Followers

Search Here...

Monday 5 August 2019

ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? Non Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்ன?

"பிற உயிர்களை முடிந்தவரை 'ஹிம்சிக்காமல்' இருக்க மனிதன் முயற்சி செய்ய வேண்டும்" என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.


தன் வயிரே பெரிதென நினைக்கும் பொய் மதங்கள்,
"பிற மனிதர்களை ஹிம்சை செய்யாதே" என்ற அளவுக்கு மட்டும் சொல்லி, விலங்கு, செடிகளை உயிர்களாகவே சேர்த்து கொள்வதில்லை.

இன்று அறிவியல் (Science) "விலங்கும், செடிகளும் கூட உயிர்கள் (Living Being) தான்" என்று உலகம் தட்டை சொல்லி திரிந்த இந்த பொய் மதங்கள் கொள்கைகளை வீதிக்கு கொண்டு வந்து காட்டுகிறது.

"அஹிம்சா பரமோ தர்ம:" -
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சாஸ்திரம் சொல்கிறது.

மனித பிறவியில் தான் "பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார்" என்று சிந்திக்க முடியும்.
மற்ற உயிர்களான விலங்குகள், மரங்களால் "நம்மை படைத்தவன் யார்?" என்று சிந்திக்க முடியாது..
மனித வாழ்வின் லட்சியம் "பரமாத்மா வாசுதேவனை அடைவதே".

நம்மை போலவே, பய உணர்ச்சி, வலி உணர்வுகள் கொண்ட விலங்குகளை தின்பது மகா பாவம்.
மனிதன் "பாவத்திற்கு" அஞ்ச வேண்டும்.
நாம் செய்யும் "பாவங்கள்" தான் உலகத்தில் நாம் அனுபவிக்கும் பலவகை "துன்பங்களாக" நமக்கு திருப்பி தரப்படுகிறது.
இந்த ஜென்மத்தில் செய்த பாவம் மட்டும் நம்மிடத்தில் இல்லை.
"பல கோடி ஜென்மங்களாக" நாம் செய்த பாவ மூட்டைகள், நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், மேலும் பாவ மூட்டையை அதிகரித்து கொள்ள மனிதன் அஞ்ச வேண்டும். 

"துன்பங்கள் ஏற்படும்" என்று தெரிந்தே, நாமாக பாவங்களை சேர்த்துக்கொள்ள கூடாது.
முடிந்தவரை "பாவ காரியங்கள்" செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு உணவு தேவையே தவிர, மாமிசம் தேவை இல்லை.
ராணுவம் போன்ற க்ஷத்ரிய தொழில் செய்தால்,
கூடுதல் உடல் பலத்திற்கும், தன் உயிரே போக கூடிய வாய்ப்பு உள்ள வீரர்கள் வேண்டுமானால் மாமிசம் எடுத்துக்கொள்ளலாம் என்று இவர்களுக்கு மட்டும் அனுமதி தருகிறது சாஸ்திரம்.

பொதுவாக,
மனிதன் வாழ்வதற்கு, "மாமிசம் தான் தேவை" என்று இல்லை.

மனிதனால் காய் கனிகள் சாப்பிட்டும் வாழ முடியும்.
வலியை, மரண பயத்தை அனுபவிக்க செய்து, ஒரு விலங்கை தின்பதை காட்டிலும், காய் கனிகளை சாப்பிட்டு மனிதன் உயிர் வாழ முடியும்.





விலங்குகளை கொன்று ஜீவ ஹிம்சை செய்யாமல், காய், கனிகளை உண்டு மனிதன் வாழ வேண்டும்.

சில காய்கள், தானியங்கள் பெறுவதற்கு, அந்த செடியையே கொலை செய்ய வேண்டி இருக்கிறது.

கொலை செய்யபடும் விலங்குகள் மரண வேதனையை அனுபவிக்கிறது என்று மனிதன் தன் கண்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.
ஆனால்,
"அரிசி, கிழங்கு வகைகள்" பெறுவதற்கு செடிகள் வேரோடு பிடுங்கப்படும் போது, மனிதன் தன் கண்ணால் விலங்குகளின் வேதனையை புரிந்து கொள்வது போல, செடியின் வேதனை புரிந்து கொள்ள முடியாது.

விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை. ஆனால் உணர்வு உண்டு.
"தன்னை வெட்ட வருகிறான் என்பதை செடிகள் புரிந்து கொள்கின்றன" என்று அறிவியல் சொல்கிறது.

விலங்குகள் வேதனையை மனிதன் நேரில் பார்த்து புரிந்து கொள்வது போல, செடிகள் உணர்வை புரிந்து கொள்ள முடியாததாலும்,
விலங்குகளை போன்று செடிகளுக்கு வலியும், பயமும் இல்லை, ஆனால் உணர்வு மட்டும்  உண்டு என்பதாலும். ஜீவ ஹிம்சையில் விலங்குகளை விட செடிகள் படும் அவஸ்தை குறைவே..
இதன் காரணத்தால், மனிதர்களுக்கு காய், கனிகள், தானியங்கள் சாப்பிட அனுமதித்தனர்.
மனிதனாக பிறந்த அனைவரிடத்திலும் எதிர்பார்க்கும் அடிப்படை எதிர்பார்ப்பு "புலால் உண்ணாமை".

ஆன்மீக வளர்ச்சியில் மேலும் பக்குவப்பட ஆசைபடுபவர்கள், செடிகளை வேரோடு வெட்டி எடுக்கப்படும் காய் கனிகளை கூட முடிந்தவரை தவிர்க்கின்றனர்.
செடியை பிடுங்காமல், கிடைக்கும் வாழைக்காய், முருங்கைகாய், கத்திரிக்காய், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு,
முடிந்தவரை செடிகளிடத்திலும் ஜீவ ஹிம்சை செய்யாமல், விரதங்கள் அனுஷ்டித்து, தன் ஆன்மீக வளர்ச்சிக்கு முயல்கின்றனர்.

துருவன் பரவாசுதேவன் நாராயணனை காண தபசுக்கு சென்றான்.
முதல் மாதம் நாராயண நாமத்தை ஜபித்து, வெறும் காய் கனிகளை மட்டும் பறித்து தன் பசிக்கு உணவாக எடுத்து கொண்டான்.

அடுத்த மாதம், பறித்தாலும் ஜீவ ஹிம்சை தானே என்று, மரத்தில் இருந்து தானாக விழுந்த பழங்களை மட்டும் உணவாக எடுத்து கொண்டான்.
3வது மாதம், விழுந்த பழங்களை பறவைகள் சாப்பிடட்டுமே என்று, அதையும் விட்டு விட்டு, காய்ந்த இலைகளை கசக்கி அதையே உணவாக உட்கொண்டான்.


4வது மாதம், அதுவும் வேண்டாம் என்று, யமுனை நதியில் ஓடும் தண்ணீரை மட்டுமே பருகி கொண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

5வது மாதம், ஜலத்தையும் விட்டு, காற்றையே உணவாக உண்டு, நாராயண தியானத்தில் இருந்தான்.

கோடி கோடி ஜென்மங்கள் முயற்சி செய்தாலும் காட்சி தராத பெருமாள், ஜீவ ஹிம்சையை குறைத்து கொண்டு, நாராயணனை தரிசிக்கும் ஆசை கொண்டிருந்த 5 வயது துருவனுக்கு 5 மாதத்தில் காட்சி கொடுத்து விட்டார்.
துருவன் புகழ் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்க, துருவனின் பூலோக காலம் முடிந்த பிறகு, தனியாக துருவ நக்ஷத்திரம் ஒன்றை படைத்து அங்கு நிரந்தரமாக இருக்க அணுகிரஹித்தார் பெருமாள்.

மேலும்,
இப்பொழுது உள்ள ப்ரம்ம தேவன் ஆயுசு வரை துருவ மண்டலத்தில் இருந்து, ப்ரம்ம தேவன் மோக்ஷம் என்ற வைகுண்டம் அடையும் போது, துருவனையும் வைகுண்டத்தில் சேர்த்து கொள்வதாக அணுகிரஹம் செய்தார் பெருமாள்.

அஹிம்சா பரமோ தர்ம: 
"பரமாத்மாவை நெருங்க அஹிம்சை மிக முக்கிய தர்மம் (அறம்/rule)" என்று சொல்கிறது.

வெறும் காற்றையே உணவாக, காய்ந்த இலைகளே உணவாக, பழங்களே உணவாக உண்டு, துருவனை போல அஹிம்சை என்ற ஜீவ காருண்யத்தை நம்மால் கடைபிடிக்க முடியாது.
ஆனால்,
மாமிசம் உண்ணாமல், காய் கனிகள் உண்ணும் அளவிளாவது நாம் இருக்க வேண்டும். 

நம்மை ஒரு கொசு கடித்தாலே எத்தனை வேதனையை அனுபவிக்கிறோம்?!..
ஒரு விலங்கு கொலை செய்யப்படும் போது, அது அனுபவிக்கும் வேதனையை நினைத்து பார்த்தாலேயே, ஜீவ காருண்யம் நம் இதயத்திலும் உருவாகும்.
ஜீவ காருண்யம் என்ற எண்ணம் நமக்கு உண்டாகும் போது, புலால் உண்ண வேண்டும் என்ற ஆசை அழியும்..
"பாவத்திற்கு" மனிதன் அஞ்ச வேண்டும்.

"விலங்குகளுக்குள்ளும், செடிகளுக்குள்ளும், மனிதர்களுக்குள்ளும், இருப்பது ஜீவனே (உயிரே)" என்று அறிந்து இருந்த ஹிந்துக்கள் வாழ்க.

ஜீவ காருண்யமே "புலால் உண்ணாமைக்கு முக்கிய காரணம்".

ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் மிருக புத்தியில் இருந்து, மனிதனாகிறான்.
மேலும் ஜீவ காருண்யம் அதிகப்பட, மனிதன் யோகி, ரிஷி, முனி, ப்ரம்ம நிஷ்டன் என்று முன்னேறுகிறான்.
நாம் ரிஷியாக வேண்டாம்...
நாம் யோகியாக வேண்டாம்..


குறைந்த பட்சம், மனித குணங்களை கொண்ட மனிதனாக இருப்போம்.


Thursday 1 August 2019

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே....

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே..
அர்த்தம் புரிந்தால், ஆசை வருமே!! கசக்குமா?

மனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..


ரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni
நாம் அனைவருக்கும் "காயத்ரி என்ற வேத மந்திரம்" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் "விஸ்வாமித்திரர்" என்று தெரியும்.
வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில்" அடக்கம்.
அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்?
யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?

சந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே!!  நமக்கு தெரியுமா??
பிரம்மாவை படைத்தவர் "சாஷாத் பரவாசுதேவன்".

பரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, "ஓம் என்ற ஓங்கார மந்திரம்" கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது.
உலகுக்கு ஓங்காரத்தை கொடுத்த முதல் ரிஷி "ப்ரம்ம தேவன்". அவருக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?







சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?  அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...

ப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) ,
தேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்)
பரமாத்மா தேவதா ! (பரமாத்மா தேவதை)
என்று சந்தியாவந்தனத்தில் சொல்கிறோம்...

ப்ரம்மா தேவன் "ஓங்காரத்தை" கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை பிரம்மாவுக்கு காட்டவே, நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக "தலையை" தொடுகிறோம்.

ஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது? காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.

ப்ரம்மா யாரை நினைத்து  ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்து பிரார்த்தித்தார்? பரவாசுதேவன் நாராயணன்.
நாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம்.

தலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும்,
மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,
மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
இத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....


சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா?
Share and comment...
மேலும் படிக்க.... படிக்கவும்