Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில், தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

மஹா பாரத சமயத்தில்,
தெலுங்கானா, ஆந்திர தேசம்: Telangana, Hyderabad

இன்றைய ஆந்திர தேசம், அன்று ஆந்திரக தேசம் என்றும்,
இன்றைய தெலுங்கானா, அன்று அஸ்மாக தேசம் என்றும் பெயர் கொண்டிருந்தது.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.

தம்பி 'சகாதேவன்' ஆந்திர தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

ஆந்திர அரசர்கள், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.
ஆந்திர தேச அரசர்கள், மஹா பாரத போரில் துரியோதனனுக்கு துணை நின்று போர் செய்தனர்.

அஸ்மாக தேச அரசர்கள் (தெலுங்கானா), மஹா பாரத போரில் பாண்டவர்களுக்கு துணை நின்று போர் செய்தனர்.

பாண்டவர்கள் இறுதியில் வென்று, சக்ரவர்த்தி ஆனார் யுதிஷ்டிரர்.
பின், அஸ்வமேத யாகம் நடத்தி, பாரத தேசத்தின் சக்ரவர்த்தி என்று நிலைநாட்ட, மற்ற தேச அரசர்களின் சம்மதம் பெற அல்லது எதிர்ப்பவர்களை வெற்றி பெற, அர்ஜுனன் தன் படையுடன் கிளம்பினார்.
அர்ஜுனனின் பராக்கிரமும், வீரமும் அதி ஆச்சரியமானது. அர்ஜுனன், ஆந்திர அரசர்களை போரில் வென்று, யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் நடத்தி சக்ரவர்த்தி ஆனார்.

No comments: