்லாமிய தேசம்' என்று ஆக்கப்பட்டதால் அங்கு ஹிந்துக்கள் வாழ்வது சாதாரண காரியம் அல்ல. பல லட்ச ஹிந்துக்கள் 1947க்கு பின் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

கொள்கையே இவர்களுக்கு தீவிர வாதத்தை கொடுப்பதால், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை தங்கள் முதல் எதிரியாக பார்க்கின்றனர்.
இப்பொழுது, இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களை தாக்க ஆரம்பித்து விட்டனர்.


கத்தி, வேல் கொண்டு மத சண்டைகள் நடந்த போது உயிர் சேதங்கள், கட்டிடங்களுக்கு சேதங்கள் நடந்து கொண்டிருந்தன.

இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் உள்ள காலங்களில் இனியும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 'தன் வழிபாடு மட்டுமே சிறந்தது. மற்றவன் வழிபாடு நரகம் கொடுக்கும்' என்று சொல்லி சண்டையிட்டால், அனு ஆயுதங்கள் கொண்டு உலகமே நொடிகளில் அழிந்து விடும்.

சிவனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
முருகனை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்,
பெருமாளை கும்பிட்டாலும் உனக்கு மோக்ஷம் தான்
என்று சமபுத்தியோடு, பார்த்த சனாதன தர்மத்தில் (ஹிந்துக்கள்) வாழும் ஹிந்துக்கள் இன்றும் அப்படி தான் வாழ்கின்றனர்.

பெருமாள் பக்தன் சிவன் கோவிலுக்கு செல்லாமல் இருந்தாலும், சிவன் கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

முருக பக்தன், காளி கோவிலுக்கு செல்ல மாட்டேன், காளி கோவிலை இடிப்பேன் என்று சொல்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் வாயில் தான் சமத்துவம், 'எல்லா சாமியும் ஒன்னு தான்', ராமரை கும்பிட்டாலும், அல்லாவை கும்பிட்டாலும் அவன் நல்லவன் தான் என்று வருகிறது.

"உலகில் உள்ளவர்கள் யார் யாரை வேண்டுமானாலும் தெய்வம் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்வோம், பிறர் எது சரி என்று நினைக்கிறார்களோ அப்படியே வாழட்டும்" 
என்று சனாதன தர்ம கொள்கையை மட்டும் எடுத்து கொண்டால் போதுமானது.
அவனவன் நம்பிக்கையில் வாழ்வோம்.
என் நம்பிக்கை எனக்கு பெரியது.
உன் நம்பிக்கை உனக்கு பெரியது.
இதுவே சனாதன தர்மம் காட்டிய வழி.

என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது. உன் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது என்று சொல்லும் எந்த கொள்கையும் உலகை நாசமாக்கும்.

தெய்வத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை 6 அறிவுள்ள மனிதனால் கட்டாயம் நிறுத்த முடியும்.

இதற்கு நமக்கு தேவை "அவனவன் நம்பிக்கையில் வாழ்வது. அடுத்தவன் நம்பிக்கையில் அவனை வாழ விடுவது என்ற பரந்த மனப்பான்மையே".

இப்படி வாழ ஆரம்பிக்கும் போது, உலகமே சனாதன தர்மத்தில் அவரவர் தெய்வங்களை வணங்கி கொண்டு, ஆனால் பிற தெய்வ வழிபாட்டின் மேல் பொறாமை இல்லாது வாழ தெரிந்த சமுதாயமாக மாறும்.

இந்த சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டு வர, மனிதனாக இருக்கும் நமக்கு பரந்த உள்ளம் வேண்டும்.


அரேபிய இஸ்லாமியர்கள் பாரத நாட்டில் அத்தனை அட்டூழியம் செய்தனர் என்பது அந்த காலம்.
ஆனால், அந்த தேசம் கூட, இன்று ஹிந்துக்கள் வழிபட கோவில் கட்டி தருகிறோம் என்று வந்துள்ளதே..  இது தானே சனாதன தர்மம்.
யாருக்கும் நியாயமாக வாழ, ஒரு தெய்வத்தை வழிபட அனுமதி அளித்தது தானே சனாதன தர்மம்
இந்த சனாதன தர்மம் உலகம் முழுக்க பரவும் போது, மீண்டும் மனிதர்கள் மனிதர்களாக வாழ ஆரம்பிக்கலாம்.

"எவன் எந்த தெய்வத்தை கும்பிட்டால் நமக்கு என்ன?" என்றாவது இருக்க உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெய்வத்தின் பெயரால் "நான் மட்டுமே சொர்க்கம் போவேன்.. நீங்கள் எல்லோரும் நரகம் போவீர்கள்" என்று சொல்லி வெறுப்பு, கொலைகளை தவிர என்ன சாதித்தார்கள் இவர்கள்?.

தெய்வத்தை வைத்து சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும்.
உனக்கு பெருமாள் பிடித்தால், வணங்கிக்கொள்.
உனக்கு யாரையுமே பிடிக்காதா.. அப்படியே இரு.
ஆனால் மற்றவன் நம்பிக்கையை பற்றி உனக்கு என்ன வேலை?

947ADக்கு முன் அப்படி தானே இருந்தோம்?!!.
அவரவர்கள் அவர்களுக்கு பிடித்த தெய்வங்களுக்கு கோவில் அமைத்து கொண்டார்கள்.
ரிஷிகள் எனக்கு கோவிலும் வேண்டாம், ஊரும் வேண்டாம் என்று காட்டில் தவம் செய்தார்கள்.
எங்கு வந்தது தெய்வத்தின் பெயரால் சண்டைகள்?.
6 அறிவுள்ள மனிதன் எவனாக இருந்தாலும், இனியும் தெய்வத்தின் பெயரால் சண்டை செய்வதை விரும்ப மாட்டான்.

சனாதன தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் செல்ல முயற்சித்தால், தெய்வத்தின் பெயரால் ஏற்படும் சண்டைக்கு முடிவு ஏற்படும்.

இஸ்லாம் உதித்த அரேபிய நாடே இதற்கு அடிக்கல் நாட்டி விட்டது.
அமெரிக்கா போன்ற நாடுகள், அனைத்து தெய்வ நம்பிக்கையையும் அவரவர்கள் வழிபட அனுமதிக்கிறது.
சனாதன தர்மம் இது தானே!!
பாரத மண்ணில் உள்ள இஸ்லாமியர்கள், "அயோத்தியில் என் தெய்வம் ராமர் பிறந்தார், அங்கு ஒரு கோவிலை கட்டி கொள்கிறோம். பாபர் என்ற அரேபியன் இருந்த கோவிலை இடித்துவிட்டான்" என்று சொன்னால், "ஏதோ உனக்கு ஒரு நம்பிக்கை, கட்டிக்கொள். எனக்கும் ஒரு மசூதி கட்டி கொடு" என்று சொன்னால், அது தானே சனாதன தர்மம்.


பரந்த மனம் அமெரிக்கவாசிகளுக்கே, அரேபியர்களுக்கே வந்து விட்டதே.. 

பாரத மக்கள் அனைவரும் சகோதர்களே...  
பரந்த மனத்தை மட்டும் காற்றில் பறக்க விட்டு, தெய்வத்தின் பெயரால் அடித்து கொள்கிறோம்.
இது வெட்கப்பட வேண்டியது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கேடு.

அடுத்தவன் நம்பிக்கையை ஏன் கேலி செய்ய வேண்டும்?
அடுத்தவன் தெய்வத்தை ஏன் பழிக்க வேண்டும்?

பாரத மக்கள் சிந்தனைக்கு... 


Sunday 28 April 2019

கண்ணன், மாடு மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்? நெய்வேத்தியம் காட்டிவிட்டு சாப்பிட்டால் குறைந்து விடுவோமா? நன்றி உணர்ச்சி என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே..





அனைத்து உலகங்களையும், ஜீவராசிகளையும்  'வைகுண்ட'த்தில் இருந்து மேய்த்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன்,
ப்ரம்மா முதல் சிறு ஜீவராசிகள் வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்.
'உலகையே ஆளும் சர்வேஸ்வரன்' என்ற பெருமையை காட்டிலும்,
தன்னை ஒரு மாடு மேய்க்கும், ராஜகோபாலனாக அடையாளப்படுத்தி கொள்ளவே மிகவும் விரும்பினாராம் பரமாத்மா. அது ஏன்?
மக்களையும், உலகங்களையும் மேய்க்கும் எம்பெருமான், தேவர்களும், ரிஷிகளும் வியக்க, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்யும் போது, 'தான் மாடு மேய்க்கலாம்' என்று வந்து விட்டார்.



பரமாத்மா மாடு மேய்க்க ஆசைப்பட்டார் என்றால், பசுமாட்டுக்கு அப்படி என்ன விசேஷத்தை பரமாத்மா கண்டார்?
உலகையே மேய்க்கும் சக்தி வாய்ந்த பரமாத்மா நாராயணனுக்கு, மாட்டின் மேல் மட்டும், அத்தனை தனிப்பட்ட பிரியம், ஏன் உண்டாயிற்று?

"நாராயணா..., வாசுதேவா..."
என்ற பெயர்கள் சொல்லி அழைப்பதை விட,
"கோவிந்தா.., கோபாலா..."
என்று தன்னை பக்தர்கள் அழைப்பதையே விரும்பினாராம். ஏன்?
திருப்பதியில் அனைவரின் வாயிலும் "கோவிந்த" நாமமே எங்கும் ஒலிக்கிறது.



மாடு மேய்ப்பதை மனமுவந்து ஏற்று, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார். மாடு மேய்க்கும் கண்ணனாக இருந்தார்.

உலகையே காத்து ரக்ஷிக்கும் எம்பெருமானிடம்,
"நம்மை பகவான் நாராயணன் அல்லவோ ரக்ஷிக்கிறார்!!"
என்ற 'நன்றி உணர்வு இல்லாமல்' நாம் இருக்க,
எம்பெருமான் உலகையே மேய்ப்பதை காட்டிலும், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் தனிப்பட்ட விருப்பமாக மாடு மேய்க்கலாம் என்று அவதாரம் செய்ய வந்து விட்டாராம்.

மாட்டுக்கு ஒரு "விசேஷ குணம்" உண்டு.
ஜீவனுக்கு 'உடல்' கொடுத்து,
'புத்தி' கொடுத்து,
திடமான 'மனம்' கொடுத்து,
வாழ்வதற்கு 'பூமி'யும், 'ஆகாரமும்' கொடுத்து,
பேராபத்துக்கள் வராமல் இருக்க பஞ்ச பூதத்துக்கு அதிபதியான இந்திரன், வருணன், அக்னி, வருணன் போன்ற தேவர்களையும், தன் ஆணையால் எல்லை தாண்ட விடாமல் செய்து,
ரக்ஷித்து (மேய்த்து) கொண்டும் இருக்கும் "பரமாத்மா நாராயணனை", 
6 அறிவு இருந்தும், நன்றியோடு நினைப்பதில்லை துர்புத்தி உள்ள மனிதர்கள்.






அதே சமயம், எஜமானன், புல் மேய விட்டாலும், அந்த மாடு, மாட்டை மேய்ப்பவனை ஒரு கண்ணால் நன்றியோடு பார்த்து கொண்டே புல் மேயும்.
தன்னை ரக்ஷிக்கும் அந்த இடையனை நன்றியுடன் பார்க்கும்.

தன் எஜமானன் தன்னை ரக்ஷித்து உணவு கொடுக்கிறான் என்ற நன்றி மட்டுமில்லாமல், தன் பாலையே தன் எஜமானனுக்கு திருப்பி தரும்.

ஆனால், இந்த மனிதனோ, தான் மேய்வதற்காக போட்ட தீனியையே 'கபக்..கபக்..' என்று வாயில் போட்டுக் கொண்டு, மேய்ப்பவனை நினைத்து பார்க்காமல் இருக்கிறான்.
"கோவிந்தா" என்று சொல்லி வாயில் போட்டுக்கொண்டால் என்ன?
ஒரு ஐந்து அறிவு பசுவுக்கு இருக்கும் நன்றி உணர்வு, ஆறு அறிவுள்ள மனிதனிடம் இல்லையே!!

தனக்கு இந்த உணவை கிடைக்க செய்தவனை ஒரு க்ஷணம் நினைத்து பார்ப்பதும் இல்லையே!!, நன்றியும் இல்லையே!!.



ஆனால், மாடு அப்படியில்லையே. நன்றியுடன் இருக்கிறதே !!
மாடு, தனக்கு தீனி வைப்பவன் வந்தாலேயே ஆர்வத்தோடு "மா..." என்று தீனி போட்டவனிடம் நன்றி காட்டும்.

அன்னத்தை ஸ்ருஷ்டி செய்த நாராயணன், அந்த அன்னத்தை போட்டுக்கொள்ள நமக்கு 'வாயை'யும், வயிற்றையும் படைத்தார். 
'சுவை'யும் அவர் தானே கொடுத்தார். 
'பசி'யையும் ஸ்ருஷ்டி செய்தார், 
வாயில் போட்டு கொள்ள 'கை'யையும் அவர் தானே ஸ்ருஷ்டி செய்து நமக்கு கொடுத்தார்.
ஒரு மாட்டிடம் காணப்படும் நன்றி உணர்வு, இந்த மனிதனுக்கு இல்லையே? என்று வயிற் எரிய சொல்கிறார் ஆழ்வார்.
"கோவிந்தா...கோவிந்தா..." என்று சொல்லிக்கொண்டே இந்த மனிதர்கள் நன்றி உணர்வோடு தனக்கு கிடைத்த உணவை வாயில் போட்டுக்கொண்டால் என்ன?


ஒருவன் ஒரு கையால் சாப்பிடுகிறான்..
ஒருவன் இரண்டு கையாலும் சாப்பிடுகிறான்.
ஒருவன் பாய்ந்து கொண்டு சாப்பிடுகிறான்.
இப்படி சோற்றுக்கு பாய்ந்து பாய்ந்து சாப்பிடும் இவர்கள், கொடுத்தவனை ஒரு முறை நினைத்து "அரங்கா..." என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் குடியா முழுக போகிறது? 
அரங்கனை நன்றியோடு நினைக்கும் அடியவர்கள், "ரங்கா...ரங்கா.." என்று சொல்லிக்கொண்டே நன்றி உணர்வோடு சாப்பிடுகிறார்கள்.


6 அறிவு இருந்தும், நன்றி இல்லாத இவர்களுக்கு "கோவிந்தா..." என்ற நாமம் வாயில் வரவில்லையே!!
பசுக்களை தானே மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்ய, பசு மாடுகள் கண்ணனை பார்த்து விட்டால், தனக்கு மிகவும் பிடித்தமான புல் மேய கிடைத்தாலும் கூட, புல் மேய்வதை மறந்து கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமாம்.
பசு மாடு நன்றியுடன் இருப்பது ஆச்சரியமில்லை...
அதன் கன்று குட்டி, ஆசையோடு தன் தாய் பசுவிடம் பால் குடிக்க ஓடும் போது, அங்கு கண்ணனை பார்த்து விட்டால், தாய் பசுவின் மடியில் வாய் வைத்து, பால் சுரந்து கொண்டு இருக்கும் போதும், அந்த பாலை குடிக்க கூட நினைவில்லாமல், தன் எஜமானன் கண்ணனை நன்றியுடன் பார்த்து கொண்டு இருக்குமாம். 
தனக்கு மிகவும் பிடித்த உணவை, தன் தாயின் பாலையும் குடிக்க மறந்து தன் எஜமானனான குட்டி கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமானால் நன்றி விசுவாசம் என்றால் என்ன என்று புரிகிறது.

ஆனால் 6 அறிவு உள்ள மனிதனோ, தனக்கு கிடைத்த உணவை, சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறானே ஒழிய, இதை கிடைக்க செய்தவன் அந்த கோவிந்தன் தானே என்று ஒரு நன்றி விசுவாசம் காட்டுவதில்லையே!! 

இப்படி நன்றி கெட்டு சாப்பிடும் ஜனங்களை, உலகை மேய்க்கும் தொழில் விட, தான் ஒரு இடையன் என்று சொல்லிக்கொண்டு, இந்த நன்றியுள்ள மாடுகளை மேய்க்க தயாராகி விட்டாராம். 
உலக நிர்வாகம் ஒரு கடமையாக என்று நிர்வகிக்கும் பரவாசுதேவன், தானே இந்த பசுக்களை மேய்க்க ஒரு தனி அவதாரமாக கோபாலனாக வந்து விட்டார். 
நமக்கு உணவு கிடைக்க செய்வதே பகவான் தான். பசுவுக்கு புல் கிடைக்க செய்தவரும் அவர் தான். நமக்கு சாப்பிட உணவு கொடுத்ததும் அவர் தான். அவர் நம் உணவை சாப்பிட போவதில்லை. ஆனால் பசுவுக்கு தன் எஜமானன் மீது உள்ள நன்றியை போல, இந்த மக்கள் தன்னிடம் நன்றியை காட்டுகிறானா என்று தான் பார்க்கிறார். 
"நெய்வேத்தியம் செய்து சாப்பிட்டால் என்ன குறைந்து விடும்?" ஹிந்துக்களின் பழக்கம் அல்லவா.. 
அத்தனை நன்றி கெட்டு போய் விட்டானா மனிதன்?
எஜமானனுக்கு நன்றி காட்டும் குணம் 5 அறிவுள்ள நாயிடம், பசுக்களிடம் உள்ளதே. அந்த நன்றி நமக்கு வேண்டாமா.. ஈஸ்வரனிடம் ஒரு நன்றி உணர்ச்சி, நாம் சாப்பிடும் போது காட்ட வேண்டாமா? நெய்வேத்தியம் காண்பித்து, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டால் என்ன குறைந்து விடும் மனிதனுக்கு?
பசுவை தங்கள் உயிராக ஹிந்துக்கள் நினைப்பதில் காரணம் இல்லாமல் இல்லையே. எஜமானனிடம் நன்றி காட்டும் குணம் அல்லவா பசுவிடம் உள்ளது.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் காரணம் உண்டு.



எம்பெருமான் திருநாமம் சொல்லாமல் சாப்பிடும் நன்றி கெட்டவர்களை பார்த்து ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.

இலைக்கு முன் போட்ட சோற்றை, 'கோவிந்தா' என்று சொல்லாமல், ஒரு கையை ஊன்றி கொண்டு, இலைக்கு முன் உடகார்ந்து கொண்டு "கபக்.. கபக்.." என்று போட்டுக்கொள்ளும் நன்றி கெட்டவர்களை பார்த்து, 'அந்த சோற்றை நாய்க்கு போட்டாவது கொஞ்சம் நன்றியுடன் இருக்குமே' என்கிறார்.
தெய்வத்துக்கு நெய்வேத்தியம் காட்டாமல், நன்றி கெட்டு சாப்பிடுவதை காட்டிலும், அந்த சோற்றை ஒரு நாய்க்கு கொடுத்தால், அது கூட நன்றி உணர்ச்சியை காட்டுமே என்று, நெய்வேத்தியம் காட்டாமல், கோவிந்தா என்று சொல்லி உண்ணாத நன்றி கெட்டவர்களை பார்த்து கடிந்து கொள்கிறார் தொண்டரடிபொடியாழ்வார்.

நாய்க்கு, ஒரே ஒரு நாள், இலையில் ஓரமாக கொஞ்சம் உணவு வைத்தாலும், சோறு போட்டவனுக்கு நன்றியுடன் இருக்குமே. இப்படி வயிற் நிறைய சாப்பிட்டும், 'ஆமாம்.. என்ன பெரிதாக கொடுத்து விட்டார்?' என்று அகம்பாவம் கொண்டு தெய்வத்தை நிந்தனை செய்கிறானே!! நன்றி இல்லாது சாப்பிடுபவர்களை ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.
திருமாலையில், 'கோவிந்தா' என்று சொல்லாமல் நன்றிகெட்டு உண்ணும் நம்மை கடிந்து கொள்ளும் பாசுரம்...
அணி திருவரங்க மென்னா, 
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை 
விலக்கி நாய்க்கு இடுமி னீரே !!
-----  தொண்டரடிப்பொடியாழ்வார்.
மேய்ப்பவனை நன்றியுடன் நினைக்கும் ஸ்வபாவம் கொண்ட சாத்வீக குணம் கொண்ட பசுவை மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.



நாமும் நன்றி மறவாமல், நாராயணன் மீது அன்பு செலுத்துவோம்.

Hare Rama, Hare Krishna - Bhajan

Sandhya vandanam - Morning
Sandhya vandanam - Evening



Sandhya vandanam - Afternoon




Saturday 23 March 2019

சட்டை அணியாமல் கோவிலுக்கு வர சொல்வதின் நோக்கம் என்ன? பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏன்?

"சரணாகதி" என்றால் என்ன?



வெறும் "கும்பிடு" போடுவது மட்டும், "சரணாகதி" இல்லை.

"சரணம், சரணம்..." என்று ஒருவன் கத்தி விட்டதால் மட்டும், அது "சரணாகதி"ஆகி விடாது.

"உள்ளொன்று பேசி, புறமொன்று பேசுபவர்கள்",
  • சாதாரண மனிதனை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
  • எம்பெருமானை ஏமாற்ற முடியாது. 
எம்பெருமான் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்.
"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசுபவன்,
  • "சரணம் சரணம்..." என்று வெறும் வார்த்தையாக கத்தினாலும்,
  • "கும்பிடு" போட்டாலும்,
'எம்பெருமான்' நம் சரண கோஷங்களுக்கு மயங்குவதில்லை. 

வெளி வேஷங்களை விட, நம் இதயத்துக்குள் ஓடும் நம் எண்ண ஓட்டத்தை தான் பார்க்கிறார் எம்பெருமான்.

"போலியாக போட்ட பக்தி வேஷத்திற்கும், பக்தி கோஷத்திற்கும்", அதற்கான "புண்ணியங்கள்" கிடைக்க செய்கிறார். 
தன்னையே தருவதில்லை.
தன் தரிசனத்தை தருவதில்லை.
கனவில் கூட திவ்ய காட்சி தருவதில்லை.

"உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்" போலி பக்தனையும் விட்டு விடுவதில்லை எம்பெருமான்.
தொடர்ந்து விடாமல் 'பஜனையும், ராம ஜபமும்' செய்யும் போது,
எம்பெருமான் கருணை கொண்டு, அவனிடம் தான் இருப்பதை காட்டி, ஒரு சமயத்தில் நிஜ பக்தனாகவே ஆக்கி விடுகிறார்.
தன் பக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து கொள்கிறார். 
ஆரம்ப நிலையில், போலி பக்தியே செய்தாலும், நாராயணனை வழிபட்டவர்கள் நாசமாவதில்லை.
இதை நாராயணனே ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த எம்பெருமான், அர்ஜுனனிடம்
"ந மே பக்த ப்ரநஸ்யதி" என்று சொல்லும் போது
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று தானே உத்திரவாதம் தருகிறார்.



பகவானே "நம்மை காப்பேன்" என்று சொன்ன பிறகு,
கிருஷ்ண பக்தனுக்கு என்ன கவலை இருக்க போகிறது? 

கவலையே இல்லாதவர்கள் கிருஷ்ண பக்தர்கள். 
காரணம், அவர்கள் கவலையை பரமாத்மா சுமக்கிறார்.

நம்முடைய பூஜைகளும், ஜபமும் போலியாக இருந்தாலும், எம்பெருமான் சத்தியம் என்பதால், தொடர்ந்து நாம் சத்சங்கத்தில் இருந்து கொண்டே இருந்தால்,
ஒரு நாள், பெருமாள் நம் மீது கருணை கொண்டு, அஞானத்தை அகற்றி, நம் போலி பக்தியை அகற்றி, உள்ளும் புறமும் 'நாராயணனே கதி' என்கிற திட நம்பிக்கையை ஏற்படுத்தி, நம்மையும் ஆட்கொண்டு விடுவார்.

போலி பக்தியாக இருந்தாலும், தொடர்ந்து செய்ய வேண்டும். எம்பெருமான் கருணை நம் மீது படும் போது, நம் பக்தியும் நிஜமாகும்.

நம் இதயத்துக்குள் உள்ள பகவான், நாம் செய்யும் நிஜ பக்தியை கண்டு "சபாஷ்" போடுவதை நாமும் உணரலாம்.

"இவன் உண்மையில் என்னை மட்டுமே நினைத்து 'சரணம் சரணம்..' என்று சொல்கிறானா? இல்லை, இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று என்று இருக்கிறானா?" 
என்று இதயத்தை பார்க்கிறார் எம்பெருமான்.

பெருமாள் "நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்" என்பதால்,
கோவிலுக்கு சென்று நம் குறைகளை, நாம் சொல்லி தான், பெருமாளுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

எம்பெருமான் நாமத்தை சொல்வதற்காக தான் நமக்கு "வாக்கு" கொடுக்கப்பட்டு உள்ளது.
பரமாத்மா இதயத்தோடு பேசுபவர்.

"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசும் குணம்,
ஸ்வபாவமாக ஆண்களிடம் இருப்பதாலும், 
பெருமாளோ இதய ஓட்டத்தை கவனிப்பவர் என்பதாலும்,
கோவிலுக்கு செல்லும் ஆண்கள், தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு செல்வதை கடைப்பிடித்தனர்.
'உள்ளும் புறமும் ஒரே எண்ணம் உள்ள' ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், ஞானிகள், சித்தர்கள், கோவிலில் சென்று பகவானை தரிசிக்கும் போது, தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வழிப்பட்டதற்கு காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

'இதய ஓட்டத்தை கவனிக்கும் பெருமான்', இவர்கள் பாடிய பிரபந்தங்களை, பாசுரங்களை, கவசங்களை ஏற்றார். தெய்வ கவிகள் ஆனார்கள். 
இன்று இவர்கள் பாடிய திவ்ய பாசுரங்களை பாடினாலும் நமக்கு பக்தி ஏற்படுகிறது.
"தன் பக்தியில் களங்கம் இல்லை. தான் சொல்லும் கோஷத்தில் பொய் இல்லை, இதயப்பூர்வமானது" 
"பகவான் நம் இதயத்தை பார்க்கட்டும்"
என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பொதுவாக ஆண்கள் இடுப்பில் அங்க வஸ்திரம் கட்டிக்கொண்டு பகவான் முன் சென்றனர்.
காலப்போக்கில், "ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு வரவும்" என்று வழக்கமாக மாறியது.


சட்டை அணியாமல் வர சொல்வதின் நோக்கம், பரமாத்மா நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார் என்பதால் தான்.
பெருமாளிடம் நம் மரியாதையை வெளிப்படுத்தவும் தான்.

"இதயத்தோடு பழகும் பகவானிடம் நம் போலி வார்த்தைகள் எடுபடாது" என்று உணர்வதற்கே.

ஹிந்துக்களின் எந்த ஒரு நியதியும், பக்தியை வளர்த்து, நம்மை பெருமாளிடம் சேர்ப்பதற்காக தான்.

பொதுவாக பெண்களால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது ஸ்வபாவமாக இருக்காது. 
பெண்கள் ஸ்வபாவத்திலேயே நளினமானவர்கள். 
அவர்கள் முகமே அவர்கள் எண்ண  ஓட்டத்தை காட்டிவிடும்.
அவர்களால் ரகசியத்தை தங்களுக்குள் பூட்டி வைக்கவும் இயலாது.




ஸ்வபாவத்திலேயே 'அன்புக்கும், அடைக்கலம் தருபவருக்கும்' வசமாகும் இயல்பு உடையவர்கள் பெண்கள்.
ஆண்களை போல கரடு முரடானவர்கள் அல்ல. போலீஸ் உடையில் இருந்தாலும், ஆண்களை போல விறைப்பாக நின்றாலும், பெண்களின் நளினத்தை மறைக்க முடியாது.
ஸ்வபாவத்திலேயே எளிதில் நம்பிவிடும் இயல்பு உடையவர்கள்.

"அன்பும் அடைக்கலமும் கொடுப்பான்" என்பதால் தானே, 20-25 வருடங்கள் வளர்த்த தாய், தந்தையை விட்டு, கணவனோடு செல்ல முடிகிறது ஒரு பெண்ணால்.
இது இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஸ்வபாவயத்திலேயே உள்ள குணமாக இருக்கிறதே.

இதன் காரணமாக தான், பெண்களுக்கு "தெய்வ பக்தியும்" எளிதில் ஏற்கிறது.

"நாராயணனே மூல பொருள். நாராயணனே பரமாத்மா"
என்று சொல்வதால் பெண்கள் மயங்குவதில்லை.
"நாராயணன் அன்பு வடிவானவன், அடைக்கலம் தருபவன்"
என்று கேட்கும் போதே, பெண்களுக்கு இயற்கையாகவே "தெய்வ பக்தி" உண்டாகிறது.
நாராயணன் என்ற வார்த்தைக்கே "மனித (நர) சமூகத்திற்கு அடைக்கலம் தருபவன்" என்று பொருள்.

நம் பாரத நாட்டில், நம் வீட்டில் வாழ்ந்த, வாழும் பெண்களால் தானே தெய்வ பக்தி வளர்கிறது. 
அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் 'நாராயணனே கதி' என்று பக்தியை ஊட்டி வளர்க்கும் கடமையும், இன்றைய பெண்களுக்கு உள்ளது.. 
பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதய பூர்வமாக தான் இருக்கும்.
வெளியில் ஒன்று, இதயத்தில் ஒன்றாக இருக்காது.

பூக்களை "பெண்களுக்கு" உதாரணம் காட்டி,
வண்டை போன்ற குணம் உடையவன் "ஆண்" என்று கவிகள் சொல்வதுண்டு.


பொதுவாகவே, ஆண்கள்  ஆராய்ச்சி செய்து தான் நம்புவார்கள். எதையும் எளிதில் நம்பமாட்டார்கள்.
நம்பிவிட்டால் பூரண சரணாகதியும் செய்வார்கள்.
நாராயணனே "பரதெய்வம்" என்று வேதமே சொன்னாலும்.
அவர் தான் பிரம்மாவை படைத்தார்.
அவர் கருணா வடிவானவர் என்று சொன்னாலும்,
அவர் படைத்த ப்ரம்மாவின் மூலம் தான் உலகமே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது  என்று வேதமே சொன்னாலும்.
ப்ரம்மா நமக்கு பாட்டனார் (தாத்தா - பிதாமஹ) என்றும்,  .
நாராயணன் நம் பிதாமஹருக்கும் தந்தை (ப்ரபிதாமஹ) என்று "உறவு" காட்டி பேசினாலும்,
ஆண்கள், இதயபூர்வமாக அனுபவத்திலோ, ஆராய்ச்சியிலோ நிர்ணயம் ஆகாத வரை, சரணாகதி செய்ய மாட்டார்கள்.
இது ஆண்களின் குணம். கடின ஹ்ருதயம் உள்ளவர்கள் ஆண்கள்.

பெண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதை போல,
ஆண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதில்லை.
பக்தியில் "உருக்கம்" முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
"எம்பெருமானே கதி" என்று வாழ்ந்த ஆழ்வார்கள், மகான்கள் கூட, எம்பெருமான் புருஷன் என்றும், தன்னை ஒரு பெண்ணாக பாவித்தும், பாசுரங்கள் பாடியதை பார்க்கிறோம்.

ஆணாக இருந்தும், எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விடுவதற்கு, தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது தான் ஆழ்வார்களுக்கே அந்த பக்தி இனித்தது என்றால், "பக்தி" பெண்களுக்கு சுலபமாக ஸித்திக்கிறது என்று தெரிகிறது.

இதன் காரணமாகவே,
இன்றைய பெண்கள் வேதத்தில் சொல்லாத, பொய் தெய்வங்களை கூட நம்பி விடுகிறார்கள்.
கற்பனையான தெய்வங்களை "இவர் கருணைமிக்கவர், உங்களுக்கு அடைக்கலம் தருபவர்" என்று சொல்லும் போது, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், பொய் மதங்களில் சேர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
பொய் மதத்தில், தெய்வம் என்று போற்றப்படும் குப்பனும், சுப்பனும் கூட, உலகை படைத்த நாராயணன் அனுகிரஹத்தின் மூலம் தான் சில காலம் வாழ்கிறார்கள். பலன் தருவது நாராயணனே.

இதன் காரணமாகவே,
உலகில் அனைவரிடமும் பழக வாய்ப்பு உள்ள இன்றைய கால பெண்கள், கொஞ்சம்  அன்பாகவும், பாதுகாப்பு உணர்வும் கொடுப்பது போல ஒருவனை நினைத்தாலேயே, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், கண்டவனிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
"சுயநலமே முக்கியம்" என்று, இதுநாள் வரை வளர்த்த தாய் தந்தையையும் மீறி விடுகிறார்கள்.

பெண்களுக்கு உள்ள நளின குணம், "தெய்வ பக்தி"க்கு உகந்ததாக உள்ளது.
ஆனால்,
சமுதாயத்தில் "வண்டை" போன்ற குணம் உடைய ஆண்களுடன், இவர்கள் பழகும் போது, ஏமாற்றம், கற்பழிப்பு, விவாகரத்து, என்று முடிந்து விடுகிறது.
பெற்றோரை எதிர்த்து யாரையோ நம்பி ஓடுவதால், பெற்றோர் தயவையும் இழந்து, பல பெண்கள், வாழ்க்கையை தொலைத்து, மறுமணம் செய்து கொண்டு, முந்திய கணவன், புது கணவன் என்று, பல ஆண்களுடன் உறவு கொண்ட பாவத்தை பெறுகிறார்கள்.




"பூவை" போன்ற பெண்களை, நளின குணம் கொண்ட பெண்களை, "வண்டை" போன்ற இதயம் கொண்ட  ஆண்களுடன் பழக விடும் சமுதாயத்தில், இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது.

கட்டவிழ்த்து விட்ட கிறிஸ்தவ சமுதாயத்தில் எத்தனை விவாகரத்துகள், மறுமணங்கள் நடக்கின்றன என்று கிறிஸ்தவ நாடுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ஹிந்து மதத்தில், கிறிஸ்தவ கொள்கைகளான மறுமணம், விவாகரத்து அனுமதிக்கபட்டவுடன், இந்தியாவும் கலாசார சீரழிவை இன்று சந்திக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவாகரத்து, ஓடிப்போய் கல்யாணம் செய்தவர் என்று வெட்கக்கேடான நிலையில் இன்று இந்தியா உள்ளது.

ஹிந்து மதத்தை காக்க, ஹிந்து பெண்களுக்கு கலாச்சாரத்தை சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.
சுயநலத்தை விட, தாய் தந்தையை நம்ப வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
"எத்தனை பெரிய கோடீஸ்வரன் ஆனாலும், எத்தனை பெரிய மன்மதனாக இருந்தாலும், எத்தனை அன்பு ஒழுக பேசினாலும்", சீதை, அருந்ததியை போன்ற பெண்கள் பிறந்த நாட்டில் பிறந்தவள் என்று இருக்க இன்றைய பெண்களுக்கு கற்று தர வேண்டும்.

ஆண் சமுதாயம், ஸ்வபாவத்தின் காரணமாக எதையும் உடனே நம்புவதில்லை.
அதனால் உலகில் பழகினாலும், யாரையும் உடனே நம்புவதில்லை.
ஆனால்,
வண்டை போன்ற குணம் உள்ளவனாக ஆண் இருப்பதால்,  ஒரு பூவில் அமர்ந்து தேன் குடித்து விட்டு, மற்றொரு பூ கிடைத்தால் தாவி விடும் குணம் உடையவன்.
எளிதில் நம்பிவிட மாட்டான் என்பதால் ஆண்கள் உலகில் பழக ஏற்றவன் என்றாலும், இவனின் மற்றொரு குணம் பெண்களுக்கு ஆபத்தானது.
இது பொதுவாக ஆண்களின் குணம் என்பதால் தான், ஆண்களுக்கு மனதை கட்டுப்படுத்த யோகா, பிராணாயாமம், தவம், போன்ற மன அடக்க பயிற்சிகள் சொல்லி தரப்பட்டன.

இன்றோ, எந்த ஆணுக்கும் யோக பயிற்சியோ, ப்ராணாயாமமோ செய்ய தெரியாது.
மனதை அடக்கும் வழியை அடைத்து, இன்று மாமிசம் உண்டு, சிகரேட் புகைத்து, குடித்து மனதின் வேகத்தை இன்னும் வேகப்படுத்தி கொண்டு போகிறது ஆண் சமூகம்.
உலகில் பலருடன் பழக வேண்டிய பெண்கள், தங்களை  காத்து கொள்ள, நம் பாரத நாட்டில் பிறந்த கற்புக்கரசிகளின் வாழ்க்கையை தினமும் ஸ்மரிக்க வேண்டும்.


"என்னை திருமணம் செய்து கொள்! என்னிடம் இல்லாத ஐஸ்வர்யம் உலகில் எவனிடத்திலும் இல்லை. 
யமன் என் அனுமதி இல்லாமல் உள்ளே வர முடியாது. மண்டோதரியை கூட விட்டு, உன்னை பட்டமகிஷி ஆக்கிவிடுகிறேன். 
உனக்காக நான் எதையும் செய்ய காத்து இருக்கிறேன்.
காட்டில் பரதேசியாக அலையும் ஸ்ரீ ராமனை விடு. அவன் இலங்கை வரை வந்து உன்னை காப்பாற்ற போவதே இல்லை. 
கைலாயத்தையே தூக்கிய என் பலத்தை கண்டு உலகமே அஞ்சும். அப்படிப்பட்ட நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன்.  
உன்னை தேவர்களும் வழிபட செய்கிறேன். 
என்னை மனம் செய்து கொள்"
என்று என்னென்னவோ பேசியும், ஆசை வார்த்தைக்கு மயங்க மாட்டேன் என்று ஒரு புல்லை எடுத்து அவன் முன்னால் தூக்கி போட்டாள் சீதை. 
இந்த கற்புக்கரசிகளான சீதையை போல, பெண்கள் நெருப்பாக இருந்தால், இந்த உலகில் மானத்தோடு வாழலாம்.
பெற்றோர் சொல்லும் பையனை மணந்து வாழ்ந்தால் போதும் என்று நினைக்காத பெண்கள் எதிர்காலம், கேள்விக்குறியாகவும் போகலாம்.

பக்திக்கு உதவும் பெண்ணின் நளின உள்ளம், உலகில் ஆபத்தை கொடுப்பதால், பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.   

வயது வந்த பின், தன்  சகோதரனை கூட தொட்டு பேச அனுமதிக்காத பாரத பூமியில் பிறந்தும், வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் கல்லூரியில், ஆண்களை தொட்டு கொண்டு பேசும் பெண்கள், தானே அவமானத்தை தேடி கொள்கிறார்கள்.
இந்த கலாச்சாரம் (மறுமணம், விவாகரத்து) இந்தியாவுக்குள் நுழைந்ததே 1947ல் அமைந்த காங்கிரஸ் அமைப்பால் தான்.
அன்று இருந்த தேச தலைவர்களில் 'நேரு' உட்பட ஆங்கில மொழியில் படித்து, ஆங்கில மோகம் கொண்டவர்கள்.
இவர்கள் கல்வியுடன், மேற்க்கத்திய கலாச்சராமான மறுமணம், விவாகரத்து போன்ற கொள்கைகளை கொண்டு வந்தனர்.
70 ஆண்டுகளில், ஒரு மாதம் கூட வாழாத கணவனும் மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ, சட்டத்தில் ஏற்பட்டு செய்து, இந்திய கலாச்சாரத்தை கெடுத்தனர்.

விவாகரத்து, மறுமணம் இது போன்ற சட்டங்களால், பெண்களிடம் பொறுமை அழிந்து விட்டது.

பொறுமை இல்லாத பெண், தானும் கெட்டு, குடும்பத்தையும் கலாசார சீரழிவுக்கு இழுத்து செல்கிறாள்.

சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், ஆன்மீகமும், பக்தியும் எளிதில் கைகூடும் பெண்கள், கோவில் பக்கமோ, நல்ல விஷயங்களை கேட்பதோ, பஜனைகளில் கலந்து கொள்வதோ கிடையாது.

யாராவது அன்பாக பேசினால், உனக்காக உயிரையும் கொடுப்பேன், உன் தாய் தந்தையையும் சேர்த்து காப்பாற்றுவேன் என்று சொன்னால், "இவனோடு வாழ்வோம்" என்று ஸ்வபாவத்தில் இதற்காக ஏங்கும் குணம் உடைய பெண்கள், பல ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.

பெண்கள், கற்புக்கரசிகளான பெண்களின்  சரித்திர படி வாழ ஆசைப்பட வேண்டும்.
பெண்கள், அனாவசியமாக ஆணிடம் சகஜமாக பேசுவது, அரட்டை அடிப்பதை, தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆண் சொக்க தங்கமாக இருந்தாலும், பேரழகனாக இருந்தாலும், துச்சமென நினைக்க வேண்டும் பெண்கள்.

உலகத்தில் பழகுவதால், பெண்கள் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.

Hare Rama, Hare Krishna Bhajan

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka