8 Interesting Question and Answer - One must know, Before getting married/involve in materialistic life.
This is not just for Hindus. All human born should know this.
Narada muni asked these 8 questions to the sons of daksha prajapati named as "Haryasvaas".
There is a kingdom where only one man lives (rest all are women). Do you know that man? (कथं स्रक्ष्यथ वै प्रजा:)
There is a Cave hole thru' which, once entered, can never come out. Do you know that Cave hole? (अदृष्ट्वा अन्तं भुवो यूयं)
There is a woman who have multiple faces. Do you know her? (बहुरूपां स्त्रियं)
That women like an unchaste women (prostitute) gets attracted to many male, but also have her own husband. Who is that husband? (पुमांसं पुंश्चली पतिम्)
There is a river flowing in both directions. Do you know that river? (नदीम् उभयतो वाहां)
There is a wonderful home, made of twenty-five different materials. Do you know that? (पञ्च पञ्च अद्भुतं गृहम्)
There is a swan that vibrates various sound (हंसं चित्रकथं). what is that sound? why Swan?
There is an object made of sharp edges that revolve automatically (क्षौर-पव्यं स्वयं भ्रमि).. What is that?
Narada answered these question as below, to enlighten Haryasvas who were planning to enter materialistic pleasures and getting married and having child.
1. There is a kingdom where only one man lives. Do you know that man? (कथं स्रक्ष्यथ वै प्रजा:)
Answer: The only one man who lives everywhere in his kingdom is that bhagavan vishnu.
2. There is a hole from which, having entered, no one emerges. Do you know that hole? (अदृष्ट्वा अन्तं भुवो यूयं)
Answer: The hole thru which having entered no one emerges is supreme spiritual world called vaikunda (प्रत्यग्धा धामा)
3. There is a woman who have multiple faces. Do you know her? (बहुरूपां स्त्रियं)
Answer: Intelligence is that women.
4. That women like an unchaste women (prostitute) gets attracted to many male, but also have her husband. Who is that husband? (पुमांसं पुंश्चली पतिम्)
Answer: Intelligence behave like a prostitute and gets attracted to different Materialistic Goals. But she (intelligence) ignores her own husband named jeevatma (us / soul).
5. There is a river flowing in both directions. Do you know that river? (नदीम् उभयतो वाहां)
Answer: In this world, there is a big river flowing on one side for creation (srushti) and other side flowing for dissolution (pralaya) (सृष्टि अप्यय करीं मायां).
6. There is a wonderful home, made of twenty-five materials. What is that? (पञ्च पञ्च अद्भुतं गृहम्)
Answer: world is created with mesmerizing 25 tattva (पञ्च विंशति तत्त्वानां पुरुषो)
25 tattva = purusha + avyakta (un-manifest Prakrti) + mahath (intellect)+ ahankaara (sense of "i" or ego) + manas (mind) + 5 mahat bhoota + 5 Tan maatra + 5 sense organs + 5 action organs
7. There is a swan that vibrates various sound (हंसं चित्रकथं). What is that sound?
Answer: vedic literature (ऐश्वरं शास्त्रम्) is that various sound. Vedic Literature talks about bhagavan and also about methods to acquire materialistic wealth. Swan is known to identify pure and impure water. It has ability to take only pure water.
Swan is referred here to inform us, to take only the vedic sounds which talk about Bhagavan, and must ignore other materialistic vedic prayers.
8. There is an object made of sharp edges that revolve automatically (क्षौर-पव्यं स्वयं भ्रमि).. What is that?
Answer: Time (कालचक्रं) is the object revolve automatically and made of sharp razords and thunderbolts. Once time gone, it never comes back.
After hearing this from Narada, Haryasvaas decided not to involve in materialistic pleasures thru' this world and went to spiritual path to achieve moksha (vaikunda)
'வேதவியாசர்' வேதத்தையும், தான் இயற்றிய மகாபாரத இதிகாசத்தை அவரது சிஷ்யரான "வைசம்பாயனருக்கும்', சூத குலத்தவரான 'ரோமஹர்சணருக்கும்' சொல்லி வைத்தார்.
தான் இயற்றிய பாகவதத்தை சுக ப்ரம்மத்துக்கு மட்டும் சொல்லி வைத்தார்.
பிராம்மண தாய்க்கும் (spiritual), க்ஷத்ரியத் தந்தைக்கும் (protection) பிறந்தவர்களை, 'சூதர்கள்' என்று அடையாளம் கண்டனர்.
ரோமஹர்சணர், இதிகாச புராணங்களை (மகாபாரதம், இராமாயணம்), ஸ்மிருதிகளை மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குவார். ஆதலால் 'சூத பௌராணிகர்' என்று அழைக்கப்பட்டார்.
'பௌராணிகன்' என்றால் உபன்யாசம் செய்பவர் என்று அர்த்தம்.
அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான, பரிக்ஷித்துக்கு, 'சுக ப்ரம்மம்' ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை பற்றி கூறும் 'பாகவதத்தை' உபதேசித்தார்.
சுகரும், பரிக்ஷித்தும் பேசியதை அங்கு குழுமி இருந்த பல ரிஷிகள் கேட்டனர். அப்போது, அங்கு இருந்த ரோமஹர்சணரின் புத்திரனான உக்கிரசிரவசும் கேட்டார்.
அர்ஜுனனின் கொள்ளுப்பேரனும், அபிமன்யுவின் பேரனும், பரிக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயனுக்கு, வைசம்பாயனர் அவனுடைய குடும்ப சரித்திரமான மஹாபாரத சரித்திரத்தை கூறினார்.
பிறகு, உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், தான் கேட்ட பாகவதத்தை, ப்ருகு ரிஷியின் வழியில் தோன்றிய சௌனக ரிஷிக்கு சொல்ல வந்தார்.
ப்ராம்மணரான சௌனக ரிஷி, தன் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுடன், ஆயிரக்கணக்கான ரிஷிகளுடன் கீழே அமர்ந்து கொண்டு, பெரிய ஆசனத்தில் சூத பௌராணிகரான உக்கிரசிரவஸை அமர வைத்து, பாகவத, மஹாபாரத சரித்திரத்தை ஆசையுடன் கேட்டார்கள்.
மஹாபாரத போர் முடிந்து, இறந்து போன அனைத்து சொந்தங்களுக்கும், பாண்டவர்கள் கங்கையில் ஈம காரியங்களை செய்து, கங்கா தீர்த்தத்தால் தர்ப்பணம் செய்தனர்.
பெரும் சோகத்தில் இருந்தார் யுதிஷ்டிரர்.
கிருஷ்ண பரமாத்மா துவாரகை செல்ல முடிவு செய்து கிளம்ப, அந்த சமயத்தில், அஸ்வத்தாமா உத்தராவின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கி பிரம்மாஸ்திரம் எய்து விட்டான்.
மந்திர பலத்தில், சிசுவை தாக்க வந்த பிரம்மாஸ்திரத்தை கண்டு ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தாள்.
கட்டை விரல் அளவுக்கு ரூபம் எடுத்து, கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை காப்பாற்றினார் பரமாத்மா.
துவாரகை செல்ல தேரில் ஏற, அத்தையான குந்தி தேவி, ஸ்ரீ கிருஷ்ணன் தங்கள் குடும்பத்துக்கு செய்த உதவியை நினைத்து ஸ்துதி செய்தாள்.
கிருஷ்ணனே 'பரமாத்மா நாராயணன்' என்று சொல்லி நமஸ்கரித்தாள்.
துன்பம் வரும்போதெல்லாம் கூடவே இருந்த கிருஷ்ணரின் கருணை நினைத்து, ஆச்சர்யமாக, 'தனக்கு துக்கமே கொடுக்க வேண்டும்' என்று கூட வேண்டினாள்.
பிறகு, யுதிஷ்டிரர் 'இப்போது துவாரகை போக வேண்டாம்' என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். மீறமுடியாமல் கிருஷ்ணர் அங்கேயே இருந்தார்.
'தன்னால் தான் இத்தனை குடும்பங்கள் நாசமாகி போனது.
சொத்து சண்டையில் இப்படி அநியாயம் செய்து விட்டேனே' என்று வருந்தினார்.
'தனக்கு வெளி வரமுடியாத நரகமே கிடைக்கும்' என்று கூட சொல்லி சொல்லி அழுதார்.
"இப்படி (இதி) பல லட்ச மக்களை கொன்று! பெரும் துரோகம் செய்து! (ப்ரஜா த்ரோஹாத்) தான் அதர்மம் செய்து விட்டோமோ?" என்று தர்மபுத்திரர் (யுதிஷ்டிரர்) பயந்தார் (பீத:).
தானே அனைத்து தர்மம் விஷயங்களையும் அறிந்து இருந்தாலும் (ஸர்வ தர்ம விவித்சயா), இந்த மனோ நிலையில், தன் தாத்தா பீஷ்மர் (தேவவ்ரத) எங்கு (யத்ர) அம்பு படுக்கையில் கிடந்தாரோ (அபதத்), அந்த (ததோ) போர்க்களத்திற்கு வந்தார் (வினஷனம் ப்ராகாத்).
ததா தே ப்ராதர: சர்வே
சத் அஸ்வை: ஸ்வர்ண பூஷிதை: |
அன்வ கச்சன் ரதைர் விப்ரா
வ்யாச தொளம்ய ஆதயஸ் ததா ||
तदा ते भ्रातर: सर्वे सद्-अश्वै: स्वर्ण-भूषितै: ।
अन्वगच्छन् रथै: विप्रा व्यास-धौम्य-आदय: तथा ॥ 2
அப்பொழுது (ததா) அவருடைய (தே) சகோதரர்கள் அனைவரும் (ப்ராதர: சர்வே), தங்க கவசங்கள் அணிந்திருந்த (ஸ்வர்ண பூஷிதை:) உயர்ந்த ரக குதிரைகள் (சத் அஸ்வை:) பூட்டப்பட்ட அவரவர்களுடைய தேரில் (ரதைர்) அமர்ந்து, ஒருவர் பின் ஒருவராக (அன்வ கச்சன்) தொடர்ந்து வந்தனர்.
அவர்களை தொடர்ந்து ப்ராம்மணர்களான (விப்ரா) வேத வியாசரும், வ்யாக்ரபாதரின் பிள்ளையும், பாண்டவர்களின் குருவான தொளம்யரும் (வ்யாச தொளம்ய), மேலும் (ததா) பலரும் (ஆதயஸ்) தொடர்ந்து வந்தனர்.
இப்படி ப்ராம்மணர்களும் (விப்ரர்ஷே) கிளம்பி செல்ல, தேரில் (ரதேன) அர்ஜுனனோடு (ச-தனஞ்சய:) தானும் கூட அமர்ந்து கொண்டு வந்தார், கிருஷ்ண பரமாத்மா (பகவானபி).
இப்படி பலரும் (ஸ தைர்) பின் தொடர்ந்து வர, பிரபுவாக இருக்கும் (வ்யரோசத) யுதிஷ்டிரரை (ந்ருப:) கண்ட போது, உலக செல்வங்களை தன் கையில் கொண்டிருக்கும் குபேரன் (குவேர) தன் பரிவாரங்களுடன் (இவ குஹ்யகை:) வருவது போல இருந்தது.
த்ருஷ்டா நிபதிதம் பூமௌ
திவஸ் ச்யுதம் இவ அமரம் |
ப்ரணேமு: பாண்டவா பீஷ்மம்
ச அனுகா: சஹ சக்ரினா ||
दृष्ट्वा निपतितं भूमौ दिव: च्युतम् इव अमरम् ।
प्रणेमु: पाण्डवा भीष्मं स अनुगा: सह चक्रिणा ॥
அமரர்களான தேவர்கள் (அமரம்) ஆகாயத்திலிருந்து (திவஸ்) பூமியில் விழுந்தது (ச்யுதம்) போல (இவ), போர்க்களத்தில் பீஷ்ம தாத்தா பூமியில் (பூமௌ) கிடப்பதை (நிபதிதம்) பார்த்தனர் (த்ருஷ்டா).
அவர்களை தவிர, அப்பழுக்கற்ற (அமலா:) மேலும் (அன்யே ச) பல முனிவர்கள், பிராம்மணர்கள் (முனயோ ப்ரஹ்மன்), ப்ரம்ம அனுபூதியில் உலகையே மறந்த ஞானிகளும் (ப்ரஹ்மராத) குழுமியிருந்தனர் (ஆதய).
கஷ்யபரும், ஆங்கீரசரும் (கஷ்யப ஆங்கிரச) தங்கள் சிஷ்யர்களோடு (சிஷ்யைர் உபேதா) வந்து (ஆஜஃமு:) சேர்ந்து விட்டனர் (ஆதய).
தான் சமேதான் மஹா பாகான்
உபலப்ய வசு உத்தம: |
பூஜயாமாச தர்மஞ்யோ
தேச கால விபாகவித் ||
तान् समेतान् महाभागान्उपलभ्य वसुउत्तम: ।
पूजयामास धर्मज्ञो देशकाल विभागवित् ॥
இப்படி மஹாத்மாக்களான (மஹா பாகான்) இவர்கள் அனைவரும் (தான்) வந்து சேர்ந்து நிற்க (சமேதான்), 8 வசுக்களில் ஒருவரான உத்தமர் பீஷ்மர் (வசு உத்தம:), அனைவரையும் வரவேற்றார் (உபலப்ய).
தேச, காலத்தின் வேறுபாடு தெரிந்தும் (தேச கால விபாகவித்), தர்மாத்மாவான (தர்மஞ்யோ) பீஷ்மர் இந்த நிலையிலும், அனைவரையும் பூஜித்தார் (பூஜயாமாச).
க்ருஷ்ணம் ச தத் ப்ரபாவஞ்ய
ஆஸீனம் ஜகதீஸ்வரம் |
ஹ்ருதிஸ்தம் பூஜயாமாச
மாயயாஉபாத்த விக்ரஹம் ||
कृष्णं च तत् प्रभावज्ञ आसीनं जगदीश्वरम् ।
हृदिस्थं पूजयामास माययाउपात्त विग्रहम् ॥
உலகத்துக்கே ஈஸ்வரனும் (ஜகதீஸ்வரம்), அனைவரது இதயத்தில் வசிப்பவரும் (ஹ்ருதிஸ்தம்), தன் மாய சக்தியால் (மாயயா), ரூபம் தரித்து (விக்ரஹம்) அவதரித்து (உபாத்த) அமர்ந்து கொண்டு (ஆஸீனம்) இருக்கும் கிருஷ்ணரையும் (க்ருஷ்ணம் ச), அவர் மகத்துவம் தெரிந்திருந்த (ப்ரபாவஞ்ய), பீஷ்மர் பூஜித்தார்.
பாண்டு புத்ரான்உபாசீனான்
ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான் |
அப்யாசஷ்ட அனுராக அஸ்ரை:
அந்தீ பூதேன சக்ஷுஷா ||
पाण्डु पुत्रान्उपासीनान् प्रश्रय प्रेम सङ्गतान् ।
अभ्याचष्ट अनुराग अश्रै: अन्धीभूतेन चक्षुषा ॥
பீஷ்ம தாத்தாவின் பாசத்தை நினைத்து (ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான்), கண்ணீர் விட்டு கொண்டே, அமைதியாக பாண்டவ சகோதரர்கள் அமர்ந்து (பாண்டு புத்ரான் உபாசீனான்) இருந்தனர்.
இவர்களை கவனித்த (சக்ஷுஷா) பீஷ்மர், பெருமகிழ்ச்சியுடன் (அந்தீ பூதேன) ஆனந்த கண்ணீருடன் (அனுராக அஸ்ரை:), பாரத போரில் வெற்றி கண்ட பாண்டவர்களை பாராட்டினார் (அப்யாசஷ்ட).
(பீஷ்மர் பேசுகிறார்) பீஷ்ம உவாச
அஹோ கஷ்டம் அஹோ அந்யாய்யம்
யத் யூயம் தர்ம நந்தனா: |
ஜீவிதும் ந அர்ஹத க்லிஷ்டம்
விப்ர தர்மாத் அச்யுத ஆஸ்ரயா: ||
भीष्म उवाच
अहो कष्टम्अहो अन्याय्यं यद् यूयं धर्म-नन्दना: ।
जीवितुं न अर्हथ क्लिष्टं विप्र धर्मा अच्युत आश्रया: ॥
தர்ம புத்ரா !! (தர்ம நந்தனா:) நீங்கள் அனைவரும் (யூயம்), ஐயோ, எத்தனை (யத்) கஷ்டங்கள்! (அஹோ கஷ்டம்) ஐயோ, அநியாயங்களை! (அஹோ அந்யாய்யம்) எதிர்கொண்டீர்கள்.
இனி வாழ முடியுமா? (ஜீவிதும் ந அர்ஹத) என்ற அளவுக்கு உங்களுக்கு துன்பங்கள் சம்பவித்ததே (க்லிஷ்டம்)! இந்த கஷ்ட காலங்களில், உங்களை ப்ராம்மணர்களும் (விப்ர), உங்கள் தர்மமும் (தர்மாத்), உங்களை விட்டு என்றுமே பிரியாத அச்சுதனான கிருஷ்ணரும் (அச்யுத) தானே உங்களை காத்தனர் (ஆஸ்ரயா:).
என் அருமை மருமகள் (வது:) குந்தி (ப்ருதா), அதி-ரதனான பாண்டுவின் (அதிரதே பாண்டௌ) இறப்பிற்கு பிறகு (சம் ஸ்திதே), பல குழந்தைகளுடன் (பாலப்ரஜா) கஷ்டத்தை அனுபவித்தாள். நீங்கள் வளர்ந்த பிறகும் (தோகவதி), உங்களின் செயல்களால் (யுஸ்மத் க்ருதே) தொடர்ந்து (முஹு:) பலவித கஷ்டத்தையே (பஹுன் கலேசான்) அனுபவித்தாள் (ப்ராப்தா).
சர்வம் காலக்ருதம் மன்யே
பவதாம் ச யத் அப்ரியம் |
ச-பால: யத்வசே லோக:
வாயோர் இவ கனாவலி: ॥
सर्वं कालकृतं मन्ये भवतां च यद्अप्रियम् ।
स-पालो यद्वशे लोको वायोरिव घनावलि: ॥
உங்களுக்கு (பவதாம் ச) என்னென்ன கசப்பான சம்பவங்கள் நேர்ந்ததோ (யத் அப்ரியம்), அவையெல்லாம் (சர்வம்) தலைவிதி (காலக்ருதம்) என்றே என் மனதுக்கு தோன்றுகிறது (மன்யே).
எப்படி மேக கூட்டங்களை (கனாவலி:) தன் ஆளுமையில் காற்று (வாயோர்) கொண்டுபோகிறதோ, அது போல (இவ), இந்த உலகத்தில் (லோக:) இருக்கும் அனைவரின் காலத்தையும் (யத்வசே) ஒருவர் கட்டுப்படுத்தி பரிபாலிக்கிறார் (ச-பால:).
எங்கு (யத்ர) தர்மமே ரூபமான ராஜா யுதிஷ்டிரனும் (தர்மசுத: ராஜா), கதயை ஏந்தி இருக்கும் மஹாபலம் கொண்ட பீமன் இருந்தும் (கதாபானிர் வ்ருகோதர:), காண்டீபமும் வில்லும் (காண்டீவம் சாபம்) கையில் ஏந்தி இருக்கும் (அஸ்த்ரி) பராக்ரமசாலியான க்ருஷ்ணன் என்ற அர்ஜுனன் (க்ருஷ்ண:) இருந்தும், உங்கள் நலனை எப்போதும் விரும்பும் கிருஷ்ணரே (சுஹ்ருத் க்ருஷ்ணஸ்) இருந்தும், இத்தனை கஷ்டங்கள் (ததோ விபத்) நேர்ந்ததே !
ந ஹி அஸ்ய கர்ஹிசித்
ராஜன் பூமான் வேத விதித் சிதம் |
யத் விஜிக்யாசயா யுக்தா
முஹ்யந்தி கவய அபி ஹி ||
न ह्यस्य कर्हिचिद्राजन् पुमान् वेद विधित्सितम् ।
यद् विजिज्ञासया युक्ता मुह्यन्ति कवयोऽपि हि ॥
ஓ ராஜன் !
யாராலும் (பூமான்) அவர் (அஸ்ய) திட்டத்தை (விதித் சிதம்) எப்பொழுதும் (கர்ஹிசித்) நிச்சயமாக (ஹி) அறிந்து (வேத) கொள்ள முடியாது (ந).
புலன்களை வென்ற மிகப்பெரிய ஞானிகள் (கவய) கூட (அபி) முழு மூச்சாக தங்களை அர்பணித்து (யுக்தா) அவரை ஆராய்ச்சி செய்தும் (யத் விஜிக்யாசயா), நிச்சயமாக (ஹி) புரிந்து கொள்ள முடியாமல், அவர்களும் திகைத்துப் நிற்கிறார்கள் (முஹ்யந்தி).
தஸ்மாத் இதம் தைவ தந்த்ரம்
வ்யவஸ்ய பரதர்ஷப |
தஸ்ய அனுவிஹித: அநாதா நாத
பாஹி ப்ரஜா: ப்ரபோ ||
तस्माद्इदिदं दैव-तन्त्रं व्यवस्य भरतर्षभ ।
तस्य अनुविहित: अनाथा नाथ पाहि प्रजा: प्रभो ॥
ஆகையால் (தஸ்மாத்), பரத குலத்தில் தோன்றிய தர்மபுத்திரா (பரதர்ஷப) ! இவை அனைத்தும் (இதம்) தெய்வ செயல் (தைவ தந்த்ரம்) என்று நிச்சயமாக (வ்யவஸ்ய) அறிந்து கொள்.
அவர் (தஸ்ய) (ஸ்ரீகிருஷ்ணர்) விருப்பப்படி (அனுவிஹித:), அரசே !(ப்ரபோ) நீ அனாதைகளுக்கும் நாதனாக (அநாத: நாத) இருந்து,மக்களை (ப்ரஜா:) காக்க (பாஹி) வேண்டும் இனி.
ஏஷ வை பகவான் சாஷாத்
ஆத்யோ நாராயண: புமான் |
மோஹயன் மாயயா லோகம்
கூடஸ் சரதி வ்ருஷ்ணிசு ||
एष वै भगवान् साक्षाद्आद्यो नारायण: पुमान् ।
मोहयन् मायया लोकं गूढश्चरति वृष्णिषु ॥
தர்மபுத்ரா ! இவரே (வை) ஆதி (ஆத்யோ) பகவான், சாஷாத் நாராயணன், ஆதி புருஷன் (புமான்) என்று நிச்சயமாக (ஏஷ) தெரிந்து கொள்.
அந்த ஆதி புருஷனே! தன் மாய சக்தியால் (மாயயா) இந்த உலகை (லோகம்) மயக்க (மோஹயன்) செய்து கொண்டு, இந்த வ்ருஷ்ணி குலத்தில் (வ்ருஷ்ணிசு) ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து, யாரும் புரிந்து கொள்ளமுடியாத (கூடஸ்) வஸ்துவாக சஞ்சரிக்கிறார் (சரதி).
அஸ்ய அனுபாவம் பகவான்
வேத குஹ்யதமம் சிவ: |
தேவர்ஷி நாரத: சாஷாத்
பகவான் கபிலோ ந்ருப ||
अस्य अनुभावं भगवान् वेद गुह्यतमं शिव: ।
देवर्षि र्नारद: साक्षाद् भगवान् कपिलो नृप ॥
அரசனாக போகும் (ந்ருப) தர்மபுத்திரா ! பகவானாகிய அவருடைய (அஸ்ய) மகத்துவத்தை (அனுபாவம்), வேத ரகசியத்தை (வேத குஹ்யதமம்), சிவபெருமானும், தேவ ரிஷியான நாரதரும், சாஷாத் பகவான் கபிலரும் அறிவார்கள்.
யம் மன்யசே மாதுலேயம்
ப்ரியம் மித்ரம் சுஹ்ருத்தமம் |
அகரோ: சசிவம் தூதம்
சௌஹ்ருதாத் அத சாரதிம் ||
यं मन्यसे मातुलेयं प्रियं मित्रं सुहृत्तमम् ।
अकरो: सचिवं दूतं सौहृदाद्अथ सारथिम् ॥
அந்த (யம்) ஆதி புருஷனான ஸ்ரீ கிருஷ்ணரை, நம் தாய்வழி உறவினன் (மாதுலேயம்) என்றும், நம் பிரியமுள்ள நண்பன் (ப்ரியம் மித்ரம்) என்றும், என்றுமே இருக்கும் நம் நலம் விரும்பி (சுஹ்ருத்தமம்) என்றும், எதையும் நடத்தி காட்டும் திறன்கொண்டவர் (அகரோ:) என்றும், சரியான ஆலோசனை தருபவர் (சசிவம்) என்றும், நமக்காக தூது சென்றவர் (தூதம்) என்றும், நம் இதயம் தெரிந்து பழகுபவர் (சௌஹ்ருதாத்) என்றும், மேலும் (அத), ரதத்தை ஓட்டும் தேரோட்டி (சாரதிம்) என்றும் நீ நினைத்து இருக்கலாம்.
சர்வ ஆத்மன: சம த்ருஷோ ஹி
அத்வயஸ்ய அனஹங் க்ருதே: |
தத்க்ருதம் மதி வைசம்யம்
நிரவத் யஸ்ய ந க்வசித் ||
सर्वात्मन: समदृशो हिअद्वयस्य अनहङ्कृते: ।
तत्कृतं मति वैषम्यं निरवद् यस्य न क्वचित् ॥
இவரே அனைவரிடத்திலும் ஆத்மாவாக (சர்வ ஆத்மன:) இருக்கிறார். அனைவரையும் சமமாகவே பார்க்கிறார் (சம த்ருஷோ).
முழுமையாக (அத்வயஸ்ய) தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு (அனஹங் க்ருதே:) அவர் மட்டுமே (ஹி) இருக்கிறார்.
செய்யும் காரியங்களில் (க்ருதம்), தனிப்பட்ட பற்று கொள்வதில்லை (நிரவத் யஸ்ய). அது போல, மனதில் (மதி) வேறு நினைத்துக்கொண்டும் (வைசம்யம்) எந்த நிலையிலும் (க்வசித்) அவர் (தத்) செய்வதில்லை (ந).
ததாபி ஏகாந்த பக்தேசு
பஸ்ய பூப அனுகம்பிதம் |
யன்மே அசூன் த்யஜத:
சாஷாத் க்ருஷ்ணோ தர்சனம்ஆகத:॥
तथापिएकान्त भक्तेषु पश्य भूप अनुकम्पितम् ।
यन्मे असूं त्यजत: साक्षात्कृष्णो दर्शनमागत: ॥
ஏகாந்த பக்தி கொண்டவர்களுக்கே (ஏகாந்த பக்தேசு) பரமாத்மா தரிசனம் (பஸ்ய) கிடைக்கும் என்ற போதும் (தாதாபி), பூமியை வென்றவனே (பூப:)! கருணையின் காரணத்தால் (அனுகம்பிதம்), எந்த சமயத்தில் என் (யன்மே) வாழ்க்கையை (அசூன்) முடித்துக்கொள்ள (த்யஜத:) நினைத்து இருந்தேனோ, அந்த சமயத்தில், சாஷாத் க்ருஷ்ணரே (சாஷாத் க்ருஷ்ணோ) எனக்கு முன் வந்து (ஆகத:) தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.
பக்த்யா ஆவேஸ்ய மனோ யஸ்மின்
வாசா யந்நாம கீர்தயன் |
த்யஜந் கலேவரம் யோகி
முச்யதே காம கர்மபி:॥
भक्त्या आवेश्य मनो यस्मिन् वाचा यन्नाम कीर्तयन् ।
त्यजन् कलेवरं योगी मुच्यते कामकर्मभि: ॥
எவருக்கு (யஸ்மின்) அலையாத ஒரே எண்ணமும் (பக்த்யா), தீவிர ஈடுபாடு (ஆவேஸ்ய) கொண்ட மனமும் (மனோ), வாக்கினாலும் அந்த கிருஷ்ண நாமத்தை சொல்லிக்கொண்டே (வாசா யந்நாம கீர்தயன்), இருக்கும் நிலையும் ஏற்படுமோ, அப்படிப்பட்ட யோகிகள் உடலை விட்டு (கலேவரம்) தன்னைபிரித்து (த்யஜந்) கொள்ளும் போது, ஆசையினால் (காம) தான் செய்த (கர்மபி:) புண்ணிய-பாப இரட்டையிலிருந்தும் விடுபடுவார்கள் (முச்யதே).
ச தேவதேவோ பகவான் ப்ரதீக்ஷதாம்
கலேவரம் யாவத் இதம் ஹினோமி அஹம் |
ப்ரசன்ன ஹாச அருண லோசன
உல்லஸத் முகாம்புஜோ த்யானபத: சதுர் புஜ: ||
स देवदेवो भगवान् प्रतीक्षतां
कलेवरं यावदिदं हिनोम्यहम् ।
प्रसन्न हास अरुण-लोचन उल्लसत्
मुखाम्बुजो ध्यानपथ: चतुर्भुज: ॥
கிருஷ்ணா ! தேவாதி தேவா! பகவான்! கொஞ்சம் காத்திருங்கள் (ப்ரதீக்ஷதாம்).
நான் (அஹம்) இந்த (இதம்) உடலை (கலேவரம்) விட்டு (ஹினோமி) என்னை பிரித்து கொள்ளும் வரை (யாவத்), எனக்கு உற்சாகம் தரும் புன்னகை கொண்ட திருமுகம் கொண்ட கிருஷ்ணா! கொஞ்சம் காத்திருங்கள்.
ப்ரசன்னமான முகம் (ப்ரசன்ன ஹாச) கொண்ட, கண்களின் ஓரத்தில் உதய சூரியனில் உள்ள சிவப்பு ஓடும் (அருண லோசன), சர்வ அலங்காரத்துடன் தாமரை போன்ற திருமுகம் கொண்ட (உல்லஸத் முகாம்புஜோ) உங்களை, சதுர் புஜனாக (சதுர் புஜ:) தியானிக்கிறேன் (த்யானபத:).
ஸூத உவாச
யுதிஷ்டிர: தத்ஆகர்ண்ய
சயானம் சரபஞ்சரே |
அப்ருச்சத் விவிதான் தர்மாந்
ருஷீனாம் ச அனு ஸ்ருண்வதாம் ||
सूत उवाच
युधिष्ठि: तद्आकर्ण्य शयानं शरपञ्जरे ।
अपृच्छद् विविधान् धर्मान्रुषीणां च अनु शृण्वताम् ॥
அம்பு படுக்கையில் (சரபஞ்சரே) படுத்து இருக்கும் (சயானம்) பீஷ்மர் இவ்வாறு (தத்) பேசியதை கேட்ட (ஆகர்ண்ய) யுதிஷ்டிரர், ரிஷிகள் பலர் (ருஷீனாம் ச) சூழ்ந்து இதை கேட்டு கொண்டு இருக்க (அனு ஸ்ருண்வதாம்), தனக்கு பல வித தர்மங்களை (விவிதான் தர்மாந்) உபதேசிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் (அப்ருச்சத்).
புருஷ ஸ்வபாவ விஹிதான்
யதா வர்ணம் யத ஆஸ்ரமம் |
வைராக்ய ராக உபாதிப்யாம்
ஆம்நாத உபய லக்ஷணான் ||
पुरुष स्वभाव विहितान् यथावर्णं यथाश्रमम् ।
वैराग्य राग उपाधिभ्याम्आम्नात: उभय लक्षणान् ॥
மனிதர்களின் குணத்தை (புருஷ ஸ்வபாவ) அடிப்படையாக கொண்டு (யதா) வரையறுக்கப்பட்ட (விஹிதான்) வர்ணங்களை பற்றியும் (வர்ணம்),
மனிதர்களின் குணத்தை (புருஷ ஸ்வபாவ) அடிப்படையாக கொண்டு (யதா) வரையறுக்கப்பட்ட (விஹிதான்), வாழ்க்கை முறையையும் (ஆஸ்ரமம்),
பற்று (ராக), பற்றற்ற (வைராக்ய) நிலை இரண்டும் (உபய) கொடுக்கும் பலன்களை (உபாதிப்யாம்), இவர்களின் லக்ஷணங்களை (லக்ஷணான்) வரிசையாக சொல்லி விளக்கினார் (ஆம்நாத) பீஷ்மர்.
தான-தர்மான் ராஜ-தர்மான்
மோஷ தர்மான் விபாக ச: |
ஸ்த்ரீ-தர்மான் பகவத்-தர்மான்
சமாஸ வ்யாஸ யோகத:॥
दान-धर्मान् राज-धर्मान् मोक्ष-धर्मान् विभागश: ।
स्त्री-धर्मान् भगवद्-धर्मान् समास व्यास योगत: ॥
தானம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (தான-தர்மான்),
அரசர்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (ராஜ-தர்மான்),
மோக்ஷம் அடைய பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (மோஷ தர்மான்),
பிரித்து விவரித்து, மேலும் (விபாக ச:),
பெண்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (ஸ்த்ரீ-தர்மான்),
பக்தர்களான பாகவதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (பகவத்-தர்மான்),
அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம அர்த காம மோஷாம்ஸ் ச) என்ற நான்கு புருஷார்த்தங்களை ரிஷிகள் சொன்னபடி (யதா முனே) பல உதாரணங்களுடன் (ஸஹ உபாயான்), பல (நாநா) நடந்த சரித்திரங்கள் (இதிஹாசேசு) சொன்னபடியே (ஆக்யாந) வர்ணித்து (வர்ணயாம் ஆஸ) தத்துவத்தை விளக்கினார் (தத்வ வித்)
தர்மம் ப்ரவதத: தஸ்ய ச
கால: ப்ரத்யுபஸ்தித: |
யோ யோகின: சந்த ம்ருத்யோர்
வாஞ்சித: து உத்தராயண: ||
धर्मं प्रवदत: तस्य स काल: प्रत्युपस्थित:।
यो योगिनश्छन्द मृत्यो: वाञ्छित: तु उत्तरायण:||
இப்படி பல தர்மங்களை (தர்மம்) உபதேசித்து (ப்ரவதத:) கொண்டிருந்த பீஷ்மருக்கு (தஸ்ய ச) அவர் எதிர்பார்த்த (ப்ரத்யுபஸ்தித) காலம் (கால:) வந்தது. தான் விரும்பிய போது மரணிக்கலாம் (சந்த ம்ருத்யோர்) என்ற வரம் பெற்று இருந்த அந்த யோகியான பீஷ்மர் (யோ யோகின) தான் விரும்பும் (வாஞ்சித: து) உத்தராயண புண்ய காலம் வந்ததை உணர்ந்தார்.
தத உபசம்ஹ்ருத்ய கிர: சஹஸ்ரனி:
விமுக்த சங்கம் மன ஆதிபுருஷே ||
க்ருஷ்ணே லஸத்-பீத-படே சதுர்புஜே
புரஸ்திதே அமீளித த்ருக் வ்யதாரயத் ||
तद् उपसंहृत्य गिर: सहस्रणी- र्विमुक्त सङ्गं मन आदि-पूरुषे ।
தர்ம சம்பந்தமான விஷயங்களை தர்மபுத்ரருக்கு உபதேசித்த ஆயிரம் சாஸ்திரங்களை அறிந்த (சஹஸ்ரனிர்) பீஷ்ம தாத்தா, அந்த சமயத்திலேயே (தத) தன் பேச்சை (கிர:) முழுவதுமாக நிறுத்திக்கொண்டு (உபசம்ஹ்ருதய) பற்றுதலை விட்டு (விமுக்த சங்கம்) மனதை (மன) ஆதி புருஷனிடம் (ஆதிபுருஷே) திருப்பினார். பளபளபாக பிரகாசமாக மின்னும் பீதாபரத்தை (லஸத்-பீத-படே) அணிந்து இருக்கும், நான்கு கைகளுடன் (சதுர்புஜே), கண் எதிரே நின்று கொண்டு (புரஸ்திதே) இருக்கும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மீது பீஷ்மருடைய அகன்ற பார்வை (அமீளித த்ருக்) போய் நிலைத்தது (வ்யதாரயத்).
விசுத்தயா தாரனயா ஹத அசுப:
தத் ஈக்ஷயாஇவ ஆசு கதா யுத ஸ்ரம: |
நிவ்ருத்த சர்வேந்த்ரிய வ்ருத்தி விப்ரம:
துஷ்டாவ ஜன்யம் விஸ்ருஜன் ஜனார்தனம் ||
विशुद्धया धारणया हत अशुभ:
तद्ईक्षया इव आशु गता युध श्रम: ।
निवृत्त सर्वेन्द्रिय वृत्ति विभ्रम:
तुष्टाव जन्यं विसृजन्जनार्दनम् ॥
தூய்மையான எண்ணத்துடன் (விசுத்தயா), ஸ்ரீ கிருஷ்ணனின் ரூபத்தை மனதில் நிறுத்த (தாரனயா), மங்களமற்றவைகள் அனைத்தும் மனதிலிருந்து அழிந்தது.
இது போல ஸ்ரீகிருஷ்ணரை பார்த்த மாத்திரத்தில், பீஷ்மருக்கு யுத்த களத்தால் ஏற்பட்ட காயங்கள், வலிகள் கூட (யுத ஸ்ரம:), உடனே (ஆசு ) மறைந்து சென்று விட்டன (கதா).
உலக விஷயங்களில் இன்றுவரை உழன்று (விப்ரம:) காரியங்கள் செய்த (வ்ருத்தி) ஐம்-புலன்கள் (சர்வேந்த்ரிய), இன்று ஆமை தன் கால்களை ஒடுக்கி கொள்வது போல ஒடுக்கிக்கொண்டது (நிவ்ருத்த).
பூமியில் பிறந்த (ஜன்யம்) தான் விடைபெறும் (விஸ்ருஜன்) முன், ஆத்மாக்களை ஆளும் (ஜனார்தனம்) ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை பார்த்து துதிக்கலானார் (துஷ்டாவ) பீஷ்மர்.
ஸ்ரீபீஷ்ம உவாச
இதி மதி: உப கல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத புங்கவே விபூம்ணி |
ஸ்வ சுகம் உபகதே க்வசித் விஹர்தும்
ப்ரக்ருதிம் உபேயுஷி யத் பவ ப்ரவாஹ: ||
श्रीभीष्म उवाच
इति मति: उपकल्पिता वितृष्णा
भगवति सात्वत पुङ्गवे विभूम्नि ।
स्व-सुखम्उपगते क्वचिद् विहर्तुं
प्रकृतिम्उपेयुषि यद्भव प्रवाह: ॥
எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு (வித்ருஷ்ணா) பாண்டவர்கள் போன்ற சாதுக்களுக்கு (ஸாத்வத) ரக்ஷகனாக, நாதனாக (புங்கவே) இருக்கும், ப்ரபுவுக்கும் ப்ரபுவாக இருக்கும் (விபூம்ணி) பகவானிடமே (பகவதி) என் மனம் (இதி மதி:) சமர்ப்பணமாகட்டும் (உப கல்பிதா). தானே ஆனந்த ஸ்வரூபியாக (ஸ்வ சுகம்) இருந்தும் (உபகதே), சில சமயம் (க்வசித்), கருணையின் காரணமாக(விஹர்தும்) தன் மாயா சக்தியை கொண்டு, மூன்று குணங்கள் பிரவாகமாக (யத் பவ ப்ரவாஹ:) ஓடும் உலகை (ப்ரக்ருதிம்) தானே ஆசையோடு (உபேயுஷி) பிரகடனம் செய்தார்.
த்ரிபுவன கமனம் தமால வர்ணம்
ரவிகர கௌர வராம்பரம் ததானே |
வபு: அலக குலஆவ்ருத அநந அப்ஜம்
விஜய சகே ரதிரஸ்து மே அனவத்யா ||
त्रि-भुवन कमनं तमाल-वर्णं
रविकर गौर वराम्बरं दधाने ।
वपु: अलक कुल आवृत अनन अब्जं
विजय-सखे रतिरस्तु मे अनवद्या ॥
மூன்று உலகும் (எதிரிகள் கூட) சொக்கி போகும் அழகுடன் (த்ரிபுவன கமனம்), தமால மரத்தில் காணப்படும் கருநீல வர்ணமாக காட்சிகொடுத்து கொண்டு (தமால வர்ணம்), அந்த கருநீல வர்ணத்துக்கு ஏற்றவாறு, சூரிய கிரணத்தில் (ரவிகர) காணப்படும் தங்கம் (கௌர) போல ஜொலிக்கும் வஸ்திரத்தை (வராம்பரம்) உடுத்திக்கொண்டு கொண்டிருக்கும் (ததானே), அந்த கண்ணனின் திவ்யமான தேகத்தில்,(வபு:) தவழும் (ஆவ்ருத) சுருண்ட கேசமும் (அலக குல) அன்று மலர்ந்த தாமரை போன்ற முகமும் கொண்ட (அநந அப்ஜம்), அர்ஜுனனின் நண்பனாக (விஜய சகே) இருக்கும் அந்த சாரதியிடமே (ரதி), சிறிதும் சந்தேகமில்லாமல் (மே அனவத்யா) என் மனம் லயிக்கிறது (ரதிரஸ்து).
யுதி துரக ரஜோ விதூம்ர விஷ்வக்
கச லுலித ஸ்ரமவாரிஅலங்க்ருத ஆஸ்யே |
மம நிசித சரை: விபித்யமான
த்வசி விலசத் கவசே அஸ்து க்ருஷ்ண ஆத்மா ||
युधि तुरग रजो विधूम्र विष्वक्-
कच-लुलित श्रमवारि अलङ्कृत आस्ये ।
मम निशित शरै: विभिद्यमान-
त्वचि विलसत् कवचेऽस्तु कृष्ण आत्मा ॥
அன்று, பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் போது, அந்த பசுமாடுகள் கிளப்பிய பிருந்தாவன மண்ணை தன் தலையில் ஏந்திய கண்ணன், இந்த பாரத யுத்த களத்தில் (யுதி) பாண்டவர்களுக்காக 18 நாளும் தேரோட்டி, அந்த குதிரைகள் (துரக) கிளப்பிய புழுதி (ரஜோ) செம்மண் (விதூம்ர) சந்தன குழம்பாக அந்த அலைகின்ற (விஷ்வக்) சுருண்ட கேசத்தில் (கச) தாமரையில் உள்ள மகரந்த பிஞ்சம் படர்ந்தது போல படர்ந்து இருக்க (லுலித), 'என் பக்தனுக்காக வியர்வை சிந்த உழைப்பேன்' என்று காட்டும்படி, முத்து வியர்வை (ஸ்ரமவாரி) திவ்யமான திருமுகத்தில் அரும்ப, அந்த திவ்யமான வியர்வை துளிகள் அந்த கேசத்தின் நுனியில் பனி முத்துக்களை போல அரும்பி இருக்க, அதுவே ஒரு முத்து பந்தல் போட்டு அலங்கரித்தது (அலங்க்ருத) போல, அன்று இந்த கண்ணனின் திருமுகம் (ஆஸ்யே) இருந்தது.
'ஜன்ம கர்ம ச மே திவ்யம்' என்று கிருஷ்ணனே 'தன் பிறப்பும், செயலும் திவ்யம்' என்று சொன்னார் அர்ஜுனனிடம். திவ்யமான திருமுகத்தில் விழுந்த வியர்வையும் திவ்யமாகவே தெரிந்தது.
அந்த அருமையான கண்ணனை அன்று எப்படியாவது 'ஆயுதம் எடுக்க வைப்பேன்' என்ற என் சபதத்தை நிறைவேற்ற, நான் (மம) கூரான அம்புகளை (நிசித சரைர்) கொண்டு, அந்த திவ்யமான சரீரத்தில் (த்வசி) செலுத்தி, குத்தி காயப்படுத்தினேன் (விபித்யமான). அணிந்திருந்த அந்த ஜொலிக்கும் (விலசத்) கவசத்தையும் (கவசே) உடைத்தேன். அனைத்தையும் விளையாட்டாக ஏற்றுக்கொண்ட, அந்த கண்ணனின் (க்ருஷ்ண) திருமுகம் நெஞ்சை (ஆத்மா) விட்டு அகலாமல் இன்னும் நெஞ்சிலே இருக்கிறது (அஸ்து).
சபதி சகி வச: நிஷம்ய மத்யே
நிஜ பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய |
ஸ்திதவதி பர-சைனிக ஆயு: அக்ஷணா
ஹ்ருதவதி பார்த்த சகே ரதி: மம அஸ்து ||
सपदि सखि वचो निशम्य मध्ये
निज-परयो: बलयो रथं निवेश्य ।
स्थितवति पर-सैनिक आयु: अक्ष्णा
हृतवति पार्थसखे रति: मम अस्तु ॥
அன்று, போர் களத்தில் (சபதி) அர்ஜுனன் தன் ரதத்தை கொண்டு போய் இரண்டு சேனைக்கு நடுவில் நிறுத்த சொல்ல, தன் நண்பன் சொன்னதை (சகி வச:) அப்படியே கேட்டு (நிஷம்ய), உடனேயே தங்கள் (நிஜ) சேனையின் பலத்தையும், எதிரிகளான (பரயோர்) கௌரவ சேனையின் பலத்தையும், அர்ஜுனனுக்கு காட்ட, ரதத்தை (ரதம்) இரு சேனைக்கு நடுவே (மத்யே) கொண்டு வந்து நிறுத்தினார் (நிவேஸ்ய).
அப்படி நிறுத்தப்பட்ட (ஸ்திதவதி) அந்த தேரில் ஒரு கையில் குதிரையின் லகானை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் சாட்டை வைத்து இருக்கும் கண்ணன், கையால் எதிரிகளின் சேனையை (பர-சைனிக) அர்ஜுனனுக்கு காட்ட முடியாததால், தன் கண்களாலேயே "இதோ பார் துரியோதனன்! இதோ பார் துச்சாதனன்! இதோ பார் துரோணர்! இதோ பார் கர்ணன்! இதோ பார் சகுனி! இதோ பார் பீஷ்மர்!" என்று அர்ஜுனனுக்கு ஒவ்வொருவராக காட்ட, அந்த பார்வையை (அக்ஷணா) கண்டதிலேயே எதிரிகளின் சேனையில் (பர-சைனிக) நின்று கொண்டிருந்த எங்கள் ஆயுசு (ஆயு:) அன்றே குறைந்து விட்டது (ஹ்ருதவதி). அன்று என்னை உருட்டி விழித்து பார்த்த, அந்த பாரத்தசாரதியின் (பார்த்த சகே ரதி:) ரூபம் என் (மம) நெஞ்சில் அகலாமல் நிற்கிறது (அஸ்து).
வ்யவஹித ப்ருதனா முகம் நிரீக்ஷ்ய
ஸ்வஜந வதாத் விமுகஸ்ய தோஷபூத்தயா |
குமதிம் அஹரத்ஆத்ம வித்யயா
ய: சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து ||
व्यवहित पृतना मुखं निरीक्ष्य
स्वजन वधाद् विमुखस्य दोष-बुद्ध्या ।
कुमतिम्अहरद्आत्म विद्यया
य: श्चरण रति: परमस्य तस्य मेऽस्तु ॥
தூரத்தில் (வ்யவஹித) எதிரி படையில் (ப்ருதனா) நின்று கொண்டிருந்த எங்கள் முகத்தை பார்த்து (முகம் நிரீக்ஷ்ய) சொந்தக்காரர்களை (ஸ்வஜந) கொல்வதா? என்று தயங்கி (விமுகஸ்ய), தர்மம் எது? அதர்மம் எது? என்று புரியாத நிலையில் (தோஷபூத்தயா), பெரும் சோகத்தில் (குமதிம்), அர்ஜுனன் மூழ்கி இருந்தான்.
சோகத்தில் (குமதிம்) மூழ்கி இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்ம வித்யையான பகவத் கீதையை (ஆத்ம வித்யயா) உபதேசித்து, அகற்றினார் (அஹரத்). பரவாசுதேவனான (பரமஸ்ய) அந்த (தஸ்ய) சாரதியின் தாமரை பாதம் (ய: சரண ரதி:), என் நெஞ்சை (மே) விட்டு அகலாமல் நிற்கிறது (அஸ்து).
ஸ்வ நிகமம் அபஹாய மத் ப்ரதிஞாம்
ருதம் அதி கர்தும் அவப்லுதோ ரதஸ்த: |
த்ருத ரத சரண: அப்யயாத் சலத்கு:
ஹரிர் ஏவ ஹந்தும் இபம் கத உத்தரீய: ||
स्व निगमम्अपहाय मत्प्रतिज्ञाम्
रुतम्अधि-कर्तुम्अवप्लुतो रथस्थ: ।
धृत रथ चरणो अभ्ययाद्चलद्गु:
हरिरिव हन्तुम्इभं गत उत्तरीय: ॥
அன்றைய போரில் பாண்டவர்கள் சேனைக்கு பெரும் நாசம் உண்டானது. கிழவரான பீஷ்மரின் வில்லிலிருந்து அம்பு மழை பொழிய, பாண்டவர்கள் பக்கம் உள்ள, ரதங்கள் சாய, காலாட்படைகள் கீழே விழ, குதிரை படை, யானை படை எல்லாம் நாசமாகி ரத்தம் ப்ரவாகமாக ஓட, 25 வயது வீரன் போல, பம்பரமாக சுழன்று இன்று அதி ஆச்சர்யமாக போர் செய்தார் பீஷ்மர். இப்படி போர் செய்யும் பீஷ்ம தாத்தாவை கண்டு அர்ஜுனனே மூச்சு திணறி போனான். உடனே கிருஷ்ணரை பார்த்து. "கிருஷ்ணா! பீஷ்ம தாத்தா இளமை காலத்தில் எப்படி செய்து இருப்பார்? என்று இப்போது தான் தெரிகிறது. இந்த யுத்தத்தில் இவரை எதிர்க்க முடியாது.. நீ ரதத்தை திருப்பு." என்று சொல்ல…
கிருஷ்ணர் ஆத்திரத்தோடு, "சீ! ரதத்தை திருப்பு என்று நீ சொல்வதாவது? இப்பேர்ப்பட்ட யுத்தம் அருமையல்லவா!" என்று சொல்லி கொண்டே, தன் ரதத்தை பீஷ்மர் இருக்கும் ரதத்துக்கு முன்னே கொண்டு செல்ல, சாரதியான ஸ்ரீகிருஷ்ணரின் மேல் அம்புகளை மழை போல செலுத்தினார். 'ஸ்ரீகிருஷ்ணை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்' என்று நான் (மத்) உரக்க சொல்லி செய்த (ருதம்) சபதத்தை (ப்ரதிஞாம்) காக்க, சத்தியமே ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணன், 'ஆயுதம் எந்த மாட்டேன்' என்று தான் செய்த சபதத்தை (ஸ்வ நிகமம்) எனக்காக விட்டு கொடுத்து (அபஹாய), அன்றைய போரில் என்னால் பாண்டவர்கள் சேனைக்கு பெரும் நாசம் உண்டாவதை பார்த்து, மகா ஆத்திரத்தோடு, திடீரென்று 'பார்த்தா! இனி பொறுக்க முடியாது.. இதோ… பீஷ்மரை நானே கொல்கிறேன் பார்..!' என்று கூறிக்கொண்டே (அதி கர்தும்), தன் மேல்-அங்கவஸ்திரத்தை (உத்தரீய:) தான் அமர்ந்த ஆசனத்தில் போட்டு விட்டு (கத), நீல ஜோதி போல, ரதத்திலிருந்து (ரதஸ்த:) குதித்து (அவப்லுதோ), ஒரு ரத சக்கரத்தையே சக்ராயுதமாக எடுத்துக்கொண்டு (த்ருத ரத), என்னை நோக்கி துள்ளி கொண்டு (அப்யயாத்) பூமி அதிர ஒரு சிங்கம் (ஹரிர்) எப்படி (ஏவ) யானையை (இபம்) தாக்க வருமோ (ஹந்தும்) அப்படி வந்தாயே! பக்தனான என் சபதத்தை காக்க, தன் சத்தியத்தை கூட விட்டு, சக்கரத்தை ஏந்தி வந்தாயே, கிருஷ்ணா!.
பொதுவாக, ஆத்திரம் வரும் போது, அவசரத்தில் 'என்ன செய்கிறோம்' என்றே தெரியாது.
பீஷ்மர் அன்று பாண்டவ சேனைக்கு ஏற்படுத்திய பெரும் நாசத்தை பார்த்து, 'தான் ஆத்திரப்பட்டது போல' காட்டிக்கொள்ள, முடிந்திருந்த கேசங்கள் அவிழ, தன் மேல் அங்கவஸ்திரம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், தேர் சக்கரத்தை எடுத்துக்கொண்டு கோபத்தோடு ஓடி வந்தாராம். இந்த கோப நாடகத்தை கவனித்த பீஷ்மர், தன் உத்தரீயம் விழுந்தது (கத உத்தரீய:) கூட கவனிக்காமல் வரும் அந்த அழகான கோப கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
"அர்ஜுனா! நானே இந்த போரை செய்து முடித்து விடுகிறேன். இதோ என் அங்கவஸ்திரத்தையே ஜெய கொடியாக கட்டு" என்று தேரிலேயே அங்கவஸ்திரத்தை வைத்து விட்டு (கத உத்தரீய:), பீஷ்மரை நோக்கி வரும் அந்த அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
"அர்ஜுனா! நான் தேரிலிருந்து இறங்கி விட்டேன் என்று, வேறு சாரதியை நியமித்து விடாதே.. இதோ என் அங்கவஸ்திரத்தை என் சார்பாக வைத்து விட்டு (கத உத்தரீய:) செல்கிறேன்" என்று சொல்வது போல தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
"சாரதி இல்லை என்று குதிரைகள் நினைத்து விட கூடாதே!" என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
'தான் இல்லாத சமயத்தில், அர்ஜுனனை யாராவது தாக்கி விடுவார்களே! அர்ஜுனனுக்கு ஒரு கவசமாக என் அங்கவஸ்திரம் இருக்கட்டும்' என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
"அர்ஜுனா! நான் இல்லாமல் போனாலும், என் அங்கவஸ்திரமே ரதத்தை ஓட்டும்" என்று காட்ட, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
அங்கவஸ்திரம் போட்டு பீஷ்மரை தாக்கினால், 'யார் அடித்தார்?' என்றே தெரியாமல் போய் விட கூடாது! 'வந்தது கிருஷ்ணன் தான்" என்று பார்க்கட்டும் என்று காட்ட, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
'அங்கவஸ்திரம் போட்டு பீஷ்மருக்கு முன் வந்தால், தன் வக்ஷஸ்தலத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் பீஷ்மருக்கு கிடைக்காமல் போய் விடுமே!' என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.
ஷித விஷிக ஹதோ விஷீர்ண தம்ச:
க்ஷதஜ பரிப்லுத ஆததாயினோ மே |
ப்ரசபம் அபிசசார மத்-வத-அர்தம்
ச பவது மே பகவான் கதி: முகுந்த: ||
शित विशिख हतो विशीर्ण दंश:
क्षतज परिप्लुत आततायिनो मे ।
प्रसभम्अभिससार मद् वध अर्थं
स भवतु मे भगवान् गतिर्मुकुन्द: ॥
சாரதியாக அமர்ந்து இருந்த இந்த கண்ணனை நோக்கி, வதம் செய்யக்கூடிய (ஹதோ) கூரான அம்புகளை (ஷித விஷிக) பொழிந்து, அவர் கவசத்தை (தம்ச:) உடைத்தெறிந்து (விஷீர்ண) அவர் திருமேனியை காயப்படுத்தி (க்ஷதஜ) ரத்தம் வழிய (பரிப்லுத) செய்து, முரட்டுத்தனமாக நான் (ஆததாயினோ மே) க்ஷத்ரியனையாக சண்டையிட்டேன்.
பெரும் நாசத்தை பாண்டவர்களுக்கு அன்று செய்து, படு பயங்கரமாக சண்டையிட்ட என்னை அர்ஜுனனும் தடுக்கமுடியாமல் திகைக்க, 'இனியும் பொறுக்கமுடியாது' என்ற ஆத்திரத்தோடு (ப்ரசபம்) தேரிலிருந்து குதித்து, அன்றே என்னை கொன்று (மத்-வத), வைகுண்டம் என்ற சொந்த வீட்டுக்கு (கதிர்) அனுப்பும் நோக்கத்துடன் (அர்தம்), நோக்கி ஓடி வந்த (அபிசசார) மோக்ஷம் கொடுக்க (முகுந்த:) வந்த பகவானை தியானிக்கிறேன்.
விஜய ரத குடும்ப ஆத்த-தோத்ரே
த்ருத-ஹய ரஷ்மினி தச் ஸ்ரியாஈக்ஷணீயே |
பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ:
யம் இஹ நிரீக்ஷ்ய ஹதா கதா: ஸ்வரூபம் ||
विजय रथ कुटुम्ब आत्ततोत्रे
धृत-हय-रश्मिनि तच्छ्रिय ईक्षणीये ।
भगवति रतिरस्तु मे मुमूर्षो:
यम् इह निरीक्ष्य हता गता: स्वरूपम् ॥
பாண்டவர்களை தன் குடும்பம் (குடும்ப) ஆக்கி கொண்டு, அர்ஜுனனுக்கு (விஜய) சாரதியாக (ரத) ஆகி, வலது கையில் குதிரையின் (ஹய) லகானை பிடித்து (ஆத்த-தோத்ரே) கட்டுப்படுத்தி (த்ருத) கொண்டு, மற்றொரு கையால் சாட்டையை (ரஷ்மினி) பிடித்துக்கொண்டு, இருந்த அந்த பேரழகை (தச் ஸ்ரியா) இந்த கண்கள் (ஈக்ஷணீயே) தரிசித்தது!
மரணிக்க போகிறேன் (மம முமூர்ஷோ) என்றதும், என்னை காண, எனக்காக இங்கு (யம் இஹ) வந்து நிற்கும், பரமாத்மாவான பார்த்தசாரதியை (பகவதி ரதிரஸ்து) பார்த்து (நிரீக்ஷ்ய) கொண்டே இந்த உடலை விட்டு பிரிந்து (ஹதா), என் நிஜ ஸ்வரூபத்தை (8வது வசு) அடைவேன் (கதா).
லலித கதி விலாச வல்கு ஹாஸ
ப்ரணய நிரீக்ஷண கல்பித உருமானா: |
க்ருதம் அனுக்ருதவத்ய உன்மத அந்தா:
ப்ரக்ருதிம் அகன் கில யஸ்ய கோப வத்வ :॥
ललित गति विलास वल्गुहास-
प्रणय निरीक्षण कल्पित उरुमाना: ।
कृतम्अनुकृतवत्य उन्मद अन्धा:
प्रकृतिम्अगन् किल यस्य गोप वध्व: ॥
பகவானிடம் போர் செய்து, முரட்டு பக்தி செய்த பீஷ்மர், அந்த பகவானிடம் கோபியர்கள் போல தனக்கு கோமளமான பக்தி செய்ய தெரியவில்லையே!! என்று நினைத்தார். உடனே கோபியர்கள் பக்தி நினைவுக்கு வர, அந்த உன்னதமான பக்தியை ஸ்மரிக்கிறார்.
கிருஷ்ணா! பொதுவாக பக்தி யோகமான அஷ்டாங்க யோகம் செய்து, பகவத் தரிசனம் கிடைக்க வேண்டி உள்ளது. ஆனால், பாக்கியவாதிகளான கோபிகைகளோ! பகவத் தரிசனம் பெற்று விட்டு, பிறகு, பகவானிடமே கேட்டு, பகவானை பார்த்து பக்தி செய்கிறார்கள்.
அப்படி பகவத் தரிசனம் பெற்ற பிறகு, நீயே அவர்களுக்கு குருவாகவும் இருப்பதால், அவர்கள் உன்னுடைய நளினமான நடை (லலித கதி) அழகையும், விளையாட்டையும் (விலாச), சிரிப்பையும் (வல்கு ஹாஸ), அன்பையும் (ப்ரணய) பார்த்து பார்த்து (நிரீக்ஷண), அதையே ஞாபக படுத்திகொண்டு (கல்பித), தங்கள் மனதில் உரு போட்டு (உருமானா:), உன்னை போலவே நடந்தும், சிரித்தும், விளையாடியும், அபிநயம் (அனுக்ருதவத்ய) செய்து கொண்டு (க்ருதம்), உலக நினைவே இல்லாமல் (அந்தா:) மோக்ஷத்தை விரும்புபவர்களாக (உன்மத), உன்னை போலவே ஆகி விட்ட (ப்ரக்ருதிம் அகன் கில) அந்த (யஸ்ய) மாடுகளை மேய்த்து கொண்டிருக்கும் கோபியர்களின் (கோப வத்வ :) பக்தியை நான் நினைக்கிறன்.
முனிகன ந்ருப வர்ய சங்குலே அந்த:
சதசி யுதிஷ்டிர ராஜசூய ஏஷாம் |
அர்ஹனம் உபபேத ஈக்ஷணீயோ
மம த்ருஷி கோசர ஏஷ ஆவி: ஆத்மா ||
मुनिगण नृप वर्य सङ्कुले अन्त:
सदसि युधिष्ठिर राजसूय एषाम् ।
अर्हणम् उपपेद ईक्षणीयो
मम दृशि-गोचर एष आवि: आत्मा ॥
அன்று என் பேரன் "யுதிஷ்டிரன்" ராஜசூய யாகம் செய்த போது, அந்த சபையில் (அந்த: சதசி) கூடியிருந்த (சங்குலே) ரிஷிகளும் (முனிகன), பல நாட்டு அரசர்களும் (ந்ருப வர்ய) தங்களில் உயர்ந்தவராக (ஏஷாம்) ஸ்ரீ கிருஷ்ணனையே ஏற்று, தகுந்த முதல் மரியாதை (அர்ஹனம்) செய்ய, அதை ஏற்று கொண்ட (உபபேத ) அந்த கண்கவரும் காட்சியை (ஈக்ஷணீயோ) அங்கு இருந்து (ஏஷ ஆவி:) அன்று நான் ஏன் கண்களால் அருகிலேயே பார்த்தேன் (மம த்ருஷி கோசர). அந்த ஸ்ரீ கிருஷ்ணனை என் மனதில் (ஆத்மா) நினைத்து வழிபடுகிறேன்.
தம் இமிம் அஹம் அஜம் சரீர பாஜாம்
ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம் |
ப்ரதி த்ருஷம் இவ ந ஏகதா அர்கம் ஏகம்
சமதிகத அஸ்மி விதூத பேத மோஹ: ||
तमिम् इमम् अहम् अजं शरीरभाजां
हृदि हृदि धिष्ठितम्आत्म कल्पितानाम् ।
प्रति दृशम् इव न एकधा अर्कम्एकं
समधिगत: अस्मि विधूत भेद मोह: ॥
இங்கு (இமிம்) என் கண் எதிரே காட்சி கொடுக்கும் இந்த (தம்) பரந்தாமனை, பிறப்பற்றவன் (அஜம்) என்று அறிகிறேன். இந்த பிறப்பற்ற பரமாத்மாவே அனைத்து சரீரத்திலும் பிரவேசித்து (சரீர பாஜாம்), நான் (அஹம்), ஒவ்வொருவர் இதயத்திலும், இதயத்திலும் இருந்து கொண்டு, பல ஆத்மாவாக தன்னை காட்டிக்கொள்கிறார்.
ஒரே ஒரு (ஏகம்) சூரியன் (அர்கம்) நாற்புறமும் (ப்ரதி த்ருஷம்) தன் கிரணங்களை வெளிப்படுத்தி, ஜலத்தில் சூரியன், கண்ணாடியில் சூரியன், என்பது போல காட்டி, அது (இவ) ஒன்று அல்ல (ந ஏகதா), பல என்று காட்டிக்கொள்வது போல, நீ ஒருவனே, அனைவரிடத்திலும் ஆத்ம சைதன்யமாக (mirage) இருக்கிறாய் என்று அறிகிறேன். பிறப்புக்கு அப்பாற்பட்ட தனித்த பொருள் நீ என்று அறிகிறேன். இந்த த்யானத்துடனேயே சமாதி நிலைக்கு செல்கிறேன் (சமதிகத அஸ்மி). இரட்டைகளில் (சுகம்/துக்கம், மானம்/அவமானம்,வெற்றி/தோல்வி, ஆரோக்யம்/ரோகம்) (பேத) தள்ளும் இந்த மோகத்திலிருந்து (மோஹ) விடுபடுகிறேன் (விதூத).
பீஷ்மர் (பீஷ்மம்) காலத்துக்கும் அப்பாற்பட்ட (நிஷ்கலே) பரப்ரம்மத்துடன் (ப்ரஹ்மணி), கலந்து விட்டார் (சம்பத்யமானம்) என்று அறிந்ததும் (ஆஞாய), மாலை ஆனதும் (தினாத்யயே) அமைதியாக பறவைகள் (வயாம்சி) தன் வீட்டுக்கு திரும்புவது போல (இவ), பீஷ்மரை சுற்றி இருந்த அனைவரும் (சர்வே பபூவுஸ்தே) அமைதியாக (தூஷ்னீம்) இருந்தனர்.
தத்ர துந்துபயோ நேது:
தேவ மானவ வாதிதா: |
சசம்சு: சாதவோ ராக்யாம்
காத்பேது: புஷ்ப வ்ருஷ்டய:॥
तत्र दुन्दुभयो नेदु: देव मानव वादिता: ।
शशंसु: साधवो राज्ञां खात्पेतु: पुष्प वृष्टय: ॥
பிறகு அங்கு (தத்ர), பேரிகைகள் (துந்துபயோ) முழங்கின (நேதுர்).
ஞானியான (சாதவோ) தேவர்களும், மனிதர்களும் (தேவ மானவ) மங்களங்கள் (சசம்சு:) சொல்லி (வாதிதா), பீஷ்மருக்கு, ராஜமரியாதை (ராக்யாம்) செய்தனர்.
பீஷ்மரின் (தஸ்ய) சரீரத்துக்கு (சம்பரேதஸ்ய), செய்ய வேண்டிய அந்திம காரியங்களை (நிர்ஹரந ஆதீனி) செய்து முடித்த (காரயித்வா) யுதிஷ்டிரர், அந்த சமயத்தில் (முஹூர்தம்) தாத்தாவை இழந்த பெரும் சோகத்தில் (துக்கிதோ பவத்) கண்ணீர் விட்டு அழுதார்.
துஷ்டுவுர் முனயோ ஹ்ருஷ்டா:
க்ருஷ்ணம் தத் குஹ்ய நாமபி: |
ததஸ்தே க்ருஷ்ண ஹ்ருதயா:
ஸ்வ ஆஸ்ரமான் ப்ரயயு: புன: ||
तुष्टुवु: मुनयो हृष्टा: कृष्णं तद् गुह्य नामभि: ।
ततस्ते कृष्ण हृदया: स्व आश्रमान् प्रययु: पुन: ॥
அப்பொழுது, ரிஷிகள் (முனயோ) அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை (க்ருஷ்ணம்) அந்த (தத்) மறையான (குஹ்ய) வேத நாமங்களால் (நாமபி:) ஸ்தோத்திரம் (துஷ்டுவுர்) செய்து பேரானந்தம் (ஹ்ருஷ்டா) அடைந்தார்கள்.
அதற்கு பிறகு (ததஸ்), அவர்கள் (தே) ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய ரூபத்தை தங்கள் இதயத்தில் (க்ருஷ்ண ஹ்ருதயா) சுமந்து கொண்டு, தங்கள் தங்கள் ஆஸ்ரமத்துக்கு (ஸ்வ ஆஸ்ரமான்) திரும்பி திரும்பி பார்த்து கொண்டே (ப்ரயயு புன:) சென்றனர்
ததோ யுதிஷ்டிரோ கத்வா
சஹ க்ருஷ்ணோ கஜாஹ்வயம் |
பிதரம் சாந்த்வயாம் ஆஸ
காந்தாரீம் ச தபஸ்வினீம் ||
ततो युधिष्ठिरो गत्वा सह-कृष्णो गजाह् वयम् ।
पितरं सान्त्वयामास गान्धारीं च तपस्विनीम् ॥
அதற்கு பிறகு (ததோ), யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரோடு (சஹ க்ருஷ்ணோ), ஹஸ்தினாபுர (கஜாஹ்வயம்) அரண்மனைக்கு சென்றார் (கத்வா).
தன் பெரியப்பாவையும் (பிதரம்) தபஸ்வினியான காந்தாரியையும் (காந்தாரீம் ச) சமாதானப்படுத்தினார் (சாந்த்வயாம் ஆஸ).
பித்ரா ச அனுமதோ ராஜா
வாசுதேவ அனுமோதித: |
சகார ராஜ்யம் தர்மேன
பித்ரு பைதாமாஹம் விபு :॥
पित्रा च अनुमतो राजा वासुदेव अनुमोदित: ।
चकार राज्यं धर्मेण पितृ-पैतामहं विभु: ॥
பெரியப்பா த்ருதராஷ்ட்ரனின் (பித்ரா) அனுமதியோடு (அனுமதோ), மேலும் (ச) வாசுதேவ கிருஷ்ணனின் அனுமதியையும் பெற்று (அனுமோதித:), யுதிஷ்டிர மகாராஜன் (ராஜா), தன் தந்தை வழி பேரரசர்கள் புகழ் (விபு:) பெரும் வண்ணம், உலக ராஜ்யத்தை (ராஜ்யம்) தர்மம் (தர்மேன) மீறாமல் நடத்தி (சகார) வந்தார்.