Followers

Search Here...

Saturday 18 April 2020

ப்ருஹஸ்பதியின் மனைவி தாரா, சந்திரன் மூலமாக புதனை பெற்றாள்.. வேதம் என்ன சொல்ல வருகிறது?.. புரிந்து கொள்வோம் காரணத்தை...

"பேன்" தலையில் ஏற்படும் புழுக்கத்தில் இருந்து தானாக உண்டாகிறது.
பேன் "மனிதனால் உண்டானது" என்பதே உண்மை.
அதற்காக, பேனுக்கு தகப்பன் "மனிதன்" என்று சொல்ல முடியுமா? 
இது உண்மை என்றும் சொல்லலாம்.
இது உண்மையில்லை என்றும் சொல்லலாம்.

அது போல,
சில படைப்புகளை, வேதம் சொல்லும் போது, அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற காம எண்ணத்துடனேயே பார்க்க கூடாது...




"மனிதனிடம் இருந்து பேன் உண்டானது" என்று சொன்னாலும், "இருவருக்கும் தகப்பன் மகன் உறவு இல்லை" என்று தெரிகிறது.

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் சில படைப்புகள் உருவாகின்றன. 
ஆதியில் ப்ரம்ம தேவன் நாராயணனால் படைக்கப்பட்டதும், 
பிறகு, ப்ரம்ம தேவனிடமிருந்து ருத்ரன் வெளிப்பட்டதும், 
ப்ரம்ம தேவனின் மனதால் சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வாயம்பு மனு போன்றவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதும் இது போன்றதே..

"ஆண் பெண் சேர்க்கை படைப்பு" என்று நம் கீழ்த்தரமான புத்தியுடன் பார்க்க கூடாது.

மனிதன் இதை புரிந்து கொள்ள தானோ என்னவோ!! அவனவன்  தலையிலேயே பேன்  உருவாகி, "படைப்புகள் அனைத்தும் ஆண் பெண் சேர்க்கையினால் மட்டும் இல்லை என்று புரிந்து கொள்" என்று தலையை பிராண்டிக்கொண்டே இருக்கிறது.

வேதம், சில படைப்புகளை ஆண் பெண் சேர்க்கையாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை திவ்யமான படைப்பாக சொல்லும். 
வேதம், சில படைப்புகளை கிரகங்கள் குணத்தை பார்த்து சொல்லும்.. 
அனைத்தையும் "ஆண் பெண் சேர்க்கை" என்ற புத்தியுடன் பார்ப்பவன், வேதம் சொல்வதை புரிந்து கொள்ளவே முடியாது.

சூரியன் உதித்தால், தாமரை மலரும். என்று சொல்கிறோம்
"தாமரைக்கும் சூரியனுக்கும் சம்பந்தம் உண்டு" என்று சொல்லும் போது, இது "காம உறவு" என்று நினைக்க கூடாது.
"தூங்கு மூஞ்சி மரம், சூரியன் மறைந்து விட்டால், கூம்பி விடும்". ஆதலால், 
"சூரியனுக்கு இந்த மரத்துக்கும் காதல்" என்று நினைக்கக்கூடாது.

இந்த இரண்டுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. 
இந்த சம்பந்தத்தை சொல்லும் போது, இதையே காமம் என்று நினைக்கக்கூடாது.
தேவர்களின் படைப்பை,
கிரகங்கள் (Planets, Stars) படைக்கப்பட்ட நிகழ்வை,
மனு அரசர் படைக்கப்பட்டதை சொல்லும் போது,
'நாம் பிறந்தது போல, இதுவும் ஆண் பெண் சேர்க்கையினால் ஏற்பட்ட படைப்பு தான்' என்று பார்க்க கூடாது.

தேவர்கள், ரிஷிகள், தேவர்களை,ரிஷிகளை,ஸ்வாயம்பு மனுவை ப்ரம்ம தேவன் மனதால் படைத்தார் என்று வேதம் சொல்கிறது.
நமக்கு மீறிய படைப்புகள் என்ற அளவாவது புரிந்து கொண்டு, பக்தியுடன் அறிந்து கொள்ள வேண்டும்.
மனித சக்திக்கு, புத்திக்கு அப்பாற்பட்ட காரியம் செய்ய கூடியவர்கள் தேவர்கள், ரிஷிகள்.




தெய்வ படைப்புகளை வேதம் சொல்லும் போது, பயபக்தியுடன் கேட்க வேண்டுமே தவிர, ஆண் பெண் சேர்க்கை என்ற ரீதியில் பார்க்கவே கூடாது.

ரிஷிகள் தேவர்களை படைத்தார்கள்.  
அத்ரியின் கண்களிலில் இருந்து தோன்றினார் "சோமன்" (சந்திரன் அம்சம்)

கஸ்யபர் ஒருவரே பல வித படைப்புகளை படைத்தார்.
"அசுரர்களை, தேவர்களை, பக்ஷிகளை, பாம்புகளை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.

கஸ்யப ரிஷி, "பாம்பை ஸ்ருஷ்டி செய்தாரா?"
என்று மீண்டும் ஆண் பெண் சேர்க்கை என்ற புத்தியுடனேயே பார்க்க கூடாது.

"நாம் தான் பேனை ஸ்ருஷ்டி செய்கிறோம். மனிதனும் பேனும் ஒன்றா?" 
யோசிக்க வேண்டும்.

அது போல,
வேதம், சில படைப்புகளை பற்றி சொல்லும் போது, மனித உறவுகளை போல, ஆண் பெண் சேர்க்கை உறவு போல பார்க்கக்கூடாது.

"கிரகங்களில் சில கிரகங்கள் நட்பு கிரகங்கள்.. 
சில கிரகங்கள் எதிரிகள் என்றும்" வான சாஸ்திரம் சொல்கிறது.
இதை அறியும் போது, வேதம் சொல்லும் சில படைப்புகளை உண்மையாக புரிந்து கொள்ள முடியும்.


"ப்ருஹஸ்பதியின் மனைவி 'தாரா'.  தாராவுக்கும் சந்திரனுக்கும் 'புதன்' பிறந்தான்"
என்று சொல்கிறது வேதம்.
மேலும்,
புதன் 'மகா புத்திசாலியாக இருந்தான்' என்று சொல்கிறது வேதம்..
ராமபிரானாக பரமாத்மா அவதரித்த நாளும் "புதன் கிழமையே". 
'புதன் கிழமையில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்' என்று சொல்கிறது நம் ஹிந்து தர்மம்.

மனித புத்தியுடன் இதை பார்த்தால்,
ஒரு மனைவியை இன்னொருவன்  கூட்டி சென்றுவிட்டானா?
என்று தான் பார்க்க தோன்றும்.

போலி மதத்தில் உள்ளவர்கள், இந்த கதையை எடுத்து காட்டி, ஹிந்துக்களை குழப்ப நினைப்பார்கள்.
மற்ற போலி மதங்களை போல "500 பக்க நாவல் அல்ல" நம் ஹிந்து தர்மம்.
காரணம் புரிந்து கொண்டால், போலி மதத்தை விட்டு, அனைவரும் ஹிந்துவாகி விடுவார்கள்.

வான சாஸ்த்திரம் அறிந்தவன் பார்க்கும் போது, இதன் மூலம் வேதம் என்ன சொல்கிறது? என்று ஆராய்கிறான்.

ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு (Priest of Demi Gods in Heaven).
ஆங்கிலத்தில் "Jupiter Planet"  என்று கவனிக்க வேண்டும்.

"தாரா" என்றால் நக்ஷத்திரம்.
"Jupiter Planet (ப்ருஹஸ்பதி) கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நக்ஷத்திரம் (தாரா), 
ஒரு சமயம் சந்திரனின் (moon) கட்டுப்பாட்டில் வந்தது.
இந்த ஈர்ப்பினால், 
புதன் என்ற மிகவும் அழகான, புத்திசாலியான கிரகம் படைக்கப்பட்டது" 
என்பதையே வேதம் சொல்கிறது.
வான சாஸ்திரம் படிப்பவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.
புதன் கிரகம் என்றால் "Mercury planet" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதை பார்க்கும் போது,
புதன் கிரகம் (Mercury), "சந்திரனுக்கு (moon) பிறகு படைக்கப்பட்டது" என்று தெரிகிறது.

ஒரு வேளை, மனிதன் சந்திரனில் வாழும் அளவிற்கு முன்னேறி விட்டால், புதன் கிரகம் (Mercury Planet), சந்திரனுக்கு பிறகு படைக்கப்பட்டதா? என்று ஆராய்ச்சி செய்யலாம்.
வேதத்தை கொண்டே பல ஆராய்ச்சிகள் செய்யலாம், இன்றைய ஆராய்ச்சியாளர்கள்.



சூரியன் மனிதனுக்கு ஆரோக்கியம் தருகிறது.
சந்திரன் மனிதனுக்கு புஷ்டி தருகிறது
என்று சொல்கிறது வேதம்.

சூரியன் எங்கு இருக்கிறது, நாம் எங்கு இருக்கிறோம்!!
எப்படி நமக்கு ஆரோக்கியம் தரும்? என்று கேட்பானா ஒரு அறிவாளி!!
"வைட்டமின் D  சத்து சூரியனில் இருந்து வருகிறது"
என்று அறிவியல் சொல்லி வேதம் சொல்வதற்கு ஆமாம் சொல்கிறதே?

"சூரியன், சந்திரன் போன்றவை நமக்கு ஆரோக்கியம், புஷ்டி தருகிறது" என்ற உண்மை இருக்கும் போது,
வேதம் "சாயா (நிழல்) கிரகங்கள் சூரியனை மறைக்கும் போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது" என்று சொல்கிறது.
சாயா கிரகங்கள் "ராகு கேது" என்றும் சொல்கிறது.
இவர்கள் அசுரர்கள் என்றும் சொல்கிறது.

பூமிக்கு அருகில் இருக்கும் சந்திரனை பற்றி அறிந்து கொள்ளவே இன்னும் முடியவில்லை!
இந்த சாய கிரகங்களோ இருட்டு என்று சொல்கிறது.. 
இதை கண்டுபிடிக்க பல லட்சம் காலங்கள் மனிதனுக்கு தேவைப்படும்.

"ஒரே அசுரன் தான் இப்படி ராகு, கேதுவாக ஆகி, சந்திரனை, சூரியனை சில நாழிகைகள் மறைக்கிறான்" என்று இவர்கள் யார் என்றும் வேதம் சொல்கிறது.

தேவர்கள் பாற்கடலை கடைந்து அம்ருதம் கிடைத்த போது, அசுரர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக மோகினி அவதாரம் செய்து வாங்கி, தேவர்களுக்கு அம்ருதம் போட்டார் மஹாவிஷ்ணு.
அப்பொழுது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்த ஒரு அசுரன் அம்ருதம் சாப்பிட்டு விட்டான்.
இவனை தன் சக்கரத்தால் இரண்டாக துண்டித்து விட்டார் பெருமாள். அம்ருதம் சாப்பிட்டதால் ராகு கேது என்ற கிரகங்களாக ஆகி விட்டார்கள்.

சூரியன் இந்த கிரகங்களால் மறைக்கப்படும் போது, ஆரோக்கியம் நமக்கு குறையும், ஆதலால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்று சொல்கிறது.
"இது அறிவியல்".  இதை பொருட்படுத்தாத மக்கள், எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கிறார்கள்.
ஒரு வைரஸ் (Corona) பாதிக்கும் போது, இவர்கள் லட்சணம் என்ன?
என்று தெரிந்து விடுகிறது.

வாழ்க நம் ஹிந்து தர்மம்..
வாழ்க நம் வேதம் சொல்லும் படைப்பின் ரகசியங்கள்..
ஹிந்துவாக பிறப்பதே நாம் செய்த புண்ணியம்..

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டார்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது? சேர்க்கை இல்லாமல், படைக்கப்பட்டவர்கள் தேவர்கள், மனு போன்றோர். எப்படி இதை புரிந்து கொள்வது?

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான், படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது.  
ப்ரம்ம தேவன், தன் "மனதிலிருந்து சனத் குமாரர்கள், ரிஷிகள், ஸ்வயம்பு மனு போன்றவர்களை படைத்தார்" என்று வேதம் சொல்கிறது.




சனத் குமாரர்கள் "உலக சிருஷ்டியில் நாங்கள் ஈடு படமாட்டோம்" என்று ப்ரம்ம தேவனிடம் சொல்ல, கோபத்தை அடைக்க, அவர் நெற்றியில் இருந்து ருத்ரன் வெளிப்பட்டார் என்று சொல்கிறது.
அவரே 11 ருத்ரர்களாக பிறகு ஆகி, பிறகு கைலாயம் என்ற லோகத்துக்கு சென்று விட்டார் என்று சொல்கிறது வேதம். மேலும் படிக்க இங்கே பார்க்கவும்.

"ஆண் பெண் சேர்க்கை" மூலம் தான் படைப்புகள் அனைத்தும் நடக்கிறது என்ற கண்ணோட்டத்திலேயே, அனைத்தையும் பார்க்க கூடாது. 

சாதாரண பேன் எப்படி உண்டாகிறது? என்று கவனித்தாலே, வேதம் சொல்லும், ஆரம்ப கால ஸ்ருஷ்டி  நமக்கு புரிந்து விடும்.
நம் தலையில் உள்ள புழுக்கத்தில் இருந்து "பேன் உண்டாகிறது".. ஆண் பெண் சேர்க்கை தேவைப்படாமல் தானே உருவாகிறது.
ஆரம்ப படைப்பு எதுவுமே "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் தான் நடக்கிறது".

மனிதனில் முதல் படைப்பு "மனு".
மனுவை தன் மனதிலிருந்து ஸ்ருஷ்டி செய்தார் பிரம்மா என்று சொல்லும் போது, "ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் மனித ஸ்ருஷ்டி எப்படி நடக்கும்?" என்று நினைக்கக்கூடாது.
"ஆரம்ப ஸ்ருஷ்டி எதுவுமே, சேர்க்கை இல்லாமல் நடக்கிறது" என்பதை நாம் புரிந்து கொள்ளவே, நம் தலையிலேயே பேன் உருவாகி நமக்கு புரிய செய்கிறது.
சற்று கவனிக்கும் போது தான், நமக்கு படைப்புகளின் ரகசியங்கள் புரியும்.

திடீரென்று நம் தலையில் பேன் உருவாவதையும்,
திடீரென்று மர பட்டையில் இருந்து மரவட்டை உருவாவதை கவனிக்கும் போது, ஆரம்ப ஸ்ருஷ்டியை புரிந்து கொள்ள முடியும்.

மனிதர்களால் எழுதப்பட்ட 500 பக்க போலி புத்தகம் அல்ல, ஹிந்து மதம்..
மனிதன் ஆடையில்லாமல் முட்டாள் ஆதாம் ஏவாளாக பிறந்தார்கள் என்று சொல்லவில்லை நம் தர்மம்.

முதல் மனிதனே ஸ்வாயம்பு மனு. மனு உலகை ஆளும் திறனுடன், அரசாங்க சட்டம் எப்படி இருக்க வேண்டும்? சமுதாயம் எப்படி அமைக்க வேண்டும்? என்று மனு நீதி கொடுத்தார் என்று மனிதன் மகா அறிவாளியாக தான் படைக்கப்பட்டான் என்று ஆரம்பிக்கிறது..

இன்று வரை நம் இந்திய சட்டம், மனு நீதியை கொண்டு தான் உள்ளது. அம்பேதகர், சட்டத்தை மனு நீதியை கொண்டே அமைத்தார்.
அது மட்டுமல்ல, போலி மதத்தில் உள்ளவர்களே, மனித குலத்தை "Adam" என்று சொல்லாமல் நம் மனுவை தான் "Man" என்று சொல்கின்றனர்.

போலி மதத்தை சேர்ந்தவன் கூட, மனிதன் முட்டாள் ஆதாம் வம்சம் என்று சொல்லி கொள்ள பிரியப்படவில்லை என்கிற போது, அறிவுள்ள ஹிந்துக்கள் சொல்வார்களா?

நாம் அனைவருமே மனு வம்சம்..
மனு பிரம்மாவால் படைக்கப்பட்டவர். ஆதலால் நாம் ரிஷி வம்சம்.




எந்த ஜாதியில் இருந்தாலும், உன் கோத்திரம் (பரம்பரை) என்ன என்று கேட்டால்? 
ஒவ்வொருத்தரும் நான் "கௌசீக ரிஷி" கோத்திரம், நான் "பரத்வாஜ" கோத்திரம் என்று சொல்கிறார்கள்.

நாம் எந்த ரிஷி பரம்பரை? என்பதை ஹிந்துக்கள் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் அந்த ரிஷியை பற்றி முழுவதுமாக தெரிந்து இருக்க வேண்டும்.

1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், 500 வருட கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், "தான் எந்த ரிஷி பரம்பரை?" என்பதையே மறந்து விட்டார்கள் பலர்.

விழித்து எழ வேண்டும் ஹிந்துக்கள்..
தன் ரிஷி யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
முடிந்தால், தன் வீட்டின் பெயராக ரிஷியின் பெயரை வைத்து அடையாளப்படுத்தி கொள்ள ஆரம்பிக்க வேண்டும்..

அவர் சரித்திரத்தை, பெருமையை எழுதி, அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்..

இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை... 
இதை செய்யும் போது, நம் குலம் எத்தனை பெருமை வாய்ந்த குலம் என்பது புரியும்..

"ஆதியில் அனைவருமே பிரம்ம தேவன் படைப்பு தான்"
என்பதும் புரியும்.
ப்ரம்மாவையும் படைத்த நாராயணன் தான், "நம் முழு முதற்கடவுள்" என்பதும் புரியும்.
சில ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ள.. இங்கே படியுங்கள்.. நீங்கள் எந்த ரிஷி பரம்பரை என்று தேடுங்கள்.. உங்கள் ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  

வாழ்க ஹிந்துக்கள்.