Followers

Search Here...

Showing posts with label சந்தியாவந்தனம். Show all posts
Showing posts with label சந்தியாவந்தனம். Show all posts

Friday 25 November 2022

குளிப்பதற்கும் ரிக் வேதம்....இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்) சொல்லலாமே? அறிவோம் அர்த்தம்

இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்)

வேத மந்திரங்களை முடிந்தவரை அர்த்தங்கள் புரிந்து சொல்வோமே! 


1st Bath (Before Soap): 

மார்ஜனம் (मार्जनं) (maarjanam):

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न: ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன

எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே 

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்



तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ:

யஸ்ய க்ஷயாய ஜின்வத:

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3

ॐ भू: भुव: सुव:



2nd Bath (After Soap):

புனர்-மார்ஜனம் (पूण: मार्जनं) (punar-maarjanam)


दधिक्राव्णो॑ अकारिषं

ததிக்ராவ்ணோ: அகாரிஷம்

என்னை தூக்கி கொண்டு செல்லும் (ததிக்ராவே) பகவானே ! நான் காரியங்கள் செய்யவில்லை.

जिष्णोरश्व॑स्य वाजिनः (जिष्णोः अश्व॑स्य वाजिनः)

ஜிஷ்ணோ: அஷ்வஸ்ய வாஜின:

எப்படி காரியங்கள் செய்யாமல் குதிரையில் அமர்ந்து இருப்பவனை, குதிரையையே தன் சக்தியால் அழைத்து கொண்டு செல்கிறதோ, அது போல நீங்களே கர்த்தாவாக இருந்து காரியங்கள் செய்கிறீர்கள்

सुरभि नो मुखा॑ करत्

ஸுரபி ந: முகா கரத்

நீங்கள் என்னுடைய வாக்கை சுகந்தமாக்குங்கள். (நல்லதையே பேச செய்யுங்கள்)

प्र न: आयूं॑षि तारिषत्

ப்ர ந: ஆயூம்ஷி தாரிஷத்

தீர்க்க ஆயுள் கொடுத்து உயர செய்யுங்கள்

ऋग्वेदः - मण्डल ४ - सूक्तं ४.३९. मंत्र ६

Rigveda: - Mandala 4 - Suktam 39  Mantra 6

Samaveda : Mantra 358

Samaveda: (Gauthama Sakhaa) Poorvaarchikah » Prapaataka » 4; ardha-Prapaataka » 2; dashatiḥ » 2; Mantra » 7

Samaveda: (Ranaaneeya Sakhaa) Poorvaarchika: » Chapter (adhyaaya) » 4; Clause (kanda) » 1; Mantra » 7

अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 137; मन्त्र » 3

AtarvaVeda - Kanda 20 Sukta 137 Mantra 3

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன



எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்

तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ

யஸ்ய க்ஷயாய ஜினவத

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3


ॐ भू: भुव: सुव:

Friday 29 January 2021

"காயேன வாசா மனசே ... நாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று நாம் சொல்லும்போது, நாராயணன் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்? தெரிந்து கொள்வோமே!!

ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..

எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று  ஆசைபட்டது.

கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.

"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.





அது போல நாம்,

எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும், 

நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன், 

அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால், 

தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து, 

நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், 

தானே அதை சரி செய்து, 

நன்றாக செய்தது போல ஆக்கி, 

முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.


சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே... 


ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் .


எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.

உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும். 

அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.

 

ஹிந்துக்கள் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம்...

"காயேன வாசா மனசே இந்த்ரியர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி"


அர்த்தம்

நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.





மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு  காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.


நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..


நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.


நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.


வாழ்க ஹிந்து தர்மம்...

Thursday 1 August 2019

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே....

நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே..
அர்த்தம் புரிந்தால், ஆசை வருமே!! கசக்குமா?

மனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..


ரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni
நாம் அனைவருக்கும் "காயத்ரி என்ற வேத மந்திரம்" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் "விஸ்வாமித்திரர்" என்று தெரியும்.
வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில்" அடக்கம்.
அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்?
யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?

சந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே!!  நமக்கு தெரியுமா??
பிரம்மாவை படைத்தவர் "சாஷாத் பரவாசுதேவன்".

பரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, "ஓம் என்ற ஓங்கார மந்திரம்" கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது.
உலகுக்கு ஓங்காரத்தை கொடுத்த முதல் ரிஷி "ப்ரம்ம தேவன்". அவருக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா?







சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?  அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...

ப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) ,
தேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்)
பரமாத்மா தேவதா ! (பரமாத்மா தேவதை)
என்று சந்தியாவந்தனத்தில் சொல்கிறோம்...

ப்ரம்மா தேவன் "ஓங்காரத்தை" கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை பிரம்மாவுக்கு காட்டவே, நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக "தலையை" தொடுகிறோம்.

ஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது? காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.

ப்ரம்மா யாரை நினைத்து  ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்து பிரார்த்தித்தார்? பரவாசுதேவன் நாராயணன்.
நாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம்.

தலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும்,
மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,
மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.
இத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....


சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா?
Share and comment...
மேலும் படிக்க.... படிக்கவும்