Followers

Search Here...

Tuesday 3 October 2017

கூரத்தாழ்வார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தார்?


சோழ அரசன், "சிவனே முதற்கடவுள்" என்று ராமானுஜரை சம்மதிக்க வைக்க முடிவு செய்தான்.
தன் சோழ படையை அழைத்து வர சொல்லி கட்டளையிட்டான்.



அரசன் மூலம் வரப்போகும் ஆபத்தை உணர்நது, சிறிது வயதில் மூத்தவரான "கூரத்தாழ்வார்", ராமானுஜர் போன்று காவி உடுத்தி, ராமானுஜரை சாதாரண வெள்ளை உடை உடுக்க சொல்லி, தப்பிக்க வைத்தார்.

ராமானுஜர் சில சிஷ்யர்களுடன் சோழ படைகள் வருவதற்கு முன் தப்பித்தார்.

சோழ படை, கூரத்தாழ்வாரை ஸ்ரீ ராமானுஜர் என்று நினைத்து, அரசவைக்கு கூட்டி சென்றனர்.

"சிவனே முதற்கடவுள்" என்று எழுதிக் கையெழுத்து போட சொல்ல, கூரத்தாழ்வார் மறுத்தார்.

அவரின் கண்களை பிடுங்கி எறிய ஆணை இட்டான்.
கூரத்தாழ்வார் தன் கண்களை தானே பிடுங்கி விட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீ ராமானுஜர் நிலை எவ்வாறு இருந்தது? அவருடைய சிஷ்யர் கூரத்தாழ்வார் நிலை எவ்வாறு இருந்தது?

ஸ்ரீ ராமானுஜர் அடுத்த 12 வருடங்கள் ஸ்ரீ ரங்கத்தை விட்டு இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இனி நான் எங்கு போய் இனி இருப்பது? என்று தனக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
ஸ்ரீ ரங்கநாதருக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.
தன் சிஷ்யர்களுக்கு வந்த நிலைமையை நினைத்தும் புலம்பவில்லை.


இது பகவான் இஷ்டம் என்று கவலையை மனதில் கொண்டு வராமல், இனி தான் செய்ய வேண்டிய காரியங்களை நோக்கி மேலும் பயணித்தார்.
அவருக்கு சோழ அரசனிடம் கோபமும் இல்லை.
இதுவே வைஷ்ணவ லக்ஷணம்.

குரு தன் ஞான நிலையில் இருப்பது ஆச்சரியமில்லை. கஷ்ட காலத்தை பகவான் இஷ்டம் என்று அறிந்து, மேலும் தனக்கான கடமையை தொடர்ந்தார்.

ஸ்ரீ ரங்கத்தை விட்டு செல்ல வேண்டிய கஷ்ட நிலைமையில்,  கண்ணை இழந்து இருந்த கூரத்தாழ்வார், பிருந்தாவனம் சென்று விடலாம் என்ற ஆசை கொண்டார்.
ஆனால், கண் தெரியாமல் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து, பிருந்தாவனம் செல்வது முடியாத காரியமாக இருந்தது.

பிருந்தாவனத்திற்கு இணையாக அழகர் கோவிலை கருதினார். அங்கு இருக்கும் சுந்தரராஜ பெருமாளை கண்ணனாக பாவித்தார். அருகில் இருக்கும் மதுரையை, மதுராவாக பாவித்தார்.
அழகர் கோவிலையும் அதை சுற்றி இருக்கும் வனத்தையும் பிருந்தாவனம் என்று பாவித்து, தனக்கு வந்த துக்கத்தை மறந்து, தன் 12 வருட காலத்தை கண் தெரியாமல், பூ கைங்கர்யம் செய்து, சுந்தரராஜ பெருமாளுக்கு பூ மாலை கட்டி கொடுத்து சாத்வீகமாக கழித்தார்.

கூரத்தாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் போன்றே மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

"ஐயோ! இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டுமா?
குருவை இழந்தேனே !
ஸ்ரீ ரங்கநாதரை இழந்தேனே !
ஸ்ரீ ரங்க வாசத்தையும் இழந்தேனே!
கண்களையும் இழந்து குருடானேனே!
இனி நல்ல காலம் வருமா?" என்ற எந்த புலம்பலும் இல்லாமல், ஸ்ரீ ராமானுஜரை போன்ற மனப்பக்குவத்துடன் மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்று அங்கு நந்தவனம் அமைத்து பூ கைங்கர்யம் ஸ்ரீ ராமானுஜர் திரும்பி ஸ்ரீரங்கம் வரும்வரை 12 வருடங்கள் செய்து கொண்டு இருந்தார்.



ஒரு நாள் கூட, தன் கவலையை, குறையை, "சுந்தரராஜ" பெருமாளிடம் சொல்லி கொண்டது கூட இல்லை.
சோழ அரசன் மீது கோபமும் இல்லை.
கண் தெரியாமலேயே 12 வருட காலங்கள், பூ கைங்கர்யம் பெருமாளுக்கு செய்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு நிகராக, துக்க காலத்தில் வைராக்கியத்துடன், பகவான் இஷ்டம் என்று சமாதானமாக, சாத்வீகமாக பொறுமையுடன் இருந்தார் கூரத்தாழவார்.
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

Monday 2 October 2017

வர்ணம்... மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்


மனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்.

1. English: priest, saint. Sanskrit: ப்ராம்மண.

இறை உணர்வு மேலோங்கியவர்கள் இவர்கள். உலக வாழ்க்கையை விட இறை உணர்வே இவர்கள் லட்சியம். ஏழையாக இருந்தாலும் கவலைப்படாதவர்கள்.  ப்ரம்மத்தை உபாஸிக்கும் ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி சொல்லும் சமஸ்க்ரித வேதத்தை படித்து, இதிஹாசங்களை படித்து, அதன் அர்த்தத்தை அனைவருக்கும் சொல்ல ஆசை உடையவர்கள்.
இவர்கள் ப்ரம்மத்தை பற்றி வாயால் படிப்பதாலும், சொல்லுவதாலும், மற்ற அவயங்களை விட, இவர்களுக்கு வாயும், கண்ணும், காதுமே மிக முக்கியமானது.
தலை பகுதியில் வாய் இருப்பதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.
அனைவருக்கும் தர்மம் எது, அதர்மம் எது என்று சாஸ்த்திரத்தின் வழியில் சொல்வதால், பகவானின் தலை போன்றவர்கள் என்று உருவகம்.

2. English: Army, police. Sanskrit: ஷத்திரிய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட அனைவரையும் தர்ம வழியில் வாழ வைத்து, அவர்களை காப்பதே முக்கியம் என்று இருப்பவர்கள். நாட்டையும், மக்களையும் பகைவர்களிடமிருந்தும், தர்மம் வழியில் நடத்தி வாழ வைக்கவும் ஆசை உடையவர்கள். தான் நினைப்பது தர்மமா? அதர்மமா? என்று சந்தேகம் வரும் போது, வேதம் ஓதும் ப்ராம்மணனிடம்(priest, saint) கேட்டு தெரிந்து கொண்டவர்கள்.
இவர்கள் தேசத்தையும், மக்களையும் காப்பாற்றுவதிலேயே ஆசையாக இருப்பதால், மற்ற அவயங்களை விட, இவர்களின் பலத்தை குறிக்க கையும், தோளும், உறுதியான நெஞ்சும் மிக முக்கியமானது.
இதனால், இவர்கள் பகவானின் கை, தோள், நெஞ்சம் போன்றவர்கள் என்று உருவகம்.

3. English: Business people, self employed. Sanskrit: வைஷ்ய.

இறை உணர்வு உடையவர்கள். அதை விட தர்ம வழியில் பணம் நிறைய சம்பாதித்து, சுய தொழில் செய்து, வேலை வாய்ப்பும் கொடுத்து, நாட்டை காக்கும் ஷத்திரியன் சொல் படி இருந்து, நாட்டுக்காக, தர்மப்படி நடக்கும் பொது காரியங்களுக்கு பொருளுதவி செய்து, தானும் சுகமாக இருந்து, பலரையும் வாழ வைக்கும் ஆசை உடையவர்கள் இவர்கள். இவர்கள் வயிற்று மற்றும் தொடை பகுதி போன்றவர்கள். இவர்கள் தேசம் தேசமாக சென்று சுய தொழிலால் சம்பாதிக்கின்றனர். பயணம் அதிகம் போவதற்கு தொடை பலம் தேவை. அனைவரது பசியை போக்க இவர்கள் மூல காரணமாக இருப்பதால், இவர்கள் பகவானின் வயிறு, தொடை போன்றவர்கள் என்று உருவகம்.

4. English: Working people/Employee. Sanskrit: சூத்திரன்

இறை உணர்வு உடையவர்கள். இவர்கள் தானாக சுய தொழில் செய்ய தெரியாதவர்கள், துணிவு இல்லாதவர்கள்.
இவர்கள் நாட்டை காக்கும் அளவிற்கு உயிர் பயம் இல்லாத வீர நெஞ்சம் கொண்டவர்களும் அல்ல.
இவர்கள் காலம் முழுக்க இறை உணர்வுடனேயே, பொருள் சம்பாதிக்கும் எண்ணமே இல்லாதவர்களும் இல்லை.

இவர்களுக்கு பொருளும் வேண்டும், தர்மத்துடன் முடிந்த வரையில் இருக்க ஆசை படுவார்கள்.
நாட்டின் மீது பற்று இருக்கும், ஆனால் நாட்டை காக்கும் அளவிற்கு திறன் இல்லாதவர்கள்.

இவர்கள், யாரிடமும் சென்று அவர்களுக்கு உதவியாய் இருந்து, உழைத்து, அவர்கள் தரும் பொருளை வாங்கி கொண்டு வாழ்வர்.
தானாக எதையும் செய்ய தெரியாத இவர்கள், மற்றவர்கள் சொல்லும்  வேலையை சொல்லிக்கொடுத்து போலவே செய்து முடிக்கும் வல்லவர்கள். யாருக்கு இவர்கள் உதவி தேவையோ, இவர்கள் சென்று உழைப்பதால், இவர்கள் சூத்திரர்கள்.
சூத்திரம் என்றால் 'formula'.



இவர்கள் இல்லை என்றால், வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.
அதனால் இவர்கள் சூத்திரன் என்றனர்.

Formula தப்பாக போனால், கணக்கு தப்பாகும்.
அதே போல, இவர்கள் இல்லை என்றால், மற்ற மூவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லாமல் போகும்.
இதை குறிக்கவே, 'சூத்திரன்' என்ற வர்ண பெயர்.

ஓடி ஓடி மற்றவர்களுக்கு உழைப்பதால், உழைத்ததற்கு கூலி வாங்குவதால், இவர்கள் கால் ஓடுவதை குறிப்பதற்காக, இவர்கள் பகவானின் கால் பகுதி போன்றவர்கள் என்று உருவகம்.



If employee protest, business class affect.

If businessmen protest, country revenue goes down. Army and defence will affect due to low fund.

If army and defence protest, all class will affect.

If priest protest,... it is a hypothetical question. They won't. Their focus is not in material world. So they never protest.
If happens, all 3 class will have lack of real knowledge on sastha, and will do anything as per their own wish