Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.




கிராட தேசம் என்று பூடான் அழைக்கப்பட்டது.

இமாலய தேசத்தின் மலை தொடரில் இந்த தேசம் இருந்தது.

ப்ரக்ஜ்யோதிச தேசம் என்று அசாம் அழைக்கப்பட்டது.

பௌண்ட்ரக தேசத்தை ஆண்ட பௌண்ட்ரக வாசுதேவன், வங்க தேசத்தின் கிழக்கு பகுதியையும், இந்த கிராட தேசத்தின் சில பகுதியையும் கைப்பற்றி ஆண்டு வந்தான்.

தேவர்கள் மனித குலத்தில் அர்ஜுனன், யுதிஷ்டிரர் என்று பிறந்தது போல, அசுரர்களும் மனித குலத்தில் பிறந்தனர்.
பாணாசுரன் என்ற அசுரனுடன், நரகாசுரன் நட்பு கொண்டிருந்தான்.

நரகாசுரன் ப்ரக்ஜ்யோதிச தேசத்தை கடகாசுரன் என்பவனிடம் இருந்து கைப்பற்றினான். அந்த தேச பெண்கள் மிகவும் அவதியுற்றனர். 


16000 இளவரசிகளை பிடித்து வைத்திருந்தான். இதனை கண்ட சத்யபாமா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நரகாசுரனை வதம் செய்ய சொன்னாள்.

சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ப்ரக்ஜ்யோதிச தேசத்தை அடைந்தார்.
நரகாசுரனின் 11 அக்சௌனி சேனையை அழித்தார். முரா என்ற அரக்கனை கொன்றார். பின் நரகாசுரனின் தலையை தன் சுதர்சன சக்கரத்தால் சீவினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிசம் சென்ற இந்த சமயத்தில், சேடி நாட்டு அரசன் சிசுபாலன் துவாரகை சென்று, நகரில் தீ வைத்து ஓடினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலன் செய்த இந்த கீழ்தரமான செயலையும் மன்னித்தார்.

நரகாசுரன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், தன் இறந்த நாளை, அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட்டதன் நினைவாக, அனைவரும் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்தித்தான். நரகாசுரன் கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியா மட்டுமில்லாமல், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இந்த தீபாவளி திருநாள் இன்று வரை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

பின்னர் பாணாசுரன் என்ற அசுரனும், ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்டார்.

நரகாசுரனின் மகன் "பகதத்தன்" அரசனானான்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்திற்கு, அர்ஜுனன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்தான். இந்த தேசத்திற்கு வந்து, பகதத்தனை தோற்கடித்தான்.
பகதத்தன், மற்ற அனைத்து இமாலய தேச அரசடகளுடன் சேர்ந்து, யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்தில் கலந்து கொண்டான்.

மஹாபாரத போரில், பகதத்தன் துரியோதனின் பக்கம் நின்று போரிட்டான்.

கிராட தேசத்தவர்கள் துரியோதனின் பக்கம் நின்று படு பயங்கர போர் புரிந்தனர். 
இவர்கள் பிரக்ஜ்யோதிச (அசாம்) அரசன் 'பகதத்தா'வின் ஒரு அக்ஷௌனி சேனையின் பகுதியாக அணி திரண்டு இருந்தனர்.




பகதத்தனை போரில் அர்ஜுனன் கொன்றார்.

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில் பிறந்தார்கள்? எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar.

மகத தேசம் என்று பீஹார் அழைக்கப்பட்டது.




ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமரின் தாய் கௌசல்யா இந்த தேசத்தில் பிறந்து, பின் கோசல அரசன் தசரதனை திருமணம் செய்து கொண்டாள்.
தசரதர் தன் காலத்திற்கு பிறகு, தன் பிள்ளைகள் ஒருவராவது, பீகாரில் உள்ள கயை என்ற நகருக்கு சென்று, விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பிற் காலத்தில், ஸ்ரீ ராமர் கயை சென்று, தன் தகப்பனாருக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்தார்.

குடும்பத்திலேயே மதம் மாறி இறந்து போனவர்கள், பிள்ளைகள் இருந்தும் திவசம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள், அனாதையாக இறந்தவர்கள், கர்பத்திலேயே இறந்தவர்கள், அடிபட்டு இறந்தவர்கள், காணாமல் போய் பல காலம் ஆகியும் இறந்தார்களா இல்லை இருக்கிறார்களா என்று நிலைக்கு ஆனவர்கள், இறந்தவர்கள் இப்படி எவருக்காகவும் இந்த விஷ்ணு பாதத்தில், யாவரும் தான் இருக்கும் சமயத்தில் வந்து, தன் நினைவில் உள்ள இறந்தவர்கள் அனைவருக்கும் பிண்ட ப்ரதானம் செய்யலாம், செய்ய வேண்டும். திவசம் செய்யாததால் அலையும் பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைவார்கள்.

இனி,
மஹாபாரத சமயத்தில், ஜராசந்தன் மகத அரசனாக ஆண்டு வந்தான்.
யாதவர்களை தன் எதிரிகளாக நினைத்தான்.

ஜராசந்தன் பிறந்த ஊர் இன்றைய டாடாநகர் (TataNagar,Jamshedpur,Jharkhand). இது ஜாம்ஷெட்பூர் என்ற மாநிலத்தில் உள்ளது. இது பீகார் மாநிலத்தில் இருந்தது. Nov 15, 2000 ஆண்டு தெற்கு பகுதியில் இருந்த இந்த பிரதேசம் (ஜாம்ஷெட்பூர்) பிரிந்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.

நரகாசுரன் (ப்ரக்ஜ்யோதிச தேசம் என்ற அசாம்), பௌண்ட்ரக வாசுதேவன் (பௌண்ட்ரக தேசம் என்ற பங்களாதேஷ்), சிசுபாலன் (சேடி தேசம் என்ற மத்யபிரதேசம்), வ்ருஷ்னி குல கம்சன் (மதுராவை ஆண்ட, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா), துரியோதனன் (குரு தேசம் என்ற உத்திரபிரதேச இளவரசன்) ஆகியோர் ஜராசந்தனிடம் நட்பு கொண்டவர்கள்.




கம்சன் யாதவர்களை விரட்டி, மதுராவை கைப்பற்றியதால், கம்சனிடன் நட்பு கரம் நீட்டினான். தன் 2 மகள்களையும், கம்சனுக்கே மணம் செய்து கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா கம்சன். தன் தங்கை என்றும் பாராமல், மதுராவில் ஜெயிலில் தள்ளினான். ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயிலில் அவதாரம் செய்து, கோகுலத்தில் வளர்ந்து, தன் 11 வயதில், மதுரா வந்து ஒரே குத்தில் கம்சனை பரலோகம் அனுப்பினார்.
தன் மகள்கள் விதவை ஆனதற்கு இந்த ஸ்ரீ கிருஷ்ணரும், யாதவர்களுமே காரணம் என்று, 17 முறை மதுராவை தாக்கினான். 
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ கிருஷ்ணர் தோற்கடித்து விரட்டினார்.

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ணரை யவன தேசத்து (கிரீஸ் போன்ற மேற்கு தேசங்கள்) மிலேச்சனான "காலயவனன்" துணையுடன் எதிர்த்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலயவனனிடன் போர் புரிந்து சாமர்த்தியமாக அவனை கொன்றார்.
இந்த சமயத்தில் மதுராவை முற்றுகையிட்டான் ஜராசந்தன். யாதவர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்நத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.
இந்த மாயை புரியாத ஜராசந்தன் மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரையும், யாதவர்களையும் தோற்க அடிக்க முடியாத ஜராசந்தன், சிவனை குறித்து தவம் செய்து, 100 க்ஷத்ரிய அரசர்கள் பலியிட்டு தன் பலத்தை கூட்ட எண்ணினான். இதற்காக பல தேசங்களை கைப்பற்றி அதன் 95 க்ஷத்ரிய அரசர்களை ஜெயிலில் போட்டான்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தார். இதற்கு ஜராசந்தன் போன்றவர்கள் தடையாக இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை பீமனோடு மல்யுத்த போருக்கு அழைத்தார். பீமன் ஜராசந்தனை மல்யுத்தத்தில் இரண்டாக கிழித்து போட்டு விட்டான்.
ஜராசந்தன் மகன் சகதேவன் மகத தேச அரசனானான்.



சகதேவன் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டான்.

3000 வருடங்களுக்கு பிறகு கௌதம புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார். மகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

மஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

மஹா பாரத சமயத்தில்,
தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

இன்றைய ஆந்திர தேசம், அன்று ஆந்திரக தேசம் என்றும்,
இன்றைய தெலுங்கானா, அன்று அஸ்மாக தேசம் என்றும் பெயர் கொண்டிருந்தது.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.

தம்பி 'சகாதேவன்' ஆந்திர தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

ஆந்திர அரசர்கள், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.
ஆந்திர தேச அரசர்கள், மஹா பாரத போரில் துரியோதனனுக்கு துணை நின்று போர் செய்தனர்.

அஸ்மாக தேச அரசர்கள் (தெலுங்கானா), மஹா பாரத போரில் பாண்டவர்களுக்கு துணை நின்று போர் செய்தனர்.

பாண்டவர்கள் இறுதியில் வென்று, சக்ரவர்த்தி ஆனார் யுதிஷ்டிரர்.
பின், அஸ்வமேத யாகம் நடத்தி, பாரத தேசத்தின் சக்ரவர்த்தி என்று நிலைநாட்ட, மற்ற தேச அரசர்களின் சம்மதம் பெற அல்லது எதிர்ப்பவர்களை வெற்றி பெற, அர்ஜுனன் தன் படையுடன் கிளம்பினார்.
அர்ஜுனனின் பராக்கிரமும், வீரமும் அதி ஆச்சரியமானது. அர்ஜுனன், ஆந்திர அரசர்களை போரில் வென்று, யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் நடத்தி சக்ரவர்த்தி ஆனார்.

Tuesday 26 December 2017

மஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான் (Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)

மஹா பாரத சமயத்தில்,
ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான்
(Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)


இந்த தேசங்கள் அனைத்தும் பாரத தேசமாக இருந்தது.

Afghanistan, Uzbekistan and Tajikistan போன்ற தேசங்கள் அனைத்தும் "காந்தார தேசம்" என்று அழைக்கப்பட்டது. 


அனைவரும் துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டனர்.
ராமாயண காலத்தில்,
பரதனின் தாயார் "கைகேயி" கேகேய நாட்டின் இளவரசி. 
கேகேய நாடு இன்றைய பாகிஸ்தான் தேசம்.

கேகேய நாடும், காந்தார நாடும் அருகருகே உள்ள தேசங்கள்.

ராமரின் தம்பி பரதன், "காந்தார தேசம்" என்ற பெரிய தேசத்தை அமைத்தார். மக்கள் வாழும்படி நகரை அழகாக அமைத்தார்.

மஹாபாரத சமயத்தில், இந்த தேசங்களில், பெரும்பாலானோர் "வாலிகா அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்டனர்.
யார் வாலிகர்கள்? யார் மிலேச்சர்கள்? 
https://www.proudhindudharma.com/2018/04/MlechaVahlika.html படிக்கவும்

அன்றைய பாரத தேசத்தில், இந்த தேசங்களும் அடக்கம்.

அனைவரும் சனாதன தர்ம வழியில் வேத கலாச்சாரத்தின் படி வாழும் பரம்பரையில் வந்தவர்கள்.

வேத கலாச்சாரம் உள்ள இந்த பாரதத்தில் பிறந்தும், தன் முன்னோர்கள் வேத கலாச்சார படி வாழ்ந்தவர்கள் என்று தெரிந்தும், வேத கலாச்சாரத்திற்கு எதிராக எண்ணம் கொண்டு நடப்பவர்கள், குடி பழக்கம், மாட்டு மாமிசம் உண்ணும் பழக்கம், பச்சை அரிசியாக வாங்காமல், புழுங்கல் அரிசியை வாங்கி உண்பவர்களும், பொதுவாக வாலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அனைத்து தேசமும் பாரத நாடாக இருந்த சமயம் அது.




ஆப்கான் (Afghan) நாட்டில் உள்ள காந்தகார் (Gandahar) என்ற நாட்டின் பெண், த்ரிதராஷ்டிரனுக்கு மனைவி ஆனாள். இவளே "காந்தாரி".
இவள் வேத கலாச்சாரத்தில் உள்ளவள்.
இவள் மூத்த சகோதரன் "சகுனி".
ஒரு சமயம், திக் விஜயமாக சென்ற கர்ணன், "காந்தார" தேசத்தை கண்டு, இவர்கள் வாழும் முறையை கண்டு, "இவர்கள் யாவரும் வாலிகர்கள்" என்றான்.
இதன் காரணமாகவே, சகுனிக்கும், கர்ணனுக்கும் ஒரு வித கசப்பு உணர்வு கடைசி வரை இருந்தது.

பாகிஸ்தான் பகுதியில், சிந்து நதி ஓரம் உள்ள பஞ்சாப் தேசம், அன்று மாத்ர தேசம் என்ற பெயருடன் இருந்தது.

இங்கு உள்ள மக்கள், பல சமயம் வேத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்கள் செய்தனர். 
இந்த தேசத்தை ஆண்டு வந்தார் "சல்லியன்" என்ற அரசர். 
வேத கலாச்சாசரத்திற்கு எதிராக பல சமயம் இந்த தேச மக்கள் நடப்பதால், இவர்களையும் பல சமயம் வாலிகர்கள் என்று அழைத்தனர்.

பொதுவாக, வேத மார்க்கத்தை இகழ்பவர்கள், வாலிகர்கள் என்று கூறப்பட்டனர். (Convert)

வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.

ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற தேசத்து அரசர்கள், குதிரைபடை கொண்டு போர் புரிவதில் வல்லவர்கள். 
இந்த தேசத்தில் உள்ள குதிரைகள் மிகவும் மதிப்பு உடையவையாக இருந்தன.




பீஷ்மரின் தந்தை சந்தனுவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். 
அவரின் செயல்கள் யாவும், வேத கலாச்சாரத்திற்கு எதிராகவும், மேலும் அரசாட்சி செய்யும் திறன் குறைந்தும் இருக்க, சந்தனு அரசனாக முடி சூட்டப்பட்டார். 
சந்தனு மகாராஜாவின், அண்ணனை பொதுவாக 'வாலிக அரசன்' என்று அழைத்தனர்.
இன்றைய பொழுதில், நாத்தீகன், ஆத்தீகன் என்று சொல்லி, இவன் கடவுள் மறுப்பாளியா, ஒத்துக்கொள்பவனா என்று அறிவது போல, வாலிகா என்பது "வேத கலாச்சாரத்தை" மீறி செயல் செய்பவர்களை குறிக்கும் ஒரு சொல்.

மஹாபாரத சமயத்தில், வியாச பகவானை பார்க்க நாரதர் வந்து பேசும் போது, வாலிகர்களை பற்றி சொல்லும்போது, 
"வாலிகர்கள் (convert) இந்த பூமிக்கு ஒரு கறை போன்றவர்கள்" என்று சொல்கிறார்.
இவர்களால் நல்லவர்கள் நிம்மதியாக தர்மத்தில் வாழ முடியாது. தானும் கெட்டு, மற்றவர்களையும் கெடுப்பவர்கள் என்கிறார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும், தன் குரு 'துரோணர்' மற்றும் 'க்ருபர்' முன்னிலையில் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டி கொண்டு இருந்தனர். 
அந்த சமயத்தில் இந்த வாலிக அரசரும் (சந்தனுவின் சகோதரர்), உடன் இருந்து பார்த்தார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த மற்ற தேச அரசர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். 
தன் சகோதரர்களை பல தேசங்கள் அனுப்பி சம்மதமோ, அல்லது போரில் ஜெயித்தோ வர சொல்லி அனுப்பினார்.

யுதிஷ்டிரரின் தம்பி "நகுலன்" இந்த வாலிக அரசரிடம் 'போர் புரிய வேண்டுமா? அல்லது உங்களுக்கு யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடக்க ஆட்சேபனை ஏதும் இல்லையா?' என்றார்.
வாலிகா அரசர், 'போர் தேவையில்லை, யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகம் சிறப்பாக நடக்கட்டும்' என்று கூறி, முழுவதும் தங்கத்தில் ஆன தேரை பரிசாக தந்தார். 
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

கர்ணனும், துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும், குல பெண் "திரௌபதி"யை சபையில் அவமானப்படுத்த முயற்சி செய்தபோது, எதிர்க்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார், வாலிகா அரசர்.

மஹா பாரத போரில், பெரும்பாலான வாலிகா அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

காந்தார தேச படைகள், "சகுனி"யின் பின்னால் நின்று போர் புரிந்தனர்.




13ஆம் நாள், போரில் பலரும் சேர்ந்து அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு'வை கொன்றனர். 
இந்த சமயமும் துரியோதனன் செயலை எதிர்க்காமல், அமைதியாக இருந்தார் வாலிகா அரசர்.

15ஆம் நாள் போரில், பீமன் தன் கதையால் ஓங்கி அடித்து, வாலிக அரசர் தலையை பிளந்தார்.

வாலிகா அரசரின் இரு புதல்வர்கள் 'சோமதத்தன், புரிச்ரவஸ்' இருவரும் 'சாத்யகி'யினால் கொல்லப்பட்டனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான். 
கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே!' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, நீ ஒரு வாலிகன் என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம். சல்லியன் பெரும் அவமானம் கொண்டார். இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். 
கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.




18ஆம் நாள் யுத்தத்தில், காந்தார அரசன் சகுனி, கடைசியில், சகாதேவனால் அடித்து விழ்த்தப்பட்டான். 
சகுனியின் மகன் "உலுகன்" என்பவனும் சகாதேவனால் மரணத்தை தழுவினான்.

போர் முடிந்து, அஸ்வமேத யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட அர்ஜுனன், காந்தார தேசம் செல்லும் போது, சகுனியின் இன்னொரு மகனுடன் சண்டையிட்டான். 
இறுதியில் தோற்கடித்து, காந்தார தேசத்தை, யுதிஷ்டிரரின் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்தான்.

Monday 25 December 2017

கடவுளிடம், பெரியோர்களிடம், மகான்களிடம், நம்மை எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்? எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்? தெரிந்து கொள்வோமே...

பெரியோர்களை கண்டால் எப்படி அபிவாதயே (self introduction), சொல்ல வேண்டும்? எப்படி அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டும்?
எப்படி சொன்னால், அவர்கள் நம்மையும் மதிப்பார்கள்?




தீய குணம் உள்ளவர்கள் நாம் கேட்காமலேயே நம்மிடம் வலிய வந்து பழக வருவார்கள்.
ஆனால்,
நல்லவர்களை, எப்பொழுதுமே நாம் தான் தேடி போக வேண்டும்,
நல்ல குணம் கொண்டவர்கள், மகாத்மாக்கள், ஞானிகள் அவர்களாகவே நம்மிடம் பழக வரமாட்டார்கள். ஏன்?

பகவானுக்கு தன் பக்தர்களை விட, தன் பக்தனுக்கு பக்தனாக இருப்பவர்கள் மீது பிரியம் அதிகம் ஏற்படும். அவர்கள் செய்யும்  அபச்சாரங்களை கூட மன்னித்து விடுவார். ஏன்?

பொதுவாக பகவானிடம் பக்தனாக இருப்பவன், நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

"பெரியோர்களை முன் நிறுத்திதான் வணங்க வேண்டும்" என்று சொல்கிறது.

இங்கு பெரியோர்கள் என்பது நம் குருவையோ, ரிஷிகளையோ குறிக்கிறது.

பொதுவாக நாம் நேரிடையாக பெரியோர்களிடம், நம்மை அறிமுக படுத்திக்கொண்டால்,
நம் தகுதி என்ன?, என்று பார்த்து,
பின் பேசலாமா? என்ற நினைப்பை அவர்களுக்கு தந்து விடும்.

கெட்ட பழக்கம் உடையவர்கள், நல்லவனையும் தன் பக்கம் இழுத்து அவனுக்கும் கெட்ட பழக்கத்தை புகுத்தி விடுவார்கள். இது உலக இயற்கை.

"துஷ்டனை கண்டால், தூர விலகு" என்று ஒரு வசனம் உண்டு.
தகாத செயல்கள், தீய எண்ணங்களை விதைக்கும் மனிதர்கள் நம்மிடம் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களை விட்டு நாம் விலகி இருப்பதே, நம் ஆன்மீக வளர்ச்சிக்கு நல்லது.

பெரியோர்கள், ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் தான் பழக ஆசைப்படுவார்கள்.

இதன் காரணமாகவே, பெரியோர்களை நேரிடையாக சென்று வணங்க கூடாது என்கிறது நம் சாஸ்திரம்.

நம்மை பொறுத்தவரை 'நல்லவன்' என்று நினைத்து கொண்டு இருப்போம். நம்மிடம் உள்ள தீய குணங்கள் நமக்கு தெரியாது. ஆனால் பிறருக்கு தெரியும்.




நம் தீய குணங்களோ எண்ணிலடங்காமல் இருக்கிறது.
அதில் ஒன்று அவர்கள் கண்ணில் பட்டாலும், நம்மிடம் நல்லவர்கள் பழக அஞ்சுவார்கள்.

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதால்,
நல்லவர்கள் பொதுவாக தானாக வந்து, கெட்ட பழக்கம் உடையவர்களிடம் பழக விரும்ப மாட்டார்கள்.
தீய குணங்கள் நமக்கும் வந்து விடுமோ என்று அஞ்சுவார்கள். பாவத்தை சேர்த்து கொள்ள அஞ்சுவார்கள்.
ஆதலால்,
நல்லவர்களை நாம் தான் தேடி போக வேண்டும்.

இதற்கு ஒரே வழியாக தான் நம் சாஸ்திரம் அபிவாதயே என்ற self introductionஐ காட்டுகிறது.
நாம் அவருக்கு அபிமானமான ஒருவரை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.

கோவிலுக்கு செல்லும் போது, பெருமாளிடம் நேரிடையாக தன்னை பற்றி சொல்லிக்கொள்ளாமல்,
"அடியேன் ராமானுஜ தாஸன்" என்று சொன்னால்,
ராமானுஜர் மீது அதீத ப்ரேமை கொண்ட பகவான், நம்மை பற்றி, நம் தரத்தை பற்றி துளி கூட யோசிக்காமல், மோக்ஷம் என்ற கதவை திறந்து விடுகிறார்.

அதே போல, பெரியவர்களை பார்த்து, அபிவாதயே (self intro) சொல்லும் போதும்,
நாம் வேதம் படிக்காமலேயே "யஜுர் சாகா அத்யாயி" என்று யஜுர் வேதம் படிக்கிறேன் என்று சொன்னாலும், அதற்கு முன் நான் இந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்,
இந்த கோத்திரத்தில் வந்தவன் என்று சொல்லும் போதே,
உண்மையான பெரியோர்கள், "ஆஹா... நீ அந்த அந்த ரிஷியின் வம்சமா? அந்த கோத்திரத்தை சேர்ந்தவனா?"
என்று ரிஷிகளின் பெருமையை தியானித்து,
நம்மிடம் அந்த வம்சத்தில் வந்தவன் பேசுகிறான் என்ற நோக்கில் பார்த்து பெருமிதமாக பழகுவர். நம்மிடம் தோஷம் இருந்தாலும் பிறகு பெரியோர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
ரிஷிகளை கொண்டே நாம் பெரியோர்களை நாட வேண்டும்.


பிராம்மண சமுதாயம் மட்டுமல்ல, உலக மனிதர்கள் யாவரும் ரிஷிகள் பரம்பரையில் வந்தவர்களே.. ஒவ்வொருவரும், தாங்கள் எந்த ரிஷி பரம்பரையில் வந்தவர்கள் என்று கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்.
மேலும் அந்த ரிஷியின் சரித்திரம், பெருமைகள் தெரிந்து கொள்ள ஆசை பட வேண்டும்.

உதாரணத்திற்கு ப்ருகு ரிஷியின் கோத்திரத்தில் வந்தவர்கள், அவரை பற்றி இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்.

மனித சமுதாயம் ரிஷிகளால் உருவானது.
பொய் மதங்கள் சொல்வது போல, ஆடை அணியாத முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவர்கள் அல்ல நாம் என்று அறிய வேண்டும்.
நம் குல பெருமை மகத்தானது. இதை மறந்து விட கூடாது.

மகான்களை கொண்டே, நம் குருவை கொண்டே, பகவானையும் நாட வேண்டும்.
பிராம்மண குலத்தில் பிறந்தும், தீய புத்தியால், தன் தவ வலிமையாலும், பலத்தாலும் தேவர்களையே மிரட்டி கொண்டு, பிறர் மனைவி என்று தெரிந்தும் பேடியாக ராமர் இல்லாத சமயத்தில் சீதையை இழுத்து வந்தான் ராவணன்.
வீரனாக ராமரிடம் போரிட்டு சீதையை கொண்டு வராமல், இப்படி கொண்டு வந்து வைத்து இருக்கிறாயே என்று கேள்வி கேட்ட தம்பி விபீஷணனை,
"அந்த ராமனோடு போ. இங்கு இருக்காதே!!" என்று எல்லோரும் பார்க்க சபையில் எட்டி உதைத்து துரத்தினான் ராவணன்.

அதர்மம் செய்யும் ராவணன் அண்ணனாக இருந்தாலும், அவனோடு இருக்க கூடாது என்று முடிவு செயதார் விபீஷணன்.
துஷ்டனை கண்டால் தூர விலகு என்பது வெளி மனிதர்களுக்கு மட்டுமல்ல, தன் சொந்த ரத்தமாக இருந்தாலும் விலக வேண்டும் என்று காட்டினார் விபீஷணன்.
கொஞ்சம் கவனித்து பார்த்தால், ஸ்ரீ ராமரை நோக்கி வந்த விபீஷணன், நேரிடையாக ஸ்ரீ ராமரிடம் சென்று விடவில்லை என்று தெரியும்.
விபீஷணன் ராமரின் படைகள் அனைவரையும் பார்த்து, தன்னை ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தமாறு கேட்கிறார்.
இதுவே ரகசியம்.
தான் ராமரிடம் நேரிடையாக செல்ல கூடாது.
ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமான இந்த வானர படைகளில் யாராவது ஒருவர், தன்னை பற்றி ராமரிடம் சொல்லி, சேர்த்துக்கொள்ள சொன்னால், ராமர் தயக்கமின்றி தன்னை சேர்த்து கொள்வார் என்ற சாஸ்திரத்தை உணர்ந்து இருந்தார்.


ஹனுமான் ஸ்ரீ ராமரிடம் இவர் ராவணன் தம்பியாக இருந்தாலும், இவரை நம்பலாம் என்று பரிந்துரை செய்தார்.

தன்னை சரண் அடைந்தவர்கள் எவராக இருந்தாலும், அபயம் தரும் ஸ்ரீ ராமர்,
தனக்கு பிரியப்பட்ட ஹனுமானுக்கும் பிரியப்பட்டவராக விபீஷணன் இருக்கிறார் என்றதும் ஒரு கேள்வி இல்லாமல், விபீஷணனை ஏற்றுக்கொண்டார்.
"ஸ்ரீ ராமரே லட்சியம்" என்று இருந்தவர்கள் லக்ஷ்மணனும், பரதனும்.

ஸ்ரீ ராமருக்கும், இவர்கள் இருவர் மேல் அளவுக்கடந்த அன்பு உண்டு.

லக்ஷ்மணனிடத்திலும், பரதனிடத்திலும், தனக்கு உள்ள அன்பை விட, தன் கடைசி தம்பி சத்ருக்னன் மீது அன்பு அதை விட வைத்து இருந்தார் ஸ்ரீ ராமர்.

இதற்கு காரணம் உண்டு.

சத்ருக்னனுக்கு ஒரே லட்சியம், தன் அண்ணன் பரதனுக்கு சேவை செய்வது மட்டும் தான்.
இவருக்கு ராமர் கூட இரண்டாம் பட்சம் தான்.

பொதுவாக பகவானுக்கு தன் அடியார்கள் தனக்கு சேவை செய்வதை காட்டிலும்,
தன் அடியாருக்கு சேவை செய்யும் அடியார்க்கு அடியாக இருப்பவர்களை மிகவும் பிடிக்கும்.
இவர்களிடம் கெட்ட நடத்தை இருந்தாலும், தன் அடியாருக்கு சேவை செய்கிறான் என்பதாலேயே, அவனுக்கும் மோக்ஷத்தின் கதவை திறந்து விடுகிறார்.

ராவணனுடைய தங்கை "கும்பினி"க்கும், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு தேசத்து அரசன் "மது" என்பவனுக்கும் பிறந்தவன் "லவனாசுரன்".
இவனை, சத்ருக்னன் வதம் செய்தார்.




இதையே ஒரு வாய்ப்பாக கொண்டு, ஸ்ரீ ராமர் "மது" ஆண்ட தேசத்தை, தன் தம்பி சத்ருக்னனுக்கு கொடுத்து, அரசனாக்கினார்.
இந்த மது நகரமே, இன்றைய "மதுரா".
சத்ருக்னன் ஆளும் இந்த மதுராவை ஒரு புண்ணிய க்ஷேத்ரமாக ஆக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமர் ஆசைப்பட்டார்.
உத்திர பிரதேசத்தில் உள்ள இதே மதுராவில், த்ரேதா யுகத்தில், ஸ்ரீ ராமரே, கிருஷ்ணராக அவதரித்தார்.

தன் சகோதரன் "சத்ருக்னன்" ஆண்ட இந்த தேசத்தில் தான், தன் அடுத்த அவதாரம் என்று சங்கல்பித்து அவதரித்து, மதுராவை திவ்ய தேசம் ஆக்கினார் பகவான் நாராயணன்.

அடியாருக்கு அடியாராக இருந்து, தன் குருவின் சொல்படி இருந்தாலே, பகவான் மிகவும் ப்ரசன்னமாகி எதையும் தந்து விடுவார்.
நமக்கு ஏன் குரு வேண்டும்?
நமக்கு ஆத்ம குரு இருந்தால், பகவான் நம்மை பார்க்கும் போது, நம் கெட்ட குணங்களை, அபசாரத்தை கண்டு கொள்ளா மாட்டார்.
தன் பக்தனை குருவாக ஏற்றுள்ளான், தன் பக்தனின் அபிமானத்துக்கு, கருணைக்கு பாத்திரமானவன் என்ற காரணத்துக்காகவே, நமக்கும் மோக்ஷம் தந்து விடுவார் பெருமாள்.

நாம் ஞானியும் இல்லை, சுத்த சித்தம் உள்ளவனும் இல்லை.
நேரிடையாக பகவானிடம் சென்றால், அவர் நம் தகுதியை எதிர்பார்க்கிறார்.

ஒரு குருவை பிடித்து கொண்டு, பகவானிடம் சென்றால், கேள்வி கேட்காமல் சேர்த்துக்கொள்கிறார். இதுவே ரகசியம்.

குரு இல்லாதவன் சுய முயற்சி செய்து பகவானை அடைவது மிக கடினம். நமக்கு குருவே கதி.

ஆத்ம குருவை ஒவ்வொரு மனிதனும் அடைவது அவசியம். குருவின் துணை கொண்டு, தெய்வத்திடம் நாம் செய்யும் பிரார்த்தனைகள் யாவும், பலிக்கின்றன.

ஹிந்துவாய் பிறக்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

Hare Rama Hare Krishna - Bhajan (listen)


Sandhya Vandanam - Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)